வியாழன், 18 ஜூன், 2026

வளர்ச்சி நிதி குலுக்கல் திட்ட முதல் பரிசு கார் பெற்ற தூத்துக்குடி வியாபாரிக்கு சிறப்பு பாராட்டு

 Tamil Nadu updates news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 18:

சுதேசி நாயகன் த.வெள்ளையன் உருவாக்கிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, வியாபாரிகளின் நலன் மற்றும் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 

thoothukudileaks


ஆன்லைன் வர்த்தக கட்டுப்பாடு, அந்நிய பொருட்களுக்கு எதிர்ப்பு மற்றும் சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கொள்கைகளை முன்னிறுத்தி, உள்ளூர் வணிகர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பணியில் பேரவை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

த.வெள்ளையன் மறைவுக்குப் பின்னரும் அவரது வழிகாட்டுதலின்படி பேரவை தனது பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.


 இதன் ஒரு பகுதியாக கடந்த மே 5ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற்ற 43வது மாநில மாநாடு மாநிலத் தலைவர் எஸ்.சௌந்தர்ராஜன், மாநில பொதுச் செயலாளர் மெஸ்மர் காந்தன் வெள்ளையன் மற்றும் மாநில பொருளாளர் எஸ்.பீர் முகமது ஆகியோரின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

முதல் பரிசு கார் !!!

அம் மாநாட்டையொட்டி அறிவிக்கப்பட்ட வளர்ச்சி நிதி குலுக்கல் திட்டத்தின் முதல் பரிசான கார், தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகர் கிளை வியாபாரிகள் சங்க உறுப்பினரும் சிறு ஹோட்டல் தொழிலதிபருமான வி.ரவிக்குமாருக்கு கிடைத்தது.


இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை (ஜூன் 18) காலை தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...

thoothukudileaks


, மாநில துணைத் தலைவர் பொன்.தனகரன், த.பாஸ்கர், மாநில இணைச் செயலாளர் எச்.வில்லியம்ஸ் மஸ்கர்னாஸ், ஜெ.ஜவஹர் மற்றும் ஆர்.விக்னேஷ் ஆகியோர் முன்னிலையில் வி.ரவிக்குமாருக்கு முதல் பரிசுக்கான கார் வழங்கப்பட்டது.

thoothukudileaks


நிகழ்ச்சியில் மில்லர்புரம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆனந்தசேகரன், ஸ்பிக் நகர் வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் சின்னதங்கம், பர்னிச்சர் சங்கத் தலைவர் ரத்னா தர்மராஜ், வட்டத்தெப்பம் பகுதி வியாபாரிகள் சங்கத் தலைவர் சரவணமூர்த்தி, பாளை ரோடு பாதுகாப்பு சங்கத் தலைவர் பாக்யா மணி, ஜவுளி மற்றும் ரெடிமேட் வியாபாரிகள் சங்க செயலாளர் ஜெயசுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தெர்மல் நகர் வியாபாரிகள் சங்க செயலாளர் மூர்த்தி நன்றி கூறினார். சங்க பொருளாளர் அங்குசாமி, துணைச் செயலாளர் தேவ ஆனந்த், துணைத் தலைவர் முஸ்தபா மற்றும் ஏராளமான வியாபாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

thoothukudileaks



இந்நிகழ்வைத் தொடர்ந்து ...

மாவட்டத் தலைவர் தெர்மல் சொ.ராஜா பேசுகையில், 


“சுதேசி நாயகன் த.வெள்ளையன் உடலால் நம்மிடையே இல்லாவிட்டாலும், அவர் காட்டிய பாதையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தொடர்ந்து செயல்பட்டு வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அரணாகவும், சொன்னதைச் செய்யும் அமைப்பாகவும் திகழ்கிறது” என்றார்.

thoothukudileaks

thoothukudileaks


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக