தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் photo news by Arunan journalist
தூத்துக்குடி, பிப்ரவரி 13, 2026
தமிழ்நாடு முதல்வரின் இன்றைய காலை அதிரடி அறிவிப்பு எதிர்க்கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ₹3000 மற்றும் கோடை சிறப்பு தொகுப்பாக ₹2000 என மொத்தம் ₹5000 இன்று காலை 6 மணி முதல் 1.5 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
பின்னணியில் நடந்தது என்ன?
உள்துறை உளவுத்துறை அறிக்கைகளின்படி, மகளிர் உரிமைத்தொகையை நிறுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு இத்திட்டத்திற்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் கசிந்தது.
இந்த முக்கிய தகவல் தமிழ்நாடு உளவுத்துறையால் நேற்று காலையே கண்டறியப்பட்டு முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது.
அவசர ஆலோசனைகள்
நேற்று மதியம் சென்னை செனட்டாப் சாலையில் முதல்வர், துணை முதல்வர், நிதியமைச்சர் மற்றும் நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் நீண்ட நேர ஆலோசனை நடத்தினர். இரவு முழுவதும் செயலக கட்டடத்தில் விளக்குகள் எரிந்தன. முக்கிய அதிகாரிகள் தொடர்ந்து வந்து போய்க் கொண்டிருந்தனர்.
அதிகாலை திருப்பம்
இன்று அதிகாலை 5 மணிக்கு முதல்வர், நிதியமைச்சர், துணை முதல்வர் ஆகியோர் மீண்டும் ஆலோசனை நடத்தினர். நிதியமைச்சர் மூன்று மாதங்களுக்கான ₹3000 வழங்கும் திட்ட வரைவை தயாரித்து முதல்வரிடம் அளித்தார்.
அப்போது முதல்வர் தனது கையெழுத்துடன் ஒரு முக்கிய திருத்தத்தை செய்தார் - கோடை சிறப்பு தொகுப்பாக ₹2000 கூடுதலாக வழங்கி மொத்தம் ₹5000 வழங்க வேண்டும் என்று.
மேலும் ஒரு அறிவிப்பு
இதோடு நின்றுவிடாமல், முதல்வர் தனது தனிப்பட்ட கோரிக்கையாக, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவர் கனிமொழிக்கு ஒரு கடிதம் அனுப்பி, மகளிர் உதவித்தொகை இனி மாதம் ₹2000 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.
நிதி ஒதுக்கீடு
மொத்தம் ₹7500 கோடி இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 1.5 கோடி பெண்களுக்கு இன்று காலை 6 மணியிலிருந்து வங்கிக் கணக்குகளில் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் நிலை
அதிமுக, பாஜக, தவெக கூட்டணி கட்சிகள் இந்த அறிவிப்பால் திகைப்பில் ஆழ்ந்துள்ளன. காலை 10 மணிக்கு நீதிமன்றம் தொடங்குவதற்கு முன்பே நடவடிக்கை முடிந்துவிட்டதால், தடை பெறுவதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.
"நடந்த விபரம் சுவாரஸ்யமான பிண்ணனி!!!
அமெரிக்கா கண்ணிலே மண்ணை தூவிட்டு அப்துல் கலாம் பொக்ரான்ல அணுகுண்டு சோதனை செஞ்சார், மிலிட்டரி யூனிஃபார்ம் போட்டுகிட்டு பாலைவனத்திலே நடந்தே போனார், நைசாப்போய் அனு குண்டை வெடிச்சுட்டார்....
இதல்லாம் பழைய கதை.
இன்று காலை தமிழ்நாட்டிலே முதல்வர் அறிவிப்பு குண்டு தான் அதிமுக பாஜக தவெக கூட்டணிக்கு வயிற்றில் புளியை அல்ல... ஆசீட்டை கரைத்து விட்டது.
""மகளிர் உரிமைத்தொகை''
எந்தந்த காரணங்களால் திமுக 200/234 அடிக்கும் என் ஒன்றிய உளவுத்துறை ஒன்றிய உள்துறைக்கு கொடுத்த ரிப்போர்டில் 1.மகளிர் உரிமைத்தொகை 1. மகளிர் விடியல் பயணம்.
மகளிர் விடியல் பயணத்தை ஒன்னும் செய்யவே முடியாது. இந்த மாதாமாதம் அரசாங்கம் வழங்கும் 1000₹ உரிமைத்தொகையை முடக்குவதற்கு என்னென்ன செய்யலாம் என யோசித்தது.
1.யாரையாவது வைத்து மகளிர் உரிமைத்தொகை விரய செலவு என சொல்லி கேஸ் போட்டு அதற்கு உச்ச நீதிமன்றம் வழியே தடை வாங்கி விடுவது.
2. தமிழ்நாடு அரசுக்கு நியாயமாக கொடுக்க வேண்டிய நிதி பகிர்வை ஜீரோ ஆக்கி திண்டாட வைப்பது.இன்னும் பல யோசனைகள் செய்து வைத்து பொதுநல கேஸ் போடுவது என முடிவானாதாக சொல்கிறார் கள்.
இன்று வெள்ளிக்கிழமை அதாவது இன்றைக்கு 13.02.2026 காலை 10.00 மணிக்கு கேஸ் போட ஒரு அண்ணாச்சி தரப்பு தயார் நிலையில்.... அதாவது அடுத்து சனி, ஞாயிறு கோர்ட் லீவ்... ஸ்டே வெக்கேட் கூட செய்ய இயலாது.
இதையெல்லாம் நேற்று காலையே மோப்பம் பிடித்த தமிழ்நாடு உளவுத்துறை முதலமைச்சரிடம் சொல்ல அடுத்த நிமிடம் பசுமை வழிச்சாலையில் குறிஞ்சி இல்லமும், சூரியகாந்தியும் கூடிப்பேசின. குறிஞ்சியும், சூரியகாந்தியும் ஒரே காரில் செனடாப் சாலைக்கு விரைந்தன. நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் ஏற்கனவே அங்கு வந்திருந்தார்.
மதியம் வரை அங்கேயே முதலமைச்சர், துணை முதலமைச்சர், நிதி அமைச்சர், நிதித்துறை செயலாளர் ஆகியோர் பேசினர்.பேசினர்.பேசினர்.
என்ன நடந்தது ஏது நடந்தது என யாருக்கும் புரியவில்லை. இரவு செக்ரட்ரியேட்டில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது மாடியில் லைட்டுகள் எரிந்தன.
முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போவதும் வருவதுமாய் இருந்தனர்.
நிதித்துறை அமைச்சரும், அதிகாரிகளும் மீண்டும் செனடாப் சாலைக்கு சென்றனர்.
நேற்று மாலையே துணை முதலமைச்சரின் அத்தனை அப்பாயின்மெண்ட்டுகளையும் அவரது உதவியாளர் செந்தில் கேன்சல் செய்திருந்தார்.
யாருக்கும் என்ன நடக்கின்றது என்பது யாருக்கும் புரியவில்லை. விடியல் காலை 5.00 மணிக்கு எல்லாம் தயார் நிலை. முதலமைச்சர் வந்து அமர்ந்தார். நிதியமைச்சரும், துணை முதலமைச்சரும் கை நிறைய பைல்கள் சகிதம் பேச ஆரம்பித்தனர்.
நடக்கும் இந்த பிப்ரவரி 2026, மற்றும் மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை 3000₹ இன்று காலை 6.00 மணிக்கு ஒன்னரை கோடி தமிழ்நாட்டு மகளிர் கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்கிற ட்ராஃப்டை நிதியமைச்சர் தன் கைப்பட எழுதி அதை முதலமைச்சரிடம் கொடுக்க முதலமைச்சர் அதிலே தன் கைப்பட ஒரு திருத்தம் செய்தார்.
""கோடை சிறப்பு தொகுப்பாக 2000₹ சேர்த்து 5000₹ 1.5 கோடி மகளிருக்கும் காலை 6.00 மணி முதல் வங்கியில் வரவு வைக்கப்படும்''
முதலமைச்சரின் அந்த திருத்தத்தைப்பார்த்த துணை முதலமைச்சருக்கும், நிதியமைச்சருக்கும் இன்ப அதிர்ச்சி.
நிதித்துறை செயலாளர் திரு உதயசந்திரன் அதற்குள் ட்ராஃப்டை டைப் செய்து எடுத்து வர இந்த விஷயத்தை முதலமைச்சரே மக்களிடம் பேசும் வீடியோ எடுக்கும் பணி தொடங்கியது.
மேலும் இன்ப அதிர்ச்சியாக முதலமைச்சர் தன் உதவியாளர் தினேஷை அழைத்தார்.
""தினேஷ், திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவர் கனிமொழிக்கு நான் என் சார்பாக ஒரு கோரிக்கை வைப்பதாக ஒரு மனு தயார் பண்ணுங்க. மகளிர் உதவித்தொகை இனி மாதம் 2000₹ ஆக உயர்த்தப்பட வேண்டும் என என் தனிப்பட்ட கோரிக்கையை அனுப்பிடுங்க.
""அரசு, காலை 10.00 மணிக்கு கோர்ட் ஆரம்பிக்கும் முன்னமே எல்லோருக்கும் கிரடிட் ஆகிவிட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக