மீனவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீனவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 டிசம்பர், 2024

தூண்டில் வளைவு தான் வேண்டும் தூண்டில் பாலம் அல்ல?அமலி நகர் மீனவர்களுக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்

அமலி நகர் மீனவர்களுக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.



இது பற்றிய செய்தியாவது 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலி நகர் மீனவ மக்கள் 25 நாட்களாக தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 


தமிழக அரசு ரூ. 58 கோடி ஒதுக்கீட்டில் பணிகள் நடைபெறுகின்றன, 


ஆனால் தூண்டில் வளைவு அமைப்பதற்குப் பதிலாக தூண்டில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.


இந்த விவகாரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், அமலி நகர் மீனவர்களுக்கு ஆதரவாக  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். 

தூண்டில் வளைவு தான் வேண்டும்

தூண்டில் பாலம் அல்ல?

அவர் வலியுறுத்தியது, மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பதாகும். 


செவ்வாய், 1 அக்டோபர், 2024

அசால்டாக இருக்க கூடாதுஇலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவோம் பாமக மாநில பொருளாளர் திலகபாமா மீனவர்கள் மத்தியில் பேச்சு

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று(1-10-2024) நடைபெற்ற தருவைகுளம் மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில்  பாமக கட்சியின் மாநில பொது பொருளாளர் திலகபாமா  அசால்டாக இருக்க கூடாதுஇலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவோம் என ஆவேசமாக பேசினார்.



இது பற்றிய செய்தியாவது:-

சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தருவைகுளம் மீனவர்களை  அழைத்துக் கொண்டு  சென்று 22 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள்   விடுவிக்கப்படும் வரைக்கும்   முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொது பொருளாளர் திலகபாமா  தருவை குளத்தில் இன்று நடந்த 22 மீனவர்கள்  குடும்பத்தினரிடம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.



ஆறுதல்!!!

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 22 மீனவர்கள் கடலோர இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டு இலங்கை நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வரும் நிலையில் அந்த 22 மீனவ குடும்பங்களை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா நேரில் சென்று ஆறுதல் கூறினார் .


முற்றுகை!!!

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தை தருவை குளத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடத்தினார்கள்.



இதில் கலந்துகொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா கூறும் போது...

" நீங்கள் எல்லோரும் என்னோடு ஒத்துழைத்து வருகிற திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமைக்குள் ஒரு நாளை குறித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம்"

 

அசால்டாக இருக்க கூடாது?

இதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் முக்கியம் அனைவரும் வரவேண்டும் 

"நான் போகவில்லை என்றால் என்ன என்று அசால்டாக ஒருவரும் இருக்கக் கூடாது நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து போராட வேண்டும்" 


நான் தயார்!!!

22 மீனவர்களும் வெளியே வரும் வரைக்கும் ... இலங்கை தூதரகம் வாயிலில்  உட்காருவதற்கு நான் தயாராக இருக்கிறேன் உங்களுடைய ஒத்துழைப்பு எனக்கு தேவை 


ஏற்கனவே மூன்று மாதங்கள் ஆகிவிட்டது சாப்பாடு இல்லாமல் நாம் பட்டினியோடு இருக்கின்றோம்.


 இதுவரை  மாநில அரசு மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை 


எனவே இந்த போராட்டத்திற்கு நீங்கள் வருவீர்களா என்று கேள்வி கேட்டார்?

கண்ணீர்!!!

 அனைவரும் நாங்கள் வருகிறோம் நீங்கள் கூப்பிடுகிற இடத்திற்கு நாங்கள் வருகிறோம் என்று கண்ணீருடன் உறுதி அளித்தனர் 

பாமக மறந்து விடுங்கள்!

எங்களது கட்சியை எல்லாம் மறந்து விடுங்கள் நாளை தமிழகத்தில் எந்த மூளை முடுக்கிலும் உள்ள மீனவர்கள் பாதிக்கப்படக்கூடாது இந்தக் கடல் இலங்கை மீனவர்களுக்கும் சொந்தமாக இருக்க வேண்டும் தருவை குளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு தீர்வு வந்ததாக இருக்க வேண்டும் .


இந்த  போராட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்கிறோம் .


நீங்கள் வந்தால் மட்டும் போதும் உங்களை அழைத்து செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நாங்கள் செய்கிறோம் நமக்கு  தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் பேசினார்

கை தட்டல்!!!

 கூட்டத்தில் கலந்து கொண்ட தருவைகுளம் கிராம மக்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்கள் கைகளை  தட்டி  ஆதரவு தெரிவித்தனர்




பின்னர் ... திலகபாமா  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்....!


எங்களைப் போன்று தான் இலங்கையில் உள்ள மீனவர்களும் எனவே அவர்களுடைய பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும் .


எங்கள் இரண்டு பேருக்கும் ஆன பிரச்சனைகளை தீர்த்து நாங்கள் சுமுகமாக வாழ்வதற்கு  வழிவகை செய்யுங்கள் 


முதலில்  22 மீனவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் அந்த 22 மீனவர்களுடைய குடும்பத்திற்கும் முதல்வர் பதில் சொல்ல வேண்டும்



 முதல்வர் இந்த பிரச்சனைக்கு தீர்வை நாங்கள் வாங்கித் தருகிறோம் என்று பதில் சொல்ல வேண்டும்


 இல்லை என்றால் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து மீனவ இயக்கங்களையும்  இணைத்து தமிழக மீனவர்கள் இந்திய மீனவர்களாக மதிக்கப்பட வேண்டும்

அடுத்த வாரம்!

 அதற்கான தீர்வு காணப்பட வேண்டும்  என்பதை வலியுறுத்தி 

அடுத்த வாரம் இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும்.

முற்றுகை போராட்டம் அறிவிப்பு!!!

 இந்த அறிவிப்பை பாமக தலைமை அறிவிக்கும் ?

மத்திய அரசுக்கும் மாநில  அரசிற்கும் அன்போடு எடுத்துச் செல்கிறோம் 


எங்களது இயலாமையில் காரணமாக பேசுகின்றோம்.!


 அரசு தயவு செய்து இந்த விஷயத்தில் தலையிட்டு 22 பேரை விடுதலை செய்து தர வேண்டும் 


அடுத்து வரும் காலங்களில் மீனவர்கள் பிரச்சினை தீர்வு காணப்பட வேண்டும்


 கண்டும் காணாமல் உள்ள அரசுகளுக்கு இந்த மீனவர்களின் குரல் கேட்கப்பட வேண்டும் மத்திய அரசின் மானிய விலையில் வழங்கப்பட்ட படகும் இந்த இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது


 இதனை வன்மையாக கண்டிக்கிறோம் 


புதிதாக பதவி ஏற்றுள்ள ஜனாதிபதி அவர்கள் மீனவர்களின் பிரச்சனை குறித்து மீனவர்களை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் 


இந்திய அரசும் இலங்கை அரசும் உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும் 


இல்லை எனில் இலங்கை தூதரகம் முன்பு கிடப்பதற்கு தயாராக இருக்கிறோம் எங்களுக்கு தீர்வு சொல்லுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்


இந்த பேட்டியின் போது தருவைகுளம் ஆலய பங்குத்தந்தை வின்சென்ட், ஊர் கட்டளைதாரர் மகாராஜன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஊர் நிர்வாகிகள் 22 மீனவர்களின் குடும்பத்தினர் என அனைவரும் கலந்து கொண்டனர்

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

மீனவர்கள் கூட்டமைப்பினர் இன்று கவர்னர் சந்திப்பு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என கவர்னர் உறுதி!!!

 ▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

13-8-2024

Photo news by John Bosco 

தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் மீனவ தலைவர்கள் தமிழக கவர்னர் ரவியை சந்தித்தனர்

இதுபற்றி செய்தியாவது 

இன்று 13-8-2024 இராமநாதபுரம்  விருந்தினர் மாளிகையில், 

நாட்டுப்படகு மீனவர்கள் சென்று மேதகு தமிழக  கவர்னரை சந்தித்தனர்.

1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தில்..

 6வது சரத்தில் உள்ள மீன்பிடி உரிமையை செயல்படுத்த மத்திய மாநில அரசுகளை வலியுறுத்த கோரியும், பாரம்பரிய மீன்பிடி கடலில் இலங்கை கடற்படை இந்திய நாட்டுப்படகுகளை பிடிப்பதை தடுக்கவும், பிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் நாட்டுப்படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்த கோரிக்கை வைத்தனர்.




கவர்னர் சந்திப்பில்...

தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு தலைவர் சேனாதிபதி சின்னத்தம்பி, இராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர்கள்  ஜெரோமியாஸ்,  கெம்பிஸ்,  ஏங்கராஜா, குழந்தை நாதன்,  எட்வின்,  சிவக்குமார், ஜான்பிரீட்டோ,  சார்லஸ், பிராங்கிளின் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு சந்தித்தனர்.

      அப்போது ..

மேதகு கவர்னர் ரவி தெரிவித்தாவது:-


 இந்திய நாட்டின் கடல் எல்லையை பாதுகாக்கும் முதல்நிலை காவல் அரனாகவும் இந்திய நாட்டின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாகவும், மக்களுக்கு சத்தான இயற்கை உணவான மீனை கொடுக்கும் மீனவணை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

 எனவே மீனவர்களை பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்தார்.


       ....


திங்கள், 12 ஆகஸ்ட், 2024

மீனவர்களை திரட்டி விரைவில் மிகப்பெரிய போராட்டம்தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகனார் தெரிவித்தார்

 ▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

12-8-2024

Photo news by John Bosco 

தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர்  அன்பழகனார் இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்தார்..


நேரில் சென்று ஆறுதல்!!!

   இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாட்டுப் படகு மீனவர்களின் குடும்பங்களை  தமிழக மீனவர் பேரவையின் தலைவர் அன்பழகனார் சந்தித்து ஆறுதல் கூறினார்.

        இலங்கை சிறையில் உள்ள நாட்டுப்படகு மீனவர்களையும், படகுகளையும் மீட்க அரசு வலியுறுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். 

மீனவர்கள் போராட்டம்!!!

    அதே சமயம் நாட்டுப்படகுகள் இலங்கை கடற்படையால் பிடிக்கப்படுவதை தடுக்க, மீனவர்களை திரட்டி விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்தார்.

        இதில் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு தலைவர் சேனாதிபதி சின்னத்தம்பி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஜெரோன்குமார், மற்றும் தமிழ்நாடு மீனவ பேரவையின் மாவட்ட தலைவர் திரு ரெய்மண்ட், நாட்டுப்படகு மீனவ சங்கத் தலைவர்கள்  கொம்பீஸ், ஜெரோமியாஸ்  ஜான், பேட்டன் உள்ளிட்ட பலர் கூட இருந்தனர்.


      இவன்..

தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு

செவ்வாய், 25 ஜூன், 2024

திமுக அரசின் பித்தலாட்டம்..!! சொன்னது 3 லட்சம் கொடுத்தது 1 லட்சம் மட்டுமே!!!

முதலமைச்சர் மீனவர் நிவாரண நிதியில் திமுக அரசின் பித்தலாட்டம்..!! சொன்னது 3 லட்சம் கொடுத்தது 1 லட்சம் மட்டுமே..!? 


தேசிய மீனவர் கட்சி பொதுச்செயலாளர்சேனாதிபதி சின்னத்தம்பி, அறிக்கை வெளியிட்டுள்ளார் .



அதில் கூறியுள்ளதாவது:-


        கடந்த 15-6-2024 அன்று  இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகு கடலில் மூழ்கி அதிலிருந்து மூன்று மீனவர்கள் இறந்தனர். 


 இவர்களுக்கு.... தமிழ்நாடு அரசு சார்பில் மூன்று லட்ச ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டது.


 ஆனால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியாக  ஒரு லட்சம் மட்டுமே காசோலையாக கொடுக்கப்பட்டுள்ளது.


 முதலமைச்சர் நிவாரண நிதி என சொன்னது 3 லட்சம் ஆனால் கொடுத்தது 1 லட்சம் மட்டுமே..!!

     


வழக்கமாக மீனவர்கள் விபத்தில் இறந்தால் மீனவ சொசைட்டி மூலமாக மீனவர் நல வாரிய இலப்பீட்டு தொகை 2 லட்சம் நிவாரணமாக கொடுக்கப்படும்.


 இந்த தொகை மீனவர்கள் நல வாரியத்துக்கு செலுத்தும் வருட சந்தா ₹20 ரூபாயில் இருந்து எடுத்து இளப்பீடாக ₹2,02,500 கொடுப்பார்கள்.


 இதை முதல்நாள்  கடலில் கண்டெடுக்கப்பட்ட 2 மீனவர்களுக்கு தலா 2,02,500  ரூபாய் காசோலையை வழங்கப்பட்டு உள்ளது. 


அதன்பின் முதலமைச்சர் நிவாரண நிதி 3 லட்சம் என்று அறிவித்தவுடன், தனியாக ஒரு லட்சம் ரூபாய் காசோலை மட்டும் கொடுத்து விட்டு, ஏற்கெனவே கொடுத்த மீனவர் நல வாரிய தொகை 2 லட்சத்தையும் கணக்கில் காட்டி, முதலமைச்சரின் மீனவர் நிவாரண நிதி 3 லட்சம் கொடுக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டு ஒரு பித்தலாட்டத்தை தமிழக மீன்வளத்துறை செய்துள்ளது.


         இந்திய நாட்டிற்கு சுமார் ஒரு லட்சம் கோடி அந்நிய செலாவாணியையும், 3 லட்சம் கோடி உள்நாட்டு செலவானியையும் ஈட்டி தருவது மீனவர்கள் தான். அதேசமயம் 4% சதவீத இந்திய பொருளாதார வளர்ச்சியில் 1% சதவீத பொருளாதார வளர்ச்சியை ஈட்டி தந்து, நாட்டின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மீனவர்கள் திகழ்ந்து வருகிறார்கள். 


       இதில் கிட்டத்தட்ட 25% சதவீதம் தமிழக மீனவர்கள் உழைப்பின் மூலமாக உருவானது. 


இதன் அடிப்படையில்  தமிழக மீனவர்களால் தமிழக அரசுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி வருமானம் கிடைக்கிறது.


 ஆனால் இவ்வளவு பெரிய தொகையை வருமானமாக மீனவர்கள் மூலம் கிடைத்தாலும், அதை பெற்றுக்கொண்டு தமிழக அரசு தொடர்ந்து மீனவர்களை வஞ்சித்து வருகிறது. 


மீனவர்கள் பயன்படுத்தும் டீசலில் இருந்து  மட்டும் அரசுக்கு வரியாக 5000 கோடி வருமானம் வருகிறது. 


இந்த பணம் எல்லாம் எங்கு செல்கிறது..!?

      கள்ளச்சாராய சாவில் இறந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுக்கும் தமிழக அரசு, தன் வயிற்று பிழைப்பிற்காகவும், இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், காற்றோடும், கடலோடும் போராடி மடிந்த மீனவனுக்கு கொடுப்பது வெறும் ஒரு லட்சம் நிவாரணமா..!? 

உயிரை பணயம் வைத்து தமிழக அரசுக்கு ஒரு லட்சம் கோடி வருமானம் ஈட்டி கொடுக்கும் மினவனுக்கு அதில் ஒரு சிறு பகுதியை  நிவாரணமாக கொடுக்க கூட தமிழக முதலமைச்சருக்கு மனமில்லை..!?


 என்பது வருத்தம் கலந்த வேதனையான விஷயம். 

காலம் காலமாக ஓட்டு வங்கியாக மீனவ சமூகத்தை பயன்படுத்தி வரும் அரசியல் கட்சிகளுக்கு மீனவர்களின் துன்பம் தெரிவதில்லை.



     அதேவேளை ரப்பர் தோட்டத்தில் யானை மிதித்து கொல்லப்பட்ட தொழிலாளிக்கு முதலமைச்சர் நிவாரணம் 10 லட்சமும், வனத்துறை வழிகாட்டலில் கீழ் ரப்பர் வாரிய நிவாரணம் 10 லட்சமும்  ஆக மொத்தம் 20 லட்சம் இளப்பீடு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது தமிழக அரசு. 



இதை நாங்கள் வரவேற்கிறோம்.



     அதேசமயம் கள்ளச்சாராய குடித்து இறந்த நபர்களுக்கும், ரப்பர் தோட்ட தொழிலாளிக்கும் எந்த விதத்தில் மீனவன் குறைந்து போய்விட்டான்..!?


 சொல்லப்போனால் அவர்களைவிட 100 மடங்கு அரசுக்கு வருவாயை தன் உயிரை பணயம் வைத்து தமிழக மீனவன் ஈட்டி தருகிறான். 

       கள்ளச்சாராய சாவுகளுக்கு 10 லட்சம், வீணான கொண்டாட்டங்களுக்கு பல கோடி என மீனவர்களின் வரிப்பணத்தை செலவு செய்து கணக்கு காட்டி விட்டு, மீனவர் நிவாரணத்துக்கு மட்டும் பணம் இல்லை என்று சொல்வது நியாயமா..!?


     இதுபோன்று மீனவன் இரத்தம் சிந்தி உழைத்து கொடுக்கும் வரிப்பணத்தை, எல்லோருக்கும் நிவாரணமாக கொடுக்கும் திமுக அரசு, மீனவர்களை மட்டும் புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்..!? 

       எனவே உடனடியாக ...இந்த விஷயத்தை தமிழக முதல்வர் கவனம் செலுத்தி கடலில் மீன் மீன்பிடிக்கும் போது விபத்தில் உயிரிழந்த 3 மீனவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய் உடனடியாக அளிக்க வேண்டும் எனறு தேசிய மீனவர் கட்சி (N.I.S.H.A.D) சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

              இவன்

சேனாதிபதி சின்னத்தம்பி,

பொதுச்செயலாளர்,

தேசிய மீனவர் கட்சி (N.I.S.H.A.D)

தொடர்புக்கு : 72009200000

வியாழன், 18 ஜனவரி, 2024

விசைபடகு மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு மத்திய மாநில அரசுகள் மீட்க வலியுறுத்திமீனவர்கள் ஆலோசனை கூட்டம்

thoothukudi leaks 19-1-2024

photo news by john posco reporter 

பாம்பன் துறைமுகத்தில் இருந்து 16/1/2024 அன்று மீன்பிடிக்க சென்ற இரண்டு விசைப்படகு மற்றும் 18 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடிப்பு மீனவரகள் மத்தியில் பதற்றம் தொற்றியுள்ளது.


பாம்பன் ஆலய வளாகம்


 இது பற்றிய செய்தியாவது

பாம்பன் துறைமுகத்தில் இருந்து

மீன்பிடிக்க சென்ற இரண்டு விசைப்படகு மற்றும் 18 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளனர்

உடனே 18 மீனவர்களை மத்திய மாநில அரசுகள்  மீட்க வலியுறுத்தி தாசன் மற்றும் பேட்ரிக் ஆகியோர் தலைமையில் ரே நேற்று 18/1/2024 காலை 11 மணிக்கு பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன..

1, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 18 இந்திய மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

2, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 18 இந்திய மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் மீட்க மக்களைத் திரட்டி வெகுஜன போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

3, பாம்பன் ஆரோக்கிய மாத ஆலய வளாகத்தில் ஊர்கூடி போராட்டம் வடிவம் குறித்து முடிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டது.

        இதில் 100க்கு மேற்பட்ட விசைப்படகு உரிமையாளர்களும், மீனவ தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்