காயல் அப்பாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காயல் அப்பாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

ஆர் எஸ் எஸ் - பிஜேபில் யில் இருக்கும் இஸ்லாமியர்களை ஊரை விட்டு ஓதுக்க நினைக்கும் இஸ்லாமியர்களுக்குகாயல் அப்பாஸ் பதிலடி!!! !

thoothukudileaks 26-09-2021


ஆர் எஸ் எஸ் , பிஜேபி யில் இருக்கும் இஸ்லாமியர்களை ஊரை விட்டு ஓதுக்க நினைக்கும் இஸ்லாமியர்களுக்கு முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.



 ஆர் எஸ் எஸ், சிறுபான்மை அமைப்பான முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்திய பாரத நாட்டுக்காகவும், மக்கள் நலனுக்காவும் மிகவும் சிறப்பாக பணிகளை அனைவரும் செய்து வருகிறோம் . 


இந்த நிலையில் மத வெறி பிடித்த இஸ்லாமியர்கள் ஆர் எஸ் எஸ் , பிஜேபி யில் இருக்கும் இஸ்லாமியர்களை கடுமையான விமர்சனம் செய்து வருகீறீர்கள் என்பதை அறிய முடிகிறது. உங்களின் விமர்சனத்திற்கு நாங்கள் ஓரு போது கவலை பட போவதில்லை. ஏனென்றால் நாங்கள் இதை எல்லாம் கடந்து வந்து விட்டோம் ஆகவே உங்களின் இது போன்ற விமர்சனம் எங்களை ஓரு போதும் அடக்கி விட முடியாது ?


ஆர் எஸ் எஸ், பிஜேபி யில் இருக்கும் இஸ்லாமியர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என்று எந்த அடிப்படையில் விமர்சனம் செய்து வருகிறீர்கள். ஆர் எஸ் எஸ், பிஜேபி யில் இருக்கும் இஸ்லாமியர்கள் இஸ்லாமியர்கள் இல்லை என்று இஸ்லாமிய மார்க்கம் சொல்கிறாதா இல்லை ?அப்படி இருக்க இஸ்லாமியர்கள் ஆகிய நீங்கள் சொல்வது இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான சொல் என்று உங்களுக்கு தெரியுமா - தெரியாதா ? 


ஆர் எஸ் எஸ் , பிஜேபி யில் இருக்கும் இஸ்லாமியர்களை ஊரை விட்டு ஓதுக்கி வைக்க நினைக்கும் இஸ்லாமியர்களுக்கு நாங்கள் கேட்கும் கேள்வி எங்களது குடும்பதார்களை ஊரை விட்டு நீங்கள் ஓதுக்கி வைப்பதற்கு நாம் ஓன்று இஸ்லாமிய மன்னர் நாட்டில் குடியிருக்க வில்லை மற்றும் வாழ வில்லை ஏனென்றால் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது இந்தியா என்கின்ற ஜனநாயக நாட்டில் எந்த ஊரையும் எனது ஊர் என்று சொல்லி கிடலாம் தவிற யாரும் சொந்தம் கொண்டாட. முடியாது ? அப்படி இருக்க எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க உங்களுக்கு என்ன உரிமை மற்றும் அதிகாரம் இருக்கிறது ? இது போன்ற பேச்சுக்கள் உங்களின் அறியாமையை காட்டுகிறது . 


ஆர் எஸ் எஸ் , பிஜேபி யில் இருக்கும் இஸ்லாமியர்களை ஊரை விட்டு ஓதுக்க வேண்டும், ஜமாத்தை விட்டு நீக்க வேண்டும் என்று சொல்லும் இஸ்லாமியர்கள் உங்களால் முடிந்தா? உங்க ஊரின் தலைமை ஜமாத் லட்டர் பேட்டில் ஆர் எஸ் எஸ் , பிஜேபி யில் இருக்கும் எங்களை ஊரை விட்டு ஓதுக்கிறோம் என்றும் ஜமாத்தை விட்டும் நிக்கு கிறோம் என்று ஜமாத் நிர்வாகிகள் அனைவரும் கை எழுத்துயிட்டு எங்களிடம் கொடுத்தால் நாங்கள் எந்த வித மறுப்பு தெரிவிக்காமல் ஜமாத் நிர்வாகிகள் ஆகிய நிங்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டு படுகிறோம் ? 


இதை எல்லாம் விட்டு விட்டு ஊரை விட்டு ஓதுக்கி வைக்கிறோம், ஜமாத்தை விட்டு நீக்கிறோம் , என்று இந்திய சட்டத்திலும் இஸ்லாமிய மார்க்கத்திலும் இடம் இல்லாத ஓன்றை நீங்கள் செய்வதன் மூலம் ஆர் எஸ் எஸ் , சேர்ந்த இஸ்லாமியர்கள் யாருயேனும் பாதிக்க பட்டால் இதில் சம்பந்த பட்ட அனைவரும் மீதும் சட்ட ரீதியாக கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிட படுவீர்கள் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்து கொள்கிறோம். 


இஸ்லாமிய இயக்கங்கள் அரசியல் ஆதாயம் தேடுவதற்க்காக வேண்டி ஆர் எஸ் எஸ் பிஜேபி யில் யில் இருக்கும் இஸ்லாமியர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என்று அப்பாவி இஸ்லாமிய மக்களிடையே எங்களை போன்ற சமுதாய வாதிகளை சித்தரித்து அவதூறுகளை பரப்பி அதன் மூலம் ஆதாயம் தேடி வருகிறார்கள். நாங்கள் எதிரானவர்கள் தான் யாருக்கு என்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் இந்து முஸ்லிம் ஓற்றுமை சீர் குலைக்க நினைக்கும் சமூக விரோதிகளுக்கும் , இஸ்லாமிய சமுதாய பெயரை சொல்லி மக்களை ஏமாற்றுவர்களுக்கும், சட்ட.த்திற்கு விரோதமாக தொழில் செய்து வருவோர்களுக்கும், நம் இந்திய பாரத நாட்டில் இருந்து கொண்டு அன்னிய நாட்டுக்கு ஆதரவாக பேசுவோர்களுக்கும் , நாங்கள் எப்போதும் எதிரானவர்கள் தான் அதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை . ஆனால் இஸ்லாமிய மார்க்கத்திற்க்கும் , ஓட்டு மொத்தம் இஸ்லாமியர்களுக்கும் ஓரு போதும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை . ஓரு சில இஸ்லாமியர்கள் செய்யும் தவறுகளை சுட்டி காட்டிருகின்றோம் .இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

வாணியம் பாடி வசீம் அக்ரம் படுகொலை முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்!!!

இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.



திருப்பத்தூர் மாவட்டம், வாணியம் பாடியை சேர்ந்த வசீம் அக்ரம் மனித நேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துனை செயலாளராக பொறுப்பு வகித்தவர்.முன் விரோத காரணத்தால்  கூலிப்படையினரை எவி விட்டு வசீம் அக்ரம் படு கொலை செய்ய பட்டார் என்கிற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

 இந்த கொடூர சம்பவத்தை  முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது .


வசீம் அக்ரமை படு கொலை செய்த சமூக விரோதிகள் அனைவரையும் காவல் துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும். கூலிப்படையினரை எவி இந்த படு கொலை செய்ய காரணமாக இருந்த நபர்களையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் வலியுறுத்துகிறது.


வசீம் அக்ரமை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம். உயிரிழந்தள்ள வசீம் அக்ரம் குடும்பத்திற்க்கு இழப்பிடு ரூ50 லட்சமும்  அரசு வேலையும் தமிழக அரசு தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் வலியுறுத்துகிறது. 


தமிழகத்தில் போதை பொருளாளன கஞ்சாவினால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகிறார்கள். 


இளைஞர்களை கஞ்சா பழக்கத்திலிருந்து மீட்டு எடுக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறோம். மேலும் இளைஞர்களை சீரழித்து வரும் கஞ்சா வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் கஞ்சாவை ஓழிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் சார்பாக கேட்டு கொள்கிறோம்.


எனவே : அமைதி பூங்காவனமாக தமிழகத்தில் இது போன்ற அரசியல் பிரமகர்களை சமூக விரோதிகள் படு கொலை செய்வதனால்  சட்ட ஓழுங்கு பாதிப்பு பதற்றமான சூழல் நிகழ்ந்து வருகிறது. ஆகயினால் படு கொலை சம்பவங்களை செய்து வரும் கூலிப்படையினர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என முஸ்லிம் ராஷ்டிரிய மன்சியின் சார்பாக தமிழக அரசை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

திங்கள், 6 செப்டம்பர், 2021

முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் மாநில துனை பொது செயலாளராக ஷாஜகான் நியமனம் : காயல் அப்பாஸ் அறிவிப்பு!!!

thoothukudileaks 06-09-2021 1.30pm


மாநில துனை பொது செயலாளராக ஷாஜகான் நியமனம் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்  மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறிருப்பதாவது.

ஷாஜகான்


முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் தமிழக மாநில தலைவர் பாத்திமா அலி அவர்களின்  ஓப்புதலோடு திருச்சி, தென்னூர், சின்னச்சாமி நகர், விவேகானந்தர் தெருவை சேர்ந்த எஸ்.ஷாஜகான் இன்று முதல் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் இயக்கத்தின் மாநில துனை பொது செயலாளராக  நியமிக்கபட்டுள்ளார்.


பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அணைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் , இயக்கத்தின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு செயல் பட வேண்டும் ,  இயக்கத்தின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .


மேலும் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் மாநில துனை பொது செயலாளராக நியமிக்க பட்டுள்ள எஸ். ஷாஜகான் அவர்களுக்கு இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறோம்  . இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் திருச்சி மாவட்ட தலைவராக மும்தாஜ் நியமனம்!!!

தூத்துக்குடி லீக்ஸ் :-31-08-2021 

நேரம் : 5.26. am

திருச்சி மாவட்ட தலைவராக மும்தாஜ் நியமனம் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின்  தமிழக மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். 



இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறிருப்பதாவது.


முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் தமிழக மாநில தலைவர் பாத்திமா அலி அவர்களின்  ஓப்புதலோடு திருச்சி , சேந்தானீர் புரத்தை சேர்ந்த கே.மும்தாஜ் இன்று முதல் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் இயக்கத்தின் மாவட்ட தலைவராக  நியமிக்கபட்டுள்ளார். 


மேலும் கே .மும்தாஜ் தலைமையில் இயக்கத்தின் உறுப்பினராக மகளிர்கள்  பலரும்  இனைந்துள்ளதை முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது . 


பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அணைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் , இயக்கத்தின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு செயல் பட வேண்டும் ,  இயக்கத்தின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .


மேலும் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் திருச்சி மாவட்ட தலைவராக நியமிக்க பட்டுள்ள கே. மும்தாஜ் அவருக்கு இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறோம்  . இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.