photo news by Arunan journalist
தூத்துக்குடி, டிசம்பர் 2:
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலியாப் பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் (Empty Bottle Buy Back Scheme) இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. மாநில அரசின் அறிவுறுத்தலின்படி செயல்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய திட்டம், மதுபாட்டில்களின் விலையுடன் கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் முறையை உட்கொள்கிறது.
மதுபானம் வாங்கிய பயனாளர்கள், காலியான பாட்டில்களை மீண்டும் அதே மதுக்கடைக்குத் திருப்பிக் கொடுக்கும் போது, முன்பு வசூலிக்கப்பட்ட கூடுதல் ரூ.10 திருப்பி வழங்கப்படும் என மதுக்கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
![]() |
| பத்து ருபாய் பாட்டல் விலை பில் |
இந்த திட்டம் மூலம் வீதி, மைதானம், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பரவலாகக் காணப்படும் மதுபாட்டில் குப்பைகளை குறைப்பதே அரசின் நோக்கமாகும். மதுக்கடைகளில் தானியங்கி இயந்திரம் மூலமும் திரும்பப் பெறும் நடைமுறை அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி மூலம் சுற்றுச்சூழல் சுத்தமாக இருக்கவும், பாட்டில் குப்பைகள் குறையும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.




