வெள்ளி, 20 மார்ச், 2026

குளத்தூர் சிறுமி கொலை வழக்கு: 25 காவல்துறையினருக்கு நற்பணி சான்றிதழ்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாவட்டம், மார்ச் 21, 2026

குளத்தூர் காவல் நிலையத்தில் நடைபெற்ற சிறுமி கொலை வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை விரைவாக கண்டறிந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

thoothukudileaks


இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றிய 25 காவல்துறை அதிகாரிகளுக்கு, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணன் இ.கா.ப, நேற்று (20.03.2026) திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நற்பணி சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

video 

இந்தப் பாராட்டைப் பெற்றவர்களில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் சக்திவேல், எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி, சங்கரலிங்கபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அசோக்பாபு, புதூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் காசிபாண்டியன், முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஹரன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

thoothukudileaks

thoothukudileaks


மேலும் தருவைக்குளம், சைபர் குற்றப்பிரிவு, ஆறுமுகநேரி, மாசார்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவல் கட்டுப்பாட்டு அறை பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 25 பேர் இந்த நற்பணி சான்றிதழ்களை பெற்றனர்.

இந்த நிகழ்வில் காவல்துறையினரின் துல்லியமான விசாரணை மற்றும் விரைவான நடவடிக்கை பொதுமக்கள் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகிறது என பாராட்டப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக