புதிய பேருந்து நிலையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிய பேருந்து நிலையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 டிசம்பர், 2025

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தை முழுமையாக இடித்து, நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்படுமா??? இப்போது அவசியமா ? முழு விவரம் பார்க்கஇன்று 17-12-2025 தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே இருக்கும் மெர்ஸி உணவகம் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பரபரப்பு!!!

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் மேற்கூரை இடிந்து விழுகிறது

பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறி!??

தூத்துக்குடி:டிச17
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் பேருந்து நிலையத்தின் உள்ளே உள்ள கட்டிட மேற்கூரை பகுதி திடீரென இடிந்து, செங்கல் மற்றும் கற்கள் கீழே விழுந்தது இன்று (17-12-2025)காலை6.10 மணிக்கு என்பதால் பயணிகள் யாரும் இருக்கவில்லை.நல்ல வேளை யார் தலையிலும் விழுந்து விபத்து ஏற்படவில்லை.

thoothukudileaks


ஏற்கனவே பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ள தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில், கட்டிடப் பகுதிகள் தொடர்ச்சியாக இடிந்து விழுவது வழக்கமாகி வருகிறது. 

thoothukudileaks

thoothukudileaks


இதனால் தினமும் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயணிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், வியாபாரிகள் ஆகியோரின் பாதுகாப்பு கடும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தின் மேற்கு பகுதியில், சென்னை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கவுண்டர் இருக்குமிடத்தில், இரவு சுமார் 10.30 மணியளவில் மேற்கூரை மளமளவென்று இடிந்து விழுந்த சம்பவம் நடைபெற்றது. 


இதன் பின்னர், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அவசரமாக சிமெண்ட் பூச்சு மற்றும் மேற்கூரை பகுதிகளில் பேஸ் ஒர்க் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

.
thoothukudileaks

thoothukudileaks

ஆனால், அந்த தற்காலிக சீரமைப்புகள் பயனளிக்கவில்லை என்பதையே தற்போதைய சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

1992 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், இன்று பல பகுதிகளில் கடுமையாக பழுதடைந்து காணப்படுகிறது. 33 ஆண்டுகளுக்கும் மேலான பழமை, பராமரிப்பு குறைபாடு ஆகியவை சேர்ந்து, பேருந்து நிலையத்தை ஒரு “விபத்து மையமாக” மாற்றிவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தை முழுமையாக இடித்து, நவீன வசதிகளுடன் புதுப்பித்து அமைப்பதே, எதிர்காலத்தில் பெரிய விபத்துகளைத் தவிர்க்கும் ஒரே வழி என பயணிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, நிலைமையை ஆய்வு செய்து, நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

மேலும், தூத்துக்குடி கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் நேரில் ஆய்வு செய்து, பயணிகளின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள் எடுப்பார்களா??? என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.



இன்று 17-12-2025 தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே இருக்கும் மெர்ஸி உணவகம் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பரபரப்பு!!!

மேலும் இன்று 17-12-2025

காலையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே இயங்கி வந்த மெர்ஸி உணவகம் கடை மேற்கூரை இடிந்து விழுந்தது இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது 


வீடியோ பார்க்க 


வீடியோ பார்க்க 

– தூத்துக்குடி லீக்ஸ்

புதன், 19 பிப்ரவரி, 2025

நடந்தது என்ன?அதிரடி நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவனைப் பொதுமக்கள் பாராட்டினர்

TamilNadu updates 20-2-2025

Photo news by Arunan journalist 

அதிரடி நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவனைப் பொதுமக்கள் பாராட்டினர்

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய அண்ணா பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டது.


 அதேபோல், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியிலும் பல்வேறு புதிய மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. 


குறிப்பாக, ஆம்னி பஸ்கள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் இடமிருந்து பாராட்டுக்கள் 



இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே வடபகுதியில் கடந்த சில மாதங்களாக மதுரை திருச்சி திருப்பூர் கோவை சென்னை செல்லும் பஸ்கள் உரிய நடைமேடையில் விட்டு பயணிகளை ஏற்றிச் செல்லாமல்...‌‌???

நடைமேடை நின்று பயணிகளை ஏற்றிச் செல்லாமல்... நுழைவாயில் நின்று கொண்டு பயணிகளை ஏற்றிச் செல்லும் அவலம்!!!!


நடைமேடையில் கார்கள் டூவீலர் வாகனங்கள் 

மக்ரோனுக்கு ஆசைப்பட்டு முகப்புல பஸ்கள் நின்று.. பயணிகள் ஏற்றி.??
வெறிச்சோடி கிடக்கும் நடைமேடை கவுண்டர்கள்.. பார்க்க 



கடந்த சில மாதங்களாக இப்படி தான் நின்று பஸ்ல பயணிகள் ஏற்றப்பட்ட னர்


வழிப்பாதையில் குறுக்கு நெடுக்காக நின்று பயணிகளை தினம் அவசரமாக பதற வைத்து ஏற்றி சென்று விட்டு போகும் வழியில் தனியார் உணவு விடுதிகள் முன்பு 15 நிமிடத்திற்கு மேலாக மெதுவாக நின்று சென்றனர்

இத்தனைக்கும் அப்பகுதியில் இலவச குடிநீர் வசதி கூட கிடையாது..


இஃது குறித்து பொதுமக்கள் மற்றும் குறிப்பாக தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்க செயலாளர் தெர்மல் ராஜா உட்பட பலர் குற்றச்சாட்டு வைத்தும்  புகார் மனுயெல்லாம் குப்பையில் விசி புறக்கணிக்க ப்பட்டது.

தமிழக அரசுக்கு கெட்ட பெயர் !!!

பொதுமக்கள் மத்தியில் திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் வர வேண்டும் எண்ணத்தில் நகர மற்றும் புறநகர் போக்குவரத்து அதிகாரிகள் நடந்து கொண்டார்கள்..


இது குறித்து.....

சமுக நலன் மற்றும் உரிமை தொகை அமைச்சர் கீதா ஜீவன் பார்வைக்கு நாம் கொண்டு சென்றோம்


நேற்று முக்கிய பணியில் இருந்தவர் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்பு கொண்டு ..

முன்பு போல்  

 தூத்துக்குடி பொதுமக்கள் பயணிகள் வசதியாக நடைமேடை நின்று ஏற்றி செல்ல அறிவுறுத்தல்கள் செய்தார். 

அவரின் உத்தரவின்படி, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நடைமேடையில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


இன்று....


இன்று 

இன்று....
இன்று சீரமைப்பு பணியில்...டிப்போ மேனேஜர் மற்றும் ஊழியர்கள் 


பொதுமக்கள் பாராட்டு !!!


இந்த தகவல் பொதுமக்களுக்கு வந்ததும், அவர்கள் அமைச்சர் கீதா ஜீவனின் உடனடி நடவடிக்கையை பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.

நிகழ்வின் மீது அரசின் உடனடி நடவடிக்கை எடுத்தமை பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே டூவீலர் வாகனங்கள் அதிகம் நிறைந்துள்ளது அருகில் வாகன காப்பகம் செயல் படுகிறது அங்கு சென்று நிறுத்தம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்திட வேண்டும்.

மேலும் தகவல்கள் வரவேற்கத்தக்கது!


ஞாயிறு, 22 டிசம்பர், 2024

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் அமைப்பில்லாமல் நின்று பயணிகளை ஏற்றும் அவலம்

Tamil Nadu updates,23-12-2024

Photo news by Arunan journalist 

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் அமைப்பில்லாமல் நின்று பயணிகளை ஏற்றும் அவலம்


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில்
தாறுமாறாக நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் அவலம்!!!


இது பற்றிய செய்தியாவது 

தூத்துக்குடி: புதிய பேருந்து நிலையத்தில், சென்னை, திருச்சி, திருப்பூர், கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வதற்கான பேருந்துகள் நடைமேடை கவுண்டரை கடந்து, சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவது போல தாறுமாறாக பேருந்துகளை நிறுத்தி வைத்து  தினமும் பயணிகளை ஏற்றி செல்லும் முறைகேடு நடைபெற்று வருவதாக பொதுமக்களும் வியாபாரிகளும் குற்றச்சாட்டுகின்றனர்.

கடை முன் காலியாக கிடக்கும் நடைமேடை கவுண்டர்கள்?




இந்த நிலை காரணமாக பயணிகள் திண்டாட்டம் அனுபவிக்கின்றனர். “பேருந்துகள் நடைமேடை கவுண்டரில் நின்று பயணிகளை ஏற்ற,  வேண்டும்” என்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கமும் பொதுமக்களும் வலியுறுத்தினர். இதைச் சரிசெய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீதி மீறல்கள்!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையம் உள்ளேயும் பேருந்துகள் நடைமேடை கவுண்டர்களில் தான் நிற்கும்

ஆனால்? தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மட்டும் வீதிமீறல் நடைபெறுகிறது


மேலும் மதுரையில் இருந்து வரும் பேருந்துகள் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம்  அருகே பாலத்தின் அடியில் பஸ் பயணிகள் இறக்கி விட்டு அப்படியே பஸ் பாலத்தில் ஏறி சென்று விடுகின்றனர்

விபத்து 

மூன்றாம் கேட் பாலம் அடியில் பஸ் பயணிகளை இறக்கி விடுவதால் பயணிகள் பாலத்தை கடந்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே அடுத்த பேருந்து செல்ல வேண்டியுள்ளது அப்படி  செல்கையில் விபத்து ஏற்படும் நிலையில் ஏற்படுகிறது

இதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் 

போராட்டம் 


ஏற்கனவே தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வியாபாரம் இன்றி மாநகராட்சிக்கு கடை வரி கட்ட முடியாமல் தவித்துக் வருகிறோம்.

இந்நிலையில் வியாபாரிகள் கஷ்டப்படும் வேண்டும் என நோக்கில் இப்படி நடந்து கொள்வது வேதனை தருகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை இல்லை எனில் வியாபாரிகள் சங்கம் போராட்டத்தில் இறங்கும் என தெரிவித்தனர்.