ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடி குருஸ் பர்ணாந்து சிலை அருகே நிரந்தர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையம்!

Tamil Nadu updates, 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி குருஸ் பர்ணாந்து சிலை அருகே நிரந்தர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையம்!

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் திறந்து வைத்தார் — போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ஹெல்மெட் சோதனையை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை

தூத்துக்குடி, ஆக.10:

தூத்துக்குடி மாநகரின் முக்கிய போக்குவரத்து பகுதிகளில் ஒன்றான குருஸ் பர்ணாந்து சிலை அருகே உள்ள சிக்னல் பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நிரந்தர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

thoothukudileaks


thoothukudileaks


குருஸ் பர்ணாந்து சிலை சிக்னல் பகுதியில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால், குறிப்பிட்ட நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க நிரந்தர போக்குவரத்து காவல் மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் இன்று காலை 11 மணியளவில் திறந்து வைத்தார்.

இந்த மையத்தின் மூலம் அப்பகுதியில் செல்லும் வாகன போக்குவரத்தை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.


video 

மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்கிறார்களா என்பது குறித்த சோதனைகளும் நடத்தப்படும். போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து, விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் முடிவில் தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் சுனை முருகன் நன்றி கூறினார்.

குருஸ் பர்ணாந்து சிலை அருகே நிரந்தர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சீரான போக்குவரத்து ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மதன் ராஜா தலைமையில் நடைபெற்றது

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அமைச்சர் மதன் ராஜா தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி: ஆகஸ்ட் 9
தூத்துக்குடி புறநகர் மாவட்ட கழகச் செயலாளரும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான மாண்புமிகு மதன் ராஜா, BE., MLA தலைமையில், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி மத்திய ஒன்றியம் மற்றும் கருங்குளம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (9-8-2026)மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

thoothukudileaks
அமைச்சர் மதன் ராஜா -வுக்கு அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு 


முதற்கட்டமாக நடைபெற்ற தூத்துக்குடி மத்திய ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர்  ஜெபஸ்துராஜ், இணைச் செயலாளர் திருவடி  தினேஷ், செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்த், சதீஷ்குமார், செல்வராஜ், முத்து ஜெயகலா, பொருளாளர் சதீஷ்குமார், துணைச் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


thoothukudileaks

thoothukudileaks

தொடர்ந்து கருங்குளம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்   முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


thoothukudileaks
ஆலோசனை கூட்டத்தில்.. அமைச்சர் மதன் ராஜா பேசுகையில் 

மகளிரணியினருடன் கேக் வெட்டி கொண்டாட்டம்

முன்னதாக, புறநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் வனிதா  ஏற்பாடு செய்திருந்த கேக்கை அமைச்சர் மதன் ராஜா தனது கையால் வெட்டி, மகளிரணி நிர்வாகிகளுக்கு கேக் துண்டுகளை ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


இந்நிகழ்வில் புறநகர் மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் வனிதா கந்தசாமி, ராமகிருஷ்ணன், காளிஸ்வரி, சுகன்யா, பிரியதர்ஷினி, சண்முகப்ரியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


வீடியோ பார்க்க 

கூட்டத்தில் ஒன்றிய மற்றும் கிளை அளவிலான கட்சி பணிகள், நிர்வாக செயல்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


பக்தி பரவசத்தில் சேலம் கோட்டை மாரியம்மன் திருத்தேர் திருவிழா! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சிறப்பான அன்னதானம்

Tamil Nadu updates

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா!

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாபெரும் அன்னதானம் — ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சேலம்: ஆகஸ்ட் 9 

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா பக்தர்களின் பக்திப் பரவசத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாபெரும் அன்னதான விழா சிறப்பாக நடைபெற்றது.

thoothukudileaks


பழமை வாய்ந்ததும், பக்தர்களால் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் திருத்தலமாக போற்றப்படுவதுமான சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற திருத்தேர் திருவிழாவில், சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனர்.


திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் அன்னதான விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் கலந்து கொண்டு அன்னம் பெற்று சென்றனர்.


இந்நிகழ்ச்சியில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தின் நிறுவனர், வாழும் கலியுக சித்தர் தவத்திரு சுவாமி இராமானந்தா, சொர்க்கபுரம் ஆதீனம் 22-வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ தண்டாயுதபாணி தேசிகர் மற்றும் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு அன்னதான விழாவை தொடங்கி வைத்தனர்.

thoothukudileaks


சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி  ஆலோசனையின்படி நடைபெற்ற இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் சர்மிளா சரவணன், ரவிச்சந்திரன் ஜி, வழக்கறிஞர் சுதன், ஸ்ரீதர், பிரபு, கீர்த்தி ஜெயகாந்த், ரமேஷ், சண்முகவேல், மாவட்ட செயலாளர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


மேலும் கவிதா, நேதாஜி, சுந்தரம், பேபி ரமணி, கவிதா, அன்னபூரணா, பத்மா, விக்னேஷ், ரவி, அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழா ஏற்பாடுகளில் சிறப்பாக பணியாற்றினர்.


பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கி நடைபெற்ற இம்மாபெரும் அன்னதான விழா, ஆன்மிகம் மற்றும் சேவை உணர்வை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.


புகைப்படக் குறிப்பு:
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழாவையொட்டி நடைபெற்ற மாபெரும் அன்னதான விழாவை சிறப்பு அழைப்பாளர்கள் தொடங்கி வைத்த காட்சி.


வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

அதிமுக வின் காவல் தெய்வம் யார் தெரியுமா ?தூத்துக்குடி வடக்கு தெற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஆன பிறகு முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேச்சு அதிமுக இப்போது தூய சக்தி யாக மாறிவிட்டது???

 Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடியில் அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் எழுச்சிமிகு ஆலோசனைக் கூட்டம்!

அதிமுக வின் காவல் தெய்வம் யார் தெரியுமா ? கெட்டதெல்லாம் திமுக -தவெக விற்கு போயிற்று? இப்போது அதிமுக தூய சக்தியாக மாறிவிட்டது!!!
தூத்துக்குடி வடக்கு தெற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஆன பிறகு முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேசினார் வீடியோ இச் செய்தியின் கடைசியில் உள்ளது
.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.சண்முகநாதன், சித.செல்லப்பாண்டியன் பங்கேற்பு 

thoothukudileaks




thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

தூத்துக்குடி, ஆக.8:

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி  ஆணைக்கிணங்க, தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் எழுச்சிமிகு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


தூத்துக்குடி நீதிமன்றம் எதிரே உள்ள கனி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று (08.08.2026) சனிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மூத்த நிர்வாகியுமான சித.செல்லப்பாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டு, கட்சி நிர்வாகிகள் மற்றும் அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

thoothukudileaks
முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசிய போது 


thoothukudileaks
முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேசிய போது...
thoothukudileaks
 முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் பேசிய போது...




கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த அம்மா பேரவை நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


வரவிருக்கும் அரசியல் நடவடிக்கைகள், கட்சியின் அமைப்பு பணிகள், மக்கள் நலப் பணிகள் மற்றும் கழகத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதிமுக வின் காவல் தெய்வம் யார் தெரியுமா ? கெட்டதெல்லாம் திமுக -தவெக விற்கு போயிற்று? இப்போது அதிமுக தூய சக்தியாக மாறிவிட்டது!!!
தூத்துக்குடி வடக்கு தெற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஆன பிறகு முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேசிய வீடியோ 

கூட்டம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றதால், நிகழ்ச்சி எழுச்சிமிகு முறையில் நடைபெற்றது.

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

பரபரப்பு முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தூத்துக்குடியில் சாலை மறியல்

முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தூத்துக்குடியில் சாலை மறியல்

முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் போராட்டம்  நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது

தூத்துக்குடி, ஆக. 4:

தமிழக முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தூத்துக்குடி மாநகர் மாவட்ட திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை அண்ணா பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திமுக நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கைது நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அண்ணா பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினரை கைது செய்து காவல் வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அண்ணா பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

thoothukudileaks


புகைப்பட விளக்கம்:
முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் அமர்ந்து முழக்கமிட்ட திமுகவினர்.

உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டித்து தூத்துக்குடியில் தவெக கட்சி ஆர்ப்பாட்டம்

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி  புகைப்படம் அருணன் செய்தியாளர் 

உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் த.வெ.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று (04.08.2026) தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks

அரைமணி நேர ஆர்ப்பாட்டம்!!!

அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாநகரில் 12-வது வாசல் மையவாடி அருகிலுள்ள மைதானத்தில் இன்று காலை 11 மணியளவில் தொடங்கி சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள்  கலந்து கொண்டு, உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

thoothukudileaks

thoothukudileaks


ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள், அரசியல் நாகரிகத்தை பின்பற்ற வேண்டும் என்றும், எதிர்க்கட்சியினரையும் மக்களின் கருத்துகளையும் மதிக்கும் வகையில் பொது வாழ்க்கையில் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக கட்சியினர் வழக்கத்தை விட குறைந்த எண்ணிக்கையில் நூறுக்கும் மேற்பட்டோர்   கலந்து கொண்டனர் 

காவிரி நீர் வரத்து குறைவு: கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர வழக்கு தாக்கல்!

தூத்துக்குடி லீக்ஸ் (Thoothukudi Leaks) – நாளிதழ் செய்தி 

நாள்: 03 ஆகஸ்ட் 2026

செய்தி வெளியீடு எண்: 486

பிரிவு: தமிழக அரசு / காவிரி நீர் விவகாரம்

காவிரி நீர் வரத்து குறைவு: கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர வழக்கு தாக்கல்!

சென்னை /ஆக 3

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRC) ஆகியவற்றின் உத்தரவுகளின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைத் திறந்து விடாத நிலையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் . ச. ஜோசப் விஜய் அவரின் அறிவுறுத்தலின்படி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனுத் தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்துள்ளது.

thoothukudileaks


முக்கிய பின்னணி விவரங்கள்:

 CWRC உத்தரவு:** கடந்த 28.07.2026 அன்று நடைபெற்ற 139-வது கூட்டத்தில், 29.07.2026 முதல் 12.08.2026 வரை பிலிகுண்டுலுவில் வினாடிக்கு 3,500 கன அடி (cusecs) நீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து 30.07.2026 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54-வது அவசரக் கூட்டத்திலும் இம்முடிவு உறுதி செய்யப்பட்டது.


 உண்மை நிலவரம்:


ஆனால், 29.07.2026 முதல் 02.08.2026 வரை பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு வரப்பெற்ற நீரின் அளவு வினாடிக்கு வெறும் 158 முதல் 550 கன அடி மட்டுமே ஆகும்.


கர்நாடக அணைகளின் தற்போதைய நீர் இருப்பு (03.08.2026 நிலவரப்படி):**

 கே.ஆர்.எஸ் (KRS) அணை: 23.078 டி.எம்.சி

 கபினி அணை: 18.610 டி.எம்.சி

 ஹேமாவதி அணை: 28.022 டி.எம்.சி

 ஹாரங்கி அணை: 7.827 டி.எம்.சி

 மொத்த நீர் இருப்பு: 77.537 டி.எம்.சி (பயன்பாட்டு நீர் இருப்பு: 67.517 டி.எம்.சி)


தமிழகத்தின் கோரிக்கை & சட்ட நடவடிக்கை:

கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்து நீர்வருத்து அதிகரித்துள்ளதால், விகிதாச்சார அடிப்படையில் பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு 26.954 டி.எம்.சி ஆகும். 


ஆனால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அளித்த உத்தரவான 4.536 டி.எம்.சி என்பது மிகவும் குறைவாகும்.


கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்தும், விகிதாச்சார அடிப்படையில் தண்ணீரைத் திறந்து விட கர்நாடக அரசு தவறியுள்ளது. எனவே, மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனையின்படி, இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணவும், தமிழ்நாட்டிற்கு உரிய நீரை உரிய காலத்தில் பெறவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி உச்சநீதிமன்றத்தில் இன்று (03.08.2026) மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

thoothukudileaks

thoothukudileaks


வெளியீடு:இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9