கிறிஸ்தவ செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிறிஸ்தவ செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 31 மே, 2026

தூத்துக்குடியில் திரு இருதய நண்பர்கள் இயக்கத்தின் 274வது மாதாந்திர கூட்டம்

 Tamil Nadu updates

 தூத்துக்குடி, ஜூன் 1:

திரு இருதய நண்பர்கள் இயக்கம், தூத்துக்குடியின் 274வது மாதாந்திர கூட்டம் கடந்த 31.05.2026 அன்று மாலை 4 மணி முதல் 6.15 மணி வரை நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னதாக திரு இருதய தொண்டரும், இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான திரு. பாஸ்கர் சில்வா தலைமையில் திரு இருதய ஜெபமாலை மற்றும் இறைபுகழ்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நன்றியறிதல் நிகழ்வுகளுடன் கூட்டம் தொடங்கியது.

thoothukudileaks


கூட்டத்தின் சிறப்பு செய்தியாளராக அண்ணாநகரைச் சேர்ந்த த சீலா சந்தியாகு கலந்து கொண்டு பல்வேறு சமூக, ஆன்மீக மற்றும் சமகால நிகழ்வுகள் குறித்த செய்திகளை வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் சிறப்பாக பணியாற்றிடவும்,... உலகில் நிலவும் போர் சூழ்நிலைகள் முடிவுக்கு வந்து அமைதி நிலவவும், பூமியின் வெப்பநிலை குறைந்து நல்ல மழை பெய்யவும், திரு அவையின் வளர்ச்சிக்காகவும், திரு இருதய நண்பர்கள் குடும்பங்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காகவும் சிறப்பு ஜெபங்கள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்வில் திருமதி மரியசீலி தி.இ.தொ. ஜெப வழிநடத்துதல்களை வழங்கினார். தொடர்ந்து கூட்டம் தொடர்பான அறிவிப்புகள் மற்றும் நன்றியுரையை ஜாக்குலின் தி.இ.தொ. வழங்கினார்.

தூய ஆவியானவரின் வழிநடத்துதலுடன் நடைபெற்ற இக்கூட்டம் ஆன்மிக எழுச்சியுடனும், சகோதரத்துவ உணர்வுடனும் நிறைவுற்றது.

புதன், 13 ஆகஸ்ட், 2025

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத் தேர்தலில் மனுதாக்கல் போல் பேட்டை- நந்தகோபலாபுரம் சேகரத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் மனு தாக்கல்

Tamil Nadu updates, photo Arunan journalist 

News by sunmugasuthram press club president 


தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத் தேர்தலில் மனுதாக்கல்

தூத்துக்குடி: ஆகஸ்ட் 14
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத் தேர்தலை முன்னிட்டு, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள் வழியாக, அந்தந்த பகுதியில் உள்ள தேவாலயங்களில் சபை உறுப்பினர்கள் போட்டியிடும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

thoothukudileaks


இதன் அடிப்படையில், போல்பேட்டை -நந்தகோபாலபுரம் தேவாலயத்திற்கு திருமண்டலப் பெருமன்ற உறுப்பினர் பதவிக்கான மனுதாக்கல், போல்பேட்டை தேர்தல் அலுவலர் ஜேக்கப்பிடம், மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் நடைபெற்றது.

thoothukudileaks


தூத்துக்குடி போல்பேட்டை சேகரத்தின்பக்கம்...

 சுதன்கீலார், -மோகன்ராஜ் அருமைநாயகம், -எடிசன் ஆகியோர், 

நந்தகோபாலபுரம் சேகரத்தின்பக்கம் 

ஜேஸ்பர் ஞானமார்டின் ஆகியோர் தங்களது மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் திமுக வட்டச்செயலாளர் ரவீந்திரன், ஐசக் உள்ளிட்ட சபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


புதன், 23 ஏப்ரல், 2025

தூத்துக்குடி செபத்தையாபுரம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் அசன பண்டிகை விழா

 தூத்துக்குடி லீக்ஸ் 

செபத்தையாபுரம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் அசன பண்டிகை விழா சிறப்பாக நடைபெற்றது

சாயர்புரம், ஏப்ரல் 24 –
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தைச் சேர்ந்த செபத்தையாபுரம் தெய்வீக உயிர்த்தெழுதலின் சி.எஸ்.ஐ. ஆலயத்தில், 119வது ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை விழா, பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.



விழாவை முன்னிட்டு ஏப்ரல் 20 மற்றும் 21 தேதிகளில் கன்வென்ஷன் கூட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்து 22ம் தேதி காலை சிறப்பு உபவாச ஜெபமும், மாலை பண்டிகை ஆயத்த ஆராதனையும் நடைபெற்றது.


23ஆம் தேதி காலை பண்டிகை மற்றும் திரு விருந்து ஆராதனையில் குப்பாபுரம் சேகர தலைவர் செல்வின்ராஜ் சார்லஸ் செய்தி வழங்கினார். மாலை பொதுமக்களுக்கு அசன விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியை செபத்தையாபுரம் சேகர குரு இம்மானுவேல் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக SDK. ராஜன், ஜெபச்சந்திரன், S.D. அருண் ஜெபக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலய பொருளாளர் பிரகாஷ் ராஜ்குமார், முன்னாள் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பொன்சிங் ராஜ், சபை ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ், சாந்த சீலன், சாந்த சிங், எமில் டேவிட், SSK. சோபன் பாலசிங், ஆபிரகாம் அரவிந்தராஜ், அருண் தேவதுரை ஆகிய ஆலய நிர்வாக குழு உறுப்பினர்கள், சபை மக்கள் மற்றும் செபத்தையாபுரம் சுற்றுவட்டார பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

படக் குறிப்பு: செபத்தையாபுரம் தெய்வீக உயிர்த்தெழுதலின் ஆலயத்தில் நடைபெற்ற அசன பண்டிகை விழா.


திங்கள், 25 நவம்பர், 2024

தூத்துக்குடி தூய சவேரியாா் ஆலய 136 வது திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி  தூய சவேரியாா் ஆலய  136 வது திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது .

கொடியேற்றம்!!!!

       தூத்துக்குடி சவேரியாா்புரம்  புனித சவேரியாா் ஆலயத்தில்  24.11.2024  ஞாயிறு   மாலை  கொடியேற்றத்துடன்  திருவிழா  தொடங்கியது.


  


மாலை  6  மணிக்கு  தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பேரருள் தந்தை  ரவிபாலன்   மற்றும் சவேரியாா்புரம் பங்குதந்தை  அருட்தந்தை  குழந்தைராஜன்    தலைமையில்  ஊா்நிர்வாகத்தினர்  பொன்னாடை மற்றும்  ஆளுயுர  ரோஜாப்பு மாலை அனிவித்து  வரவேற்றார்கள்.


 மேளதாளத்துடனும் வாணவேடிக்கையுடன்  அழைத்து சென்றனா் 


 இதனை தொடா்ந்து ... ஆலயத்திலிருந்து  பவணியாக  கொடிமரம் நோக்கி வந்தனா் பேரருள் தந்தை  ரவிபாலன் தலைமையில்  கொடியேற்றம்  நடைபெற்றது.


  தொடா்ந்து முதல்நாள் திருவிழா  மாலை ஆராதனை நடைபெற்றது மறையுரையாற்றினாா் 


  தருவைக்குளம்  பங்கு தந்தை அருட்தந்தை  வின்சென்ட்    மறையுரையாற்றினாா்கள்.


    7 ஆம் திருவிழா  30.11.2024 சனிக்கிழமை  இரவு  புனித சவேரியாரின் சப்பர பவணி நடைபெறும்     


திருவிழாவின் முக்கிய நிகழ்வான  நற்கருணைபவணி   9 ஆம் திருவிழாவான  திங்கள்கிழமை  மாலையில்  நடைபெறும்  


 10  ஆம்  திருவிழாவான  செவ்வாய்க்கிழமை   காலையில்  திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி  நடைபெறும்  தொடா்ந்து  சப்பர பவணி  நடைபெறும்  திருவிழாவிற்கான  ஏற்பாடுகளை  பங்குதந்தை அருட்தந்தை  குழந்தைராஜன்  அடிகளாா்  மற்றும்  ஊா்நிர்வாகம்  அருட்சகோதரிகள்  பங்குஇறைமக்கள்  அனைத்து சபைகளும் செய்திருந்தனர் 

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

தூத்துக்குடியில் இந்து கோயில் முன்பு கிறிஸ்தவ பேனர் இந்து மக்கள் கட்சி அகற்ற முற்றுகை

 தூத்துக்குடி காமராஜர் கல்லூரி எதிர் புறம் உள்ள சக்திவிநாயகர் கோயில் முன்பு கிறிஸ்தவ  பிளக்ஸ் பேனர்  வைத்திருந்தனர் இதை அகற்ற தீடீரென இந்து மக்கள் கட்சி அகற்ற முற்றுகை செய்தனர் இதனால் பரபரப்பு போலீஸ் வந்தனர் .



இதுபற்றி செய்தியாவது:-

சக்திவிநாயகர் கோயில் முன்பு கிறிஸ்தவ பேனர் கட்டியிருந்தனர்.

இன்று 18-9-2023 காலை தீடீரென பிளக்ஸ் பேனர் அகற்றக்கோரி இந்து மக்கள் கட்சியினர்  சம்பவ இடத்தில் முற்றுகை இதை யடுத்து போலீசார் வழக்கு பதிவு


தற்போது..

காமராஜ் கல்லூரி எதிர்ப்புறம் உள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்து கொண்டிருந்தபோது ..

அதற்கு இடையூறாக கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான சோஸ்திர திருவிழா என்ற பெயரில் பிளக்ஸ் போர்டு கட்டியதாக கூறப்படும் நிலையில் அதை அகற்றக் கோரி இந்து மக்கள் கட்சி மாநிலசெயலாளர் வசந்தகுமார் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்தனர்.

 அப்போது  காவல்துறையினர் சமாதானம் பேசி  மேற்படி போர்டுகளை கட்டியவர்களை வைத்து கிறிஸ்தவ போர்டுகளை போலீசார் அகற்றினார் 


தூத்துக்குடி மாநகராட்சியில் ‌ எவ்வித அனுமதியும் வாங்காமல் பிளக்ஸ் போர்டு வைத்திட காரணமாக இருந்த கிறிஸ்தவ

மதபோதகர் மீது போலீசார்  வழக்கு பதிவு செய்துள்ளனர்  


மேற்படி காமராஜர் கல்லூரி எதிர்ப்புறம் திருச்செந்தூர் மெயின் சாலையில் இந்து மக்கள் கட்சியினர் பெருந்திரளாக  கூடியதை முன்னிட்டு அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது 


நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வீர குமார் மாவட்ட அவை தலைவர் சுடலைமணி மாவட்ட இளைஞரணி தலைவர் அழகுராஜா உட்பட ஏராளமான இந்து மக்கள் கட்சியினர் கலந்து கொண்டனர்

செவ்வாய், 16 மே, 2023

தூத்துக்குடி திரவிய புரம் அலெக்ஸ் ஆபிரகாம் தமிழ் குடும்பத்தின் சார்பில் மேற்கு வங்காளம் மோதிராம் கிராமத்தில் புதிய கிறிஸ்தவ ஆலயம் !!! குருவானவர் அருள்திரு தமிழ்ச்செல்வன் பிரதிஷ்டை!!!

 thoothukudileaks 16-5-2023

Photo news by ravikumar 

தூத்துக்குடி திரவிய புரம் அலெக்ஸ் ஆபிரகாம்  மற்றும் அவரது குடும்பத்தினர் 

மேற்கு வங்காளம்  மோதிராம் கிராமத்தில் புதிய கிறிஸ்வ ஆலயம் கட்ட முடிவு பண்ணினர்.

 அதற்கான முயற்சியில் அப் பகுதி கிறிஸ்தவ ர்கள் ஒத்துழைப்பு உதவியுடன் ஈடுபட்டார்கள்.

 ஆலய கட்டியிட பணிகள் கடந்த வருடம் நடைபெற்று வந்தது தற்போது ஆலய கட்டியிட பணி நிறைவு பெற்றது..  

இதையொட்டி தூத்துக்குடி  திரவிய புரம் அலெக்ஸ் ஆபிரகாம் மற்றும் அவரது குடும்பத்தினரால்

மேற்கு வங்காளம் மோதிராம் கிராமத்தில் புதிய கிறிஸ்தவ ஆலயம்  பிரதிஷ்டை செய்யப்பட்டது.



இது பற்றிய செய்தியாவது:-


   தூத்துக்குடி திரவிய புரம் சகல பரிசுத்தவான்களின்  ஆலய குடும்பத்தினர் சரோஜா ஞானராஜ்  புதல்வர் அலெக்ஸ் ஆபிரகாம் மூலமாய் மேற்கு வங்காள பகுதியில் மோதிராம் கிராமத்தில் ஆலயம் கட்டப்பட்டது.


 புதியதாக கட்டப்பட்ட மோதிராம் கிறிஸ்துவ ஆலயம் குருவானவர் அருள்திரு தமிழ்ச்செல்வன் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.


ஆலய பிரதிஷ்டை யில் அலெக்ஸ் ஆபிரகாம் முன்னிலை வகித்தார். 


இந்நிகழ்ச்சியில் சரோஜா ஞான்ராஜ்,  சகோ தனுஷ்   திருவாளர்கள் ஜெயபால்  சண்முகவேல்,   வெயிலு முத்து,  மாசிலாமணி மற்றும்   அப்பகுதி சபையில்  ஏராளமான கிறிஸ்துவ மக்கள் கொண்டார்கள்.

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

தூத்துக்குடியில் கிறித்தவ பாதிரியாருக்கு அதிமுக பிரமுகர் கொலை மிரட்டல் தூத்துக்குடி பாதிரியார் அதிமுக பிரமுகர் மீது புகார்!!! ‌ எதிரொலி இன்று தூத்துக்குடி மட்டக்கடை வடக்கூர் தூய பேட்ரிக்ஸ் ஆலயத்தில் இன்று ஆராதனை முடிந்து வெளியே வந்தவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

thoothukudileaks 29-1-2023

photo news by Roja arunan 


தூத்துக்குடியில் கிறித்தவ பாதிரியாருக்கு கொலை மிரட்டல் தூத்துக்குடி அதிமுக பிரமுகர் உட்பட 8பேர் மீது பாதிரியார் புகார் எதிரொலி இன்று தூத்துக்குடி மட்டக்கடை வடக்கூர் தூய பேட்ரிக்ஸ் ஆலயத்தில் இன்று ஆராதனை முடிந்து வெளியே வந்தவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.  

தூத்துக்குடி மட்டக்கடை வடக்கூர் தூய பேட்ரிக்ஸ் ஆலயத்தில் இன்று ஆராதனை முடிந்து வெளியே வந்தவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.



தாக்கப்பட்டவர்  சேகர கமிட்டி உறுப்பினர் குமார் மணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இது பற்றி புகார் காவல் துறையில் தெரிவித்துள்ளார்கள். 

இதில் தூத்துக்குடி அதிமுக பிரமுகர் இரா.ஹென்றி யும் சம்பந்தப்பட்டு இருப்பதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதனால்  சபை உறுப்பினர்கள் ஆராதனை செல்ல வே அச்சப்பட்டு போயுள்ளார்கள்.

இன்று 2023ஜனவரி 29 ஞாயிறு காலை வழக்கம் போல் நற்கருனை ஆராதனை ஜெபம் நடந்தது 

சபைக்கு வந்தவர்களிடம்

ஆலய குருவானவர் மற்றும் சில நிர்வாகிகளை குறித்து அவதூறாக நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.


அதனை செல்போனில் படம் பிடித்த குமார்மணி என்பவரை தாக்கியுள்ளனர்.

சபையினருக்கு அங்கு வழங்கிய பரபரப்பு நோட்டீஸ் 


நோட்டீஸ் பின்பக்கம் 

ஏற்கனவே இந்த மட்ட கடை பேட்ரிக் சர்ச்சில் கடந்த மூன்று நாட்களுக்கு 26 - 1 - 2023 முன்பு  இவ் ஆலயத்தில்  சேகர கூட்டம் நடத்த விடாமல் பிரச்சினை ஏற்பட்டு அங்குள்ள சிலரால் அடிதடி கலவரம் சூழல் காவல்துறை அங்கு வந்ததும் திட்டியபடி பேசி கலைந்து சென்றனர்.


இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல்துறைக்கு தூய பேட்ரிக்ஸ் இணை பேராலயம்சேகர தலைவர்,செல்வின்துரை...

 அதிமுக பிரமுகர் இரா . ஹென்றி உட்பட சிலரின் மீது உடனே நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி காவல் துறையினர் அலெட்சியத்தால் இன்றும் நோட்டீஸ் வழங்கி பிரச்சினை ஏற்படுத்தும் சம்பவம் நடந்துள்ளது என கூறுகிறார்கள்.


தூய பேட்ரிக்ஸ் இணை பேராலயம்சேகர தலைவர்,செல்வின்துரை

காவல்துறை புகார் மனு முழுவிவரமாவது:-

அனுப்புநர்

அருள்திரு.Rev.செல்வின்துரை,

சேகர தலைவர்,

தூய பேட்ரிக்ஸ் இணை பேராலயம்,

தச்சர் தெரு, மட்டக்கடை,

தூத்துக்குடி.

பெறுநர்

காவல் ஆய்வாளர் 

வடபாகம் காவல் நிலையம்,

தூத்துக்குடி.



பொருள் : சேகரமன்ற கூட்டத்தை நடக்கவிடாமல் அவதூறாக பேசி கொலை

மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல் தொடர்பாக.


ஐயா வணக்கம்!


நென்னிந்தி திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் வடக்கூர்

தூய பேட்ரிக்ஸ் இணை பேராலயத்தின் குருவானவராக கடந்த ஆகஸ்ட்

28-08-2022 முதல் பணியாற்றி வருகிறேன்.


 இந்நிலையில் 26-01-2023 அன்று மாலை

ஆலய வளாகத்தில் வைத்து சேகர மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெற

இருந்தது. 

அப்போது எங்கள் 

சேகரத்தின் உறுப்பினரும் திருமண்டல முன்னாள்

லே செயலளருமான S.D.K.ராஜன் அவர்களின் தூண்டுதலின் பேரில் எங்கள்

திருச்சபையை சேர்ந்த R.ஹென்றி (சபையில் எந்த பொறுப்பிலும் இல்லை).

கோயில் பிச்சை, .1.S.தேவராஜன், .R.டேவிட் வசந்தகுமார்,

.M.G|ஞானசிகாமணி, .S.அருள்வாசன், .D.ரவி லாரன்ஸ் ஜெபமணி,

சாமுவேல் உள்ளிட்ட 8 பேரும் ஆலய வளாகத்திற்குள் புகுந்து கூட்டத்தை

நடத்தக்கூடாது என்று கூறி என்னை அவதூறாகவும், கீழ்த்தரமான வார்த்தைகளால்

பேசி காவல்துறையினர் முன்பே அடிக்க பாய்ந்து கொலை மிரட்டல் விடுத்தனர்.




பின்னர் நானும் எனது

மனைவியும் பைக்கில் எனது சபையாரின் நிச்சயதார்த்ததிற்கு வெளியே செல்ல போகும் போது, போகவிடாமல் தடுத்து தாக்குதல் நடத்த முயன்றனர். காவல்துறையினர் தடுத்ததால் நானும் எனது

மனைவியும் உயிர் தப்பினோம். 

எனவே தாங்கள் மேற்படி நபர்கள் மீது வழக்கு

பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுத்து எனக்கும் என் குடும்பத்தினருக்கும் தக்க

பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சேகர மன்ற கூட்டம்

நடக்க இருந்த அறையை பூட்டியும் விட்டார்கள். சேகரத்திற்கு தொடர்பில்லாத

அரசியல் கட்சி அடியாட்களையும் செய்தி நிருபர்களையும் ஆலய வளாகத்திற்குள்

அனுமதியில்லை என்று கூறியபின்னும் ஆலய வளாகம் என்று கூடபாராமல்

ரகளையில் ஈடுபட்டனர்.

நாள் 27/01/2023

இடம் : தூத்துக்குடி

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 27 ஜனவரி, 2023

தூத்துக்குடி மட்டகடை பேட்ரிக் சர்ச்சில் டிஷ்யூம் டிஷ்யூம் இரு கோஷ்டிகள் மோதல்

 thoothukudileaks 27-1-2023

photo news by shanmuga Sundaram 

தூத்துக்குடி மட்டகடை பேட்ரிக் சர்ச்சில்  டிஷ்யூம் டிஷ்யூம் சபையிலுள்ள இரு கோஷ்டிகள் மோதலையடுத்து பாதுகாப்பு க்கு வந்த போலீசார்  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



இது பற்றிய செய்தியாவது 

தூத்துக்குடி 1ம் கேட் மட்டக்கடை பேட்ரிக் சர்ச்சில் நேற்று (26-1-20 23 )மாலை 6 மணிி அளவில் மீண்டும்

 தூத்துக்குடி-  நாசரேத் டயோசிஷன் தேர்தலில்  நின்ற இரு அணியினருக்கும்   மோதல்  ஏற்பட்டது. 


தூத்துக்குடி பேட்ரிக் சர்ச்சில்  பாதிரியார் செல்வின்துரை தலைமையில்...

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் சேகர மண்டல கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.. 


இந்த கூட்டத்திற்கு எஸ்.டி.கே.ராஜன், தேவராஜ், கோயில்ராஜ், ரூபன் வேதசிங் ஆகியோருக்கு முறையாக அழைப்பு விடுக்காமலும், அவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால் ஆலய வளாகத்தில் கூட்டம் நடைபெறுவதற்கு முன் பு நால்வர் நீக்கம் தொடர்பாக  எஸ்.டி.கே.ராஜன் தரப்பு ஆதரவாளர்கள் கேள்வி கேட்டு திரண்டனர். ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளை பேசி திட்டிய படி மோதி கொண்டனர் 

இவ் விஷயமறிந்து போலீசார் அப்பகுதிக்கு விரைந்து வந்தார்கள்.


அதன் பின்பும் லே செயலாளர் கிப்சன் தரப்பினருக்கும் எஸ்.டி.கே.ராஜன் தரப்பினருக்கும் போலீசார் முன்னிலையில் கடும் வாக்குவாதம் முற்றியதால் ஆலய வளாகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. 


பின்னர் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இதுகுறித்து டேவிட் வசந்தகுமார் செய்தியாளர்களிடம்   பேசியதாவது :- 

சபைகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு 2021ம் ஆண்டில் சபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு முறையாக அழைப்பு விடுத்தும் சபையாளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு எந்தவொரு உறுப்பினரையும் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்றும் இது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். மேலும், திருமண்டலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவர்களுக்கு எதிராக எங்கள் போராட்டம் தொடரும், என்று கூறினார்.  

தூத்துக்குடி தூய பரி பேதுரு ஆலயத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற கடும் மோதலால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதன், 18 ஜனவரி, 2023

தூத்துக்குடியில் 22 ஆயர்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டு திருப்பலி

 thoothukudi leaks 19-1-2023

Photo news by Ravi 

தூத்துக்குடியில் ஆயர்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது .



இதுபற்றிய செய்தியாவது:-

                                            தூத்துக்குடியில் 22 ஆயர்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டு திருப்பலி நேற்று (18-1-2023)மாலையில் நடைபெற்றது.

தமிழக திருச்சபை ஆன்மீக வளர்ச்சி சமூக வளர்ச்சி குறித்து திட்டமிடுவதற்காக தமிழ்நாடு புதுச்சேரி கத்தோலிக்க ஆயர் பேரவை கூட்டம் நடைபெறும்.

இந்த 2023 ஆண்டு தூத்துக்குடி மதுரை மாவட்டம் தொடங்கப்பட்டு நூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆயர் பேரவை கூட்டம் தூத்துக்குடியில் இன்று 19-1-2023  ஆயர் இல்லத்தில் நடைபெறுகிறது.

தூத்துக்குடி திருஇருதயங்களில் பேராலய வளாகத்தில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது திருப்பலிக்கு சென்னை மயிலாப்பூர் ஆயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமை தாங்கினார் .



நிகழ்ச்சியில் ஆயர்கள் தாமஸ் அக்குவினாஸ் கோவை ராயப்பன் சேலம் தேவதாஸ் அம்ப்ரோஸ் தஞ்சை அந்தோணிசாமி கும்பகோணம் ஸ்டீபன் அந்தோணி தூத்துக்குடி அந்தோணிசாமி பாளையங்கோட்டை நசரன் கோட்டாறு உள்ளிட்ட 22 மறை மாவட்டங்களை சேர்ந்த ஆயர்கள் பங்கேற்று திருப்பலி நடத்தினர் .



இந்நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர் .