தூத்துக்குடி லீக்ஸ் (Thoothukudi Leaks) – நாளிதழ் செய்தி
நாள்: 03 ஆகஸ்ட் 2026
செய்தி வெளியீடு எண்: 486
பிரிவு: தமிழக அரசு / காவிரி நீர் விவகாரம்
காவிரி நீர் வரத்து குறைவு: கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர வழக்கு தாக்கல்!
சென்னை /ஆக 3
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRC) ஆகியவற்றின் உத்தரவுகளின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைத் திறந்து விடாத நிலையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் . ச. ஜோசப் விஜய் அவரின் அறிவுறுத்தலின்படி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனுத் தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்துள்ளது.
முக்கிய பின்னணி விவரங்கள்:
CWRC உத்தரவு:** கடந்த 28.07.2026 அன்று நடைபெற்ற 139-வது கூட்டத்தில், 29.07.2026 முதல் 12.08.2026 வரை பிலிகுண்டுலுவில் வினாடிக்கு 3,500 கன அடி (cusecs) நீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 30.07.2026 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54-வது அவசரக் கூட்டத்திலும் இம்முடிவு உறுதி செய்யப்பட்டது.
உண்மை நிலவரம்:
ஆனால், 29.07.2026 முதல் 02.08.2026 வரை பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு வரப்பெற்ற நீரின் அளவு வினாடிக்கு வெறும் 158 முதல் 550 கன அடி மட்டுமே ஆகும்.
கர்நாடக அணைகளின் தற்போதைய நீர் இருப்பு (03.08.2026 நிலவரப்படி):**
கே.ஆர்.எஸ் (KRS) அணை: 23.078 டி.எம்.சி
கபினி அணை: 18.610 டி.எம்.சி
ஹேமாவதி அணை: 28.022 டி.எம்.சி
ஹாரங்கி அணை: 7.827 டி.எம்.சி
மொத்த நீர் இருப்பு: 77.537 டி.எம்.சி (பயன்பாட்டு நீர் இருப்பு: 67.517 டி.எம்.சி)
தமிழகத்தின் கோரிக்கை & சட்ட நடவடிக்கை:
கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்து நீர்வருத்து அதிகரித்துள்ளதால், விகிதாச்சார அடிப்படையில் பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு 26.954 டி.எம்.சி ஆகும்.
ஆனால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அளித்த உத்தரவான 4.536 டி.எம்.சி என்பது மிகவும் குறைவாகும்.
கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்தும், விகிதாச்சார அடிப்படையில் தண்ணீரைத் திறந்து விட கர்நாடக அரசு தவறியுள்ளது. எனவே, மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனையின்படி, இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணவும், தமிழ்நாட்டிற்கு உரிய நீரை உரிய காலத்தில் பெறவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி உச்சநீதிமன்றத்தில் இன்று (03.08.2026) மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வெளியீடு:இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக