ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடியில் நாளை மாநகராட்சி மாநாட்டு மையம் திறப்பு விழா முன்னாள் நகர் மன்ற தலைவர் பெரிய சாமி பெயர் வைக்க படுமா என எதிர்பார்ப்பு!!!

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

11-8-2024 photo news 

by Arunan journalist 

தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதியில் புதியதாக கட்டப்பட்ட மாநகராட்சி மாநாட்டு மையம் நாளை 12-8-2024 தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைக்கிறார்.



இதுபற்றி செய்தியாவது:-


தூத்துக்குடி மாநகராட்சி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் வாயிலாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.


12. 8. 2024 திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் காணொலிக் காட்சியின் வாயிலாக  தூத்துக்குடி மாநகர மாநாட்டு மையம் வளாகத்தில் திறந்து வைக்க உள்ளார்கள்.



தூத்துக்குடி 2 ம் ரயில்வே கேட் அருகே உள்ள பகுதியில் மாநகராட்சி மாநாட்டு மையம் புதியதாக கட்டப்பட்டுள்ளது.

புதிய கட்டிடம் முன்னாள் தூத்துக்குடி நகர் மன்ற தலைவர் "பெரிய சாமி "பெயர் வைத்து அறிவிப்பு வருமா எதிர் பார்ப்பு !!!



இதற்கு கடந்த  மாதம் 31-7-2024 அன்று நடைபெற்ற தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ...

திமுக கவுன்சிலர்கள் தற்போது இருக்கும் அமைச்சர் கீதா ஜீவன்- மேயர் ஜெகன் ஆகியோரின் தந்தையும் முன்னாள் தூத்துக்குடி நகர் மன்ற தலைவர் ஆக இருந்த பெரியசாமி (Ex  MLA) பெயர் வைக்க வேண்டும் என மாமன்றத்தில் தெரிவித்தனர். 

அதற்கு மேயர் ஜெகன் பெரியசாமி இது பற்றி உங்கள் விருப்பத்தை... மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு எடுத்து செல்கிறேன் என்றார்.

இதனால் புதியதாக கட்டப்பட்ட மாநகராட்சி மாநாட்டு மையம் கட்டிடத்திற்கு மறைந்த முன்னாள் தூத்துக்குடி நகர் மன்ற தலைவர் பெரிய சாமி பெயர் வைக்கப்படுமா? அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக