newstami லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
newstami லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

என் தேசம் என் மக்கள் குறும்படம் வெளியீடு தூத்துக்குடி கலெக்டர் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

தூத்துக்குடி லீக்ஸ் :-01-08-2022

தூத்துக்குடியில்  "என் தேசம் என் மக்கள்" என்ற தேசப்பற்றை ஊட்டும் குறும்படத்தை தூத்துக்குடி மாவட்டஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்ஆகியோர் இணைந்து இன்று (01-08-2022) வெளியிட்டார்கள்

இதில் குறும்பட கதை மற்றும் தயாரிப்பாளர் கி.ம.சங்கர், இயக்குநர் அருந்ததி அரசு, தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.விநாயகம், முனைவர் ஐ.ஜோசப் ஜான் கென்னடி, பி.எம்.சி. பள்ளிநிர்வாகி மரு.ஜேம்ஸ் சுந்தர்சிங், செய்தியாளர் கே.ஞானதுரை, உதவிஇயக்குநர்கள் தினேஷ் கௌசில், யு.எல்.குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.





திங்கள், 25 ஜூலை, 2022

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் திருவிழா கொடியேற்றம்

  இன்று 26-7-2022 காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் திருவிழா இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.


தூத்துக்குடி பனிமய மாதா 


தூத்துக்குடியில் அமைந்து உள்ள பிரசித்திபெற்ற தூய பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்டு 5-ம் தேதி வரை நடைபெறும். அதன்படி 440-வது ஆண்டு பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து காலை 6.45 மணிக்கு ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை பிஷப் ஸ்டீபன் அந்தோணி ஏற்றி வைத்தார். 


விழாவில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், எஸ்பி பாலாஜி சரவணன், ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா மற்றும் பாதிரியார்கள், பேராலய நிர்வாகிகள், மற்றும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொடியேற்றம் நிகழ்ச்சியில் கலந்து கொணடார்கள்.


  

ஞாயிறு, 3 ஜூலை, 2022

சம்படி பெத்தனாட்சி திரு கோவில் வருடாந்திர கும்பாபிஷேகம்

 தூத்துக்குடி மாவட்டம் 

சம்படி இடையர் காடு ஊருக்கு மத்தியில் அடைக்கலம் காத்த அய்யனார் திருகோயில் ஆனி மாதம் 3-1 -2022 மதியம் 1 மணி இருந்து 4 மணி வரை வருஷாபிசேகம் நடை பெற்றது.





இது பற்றிய செய்தியாவது:- 

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 03-07-2022 ஞாயிறு அன்று

சம்படி இடையர் காடு திருக்கோவினுள் விற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் திருகோவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தார்கள் .





இதையொட்டி பக்தர்கள் வேண்டியவுடன் வரம் தரும் பெத்தா னாட்சி அம்மன் கோவில் உள் வளாகத்தில் ஒம குண்டம் பூஜை கோவில் கலசம் கும்பாபிசேஷம் உச்சி வேளை மதியம்  நடைபெற்றது.




இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் சார்பாக கோவில் பூசாரி மந்திர மூர்த்தி பெத்த ைாட்சி அம்மன் கோவில் முன்னோடியான P முருகேசன் இருவரும் பக்தர்களுடன் உதவியுடன் சேர்ந்து சிறப்பாக கோயில் கும்பாபிஷேம் செய்திருந்தார்கள்.

  பின்பு பக்தர் கள் பூஜை முடிந்தவுடன் மதியம் அன்னதான விருந்தில் கலந்து கொண்டார்கள்.

புதன், 18 மே, 2022

கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் நர்ஸ் வேலை ? ரூபாய் 2 லட்சம் பணம் மோசடி ? நாசரேத் பெண் ஒருவர் கைது இவருடன் தொடர்பில் இருந்த சில நபர்கள் மீது காவல்துறை விசாரணை !!?

தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 2 லட்சம் பணம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி லீக்ஸ் : 18.05.2022

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பிரகாசபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம் மனைவி பிரேமா (27) என்பவரிடம் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தம்புபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா பாண்டி மனைவி அமுதா என்பவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிவது போல் பேசி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலை வாங்கி தருவதாக கூறி பிரேமாவிடம் ரூபாய் 1,98,000/- பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். 

கைதான அமுதா


பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த பிரேமா தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்இடம் புகார் அளித்துள்ளார்.

மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் 

 தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன், உதவி ஆய்வாளர் சுதாகரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.


 கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் நர்ஸ் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.


அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு இன்று (18.05.2022) வி.கே. புரம் அகஸ்தியர்புரம் பகுதியில் வைத்து மேற்படி பணமோசடியில் ஈடுபட்ட அமுதாவை கைது செய்தனர்.


மேலும் இவ்வழக்கில் சில நபர்கள் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்ற கோணத்தில் சைபர் குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

தூத்துக்குடி காவல்துறையை அவதூறாக வீடியோ எடுத்து அதை தங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்த இளைஞர்கள்? ஒருவர் கைது பகிர்வு செய்த மற்றவர்களை கைது செய்ய போலீஸ்வலைவீச்சு

 தூத்துக்குடி லீக்ஸ்: 08.04.2022 வெள்ளி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி காவல்துறையினர் குறித்து அவதூறாக வாட்ஸ்அப் ஸ்டேட்ஸில் வைத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி காவல்துறையினர் குறித்து சமூக வலைதளத்தில்  அவதூறாக வீடியோ பரவுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  திருச்செந்தூர் காவல் உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப அவருக்கு சம்பந்தப்பட்டவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


அவரது உத்தரவின் பேரில் திருச்செந்தூர் காவல் உதவி கண்காணிப்பாளர் தலைமையில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஆறுமுகநேரி வடக்கு சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த காமராஜ் மகன் மாரிமுத்து (20) மற்றும் சிலர் சேர்ந்து காவல்துறையை அவதூறாக வீடியோ பதிவு செய்து அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து மாரிமுத்து என்பவரை மேற்படி போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மற்ற எதிரிகளை தேடி வருகின்றனர்.