தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
தூத்துக்குடி, பிப்ரவரி 25:
தூத்துக்குடி ஹோம் சயின்ஸ் கல்லூரியில் தமிழக முதல்வரின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி 83 மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
விழாவில் மேயர் பேசுகையில்,... "கணினியின் மூலம் உலகம் முழுவதும் உள்ள அறிவு இன்று நம் கைகளில் வந்துவிட்டது. இது கடுமையான போட்டி நிறைந்த உலகம். கல்வி என்பது வெறும் மதிப்பெண் பெறுவதற்கல்ல — அறிவை வளர்ப்பதற்கானது. பெற்றோர்கள் கனவுகளுடன் பிள்ளைகளை கல்வி கற்க அனுப்புகிறார்கள். அந்தக் கனவை நாம் எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்று சிந்திக்க வேண்டும்" என்றார்.
உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து பேசிய மேயர்,...
தூத்துக்குடியில் பெண்களுக்கென்று மூன்று தனிப்பட்ட பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை தவிர்க்கவும், மரங்கள் நடவும், சமூக பொறுப்புணர்வுடன் வாழவும் மாணவிகளை வலியுறுத்தினார்.
"எந்தப் பதவியில் இருப்பது முக்கியமல்ல — அந்தப் பதவியில் இருந்து எதை முன்னேற்றினோம் என்பதே முக்கியம். இந்த மேயர் பதவி எனக்கு திருப்தி அளிக்கிறது. இது ஒரு கடல் போன்றது. முடியாதது எதுவும் இல்லை — முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். அதற்கு என்னையே எடுத்துக்கொள்ளலாம்" என்று உரையாற்றினார்.
விழாவிற்கு முன்னதாக மாணவிகளிடம் "மடிக்கணினி கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று மேயர் கேட்டதற்கு, "ப்ராஜெக்ட் செய்வோம்!" என்று மாணவிகள் உற்சாகமாக பதிலளித்தனர்.
விழாவில் கல்லூரி முதல்வர் ரூபா, துணை முதல்வர் மதுரவள்ளி, செயலாளர் ரோசாகுட்டி, உதவி பேராசிரியர் மாரிதங்கம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.















