தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
news by Arunan 3-8-2026
தஞ்சை மாநகரில் விவசாயிகள் பிரச்சினைகளை முன்னிறுத்தி தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கழக நிர்வாகிகள், தோழமை இயக்கத்தினர், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் துணை முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின்,.....
"அலட்சியத்துடனும் ஆணவத்துடனும் செயல்படும் அரசால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆடிப்பெருக்கு நாளன்று கூட அகண்ட காவிரி வறண்ட நிலையில் காட்சியளிப்பதற்கு தற்போதைய அரசின் செயல்பாடுகளே காரணம்" என்று குற்றம்சாட்டினார்.
மேலும், "விவசாயிகள் துயரத்தில் தவிக்கும் நேரத்தில், முதலமைச்சர் மக்கள் பிரச்சினைகளைப் புறக்கணித்து செயல்படுகிறார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் மேகதாது அணை கட்டும் முயற்சியைத் தடுக்க வேண்டும், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இறுதியாக, "சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் என அனைத்து தளங்களிலும் விவசாயிகளின் உரிமைகளுக்காக தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக