Tamil Nadu updates 18-9-2026
மதுரையில் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாபெரும் அன்னதான விழா
மதுரை: செப் 18
மதுரையில் நடைபெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழாவில், அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மகா கும்பாபிஷேக விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், விழாவிற்கு வருகை தந்த பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சங்கத்தின் சார்பில் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று அன்னதானம் பெற்று சென்றனர்.
அன்னதான விழாவை சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட வாசி யோக சித்தர் ராம் நாராயணன் குரு, ஸ்ரீ வித்யாம்பா சரஸ்வதி மற்றும் சங்கத்தின் மாநில கௌரவத் தலைவர் பிரபு ஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அன்னதானம் பெற்ற பக்தர்கள், சங்கத்தினருக்கு தங்களது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
பக்தர்களுக்கு சிறப்பான முறையில் அன்னம் வழங்கியதுடன், இதுபோன்ற சேவைப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சங்கத்தின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் அருள்வேலன் ஜி ஆலோசனைப்படி நடைபெற்றது.
இந்த மாபெரும் அன்னதான விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட மாநிலப் பொறுப்பாளர்கள் சித்த மருத்துவர் முருகேசன், தொழிலதிபர் சிவா, முருகன், கணேஷ், சித்த மருத்துவர் பாண்டிதுரை, ஜூசி பாண்டியன், கோவை செந்தில்குமார், சேலம் ரமேஷ் உள்ளிட்டோர் மற்றும் சங்க உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
விழா ஏற்பாடுகளில் பங்கேற்ற சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பக்தர்கள் பாராட்டு தெரிவித்தனர்.











