வியாழன், 2 ஜூலை, 2026

இந்து சேனா பேரியக்கத்தில் புதிய நிர்வாகிகள் இணைப்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 


சேலம், ஜூலை 2:
சேலம் மாவட்டத்தில் இந்து சேனா மாநிலத் தலைவர் அருள்வேலன் ஜி-யை நேரில் சந்தித்த ராஜ கணேசன் மற்றும் கிரில் சுப்பிரமணி ஆகியோர், இந்து சேனா பேரியக்கத்தில் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர்.

thoothukudileaks


அப்போது, இயக்கத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அமைப்பின் செயல்பாடுகளை மேலும் சிறப்பாக முன்னெடுத்து செல்லுவது குறித்து மாநிலத் தலைவருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்து சேனாவின் பொறுப்பாளர்களான சேலம் ரமேஷ் ஜி, வேலூர் ஆனந்த் ஜி, சேலம் ரவிச்சந்திரன் ஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

புதிய உறுப்பினர்களை மாநிலத் தலைவர் அருள்வேலன் ஜி வரவேற்று, இயக்கப் பணிகளில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு மக்களிடம் அமைப்பின் நோக்கங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துத் தெரிவித்தார்.

புதன், 1 ஜூலை, 2026

செல்போன் கேட்டு தகராறு இளைஞரை கத்தியால் தாக்கிய திருநங்கை கைது

தூத்துக்குடி லீக்ஸ்  நாளிதழ் செய்தி


தூத்துக்குடி, ஜூன் 30:

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆம்னி பஸ் நிலையப் பகுதியில் செல்போன் கேட்டு ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படும் திருநங்கை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

thoothukudileaks


காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, 

நேற்று முன்தினம் (29.06.2026) இரவு  தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே ஆம்னி பஸ் நிறுத்தம் பகுதியில்  பேருந்தில் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த அஜய் தேவகுமரன் இருந்துள்ளார்.


 அப்போது அங்கு வந்த திருநங்கை ஒருவர் அவரிடம் செல்போன் கேட்டதாகவும், அவர் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


இதையடுத்து, ஆத்திரமடைந்த திருநங்கை கையில் வைத்திருந்த கத்தியால் அஜய் தேவகுமரனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் வடபாகம் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், பாதிக்கப்பட்ட அஜய் தேவகுமரன் அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலையத்தில் குற்ற எண் 583/2026-ன் கீழ் BNS சட்டப்பிரிவுகள் 296(b), 109(1), 351(3) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த திருநங்கை ஒருவரை போலீசார் கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ்வாதாரம் இன்றி யாசகமாக பணம் கேட்டு தொந்தரவு செய்யும் திருநங்கைகள் !!! 

தூத்துக்குடி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் பஸ் ல  வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் -கடை வியாபாரிகளிடம் பணம் கேட்டு வருவதும் தரவில்லை என்றால் தொந்தரவு செய்து வருவதாக கூறப்படுகிறது .

இஃது விஷயத்தில் மாவட்ட காவல்துறை தகுந்த அறிவுரைகளை கூறி திருநங்கைகள் வாழ்வதாரம் மற்றும் நல்வழிப்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது 

செய்தி புகைப்படம்  செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது மாடலிங் 

செவ்வாய், 30 ஜூன், 2026

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை 9 வயது சிறுமிக்கு செயற்கை கண் பொருத்தி மறுவாழ்வு தமிழக அரசுக்கும் மருத்துவர்களுக்கும் பெற்றோர் நெகிழ்ச்சி நன்றி!

Tamil Nadu updates, 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி: ஜுலை 1

தூத்துக்குடி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிறவியிலேயே இடது கண் குறைபாட்டுடன் பிறந்த 9 வயது சிறுமிக்கு அரிய வகை கண் குழி சீரமைப்பு மற்றும் செயற்கை கண் பொருத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.



 இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று காலை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

பிறவிக்குறைபாட்டால் அவதிப்பட்ட சிறுமி!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி கிராமத்தில் வசித்து வரும் பொன்னு என்பவரின் 9 வயது மகள் முத்துசெல்வி. அச்சிறுமிக்குப் பிறவியிலேயே இடது கண் இல்லாததால், அவதிப்பட்டு வந்தார்.

thoothukudileaks
தாயார் உடன் சிறுமி

video 

மருத்துவக் குழுவின் அரிய சாதனை

thoothukudileaks

கடந்த 20.06.2026 அன்று, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. எபனேசர் ஜோயல் குமார், துணை முதல்வர் மரு. கலைவாணி, மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. பத்மநாபன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த அரிய அறுவை சிகிச்சை நடைபெற்றது.

thoothukudileaks


கண் பிரிவு துறைத் தலைவர் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளருமான மரு. ம. ரீட்டா ஹெப்சிராணி  தலைமையில், பின்வரும் மருத்துவக் குழுவினர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்:

video 1

 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்: மரு. அருணா தேவி

 மயக்கவியல் மருத்துவர்கள்: மரு. ஸ்ரீராம், மரு. அஜய் சந்தோஷ் டேவிட்

 உதவி மருத்துவர்கள்:  மரு. ஜெயந்தி, மரு. வின்சா, மரு. திவ்யா

 செவிலியர்கள்: சுரேகா,  ரத்னா

இந்த மருத்துவக் குழுவினர் இணைந்து சிறுமிக்குக் கண் குழி சீரமைப்பு அறுவை சிகிச்சை மற்றும் செயற்கை கண் பொருத்தும் அறுவை சிகிச்சையை மிக வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்.

video 2
 .

செய்தியாளர் சந்திப்பில் பெற்றோர் நெகிழ்ச்சி!

தமிழக அரசுக்கு நன்றி!!!

இன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதில் தங்களுக்குக் கிடைத்த முழுமையான கண் சிகிச்சை மற்றும் செயற்கை கண் பொருத்தப்பட்ட விவரங்கள் குறித்துச் சிறுமி முத்துசெல்வியும் அவரது தாயாரும் செய்தியாளர்களிடம் விவரித்தனர்.


அப்போது, தங்களது குழந்தைக்கு அதிநவீன முறையில் செயற்கை கண் பொருத்தி, புதிய வாழ்வையும் நம்பிக்கையையும் தந்து உதவிய தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அனைவருக்கும், ஏழை எளிய மக்களுக்குத் தரமான மருத்துவ சேவை கிடைக்கத் திறம்படச் செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கும் தங்களது மிகுந்த மகிழ்ச்சியையும், நெஞ்சார்ந்த நன்றியையும் கண்ணீர் மல்கத் தெரிவித்துக் கொண்டனர்.

 தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்..

அர்ப்பணிப்புடன் இயங்கும் கண் சிகிச்சை பிரிவு

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவில் தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

thoothukudileaks



மேலும், மாதந்தோறும் 200-க்கும் மேற்பட்ட கண் புரை அறுவை சிகிச்சைகளும் (Cataract Surgery), கண் நீர் அழுத்த நோய் (Glaucoma), மாறுகண் (Squint), கருவிழி மாற்று அறுவை சிகிச்சை (Keratoplasty) போன்ற பல்வேறு அதிநவீன சிகிச்சைகளும் இங்கு முற்றிலும் இலவசமாக, அர்ப்பணிப்பு உணர்வோடு வழங்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் கண் தொடர்பான அனைத்துப் பாதிப்புகளுக்கும் எங்களைப் போன்ற அரசு மருத்துவர்களை அணுகிப் பயன்பெறுமாறு மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


திங்கள், 29 ஜூன், 2026

அதிமுக அமைப்புச் செயலாளராக நியமனம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன்


Tamil Nadu updates

தூத்துக்குடி, ஜூன் 29:

அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன், அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

thoothukudileaks



அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கடந்த 28.06.2026 அன்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்த எஸ்.பி. சண்முகநாதன், பூங்கொத்து வழங்கி மரியாதை செலுத்தினார். அப்போது எடப்பாடி பழனிசாமி அவருக்கு வாழ்த்து தெரிவித்து, புதிய பொறுப்பை சிறப்பாக மேற்கொள்ள வாழ்த்துகளை தெரிவித்தார்.


thoothukudileaks


இந்த சந்திப்பின்போது மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட கழகப் பொருளாளர் சேவியர், மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளருமான விஜயகுமார், பகுதிச் செயலாளர்கள் முருகன், சுடலைமணி, ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், ராஜ் நாராயணன், உரக்கடை குணசேகரன், அப்பாதுரை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம். பெருமாள், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர்கள் கே.ஜெ. பிரபாகர், ஜாக்சன் துரைமணி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் சுரேஷ்பாபு, திருச்செந்தூர் ஆர்.எம்.கே.எஸ். சுந்தர், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் தெர்மல் ஆனந்தராஜ், மாவட்டக் கலைப் பிரிவு செயலாளர் வீரபாண்டியப்பட்டணம் சுரேஷ், வடக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் கோசல்ராம் ராஜா, வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.ஆர்.வி. கவியரசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி மணிகண்டன், சொக்கலிங்கம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

புதன், 24 ஜூன், 2026

தூத்துக்குடியில் முத்து நகரின் பசுமைப் பயணம்” திட்டம் பசுமை நகரை உருவாக்க பங்குதாரர்களுடன் மாநகராட்சி ஆலோசனை

Tamil Nadu updates,தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி  புகைப்படங்கள் செய்தி ரோஜா அருணன் 

தூத்துக்குடி, ஜூன் 24:

தூத்துக்குடி மாநகராட்சியை பசுமை நிறைந்த, எழில்மிகு நகரமாக மாற்றுவதோடு, நகர மக்களின் வாழ்வியல் தரத்தை உயர்த்தும் நோக்கில் “முத்து நகரின் பசுமைப் பயணம்” திட்டத்தின் கீழ் பங்குதாரர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

thoothukudileaks

இக்கூட்டத்தில் வ.உ.சி. துறைமுக சபை, மாவட்ட வனத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, வர்த்தக சங்க பிரதிநிதிகள், தனியார் நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய மாநகராட்சி ஆணையாளர், பிரியங்கா ...

தூத்துக்குடி நகரம் மக்கள் தொகை, போக்குவரத்து மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் தொடர்ந்து முன்னேறி வருவதால் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார். 

வருங்காலம்!!!

வருங்கால தலைமுறைகளின் நலனை கருத்தில் கொண்டு பசுமை மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகரம் டிஜிட்டல் அடித்தளம்!!!

மேலும், இத்திட்டத்தின் மூலம் நகரின் பசுமை மேம்பாட்டிற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதுடன், பராமரிப்பு மற்றும் கண்காணிப்பிற்கான டிஜிட்டல் அடித்தளமும் ஏற்படுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டது. 

பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் உங்கள் கருத்துக்களை அறிவுரை கூறுங்கள்????

பொதுமக்கள், வணிகர்கள், தொழில் முனைவோர், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு அமைப்புகள் தங்களது கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் பங்களிப்புகளை தனித்தனியாகவோ அல்லது ஒருங்கிணைந்த முறையிலோ வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

thoothukudileaks


உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை!!!

திட்டத்தின் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடுதல், பூங்காக்கள் பராமரித்தல், பொது சுவர்களை வண்ணமயமாக்கி விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுதல், சாலைகளில் தூசி அகற்றும் பணிகள், மரங்களுக்கு தண்ணீர் வழங்கும் வசதிகள் ஏற்படுத்துதல், தொழில்நுட்ப ஆதரவு வழங்குதல், விளம்பரப் பலகைகளுக்கான பாதுகாப்பான அமைப்புகள் உருவாக்குதல், பொது கழிப்பறைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் இடுகாடுகளை உயர்தரத்தில் பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் பங்குதாரர்கள் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

thoothukudileaks


கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு தரப்பினரும் திட்டத்திற்கு தங்களது ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.


 இதனைத் தொடர்ந்து திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

– 

செவ்வாய், 23 ஜூன், 2026

சர்வதேச தினம் யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்திய மாணவ மாணவிகள்

 Tamil Nadu updates news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 23:

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


thoothukudileaks

நன்மைகள் !!!

பள்ளியின் தாளாளரும் முதல்வருமான ஆர். ஜெயசண்முகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக யோகா பயிற்சியாளர் ஸ்டீபன் கலந்து கொண்டு யோகாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் உடல்நல நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

thoothukudileaks

அசாத்திய மாணவ மாணவிகள்!!!

தொடர்ந்து மாணவ, மாணவிகள் சூரிய நமஸ்காரம், பத்மாசனம், பச்சிமோத்தானாசனம், தனுராசனம், யோகமுத்திரா, திரிகோணாசனம், வஜ்ராசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை செய்து அவற்றின் பயன்களை அறிந்துகொண்டனர்.

thoothukudileaks


நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இறுதியில் துணை முதல்வர் ரா.ச. பிரியங்கா நன்றி கூறினார்.


 நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


இந்த யோகா தின விழா மாணவர்களிடையே உடல் மற்றும் மன ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக பள்ளியில் நிர்வாகம் தெரிவித்தது.

 

திங்கள், 22 ஜூன், 2026

தூத்துக்குடியில் 100 ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், பள்ளி சீருடைகள் வழங்கிய ராஜம் அறக்கட்டளை

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 22:

தூத்துக்குடி ராஜம் அறக்கட்டளை சார்பில் ஏழை மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டு மற்றும் சீருடை வழங்கும் விழா இன்று (22.06.2026) மாலை 5 மணிக்கு தூத்துக்குடி ராஜம் மஹாலில் நடைபெற்றது.

thoothukudileaks


இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாகி எஸ். ரம்போலா தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினராக முன்னாள் துணைத் தலைவர் ஆ. தேவராஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும், அருட்திரு கீஷோர் முன்னிலை வைத்தார் 

thoothukudileaks




video 

விழாவில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா பங்கேற்று மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை நோட் புக் பள்ளி சீருடைகள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் 10 பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது.

கல்வி வளர்ச்சிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் உதவும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

.