செவ்வாய், 30 ஜூன், 2026

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை 9 வயது சிறுமிக்கு செயற்கை கண் பொருத்தி மறுவாழ்வு தமிழக அரசுக்கும் மருத்துவர்களுக்கும் பெற்றோர் நெகிழ்ச்சி நன்றி!

Tamil Nadu updates, 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி: ஜுலை 1

தூத்துக்குடி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிறவியிலேயே இடது கண் குறைபாட்டுடன் பிறந்த 9 வயது சிறுமிக்கு அரிய வகை கண் குழி சீரமைப்பு மற்றும் செயற்கை கண் பொருத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.



 இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று காலை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

பிறவிக்குறைபாட்டால் அவதிப்பட்ட சிறுமி!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி கிராமத்தில் வசித்து வரும் பொன்னு என்பவரின் 9 வயது மகள் முத்துசெல்வி. அச்சிறுமிக்குப் பிறவியிலேயே இடது கண் இல்லாததால், அவதிப்பட்டு வந்தார்.

thoothukudileaks
தாயார் உடன் சிறுமி

video 

மருத்துவக் குழுவின் அரிய சாதனை

thoothukudileaks

கடந்த 20.06.2026 அன்று, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. எபனேசர் ஜோயல் குமார், துணை முதல்வர் மரு. கலைவாணி, மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. பத்மநாபன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த அரிய அறுவை சிகிச்சை நடைபெற்றது.

thoothukudileaks


கண் பிரிவு துறைத் தலைவர் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளருமான மரு. ம. ரீட்டா ஹெப்சிராணி  தலைமையில், பின்வரும் மருத்துவக் குழுவினர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்:

 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்: மரு. அருணா தேவி

 மயக்கவியல் மருத்துவர்கள்: மரு. ஸ்ரீராம், மரு. அஜய் சந்தோஷ் டேவிட்

 உதவி மருத்துவர்கள்:  மரு. ஜெயந்தி, மரு. வின்சா, மரு. திவ்யா

 செவிலியர்கள்: சுரேகா,  ரத்னா

இந்த மருத்துவக் குழுவினர் இணைந்து சிறுமிக்குக் கண் குழி சீரமைப்பு அறுவை சிகிச்சை மற்றும் செயற்கை கண் பொருத்தும் அறுவை சிகிச்சையை மிக வெற்றிகரமாகச் செய்து முடித்தனர். .

செய்தியாளர் சந்திப்பில் பெற்றோர் நெகிழ்ச்சி!

தமிழக அரசுக்கு நன்றி!!!

இன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதில் தங்களுக்குக் கிடைத்த முழுமையான கண் சிகிச்சை மற்றும் செயற்கை கண் பொருத்தப்பட்ட விவரங்கள் குறித்துச் சிறுமி முத்துசெல்வியும் அவரது தாயாரும் செய்தியாளர்களிடம் விவரித்தனர்.


அப்போது, தங்களது குழந்தைக்கு அதிநவீன முறையில் செயற்கை கண் பொருத்தி, புதிய வாழ்வையும் நம்பிக்கையையும் தந்து உதவிய தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அனைவருக்கும், ஏழை எளிய மக்களுக்குத் தரமான மருத்துவ சேவை கிடைக்கத் திறம்படச் செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கும் தங்களது மிகுந்த மகிழ்ச்சியையும், நெஞ்சார்ந்த நன்றியையும் கண்ணீர் மல்கத் தெரிவித்துக் கொண்டனர்.

 தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்..

அர்ப்பணிப்புடன் இயங்கும் கண் சிகிச்சை பிரிவு

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவில் தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

thoothukudileaks



மேலும், மாதந்தோறும் 200-க்கும் மேற்பட்ட கண் புரை அறுவை சிகிச்சைகளும் (Cataract Surgery), கண் நீர் அழுத்த நோய் (Glaucoma), மாறுகண் (Squint), கருவிழி மாற்று அறுவை சிகிச்சை (Keratoplasty) போன்ற பல்வேறு அதிநவீன சிகிச்சைகளும் இங்கு முற்றிலும் இலவசமாக, அர்ப்பணிப்பு உணர்வோடு வழங்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் கண் தொடர்பான அனைத்துப் பாதிப்புகளுக்கும் எங்களைப் போன்ற அரசு மருத்துவர்களை அணுகிப் பயன்பெறுமாறு மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


திங்கள், 29 ஜூன், 2026

அதிமுக அமைப்புச் செயலாளராக நியமனம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன்


Tamil Nadu updates

தூத்துக்குடி, ஜூன் 29:

அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன், அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

thoothukudileaks



அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கடந்த 28.06.2026 அன்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்த எஸ்.பி. சண்முகநாதன், பூங்கொத்து வழங்கி மரியாதை செலுத்தினார். அப்போது எடப்பாடி பழனிசாமி அவருக்கு வாழ்த்து தெரிவித்து, புதிய பொறுப்பை சிறப்பாக மேற்கொள்ள வாழ்த்துகளை தெரிவித்தார்.


thoothukudileaks


இந்த சந்திப்பின்போது மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட கழகப் பொருளாளர் சேவியர், மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளருமான விஜயகுமார், பகுதிச் செயலாளர்கள் முருகன், சுடலைமணி, ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், ராஜ் நாராயணன், உரக்கடை குணசேகரன், அப்பாதுரை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம். பெருமாள், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர்கள் கே.ஜெ. பிரபாகர், ஜாக்சன் துரைமணி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் சுரேஷ்பாபு, திருச்செந்தூர் ஆர்.எம்.கே.எஸ். சுந்தர், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் தெர்மல் ஆனந்தராஜ், மாவட்டக் கலைப் பிரிவு செயலாளர் வீரபாண்டியப்பட்டணம் சுரேஷ், வடக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் கோசல்ராம் ராஜா, வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.ஆர்.வி. கவியரசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி மணிகண்டன், சொக்கலிங்கம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

புதன், 24 ஜூன், 2026

தூத்துக்குடியில் முத்து நகரின் பசுமைப் பயணம்” திட்டம் பசுமை நகரை உருவாக்க பங்குதாரர்களுடன் மாநகராட்சி ஆலோசனை

Tamil Nadu updates,தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி  புகைப்படங்கள் செய்தி ரோஜா அருணன் 

தூத்துக்குடி, ஜூன் 24:

தூத்துக்குடி மாநகராட்சியை பசுமை நிறைந்த, எழில்மிகு நகரமாக மாற்றுவதோடு, நகர மக்களின் வாழ்வியல் தரத்தை உயர்த்தும் நோக்கில் “முத்து நகரின் பசுமைப் பயணம்” திட்டத்தின் கீழ் பங்குதாரர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

thoothukudileaks

இக்கூட்டத்தில் வ.உ.சி. துறைமுக சபை, மாவட்ட வனத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, வர்த்தக சங்க பிரதிநிதிகள், தனியார் நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய மாநகராட்சி ஆணையாளர், பிரியங்கா ...

தூத்துக்குடி நகரம் மக்கள் தொகை, போக்குவரத்து மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் தொடர்ந்து முன்னேறி வருவதால் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார். 

வருங்காலம்!!!

வருங்கால தலைமுறைகளின் நலனை கருத்தில் கொண்டு பசுமை மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகரம் டிஜிட்டல் அடித்தளம்!!!

மேலும், இத்திட்டத்தின் மூலம் நகரின் பசுமை மேம்பாட்டிற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதுடன், பராமரிப்பு மற்றும் கண்காணிப்பிற்கான டிஜிட்டல் அடித்தளமும் ஏற்படுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டது. 

பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் உங்கள் கருத்துக்களை அறிவுரை கூறுங்கள்????

பொதுமக்கள், வணிகர்கள், தொழில் முனைவோர், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு அமைப்புகள் தங்களது கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் பங்களிப்புகளை தனித்தனியாகவோ அல்லது ஒருங்கிணைந்த முறையிலோ வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

thoothukudileaks


உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை!!!

திட்டத்தின் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடுதல், பூங்காக்கள் பராமரித்தல், பொது சுவர்களை வண்ணமயமாக்கி விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுதல், சாலைகளில் தூசி அகற்றும் பணிகள், மரங்களுக்கு தண்ணீர் வழங்கும் வசதிகள் ஏற்படுத்துதல், தொழில்நுட்ப ஆதரவு வழங்குதல், விளம்பரப் பலகைகளுக்கான பாதுகாப்பான அமைப்புகள் உருவாக்குதல், பொது கழிப்பறைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் இடுகாடுகளை உயர்தரத்தில் பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் பங்குதாரர்கள் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

thoothukudileaks


கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு தரப்பினரும் திட்டத்திற்கு தங்களது ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.


 இதனைத் தொடர்ந்து திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

– 

செவ்வாய், 23 ஜூன், 2026

சர்வதேச தினம் யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்திய மாணவ மாணவிகள்

 Tamil Nadu updates news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 23:

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


thoothukudileaks

நன்மைகள் !!!

பள்ளியின் தாளாளரும் முதல்வருமான ஆர். ஜெயசண்முகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக யோகா பயிற்சியாளர் ஸ்டீபன் கலந்து கொண்டு யோகாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் உடல்நல நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

thoothukudileaks

அசாத்திய மாணவ மாணவிகள்!!!

தொடர்ந்து மாணவ, மாணவிகள் சூரிய நமஸ்காரம், பத்மாசனம், பச்சிமோத்தானாசனம், தனுராசனம், யோகமுத்திரா, திரிகோணாசனம், வஜ்ராசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை செய்து அவற்றின் பயன்களை அறிந்துகொண்டனர்.

thoothukudileaks


நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இறுதியில் துணை முதல்வர் ரா.ச. பிரியங்கா நன்றி கூறினார்.


 நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


இந்த யோகா தின விழா மாணவர்களிடையே உடல் மற்றும் மன ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக பள்ளியில் நிர்வாகம் தெரிவித்தது.

 

திங்கள், 22 ஜூன், 2026

தூத்துக்குடியில் 100 ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், பள்ளி சீருடைகள் வழங்கிய ராஜம் அறக்கட்டளை

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 22:

தூத்துக்குடி ராஜம் அறக்கட்டளை சார்பில் ஏழை மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டு மற்றும் சீருடை வழங்கும் விழா இன்று (22.06.2026) மாலை 5 மணிக்கு தூத்துக்குடி ராஜம் மஹாலில் நடைபெற்றது.

thoothukudileaks


இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாகி எஸ். ரம்போலா தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினராக முன்னாள் துணைத் தலைவர் ஆ. தேவராஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும், அருட்திரு கீஷோர் முன்னிலை வைத்தார் 

thoothukudileaks




video 

விழாவில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா பங்கேற்று மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை நோட் புக் பள்ளி சீருடைகள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் 10 பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது.

கல்வி வளர்ச்சிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் உதவும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

.

மத்திய மாநில உறவுகளை சீர்குலைக்க சதி செய்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு வெங்கடேசன் தமிழக பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் பரபரப்பு அறிக்கை

சென்னை ஜுன் 22

தமிழக சட்டமன்றத்தில் தமிழ் தாய் வாழ்த்து முதன்மையாக ஒலிக்கப்பட்டதை, பெருமையுடன் ஏற்றுக் கொள்ளாமல், இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக வந்தே மாதரம்' பாடலை இழிவுப்படுத்தி பேசுபவர்கள் மீது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தமிழக எதிர் கட்சிகள் முதல் ஆறு மாதங்களுக்கு தமிழக வெற்றிக் கழக அரசை விமர்சிக்காமல், அவதூறு பிரச்சாரம் செய்யாமல், தமிழகத்தின் வளர்ச்சிக்கு, தமிழக மக்களின் மகிழ்ச்சிக்கு உரிய ஆலோசனைகள் வழங்க முன் வர வேண்டும்.


தமிழக முதல்வரான பிறகு, முதல் பிறந்த நாளை கொண்டாடும் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

thoothukudileaks


தமிழக முதல்வராக திரு ஜோசப் விஜய் பதவி ஏற்ற பிறகு ,ஜுன் 18ம் தேதி துவங்கிய முதல் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு ஆளுநர் ரஜேந்திர அர்லேக்கர் அவர்கள் உரையாற்றினார். தேசிய கீதத்திற்கும் உரிய மரியாதை அளிக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது உலகெங்கும் வாழும் தமிழர்களையும் தேசிய சிந்தனை கொண்டவர்களையும் பெரு மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால், எதையும் குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகக் கூடிய சிலர், இதிலும் தங்களது தேச விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தி உள்ளனர்.


எப்போதும், எல்லா பிரச்னைகளிலும் மக்களைப் பிரிக்கும் வகையில் பேசி வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தமிழக சட்டமன்றத்தில் சுமூகமாக முடிந்த தமிழ் தாய் வாழ்த்து பாடல் பிரச்னையை பெரிதாக்கி தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார்.


"தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டது விமர்சனத்துக்குரியதல்ல. நம்முடைய நாட்டுப்பண்ணை எத்தனை முறையும் பாடலாம். ஆனால், நாட்டின் ஒற்றுமைக்கும் மதச்சார்பின்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் “வந்தே மாதரம்” பாடலைப் பாட மறுத்தது தான்  வரவேற்க வேண்டிய முக்கிய செயல்' என்று அவர் கூறியிருக்கிறார். அதுவும் இதை தமிழக அமைச்சர் நிர்மல்குமாரை வைத்துக் கொண்டே கூறியிருக்கிறார். இது தவறான முன்னுதாரணம். கடும் கண்டனத்துக்குரியது.


இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பல லட்சம் மக்களை கொண்டு வந்து சேர்த்த மந்திரச் சொல் 'வந்தே மாதரம்'. அதனால்தான் ஆங்கிலேயர்கள், 'வந்தே மாதரம்' என்ற சொல்லைக் கேட்டாலே அஞ்சினார்கள். ஆனால் இப்போது, 'வந்தே மாதரம்' என்று சொல்லைக் கேட்டு சு. வெங்கடேசன் ஏன் அஞ்சி நடுங்குகிறார் என்பது தெரியவில்லை. 'வந்தே மாதரம்' குறித்து சு. வெங்கடேசனின் கருத்து, சுதந்திரப் போராட்ட வீரர்களை நேரடியாக இழிவுபடுத்தும் செயல். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுள்ள சு. வெங்கடேசன், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தேசிய பாடலாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 'வந்தே மாதரம்' பாடலை இழிவுப்படுத்தி பேசுவது கிரிமினல் குற்றம்.


அரசியல் ரீதியாக பாஜகவுக்கு நேர் எதிராக நின்றாலும், மத்திய அரசுடன் இணக்கமான அணுகுமுறையை முதல்வர் ஜோசப் விஜய் பின்பற்றி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். 



இந்தச்  சூழலில் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யான சு.வெங்கடேசன், 'வந்தே மாதரம்' பாடலை இழிவுபடுத்தி பேசியிருப்பது, மத்திய  - மாநில  உறவுகளை சீர்குலைக்கும் சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.


தமிழக முதல்வர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள்,நிதி ஆயோக் கூட்டத்திற்கு டெல்லி சென்ற போது,  பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்தித்துப் பேசினார்.   30 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த அதிகாரப்பூர்வ சந்திப்பில், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம், மேகதாது அணை விவகாரம், தமிழக மாணவர்களுக்கு நீட்  தேர்விலிருந்து விலக்கு, தமிழக மீனவர்கள் பிரச்னை, தமிழகத்தில் டிஆர்டிஓ (DRDO) பாதுகாப்பு மையம் அமைப்பது

உள்ளிட்ட தமிழகத்தின் நலன் சார்ந்த பல முக்கிய கோரிக்கைகளை அடங்கிய மனுவை முதல்வர் அளித்துள்ளார் 


தமிழக முதல்வர், பாரத பிரதமரின் இந்த சந்திப்பு, தமிழக வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக, தமிழகத்தின் உட்கட்டமைப்பு, நிதி ஒதுக்கீடு மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் இந்த சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டது.  தமிழகத்தின் வளர்ச்சிக்கும், பாரதத்தின் வலிமைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் இலக்கணமான சந்திப்பாக இது அமைந்தது. அதைத் தொடர்ந்தே தமிழக சட்டமன்றத்தில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படு ஆளுநர் உரை சுமூகமாக நடந்து முடிந்தது. அனைவரது மனமும் குளிர்ந்தது. இது முதல்வர் விஜய்க்கு கிடைத்த வெற்றியாகும்.*


*மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனார், தீரர் சுப்பிரமணிய சிவா, வீரத்திருமகன் வாஞ்சிநாதன் பாடி மகிழ்ந்து தமிழகத்தில் விடுதலை தீயை ஊட்டி வளர்த்த 'பாரத தாயை வணங்குவோம்' என்கிற புனிதமான சுதந்திரத்தை பெற்று தந்த தேசபக்தி சுதந்திர பாடலுக்கு தமிழகத்தில் உரிய மரியாதையை முதல்வர் விஜய் அளிக்க வேண்டும்.இந்திய சுதந்திரப் போரில் தேசிய நீரோட்டத்தில் அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கிய தமிழகம் பெருமை கொள்ளும் விதமாக தெளிவாக,  தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.


தமிழகத்தின் அனைத்து கட்சி தலைவர்களும் சி.பி.எம் பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனின் தேச விரோத, பிரிவினைவாத கருத்துக்களுக்கு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். தேசம் முழுவதும் சுதந்திர தாகத்தை விதைத்து,இந்திய தேச விடுதலைக்கு காரணமான "வந்தே மாதரம்" தேசபக்தி பாடலில் அரசியல் செய்யக்கூடாது.


தமிழக எதிர்க்கட்சித் தலைவர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சொன்னது போல, தமிழகத்தின், உரிமை சார்ந்த பிரச்னைகளில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்று  பிரதமரை நேரில் சந்தித்து தீர்வு காண வேண்டும்.  இதுபோன்ற நேர்மறை அரசியலை அனைத்து கட்சி தலைவர்களும் பின்பற்ற வேண்டும்.


எந்த ஒரு அரசுக்கும் குறிப்பிட்ட கால அவகாசம் வேண்டும் எனவே முதல் ஆறு மாதங்களுக்கு தமிழக வெற்றிக்கழக அரசுக்கு எதிராக திட்டமிட்டு செயல்படுவதையும்,   அவதூறு பரப்புவதையும் விட்டு விட்டு,  அரசுக்கு உரிய ஆலோசனைகளை எதிர்க்கட்சிகள் வழங்க வேண்டும்.


மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பிறகு, தமிழகத்தில் சமூக நீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை  முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ளார்.


 பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அரசியல் நாகரிகத்திற்கு இது ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.*


கடந்தா கால ஆட்சிகளில், சுயநல அரசியலுக்காக தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு,  அனைத்து துறைகளிலும் நிர்வாக சீர்கேடுகள் அதிகமாகி, ஊழல் பெருகி,  ஆபத்தான கேன்சர் நோய் போல தமிழக வளர்ச்சி பாதிக்கப்பட்டு தமிழ் அன்னையை கடந்த ஆட்சி காலத்தில் படுத்த படுக்கையாக்கிவிட்டனர்.


பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அளித்த 14 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு நிதி திட்டங்களுக்கும்,  கணக்கு வழக்கு இல்லாமல், மத்திய அரசு என்ன செய்தது என்று அவதூறு பேசி, நடைபெற்ற  நிர்வாக சீர்கேடு காரணமாக தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு,  கடந்த ஆட்சிக் காலங்களில் முடக்கப்பட்டது. 


தமிழக நிதி அமைச்சரின் வெள்ளை அறிக்கை மிகத் தெளிவாக இதை விளக்கி உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் வெள்ளை அறிக்கை என்பது தமிழகத்தின் உண்மை நிலையை தமிழக மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளும் வகையில், தமிழகத்தின் இளம் மாணவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் மக்கள் மன்றத்தில் வெளியிடப்பட்டதன் மூலம் ஒரு மிகப்பெரிய விழிப்புணர்வு தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ளது.


*நிச்சயம் தமிழக வெற்றி கழக அரசு, மக்கள் நலம் சார்ந்த புதுமை திட்டங்களை நிறைவேற்றும் வகையில், மிகச் சிறப்பாக தொலைநோக்கு சிந்தனையுடன் சிறப்பாக திட்டமிட்டு, தொடர் முயற்சிகளால், கனிம வளம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் நிதி மேலாண்மையை மேம்படுத்தி, மக்கள் பாதிக்காத வரியில்லாத வருவாயை உருவாக்கும் விதத்தில் செயல்பட்டு, தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் படிப்படியாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை தமிழக மக்களுக்கு இருக்கிறது.


அதற்காக தமிழக அரசும் தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய் எடுக்கும் முயற்சிகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவும் ஆலோசனைகளும் வழங்குவதை விடுத்து, தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை தமிழர்கள் மக்களால் அளிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கொச்சைப்படுத்தி, குறுகிய காலத்தில் ஆட்சியை கவிழ்க்க மறைமுக செயல்களில் ஈடுபடக்கூடாது. தமிழக மக்களின் விருப்பத்துக்கு எதிராக, செயல்படும் சதி அரசியல் திட்டங்களில் ஈடுபடும் கட்சிகள் இனி தமிழக அரசியலில் மக்களால் அப்புறப்படுத்தப்படுவார்கள்.


ஏ.என்.எஸ்.பிரசாத்

தமிழக பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் 

ansprasadbjp@gmail.com


ஞாயிறு, 21 ஜூன், 2026

முதல்வர் ஜோசப் விஜய் 52-வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் மா செ எஸ்டிஆர் சாமுவேல் தலைமையில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி கொண்டாட்டம் பரபரப்பு

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி


தூத்துக்குடி, ஜூன் 22:

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு இன்று காலை 11 மணியளவில் சிறப்பான கொண்டாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks


மாவட்ட செயலாளர் சாமுவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கட்சியினர் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன், கேக் வெட்டி பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, முதல்வர் ஜோசப் விஜயின் நீண்ட ஆயுளும், மக்கள் பணியும் சிறக்க வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.



இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகமாக பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks



thoothukudileaks

புகைபட விளக்கம்:

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு முதல்வர் ஜோசப் விஜயின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் சாமுவேல் தலைமையில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.

பிறந்த நாள் வாழ்த்து பதிவு பிரபல திரைப்பட நடிகர் விஜய் அவர்களுக்கு இன்று 52 ஆவது பிறந்த நாள் 


அவர்களுக்கு நம் தூத்துக்குடி லீக்ஸ்  சார்பாக பிறந்தநாள் 

வாழ்த்துக்கள்

thoothukudileaks


முதல்வர் ஜோசப் விஜய் இது வரை....

சென்னையில் 1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி எஸ்.ஏ. இயக்குநர் சந்திர சேகர், பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருக்கு வித்யா என்ற ஒரு தங்கை இருந்தார். கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா பள்ளியில் தனது படிப்பை தொடங்கியவர் விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.


பின் சென்னை லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேசன் படிப்பை தொடர்ந்தார். ஆனால் நடிப்பின் மீதிருந்த ஈர்ப்பால் பாதியிலேயே கைவிட்டார்.


விஜய் தன் ரசிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவருக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்


thoothukudileaks


விஜய் தன் சிறு வயதில் இருந்தே தந்தை எஸ்.ஏ. சந்திர சேகரின் படங்களில் நடித்துள்ளார். வெற்றி, வசந்தராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.


இதன் தொடர்ச்சியாக கதா நாயகனாக நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமானார். இதையடுத்து, செந்தூரப்பாண்டி, ரசிகன், ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, சந்திரலேகோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் விக்ரமன் இயக்கத்தில் நடித்த பூவே உனக்காக படம் தான் அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக இருந்தது. 


இதைத்தொடர்ந்து 90 களில் விஜய்யை நடிப்பின் உச்சத்தில் வைத்து தமிழ் ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர். காலமெல்லாம் காத்திருப்பேன், லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, ப்ரியமுடன், நிலாவே வா, துள்ளாத மனமும் துள்ளும், என ஏராளமான படங்களில் பெரும் புகழ் பெற்றார்.


90 களில் தொடங்கிய இந்த வெற்றிப்பயணம் 2000ஆம் ஆண்டுகளில் கில்லி, பிரியமானவளே, குஷி என கடைசியாக பீஸ்ட் வரை நீடிக்கிறது .


இப்படி தன் படங்களால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டி வைத்துள்ள விஜய் தற்போது அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.


 அவர் 10 ,12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடத்தியதே விஜய் அரசியலுக்கு வருவதற்கான அச்சாரமாகவே பார்க்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடக்கம் 

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி ஆரவாரப்படுத்தியது. வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.


அவர் கூறியபடியே சட்ட சபை தேர்தலில் வென்று தமிழகத்தின் முதலமைச்சராக தேர்வு பெற்று உள்ளார் 


தமிழக முதல்வராக பிறந்தநாள் கொண்டாடும் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்களுடன் இணைந்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பிலும் வாழ்த்துக்கள் இன்று தெரிவித்து வருகின்றனர்.