தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் 80வது சுதந்திர தின விழா
தூத்துக்குடி: ஆக 15 தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நாட்டின் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் வடக்கு மண்டலத் தலைவர் தொ. நிர்மல் ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் வடக்கு மண்டல உதவி ஆணையர் எம். முனீரு அகமது, சுகாதார அலுவலர் ராஜசேகரன், துணை மேயர் ஜெனிட்டா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கீதா முருகேசன், ரெங்கசாமி, அந்தோணி மார்சிலின், நாகேஸ்வரி, பவானி மார்சல், ஜெயசீலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, வடக்கு மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களை பாராட்டும் வகையில், வடக்கு மண்டலத் தலைவர் தொ. நிர்மல் ராஜ் மற்றும் உதவி ஆணையர் எம். முனீரு அகமது ஆகியோர் நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.
முன்னதாக சுதந்திர தின விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு, விழா மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.

















