செவ்வாய், 21 அக்டோபர், 2025

தூத்துக்குடியில் கனமழை எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

📰 தூத்துக்குடி லீக்ஸ்

தூத்துக்குடி: அக் 21

தொடர்ந்து பெய்து வரும் கனமழையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மாண்புமிகு கீதாஜீவன்  மாவட்ட ஆட்சித்தலைவர்  க. இளம்பகவத், இ.ஆ.ப.  தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.



மாநகராட்சி, மின்வாரியம், வருவாய்துறை மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் கீதாஜீவன்  தெரிவித்ததாவது:
“தொடர்ச்சியான கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துகளில் மழையால் ஏற்படும் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து அதிகாரிகளும் பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.”



அவர் மேலும் தெரிவித்ததாவது,
மின்சார வாரியம், நெடுஞ்சாலை, மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கு தனித்தனியாக பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தண்ணீர் தேங்கக்கூடிய பகுதிகளில் மணல் மூட்டைகள், ஜேசிபி இயந்திரங்கள், மோட்டார் பம்புகள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வருவாய் துறையினர் குளங்கள், அணைகள் ஆகியவற்றின் நீர்மட்டம் மற்றும் வெளியேற்றப்படும் நீரின் அளவை கண்காணித்து, உடைப்பு ஏற்படாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது 38 மோட்டார் ரூம் மற்றும் 58 நீர்மோட்டார் பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 


அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மிக கனமழை ஏற்பட்டாலும் அதை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் முழுமையாக தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மேலும், மக்களுக்கு தேவைப்படும் சூழ்நிலையில் தங்குவதற்கான முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. மாநில பேரிடர் மீட்பு படை (SDRF) குழுவும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.



Heavy Rain: Minister Geetha Jeevan Reviews Precautionary Measures in Thoothukudi District



📰 THOOTHUKUDI LEAKS

Heavy Rain: Minister Geetha Jeevan Reviews Precautionary Measures in Thoothukudi District

Thoothukudi:
Due to the continuous heavy rainfall in Thoothukudi district, Minister for Social Welfare and Women’s Rights Smt. Geetha Jeevan held a review meeting under the chairmanship of District Collector Mr. K. Ilambagavath, I.A.S. The meeting was attended by officials from the Corporation, Electricity Board, Revenue Department, and other key departments.



After the meeting, addressing the press, Minister Geetha Jeevan said:
“In view of the ongoing heavy rains, precautionary measures have been taken across all municipal, town panchayat, and village panchayat areas to safeguard the public from monsoon-related damages. All department officials have been instructed to remain on duty round the clock.”

She further stated that responsibilities have been assigned to key departments such as the Electricity Board, Highways, and Health Department to ensure immediate response to any emergency situation.
Sandbags, JCB machines, and motor pumps have been arranged in low-lying areas prone to waterlogging to prevent flooding and drain stagnant water promptly.



The Revenue Department has been directed to monitor the water levels in tanks and reservoirs to ensure safe discharge without breaches. In Thoothukudi Corporation limits, 38 motor rooms and 58 water pumps have been deployed to tackle water stagnation effectively.

The district administration, she said, is fully prepared to face any heavy rainfall scenario through coordinated efforts from all departments.
Arrangements have also been made to provide temporary shelters for people, if required. The State Disaster Response Force (SDRF) team is on standby and ready to assist the district administration in relief operations.


திங்கள், 20 அக்டோபர், 2025

Police Commemoration Day observed in Thoothukudi

 📰 THOOTHUKUDI LEAKS


Thoothukudi, Oct. 21 —
Every year on October 21, Police Commemoration Day is observed across the country to honour the sacrifices of police personnel who laid down their lives in the line of duty.

On this occasion, a police parade is conducted, and two minutes of silence are observed nationwide to pay tribute to the martyrs.





The observance dates back to October 21, 1954, when Assistant Sub-Inspector Karam Singh and ten CRPF personnel were killed in an attack by Chinese troops at Hot Springs in Ladakh, situated at an altitude of 16,000 feet. In memory of their supreme sacrifice, the day has since been commemorated annually as Police Commemoration Day.



In Thoothukudi, today (21.10.2025, Tuesday) at 7.45 a.m., the Police Commemoration Day event was held at the South Police Station (Thenpakam). The ceremony honoured the memory of brave police personnel who lost their lives in service.

Thoothukudi Superintendent of Police, Mr. Albert John, IPS, led the tribute, administered the pledge of remembrance, and offered gun salutes in honour of the martyrs.



தூத்துக்குடியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

📰 தூத்துக்குடி லீக்ஸ்

தூத்துக்குடியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

தூத்துக்குடி, அக். 21 —
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 அன்று, தங்கள் கடமையில் உயிர் தியாகம் செய்த காவல் துறை வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் காவலர் வீரவணக்க நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

thoothukudileaks


வீடியோ பார்க்க 




இந்நாளை முன்னிட்டு நாடு முழுவதும் காவல் துறையின் சார்பில் அணிவகுப்பு நடைபெற்று, காவல் துறையில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. மேலும், இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலியும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த அனுசரிப்பு 1954 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று உதவி ஆய்வாளர் கரம் சிங் தலைமையிலான மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) காவலர்கள் பத்து பேர் சீன ராணுவத்தினரால் தாக்கப்பட்டு லடாக் பகுதியில் (16,000 அடி உயரம்) உயிரிழந்த நிகழ்வை நினைவுகூர்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது.



அதன் நினைவாக ஆண்டுதோறும் அக்டோபர் 21 அன்று காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இன்று (21.10.2025, செவ்வாய்க்கிழமை) காலை 7.45 மணிக்கு, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் காவல் துறையில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் “காவலர் வீரவணக்க நாள்” நிகழ்வு நடைபெற்றது.

தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான், இ.கா.ப. தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு துப்பாக்கி முழக்கத்துடன் மரியாதை செலுத்தப்பட்டது.



ஞாயிறு, 19 அக்டோபர், 2025

பட்டாசு வெடிப்பு வழிகாட்டுதல் தூத்துக்குடியில் தீபாவளி பாதுகாப்பிற்கு அதி நவீன கண்காணிப்பு அமைப்புகள்

தூத்துக்குடி, அக்டோபர் 19 - 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அதிநவீன தொழில்நுட்ப கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் இ.கா.ப தெரிவித்துள்ளார்.



கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு

தூத்துக்குடி மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் 4 கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. தென்பாகம் காவல் நிலையம் முன்பு உள்ள சின்னத்துரை & கோ சந்திப்பு, ஜின் பேக்டரி ரோடு சந்திப்பு, கண்ணா சில்க் அருகே மற்றும் WGC ரோடு அழகர் சந்திப்பு ஆகிய இடங்களில் இந்த கோபுரங்கள் செயல்படுகின்றன.

360 டிகிரி கேமரா ரோந்து வாகனங்கள்

360 டிகிரி கண்காணிப்பு வசதியுடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட 2 ரோந்து வாகனங்கள் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தொடர்ச்சியாக ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

விரிவான கண்காணிப்பு வலையமைப்பு

தூத்துக்குடி நகர உட்கோட்ட எல்லைக்குட்பட்ட முக்கிய சாலைகள், சந்திப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மொத்தம் 686 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு, அவை நேரடியாக கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுகின்றன. 


"இரவு நேரங்களில் துல்லியமாக கண்காணிக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப "ட்ரோன்" கேமராக்களும் பயன்படுத்தப்படுகின்றன,"

பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்

போக்குவரத்து நெரிசல் தவிர்க்க கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், வாகன வேக பந்தயம், அதிக ஒலி எழுப்புதல் போன்றவற்றை தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



பட்டாசு வெடிப்பு வழிகாட்டுதல்

காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 குழந்தைகள் பெற்றோர் கண்காணிப்பில் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும். பொதுமக்கள் கூடும் இடங்கள், கூரை வீடுகள், பட்டாசு கடைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள் அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப  பொதுமக்கள் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுமாறும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொண்டு தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சனி, 18 அக்டோபர், 2025

தூத்துக்குடியில் 686 கேமராக்கள் மூலம் நகரம் முழுவதும் 24 மணி நேர கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் நவீன காவல் கண்காணிப்பு மையம் இன்று தொடக்கம்

686 கேமராக்கள் மூலம் நகரம் முழுவதும் 24 மணி நேர கண்காணிப்பு







தூத்துக்குடி, அக்டோபர் 18 - தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நவீன காவல் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையம் இன்று புதிதாக நிறுவப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

அமைச்சர் கீதாஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் வீடியோ பார்க்க 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஆல்பர்ட் ஜான், இ.கா.ப.  அறிவுறுத்தல்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர். சி.மதன், இ.கா.ப. கண்காணிப்பில் இந்த நவீன திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மூன்று கட்டமாக 686 கேமராக்கள்

தூத்துக்குடி மாநகராட்சியின் அனுமதியுடன் தனியார் நிறுவன பங்களிப்பில், மூன்று கட்டமாக முக்கிய சாலைகள், சந்திப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மொத்தம் 686 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில் வாகன எண் தகடுகளை தானாகவே பதிவு செய்யும் ANPR (Automatic Number Plate Recognition) தொழில்நுட்பம் கொண்ட 30 சிறப்பு கேமராக்களும் அடங்கும்.

இன்று முதல் கட்டமாக 430 கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. மீதமுள்ள கேமராக்களும் விரைவில் இயக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

அதி நவீன தொழில்நுட்ப வசதிகள்

நிறுவப்பட்டுள்ள கேமராக்கள் மிக துல்லியமான பார்வை திறன் கொண்டவை. சுமார் 30 நாட்கள் காட்சிகளை சேமித்து வைக்கும் திறன் கொண்டவை. மின்சாரம் தடைபட்டாலும் பேட்டரி மூலம் மூன்று நாட்கள் வரை செயல்படும் வசதியும் உள்ளது.

ஆத்தி இம்புட்டும் தெரியுமா???


கேமராவை சேதப்படுத்தவோ திசை மாற்றவோ யாராவது முயன்றால் உடனடியாக எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்படும். தனிப்பட்ட மின்சார இணைப்பு மற்றும் கண்காணிப்பு வழித்தடம் கொண்டதால் இடையூறு ஏற்படுத்த முடியாது என காவல்துறை தெரிவித்துள்ளது.

ட்ரோன் கண்காணிப்பு அமைப்பு

இரவு நேரங்களில் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை துல்லியமாக பார்க்கும் வகையில் அதி நவீன தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்ட ட்ரோன்களும் பயன்பாட்டில் உள்ளன. திறன்பட பயிற்சி பெற்ற காவல்துறை குழுவினர் முக்கிய திருவிழாக்கள், பண்டிகைகள் மற்றும் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிட்டு, காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடியாக கண்காணிப்பர்.






பன்முக பயன்கள்

இந்த ஒருங்கிணைந்த கண்காணிப்பு அமைப்பு குற்றங்களை தடுப்பது, குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடிப்பது, சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவது மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது ஆகிய பணிகளில் காவல்துறைக்கு பேருதவியாக இருக்கும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி நகர காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து இந்த கேமராக்கள் அனைத்தும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.

(நமது சிறப்பு நிருபர், தூத்துக்குடி)

Pearl City Press Club Journalists’ Association Meeting Held

 📰 THOOTHUKUDI LEAKS

Pearl City Press Club Journalists’ Association Meeting Held

Thoothukudi, Saturday:
A special meeting of the Pearl City Press Club Journalists’ Association was held today (Saturday) at 11:30 a.m. in the Bamboo Hall located within SDR Café premises, Anna Nagar.



During the event, Diwali gift hampers were distributed to all members on behalf of the association.
All members of the club actively participated in the programme.

Speaking on the occasion, representatives stated that the Pearl City Press Club continues to function as a distinctive and dynamic journalists’ association in Thoothukudi, dedicated to promoting unity and welfare among media professionals.