தூத்துக்குடி போலீஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூத்துக்குடி போலீஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 மே, 2026

அரிசி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை ? தூத்துக்குடி காவல் துறை அதிரடி

Tamil Nadu update 17-5-2026

தூத்துக்குடி மே17

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்து, 30 கிலோக்கும் மேற்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இது பற்றி செய்தியாவது ..

குளத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உதவி ஆய்வாளர்  ராமலெட்சுமி தலைமையிலான போலீசார் இன்று குளத்தூர் பஜார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அங்குள்ள ஒரு அரிசிக்கடை முன்பு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ...

 ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த வீரசின்னரசு (38), மாரிமுத்து (46) என்பதும், அவர்கள் குளத்தூரைச் சேர்ந்த அரிசிக்கடை உரிமையாளர் பிச்சைமணி (61) என்பவரிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாங்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

thoothukudileaks


அரிசி கடையில்...

இதையடுத்து போலீசார் அரிசிக்கடையில் சோதனை மேற்கொண்டதில், அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


கைது நடவடிக்கை!!!

உடனடியாக போலீசார் பிச்சைமணி, வீரசின்னரசு மற்றும் மாரிமுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து மொத்தம் 30 கிலோ 475 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.10,000 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாழன், 9 ஏப்ரல், 2026

சொத்து தகராறில் அண்ணனை கொலை செய்ய முயற்சி? எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்த குடும்பம்

தூத்துக்குடி, ஏப்.10:

தூத்துக்குடி மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக தம்பி கூலிப்படையினரை வைத்து தன்னை கொலை செய்ய முயற்சி மேற்கொள்கிறார் என குற்றம்சாட்டி, அண்ணன் தனது குடும்பத்தினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks


தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கிராமத்தைச் சேர்ந்த அய்யம்பெருமாளின் மூத்த மகன் சுயம்புலிங்கம், தனது தம்பி அணில் சிவலிங்கம் மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இவர்களுக்கு நான்கு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள் உள்ளனர்.

இதுகுறித்து சுயம்புலிங்கம் கூறுகையில், ...

தனது தம்பி அணில் சிவலிங்கம் பெங்களூரில் தொழில் செய்து வருவதாகவும், அங்கு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டிருந்ததாகவும் குற்றம்சாட்டினார். 

தனது சொத்தை கைப்பற்றும் நோக்கில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும், அந்த வழக்கில் சொத்து தனிப்பட்ட முறையில் தான் சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாகவும் தெரிவித்தார்.

இதனால் ஆவேசமடைந்த அணில் சிவலிங்கம், தனது காரை எரித்துவிட்டு தப்பியோடியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பின்னர் காவல் நிலைய ஆய்வாளர் மாற்றப்பட்டதை தொடர்ந்து மீண்டும் ஊருக்குள் வந்து சொத்தில் பங்கு கேட்டு மிரட்டல் விடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

thoothukudileaks


மேலும் கடந்த 26ஆம் தேதி, வேலாயுதபுரம் அருகே காரில் சென்றபோது, அணில் சிவலிங்கம் மற்றொரு காரில் பின்தொடர்ந்து வந்து, வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.

 “நீ இறந்தவுடன் உன் சொத்தை உன் மனைவி, பிள்ளைகளிடம் கையெழுத்து வாங்கி விற்காமல் விடமாட்டேன்” என்று மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், கடந்த 2ஆம் தேதி வேம்பார் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே கூலிப்படையினரை வைத்து தன்னை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து, விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கூறினார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

இதனால்  தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதனை நேரில் சந்தித்து மனு அளித்ததாகவும், தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாகவும் சுயம்புலிங்கம் தெரிவித்தார். 

திங்கள், 30 மார்ச், 2026

பிரபல தனியார் வங்கி பெயரில் போலி முதலீட்டு மோசடி தூத்துக்குடியில் காவல்துறை எச்சரிக்கை

தூத்துக்குடி லீக்ஸ் | நாளிதழ் செய்தி

தூத்துக்குடி மாவட்டம் : 30.03.2026

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீப காலமாக பிரபல தனியார் வங்கிகளின் பெயரில் “Bank Securities” எனப்படும் போலியான முதலீட்டு திட்டங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றும் இணைய மோசடிகள் அதிகரித்து வருவதாக மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்த மோசடியில் ஈடுபடும் நபர்கள் முதலில் பொதுமக்களை WhatsApp குழுக்களில் இணைத்து, அதிக லாபம் கிடைத்ததாக போலியான தகவல்கள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்து நம்பிக்கை ஏற்படுத்துகின்றனர். பின்னர் அவர்கள் உருவாக்கிய போலியான மொபைல் செயலிகள் மற்றும் வங்கி முதலீட்டு தளங்கள் மூலம் முதலீடு செய்ய வற்புறுத்துகின்றனர். 


இந்த தளங்கள் உண்மையான வங்கி சேவைகளைப் போலவே தோற்றமளிக்கும் வகையில் Bank Logo, Dashboard, Customer Support போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

thoothukudileaks


இதனை நம்பி பொதுமக்கள் முதலீடு செய்த பின்னர், லாபம் அல்லது முதலீட்டு தொகையை திரும்ப பெற முயற்சிக்கும் போது, மேலும் பணம் முதலீடு செய்தாலே அதிக லாபம் கிடைக்கும் என கூறி தொடர்ந்து மோசடி செய்யப்படுகிறது.



பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரை:

சமூக ஊடகங்களில் வரும் அதிக லாபம் தரும் முதலீட்டு விளம்பரங்களை நம்ப வேண்டாம்.

அறியப்படாத லிங்குகள் அல்லது செயலிகள் மூலம் முதலீடு செய்ய தவிர்க்கவும்.

SEBI-ல் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலமாக மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.

DEMAT கணக்கு இல்லாமலே முதலீடு செய்யலாம் என வரும் விளம்பரங்கள் பெரும்பாலும் மோசடி ஆகும்.

உங்கள் DEMAT கணக்கை அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு தளங்களுடன் மட்டுமே இணைக்கவும்.

வங்கி அல்லது நிதி நிறுவன பெயரில் வரும் முதலீட்டு தகவல்களை நேரடியாக அந்த நிறுவனத்துடன் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

புகார் அளிக்கும் வழிகள்:

இத்தகைய சைபர் மோசடிகளில் சிக்கினால் உடனடியாக

 cybercrime.gov.in இணையதளம் லிங் 

 1930 (சைபர் குற்ற உதவி எண்)

மூலம் புகார் அளிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, மேலும் நிதி இழப்பை தவிர்க்க முடியும் எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

ஞாயிறு, 29 மார்ச், 2026

தூத்துக்குடி பெட்டிக்கடையில் ரூ 19 ஆயிரம் மதிப்புள்ள சட்டவிரோத புகையிலை பாக்கு விற்பனை பறிமுதல் கடை உரிமையாளர் கைது போலீஸ் நடவடிக்கை

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடி மாவட்டம் : 29.03.2026

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கையில் ரூபாய் 19,000 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


thoothukudileaks


நேற்று (28.03.2026) வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி நிவேதா தலைமையில் போலீசார், பஜார் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பெட்டிக்கடையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.


சோதனையின் போது, அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கடையின் உரிமையாளரான தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயகுமார் (31) என்பவர் இதற்கு காரணமாக இருப்பது போலீசாரால் உறுதி செய்யப்பட்டது.


இதனைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக விஜயகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூபாய் 19,000 மதிப்புள்ள 14 கிலோ 851 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


இந்த சம்பவம் தொடர்பாக வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனைக்கு எதிராக போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தி புகைப்படங்கள் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 




வெள்ளி, 20 மார்ச், 2026

குளத்தூர் சிறுமி கொலை வழக்கு: 25 காவல்துறையினருக்கு நற்பணி சான்றிதழ்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாவட்டம், மார்ச் 21, 2026

குளத்தூர் காவல் நிலையத்தில் நடைபெற்ற சிறுமி கொலை வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை விரைவாக கண்டறிந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

thoothukudileaks


இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றிய 25 காவல்துறை அதிகாரிகளுக்கு, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணன் இ.கா.ப, நேற்று (20.03.2026) திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நற்பணி சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

video 

இந்தப் பாராட்டைப் பெற்றவர்களில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் சக்திவேல், எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி, சங்கரலிங்கபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அசோக்பாபு, புதூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் காசிபாண்டியன், முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஹரன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

thoothukudileaks

thoothukudileaks


மேலும் தருவைக்குளம், சைபர் குற்றப்பிரிவு, ஆறுமுகநேரி, மாசார்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவல் கட்டுப்பாட்டு அறை பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 25 பேர் இந்த நற்பணி சான்றிதழ்களை பெற்றனர்.

இந்த நிகழ்வில் காவல்துறையினரின் துல்லியமான விசாரணை மற்றும் விரைவான நடவடிக்கை பொதுமக்கள் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகிறது என பாராட்டப்பட்டது.