தமிழக முதல்வர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழக முதல்வர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

காவிரி நீர் வரத்து குறைவு: கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர வழக்கு தாக்கல்!

தூத்துக்குடி லீக்ஸ் (Thoothukudi Leaks) – நாளிதழ் செய்தி 

நாள்: 03 ஆகஸ்ட் 2026

செய்தி வெளியீடு எண்: 486

பிரிவு: தமிழக அரசு / காவிரி நீர் விவகாரம்

காவிரி நீர் வரத்து குறைவு: கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர வழக்கு தாக்கல்!

சென்னை /ஆக 3

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRC) ஆகியவற்றின் உத்தரவுகளின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைத் திறந்து விடாத நிலையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் . ச. ஜோசப் விஜய் அவரின் அறிவுறுத்தலின்படி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனுத் தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்துள்ளது.

thoothukudileaks


முக்கிய பின்னணி விவரங்கள்:

 CWRC உத்தரவு:** கடந்த 28.07.2026 அன்று நடைபெற்ற 139-வது கூட்டத்தில், 29.07.2026 முதல் 12.08.2026 வரை பிலிகுண்டுலுவில் வினாடிக்கு 3,500 கன அடி (cusecs) நீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து 30.07.2026 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54-வது அவசரக் கூட்டத்திலும் இம்முடிவு உறுதி செய்யப்பட்டது.


 உண்மை நிலவரம்:


ஆனால், 29.07.2026 முதல் 02.08.2026 வரை பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு வரப்பெற்ற நீரின் அளவு வினாடிக்கு வெறும் 158 முதல் 550 கன அடி மட்டுமே ஆகும்.


கர்நாடக அணைகளின் தற்போதைய நீர் இருப்பு (03.08.2026 நிலவரப்படி):**

 கே.ஆர்.எஸ் (KRS) அணை: 23.078 டி.எம்.சி

 கபினி அணை: 18.610 டி.எம்.சி

 ஹேமாவதி அணை: 28.022 டி.எம்.சி

 ஹாரங்கி அணை: 7.827 டி.எம்.சி

 மொத்த நீர் இருப்பு: 77.537 டி.எம்.சி (பயன்பாட்டு நீர் இருப்பு: 67.517 டி.எம்.சி)


தமிழகத்தின் கோரிக்கை & சட்ட நடவடிக்கை:

கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்து நீர்வருத்து அதிகரித்துள்ளதால், விகிதாச்சார அடிப்படையில் பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு 26.954 டி.எம்.சி ஆகும். 


ஆனால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அளித்த உத்தரவான 4.536 டி.எம்.சி என்பது மிகவும் குறைவாகும்.


கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்தும், விகிதாச்சார அடிப்படையில் தண்ணீரைத் திறந்து விட கர்நாடக அரசு தவறியுள்ளது. எனவே, மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனையின்படி, இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணவும், தமிழ்நாட்டிற்கு உரிய நீரை உரிய காலத்தில் பெறவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி உச்சநீதிமன்றத்தில் இன்று (03.08.2026) மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

thoothukudileaks

thoothukudileaks


வெளியீடு:இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9


ஞாயிறு, 21 ஜூன், 2026

முதல்வர் ஜோசப் விஜய் 52-வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் மா செ எஸ்டிஆர் சாமுவேல் தலைமையில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி கொண்டாட்டம் பரபரப்பு

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி


தூத்துக்குடி, ஜூன் 22:

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு இன்று காலை 11 மணியளவில் சிறப்பான கொண்டாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks


மாவட்ட செயலாளர் சாமுவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கட்சியினர் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன், கேக் வெட்டி பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, முதல்வர் ஜோசப் விஜயின் நீண்ட ஆயுளும், மக்கள் பணியும் சிறக்க வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.



இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகமாக பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks



thoothukudileaks

புகைபட விளக்கம்:

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு முதல்வர் ஜோசப் விஜயின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் சாமுவேல் தலைமையில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.

பிறந்த நாள் வாழ்த்து பதிவு பிரபல திரைப்பட நடிகர் விஜய் அவர்களுக்கு இன்று 52 ஆவது பிறந்த நாள் 


அவர்களுக்கு நம் தூத்துக்குடி லீக்ஸ்  சார்பாக பிறந்தநாள் 

வாழ்த்துக்கள்

thoothukudileaks


முதல்வர் ஜோசப் விஜய் இது வரை....

சென்னையில் 1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி எஸ்.ஏ. இயக்குநர் சந்திர சேகர், பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருக்கு வித்யா என்ற ஒரு தங்கை இருந்தார். கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா பள்ளியில் தனது படிப்பை தொடங்கியவர் விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.


பின் சென்னை லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேசன் படிப்பை தொடர்ந்தார். ஆனால் நடிப்பின் மீதிருந்த ஈர்ப்பால் பாதியிலேயே கைவிட்டார்.


விஜய் தன் ரசிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவருக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்


thoothukudileaks


விஜய் தன் சிறு வயதில் இருந்தே தந்தை எஸ்.ஏ. சந்திர சேகரின் படங்களில் நடித்துள்ளார். வெற்றி, வசந்தராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.


இதன் தொடர்ச்சியாக கதா நாயகனாக நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமானார். இதையடுத்து, செந்தூரப்பாண்டி, ரசிகன், ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, சந்திரலேகோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் விக்ரமன் இயக்கத்தில் நடித்த பூவே உனக்காக படம் தான் அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக இருந்தது. 


இதைத்தொடர்ந்து 90 களில் விஜய்யை நடிப்பின் உச்சத்தில் வைத்து தமிழ் ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர். காலமெல்லாம் காத்திருப்பேன், லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, ப்ரியமுடன், நிலாவே வா, துள்ளாத மனமும் துள்ளும், என ஏராளமான படங்களில் பெரும் புகழ் பெற்றார்.


90 களில் தொடங்கிய இந்த வெற்றிப்பயணம் 2000ஆம் ஆண்டுகளில் கில்லி, பிரியமானவளே, குஷி என கடைசியாக பீஸ்ட் வரை நீடிக்கிறது .


இப்படி தன் படங்களால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டி வைத்துள்ள விஜய் தற்போது அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.


 அவர் 10 ,12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடத்தியதே விஜய் அரசியலுக்கு வருவதற்கான அச்சாரமாகவே பார்க்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடக்கம் 

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி ஆரவாரப்படுத்தியது. வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.


அவர் கூறியபடியே சட்ட சபை தேர்தலில் வென்று தமிழகத்தின் முதலமைச்சராக தேர்வு பெற்று உள்ளார் 


தமிழக முதல்வராக பிறந்தநாள் கொண்டாடும் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்களுடன் இணைந்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பிலும் வாழ்த்துக்கள் இன்று தெரிவித்து வருகின்றனர்.


சனி, 20 ஜூன், 2026

தமிழக அமைச்சர்கள் செல்போன் நம்பர் மற்றும் இமெயில்கள்

Tamil Nadu updates,

தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி ஒரு புதிய அதிரடி முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. 


அதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன.

thoothukudileaks


இதில், முதலமைச்சருக்கு மின்னஞ்சல் முகவரி (Email ID) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.


 ஆனால், மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் மின்னஞ்சல் முகவரிகளுடன் சேர்த்து, அவர்களின் மொபைல் எண்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.


அமைச்சர்களின் இந்த எண்களுக்கு வரும் அழைப்புகளை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கையாளுவார்கள் என்றும், பிரச்சனைகளின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து அவை சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய தீர்வு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


Thiru C. Joseph Vijay* - Email-Id: mlaperambur[at]tn[dot]gov[dot]in




*Thiru N. Anand(Minister for Rural Development and Water Resources)*

Email-Id: mlathiyagarayanagar[at]tn[dot]gov[dot]in

Tel.No  : 90039 33964


*Thiru Aadhav Arjuna*

*Minister for Public Works and Sports Development*

Email-Id: mlavillivakkam[at]tn[dot]gov[dot]in

Tel.No : 99624 99599


*Dr. K.G. Arunraj*

*Minister for Health, Medical* *Education and Family Welfare*

Email-Id: mlathiruchengodu[at]tn[dot]gov[dot]in

Tel.No : 94459 53976



*Thiru K A. Sengottaiyan*

*Minister for Revenue and Disaster Management*

Email-Id: mlagobichettipalayam[at]tn[dot]gov[dot]in

Tel.No : 63852 49393



*Thiru P. Venkataramanan*

*Minister for Food and Civil Supplies*

Email-Id: mlamylapore[at]tn[dot]gov[dot]in

Tel.No : 98412 73454


*Thiru R. Nirmalkumar*

*Minister for Energy Resources and Law*

Email-Id: mlathiruparankundram[at]tn[dot]gov[dot]in

Tel.No : 99625 66341



*Thiru Rajmohan*

*Minister for School* *Education, Tamil Development, Information and Publicity*

Email-Id: mlaegmore[at]tn[dot]gov[dot]in

Tel.No : 90030 83602



*Dr. TK. Prabhu*

*Minister for Natural Resources*

Email-Id: mlakaraikudi[at]tn[dot]gov[dot]in

Tel.No : 95853 65217




*Selvi S. Keerthana*

*Minister for Industries*

Email-Id: mlasivakasi[at]tn[dot]gov[dot]in

Tel.No : 97902 73544


*Thiru P. Viswanathan*

*Minister for Higher Education*

Email-Id: mlamelur[at]tn[dot]gov[dot]in

Tel.No : 96002 14442



*Thiru S. Rajesh Kumar*

*Minister for Tourism*

Email-Id: mlakilliyoor[at]tn[dot]gov[dot]in

Tel.No : 94431 03539


*Thiru A.M. Shahjahan*

*Minister for Minorities Welfare*

Email-Id: mlapapanasam[at]tn[dot]gov[dot]in

Tel.No : 99659 04553


*Thiru Vanni Arasu*

*Minister for Social Justice*

Email-Id: mlatindivanam[at]tn[dot]gov[dot]in

Tel.No : 95515 11006


*Thiru A. Vijay Tamilan Parthiban*

*Minister for Transport*

Email-Id : mlasalemsouth[at]tn[dot]gov[dot]in

Tel.No : 99421 98999


*Thiru B. Rajkumar*

*Minister for Housing and Urban Development*

Email-Id: mlacuddalore[at]tn[dot]gov[dot]in

Tel.No : 99422 24532



*Thiru V. Sampath Kumar*

*Minister for Backward Classes Welfare*

Email-Id: mlacoimbatorenorth[at]tn[dot]gov[dot]in

Tel.No : 98422 60733, 86681 81155



*Thiru M. Vijay Balaji*

*Minister for Handlooms, Textiles and Khadi*

Email-Id: mlaerodeeast[at]tn[dot]gov[dot]in

Tel.No : 98947 23460



*Thiru K. Vignesh*

*Minister for Prohibition and Excise*

Email-Id: mlakinathukadavu[at]tn[dot]gov[dot]in

Tel.No : 99448 17417



*Thiru K. Thennarasu*

*Minister for Non-Resident Tamils Welfare*

Email-Id : mlasriperumbudur[at]tn[dot]gov[dot]in

Tel.No : 99406 19268



*Thiru J. Mohamed Farvas*

*Minister for Labour Welfare and Skill Development*

Email-Id : mlaaranthangi[at]tn[dot]gov[dot]in

Tel.No : 96005 98729


*Thiru V. Gandhiraj*

*Minister for Co-operation*

Email-Id :mlaarakkonam[at]tn[dot]gov[dot]in

Tel.No    :94439 14383


*Tmt K. Jegadeshwari*

*Minister for Social Welfare and Women Empowerment*

Email-Id :mlarajapalayam[at]tn[dot]gov[dot]in

Tel.No    :95978 68633


*Thiru Vinoth*

*Minister for Agriculture - Farmers Welfare*

Email-Id :mlakumbakonam[at]tn[dot]gov[dot]in

Tel.No    :63820 10408



*Tmt C. Vijayalakshmi*

*Minister for Milk and Dairy Development*

Email-Id :mlakumarapalayam[at]tn[dot]gov[dot]in

Tel.No    :70100 12002



*Thiru D. Sarathkumar*

*Minister for Human Resources Management*

Email-Id :mlatambaram[at]tn[dot]gov[dot]in

Tel.No    :96001 33546



*Thiru Ramesh*

*Minister for Hindu Religious* *and Charitable Endowments*

Email-Id :mlasrirangam[at]tn[dot]gov[dot]in

Tel.No    :85240 88410



*Thiru P. Mathan Raja*

*Minister for Micro, Small and Medium Enterprises*

Email-Id :mlaottapidaram[at]tn[dot]gov[dot]in

Tel.No    :90257 95100



*Thiru N. Marie Wilson*

*Minister for Finance,* *Planning and Development*

Email-Id :mlaradhakrishnannagar[at]tn[dot]gov[dot]in

Tel.No    :98409 41770



*Thiru Srinath*

*Minister for Fisheries* *- Fishermen Welfare*

Email-Id :mlathoothukudi[at]tn[dot]gov[dot]in

Tel.No    :98844 81636



*Tmt S. Kamali*

*Minister for Animal Husbandry*

Email-Id :mlaavanashi[at]tn[dot]gov[dot]in

Tel.No    :73588 63314



*Thiru R. Kumar*

*Minister for Artificial Intelligence, Information Technology and Digital Services*

Email-Id :mlavelachery[at]tn[dot]gov[dot]in

Tel.No    :90920 60100



*Thiru R.V. Ranjithkumar*

*Minister for Forests*

Email-Id :mlakancheepuram[at]tn[dot]gov[dot]in

Tel.No    :95001 11371, 94432 56202



*Thiru D. Logesh  Tamilselvan*

*Minister for Commercial* *Taxes and Registration*

Email-Id :mlarasipuram[at]tn[dot]gov[dot]in

Tel.No    :99944 77272



Thiru Rajeev

*Minister for Environment and Climate Change*

Email-Id :mlatiruvadanai[at]tn[dot]gov[dot]in

Tel.No    :99946 72212

புதன், 17 ஜூன், 2026

தூத்துக்குடியில் ரூ.38,000 கோடி கப்பல் கட்டுமானத் திட்டம்: 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

Tamil Nadu updates, news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 17:

தூத்துக்குடியில் சுமார் ரூ.38,000 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள மிகப்பெரிய கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக, தென் கொரியாவின் முன்னணி நிறுவனமான HD Korea Shipbuilding & Offshore Engineering (HD KSOE) நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழு தமிழ்நாடு முதலமைச்சர்  ஜோசப் விஜய் சென்னையில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

thoothukudileaks


தூத்துக்குடி மாவட்டத்தில் அமையவுள்ள இந்தக் கப்பல் கட்டுமானத் திட்டத்தின் மூலம் சுமார் 15,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், துணைத் தொழில்கள் மற்றும் சேவைத் துறைகள் மூலம் ஆயிரக்கணக்கான மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ்நாடு அரசு மற்றும் HD KSOE நிறுவனம் இடையே ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாகியுள்ள நிலையில், திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் செயல்பாட்டு அம்சங்கள் குறித்து நடைபெற்ற ஆலோசனையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்தத் திட்டம் சிப்காட் (SIPCOT) மற்றும் வ.உ.சி. துறைமுக ஆணையத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. 


மேலும், National Shipbuilding & Heavy Industries Park Tamil Nadu Limited (NSHIPTN) நிறுவனம் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

thoothukudileaks


திட்டத்திற்குத் தேவையான அனுமதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் முதலீட்டு முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சருடன் விரிவான ஆலோசனை நடைபெற்றது.


 தூத்துக்குடி துறைமுகத்தின் வளர்ச்சி, தொழில்துறை முன்னேற்றம் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இந்தத் திட்டம் முக்கிய பங்காற்றும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்பில் தமிழ்நாடு தொழில்துறைத் துறை அதிகாரிகள், TIDCO, SIPCOT மற்றும் HD KSOE நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தூத்துக்குடியை தென்னிந்தியாவின் முக்கிய கப்பல் கட்டுமான மையமாக மாற்றும் வகையில் இந்தத் திட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடியில் சுமார் ரூ.38,000 கோடி முதலீட்டில் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். ச. ஜோசப் விஜய் அவர்களுடன் HD ஹுண்டாய் நிறுவனத்தின் (HD Korea Shipbuilding & Offshore Engineering – HD KSOE) உலகளாவிய வணிகப் பிரிவு இயக்குநர் . யங் ஹூன் குவான் ( Young Hoon Kwon) தலைமையிலான உயர்மட்ட அலுவலர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.


புதன், 10 ஜூன், 2026

தூத்துக்குடி பனிமய அன்னை ஆலய திருவிழாவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்க வேண்டும்; மக்கள் எதிர்பார்ப்பு

Tamil Nadu updates 10-6-2026

photo news Dias

by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 10:

தூத்துக்குடி மாநகரின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் புனித பனிமய அன்னை பேராலயத்தின் ஆண்டு திருவிழாவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்று, அன்னையின் அருளைப் பெற வேண்டும் என தூத்துக்குடி மக்கள் அன்போடு எதிர்பார்த்து வருகின்றனர்.

thoothukudileaks


உலகப் புகழ்பெற்ற பனிமய அன்னை பேராலய திருவிழா, வரும் ஜூலை 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, இலங்கை, சவுதி அரேபியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் பக்தர்களும் திரளாக பங்கேற்று வழிபடுவது வழக்கம்.

திருவிழா!!!

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தங்கத் தேர் பவனி, தூத்துக்குடி மாநகரின் முக்கிய வீதிகளில் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெறும். இந்த அரிய நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது குறிப்பிடத்தக்கது.


மேலும், பார் போற்றும் திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் தாயின் கொடியேற்ற நிகழ்வு, 2026 ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முதல்வரின் குடும்ப 🫜 வேர்கள்!!!

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் குடும்ப வேர்கள் தூத்துக்குடி மாவட்டத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நிலையில், அவர் தனது சொந்த மண்ணாக கருதப்படும் தூத்துக்குடிக்கு வருகை தந்து, பனிமய அன்னை பேராலய திருவிழாவில் ஏதேனும் ஒரு நாளில் கலந்து கொண்டு தரிசனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வீடியோ பார்க்க ...

அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் தூத்துக்குடி மக்கள் தங்களின் பேராதரவை வழங்கியுள்ள நிலையில், ...

அந்த அன்புக்கு நன்றிக்கடனாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தூத்துக்குடிக்கு வருகை தருவார் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவுகிறது.

அழைப்பு!!!

மேலும், பனிமய அன்னை பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜாண் செல்வம், தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து திருவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் ஆர்வத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


"THOOTHUKUDI WELCOMES cm JOSEPH VIJAY" என்ற வாசகத்துடன், பனிமய அன்னையின் அருள்பெற தமிழக முதலமைச்சர் தூத்துக்குடி வர வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பாக உள்ளது.

சனி, 14 மார்ச், 2026

தூத்துக்குடியில் அனல்மின் நிலையத்தில் 7% கமிஷன் கேட்டு பணி ஆணைகள் நிறுத்தம் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு அதிகாரிகளை மிரட்டல் ஒப்பந்தக்காரர்கள் கொந்தளிப்பு தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி, 2026 மார்ச் 14:

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் (TTPS) பணி வழங்கும் ஆணைகள் அனைத்தும் 7 சதவீத கமிஷன் தராமல் வழங்கப்படாது என்று மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், இதனால் முக்கியமான ஒப்பந்த பணிகளுக்கான ஆர்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

யார் இந்த மிரட்டல் கும்பல்?

அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் வட்டத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கள் என்று கூறிக்கொள்ளும் மூன்று நபர்கள் இந்த மிரட்டலுக்கு பின்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. 

ஹோண்டா -பாலமுருகன் 

சபி -ஜெகன் 

ஜான்சன் 

இவர்கள் முன்னாள் அமைச்சரின் பெயரை பயன்படுத்தி, 7% கமிஷன் வழங்காமல் பணி ஆணை தரக்கூடாது என்று சில உயர் அதிகாரிகள் மூலமாகவும் ஒப்பந்தக்காரர்களை நேரடியாகவும் மிரட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

thoothukudileaks


டெண்டர் முடிந்தும் ஆர்டர் இல்லை!

டெண்டர் நடைமுறை முடிந்து ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னரும் கூட கமிஷன் தொகை வழங்காத காரணத்தால் பணிக்கான ஆர்டர்கள் இதுவரை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

"இது வழக்கமாக நடைபெற்று வந்தாலும், தேர்தல் நெருங்குவதால் இம்முறை வழக்கத்திற்கு அதிகமான கமிஷன் கோரப்படுகிறது. எங்களால் இனி இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை" என்கிறார்கள்.

மின் உற்பத்திக்கும் அச்சுறுத்தல்

கமிஷன் கோரிக்கையால் அவசியமான பராமரிப்பு மற்றும் ஒப்பந்த பணிகள் தாமதமடைவதால், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். மாநிலத்தின் மின் தேவையில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நிலையம் செயல்திறன் இழந்தால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவது தவிர்க்க முடியாது என்று கூறப்படுகிறது.

அரசியல் நோக்கில் தேர்தல் கமிஷன் கவலை

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில், அரசு நிறுவனங்களில் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கமிஷன் வசூலிக்கப்படுவதாக புகார் எழுவது தேர்தல் ஆணையத்தின் கவனத்தை ஈர்க்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கருத்து கேட்க முயற்சிக்கப்பட்டது; பதில் கிடைக்கவில்லை. தூத்துக்குடி அனல்மின் நிலைய உயர் அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் வாய் திறக்க மறுத்துள்ளனர்.

இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.


வியாழன், 12 பிப்ரவரி, 2026

பின்னணியில் நடந்தது என்ன?முதல்வரின் அதிரடி அறிவிப்பு: மகளிருக்கு ₹5000 - எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ்  photo news by Arunan journalist 

தூத்துக்குடி, பிப்ரவரி 13, 2026

தமிழ்நாடு முதல்வரின் இன்றைய காலை அதிரடி அறிவிப்பு எதிர்க்கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ₹3000 மற்றும் கோடை சிறப்பு தொகுப்பாக ₹2000 என மொத்தம் ₹5000 இன்று காலை 6 மணி முதல் 1.5 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

thoothukudileaks




பின்னணியில் நடந்தது என்ன?

உள்துறை உளவுத்துறை அறிக்கைகளின்படி, மகளிர் உரிமைத்தொகையை நிறுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு இத்திட்டத்திற்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் கசிந்தது.

இந்த முக்கிய தகவல் தமிழ்நாடு உளவுத்துறையால் நேற்று காலையே கண்டறியப்பட்டு முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது.

அவசர ஆலோசனைகள்

நேற்று மதியம் சென்னை செனட்டாப் சாலையில் முதல்வர், துணை முதல்வர், நிதியமைச்சர் மற்றும் நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் நீண்ட நேர ஆலோசனை நடத்தினர். இரவு முழுவதும் செயலக கட்டடத்தில் விளக்குகள் எரிந்தன. முக்கிய அதிகாரிகள் தொடர்ந்து வந்து போய்க் கொண்டிருந்தனர்.

அதிகாலை திருப்பம்

இன்று அதிகாலை 5 மணிக்கு முதல்வர், நிதியமைச்சர், துணை முதல்வர் ஆகியோர் மீண்டும் ஆலோசனை நடத்தினர். நிதியமைச்சர் மூன்று மாதங்களுக்கான ₹3000 வழங்கும் திட்ட வரைவை தயாரித்து முதல்வரிடம் அளித்தார்.

அப்போது முதல்வர் தனது கையெழுத்துடன் ஒரு முக்கிய திருத்தத்தை செய்தார் - கோடை சிறப்பு தொகுப்பாக ₹2000 கூடுதலாக வழங்கி மொத்தம் ₹5000 வழங்க வேண்டும் என்று.

மேலும் ஒரு அறிவிப்பு

இதோடு நின்றுவிடாமல், முதல்வர் தனது தனிப்பட்ட கோரிக்கையாக, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவர் கனிமொழிக்கு ஒரு கடிதம் அனுப்பி, மகளிர் உதவித்தொகை இனி மாதம் ₹2000 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.

நிதி ஒதுக்கீடு

மொத்தம் ₹7500 கோடி இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 1.5 கோடி பெண்களுக்கு இன்று காலை 6 மணியிலிருந்து வங்கிக் கணக்குகளில் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் நிலை

அதிமுக, பாஜக, தவெக கூட்டணி கட்சிகள் இந்த அறிவிப்பால் திகைப்பில் ஆழ்ந்துள்ளன. காலை 10 மணிக்கு நீதிமன்றம் தொடங்குவதற்கு முன்பே நடவடிக்கை முடிந்துவிட்டதால், தடை பெறுவதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.


"நடந்த விபரம் சுவாரஸ்யமான பிண்ணனி!!!

அமெரிக்கா கண்ணிலே மண்ணை தூவிட்டு அப்துல் கலாம் பொக்ரான்ல அணுகுண்டு சோதனை செஞ்சார், மிலிட்டரி யூனிஃபார்ம் போட்டுகிட்டு பாலைவனத்திலே நடந்தே போனார், நைசாப்போய் அனு குண்டை வெடிச்சுட்டார்....

இதல்லாம் பழைய கதை.

இன்று காலை தமிழ்நாட்டிலே முதல்வர் அறிவிப்பு குண்டு தான் அதிமுக பாஜக தவெக கூட்டணிக்கு வயிற்றில் புளியை அல்ல... ஆசீட்டை கரைத்து விட்டது.

""மகளிர் உரிமைத்தொகை''

எந்தந்த காரணங்களால் திமுக 200/234 அடிக்கும் என் ஒன்றிய உளவுத்துறை ஒன்றிய உள்துறைக்கு கொடுத்த ரிப்போர்டில் 1.மகளிர் உரிமைத்தொகை 1. மகளிர் விடியல் பயணம்.

மகளிர் விடியல் பயணத்தை ஒன்னும் செய்யவே முடியாது. இந்த மாதாமாதம் அரசாங்கம் வழங்கும் 1000₹ உரிமைத்தொகையை முடக்குவதற்கு என்னென்ன செய்யலாம் என யோசித்தது.

1.யாரையாவது வைத்து மகளிர் உரிமைத்தொகை விரய செலவு என சொல்லி கேஸ் போட்டு அதற்கு உச்ச நீதிமன்றம் வழியே தடை வாங்கி விடுவது.
2. தமிழ்நாடு அரசுக்கு நியாயமாக கொடுக்க வேண்டிய நிதி பகிர்வை ஜீரோ ஆக்கி திண்டாட வைப்பது.

இன்னும் பல யோசனைகள் செய்து வைத்து பொதுநல கேஸ் போடுவது என முடிவானாதாக சொல்கிறார் கள்.

இன்று வெள்ளிக்கிழமை அதாவது இன்றைக்கு 13.02.2026 காலை 10.00 மணிக்கு கேஸ் போட ஒரு அண்ணாச்சி தரப்பு தயார் நிலையில்.... அதாவது அடுத்து சனி, ஞாயிறு கோர்ட் லீவ்... ஸ்டே வெக்கேட் கூட செய்ய இயலாது.

இதையெல்லாம் நேற்று காலையே மோப்பம் பிடித்த தமிழ்நாடு உளவுத்துறை முதலமைச்சரிடம் சொல்ல அடுத்த நிமிடம் பசுமை வழிச்சாலையில் குறிஞ்சி இல்லமும், சூரியகாந்தியும் கூடிப்பேசின. குறிஞ்சியும், சூரியகாந்தியும் ஒரே காரில் செனடாப் சாலைக்கு விரைந்தன. நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் ஏற்கனவே அங்கு வந்திருந்தார்.

மதியம் வரை அங்கேயே முதலமைச்சர், துணை முதலமைச்சர், நிதி அமைச்சர், நிதித்துறை செயலாளர் ஆகியோர் பேசினர்.பேசினர்.பேசினர்.

என்ன நடந்தது ஏது நடந்தது என யாருக்கும் புரியவில்லை. இரவு செக்ரட்ரியேட்டில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது மாடியில் லைட்டுகள் எரிந்தன.

முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போவதும் வருவதுமாய் இருந்தனர்.

நிதித்துறை அமைச்சரும், அதிகாரிகளும் மீண்டும் செனடாப் சாலைக்கு சென்றனர்.

நேற்று மாலையே துணை முதலமைச்சரின் அத்தனை அப்பாயின்மெண்ட்டுகளையும் அவரது உதவியாளர் செந்தில் கேன்சல் செய்திருந்தார்.

யாருக்கும் என்ன நடக்கின்றது என்பது யாருக்கும் புரியவில்லை. விடியல் காலை 5.00 மணிக்கு எல்லாம் தயார் நிலை. முதலமைச்சர் வந்து அமர்ந்தார். நிதியமைச்சரும், துணை முதலமைச்சரும் கை நிறைய பைல்கள் சகிதம் பேச ஆரம்பித்தனர்.

நடக்கும் இந்த பிப்ரவரி 2026, மற்றும் மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை 3000₹ இன்று காலை 6.00 மணிக்கு ஒன்னரை கோடி தமிழ்நாட்டு மகளிர் கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்கிற ட்ராஃப்டை நிதியமைச்சர் தன் கைப்பட எழுதி அதை முதலமைச்சரிடம் கொடுக்க முதலமைச்சர் அதிலே தன் கைப்பட ஒரு திருத்தம் செய்தார்.

""கோடை சிறப்பு தொகுப்பாக 2000₹ சேர்த்து 5000₹ 1.5 கோடி மகளிருக்கும் காலை 6.00 மணி முதல் வங்கியில் வரவு வைக்கப்படும்''

முதலமைச்சரின் அந்த திருத்தத்தைப்பார்த்த துணை முதலமைச்சருக்கும், நிதியமைச்சருக்கும் இன்ப அதிர்ச்சி.

நிதித்துறை செயலாளர் திரு உதயசந்திரன் அதற்குள் ட்ராஃப்டை டைப் செய்து எடுத்து வர இந்த விஷயத்தை முதலமைச்சரே மக்களிடம் பேசும் வீடியோ எடுக்கும் பணி தொடங்கியது.

மேலும் இன்ப அதிர்ச்சியாக முதலமைச்சர் தன் உதவியாளர் தினேஷை அழைத்தார்.

""தினேஷ், திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவர் கனிமொழிக்கு நான் என் சார்பாக ஒரு கோரிக்கை வைப்பதாக ஒரு மனு தயார் பண்ணுங்க. மகளிர் உதவித்தொகை இனி மாதம் 2000₹ ஆக உயர்த்தப்பட வேண்டும் என என் தனிப்பட்ட கோரிக்கையை அனுப்பிடுங்க.

""அரசு, காலை 10.00 மணிக்கு கோர்ட் ஆரம்பிக்கும் முன்னமே எல்லோருக்கும் கிரடிட் ஆகிவிட்டது.


வியாழன், 8 ஜனவரி, 2026

இனி பிறப்பு இறப்பு வாட்ஸ்ஆப்பில் சான்றிதழ்கள் பெறலாம் தமிழ்நாடு அரசின் புதிய டிஜிட்டல் சேவை தொடக்கம் வாட்ஸ் அப் செல்போன் எண் முழு விவரம்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி photo news by Arunan journalist 

சென்னை, ஜன. :9

தமிழகத்தில் முதன்முறையாக வாட்ஸ்ஆப் செயலியுடன் இணைந்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறுதல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

thoothukudileaks


இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வாட்ஸ்ஆப் நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் இ-சேவை மைய அதிகாரிகள் இடையே கையெழுத்தானது.

இந்த புதிய சேவையின் மூலம், பொதுமக்கள் நேரடியாக அலுவலகங்களுக்கு செல்லாமல், தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை சார்ந்த பல்வேறு சான்றிதழ்களை எளிதாக பெற்றுக்கொள்ள முடியும்.

"பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மட்டுமின்றி, வருமானம், சமூக நிலை உள்ளிட்ட முக்கிய சான்றிதழ்களும் இந்த வாட்ஸ்ஆப் சேவையின் மூலம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது"

இதற்காக பொதுமக்கள் 

78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினால், தேவையான சேவைகள் குறித்து வழிகாட்டுதலுடன் சான்றிதழ்களை பெற முடியும்.

thoothukudileaks


டிஜிட்டல் இந்தியா இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு எடுத்து வரும் இந்த முயற்சி, பொதுமக்களின் நேரமும் செலவும் மிச்சமாகும் வகையில் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

புதன், 10 டிசம்பர், 2025

ஆண்களுக்கும் இனி இலவச பயணம்…? விடியல் பயணம் 2.0 – ஸ்டாலின் அரசு டாப் சீக்ரெட் ப்ளான்

 🚨 தூத்துக்குடி லீக்ஸ் எக்ஸ்க்ளூசிவ் 

சென்னை: டிச10
தமிழகத்தில் பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட விடியல் பேருந்து இலவச பயணம் திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக மக்கள் மத்தியில் “மாஸ் ஹிட்டாக” ஓடிக்கொண்டிருக்கிறது. தினமும் 57 லட்சம் பெண்கள் பயன்பெறும் இந்த திட்டம், பெண்களின் அன்றாட செலவைக் குறைக்கும் மிகப்பெரிய நிவாரணமாக உள்ளது.



இந்நிலையில்,
2026 சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில், தமிழக அரசு புதிய சூப்பர் அறிவிப்பு ஒன்றைத் தயார் செய்து கொண்டிருக்கிறது என்பது தூத்துக்குடி லீக்ஸ்க்கு கிடைத்த தகவல்!

🔥 விடியல் 2.0 – ஆண்களுக்கும் இலவச பயணம்?

குழுமங்களின் நீண்டகால கோரிக்கை என்ன?
➡️ 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் இலவசமாக பேருந்தில் போக அனுமதி!

இந்த கோரிக்கை தற்போது அரசின் மேஜையில்!
போக்குவரத்துத் துறையின் உள்ளக தகவல்படி,
இரண்டு மாதங்களில் 60+நாட்களில் ஆண்களுக்கு இலவச பேருந்து பயண அறிவிப்பு வெளிவரும் வாய்ப்பு உறுதி!


👴 முதியோருக்கு பெரிய ரிலீஃப்

மருத்துவம் – வங்கி – அரசு அலுவல்கள்…
முதியோருக்கு அடிக்கடி பயணம் தேவை. கட்டணம் ரத்து ஆனால்?
➡️ மாத செலவு குறையும்
➡️ அத்தியாவசியப் பயணங்கள் எளிதாகும்
➡️ சமூக நலனில் பெரிய முன்னேற்றம்


🗳️ election Heat! – அரசின் மாஸ் மூவ்

பெண்களுக்கு கொடுத்த விடியல் திட்டம் மக்கள் மத்தியில் பெற்ற பெரும் ஆதரவால்,
ஆண்களுக்கும் இலவச பயணம் வழங்குவது ஒரு ஸ்ட்ராட்டஜிக் மாஸ் முடிவு என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் கடந்த மாதம் அமைச்சர் சிவசங்கர்,
நிதிநிலை மேம்பட்டால் அனைவருக்கும் இலவச பயணம் விரிவாக்கம்!
என்று பேசியிருந்ததும் மீண்டும் பேசுபொருள்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு – கவுண்ட்டவுன் ஸ்டார்ட்!

அரசு அலுவலகங்களில் இதற்கு தேவையான ஆய்வுகள் ஸ்பீடில் நடக்கிறது.
அடுத்த 60 நாட்களுக்குள் அறிவிப்பு வெளியாகலாம் என நம்பப்படுகிறது.

விடியல் பயணம் 2.0 எப்படி இருக்கும்?
எந்த பிரிவினருக்கு என்ன சலுகை சேரும்?
— அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே தெளிவாகும்.



சனி, 1 நவம்பர், 2025

தூத்துக்குடியில் தாயுமானவர் திட்டம் – மூத்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு குடியமைப் பொருட்கள் வழங்கல்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

தூத்துக்குடி:நவ1

தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை சார்பில், தாயுமானவர் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு குடியமைப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

thoothukudileaks


தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு துறை அலுவலகத்தின் அறிவிப்பின்படி, நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மாவட்டம் முழுவதும் உள்ள நியாயவிலை கடைகள் வாயிலாக 65 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அடையாள அட்டையுடைய பயனாளிகளுக்கு வீடுகளுக்குச் சென்று குடியமைப் பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் நோக்கத்தின்படி, சமூக நலனில் பங்காற்றும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த இரண்டு நாட்களிலும் (03.11.2025 மற்றும் 04.11.2025) மாவட்டம் முழுவதும் பயனாளிகளுக்கு தேவையான குடியமைப் பொருட்கள் வழங்கும் பணிகள் நடைபெறும் என கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.

– தூத்துக்குடி லீக்ஸ் 📰

சனி, 27 செப்டம்பர், 2025

கருரில் நடந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதி அறிவிப்பு

 தூத்துக்குடி லீக்ஸ் – செய்தி

27-09-2025

கருரில் நடந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதி அறிவிப்பு

கருரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.



இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும், தீவிர காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மருத்துவ சிகிச்சைக்கான முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், உடனடி சிகிச்சை வழங்குவதற்காக சுகாதாரத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கருரில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களின் துயரத்தில் மாநில மக்கள் அனைவருடனும் நான் பங்கெடுக்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும். காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

— தூத்துக்குடி லீக்ஸ்



வியாழன், 18 செப்டம்பர், 2025

சங்கரபேரி பூங்கா ஆட்டைய போட்டுட்டாங்க – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

தூத்துக்குடி லீக்ஸ் செய்தி

சங்கரபேரி பூங்கா ஆட்டைய போட்டுட்டாங்க – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

தூத்துக்குடி: தூத்துக்குடி நகரின் முக்கிய இடமாகத் திகழ்ந்த சங்கரபேரி பூங்கா தற்போது ஆட்டைய போடப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

thoothukudileaks


thoothukudileaks

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த பதிலில், அந்த இடம் அரசு புறம்போக்கு நிலம் எனவும், பூங்கா இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பூங்கா இருப்பது தகவல் உரிமை சட்டம் பதில் பார்க்க 
தூத்துக்குடியில் உள்ள கோயம்பேடு டாஸ்மாக் அருகே இந்த பூங்கா இருக்கிறது 

 இதுபோன்ற நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ஜிஜிபி (JCB) இயந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்யப்படுவது யார் சார்பாக நடைபெறுகிறது என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.

“அரசு தரப்பா? அல்லது ஆக்கிரமிப்பு கும்பலா?” என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்கம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



👉 

திங்கள், 8 செப்டம்பர், 2025

வெளிநாட்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்து வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அமைச்சர் கீதா ஜீவன் சால்வை அணிவிப்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில், வெளிநாட்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

சால்வை போர்த்தி போது ...!!!

அதற்கு முன்..


முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சமீபத்தில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். இங்கிலாந்தின் உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றியதோடு, தமிழர்களின் வரலாறு மற்றும் சுயமரியாதை கொள்கைகளை உலக அரங்கில் பதிவு செய்தார்.

அத்துடன், 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) மூலம் 15,516 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து, 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில் மிகப்பெரும் சாதனையை எட்டினார்.

இந்த வெற்றிகரமான பயணத்திற்குப் பின் தாயகம் திரும்பிய முதலமைச்சரை, அமைச்சர் கீதா ஜீவன் சால்வை அணிவித்து அன்புடன் வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

– தூத்துக்குடி லீக்ஸ்


👉 news by sunmugasuthram press club president 

வெள்ளி, 17 ஜனவரி, 2025

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராம பகுதிகளில் தரமான சாலைகள் அமைக்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்தார்.

Tamil Nadu updates,17-1-2025

தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை


தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராம பகுதிகளில் தரமான சாலைகள் அமைக்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்தார்.



அவரது அறிக்கையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்வைத்த கருத்தை ஆதரித்து, "சாலைகளை தவறாக குண்டும் குழியுமாக அமைப்பது பிணையில்லாத குற்றமாக மாற்றப்பட வேண்டும். எது ஒரு விபத்து ஏற்படுமானாலும், அந்தச் சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளர்களை பிணையில் வெளியே வர முடியாதபடி கைது செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.


சாலைகள் மற்றும் கட்டமைப்புகளின் தரம் குறைபாடுகள்:


தமிழகத்தில் அரசு பணிகள் பல நூறு கோடிகள் செலவில் அமைக்கப்படுகின்றன. ஆனால், சில கட்டிடங்கள் மற்றும் சாலைகள் தரமின்மையாக அமைக்கப்படுகின்றன. இதனால் அவை விரைவில் சேதமடையும், உடையும் அல்லது மழைநீரில் அடித்துச் செல்லப்படுவதைக் காண்கிறோம். இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது.


தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில், இந்த கோரிக்கையை எதிர்த்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கேலி செய்தாலும், இது மிகவும் அவசியம் ஆகும். குறிப்பாக, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளில் அமைக்கப்பட்ட சாலைகள் தரமின்மையாக அமைக்கப்பட்டுள்ளன. அங்கு நடைபெறும் சாலைப் பணிகளின் மேற்பார்வை முறையாக இல்லை.


தரமின்மையான சாலைகள் மற்றும் நடைபாதைகள்:


முக்கியமான சாலைகள், குறிப்பாக கொளத்தூர் தொகுதியிலுள்ள பல்லவன் சாலை மற்றும் பேப்பர் மில் சாலை, தற்போது மோசமான நிலையில் அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி மற்றும் மண்டல ஆணையாளர்கள் இந்தப் பணிகளுக்கு எந்த விதமான கவனமும் செலுத்தவில்லை.


முதல்வர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும்:


"தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் நேரு, மாநில முழுவதும் நடைபெறும் சாலை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு திட்டங்கள் குறித்து எந்த விதமான ஆய்வுகளையும் நடத்தவில்லை."


"மேலும், திமுக ஆதரவு காண்ட்ராக்டர்களின் வளர்ச்சியில் மட்டுமே அக்கறை காட்டி, பொதுப்பணித்துறை தொடர்பான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை."


மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கருத்தை எச்சரிக்கை:


எனவே, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கருத்தின் அடிப்படையில், சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் அரசுத் தொண்டுகள் சரியான முறையில் அமைக்கப்படாவிட்டால், ஒப்பந்ததாரர், பொறியாளர்கள், மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக உரிய சட்டம் கொண்டு வந்து, அவர்கள் பிணையில் வெளியே வர முடியாதபடி கைது செய்ய வேண்டும் என்று தமிழ் நாட்டு மக்கள் கோரிக்கையை வலியுறுத்துகின்றனர்.


தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை:


தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டால், வளர்ச்சி திட்டங்கள் ஊழல் மயமாகி பாதிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.


 இந்நிலையில, தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஏ.என்.எஸ். பிரசாத்

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்


சனி, 28 டிசம்பர், 2024

முதல்வர் வருகைபோக்குவரத்து வழித்தட மாற்றம்

தூத்துக்குடி மாவட்டம்: போக்குவரத்து வழித்தட மாற்றம்

தூத்துக்குடி, 28 டிசம்பர் 2024:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தூத்துக்குடி வருகையை முன்னிட்டு, மாவட்ட காவல்துறை போக்குவரத்து வழித்தடங்களில் மாற்றங்களை அறிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழித்தடங்களை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:



- வழித்தடத் தடைகள்:

- தூத்துக்குடி வாகைகுளம் விமானநிலையம் முதல் FCI ரவுண்டானா மற்றும் அதன் வழியாக திருச்செந்தூர் ரவுண்டானா, வசவப்பபுரம் ஆகிய இடங்களில் கனரக சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

- வாகனத் தடைகள்:

- 29.12.2024 அன்று மதியம் 02.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை, 30.12.2024 அன்று காலை 07.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, திருச்செந்தூர் ரவுண்டானா முதல் ஜார்ஜ் ரோடு அக்ஸார் ஜங்ஷன் வரையிலான அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் செல்ல வேண்டும்.

- பேருந்துகள் வழித்தடம்:

- திருச்செந்தூர் ரோடு வழியாக தூத்துக்குடி நகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், வலது புறமாக திரும்பி வ.உ.சி துறைமுக ரோடு வழியாக பழைய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

- அரசு நிகழ்ச்சி வாகனங்கள்:

- அரசு வாகனங்கள், காவல்துறை வாகனங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள், மாணிக்கம் மஹால் எதிரே உள்ள சால்ட் காலனி வழியாக காமராஜ் கல்லூரி பின்புறம் சென்று Golden Jubilee Building அருகே வாகனங்களை நிறுத்த வேண்டும்.

- பொதுமக்கள் மற்றும் கட்சியினர் வாகனங்கள்:

- பொதுமக்கள் மற்றும் கட்சியினர் வாகனங்கள், வாகன நிறுத்த பகுதிகளில் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும். 

- வாகன நிறுத்தம்:

- தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு, திரு.வி.க.நகர், பத்திநாதபுரம், கணேஷ்நகர் மற்றும் மில்லர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்தலாம்.

- *காமராஜ் சாலை மற்றும் திருச்செந்தூர் ரோடு:*

- சுப்பையாபுரம், மாசிலாமணிபுரம், கால்டுவெல்காலனி மற்றும் CGE காலனி பகுதிகளில் வாகனங்களை நிறுத்தவும்.

- Tidal Meo Park நிகழ்ச்சி:

- Tidal Neo Park எதிர்புறம் பெரியசாமிநகர் வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தவும்.

காவல்துறையினர் அறிவுறுத்தலுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வெள்ளி, 13 டிசம்பர், 2024

தூத்துக்குடியில் இதென்ன பிரமாதம் ஒரே பித்தலாட்டம் இருக்குடா என் பொதுமக்கள் புலம்பல்

Tamil Nadu updates,

13-12-2024

அருணன் செய்தியாளர்


தூத்துக்குடியில் பிரதமர் மோடி ஆண்டுக்கு ரூ 5 லட்சம் மருத்துவ காப்பீடு அட்டை வழங்குதல் நடைபெறுகிறது

அழைப்பு!!!

பொதுமக்கள் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் நடைபெறும் முகாம் பெற்று கொள்ளலாம் என தெரு முனையில் இருந்து அழைக்கின்றனர்

கவுன்சிலர்கள்!!!

 அந்தந்த ஏரியா கவுன்சிலர்கள் முன் இருந்து பொதுமக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெற செல்கின்றனர்

₹50 தந்தால் தான் அட்டை 

அவர்களிடம் 

 ஒவ்வொருக்கும் ₹ 50 பெற்று கொண்டு PM மருந்துவ காப்பீடு ₹5 லட்சம் அட்டை ? 

அதுவும் வழங்கி வருகிறார்களா?

என்றால் இல்லை என்ற பதில் தான் வருகிறது 

இலவச மின்றி....

 ₹50 என்ன காரணத்திற்காக பெற்று கொண்டு காப்பீடு அட்டை வழங்குகிறார்கள் தெரியவில்லை 

ஒரு குடும்பத்தில் ஜந்து பேர் என்றால் ₹ 250 வந்து விடுகிறது


 அது சரி ?

PM Jay card மாடல் 
இப்படி தான் இருக்கும் 



PM Jay காப்பீடு அட்டை வழங்காமல்..

இவர் களோ... பலருக்கு

ABHA Card எடுத்து கொடுத்து அனுப்பி விடுகின்றனர்

ABHA Card மாடல் வழங்கப்படுவது...



இரண்டு கார்டு களுக்கு உள்ள வித்தியாசம் பார்க்க 

இது வெறுமனே அடையாளம் மட்டுமே சிகிச்சை பதிவு பெற்ற டிஜிட்டல் விவரம் மட்டுமே தெரியும்

 அதாவது ABHA Card மருத்துவ தகவல்களுக்கான அடையாளம் மட்டுமே என்கிறார்கள்.


பித்தலாட்டம் !!!

PM Jay ₹5 லட்சம் காப்பீடு அட்டை வழங்க வேண்டும் அது விடுத்து ரூபாய் 50 பிடுங்கி கொண்டு இதென்ன பித்தலாட்டம் என விவமறிந்த பலர் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 

சம்பந்தப்பட்டவர்கள் இதை கவனிப்பார்களா ???  

ஞாயிறு, 24 நவம்பர், 2024

பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் சரவணகுமார் மீது நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார் மனு இந்த விவகாரம் ஊராட்சி நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகளை வெளிச்சமிடுகிறது..

thoothukudi leaks 25-11-2024


தூத்துக்குடி ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோயில் (கோமஸ்புரம்) குத்தகை நிலத்தில் போலியாக/விதிமுறைகளை மீறி சொத்துவரி ஆவணங்கள் வழங்கி, பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத் தலைவர் சரவணகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார் மனு.



இது பற்றிய செய்தியாவது 


தூத்துக்குடி சிவன் கோயில் சொந்தமான அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள்!!!

தூத்துக்குடி ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான மாப்பிள்ளையூரணி கிராம புல எண்: 130/3 மற்றும் 130/4 ஆகியவற்றின் பரப்பளவான சுமார் 6.51 ஏக்கர் புஞ்சை நிலையானது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள இடமாகும்.


வீதிமீறல்!!!!

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோமஸ்புரம் பகுதியின் நிலமானது வணிக பயன்பாட்டிற்கு அல்லாத புஞ்சை வகை சார்ந்ததாகவும், இத்தகைய புஞ்சை நிலத்தில் விவசாயம் சார்ந்த பணிகளுக்கான குத்தகை மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்கிற விதிகள் உள்ளன.

வணிக வளாகங்கள்!!!

 ஆனால் இக்கோவில் நிலத்தில் சட்டவிதிகளை மீறி வணிக நோக்கத்துடன் ECR மார்க்கெட் - சூர்யா அங்காடி எனும் வணிக வளாக பகுதியில் சுமார் 21 வியாபார கடைகள், வணிக கட்டுமானங்கள், வணிக நிறுவனங்கள் முறைகேடான வகையில் கடந்த நான்கு மாதங்களாக செயல்பட்டு வந்துள்ளன.


தூத்துக்குடி ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான கோமஸ்புரம் பகுதியில் முறைகேடாக செயல்பட்டு வந்த ECR மார்க்கெட் - சூர்யா அங்காடி உள்ளிட்ட 21 கடைகளுக்கும், ஏற்படுத்தப்படாத வணிக கடைகள்/ இல்லாத வணிக கடைகளுக்கு போலியான வகையில் விதிமுறைகளை மீறி சுமார் 51 வணிக நிறுவனங்களுக்கு சொத்துவரி ஆவணங்களை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத் தலைவர் சரவணகுமார் வழங்கி உள்ளார்.


தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத்தில் சார்பில் விதிமுறைகளை மீறி கோமஸ்புரம் வார்டு எண் 2 ற்கு கதவு இலக்க எண்கள் 2/36/19 -ல் இருந்து தொடங்கி தொடர்ச்சியாக 2/36/70 வரையிலான சுமார் 51 கதவு இலக்கங்களைக் கொண்டு, சொத்து வரி ஆவணங்கள்: 2024-2025/27/1/11/5637 முதல் 2024-2025/27/1/11/5668 வரை 23.08.2024 அன்றும், சொத்துவரி ஆவணங்கள்: 2024-2025/27/1/11/6165 முதல் 2024-2025/27/1/11/6168 வரை 05.09.2024 அன்றும், சொத்துவரி ஆவணங்கள்: 2024-2025/27/1/11/6217 முதல் 2024-2025/27/1/11/6232 வரை 06.09.2024 அன்று முறைகேடான வகையில் வழங்கப்பட்டுள்ளன.

போலி ஆவணங்கள்!!!

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோமஸ்புரம் பகுதியில் சட்ட விதிகளுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்திடவும், புஞ்சை நில கோவில் குத்தகை நிலத்தில் வணிக நிறுவனங்கள் ஏற்படுத்திடவும், அரசின் விதிமுறைகளுக்கு எதிரான போலி ஆவணங்கள் ஏற்படுத்தியும், இல்லாத வணிக கடைகளுக்கு/ஏற்படுத்தப்படாத வணிக நிறுவனங்களுக்கு கதவு எண், சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு போலி ஆவணங்கள் வழங்கியதன் மூலம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத் தலைவர் சரவணகுமார் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான வருவாய் குற்றங்களை புரிந்துள்ளார்.

நடவடிக்கை!!!

உயர்திரு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தணிக்கை உதவி இயக்குநர் ( ஊராட்சிகள்) ஆகியோர் மேற்படி ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் முறைகேடான வகையில்/போலி ஆவணங்களை வழங்கி பல்வேறு சட்டவிதிமீறல்களில்/குற்றச் செயல்களில் ஈடுபட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத் தலைவர் சரவணகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இப்படிக்கு...

அக்ரி பரமசிவன்.

25.11.2024


Collectorate Petition: 2024/9005/28/437799/1125 date: 25.11.2024

பாக்ஸ் நியூஸ்!!!


தூத்துக்குடி மாவட்டத்தில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவரான சரவணகுமார் மீது பல லட்சம் ரூபாய் முறைகேடு தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.

 முறைகேடுகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படுமா, நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து காண வேண்டியது. 

இந்த விவகாரம் ஊராட்சி நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகளை வெளிச்சமிடுகிறது.