போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 மார்ச், 2026

தூத்துக்குடியில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 Tamil Nadu updates, photo news by Arunan journalist 

தூத்துக்குடி: மார்ச் 17

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் போதைப் பொருட்கள் புழக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்தத் தவறியதாக குற்றம் சாட்டி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து தூத்துக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

thoothukudileaks


thoothukudileaks

thoothukudileaks


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவின்பேரில், தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகிலுள்ள எம்.ஜி.ஆர் திடலில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன்   மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளர் கடம்பூர் செ. ராஜு எம்எல்ஏ  ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.


கண்டன ஆர்ப்பாட்டம் வீடியோ பார்க்க 

ஆர்ப்பாட்டத்தில் கழக வர்த்தக அணி செயலாளர் சி.த. செல்லபாண்டியன், எம்.ஜி.ஆர் அணி துணைச் செயலாளர் ஆறுமுக நயினார், அமைப்பு செயலாளர் சின்னத்துரை, அவை தலைவர் திருப்பாற்கடல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

thoothukudileaks

thoothukudileaks


thoothukudileaks


மேலும் முன்னாள் மத்திய கூட்டுறவு தலைவர் சுதாகர், முன்னாள் எம்.பி ஜெயசிங் தியாகராஜ் நடராஜ், த.மா.க மாவட்ட தலைவர் விஜயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ மோகன், பொருளாளர் சேவியர், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ரவீந்திரன், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூமணி மற்றும் சுகந்தன் ஆதித்தன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாசரேத் ஜூலியட், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் போக்குவரத்து கல்வி குமார்,வின்சென்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் மாவட்ட மற்றும் ஒன்றிய, பகுதி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

வியாழன், 12 மார்ச், 2026

வேடநத்தம் மாணவி படுகொலை கண்டித்து தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

Tamil Nadu updates

தூத்துக்குடி லீக்ஸ் — 12 மார்ச் 2026, வியாழக்கிழமை


thoothukudileaks


தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய தொழிலாளி  சுப்புராஜ் —  காளீஸ்வரி தம்பதியினரின் இரண்டாவது மகள் பிளஸ் 2 பள்ளி மாணவி  கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks


 இந்த மிகவும் கொடூரமான படுகொலையை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரியும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முழு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கமும் இணைந்து 12-3-2026 அன்று தூத்துக்குடி அண்ணா நகர் 7வது தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

thoothukudileaks


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் வீராங்கனை அமைப்பின் தலைவருமான பேராசிரியர் பாத்திமா பாபு  உரையாற்றுகையில், ...

தென் மாவட்டங்களில் இளம் மாணவிகள் மீதான வன்முறை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது மிகவும் வேதனையான விஷயம் என்றும், இதற்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

thoothukudileaks



ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரும் மாவட்ட தலைவரும் ஆன தோழர் மின்னல் அம்ஜத்  கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். 

விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி பிரவீனா அவர்களின் அலட்சிய போக்கை கண்டித்து பேச்சாளர்கள் கடும் கோபம் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மதுரை — தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலை என்னும் இடத்தில் சுமார் ஐந்து மணி நேரம் தொடர் மறியல் நடைபெற்றது. 

thoothukudileaks

thoothukudileaks


உண்மையை கண்டறியும் நோக்கில் தமிழக வணிகர்களின் மத்திய சங்கத்தின் மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான தெர்மல் ராஜா , ..நெய்தல் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் நெய்தல் அன்டோ  உடன் வந்து மாணவி பிரதீபாவின் பெற்றோரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் வழங்கினர். 


காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கொலையாளிகளை நெருங்கிவிட்டதாகவும் அன்றே கைது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதனை ஏற்று போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் படுகொலைச் சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், மாணவர்களிடையே பெருகிவரும் போதை பழக்கங்களை கண்டறிந்து பள்ளிகளில் ஒழுக்க கல்வி வழங்க வேண்டும் என்றும், போதை பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் போராட்ட குழுவின் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை கொடுக்கப்பட்டது.

தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்கள் பட்டினி போராட்டம்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் ஆதரவு த

Tamil Nadu updates,

தூத்துக்குடி, மார்ச் 12:

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வரும் தொடர் பட்டினி போராட்டம் இன்று (12-3-2026) இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை சந்தித்து ஊக்கமளித்தனர். 

thoothukudileaks


குறிப்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு, புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் மா. மாரிசெல்வம், மாவட்ட துணை செயலாளர் அந்தோணிச்சாமி ஆகியோர் போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்தனர்.

மேலும், தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களது முழு ஆதரவும் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் ஏஐசிசிடியு (AICCTU) தொழிற்சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

thoothukudileaks




இது தொடர்பாக ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மாவட்ட தலைவருமான மின்னல் அம்ஜத் நன்றி தெரிவித்தார்.

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடியில் 7 கல்லூரிகளை சேர்ந்த 150 பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் பரபரப்பு

Tamil Nadu updates  photo news by Arunan journalist 

தூத்துக்குடி, பிப்.13:

அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டிற்கான ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடியிலும் இன்று பரபரப்பான போராட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


கல்லூரி ஆசிரியர்களுக்கான பணி மேம்பாட்டிற்கான அரசாணை எண் 5 கடந்த 11.01.2021 அன்று வெளியிடப்பட்டது. 


இதன்படி அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு 5 ஆண்டுகள் கடந்தும், பணி மேம்பாடு ஆணை வழங்கப்பட்ட நிலையிலும், ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்படாமல் வாய் மொழி உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

thoothukudileaks


கடந்த டிசம்பர் மாதம் உயர்கல்வித்துறை அமைச்சரை சந்தித்தபோது, ஜனவரி மாத ஊதியத்தில் தொகை சேர்க்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், ஜனவரி மாத சம்பளத்தில் அது சேர்க்கப்படவில்லை. இதனை கண்டித்து மூட்டா மற்றும் ஏயூட்டி அமைப்புகளின் சார்பில் கடந்த 16 நாட்களாக தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

thoothukudileaks


இதனையடுத்து, 05.02.2026 அன்று உயர்கல்வித்துறை அமைச்சர் சங்க பொறுப்பாளர்களை அழைத்து பேசி, பிப்ரவரி மாத சம்பளத்தில் தொகை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் ஒரு வாரம் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாததை கண்டித்து, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் மூட்டா மூன்றாம் மண்டல பொருளாளர் லெனின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. TNGEA மாநில துணைத் தலைவர் முருகன் தொடக்க உரையாற்றினார். மூட்டா மத்திய இணைப் பொதுச் செயலாளர் சிவஞானம் ஆர்ப்பாட்டத்தின் நோக்க உரையாற்றினார்.

TNPTF மாவட்ட செயலாளர் ஆனந்தி, TANSTAC மண்டல செயலாளர் கணேசன், SFI மாவட்ட செயலாளர் ராம்குமார் ஆகியோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர். TNGEA மேனாள் இணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன் நிறைவுரையாற்றினார். மூன்றாம் மண்டல செயற்குழு உறுப்பினர் வேல்குமார் நன்றியுரை ஆற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 7 கல்லூரிகளைச் சேர்ந்த 150 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்குவதோடு, அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சனி, 23 ஆகஸ்ட், 2025

சுதந்திர போராட்ட தியாகி பெஞ்சமின் இன்று 106 வது பிறந்த நாள்

 🤷🏻‍♀️ _தூத்துக்குடி லீக்ஸ்_

23-8-2025 சுதந்திர போராட்ட தியாகி பெஞ்சமின் இன்று 106 வது பிறந்த நாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.-

தூத்துக்குடி மாவட்டம்

தியாகி பெஞ்சமின் வாழ்க்கை வரலாறு


பிறப்பு மற்றும் குடும்ப பின்னணி

தியாகி பெஞ்சமின் அவர்கள் 1919-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், ஆலந்தளையில், ஒரு ஏழை மீனவர் குடும்பத்தில் பிறந்தார். வாழ்வு மிகவும் வறுமையான சூழலில் இருந்தபோதும், அவருக்கு சிறுவயதிலிருந்தே தேசபக்தி ஆழமாக வேரூன்றியது.



கல்வி நிறுத்தமும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடும்...

அக்காலத்தில் நிலவிய பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறை காரணமாக, தனது பள்ளிக் கல்வியைத் தொடர முடியாமல் போனார். 


அதற்குப் பதிலாக, மிக இளமையிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். சுதந்திரப் போராட்ட தலைவர்களான சோமயாஜுலு மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.


சத்தியாகிரகப் போராட்டமும் சிறைத் தண்டனையும்


ஆலந்தளையில் நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டங்களில் கலந்து கொண்டார். இதற்காக பிரிட்டிஷ் ஆட்சியினர் அவரை கைது செய்து, 6 மாதங்களுக்கு சிறைத் தண்டனை விதித்தனர். சிறைவாசம் முடிந்து வெளியேறிய அவர், “பாரத மாதா தேசிய வாலிபர் சங்கம்” என்ற இளைஞர் அமைப்பை ஆலந்தளையில் தொடங்கினார். இதன் மூலம் மதுக்கடைகள் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தார்.


ஒடுக்குமுறை மற்றும் துன்பங்கள்

அவர்மீது ஏழு பொய்க்கேசுகள் பதிவு செய்யப்பட்டு, பல முறை தூத்துக்குடி மற்றும் மதுரை சிறைகளில் அடைக்கப்பட்டார்.


 மேலும், ஆலந்தளையிலிருந்து அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட சுமார் 50 குடும்பங்களை பிரிட்டிஷ் ஆட்சியினர் பலவந்தமாக வெளியேற்றினர். அவர்கள் திருச்செந்தூர் கடற்கரையருகே தஞ்சமடைந்தனர்.


முக்கிய வழக்குகள்

பெஞ்சமின் அவர்கள், பிரிட்டிஷ் அதிகாரி வில்பிரட் லோன் துரை கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர் என குற்றம்சாட்டப்பட்டார். 


அதோடு, குறும்பூர் ரயில்வே நிலையம் எரிப்பு வழக்கு, மெய்ஞானபுரம் சம்பவம் உள்ளிட்டவற்றிலும் தொடர்புபடுத்தப்பட்டு, ஆயுள் தண்டனையையும் பல்வேறு சிறைத்தண்டனைகளையும் பெற்றார்.


சிறப்பான பண்புகள்

அவர் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இதனால், பல இடங்களில் போராட்டம் தொடர்பான தொடர்புகளை விரிவுபடுத்தினார்.


சமூக மற்றும் பொதுப் பணி

சுதந்திரத்திற்குப் பின், ஆல் இந்தியா ஃப்ரீடம் ஃபைட்டர் அசோசியேஷன் (All India Freedom Fighters’ Association) பொதுச் செயலாளராக பணியாற்றினார். 

மேலும், திருச்செந்தூர் அமலிநகரில் அமைக்கப்பட்ட “சுதந்திர ஞாபகப் பாடசாலை” (தியாகி பெஞ்சமின் பள்ளி) அறங்காவலராக இருந்து, கல்வி வளர்ச்சியில் பங்காற்றினார்.


மரியாதைகள் மற்றும் விருதுகள்

அவரது தேசப்பணி மற்றும் தியாகத்தை மதித்து, மத்திய அரசு அவருக்கு “தாமிரபத்திரம்” விருது வழங்கியது.




சுதந்திரத்திற்குப் பின் கூட, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். தனது இறப்பு வரை சமூக அக்கறையுடனும் தேசபக்தியுடனும் வாழ்ந்தார்.




---


👉