தூத்துக்குடியில் AICCI தேசிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு 2026
கனிமொழி கருணாநிதி எம்.பி. தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி, ஆக.20:
தூத்துக்குடியில் AICCI National Startup Summit 2026 தேசிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாட்டின் தொடக்க விழா இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
விழாவில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித், IRSME மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ். நாயர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தேசிய அளவில் தொழில்முனைவோர், புதிய தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய தொழில் முயற்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சி, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வழிகாட்டுதல்கள் குறித்து மாநாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
AICCI தேசிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய தொழில் முயற்சிகளுக்கு ஊக்கம் கிடைப்பதுடன், இளைஞர்கள் தொழில்முனைவோராக உருவாகும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
AICCI தலைவர் சங்கர் மாரிமுத்து, AICCI செயலாளர் சுரேஷ் குமார், நேசுரல்ஸ் இணை நிறுவனர் சி.கே.குமாரவேல் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்!
மாநாட்டை ஏற்பாடு செய்யும் குழுவில் சங்கர் மாரிமுத்து, டேவிட் ராஜா, ஜூட்ஸ் பரஞ்சோதி, பின்டோ வில்லவராயர், சுரேஷ் குமார், ஜோ பிரகாஷ், விக்னேஸ்வரன், தினேஷ் கந்தசாமி, ஜோசப் காஸ்கரினோ, பிரேம் பால், பொன்குமரன், தனுஷ் கார்த்திக், பிரேம் வெட்டி, சிசில் மச்சாடோ, மகாலிங்கம், விஸாகேஷ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.


















