கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 செப்டம்பர், 2024

முதல் பரிசு ரூ 1 லட்சம் புகைப்பட போட்டி விதிமுறைகள் முழு விவரம்வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

16-9-2024 photo news 

by Arunan journalist

மிகச்சிறந்த புகைப்படத்திற்கு

முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 10 புகைப்படங்களுக்கு

ஆறுதல் பரிசாக தலா ரூ. 5 ஆயிரமும் வழங்கப்படும் என செய்தி மக்கள் தொடர்பு தூத்துக்குடி அலுவலகம்

வெளியிட்டுள்ளது




தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தூத்துக்குடி 5ஆம்

புத்தகத் திருவிழா வருகின்ற 03.10.2024 முதல் 13.10.2024 வரை சங்கரப்பேரி திடலில்

நடைபெறவுள்ளது,



இப்ப புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு தூத்துக்குடி புகைப்பட

கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான புகைப்பட கண்காட்சி போட்டிக்கான

இணையதளம் மற்றும் இலட்சையினை மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்

கனிமொழி கருணாநிதி அறிமுகப்படுத்தினார்கள் .

https://thoothukudi.nic.in/




தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 5ஆவது புத்தகத் திருவிழா மாவட்ட

நிர்வாகத்தின் சார்பில் மிகவும் சிறப்பாக நடத்தப்படவுள்ளது.


தினமும் நட்சத்திர பேச்சாளர்கள் சிறப்புரை கூட்டம்!!!


இப்புத்தகத் திருவிழாவில்

தமிழகத்தின் தலைச்சிறந்த எழுத்தாளர்கள்

சாகித்ய அகாதமி விருது பெற்ற

எழுத்தாளர்கள், கலைஞர்கள் மிகச்சிறந்த சமூக சிந்தனைப் பேச்சாளர்கள்

அரசியல்

ஆளுமைகள் நட்சத்திரப் பேச்சாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் கவிஞர்கள்

கலந்துகொண்டு வெவ்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றவுள்ளார்கள்.




புகைப்பட போட்டி!!!


இப்புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு. தூத்துக்குடி புகைப்படக் கலைஞர்கள் மற்றும்

பொதுமக்களுக்கான புகைப்படக் கண்காட்சிப் போட்டி நடத்தப்படவுள்ளது.


தலைப்பு விவரம்!!"


இப்புகைப்படப்

போட்டிக்காக.....

தூத்துக்குடியின் கலாச்சாரம், பாரம்பரியம், தெரு வாழ்க்கை, மதத்

திருவிழாக்கள், நினைவுச் சின்னங்கள், மக்கள் வாழ்க்கை முறை, மீனவ சமூகத்தின்

வாழ்க்கை, தூத்துக்குடி இயற்கை காட்சிகள் (கடற் பரப்புக்கள் நதிக் காட்சிகள், ஈர

நிலங்கள், நகர்புற காட்சிகள்) வனவிலங்குகள் மற்றும் ஈரநில பறவைகள், தொழிலாளர்கள்

(தொழில்துறை, மீன்பிடித்தல்), விளையாட்டு போன்ற தலைப்புகளில் இருத்தல் வேண்டும்.


கடை பிடிக்க வேண்டிய வீதிமுறைகள்!!!


1. புகைப்படங்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த படங்களாக மட்டுமே இருக்க

வேண்டும்.


2. இந்தியாவிலிருந்து எந்த வயதினரும் விண்ணப்பிக்கலாம்.


3. விண்ணப்பதாரர் அதிகபட்சம் ஐந்து படங்களை சமர்ப்பிக்கலாம்.


4. விண்ணப்பதாரர் தனது சொந்த படங்களை மட்டுமே அனுப்ப வேண்டும்


5. கிராபிக்ஸ் மற்றும் AI உருவாக்கிய படங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.



புகைப்படங்கள் சமர்ப்பிக்கும் அளவுகோள்கள்


1. படங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்


2. படங்கள் 100 dpi இல் நீண்ட பக்கத்தில் 3000 பிக்சல்கள் கொண்ட RGB கோப்புகள்

பரிந்துரைக்கப்படுகிறது



3. கருப்பு வெள்ளை புகைப்படங்கள் அனுப்பலாம்



4. ஒவ்வொரு புகைப்படமும் புகைப்படத்திற்கான தலைப்புடன் இருக்க வேண்டும்


5. ஒவ்வொரு புகைப்படமும் குறைந்தபட்சம் 5MB க்கு குறைவாக இருத்தல்

வேண்டும்.



கோப்பு விபரக்குறிப்பு

சமர்ப்பிக்கப்பட வேண்டிய புகைப்படங்கள் பின்வரும் விவரக் குறிப்புகளை பூர்த்தி செய்ய

வேண்டும்:



பயன்பாடு



1. வெற்றி பெற்ற போட்டியாளர்கள் முழு தெளிவுத்திறன் கொண்ட

RAW/TIFF படங்களை அச்சிடுவதற்கும் / உண்மை தன்மையினை

அறிவதற்கும் சமர்ப்பிக்கும்படி கேட்கபடுவார்கள்.


2. படங்களில் பார்டர்கள் 1 லாட்டர் மார்க்க்ஸ் அல்லது எந்தவித

அடையாளமும் இருத்தல் கூடாது.



1. பட்டியலிடப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் கண்காட்சி,

சமூக ஊடகங்கள், ஆன்லைன் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளிவர

பயன்படுத்தப்படும்.



2. நடுவர்களின் முடிவே இறுதியானது.


3. விண்ணப்பிக்கும்

விண்ணப்பதாரர்கள்

எடுக்கும் அனைத்து வகையான முடிவு

ஆவார்கள்.


இரண்டு பிரிவுகளில் போட்டி

அனைவரும் நிர்வாகம்

கட்டுப்பட்டவர்கள்

இப்புகைப்படப் போட்டியானது இரண்டு பிரிவுகளின் கீழ் நடத்தப்படும் இப்புகைப்படப்

போட்டியில் கலந்துகொள்ள 18 வயது வரையிலான நபர்கள் ஒரு பிரிவாகவும்,18 வயதிற்கு

மேற்பட்ட நபர்கள் ஒரு பிரிவாகவும் என இரண்டு பிரிவுகளின் கீழ் போட்டியில்

கலந்துகொள்ளலாம்

ஆறுதல் பரிசுகள் உண்டு!!!


. மேலும், புகைப்படப் போட்டிக்காக அனுப்பப்படும் புகைப்படங்கள்

அனைத்தும் தகுதிவாய்ந்த தேர்வு குழுவினரால் கூராய்வு செய்யப்பட்டு முதல், இரண்டாம்

மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.



இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் தெரிவு செய்யப்படும் மிகச்சிறந்த புகைப்படத்திற்கு

முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 10 புகைப்படங்களுக்கு

ஆறுதல் பரிசாக தலா ரூ. 5 ஆயிரமும் வழங்கப்படும்.



மேலும், ஒவ்வொரு பிரிவிலும்

மிகச்சிறந்ததாக தெரிவு செய்யப்படும் புகைப்படம் புத்தகக் கண்காட்சி நடைபெறும்

அனைத்து நாட்களிலும், பொதுமக்களின் காட்சிக்காக வைக்கப்படும்.


ஒரு நபர்

அதிகபட்சமாக 5 புகைப்படக்களைத் தேர்வுக்காக அனுப்பலாம்.



எனவே, புகைப்படக் கலைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் தங்களது படைப்புகளை

செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் அணுப்பி வைக்க வேண்டும்.



புகைப்படப் போட்டிக்காக அனுப்பப்படும் புகைப்படங்களை மாவட்ட நிர்வாகத்தின்

அதிகாரப்பூர்வமான இணையதளமான https://thoothukudi.nic.in/


இல் வெளியிடப்படும்

இணைப்பில் (LINK) பதிவேற்றம் செய்யலாம்.



வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி

புத்தக திருவிழாவையொட்டி தூத்துக்குடியில் புகைப்பட போட்டி அனைவரும் கலந்து கொள்ளலாம்

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

16-9-2024  

 தூத்துக்குடி 5ஆவது புத்தகத் திருவிழா - 2024யை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தினை எடுத்துரைக்கும் விதமாக புகைப்படப் போட்டி நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள

அனைவரும் விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய ஏதுவாக இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது



  இன்று 16-9-2024  மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழி,மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத்,இ.ஆ.ப.,  தலைமையில் அறிமுகப்படுத்தினார்கள்



இது பற்றிய செய்தியாவது:- 

புத்தக திருவிழா

தூத்துக்குடி 5-வது புத்தக திருவிழா,

 3-வது நெய்தல் திருவிழா மற்றும் புகைப்பட கண்காட்சி வருகிற அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் உள்ள சங்கரப்பேரி பகுதியில் நடைபெற இருக்கிறது.‌

புகைப்பட போட்டி!!!


 இந்நிலையில் இன்று (16/09/2024) திங்கள்கிழமை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் புகைப்பட கண்காட்சியில் விண்ணப்பதாரர்கள் தங்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

https://thoothukudi.nic.in/

 தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான  கனிமொழி கருணாநிதி எம்பி

 


உடன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்!