தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் கப்பலோட்டிய தமிழன் , செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
முன்னதாக தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மெகா ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. அதில் 21 பள்ளிகளைச் சேர்ந்த 320 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
அதில் ஆறு சிறந்த ஓவியங்களை அப்பள்ளி ஓவிய ஆசிரியர் .முரளிதரன் அவர் தேர்ந்தெடுத்தார்
அதில் துவக்கப்பள்ளிகளுக்கான பிரிவில் சாத்தான்குளம் செயின்ட் ஜோசப் பெண்கள் ஆரம்பப் பள்ளி மாணவி நிதர்சனாஸ்ரீ -ன் ஓவியம் முதல் பரிசையும், சி.வா. மாநகராட்சி ஆரம்பப் பள்ளி மாணவன் ராம்சுந்தரின் ஓவியம் இரண்டாவது பரிசையும், ஜின் ஃபேக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி கன்னிகாவின் ஓவியம் மூன்றாவது பரிசையும் பெற்றது.
நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி களுக்கான பிரிவில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மாணவி சமிக்ஷாவின் ஓவியம் முதல் பரிசையும், சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மதுமிதாவின் ஓவியம் இரண்டாம் பரிசையும் சிவந்தா குளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவன் சரணின் ஓவியம் மூன்றாவது பரிசையும் பெற்றது.
பின்னர் ஓவியப்போட்டியில் வென்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரி முதல்வர் கனகராஜ் அவர்கள் வ.உ.சி யைப் பற்றி சிறப்புரை ஆற்றி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் ஆறுதல் பரிசுகளும் பங்கு கொண்ட பள்ளிகளுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினர்களாக பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் கந்தசாமி , பழைய மாணவர்கள் ராஜா, சதீஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர் நிகழ்ச்சிகளை ஆசிரியை.ரமா தொகுத்து வழங்கினார். ஆசிரியை சரஸ்வதி நன்றி கூறினார்.








