செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

மீனவர்கள் கூட்டமைப்பினர் இன்று கவர்னர் சந்திப்பு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என கவர்னர் உறுதி!!!

 ▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

13-8-2024

Photo news by John Bosco 

தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் மீனவ தலைவர்கள் தமிழக கவர்னர் ரவியை சந்தித்தனர்

இதுபற்றி செய்தியாவது 

இன்று 13-8-2024 இராமநாதபுரம்  விருந்தினர் மாளிகையில், 

நாட்டுப்படகு மீனவர்கள் சென்று மேதகு தமிழக  கவர்னரை சந்தித்தனர்.

1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தில்..

 6வது சரத்தில் உள்ள மீன்பிடி உரிமையை செயல்படுத்த மத்திய மாநில அரசுகளை வலியுறுத்த கோரியும், பாரம்பரிய மீன்பிடி கடலில் இலங்கை கடற்படை இந்திய நாட்டுப்படகுகளை பிடிப்பதை தடுக்கவும், பிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் நாட்டுப்படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்த கோரிக்கை வைத்தனர்.




கவர்னர் சந்திப்பில்...

தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு தலைவர் சேனாதிபதி சின்னத்தம்பி, இராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர்கள்  ஜெரோமியாஸ்,  கெம்பிஸ்,  ஏங்கராஜா, குழந்தை நாதன்,  எட்வின்,  சிவக்குமார், ஜான்பிரீட்டோ,  சார்லஸ், பிராங்கிளின் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு சந்தித்தனர்.

      அப்போது ..

மேதகு கவர்னர் ரவி தெரிவித்தாவது:-


 இந்திய நாட்டின் கடல் எல்லையை பாதுகாக்கும் முதல்நிலை காவல் அரனாகவும் இந்திய நாட்டின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாகவும், மக்களுக்கு சத்தான இயற்கை உணவான மீனை கொடுக்கும் மீனவணை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

 எனவே மீனவர்களை பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்தார்.


       ....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக