வியாழன், 29 ஜனவரி, 2026

தூத்துக்குடியில் அதிமுக முதற்கட்ட தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு – எஸ்.பி. சண்முகநாதன் தொடங்கி வைத்தார்

🖤❤️ வெற்றிக்கான பயணம் தூத்துக்குடியில் தொடங்கியது!

#AIADMK #Thoothukudi #Election2026 #SPShanmuganathan #அதிமுக #தூத்துக்குடி #மக்களுடன்_அதிமுக #தேர்தல்2026

தூத்துக்குடி, ஜனவரி 29:

இன்று (29.01.2026) காலை 10.00 மணிக்கு தூத்துக்குடியில் அதிமுக சார்பில் முதற்கட்ட தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வை தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன்   தூத்துக்குடி சிவன் கோவில் முன்பிருந்து துவங்கி வைத்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

thoothukudileaks


வ உ சி சந்தை அந்தோனியார் கோவில் தூத்துக்குடி பூ சந்தை பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


பொதுமக்களிடம் நேரடியாக தேர்தல் அறிக்கையை வழங்கி, அதிமுகவின் மக்கள் நலத் திட்டங்களை எடுத்துரைத்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர்.
💪 மக்கள் நலமே முதன்மை – அதிமுக
video பார்க்க 

நிகழ்வின்போது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டு, அதிமுக ஆட்சியின் சாதனைகள் நினைவூட்டப்பட்டன.

இந்த நிகழ்வு தூத்துக்குடி நகரில் தேர்தல் பரப்புரையின் தொடக்கமாக அமைந்தது.

இச் செய்தியில் புகைப்படம் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 


புதன், 28 ஜனவரி, 2026

திருவானைக்காவலில் இந்து சமய பாதுகாப்பு மாநாடு: மத்திய அரசுக்கு 10 கோரிக்கைகள்

திருச்சி, ஜனவரி 28 - 

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் கோதை நாச்சியார் மண்டபத்தில் இந்து சேனா மற்றும் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் இணைந்து நடத்திய இந்து சமய பாதுகாப்பு மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

கோவை சிரவை ஆதீனம் 4ஆம் பட்டம் குருமகா சந்நிதானம் திருப்பெருந்திரு இராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமை ஏற்று திருவிளக்கு ஏற்றி மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

thoothukudileaks

thoothukudileaks


 மன்னார்குடி ஶ்ரீ சம்பத்குமார இராமானுஜ ஜீயர் சுவாமிகள், காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தின் மடாதிபதி சுவாமி தர்ஷினி அனுபவானந்த சுவாமிகள், அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்தின் நிறுவனர் தவத்திரு சுவாமி இராமானந்தா மகராஜ், இந்து சேனா தேசிய பேரியக்கத்தின் தேசிய தலைவர் விஷ்ணு குப்தா உள்ளிட்ட பல ஆன்மீகத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.


கலை நிகழ்ச்சிகளும் விருது வழங்கலும்

மாநாட்டில் பாரம்பரிய பஜனை, இசைக்கச்சேரி, பரதநாட்டியம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. இந்து சமயத்தின் சேவை பணிகளை செய்து வரும் ஆன்மீக அன்பர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

thoothukudileaks

thoothukudileaks


மத்திய அரசுக்கு 10 முக்கிய கோரிக்கைகள்

மாநாட்டில் இந்து சமய மக்களின் சார்பாக மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அவற்றுள் முக்கியமானவை:

• இந்து சமய கோயில்களில் பக்தர்களிடையே வேற்றுமை உருவாக்கும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்

• இந்து சமயத்தைப் பாதுகாக்கவும் இந்து மக்களின் நலனுக்காகவும் இந்து சமய நல வாரியம் உடனே அமைக்க வேண்டும்

• இந்திய கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து ஆதீனங்கள், மடாதிபதிகள், ஜீயர், ஆன்மீக அமைப்புகளின் தலைமையில் நிர்வாகம் நடத்த சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும்

• கோயில் திருவிழாக்களில் அந்தந்த மாநிலத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கட்டாயம் நடத்த வேண்டும்

• இந்து சமயம் சார்ந்த கல்வியை பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் கொண்டுவர வேண்டும்

• பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான, சிதிலமடைந்த கோயில்களை உடனடியாக வழிபாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்

• சங்கராச்சாரியார்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள், ஜீயர் மற்றும் துறவியர்களுக்கு இலவச ரயில்வே சிறப்பு பயண பாஸ் வழங்க வேண்டும்

• மடங்களின் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து சொத்துக்களை மீட்க வேண்டும்

• பிரசித்தி பெற்ற இந்து கோயில்களில் வரலாற்று அருங்காட்சியகங்களை அமைக்க வேண்டும்

• கோயில்கள் சார்ந்த குளங்கள் மற்றும் நதிகளின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும்

இந்த மாநாட்டை இந்து சேனா மாநில தலைவர் மற்றும் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஆலோசனையின் பேரில் மாநில மற்றும் தேசிய பொறுப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


தூத்துக்குடி மாவட்ட மகளீர் பூப்பந்தாட்ட போட்டி புனித மரியன்னை கல்லூரி மாணவியர் முதல் பரிசு

தூத்துக்குடி, ஜனவரி :

தூத்துக்குடி தபால் தந்தி காலனி மக்கள் நல மன்றம், ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய தூத்துக்குடி மாவட்ட மகளீர் பூப்பந்தாட்ட போட்டி தூத்துக்குடி தபால் தந்தி காலனி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

லீக் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் அனைத்து அணிகளையும் வென்று கூடுதல் புள்ளிகளுடன் புனித மரியன்னை (St. Mary’s College) கல்லூரி மாணவியர் அணி முதல் பரிசை தட்டி சென்றது.

இரண்டாம் பரிசு – ஹோலி கிராஸ் பெண்கள் மேல் நிலை பள்ளி மாணவியர் அணியும்,

மூன்றாம் பரிசு – APCV மகாலட்சுமி கல்லூரி மாணவியர் அணியும் பெற்றனர்.

முதல் பரிசிற்கான கோப்பையை தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கண்ணன் அவர்கள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்தி பூப்பந்தாட்ட வீராங்கனைகளை ஊக்குவித்து வரும் ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் தூத்துக்குடியில் முன்னணி அமைப்பாக செயல்படுகிறது என பாராட்டினார்.

thoothukudileaks


முதல் பரிசு பெற்ற புனித மரியன்னை கல்லூரி அணியின் கேப்டன் மாளவிகா பேசுகையில்,

“எங்கள் கல்லூரி முதல்வர் அருட் சகோதரி ஜெசி பர்ணாந்து அவர்கள் வழங்கிய ஊக்கமும், பயிற்சியாளர் பாலசிங் அவர்கள் கொடுத்த பயிற்சியும் தான் இந்த வெற்றிக்குக் காரணம். 2026ஆம் ஆண்டின் முதல் மாதத்திலேயே இது எங்களது இரண்டாவது வெற்றி. இதற்கு முன்பு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியிலும் நாங்கள் சாம்பியன் பட்டம் பெற்றோம்” என தெரிவித்தார்.

thoothukudileaks


மேலும் தன்னுடன் சிறப்பாக விளையாடிய சந்தியா, அனி, உமா மகேஸ்வரி, ஸ்ரீமாரி தங்கம், மாலதி ஆகியோருக்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

 

ஞாயிறு, 25 ஜனவரி, 2026

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் 77வது குடியரசு தின விழா முன்னாள் கவுன்சிலர் கோட்டு ராஜா பரபரப்பு பேச்சு

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜனவரி 26 :

இந்திய குடியரசின் 77வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது

thoothukudileaks


thoothukudileaks

thoothukudileaks


விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர்  அன்னலட்சுமி கோட்டு ராஜா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேசிய கீதம் முழங்க அனைவரும் கொடியை நோக்கி மரியாதை செலுத்தினர்.

https://youtube.com/shorts/5kayK-3eY8o?si=6LdsKFIsRS78WvWL குடியரசு தின விழாவில் தூத்துக்குடி Ex கவுன்சிலர் கோட்டு ராஜா பரபரப்பு பேச்சு

இந்த நிகழ்வில் மேற்கு மண்டல உதவி ஆணையர் காந்திமதி, S.O. ராஜபாண்டி, A.W. லெனின், A.E. ஜெயபிரசாந்த், A.E. ராகவி, முன்னாள் கவுன்சிலர் கோட்டு ராஜா, மாமன்ற உறுப்பினர்கள், மேற்கு மண்டல மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

குடியரசு தினத்தை முன்னிட்டு மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் முழுவதும் திருவிழா போல் அலங்கரிக்கப்பட்டு, நாட்டுப்பற்று மிக்க சூழலில் விழா சிறப்பாக நடைபெற்றது.


தூத்துக்குடி மாநகராட்சியில் 77வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது

தூத்துக்குடி, ஜனவரி 26 :

தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இந்திய குடியரசின் 77வது ஆண்டு நிறைவை முன்னிட்டு குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ. ஜெகன்  தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேசிய கீதம் முழங்க அனைவரும் கொடியை நோக்கி மரியாதை செலுத்தினர்.

thoothukudileaks


விழாவில் சி. ப்ரியங்கா, இ.ஆ.ப., தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.





குடியரசு தினத்தை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகம் முழுவதும் திருவிழா போல் அலங்கரிக்கப்பட்டு காணப்பட்டது. திருவள்ளுவர் ஆண்டு 2057, தை மாதம் 12ஆம் தேதியன்று நடைபெற்ற இந்த விழாவில், இந்திய குடியரசின் 77வது ஆண்டு நிறைவை தூத்துக்குடி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடினர்.

வியாழன், 22 ஜனவரி, 2026

தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி மகளிர் பூப்பந்தாட்ட அணி மீண்டும் சாம்பியன்

tamil nadu news update photo news by Arunan journalist 

தூத்துக்குடி: ஜன 23

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிர் பூப்பந்தாட்ட போட்டியில் புனித மரியன்னை கல்லூரி (St. Mary's College) மாணவிகள் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை வெற்றிகரமாக தக்கவைத்துக் கொண்டனர்.

thoothukudileaks

thoothukudileaks


தூத்துக்குடி A.P.C.V. மகாலக்ஷ்மி கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியில், கடந்த ஆண்டு கோப்பையை வென்ற புனித மரியன்னை கல்லூரி அணி, இம்முறையும் ஆரம்பம் முதல் இறுதி வரை அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் பரிசை கைப்பற்றியது.

காணொளி 

பயிற்சியாளர் பாலசிங் அவரின் திறமையான வழிகாட்டுதலின் கீழ், கேப்டன் செல்வி மாளவிகா தலைமையில் சசி, அனி, முவேதா, உமா மகேஸ்வரி, மாலதி, கயல்விழி, ஸ்ரீமாரி தங்கம் மற்றும் பவித்ரா ஆகியோர் அடங்கிய அணி சிறப்பான கூட்டணி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

வெற்றி பெற்ற அணியினரை பாராட்டிய புனித மரியன்னை கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ஜெசி பர்ணாந்து, வீரர்களின் கடின உழைப்பு மற்றும் பயிற்சியாளரின் அர்ப்பணிப்புக்கு பெருமை தெரிவித்தார்.

பயிற்சியாளர் பாலசிங் பேசுகையில், "கேப்டன் மாளவிகா தலைமையில் அனைத்து வீரர்களும் அயராது பயிற்சி செய்த பலனே இந்த வெற்றி" என்று கூறினார்.

அணித் தலைவர் மாளவிகா தனது பேட்டியில்

"கல்லூரி முதல்வரின் ஊக்கமும், பயிற்சியாளர் பாலசிங் - சிறந்த பயிற்சியும் எங்களது வெற்றிக்கு வழிவகுத்தது. 

அனைத்து வீரர்களும் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுത்தியதால் இது சாத்தியமானது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


இந்த தொடர் வெற்றி புனித மரியன்னை கல்லூரியின் விளையாட்டு சிறப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.


புகைப்பட வீடியோ வில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

தூத்துக்குடி விடுதலைப் போராட்ட வீரர் தேர்மாறனின் 218வது நினைவேந்தல் கூட்டம்

தூத்துக்குடி: டிசம்பர் 21

தூத்துக்குடி விடுதலைப் போராட்டத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை மற்றும் மருது சகோதரர்களின் புரட்சிப் படைக்கு ஆயுதங்கள் வழங்கி உதவிய வீரர் தேர்மாறனின் 218வது நினைவேந்தல் கூட்டம், அவரது கல்லறை வளாகத்தில் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நினைவேந்தல் கூட்டத்திற்கு வில்சன் குரூப் ஆஃப் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் சேசைய்யா வில்லவராயர் தலைமை வகித்தார்.

thoothukudileaks

 



கோரமண்டல் சமூக நற்பணி மன்றத்தின் முன்னாள் தலைவர் பகவத்சிங், அன்னை பரதர் நலச்சங்கத்தின் தலைவர் சேவியர் வாஸ், பேராசிரியை பாத்திமாபாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் டிலெக்டா ரவி, திரேஸ்புரம் ராஜாபோஸ்ரீகன், ஜோபாய் கோமஸ், டெரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குரூஸ் பர்னாந்து நற்பணி மன்றத்தின் தலைவர் ஹெர்மன் கில்டு வரவேற்றார். அன்னை பரதர் நலச்சங்கத்தின் பொருளாளர் காஸ்ட்ரோ தொகுத்து வழங்கினார்.

அப்போது சேசைய்யா வில்லவராயர், தமிழக வெற்றிக் கழகத்தின் அஜிதா ஆக்னலின் களப்பணிகளைப் பாராட்டிப் பேசினார். மேலும், தேர்மாறனின் பிறந்த நாளை ஆவணங்களின் அடிப்படையில் உறுதி செய்து, அடுத்தாண்டு முதல் ஒரே நாளில் அனைவரும் ஒன்றுகூடி கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து த.வெ.க. அஜிதா ஆக்னல் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

thoothukudileaks


நிகழ்ச்சியில் சசிகுமார், பெல்லா, ரோக் பரதர், நெய்தல் அண்டோ, பெனோ, துறைவன் பாண்டியன், சேவியர் சில்வா, எழு கடல்துறை மைந்தர்கள் சார்பில் எல்சியாஸ், பரத குல எழுச்சிப் போராளிகள் சார்பில் பிரசாத், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


முடிவில் தேர்மாறன் நற்பணி மன்றத்தின் தலைவர் எட்வின் பாண்டியன் நன்றியுரை கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேர்மாறன் நற்பணி மன்றத்தாரும், தேர்மாறன் மணிமண்டபம் அமைப்புக் குழுவினரும் சிறப்பாக செய்திருந்தனர்.