தமிழக பாஜக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழக பாஜக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 ஜூன், 2026

மத்திய மாநில உறவுகளை சீர்குலைக்க சதி செய்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு வெங்கடேசன் தமிழக பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் பரபரப்பு அறிக்கை

சென்னை ஜுன் 22

தமிழக சட்டமன்றத்தில் தமிழ் தாய் வாழ்த்து முதன்மையாக ஒலிக்கப்பட்டதை, பெருமையுடன் ஏற்றுக் கொள்ளாமல், இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக வந்தே மாதரம்' பாடலை இழிவுப்படுத்தி பேசுபவர்கள் மீது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தமிழக எதிர் கட்சிகள் முதல் ஆறு மாதங்களுக்கு தமிழக வெற்றிக் கழக அரசை விமர்சிக்காமல், அவதூறு பிரச்சாரம் செய்யாமல், தமிழகத்தின் வளர்ச்சிக்கு, தமிழக மக்களின் மகிழ்ச்சிக்கு உரிய ஆலோசனைகள் வழங்க முன் வர வேண்டும்.


தமிழக முதல்வரான பிறகு, முதல் பிறந்த நாளை கொண்டாடும் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

thoothukudileaks


தமிழக முதல்வராக திரு ஜோசப் விஜய் பதவி ஏற்ற பிறகு ,ஜுன் 18ம் தேதி துவங்கிய முதல் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு ஆளுநர் ரஜேந்திர அர்லேக்கர் அவர்கள் உரையாற்றினார். தேசிய கீதத்திற்கும் உரிய மரியாதை அளிக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது உலகெங்கும் வாழும் தமிழர்களையும் தேசிய சிந்தனை கொண்டவர்களையும் பெரு மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால், எதையும் குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகக் கூடிய சிலர், இதிலும் தங்களது தேச விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தி உள்ளனர்.


எப்போதும், எல்லா பிரச்னைகளிலும் மக்களைப் பிரிக்கும் வகையில் பேசி வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தமிழக சட்டமன்றத்தில் சுமூகமாக முடிந்த தமிழ் தாய் வாழ்த்து பாடல் பிரச்னையை பெரிதாக்கி தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார்.


"தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டது விமர்சனத்துக்குரியதல்ல. நம்முடைய நாட்டுப்பண்ணை எத்தனை முறையும் பாடலாம். ஆனால், நாட்டின் ஒற்றுமைக்கும் மதச்சார்பின்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் “வந்தே மாதரம்” பாடலைப் பாட மறுத்தது தான்  வரவேற்க வேண்டிய முக்கிய செயல்' என்று அவர் கூறியிருக்கிறார். அதுவும் இதை தமிழக அமைச்சர் நிர்மல்குமாரை வைத்துக் கொண்டே கூறியிருக்கிறார். இது தவறான முன்னுதாரணம். கடும் கண்டனத்துக்குரியது.


இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பல லட்சம் மக்களை கொண்டு வந்து சேர்த்த மந்திரச் சொல் 'வந்தே மாதரம்'. அதனால்தான் ஆங்கிலேயர்கள், 'வந்தே மாதரம்' என்ற சொல்லைக் கேட்டாலே அஞ்சினார்கள். ஆனால் இப்போது, 'வந்தே மாதரம்' என்று சொல்லைக் கேட்டு சு. வெங்கடேசன் ஏன் அஞ்சி நடுங்குகிறார் என்பது தெரியவில்லை. 'வந்தே மாதரம்' குறித்து சு. வெங்கடேசனின் கருத்து, சுதந்திரப் போராட்ட வீரர்களை நேரடியாக இழிவுபடுத்தும் செயல். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுள்ள சு. வெங்கடேசன், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தேசிய பாடலாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 'வந்தே மாதரம்' பாடலை இழிவுப்படுத்தி பேசுவது கிரிமினல் குற்றம்.


அரசியல் ரீதியாக பாஜகவுக்கு நேர் எதிராக நின்றாலும், மத்திய அரசுடன் இணக்கமான அணுகுமுறையை முதல்வர் ஜோசப் விஜய் பின்பற்றி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். 



இந்தச்  சூழலில் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யான சு.வெங்கடேசன், 'வந்தே மாதரம்' பாடலை இழிவுபடுத்தி பேசியிருப்பது, மத்திய  - மாநில  உறவுகளை சீர்குலைக்கும் சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.


தமிழக முதல்வர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள்,நிதி ஆயோக் கூட்டத்திற்கு டெல்லி சென்ற போது,  பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்தித்துப் பேசினார்.   30 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த அதிகாரப்பூர்வ சந்திப்பில், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம், மேகதாது அணை விவகாரம், தமிழக மாணவர்களுக்கு நீட்  தேர்விலிருந்து விலக்கு, தமிழக மீனவர்கள் பிரச்னை, தமிழகத்தில் டிஆர்டிஓ (DRDO) பாதுகாப்பு மையம் அமைப்பது

உள்ளிட்ட தமிழகத்தின் நலன் சார்ந்த பல முக்கிய கோரிக்கைகளை அடங்கிய மனுவை முதல்வர் அளித்துள்ளார் 


தமிழக முதல்வர், பாரத பிரதமரின் இந்த சந்திப்பு, தமிழக வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக, தமிழகத்தின் உட்கட்டமைப்பு, நிதி ஒதுக்கீடு மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் இந்த சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டது.  தமிழகத்தின் வளர்ச்சிக்கும், பாரதத்தின் வலிமைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் இலக்கணமான சந்திப்பாக இது அமைந்தது. அதைத் தொடர்ந்தே தமிழக சட்டமன்றத்தில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படு ஆளுநர் உரை சுமூகமாக நடந்து முடிந்தது. அனைவரது மனமும் குளிர்ந்தது. இது முதல்வர் விஜய்க்கு கிடைத்த வெற்றியாகும்.*


*மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனார், தீரர் சுப்பிரமணிய சிவா, வீரத்திருமகன் வாஞ்சிநாதன் பாடி மகிழ்ந்து தமிழகத்தில் விடுதலை தீயை ஊட்டி வளர்த்த 'பாரத தாயை வணங்குவோம்' என்கிற புனிதமான சுதந்திரத்தை பெற்று தந்த தேசபக்தி சுதந்திர பாடலுக்கு தமிழகத்தில் உரிய மரியாதையை முதல்வர் விஜய் அளிக்க வேண்டும்.இந்திய சுதந்திரப் போரில் தேசிய நீரோட்டத்தில் அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கிய தமிழகம் பெருமை கொள்ளும் விதமாக தெளிவாக,  தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.


தமிழகத்தின் அனைத்து கட்சி தலைவர்களும் சி.பி.எம் பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனின் தேச விரோத, பிரிவினைவாத கருத்துக்களுக்கு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். தேசம் முழுவதும் சுதந்திர தாகத்தை விதைத்து,இந்திய தேச விடுதலைக்கு காரணமான "வந்தே மாதரம்" தேசபக்தி பாடலில் அரசியல் செய்யக்கூடாது.


தமிழக எதிர்க்கட்சித் தலைவர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சொன்னது போல, தமிழகத்தின், உரிமை சார்ந்த பிரச்னைகளில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்று  பிரதமரை நேரில் சந்தித்து தீர்வு காண வேண்டும்.  இதுபோன்ற நேர்மறை அரசியலை அனைத்து கட்சி தலைவர்களும் பின்பற்ற வேண்டும்.


எந்த ஒரு அரசுக்கும் குறிப்பிட்ட கால அவகாசம் வேண்டும் எனவே முதல் ஆறு மாதங்களுக்கு தமிழக வெற்றிக்கழக அரசுக்கு எதிராக திட்டமிட்டு செயல்படுவதையும்,   அவதூறு பரப்புவதையும் விட்டு விட்டு,  அரசுக்கு உரிய ஆலோசனைகளை எதிர்க்கட்சிகள் வழங்க வேண்டும்.


மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பிறகு, தமிழகத்தில் சமூக நீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை  முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ளார்.


 பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அரசியல் நாகரிகத்திற்கு இது ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.*


கடந்தா கால ஆட்சிகளில், சுயநல அரசியலுக்காக தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு,  அனைத்து துறைகளிலும் நிர்வாக சீர்கேடுகள் அதிகமாகி, ஊழல் பெருகி,  ஆபத்தான கேன்சர் நோய் போல தமிழக வளர்ச்சி பாதிக்கப்பட்டு தமிழ் அன்னையை கடந்த ஆட்சி காலத்தில் படுத்த படுக்கையாக்கிவிட்டனர்.


பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அளித்த 14 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு நிதி திட்டங்களுக்கும்,  கணக்கு வழக்கு இல்லாமல், மத்திய அரசு என்ன செய்தது என்று அவதூறு பேசி, நடைபெற்ற  நிர்வாக சீர்கேடு காரணமாக தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு,  கடந்த ஆட்சிக் காலங்களில் முடக்கப்பட்டது. 


தமிழக நிதி அமைச்சரின் வெள்ளை அறிக்கை மிகத் தெளிவாக இதை விளக்கி உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் வெள்ளை அறிக்கை என்பது தமிழகத்தின் உண்மை நிலையை தமிழக மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளும் வகையில், தமிழகத்தின் இளம் மாணவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் மக்கள் மன்றத்தில் வெளியிடப்பட்டதன் மூலம் ஒரு மிகப்பெரிய விழிப்புணர்வு தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ளது.


*நிச்சயம் தமிழக வெற்றி கழக அரசு, மக்கள் நலம் சார்ந்த புதுமை திட்டங்களை நிறைவேற்றும் வகையில், மிகச் சிறப்பாக தொலைநோக்கு சிந்தனையுடன் சிறப்பாக திட்டமிட்டு, தொடர் முயற்சிகளால், கனிம வளம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் நிதி மேலாண்மையை மேம்படுத்தி, மக்கள் பாதிக்காத வரியில்லாத வருவாயை உருவாக்கும் விதத்தில் செயல்பட்டு, தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் படிப்படியாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை தமிழக மக்களுக்கு இருக்கிறது.


அதற்காக தமிழக அரசும் தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய் எடுக்கும் முயற்சிகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவும் ஆலோசனைகளும் வழங்குவதை விடுத்து, தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை தமிழர்கள் மக்களால் அளிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கொச்சைப்படுத்தி, குறுகிய காலத்தில் ஆட்சியை கவிழ்க்க மறைமுக செயல்களில் ஈடுபடக்கூடாது. தமிழக மக்களின் விருப்பத்துக்கு எதிராக, செயல்படும் சதி அரசியல் திட்டங்களில் ஈடுபடும் கட்சிகள் இனி தமிழக அரசியலில் மக்களால் அப்புறப்படுத்தப்படுவார்கள்.


ஏ.என்.எஸ்.பிரசாத்

தமிழக பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் 

ansprasadbjp@gmail.com


வியாழன், 19 மார்ச், 2026

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: கைது விவகாரத்தில் அடுக்குஅடுக்காக பாஜக அண்ணாமலை கேள்விகள் ?

தூத்துக்குடி லீக்ஸ்2026 மார்ச் 19

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகிலுள்ள வேடநத்தம் கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மீது பாலியல் தாக்குதல் நடத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்றது முதல் பத்து நாட்கள் கடந்தும் குற்றவாளியை கைது செய்யாதது குறித்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

thoothukudileaks


இந்த நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை கைது செய்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த கைது நடவடிக்கையைச் சுற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

கடந்த 2020 ஆம் ஆண்டு தூத்துக்குடி எட்டயபுரம் அருகே 65 வயதான முதிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், 2022 ஆம் ஆண்டு தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டார். 

thoothukudileaks


பின்னர், 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

இதன் பின்னர், அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு கொடூர குற்றத்தில் ஆயுள் தண்டனை பெற்ற நபருக்கு ஜாமீன் கிடைத்தது குறித்தும், அந்த வழக்கை அரசு முறையாக எதிர்கொள்ளாததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

மேலும், பல வழக்குகள் நிலுவையில் உள்ள குற்றப்பின்னணி கொண்ட நபர் ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் அவரை காவல்துறை கண்காணிக்க தவறியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியை அடையாளம் கண்டதாக கூறப்படும் நிலையில், அந்த காட்சிகளை ஆய்வு செய்ய காவல்துறைக்கு பத்து நாட்கள் எடுத்தது ஏன் என்ற கேள்வியும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவர் K. Annamalai தனது ஃபேஸ்புக் பதிவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். 

குற்றவாளி கைது செய்யப்பட்ட விதம், முன்னாள் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட சூழ்நிலை, மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உண்மை நிலை என்ன என்பதை பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. காவல்துறைக்கு பொறுப்பான தமிழக முதலமைச்சர் M. K. Stalin இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

– தூத்துக்குடி லீக்ஸ்

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

திமுக இன்னும் மதசார்பற்ற கட்சி என மக்கள் நம்ப வேண்டுமா ? முதல்வர் ஸ்டாலினோடு முருகன் கைகோர்த்துள்ளார்” எனப் பேசுவது, தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை அவமதிக்கும் செயல் என பாஜக கடும் காட்டம்!!!

 முருகப் பெருமான் மீது நம்பிக்கையில்லாத முதல்வர் ஸ்டாலினோடு

முருகன் எப்படி கைகோர்ப்பார்?

தனது அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி வரும் உதயநிதி,

முழு உண்மைகளையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்

கடந்த 2022ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,

"நானும் ஒரு கிறிஸ்துவன் தான். கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். நான் காதலித்து மணந்ததும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்தான்"

என்று வெளிப்படையாகக் கூறினார்.


thoothukudileaks


அந்த நேரத்தில் தனிப்பட்ட நம்பிக்கையாக கூறப்பட்ட இந்த கருத்து, தற்போது அரசியல் நிலைப்பாடாக மாறியுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,

"கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திமுக கொள்கைகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இரண்டுமே மனித நேயம், சமத்துவத்தை போதிக்கின்றன. சாதாரண மனிதரும் மக்கள் தலைவராக முடியும் என்பதை நிரூபித்தவர் இயேசு கிறிஸ்து"

என்று பேசியுள்ளார்.

கிறிஸ்தவ மதத்தையும், இயேசு கிறிஸ்துவின் போதனைகளையும் பாராட்டுவதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அது வரவேற்கத்தக்கதே. ஆனால், “கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திமுக கொள்கைகளுக்கும் வேறுபாடு இல்லை” என்ற கூற்றின் மூலம், திமுக ஒரு மதச்சார்பற்ற கட்சி என்ற அடையாளத்தை இழந்து வருகிறதா என்ற கேள்வி எழுகிறது.

இதுவரை தங்களை நாத்திகர்கள் என்றும், மதச்சார்பற்றவர்கள் என்றும் கூறி வந்த திமுக தலைமையினர், இப்போது மத அடையாளத்தை வெளிப்படுத்துகிறார்களா? கடந்த சில ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக தனது உண்மையான அடையாளத்தை வெளிக்கொணர்ந்து வரும் உதயநிதி ஸ்டாலின், மீதமுள்ள உண்மைகளையும் வெளிப்படையாகச் சொல்லிவிடுவது நல்லது.

"சாதாரண மனிதரும் மக்கள் தலைவராக முடியும்" என்பது உண்மையேயான கருத்துதான். ஆனால், திமுகவில் அந்த வாய்ப்பு உண்மையில் இருக்கிறதா? கருணாநிதி குடும்பத்தைத் தவிர, தற்போது ஸ்டாலின் குடும்பத்தைத் தவிர, வேறு யாரும் தலைமை பதவியை கனவில்கூட நினைக்க முடியாத நிலை உள்ளது. ஸ்டாலின் குடும்பத்து ஆண் வாரிசுகளுக்கே தலைமை பதவி என்ற நிலை தொடரும் நிலையில், சாதாரண தொண்டன் தலைவர் ஆக முடியுமா என்ற கேள்விக்கு உதயநிதி பதில் சொல்ல வேண்டும்.

திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் பி.கே. சேகர்பாபுவின் செயல்பாடுகள், இந்துக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன. இந்து கோவில் மரபுகள், திருவிழாக்கள் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில், அதற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்கின்றன.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை நடைமுறைப்படுத்த மறுப்பது, இந்து உணர்வுகளுக்கு இழைக்கப்படும் அவமதிப்பாகவே பார்க்கப்படுகிறது. கோவில் பணத்தை பயன்படுத்தி, கோவில்களுக்கு எதிராக வழக்குகள் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவின் இந்து விரோதப் போக்கு வெளிப்பட்ட நிலையில், “முதல்வர் ஸ்டாலினோடு முருகன் கைகோர்த்துள்ளார்” எனப் பேசுவது, தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை அவமதிக்கும் செயல் ஆகும்.

முருகப் பெருமான் மீது நம்பிக்கை இல்லாதவர்களாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டவர்கள், அவரை அரசியல் விளம்பரத்திற்காக பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்துக்கள் இன்று விழிப்புணர்வு பெற்றுள்ளனர். நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்து விரோதப் போக்குடன் செயல்படும் திமுக அரசுக்கு, உரிய நேரத்தில் தக்க பதிலை வழங்குவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

— ஏ.என்.எஸ். பிரசாத்

செய்தி தொடர்பாளர்


செவ்வாய், 25 நவம்பர், 2025

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் நல அரசியலை செய்ய வேண்டும் தமிழக பாஜக

சென்னை:நவ 25

 மொழி, மத அரசியல் செய்வதை விட்டு மக்கள் நல அரசியலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் நடந்த புத்தக விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி தமிழ் மொழி மீது போலியான பாசம் காட்டுவதாகவும், ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றை திணிக்க முயற்சிக்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சமஸ்கிருத மொழியை "செத்த மொழி" என்று விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள, இந்து மக்களின் புனித மொழியாக போற்றப்படும் சமஸ்கிருத மொழியை இவ்வாறு விமர்சிப்பது அரசியல் சாசன அவமதிப்பாகும். தேர்தலுக்காக மொழி அரசியல் நாடகம் அரங்கேற்றுவது துரதிஷ்டவசமானது.

உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும், இந்து மத வேதங்களை உருவாக்கிய தெய்வ மொழி சமஸ்கிருதம். கணிதவியல், வானவியல், மருத்துவ இயல், அரசியல் உள்ளிட்ட பல துறைகளில் உலகிற்கு வழிகாட்டும் இம்மொழியை இழிவாக பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஒரு மொழியை உயர்த்துவதாக சொல்லி மற்றொரு மொழியை தாழ்த்தி பேசுவது நியாயமா? தமிழை வளர்க்க ஏன் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழ் பல்கலைக்கழகங்களை திமுக அரசு உருவாக்கவில்லை?

கிறிஸ்தவர்களின் புனித நூல் ஹீப்ரு மொழியில் எழுதப்பட்டது. இஸ்லாமியர்களின் புனித நூல் அரபி மொழியில் எழுதப்பட்டது. அவற்றை செத்த மொழி என்று சொல்ல முடியுமா?

துணை முதல்வர் என்ற பதவியில் இருப்பவர் மதச்சார்பின்மையுடன், நடுநிலமையுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த மதத்தையும், எந்த மொழியையும் தவறான முறையில் விமர்சிக்கக்கூடாது.

முதல்வர் ஸ்டாலின் அவர்கள், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு இனி எந்த மதத்தையும், எந்த மொழியையும் விமர்சித்து பேசக்கூடாது என்று தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

செய்தி தொடர்புக்கு:

ஏ.என்.எஸ.பிரசாத்

thoothukudileaks

செய்தி தொடர்பாளர், தமிழக பாஜக

திங்கள், 17 நவம்பர், 2025

எஸ்.ஐ.ஆர் பணிகள் புறக்கணிப்பு : திமுக அரசின் திட்டமிட்ட சதி – வருவாய்த்துறை ஊழியர்கள் அறிவிப்பால் எழும் புதிய கேள்விகள். திமுக எதிர்ப்பு வாக்காளர்களை நீக்கவும், போலி வாக்காளர்களை சேர்க்கவும் இது ஒரு சதி” என தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கடும் குற்றச்சாட்டு

தூத்துக்குடி லீக்ஸ் — நாளிதழ் செய்தி

சென்னை 18

தமிழகம் முழுவதும் நவம்பர் 4ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (SIR) சுற்றியுள்ள சர்ச்சை அதிகரித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள போலி பெயர்களை நீக்கி, தகுதியான புதிய வாக்காளர்களை சேர்ப்பது என்ற தேர்தல் ஆணையத்தின் முக்கிய முயற்சியை திமுக திட்டமிட்டே திசை திருப்ப முயல்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

மாடல் 


சட்டப்படி 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்நடவடிக்கையில், திமுக கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அதிகாரப்பூர்வ அரசு ஊழியர்களுக்குப் பதிலாக வீடு வீடாக எஸ்.ஐ.ஆர் படிவங்களை வழங்குவதாக பல இடங்களில் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக திமுக ஆதரவாளர்களுக்கு மட்டுமே படிவங்கள் வழங்கப்படுகின்றன, திமுக எதிர்ப்பு வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதில் சிரமங்கள் உள்ளன என்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், வருவாய்த்துறை ஊழியர் சங்கங்கள் இன்று (18.11.2025) முதல் எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபடமாட்டோம் என்று வெளியிட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல இடங்களில் திமுக நிர்வாகிகளே படிவப் பணிகளை மேற்கொண்டு வரும் சூழலில், வருவாய்த்துறை ஊழியர்களின் விலகல், எஸ்.ஐ.ஆர் முழுவதும் திமுகவின் கையில் சென்று விடும் அபாயத்தை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்கின்றன.

“இதற்கெல்லாம் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறியாமல் நடப்பது இல்லை. திமுக எதிர்ப்பு வாக்காளர்களை நீக்கவும், போலி வாக்காளர்களை சேர்க்கவும் இது ஒரு சதி” என தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் நேரடி உத்தரவுகளை மீறுவது, குறிப்பாக அரசு ஊழியர்கள் மூலம் வாக்காளர் பணிகளை மறுப்பது, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்ட முக்கிய குற்றச்சாட்டுகள்:

  • திமுக கடந்த 4 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கில் போலி வாக்காளர்களை சேர்த்து வைத்துள்ளது.
  • எஸ்.ஐ.ஆர் மூலம் இவை அனைத்தும் நீங்கிவிடும் என்பதால், திமுக தேர்தல் கமிஷனை தொடர்ந்து அவதூறு பரப்புகிறது.
  • பல்வேறு பகுதிகளில் திமுகவினரே படிவங்களை வழங்கி வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறார்கள்.
  • வருவாய்த்துறை ஊழியர்கள் எஸ்.ஐ.ஆர் பணிகளில் இருந்து விலகுவது, திமுக ஊக்குவிப்பால் ஏற்படும் மறைமுக மிரட்டல் நடவடிக்கை ஆகும்.
  • அரசு ஊழியர்கள் அரசியல் சார்பற்றவர்களாக இருக்க வேண்டியது அவசியம்; தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

பிரசாதின் கோரிக்கைகள்:

  • திமுக அரசு தேர்தல் ஆணையத்திற்கு விடுக்கும் மறைமுக அழுத்தத்துக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • போலி வாக்காளர்கள் இல்லாத தமிழகம் உருவாக மாநில அரசு தேர்தல் ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
  • முதலமைச்சர் ஸ்டாலின், ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களை குழப்பும் அவதூறு பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும்.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் நம்பகத்தன்மை மற்றும் சீர்திருத்த முயற்சியின் நியாயத்தன்மை குறித்து பொதுமக்களிடையே பெரும் கேள்விகள் எழுந்துள்ளன.

— தூத்துக்குடி லீக்ஸ்