வியாழன், 30 மே, 2024

தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் அ.குருநாதன் பணி நிறைவு தமிழாசிரியர் கழகம் சார்பாகபொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

30-5-2024

செய்தி புகைப்படங்கள்  

தமிழன் ரவி

முத்த பத்திரிகையாளர் 

தூத்துக்குடி  மாவட்ட கல்வி அலுவலர் அ.குருநாதன் பணி நிறைவு ஓய்வு பெறுகிறார்.

 தமிழாசிரியர் கழகம் சார்பாக அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது 



இது பற்றிய செய்தியாவது:-

  தூத்துக்குடி  மாவட்ட கல்வி அலுவலர் அ.குருநாதன் இன்று 30-5-2024 பணி ஓய்வு பெறுகிறார் 


அனத முன்னிட்டு அவருக்கு பணி  நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது


 தூத்துக்குடி மாவட்டத் தமிழகத் தமிழாசிரியர் கழகம் சார்பாகபொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


பணி நிறைவு பெறும் மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன் -க்கு நினைவுப் பரிசாக... தூத்துக்குடி மாவட்ட எழுத்தாளர்கள் முகமது யூசுப், தேரிக்காட்டு இலக்கியவாதி கண்ணகுமார விஸ்வரூபன்,நெல்லை தேவன் ஆகியோரின் நாவல்கள் மற்றும் படைப்புகள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வில் தூத்துக்குடி கல்வி மாவட்ட தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் தலைவர் கா. பழனி வேலாயுதம் தூத்துக்குடி கல்வி மாவட்டச்செயலர் கருத்தப்பாண்டியன் தூத்துக்குடி கல்வி மாவட்டப் பொருளாளர் பூபால் செல்லையா, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஆதி அருமைநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக