அமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மதன் ராஜா தலைமையில் நடைபெற்றது

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அமைச்சர் மதன் ராஜா தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி: ஆகஸ்ட் 9
தூத்துக்குடி புறநகர் மாவட்ட கழகச் செயலாளரும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான மாண்புமிகு மதன் ராஜா, BE., MLA தலைமையில், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி மத்திய ஒன்றியம் மற்றும் கருங்குளம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (9-8-2026)மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

thoothukudileaks
அமைச்சர் மதன் ராஜா -வுக்கு அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு 


முதற்கட்டமாக நடைபெற்ற தூத்துக்குடி மத்திய ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர்  ஜெபஸ்துராஜ், இணைச் செயலாளர் திருவடி  தினேஷ், செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்த், சதீஷ்குமார், செல்வராஜ், முத்து ஜெயகலா, பொருளாளர் சதீஷ்குமார், துணைச் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


thoothukudileaks

thoothukudileaks

தொடர்ந்து கருங்குளம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்   முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


thoothukudileaks
ஆலோசனை கூட்டத்தில்.. அமைச்சர் மதன் ராஜா பேசுகையில் 

மகளிரணியினருடன் கேக் வெட்டி கொண்டாட்டம்

முன்னதாக, புறநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் வனிதா  ஏற்பாடு செய்திருந்த கேக்கை அமைச்சர் மதன் ராஜா தனது கையால் வெட்டி, மகளிரணி நிர்வாகிகளுக்கு கேக் துண்டுகளை ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


இந்நிகழ்வில் புறநகர் மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் வனிதா கந்தசாமி, ராமகிருஷ்ணன், காளிஸ்வரி, சுகன்யா, பிரியதர்ஷினி, சண்முகப்ரியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


வீடியோ பார்க்க 

கூட்டத்தில் ஒன்றிய மற்றும் கிளை அளவிலான கட்சி பணிகள், நிர்வாக செயல்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


வியாழன், 12 மார்ச், 2026

மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவது திமுக தான் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடி லீக்ஸ் | தூத்துக்குடி | 13 மார்ச் 2026

தூத்துக்குடி: தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் 73வது பிறந்தநாளையொட்டி, வடக்கு மாவட்ட திமுக சார்பில் 48வது வார்டு கால்டுவெல் காலணியில் சிறப்பான விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் நவநீதன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார்.

thoothukudileaks


விழாவில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் ... தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில்,..

 "மக்களோடு மக்களாக இருந்து உங்களோடு எப்போதும் பணியாற்றுவது திமுக தான். உங்களில் ஒருவராக இருந்தே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்" என்று தெரிவித்தார்.

காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

விடியல் பயணம் திட்டத்தின் மூலம் பெண்களை வீட்டுக்குள்ளே முடக்கி வைக்கும் நிலை மாறி, அம்மா வீடு மற்றும் உறவினர் வீடு என பல இடங்களுக்கு சுதந்திரமாகச் செல்லும் நிலை இன்று கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

"ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் தான் நங்கூரமாக இருந்து செயல்படுகிறார்கள். 1996ஆம் ஆண்டு 33 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் நான் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். 

பின்னர் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக என 30 ஆண்டுகாலம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு உங்களோடு பயணிக்கிறேன்" என்று அமைச்சர் கீதாஜீவன் உரையாற்றினார்.

thoothukudileaks


மகளிர் உரிமைத்தொகையை தேர்தலுக்குப் பின் 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 14 வயதில் கொடி பிடிக்க ஆரம்பித்து, படிப்படியாக உயர்ந்து இன்று கட்சித் தலைவராகவும் தமிழ்நாட்டு முதலமைச்சராகவும் ஸ்டாலின் பணியாற்றி வருவதை எடுத்துரைத்த அமைச்சர், 5 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார். வரவிருக்கும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.


மாற்றுத்திறனாளிக்கு அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவாதம்

விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஒரு மாற்றுத்திறனாளி, தனக்கு மூன்று சக்கர சைக்கிள் வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினார். அதை படித்துப் பார்த்த அமைச்சர் கீதாஜீவன், உடனடியாக ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்து, தனது உதவியாளரிடம் அந்த மனுவை வழங்கினார்.


விழாவில் மாநில பேச்சாளர் சரத் பாலா பகுதிச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், கவுன்சிலர்கள் சரவணகுமார், விஜயகுமார், கந்தசாமி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

photo news by sunmugasuthram press club president 


செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

தூத்துக்குடியில் திமுக ஆட்சியே மீனவர்களுக்கு நல்ஆட்சி அமைச்சர் கீதாஜீவன் பரபரப்பு பேச்சு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி news by sunmugasuthram press club president 

தூத்துக்குடி:பெ 11 "எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ அதுதான் மீனவ மக்களுக்கான நல் ஆட்சியாக இருந்து வருகிறது" என்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் தெரிவித்தார்.

thoothukudileaks


தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு மீனவர் நல வாரிய தலைவர் ஜோசப் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

thoothukudileaks


மீனவர்களின் முக்கிய கோரிக்கைகள்


திரேஸ்புரம், திருச்செந்தூர், அமலி நகர், ஆலந்தலை, பெரியதாழை, ஜீவாநகர், குலசேகரப்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரினர். மீனவர்களின் பாதுகாப்பை கருதி கடல் ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும், மீனவ கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


கடல் தொழிலில் ஈடுபட்டு உயிரிழந்த மற்றும் காணாமல் போன மீனவர்கள் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


திமுக அரசின் சாதனைகள்


கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதாஜீவன், "மீனவ நண்பர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான கஷ்டங்களை கடந்து கடல் தொழில் செய்து வருகின்றனர். அவர்களது கஷ்டங்களை குறைக்கும் வகையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்" என்றார்.


மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிப்பு, மீன்பிடி படகுகளுக்கு கூடுதல் டீசல் மானியம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் ரூ.150 கோடியில் விரிவாக்கம், தருவைகுளம் மீன் இறங்குதளம் விரிவாக்கம் என பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


எம்பிசி பட்டியல் சேர்க்கை


"மீனவ சமுதாயத்தை மிகவும் பின்தங்கியவர்கள் பட்டியலில் சேர்த்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசு. அதன் பலனாக எம்பிசி இட ஒதுக்கீட்டில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்கடன் உள்ளிட்ட பயன்களை அதிகமாக மீனவ சமுதாயத்தினர் பயன்படுத்தி பலனடைந்து வருகின்றனர்" என்று அமைச்சர் குறிப்பிட்டார்.


புதிய அறிவிப்புகள்


ஒவ்வொரு மீன்பிடி துறைமுகத்திலும் ஆம்புலன்ஸ் வசதி விரைவில் செய்து தர முதலமைச்சரிடம் எடுத்துக்கூறி விரைவில் நிறைவேற்றி தரப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். மீன்பிடி துறைமுகத்தில் சுத்திகரிக்கப்பட்ட ஆர்ஓ குடிநீர் பிளான்ட் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


"மீனவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக செவி சாய்த்து மீனவர்களுக்கு கலங்கரை விளக்கமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. மீனவ நண்பர்களும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்" என்று அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக் கொண்டார்.


மனு வழங்கல்


தொடர்ந்து நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் மீனவர் ஊர் நலக் கமிட்டியினர், மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் தங்களது பகுதிகளுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை மீனவர் நல வாரியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினிடம் மனுவாக வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட வாரிய தலைவர், விரைவில் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என தெரிவித்தார்.


கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி இயக்குநர்கள் புஷ்ராசப்னம், உத்தண்டு, மீனவர் நல வாரிய உறுப்பினர்கள் அந்தோணி ஸ்டாலின், ஜெபமாலை, லெனின், மாநில திமுக மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் செல்வராஜ், வீரபாண்டியபட்டினம் பங்குத்தந்தை அலாசியஸ், கவுன்சிலர்கள் ரெக்ஸ்லின், ஆறுமுகம், வட்டச் செயலாளர் டென்சிங், மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் இசக்கிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

photo by Arunan journalist 

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, பிப்ரவரி 9:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் இன்று (09.02.2026) காலை 10 மணியளவில் காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைக்கப்பட்டது.

thoothukudileaks


இந்த திட்டத்தின் தொடக்க விழா தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அறிஞர் அண்ணா மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கி திட்டத்தை செயல்படுத்தினர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


விழாவில் பேசிய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூய்மை பணியாளர்களின் காலை உணவு திட்டத்திற்காக ரூ.2 கோடி 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிதி மூலம் தினமும் சத்தான, சுகாதாரமான உணவு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இன்று தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 13இடத்தில் துவக்கி வைத்தனர் 

1)பழைய மாநகராட்சி அலுவலகம் 

2)அறிஞர் அண்ணா மண்டபம் 

3) அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்

4) புதிய பேருந்து நிலையம் ward ஆபீஸ்.

5) ஜோதி நகர் RRC மையம்

6) அம்பேத்கர் நகர் ward ஆபீஸ்.

7) மேட்டுப்பட்டி MCC.

8) கால்டுவெல் காலனி வார்டு ஆபீஸ்.

9) முத்தையாபுரம் வார்டு ஆபீஸ்.

10) JS Nagar ward office.

11) சிதம்பரம் நகர் மாநகராட்சி வணிக வளாகம்.

12) டோபி கானா வணிக வளாகம்.

13) P&T Colony ward office.

தூய்மை பணியாளர்களின் நலனை முன்னிறுத்தி அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி அவர்களின் உடல்நலம் மற்றும் பணித்திறன் மேம்பட உதவும் எனவும், நகர தூய்மை பணிகளில் உற்சாகம் அதிகரிக்கும் எனவும் விழாவில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

வியாழன், 1 ஜனவரி, 2026

புதுவருட முதல் நாளில் தூத்துக்குடியில் 100 இளைஞர்கள் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைப்பு

தூத்துக்குடி, ஜனவரி 1

தூத்துக்குடி மாநகராட்சி 6வது வார்டைச் சேர்ந்த 100 இளைஞர்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் புதிதாக இணைந்த இளைஞர்களுக்கு கருப்பு சிவப்பு சால்வை அணிவித்து வரவேற்றார்.



திமுக பிஎல்2 முகவர் அற்புதக்கனி, இளைஞர்கள் மதன்ராஜ், ரெஜிலஸ் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தூத்துக்குடி மாநகராட்சி 6வது வார்டுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் கீதாஜீவன் உரை

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் கீதாஜீவன், "திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் இந்தியாவிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். எல்லா தரப்பினருக்கும் செய்துள்ள சாதனைகள் ஏராளம். உங்களைப் போன்ற இளைஞர்களை மாநில இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஊக்கப்படுத்தி வருகிறார்" என்று தெரிவித்தார்.

இன்னும் நான்கு மாத காலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், "ஒவ்வொருவரும் குடியிருக்கும் பகுதியில் ஏற்கனவே பணியாற்றி வரும் நிர்வாகிகளோடு இணைந்து அரசின் திட்டங்களையும் திமுக கொள்கையையும் அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். திமுக 7வது முறையாக ஆட்சி அமைப்பதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் 2வது முறையாக முதலமைச்சராவதற்கும் உங்களுடைய பங்கு அதிகம் இருக்க வேண்டும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் வழங்கப்படும்" என்று கூறினார்.

பங்கேற்றவர்கள்

இந்நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பிரபு, நாகராஜன், மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாரயணன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், வட்ட அவைத்தலைவர் ஞானபிரகாஷம், செயலாளர் சுரேஷ், வட்டப்பிரதிநிதிகள் கருப்பசாமி, ஜெயபால், ராஜ், கவுன்சிலர் ஜெயசீலி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், புஷ்பராஜ், மணி அல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சனி, 27 டிசம்பர், 2025

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் 2026 புத்தாண்டு விழா – அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் & 2026 புத்தாண்டு விழா – அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி, டிச.28:

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் 2026 புத்தாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று (28.12.2025, ஞாயிற்றுக்கிழமை) காலை 12 மணியளவில் விழா நடைபெற்ற

thoothukudileaks



இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். உடன் திமுக தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில்,....

“‘மாற்றுத்திறனாளி’ என்ற சொல்லை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி. மாற்றுத்திறனாளிகள் நலனில் உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு வருவது திமுக அரசே. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் மீது அன்பும் கவனமும் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளி பயனாளர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ளவர்கள் இதனை பெற்றுக்கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒன்றிணைந்து கலந்து கொண்டதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்,” என தெரிவித்தார்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


கிஃப்ட் பரிசு வழங்கல் 

இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் மகளிர் சங்கம் சார்பில், ஷெர்லி மற்றும் மோசஸ் (அன்ன ராஜன்) முன்னிலையில், விழாவில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அமைச்சர் கீதா ஜீவன் கிப்ட் பரிசுகளை வழங்கினார்.

அமைச்சர் கீதா ஜீவன் -க்கு கலைக்குழு வரவேற்பு!!!

நிகழ்ச்சி முன்னதாக சகாயம் தலைமையிலான கலைக்குழு அமைச்சர் கீதா ஜீவனுக்கு மேளதாளத்துடன் கலைக்குழுவினர் சிறப்பான வரவேற்பு செய்திருந்தனர்.

thoothukudileaks

thoothukudileaks


இந்த நிகழ்ச்சியை மாற்றுத்திறனாளிகள் மகளிர் சங்கம் சார்பில் IS. ஷெர்லி மற்றும் J. மோசஸ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். விழா முழுவதும் உற்சாகமும், சமூக ஒற்றுமையும் நிறைந்ததாக நடைபெற்றது.


ஞாயிறு, 21 டிசம்பர், 2025

முதலமைச்சர் முக.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மாவட்ட செயலாளா்களுடன் கலந்துரையாடல் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

photo news by sunmugasuthram press club president 

தூத்துக்குடி டிச22

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வரைவு வாக்காளா் பட்டியல் சாிபாா்த்தல் குறித்து திமுக மாவட்ட செயலாளா்கள் கூட்டம் சென்னையிலிருந்து காெணாலி காட்சி வாயிலாக நடைபெற்றது. முகாம் அலுவலகத்திலிருந்து பேசிய தமிழக முதலமைச்சா் தமிழ்நாட்டில் 15 சதவீத வாக்காளா்களை 97 லட்சம் வாக்காளா்களை நீக்கி வரைவு வாக்காளா் பட்டியல் வௌியிட்டுள்ளாா்கள். 



இடம் பெயா்ந்தவா்கள் என்று மட்டும் 68 லட்சம் பேரை நீக்கியிருக்கிறாா்கள். எஸ்ஐஆர் பணிகளை ஆரம்பித்தபோதே இது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் தமிழ்நாட்டு வாக்காளா்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது. என்று முன்கூட்டியே எச்சாித்திருந்தோம்




உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருக்கிறோம் இந்நிலையில் வௌியிடப்பட்ட பட்டியல்களை சாிபாா்த்து அந்த அந்த மாவட்ட செயலாளர்கள் தகுதியான வாக்காளா்கள் யாரும் விடுப்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்து பணியாற்ற வேண்டும். 

களத்திற்கே வரதா... பாஜக அதிமுக சதி வேலையை முறியடிக்க வேண்டும் 

"இனி தான் உரக்கமின்றி முழு அசுரப்பலத்துடன் பணியாற்ற வேண்டும். சற்று அசந்து இருந்தால் கூட களத்திற்கே வரதா பாஜக அதிமுக சதிவேலைகள் ஏதோ வைத்திருப்பது போல் தொிகிறது என்று கூறியது மட்டுமின்றி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனிடம் மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி கோவில்பட்டி விளாத்திகுளம் ஆகிய 3 தொகுதிகளில் ஆற்றிய பணிகளும் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் கேட்டறிந்து விரைவாக தகுதியுள்ள அனைத்து வாக்காளா்களையும் புதிய படிவத்தில் விண்ணப்பித்து இணைக்க வேண்டும்" 



அதே போல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்குசாவடிகளுக்கும் பிஎல்ஏ 2 மற்றும் பாகமுகவா்கள் புதிதாக நியமணம் செய்யப்பட்டு அந்த பணிகளையும் முறைப்படுத்த வேண்டும். என்று கூறினாா்."


பதிலுரையில் அனைத்து பணிகளையும் முன்னெடுத்து மாநில மாவட்ட மாநகரம் ஓன்றியம் நகரம் உள்ளிட்ட நிா்வாகிகள் மட்டுமின்றி களப்பணியாற்றிகொண்டிருக்கும் பிஎல்ஏ 2 மற்றும் பாக முகவா்கள் அனைவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் கீதாஜீவன் தொிவித்தாா்.

செய்தி வீடியோ செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

வியாழன், 4 டிசம்பர், 2025

தூத்துக்குடியில் ‘சேலம் RR பிரியாணி’ புதிய கிளை திறப்பு — அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி லீக்ஸ் — நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, டிசம்பர் 04, 2025 — சேலம் தலைமையிடமாக கொண்டு தமிழகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்டுள்ள சேலம் RR பிரியாணி நிறுவனம், தூத்துக்குடியில் தனது புதிய கிளையை இன்று (வியாழக்கிழமை) காலை 11:30 மணியளவில் திறந்து வைத்தது.





திறப்பு விழாவில் தமிழ்நாடு சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  கீதா ஜீவன்  குத்துவிளக்கு ஏற்றி கடையை  துவக்கி வைத்தார்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் தமிழ் செல்வன் அவர்கள் விழாவை முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் நிறுவன பங்குதாரர்களான ஜெயபிரகாஷ், பால் விகாஸ், சாம், மனோ ஆகியோர் கலந்து கொண்டு வாடிக்கையாளர்களை வரவேற்றனர்.

புதியதாகத் தொடங்கப்பட்ட இந்த கிளையில் சுவைமிகு உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில்

  • சிக்கன் பிரியாணி — ரூ. 240
  • மட்டன் பிரியாணி — ரூ. 330
    மேலும் சைனீஸ் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகளும் கிடைக்கின்றன.

முகவரி:

106, S/15, பழை ரோடு,
மேற்கு சிதம்பரநகர்,
மஹிந்திரா கார் ஷோரூமுக்கு எதிரில்,
தூத்துக்குடி.


புதன், 3 டிசம்பர், 2025

புதிய பேருந்து நிலையத்தில் ‘மகளிர் விடியல் பயணம்’ – 7 புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைத்தார் அமைச்சர் கீதா ஜீவன்

photo news by Arunan journalistt தூத்துக்குடி லீக்ஸ் — நாளிதழ் செய்தி 

தூத்துக்குடி: டிச 4

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்  இன்று (04.12.2025 – வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் கீழ் 7 புதிய பேருந்து சேவைகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.

thoothukudileaks


அமைச்சர் கீதா ஜீவன் கொடியசைத்து தொடங்கிய இந்த புதிய சேவைகள், தூத்துக்குடியைச் சுற்றியுள்ள முக்கிய ஊரக பகுதிகளில் வசிக்கும் பெண்கள், மாணவிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பான மற்றும் சுலபமான பயணத்தை வழங்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இன்று துவக்கப்பட்ட புதிய வழித்தடங்கள்:

  • வேடப்பட்டி
  • கீழ் ஈரால்
  • பெருங்குளம்
  • சுப்பிரமணியபுரம்
  • வெளப்பனேரி
  • கீழ்வைப்பார்
  • அகிலாண்டபுரம்

புதிய பேருந்துகள் தினசரி அதிகாலையில் மகளிரின் வேலை, கல்வி, மருத்துவ பயணங்களுக்கு ஏற்ற வகையில் சேவையாற்ற உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

இந்த புதிய பேருந்து சேவை ஆரம்பம், தூத்துக்குடி மாவட்ட மகளிரின் பாதுகாப்பான இயங்குதன்மை மற்றும் நாளாந்த பயணம் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பொதுமக்களால் வரவேற்கப்படுகிறது.

சனி, 1 நவம்பர், 2025

நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் தூத்துக்குடி மக்கள் நன்மை அடைந்துள்ளார்கள் அமைச்சர் கீதா ஜீவன்

photo news by sunmugasuthram press club president 

தூத்துக்குடி, நவம்பர் 2 - 

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன், திமுக ஆட்சியில்தான் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் முழுமையாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

கடந்த 19, 20, 21 ஆகிய தேதிகளில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் நிகிலேஷன் நகர் பி அண்ட் காலனி உள்ளிட்ட சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து அப்பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஊரகப் பகுதிகளில் எவ்வித கட்டமைப்புப் பணிகளும் முறையாகச் செய்யப்படவில்லை. 2021ல் திமுக ஆட்சி அமைந்த பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் வரும் காலங்களில் தண்ணீர் தேங்கக் கூடாது, பொதுமக்கள் எந்த விதத்திலும் பாதிப்படையக் கூடாது என்ற அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

மாநகராட்சிப் பகுதியில் இந்த ஆண்டு கடந்த ஆண்டுகளை விட கூடுதலாக 9 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. 

ஆனால் புதிய கால்வாய் வழித்தடங்கள் அமைக்கப்பட்டதன் வழியாக தண்ணீர் வெளியேறிச் சென்றுவிட்டது. சில காலிமனைகளில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் மின்மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மக்கள் நன்மை அடைந்து உள்ளார்கள்!!!

கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் நன்மை அடைந்துள்ளனர். எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதுதான் தமிழகத்திற்கு பொற்காலம். 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கான உரிமைகளை மத்திய அரசிடம் போராடிப் பெற்றுத் தரும் கொள்கையோடு முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்.

எந்த மழை வந்தாலும் இந்தமுறை பொதுமக்களைப் பாதிக்காத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இந்த அரசு எடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் எவ்வித அச்சப்பட வேண்டிய அவசியமில்லை" என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

ஆய்வின்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் கண்ணன், ஜான், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப் பிரதிநிதிகள் பாஸ்கர், வேல்முருகன், மணி ஆல்பர்ட் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

thoothukudileaks


படம்: தூத்துக்குடி நிகிலேஷன் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

சனி, 25 அக்டோபர், 2025

அஞ்சல் வழி பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ்செய்திகள் 

பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த திட்டத்தின் பயனாளிகளை குறிவைத்து, தூத்துக்குடி மாநகர திமுக பெயரில் இந்த தபால்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி:அக்26

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல்–மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் சூடு ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், தற்போதைய எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிகளை தக்கவைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.



அந்த வகையில், தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏவும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சார்பில் வாக்காளர்களை, குறிப்பாக பெண்களை கவரும் வகையில் வீடுகள்தோறும் தபால் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த தேர்தலில் திமுகவின் முக்கிய பிரச்சார கருவியாக ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் திகழும் எனக் கூறப்படுகிறது.


அஞ்சல் வழி பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன்

 பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த திட்டத்தின் பயனாளிகளை குறிவைத்து, தூத்துக்குடி மாநகர திமுக பெயரில் இந்த தபால்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் பல குடும்பங்களுக்கு சென்றடைந்த அந்த தபாலில்,
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கொள்கையுடன் திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டை இந்தியாவில் முன்னிலை மாநிலமாக மாற்றியுள்ளார்.
குறிப்பாக, ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் மூலம் பெண்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றப்பட்டுள்ளது. இதேபோன்று மேலும் பல திட்டங்களை செயல்படுத்தி நமது வாழ்வை மேம்படுத்த, வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியை தொடரச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்*” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தபால் தற்போது தூத்துக்குடி முழுவதும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி திமுகவின் இந்த “தபால் யுக்தி” வாக்காளர்களை எவ்வளவு அளவு கவரும் என்கிற ஆர்வம் நிலவினாலும், இந்த புதிய பிரச்சார முறை தேர்தல் பலனளிக்கும் என்ற நம்பிக்கை கட்சியினரிடையே நிலவுகிறது.

செவ்வாய், 21 அக்டோபர், 2025

தூத்துக்குடியில் கனமழை எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

📰 தூத்துக்குடி லீக்ஸ்

தூத்துக்குடி: அக் 21

தொடர்ந்து பெய்து வரும் கனமழையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மாண்புமிகு கீதாஜீவன்  மாவட்ட ஆட்சித்தலைவர்  க. இளம்பகவத், இ.ஆ.ப.  தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.



மாநகராட்சி, மின்வாரியம், வருவாய்துறை மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் கீதாஜீவன்  தெரிவித்ததாவது:
“தொடர்ச்சியான கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துகளில் மழையால் ஏற்படும் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து அதிகாரிகளும் பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.”



அவர் மேலும் தெரிவித்ததாவது,
மின்சார வாரியம், நெடுஞ்சாலை, மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கு தனித்தனியாக பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தண்ணீர் தேங்கக்கூடிய பகுதிகளில் மணல் மூட்டைகள், ஜேசிபி இயந்திரங்கள், மோட்டார் பம்புகள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வருவாய் துறையினர் குளங்கள், அணைகள் ஆகியவற்றின் நீர்மட்டம் மற்றும் வெளியேற்றப்படும் நீரின் அளவை கண்காணித்து, உடைப்பு ஏற்படாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது 38 மோட்டார் ரூம் மற்றும் 58 நீர்மோட்டார் பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 


அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மிக கனமழை ஏற்பட்டாலும் அதை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் முழுமையாக தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மேலும், மக்களுக்கு தேவைப்படும் சூழ்நிலையில் தங்குவதற்கான முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. மாநில பேரிடர் மீட்பு படை (SDRF) குழுவும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.



Heavy Rain: Minister Geetha Jeevan Reviews Precautionary Measures in Thoothukudi District



📰 THOOTHUKUDI LEAKS

Heavy Rain: Minister Geetha Jeevan Reviews Precautionary Measures in Thoothukudi District

Thoothukudi:
Due to the continuous heavy rainfall in Thoothukudi district, Minister for Social Welfare and Women’s Rights Smt. Geetha Jeevan held a review meeting under the chairmanship of District Collector Mr. K. Ilambagavath, I.A.S. The meeting was attended by officials from the Corporation, Electricity Board, Revenue Department, and other key departments.



After the meeting, addressing the press, Minister Geetha Jeevan said:
“In view of the ongoing heavy rains, precautionary measures have been taken across all municipal, town panchayat, and village panchayat areas to safeguard the public from monsoon-related damages. All department officials have been instructed to remain on duty round the clock.”

She further stated that responsibilities have been assigned to key departments such as the Electricity Board, Highways, and Health Department to ensure immediate response to any emergency situation.
Sandbags, JCB machines, and motor pumps have been arranged in low-lying areas prone to waterlogging to prevent flooding and drain stagnant water promptly.



The Revenue Department has been directed to monitor the water levels in tanks and reservoirs to ensure safe discharge without breaches. In Thoothukudi Corporation limits, 38 motor rooms and 58 water pumps have been deployed to tackle water stagnation effectively.

The district administration, she said, is fully prepared to face any heavy rainfall scenario through coordinated efforts from all departments.
Arrangements have also been made to provide temporary shelters for people, if required. The State Disaster Response Force (SDRF) team is on standby and ready to assist the district administration in relief operations.


வியாழன், 25 செப்டம்பர், 2025

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குடிநீர் பிரச்சனை – அமைச்சர் கீதா ஜீவன் அதிரடி நடவடிக்கை!

பத்து நிமிடத்தில்...தீர்ந்தது தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குடிநீர் பிரச்சனை – அமைச்சர் கீதா ஜீவன் அதிரடி நடவடிக்கை!


பொதுமக்கள் பயணிகள் மற்றும் ஓட்டுநர் நடத்துநர் மகிழ்ச்சி 

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே பொதுமக்கள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்காக மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன.

ஆனால், சில சுயநல தனிநபர்கள் மாநகராட்சி அதிகாரிகளின் துணையுடன் இக்குழாய்களை அடைத்து வைத்ததால் பொதுமக்கள், பயணிகள் மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானனர்.

இந்த நிலைமை குறித்து பொதுமக்கள் தரப்பில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன்அவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. 



தகவல் சென்ற பத்து நிமிடங்களுக்குள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து, அடைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்களை திறந்து வைத்தனர். 

அமைச்சர் கீதா ஜீவன் அவர்களின் அதிரடி நடவடிக்கையால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், பேருந்து பயணிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து அமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.


வீடியோ பார்க்க 





இப்போது...

முன்பு 




இப்போதும் கவனிக்க படாத குடிநீர் குழாய் 


"சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரிச்சல் பட்டு புலம்பியபடி அங்கு இருந்து கிளம்பி சென்றனர் 

முன்பு அமைச்சர் திறந்த வைத்த நுழைவு வாயில் உள்ள  குடிநீர் குழாய் சரி பண்ணாமல் சென்றனர்.


இந்த மாதிரி  அரசு அலுவலர்கள் தங்கள் கடமையை செய்ய மறுப்பவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்பதே பொதுமக்கள் வேண்டு கோள்"