விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 பிப்ரவரி, 2025

தூத்துக்குடியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி – தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் நாளை நடைபெறுகிறது.

Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 

தூத்துக்குடி:2025பெப்ரவரி 13

 போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் மனநலத்துறை மற்றும் போதை எதிர்ப்பு மாணவர் கழகம் சார்பில் "போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" திட்டத்தின் கீழ் சிறப்பு நிகழ்ச்சி நாளை (14.02.2025) காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.



இந்த நிகழ்ச்சி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் தேர்வு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


நிகழ்ச்சியில் Anti-Drug Club Faculty உறுப்பினர் டாக்டர் S. Jeeva Creedom Victory வரவேற்புரை நிகழ்த்த, கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் G. Sivakumar தலைமை உரையாற்றவுள்ளார்.


இந்நிகழ்ச்சியில்... துணை முதல்வர் டாக்டர் V. Kalaivani, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் R. Padmanaban, துணை கண்காணிப்பாளர் டாக்டர் P. Kumaran, RMO டாக்டர் J. Silas Jeyamani, மனநலத்துறைத் தலைவர் டாக்டர் M. B. Abdul Rahuman உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.


போதைப்பொருட்களுக்கு எதிரான பிரமாணம் (Anti-Drug Pledge) நிகழ்வில் NSS திட்ட அலுவலர் டாக்டர் N. Sabari Raja மற்றும் யூத் ரெட்கிராஸ் திட்ட அலுவலர் டாக்டர் Israel Raja Johnley ஆகியோர் பங்கேற்கின்றனர்.


மேலும், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பாடல் வெளியீடு நடைபெற உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. Albert John IPS சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.


நிகழ்ச்சி நிறைவில் Anti-Drug Club Faculty உறுப்பினர் டாக்டர் Bhuvaniesh நன்றியுரை வழங்குகிறார்.

அழைப்பு !!!

மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் பொது மக்களை போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.


செவ்வாய், 24 செப்டம்பர், 2024

தூத்துக்குடி மாவட்டத்திலும் இவர்களை குறி வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

தூத்துக்குடி மாவட்டத்தில் கார் லாரி பஸ் ஆட்டோ ஓட்டுநர்கள் வாகனங்கள் பெருக்கம் அதிகமாக இருக்கிறது 


 தமிழக அரசு தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை கெய்னி  மற்றும் பான் பராக்கு பாக்கு (திருட்டு தனமாக விற்பவர்கள் இடம் அதிக விலை கொடுத்து வாங்கி )போடுவதும்  பலர் அதற்கு அடிமையாகி யுள்ளார் கள்

கடந்த காலங்களை விட அதிகமாகி வருகின்றன.

 வாய் கேன்சர் நோய்க்கு ஆளாகி வருகின்றனர்.

கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் பயன் படுத்தி வருவதும் கவலையளிக்கும் விஷயமாக பார்க்க படுகிறது 

"போதை கவன குறைவை ஏற்படுத்தும் விபத்து நேரிடலாம்!!!!!"

தூத்துக்குடி மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



 இன்று24-9-2024 விருதுநகர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் விருதுநகர் ஊரக காவல் சரக சத்திரரெட்டியப்பட்டி சோதனை சாவடி அருகிலும், விருதுநகர் மேற்கு காவல் நிலைய சரக நான்கு வழி சாலை சிவகாசி சர்வீஸ் ரோட்டிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை சம்பந்தமாக தணிக்கை செய்ததில் மேற்படி நபர்களிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது

 

 புகையிலை  பொருட்களை வைத்திருந்த நபர்களுக்கு தலா ரூபாய்25,000/  விதிக்கப்பட்டு மொத்தம் ரூபாய் 50,000 + 1000 = 51,000ஆன்லைன் மூலம் அபராத தொகை செலுத்தப்பட்டது


அன்பான வேண்டுகோள்!!! அனைத்து ஒட்டுநர்களுக்கும் நண்பர்களே சமீபகாலமாக இது போல் நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது.

 அனைவரும் கவனத்துடன் செயல் படவும் உங்களை நம்பி உங்களது குடும்பம் இருக்கிறது 


இது போல் செயல் பட்டால் உங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என சமூக அக்கறை உடன்

கோவை ஜாகிர் என்பவர் இன்று விழிப்புணர்வு பதிவு செய்து உள்ளார் இவரது சமூக அக்கறை  பதிவை பார்த்து பலரின் பாராட்டுக்கள் வைரல் விழிப்புணர்வு தந்துள்ளது.