ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

அரசு விழாவாக முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன் பிறந்தநாள் கடைப்பிடிக்க படுமா ? தமிழக அரசின் பதில் என்ன ???

▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 28-4-2024

news by arunan journalist

அரசு விழாவாக முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன்  பிறந்தநாள்  கடைப்பிடிக்க படுமா ? தமிழக அரசின் பதில் என்னவாகும் என எதிர்பார்ப்பு???

இது பற்றிய செய்தியாவது:-

தமிழக அரசு மறைந்த தேசிய தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரது பிறந்தநாளை அரசு விழாவாக அன்று கொண்டாடப்படுகிறது.




முன்னாள் முதல்வர்

அன்னை ஜானகி ராமச்சந்திரன்

பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாட பட வேண்டும் என நீண்ட வருடங்களாக எதிர்பார்க்கப்படுகிறது.


இது குறித்து..

தூத்துக்குடி மனிதநேய பண்பாளர் எம்.ஜி.ஆர்மன்றம்

செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் தகவல் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

அதற்கான பதிலும் தமிழக செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் பதிலும் அனுப்பி வைத்துள்ளார் கள்

முன்னாள் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரன் திருவுருவப்படம் குறித்து சட்டமன்றத்தில்  தங்களது கடிதம் சட்டமன்ற பேரவைச் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

. மேலும் விவரமாவது 

        முன்னாள் முதல்வர் அன்னை ஜானகி ராமச்சந்திரன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கவேண்டுதல் அரசின் கொள்கை முடிவாகும் என்று தூத்துக்குடி மனிதநேய பண்பாளர் எம். ஜி.ஆர் மன்ற செயலாளர் சத்யா இலட்சுமணனுக்கு செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமிழக செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் பதில் 

தூத்துக்குடி

கீழச்சண்முகபுரம் பிராப்பர் தெரு மனிதநேய பண்பாளர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சத்யா இலட்சுமணன் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு இயக்குநருக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார்.

       அதில் கூறியுள்ளதாவது...... தமிழ்நாடு முன்னாள் முதல்வர் அன்னை ஜானகி ராமச்சந்திரன் பிறந்தநாளான நவம்பர் 30ந்தேதியை அரசு விழாவாக அறிவிக்கவும், சட்டமன்றத்தில் அவரது திருவுருவப்படத்தை திறந்துவைக்கவும் கேட்டுக்கொண்டார்.

        அந்த மனுவிற்கு  இயக்குநர் செய்தி மக்கள் தொடர்புமற்றும் அரசு துணைச்செயலாளர் அலுவலரால்அளிக்கப்பட்ட பதிலில் முன்னாள் முதல்வர் அன்னைஜானகி ராமச்சத்திரன் பிறந்தநாளான நவம்பர் 30ம் தேதியை அரசு விழாவாக அறிவிப்பது அரசின் கொள்கை முடிவாகும், என்ற விபரமும், அன்னை ஜானகி ராமச்சந்திரன் திருவுருவப்படத்தை சட்டமன்றத்தில் திறந்துவைக்கும் தங்களது கோரிக்கை சட்டமன்றத்தைச் சார்ந்ததால், தங்களது கடிதம் சட்டமன்ற பேரவைச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.  விபரத்தை தெரிவித்தது.

தமிழக அரசு மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன் திருவுருவப்படம் சட்டமன்றத் வளாகத்தில் நிறுவ படுமா மற்றும் அரசு விழாவாக முன்னாள் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரன் பிறந்தநாள் அறிவிக்கப்படுமா எதிர்பார்க்கிறார்கள்.

இந்து மதத்திலிருந்து...கிறிஸ்துவ மதம் மாறினால் 10 கோடி?!! ரூபாய் 5 லட்சம் மோசடி செய்து ஏப்பம் விட்ட பலே ஆசாமி தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அதிரடி கைது நடவடிக்கை!!!

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

26-4-2024

Police news  


தூத்துக்குடி  கோவில்பட்டி யில் கிறிஸ்தவ மதம் மாறினால் ரூபாய் 10 கோடி ???

  சுமார் 5 லட்சம் பணம் மோசடி செய்தவர் கைது - சைபர் குற்ற பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை.

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு IMO என்ற செயலி மூலமாக



 சொக்கநாதன் என்ற IDல் இருந்து தொடர்பு கொண்டு பேசியவர்..!!!

 அவரிடம் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால்...

 ரூபாய் 10 கோடி பெற்று தருகிறேன் அதற்கு அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும்? வருமானவரி செலுத்த உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் கேட்டடுள்ளார்.பலே ஆசாமி?


இவரும் இதனை உண்மை என்று நம்பி   தூத்துக்குடி கோவில் பட்டி இளைஞர் தனது ரூபாய் 4,88,159/- பணத்தை Gpay மூலம் அனுப்பியுள்ளார்.


பின்னர் தான் ஏமாற்றப்பட்டு பணம் ரூபாய் 5 லட்சம் மோசடி ஆனதை உணர்ந்தார்.


 உடனே மேற்படி இளைஞர் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.


மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர்

ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்தவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.

கைதான ராஜவேல்

தூத்துக்குடி மாவட்டம் சைபர் க்ரைம் டீம் தேடலில் சிக்கினான் 

 தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரோடு, ஆனந்தம் நகர் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ராஜவேல் (31) என்பவர் மேற்படி பாதிக்கபட்ட இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.


இதனையடுத்து மேற்படி போலீசார் நேற்று முன்தினம் (26.04.2024) தஞ்சாவூர் சென்று மேற்படி ராஜவேலின் வீட்டருகே வைத்து அவரை கைது செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டார்.

சிறையில் அடைப்பு 

அதன் பிறகு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைத்தனர்.


 மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வியாழன், 25 ஏப்ரல், 2024

அழகி போட்டியில் இரண்டாம் இடத்தில் தூத்துக்குடி திருநங்கை மேகா தேர்வு இந்த நிகழ்ச்சியில் சினிமா நடிகைகள் அமைச்சர் பொன் முடி பங்கேற்பு பாராட்டு தெரிவித்துள்ளார்

  ▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

26-4-2024

news by arunan journalist 

தமிழகம் 2024 மிஸ் கூவாகம் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தில் தூத்துக்குடி திருநங்கை மேகா தேர்வு 

அமைச்சர் பொன் முடி வாழ்த்து தெரிவித்தார்.



இது பற்றிய செய்தியாவது :-

விழுப்புரத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் வழிபாட்டு திருவிழா வருடந்தோறும் சித்திரை மாதம் நடைபெறும்.


இவ்விழாவில் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து திருநங்கை கள் கலந்து கொண்டு கூத்தாண்டவரை வழிப்பட்டு செல்கின்றன.

மிஸ் கூவாகம் அழகி போட்டி யில் கலந்து கொண்டோர்....

தென்னிந்திய திருநங்கையர்

கூட்டமைப்பு சமுக நலத்துறை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடந்த மிஸ் கூவாகம்-2024 அழகி

போட்டி இந்த ஆண்டும் 22-4-2024 அன்று  நடைபெற்றது

 


அழகி போட்டியில் குறிப்பாக இளம் வயது திருநங்கை கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டனர் 


தங்கள் செயல் அறிவுதிறன் நடை உடை பாவனை களை செய்து காண்பித்தனர் 



முதலிடம் !!!

அழகி போட்டியில் 

ஈரோடு ரியா முதலிடம் பிடித்து பரிசு தொகை50 ஆயிரம் தட்டி சென்றார்.


இரண்டாம் இடம் துாத்துக்குடி அமுதா நகர்

மேகா தேர்வு பெற்றார் அவருக்கு 25 ஆயிரம் வழங்கப்பட்டது.

முன்றாம் இடம் 


சென்னையை சேர்ந்த யுவாஞ்சலி தேர்வு பெற்றார் அவருக்கு 11 ஆயிரம் வழங்கினார்கள் 

தமிழக அமைச்சர் 

பொன் முடி!!! 

விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்ற அழகி போட்டி மிஸ் கூவாகம் 2024 மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பொன் முடி தேர்வு பெற்றவர்களை வாழ்த்தியும் வந்திருந்த திருநங்கைகள் அனைவரையும் பாராட்டி பேசினார்.

சினிமா நடிகைகள்!!!

2024 மிஸ் கூவாகம் அழகி போட்டி நிகழ்ச்சியில் சினிமா நடிகை கள் 


ரெபெக்கா, பிரமிளா, எதிர்

நீச்சல் திரைப்படம் காயத்ரி முன்னிலை

வகித்தனர்.



இறுதி சுற்றுக்கான

முதல் சுற்று போட்டி

யில் துாத்துக்குடி மேகா,

கோவை எமி. தஞ்சை

ஜொஸ்மா,

விருதுநகர்

ரேணுகா, ஈரோடு ரியா,

சென்னை யுவாஞ்சலின்,

சேலம் கதிஜா ஆகிய 7

பேர் தேர்வாகினர்.


 இறுதி யாக ...

கேள்வி ?பதில்!!!

 சுற்று போட்டி

நடந்தது.



அதில்,

ஈரோடு ரியா

மிஸ் கூவாகமாக தேர்வு

செய்யப்பட்டார்.



2ம் இடத்தை துாத்துக்

குடி மேகா, 


3ம் இடத்தை

சென்னை யுவாஞ்சலின்

பிடித்தனர். 


முதல் பரிசு

ரூ.50 ஆயிரம், 2ம் பரிசு

ரூ.25 ஆயிரம், 3ம் பரிசு

- ரூ.11 ஆயிரம் வழங்கப்

பட்டது. 


பின்புமூன்று பேருக்கும்

கிரீடம் சூட்டி வாழ்த்து

தெரிவிக்கப்பட்டது.



தென்னிந்திய திருநங்

கைகள் கூட்டமைப்பு

தலைவர் மோகனாம்பாள்

வரவேற்றார். அருணா,

சுபிக்ஷா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

துணை

தலைவர்

விமலா நன்றி கூறினர்.



2024 மிஸ் கூவாகம் டூ அழகி மேகா தூத்துக்குடியில் உள்ள நட்புறவு உடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.






தூத்துக்குடி பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

 ▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 26-4-2024

Photo News by sunmugasunthram Reporter 

தூத்துக்குடி பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்தார். 



இது பற்றிய செய்தியாவது:-

     தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

மீண்டும் பல்வேறு பணிகள் ஆரம்பம்!!!

 கடந்த ஆண்டு 2023டிசம்பா் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது


 அப்பணியில் முழுமையாக அமைச்சர் , அரசு துறை அதிகாாிகள் ஈடுபட்டு, புதிய கால்வாய் சேதமடைந்த சாலைகள் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

    இந்நிலையில் பல்வேறு பகுதியில் புதிய பேவர் பிளாக் சாலைகள் அமைக்க வேண்டும் என்று பகுதி பொதுமக்கள் ஏற்கனவே கோாிக்கை வைத்திருந்தன,


 இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக 6 வது வார்டுக்குட்பட்ட அய்யர்விளையில் நடைபெறும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும், 7வது வார்டு லூர்தம்மாள்புரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கால்வாய் கட்டுமான பணிகளையும், 8 வது வார்டு திரேஸ்புரம் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார் .

ஓப்பந்ததாரர்களிடம் நல்லமுறையில் பணியை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 பின்னா் அப்பகுதி மக்களிடம் குறைகளையும் அமைச்சர் கீதாஜீவன் கேட்டறிந்தாா். 

  ஆய்வின் போது  மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் பவாணிமார்ஷல், ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ராபர்ட், வட்டச்செயலாளர் ரவிசந்திரன், வட்டப்பிரதிநிதிகள் மார்ஷல், பாஸ்கர், ெபருமாள் கோவில் அறங்காவலர் குழ தலைவர் செந்தில்குமார், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பிாின்ஸ் ராஜேந்திரன்,  மற்றும் மணி, அல்பட்,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் வியாபாரிகள் நலச்சங்கம்சார்பில் பயணிகள் நிழல்பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் பொது மக்கள் வாழ்கின்றனர்தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில இளைஞரணி அமைப்பாளருமான தெர்மல் சொ. ராஜா பங்கேற்பு

▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 26-4-2024

News by arunan journalist 

தூத்துக்குடியில் வியாபாரிகள் நலச்சங்கம்சார்பில் பயணிகள் நிழல்பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் பொது மக்கள் வாழ்கின்றனர்தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில இளைஞரணி அமைப்பாளருமான தெர்மல் சொ. ராஜா பங்கேற்றார் .



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடுமையான வெயில் தாக்கம் பொதுமக்களை ரொம்ப வாட்டி வருகிறது 

சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் குடி தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை 

நம் மக்கள் நலனுக்காக அங்காங்கே அரசியல் கட்சிகள் குடி தண்ணீர் பந்தல் திறந்தபடி உள்ளார்கள்.

அதேபோல் தூத்துக்குடி வியாபாரிகளும் தங்கள் பகுதியில் குளிர்ந்த தண்ணீர் மண் பானை வைக்க தொடங்கி உள்ளார்கள்.இது ரொம்ப வரவேற்க தக்கது.



நம் நகர் வியாபாரிகள்!!

 தூத்துக்குடியில் 

 எம் சவேரியார் புரம் ஸ்ரீ கணேஷ் நகர் ராஜீவ்நகர் வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக

எம் சவேரியார் புரம் பேருந்து நிறுத்தத்தில்

தண்ணீர் பந்தலும் பயணிகள் நிழல் பந்தலும் அமைக்கப்பட்டு

இன்று 25 வது நாள்

 அதை முன்னிட்டு 25-4-2024 காலை 9 மணியளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சங்கத் தலைவர் பெ வேல்முருகன்  தலைமையில்  மத்திய சங்க செயல் வீரரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில இளைஞரணி அமைப்பாளருமான தெர்மல் சொ. ராஜா  முன்னிலையில் பங்குத்தந்தை 

தா. செல்வசார்சு அவரால் மேலும் குளிர்பானங்கள் தண்ணீர் மண் பானை கள் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில்

சங்க பொருளாளர் மணி, இணைச்செயலாளர் R.மணிகண்டன் 

செயற்குழு உறுப்பினர்கள்

சுடலைமணி, சேர்மதுரை, ஜெயபால் ராஜ், இருதயராஜ், கணேசன், முருகன், வீரப்பதாஸ், சாமுவேல்

ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு

குளிர்பானங்கள்

தர்பூசணி பழங்கள்

வழங்கினார்கள். 

அதிமுக வெற்றி பெறும் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் பரபரப்பு தூத்துக்குடியில் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் !!!

தமிழகம் முழுவதும் அதிமுக வெற்றி பெறும் முன்னாள் அமைச்சர் சி.தசெல்லப்பாண்டியன்  பரபரப்பு பேச்சு

தூத்துக்குடியில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெறும் தமிழுகம் முழுவதும் 40 தொகுதி யிலும்

எடப்பாடியாரின் ஆதரவுஅலை தான் வீசுகிறது 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் இரணடரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

 முன்னாள் அமைச்சர் மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில்  பரபரப்பு கிளம்பி யுள்ளார்.



 இது பற்றிய செய்தியாவது:-

தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக  வேட்பாளர் சிவசாமி வேலு மணிக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க.. 

தூத்துக்குடி மாவட்டத்தில் நாங்கள்  சென்ற இடங்களில் எல்லாம் அதிமுக ஆட்சி  வர வேண்டும் என்கிறார்கள் 

 அதற்காக இரட்டை இலை சின்னத்திற்க்கு தான் வாக்களிக்களிப்போம் என்றார் கள் 


  

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட  அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில்வெற்றி பெறுவார் என்று முன்னாள் அமைச்சர் கழக வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்ல பாண்டியன் பேசினார்.


இது குறித்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் சி.த. செல்ல பாண்டியன் தெரிவித்தாவது:- ..

முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தமிழர் எடப்பாடி கே பழனிசாமி, ஆலோசனைக்கு ஏற்ப தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவனாக இருந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்   வேட்பாளர் சிவசாமி வேலுமணிக்கு ஆதரவாக ...

இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு திருச்செந்தூர் உடன்குடி கோவில்பட்டி ஒட்டப்பிடாரம் சாத்தான்குளம் தூத்துக்குடி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு முன்னாள் அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். செ.ராஜு எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் கழக கொள்கை பரப்புச் துனைசெயலாளர் மா.பா. பாண்டியராஜன்,, முன்னாள் அமைச்சர் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் .பி. சண்முகநாதன்,  அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, ஆகியோருடன்,

நான் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாகன பிரச்சாரம் கிராமம் மற்றும் நகர்ப்புற தெருக்களில் இடங்களில் நடந்தே சென்றும்,இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தேன்.


மீனவர்கள், எடப்பாடி யாரின் நல்லாட்சி புகழை தான் கூறுகின்றனர்.


வியாபாரத்தில் உள்ளவர்கள் மற்றும் விவசாயிகள், எடப்பாடி யாரின் நல்லாட்சி புகழை தான் கூறுகின்றனர்,


அரசு ஊழியர்கள், எடப்பாடியாரின் நல்லாட்சிபுகழை தான் கூறுகின்றனர்,


தனியார் ஊழியர்கள், எடப்பாடி யாரின் நல்லாட்சி புகழை தான் கூறுகின்றனர்,


தாய்மார்கள், புரட்சித்தலைவி அம்மாவின் சிறிய வழியை பின்பற்றி தாலிக்கு தங்கம் தந்த எடப்பாடியாரின் நல்லாட்சியின் புகழை தான் கூறுகின்றனர்,


 இப்படி அனைத்து தரப்பு மக்களும்,   எப்பொழுது எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் நல்லாட்சி அமையும் என்ற கேள்வியை தான் திரும்பத் திரும்ப  ஆர்வத்துடன் கேட்கும் நிலையைக் கண் முன்னே பார்த்தேன்.


அந்த அளவிற்கு முன்னாள் முதலமைச்சர் கழக பொதுச் செயலாளர் புரட்சி தமிழர் எடப்பாடி கே.பழனிசாமி, தலைமையில் நடைபெற்ற நாலரை ஆண்டு கால அம்மாவின் பொற்கால நல்லாட்சி சாதனை மக்கள் மனதில் இருக்கின்றது.

 அதிமுக முன்னாள் அமைச்சர்,  தூத்துக்குடி மாவட்ட செயலாளர், முன்னாள் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர், மாநில கழக வர்த்தக அணி செயலாளர் சி.த. செல்ல பாண்டியன், தூத்துக்குடியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து மேற்கண்டவாறு செய்தியாளர்களிடம் கூறினார்.



நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங் தூத்துக்குடியின் ஆசிரியர் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பிரபாகர் தூத்துக்குடி சிட்பண்ட்ஸ் அதிபரும் வட்ட கழகச் செயலாளருமான ஆர்.எல். ராஜா, ஓய்வு பெற்ற அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு ஊழியர் பேச்சிமுத்து, ராஜேந்திரன், ஐயப்பன், உட்பட ஏராளமானவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கலங்கும் எதிர் தரப்பு !!!

ஏற்கனவே கோவில் பட்டி,விளாத்திகுளம், ஒட்டப்பிடராம் திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் அதிக சதவீதம் வாக்குகள் பதிவானது அதிமுக தரப்புக்கு சாதகமானது என்கிறார்கள்.. .!!!!

தற்போது தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் பரபரப்பு பேச்சால் எதிர்தரப்பு கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பு...!!!

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

தமிழகம் புதுவையில் இன்று வாக்குப்பதிவு: அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்

தமிழகம் புதுவையில் இன்று 19-4-2024 வாக்குப்பதிவு: அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்...


உங்கள் வாக்கு உங்கள் குரல்! இவர்கள்தான் உங்கள் தொகுதியின் வேட்பாளர்கள்...



01) கன்னியாகுமரி

காங்கிரஸ் - விஜய் வசந்த்

பாஜக - பொன் ராதாகிருஷ்ணன்

அதிமுக - பசிலியான் நசரேத்

நாம் தமிழர் - மரிய ஜெனிபர்


02) திருநெல்வேலி

காங்கிரஸ் - ராபர்ட் ப்ரூஸ்

பாஜக - நயினார் நாகேந்திரன்

அதிமுக - ஜான்சி ராணி

நாம் தமிழர் - பா.சத்யா


03) தென்காசி

திமுக - ராணி ஸ்ரீகுமார்

தமமுக - ஜான் பாண்டியன்

புதிய தமிழகம் - கிருஷ்ணசாமி

நாம் தமிழர் - இசை மதிவாணன்


04) தூத்துக்குடி

திமுக - கனிமொழி

தமாகா - SDR.விஜயசீலன்

அதிமுக - சிவசாமி வேலுமணி

நாம் தமிழர் - ரொவினா ருத்ஜேன்


05) இராமநாதபுரம்

ஐயுஎம்எல் - நவாஸ்கனி

ஓபிஎஸ் அணி - ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக - ஜெயபெருமாள்

நாம் தமிழர் - சந்திரபிரபா ஜெயபால்


06) விருதுநகர்

காங்கிரஸ் - மாணிக்கம் தாக்கூர்

பாஜக - ராதிகா சரத்குமார்

தேமுதிக - விஜய பிரபாகர்

நாம் தமிழர் - கெளசிக்


07) தேனி

திமுக - தங்க தமிழ்செல்வன்

அமமுக - TTV.தினகரன்

அதிமுக - நாராயணசாமி

நாம் தமிழர் - மதன் ஜெயபால்


08) மதுரை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - வெங்கடேசன்

பாஜக - ராம சீனிவாசன்

அதிமுக - சரவணன்

நாம் தமிழர் - சத்யா தேவி


09) சிவகங்கை

காங்கிரஸ் - கார்த்தி சிதம்பரம்

இ.ம.க.மு.க - தேவநாதன் யாதவ்

அதிமுக - சேவியர் தாஸ்

நாம் தமிழர் - எழிலரசி


10) தஞ்சாவூர்

திமுக - முரசொலி

பாஜக - முருகானந்தம்

தேமுதிக - சிவநேசன்

நாம் தமிழர் - ஹூமாயின் கபீர்


11) நாகப்பட்டினம்

இந்திய கம்யூனினிஸ்ட் - செல்வராஜ்

பாஜக - ரமேஷ்

அதிமுக - சுர்ஜித் சங்கர்

நாம் தமிழர் - கார்த்திகா


12) மயிலாடுதுறை

காங்கிரஸ் - வழக்கறிஞர் ஆர்.சுதா

பாமக - ஸ்டாலின்

அதிமுக - பாபு

நாம் தமிழர் - காளியம்மாள்


13) சிதம்பரம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி - தொல் திருமாவளவன்

பாஜக - கார்த்தியாயினி

அதிமுக - சந்திரஹாசன்

நாம் தமிழர் - ஜான்சிராணி


14) கடலூர்

காங்கிரஸ் - விஷ்னு பிரசாத்

பாமக - தங்கர் பச்சான்

தேமுதிக - சிவக்கொழுந்து

நாம் தமிழர் - மணி வாசகன்


15) பெரம்பலூர்

திமுக - அருண் நேரு

ஐ.ஜே.கே - பாரிவேந்தர்

அதிமுக - சந்திரமோகன்

நாம் தமிழர் - தேன்மொழி


16) திருச்சிராப்பள்ளி

மதிமுக - துரை வைகோ

அமமுக - செந்தில்நாதன்

அதிமுக - கருப்பையா

நாம் தமிழர் - ஜல்லிக்கட்டு ராஜேஷ்


17) கரூர்

காங்கிரஸ் - ஜோதிமணி

பாஜக - செந்தில்நாதன்

அதிமுக - தங்கவேல்

நாம் தமிழர் - கருப்பையா



18) திண்டுக்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - சச்சிதானந்தம்

பாமக - திலகபாமா

எஸ்.டி.பி.ஐ - முபாரக்

நாம் தமிழர் - கைலைராஜன் துரைராஜன்


19) பொள்ளாச்சி

திமுக - ஈஸ்வரசாமி

பாஜக - வசந்தராஜன்

அதிமுக - அப்புசாமி கார்த்திகேயன்

நாம் தமிழர் - சுரேஷ்குமார்


20) கோயம்புத்தூர்

திமுக - கணபதி ராஜ்குமார்

பாஜக - K.அண்ணாமலை

அதிமுக - சிங்கை ராமச்சந்திரன்

நாம் தமிழர் - கலாமணி ஜெகநாதன்


21) நீலகிரி

திமுக - ஆ.ராசா

பாஜக - எல்.முருகன்

அதிமுக - லோகேஷ்

நாம் தமிழர் - ஜெயக்குமார்


22) திருப்பூர்

இந்திய கம்யூனிஸ்ட் - சுப்பராயன்

பாஜக - முருகானந்தம்

அதிமுக - அருணாச்சலம்

நாம் தமிழர் - சீதாலட்சுமி


23) ஈரோடு

திமுக - பிரகாஷ்

தமாகா - விஜயகுமார்

அதிமுக - ஆற்றல் அசோக்குமார்

நாம் தமிழர் - கார்மேகன்


24) நாமக்கல்

கொமதேக - மாதேஷ்வரன்

பாஜக - கே.பி.ராமலிங்கம்

அதிமுக - தமிழ்மணி

நாம் தமிழர் - கனிமொழி


25) சேலம்

திமுக - செல்வகணபதி

பாமக - அண்ணாத்துரை

அதிமுக - விக்னேஷ்

நாம் தமிழர் - மனோஜ்குமார்


26) கள்ளக்குறிச்சி

திமுக - மலையரசன்

பாமக - தேவதாஸ் உடையார்

அதிமுக - குமரகுரு

நாம் தமிழர் - இயக்குனர் ஜெகதீசன்


27) விழுப்புரம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி - ரவிக்குமார்

பாமக - முரளி சங்கர்

அதிமுக - பாக்கியராஜ்

நாம் தமிழர் - இயக்குனர் களஞ்சியம்


28) ஆரணி

திமுக - தரணி வேந்தன்

பாமக - கணேஷ்குமார்

அதிமுக - கஜேந்திரன்

நாம் தமிழர் - பாக்கியலட்சுமி


29) திருவண்ணாமலை

திமுக - அண்ணாத்துரை

பாஜக - அஸ்வத்தாமன்

அதிமுக - கலியபெருமாள்

நாம் தமிழர் - ரமேஷ் பாபு


30) தருமபுரி

திமுக - ஆ.மணி

பாமக - செளமியா அன்புமணி

அதிமுக - அசோகன்

நாம் தமிழர் - அபிநயா


31) கிருஷ்ணகிரி

காங்கிரஸ் - கோபிநாத்

பாஜக - நரசிம்மன்

அதிமுக - ஜெயப்பிரகாஷ்

நாம் தமிழர் - வித்யா வீரப்பன்


32) வேலூர்

திமுக - கதிர் ஆனந்த்

புதிய நீதிக் கட்சி - ஏ.சி.சண்முகம்

அதிமுக - பசுபதி

நாம் தமிழர் - மகேஷ் ஆனந்த்


33) அரக்கோணம்

திமுக - ஜெகத்ரட்சகன்

பாமக - கே.பாலு

அதிமுக - விஜயன்

நாம் தமிழர் - அப்சியா நஸ்ரின்


34) காஞ்சிபுரம்

திமுக - செல்வம்

பாமக - ஜோதி வெங்கடேஷ்

அதிமுக - ராஜசேகர்

நாம் தமிழர் - சந்தோஷ்குமார்


35) ஸ்ரீபெரும்புதூர்

திமுக - டி.ஆர்.பாலு

தமாகா - வேணு கோபால்

அதிமுக - பிரேம்குமார்

நாம் தமிழர் - ரவிச்சந்திரன்


36) மத்திய சென்னை

திமுக - தயாநிதி மாறன்

பாஜக - வினோஜ் செல்வம்

தேமுதிக - பார்த்தசாரதி

நாம் தமிழர் - கார்த்திகேயன்


37) தென் சென்னை

திமுக - தமிழச்சி தங்கப்பாண்டியன்

பாஜக - தமிழிசை செளந்தரராஜன்

அதிமுக - ஜெயவர்தன்

நாம் தமிழர் - தமிழ்செல்வி


38) வட சென்னை

திமுக - கலாநிதி வீராச்சாமி

பாஜக - பால் கனகராஜ்

அதிமுக - இராயபுரம் மனோ

நாம் தமிழர் - அமுதினி


39) திருவள்ளூர்

காங்கிரஸ் - சசிகாந்த் செந்தில்

பாஜக - பாலகணபதி

தேமுதிக - நல்லதம்பி

நாம் தமிழர் - ஜெகதீஸ் சந்தர்


40) புதுச்சேரி

காங்கிரஸ் - வி.வைத்திலிங்கம்

பாஜக - நமச்சிவாயம்

அதிமுக - தமிழ்வேந்தன்

நாம் தமிழர் - மேனகா.


01) விளவங்கோடு (சட்டப்பேரவை இடைத்தேர்தல்)


காங்கிரஸ் - தாரகை கத்பட்

பாஜக - வி.எஸ் நந்தினி

அதிமுக - ராணி

நாம் தமிழர் கட்சி - இரா.ஜெமினி