நினைவு நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவு நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 ஜனவரி, 2026

தூத்துக்குடியில் தமிழ்தேசிய போராளி சி. பசுபதிபாண்டியன் 14ம் ஆண்டு வீர வணக்கம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

photo news by Arunan journalist 


தூத்துக்குடி : ஜனவரி 10

தமிழ்தேசிய போராளி சி. பசுபதிபாண்டியன் அவர்களின் 14ம் ஆண்டு வீர வணக்க தினம், ஜனவரி 10ஆம் தேதி தூத்துக்குடி அலங்காரதட்டை பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பெரும் எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற வீர வணக்கம் – குருபூஜை நிகழ்வில்,

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு எம்எல்ஏ, எஸ்.பி. சண்முகநாதன், ராஜேந்திர பாலாஜி, வி.எம். ராஜலட்சுமி, சித. செல்லபாண்டியன், கிருஷ்ணமூரளி, குட்டியப்பா எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பசுபதிபாண்டியனின் நினைவிடத்தில் மலர்தூவி, தீபம் ஏற்றி வீர வணக்கம் செலுத்தினர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


மேலும், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, தமிழ்தேசிய போராளியின் தியாகத்தை நினைவுகூர்ந்தனர்.

இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சி தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் மருதம் மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் நடத்தப்பட்டது.

சந்தனபிரியா பசுபதி பாண்டியர் B.A., மாநில பொதுச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நினைவிடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தமிழ்தேசிய உணர்வை வலியுறுத்தும் உரைகள் இடம்பெற்றன.



நிகழ்ச்சி முழுவதும் உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றதுடன், பசுபதிபாண்டியனின் போராட்ட வாழ்க்கையும், தமிழ்தேசிய விடுதலைக்கான அவரது அர்ப்பணிப்பும் நினைவுகூறப்பட்டது.





வெள்ளி, 17 ஜனவரி, 2025

சுதந்திர போராட்ட தியாகி பெஞ்சமின் 26-வது நினைவு தினம் அனுசரிப்பு

photo news by Arunan journalist 

சுதந்திர போராட்ட தியாகி பெஞ்சமின் 26-வது நினைவு தினம் அனுசரிப்பு

Tamil Nadu updates,

தூத்துக்குடி, ஜன. 17-2025


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அமலிநகரில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற இந்திய சுதந்திர போராட்ட தியாகி பெஞ்சமின் அவர்களின் 26-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.



இந்நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பரதர் குல அமைப்புகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டு, தியாகி பெஞ்சமின் அவர்களின் வெண்கல திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


நினைவு தின நிகழ்ச்சியில் தியாகி பெஞ்சமின் அவர்களின் மூத்த மகன் அசோகன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர். 


இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற தியாகி பெஞ்சமின் அவர்களின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

பேரறிஞர் அண்ணா வின் 55-வது நினைவு நாள் தூத்துக்குடியில் அரசியல் கட்சிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

thoothukudileaks 3-2-2024

பேரறிஞர் அண்ணா வின் 55-வது நினைவு நாள் தூத்துக்குடியில் அரசியல் கட்சிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .



இது பற்றிய செய்தியாவது:-

அதிமுக 

முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா  55 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று  காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட  செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன்  தலைமையில் பழைய முனிசிபல் அலுவலக வளாகத்தில் உள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது



இந்நிகழ்ச்சியில்... அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திமுக 

அண்ணா நினைவு நாளை யொட்டி தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.

 

பேரணியில்...

      தூத்துக்குடி அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ராஜாஜி பூங்கா முன்பிருந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அலங்காிக்கப்பட்ட அண்ணா படத்துடன் அமைதி ஊர்வலம் புறப்பட்டு புதிய மாநகராட்சி அருகிலுள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்தனர். 

நிகழ்ச்சியில் மேயர் ஜெகன்பெரியசாமி மற்றும் திமுக நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

அதிமுக வர்த்தக அணி

தூத்துக்குடியில் அண்ணா நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார். 



     தூத்துக்குடி அண்ணா 55வது நினைவு தினத்தையொட்டி  அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார் 

இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.