தூத்துக்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூத்துக்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 மார்ச், 2025

தூத்துக்குடி மாநகராட்சி – சக்தி விநாயகர் தெருவில் புதிய பைப் லைன் குழாய் பதிப்பு குழப்பம் பொதுமக்கள் ஆவேசம்

 

தூத்துக்குடி மாநகராட்சி – சக்தி விநாயகர் தெருவில் புதிய பைப் லைன் குழாய் பதிப்பு குழப்பம்
பொதுமக்கள் ஆவேசம்

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குள் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த நான்காவது பைப் லைன் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இந்நிலையில், 11வது வார்டு, சக்தி விநாயகர் முடுக்கு சந்து பகுதியில் பல வீடுகளுக்கு புதிய பைப் லைன் பதிக்காமல் விட்டு சென்றதாக புகார் எழுந்துள்ளது. 


பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் 

ஏற்கனவே அந்த பகுதியில் பதிக்கப்பட்ட குழாய்கள் முறையாக இணைக்கப்படாமல் இருப்பதால் குடிநீர் விநியோகத்தில் தடங்கல் ஏற்படும்

தற்போது சக்தி விநாயகர் முடுக்கு சந்தில்  பல வீடுகளுக்கு புதிய லைன் குழாய் போடாமல் விட்டு உள்ளார்கள்



வளைந்து நெளிந்து தாறுமாறாக குழி தோண்டி பைப் லைன் பதிப்பு 


அப் பகுதி பணிகள் எல்லாம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. 

மேலும் பிரச்சினையை அதிகரிக்கின்றன  குற்றம்சாட்டுகின்றனர்.

"சொத்து வரி, குடிநீர் வரி நாங்கள் ஒழுங்காக செலுத்துகிறோம். ஆனால், எங்களுக்கான புதிய பைப் லைன் பதிக்காமல் விட்டுவிட்டனர். 

அதில் தண்ணீர் சப்ளை ஆகும் நிலையில்...குடிநீர் இணைப்பு துண்டிப்பு நிலை ஏற்படும். இதனால் மிகுந்த அவதிக்குள்ளாக நேரிடும்," என பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், மாநகராட்சி பணியில் ஈடுபட்டவர்களிடம் விளக்கம்,கேட்ட போது "உங்கள் வீடுகளுக்கு குழாய் பதிக்க முடியாது. நீங்கள் அமைச்சர் கீதா ஜீவன் அல்லது மேயர் இடம் போய்ச் சொல்லுங்கள்" என ஒப்பந்ததாரர்கள் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.





இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பத்து வீடுகளின் மக்கள், அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்க தயாராகி வருகின்றனர்.

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் அமைப்பில்லாமல் நின்று பயணிகளை ஏற்றும் அவலம்

Tamil Nadu updates,23-12-2024

Photo news by Arunan journalist 

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் அமைப்பில்லாமல் நின்று பயணிகளை ஏற்றும் அவலம்


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில்
தாறுமாறாக நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் அவலம்!!!


இது பற்றிய செய்தியாவது 

தூத்துக்குடி: புதிய பேருந்து நிலையத்தில், சென்னை, திருச்சி, திருப்பூர், கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வதற்கான பேருந்துகள் நடைமேடை கவுண்டரை கடந்து, சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவது போல தாறுமாறாக பேருந்துகளை நிறுத்தி வைத்து  தினமும் பயணிகளை ஏற்றி செல்லும் முறைகேடு நடைபெற்று வருவதாக பொதுமக்களும் வியாபாரிகளும் குற்றச்சாட்டுகின்றனர்.

கடை முன் காலியாக கிடக்கும் நடைமேடை கவுண்டர்கள்?




இந்த நிலை காரணமாக பயணிகள் திண்டாட்டம் அனுபவிக்கின்றனர். “பேருந்துகள் நடைமேடை கவுண்டரில் நின்று பயணிகளை ஏற்ற,  வேண்டும்” என்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கமும் பொதுமக்களும் வலியுறுத்தினர். இதைச் சரிசெய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீதி மீறல்கள்!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையம் உள்ளேயும் பேருந்துகள் நடைமேடை கவுண்டர்களில் தான் நிற்கும்

ஆனால்? தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மட்டும் வீதிமீறல் நடைபெறுகிறது


மேலும் மதுரையில் இருந்து வரும் பேருந்துகள் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம்  அருகே பாலத்தின் அடியில் பஸ் பயணிகள் இறக்கி விட்டு அப்படியே பஸ் பாலத்தில் ஏறி சென்று விடுகின்றனர்

விபத்து 

மூன்றாம் கேட் பாலம் அடியில் பஸ் பயணிகளை இறக்கி விடுவதால் பயணிகள் பாலத்தை கடந்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே அடுத்த பேருந்து செல்ல வேண்டியுள்ளது அப்படி  செல்கையில் விபத்து ஏற்படும் நிலையில் ஏற்படுகிறது

இதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் 

போராட்டம் 


ஏற்கனவே தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வியாபாரம் இன்றி மாநகராட்சிக்கு கடை வரி கட்ட முடியாமல் தவித்துக் வருகிறோம்.

இந்நிலையில் வியாபாரிகள் கஷ்டப்படும் வேண்டும் என நோக்கில் இப்படி நடந்து கொள்வது வேதனை தருகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை இல்லை எனில் வியாபாரிகள் சங்கம் போராட்டத்தில் இறங்கும் என தெரிவித்தனர்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

இலங்கை படையினரை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் தூத்துக்குடி கலெக்டர் இடம் மனு அளித்தனர்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

12-8-2024

இலங்கை படையினர் கைது செய்த தருவை 22 மீனவர்களை விடுவிக்க கோரி தூத்துக்குடி கலெக்டர் இடம் நாம் தமிழர் கட்சி யினர் மனு அளித்தனர்.



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி தருவைகுளத்தை சேர்ந்த 22 மீனவர்களையும் இரண்டு படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.



எனவே இதனை கண்டித்து இன்று 12/8/25 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்   மனு  அளித்தனர்.. 


நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர்

வே.வேல்ராஜ், தலைமையில்... மாவட்ட தலைவர் செயசீலன், பொருளாளர் செந்தில்குமார்,

தூத்துக்குடி தொகுதி செயலாளர் வே. மாரி சிவா,தொகுதி தலைவர்

பாக்கியராஜ், தொகுதி செயலாளர் தாமஸ், ஓட்டப்பிடாரம்

தொகுதி தலைவர்

வைகுண்டமாரி உட்பட தூத்துக்குடி மத்திய மாவட்டம் நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வியாழன், 30 மே, 2024

SKC கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற டீமுக்கு கோப்பை பரிசு பொருட்கள் வழங்கல்

 


தூத்துக்குடியில் SKC  கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற டீமுக்கு கோப்பை பரிசு பொருட்கள் வழங்கினார்கள்.


இது பற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடி மாவட்ட அளவில்  SKC சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது 

கிரிக்கெட்  விளையாட்டு போட்டியின் இறுதி சுற்று நடைபெற்றது .



இறுதி போட்டியில் வெற்றி பெற்ற கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு தூத்துக்குடி ஒன்றிய கவுன்சிலர் இரா. அந்தோணி தனுஷ் பாலன் மற்றும் தூத்துக்குடி மாநகர 14 வது வார்டு திமுக வட்ட செயலாளர் காளி துரை ஆகியோர் பரிசு பொருட்கள்,கோப்பைகள்,விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்கள். 


இந்நிகழ்ச்சியில்... விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் அருள் செல்வம் மற்றும் குழுவினர்கள் இருந்தனர்.

திங்கள், 15 மே, 2023

போதைப் பொருள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் வாட்ஸ்அப் எண் 98409 23723 - க்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளவும் தூத்துக்குடி மாவட்ட S.P பாலாஜி சரவணன் வேண்டுகோள்

 தூத்துக்குடி மாவட்டம் : 16.05.2023


தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலுமாக ஒழிக்க தூத்துக்குடி போதைப் பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை - போதைப் பொருள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல் துணை கண்காணிப்பாளரது அலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண் 98409 23723 என்ற எண்ணிற்கு தெரிவிக்குமாறு பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  கேட்டுக்கொண்டுள்ளார்.




தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலுமாக ஒழிக்க தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்  சிவசுப்பு  மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், பாண்டிச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் தயாரிக்கப்படும் மதுபானங்களை கடத்தி வந்து தூத்துக்குடி மாவட்டத்தில் விற்பனை செய்பவர்கள், சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்பவர்கள், Rectified spirit and spurious spirit  போன்ற கலப்பட மதுபானங்கள் தயார் செய்து விற்பனை செய்பவர்கள், கஞ்சா  மற்றும் கொடிய போதை மருந்து, மாத்திரைகள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் போதைப் பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்  சிவசுப்பு  அலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண் 98409 23723 என்ற எண்ணிற்கு தயங்காமல் தகவல் தெரிவிக்குமாறும், தகவல் தருபவர்கள் பற்றிய விபரம் இரகசியமாக வைக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.