"தூத்துக்குடி லீக்ஸ்" நாளிதழ
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றம் மீண்டும் இருக்கை விவகாரத்தில் அதிமுகவில் இருந்து தவெக தாவிய கவுன்சிலர் வெளிநடப்பு
தூத்துக்குடி, ஜூலை 31: தூத்துக்குடி மாநகராட்சியின் மாதாந்திர சாதாரண மாமன்றக் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் மாநகராட்சி மன்ற அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும், அண்மையில் அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த கவுன்சிலர் மந்திரமூர்த்தி, கடந்த மாமன்றக் கூட்டத்தில் எழுப்பிய இருக்கை தொடர்பான விவகாரத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில் எந்த இடத்திலும் அமராமல் எழுந்து நின்றபடி இருந்தார்.
அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், "மாநகராட்சியில் நீங்கள் இன்னும் அதிமுக கவுன்சிலராகவே உள்ளீர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக மாமன்றக் கூட்டங்களில் தொடர்ந்து வெளிநடப்பு செய்து, பின்னர் வெளியே சென்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள். தயவுசெய்து அமர்ந்து கூட்டத்தில் பங்கேற்கவும். இல்லையெனில், வழக்கம்போல் நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்," என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கவுன்சிலர் மந்திரமூர்த்தி மாமன்றக் கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
அதன்பிறகு மாநகராட்சி நிர்வாகம் கொண்டு வந்த அனைத்து தீர்மானங்களும் மாமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு நிறைவடைந்தது. :::


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக