கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 ஜூலை, 2026

2026-27 கல்வியாண்டு பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு

 தூத்துக்குடி லீக்ஸ் | நாளிதழ் செய்தி

2026-27 கல்வியாண்டு பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு

210 வேலைநாட்கள் – 155 விடுமுறை நாட்கள்; ஏப்ரல் 24-ல் பள்ளிகள் நிறைவு

சென்னை, ஜூலை 9:

2026–2027 கல்வியாண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வேலைநாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் விவரத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

thoothukudileaks


அதன்படி, புதிய கல்வியாண்டு ஜூன் 1, 2026 அன்று தொடங்கி ஏப்ரல் 24, 2027 வரை நடைபெற உள்ளது. இந்த கல்வியாண்டில் மொத்தம் 210 வேலைநாட்களும், 155 விடுமுறை நாட்களும் இடம்பெற்றுள்ளன. மொத்த நாட்கள் 365 ஆகும்.

வெளியிடப்பட்ட கால அட்டவணையின்படி:

  • முதல் பருவத் தேர்வு செப்டம்பர் 17 முதல் 25 வரை நடைபெறும். தொடர்ந்து செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை (9 நாட்கள்) பருவ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இரண்டாம் பருவத் தேர்வு டிசம்பர் 15 முதல் 23 வரை நடைபெறும். இதையடுத்து டிசம்பர் 24 முதல் ஜனவரி 3 வரை (11 நாட்கள்) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
  • மூன்றாம் பருவத் தேர்வு ஏப்ரல் 12 முதல் 24 வரை நடைபெற உள்ளது.
  • 2026–27 கல்வியாண்டின் இறுதி வேலைநாள் ஏப்ரல் 24, 2027 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கோடை விடுமுறை ஏப்ரல் 25 முதல் மே 31 வரை (37 நாட்கள்) அமையும்.

இந்த கால அட்டவணையின்படி மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கல்வி நடவடிக்கைகள், தேர்வுகள் மற்றும் விடுமுறைகளை முன்கூட்டியே திட்டமிட வசதியாக இருக்கும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

செவ்வாய், 23 ஜூன், 2026

சர்வதேச தினம் யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்திய மாணவ மாணவிகள்

 Tamil Nadu updates news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 23:

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


thoothukudileaks

நன்மைகள் !!!

பள்ளியின் தாளாளரும் முதல்வருமான ஆர். ஜெயசண்முகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக யோகா பயிற்சியாளர் ஸ்டீபன் கலந்து கொண்டு யோகாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் உடல்நல நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

thoothukudileaks

அசாத்திய மாணவ மாணவிகள்!!!

தொடர்ந்து மாணவ, மாணவிகள் சூரிய நமஸ்காரம், பத்மாசனம், பச்சிமோத்தானாசனம், தனுராசனம், யோகமுத்திரா, திரிகோணாசனம், வஜ்ராசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை செய்து அவற்றின் பயன்களை அறிந்துகொண்டனர்.

thoothukudileaks


நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இறுதியில் துணை முதல்வர் ரா.ச. பிரியங்கா நன்றி கூறினார்.


 நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


இந்த யோகா தின விழா மாணவர்களிடையே உடல் மற்றும் மன ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக பள்ளியில் நிர்வாகம் தெரிவித்தது.

 

திங்கள், 22 ஜூன், 2026

தூத்துக்குடியில் 100 ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், பள்ளி சீருடைகள் வழங்கிய ராஜம் அறக்கட்டளை

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 22:

தூத்துக்குடி ராஜம் அறக்கட்டளை சார்பில் ஏழை மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டு மற்றும் சீருடை வழங்கும் விழா இன்று (22.06.2026) மாலை 5 மணிக்கு தூத்துக்குடி ராஜம் மஹாலில் நடைபெற்றது.

thoothukudileaks


இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாகி எஸ். ரம்போலா தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினராக முன்னாள் துணைத் தலைவர் ஆ. தேவராஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும், அருட்திரு கீஷோர் முன்னிலை வைத்தார் 

thoothukudileaks




video 

விழாவில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா பங்கேற்று மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை நோட் புக் பள்ளி சீருடைகள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் 10 பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது.

கல்வி வளர்ச்சிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் உதவும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

.

வியாழன், 26 பிப்ரவரி, 2026

சாயர்புரம் செயிண்ட் மேரீஸ் பள்ளி 24ஆம் ஆண்டு விழா

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: பெ27

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் இயங்கி வரும் செயிண்ட் மேரீஸ் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியின் 24ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் டி. சிதம்பரநாதன் தலைமை தாங்கினார்.

thoothukudileaks


Bishop Jebaraj தொடக்க ஜெபத்தை நடத்தினார். பள்ளி முதல்வர் அக்னஸ் ஜெயலின் வரவேற்புரை வழங்கி ஆண்டு அறிக்கையை வாசித்தார்.

சாயர்புரம் பாஸ்டரேட் தலைவர் ஜே. மனோகரும், மாவட்ட நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகள் சங்க செயலாளர் ஏ. ஜோசப்பும் சிறப்புரையாற்றினர். Pope Memorial Higher Secondary School தலைமையாசிரியர் சி. எட்வர்ட் ஜான்சன் பால் மற்றும் St. Mary's Girls Higher Secondary School தலைமையாசிரியர் ஆர். ஹெப்சிபா புவேலா மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களின் நடனம், நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சாயர்புரம் நகர பஞ்சாயத்து கவுன்சிலரும், மாவட்ட திமுக துணைச் செயலாளருமான ஜே. ஜெபா தங்கம் பிரேமா உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர். சிஎஸ்ஐ மறைமாவட்ட உறுப்பினர்கள் அலய்மணி, ஜெயகுமார் மற்றும் பலரும் பங்கேற்றனர்.

இறுதியாக உதவி தலைமையாசிரியர் அருள் மேரி நன்றியுரை வழங்கினார்.

விழா உற்சாகமாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.

திங்கள், 1 செப்டம்பர், 2025

ஆசிரியர் பணியில் சேர, தொடர மற்றும் பதவி உயர்வு பெற TET தேர்ச்சி கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு கேள்வி குறியாகும் ஆசிரியர்கள் நிலைமை மாணவர்கள் எதிர்காலம்? முழு விவரம் பரபரப்பு தகவல்

 அருணன் செய்தியாளர் 

👍இங்கே விரிவான தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 


🤷🏻‍♀️ thoothukudi leaks

🔴 #𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚••••

ஆசிரியர் பணியில் சேர, தொடர மற்றும் பதவி உயர்வு பெற TET தேர்ச்சி கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி:
நாட்டின் அனைத்து பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் TET (Teacher Eligibility Test) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 1) தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது.

thoothukudileaks


📌 தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

  • புதிய ஆசிரியர்கள் பணியில் சேர TET தேர்ச்சி பெற வேண்டும்.
  • ஏற்கனவே பணியாற்றி வரும் ஆசிரியர்களில் 5 ஆண்டுகளுக்கு குறைவான பணிக்காலம் உள்ளவர்களுக்கு மட்டுமே தற்காலிக விதிவிலக்கு.
  • 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரியும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணி செய்ய TET தேர்ச்சி கட்டாயம்.
  • TET தேர்ச்சி பெறாதவர்கள் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெற வேண்டும்.
  • பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்விற்கும் TET தேர்ச்சி கட்டாயம்.

இந்த உத்தரவிற்கு எதிராக, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிர மாநில ஆசிரியர் கூட்டமைப்புகள் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜஸ்டிஸ் சஞ்சய் கரோல், ஜஸ்டிஸ் அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.

தீர்ப்பில், “கல்வித் தரத்தை உயர்த்தவும், தகுதியான ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை உறுதி செய்யவும் TET தேர்வு ஒரு அடிப்படை அளவுகோலாக அமைய வேண்டும்” என நீதிபதிகள் வலியுறுத்தினர்.

📍 பின்னணி:
2011ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் TET தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் பல மாநிலங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இன்னும் TET தேர்ச்சி பெறாமல் பணி புரிந்து வருகின்றனர். இதனை எதிர்த்து ஆசிரியர் சங்கங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.

📍 மாநில அரசின் நிலைப்பாடு:
தமிழ்நாடு அரசு சார்பில், “ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு சலுகை வழங்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது. எனினும், மாணவர்களின் நலனுக்காக எந்தவித சலுகையும் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.


👉  மாணவர்களின் எதிர்காலம் – ஆசிரியர்களின் நிலைமை


🤷🏻‍♀️ thoothukudi  leaks

Arunan journalist 1-9-2025

🔴 #𝗦𝗣𝗘𝗖𝗜𝗔𝗟 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧••••

TET தேர்ச்சி கட்டாயம் – மாணவர்களின் எதிர்காலம் & ஆசிரியர்களின் நிலைமை

மாணவர்களின் எதிர்காலம்

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி, ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு.

  • தகுதியான ஆசிரியர்கள் மட்டுமே வகுப்பறையில் மாணவர்களை கற்பிப்பது உறுதி செய்யப்படுகிறது.
  • கல்வி முறையில் ஒற்றுமையும் தரநிலையும் ஏற்படும்.
  • மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் சிறந்து விளங்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
  • நாட்டின் கல்வி தரம் சர்வதேச அளவில் உயர்வதற்கான பாதை உருவாகும்.

thoothukudileaks


ஆசிரியர்களின் நிலைமை

ஆனால், இந்த உத்தரவு பல்வேறு சிக்கல்களை ஆசிரியர்கள் முன்வைக்க வைத்துள்ளது.

  • ஏற்கனவே 10, 15, 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இன்னும் TET தேர்ச்சி பெறவில்லை.
  • வயதான ஆசிரியர்களுக்கு தேர்வு எழுதுவது கடினம் என சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
  • “பணி தொடர முடியாவிட்டால் வேலை இழக்க நேரிடும்” என்ற அச்சம் ஆசிரியர்களிடம் அதிகரித்துள்ளது.
  • குடும்பப் பொறுப்புகள், பொருளாதாரச் சிக்கல்கள், மீண்டும் தேர்வுக்குப் படிப்பது போன்ற சிரமங்கள் ஆசிரியர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மாநில அரசுகளின் எதிர்வினை

தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் “பணியில் உள்ளவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும்” என கோரியிருந்தாலும், மாணவர்களின் நலனுக்காக எந்த சலுகையும் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்தது.

இறுதி குறிப்பு

இந்த உத்தரவு மாணவர்களின் கல்வித் தரத்திற்கு சாதகமாக இருந்தாலும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பணிநிலையும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. 


அதனால், மாநில அரசுகள் புதிய பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள், தேர்வு தயாரிப்பு மையங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்து, ஆசிரியர்கள் TET தேர்ச்சி பெற உதவ வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கருத்தாகும்.



புதன், 25 ஜூன், 2025

100% தேர்ச்சி சாதனை: ஸ்ரீ சங்கரா பகவதி கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம், கொம்மடிக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வித் தரத்தில் தொடர்ந்தும் சாதனை படைத்து வருகிறது.



இக்கல்லூரியில் 2023 - 2025 கல்வியாண்டில் முதுகலை வணிகவியல் (M.Com) படிப்பை பயின்ற மாணவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த மாணவர்களின் உழைப்பையும், பேராசிரியர்களின் முழுமையான வழிகாட்டலையும் கல்லூரி முதல்வர் டாக்டர். அருள்ராஜ் பொன்னுதுரை மற்றும் துணை முதல்வர் டாக்டர். மகேஷ் குமார் சிறப்பாக பாராட்டினர்.

2025 - 2026 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. சேர்க்கை தொடர்பான கூடுதல் தகவலுக்கு 99655 09113 மற்றும் 99524 88989 என்ற எண்ணங்களில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.



செவ்வாய், 6 மே, 2025

பள்ளி வாகனத்தில் கட்டாயமாக பெண் உதவியாளர் ஒருவர் வாகனத்தில் இருக்க வேண்டும் எனமாவட்ட ஆட்சியர் இளம் பகவத், அறிவித்தார்பள்ளி வாகனங்களுக்கு ஃபிட்னஸ் சோதனை – பாதுகாப்பு அம்சங்களை அதிகாரிகள் நேரில் கண்காணிப்பு

Tamil Nadu updates

Photo news by Arunan journalist 

தூத்துக்குடி, மே 6:

பள்ளி கல்லூரி வாகனங்களில் செல்லும் மாணவ மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்து அலுவலகத்தில் இன்று 6-5-2025 பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களுக்கு ஃபிட்னஸ் சோதனை நடைபெற்றது. 








இதில்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மற்றும் மாவட்ட ஆர்.டி.ஓ. சரவணன் ஆகியோர் பங்கேற்று வாகனங்களை நேரில் ஆய்வு செய்தனர்.


வாகனங்களில் முன் மற்றும் பின்புறக் கேமரா, பிரேக் முறை, ஏர் கண்டிஷனர், வாகனத்தின் தயாரிப்பு வருடம் உள்ளிட்ட அம்சங்கள் பரிசோதிக்கப்பட்டன. 







சோதனையின் பின், பள்ளி வாகனங்களுக்கு ...

இந்த வருட 25- டூ 26  ஃபிட்னஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.


நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி வாகன டிரைவர்கள் பங்கேற்று தங்கள் வாகனங்களை ஆய்வுக்காக கொண்டு வந்தனர். 


தொடர்ந்து நடைபெற்ற பயிற்சியில், விபத்து நேரத்தில் முதற்கட்ட உதவிகளை வழங்குவது, 108 அவசர எண்கள் மூலம் உதவி பெறுவது குறித்து மருத்துவர்கள் செய்முறை விளக்கம் அளித்தனர். தீயணைப்பு துறை அதிகாரிகள் தீ விபத்து நேரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்  demonstratIon வழங்கினர்.


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், பேசுகையில்...

 “ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் கட்டாயமாக பெண் உதவியாளர் ஒருவர் வாகனத்தில் இருக்க வேண்டும். இது பின்பற்றப்படாவிட்டால், உரிய பள்ளி-கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என எச்சரித்தார்.


இந்நிகழ்ச்சி மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஒட்டுநர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் சிறப்பாக நடத்தப்பட்டது.



-


புதன், 20 நவம்பர், 2024

மாணவி மகேஷ் நாச்சியார் சாதனை சிலம்பம் போட்டியில் முதலிடம் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம்கால்வாய் கிராமத்தை சோ்ந்த பள்ளி மாணவி

அகில இந்திய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த   மாணவி மகேஷ் நாச்சியார் சாதனை படைத்துள்ளார்.

இது பற்றிய செய்தியாவது:-

பெங்களுாில் அகில இந்திய அளவில்  சிலம்பம் போட்டி நடைபெற்றது இதில் பல்வேறு மாநிலங்களில் உள்ள சிலம்பம் பயிற்சி எடுத்த மாணவிகள் போட்டி யில் கலந்து கொண்டார்கள்.


தமிழகத்தின் சார்பில்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கால்வாய் கிராமத்தை சோ்ந்த உக்கிரபாண்டி இசக்கிராணி தம்பதியினர் மகள் மகேஷ் நாச்சியார். கலந்து கொண்டார்.


பெங்களூரில் அகில இந்திய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் மகேஷ் நாச்சியார் முதலிடத்தில் வெற்றி பெற்றார்.



மாணவி மகேஷ் நாச்சியார்  இந்தியாவில் முதலிடம் பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளாா்.


    

     இந்த விளையாட்டு போட்டிகளின் மூலம் பல மாணவ மாணவிகள் அரசுத்துறை சார்ந்த படிப்புடன் கூடிய மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அரசுத்துறை சார்ந்த பணிகளுக்கும் தேர்வாகி வருகின்றன. 


தமிழக அரசை பொறுத்தவரை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் தற்போது துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பும் தமிழகத்தில் எல்லா விளையாட்டு போட்டி களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு ஊக்குவித்து வருகிறார். 



மாநில அளவில் தேர்ச்சி பெறும் வீரர்களுக்கு அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிகள் மட்டுமின்றி உலக அளவில் நடைபெறும் போட்டி களுக்கும் தேவையான உதவிகளை அரசின் சார்பில் செய்து வருகிறார். 

  Photo news by

sunmugasuthram Reporter 



சனி, 9 நவம்பர், 2024

ஈரோட்டில் 100 மீ ஓட்டப்பந்தய போட்டி தூத்துக்குடி மாணவி தங்கம் வென்றார்

தமிழ் நாடு  அரசின் சாா்பில்     மாநில அளவிலான  17  வயதிற்குட்பட்ட  100  மீட்டா்   ஓட்டப்பந்தயம்  ஈரோட்டில்  நடைபெற்றது



இப் போட்டியில் தூத்துக்குடி புனித  சவேரியாா் உயர்நிலைப்பள்ளி சார்பில் மாணவி சகாய  ஜெமியா கலந்து கொண்டார்.நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

வரவேற்பு!!!

வெற்றி பெற்று தூத்துக்குடிக்கு வந்ததும்    மாணவி சகாய  ஜெமியாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியர்  மரிய செல்வராணி  பூங்கொத்து  அளித்து வரவேற்றார்.

மகிழ்ச்சி 

 தூத்துக்குடி  சவேரியாா்புரம்   

பங்கு தந்தையும்  பள்ளியின் தாளாருமான  அருட்தந்தை குழந்தை ராஜன்     

ஊர் நிர்வாகி  பிரான்ஸிஸ் மற்றும் பள்ளியின் பழைய மாணவர் ஜான்கென்னடி  ராஜன் ஆகியோர் சந்தனமாலை மற்றும் பொன்னாடை அனிவித்து மகிழ்ச்சி தெரிவித்தார் கள். 

பாராட்டு நிகழ்ச்சி 

தொடர்ந்து  பள்ளியின்  கலையரங்கில்  வைத்து  பாராட்டு விழா நடைபெற்றது    

     

பாராட்டு விழாவில்  மாணவ மாணவிகள்  கை தட்டி  உற்சாகபடுத்தி பரிசு கள் வழங்கினார்கள்  

நன்றி தெரிவித்த பெற்றோர்கள்!!!

வெற்றி பெற்ற  மாணவிக்கு  உதவி புரிந்து உற்சாகபடுத்திய  பிரான்சிஸ் செல்வ தினேஷ்   மற்றும் அந்தோணி ஜாஸ்மின்  ஆசிரியா்  பிரான்சிஸ்  பயிற்சியாளர்  அஜிஷ்   மற்றும் அருட்சகோதரிகள்    அனைவருக்கும்   மாணவி சகாய ஜெமியா வின்   பெற்றோர்கள்  மிக்கேல் பாஸ்கர்  சகாயரதி  ஆகியோா் நன்றி  தெரிவித்தாா்கள்

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

வேட்டையன் பாணியில் தூத்துக்குடியில் கோச்சிங் அகாடமிகள் புற்றீசல்களாய் தூத்துக்குடிக்கு படையெடுக்கும் மாணவ மாணவிகள் பரிதாபங்கள்

 ⚫ வேட்டையன் பாணியில் தூத்துக்குடியில் கோச்சிங் அகாடமிகள் புற்றீசல்களாய் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு  படையெடுக்கும் மாணவ மாணவிகள் பரிதாபங்கள்

வெள்ளி, 4 அக்டோபர், 2024

முத்தமிழ் முத்துக்கள் முத்தரங்கம்

முத்தமிழ் முத்துக்கள் முத்தரங்கம்

தூத்துக்குடி ஐந்தாவது புத்தக திருவிழாவில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைந்துள்ள   செந்தமிழ் சிற்பிகள் அரங்கம் போன்று 5வது புத்தகத் திருவிழாவிலும் தூத்துக்குடி மாவட்ட எழுத்தாளர்கள் கவிஞர்களின் புகைப்பட அரங்கம்

முத்தமிழ் முத்துக்கள் என்னும் தலைப்பில் முத்து அரங்கத்தில் வரிசைப்படுத்தப்பட்டு அவர்கள் குறித்த புத்தகங்களும் வாசிப்புக்காக வழங்கப்பட்டுள்ளது..



வாழ்க்கைக்கு பயனுள்ள  அறிஞர்களின் நூல்கள்!!

 கல்லூரி மாணவர்கள் இப்பகுதியினை அதிக அளவில் பயன்படுத்தி கால்டுவெல் ஜி யு போப்

 வ உ சி ,சாத்தூர் பிச்சை குட்டி சோ தர்மன் 

கி ராஜநாராயணன் பூமணி, இளம்பாரதி சாத்தான்குளம் சீனிவாசன் சீ பா  ஆதித்தனார் ,

ஜி யு போப் வீரமாமுனிவர் முத்துசாமி தீட்சிதர் சங்கரதாஸ் சுவாமிகள் விளாத்திகுளம் நல்லப்ப சுவாமிகள் காருக்குறிச்சி அருணாசலம் என அனைவரது புகைப்படங்களும் அவர்களுடைய நூல்களும் இந்த அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன.


 கல்லூரி மாணவர்கள் இந் நூல்களை படித்து அது குறித்து விமர்சனங்களையும் ஆய்வுகளையும் வழங்கி வருகிறார்கள்..


 கல்லூரி மாணவர்கள் மிகவும் கவர்ந்த அரங்கமாக முத்தமிழ் முத்துக்கள் முத்தரங்கம் இருக்கின்றது.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

தூத்துக்குடியில் ஸ்பிக் கீரீன் ஸ்டார் இலவச கல்வி மையம் திறப்பு விழா!!!

▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

30-8-2024 photo vel Raj reporter 

newsby Ravikumar reporter


தூத்துக்குடி புதிய துறைமுக சுனாமி காலனியில் 

ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு ஸ்பிக் நிறுவனம் சார்பில் ஸ்பிக் கீரீன் ஸ்டார் இலவச 

கல்வி மையம் திறப்பு விழா நடைபெற்றது 



இதுபற்றி செய்தியாவது 


தூத்துக்குடியில் ஸ்பிக் நிறுவனம் ஆண்டு தோறும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு பல்வேறு திட்ட உதவிகள் செய்து வருகிறது 


தூத்துக்குடி புதிய துறை முக சாலையில் உள்ள சுனாமி காலனியில் உள்ள ஊர் மக்கள் ஸ்பிக் நிறுவனத்திடம் தங்கள் பகுதியில் கல்வி மையம் அமைத்து உதவிட கோரிக்கை வைத்தனர் 


அதனை தொடர்ந்து ஏழை மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக

(Corporahe Soual Res ponmolity) பங்களிப்பு மூலம்

ஸ்பிக் நிறுவனம் சுனாமி காலனியில் கல்வி மையம் ஏற்படுத்தி தந்து இன்று 30-8-2024  காலை 11 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.


டியூஷன் சென்டர் 



 திறப்பு விழா நிகழ்ச்சியில் 

E.பாலு(முழுநேர இயக்குநர்)

ஜெயப்பிரகாஷ் (முகநிலைமேலாளர்) நிர்விடும்

. சதீஷ்கண்ணன் (முதுநிலை மேலாளர்) சீகில்

 பரமசிவம் (மேலாளர் - Planning)

த. சிப்ரியன் பால்ராஜ் - பொதுமேலாளர் - AMF

யுவன்- மேலாளர்-AmF மற்றும்  

ஊர்பொதுமக்கள்

ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

சனி, 17 ஆகஸ்ட், 2024

கோவில்பட்டி நாடார் பள்ளியில் ரூ.1.5 கோடி மோசடி ஆசிரியர்கள் தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு புகார்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

17-8-2024 photo news 

by sunmugasunthram Reporter 

கோவில்பட்டி நாடார் பள்ளியில் போலி ஆவணம் தயாரித்து ரூ.1.5 கோடி ஆசிரியர்களின் பணம் மோசடி தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு புகார் 


இது பற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நாடார் மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 


இந்த பள்ளியானது அரசு உதவி பெறும் பள்ளியாகும். இப்பள்ளியில் தலைமையாசிரியராக ஜான் கணேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார்.


 இந்த பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்கள், இடை நிலை ஆசிரியர்கள் என 32 பேர் பணியாற்றுகின்றனர்.



 இங்கு பணிபுரியும் ஆசிரியர்களிடம் வருமான வரி கட்டுவதற்காக, பணத்தை பெற்று அதை ஸ்டேட் பேங்க் கில் செலுத்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது.


 தலைமையாசிரியரின் அறிவுறுத்தலின்பேரில், இதை பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் தங்கமாரியப்பன் மூலம் செலுத்தி வந்துள்ளனர்.


 ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வருமான வரித் தொகை பிடித்தம் செய்யப்படுவது வழக்கம். 


இந்நிலையில், பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியர் வீட்டு கடன் வாங்குவதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். 


அங்கு வருமான வரித்துறை ரசீதுகளை கொடுத்தபோது, பள்ளியிலிருந்து கொடுத்த ரசீது போலியானது என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.


 இதையடுத்து, பள்ளியில் வந்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விவரத்தை தெரிவித்துள்ளார்..


 இதனால், மற்ற ஆசிரியர்களும் வருமான வரி செலுத்துவதற்காக கொடுத்த பணத்தை வங்கியில் சென்று சரி பார்த்துள்ளனர். 


அதில், அவர்களுக்கு சந்தேகம் வந்தது. 

உடனடியாக, கடந்த 9ம் தேதி மாலையில் கோவில்பட்டி கல்வி மாவட்ட அதிகாரி (இடைநிலை) ஜெயபிரகாஷ் ராஜனை ஆசிரியர், ஆசிரியைகள் சந்தித்தனர். 


அங்கு தலைமையாசிரியர் ஜான் கணேஷ் கையெப்பமிட்டு, வருமான வரிக்கு பணம் செலுத்தியதாக ஆவணத்தை காட்டியுள்ளனர். 


நகலும் வழங்கி இருக்கிறார்கள். அந்த ஆவணத்தைக் கொண்டு வங்கிக்கு ஆசிரியர்கள் சென்றுள்ளனர். 


அங்கு அந்த ரசீது போலியானது என்று வங்கி அதிகாரிகள் கூறினர். 


இதைக் கேட்டு, ஆசிரியர், ஆசிரியைகள் அதிர்ச்சியடைந்தனர். 

இதையடுத்து, ஆசிரியர்கள் கோவில்பட்டி மேற்கு போலீசில் தலைமையாசிரியர் ஜான் கணேஷ் மீது புகார் செய்தனர்.


 போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பள்ளியின் இளநிலை உதவியாளர் தங்கமாரியப்பன் விஷம் குடித்துவிட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.


 இதனால், போலீசார் விசாரணை தாமதமாகி வருகிறது.


வருமான வரி செலுத்த கொடுத்த பணத்தை மோசடி செய்துள்ளனர்,


 இதனால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், போலியான வருமான வரித்துறை ஆவணத்தை கொடுத்துள்ளனர்.


 இதில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் கூட்டாக சேர்ந்து மனு அளித்தனர்.


மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வருமானவரித்துறைக்கு செலுத்த வேண்டிய பணம் ரூபாய் 1.5 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளதாக ஆசிரியர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.


சனி, 8 ஜூன், 2024

நாளை10-6-2024 பள்ளி திறப்பு தூத்துக்குடி மாநகராட்சி 20 பள்ளிகள் தயார்மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

 ▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 8-6-2024

photo

News by sunmugasunthram Reporter 


பள்ளி திறப்பு தூத்துக்குடி மாநகராட்சி 20 பள்ளிகள் தயார் நிலையில் உள்ளது. மேயர் ஜெகன் பொியசாமி தகவல்


இது பற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி பள்ளி கல்வித்துறை ஜூன் 10ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு பள்ளி திறப்பு அன்று அனைவருக்கும் தேவையான பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்படும். என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 




இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் சரியாக உள்ளனவா எனவும் இருக்கைகள் மற்றும் வளாகத்தினை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறியிருந்த நிலையில் அதன்படி மாநகராட்சி பள்ளிகளில் நடைபெற்ற பணிகளை மேயா் ஜெகன் பெரியசாமி  பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

மேயர் வேதனை!!

     பின்னர் அவர் கூறுகையில்... அதிமுக ஆட்சியில் மாநகராட்சி நிர்வாகமும் முறையாக நடைபெறவில்லை.


 அதன்கீழ் வரும் 20 பள்ளிகள் பராமாிப்பு மற்றும் எதிர்கால தலைமுறையினர் நலன் குறித்து அதற்கு தேவையான கட்டமைப்பு பணிகளை முறையாக செய்துள்ளோம்.



 இதனால் கடந்த ஆண்டு அரசு பள்ளியில் மாணவ மாணவிகள் சேர்க்கை அதிகாித்துள்ளன.


 அதே போல் தேசிய அளவில் அரசு பள்ளிகள் சிறப்பாக நடைபெறுகிறது.


  தேசிய அளவில் மேற்கொண்ட ஆய்வில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு 3வது இடம் தேர்வு செய்யப்பட்டு ஓன்றிய அரசால் விருதுகள் வழங்கப்பட்டு மாநகராட்சியை கௌவரவித்தனர்.


 இந்தஆண்டு பள்ளி மாணவர்களின் சேர்க்கை மீண்டும் அதிகாித்துள்ளது


 அதற்கு ேதவையான கட்டமைப்புகளை நாளை(10-6-2024) பள்ளி திறக்க இருப்பதால் முழுமையாக சென்று ஆய்வு மேற்கொண்டு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு எல்லா கட்டமைப்பு பணிகளும் சாியாக இருக்கிறதா என்பதை நோில் பார்வையிட்டு அதில் குறைபாடுகள் ஏதுவும் இருந்தால் சாி செய்வதற்கு அதிகாாிகள் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


 ஓரு நாட்டின் வளர்ச்சியில் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் தான் எதிர்காலம் படிப்பறிவு இல்லாத மாநிலமாக உருவாகும் போது எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் அந்த அடிப்படையில் முதலமைச்சாின் உத்தரவு படி இந்த பணிகளை செய்து வருகிறோம் என்றார்.


     உடன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாின் நேர்முக உதவியாளர் துரைமணி, மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

சனி, 1 ஜூன், 2024

தூத்துக்குடியில் 10 +12 பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்குபாராட்டு சான்றிதழும் கேடயம் வழங்கல்

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 2-6-2024

செய்தி புகைப்படங்கள்  

தமிழன் ரவி

மூத்த பத்திரிகையாளர் 

அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர் மாணவிகளுக்கு தூத்துக்குடியில்

பாராட்டு விழா நடைபெற்றது.

இது பற்றிய செய்தியாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி எட்டையபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது.



     தூத்துக்குடி எட்டையபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் சுபாஸ்ரீ சேவா மகளிர் சுய உதவிக் குழு இணைந்து பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று 1-6-2024 நடைபெற்றது. 


 தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்ற தலைவர் மைதிலி செல்வராஜ்  தலைமை தாங்கினார். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் முனைவர் கோ அருள் ஒளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


பின்னர் பேராசிரியர் முனைவர் கோ அருள் ஒளி மாணவ மாணவிகளுக்கு கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.

         முன்னதாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் பொருளாளர் சாந்தி சரவணன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.


 விழாவிற்கு சார்பதிவாளர் குருசாமி  தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் செயலாளர் காமாட்சி முருகன் முன்னிலை வகித்தனர்.

        வழக்கறிஞர் விஜய சுந்தர் முனைவர் சகாய ராஜன் கவிஞர் நெடுஞ்சாலை செல்வராஜ் முனைவர் முருகன் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்ற துணைத் தலைவர் பத்மலதா ராஜ் ஆசிரியை கோமதி நடராஜன் ஆசிரியை மாரியம்மாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் மாணவிகள் விவரம்:-

        பத்தாம் வகுப்பு தேர்வில் ஆர்த்தி 483 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் சங்கரேஸ்வரி 480 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் சூரிய தேவ் மற்றும் சப்னம் 470 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்று பரிசுகளை பெற்றனர்.


 பதினொன்றாம் வகுப்பில் ஜெகன் 505 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் தனுஜா 490 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் கோபிகா 477 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்று கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் பெற்றனர்.


 பன்னிரண்டாம் வகுப்பில் ஜனனி 564 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் ரேஷ்மா ரெட்டி 517 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் சிவரஞ்சனி 504 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்று கேடயமும் பாராட்டு சான்றிதழும் பெற்றனர். 


