புதன், 17 செப்டம்பர், 2025

ஏ...ஹே.பயமா அதுவும் எனக்கா? துணிந்த சுந்தர் பிச்சை ? உலக பொருளாதார மாநாட்டில் பரபரப்பு

 Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ்

“நான் மனித குலத்திற்கே சேவை செய்கிறேன்..”
டிரம்பின் மிரட்டலுக்கு அதிரடி பதிலடி கொடுத்த சுந்தர் பிச்சை!

ஜெனீவா:
உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவை அவமதிக்கும் விதமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

thoothukudileaks


ஆனால் அதற்கு, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அளித்த பதில், சர்வதேச அளவில் விவாதத்தையும் பாராட்டையும் கிளப்பியுள்ளது.

மாநாட்டின் போது, டிரம்ப், ...

“இந்தியா தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்து பெருமை பேசுகிறது. ஆனால் அமெரிக்கா இல்லாமல் அந்த முன்னேற்றம் சாத்தியமா?” என்று கேள்வி எழுப்பினார். 


இதற்கு சுந்தர் பிச்சை, 

“நான் இந்தியாவில் பிறந்தவன். எனது நாடு எனக்கு கல்வி, மதிப்பு, அறிவு கொடுத்தது. தொழில்நுட்பத்திற்குப் பாஸ்போர்ட் கிடையாது. நான் சேவை செய்வது மனித குலத்திற்கே” என்று அழுத்தமாக பதிலளித்தார்.

கைதட்டல் !!!

அவரது வார்த்தைகள் அரங்கில் இருந்தவர்களை வியக்க வைத்தன. கரவொலியும் முழங்கியது.

சவால் விடுத்த டிரம்ப்??

அடுத்த நாளும் டிரம்ப், “கூகுள் அமெரிக்காவுடனா அல்லது இந்தியாவுடனா?” என்று நேரடியாக சவால் விடுத்தார். 

சுந்தர் பிச்சை பதிலடி!!!

இதற்கு சுந்தர் பிச்சை, “அமெரிக்கா எனக்கு வாய்ப்பு தந்தது, இந்தியா எனக்கு வேர்களை தந்தது. நான் இரண்டையும் கௌரவிக்கிறேன். எனது சேவை எல்லோருக்கும்” என்று பதிலளித்தார்.

மாநாட்டின் இறுதியில்.,

, டிரம்ப், “இந்தியா அமெரிக்காவுக்கு சந்தையைத் திறக்காவிட்டால் தடைகள் வரும்” என இறுதி எச்சரிக்கை விடுத்தார். 

#பயமா அது எனக்கா ???

இதற்கு சுந்தர் பிச்சை, 

“பயத்தால் அடிபணிய மாட்டேன். மரியாதைக்கே மட்டும் கட்டுப்படுவேன். எந்த தேசமாயினும் சரணடைய மாட்டேன்” என்று தீர்க்கமாக தெரிவித்தார்.

சுந்தர் பிச்சை யின் கொள்கை உறுதி 

அவரது பேச்சுக்கு பல தலைவர்கள் எழுந்து நின்று கைதட்டினர். இது வணிக பேச்சுவார்த்தையை தாண்டி, மனிதநேயம், தலைமைத்துவம், மற்றும் கொள்கைகள் பற்றிய திருப்புமுனையாக அமைந்தது.

"சுந்தர் பிச்சையின் இந்த வார்த்தைகள் உலக இளைஞர்களுக்கு பெருமை மற்றும் நம்பிக்கையை விதைத்ததாகவும், “அதிகாரத்தைவிட கொள்கையே வலிமையானது” என்பதை உலக வரலாற்றில் பதித்துவிட்டதாகவும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்."


👉 

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்டம் : 17.09.2025

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் வாராந்திர கூட்டம் இன்று (17.09.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், இ.கா.ப. தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் இந்த கூட்டத்தில், காவல் நிலையங்களில் முன்பே புகார் அளித்த 10 மனுதாரர்களும், புதிதாக மனு அளிக்க வந்த 72 மனுதாரர்களும் கலந்து கொண்டனர். 

thoothukudileaks


எஸ் பி உடன் நேரில் சந்திப்பு!!

இதன்மூலம் மொத்தம் 82 பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர்.


மனுதாரர்களின் புகார்களை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உடனடியாக தேவையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வாரந்தோறும் நடைபெறும் இந்த கூட்டத்தில், காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட மனுக்களில் தீர்வு கிடைக்காதவர்கள் நேரடியாக கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.


 என்றும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மழைநேரங்களில் மின்கம்பம் அருகே செல்ல வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை

 👍

தூத்துக்குடி : 17.09.2025

மழை காரணமாக மாவட்டம் முழுவதும் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் அருகே செல்லுவது உயிருக்கு ஆபத்தானது என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.



காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

  • மின்கம்பம், மின்கம்பிகள் அருகே தேங்கியுள்ள தண்ணீரில் நடந்து செல்ல வேண்டாம்.
  • அத்தகைய இடங்களின் அருகில் வாகனங்களை நிறுத்தவோ, குழந்தைகளை விளையாடவோ விடக்கூடாது.
  • தண்ணீரில் மின்சாரம் பாயும் அபாயம் எப்போதும் இருப்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
  • மின்கம்பம் அல்லது மின்கம்பி முறிந்து தண்ணீரில் விழுந்து காணப்பட்டால், உடனடியாக அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்துக்கும் காவல்துறைக்கும் தகவல் தர வேண்டும்.
  • மழை காலங்களில் பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை முன்னிருப்பில் வைத்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


பொதுமக்கள் உயிர் பாதுகாப்பே முதன்மை என்பதால், மழைநேரங்களில் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும், எச்சரிக்கை அறிவிப்பை கடைப்பிடிக்குமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.



பெருங்குளம் பேரூராட்சியில் புதிய சுகாதார நிலைய கட்டிடம் அடிக்கல் நாட்டி விழா மன்றத் தலைவர் டாக்டர் எஸ். புவனேஸ்வரி சண்முகநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

பெருங்குளம் பேரூராட்சியில் புதிய சுகாதார நிலைய கட்டிடம் அடிக்கல் நாட்டி விழா

தூத்துக்குடி மாவட்டம் : 17.09.2025

பெருங்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பண்டாரவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக ரூ.75 லட்சம் நிதி, தேசிய சுகாதார அறக்கட்டளை 15-வது மானியக் குழு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



இந்த புதிய கட்டிடப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பெருங்குளம் பேரூராட்சி மன்றத் தலைவர் டாக்டர் எஸ். புவனேஸ்வரி சண்முகநாதன்  அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.



நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் ஜி. வேதமாணிக்கம், கவுன்சிலர்கள் காமராஜ், சுப்பிரமணியன், பட்டுப்பாண்டி, வத்சலா மாணிக்கம், அதிமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் எப்ராயீம், மாவட்ட வர்த்தக அணி தலைவர் திருத்துவசிங், போக்குவரத்து பிரிவு தூத்துக்குடி செயலாளர் வெள்ளையா, நிர்வாகிகள் சுந்தரராஜன், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தூத்துக்குடியில் சமூக நீதி நாள் உறுதிமொழி

📰 – தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி மாவட்டம் : 17.09.2025

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாள் அனுசரிக்கப்படுவதையொட்டி, இன்று (17.09.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப  தலைமையில் விழா நடைபெற்றது.

உறுதி மொழி வீடியோ பார்க்க 

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம் உட்பட காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



இதனைத் தொடர்ந்து அனைவரும் இணைந்து சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்தனர்.


 அதில்,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அன்பு நெறியை கடைப்பிடிப்பேன்.
சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளில் வாழ்வேன்.
மனிதாபிமானத்தையும் சமூக நீதியையும் என்றும் போற்றுவேன்”

என்று உறுதி மொழி எடுக்கப்பட்டது.



மழை நேரங்களில் மின்கம்பம் அருகில் தேங்கி நிற்கும் தண்ணீரில் நடக்கவோ அல்லது அதன் அருகிலோ செல்ல வேண்டாம்.

👉 இச் செய்தியில் புகைப்படங்களில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது .

திங்கள், 15 செப்டம்பர், 2025

வட்டிக் கொடுமை தாய் தற்கொலைச் சிந்தனையில் இருந்த நிலையில் 12 வயது மகள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை

தூத்துக்குடி, 16 செப்டம்பர் 2025

பாத்திமாநகர் பகுதியில் வசிக்கும் 43 வயதான ஆன்சி என்பவரின் 12 வயது மகள் மாணவி (8வது வகுப்பு) நேற்று மாலை வீட்டிலேயே பூச்சி மருந்து (பொதுவாகப் பயன்படுத்தப்படும் பூச்சிகொல்லி மருந்து) விழுங்கி தற்கொலை முயற்சி செய்தது. 

thoothukudileaks


சிறுமியை உடனடியாக குடும்பத்தினர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். தற்போது குழந்தையின் சிகிச்சை தொடர்கிறது .



 வட்டிப் பிரச்சினைகள் காரணமாக தொழிலாளி ராஜா (45) மற்றும் மனைவி ஆன்சி (43) பிரிந்து வசித்து வந்ததாகப் பொது தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட்டிக்கு வாங்கி வட்டி தொழில்!!!

 ஆன்சி கடந்த சில ஆண்டுகளாக உறவினர்கள் மற்றும் சிலரிடம் லட்சக்கணக்கில் கடன் எடுத்துக்கொண்டு, அதே கடனில் வட்டி வர்த்தகம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

அந்த கடன்களை மீட்டெடுக்கும்போது கடன் கொடுத்தவர்கள், குறிப்பாக தம்பியான அண்டோ என்பவர், கடுமையான முறையில்  மிரட்டல்களை மேற்கொண்டு வந்ததாக ஆன்சி தெரிவித்தார்.


 அந்த மிரட்டல்களுக்கு அதிர்ச்சியடைந்த ஆன்சி மனநலக்கேடு அடைந்தவராகவும் கூறப்படுகிறது.

ஆன்சி சமூக அலுவலகங்கள் மற்றும் போலீஸ் துறைகளில் முறையிட்டு புகார் அளித்துவிட்டதாகவும், ஆனால் கடந்த ஒரு வாரமாக  மன அழுத்தம் தீவிரமானது என்றும் அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது கூறினார்.

ஆன்சியின் பேட்டி (சுருக்கமாக):

"என் தம்பி அண்டோ ஒரு வாரமாக பணம் கேட்டு மிரட்டி வந்தார். நான் தற்கொலை செய்ய நினைத்திருந்தேன். என் மகள் என் முன்னால் பூச்சி மருந்து குடித்து முயன்றாள். காவல்துறை உடனடியாக என் தம்பியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் — இல்லையெனில் எங்களுக்கு வேறு வழியில்லை." — ஆன்சி கண்ணீர் மல்கப் பேட்டி.அளித்துள்ளார்.

ஏற்கெனவே ஆன்சி இரண்டு முறை தூக்கமாத்திரைகள் குடித்து தற்கொலை முயன்றதாகவும், அதன்முடிவாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் இருந்தாராம்.

thoothukudileaks


மாவட்ட நிர்வாகம் (மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம், தெற்கு காவல் நிலையம்) ஆன்சி புகார் மனு அளித்துள்ளதாகவும், கூறுகின்றனர்.

தற்போது வழக்குத் தகவல்களைப் பதிவுசெய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது; 

 தூத்துக்குடி லீக்ஸ்

(

— 

தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாளில் ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு லட்டு வழங்கி கொண்டாட்டம்

 Photo video by Arunan journalist news by sunmugasuthram press club president 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

அண்ணா பிறந்தநாளில் ஓபிஎஸ் அணி மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி நகரில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆணையின்படி, அண்ணா அவர்களின் 117வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள்.



இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையேற்றார். 


video பார்க்க 

மாவட்ட இணைச் செயலாளர் உமா கண்ணன், துணைச் செயலாளர் பழனிச்சாமி பாண்டியன், செயற்குழு உறுப்பினர் சந்திரா, மீனவர் அணி செயலாளர் வின்சென்ட், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாமுவேல், விவசாய அணி செயலாளர் முத்துக்குமார், கலை இலக்கிய பிரிவு செயலாளர் ஜெயபால், பகுதி செயலாளர்கள் செல்லத்துரை, முத்து, மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் மகேஸ்வரன், எம்ஜிஆர் மன்ற தலைவர் மாரியப்பன், சட்டமன்ற தொகுதி இணைச் செயலாளர் வெள்ளபாண்டி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கமலக்கண்ணன், நிர்வாகிகள் மந்திரம், ராமகிருஷ்ணன், செல்வராஜ், மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர்கள் ராஜதுரை, இசக்கிமுத்து, பகுதி ஜெ. பேரவை செயலாளர் பொய்யாமொழி, ஊராட்சி செயலாளர் முனியசாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் வேலுச்சாமி, கலை இலக்கியப் பிரிவு தலைவர் மகாராஜன், பகுதி எம்ஜிஆர் மன்ற தலைவர் எம்ஜிஆர் கணேசன், வட்ட செயலாளர் தனராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல்லா ஹாசன், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் சபிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அண்ணா பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.