திங்கள், 3 ஆகஸ்ட், 2026

பரபரப்பு முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தூத்துக்குடியில் சாலை மறியல்

முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தூத்துக்குடியில் சாலை மறியல்

முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் போராட்டம்  நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது

தூத்துக்குடி, ஆக. 4:

தமிழக முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தூத்துக்குடி மாநகர் மாவட்ட திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை அண்ணா பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திமுக நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கைது நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அண்ணா பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினரை கைது செய்து காவல் வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அண்ணா பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

thoothukudileaks


புகைப்பட விளக்கம்:
முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் அமர்ந்து முழக்கமிட்ட திமுகவினர்.

உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டித்து தூத்துக்குடியில் தவெக கட்சி ஆர்ப்பாட்டம்

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி  புகைப்படம் அருணன் செய்தியாளர் 

உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் த.வெ.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று (04.08.2026) தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks

அரைமணி நேர ஆர்ப்பாட்டம்!!!

அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாநகரில் 12-வது வாசல் மையவாடி அருகிலுள்ள மைதானத்தில் இன்று காலை 11 மணியளவில் தொடங்கி சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள்  கலந்து கொண்டு, உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

thoothukudileaks

thoothukudileaks


ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள், அரசியல் நாகரிகத்தை பின்பற்ற வேண்டும் என்றும், எதிர்க்கட்சியினரையும் மக்களின் கருத்துகளையும் மதிக்கும் வகையில் பொது வாழ்க்கையில் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக கட்சியினர் வழக்கத்தை விட குறைந்த எண்ணிக்கையில் நூறுக்கும் மேற்பட்டோர்   கலந்து கொண்டனர் 

காவிரி நீர் வரத்து குறைவு: கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர வழக்கு தாக்கல்!

தூத்துக்குடி லீக்ஸ் (Thoothukudi Leaks) – நாளிதழ் செய்தி 

நாள்: 03 ஆகஸ்ட் 2026

செய்தி வெளியீடு எண்: 486

பிரிவு: தமிழக அரசு / காவிரி நீர் விவகாரம்

காவிரி நீர் வரத்து குறைவு: கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர வழக்கு தாக்கல்!

சென்னை /ஆக 3

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRC) ஆகியவற்றின் உத்தரவுகளின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைத் திறந்து விடாத நிலையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் . ச. ஜோசப் விஜய் அவரின் அறிவுறுத்தலின்படி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனுத் தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்துள்ளது.

thoothukudileaks


முக்கிய பின்னணி விவரங்கள்:

 CWRC உத்தரவு:** கடந்த 28.07.2026 அன்று நடைபெற்ற 139-வது கூட்டத்தில், 29.07.2026 முதல் 12.08.2026 வரை பிலிகுண்டுலுவில் வினாடிக்கு 3,500 கன அடி (cusecs) நீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து 30.07.2026 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54-வது அவசரக் கூட்டத்திலும் இம்முடிவு உறுதி செய்யப்பட்டது.


 உண்மை நிலவரம்:


ஆனால், 29.07.2026 முதல் 02.08.2026 வரை பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு வரப்பெற்ற நீரின் அளவு வினாடிக்கு வெறும் 158 முதல் 550 கன அடி மட்டுமே ஆகும்.


கர்நாடக அணைகளின் தற்போதைய நீர் இருப்பு (03.08.2026 நிலவரப்படி):**

 கே.ஆர்.எஸ் (KRS) அணை: 23.078 டி.எம்.சி

 கபினி அணை: 18.610 டி.எம்.சி

 ஹேமாவதி அணை: 28.022 டி.எம்.சி

 ஹாரங்கி அணை: 7.827 டி.எம்.சி

 மொத்த நீர் இருப்பு: 77.537 டி.எம்.சி (பயன்பாட்டு நீர் இருப்பு: 67.517 டி.எம்.சி)


தமிழகத்தின் கோரிக்கை & சட்ட நடவடிக்கை:

கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்து நீர்வருத்து அதிகரித்துள்ளதால், விகிதாச்சார அடிப்படையில் பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு 26.954 டி.எம்.சி ஆகும். 


ஆனால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அளித்த உத்தரவான 4.536 டி.எம்.சி என்பது மிகவும் குறைவாகும்.


கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்தும், விகிதாச்சார அடிப்படையில் தண்ணீரைத் திறந்து விட கர்நாடக அரசு தவறியுள்ளது. எனவே, மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனையின்படி, இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணவும், தமிழ்நாட்டிற்கு உரிய நீரை உரிய காலத்தில் பெறவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி உச்சநீதிமன்றத்தில் இன்று (03.08.2026) மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

thoothukudileaks

thoothukudileaks


வெளியீடு:இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9


விவசாயிகளை வஞ்சிக்கும் அரசுக்கு எதிராக தஞ்சையில் தி.மு.க. மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

news by Arunan 3-8-2026

தஞ்சை மாநகரில் விவசாயிகள் பிரச்சினைகளை முன்னிறுத்தி தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கழக நிர்வாகிகள், தோழமை இயக்கத்தினர், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் துணை முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின்,.....

 "அலட்சியத்துடனும் ஆணவத்துடனும் செயல்படும் அரசால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆடிப்பெருக்கு நாளன்று கூட அகண்ட காவிரி வறண்ட நிலையில் காட்சியளிப்பதற்கு தற்போதைய அரசின் செயல்பாடுகளே காரணம்" என்று குற்றம்சாட்டினார்.


மேலும், "விவசாயிகள் துயரத்தில் தவிக்கும் நேரத்தில், முதலமைச்சர் மக்கள் பிரச்சினைகளைப் புறக்கணித்து செயல்படுகிறார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

thoothukudileaks

thoothukudileaks


இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் மேகதாது அணை கட்டும் முயற்சியைத் தடுக்க வேண்டும், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


இறுதியாக, "சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் என அனைத்து தளங்களிலும் விவசாயிகளின் உரிமைகளுக்காக தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சனி, 1 ஆகஸ்ட், 2026

ஒன்றிய அரசை கண்டித்து. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்

மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டும்: சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம 

தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையில் சமரசம் கூடாது – டெல்டா விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தல்

தூத்துக்குடி, ஆக. 2:

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக்கூடாது, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பை கர்நாடக அரசு முழுமையாக மதித்து அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று (01.08.2026) காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாநகர செயலாளர் தோழர் ஜி. தனலெட்சுமி தலைமை வகித்தார்.


ஆர்ப்பாட்டத்தில், மேகதாது அணை கட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது, காவிரி நதிநீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை கர்நாடக அரசு முழுமையாக மதித்து செயல்படுத்த வேண்டும், டெல்டா பாசனப் பகுதிகளில் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

thoothukudileaks


ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் என். பெரியசாமி கண்டன உரையாற்றினார். 


மேலும், சிபிஐ மாவட்ட செயலாளர் தோழர் பி. கரும்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

thoothukudileaks



புகைப்பட விளக்கம்: தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே, மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சிக் கொடிகளை ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

வெள்ளி, 31 ஜூலை, 2026

தோட்டக் கிணற்று மண் எடுத்த விவகாரம்: எட்டு பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் மேலஈரால் கிராம மக்கள் மனு நடந்தது என்ன விளக்கம்

Tamil Nadu updates தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி அருணன் செய்தியாளர் 

தவறான வழக்குகளை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மேலஈரால் கிராம மக்கள் மனு

தூத்துக்குடி, ஜூலை 31:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டத்திற்குட்பட்ட மேலஈரால் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் வழக்குகளை ரத்து செய்யக் கோரி,

அக்கிராம பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் குருசந்திரன் அவர்களிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். 

thoothukudileaks


அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 24.06.2026 அன்று மேலஈரால் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நான்கு கோவில்களின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்கு முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த கண்மாய் மற்றும் குடிநீர் கிணறு சீரமைக்கப்படாமல் இருந்ததாகவும், இதுகுறித்து பலமுறை அரசுத் துறையினரிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, கோவிலுக்கு எதிரே அமைந்திருந்த சேதமடைந்த கிணறு மற்றும் கண்மாயால் விபத்து ஏற்படக்கூடாது என்ற நோக்கில், ஊர் மக்கள் தங்களது சொந்த செலவில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதற்காக கிராமத்தைச் சேர்ந்தவர்களின் தோட்டக் கிணற்றில் தோண்டப்பட்ட சரள்மண்ணை டிராக்டர் மூலம் கண்மாய் மற்றும் கோவில் பகுதிக்கு கொண்டு வந்தபோது, எட்டயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்வேல்முருகன் வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.



அப்போது, மேலிடத்திலிருந்து புகார் வந்திருப்பதால் காவல் நிலையத்திற்கு வந்து மனு அளிக்குமாறு போலீசார் கூறியதாகவும், பின்னர் வாகனம் மற்றும் ஓட்டுநரை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.


இதையடுத்து, காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கோவில் பணிக்காகவே மண் எடுத்துச் செல்லப்பட்டதால் வழக்குப் பதிவு செய்யாமல் வாகனத்தையும் ஓட்டுநரையும் விடுவிப்பதாகவும், இனி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் உறுதியளித்ததால் போராட்டத்தை கைவிட்டதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.


ஆனால், 21.07.2026 அன்று மேலஈரால் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கு சம்மன் வழங்கப்பட்டு, 22.07.2026 அன்று காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டதாகவும், அப்போது 12.06.2026 தேதியிட்ட குற்ற எண்கள் 240/2026 மற்றும் 241/2026-இல் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி, பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தவறான வழக்குகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலஈரால் கிராம மக்கள் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.



thoothukudileaks


படவிளக்கம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் குருசந்திரன் அவரிடம் மனு அளித்த பின்னர் மேலஈரால் கிராம பொதுமக்கள் குழுவாக நின்ற காட்சி.

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றம் மீண்டும் இருக்கை விவகாரத்தில் அதிமுகவில் இருந்து தவெக தாவிய கவுன்சிலர் வெளிநடப்பு

 "தூத்துக்குடி லீக்ஸ்" நாளிதழ

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றம் மீண்டும் இருக்கை விவகாரத்தில் அதிமுகவில் இருந்து தவெக தாவிய கவுன்சிலர் வெளிநடப்பு 

தூத்துக்குடி, ஜூலை 31: தூத்துக்குடி மாநகராட்சியின் மாதாந்திர சாதாரண மாமன்றக் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் மாநகராட்சி மன்ற அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


கூட்டம் தொடங்கியதும், அண்மையில் அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த கவுன்சிலர் மந்திரமூர்த்தி, கடந்த மாமன்றக் கூட்டத்தில் எழுப்பிய இருக்கை தொடர்பான விவகாரத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில் எந்த இடத்திலும் அமராமல் எழுந்து நின்றபடி இருந்தார்.

அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், "மாநகராட்சியில் நீங்கள் இன்னும் அதிமுக கவுன்சிலராகவே உள்ளீர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக மாமன்றக் கூட்டங்களில் தொடர்ந்து வெளிநடப்பு செய்து, பின்னர் வெளியே சென்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள். தயவுசெய்து அமர்ந்து கூட்டத்தில் பங்கேற்கவும். இல்லையெனில், வழக்கம்போல் நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்," என்று தெரிவித்தார்.

thoothukudileaks


இதனைத் தொடர்ந்து கவுன்சிலர் மந்திரமூர்த்தி மாமன்றக் கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தார். 


அதன்பிறகு மாநகராட்சி நிர்வாகம் கொண்டு வந்த அனைத்து தீர்மானங்களும் மாமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு நிறைவடைந்தது. :::