பேரணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேரணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

1930 சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பேரணியில் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் : 17.02.2024

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


இது பற்றிய செய்தியாவது:-


சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (17.02.2024) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.


 இந்த விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் இருந்து தொடங்கி குரூஸ் பர்னாந்து சிலை வரை சென்று நிறைவடைந்தது.



இப்பேரணியின் போது கிரெடிட் கார்டு சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றுபவர்கள், ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்பவர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நமது நண்பர்கள் போன்று அல்லது பிரபலமானவர்கள் போன்று போலி கணக்குகளை துவங்கி நம்மிடம் பண மோசடியில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஆன்லைனில் பம்பர் பரிசு விழுந்திருப்பதாக கோரி உங்கள் விபரங்களை திருடி அதில் எஸ்.எம்.எஸ் அனுப்பி பண மோசடி செய்பவர்கள் மற்றும் தங்கள் நிலம் அல்லது வீட்டின் மீது செல்போன் டவர் அமைத்து தந்து மாத வாடகை அதிக அளவில் தருவதாக கூறி நம்ப வைத்து மோசடி ஈடுபடுபவர்கள் ஆகியோர் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் பதாகைகள் ஏந்தி பள்ளி மாணவ மாணவிகள் பேரணியில் முழக்கமிட்டு சைபர் குற்றம் குறித்து புகார் தெரிவிக்கும் இலவச தொலைபேசி எண்ணான 1930 பொறித்த பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்றனர்.


இப்பேரணியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  கார்த்திகேயன், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்  கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி துணை முதல்வர் முனைவர்  அருணாச்சல ராஜன், தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்ற பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி, தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர்  ஷோபா ஜென்சி உட்பட காவல்துறையினர் மற்றும் காமராஜ் கல்லூரி, சுப்பையா வித்யலாயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிரசெண்ட் பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

தூத்துக்குடியில் தந்தை பெரியார் பிறந்த நாள் பேரணிபெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் விடுதலை்சிறுத்தைகள் கலந்து கொண்டனர்

thoothukudileaks 18-9-2023

news by arunan journalist 

தூத்துக்குடியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவையொட்டி நேற்று 17-9-2023 தூத்துக்குடியில் பேரணி நடைபெற்றது.

 இதில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் விடுதலை்சிறுத்தைகள் கலந்து கொண்டனர் .



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடியில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தந்தை பெரியாரின் 145 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது 



இதையொட்டி கூட்டமைப்பு சார்பாக தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை முன்பிருந்து 

தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் உள்ள பெரியார் சிலை வரை பேரணி நடைபெற்றது. 


பல்வேறுபட்ட ஜனநாயக கட்சிகள், அமைப்புகள் கலந்து கொண்ட பேரணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாகமாவட்ட செயலாளர் இக்பால்  கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினார்

உடன் ஆட்டோ கணேசன்,

அர்ஜுன்,வேந்தன், மகேந்திரன்,இசக்கி, மாரிமுத்து, பத்மநாபன்,

செல்வகுமார் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.


இவண்

அகமது இக்பால்   

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 

தூத்துக்குடி மாவட்டம்