சனி, 1 ஜூன், 2024

தூத்துக்குடியில் 10 +12 பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்குபாராட்டு சான்றிதழும் கேடயம் வழங்கல்

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 2-6-2024

செய்தி புகைப்படங்கள்  

தமிழன் ரவி

மூத்த பத்திரிகையாளர் 

அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர் மாணவிகளுக்கு தூத்துக்குடியில்

பாராட்டு விழா நடைபெற்றது.

இது பற்றிய செய்தியாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி எட்டையபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது.



     தூத்துக்குடி எட்டையபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் சுபாஸ்ரீ சேவா மகளிர் சுய உதவிக் குழு இணைந்து பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று 1-6-2024 நடைபெற்றது. 


 தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்ற தலைவர் மைதிலி செல்வராஜ்  தலைமை தாங்கினார். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் முனைவர் கோ அருள் ஒளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


பின்னர் பேராசிரியர் முனைவர் கோ அருள் ஒளி மாணவ மாணவிகளுக்கு கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.

         முன்னதாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் பொருளாளர் சாந்தி சரவணன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.


 விழாவிற்கு சார்பதிவாளர் குருசாமி  தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் செயலாளர் காமாட்சி முருகன் முன்னிலை வகித்தனர்.

        வழக்கறிஞர் விஜய சுந்தர் முனைவர் சகாய ராஜன் கவிஞர் நெடுஞ்சாலை செல்வராஜ் முனைவர் முருகன் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்ற துணைத் தலைவர் பத்மலதா ராஜ் ஆசிரியை கோமதி நடராஜன் ஆசிரியை மாரியம்மாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் மாணவிகள் விவரம்:-

        பத்தாம் வகுப்பு தேர்வில் ஆர்த்தி 483 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் சங்கரேஸ்வரி 480 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் சூரிய தேவ் மற்றும் சப்னம் 470 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்று பரிசுகளை பெற்றனர்.


 பதினொன்றாம் வகுப்பில் ஜெகன் 505 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் தனுஜா 490 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் கோபிகா 477 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்று கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் பெற்றனர்.


 பன்னிரண்டாம் வகுப்பில் ஜனனி 564 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் ரேஷ்மா ரெட்டி 517 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் சிவரஞ்சனி 504 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்று கேடயமும் பாராட்டு சான்றிதழும் பெற்றனர். 


பத்தாம் வகுப்பில் சிறப்பு பரிசும் கேடயமும் பெற்ற மாணவர்கள் ஆகாஷ், பெத்தனேஸ்வரி, ஸ்ரீ வர்ஷினியும், பன்னிரண்டாம் வகுப்பில் சிறப்பு பரிசு பெற்ற லட்சுமி தனஸ்ரீக்கும் கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

        ஆசிரியை தேவி  நன்றி கூற நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி  நிறைவுற்றது.

 விழாவில் குடியிருப்பு வாழ் பொது மக்களும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நலம் மன்ற உறுப்பினர்களும் சுபாஸ்ரீ சேவா மகளிர் உதவிக் குழு உறுப்பினர்களும் மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

       விழா ஏற்பாடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நில மன்றம் சுபாஸ்ரீ சேவா மகளிர் சுய உதவிக் குழு சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை இணைந்து சிறப்பாக செய்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக