தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
சென்னை/டெல்லி, மார்ச் 20:
வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அதிமுக–பாஜக கூட்டணியின் உத்தேச தொகுதி பங்கீடு குறித்த விவரங்கள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, அதிமுகக்கு மொத்தம் 163 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் புரட்சிபாரதம் கட்சிக்கு 1 தொகுதி ‘இரட்டை இலை’ சின்னத்தில் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ‘தாமரை’ சின்னத்தில் 40 தொகுதிகள் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் பாஜக 31 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், கூட்டணி கட்சிகளான ..
புதிய நீதிக்கட்சி – 2,
ஐஜேக – 2,
பார்வேர்ட் ப்ளாக் – 1, பெருந்தலைவர் மக்கள் கட்சி – 1, தமமுக – 2,
புதிய தமிழகம் – 2 ஆகியவற்றுக்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், அமமுகக்கு 9 தொகுதிகள் ‘குக்கர்’ சின்னத்தில் வழங்கப்படுவதோடு, தமாகா 4 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிடும் என்றும், பாமக 17 தொகுதிகளில் ‘மாம்பழம்’ சின்னத்தில் களமிறங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உத்தேச பட்டியல், டெல்லியில் முகாமிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் Edappadi K. Palaniswami மற்றும் இந்திய உள்துறை அமைச்சர் Amit Shah முன்னிலையில் இறுதி செய்யப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
எனினும், இந்த தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக