வியாழன், 26 பிப்ரவரி, 2026

சாயர்புரம் செயிண்ட் மேரீஸ் பள்ளி 24ஆம் ஆண்டு விழா

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: பெ27

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் இயங்கி வரும் செயிண்ட் மேரீஸ் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியின் 24ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் டி. சிதம்பரநாதன் தலைமை தாங்கினார்.

thoothukudileaks


Bishop Jebaraj தொடக்க ஜெபத்தை நடத்தினார். பள்ளி முதல்வர் அக்னஸ் ஜெயலின் வரவேற்புரை வழங்கி ஆண்டு அறிக்கையை வாசித்தார்.

சாயர்புரம் பாஸ்டரேட் தலைவர் ஜே. மனோகரும், மாவட்ட நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகள் சங்க செயலாளர் ஏ. ஜோசப்பும் சிறப்புரையாற்றினர். Pope Memorial Higher Secondary School தலைமையாசிரியர் சி. எட்வர்ட் ஜான்சன் பால் மற்றும் St. Mary's Girls Higher Secondary School தலைமையாசிரியர் ஆர். ஹெப்சிபா புவேலா மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களின் நடனம், நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சாயர்புரம் நகர பஞ்சாயத்து கவுன்சிலரும், மாவட்ட திமுக துணைச் செயலாளருமான ஜே. ஜெபா தங்கம் பிரேமா உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர். சிஎஸ்ஐ மறைமாவட்ட உறுப்பினர்கள் அலய்மணி, ஜெயகுமார் மற்றும் பலரும் பங்கேற்றனர்.

இறுதியாக உதவி தலைமையாசிரியர் அருள் மேரி நன்றியுரை வழங்கினார்.

விழா உற்சாகமாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக