புதன், 2 செப்டம்பர், 2026

கோவில்களில் செல்போன் அனைவருக்கும் பாரபட்சம் இன்றி தடை விதிப்பு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு இந்து சேனா மாநிலத் தலைவர் அருள்வேலன் ஜி கோரிக்கை!!!. அர்ச்சகர்கள், அலுவலகப் பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் விஐபிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கக் கூடாது.

இந்து கோவில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு அனைவருக்கும் ஒரே மாதிரியான தடை வேண்டும்

தமிழக அரசுக்கு இந்து சேனா மாநிலத் தலைவர் அருள்வேலன் ஜி கோரிக்கை

தூத்துக்குடி:

தமிழக கோயில்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அமைதியான சூழலில் வழிபடுவதற்காக வருவதாகவும், கோயில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் நடவடிக்கை சரியானதே என்றும் இந்து சேனா தேசிய பேரியக்கத்தின் மாநிலத் தலைவர் அருள்வேலன் ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:

கோயில்களில் பக்தர்களுக்கு மட்டும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து, அர்ச்சகர்கள், அலுவலகப் பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் விஐபிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கக் கூடாது. 


கோயில் வளாகத்திற்குள் அனைவருக்கும் எந்தவித வேறுபாடுமின்றி ஒரே மாதிரியான முழுமையான செல்போன் பயன்பாட்டுத் தடை அமல்படுத்தப்பட வேண்டும்.

thoothukudileaks


 இல்லையெனில் பக்தர்களிடையே வேறுபாடு ஏற்படும் நிலை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், கோயில்களுக்கு வரும் பக்தர்களிடம் தரிசனக் கட்டணம், உடைமைகள் மற்றும் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கான கட்டணம், காலணி வைப்பதற்கான கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவது பக்தர்களுக்கு கூடுதல் சுமையையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

எனவே, கோயில்களில் பக்தர்கள் கட்டணமின்றி தரிசனம் செய்யவும், அவர்களின் பொருட்கள், காலணிகள் மற்றும் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கும் கட்டணமின்றி வசதி செய்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இந்துக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஒட்டுமொத்த இந்துக்களின் சார்பில் தமிழக அரசுக்கு இந்து சேனா தேசிய பேரியக்கத்தின் மாநிலத் தலைவர் அருள்வேலன் ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

தமிழக அரசின் நிலைப்பாடு சிபிஐ(எம்) எதிர்ப்பு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்த்தில் துப்பாக்கிச்சூடு கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை தேவை!

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை தேவை!

தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

தூத்துக்குடி: செப் 1

2018-ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்வதுடன், குற்ற வழக்குகளைப் பதிவு செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

thoothukudileaks


இதுகுறித்து 01.09.2026 அன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட்டை எதிர்த்த போராட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் பொறுப்பற்ற தன்மை, அத்துமீறல் காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், இதில் 13 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளித்ததாகவும், அதில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 17 காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வட்டாட்சியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்வதுடன், குற்ற வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்த ஆணையம் பரிந்துரைத்ததாகவும் சிபிஐ(எம்) மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.


தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு சிபிஐ(எம்) எதிர்ப்பு

31.08.2026 அன்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்த கருத்துகள், கொலைக்கு காரணமான அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டதாக இருப்பதாக சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், மக்கள் சுட்டிக்காட்டிய சுற்றுச்சூழல் சீர்கேடுகள் தொடர்பாக ஸ்டெர்லைட் நிர்வாகமோ அல்லது அரசு அமைப்புகளோ உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தற்போதைய தமிழக அரசு, முந்தைய திமுக அரசு மேற்கொண்ட நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.

13 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமானதாக ஆணையத்தால் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய துறைவாரியான நடவடிக்கை மற்றும் குற்ற வழக்குகளைப் பதிவு செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆணையம் பரிந்துரைத்த இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.

— பெ.சண்முகம், மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ(எம்))



செய்தி புகைப்படங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

காவல்துறையில் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை! புகார் அளிக்க தனி கைபேசி/WhatsApp எண்கள் முழு விவரம்

Tamil Nadu updates, photo news by Arunan Reporter 

காவல்துறையில் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை!


தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்கள், மாநகர காவல் ஆணையரகங்களிலும் ‘Internal Vigilance Cells’ – புகார் அளிக்க தனி கைபேசி/WhatsApp எண்கள் அறிவிப்பு...


தூத்துக்குடி, செப்.1:

தமிழ்நாடு காவல்துறையில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் ‘Internal Vigilance Cells’ (உள்நாட்டு விழிப்புணர்வு பிரிவுகள்) அமைக்கப்பட்டுள்ளன.


தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத் தலைவர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு எதிரான ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீன செயல்கள் தொடர்பான புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதே இந்தப் பிரிவுகளின் முக்கிய நோக்கமாகும்.

thoothukudileaks


புகார் அளிக்க தனி கைபேசி, WhatsApp எண்கள்


பொதுமக்கள் எளிதாக புகார் தெரிவிக்கும் வகையில் மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக Internal Vigilance Cell கைபேசி/WhatsApp எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுக்கு நேர்ந்த காவல்துறை சார்ந்த ஊழல் அல்லது முறைகேடுகள் குறித்து இந்த எண்களில் புகார் தெரிவிக்கலாம்.


தூத்துக்குடி மாவட்டத்திற்கான Internal Vigilance Cell தொடர்பு எண்:

📱 9489929270


புகார்தாரர், சாட்சிகளின் அடையாளம் ரகசியம்


புகார் அளிக்கும் பொதுமக்கள் மற்றும் புகாருக்கு ஆதாரமாக இருக்கும் சாட்சிகளின் அடையாளங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


மேலும், பெறப்படும் ஒவ்வொரு புகாரும் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, தேவையான விசாரணை மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


காவல்துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுடன், பொதுமக்கள் தங்கள் குறைகளை அச்சமின்றி தெரிவிக்க இந்த நடவடிக்கை வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ்நாடு காவல்துறை வெளியிட்ட பத்திரிகை வெளியீடு எண்: 59/2026 | தேதி: 19.08.2026


“காவல்துறையில் ஊழலுக்கு ‘செக்’! தமிழகம் முழுவதும் Internal Vigilance Cells – புகார் அளிக்க தனி WhatsApp எண்கள்!”


மாநகரம்/மாவட்டம் வாரியான Internal Vigilance Cell


கைபேசி /வாட்ஸ்அப் எண்கள்


மாநகரம்/மாவட்டம்


சென்னை மாநகரம்


கைபேசி/வாட்ஸ்அப் எண்கள்


7871723000


2


தாம்பரம் மாநகரம்


6374514428


3


ஆவடி மாநகரம்


9840018110

4

சேலம் மாநகரம்


9626207262


5


திருப்பூர் மாநகரம்


8438761616


6


திருச்சிமாநகரம்


7871202100


7


மதுரை மாநகரம்


8300021100


8


கோயம்புத்தூர் மாநகரம்


8148919100


9


திருநெல்வேலி மாநகரம்


9052540100


10


காஞ்சிபுரம்


9040031700


11


செங்கல்பட்டு


9500779100


12


திருவள்ளூர்


9498181359

13

விழுப்புரம்


9944889161

14

கள்ளக்குறிச்சி


8870353790


15


கடலூர்


9677100551


16


வேலூர்


8807258532


17


இராணிப்பேட்டை


7305877732


18


திருப்பத்தூர்


9600903373


19


திருவண்ணாமலை


7896878100


20


திருச்சி


7448878100


21


புதுக்கோட்டை


9500550543


22


கரூர்


8807709299


23


பெரம்பலூர்


8903631122


24


அரியலூர்


7904832100


25


தஞ்சாவூர்


9840438678


20


திருவாரூர்


9944336551


27


நாகப்பட்டினம்


9489901105


28


மயிலாடுதுறை


9087755100


29


கோயம்புத்தூர்


7540083100


30


ஈரோடு


9655220100


31


திருப்பூர்


9042227100


32


நீலகிரி


9789800100


33


சேலம்


9629390203


34


நாமக்கல்


9566637105


35


தருமபுரி


760-4904492


36


கிருஷ்ணகிரி


9025552100


37


மதுரை


9003719004


38


விருதுநகர்


9600975100


39


திண்டுக்கல்


7904300491


40


தேனி


9626207262


41


இராமநாதபுரம்


7904114100


42


சிவகங்கை


7598788108


43


திருநெல்வேலி


9498101740


44


தென்காசி


9385678039


45


தூத்துக்குடி


9489929270


46


கன்னியாகுமரி


7358776100

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் 3 பிளாஸ்டிக் பாட்டில் சேகரிப்பான்கள்! தூய்மையான தூத்துக்குடியை உருவாக்க ரோட்டரி சங்கத்தின் புதிய முயற்சி

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் 3 பிளாஸ்டிக் பாட்டில் சேகரிப்பான்கள்!

தூய்மையான தூத்துக்குடியை உருவாக்க ரோட்டரி சங்கத்தின் புதிய முயற்சி

தூத்துக்குடி, செப். 1:

தூத்துக்குடி நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தவும், பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்தவும், தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் 3 பிரத்யேக பிளாஸ்டிக் பாட்டில் சேகரிப்பான்கள் BoX நிறுவப்பட்டன.

thoothukudileaks


டிரெயில்பிளேசர்ஸ் ரோட்டரி கிளப் ஆஃப் தூத்துக்குடி சார்பில் வழங்கப்பட்ட இந்த பிளாஸ்டிக் பாட்டில் சேகரிப்பான்கள், தூத்துக்குடி மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டன. இதனை மாநகராட்சி ஆணையர் எஸ். பிரியங்கா பெற்றுக்கொண்டார்.


பொதுமக்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் வீசுவதைத் தடுப்பதுடன், அவற்றை முறையாகச் சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்பும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.



அண்ணா பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், இந்த சேகரிப்பான்கள் மூலம் பிளாஸ்டிக் பாட்டில்களை முறையாக சேகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் தூய்மையான மற்றும் பசுமையான தூத்துக்குடியை உருவாக்கும் மாநகராட்சியின் முயற்சிக்கு இந்த திட்டம் உறுதுணையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியை டிரெயில்பிளேசர்ஸ் ரோட்டரி கிளப் ஆஃப் தூத்துக்குடி தலைவர் எம். திவ்யா பிரைட்லின், செயலாளர் டாக்டர் ரஜினி டாட்டியா, பொருளாளர் ராஜீவி மோகன்ராஜ் ஆகியோர் முன்னின்று ஒருங்கிணைத்தனர்.


நிகழ்ச்சியில் மாநகராட்சி நகர்நல அலுவலர் கணேஷ், கிழக்கு மண்டல சுகாதார அலுவலர் ஹரிகணேஷ், ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலைய பொறுப்பாளர் முத்துக்குட்டி மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திங்கள், 31 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடி டேவிஸ்புரம் ஜங்ஷனில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடி டேவிஸ்புரம் ஜங்ஷனில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்

சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த 3 பேர் கைது

தூத்துக்குடி, ஆக.31:
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டேவிஸ்புரம் ஜங்ஷன் பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

thoothukudileaks


தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியைச் சேர்ந்த முத்துமாணிக்கம் மகன் கலைமணி (24), கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் இசக்கிராஜா (22) மற்றும் ஓம்சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் முத்துராஜ் என்ற கார்த்திக் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


அவர்களிடமிருந்து 3 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக ஆளுநராக கிரண் குமார் ரெட்டி நியமனமா? சமூக வலைதளங்களில் பரவும் தகவல் – உண்மை என்ன?

 

தமிழக ஆளுநராக கிரண் குமார் ரெட்டி நியமனமா?
சமூக வலைதளங்களில் பரவும் தகவல் – உண்மை என்ன?

சென்னை: ஆக 31

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் நல்லாரி கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால், இந்த தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

thoothukudileaks




கிரண் குமார் ரெட்டியை தமிழக ஆளுநராக நியமிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கடந்த சில நாட்களாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, தமிழகத்திற்கு முழுநேர ஆளுநரை நியமிப்பது தொடர்பான ஆலோசனையில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து கிரண் குமார் ரெட்டியை தமிழக ஆளுநராக நியமித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே, தமிழக லோக் பவன் வெளியிட்டுள்ள சமீபத்திய அதிகாரப்பூர்வ பதிவுகளில் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரே தமிழக ஆளுநராக குறிப்பிடப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 14 மற்றும் ஆகஸ்ட் 16 ஆகிய தேதிகளில் வெளியான லோக் பவன் பதிவுகளும் இதனை உறுதி செய்கின்றன.

எனவே, “கிரண் குமார் ரெட்டி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுவிட்டார்” என்ற சமூக வலைதள தகவல் – தற்போது உறுதி செய்யப்படாதது.

கிரண் குமார் ரெட்டி பெயர் தமிழக ஆளுநர் பதவிக்கு பரிசீலனையில் இருப்பதாக வெளியாகியுள்ள செய்தியை, “நியமனம் செய்யப்பட்டுவிட்டது” என சமூக வலைதளங்களில் மாற்றிப் பரப்பி வருவதாகவே தற்போதைய தகவல்கள் காட்டுகின்றன.

உண்மை நிலவரம்: நியமனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

தூத்துக்குடி திமுகவில் 3 மாவட்டங்கள் உதயமாகிறது! மா.செ நாற்காலியைக் கைப்பற்ற கடும் போட்டி! களத்தில் யார் யார் நிற்கும் விவரம் மற்றும் அக்கா -தம்பி போட்டியில் வெல்வது யார் முழு விவரம் படிக்க

 Tamil Nadu updates photo news by Arunan Reporter தூத்துக்குடி லீக்ஸ்’ பிரத்யேக நாளிதழ் செய்தி: 

தூத்துக்குடி திமுகவில் 3 மாவட்டங்கள் உதயமாகிறது! மா.செ நாற்காலியைக் கைப்பற்ற கடும் போட்டி!

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக கட்சி அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் தயாராகி வருகின்றன. இதுவரை வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டக் கழகங்களாகச் செயல்பட்டு வந்த தூத்துக்குடி, தற்போது கட்சி நிர்வாக வசதிக்காகவும், வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையிலும் மத்திய, வடக்கு, தெற்கு என 3 மாவட்டக் கழகங்களாகப் பிரிக்கப்பட உள்ளது (தலா 2 சட்டமன்றத் தொகுதிகள் வீதம்).

இந்த அதிரடி மாற்றத்தால், மாவட்டத்தில் உள்ள 3 மா.செ பதவிகளையும் கைப்பற்ற திமுக மூத்த நிர்வாகிகள் முதல் இளம் தலைமுறையினர் வரை கடுமையான போட்டியில் களம் இறங்கியுள்ளனர்.


thoothukudileaks


தெற்கு மாவட்டம்: அனிதா ராதாகிருஷ்ணன் ஓய்வு? புதுமுகங்கள் போட்டி! திமுகவில் 70 வயதைக் கடந்தவர்களுக்கு மா.செ பொறுப்பு வழங்கப்படாது என்ற தலைமை அறிவித்துள்ள விதிமுறையின் காரணமாக, 74 வயதாகும் தற்போதைய தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் அப்பொறுப்பில் இருந்து விலகக்கூடும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக காலியாகும் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு:

  • ஜோயல்
  • செங்குழி  ரமேஷ்
  • உமரி சங்கர்
  • ஜனகர்
  • வி.பி. ராமநாதன்
  • சொர்ணகுமார்

ஆகியோர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடக்கு மாவட்டம்: 3 பேர் போட்டி! விளாத்திகுளம் மற்றும் கோவில்பட்டி தொகுதிகளை உள்ளடக்கிய புதிய வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பதவிக்கு:

  • மார்க்கண்டேயன்
  • கருணாநிதி
  • ஆகாஷ் பாண்டியன்
  • வசந்தம் ஜெயக்குமார்

ஆகிய முன்னணி நிர்வாகிகள் விருப்பம் காட்டி, தலைமையின் பார்வையை ஈர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய மாவட்டம்: அக்கா - தம்பி இடையே உச்சகட்ட போட்டி! அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள தூத்துக்குடி மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் பதவிக்குத் தான் மாவட்டத்தில் உச்சகட்ட அரசியல் போரே நடந்து கொண்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனும், அவரது தம்பியும் தற்போதைய மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமியும் இந்த நாற்காலியைக் கைப்பற்றப் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.

  • பெரியசாமியின் பாரம்பரியம்: தூத்துக்குடியில் நீண்ட காலம் மா.செ-வாக ஆதிக்கம் செலுத்திய மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ என். பெரியசாமியின் மறைவுக்குப் பிறகு (2017), அவரது மகள் கீதா ஜீவன் அந்தப் பொறுப்பிற்கு வந்தார்.
  • ஜெகன் பெரியசாமியின் உத்தி: தற்போதைய மேயராக இருக்கும் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடியின் 60 வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பகுதி/வட்டச் செயலாளர்களைத் தன் பக்கம் இழுக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.அது போக ஓட்டப்பிடாரம் பகுதி நிர்வாகிகளையும் வளைத்து வைத்துள்ளாராம்.
  • கீதா ஜீவனின் பலம்: முன்னாள் அமைச்சரான கீதா ஜீவன், தொகுதியிலுள்ள அடிமட்டக் தொண்டர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகளைப் பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு மிக நெருக்கமான தொடர்பில் இருப்பது அவருக்குப் பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது.

தங்கள் தந்தை வகித்த செல்வாக்குமிக்க மாவட்டச் செயலாளர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள அக்கா-தம்பி இருவருமே நிர்வாகிகளைக் கவனிக்கும் பணிகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளதால், தூத்துக்குடி உடன்பிறப்புகள் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. தலைமை யாரைக் கைநீட்டப் போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!