பத்தாம் வகுப்பில் சிறப்பு பரிசும் கேடயமும் பெற்ற மாணவர்கள் ஆகாஷ், பெத்தனேஸ்வரி, ஸ்ரீ வர்ஷினியும், பன்னிரண்டாம் வகுப்பில் சிறப்பு பரிசு பெற்ற லட்சுமி தனஸ்ரீக்கும் கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

        ஆசிரியை தேவி  நன்றி கூற நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி  நிறைவுற்றது.

 விழாவில் குடியிருப்பு வாழ் பொது மக்களும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நலம் மன்ற உறுப்பினர்களும் சுபாஸ்ரீ சேவா மகளிர் உதவிக் குழு உறுப்பினர்களும் மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

       விழா ஏற்பாடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நில மன்றம் சுபாஸ்ரீ சேவா மகளிர் சுய உதவிக் குழு சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை இணைந்து சிறப்பாக செய்திருந்தது.

வியாழன், 30 மே, 2024

தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் அ.குருநாதன் பணி நிறைவு தமிழாசிரியர் கழகம் சார்பாகபொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

30-5-2024

செய்தி புகைப்படங்கள்  

தமிழன் ரவி

முத்த பத்திரிகையாளர் 

தூத்துக்குடி  மாவட்ட கல்வி அலுவலர் அ.குருநாதன் பணி நிறைவு ஓய்வு பெறுகிறார்.

 தமிழாசிரியர் கழகம் சார்பாக அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது 



இது பற்றிய செய்தியாவது:-

  தூத்துக்குடி  மாவட்ட கல்வி அலுவலர் அ.குருநாதன் இன்று 30-5-2024 பணி ஓய்வு பெறுகிறார் 


அனத முன்னிட்டு அவருக்கு பணி  நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது


 தூத்துக்குடி மாவட்டத் தமிழகத் தமிழாசிரியர் கழகம் சார்பாகபொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


பணி நிறைவு பெறும் மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன் -க்கு நினைவுப் பரிசாக... தூத்துக்குடி மாவட்ட எழுத்தாளர்கள் முகமது யூசுப், தேரிக்காட்டு இலக்கியவாதி கண்ணகுமார விஸ்வரூபன்,நெல்லை தேவன் ஆகியோரின் நாவல்கள் மற்றும் படைப்புகள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வில் தூத்துக்குடி கல்வி மாவட்ட தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் தலைவர் கா. பழனி வேலாயுதம் தூத்துக்குடி கல்வி மாவட்டச்செயலர் கருத்தப்பாண்டியன் தூத்துக்குடி கல்வி மாவட்டப் பொருளாளர் பூபால் செல்லையா, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஆதி அருமைநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்

வெள்ளி, 17 மே, 2024

மாணவ மாணவிகளே வாருங்கள் கட்டணமில்லா பயிற்சி திருச்செந்தூரில் திருமா பயிலகம் பயன் அடையுங்கள்

 ▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

17-5-2024

photo news by arunan journalist 



மாணவ மாணவிகளே இந்த ஆண்டு தேர்ச்சி பெறவில்லையே என கவலை பட வேண்டாம்

Don't worry   வாருங்கள் 

கட்டணமில்லா பயிற்சி திருமா பயிலகம் !!!

10, 12ஆம் வகுப்பு 

பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்கள் துணை தேர்வில் வெற்றி பெற திருமா பயிலகம், வீடு கல்வி அறக்கட்டளை இணைந்து திருச்செந்தூரில் நடத்தும் 'கட்டணமில்லா பயிற்சி வகுப்புக்கு வந்து சேருங்கள்!

வெற்றி பெறுங்கள் 

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 

🌊 அலைபேசி எண் 


சு.விடுதலைச்செழியன் 

பெ.தமிழ்ச்செல்வன்


8675590803

8870183041

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

1930 சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பேரணியில் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் : 17.02.2024

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


இது பற்றிய செய்தியாவது:-


சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (17.02.2024) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.


 இந்த விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் இருந்து தொடங்கி குரூஸ் பர்னாந்து சிலை வரை சென்று நிறைவடைந்தது.



இப்பேரணியின் போது கிரெடிட் கார்டு சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றுபவர்கள், ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்பவர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நமது நண்பர்கள் போன்று அல்லது பிரபலமானவர்கள் போன்று போலி கணக்குகளை துவங்கி நம்மிடம் பண மோசடியில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஆன்லைனில் பம்பர் பரிசு விழுந்திருப்பதாக கோரி உங்கள் விபரங்களை திருடி அதில் எஸ்.எம்.எஸ் அனுப்பி பண மோசடி செய்பவர்கள் மற்றும் தங்கள் நிலம் அல்லது வீட்டின் மீது செல்போன் டவர் அமைத்து தந்து மாத வாடகை அதிக அளவில் தருவதாக கூறி நம்ப வைத்து மோசடி ஈடுபடுபவர்கள் ஆகியோர் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் பதாகைகள் ஏந்தி பள்ளி மாணவ மாணவிகள் பேரணியில் முழக்கமிட்டு சைபர் குற்றம் குறித்து புகார் தெரிவிக்கும் இலவச தொலைபேசி எண்ணான 1930 பொறித்த பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்றனர்.


இப்பேரணியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  கார்த்திகேயன், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்  கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி துணை முதல்வர் முனைவர்  அருணாச்சல ராஜன், தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்ற பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி, தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர்  ஷோபா ஜென்சி உட்பட காவல்துறையினர் மற்றும் காமராஜ் கல்லூரி, சுப்பையா வித்யலாயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிரசெண்ட் பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.

சனி, 14 அக்டோபர், 2023

இடமாற்றம் பணிமாறுதல் பற்றி தூத்துக்குடி கலெக்டர் செந்தில் ராஜ் பேச்சு பரபரப்பு ஆசிரியர் & மாணவர்களுக்கு கலெக்டர் தனது ஆதங்கமான அட்வைஸ்

thoothukudileaks 15-10-2023

photo news by 

arunan journalist 

இடமாற்றம் பணிமாறுதல் பற்றி தூத்துக்குடி கலெக்டர் செந்தில் ராஜ் ஆதங்கம் தெரிவித்து பேசினார்.



இது பற்றிய செய்தியாவது:-

தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய கலெக்டர் ஆக லட்சுமிபதி இ.ஆ.ப.,அவரை நியமனம் செய்துள்ளார்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் செந்தில் ராஜ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்  கலெக்டர் செந்தில் ராஜ் காலகட்டத்தில் தூத்துக்குடி மற்றும் மாவட்டத்தில் பல சரித்திர முக்கியத்துவமான பல நல்ல நிகழ்வுகள் நடைபெற்றன. 

இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் கனிமொழி எம்பி கீதாஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் கடம்பூர் ராஜு மார்கண்டேயன் சண்முகையா மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடன் கண்ணியமிக்க நல்ல  தொடர்பு இருந்ததால் மக்கள் பணிகளை தொய்வில்லாமல் செய்து வந்தார் 



குறிப்பாக தூத்துக்குடிமாவட்ட  கனிமொழி எம்பி பேரன்புடன் கனிமொழி எம்பி யின் எண்ணோட்ட அலைவரிசையில் அவரது பணிகளை திறம்படச் செய்ததது பாராட்ட தக்கது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் அன்பை அமைதியாக பெற்றிருக்கிறார் இவரின் இடமாற்றம் என்பது மக்கள் பிரதிநிதிகள் சமுக ஆர்வலர்கள் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு போன்ற பலருக்கு மிக வருத்தம் தந்துள்ளது என்கிறார்கள்.

ஆசிரியர் & மாணவர்களுக்கு  கலெக்டர் தனது ஆதங்கமான அட்வைஸ் பரபரப்பு பேச்சு !!!

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தினக் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில் ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் 



தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா மேல் நிலைப்பள்ளி கூட்டரங்கில் நேற்று 14 10 2023  நடைபெற்றது.

 

கலெக்டர் செந்தில் ராஜ் பேசுகையில் ..

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையில் அவர் பேசியதாவது :

இன்றைய தினம் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள அனைத்து
ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


தூத்துக்குடி மாவட்டம் தேர்ச்சி சதவிகிதத்தில் அடுத்த முறை முதல் இடத்திற்கு
வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பள்ளிக் கல்வித் துறையில்
தூத்துக்குடியை பற்றி எந்தவிதமான புகாரும் இதுவரை வந்தது கிடையாது.

தூத்துக்குடி க்கு மரியாதை !!!


தூத்துக்குடிக்கு என்று எப்போதும் ஒரு தனி மரியாதை உண்டு. 

அரசு துறையில்
பணிபுரிபவர்களுக்கு இடமாறுதல் வழக்கமான ஒன்றுதான். 

அரசு பணியில்
பணிபுரியும் ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம்தான். 


அரசு செயல்படுத்தக்கூடிய
திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்கள்
பணியாற்றுவதற்குதான் அரசு பணிக்கு வந்திருக்கிறோம். 

ஆசிரியர்கள்
வகுப்பறையாக இருந்தாலும் சரி, 

தேர்தல் பணியாக இருந்தாலும் சரி
எந்தவொரு சிரமம் பார்க்காமல் பணிபுரிகிறார்கள்


எனக்கு எனது தாயாருடன்
பள்ளிக்கு சிறு வயதில் சென்றபோது அங்குள்ள ஆசிரியர்கள், கல்வி
அலுவலர்களை பார்த்து அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது.

கலெக்டரின் ஆசை!!!


அப்போது..

 நான் முதன்மை கல்வி அலுவலராக வேண்டும்
ஆசைப்பட்டேன். 

நான் பள்ளியில் முதல் மாணவனாக வந்தபோது ஆசிரியர்
என்னை மருத்துவராக வேண்டும் என்று நம்பிக்கையை தந்தார். அதன்படியே
நான் மருத்துவரானேன். பின்னர் நன்றாக படித்து மாவட்ட ஆட்சியர் ஆனேன்.

சின்ன சின்ன விஷயங்கள் மாணவ, மாணவிகளிடையே தாக்கத்தை
ஏற்படுத்தும். மாணவ, மாணவியர்கள் எல்லோரும் ஆசிரியர்களுக்கு மரியாதை
தர வேண்டும். 


நீங்கள் என்ன யோசிக்க வேண்டும் என்பதைவிட எப்படி
யோசிக்க வேண்டும் என்பதைத்தான் பார்க்க வேண்டும். நீங்கள் நிறைய
விளையாட வேண்டும்.


 உங்கள் பள்ளியில் ஏதேனும் குறைகள்
இருக்கும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றால் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள
பள்ளிகளுக்கு பல்வேறு துறைகளின் மூலம் பல்வேறு திட்டப்பணிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.


 ஆகையால் ஆசிரியர்களாகிய நீங்கள் எப்போதும்
சிறப்பாக செயல்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தைப் பள்ளிக்கல்வித்துறையில்
முதன்மை மாவட்டமாக கொண்டுவர அயராது பாடுபட வேண்டும் என மாவட்ட
ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  தெரிவித்தார்கள்.

கலெக்டர் செந்தில் ராஜ் விருது வழங்கல் 

 அடுத்ததாக ..தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,

இ.ஆ.ப., அவர், 

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் .எல்.ரெஜினி

, தூத்துக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் .ஏ.குருநாதன்,

கோவில்பட்டி மாவட்டக் கல்வி அலுவலர் .சு.ஜெயபிரகாஷ்ராஜன்

ஆகியோர்களுக்கும் நல்அளுமை விருதுகளை வழங்கினார்.



பின்னர் 

மாநில நல்லாசிரியர்

விருதுபெற்ற 11 ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் நினைவுப் பரிசுகளையும்,

12 சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளையும், கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற

10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி

பெற்ற 67 பள்ளிகளின் 550 தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு

பாராட்டுச் சான்றிதழ்களையும் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அவர்கள்

கற்றுத்தரும் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் அதிகமாக பெறவைத்த 36

ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்கள்.




இந்நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி  முன்னிலை வைத்தார். 

விழாவின் வரவேற்புரையை தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மாணவியர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தினி கெளசல் ஆற்றினார் 


இவ் விழாவின் தலைமை உரையாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல். ரெஜினி   பேசினார் விழாவின் வாழ்த்துரையாக மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும்  மேயர் ஜெகன்  சிறப்புரை ஆற்றினார்கள்.

 கல்வி அலுவலர்கள் (இடைநிலைக்கல்வி) .குருநாதன் (தூத்துக்குடி),


.ஜெயபிரகாஷ்ராஜன் (கோவில்பட்டி), வேப்பலோடை அரசு மாதிரி


மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் .சேகர், பள்ளிகளின்

தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

இந்நிகழ்வை அரசு மேல்நிலைப்பள்ளி கீழப்பூவானி தலைமை ஆசிரியர்  கஜேந்திர பாபு  சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

 இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் தலைமை ஆசிரியர்கள் கஜேந்திர பாபு,சேகர், கார்த்திகேயன், சிவபிரசாத்,பெர்சியாள் ஞானமணி பொன் சந்தன லதா மற்றும் ஜோயல் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் உதவி திட்ட அலுவலர்கள் இடைநிலை மற்றும் தொடக்கநிலை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு கல்வி  ஃபெல்லொஷிப் உடன் இருந்தனர்.



இந்நிகழச்சியில் ஏராளமான பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.





.

புதன், 12 ஏப்ரல், 2023

தூத்துக்குடியில் காலை உணவு திட்டம் பிரபல நடிகர் சந்தோஷ் பிரதாப் தொடங்கிவைத்தார் தூத்துக்குடி எஸ்ஏவி தொடக்க பள்ளி குழந்தைகளுக்கு மகிழ்ச்சியுடன் சிரித்து பேசியவாறு உணவு பரிமாறினார்..நடிகர் சந்தோஷ் பிரதாப் தாமதமாக வந்த தால்..பசியுடன் காத்துகிட்டு இருந்தார்கள் பள்ளி குழந்தைகள்!!.

thoothukudileaks 12-4-2023

photo news by

Article arunan 

தூத்துக்குடி எஸ்ஏவி தொடக்க பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் பிரபல நடிகர் சந்தோஷ் பிரதாப் தொடங்கிவைத்தார்.






இதுபற்றி செய்தியாவது:-

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் பசி, ஊட்டச்சத்து குறைபாட்டைபோக்கி, கல்வியை ஊக்குவிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் 
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும்  மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் வழங்கப்படுகிறது.


நிகழ்ச்சி காலை 9மணி 



இன்று மேலூர் தூத்துக்குடி இரண்டாம் ரயில்வே கேட் அருகே உள்ள  தூத்துக்குடி எஸ்ஏவி தொடக்க பள்ளி குழந்தைகளுக்கு help on hunger foundation  வழங்கும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக விஜய் டிவி குக்வித் கோமாளி ஷோ பிரபல நடிகர் சந்தோஷ் பிரதாப் சரியாக இன்று(12-4-2023) காலை 10மணிக்கு எஸ்ஏவி பள்ளி வருகை தந்தார்.
எஸ்ஏவி பள்ளி குழுமம் செயலர் சொர்ணலதா வரவேற்று இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

சமையல் இருப்பு அறையை திறந்து அங்கே நடிகர் சந்தோஷ் பிரதாப் குத்து விளக்கு ஏற்றினார்.

பின்னர் எஸ்ஏவி பள்ளி குழுமம் செயலர் சொர்ணலதா மற்றும் தலைமையாசிரியர் ஆசிரியர் ஆசிரியைகள் விளக்கேற்றி நிகழ்ச்சி ஆரம்பித்தனர்.



அதன் பிறகு
காலை உணவுக்காக காத்திருந்த பள்ளி குழந்தைகளுக்கு உணவு கேசரி பூரி ஆகியவற்றை நடிகர் சந்தோஷ் பிரதாப் சிறு குழந்தை களுடன் சிரித்து பேசியபடி மகிழ்ச்சியுடன் பரிமாறினார்.

இந்த நிகழ்ச்சியில்

Help on Hunger foundation வழங்கும் மாணவ மாணவியருக்கான காலை உணவு திட்டம் தொடக்க விழாவானது  S A V  தொடக்கப் பள்ளி ,2 ஆம் கேட் ,மேலூர், தூத்துக்குடி. வைத்து ஆரம்பிக்கப்பட்டது . 

இவ்விழாவின் சிறப்பு விருந்தினர் பிரபல திரைப்பட நடிகர் சந்தோஷ் பிரதாப் 

 S A V பள்ளிக் குழும செயலாளர் S. சொர்ண லதா M.A.M.L தலைமையில் HELP ON HUNGER - Team முன்னிலையில் இன்று ( 12-04-2024)சிறப்பாக தொடங்கப் பட்டது.


 இவ்விழாவில் S A V தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை மெட்ரோ  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் S A V பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் K .குப்புசாமி , S A V தொடக்கப் பள்ளி ஆசிரியை நான்சி  வரவேற்பு உரை வழங்கினார்.

 பெனாசிர் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார்கள் , 

 ஜெயஜோதி  நன்றி உரை வழங்கினார். 

S A V பள்ளியின் ஆட்சிக்குழு சார்பாக சிறப்பினராக ஹரிகுமார் பிரம்ம நாயகம் கலந்து கொண்டனர்.

S A V மேனிலைப் பள்ளி சார்பாக தலைமை ஆசிரியர் கிருபை வேல்முருகன் ,ஆசிரியர்கள் சார்பாக   மாரியப்பன் ,பழனி வேலாயுதம், P.சுந்தர் ராஜன் ஆகியோர் ஒருங்கிணைந்து நிகழ்ச்சிகளை நடத்தினார்கள் .


வரும் முன் காத்திருந்த பள்ளி மாணவர்கள் 




 நடிகர் சந்தோஷ் பிரதாப் தாமதமாக வந்த தால்..பசியுடன் 

காத்துகிட்டு இருந்தார்கள் பள்ளி குழந்தைகள்!!

நிகழ்ச்சி 9மணி  என்றிருந்த நிலையில் காலை வேளை சாப்பிடாமல் 

எட்டு எட்டரை மணிக்கே பள்ளி குழந்தைகள் வந்து காத்து இருந்தனர் ஆனால்? நடிகர் சந்தோஷ் பிரதாப் நிகழ்ச்சி க்கு பத்துமணிக்கு வந்து குத்துவிளக்கு ஏற்றி பிறகு 10-15 மணிக்கு தான் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப் பட்டது.

video 


சென்னையில் ஒருமுறை ஒரு பள்ளிக்கு சென்றபோது, அங்கே இருந்த குழந்தைகளிடம், ‘ஏன் சோர்வாக இருக்கிறீர்கள், சாப்பிடவில்லையா’ என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘காலையில் எப்போதும் நாங்கள் சாப்பிடுவதில்லை. அப்படியே பள்ளிக்கு வந்துவிடுவோம்’ என்று சொன்னதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனே அதிகாரிகளுடன் ஆலோசித்தபோது, நிறைய குழந்தைகள் காலையில் சாப்பிடாமல்தான் பள்ளிக்கு வருகிறார்கள் என்றனர்.

குழந்தைகளை பட்டினியாக அமரவைத்து பாடம் சொல்லித் தரக்கூடாது என்று நினைத்துதான் காலை உணவு வழங்கும் திட்டத்தைத்
கடந்த ஆண்டு காலைஉணவு திட்டம் துவக்கி வைக்கும் போது தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.