வியாழன், 27 மார்ச், 2025

தூத்துக்குடி மாநகராட்சி – சக்தி விநாயகர் தெருவில் புதிய பைப் லைன் குழாய் பதிப்பு குழப்பம் பொதுமக்கள் ஆவேசம்

 

தூத்துக்குடி மாநகராட்சி – சக்தி விநாயகர் தெருவில் புதிய பைப் லைன் குழாய் பதிப்பு குழப்பம்
பொதுமக்கள் ஆவேசம்

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குள் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த நான்காவது பைப் லைன் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இந்நிலையில், 11வது வார்டு, சக்தி விநாயகர் முடுக்கு சந்து பகுதியில் பல வீடுகளுக்கு புதிய பைப் லைன் பதிக்காமல் விட்டு சென்றதாக புகார் எழுந்துள்ளது. 


பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் 

ஏற்கனவே அந்த பகுதியில் பதிக்கப்பட்ட குழாய்கள் முறையாக இணைக்கப்படாமல் இருப்பதால் குடிநீர் விநியோகத்தில் தடங்கல் ஏற்படும்

தற்போது சக்தி விநாயகர் முடுக்கு சந்தில்  பல வீடுகளுக்கு புதிய லைன் குழாய் போடாமல் விட்டு உள்ளார்கள்



வளைந்து நெளிந்து தாறுமாறாக குழி தோண்டி பைப் லைன் பதிப்பு 


அப் பகுதி பணிகள் எல்லாம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. 

மேலும் பிரச்சினையை அதிகரிக்கின்றன  குற்றம்சாட்டுகின்றனர்.

"சொத்து வரி, குடிநீர் வரி நாங்கள் ஒழுங்காக செலுத்துகிறோம். ஆனால், எங்களுக்கான புதிய பைப் லைன் பதிக்காமல் விட்டுவிட்டனர். 

அதில் தண்ணீர் சப்ளை ஆகும் நிலையில்...குடிநீர் இணைப்பு துண்டிப்பு நிலை ஏற்படும். இதனால் மிகுந்த அவதிக்குள்ளாக நேரிடும்," என பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், மாநகராட்சி பணியில் ஈடுபட்டவர்களிடம் விளக்கம்,கேட்ட போது "உங்கள் வீடுகளுக்கு குழாய் பதிக்க முடியாது. நீங்கள் அமைச்சர் கீதா ஜீவன் அல்லது மேயர் இடம் போய்ச் சொல்லுங்கள்" என ஒப்பந்ததாரர்கள் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.





இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பத்து வீடுகளின் மக்கள், அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்க தயாராகி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக