தூத்துக்குடி லீக்ஸ் | நாளிதழ் செய்தி
தூத்துக்குடி மாவட்டம் : 30.03.2026
தூத்துக்குடி மாவட்டத்தில் சமீப காலமாக பிரபல தனியார் வங்கிகளின் பெயரில் “Bank Securities” எனப்படும் போலியான முதலீட்டு திட்டங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றும் இணைய மோசடிகள் அதிகரித்து வருவதாக மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மோசடியில் ஈடுபடும் நபர்கள் முதலில் பொதுமக்களை WhatsApp குழுக்களில் இணைத்து, அதிக லாபம் கிடைத்ததாக போலியான தகவல்கள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்து நம்பிக்கை ஏற்படுத்துகின்றனர். பின்னர் அவர்கள் உருவாக்கிய போலியான மொபைல் செயலிகள் மற்றும் வங்கி முதலீட்டு தளங்கள் மூலம் முதலீடு செய்ய வற்புறுத்துகின்றனர்.
இந்த தளங்கள் உண்மையான வங்கி சேவைகளைப் போலவே தோற்றமளிக்கும் வகையில் Bank Logo, Dashboard, Customer Support போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனை நம்பி பொதுமக்கள் முதலீடு செய்த பின்னர், லாபம் அல்லது முதலீட்டு தொகையை திரும்ப பெற முயற்சிக்கும் போது, மேலும் பணம் முதலீடு செய்தாலே அதிக லாபம் கிடைக்கும் என கூறி தொடர்ந்து மோசடி செய்யப்படுகிறது.
பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரை:
சமூக ஊடகங்களில் வரும் அதிக லாபம் தரும் முதலீட்டு விளம்பரங்களை நம்ப வேண்டாம்.
அறியப்படாத லிங்குகள் அல்லது செயலிகள் மூலம் முதலீடு செய்ய தவிர்க்கவும்.
SEBI-ல் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலமாக மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.
DEMAT கணக்கு இல்லாமலே முதலீடு செய்யலாம் என வரும் விளம்பரங்கள் பெரும்பாலும் மோசடி ஆகும்.
உங்கள் DEMAT கணக்கை அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு தளங்களுடன் மட்டுமே இணைக்கவும்.
வங்கி அல்லது நிதி நிறுவன பெயரில் வரும் முதலீட்டு தகவல்களை நேரடியாக அந்த நிறுவனத்துடன் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
புகார் அளிக்கும் வழிகள்:
இத்தகைய சைபர் மோசடிகளில் சிக்கினால் உடனடியாக
cybercrime.gov.in இணையதளம் லிங்
1930 (சைபர் குற்ற உதவி எண்)
மூலம் புகார் அளிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, மேலும் நிதி இழப்பை தவிர்க்க முடியும் எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக