தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி
photo news by Arunan journalist
தூத்துக்குடி, பிப்ரவரி 9:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் இன்று (09.02.2026) காலை 10 மணியளவில் காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் தொடக்க விழா தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அறிஞர் அண்ணா மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கி திட்டத்தை செயல்படுத்தினர்.
விழாவில் பேசிய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூய்மை பணியாளர்களின் காலை உணவு திட்டத்திற்காக ரூ.2 கோடி 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிதி மூலம் தினமும் சத்தான, சுகாதாரமான உணவு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இன்று தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 13இடத்தில் துவக்கி வைத்தனர்
1)பழைய மாநகராட்சி அலுவலகம்
2)அறிஞர் அண்ணா மண்டபம்
3) அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்
4) புதிய பேருந்து நிலையம் ward ஆபீஸ்.
5) ஜோதி நகர் RRC மையம்
6) அம்பேத்கர் நகர் ward ஆபீஸ்.
7) மேட்டுப்பட்டி MCC.
8) கால்டுவெல் காலனி வார்டு ஆபீஸ்.
9) முத்தையாபுரம் வார்டு ஆபீஸ்.
10) JS Nagar ward office.
11) சிதம்பரம் நகர் மாநகராட்சி வணிக வளாகம்.
12) டோபி கானா வணிக வளாகம்.
13) P&T Colony ward office.
தூய்மை பணியாளர்களின் நலனை முன்னிறுத்தி அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி அவர்களின் உடல்நலம் மற்றும் பணித்திறன் மேம்பட உதவும் எனவும், நகர தூய்மை பணிகளில் உற்சாகம் அதிகரிக்கும் எனவும் விழாவில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக