photo news by Arunan journalist
தூத்துக்குடி:டிச 10
தமிழகத்தில் முதல் முறையாக நமது முத்து மாவட்டமான தூத்துக்குடியில் ‘Stall in Mall’ திட்டம் தொடக்கம் பெறுகிறது. NABARD மற்றும் MABIF அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த விழாவில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் பல பகுதிகளில் இருந்து வரும் கைதொழில், பெண்கள் சுயஉதவி குழு மற்றும் இயற்கை உற்பத்தியாளர்கள் ஒரே இடத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய உள்ளனர்.
டிசம்பர் 13 முதல் மார்ச் 12 வரை,
காலை 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை
இடம்: பெரிசன் பிளாசா, போல் பேட்டை கிழக்கு, தூத்துக்குடி.
மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் முக்கிய பொருட்கள்:
- பட்டுப்பாய், கருவாடு, கடல் சீப்பு பொருட்கள்
- தேன் சார்ந்த பொருட்கள்
- காஷ்மீர் புளியூட்டு பொருட்கள்
- இனிப்பு, மசாலா பொருட்கள்
- செம்பருத்தி, முளிகை சார்ந்த பொருட்கள்
- சூழல் நட்பு பொருட்கள்
- நெய்த துணிகள், கைதறி வஸ்திரங்கள்
- மரப்பலகை பொருட்கள், அலங்காரப் பொருட்கள்
- கோர்க் பை, மண் பானைகள் உள்ளிட்ட பல தயாரிப்புகள்
ஒரே இடத்தில் பல்வேறு மாநிலங்களின் சிறப்புப் பொருட்களை மக்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் இதைப் பயனடைய வேண்டுமென தெரிவித்தனர்












