விடுதலை புலிகள் பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை விதிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு
Tamil Nadu updates,
Photo news by Arunan journalist
இது பற்றிய செய்தியாவது:-
சென்னை: விடுதலை புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் புகைப்படத்தை பொதுவெளியில் பயன்படுத்த தடை விதிக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே. சார்லஸ் அலெக்சாண்டர் தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கின் முக்கிய அம்சங்கள்:
இந்தியாவில் எல்.டி.டி.இ. அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்தி வருவதாக மனுவில் குற்றச்சாட்டு.
தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் ஆதாயத்திற்காக பிரபாகரன் புகைப்படம் பயன்படுத்தப்படுவதாக புகார்.
இலங்கை போர் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் “மார்பிங்” செய்யப்பட்ட படங்களை சீமான் வெளியிடுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகு, இந்திய அரசு எல்.டி.டி.இ. அமைப்புக்கு தடை விதித்தது.
சீமான், எல்.டி.டி.இ தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்து, ஏ.கே 47 துப்பாக்கியில் பயிற்சி பெற்றதாக பரப்புரை செய்யப்படுவதாக மனுவில் தகவல்.!!!
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

