வெள்ளி, 14 மார்ச், 2025

அதிர்ச்சியில் வியந்த போன தூத்துக்குடி வாகனயோட்டிகள் மற்றும் பொதுமக்கள்"போக்குவரத்து காவலரே சாலையை சரிசெய்கிறாரே!"

Tamil Nadu updates,15-3-2025

Photo news by Arunan journalist 


தூத்துக்குடி நான்காவது ரயில்வே கேட் முன்புறம் உள்ள சாலை மோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டு, பெரும் விபத்து ஏற்பட்டது.

 பலர் தடுமாறி விழுந்து கால் முட்டில் காயமடைந்து ரத்தக்காயம் அடைந்தனர்.


இன்று, 15-3-2025 காலை 10 மணியளவில் அந்தப் பகுதியில் போக்குவரத்து பணியில் இருந்த சு.வள்ளி நாயகம், காவல்துறை போக்குவரத்து சிறப்பு உதவியாளர், தனது கடமைக்கு மேல் சென்று சமூகப் பொறுப்புடன் செயல்பட்டார்.



 அருகிலிருந்த மண் மூட்டையை பயன்படுத்தி, குண்டும் குழியும் நிறைந்த சாலையை தற்காலிகமாக சரிசெய்தார்.


வீடியோ பார்க்க...

இதை நேரில் கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் அவ் வழியே நடந்து சென்ற பொதுமக்கள், "போக்குவரத்து காவலரே சாலையை சரிசெய்கிறாரே!" என வியப்பு தெரிவித்தனர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக