கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 பிப்ரவரி, 2026

சாயர்புரம் செயிண்ட் மேரீஸ் பள்ளி 24ஆம் ஆண்டு விழா

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: பெ27

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் இயங்கி வரும் செயிண்ட் மேரீஸ் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியின் 24ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் டி. சிதம்பரநாதன் தலைமை தாங்கினார்.

thoothukudileaks


Bishop Jebaraj தொடக்க ஜெபத்தை நடத்தினார். பள்ளி முதல்வர் அக்னஸ் ஜெயலின் வரவேற்புரை வழங்கி ஆண்டு அறிக்கையை வாசித்தார்.

சாயர்புரம் பாஸ்டரேட் தலைவர் ஜே. மனோகரும், மாவட்ட நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகள் சங்க செயலாளர் ஏ. ஜோசப்பும் சிறப்புரையாற்றினர். Pope Memorial Higher Secondary School தலைமையாசிரியர் சி. எட்வர்ட் ஜான்சன் பால் மற்றும் St. Mary's Girls Higher Secondary School தலைமையாசிரியர் ஆர். ஹெப்சிபா புவேலா மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களின் நடனம், நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சாயர்புரம் நகர பஞ்சாயத்து கவுன்சிலரும், மாவட்ட திமுக துணைச் செயலாளருமான ஜே. ஜெபா தங்கம் பிரேமா உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர். சிஎஸ்ஐ மறைமாவட்ட உறுப்பினர்கள் அலய்மணி, ஜெயகுமார் மற்றும் பலரும் பங்கேற்றனர்.

இறுதியாக உதவி தலைமையாசிரியர் அருள் மேரி நன்றியுரை வழங்கினார்.

விழா உற்சாகமாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.

திங்கள், 1 செப்டம்பர், 2025

ஆசிரியர் பணியில் சேர, தொடர மற்றும் பதவி உயர்வு பெற TET தேர்ச்சி கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு கேள்வி குறியாகும் ஆசிரியர்கள் நிலைமை மாணவர்கள் எதிர்காலம்? முழு விவரம் பரபரப்பு தகவல்

 அருணன் செய்தியாளர் 

👍இங்கே விரிவான தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 


🤷🏻‍♀️ thoothukudi leaks

🔴 #𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚••••

ஆசிரியர் பணியில் சேர, தொடர மற்றும் பதவி உயர்வு பெற TET தேர்ச்சி கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி:
நாட்டின் அனைத்து பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் TET (Teacher Eligibility Test) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 1) தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது.

thoothukudileaks


📌 தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

  • புதிய ஆசிரியர்கள் பணியில் சேர TET தேர்ச்சி பெற வேண்டும்.
  • ஏற்கனவே பணியாற்றி வரும் ஆசிரியர்களில் 5 ஆண்டுகளுக்கு குறைவான பணிக்காலம் உள்ளவர்களுக்கு மட்டுமே தற்காலிக விதிவிலக்கு.
  • 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரியும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணி செய்ய TET தேர்ச்சி கட்டாயம்.
  • TET தேர்ச்சி பெறாதவர்கள் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெற வேண்டும்.
  • பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்விற்கும் TET தேர்ச்சி கட்டாயம்.

இந்த உத்தரவிற்கு எதிராக, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிர மாநில ஆசிரியர் கூட்டமைப்புகள் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜஸ்டிஸ் சஞ்சய் கரோல், ஜஸ்டிஸ் அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.

தீர்ப்பில், “கல்வித் தரத்தை உயர்த்தவும், தகுதியான ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை உறுதி செய்யவும் TET தேர்வு ஒரு அடிப்படை அளவுகோலாக அமைய வேண்டும்” என நீதிபதிகள் வலியுறுத்தினர்.

📍 பின்னணி:
2011ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் TET தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் பல மாநிலங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இன்னும் TET தேர்ச்சி பெறாமல் பணி புரிந்து வருகின்றனர். இதனை எதிர்த்து ஆசிரியர் சங்கங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.

📍 மாநில அரசின் நிலைப்பாடு:
தமிழ்நாடு அரசு சார்பில், “ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு சலுகை வழங்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது. எனினும், மாணவர்களின் நலனுக்காக எந்தவித சலுகையும் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.


👉  மாணவர்களின் எதிர்காலம் – ஆசிரியர்களின் நிலைமை


🤷🏻‍♀️ thoothukudi  leaks

Arunan journalist 1-9-2025

🔴 #𝗦𝗣𝗘𝗖𝗜𝗔𝗟 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧••••

TET தேர்ச்சி கட்டாயம் – மாணவர்களின் எதிர்காலம் & ஆசிரியர்களின் நிலைமை

மாணவர்களின் எதிர்காலம்

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி, ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு.

  • தகுதியான ஆசிரியர்கள் மட்டுமே வகுப்பறையில் மாணவர்களை கற்பிப்பது உறுதி செய்யப்படுகிறது.
  • கல்வி முறையில் ஒற்றுமையும் தரநிலையும் ஏற்படும்.
  • மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் சிறந்து விளங்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
  • நாட்டின் கல்வி தரம் சர்வதேச அளவில் உயர்வதற்கான பாதை உருவாகும்.

thoothukudileaks


ஆசிரியர்களின் நிலைமை

ஆனால், இந்த உத்தரவு பல்வேறு சிக்கல்களை ஆசிரியர்கள் முன்வைக்க வைத்துள்ளது.

  • ஏற்கனவே 10, 15, 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இன்னும் TET தேர்ச்சி பெறவில்லை.
  • வயதான ஆசிரியர்களுக்கு தேர்வு எழுதுவது கடினம் என சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
  • “பணி தொடர முடியாவிட்டால் வேலை இழக்க நேரிடும்” என்ற அச்சம் ஆசிரியர்களிடம் அதிகரித்துள்ளது.
  • குடும்பப் பொறுப்புகள், பொருளாதாரச் சிக்கல்கள், மீண்டும் தேர்வுக்குப் படிப்பது போன்ற சிரமங்கள் ஆசிரியர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மாநில அரசுகளின் எதிர்வினை

தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் “பணியில் உள்ளவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும்” என கோரியிருந்தாலும், மாணவர்களின் நலனுக்காக எந்த சலுகையும் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்தது.

இறுதி குறிப்பு

இந்த உத்தரவு மாணவர்களின் கல்வித் தரத்திற்கு சாதகமாக இருந்தாலும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பணிநிலையும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. 


அதனால், மாநில அரசுகள் புதிய பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள், தேர்வு தயாரிப்பு மையங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்து, ஆசிரியர்கள் TET தேர்ச்சி பெற உதவ வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கருத்தாகும்.



புதன், 25 ஜூன், 2025

100% தேர்ச்சி சாதனை: ஸ்ரீ சங்கரா பகவதி கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம், கொம்மடிக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வித் தரத்தில் தொடர்ந்தும் சாதனை படைத்து வருகிறது.



இக்கல்லூரியில் 2023 - 2025 கல்வியாண்டில் முதுகலை வணிகவியல் (M.Com) படிப்பை பயின்ற மாணவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த மாணவர்களின் உழைப்பையும், பேராசிரியர்களின் முழுமையான வழிகாட்டலையும் கல்லூரி முதல்வர் டாக்டர். அருள்ராஜ் பொன்னுதுரை மற்றும் துணை முதல்வர் டாக்டர். மகேஷ் குமார் சிறப்பாக பாராட்டினர்.

2025 - 2026 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. சேர்க்கை தொடர்பான கூடுதல் தகவலுக்கு 99655 09113 மற்றும் 99524 88989 என்ற எண்ணங்களில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.



செவ்வாய், 6 மே, 2025

பள்ளி வாகனத்தில் கட்டாயமாக பெண் உதவியாளர் ஒருவர் வாகனத்தில் இருக்க வேண்டும் எனமாவட்ட ஆட்சியர் இளம் பகவத், அறிவித்தார்பள்ளி வாகனங்களுக்கு ஃபிட்னஸ் சோதனை – பாதுகாப்பு அம்சங்களை அதிகாரிகள் நேரில் கண்காணிப்பு

Tamil Nadu updates

Photo news by Arunan journalist 

தூத்துக்குடி, மே 6:

பள்ளி கல்லூரி வாகனங்களில் செல்லும் மாணவ மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்து அலுவலகத்தில் இன்று 6-5-2025 பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களுக்கு ஃபிட்னஸ் சோதனை நடைபெற்றது. 








இதில்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மற்றும் மாவட்ட ஆர்.டி.ஓ. சரவணன் ஆகியோர் பங்கேற்று வாகனங்களை நேரில் ஆய்வு செய்தனர்.


வாகனங்களில் முன் மற்றும் பின்புறக் கேமரா, பிரேக் முறை, ஏர் கண்டிஷனர், வாகனத்தின் தயாரிப்பு வருடம் உள்ளிட்ட அம்சங்கள் பரிசோதிக்கப்பட்டன. 







சோதனையின் பின், பள்ளி வாகனங்களுக்கு ...

இந்த வருட 25- டூ 26  ஃபிட்னஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.


நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி வாகன டிரைவர்கள் பங்கேற்று தங்கள் வாகனங்களை ஆய்வுக்காக கொண்டு வந்தனர். 


தொடர்ந்து நடைபெற்ற பயிற்சியில், விபத்து நேரத்தில் முதற்கட்ட உதவிகளை வழங்குவது, 108 அவசர எண்கள் மூலம் உதவி பெறுவது குறித்து மருத்துவர்கள் செய்முறை விளக்கம் அளித்தனர். தீயணைப்பு துறை அதிகாரிகள் தீ விபத்து நேரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்  demonstratIon வழங்கினர்.


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், பேசுகையில்...

 “ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் கட்டாயமாக பெண் உதவியாளர் ஒருவர் வாகனத்தில் இருக்க வேண்டும். இது பின்பற்றப்படாவிட்டால், உரிய பள்ளி-கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என எச்சரித்தார்.


இந்நிகழ்ச்சி மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஒட்டுநர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் சிறப்பாக நடத்தப்பட்டது.



-


புதன், 20 நவம்பர், 2024

மாணவி மகேஷ் நாச்சியார் சாதனை சிலம்பம் போட்டியில் முதலிடம் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம்கால்வாய் கிராமத்தை சோ்ந்த பள்ளி மாணவி

அகில இந்திய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த   மாணவி மகேஷ் நாச்சியார் சாதனை படைத்துள்ளார்.

இது பற்றிய செய்தியாவது:-

பெங்களுாில் அகில இந்திய அளவில்  சிலம்பம் போட்டி நடைபெற்றது இதில் பல்வேறு மாநிலங்களில் உள்ள சிலம்பம் பயிற்சி எடுத்த மாணவிகள் போட்டி யில் கலந்து கொண்டார்கள்.


தமிழகத்தின் சார்பில்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கால்வாய் கிராமத்தை சோ்ந்த உக்கிரபாண்டி இசக்கிராணி தம்பதியினர் மகள் மகேஷ் நாச்சியார். கலந்து கொண்டார்.


பெங்களூரில் அகில இந்திய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் மகேஷ் நாச்சியார் முதலிடத்தில் வெற்றி பெற்றார்.



மாணவி மகேஷ் நாச்சியார்  இந்தியாவில் முதலிடம் பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளாா்.


    

     இந்த விளையாட்டு போட்டிகளின் மூலம் பல மாணவ மாணவிகள் அரசுத்துறை சார்ந்த படிப்புடன் கூடிய மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அரசுத்துறை சார்ந்த பணிகளுக்கும் தேர்வாகி வருகின்றன. 


தமிழக அரசை பொறுத்தவரை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் தற்போது துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பும் தமிழகத்தில் எல்லா விளையாட்டு போட்டி களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு ஊக்குவித்து வருகிறார். 



மாநில அளவில் தேர்ச்சி பெறும் வீரர்களுக்கு அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிகள் மட்டுமின்றி உலக அளவில் நடைபெறும் போட்டி களுக்கும் தேவையான உதவிகளை அரசின் சார்பில் செய்து வருகிறார். 

  Photo news by

sunmugasuthram Reporter