ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

பக்தி பரவசத்தில் சேலம் கோட்டை மாரியம்மன் திருத்தேர் திருவிழா! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சிறப்பான அன்னதானம்

Tamil Nadu updates

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா!

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாபெரும் அன்னதானம் — ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சேலம்: ஆகஸ்ட் 9 

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா பக்தர்களின் பக்திப் பரவசத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாபெரும் அன்னதான விழா சிறப்பாக நடைபெற்றது.

thoothukudileaks


பழமை வாய்ந்ததும், பக்தர்களால் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் திருத்தலமாக போற்றப்படுவதுமான சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற திருத்தேர் திருவிழாவில், சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனர்.


திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் அன்னதான விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் கலந்து கொண்டு அன்னம் பெற்று சென்றனர்.


இந்நிகழ்ச்சியில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தின் நிறுவனர், வாழும் கலியுக சித்தர் தவத்திரு சுவாமி இராமானந்தா, சொர்க்கபுரம் ஆதீனம் 22-வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ தண்டாயுதபாணி தேசிகர் மற்றும் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு அன்னதான விழாவை தொடங்கி வைத்தனர்.

thoothukudileaks


சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி  ஆலோசனையின்படி நடைபெற்ற இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் சர்மிளா சரவணன், ரவிச்சந்திரன் ஜி, வழக்கறிஞர் சுதன், ஸ்ரீதர், பிரபு, கீர்த்தி ஜெயகாந்த், ரமேஷ், சண்முகவேல், மாவட்ட செயலாளர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


மேலும் கவிதா, நேதாஜி, சுந்தரம், பேபி ரமணி, கவிதா, அன்னபூரணா, பத்மா, விக்னேஷ், ரவி, அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழா ஏற்பாடுகளில் சிறப்பாக பணியாற்றினர்.


பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கி நடைபெற்ற இம்மாபெரும் அன்னதான விழா, ஆன்மிகம் மற்றும் சேவை உணர்வை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.


புகைப்படக் குறிப்பு:
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழாவையொட்டி நடைபெற்ற மாபெரும் அன்னதான விழாவை சிறப்பு அழைப்பாளர்கள் தொடங்கி வைத்த காட்சி.


வெள்ளி, 3 ஏப்ரல், 2026

பண்ணாரி மாரியம்மன் குண்டம் பெருந்திருவிழா: பக்தர்களுக்கு உணவு வழங்கிய திருக்கோயில் பாதுகாப்பு சங்கம்

Tamil Nadu updates

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

ஈரோடு மாவட்டம் :ஏப் 3

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற குண்டம் பெருந்திருவிழா இவ்வாண்டும் பக்தி உணர்வுடன் சிறப்பாக நடைபெற்றது.

thoothukudileaks


இந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு, அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் மற்றும் பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கும் சேவை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

thoothukudileaks


இந்நிகழ்ச்சியை கோவை காமாட்சிபுரம் ஆதீனம் ஶ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், சொர்க்கபுரம் ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ தண்டபாணி தேசிகபண்டார சந்நிதி சுவாமிகள் மற்றும் ஶ்ரீ மத் பரமஹம்ஹேத்யாதி ஶ்ரீ ரங்க பராங்குச பரகால நம்பி ராமானுஜர் ஜீயர் ஸ்வாமிகள் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

thoothukudileaks


விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் ஒழுங்காக வரிசையில் நின்று உணவு பொருட்களை பெற்றுக் கொண்டு, ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். 

பக்தர்களின் தேவையை உணர்ந்து சீரான முறையில் சேவை செய்த சங்கத்தின் இந்த முயற்சி பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி அவர்களின் ஆலோசனையின் பேரில், சங்க பொறுப்பாளர்கள் செந்தில்குமார், நடராஜ், நித்தியானந்தன், குப்புராஜ், சத்யபிரகாஷ், ஆனந்தன், சுமதி உள்ளிட்ட உறுப்பினர்கள் சிறப்பாக மேற்கொண்டனர்.

thoothukudileaks


வெள்ளி, 6 மார்ச், 2026

தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் சனிபெயர்ச்சி விசேட யாகம் அன்னதானம்

Tamil Nadu updates

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி மார்ச் 6

தூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டியில் அமைந்துள்ள சனிஸ்வரர் ஆலயத்தில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று (06.03.2026) காலை 7.00 மணி முதல் விசேட யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

thoothukudileaks


இதனை முன்னிட்டு ஆலயத்தில் வேத மந்திரங்கள் ஒலிக்க யாகம் நடைபெற்றது. தொடர்ந்து சனிபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சனிபகவானை தரிசித்து அருளாசி பெற்றனர்.

thoothukudileaks


பின்னர் ஆலய வளாகத்தில் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அன்னதானத்தை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வை ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

புதன், 18 பிப்ரவரி, 2026

அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோரிக்கை

Tamil Nadu updates 18-2-2026

கரூர் பெ18

கரூர் மாவட்டம், குளித்தலை அய்யர்மலையில் அமைந்துள்ள அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் வருகின்ற 22.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணியளவில் நடைபெற உள்ளது.

thoothukudileaks


 மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவிற்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமல்லாது, தமிழ்நாடு முழுவதும் உள்ள குடிப்பாட்டுக்காரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் பெருமளவில் கலந்து கொள்ள உள்ளனர்.

thoothukudileaks


இந்நிலையில், அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி, மாநில கௌரவ செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆலயத்திற்கு நேரில் வருகை தந்து நடைபெற்று வரும் மஹா கும்பாபிஷேக பணிகளை பார்வையிட்டனர்.

பின்னர், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளதால், அவர்களின் நலன் கருதி தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 


குறிப்பாக சுகாதாரமான குடிநீர், போதிய கழிப்பறை வசதிகள், மருத்துவ உதவி மையம் மற்றும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுமாறு திருக்கோயில் அதிகாரியிடம் மனு அளித்து பக்தர்கள் சார்பாக கோரிக்கை வைத்தனர்.

கும்பாபிஷேக விழா சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

thoothukudileaks

thoothukudileaks


— 

புதன், 4 பிப்ரவரி, 2026

தைப்பூசத் திருவிழாவில் மாபெரும் அன்னதான விழா அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் ஏற்பாடு

குளித்தலை, பிப்ரவரி : பெ 4

தமிழ்நாட்டில் பழனிக்கு அடுத்தபடியாக சிறப்புமிக்க தைப்பூசத் திருவிழா கரூர் மாவட்டம் குளித்தலையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றங்கரையில் எட்டு ஊர் சுவாமிகள் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பங்கேற்று, பக்தர்களின் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டனர்.

thoothukudileaks

thoothukudileaks


இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தவாரி செய்து, சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து, அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாபெரும் அன்னதான விழா தொடர்ந்து இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று வந்து அன்னம் பெற்று சென்றனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக சங்கத்தின் தேசிய இணை செயலாளர் கிராமியம் நாராயணன் மற்றும் மாநில கௌரவ செயலாளர் வாழைக்காய் வியாபாரி சேட்டு ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த மாபெரும் அன்னதான விழாவுக்கான ஏற்பாடுகளை, சங்கத்தின் நிறுவனர் அருள்வேலன் ஜி அவர்களின் ஆலோசனைப்படி, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள்

N. ராமகிருஷ்ணன், P. கருணாநீதி, தியானேஷ், சரவணன், வெங்கடேஷ், சந்தோஷ், வீரமணி, தர்மராஜ், S. சதீஷ்குமார், ரவி, முகிலன், அர்ச்சகர் விஷ்ணு, சுந்தரேசன், வரகூர் மணி, மதியழகன், செந்தில் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

thoothukudileaks

thoothukudileaks



புதன், 28 ஜனவரி, 2026

திருவானைக்காவலில் இந்து சமய பாதுகாப்பு மாநாடு: மத்திய அரசுக்கு 10 கோரிக்கைகள்

திருச்சி, ஜனவரி 28 - 

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் கோதை நாச்சியார் மண்டபத்தில் இந்து சேனா மற்றும் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் இணைந்து நடத்திய இந்து சமய பாதுகாப்பு மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

கோவை சிரவை ஆதீனம் 4ஆம் பட்டம் குருமகா சந்நிதானம் திருப்பெருந்திரு இராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமை ஏற்று திருவிளக்கு ஏற்றி மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

thoothukudileaks

thoothukudileaks


 மன்னார்குடி ஶ்ரீ சம்பத்குமார இராமானுஜ ஜீயர் சுவாமிகள், காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தின் மடாதிபதி சுவாமி தர்ஷினி அனுபவானந்த சுவாமிகள், அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்தின் நிறுவனர் தவத்திரு சுவாமி இராமானந்தா மகராஜ், இந்து சேனா தேசிய பேரியக்கத்தின் தேசிய தலைவர் விஷ்ணு குப்தா உள்ளிட்ட பல ஆன்மீகத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.


கலை நிகழ்ச்சிகளும் விருது வழங்கலும்

மாநாட்டில் பாரம்பரிய பஜனை, இசைக்கச்சேரி, பரதநாட்டியம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. இந்து சமயத்தின் சேவை பணிகளை செய்து வரும் ஆன்மீக அன்பர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

thoothukudileaks

thoothukudileaks


மத்திய அரசுக்கு 10 முக்கிய கோரிக்கைகள்

மாநாட்டில் இந்து சமய மக்களின் சார்பாக மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அவற்றுள் முக்கியமானவை:

• இந்து சமய கோயில்களில் பக்தர்களிடையே வேற்றுமை உருவாக்கும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்

• இந்து சமயத்தைப் பாதுகாக்கவும் இந்து மக்களின் நலனுக்காகவும் இந்து சமய நல வாரியம் உடனே அமைக்க வேண்டும்

• இந்திய கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து ஆதீனங்கள், மடாதிபதிகள், ஜீயர், ஆன்மீக அமைப்புகளின் தலைமையில் நிர்வாகம் நடத்த சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும்

• கோயில் திருவிழாக்களில் அந்தந்த மாநிலத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கட்டாயம் நடத்த வேண்டும்

• இந்து சமயம் சார்ந்த கல்வியை பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் கொண்டுவர வேண்டும்

• பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான, சிதிலமடைந்த கோயில்களை உடனடியாக வழிபாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்

• சங்கராச்சாரியார்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள், ஜீயர் மற்றும் துறவியர்களுக்கு இலவச ரயில்வே சிறப்பு பயண பாஸ் வழங்க வேண்டும்

• மடங்களின் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து சொத்துக்களை மீட்க வேண்டும்

• பிரசித்தி பெற்ற இந்து கோயில்களில் வரலாற்று அருங்காட்சியகங்களை அமைக்க வேண்டும்

• கோயில்கள் சார்ந்த குளங்கள் மற்றும் நதிகளின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும்

இந்த மாநாட்டை இந்து சேனா மாநில தலைவர் மற்றும் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஆலோசனையின் பேரில் மாநில மற்றும் தேசிய பொறுப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


வெள்ளி, 19 டிசம்பர், 2025

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் அனுமன் ஜெயந்தி விழா – சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அன்னதானம்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ்  செய்தி

தூத்துக்குடி டிச 20

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசித்தர் பீடத்தில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. இங்கு ஆஞ்சநேயர் தியான ஆஞ்சநேயராக எழுந்தருளியுள்ளார்.



அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் நல்ல மழை பெய்து விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் வளம்பெறவும், உலக மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் தியான ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட 27 வகையான சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

தூத்துக்குடியில் அருள் மிகு ஜெய் ஹனுமான் ரொம்ப ரொம்ப...அரிதாக தியானத்தில் அமர்ந்து இருக்கும் சிறப்பு பக்தி வீடியோ பார்க்க 


தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வடை, துளசி, வெற்றிலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனுடன் மஹாபிரத்தியங்கிரா தேவி மற்றும் காலபைரவருக்கும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்து வழிபாடுகள் நடைபெற்றன.

விழாவின் நிறைவாக மஹா அன்னதானம் வழங்கப்பட்டு, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

.


ஞாயிறு, 16 நவம்பர், 2025

தூத்துக்குடியில் பக்தர்களுக்கு அழைப்பு கடன்தொல்லை நீங்கி செல்வம் பெருக சிறப்பு வழிபாடுதூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் வரும் 19-ம்தேதி மஹா பிரத்தியங்கிராதேவிக்கு மிளகாய் வற்றல் மஹா யாகம்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் — சிறப்பு செய்தி

தூத்துக்குடி நவ17

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி – காலபைரவர் சித்தர் பீடம், தென்தமிழகத்தில் அரிய தனிச்சிறப்பான தெய்வஸ்தலமாகும். இங்கு மிகப்பிரம்மாண்டமாக எழுந்தருளி உள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி தினமும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

thoothukudileaks


பிரத்தியங்கிராதேவிக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இவ்வழிபாடுகளில் பங்கேற்றி தேவியை வணங்கினால் வேண்டிய அனைத்தும் கிடைக்கும் என்ற அபார நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது.


இந்நிலையில், கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு வரும் 19-ம்தேதி (புதன்கிழமை) பக்தர்களின் கடன்தொல்லைகள் நீங்கி செல்வம் பெருகிட ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவிக்கு மிளகாய் வற்றல் மஹா யாகம் நடைபெறுகிறது.

இந்த யாகம் ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெறுகிறது.


அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் வழிபாடுகள் தொடங்கும். பின்னர் 11.00 மணிக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் பிரத்தியங்கிராதேவிக்கு நடைபெறும்.


பக்தர்கள் கடன்தொல்லை, எதிரித்தொல்லை நீங்கி திருமண வரம், குழந்தை பாக்கியம், நல்ல வேலை வாய்ப்பு, குடும்பத்தில் செல்வ வளம் பெருகிட வேண்டி மதியம் 12.30 மணிக்கு மிளகாய் வற்றல் கொண்டு மஹா யாகம் நடைபெறுகிறது.


இதனை தொடர்ந்து மஹா காலபைரவர் மற்றும் மஹா பிரத்தியங்கிராதேவிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறும். இறுதியாக பங்கேற்கும் பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கப்படும்.


மஹா யாகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பக்தர்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வியாழன், 13 நவம்பர், 2025

பக்தி மயமான தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

தூத்துக்குடி நவ 13

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீசித்தர் பீடத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவருக்கு ஒவ்வொரு அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.



ஜப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, இம்மாதமும் மஹா காலபைரவருக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர், இளநீர், புனுகு உள்ளிட்ட அபிஷேகங்கள் மிகுந்த பக்தி பூர்வமாக நடத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மஹா காலபைரவர் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். இவ்வழிபாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடத்தினர்.

பக்தி மயமான ஸ்ரீசித்தர் பீடத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவர் சிறப்பு பூஜை வீடியோ பார்க்க 

பக்தர்கள் வாழ்வில் கடன்தொல்லைகள், எதிர்த்தொல்லைகள் நீங்கி செல்வம், சுகம் பெருகிட வேண்டி மஹா யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வழிபாட்டைத் தொடர்ந்து பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது.

🕉️ தூத்துக்குடி லீக்ஸ் – ஆன்மீகச் செய்திகள்

photo news by sunmugasuthram press club president 

வெள்ளி, 19 ஜனவரி, 2024

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு அனுமன் தீர்த்தம்

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு அனுமன் தீர்த்தம் இன்று (19-1-2024) அனுப்பப்பட்டது.



உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பல சட்ட போராட்டங்களுக்கு பிறகு தற்போது சிறந்த முறையில் கட்டப்பட்டு வருகிறது.


இந்த ராமர் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற 22.01.2024 அன்று நடைபெற உள்ளது.



இந்த கோயில் கும்பாபிஷேகத்திற்கு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மிகவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ராமேஸ்வரம் கடலில் இருந்து புனித நீரானது அனுமன் தீர்த்தமும் , இராமேஸ்வரம் மண்ணும் எடுத்து அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பப்பட்டது.


 அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி  ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் படி மாநில செயலாளர் P M சரவணன் ஜி தலைமையில் மாநில இணைச் செயலாளர் K சிவகுமார் , ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் புனிதா ஶ்ரீ ‌ , மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் V.முருகவள்ளி , மாவட்ட மகளிர் இணைச் செயலாளர் G முத்துலட்சுமி , மாவட்ட துணை செயலாளர் R.சசிகுமார் ஆகிய 

பொறுப்பாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

புதன், 9 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி சண்முகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை

 thoothukudi leaks 9-8-2023

தூத்துக்குடி சண்முகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில்  திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 351 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

விழா கமிட்டி சார்பில் பேசுகையில் ...


     கொடை விழாவை யொட்டி கடந்த வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கால்நட்டு விழா நடைபெற்றது.

      செவ்வாய்கிழமை அன்று இரவு மழை வளம், நாட்டின் ஓற்றுமை, மனித நேயம், அமைதி, தொழில்வளம், பெருகவேண்டும், கொரோனா கொடிய நோயிலிருந்து விடுபட்டு அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டும் ஆகியவற்றிற்காக பஜனையுடன் திருவிளக்கு பூஜையுடன் சுவாமிகளுக்கு கும்பம் ஏற்றும் பூஜையும் நடைபெற்றது.  



பின்னர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 70 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  

     அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் கொடைவிழாவை யொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் கோவில் நிர்வாக கமிட்டியாளர்கள் வாரவழிபாடு மாதர் சங்கத்தினர் கோவில் கைங்கர்ய பக்தர்கள் சண்முகபுரம் இளைஞர் முன்னேற்ற அணியினர் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி அவருக்கு மேலும் உயர் பதவிகள் கிடைக்கும் செல்வம் பட்டர் பேச்சு !!!!

 thoothukudi leaks 8-8-2023

த.சண்முகசுந்தரம்

மூத்த பத்திரிகையாளர்

 தூத்துக்குடி  மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவருக்கு மேலும் உயர் பதவிகள் கிடைக்கும் செல்வம் பட்டர் பேச்சு !!!!

தூத்துக்குடி ஸ்ரீஆலால சுந்தரவேத சிவாகம வித்யாலயம் ஸ்ரீபத்மாவதி குருகுலம் முப்பெரும் விழா நிறைவு நாள் நிகழ்ச்சியான இன்று 8-8-2023 தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டார்.

ரொம்ப பழமையானவர் செல்வம் பட்டர் குருகுலம் மடம் முப்பெரும் விழா நிறைவு நாளில்  தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி  பேசினார்.

மேயரை அருகே ...செல்வம் பட்டர் பேசுகையில் ...

இது பற்றிய செய்தியாவது:-

மேயர் ஜெகன் பெரியசாமி 


தூத்துக்குடி மாநகராட்;சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:-

இங்கு இருக்கும் செல்வம் பட்டர் இடம் இருபது ஆண்டுகளுக்கு மேலாக பழகி வருகிறேன். ரொம்ப பழமையானவர் 

அப்போது கொண்ட எளிமைதான் இப்போதும் இருக்கிறது.


 இந்த தென்மாவட்ட பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்தி வைத்த பெருமை இவர்களை தவிர வேறு யாருக்கும் இருக்க முடியாது. உங்களிடம் பயின்ற மாணவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள். என்று கேட்டேன்.

அப்போது  தமிழகம் இந்தியா கடந்து வெளிநாடுகளிலும் ஆன்மீக பணியில் இருக்கிறார்கள். என்று தெரிவித்தார்கள். 

பழைய கலாச்சாராத்தை மறந்து விடக்கூடாது. 

காலம் காலமாக வாழையடி வாழையாக இங்கு பயிலும் மாணவர்கள் பணி உலகம் முழுவதும் பரவ வேண்டும்.  இறைவன் அருளாசியோடு எல்லா பணியும் நல்லமுறையில் நடைபெற வாழ்த்துகிறேன். என்று பேசினார்.

      தூத்துக்குடி மேயர் ஜெகன் அவருக்கு மேலும் உயர் பதவிகள் கிடைக்கும்

செல்வம் பட்டர் பேச்சு !!!!

    ஸ்ரீஆலால சுந்தரவேத சிவாகம வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர் பேசியதாவது:-

ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் ஒவ்வொரு மரியாதை உண்டு. 

சிலருக்கு பதவியை வைத்து மரியாதை இருக்கும். சிலருக்கு செயல்பாடுகளை வைத்து பதவிக்கு மரியாதை இருக்கும் அந்த வகையில் நம்முடைய மேயர் ஜெகன் பெரியசாமி மக்கள் பணி செய்வதற்கு தான் நாங்கள் பொறுப்புக்கு வந்துள்ளோம் என்பதை உணர்ந்து பணியாற்றி வருகிறார். 



இந்த சிறப்பு எல்லோருக்கும் அமையாது சமீபத்தில் சிவன்கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தின் போது...

 அப்பகுதியில் சாலைகளை சீரமைத்து தரவேண்டும். என்று நேரில் சந்தித்து பேசும் போது மணி 3, சாப்பிட செல்லவில்லையா என்று கேட்ட போது கடமை தான் முக்கியம் என்று கடமையோடு பணியாற்றி நாங்கள் வைத்த கோரிக்கையை தானே முன்நின்று அதை செய்து கொடுத்தார். இது போன்ற பணிகள் செய்பவர்களுக்கு மேலும் பல உயர்பதவிகள் கிடைக்கும் என்று பேசினார்.

    

இதனை தொடர்ந்து சமயத் தொண்டினை கௌரவித்து பலருக்கு விருது வழங்கப்பட்டது.



தூத்துக்குடி ஸ்ரீஆலால சுந்தரவேத சிவாகம வித்யாலயம் ஸ்ரீபத்மாவதி குருகுலம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் ....

பெங்களுர் வேத ஆகம ஸம்ஸ்க்ருத மஹா பாடசாலை ஸ்ரீஸ்ரீகுருகுலம் முதல்வர் சிவாகம கலாநிதி சுந்தரமூர்த்தி குருக்கள் தலைமை வகித்தார். 

முத்தமிழ் குருமணி க்ரியாக்கிரமஜோதி வாகீசவாரதி சகலாகமசங்கிரர் சிவாகம கலாநிதி விஜய சோம சேகர சிவாச்சாரியார், ஸ்ரீ கதிர்மலை சிவன் தேவஸ்தானம் கன்னாகம் சிவாகம கலாநிதி சர்வேஸ்வரக் குருக்கள், இலங்கை இந்து குருமார் அமைப்பு தலைவர் வைத்தீஸ்வர குருக்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் ஸ்தானிகம் ஸ்ரீசண்முகர் பூஜா கைங்காயம் குமார் பட்டர் வரவேற்புரையாற்றினார்.  


இந்நிகழ்ச்சியில் சண்முகபுரம் பகுதி திமுக செயலாளரும் மாநகராட்சி சுகாதாரகுழு தலைவருமான சுரேஷ்குமார், திமுக வட்டச்செயலாளர்கள் கீதாசெல்வமாரியப்பன், ரவீந்திரன், திமுக பிரமுகர்கள் மாரிமுத்து, ஜோஸ்பர், அதிமுக பகுதி இளைஞர் அணி செயலாளர் ஹரிஸ்மா கோல்டு பைனான்ஸ் உரிமையாளருமான திருச்சிற்றம்பலம், துணை செயலாளர் டாக்டர் சிவா, பட்டர்கள் சுப்பிரமணியன், கண்ணன், சண்முகம், மணி, ஐயப்பன், சங்கர், சோமாஸ், குமார், சோமசுந்தரம்,  மற்றும் நாகலட்சுமி, பரமேஸ்வரி, உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவாகம் க்ரியா விசாரத விக்னேஷ் சிவம் நன்றியுரையாற்றினார்.


தூத்துக்குடியில் ஸ்ரீஆலால சுந்தரவேத சிவாகம வித்யாலயம் ஸ்ரீபத்மாவதி குருகுலம் சார்பில் முப்பெரும் விழா அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

thoothukudi leaks 8-8-2023

த.சண்முகசுந்தரம்

மூத்த பத்திரிகையாளர்


தூத்துக்குடியில் ஸ்ரீஆலால சுந்தரவேத சிவாகம வித்யாலயம் ஸ்ரீபத்மாவதி குருகுலம் சார்பில் முப்பெரும் விழா அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

இது பற்றிய செய்தியாவது:-

     தூத்துக்குடி ஸ்ரீஆலால சுந்தரவேத சிவாகம வித்யாலயம் ஸ்ரீபத்மாவதி குருகுலம் சார்பில் முப்பெரும் விழா கடந்த ஞாயிறு அன்று தொடங்கியது. பத்மாவதி குருகுல கட்டடம் திறப்பு விழா, சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா மூன்று நாட்கள் நடைபெறுகின்றன.



    முதல்நாள் விழாவில் தருமை ஆதீனம் தலைமை தாங்கி கட்டிடத்தை திறந்து வைத்தார். கல்வெட்டு திறப்பு விழாவும் நடைபெற்றது. 


வேளாக்குறிச்சி ஆதீனம், பெரியநம்பி திருமாளிகை ஜீயர் சுவாமிகள் அருளாசி வழங்கினார்கள். 


பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் வேத சிவாகம வித்யாலயம் முதல்வர் பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் ஸ்கந்த குரு வித்யாலயம் முதல்வர் ராஜா பட்டர் ஆசியுரை வழங்கினார்கள்.



     தஞ்சாவூர் விரைவு நீதிமன்ற நீதிபதி முருகேசன் வாழ்த்துரை வழங்கி உண்மை விளக்கம் எனும் நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. நூல் குறித்து தருமை ஆதீனப் புலவர் மதிவேலாயுதம் அறிமுகவுரை நிகழ்த்தினார். ஸ்ரீஆலால சுந்தர வேத சிவாகம வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 


    இரண்டாம் நாள் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவிற்கு விகாஸரத்னா பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் வேத சிவாகம வித்யாலயம் முதல்வர் பிச்சை குருக்கள் தலைமை தாங்கினார். யு.எஸ்.ஏ ஹரிஹரன் முன்னிலை வகித்தார்.

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நிகழ்ச்சி யில் கலந்து பேசியதாவது :-


செல்வம் பட்டரை பொறுத்தவரை எந்த வேறுபாடும் பார்க்காமல் பழகுபவர் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் நல்லது நடக்க வேண்டும் என்று சிறந்த இறைபணியில் ஈடுபட்டு வருகிறார். 


நல்ல பழக்க வழக்கங்களின் மூலம் பாடசாலையில் ஒழுக்கமான முறையில் நல்ல ஆசீர்வாதம் வழங்கி வருகிறார். 


இதுபோன்ற நிகழ்வுகள் மனதிற்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும். 


இறைவன் அருளாசியால் இறைபணி மூலம் பல்வேறு நிகழ்வுகளை செய்து வருகிறார். 


மக்களின் மகிழ்ச்சிக்கு அவரது ஆன்மீக பணிகளுக்கு எல்லோரும் ஆதரவை வழங்கி வருவதை போல் என்னுடைய ஆதரவும் எப்போதும் உண்டு என்று பேசினார்.

    வேதம் சிவாகமம் பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி முதலாம் ஆண்டு பாடத்திட்ட தொகுப்பு வெளியிடப்பட்டது. 

இவ்விழாவில் இந்து சமய அறிநிலைய துறை இணை ஆணையர் அன்புமணி, சிவன்கோவில் நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வக்கீல் குபேர் இளம்பரிதி, முன்னாள் அறங்காவல குழு தலைவர் கோட்டுராஜா, சிவன்கோவில் பிரதோஷகமிட்டி தலைவர் ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தசாமி, செந்தில்குமார், தெப்பக்குளம் மாரியம்மன்கோவில் அறங்கால குழு தலைவர் செல்வசித்ரா, அறங்காவல குழு உறுப்பினர்கள் பாலகுருசாமி, மகாராஜன், திமுக வட்டச்செயலாளர் முனியசாமி, கண்ணன்பட்டர், மற்றும் நாகலட்சுமி, பரமேஸ்வரி, உள்பட பலர் கலந்து கொண்டனர். 


அடுத்து நியூசிலாந்தை சேர்ந்த மணிகண்ட பட்டர் நன்றி கூறினார்.


அமைச்சருக்கு புகழாரம் ஆலால சுந்தரவேத சிவாகம வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர் வரவேற்புரையில் பேசும்போது ...


எந்த மத நிகழ்வாக இருந்தாலும் முழு மனதோடு கலந்து கொண்டு எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் எப்போதும் சொல்வார்கள். 


 ஆனால் எளிதில் எல்லோரும் சந்திக்கலாம். அனைவராலும் அவரை அன்போடு அழைப்பார்கள். 


அதேபோல் இந்த நிகழ்வுக்கு வரவேண்டும் என்று கேட்டவுடன் சரிஎன்று கூறினார்கள். 


இறைவன் தொடர்ந்து அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவதால் மாவட்ட செயலாளர் அமைச்சர் என்று நல்ல மதிப்போடு இன்று வரை தொடர்ந்து இருக்கிறார்கள். 


இனி வரும் காலங்களிலும் இது தொடரும். மனதார வாழ்த்துகிறேன் என்று பேசினார்.

திங்கள், 25 ஜூலை, 2022

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் திருவிழா கொடியேற்றம்

  இன்று 26-7-2022 காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் திருவிழா இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.


தூத்துக்குடி பனிமய மாதா 


தூத்துக்குடியில் அமைந்து உள்ள பிரசித்திபெற்ற தூய பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்டு 5-ம் தேதி வரை நடைபெறும். அதன்படி 440-வது ஆண்டு பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து காலை 6.45 மணிக்கு ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை பிஷப் ஸ்டீபன் அந்தோணி ஏற்றி வைத்தார். 


விழாவில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், எஸ்பி பாலாஜி சரவணன், ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா மற்றும் பாதிரியார்கள், பேராலய நிர்வாகிகள், மற்றும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொடியேற்றம் நிகழ்ச்சியில் கலந்து கொணடார்கள்.


  

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு காவல்துறை அவசர தொலைபேசி எண்களான 100 மற்றும் மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை எண் 95141 44100 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்

 தூத்துக்குடி லீக்ஸ்: 25.07.2022

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு - திருட்டு, செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க சாதாரண உடையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பொதுமக்களோடு மக்களாக கலந்து பணியில் ஈடுபடுவார்கள் - குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம்.


இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா  (26.07.2022)  தொடங்கி வரும் 05.08.2022 அன்று வரை  நடைபெற உள்ளது. 


பனிமய மாதா திருவிழா 26-7-2022 செவ்வாய் காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. 


இதனை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பாக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று (25.07.2022) பனிமய மாதா ஆலய வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன்  தலைமையில் நடைபெற்றது. இதில் போலீசார் பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரை வழங்கினார்.

ஆலோசனை கூட்டம் 


இந்த பனிமய மாதா கோவில் திருவிழா பாதுகாப்பு பணிக்கு 3 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். திருட்டு, செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், பழைய குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை ரகசியமாக கண்காணிக்க 100க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் போலீசார் சாதாரண உடையில் பொதுமக்களோடு மக்களாக கலந்து ஆங்காங்கே தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆங்காங்கே சிசிடிவி மேராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிக அளவில் தங்க ஆபரணங்களை அணிந்து வரவேண்டாம், தங்களது குழந்தைகளையும், உடமைகளையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும், மேலும் தங்க நகைகளை அணியும்போது உடைகளுடன் சேர்த்து ஊக்கு போன்றவற்றால் பின் செய்து பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். மேற்படி குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்க காவல்றையினர் ஒலிப்பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். 


பொதுமக்கள் தங்களது குழந்தைகளையோ, பொருட்களையோ தவறவிட்டால் உடனடியாக மாதா கோவில் வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம். 


மேலும் இந்த கூட்டத்தை பயன்படுத்தி யாராவாது திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்களுக்கு தெரியவந்தால் உடனடியாக காவல்துறை அவசர தொலைபேசி எண்களான 100 மற்றும் மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை எண் 95141 44100 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், அவ்வாறு தகவல்கள் தருபவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். 


பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அமைதியான முறையில் வழிபட்டு செல்வதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும், குற்ற சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.


 இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கு தந்தை குமாரராஜா, தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ், காவல் துணை கண்காணிப்பாளர்கள் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு பிரேமானந்தன், மாவட்ட குற்ற பிரிவு ஜெயராம், மணியாச்சி சங்கர், பயிற்சி காவல் துணை  கண்காணிப்பாளர் கணேஷ்குமார் உட்பட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 12 நவம்பர், 2021

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்திற்கு வள்ளலார் சமூக சேவை விருது !!!


தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கக்கூடிய அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் அனைத்து விதமான சேவைகளை பாராட்டி மற்றும் ஊக்குவிக்கும் விதமாக அச்சங்கத்திற்கு "வள்ளலார் சமூக சேவை விருது" வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் வழங்கி 


பாராட்டியது.


பாண்டிச்சேரி கடலூர் செல்லும் சாலையில் தவளக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள சுப மங்களா மஹாலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை தொடர்ந்து உருவாக்கி தந்து கொண்டிருக்கும் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கத்தின் சார்பாக ...

சமூக சேவைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களை  சேவைகளை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களை தேர்ந்தெடுத்து  விருது வழங்கும் விழா நடைபெற்றது.


இதில்  அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின்  திருக்கோயில்கள் சார்ந்த பணிகள் மற்றும் மக்கள் சார்ந்த அனைத்து சேவை பணிகளையும் தொடர்ந்து செய்து வருகின்றதையும் மற்றும்  உதாரணமாக கொரோனா  ஊரடங்கு காலகட்டத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களை தத்தெடுத்து வாரம் இரண்டு முறை அரிசி உட்பட மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை தொடர்ந்து வழங்கியது , தொடர்ந்து மக்களுக்கு அன்னதானம் வழங்குதல் , ஏழை குடும்பங்களுக்கு தேவைகளை அறிந்து  அத்தேவையினை நிவர்த்தி செய்வது ,மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்தல் போன்ற பல எண்ணற்ற சமூக சேவைகளை செய்து வருவதால் அச்சங்கத்தின் சேவைகளை பாராட்டி வள்ளலார் சமூக சேவை விருது வழங்கப்பட்டது



இந்த விருதினை சமரச சுத்த சன்மார்க்க சத்ய  சங்கம் வள்ளலார் மிஷின் G.சாது.ஜானகி ராமன்  அனைத்திந்திய திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அருள்வேலன் ஜி அவர்களிடம் வழங்கினார். 


விருதை பெற்ற அருள்வேலன் ஜி இந்த விருதினை சங்கத்தின் அனைத்து  பொறுப்பாளர்களுக்கும் மற்றும் சங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு தருகின்ற அனைத்து  நல்ல உள்ளங்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன் என்றார்.

இந்த விழா ஏற்பாட்டினை மிக சிறப்பாக வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கத்தின் நிறுவனர் I.B.வீரராகவ ன்  மற்றும் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் மிக சிறப்பாக செய்திருந்தனர்.