ஞாயிறு, 7 டிசம்பர், 2025

தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்து தூய்மை பணியாளர்கள், ஊரக வளர்ச்சி உள்ாாட்சி துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் – மறியல் ஆர்ப்பாட்டம் கைது நடவடிக்கை

photo news by Arunan journalistt 

தூத்துக்குடி: டிச 8

தொழிலாளர் நலன்கள் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி, இன்று (08.12.2025) தூத்துக்குடியில் CITU தலைமையில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை தொழிலாளர்களும், தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்து தூய்மை பணியாளர்களும் இணைந்து வேலைநிறுத்தத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks



போராட்டக்காரர்கள்,

  • 62 நாட்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு 11.10.2017 உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி வழங்க வேண்டிய ஊதியப் பாக்கிகள் இன்னும் வழங்கப்படாதது,
  • துவக்கப்பணியாளர்கள், ஓட்டுநர்கள், OHT ஆபரேட்டர்கள் உள்ளிட்டோருக்கான DPC உயர்வுகள் நிறைவேற்றப்படாதது,
  • மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள 74 தொழிலாளர்களின் நீண்டநாள் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு வழங்காதது,
  • 01.04.2003க்கு பிந்தைய புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,
  • மருந்தக பணியாளர்களுக்கான சம்பள உயர்வு மறுக்கப்படுவது,
  • பணிநிரந்தரம், அனுவாரியம் உள்ளிட்ட நலன்கள் வழங்கப்படாதது,
  • தினசரி தொழிலாளர்களுக்கு சம்பளம் தாமதமாக வழங்கப்படுவது

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மேலும், மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், தங்களது பாதுகாப்பு உபகரணங்கள், சம்பள உயர்வு, நிரந்தரப்படுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்காததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் தீவிரமாக பங்கேற்றனர்.

“உழைக்கும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட மாநகராட்சி, அரசு வழங்க மறுக்கிறது; நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்” என சங்கத்தினர் எச்சரித்தனர்.

காவல்துறை கைது நடவடிக்கை 

பெரும்பான்மையான பெண் தொழிலாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார் கள் 

— தூத்துக்குடி லீக்ஸ்

thoothukudileaks

thoothukudileaks

மோடி அரசு கொண்டு வந்த தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி — தூத்துக்குடியில் இடதுசாரி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி லீக்ஸ் — செய்தி

தூத்துக்குடி, டிசம்பர் 08, 2025:

ஒன்றிய மோடி அரசு தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் வகையில் கொண்டு வந்த நான்கு தொகுப்பு தொழிலாளர் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் இன்று (08.12.2025) காலை 11 மணிக்கு இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு தொழிலாளர் பாதுகாப்பு, ஊதிய நெறிமுறைகள், வேலை நேர கட்டுப்பாடுகள் உள்ளிட்ட உரிமைகளை பாதிக்கும் வகையில் புதிய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கடும் கண்டனம் தெரிவித்தனர்.

thoothukudileaks


ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள்:

  • தோழர் மு.முருகன், மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்.எல்)
  • தோழர் K.P. ஆறுமுகம், மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)
  • தோழர் கரும்பன், மாவட்டச் செயலாளர், சிபிஐ
  • தோழர் ம. கணேசன், மாவட்டச் செயலாளர், விசிக
  • தோழர் பி. சம்பத், மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
  • தோழர் பாலசுந்தரம், மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்.எல்)
  • தோழர் வழ. வில்லவன் கோதை, துணை பொதுச்செயலாளர், விசிக
  • தோழர் P. லோகநாதன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர், சிபிஐ

சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பல நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் “தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்!”, “தொழிலாளர் உரிமை எங்கள் உரிமை!” என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டம் முழுவதும் அமைதியாக நடைபெற்றது.

தூத்துக்குடியில் 200க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கைது திருப்பரங்குன்றம் பிரச்சனையை கண்டித்து மாநிலம் தழுவிய அறப்போராட்டம்

தூத்துக்குடி:டிச 7

திருப்பரங்குன்றம் சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி முருகப்பெருமானை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டன. 

thoothukudileaks


தூத்துக்குடியிலும் இந்து முன்னணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி செய்யப்பட்டது.

thoothukudileaks


பரபரப்பு!!!

ஆர்ப்பாட்டம் தொடங்க முயன்றபோது, இந்து முன்னணியினர் மற்றும் காவல்துறையினருக்கு இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது. 




திருப்பரங்குன்றம் மலைஉச்சியில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இது அரசு சார்பில் திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் என இந்து முன்னணி அமைப்புகள் குற்றம் சாட்டி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.


தூத்துக்குடியில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே, தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி   சரவணகுமார்  இசக்கி முத்து குமார் நாரயணராஜ் தலைமையில் ஆண்களும் பெண்களும் இணைந்து 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.


அவர்களை தடுக்கும் வகையில் தூத்துக்குடி நகர காவல் துறை எஸ்பி மதன் தலைமையிலான காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை கைது செய்து அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் பாதுகாப்பாக அடைத்தனர்.

சனி, 6 டிசம்பர், 2025

முதல்வர் காமராஜர் குறித்து பேச்சு…தூத்துக்குடியில் YouTuber முக்தாருக்கு எதிராக குண்டர் நடவடிக்கை கோரி புகார்

தூத்துக்குடி லீக்ஸ் — நாளிதழ் செய்தி

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் சமத்துவ மக்கள் கழகத்தின் முறையீடு

தூத்துக்குடி.டிச 7
தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து YouTube-ல் அவதூறாக பேசியதாக கூறப்படும் YouTuber முக்தாருக்கு எதிராக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது

thoothukudileaks

.



இந்தப் புகாரை  அருண் சுரேஷ் குமார்  தலைமையில் கழக நிர்வாகிகள் இணைந்து அளித்தனர்.

இந்நிகழ்வில்

  • மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட்,
  • மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் சுப்பையா,
  • அசோக்,
  • மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல்,
  • மாவட்டத் துணைச் செயலாளர் அருள்ராஜ்,
  • மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ்,
  • வக்கீல் பெஸ்டஸ்,
  • மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம்,
  • மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர்,
  • மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார்,
  • மாநகர தொண்டர் அணி செயலாளர் காமராஜ்


ஆகியோர் கலந்து கொண்டனர்.




வியாழன், 4 டிசம்பர், 2025

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 9ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் மலரஞ்சலி

தூத்துக்குடி: டிச5

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் உத்தரவின்படி, புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் இன்று நினைவு நாள் நிகழ்வுகள் நடைபெற்றது.



thoothukudileaks


தூத்துக்குடி அண்ணா நகர்–டூவிபுரம் சந்திப்பில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க உறுதிமொழி எழுத்து எடுக்கப்பட்டது.
பின்னர் அம்பேத்கர் நகர் முத்தையாபுரம் சந்திப்பிலும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.



நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட மற்றும் உள்ளூர் அணி நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர். அதில் குறிப்பிடத்தக்கவர்கள்:

  • மாநில மகளிரணி துணைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன்
  • மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் மில்லை ராஜா
  • தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம்
  • தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங்
  • மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள் ஜோதிமணி, முருகேசன்
  • துணை செயலாளர்கள் பொன்ராஜ், சகாயராஜ்
  • வடக்கு மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன்
  • முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால்
  • மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர்
  • சிறுபான்மை பிரிவு பொருளாளர் நாகூர் பிச்சை
  • டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார்
  • முன்னாள் மீனவரணி செயலாளர் அகஸ்டின்
  • அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணை செயலாளர் மாரியப்பன்
  • மகளிரணி துணை செயலாளர் சண்முகத்தாய்
  • முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம்
  • பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் அசன், ராஜன் கண்ணா, ஞாயம் ரொமால்ட்
  • வட்ட செயலாளர்கள் சகாயராஜ், ஜெனோபர், அருண்குமார், அந்தோணி ராஜ்
  • மாவட்ட பிரதிநிதிகள் அந்தோணியப்பா, அசரியான், ஜேடியம்மா, சாந்தி
  • முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என். சிவசுப்பிரமணியன்
  • இயக்குனர்கள் அன்புலிங்கம், சங்கரி
  • மீனவர் சங்க பிரதிநிதிகள் ஜேசுராஜ், பாலன்
  • முன்னாள் வட்ட செயலாளர்கள் கோட்டாளமுத்து, பாக்யராஜ், மோகன், லோகு கணேஷ்
  • முன்னாள் கவுன்சிலர் சந்திரா
  • உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி
  • முன்னாள் யூனியன் கவுன்சிலர் தருவை அமலதாசன்பழம்
  • போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சகாயராஜ், சங்கர், சண்முகராஜ், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், சுப்புராஜ்
  • மின்சாரப் பிரிவு நெல்லை மண்டல தலைவர் மகாராஜன்
  • தெர்மல் திட்ட செயலாளர் அய்யாசாமி, பொருளாளர் ரவிக்குமார்
  • டாஸ்மாக் நகர பொருளாளர் கார்த்தீசன்
  • சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ், பிரபாகரன், அபுதாஹிர்
  • பேச்சாளர் அனல் ராஜசேகர்
  • பல நிர்வாகிகள் குருசாமி, சந்தனராஜ், ஸ்டாலின், அந்தோனி ராஜ், ஆசைத்தம்பி, பழனி, ராஜ்குமார், பாபநாசம், தனுஷ், அந்தோனி செல்வராஜ், துறைமுகம் ராஜ்குமார், ஆறுமுகம், சித்திரைவேல், மணிகண்டன், சுப்புராஜ், ஜோதிகா மாரி, ஆபிரகாம், முனியசாமி, ராஜசேகர், வெங்கடாசலம், பொன்ராஜ், ஆறுமுகம்
  • மாவட்ட மகளிரணி சாய் சுதா, மற்றும் உறுப்பினர்கள் ஜிபுலியா, பபினாம்மா, ஜீவா, பொண்ணுத்தாய், முத்துமாரி, ரெக்ஸி, மாரியம்மாள், லட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

மக்கள் பங்கேற்பு குறிப்பிடத்தக்கது

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் பெருமளவில் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர்.


தூத்துக்குடியில் புரட்சித்தலைவி ஜெயலலிதா 9ஆம் ஆண்டு நினைவு நாள் — மாலை அணிவித்து அஞ்சலி, அன்னதானம் வழங்கல்

தூத்துக்குடி லீக்ஸ் — நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: டிச 5

தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி, அம்மா ஜெ. ஜெயலலிதா  9ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவஞ்சலி நிகழ்வு இன்று தூத்துக்குடியில் மரியாதையுடன் நடைபெற்றது.

thoothukudileaks


மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு, கழக ஒருங்கிணைப்பாளர், கழக பொருளாளர், தமிழக முன்னாள் முதல்வர் ஐயா ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ  ஆணையின்படி, தூத்துக்குடி மாநகர் மாவட்டக் கழக அலுவலகம் அருகில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

நிகழ்வில் தூத்துக்குடி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் எஸ். ஏசா துரை தலைமையில், அம்மா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்

  • மாவட்ட அவைத் தலைவர் எம். எஸ். மாடசாமி
  • மாவட்டக் கழக துணைச் செயலாளர் பட்டுக்கனி
  • கழக செயற்குழு உறுப்பினர் ஸ்ரீவை சந்திரா
  • மேற்கு பகுதி கழக செயலாளர் கே. எஸ். செல்லத்துரை
  • வடக்கு பகுதி கழக செயலாளர் பொய்யாமொழி
  • தெற்கு பகுதி கழக செயலாளர் வெள்ள பாண்டி
  • மத்திய தெற்கு பகுதி கழக செயலாளர் வி. பி. முத்து
  • தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி கழகச் செயலாளர் இரா. இல. ஜெயராமன்
  • மாவட்ட ஐ.டி பிரிவு செயலாளர் சாமுவேல்
  • மாவட்ட மீனவர் அணி செயலாளர் வின்சென்ட்
  • மாவட்ட இளைஞரணி செயலாளர் சுதாகர்
  • மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முத்துப்பட்டன்
  • மாவட்ட கலை இலக்கியப் பிரிவு செயலாளர் ஜெயபால்
  • மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தர்மசீலன்
  • மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் மாரியப்பன்
  • மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் ராஜதுரை, அங்குசாமி (சுசீந்திரன்)
  • தாளமுத்து நகர் ஊராட்சி கழகச் செயலாளர் எம். ஜி. முனியசாமி
  • மாவட்ட இளைஞர்–இளம்பெண்கள் பாசறை தலைவர் மகாராஜன்
  • மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் மந்திரம், செல்வராஜ்
  • மேற்கு பகுதி எம்ஜிஆர் மன்ற தலைவர் எம்ஜிஆர் கணேசன்
  • வட்டக் கழகச் செயலாளர் செல்வகுமார்
  • பொன் அம்சம், மாரி தங்கம்
  • மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சபிக்குமார்


அனைவரும் ஒன்று கூடிச் செம்மையான மரியாதை செலுத்தி, அம்மாவின் சேவை நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா — 9ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

தூத்துக்குடி லீக்ஸ் — நாளிதழ் செய்திகள்

தூத்துக்குடி 05 டிசம்பர் 2025

புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா — 9ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மரியாதை நிகழ்வு

மக்களால் நான்… மக்களுக்காகவே நான்…” என்று வாழ்ந்து காட்டிய தங்கத் தாரகை, முன்னாள் முதலமைச்சர், புரட்சித்தலைவி அம்மா ஜெ. ஜெயலலிதா அவரின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் இன்று (05.12.2025) நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.



காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட கழகம் அலுவலகம் முன்பாகவும், பின்னர் தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலகம் முன்பாகவும், புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா  திருவுருவப் படத்திற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.








நிகழ்வில் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், பெண்கள் அணி, இளைஞர் அணி, ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டு, புரட்சித்தலைவி அம்மாவின் அரசியல் சேவையும் மக்களுக்கான பெரும் பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்து மலரஞ்சலி சமர்ப்பித்தனர்.

வீடியோ பார்க்க 

தூத்துக்குடியில் அமைதியான முறையில் நடைபெற்ற இந்த நினைவு அஞ்சலி நிகழ்வில், பொதுமக்களும் கலந்து கொண்டு அம்மாவிற்கு மரியாதை செலுத்தினர்.

செய்தி மற்றும் நிகழ்வு புகைப்படங்கள் 

ரோஜா அருணன் செய்தியாளர்