வியாழன், 12 மார்ச், 2026

தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்கள் பட்டினி போராட்டம்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் ஆதரவு த

Tamil Nadu updates,

தூத்துக்குடி, மார்ச் 12:

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வரும் தொடர் பட்டினி போராட்டம் இன்று (12-3-2026) இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை சந்தித்து ஊக்கமளித்தனர். 

thoothukudileaks


குறிப்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு, புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் மா. மாரிசெல்வம், மாவட்ட துணை செயலாளர் அந்தோணிச்சாமி ஆகியோர் போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்தனர்.

மேலும், தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களது முழு ஆதரவும் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் ஏஐசிசிடியு (AICCTU) தொழிற்சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

thoothukudileaks




இது தொடர்பாக ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மாவட்ட தலைவருமான மின்னல் அம்ஜத் நன்றி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக