Tamil Nadu updates
தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
தூத்துக்குடி மார்ச் 6
தூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டியில் அமைந்துள்ள சனிஸ்வரர் ஆலயத்தில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று (06.03.2026) காலை 7.00 மணி முதல் விசேட யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனை முன்னிட்டு ஆலயத்தில் வேத மந்திரங்கள் ஒலிக்க யாகம் நடைபெற்றது. தொடர்ந்து சனிபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சனிபகவானை தரிசித்து அருளாசி பெற்றனர்.
பின்னர் ஆலய வளாகத்தில் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அன்னதானத்தை பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வை ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக