அமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 மார்ச், 2026

மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவது திமுக தான் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடி லீக்ஸ் | தூத்துக்குடி | 13 மார்ச் 2026

தூத்துக்குடி: தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் 73வது பிறந்தநாளையொட்டி, வடக்கு மாவட்ட திமுக சார்பில் 48வது வார்டு கால்டுவெல் காலணியில் சிறப்பான விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் நவநீதன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார்.

thoothukudileaks


விழாவில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் ... தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில்,..

 "மக்களோடு மக்களாக இருந்து உங்களோடு எப்போதும் பணியாற்றுவது திமுக தான். உங்களில் ஒருவராக இருந்தே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்" என்று தெரிவித்தார்.

காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

விடியல் பயணம் திட்டத்தின் மூலம் பெண்களை வீட்டுக்குள்ளே முடக்கி வைக்கும் நிலை மாறி, அம்மா வீடு மற்றும் உறவினர் வீடு என பல இடங்களுக்கு சுதந்திரமாகச் செல்லும் நிலை இன்று கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

"ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் தான் நங்கூரமாக இருந்து செயல்படுகிறார்கள். 1996ஆம் ஆண்டு 33 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் நான் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். 

பின்னர் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக என 30 ஆண்டுகாலம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு உங்களோடு பயணிக்கிறேன்" என்று அமைச்சர் கீதாஜீவன் உரையாற்றினார்.

thoothukudileaks


மகளிர் உரிமைத்தொகையை தேர்தலுக்குப் பின் 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 14 வயதில் கொடி பிடிக்க ஆரம்பித்து, படிப்படியாக உயர்ந்து இன்று கட்சித் தலைவராகவும் தமிழ்நாட்டு முதலமைச்சராகவும் ஸ்டாலின் பணியாற்றி வருவதை எடுத்துரைத்த அமைச்சர், 5 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார். வரவிருக்கும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.


மாற்றுத்திறனாளிக்கு அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவாதம்

விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஒரு மாற்றுத்திறனாளி, தனக்கு மூன்று சக்கர சைக்கிள் வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினார். அதை படித்துப் பார்த்த அமைச்சர் கீதாஜீவன், உடனடியாக ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்து, தனது உதவியாளரிடம் அந்த மனுவை வழங்கினார்.


விழாவில் மாநில பேச்சாளர் சரத் பாலா பகுதிச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், கவுன்சிலர்கள் சரவணகுமார், விஜயகுமார், கந்தசாமி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

photo news by sunmugasuthram press club president 


செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

தூத்துக்குடியில் திமுக ஆட்சியே மீனவர்களுக்கு நல்ஆட்சி அமைச்சர் கீதாஜீவன் பரபரப்பு பேச்சு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி news by sunmugasuthram press club president 

தூத்துக்குடி:பெ 11 "எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ அதுதான் மீனவ மக்களுக்கான நல் ஆட்சியாக இருந்து வருகிறது" என்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் தெரிவித்தார்.

thoothukudileaks


தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு மீனவர் நல வாரிய தலைவர் ஜோசப் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

thoothukudileaks


மீனவர்களின் முக்கிய கோரிக்கைகள்


திரேஸ்புரம், திருச்செந்தூர், அமலி நகர், ஆலந்தலை, பெரியதாழை, ஜீவாநகர், குலசேகரப்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரினர். மீனவர்களின் பாதுகாப்பை கருதி கடல் ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும், மீனவ கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


கடல் தொழிலில் ஈடுபட்டு உயிரிழந்த மற்றும் காணாமல் போன மீனவர்கள் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


திமுக அரசின் சாதனைகள்


கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதாஜீவன், "மீனவ நண்பர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான கஷ்டங்களை கடந்து கடல் தொழில் செய்து வருகின்றனர். அவர்களது கஷ்டங்களை குறைக்கும் வகையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்" என்றார்.


மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிப்பு, மீன்பிடி படகுகளுக்கு கூடுதல் டீசல் மானியம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் ரூ.150 கோடியில் விரிவாக்கம், தருவைகுளம் மீன் இறங்குதளம் விரிவாக்கம் என பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


எம்பிசி பட்டியல் சேர்க்கை


"மீனவ சமுதாயத்தை மிகவும் பின்தங்கியவர்கள் பட்டியலில் சேர்த்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசு. அதன் பலனாக எம்பிசி இட ஒதுக்கீட்டில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்கடன் உள்ளிட்ட பயன்களை அதிகமாக மீனவ சமுதாயத்தினர் பயன்படுத்தி பலனடைந்து வருகின்றனர்" என்று அமைச்சர் குறிப்பிட்டார்.


புதிய அறிவிப்புகள்


ஒவ்வொரு மீன்பிடி துறைமுகத்திலும் ஆம்புலன்ஸ் வசதி விரைவில் செய்து தர முதலமைச்சரிடம் எடுத்துக்கூறி விரைவில் நிறைவேற்றி தரப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். மீன்பிடி துறைமுகத்தில் சுத்திகரிக்கப்பட்ட ஆர்ஓ குடிநீர் பிளான்ட் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


"மீனவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக செவி சாய்த்து மீனவர்களுக்கு கலங்கரை விளக்கமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. மீனவ நண்பர்களும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்" என்று அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக் கொண்டார்.


மனு வழங்கல்


தொடர்ந்து நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் மீனவர் ஊர் நலக் கமிட்டியினர், மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் தங்களது பகுதிகளுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை மீனவர் நல வாரியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினிடம் மனுவாக வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட வாரிய தலைவர், விரைவில் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என தெரிவித்தார்.


கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி இயக்குநர்கள் புஷ்ராசப்னம், உத்தண்டு, மீனவர் நல வாரிய உறுப்பினர்கள் அந்தோணி ஸ்டாலின், ஜெபமாலை, லெனின், மாநில திமுக மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் செல்வராஜ், வீரபாண்டியபட்டினம் பங்குத்தந்தை அலாசியஸ், கவுன்சிலர்கள் ரெக்ஸ்லின், ஆறுமுகம், வட்டச் செயலாளர் டென்சிங், மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் இசக்கிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

photo by Arunan journalist 

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, பிப்ரவரி 9:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் இன்று (09.02.2026) காலை 10 மணியளவில் காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைக்கப்பட்டது.

thoothukudileaks


இந்த திட்டத்தின் தொடக்க விழா தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அறிஞர் அண்ணா மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கி திட்டத்தை செயல்படுத்தினர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


விழாவில் பேசிய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூய்மை பணியாளர்களின் காலை உணவு திட்டத்திற்காக ரூ.2 கோடி 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிதி மூலம் தினமும் சத்தான, சுகாதாரமான உணவு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இன்று தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 13இடத்தில் துவக்கி வைத்தனர் 

1)பழைய மாநகராட்சி அலுவலகம் 

2)அறிஞர் அண்ணா மண்டபம் 

3) அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்

4) புதிய பேருந்து நிலையம் ward ஆபீஸ்.

5) ஜோதி நகர் RRC மையம்

6) அம்பேத்கர் நகர் ward ஆபீஸ்.

7) மேட்டுப்பட்டி MCC.

8) கால்டுவெல் காலனி வார்டு ஆபீஸ்.

9) முத்தையாபுரம் வார்டு ஆபீஸ்.

10) JS Nagar ward office.

11) சிதம்பரம் நகர் மாநகராட்சி வணிக வளாகம்.

12) டோபி கானா வணிக வளாகம்.

13) P&T Colony ward office.

தூய்மை பணியாளர்களின் நலனை முன்னிறுத்தி அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி அவர்களின் உடல்நலம் மற்றும் பணித்திறன் மேம்பட உதவும் எனவும், நகர தூய்மை பணிகளில் உற்சாகம் அதிகரிக்கும் எனவும் விழாவில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

வியாழன், 1 ஜனவரி, 2026

புதுவருட முதல் நாளில் தூத்துக்குடியில் 100 இளைஞர்கள் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைப்பு

தூத்துக்குடி, ஜனவரி 1

தூத்துக்குடி மாநகராட்சி 6வது வார்டைச் சேர்ந்த 100 இளைஞர்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் புதிதாக இணைந்த இளைஞர்களுக்கு கருப்பு சிவப்பு சால்வை அணிவித்து வரவேற்றார்.



திமுக பிஎல்2 முகவர் அற்புதக்கனி, இளைஞர்கள் மதன்ராஜ், ரெஜிலஸ் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தூத்துக்குடி மாநகராட்சி 6வது வார்டுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் கீதாஜீவன் உரை

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் கீதாஜீவன், "திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் இந்தியாவிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். எல்லா தரப்பினருக்கும் செய்துள்ள சாதனைகள் ஏராளம். உங்களைப் போன்ற இளைஞர்களை மாநில இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஊக்கப்படுத்தி வருகிறார்" என்று தெரிவித்தார்.

இன்னும் நான்கு மாத காலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், "ஒவ்வொருவரும் குடியிருக்கும் பகுதியில் ஏற்கனவே பணியாற்றி வரும் நிர்வாகிகளோடு இணைந்து அரசின் திட்டங்களையும் திமுக கொள்கையையும் அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். திமுக 7வது முறையாக ஆட்சி அமைப்பதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் 2வது முறையாக முதலமைச்சராவதற்கும் உங்களுடைய பங்கு அதிகம் இருக்க வேண்டும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் வழங்கப்படும்" என்று கூறினார்.

பங்கேற்றவர்கள்

இந்நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பிரபு, நாகராஜன், மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாரயணன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், வட்ட அவைத்தலைவர் ஞானபிரகாஷம், செயலாளர் சுரேஷ், வட்டப்பிரதிநிதிகள் கருப்பசாமி, ஜெயபால், ராஜ், கவுன்சிலர் ஜெயசீலி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், புஷ்பராஜ், மணி அல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சனி, 27 டிசம்பர், 2025

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் 2026 புத்தாண்டு விழா – அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் & 2026 புத்தாண்டு விழா – அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி, டிச.28:

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் 2026 புத்தாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று (28.12.2025, ஞாயிற்றுக்கிழமை) காலை 12 மணியளவில் விழா நடைபெற்ற

thoothukudileaks



இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். உடன் திமுக தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில்,....

“‘மாற்றுத்திறனாளி’ என்ற சொல்லை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி. மாற்றுத்திறனாளிகள் நலனில் உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு வருவது திமுக அரசே. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் மீது அன்பும் கவனமும் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளி பயனாளர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ளவர்கள் இதனை பெற்றுக்கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒன்றிணைந்து கலந்து கொண்டதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்,” என தெரிவித்தார்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


கிஃப்ட் பரிசு வழங்கல் 

இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் மகளிர் சங்கம் சார்பில், ஷெர்லி மற்றும் மோசஸ் (அன்ன ராஜன்) முன்னிலையில், விழாவில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அமைச்சர் கீதா ஜீவன் கிப்ட் பரிசுகளை வழங்கினார்.

அமைச்சர் கீதா ஜீவன் -க்கு கலைக்குழு வரவேற்பு!!!

நிகழ்ச்சி முன்னதாக சகாயம் தலைமையிலான கலைக்குழு அமைச்சர் கீதா ஜீவனுக்கு மேளதாளத்துடன் கலைக்குழுவினர் சிறப்பான வரவேற்பு செய்திருந்தனர்.

thoothukudileaks

thoothukudileaks


இந்த நிகழ்ச்சியை மாற்றுத்திறனாளிகள் மகளிர் சங்கம் சார்பில் IS. ஷெர்லி மற்றும் J. மோசஸ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். விழா முழுவதும் உற்சாகமும், சமூக ஒற்றுமையும் நிறைந்ததாக நடைபெற்றது.