வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

பேரறிஞர் அண்ணா வின் 55-வது நினைவு நாள் தூத்துக்குடியில் அரசியல் கட்சிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

thoothukudileaks 3-2-2024

பேரறிஞர் அண்ணா வின் 55-வது நினைவு நாள் தூத்துக்குடியில் அரசியல் கட்சிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .



இது பற்றிய செய்தியாவது:-

அதிமுக 

முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா  55 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று  காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட  செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன்  தலைமையில் பழைய முனிசிபல் அலுவலக வளாகத்தில் உள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது



இந்நிகழ்ச்சியில்... அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திமுக 

அண்ணா நினைவு நாளை யொட்டி தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.

 

பேரணியில்...

      தூத்துக்குடி அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ராஜாஜி பூங்கா முன்பிருந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அலங்காிக்கப்பட்ட அண்ணா படத்துடன் அமைதி ஊர்வலம் புறப்பட்டு புதிய மாநகராட்சி அருகிலுள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்தனர். 

நிகழ்ச்சியில் மேயர் ஜெகன்பெரியசாமி மற்றும் திமுக நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

அதிமுக வர்த்தக அணி

தூத்துக்குடியில் அண்ணா நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார். 



     தூத்துக்குடி அண்ணா 55வது நினைவு தினத்தையொட்டி  அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார் 

இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக