தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
அருணன் செய்தியாளர்
திருச்செந்தூர், ஜூன் 18:
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் கைபேசி பயன்படுத்துவதற்கு வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது பற்றிய செய்தியாவது ;-
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது!!!
ஏற்கனவே கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் திருக்கோயில்களில் கைபேசி பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவை முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளன.
சேவைகள்!!!
பக்தர்களின் அவசர பயன்பாட்டிற்காக கோயில் வளாகத்தில் பொதுஅறிவிப்பு (Public Addressing System) வசதி, ஒலிபெருக்கிகள், மின்கல ஊர்திகள் மற்றும் சக்கர நாற்காலி உள்ளிட்ட சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மொபைல் டெபாசிட் கவுண்டர்!!!
மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது கைபேசிகளை பாதுகாப்பாக ஒப்படைத்து வைக்க கோயில் வளாகத்தில் சிறப்பு மொபைல் டெபாசிட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மொபைல் வைக்க கட்டணம் ரசீது !!!
கைபேசி ஒப்படைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்களது கைபேசிகளை பாதுகாப்பாக ஒப்படைத்து, சுவாமி தரிசனத்தை அமைதியான முறையில் மேற்கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
புதிய நடைமுறை ஜூலை 1, 2026 முதல் முழுமையாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி லீக்ஸ் க்காக
செய்தியாளர் அருணன்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக