தூத்துக்குடி மாநகராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூத்துக்குடி மாநகராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 31 ஜூலை, 2026

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றம் மீண்டும் இருக்கை விவகாரத்தில் அதிமுகவில் இருந்து தவெக தாவிய கவுன்சிலர் வெளிநடப்பு

 "தூத்துக்குடி லீக்ஸ்" நாளிதழ

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றம் மீண்டும் இருக்கை விவகாரத்தில் அதிமுகவில் இருந்து தவெக தாவிய கவுன்சிலர் வெளிநடப்பு 

தூத்துக்குடி, ஜூலை 31: தூத்துக்குடி மாநகராட்சியின் மாதாந்திர சாதாரண மாமன்றக் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் மாநகராட்சி மன்ற அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


கூட்டம் தொடங்கியதும், அண்மையில் அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த கவுன்சிலர் மந்திரமூர்த்தி, கடந்த மாமன்றக் கூட்டத்தில் எழுப்பிய இருக்கை தொடர்பான விவகாரத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில் எந்த இடத்திலும் அமராமல் எழுந்து நின்றபடி இருந்தார்.

அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், "மாநகராட்சியில் நீங்கள் இன்னும் அதிமுக கவுன்சிலராகவே உள்ளீர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக மாமன்றக் கூட்டங்களில் தொடர்ந்து வெளிநடப்பு செய்து, பின்னர் வெளியே சென்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள். தயவுசெய்து அமர்ந்து கூட்டத்தில் பங்கேற்கவும். இல்லையெனில், வழக்கம்போல் நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்," என்று தெரிவித்தார்.

thoothukudileaks


இதனைத் தொடர்ந்து கவுன்சிலர் மந்திரமூர்த்தி மாமன்றக் கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தார். 


அதன்பிறகு மாநகராட்சி நிர்வாகம் கொண்டு வந்த அனைத்து தீர்மானங்களும் மாமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு நிறைவடைந்தது. :::


புதன், 8 ஜூலை, 2026

தூத்துக்குடி மாநகராட்சியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

 Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாநகராட்சியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

தூத்துக்குடி, ஜூலை 9:

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சியில் களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டன.

thoothukudileaks


தூத்துக்குடி மாநகராட்சியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகள் வரும் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30, 2026 வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களில் பணியாற்ற உள்ள களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு ஜூலை 9 முதல் 11 வரை மற்றும் ஜூலை 13 முதல் 15 வரை என இரண்டு கட்டங்களாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

thoothukudileaks


மொத்தம் 376 களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு, களப்பணி பயிற்றுநர்கள் மூலம் முதற்கட்ட பயிற்சி இன்று தொடங்கப்பட்டது. இந்த பயிற்சிகள் வ.உ.சி. கல்லூரி, ஏ.பி.சி.வி. மகளிர் கல்லூரி, பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கிரேஸ் பாலிடெக்னிக், விக்டோரியா சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் செயின்ட் மேரிஸ் கல்லூரி ஆகிய மையங்களில் நடைபெற்று வருகின்றன.

பயிற்சியின் போது மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான நடைமுறைகள், தரவுகள் சேகரிக்கும் முறை, தகவல்களின் துல்லியம் மற்றும் களப்பணியின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருமான சி. ப்ரியங்கா, இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

புதன், 24 ஜூன், 2026

தூத்துக்குடியில் முத்து நகரின் பசுமைப் பயணம்” திட்டம் பசுமை நகரை உருவாக்க பங்குதாரர்களுடன் மாநகராட்சி ஆலோசனை

Tamil Nadu updates,தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி  புகைப்படங்கள் செய்தி ரோஜா அருணன் 

தூத்துக்குடி, ஜூன் 24:

தூத்துக்குடி மாநகராட்சியை பசுமை நிறைந்த, எழில்மிகு நகரமாக மாற்றுவதோடு, நகர மக்களின் வாழ்வியல் தரத்தை உயர்த்தும் நோக்கில் “முத்து நகரின் பசுமைப் பயணம்” திட்டத்தின் கீழ் பங்குதாரர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

thoothukudileaks

இக்கூட்டத்தில் வ.உ.சி. துறைமுக சபை, மாவட்ட வனத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, வர்த்தக சங்க பிரதிநிதிகள், தனியார் நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய மாநகராட்சி ஆணையாளர், பிரியங்கா ...

தூத்துக்குடி நகரம் மக்கள் தொகை, போக்குவரத்து மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் தொடர்ந்து முன்னேறி வருவதால் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார். 

வருங்காலம்!!!

வருங்கால தலைமுறைகளின் நலனை கருத்தில் கொண்டு பசுமை மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகரம் டிஜிட்டல் அடித்தளம்!!!

மேலும், இத்திட்டத்தின் மூலம் நகரின் பசுமை மேம்பாட்டிற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதுடன், பராமரிப்பு மற்றும் கண்காணிப்பிற்கான டிஜிட்டல் அடித்தளமும் ஏற்படுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டது. 

பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் உங்கள் கருத்துக்களை அறிவுரை கூறுங்கள்????

பொதுமக்கள், வணிகர்கள், தொழில் முனைவோர், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு அமைப்புகள் தங்களது கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் பங்களிப்புகளை தனித்தனியாகவோ அல்லது ஒருங்கிணைந்த முறையிலோ வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

thoothukudileaks


உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை!!!

திட்டத்தின் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடுதல், பூங்காக்கள் பராமரித்தல், பொது சுவர்களை வண்ணமயமாக்கி விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுதல், சாலைகளில் தூசி அகற்றும் பணிகள், மரங்களுக்கு தண்ணீர் வழங்கும் வசதிகள் ஏற்படுத்துதல், தொழில்நுட்ப ஆதரவு வழங்குதல், விளம்பரப் பலகைகளுக்கான பாதுகாப்பான அமைப்புகள் உருவாக்குதல், பொது கழிப்பறைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் இடுகாடுகளை உயர்தரத்தில் பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் பங்குதாரர்கள் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

thoothukudileaks


கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு தரப்பினரும் திட்டத்திற்கு தங்களது ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.


 இதனைத் தொடர்ந்து திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

– 

சனி, 20 ஜூன், 2026

தூத்துக்குடி மாநகராட்சி அதிரடி ஆய்வு 260 கிலோக்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Tamil Nadu updates 

தூத்துக்குடி, ஜூன் 20:

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்கும் வகையில் சுகாதார அலுவலர் தலைமையில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

thoothukudileaks



இந்த ஆய்வின்போது கருத்தப்பாலம் அருகே செயல்பட்டு வரும் உதயா ஏஜென்சி மற்றும் எட்டையபுரம் மெயின் ரோட்டில் உள்ள அபி எசன்ஸ் உள்ளிட்ட மொத்த விற்பனை கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. 


அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

thoothukudileaks


இதையடுத்து மேற்கண்ட கடைகளில் இருந்து மொத்தம் 230 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விதிமுறைகளை மீறியதற்காக சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.


தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகளில் மொத்தம் 260.25 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.16,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என்றும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



வெள்ளி, 19 ஜூன், 2026

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி முடக்கம்: பொதுமக்கள் வேதனை

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி:

தூத்துக்குடி, ஜூன் 20:


தூத்துக்குடி பழைய அண்ணா பேருந்து நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.57 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட்டு, கடந்த 2023 அக்டோபர் 8ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.


thoothukudileaks


நான்கு தளங்களைக் கொண்ட இந்த நவீன பேருந்து நிலையத்தில் தரைத்தளத்தில் மட்டும் 29 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 


மேலும் 120-க்கும் மேற்பட்ட வணிகக் கடைகள், பயணிகள் ஓய்வறைகள் பாலூட்டும் தாய்மார்கள் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 


தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், குறிப்பாக மாநகரம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

"தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் பாக்ஸ்கள் தற்போது பயன்பாடின்றி ஒரு மூலையில் கிடக்கின்றன." 


thoothukudileaks
செயல்படாமல் ஒன்றாக சேர்த்து கிடக்கும் இரண்டு குடிநீர் பாக்ஸ் 


பேருந்து நிலையம் முழுவதும் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், மாநகராட்சி சார்பில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியாளர்களும் (security) நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் போலீஸ் பூத் அமைக்கப்பட்டு காவல்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடியோ பார்க்க 

இந்நிலையில், பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி தற்போது செயலிழந்த நிலையில் இருப்பதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். 


குடிநீர் வழங்கும் குழாய் இணைப்புகள் உடைக்கப்பட்டதுடன், பேருந்து நிலையத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்த இரண்டு குடிநீர் அமைப்புகளும் அகற்றப்பட்டு ஒரே இடத்தில் செயல்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதனால் பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட நவீன பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு குடிநீர் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


பேருந்து நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பில் இருந்தும், குடிநீர் வசதியை சேதப்படுத்திய சமூக விரோதிகள் யார்? 

ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி முடக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியையும் வேததனையும் ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக குடிநீர் வசதிகளை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆக்ரமிப்பு 

மேலும் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் வணிக கடைகள் அனைத்தும்  தூத்துக்குடி மாநகராட்சி கடைகள் அனுமதி அளித்துள்ள அளவுக்கு மீறி விரிவுபடுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் 



thoothukudileaks





வெள்ளி, 5 ஜூன், 2026

விரைவில் தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் மேயர் பதவி ரிசர்வ் பரபரப்பு மூட் அப்செட்டில் திமுக

Tamil Nadu updates, 

கட்டுரை செய்தியாளர் ரோஜா அருணன் 

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் மேயர் பதவி ரிசர்வ் பரபரப்பு  மூட் அப்செட்டில் தி மு க !!!

தூத்துக்குடி ஜுன் 6

இதுபற்றிய சுவாரஸ்யம் கொஞ்சம்  பார்க்கலாம் ...


தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது அதில்  தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று முதல்வர் ஆக  ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றார் 


சட்ட மன்ற தேர்தலில் தி மு க மற்றும் அ தி மு க தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்ற இறுமாப்புடன் போட்டியிட்ட  இந்த இரண்டு கட்சிக்கும் கூட்டணி மற்றும் தங்கள் கட்சி உடைந்து சேதாரம் சொல்ல முடியாத வலியில் இருந்து வருகின்றன.  


அடுத்த கட்டமாக விரைவில்...மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடத்த வேண்டும் அதற்கான ஆயத்தப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன....


திமுக கோட்டையாக சென்னை தூத்துக்குடி!!!

 கடந்த காலங்களில்  தி மு க கோட்டையாக சென்னையும் தூத்துக்குடியும் இருந்து வந்தது


 கடந்த 2021 உள்ளாட்சி மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற போது தூத்துக்குடி மாநகராட்சி ரிசர்வ் தொகுதி என அறிவிப்பு வெளிவர இருந்தது.

 அதை தூத்துக்குடி ரிசர்வ் தொகுதி என வரவிடாமல் சுயநல ஆதிக்க சக்திகள் தங்களது பண பலத்தால்  கவனிப்பு களால் ? ஆட்சி மற்றும் அதிகாரிகள் பொது நிலைக்கு தூத்துக்குடி மாநகராட்சி மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் 

thoothukudileaks


கடந்த 2021 ல் தூத்துக்குடி மாநகராட்சி ரிசர்வ் தொகுதி ஆக மாறி  ஒடுக்கப்பட்ட சமுகத்தை சேர்ந்தவர் மேயராக பொறுப்பு ஏற்றிருக்க வேண்டியது .


தூத்துக்குடி பதிலாக சென்னை!!!

சுழற்றியடித்த சுனாமி சென்னை மாநகராட்சி பக்கம் விசியது   ரிசர்வ் பகுதி என தூத்துக்குடி மாநகராட்சி மாறுவதற்கு பதிலாக...


சென்னை மாநகராட்சி ரிசர்வ் தொகுதி என அறிவிக்கப்பட்டு திமுக மேயராக பிரியா வந்தார்.


 தற்போது இந்த தடவை தூத்துக்குடி மாநகராட்சி ரிசர்வ் தொகுதி ஆக மாறி பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர் தான் மேயர் ஆக வருவார் என்கிறார்கள் 


கெத்து காட்டும் திமுக!!!

தமிழகத்தில் அதிகப்படியான இடத்தில் முதல்வர் ஜோசப் விஜயின் ஆளும் கட்சி தவெக வெற்றி பெற்று இருந்தாலும் ...


தூத்துக்குடி மாவட்டத்தில்  தி மு க மூன்று எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோர் இப்போது வரை தி மு க கெத்து காட்டி வருகின்றனர்.

தூத்துக்குடி திமுக என்றால்?

தற்போது தூத்துக்குடி  மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி இருந்து வருகிறார்   

இவர் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனின் உடன் பிறந்த தம்பி தான்  தூத்துக்குடியில் திமுக என்றால் மறைந்த முரட்டு பக்தர் பெரியசாமியின் அரசியல் வாரிசுகள் தான்.


வேற யாருக்கும் விட்டுக் தரமாட்டார்கள் என்பது அனைவருக்கும் புரிய வைத்துள்ளார்கள் 

thoothukudileaks


மூடு அப் செட்டில்!!!

வருகின்ற மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவி ரிசர்வ் என ஆகிறது என்றால் இவர்கள் யாரோ பதிவு சுகம் பெற வேலை செய்யனுமா என்ற நிலை வரும் பதவி அதிகாரம் இல்லாத தூத்துக்குடி தி மு க நிச்சயமாக 5 வருடங்கள் தாக்கு பிடிக்க முடியுமா  என அதிர்ச்சியில் மூடு அப் செட்டில் உலவி கொண்டு இருக்கிறார்களாம்   

வீடியோ பார்க்க 

துள்ளி குதிக்கும் ஒரு தரப்பு!!!

தூத்துக்குடி மாநகராட்சி ரிசர்வ் தொகுதியா ஒரு தரப்பு துள்ளி குதித்து கொண்டு இருக்கிறது 

ஏற்கனவே இதுவரை 75 வருடங்களாக  ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகளான காங்கிரஸ் திமுக அதிமுக செய்யாத ஒன்று  தவெக நிகழ்த்தி காட்டியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை  அமைச்சர் பதவி என்பது ஆதிக்க சக்திகளுக்கு தான் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு கிடையாது காங்கிரஸ் திமுக அதிமுக ஆகிய கட்சிகள் வழங்காமல் மறுக்கப்பட்டு  அரசியல் செய்து கொண்டு இருந்தார்கள்.

ஆனால் ?...

இந்த தடவை 2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ரிசர்வ் தொகுதியில் தவெக  எம்எல்ஏவாக வெற்றி பெற்ற மதன் ராஜா அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து முதல்வர் ஜோசப் விஜய் ஆச்சரியப்படுத்தி உள்ளார். 

தூத்துக்குடி லீக்ஸ் க்காக,...

தகவல் கட்டுரை 

செய்தியாளர் 

ரோஜா அருணன் 

புதன், 27 மே, 2026

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் 'காணவில்லை' முதல்வர் ஜோசப் விஜய் புகைப்படம்?

Tamil Nadu updates 27-5-2026

photo news by Arunan journalist 

​காரசாரமான தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம்:  – 48 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

தூத்துக்குடி:மே27

தூத்துக்குடி மாநகராட்சியின் சாதாரண மாமன்ற கூட்டம் இன்று காலை 11 மணியளவில் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டம் பல்வேறு அரசியல் நகர்வுகளுடனும், பரபரப்புகளுடனும் அரங்கேறியது.

​மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.அதிமுக -காங்கிரஸ் கட்சி சேர்ந்த சிலர் கவுன்சிலர்கள் கூட்டரங்கு வரவில்லை..

thoothukudileaks



​48 தீர்மானங்கள் நிறைவேற்றம்:

​கவுன்சிலர்களின் காரசாரமான விவாதங்களுக்கு இடையே, மாநகராட்சியின் பல்வேறு வார்டு மேம்பாட்டு பணிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த 48 முக்கிய தீர்மானங்கள் இன்றைய கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

thoothukudileaks


​தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் 'காணவில்லை' முதல்வர் ஜோசப் விஜய் படம்: கிளம்பும் புதிய சர்ச்சை!

​இன்றைய மாமன்ற கூட்டத்தில் தீர்மானங்களை விட, அரங்கிலிருந்த ஒரு விஷயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்ன நடந்தது?

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் தற்போதைய முதல்வர் விஜய்யின் புகைப்படம் இடம் பெறவில்லை. கடந்த மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களின் போது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதற்கு முன்னதாக முதல்வராக இருந்த மு.கருணாநிதி ஆகியோரின் புகைப்படங்கள் மாமன்ற கூட்ட அரங்கில் தொங்கவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


​தற்போது புதிய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, தற்போதைய முதல்வரின் புகைப்படம் மாமன்ற அரங்கில் வைக்கப்படாதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

​— .

thoothukudileaks


ஒரு முன்னாள் ஆளும் கட்சி சேர்ந்த முக்கிய புள்ளி இன்று  வரவில்லை அவரோ த வெ க கட்சியில் சேர்ந்து பதவி பெறபோவதாக சொல்லப்படுகிறது 

செவ்வாய், 10 மார்ச், 2026

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மை பணியாளர்கள் தொடர் பட்டினி போராட்டம்

Tamil Nadu updates, 

அருணன் செய்தியாளர் 

தூத்துக்குடி, மார்ச் 11:

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மை பணியாளர்கள் சார்பில் தொடர் பட்டினி போராட்டம் புதன்கிழமை (11.03.2026) முதல் தொடங்கப்பட்டது.

இந்த பட்டினி போராட்டம் ஏஐசிசிடியு (AICCTU) தொழிற்சங்க அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. 

தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

thoothukudileaks


போராட்டத்தின் தொடக்க நிகழ்வில் ஏஐசிசிடியு தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் தோழர் சகாயம், மாவட்ட தலைவர் தோழர் மின்னல் அம்ஜத், மாவட்ட செயலாளர் தோழர் சிவராமன், சிபிஐ (எம்.எல்) கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் முருகன், தூய்மை பணியாளர் சங்க தலைவர் தோழர் பொன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் பெண் தோழர்கள் வெங்கடேஸ்வரி, கணபதி, காளீஸ்வரி, சரஸ்வதி ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் இந்த தொடர் பட்டினி போராட்டத்தின் முதல் நாளில் தோழர் மின்னல் அம்ஜத், தோழர் பொன்ராஜ், பெண் தோழர்கள் வெங்கடேஸ்வரி, கணபதி, காளீஸ்வரி, சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

11-3-2026 தூத்துக்குடி தூய்மை பணியாளர்களின் தொடர் பட்டினி போராட்டத்திற்கு ஆதரவாக .... இன்று 

தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் மாநில தலைவர் தோழர் சாமு காந்தி  தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் தோழர் மா கிருஷ்ணமூர்த்தி  மக்கள் அதிகார கழகம் மாவட்ட செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா ஆகியோர் இன்று தூய்மை பணியாளர்கள் தொடர் பட்டினி போராட்டம் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர் 

thoothukudileaks


கோரிக்கைகள் :

2017 ஆம் ஆண்டு GO 62 படி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

தொழிற்சங்க தலைவர் பொன்ராஜ் அவர்களை வேலைநீக்கம் செய்ததை ரத்து செய்து, உடனடியாக மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்.

75 நாட்களாக வேலை வழங்காமல் வைத்திருக்கும் நிலையை நிறுத்தி, அவருக்கு உரிய பணியை வழங்க வேண்டும்.

தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்களின் உரிமைகளை பாதுகாக்க தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளர் விரோதமாக நடைபெறும் செயல்பாடுகளை நிறுத்தி, தொழிலாளர்களுக்கு உரிய நலன்கள் மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.


இந்த தகவலை ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மாவட்ட தலைவருமான தோழர் மின்னல் அம்ஜத் தெரிவித்துள்ளார்.


புதன், 25 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி மாநகராட்சி 2026-27 பட்ஜெட்: ரூ.17,697 லட்சம் வருவாய் இலக்கு!வரவு செலவு அறிக்கை பட்ஜெட் எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு தூத்துக்குடி டாஸ்மாக் கடை வாடகை விடுவது குறித்து திமுக மற்றும் கூட்டணி கவுன்சிலர் கள் கடும் எதிர்ப்பு !! தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய முயற்சிதூசி இல்லா சாலைகளாக' (End to End Paving) எந்தெந்த சாலைகள் பெயர் விவரம்!

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாநகராட்சி 2026-27 பட்ஜெட்: ரூ.17,697 லட்சம் வருவாய் இலக்கு!

தூத்துக்குடி, பிப்ரவரி 26:

தூத்துக்குடி மாநகராட்சியின் 2026-2027 ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவு அறிக்கை இன்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

thoothukudileaks


தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் இன்று அவசர/சாதாரண மன்றக் கூட்டம் மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா துறை மேயர் ஜெனிட்டா மற்றும் மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நகரின் குடிநீர் விநியோகம், சாலை பழுது பார்க்கும் பணிகள், மழைநீர் வடிகால் திட்டங்கள், தூய்மை பணிகள் மற்றும் சொத்துவரி வசூல் நிலைமை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பொதுமக்கள் குறைகள் தொடர்பாக உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

நகரில் நடைபெற்று வரும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்த முன்னேற்ற அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. குறிப்பாக புதிய சாலை அமைப்பு, தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு மேயர் அறிவுறுத்தினார்.

மேலும், அரசு நலத்திட்டங்கள் மக்களுக்கு விரைவாக சென்றடைய நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சில தீர்மானங்கள் ஒருமனதாகவும், சில தீர்மானங்கள் விவாதத்திற்குப் பிறகும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் முடிவில், நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மேயர் வலியுறுத்தினார்.

மூன்று நிதி வகைகளில் உத்தேச வருவாய்:

நடப்பு ஆண்டான 2026-2027க்காக வருவாய் நிதியில் ரூ.298.77 லட்சம், குடிநீர் மற்றும் வடிகால் நிதியில் ரூ.342.79 லட்சம், கல்வி நிதியில் ரூ.327.82 லட்சம் உபரியாக வருவாய் ஈட்டப்படும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வருவாய் நிதி விவரம்:

வருவாய் நிதியில் சொத்துவரி, இதர வரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலம் ரூ.3,802.39 லட்சம், முத்திரை கட்டணம் மற்றும் கேளிக்கை வரியாக ரூ.600 லட்சம், அரசு மானியம் மற்றும் மாநில பகிர்மான நிதியாக ரூ.7,714 லட்சம், 15வது நிதிக்குழு மானியமாக ரூ.1,000 லட்சம், மற்றும் ஏனைய வருமானங்கள் மூலம் ரூ.4,581.03 லட்சம் என மொத்தம் ரூ.17,697.42 லட்சம் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது.

செலவு விவரம்:

சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஊழியர்கள் தொடர்பான செலவினங்களுக்கு ரூ.8,276.75 லட்சம், நிர்வாக செலவினங்களுக்கு ரூ.817.25 லட்சம், சாலை, கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு இயக்க செலவினங்களுக்கு ரூ.6,824 லட்சம், நிதி மற்றும் திட்டமிட்ட செலவினங்களுக்கு ரூ.280.65 லட்சம், பொது நிதி பங்களிப்புக்காக ரூ.1,200 லட்சம் என மொத்த செலவு ரூ.17,398.65 லட்சம் ஆகும்.

இதன்படி வருவாய் நிதியில் ரூ.298.77 லட்சம் உபரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டான 2025-2026 வரவு செலவு அறிக்கையும் திருத்தப்பட்டு இம்மாமன்றத்தில் இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தூத்துக்குடி மாநகராட்சி பட்ஜெட் 2026-27: பொலிவுறும் மாநகரம்! 278 புதிய சாலைகள், ஸ்மார்ட் குடிநீர் திட்டம் - அதிரடி அறிவிப்புகள்!

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சியின் 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாநகரின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளன.

🛣️ சாலை மேம்பாடு மற்றும் போக்குவரத்து

278 புதிய சாலைகள்: நகர்ப்புற சாலை மேம்பாட்டு (TURIP) நிதியின் கீழ் மாநகரம் முழுவதும் 278 சாலைகள் புதிதாக அமைக்கப்படும்.

தூசியில்லா சாலைகள்: NCAP திட்டத்தின் கீழ் கிரேட் காட்டன் ரோடு, பீச் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் 'End to End Paving' முறையில் தூசியில்லா சாலைகளாக மாற்றப்படும்.

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்: வி.வி.டி சிக்னல் முதல் 4-ம் கேட் வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு நடைபாதைகள் ஒழுங்குபடுத்தப்படும்.

தூய்மை காற்று திட்டத்தின் (NCAP) கீழ், தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டமாக 'தூசி இல்லா சாலைகளாக' (End to End Paving) மாற்றப்படவுள்ள சாலைகளின் விவரங்கள் இதோ:

​கிரேட் காட்டன் ரோடு

​வடக்கு பீச் ரோடு

​தெற்கு பீச் ரோடு

​கீழரத வீதி

​குறிஞ்சி நகர்

​பாளை ரோடு

​வி.வி.டி சிக்னல்

​இந்தச் சாலைகளில் ஓரங்களில் மண் படிவதைத் தடுக்கவும், வாகனங்கள் செல்லும்போது தூசி எழாமல் இருக்கவும் முழுமையாக நடைபாதை வரை தார் அல்லது கற்கள் பதிக்கப்பட்டு (End to End) சீரமைக்கப்படும்..

மிதிவண்டி பிரத்யேக வழித்தடம்: ரஹ்மத் நகர், கடற்கரை சாலை மற்றும் பக்கில் ஓடை பகுதிகளில் மோட்டார் இல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்க தனி வழித்தடங்கள் அமைக்கப்படும்.

💧 குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள்

24x7 ஸ்மார்ட் குடிநீர் திட்டம்: மாநகரின் 10 வார்டுகளில் முன்னோட்டமாக 24 மணி நேர குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதனை கண்காணிக்க SCADA தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்.

BIO CNG திட்டம்: கழிவுகளில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

பாதாள சாக்கடை விரிவாக்கம்: விடுபட்ட பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம் விரிவுபடுத்தப்படும்.

🏫 கல்வி மற்றும் இளைஞர் நலன்

நவீன நூலகங்கள்: மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காகப் புதிய நூலகங்கள் மற்றும் வாசிப்பை ஊக்குவிக்க 'The Hindu' நாளிதழ் வாரந்தோறும் வழங்கப்படும்.

விளையாட்டு மையங்கள்: அம்பேகர் நகரில் தினசரி சந்தை, கிரிக்கெட் மைதானம், ஸ்கேட்டிங் தளம் மற்றும் வில்வித்தை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

தற்காப்பு கலை: மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்குத் தற்காப்பு கலை பயிற்சிகள் வழங்கப்படும்.

🌳 சுற்றுச்சூழல் மற்றும் பொழுதுபோக்கு

பசுமைத் தூத்துக்குடி: 100 ஏக்கர் பரப்பளவில் மியாசாகி காடுகள், 50 ஏக்கர் பரப்பளவில் பனை காடுகள் மற்றும் 5 இடங்களில் 'தருவைக்குளம்' மாடலில் மினி கோபுர விளக்குகளுடன் பூங்காக்கள் அமைக்கப்படும்.

செங்குத்து தோட்டம்: மாநகரின் அழகுக்காகப் பல இடங்களில் Vertical Gardening மற்றும் வண்ண ஒளிவிளக்குகள் அமைக்கப்படும்.

🏢 இதர முக்கிய அறிவிப்புகள்

CCTV கண்காணிப்பு: பக்கில் ஓடைப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதைத் தவிர்க்க நவீன CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

விற்பனை மண்டலங்கள்: நடைபாதைகளில் இடையூறாக இருக்கும் கடைகளை முறைப்படுத்தத் தனி விற்பனை மண்டலங்கள் (Vending Zones) உருவாக்கப்படும்.

இ-ஆபீஸ் திட்டம்: மாநகராட்சி நிர்வாகத்தை வேகப்படுத்த காகிதமில்லா 'E-Office' முறை முழுமையாக அமல்படுத்தப்படும்.

தூத்துக்குடி மாநகரத்தை ஒரு முன்மாதிரி நகரமாக மாற்றும் நோக்கில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு 

பட்ஜெட் எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கொறடா மந்திர் மூர்த்தி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி சுடலைமணி பத்மாவதி  செண்பக செல்வன் ஜெயராணி ஜெயக்குமார் வெற்றி செல்வன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர் 

thoothukudileaks


 டாஸ் மாக் கடை தீர்மானம் நிறைவேற்ற   திமுக கவுன்சிலர் கள்  எதிர்ப்பு !!!

20) தூத்துக்குடி மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட டோபிகான வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் மாவட்ட மேலாளர், டாஸ்மாக் லிட்  கடிதம் ந.க.எண் அ7/127/2025 நாள் 12.12.2025 ன்படி மதுபான சில்லரை விற்பனை கடை செயல்படுவதற்கு மாத வாடகையாக ரூ.12,000/- GST உப்பட நிர்ணயம் செய்து தனி மின் மீட்டர் வசதியுடன் 500 சதுரடியில் கட்டிடம் வாடகைக்கு ஒதுக்கீடு செய்து தருமாறு கோரப்பட்டுள்ளது.


டோபிகானா வணிக வளாகத்தில் கடை எண்கள் G3. G4 மற்றும் G5 ஆகிய மூன்று கடைகள் கடைகளின் ஆரம்ப மாத வாடகை தொகை ரூ.4,050.4,600.4600 = ரூ.13,250/-18 சதவீதம் GST ரூ.2385- மொத்தம் ரூ. 15635/- ஆகும். டோபிகானான வணிக வளாகம் 18 முறை ஏலம் மற்றும் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டும். ஒரு சில உயர்ந்தபட்ச ஒப்பந்தபுள்ளி கேள்விதாரர்களும் பயன்படுத்த இயலாமல் வணிக வளாகம் செயல்பாட்டிற்கு வராத நிலையிலும், மாநகராட்சியின் ஆரம்ப மாத வாடகை தொகையினை விட குறைவாக ரூ.12000/ GST உப்பட நிர்ணயம் செய்துள்ளது 

thoothukudileaks
எதிர்ப்பு 

தூத்துக்குடி லீக்ஸ்
எதிர்ப்பு தெரிவித்த திமுக மற்றும் கூட்டணி கவுன்சிலர்கள் 


இந்த தீர்மானம் நிறைவேற்ற திமுக கவுன்சிலர்கள் கந்தசாமி ராமகிருஷ்ணன் ரெக்ஸ்லீன் மற்றும் கூட்டணி கவுன்சிலர் கள் எதிர்ப்பு தெரிவித்து மேயர் இடம் முறையிட்டனர் 



- தூத்துக்குடி லீக்ஸ் நிருபர்

செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பா.ஜ.க. வழக்கறிஞர் மனு!

photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பா.ஜ.க. மனு!

தூத்துக்குடி, பிப். 18:

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடங்களை மீட்கக் கோரி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி -ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

சிறுவர் பூங்கா இடத்தில் ஆக்கிரமிப்பு:

பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பிதேலிஸ் அளித்துள்ள அந்த மனுவில் கூறியிருப்பதாவது: 

தூத்துக்குடி மாநகராட்சி 47-வது வார்டு, லயன்ஸ்டவுன் ரோச் காலனி 4-வது தெருவில் சிறுவர் பூங்கா அமைய வேண்டிய இடத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அங்கு கார் பார்க்கிங் மற்றும் மீன் கம்பெனி அமைத்துச் செயல்பட்டு வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, அந்த இடத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

thoothukudileaks

வீடியோ பார்க்க 

தொடரும் ஆக்கிரமிப்புகள்:

அதேபோல், ரோச் நகர் 2-வது தெருவில் தனியார் ஹோட்டல் நிர்வாகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மாநகராட்சி இடத்தையும், ரோச் காலனி 3-வது தெரு முதல் 6-வது தெரு வரை உள்ள 40 அடி அகலச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

thoothukudileaks

thoothukudileaks


பாஜக வழக்கறிஞர் பிதேலிஸ் பரபரப்பு பேட்டி 

சமூக நலக் கூடம் அமைக்க கோரிக்கை:

ரோச் காலனி 2-வது தெருவில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் பொதுமக்களின் வசதிக்காக ஒரு சமூக நலக் கூடம் அமைத்துத் தர வேண்டும். மேலும், மாநகராட்சிக்குச் சொந்தமான நிலங்கள் எங்கெங்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தி, அந்த இடங்களை மீட்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

​இந்தக் கோரிக்கைகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திங்கள், 16 பிப்ரவரி, 2026

சுவர் ஏறி குதித்து நேரில் ஆய்வு செய்த மேயர் Jagan Periyasamy Thoothukudiயில் 47 ஆண்டுகள் ஆக்கிரமிப்பு கண்டறிந்த பரபரப்பு

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி 16-2-2026


📢 சமூக வலைதள பதிவு (Facebook / WhatsApp):

🚨 47 ஆண்டுகள் ஆக்கிரமிப்பு வெளிச்சம்!

தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி நிலம் 47 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிப்பு!

மேயர் நேரில் சென்று சுவர் ஏறி ஆய்வு செய்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருள்.

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு புதிய சாலை அமைக்கும் பணி தொடக்கம்.

📍 எட்டயபுரம் ரோடு – மீனாட்சிபுரம் – ஜெயராஜ் ரோடு இணைப்பு விரைவில்!

#Thoothukudi #MayorAction #EncroachmentRemoved #ThoothukudiLeaks

thoothukudileaks


தூத்துக்குடி பெ :16

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எட்டயபுரம் ரோட்டில், தனியார் ஹோட்டல் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி நிலம் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து, மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


ஆய்வின் போது..., கடந்த 47 ஆண்டுகளாக மூன்று தனிநபர்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. ஆக்கிரமிப்பாளர்கள், “இது எங்களது சொந்த இடம்” என்றும், நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்தனர். 

thoothukudileaks


எனினும், தூத்துக்குடி மாநகராட்சி ஆவணங்களை ஆய்வு செய்ததில் குறித்த நிலம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்பதும், அது ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அதிகாரிகளின் முன்னிலையில் உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

 புதிய சாலை, எட்டயபுரம் ரோடு – தனியார் சுரேஷ் அகாடமி வடபுறம் – மீனாட்சிபுரம் அரவிந்த் கண் மருத்துவமனை வழியாக ஜெயராஜ் ரோடு வரை செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், 3ம் கேட் மேம்பாலம் கீழ், அருள் ராஜ் தனியார் மருத்துவமனை அருகே பாழடைந்த கட்டிடம் ஒன்றும் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்தது கண்டறியப்பட்டது. அதையும் அகற்றி அங்கு சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைந்தால், மீனாட்சிபுரம் வழியாக பழைய பேருந்து நிலையத்தை பொதுமக்கள் எளிதில் சென்றடைய முடியும்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்தவர்களில் ஒருவர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியை முழுமையாக ஆய்வு செய்ய சுவர் ஏறி குதித்து நேரில் பார்வையிட்ட மேயரின் நடவடிக்கை தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த ஆய்வின் போது, திமுக வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், கதிரேசன், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் பல அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.


photo Arunan journalist 

news by sunmugasuthram press club president 

செய்தி புகைப்படங்கள் வீடியோ செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, பிப்ரவரி 9:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் இன்று (09.02.2026) காலை 10 மணியளவில் காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைக்கப்பட்டது.

thoothukudileaks


இந்த திட்டத்தின் தொடக்க விழா தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அறிஞர் அண்ணா மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கி திட்டத்தை செயல்படுத்தினர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


விழாவில் பேசிய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூய்மை பணியாளர்களின் காலை உணவு திட்டத்திற்காக ரூ.2 கோடி 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிதி மூலம் தினமும் சத்தான, சுகாதாரமான உணவு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இன்று தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 13இடத்தில் துவக்கி வைத்தனர் 

1)பழைய மாநகராட்சி அலுவலகம் 

2)அறிஞர் அண்ணா மண்டபம் 

3) அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்

4) புதிய பேருந்து நிலையம் ward ஆபீஸ்.

5) ஜோதி நகர் RRC மையம்

6) அம்பேத்கர் நகர் ward ஆபீஸ்.

7) மேட்டுப்பட்டி MCC.

8) கால்டுவெல் காலனி வார்டு ஆபீஸ்.

9) முத்தையாபுரம் வார்டு ஆபீஸ்.

10) JS Nagar ward office.

11) சிதம்பரம் நகர் மாநகராட்சி வணிக வளாகம்.

12) டோபி கானா வணிக வளாகம்.

13) P&T Colony ward office.

தூய்மை பணியாளர்களின் நலனை முன்னிறுத்தி அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி அவர்களின் உடல்நலம் மற்றும் பணித்திறன் மேம்பட உதவும் எனவும், நகர தூய்மை பணிகளில் உற்சாகம் அதிகரிக்கும் எனவும் விழாவில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

ஞாயிறு, 25 ஜனவரி, 2026

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் 77வது குடியரசு தின விழா முன்னாள் கவுன்சிலர் கோட்டு ராஜா பரபரப்பு பேச்சு

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜனவரி 26 :

இந்திய குடியரசின் 77வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது

thoothukudileaks


thoothukudileaks

thoothukudileaks


விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர்  அன்னலட்சுமி கோட்டு ராஜா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேசிய கீதம் முழங்க அனைவரும் கொடியை நோக்கி மரியாதை செலுத்தினர்.

https://youtube.com/shorts/5kayK-3eY8o?si=6LdsKFIsRS78WvWL குடியரசு தின விழாவில் தூத்துக்குடி Ex கவுன்சிலர் கோட்டு ராஜா பரபரப்பு பேச்சு

இந்த நிகழ்வில் மேற்கு மண்டல உதவி ஆணையர் காந்திமதி, S.O. ராஜபாண்டி, A.W. லெனின், A.E. ஜெயபிரசாந்த், A.E. ராகவி, முன்னாள் கவுன்சிலர் கோட்டு ராஜா, மாமன்ற உறுப்பினர்கள், மேற்கு மண்டல மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

குடியரசு தினத்தை முன்னிட்டு மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் முழுவதும் திருவிழா போல் அலங்கரிக்கப்பட்டு, நாட்டுப்பற்று மிக்க சூழலில் விழா சிறப்பாக நடைபெற்றது.


தூத்துக்குடி மாநகராட்சியில் 77வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது

தூத்துக்குடி, ஜனவரி 26 :

தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இந்திய குடியரசின் 77வது ஆண்டு நிறைவை முன்னிட்டு குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ. ஜெகன்  தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேசிய கீதம் முழங்க அனைவரும் கொடியை நோக்கி மரியாதை செலுத்தினர்.

thoothukudileaks


விழாவில் சி. ப்ரியங்கா, இ.ஆ.ப., தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.





குடியரசு தினத்தை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகம் முழுவதும் திருவிழா போல் அலங்கரிக்கப்பட்டு காணப்பட்டது. திருவள்ளுவர் ஆண்டு 2057, தை மாதம் 12ஆம் தேதியன்று நடைபெற்ற இந்த விழாவில், இந்திய குடியரசின் 77வது ஆண்டு நிறைவை தூத்துக்குடி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடினர்.

புதன், 21 ஜனவரி, 2026

தூத்துக்குடியில் மாநகராட்சி வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: ஜன.21

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks


முகாமிற்கு மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த முகாமில் பொதுமக்கள் தரப்பில் சொத்து வரி தொடர்பான கோரிக்கைகள், குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றம், பிறப்பு–இறப்பு சான்றிதழ் திருத்தங்கள் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டன. உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பொதுமக்கள் சேவைகளை பெற்றனர்.

இன்றைய முகாமில் பொதுமக்கள் தரப்பில் மொத்தம் 15 மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பரிசீலனைக்காக ஒப்படைக்கப்பட்டன.

மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 4 ஜனவரி, 2026

தூத்துக்குடி மாநகராட்சியில்கனிமொழி எம்பி பிறந்தநாளில் தூய்மை பணியாளர்களுக்கான முதலமைச்சர் உணவுத் திட்டம் தொடக்கம்

தூத்துக்குடி லீக்ஸ் |நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

தூத்துக்குடி:டிச5

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உணவுத் திட்டம் இன்று (5-1-2026) தொடங்கப்பட்டது.

thoothukudileaks


தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய வளாகத்தில், இன்று காலை 6 மணியளவில் இந்த உணவுத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது.

thoothukudileaks


திட்டத்தின் முதல் நாளான இன்று, தூய்மை பணியாளர்களுக்கு உணவை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் வகையில் இரண்டு அடுக்கு டிபன் பாத்திரம் மற்றும் அதை வைத்துக்கொள்ள பாதுகாப்பான மேக் (bag) வழங்கப்பட்டது.

இந்த மனிதநேயமான திட்டம் தொடங்கப்பட்டதற்கு தூத்துக்குடி மாநகராட்சி பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தனர். தங்களின் அன்றாட பணிக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இந்த உணவுத் திட்டம் அமையப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு, கனிமொழி எம்பி பிறந்தநாளை சமூக நலச் செயல்பாடுகளுடன் இணைத்து கொண்டாடியதாக பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

செவ்வாய், 30 டிசம்பர், 2025

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது: 22 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, டிசம்பர் 31 -

 தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண மாமன்ற கூட்டம் இன்று (டிசம்பர் 31) காலை 11 மணியளவில் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.

மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆணையர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். 

thoothukudileaks


இந்த கூட்டத்தில் மொத்தம் 22 பொருட்கள் ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அம்மா உணவகங்கள் - ஊதிய ஒதுக்கீடு

மாநகராட்சியில் சொந்தமாக எட்டு அம்மா உணவகங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இதில் 67 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மார்ச் 26, 2025 முதல் நவம்பர் 25, 2025 வரையிலான காலத்திற்கு ரூ.53.33 லட்சம் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

இனி நவம்பர் 26, 2025 முதல் மார்ச் 25, 2026 வரையிலான 120 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.325 வீதம் ஊதியம் வழங்க தோராயமாக ரூ.26.13 லட்சம் செலவினம் மேற்கொள்ள மாமன்றம் அனுமதி வழங்கியது.

thoothukudileaks


சிதம்பரநகர்  வணிக வளாகம் காலியாக உள்ள கடை ஏலம்

சிதம்பரநகர் வசதி வணிக வளாகத்தில் உள்ள 31 கடைகளுக்கு ஏலம் நடத்தப்பட்டது. இதில் மூன்று கடைகளுக்கு மட்டும் ஏலம் வந்துள்ளது:

G2 கடை: தீர்மானிக்கப்பட்ட தொகை ரூ.12,600. ம.ரா.இந்திரா என்பவர் ரூ.12,700க்கு உயர்ந்த ஏலம் எடுத்துள்ளார்.

G8 கடை: தீர்மானிக்கப்பட்ட தொகை ரூ.17,720.  M.கணேஷ் நாகராஜன் என்பவர் ரூ.17,810க்கு உயர்ந்த ஏலம் எடுத்துள்ளார்.

G14 கடை: தீர்மானிக்கப்பட்ட தொகை ரூ.21,800.  ரா.மோஷா என்பவர் ரூ.22,000க்கு உயர்ந்த ஏலம் எடுத்துள்ளார்.

மேற்கண்ட மூன்று உயர்ந்த ஏலதாரர்களின் ஒப்பந்தத்தை ஏற்க மாமன்றம் முடிவு செய்தது. மீதமுள்ள 28 கடைகளுக்கு மீண்டும் ஏலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

வாகன நிறுத்துமிடங்கள் - பணியாளர் ஊதியம்

ஜெயராஜரோடு பஸ் நிறுத்தம்: 

இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் ஜூலை 20, 2025 முதல் M/S.பார்க்லெண்ட் என்ற தனியார் நிறுவனம் மூலம் கட்டண வசூல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


மார்ச் 26, 2024 முதல் பிப்ரவரி 25, 2025 வரை CLC பணியாளர் மூலம் ரூ.6.85 லட்சமும், மார்ச் 26, 2025 முதல் ஜூலை 20, 2025 வரை ரூ.3.33 லட்சமும் செலவானது. முன்னாள் பணியாளர்களுக்கான ஊதிய நிலுவை தொகைக்கு மாமன்ற அனுமதி வழங்கப்பட்டது.



தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம்: 

வடக்கு மண்டலத்தில் புதிய பேருந்து நிலைய வாகன வளாகத்தில் மார்ச் 26, 2024 முதல் மார்ச் 25, 2025 வரை ரூ.18.96 லட்சமும், மார்ச் 26, 2025 முதல் நவம்பர் 25, 2025 வரை ரூ.6.79 லட்சமும் செலவானது. அடுத்த ஓராண்டுக்கு (நவம்பர் 26, 2025 முதல் அக்டோபர் 25, 2026) உத்தேசமாக ரூ.1.80 லட்சம் செலவு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

பழைய பேருந்து நிலையம்: 


ஸ்மார்ட் சிட்டி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் மார்ச் 26, 2024 முதல் மார்ச் 25, 2025 வரை ரூ.25.16 லட்சமும், மார்ச் 26, 2025 முதல் நவம்பர் 25, 2025 வரை ரூ.11.48 லட்சமும் செலவானது. அடுத்த ஓராண்டுக்கு உத்தேசமாக ரூ.6.60 லட்சம் செலவு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

ஒப்பந்தக்காரர்களுக்கு காலாவதி பணம் திருப்பி வழங்கல்

பல்வேறு ஒப்பந்தக்காரர்கள் பல ஆண்டுகளுக்கு முன் செலுத்திய முன் வைப்பு மற்றும் பாதுகாப்பு வைப்பு தொகைகளை திருப்பி வழங்க மாமன்றம் ஒப்புதல் அளித்தது:

M/S.Sri Devi Construction: 10 பணிகளுக்கு மொத்தம் ரூ.52,870

வெங்கடேஷ்: 6 பணிகளுக்கு மொத்தம் ரூ.27,740 மற்றும் 2 பணிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட 5% தொகை ரூ.16,757

சுரேஷ்பிரகாஷ்குமார்: ரூ.31,100

T.முருகன்: ரூ.20,000

.முத்துராமலிங்கம்: 

13 ஆண்டுகளுக்கு முன் செலுத்திய வல்லநாடு தாமிரபரணி ஆற்றங்கரை திட்டத்திற்கு மொத்தம் ரூ.2.99 லட்சம்

நில தானப்பத்திரங்கள் ஏற்பு

முள்ளக்காடு கிராமம்: சர்வே எண் 199/7A-ல் 3,565 சதுர அடி பரப்பளவில் P.முருகன், N.ராஜ்சேந்திரன் மற்றும் M.செந்தில் குமார் ஆகியோரின் கிடாப்பிள்ளி நிலம் பிரிப்பு திட்டம் அனுமதிக்கப்பட்டது. சாலை மற்றும் மின் வசதிக்கான இடம் தானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

முள்ளக்காடு கிராமம்: சர்வே எண் 109, 110/1, 110/2-ல் 18,950 சதுர அடி பரப்பளவில்  ராஜ்குமார் மற்றும் கங்கராஜா ஆகியோரின் கிடாப்பிள்ளி நிலம் பிரிப்பு திட்டம் அனுமதிக்கப்பட்டு சாலை மற்றும் மின் வசதிக்கான இடம் தானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

thoothukudileaks


ஈகோ பார்க் - தனியார் நிர்வாகம்

கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஈகோ பார்க், கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின் பொதுமக்கள் பயன்படுத்தாத நிலையில் பராமரிக்கப்படாமல் இருந்தது. தற்சமயம் அழகுபடுத்தும் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு Paddle Boats, Kayaking, Canoeing, Aqua Cycle போன்ற நீர் சாகச விளையாட்டுகளை நடத்துவதற்கு, தமிழ்நாடு சாகச சுற்றுலா சட்டம் 2023-ன்படி, பணியாளர்கள் பயிற்சி, ஊதியம், காப்பீடு, பராமரிப்பு போன்ற அனைத்து செலவுகளையும் மேற்கொண்டு M/S. Run and Ride Park (Thrill Park) என்ற தனியார் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.

thoothukudileaks

thoothukudileaks


வருவாயில் மாநகராட்சிக்கு 25% மற்றும் தனியார் நிறுவனத்திற்கு 75% (ஊதியம், பராமரிப்பு உட்பட அனைத்து செலவும் உட்பட) பங்கீடு அடிப்படையில் முன்னோட்டமாக மூன்று மாத கால அளவிற்கு மட்டும் அனுமதி வழங்க மாமன்றம் ஒப்புதல் அளித்தது.

மீன் மார்க்கெட் கட்டணம் உயர்வு

வடக்கு மண்டலம் சுபார்ராயர் பட்டியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட் வளாகம் புதிய வசதிகளுடன் அழகுபடுத்தி செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மாநகராட்சி வருவாயை பெருக்கும் நோக்குடன், முதல் செலவுகளை ஈடு செய்யும் வகையில், புதிய கட்டிடத்தில் நாள் ஒன்றுக்கு பயன்பாட்டு கட்டணம் ரூ.50 வசூலிக்க மாமன்ற அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு சக்திகளுக்கு அச்சுப்பணியும் அதற்கான செலவும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

பொது கழிப்பறைகள் - பராமரிப்பு ஒப்பந்தம் புதுப்பிப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் இடங்களில் உள்ள பொது கழிப்பறைகளை 24 மணி நேரமும் சுகாதாரமான முறையில் பராமரிக்க குளோப் இன்டர்நேஷனல் சர்வீசஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது.

முத்தம்மாள் காலனி பகுதி: 

நவம்பர் 12, 2025 முதல் நவம்பர் 11, 2026 வரை ஓராண்டு காலத்திற்கு ரூ.1.50 லட்சம் (மாதம் ஒன்றுக்கு) என்ற அடிப்படையில் மொத்த உத்தேச செலவு ரூ.18 லட்சம்.

அழகு இந்திரா நகர் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம்: அதே நிபந்தனைகளில் ரூ.18 லட்சம் செலவில் ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்தம்.

ராஜாஜி பூங்கா, மருத்துவகல்லூரி மருத்துவமனை, ரோச்பூங்கா: இந்த மூன்று இடங்களில் உள்ள பொது கழிப்பறைகளின் பராமரிப்பு பணியை ஜனவரி 1, 2026 முதல் ஒரு ஆண்டு காலத்திற்கு ஒப்படைக்க அனுமதி வழங்கப்பட்டது.

பூங்காக்கள் பராமரிப்பு

நகரின் 4 முக்கிய பூங்காகளான M.G.R. பூங்கா (பாளை ரோடு TMB காலனி), ராஜாஜி பூங்கா (பாளை ரோடு), முத்து நகர் பீச் பூங்கா (பீச் ரோடு), ரோச் பார்க் (தெற்கு பீச் ரோடு) ஆகியவற்றை பசுமையான முறையில் சிறப்பாக பராமரிக்க தனியார் நிறுவனம் மூலம் பணியாளர்களை ஆவுட்சோர்சிங் முறையில் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான வருடாந்திர செலவு ரூ.68 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக தரமான நிறுவனங்களை தேர்வு செய்ய RFP (Request for Proposal) கோரி செயல்முறை மேற்கொள்ள மாமன்றம் அனுமதி வழங்கியது.

புதிய சாலை பணி

தூத்துக்குடி மூன்றாம் ரயில்வே கேட் பகுதியில் பாதாள சாக்கடை குழாய் பழுதடைந்து அடைப்பு ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்படும் வாய்ப்புள்ளதால் அதை சரிசெய்யவும், அந்த இடத்தில் உள்ள Machine Hole-ஐ அகற்றவும் ரயில்வே துறையிடமிருந்து கோரிக்கை வந்துள்ளது.

இதற்காக 400MM விட்டம் கொண்ட Railway Crossing Trenchless Method-ல் புதிய கால்வாய் குழாய் அமைக்கும் பணியை ரூ.50.70 லட்சம் மதிப்பீட்டில் நகர நீர் மற்றும் வடிகால் நிதி 2025-26-ன் கீழ் மேற்கொள்ள மாமன்ற அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வாறு பல்வேறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இன்றைய மாமன்ற கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.