வெள்ளி, 18 செப்டம்பர், 2026

மதுரையில் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாபெரும் அன்னதான விழா

Tamil Nadu updates 18-9-2026

மதுரையில் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாபெரும் அன்னதான விழா

மதுரை: செப் 18

மதுரையில் நடைபெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழாவில், அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.


மகா கும்பாபிஷேக விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், விழாவிற்கு வருகை தந்த பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சங்கத்தின் சார்பில் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று அன்னதானம் பெற்று சென்றனர்.

thoothukudileaks


அன்னதான விழாவை சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட வாசி யோக சித்தர் ராம் நாராயணன் குரு, ஸ்ரீ வித்யாம்பா சரஸ்வதி மற்றும் சங்கத்தின் மாநில கௌரவத் தலைவர் பிரபு ஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


அன்னதானம் பெற்ற பக்தர்கள், சங்கத்தினருக்கு தங்களது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். 


பக்தர்களுக்கு சிறப்பான முறையில் அன்னம் வழங்கியதுடன், இதுபோன்ற சேவைப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


சங்கத்தின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் அருள்வேலன் ஜி  ஆலோசனைப்படி நடைபெற்றது.


 இந்த மாபெரும் அன்னதான விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட மாநிலப் பொறுப்பாளர்கள் சித்த மருத்துவர் முருகேசன், தொழிலதிபர் சிவா, முருகன், கணேஷ், சித்த மருத்துவர் பாண்டிதுரை, ஜூசி பாண்டியன், கோவை செந்தில்குமார், சேலம் ரமேஷ் உள்ளிட்டோர் மற்றும் சங்க உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

thoothukudileaks


விழா ஏற்பாடுகளில் பங்கேற்ற சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பக்தர்கள் பாராட்டு தெரிவித்தனர்.



கொலை வழக்காக மாற்றக் கோரிக்கை வாலிபர் அடித்துக் கொலை குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

கொலை வழக்காக மாற்றக் கோரிக்கை வாலிபர் அடித்துக் கொலை  குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வாலிபர் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும், வழக்கைக் கொலை வழக்காக மாற்றக் கோரியும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் தாய் மனு அளித்துள்ளார்.


thoothukudileaks


சம்பவ பின்னணி: புதுக்கோட்டை, மேலச் செய்த்தலை பகுதியைச் சேர்ந்த திருமதி சின்னம்மாள் அவர்களின் மகன் கணேசன் (51/26), கடந்த 13.09.2026 அன்று இரவு இரும்புக் குழாய் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களால் மர்ம நபர்களால் தாக்கப் பட்டார். இதில் தலை, முகம், வயிறு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த அவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கொலை முயற்சி (BNS பிரிவு 109(1)) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

உயிரிழப்பு & உறவினர்கள் கொந்தளிப்பு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கணேசன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகியும், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர், கணேசனின் உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

தாயாரின் கோரிக்கைகள்: பாதிக்கப்பட்ட தாய் சின்னம்மாள், தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அவர்களிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

  • கொலை வழக்காக மாற்றம்: கொலை முயற்சி வழக்கை உடனடியாகக் 'கொலை வழக்காக' (Murder Case) மாற்றம் செய்ய வேண்டும்.
  • தனிப்படை அமைப்பு: தலைமறைவாக உள்ள உண்மைக் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யத் துணைக்காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புத் தனிப்படை அமைக்க வேண்டும்.
  • ஆதாரங்கள் பாதுகாப்பு: சம்பவ இடத்திலுள்ள CCTV காட்சிகள், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களை உடனடியாகச் சேகரிக்க வேண்டும்.
  • காவல்துறைப் பாதுகாப்பு: சாட்சிகளுக்கும், எங்களது குடும்பத்தினருக்கும் எதிரிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் உரிய காவல்துறைப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
  • அரசு நிவாரணம்: மகனை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு அரசின் சார்பில் உடனடி நிவாரணமும், பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டுத் திட்டத்தின்கீழ் உரிய இழப்பீடும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல்துறையின் அலட்சியம் குறித்து உரிய ஆய்வு செய்து, வழக்கில் விரைந்து நீதி கிடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வியாழன், 17 செப்டம்பர், 2026

தூத்துக்குடியில் இயற்கை, பாரம்பரியம், சேவை பயணம் கார் பேரணி தொடக்கம் ஆணையர் பிரியங்கா கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்

Tamil Nadu updates 18-9-2026

 photo news by Arunan journalist 

தூத்துக்குடியில் இயற்கை, பாரம்பரியம், சேவை பயணம் கார் பேரணி தொடக்கம் ஆணையர் பிரியங்கா கொடியசைத்து வழியனுப்பி வைத்தார் 

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி, செப்.18:


தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வளாகத்தில் “இயற்கை – பாரம்பரியம் – சேவை பயணம்” என்ற கருப்பொருளில் கார் பேரணி தொடக்க விழா இன்று (செப்.18) காலை நடைபெற்றது.

thoothukudileaks



ஆணையர் பிரியங்கா  துவக்கி வைத்து பேசிய .. வீடியோ 

“பயணத்தை தொடங்குவோம்” என்ற நோக்கில் நடைபெற்ற இப்பேரணி, இயற்கையை பாதுகாத்தல், பாரம்பரியத்தை அறிந்து அனுபவித்தல் மற்றும் சமூக சேவையில் இணைந்து செயல்படுதல் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks



வ.உ.சிதம்பரம் கல்லூரி வளாகத்தில் காலை 8 மணிக்கு நடைபெற்ற கொடியசைப்பு நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எஸ். பிரியங்கா ஐ.ஏ.எஸ். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கார் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



“சிறிய பயணங்கள் பெரிய மாற்றங்களை உருவாக்கும்” என்ற கருத்தை முன்னிறுத்தி நடைபெற்ற இந்த பயணத்தில் பங்கேற்பாளர்கள் இயற்கை, பாரம்பரியம் மற்றும் சமூக சேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிணைந்தனர்.



நிகழ்ச்சியில் ரோட்டரி அமைப்பின் தலைவர் திவ்யா பிரைட்லின், செயலாளர் டாக்டர் ராஜ்னி தாட்டியா, பொருளாளர் ராஜீவி மோகன்ராஜ், உதவி ஆளுநர் ஜே. பின்டோ வில்லவராயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிளை மேலாளர் மீது தொழிலாளர்கள் குற்றச்சாட்டு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பணி ஒதுக்கீடு விவகாரத்தில் நடத்துனர் தற்கொலை முயற்சி

கிளை மேலாளர் மீது தொழிலாளர்கள் குற்றச்சாட்டு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தூத்துக்குடி, செப்.18:

தூத்துக்குடி நகர் பணிமனையில் பணி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்டதாக கூறப்படும் பிரச்சினையில், நடத்துனர் ஒருவர் இன்று காலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

thoothukudileaks


தூத்துக்குடி நகர் பணிமனையின் கிளை மேலாளராகவும், உதவி பொறியாளர் பொறுப்பிலும் உள்ள சுரேஷ் என்பவர் மீது தொழிலாளர்கள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

புதிய பணி ஒதுக்கீட்டில், நடத்துனர் ஆறுமுகம் தனது சீனியாரிட்டி அடிப்படையில் ஏரல் வழித்தடத்தில் பேருந்து பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பேருந்தில் அவருக்குக் கிடைத்த பணியை மற்றொரு தொழிலாளிக்கு வழங்குவதற்காக கிளை மேலாளர் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


இதுதொடர்பாக நடத்துனர் ஆறுமுகத்திடம், அவர் பணிக்கு தாமதமாக வருவதாகவும், இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பணிகளுக்குச் செல்ல தாமதம் ஏற்படுவதாகவும் புகார் கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் புகாரைத் தொடர்ந்து அவரிடம் கடுமையான வார்த்தைகளில் பேசப்பட்டதாகவும், இனிமேல் குறிப்பிட்ட பேருந்தில் பணி வழங்கப்படாது என்றும், கிளை மேலாளர் ஒதுக்கும் பேருந்தில்தான் பணியாற்ற வேண்டும் எனக் கூறப்பட்டதாகவும் தொழிலாளர் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இந்த சம்பவத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான நடத்துனர் ஆறுமுகம் இன்று காலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிகாரிகளிடம் புகார் அளித்ததாக தொழிலாளர்கள் தகவல்

கிளை மேலாளர் மீது ஏற்கனவே மாவட்ட ஆட்சியர், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்களது புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


கிளை மேலாளர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக துறை ரீதியாக உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும், தொழிலாளர்களிடம் அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்றிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



ஒரு தொழிலாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் எனவும், காவல்துறையினருக்கும் உரிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் தரப்பில் கூறப்படுகிறது.


இந்த சம்பவம் தொடர்பாக கிளை மேலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகளின் விளக்கம் கிடைத்தால், அதையும் வெளியிடுவதற்கு உரிய இடம் வழங்கப்படும்.

தூத்துக்குடியில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயீஸ் பெடரேஷன் ஆர்ப்பாட்டம்

 Tamil Nadu updates 17-2026

தூத்துக்குடி செப் 17

          தூத்துக்குடியில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயீஸ் பெடரேஷன் சார்பில்  புதன்கிழமை மாலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நுழைவு வாயில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


தோழர் சரவணன் திட்ட தலைவர் தலைமையில் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்கள் தோழர் அலெக்ஸாண்டர் திட்டச் செயலாளர் தோழர் சுடலை பொதுச் செயலாளர் தோழர் சிவஞானம் திட்ட செயல் தலைவர் தோழர் ஜெயச்சந்திரன் திட்ட பொருளாளர் தோழர் வில்சன் நகர் கோட்டைச் செயலாளர் ஆகியோர் விளக்க உரையாற்றினார்கள்.


17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 65 ஆயிரம் அடிப்படை காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிடுக ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்து விடுங்க பகுதி நேர சுகாதார பணியிடங்களை நிரப்பி விடுகேன்ட்மேன் பணியாளர்களை கலா உதவியாளராக பதவி மாற்றம் செய்து விடுக விடுபட்ட ஸ்கேன் மாந்தர்களுக்கு பணி நியமனம் வழங்கிடுக உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அலெக்சாண்டர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்

கொலைவெறித் தாக்குதலில் உயிருக்குப் போராடும் கணேசன் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரிக்கை! சட்ட உரிமைகள் கழகம்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

Tamil Nadu updates 17-9-2026

கொலைவெறித் தாக்குதலில் உயிருக்குப் போராடும் கணேசன்  குற்றஞ்சாட்டப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரிக்கை! சட்ட உரிமைகள் கழகம்

தூத்துக்குடி செப் 17

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 13.09.2026 அன்று இரவு கணேசன் என்ற இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாக, அவரது தாயார் திருமதி சின்னம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் குற்ற எண் 460/2026, BNS பிரிவு 109(1)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சையில்!!!

முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கணேசன் இரும்புக் குழாய் உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு, தலை, முகம், கை, வயிறு மற்றும் கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்துள்ளார். தற்போது அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

thoothukudileaks


அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், நாடித்துடிப்பு குறைந்து உயிருக்குப் போராடி வருவதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


தலைமறைவு !!!

 இவ்வளவு தீவிரமான தாக்குதல் தொடர்பாகக் கொலை முயற்சி பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலும், முதல் தகவல் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு வழங்க வேண்டும்!!!

எனவே, முதல் தகவல் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைத் தேடி உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அவர்கள் தலைமறைவாக இருந்தால், தனிப்படை அமைத்து விரைவான தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.  பாதிக்கப்பட்ட கணேசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான காவல்துறைப் பாதுகாப்பை வழங்க வேண்டும்.

விசாரணை !!!

கணேசனுக்கு உயர்தர உயிர்காக்கும் மருத்துவச் சிகிச்சையை அரசின் முழுச் செலவில் வழங்குவதுடன், அவரது குடும்பத்திற்கு உடனடி நிவாரண உதவியும் வழங்க வேண்டும். மருத்துவ அறிக்கைகள் மற்றும் விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் தேவையான கூடுதல் சட்டப்பிரிவுகளை இணைத்து, வெளிப்புறத் தலையீடுகளுக்கு இடமளிக்காமல் நேர்மையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும்.


அரசியல் செல்வாக்கு!!!!

 விசாரணையின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு முறையாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு அரசியல் அல்லது பிற செல்வாக்குகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க அனுமதிக்கக் கூடாது.  


எனவே, தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  இவ்வழக்கில் உடனடியாகத் தலையிட்டு, குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்கான விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதிப்படுத்துமாறு சட்ட உரிமைகள் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.


இவண்:-

Dr. S.R. செல்வம் கிறிஸ்டோபர்

நிறுவனத் தலைவர்

சட்ட உரிமைகள் கழகம்


இச் செய்தி புகைப்படங்களில் செயற்கை தொழில்நுட்ப பயன் படுத்தப்பட்டுள்ளது 


புதன், 16 செப்டம்பர், 2026

தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

 Tamil Nadu update

 photo news by Arunan journalist 

தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தூத்துக்குடி, செப்.17:

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள் விழா இன்று (செப்.17) தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

thoothukudileaks

thoothukudileaks



தூத்துக்குடி மாநகர் மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு எஸ்.டி.ஆர். சாமுவேல் தலைமை வகித்தார். இதையொட்டி பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கியும் கட்சியினர் பெரியார் பிறந்தநாளை கொண்டாடினர்.

thoothukudileaks


தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள தந்தை பெரியாரின் ஆளுயர திருவுருவச் சிலைக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கப்பட்டது.

வீடியோ பார்க்க 

நிகழ்ச்சியில் எஸ்.டி.ஆர். சாமுவேல், ஆனந்த்குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


இதையடுத்து, தூத்துக்குடி மாநகராட்சி தமிழக வெற்றி கழக கவுன்சிலர் வழக்கறிஞர் மந்திர மூர்த்தி, எஸ்.டி.ஆர். சாமுவேல், ஆனந்த்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


பெரியாரின் பகுத்தறிவு, சமூகநீதி, சுயமரியாதை உள்ளிட்ட கொள்கைகளை நினைவுகூரும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.