தூத்துக்குடி மாநகராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூத்துக்குடி மாநகராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் 3 பிளாஸ்டிக் பாட்டில் சேகரிப்பான்கள்! தூய்மையான தூத்துக்குடியை உருவாக்க ரோட்டரி சங்கத்தின் புதிய முயற்சி

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் 3 பிளாஸ்டிக் பாட்டில் சேகரிப்பான்கள்!

தூய்மையான தூத்துக்குடியை உருவாக்க ரோட்டரி சங்கத்தின் புதிய முயற்சி

தூத்துக்குடி, செப். 1:

தூத்துக்குடி நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தவும், பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்தவும், தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் 3 பிரத்யேக பிளாஸ்டிக் பாட்டில் சேகரிப்பான்கள் BoX நிறுவப்பட்டன.

thoothukudileaks


டிரெயில்பிளேசர்ஸ் ரோட்டரி கிளப் ஆஃப் தூத்துக்குடி சார்பில் வழங்கப்பட்ட இந்த பிளாஸ்டிக் பாட்டில் சேகரிப்பான்கள், தூத்துக்குடி மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டன. இதனை மாநகராட்சி ஆணையர் எஸ். பிரியங்கா பெற்றுக்கொண்டார்.


பொதுமக்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் வீசுவதைத் தடுப்பதுடன், அவற்றை முறையாகச் சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்பும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.



அண்ணா பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், இந்த சேகரிப்பான்கள் மூலம் பிளாஸ்டிக் பாட்டில்களை முறையாக சேகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் தூய்மையான மற்றும் பசுமையான தூத்துக்குடியை உருவாக்கும் மாநகராட்சியின் முயற்சிக்கு இந்த திட்டம் உறுதுணையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியை டிரெயில்பிளேசர்ஸ் ரோட்டரி கிளப் ஆஃப் தூத்துக்குடி தலைவர் எம். திவ்யா பிரைட்லின், செயலாளர் டாக்டர் ரஜினி டாட்டியா, பொருளாளர் ராஜீவி மோகன்ராஜ் ஆகியோர் முன்னின்று ஒருங்கிணைத்தனர்.


நிகழ்ச்சியில் மாநகராட்சி நகர்நல அலுவலர் கணேஷ், கிழக்கு மண்டல சுகாதார அலுவலர் ஹரிகணேஷ், ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலைய பொறுப்பாளர் முத்துக்குட்டி மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

மாமன்றக் கூட்டத்தில் தவெகவில் இனைந்த கவுன்சிலர்கள் அமளி வெளிநடப்பு? கல்வெட்டுகளில் யார் பெத்த பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது? அமைச்சர் தரப்பில் இருந்து மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் இடம் தொடர்ந்து பிரச்சினை செய்வதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு தெரிவித்தார் மேயர் ஜெகன் பெரியசாமி பரபரப்பு!

Tamil Nadu updates 

photo news by Arunan Reporter 

மாமன்றக் கூட்டத்தில் தவெகவில் இனைந்த கவுன்சிலர்கள் அமளி வெளிநடப்பு? கல்வெட்டுகளில் யார் பெத்த பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது? அமைச்சர் தரப்பில் இருந்து மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் இடம் தொடர்ந்து பிரச்சினை செய்வதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு தெரிவித்தார் மேயர் ஜெகன் பெரியசாமி பரபரப்பு!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மாமன்றச் சாதாரணக் கூட்டம் இன்று மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

thoothukudileaks


கூட்டம் தொடங்கியதும், ...சமீபத்தில் அதிமுக மற்றும் திமுகவிலிருந்து விலகித் தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) தங்களை இணைத்துக் கொண்ட கவுன்சிலர்கள் மந்திர மூர்த்தி (முன்னாள் அதிமுக) மற்றும் ராமர் (முன்னாள் திமுக) ஆகியோர் தங்களது இருக்கையில் அமராமல் எழுந்து நின்று கேள்வி எழுப்பத் தொடங்கினர். அவர்களை இருக்கையில் அமருமாறு மேயரும் ஆணையரும் கேட்டுக்கொண்டனர்.

thoothukudileaks


இருப்பினும், அதை ஏற்க மறுத்த இருவரும் மேயரின் இருக்கை அருகில் வந்து காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

thoothukudileaks




 அப்போது, மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் 

"திமுக முன்னாள் எம்.எல்.ஏ சண்முகய்யா தொகுதியின் மேம்பாட்டு நிதியில் கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களுக்கு, உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களை விட்டுவிட்டு அமைச்சர் மதன் ராஜா பெயரைக் கல்வெட்டில் பொறித்துத் திறந்து வைக்கிறார்கள். யார் பெத்த பிள்ளைக்கு யார் பெயர் வைக்கிறார்கள்? அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை" என்றார்.

தொடர்ந்து பேசியவர், "இங்குள்ள அமைச்சர் தரப்பில் இருந்து மாநகராட்சி ஒப்பந்ததாரர்களிடம் தேவையில்லாமல் பிரச்சினைகள் செய்யப்படுகின்றன என்பதை இந்த மன்றத்தில் வெளிப்படையாகவே தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறினர்.

thoothukudileaks


video பார்க்க 

இதனைத் தொடர்ந்து, திமுக கவுன்சிலர்கள் மேயர் மற்றும் ஆணையர் முன்பாகவே தவெக கவுன்சிலர்களிடம் அருகில் வந்து எதிர்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில்  கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, தவெக உறுப்பினர்கள் இருவரும் மாமன்றக் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

video பார்க்க 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டுப் பரிசீலனைக்குப் பின் நிறைவேற்றப்பட்டன. மாமன்ற உறுப்பினர்களின் இந்த மோதல் சம்பவத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.




வியாழன், 27 ஆகஸ்ட், 2026

வசூல் மழையில்” மாநகராட்சி அதிகாரிகள்? நடவடிக்கை எடுப்பது யார்?

 

“வசூல் மழையில்” மாநகராட்சி அதிகாரிகள்? நடவடிக்கை எடுப்பது யார்?

மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் பெயரில் வியாபாரிகளிடம் நிதி வசூல்? — மாநகராட்சி நிர்வாகம் மீது அதிருப்தி

தூத்துக்குடி:ஆக28

தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த சில வாரங்களாக மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்காக மாநகராட்சி அதிகாரிகள் மூலம் வியாபாரிகளிடம் நிதி வசூல் செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார் வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வருகிற 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரப் பகுதியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரியங்கா அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


thoothukudileaks


 இதற்காக மாநகராட்சியின் நான்கு மண்டலங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள் அந்தந்த மண்டலங்களுக்கு உட்பட்ட தொழில் நிறுவனங்கள், ஏஜென்சிகள் மற்றும் மொத்த வியாபாரிகளை அணுகி நிதியுதவி கோருவதாக வியாபாரிகள் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


மரக்கன்றுகளை நடுவதற்குத் தேவையான கூண்டு உள்ளிட்ட பொருட்களுக்காக குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தி வருவதாகவும், இதனால் பல்வேறு வியாபாரிகள் மனஉளைச்சலுக்கும் அதிருப்திக்கும் உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

“ஆணையர் உத்தரவு” என்ற பெயரில் வசூலா?

மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கை தொடர்பாக வியாபாரிகள் தரப்பில் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது ஆணையரின் உத்தரவின் அடிப்படையில் நடைபெறுவதாக கூறப்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


முன்னதாக மாநகராட்சி சார்பில் ஹைமாஸ் விளக்குகள் உள்ளிட்ட பொதுநலப் பணிகளுக்காக வியாபாரிகளிடம் நிதியுதவி பெறப்பட்டபோது, நிதியுதவி செய்தவர்களுக்கு மாநகராட்சி சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


ஆனால், தற்போது ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்காக வியாபாரிகளிடம் நிதி வசூலிக்க மாநகராட்சியால் அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருந்தால், வசூலிக்கப்படும் தொகைக்கு ரசீது அல்லது உரிய ஆவணங்கள் வழங்கப்படுகிறதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.


ஏற்கனவே லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்ட நிலையில் புதிய அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் கடந்த நான்கு ஆண்டுகளில் மாநகரப் பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது மீண்டும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.


மேலும், இந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட மண்டலத் தலைவர்கள் மற்றும் அந்தந்த பகுதிகளின் மாமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்றும் சில மாமன்ற உறுப்பினர்கள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளிக்குமா?

மரக்கன்றுகள் நடுவது வரவேற்கத்தக்க திட்டமாக இருந்தாலும், அதற்கான செலவினங்களை பொதுமக்கள் அல்லது வியாபாரிகளிடம் இருந்து கட்டாயமாக வசூலிக்கக் கூடாது என்பதே வியாபாரிகள் தரப்பின் கருத்தாக உள்ளது.


எனவே, ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்காக வியாபாரிகளிடம் நிதி வசூலிக்க மாநகராட்சி சார்பில் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா? வசூலிக்கப்படும் தொகை எந்தக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது? இதற்கான ரசீது வழங்கப்படுகிறதா? உள்ளிட்ட விவரங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும், அதிகாரிகளால் கட்டாய வசூல் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா உடனடியாக விசாரணை நடத்தி, விதிமுறைகளை மீறி வசூல் நடைபெற்றிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மரக்கன்றுகள் நடும் நல்ல திட்டம்—வசூல் சர்ச்சையால் விமர்சனத்திற்கு உள்ளாகாமல், திட்டத்தின் நிதி விவரங்களில் மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்குமா? என்பதே தற்போது தூத்துக்குடி வியாபாரிகள் மத்தியில் எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடி மாநகராட்சி அழைப்பு ?முதல் பரிசு 10 ஆயிரம் தூத்துக்குடி மாநகராட்சியில் ‘குரு வனம்’ ஆசிரியர் தின பசுமை திருவிழா விவரம் படிக்க....!!!

Tamil Nadu updates, 

photo news by Arunan Reporter 

தூத்துக்குடி மாநகராட்சியில் ‘குரு வனம்’ ஆசிரியர் தின பசுமை திருவிழா ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி....


தூத்துக்குடி: ஆக 25

தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தமிழ்நாடு பசுமை இயக்கம் – நகர பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் ‘குரு வனம் – ஆசிரியர் தின பசுமை திருவிழா’ நடத்தப்பட உள்ளது.



ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக, தூத்துக்குடி மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் மாபெரும் பசுமை இயக்கம் செயல்படுத்தப்பட உள்ளது. 

thoothukudileaks



தேசிய ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை... ஒரு வார காலம் இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது.


இதன் ஒரு பகுதியாக பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள், அரசு அலுவலகங்கள், சாலையோரங்கள், வழிபாட்டுத் தலங்கள், தனியார் நிறுவனங்கள், நீர்நிலைப் பகுதிகள், தனியார் காலியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரிப்பதற்கும், அவற்றுக்கு தேவையான தண்ணீர் வழங்குவதற்கும் மாநகராட்சி சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இந்த மாபெரும் பசுமை இயக்கத்தில் மாணவர்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்க மாநகராட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மண்டல வாரியான தொடர்பு அலுவலர்கள்


கிழக்கு மண்டலம்: வீ. அரி கணேசன் – 98425 30292

வடக்கு மண்டலம்: சி. ராஜசேகரன் – 80563 47075

தெற்கு மண்டலம்: ஜி. ஸ்டாலின் பாக்கியநாதன் – 94435 28621

மேற்கு மண்டலம்: சு. ராஜபாண்டியன் – 94436 10511


மரக்கன்றுகள் தேவைப்படுவோர் மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்ய இடவசதி உள்ளவர்கள் மேற்கண்ட மண்டல வாரியான அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.


சிறப்பாக செயல்படுவோருக்கு பரிசுகள்


‘குரு வனம் – ஆசிரியர் தின பசுமை திருவிழா’வில் சிறப்பாக செயல்படும் கல்வி நிறுவனங்கள், பசுமைப் படைகள், நாட்டு நலப்பணி திட்டம், சாரணர் இயக்க அணிகள், அரசு அலுவலகங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.


பசுமை ஆர்வலர் கேடயம்!!!

மேலும், சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.5,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 மற்றும் ‘பசுமை ஆர்வலர்’ கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.


ஆசிரியர் கெளரவிப்பு அனைவரும் பங்கேற்க வேண்டும்!!!

ஆசிரியர் பணியை கௌரவிப்பதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரங்களின் அவசியம் மற்றும் பசுமையின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இப்பசுமை திருவிழாவில் அனைத்து தரப்பினரும் பெருவாரியாக பங்கேற்க வேண்டும் என்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சி. பிரியங்கா, இ.ஆ.ப., கேட்டுக்கொண்டுள்ளார்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடி மாநகராட்சியில் தீவிர கொசுப்புழு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாம்!


தூத்துக்குடி மாநகராட்சியில் தீவிர கொசுப்புழு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாம்!

395 கிலோ கொசு உற்பத்தி கழிவுகள் அகற்றம் — வீடுகளுக்கே சென்று பரிசோதிக்க மருத்துவ குழுக்கள் அமைப்பு

தூத்துக்குடி: வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் மற்றும் தீவிர காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்  சி. பிரியங்கா, இ.ஆ.ப.  உத்தரவின் பேரிலும், மாநகர நல அலுவலரின் வழிகாட்டுதலின்படியும் மாநகராட்சி களப்பணியாளர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தீவிர தூய்மைப் பணிகளிலும் தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

thoothukudileaks


395 கிலோ கொசு உற்பத்தி கழிவுகள் அகற்றம்:

கடந்த 16.08.2026 ஞாயிற்றுக்கிழமையன்று மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 18 (பிரிவு 12)-ல் உள்ள ராஜகோபால் 10-வது தெரு பகுதியில் தீவிர கொசு உற்பத்தி மூலங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. அப்பகுதியில் உள்ள 132 குடியிருப்பு வீடுகள், 11 காலி மனைகள் (Vacant Land) மற்றும் அதைச் சுற்றியுள்ள 2 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட பகுதிகளில் பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

thoothukudileaks


இப்பணியின் போது:

  • பிளாஸ்டிக் பாட்டில்கள் & ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்புகள்
  • தேங்காய் ஓடுகள் (சிரட்டைகள்), இளநீர் கூடுகள்
  • பழைய சைக்கிள் & இருசக்கர வாகன டயர்கள்
  • பாக்கு மட்டை தட்டுகள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள்
  • பெயிண்ட் டப்பாக்கள், வண்ணப்பூச்சு பாட்டில்கள், ஆயில் கேன்கள்
  • பழைய காலணிகள், பிரியாணி & சால்னா டப்பாக்கள்

ஆகிய கொசு உற்பத்தி காரணிகள் (Source Reduction) கண்டறியப்பட்டு 395 கிலோ அளவுக்கு கழிவுகள் அகற்றப்பட்டன.

thoothukudileaks

thoothukudileaks


குடிநீர் பரிசோதனை & புகையடிக்கும் பணி:

மாநகரப் பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு சரியான முறையில் உள்ளதா என்பது குறித்து தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், மேற்கு மண்டலப் பகுதிகளில் 'Indoor / Outdoor Fogging' (புகையடிக்கும் பணி) தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

thoothukudileaks


வீடு வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை:

17.08.2026 அன்று ராஜகோபால் நகர் 10-வது தெருவில் பி.எம்.என்.டி காலனி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் நேரில் சென்று வீடு வீடாக பரிசோதனை மேற்கொண்டனர். பொதுமக்களுக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் உள்ளனவா என்று தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன.

மாநகராட்சி ஆணையர் கோரிக்கை: "இந்த கொசுப்புழு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்புப் பணிகள் மாநகராட்சியின் அனைத்து வார்டு பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற உள்ளது. எனவே, ஆய்வு செய்ய வரும் மாநகராட்சி களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்." — . சி. பிரியங்கா, இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடி மாநகராட்சியில் 80 வது சுதந்திர தின விழா மேயர் ஜெகன் பெரியசாமி தேசியக் கொடியேற்றினார்

தூத்துக்குடி மாநகராட்சியில் 80 வது சுதந்திர தின விழா மேயர் ஜெகன் பெரியசாமி தேசியக் கொடியேற்றினார்


தூத்துக்குடி: ஆக 15 

இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தின விழா தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

thoothukudileaks


நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் மாநகராட்சி மாமன்ற கவுன்சிலர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றி வரும் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் நற்சான்றிதழ்களை வழங்கினர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தது, அவர்களிடையே மேலும் சிறப்பாக பணியாற்றும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

வெள்ளி, 31 ஜூலை, 2026

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றம் மீண்டும் இருக்கை விவகாரத்தில் அதிமுகவில் இருந்து தவெக தாவிய கவுன்சிலர் வெளிநடப்பு

 "தூத்துக்குடி லீக்ஸ்" நாளிதழ

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றம் மீண்டும் இருக்கை விவகாரத்தில் அதிமுகவில் இருந்து தவெக தாவிய கவுன்சிலர் வெளிநடப்பு 

தூத்துக்குடி, ஜூலை 31: தூத்துக்குடி மாநகராட்சியின் மாதாந்திர சாதாரண மாமன்றக் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் மாநகராட்சி மன்ற அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


கூட்டம் தொடங்கியதும், அண்மையில் அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த கவுன்சிலர் மந்திரமூர்த்தி, கடந்த மாமன்றக் கூட்டத்தில் எழுப்பிய இருக்கை தொடர்பான விவகாரத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில் எந்த இடத்திலும் அமராமல் எழுந்து நின்றபடி இருந்தார்.

அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், "மாநகராட்சியில் நீங்கள் இன்னும் அதிமுக கவுன்சிலராகவே உள்ளீர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக மாமன்றக் கூட்டங்களில் தொடர்ந்து வெளிநடப்பு செய்து, பின்னர் வெளியே சென்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள். தயவுசெய்து அமர்ந்து கூட்டத்தில் பங்கேற்கவும். இல்லையெனில், வழக்கம்போல் நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்," என்று தெரிவித்தார்.

thoothukudileaks


இதனைத் தொடர்ந்து கவுன்சிலர் மந்திரமூர்த்தி மாமன்றக் கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தார். 


அதன்பிறகு மாநகராட்சி நிர்வாகம் கொண்டு வந்த அனைத்து தீர்மானங்களும் மாமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு நிறைவடைந்தது. :::


புதன், 8 ஜூலை, 2026

தூத்துக்குடி மாநகராட்சியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

 Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாநகராட்சியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

தூத்துக்குடி, ஜூலை 9:

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சியில் களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டன.

thoothukudileaks


தூத்துக்குடி மாநகராட்சியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகள் வரும் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30, 2026 வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களில் பணியாற்ற உள்ள களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு ஜூலை 9 முதல் 11 வரை மற்றும் ஜூலை 13 முதல் 15 வரை என இரண்டு கட்டங்களாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

thoothukudileaks


மொத்தம் 376 களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு, களப்பணி பயிற்றுநர்கள் மூலம் முதற்கட்ட பயிற்சி இன்று தொடங்கப்பட்டது. இந்த பயிற்சிகள் வ.உ.சி. கல்லூரி, ஏ.பி.சி.வி. மகளிர் கல்லூரி, பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கிரேஸ் பாலிடெக்னிக், விக்டோரியா சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் செயின்ட் மேரிஸ் கல்லூரி ஆகிய மையங்களில் நடைபெற்று வருகின்றன.

பயிற்சியின் போது மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான நடைமுறைகள், தரவுகள் சேகரிக்கும் முறை, தகவல்களின் துல்லியம் மற்றும் களப்பணியின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருமான சி. ப்ரியங்கா, இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

புதன், 24 ஜூன், 2026

தூத்துக்குடியில் முத்து நகரின் பசுமைப் பயணம்” திட்டம் பசுமை நகரை உருவாக்க பங்குதாரர்களுடன் மாநகராட்சி ஆலோசனை

Tamil Nadu updates,தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி  புகைப்படங்கள் செய்தி ரோஜா அருணன் 

தூத்துக்குடி, ஜூன் 24:

தூத்துக்குடி மாநகராட்சியை பசுமை நிறைந்த, எழில்மிகு நகரமாக மாற்றுவதோடு, நகர மக்களின் வாழ்வியல் தரத்தை உயர்த்தும் நோக்கில் “முத்து நகரின் பசுமைப் பயணம்” திட்டத்தின் கீழ் பங்குதாரர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

thoothukudileaks

இக்கூட்டத்தில் வ.உ.சி. துறைமுக சபை, மாவட்ட வனத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, வர்த்தக சங்க பிரதிநிதிகள், தனியார் நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய மாநகராட்சி ஆணையாளர், பிரியங்கா ...

தூத்துக்குடி நகரம் மக்கள் தொகை, போக்குவரத்து மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் தொடர்ந்து முன்னேறி வருவதால் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார். 

வருங்காலம்!!!

வருங்கால தலைமுறைகளின் நலனை கருத்தில் கொண்டு பசுமை மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகரம் டிஜிட்டல் அடித்தளம்!!!

மேலும், இத்திட்டத்தின் மூலம் நகரின் பசுமை மேம்பாட்டிற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதுடன், பராமரிப்பு மற்றும் கண்காணிப்பிற்கான டிஜிட்டல் அடித்தளமும் ஏற்படுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டது. 

பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் உங்கள் கருத்துக்களை அறிவுரை கூறுங்கள்????

பொதுமக்கள், வணிகர்கள், தொழில் முனைவோர், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு அமைப்புகள் தங்களது கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் பங்களிப்புகளை தனித்தனியாகவோ அல்லது ஒருங்கிணைந்த முறையிலோ வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

thoothukudileaks


உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை!!!

திட்டத்தின் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடுதல், பூங்காக்கள் பராமரித்தல், பொது சுவர்களை வண்ணமயமாக்கி விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுதல், சாலைகளில் தூசி அகற்றும் பணிகள், மரங்களுக்கு தண்ணீர் வழங்கும் வசதிகள் ஏற்படுத்துதல், தொழில்நுட்ப ஆதரவு வழங்குதல், விளம்பரப் பலகைகளுக்கான பாதுகாப்பான அமைப்புகள் உருவாக்குதல், பொது கழிப்பறைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் இடுகாடுகளை உயர்தரத்தில் பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் பங்குதாரர்கள் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

thoothukudileaks


கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு தரப்பினரும் திட்டத்திற்கு தங்களது ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.


 இதனைத் தொடர்ந்து திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

– 

சனி, 20 ஜூன், 2026

தூத்துக்குடி மாநகராட்சி அதிரடி ஆய்வு 260 கிலோக்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Tamil Nadu updates 

தூத்துக்குடி, ஜூன் 20:

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்கும் வகையில் சுகாதார அலுவலர் தலைமையில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

thoothukudileaks



இந்த ஆய்வின்போது கருத்தப்பாலம் அருகே செயல்பட்டு வரும் உதயா ஏஜென்சி மற்றும் எட்டையபுரம் மெயின் ரோட்டில் உள்ள அபி எசன்ஸ் உள்ளிட்ட மொத்த விற்பனை கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. 


அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

thoothukudileaks


இதையடுத்து மேற்கண்ட கடைகளில் இருந்து மொத்தம் 230 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விதிமுறைகளை மீறியதற்காக சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.


தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகளில் மொத்தம் 260.25 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.16,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என்றும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



வெள்ளி, 19 ஜூன், 2026

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி முடக்கம்: பொதுமக்கள் வேதனை

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி:

தூத்துக்குடி, ஜூன் 20:


தூத்துக்குடி பழைய அண்ணா பேருந்து நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.57 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட்டு, கடந்த 2023 அக்டோபர் 8ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.


thoothukudileaks


நான்கு தளங்களைக் கொண்ட இந்த நவீன பேருந்து நிலையத்தில் தரைத்தளத்தில் மட்டும் 29 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 


மேலும் 120-க்கும் மேற்பட்ட வணிகக் கடைகள், பயணிகள் ஓய்வறைகள் பாலூட்டும் தாய்மார்கள் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 


தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், குறிப்பாக மாநகரம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

"தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் பாக்ஸ்கள் தற்போது பயன்பாடின்றி ஒரு மூலையில் கிடக்கின்றன." 


thoothukudileaks
செயல்படாமல் ஒன்றாக சேர்த்து கிடக்கும் இரண்டு குடிநீர் பாக்ஸ் 


பேருந்து நிலையம் முழுவதும் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், மாநகராட்சி சார்பில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியாளர்களும் (security) நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் போலீஸ் பூத் அமைக்கப்பட்டு காவல்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடியோ பார்க்க 

இந்நிலையில், பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி தற்போது செயலிழந்த நிலையில் இருப்பதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். 


குடிநீர் வழங்கும் குழாய் இணைப்புகள் உடைக்கப்பட்டதுடன், பேருந்து நிலையத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்த இரண்டு குடிநீர் அமைப்புகளும் அகற்றப்பட்டு ஒரே இடத்தில் செயல்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதனால் பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட நவீன பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு குடிநீர் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


பேருந்து நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பில் இருந்தும், குடிநீர் வசதியை சேதப்படுத்திய சமூக விரோதிகள் யார்? 

ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி முடக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியையும் வேததனையும் ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக குடிநீர் வசதிகளை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆக்ரமிப்பு 

மேலும் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் வணிக கடைகள் அனைத்தும்  தூத்துக்குடி மாநகராட்சி கடைகள் அனுமதி அளித்துள்ள அளவுக்கு மீறி விரிவுபடுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் 



thoothukudileaks





வெள்ளி, 5 ஜூன், 2026

விரைவில் தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் மேயர் பதவி ரிசர்வ் பரபரப்பு மூட் அப்செட்டில் திமுக

Tamil Nadu updates, 

கட்டுரை செய்தியாளர் ரோஜா அருணன் 

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் மேயர் பதவி ரிசர்வ் பரபரப்பு  மூட் அப்செட்டில் தி மு க !!!

தூத்துக்குடி ஜுன் 6

இதுபற்றிய சுவாரஸ்யம் கொஞ்சம்  பார்க்கலாம் ...


தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது அதில்  தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று முதல்வர் ஆக  ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றார் 


சட்ட மன்ற தேர்தலில் தி மு க மற்றும் அ தி மு க தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்ற இறுமாப்புடன் போட்டியிட்ட  இந்த இரண்டு கட்சிக்கும் கூட்டணி மற்றும் தங்கள் கட்சி உடைந்து சேதாரம் சொல்ல முடியாத வலியில் இருந்து வருகின்றன.  


அடுத்த கட்டமாக விரைவில்...மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடத்த வேண்டும் அதற்கான ஆயத்தப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன....


திமுக கோட்டையாக சென்னை தூத்துக்குடி!!!

 கடந்த காலங்களில்  தி மு க கோட்டையாக சென்னையும் தூத்துக்குடியும் இருந்து வந்தது


 கடந்த 2021 உள்ளாட்சி மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற போது தூத்துக்குடி மாநகராட்சி ரிசர்வ் தொகுதி என அறிவிப்பு வெளிவர இருந்தது.

 அதை தூத்துக்குடி ரிசர்வ் தொகுதி என வரவிடாமல் சுயநல ஆதிக்க சக்திகள் தங்களது பண பலத்தால்  கவனிப்பு களால் ? ஆட்சி மற்றும் அதிகாரிகள் பொது நிலைக்கு தூத்துக்குடி மாநகராட்சி மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் 

thoothukudileaks


கடந்த 2021 ல் தூத்துக்குடி மாநகராட்சி ரிசர்வ் தொகுதி ஆக மாறி  ஒடுக்கப்பட்ட சமுகத்தை சேர்ந்தவர் மேயராக பொறுப்பு ஏற்றிருக்க வேண்டியது .


தூத்துக்குடி பதிலாக சென்னை!!!

சுழற்றியடித்த சுனாமி சென்னை மாநகராட்சி பக்கம் விசியது   ரிசர்வ் பகுதி என தூத்துக்குடி மாநகராட்சி மாறுவதற்கு பதிலாக...


சென்னை மாநகராட்சி ரிசர்வ் தொகுதி என அறிவிக்கப்பட்டு திமுக மேயராக பிரியா வந்தார்.


 தற்போது இந்த தடவை தூத்துக்குடி மாநகராட்சி ரிசர்வ் தொகுதி ஆக மாறி பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர் தான் மேயர் ஆக வருவார் என்கிறார்கள் 


கெத்து காட்டும் திமுக!!!

தமிழகத்தில் அதிகப்படியான இடத்தில் முதல்வர் ஜோசப் விஜயின் ஆளும் கட்சி தவெக வெற்றி பெற்று இருந்தாலும் ...


தூத்துக்குடி மாவட்டத்தில்  தி மு க மூன்று எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோர் இப்போது வரை தி மு க கெத்து காட்டி வருகின்றனர்.

தூத்துக்குடி திமுக என்றால்?

தற்போது தூத்துக்குடி  மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி இருந்து வருகிறார்   

இவர் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனின் உடன் பிறந்த தம்பி தான்  தூத்துக்குடியில் திமுக என்றால் மறைந்த முரட்டு பக்தர் பெரியசாமியின் அரசியல் வாரிசுகள் தான்.


வேற யாருக்கும் விட்டுக் தரமாட்டார்கள் என்பது அனைவருக்கும் புரிய வைத்துள்ளார்கள் 

thoothukudileaks


மூடு அப் செட்டில்!!!

வருகின்ற மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவி ரிசர்வ் என ஆகிறது என்றால் இவர்கள் யாரோ பதிவு சுகம் பெற வேலை செய்யனுமா என்ற நிலை வரும் பதவி அதிகாரம் இல்லாத தூத்துக்குடி தி மு க நிச்சயமாக 5 வருடங்கள் தாக்கு பிடிக்க முடியுமா  என அதிர்ச்சியில் மூடு அப் செட்டில் உலவி கொண்டு இருக்கிறார்களாம்   

வீடியோ பார்க்க 

துள்ளி குதிக்கும் ஒரு தரப்பு!!!

தூத்துக்குடி மாநகராட்சி ரிசர்வ் தொகுதியா ஒரு தரப்பு துள்ளி குதித்து கொண்டு இருக்கிறது 

ஏற்கனவே இதுவரை 75 வருடங்களாக  ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகளான காங்கிரஸ் திமுக அதிமுக செய்யாத ஒன்று  தவெக நிகழ்த்தி காட்டியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை  அமைச்சர் பதவி என்பது ஆதிக்க சக்திகளுக்கு தான் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு கிடையாது காங்கிரஸ் திமுக அதிமுக ஆகிய கட்சிகள் வழங்காமல் மறுக்கப்பட்டு  அரசியல் செய்து கொண்டு இருந்தார்கள்.

ஆனால் ?...

இந்த தடவை 2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ரிசர்வ் தொகுதியில் தவெக  எம்எல்ஏவாக வெற்றி பெற்ற மதன் ராஜா அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து முதல்வர் ஜோசப் விஜய் ஆச்சரியப்படுத்தி உள்ளார். 

தூத்துக்குடி லீக்ஸ் க்காக,...

தகவல் கட்டுரை 

செய்தியாளர் 

ரோஜா அருணன் 

புதன், 27 மே, 2026

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் 'காணவில்லை' முதல்வர் ஜோசப் விஜய் புகைப்படம்?

Tamil Nadu updates 27-5-2026

photo news by Arunan journalist 

​காரசாரமான தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம்:  – 48 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

தூத்துக்குடி:மே27

தூத்துக்குடி மாநகராட்சியின் சாதாரண மாமன்ற கூட்டம் இன்று காலை 11 மணியளவில் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டம் பல்வேறு அரசியல் நகர்வுகளுடனும், பரபரப்புகளுடனும் அரங்கேறியது.

​மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.அதிமுக -காங்கிரஸ் கட்சி சேர்ந்த சிலர் கவுன்சிலர்கள் கூட்டரங்கு வரவில்லை..

thoothukudileaks



​48 தீர்மானங்கள் நிறைவேற்றம்:

​கவுன்சிலர்களின் காரசாரமான விவாதங்களுக்கு இடையே, மாநகராட்சியின் பல்வேறு வார்டு மேம்பாட்டு பணிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த 48 முக்கிய தீர்மானங்கள் இன்றைய கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

thoothukudileaks


​தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் 'காணவில்லை' முதல்வர் ஜோசப் விஜய் படம்: கிளம்பும் புதிய சர்ச்சை!

​இன்றைய மாமன்ற கூட்டத்தில் தீர்மானங்களை விட, அரங்கிலிருந்த ஒரு விஷயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்ன நடந்தது?

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் தற்போதைய முதல்வர் விஜய்யின் புகைப்படம் இடம் பெறவில்லை. கடந்த மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களின் போது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதற்கு முன்னதாக முதல்வராக இருந்த மு.கருணாநிதி ஆகியோரின் புகைப்படங்கள் மாமன்ற கூட்ட அரங்கில் தொங்கவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


​தற்போது புதிய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, தற்போதைய முதல்வரின் புகைப்படம் மாமன்ற அரங்கில் வைக்கப்படாதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

​— .

thoothukudileaks


ஒரு முன்னாள் ஆளும் கட்சி சேர்ந்த முக்கிய புள்ளி இன்று  வரவில்லை அவரோ த வெ க கட்சியில் சேர்ந்து பதவி பெறபோவதாக சொல்லப்படுகிறது 

செவ்வாய், 10 மார்ச், 2026

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மை பணியாளர்கள் தொடர் பட்டினி போராட்டம்

Tamil Nadu updates, 

அருணன் செய்தியாளர் 

தூத்துக்குடி, மார்ச் 11:

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மை பணியாளர்கள் சார்பில் தொடர் பட்டினி போராட்டம் புதன்கிழமை (11.03.2026) முதல் தொடங்கப்பட்டது.

இந்த பட்டினி போராட்டம் ஏஐசிசிடியு (AICCTU) தொழிற்சங்க அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. 

தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

thoothukudileaks


போராட்டத்தின் தொடக்க நிகழ்வில் ஏஐசிசிடியு தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் தோழர் சகாயம், மாவட்ட தலைவர் தோழர் மின்னல் அம்ஜத், மாவட்ட செயலாளர் தோழர் சிவராமன், சிபிஐ (எம்.எல்) கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் முருகன், தூய்மை பணியாளர் சங்க தலைவர் தோழர் பொன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் பெண் தோழர்கள் வெங்கடேஸ்வரி, கணபதி, காளீஸ்வரி, சரஸ்வதி ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் இந்த தொடர் பட்டினி போராட்டத்தின் முதல் நாளில் தோழர் மின்னல் அம்ஜத், தோழர் பொன்ராஜ், பெண் தோழர்கள் வெங்கடேஸ்வரி, கணபதி, காளீஸ்வரி, சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

11-3-2026 தூத்துக்குடி தூய்மை பணியாளர்களின் தொடர் பட்டினி போராட்டத்திற்கு ஆதரவாக .... இன்று 

தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் மாநில தலைவர் தோழர் சாமு காந்தி  தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் தோழர் மா கிருஷ்ணமூர்த்தி  மக்கள் அதிகார கழகம் மாவட்ட செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா ஆகியோர் இன்று தூய்மை பணியாளர்கள் தொடர் பட்டினி போராட்டம் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர் 

thoothukudileaks


கோரிக்கைகள் :

2017 ஆம் ஆண்டு GO 62 படி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

தொழிற்சங்க தலைவர் பொன்ராஜ் அவர்களை வேலைநீக்கம் செய்ததை ரத்து செய்து, உடனடியாக மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்.

75 நாட்களாக வேலை வழங்காமல் வைத்திருக்கும் நிலையை நிறுத்தி, அவருக்கு உரிய பணியை வழங்க வேண்டும்.

தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்களின் உரிமைகளை பாதுகாக்க தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளர் விரோதமாக நடைபெறும் செயல்பாடுகளை நிறுத்தி, தொழிலாளர்களுக்கு உரிய நலன்கள் மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.


இந்த தகவலை ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மாவட்ட தலைவருமான தோழர் மின்னல் அம்ஜத் தெரிவித்துள்ளார்.


புதன், 25 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி மாநகராட்சி 2026-27 பட்ஜெட்: ரூ.17,697 லட்சம் வருவாய் இலக்கு!வரவு செலவு அறிக்கை பட்ஜெட் எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு தூத்துக்குடி டாஸ்மாக் கடை வாடகை விடுவது குறித்து திமுக மற்றும் கூட்டணி கவுன்சிலர் கள் கடும் எதிர்ப்பு !! தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய முயற்சிதூசி இல்லா சாலைகளாக' (End to End Paving) எந்தெந்த சாலைகள் பெயர் விவரம்!

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாநகராட்சி 2026-27 பட்ஜெட்: ரூ.17,697 லட்சம் வருவாய் இலக்கு!

தூத்துக்குடி, பிப்ரவரி 26:

தூத்துக்குடி மாநகராட்சியின் 2026-2027 ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவு அறிக்கை இன்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

thoothukudileaks


தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் இன்று அவசர/சாதாரண மன்றக் கூட்டம் மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா துறை மேயர் ஜெனிட்டா மற்றும் மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நகரின் குடிநீர் விநியோகம், சாலை பழுது பார்க்கும் பணிகள், மழைநீர் வடிகால் திட்டங்கள், தூய்மை பணிகள் மற்றும் சொத்துவரி வசூல் நிலைமை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பொதுமக்கள் குறைகள் தொடர்பாக உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

நகரில் நடைபெற்று வரும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்த முன்னேற்ற அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. குறிப்பாக புதிய சாலை அமைப்பு, தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு மேயர் அறிவுறுத்தினார்.

மேலும், அரசு நலத்திட்டங்கள் மக்களுக்கு விரைவாக சென்றடைய நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சில தீர்மானங்கள் ஒருமனதாகவும், சில தீர்மானங்கள் விவாதத்திற்குப் பிறகும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் முடிவில், நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மேயர் வலியுறுத்தினார்.

மூன்று நிதி வகைகளில் உத்தேச வருவாய்:

நடப்பு ஆண்டான 2026-2027க்காக வருவாய் நிதியில் ரூ.298.77 லட்சம், குடிநீர் மற்றும் வடிகால் நிதியில் ரூ.342.79 லட்சம், கல்வி நிதியில் ரூ.327.82 லட்சம் உபரியாக வருவாய் ஈட்டப்படும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வருவாய் நிதி விவரம்:

வருவாய் நிதியில் சொத்துவரி, இதர வரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலம் ரூ.3,802.39 லட்சம், முத்திரை கட்டணம் மற்றும் கேளிக்கை வரியாக ரூ.600 லட்சம், அரசு மானியம் மற்றும் மாநில பகிர்மான நிதியாக ரூ.7,714 லட்சம், 15வது நிதிக்குழு மானியமாக ரூ.1,000 லட்சம், மற்றும் ஏனைய வருமானங்கள் மூலம் ரூ.4,581.03 லட்சம் என மொத்தம் ரூ.17,697.42 லட்சம் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது.

செலவு விவரம்:

சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஊழியர்கள் தொடர்பான செலவினங்களுக்கு ரூ.8,276.75 லட்சம், நிர்வாக செலவினங்களுக்கு ரூ.817.25 லட்சம், சாலை, கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு இயக்க செலவினங்களுக்கு ரூ.6,824 லட்சம், நிதி மற்றும் திட்டமிட்ட செலவினங்களுக்கு ரூ.280.65 லட்சம், பொது நிதி பங்களிப்புக்காக ரூ.1,200 லட்சம் என மொத்த செலவு ரூ.17,398.65 லட்சம் ஆகும்.

இதன்படி வருவாய் நிதியில் ரூ.298.77 லட்சம் உபரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டான 2025-2026 வரவு செலவு அறிக்கையும் திருத்தப்பட்டு இம்மாமன்றத்தில் இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தூத்துக்குடி மாநகராட்சி பட்ஜெட் 2026-27: பொலிவுறும் மாநகரம்! 278 புதிய சாலைகள், ஸ்மார்ட் குடிநீர் திட்டம் - அதிரடி அறிவிப்புகள்!

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சியின் 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாநகரின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளன.

🛣️ சாலை மேம்பாடு மற்றும் போக்குவரத்து

278 புதிய சாலைகள்: நகர்ப்புற சாலை மேம்பாட்டு (TURIP) நிதியின் கீழ் மாநகரம் முழுவதும் 278 சாலைகள் புதிதாக அமைக்கப்படும்.

தூசியில்லா சாலைகள்: NCAP திட்டத்தின் கீழ் கிரேட் காட்டன் ரோடு, பீச் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் 'End to End Paving' முறையில் தூசியில்லா சாலைகளாக மாற்றப்படும்.

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்: வி.வி.டி சிக்னல் முதல் 4-ம் கேட் வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு நடைபாதைகள் ஒழுங்குபடுத்தப்படும்.

தூய்மை காற்று திட்டத்தின் (NCAP) கீழ், தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டமாக 'தூசி இல்லா சாலைகளாக' (End to End Paving) மாற்றப்படவுள்ள சாலைகளின் விவரங்கள் இதோ:

​கிரேட் காட்டன் ரோடு

​வடக்கு பீச் ரோடு

​தெற்கு பீச் ரோடு

​கீழரத வீதி

​குறிஞ்சி நகர்

​பாளை ரோடு

​வி.வி.டி சிக்னல்

​இந்தச் சாலைகளில் ஓரங்களில் மண் படிவதைத் தடுக்கவும், வாகனங்கள் செல்லும்போது தூசி எழாமல் இருக்கவும் முழுமையாக நடைபாதை வரை தார் அல்லது கற்கள் பதிக்கப்பட்டு (End to End) சீரமைக்கப்படும்..

மிதிவண்டி பிரத்யேக வழித்தடம்: ரஹ்மத் நகர், கடற்கரை சாலை மற்றும் பக்கில் ஓடை பகுதிகளில் மோட்டார் இல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்க தனி வழித்தடங்கள் அமைக்கப்படும்.

💧 குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள்

24x7 ஸ்மார்ட் குடிநீர் திட்டம்: மாநகரின் 10 வார்டுகளில் முன்னோட்டமாக 24 மணி நேர குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதனை கண்காணிக்க SCADA தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்.

BIO CNG திட்டம்: கழிவுகளில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

பாதாள சாக்கடை விரிவாக்கம்: விடுபட்ட பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம் விரிவுபடுத்தப்படும்.

🏫 கல்வி மற்றும் இளைஞர் நலன்

நவீன நூலகங்கள்: மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காகப் புதிய நூலகங்கள் மற்றும் வாசிப்பை ஊக்குவிக்க 'The Hindu' நாளிதழ் வாரந்தோறும் வழங்கப்படும்.

விளையாட்டு மையங்கள்: அம்பேகர் நகரில் தினசரி சந்தை, கிரிக்கெட் மைதானம், ஸ்கேட்டிங் தளம் மற்றும் வில்வித்தை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

தற்காப்பு கலை: மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்குத் தற்காப்பு கலை பயிற்சிகள் வழங்கப்படும்.

🌳 சுற்றுச்சூழல் மற்றும் பொழுதுபோக்கு

பசுமைத் தூத்துக்குடி: 100 ஏக்கர் பரப்பளவில் மியாசாகி காடுகள், 50 ஏக்கர் பரப்பளவில் பனை காடுகள் மற்றும் 5 இடங்களில் 'தருவைக்குளம்' மாடலில் மினி கோபுர விளக்குகளுடன் பூங்காக்கள் அமைக்கப்படும்.

செங்குத்து தோட்டம்: மாநகரின் அழகுக்காகப் பல இடங்களில் Vertical Gardening மற்றும் வண்ண ஒளிவிளக்குகள் அமைக்கப்படும்.

🏢 இதர முக்கிய அறிவிப்புகள்

CCTV கண்காணிப்பு: பக்கில் ஓடைப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதைத் தவிர்க்க நவீன CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

விற்பனை மண்டலங்கள்: நடைபாதைகளில் இடையூறாக இருக்கும் கடைகளை முறைப்படுத்தத் தனி விற்பனை மண்டலங்கள் (Vending Zones) உருவாக்கப்படும்.

இ-ஆபீஸ் திட்டம்: மாநகராட்சி நிர்வாகத்தை வேகப்படுத்த காகிதமில்லா 'E-Office' முறை முழுமையாக அமல்படுத்தப்படும்.

தூத்துக்குடி மாநகரத்தை ஒரு முன்மாதிரி நகரமாக மாற்றும் நோக்கில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு 

பட்ஜெட் எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கொறடா மந்திர் மூர்த்தி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி சுடலைமணி பத்மாவதி  செண்பக செல்வன் ஜெயராணி ஜெயக்குமார் வெற்றி செல்வன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர் 

thoothukudileaks


 டாஸ் மாக் கடை தீர்மானம் நிறைவேற்ற   திமுக கவுன்சிலர் கள்  எதிர்ப்பு !!!

20) தூத்துக்குடி மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட டோபிகான வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் மாவட்ட மேலாளர், டாஸ்மாக் லிட்  கடிதம் ந.க.எண் அ7/127/2025 நாள் 12.12.2025 ன்படி மதுபான சில்லரை விற்பனை கடை செயல்படுவதற்கு மாத வாடகையாக ரூ.12,000/- GST உப்பட நிர்ணயம் செய்து தனி மின் மீட்டர் வசதியுடன் 500 சதுரடியில் கட்டிடம் வாடகைக்கு ஒதுக்கீடு செய்து தருமாறு கோரப்பட்டுள்ளது.


டோபிகானா வணிக வளாகத்தில் கடை எண்கள் G3. G4 மற்றும் G5 ஆகிய மூன்று கடைகள் கடைகளின் ஆரம்ப மாத வாடகை தொகை ரூ.4,050.4,600.4600 = ரூ.13,250/-18 சதவீதம் GST ரூ.2385- மொத்தம் ரூ. 15635/- ஆகும். டோபிகானான வணிக வளாகம் 18 முறை ஏலம் மற்றும் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டும். ஒரு சில உயர்ந்தபட்ச ஒப்பந்தபுள்ளி கேள்விதாரர்களும் பயன்படுத்த இயலாமல் வணிக வளாகம் செயல்பாட்டிற்கு வராத நிலையிலும், மாநகராட்சியின் ஆரம்ப மாத வாடகை தொகையினை விட குறைவாக ரூ.12000/ GST உப்பட நிர்ணயம் செய்துள்ளது 

thoothukudileaks
எதிர்ப்பு 

தூத்துக்குடி லீக்ஸ்
எதிர்ப்பு தெரிவித்த திமுக மற்றும் கூட்டணி கவுன்சிலர்கள் 


இந்த தீர்மானம் நிறைவேற்ற திமுக கவுன்சிலர்கள் கந்தசாமி ராமகிருஷ்ணன் ரெக்ஸ்லீன் மற்றும் கூட்டணி கவுன்சிலர் கள் எதிர்ப்பு தெரிவித்து மேயர் இடம் முறையிட்டனர் 



- தூத்துக்குடி லீக்ஸ் நிருபர்

செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பா.ஜ.க. வழக்கறிஞர் மனு!

photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பா.ஜ.க. மனு!

தூத்துக்குடி, பிப். 18:

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடங்களை மீட்கக் கோரி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி -ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

சிறுவர் பூங்கா இடத்தில் ஆக்கிரமிப்பு:

பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பிதேலிஸ் அளித்துள்ள அந்த மனுவில் கூறியிருப்பதாவது: 

தூத்துக்குடி மாநகராட்சி 47-வது வார்டு, லயன்ஸ்டவுன் ரோச் காலனி 4-வது தெருவில் சிறுவர் பூங்கா அமைய வேண்டிய இடத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அங்கு கார் பார்க்கிங் மற்றும் மீன் கம்பெனி அமைத்துச் செயல்பட்டு வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, அந்த இடத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

thoothukudileaks

வீடியோ பார்க்க 

தொடரும் ஆக்கிரமிப்புகள்:

அதேபோல், ரோச் நகர் 2-வது தெருவில் தனியார் ஹோட்டல் நிர்வாகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மாநகராட்சி இடத்தையும், ரோச் காலனி 3-வது தெரு முதல் 6-வது தெரு வரை உள்ள 40 அடி அகலச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

thoothukudileaks

thoothukudileaks


பாஜக வழக்கறிஞர் பிதேலிஸ் பரபரப்பு பேட்டி 

சமூக நலக் கூடம் அமைக்க கோரிக்கை:

ரோச் காலனி 2-வது தெருவில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் பொதுமக்களின் வசதிக்காக ஒரு சமூக நலக் கூடம் அமைத்துத் தர வேண்டும். மேலும், மாநகராட்சிக்குச் சொந்தமான நிலங்கள் எங்கெங்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தி, அந்த இடங்களை மீட்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

​இந்தக் கோரிக்கைகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.