வியாழன், 9 ஏப்ரல், 2026

தேர்தல் 2026 ல் வேட்பாளர்கள் அதிமுக திமுக எந்தெந்த சமூகத்திற்கு எவ்வளவு முன்னுரிமை? முழு விவரம் பட்டியல் !!!

 thoothukudileaks 9-3-2026                


அதிமுக 167 வேட்பாளர்கள்.. 

எந்தெந்த சமூகத்திற்கு எவ்வளவு முன்னுரிமை?-

முழு விவரம் இதோ!


2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 167 தொகுதிகளுக்கான தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த வேட்பாளர் பட்டியல், மண்டல வாரியான செல்வாக்கு மற்றும் சாதிய ரீதியிலான வாக்கு வங்கிகளைக் கணக்கில் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கிறார் கள். 

குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் கவுண்டர் சமூகத்தினருக்கும், வட தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கும், தென் தமிழ்நாட்டில் மற்ற சமூகத்தினருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.


இந்தத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கப்போகும் அந்த 167 வேட்பாளர்கள் யார்? அவர்களின் சமூகப் பின்னணி என்ன?  

thoothukudileaks



அதிமுகவின் 167 வேட்பாளர் பட்டியலில் சமூக ரீதியிலான பங்கீடு:

வன்னியர்: 32


கொங்கு வேளாள கவுண்டர்: 28


முக்குலத்தோர் (கள்ளர், மறவர், அகமுடையார்): 26


தலித் (ஆதிதிராவிடர், தேவேந்திர குல வேளாளர், அருந்ததியர்): 25.    


முதலியார் /பிள்ளை 12

நாடார் : 12

யாதவர்: 9

நாயுடு / நாயக்கர்: 7

மீனவர்: 5

உடையார்: 4

பழங்குடியினர் (ST): 2

ரெட்டியார்: 1

படுகர்: 1

மூப்பனார்: 1

முஸ்லிம்: 1

பிராமணர்: 1

எடப்பாடி : எடப்பாடி மு. பழனிசாமி (கொங்கு வேளாள கவுண்டர்)

வேப்பனஹள்ளி : கே.பி. முனுசாமி (வன்னியர்)

திண்டுக்கல் : திண்டுக்கல் ஊ. சீனிவாசன் (முக்குலத்தோர் - பிரமலைக் கள்ளர்)

நத்தம் : நத்தம் இரா. விசுவநாதன் (முக்குலத்தோர் - கள்ளர்)

தொண்டாமுத்தூர் : எஸ்.பி.வேலுமணி (கொங்கு வேளாள கவுண்டர்)

குமாரபாளையம் : பி. தங்கமணி (கொங்கு வேளாள கவுண்டர்)

ராயபுரம் : டி.ஜெயக்குமார் (மீனவர் / பட்டினவர்)

மைலம் : சி.வி.சண்முகம் (வன்னியர்)

மதுரை மேற்கு : செல்லூர் ராஜூ (முக்குலத்தோர்)

பாலக்கோடு : கே.பி.அன்பழகன் (வன்னியர்)

நன்னிலம் : சு. காமராஜ் (முக்குலத்தோர் - அகமுடையார்)


வேதாரண்யம் : ஓ.எஸ்.மணியன் (முக்குலத்தோர் - அகமுடையார்)


விராலிமலை : டாக்டர் சி. விஜயபாஸ்கர் (முக்குலத்தோர் - கள்ளர்)


கோவில்பட்டி : கடம்பூர் ராஜூ (நாயக்கர் / கம்பளத்தார்)


திருமங்கலம் : ஆர்.பி.உதயகுமார் (முக்குலத்தோர் - கள்ளர்)


சிவகாசி : கே.டி.ராஜேந்திரபாலாஜி (நாடார்)


மதுரவாயல் : பா.பென்ஜமின் (கிறிஸ்தவ நாடார்)


கலசபாக்கம் : அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி (வன்னியர்)


திருப்பரங்குன்றம் : வி.வி.ராஜன் செல்லப்பா (முக்குலத்தோர் - மறவர்)


பவானி : கே.சி.கருப்பணன் (கொங்கு வேளாள கவுண்டர்)


ஜோலார்பேட்டை : கே.சி.வீரமணி (வன்னியர்)


கரூர் : எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கொங்கு வேளாள கவுண்டர்)


அரியலூர் : தாமரை எஸ்.ராஜேந்திரன் (வன்னியர்)


கும்மிடிப்பூண்டி : சுதாகர் (வன்னியர்)


திருத்தணி : கோ.ஹரி (முதலியார்)


பொன்னேரி (தனி) : சிறுணியம் பலராமன் (தலித் / ஆதிதிராவிடர்)


திருவள்ளூர் : பி.வி.ரமணா (வன்னியர்)


மாதவரம் : மூர்த்தி (யாதவர்)


திருவொற்றியூர் : கே.குப்பன் (மீனவர்)


ஸ்ரீபெரும்புதூர் (தனி) : கே.பழனி (தலித் / ஆதிதிராவிடர்)


தாம்பரம் : சிட்லபாக்கம் ராஜேந்திரன் (முதலியார்)


செங்கல்பட்டு : கஜா என்கிற கஜேந்திரன் (வன்னியர்)


செய்யூர் (தனி) : ராஜசேகர் (தலித் / ஆதிதிராவிடர்)


மதுராந்தகம் (தனி) : மரகதம் குமரவேல் (தலித் / ஆதிதிராவிடர்)


காஞ்சிபுரம் : சோமசுந்தரம் (முதலியார்)


அரக்கோணம் (தனி) : சு.ரவி (தலித் / ஆதிதிராவிடர்)


காட்பாடி : ராமு (வன்னியர்)


ஆற்காடு : எஸ்.எம். சுகுமார் (வன்னியர்)


வேலூர் : எஸ்ஆர்கே அப்பு (முதலியார்)


அணைக்கட்டு : வேலழகன் (வன்னியர்)


குடியாத்தம் (தனி) : பரிதா புருஷோத்தமன் (தலித் / ஆதிதிராவிடர்)


வாணியம்பாடி : செந்தில்குமார் (வன்னியர்)


ஆம்பூர் : ஆர்.வெங்கடேசன் (வன்னியர்)


ஊத்தங்கரை (தனி) : டி.எம்.தமிழ்ச்செல்வம் (தலித் / ஆதிதிராவிடர்)


பர்கூர் : இ.சி. கோவிந்தராசன் (வன்னியர்)


கிருஷ்ணகிரி : கே.அசோக்குமார் (வன்னியர்)


ஓசூர் : பி.பாலகிருஷ்ண ரெட்டி (ரெட்டியார்)


பாப்பிரெட்டிபட்டி : மரகதம் வெற்றிவேல் (வன்னியர்)


அரூர் (தனி) : சம்பத்குமார் (தலித் / ஆதிதிராவிடர்)


செங்கம் (தனி) : டி.எஸ்.வேலு (தலித் / ஆதிதிராவிடர்)


கீழ்பென்னாத்தூர் : எஸ்.ராமசந்திரன் (யாதவர்)


ஆரணி : எல்.ஜெயசுதா (முதலியார்)


செய்யார் : முக்கூர் சுப்பிரமணியன் (வன்னியர்)


வந்தவாசி (தனி) : ராணி (தலித் / ஆதிதிராவிடர்)


திண்டிவனம்(தனி) : அர்ஜுனன் (தலித் / ஆதிதிராவிடர்)


வானூர் (தனி) : பி.முருகன் (தலித் / ஆதிதிராவிடர்)


திருக்கோவிலூர் : எஸ்.பழனிசாமி (உடையார்)


உளுந்தூர்பேட்டை : குமரகுரு (உடையார்)


சங்கராபுரம் : ராகேஷ் (வன்னியர்)


கள்ளக்குறிச்சி (தனி) : ராஜீவ் காந்தி (தலித் / ஆதிதிராவிடர்)


கங்கவல்லி (தனி) : நல்லதம்பி (தலித் / ஆதிதிராவிடர்)


ஆத்தூர் (தனி) : ஜெயசங்கரன் (தலித் / ஆதிதிராவிடர்)


ஏற்காடு (எஸ்டி) : உஷாராணி (பழங்குடியினர் / மலையாளி)


ஓமலூர் : ஆர்.மணி (வன்னியர்)


மேட்டூர் : ஜி. வெங்கடாசலம் (வன்னியர்)


சங்ககிரி : வெற்றிவேல் (கொங்கு வேளாள கவுண்டர்)


சேலம் (தெற்கு) : வினோத் (வன்னியர்)


வீரபாண்டி : டாக்டர் பாலாஜிசுகுமார் (கொங்கு வேளாள கவுண்டர்)


சேந்தமங்லம் (எஸ்டி) : சந்திரசேகரன் (பழங்குடியினர்)


நாமக்கல் : ஸ்ரீதேவி (கொங்கு வேளாள கவுண்டர்)


பரமத்தி வேலூர் : எஸ். சேகர் (கொங்கு வேளாள கவுண்டர்)


திருச்செங்கோடு : ஆர்.சந்திரசேகர் (கொங்கு வேளாள கவுண்டர்)


ஈரோடு கிழக்கு : ஆர்.மனோகரன் (கொங்கு வேளாள கவுண்டர்)


தாராபுரம் (தனி) : சத்தியபாமா (தலித் / ஆதிதிராவிடர்)


காங்கேயம் : என்எஸ்என் நடராஜ் (கொங்கு வேளாள கவுண்டர்)


பெருந்துறை : எஸ்.ஜெயக்குமார் (கொங்கு வேளாள கவுண்டர்)


அந்தியூர் : ஹரிபாஸ்கர் (கொங்கு வேளாள கவுண்டர்)


கோபிசெட்டிபாளையம் : வி.பி.பிரபு (கொங்கு வேளாள கவுண்டர்)


பவானிசாகர் (தனி) : பண்ணாரி (தலித் / ஆதிதிராவிடர்)


கூடலூர் (தனி) : பொன்.ஜெயசீலன் (தலித் / ஆதிதிராவிடர்)


குன்னூர் : ராமு (படுகர்)


மேட்டுப்பாளையம் : ஓ.கே.சின்னராஜ் (கொங்கு வேளாள கவுண்டர்)


திருப்பூர் (வடக்கு) : எம்.எஸ்.எம்.ஆனந்தன் (கொங்கு வேளாள கவுண்டர்)


பல்லடம் : பல்லடம் பரமசிவம் (கொங்கு வேளாள கவுண்டர்)


சூலூர் : வி.பி.கந்தசாமி (கொங்கு வேளாள கவுண்டர்)


கவுண்டம்பாளையம் : பிஆர்ஜி அருண்குமார் (கொங்கு வேளாள கவுண்டர்)


கோயமுத்தூர் தெற்கு : அம்மன் அர்ச்சுணன் (நாடார்)


சிங்காநல்லூர் : கே.ஆர். ஜெயராம் (நாயுடு)


கிணத்துக்கடவு : செ.தாமோதரன் (கொங்கு வேளாள கவுண்டர்)


பொள்ளாச்சி : பொள்ளாச்சி ஜெயராமன் (கொங்கு வேளாள கவுண்டர்)


வால்பாறை (தனி) : லட்சுமண சிங் (தலித் / ஆதிதிராவிடர்)


உடுமலைப்பேட்டை : உடுமலை ராதாகிருஷ்ணன் (நாயுடு)


பழனி : ரவி மனோகரன் (முக்குலத்தோர்)


ஆத்தூர் : விஸ்வநாதன் (முக்குலத்தோர்)


நிலக்கோட்டை (தனி) : தேன்மொழி (தலித் / தேவேந்திர குல வேளாளர்)


வேடசந்தூர் : வி.பி.பி.பரமசிவம் (கொங்கு வேளாள கவுண்டர்)


அரவக்குறிச்சி : கே.செல்வக்குமார் (கொங்கு வேளாள கவுண்டர்)


கிருஷ்ணராயபுரம் (தனி) : டாக்டர் எஸ் திவ்யா (தலித் / ஆதிதிராவிடர்)


குளித்தலை : எஸ்.கருணாகரன் (கொங்கு வேளாள கவுண்டர்)


மணப்பாறை : பி.எல்.விஜயகுமார் (உடையார்)


ஸ்ரீரங்கம் : ஆர்.மனோகரன் (முக்குலத்தோர்)


திருச்சி (கிழக்கு) : ராஜசேகரன் (நாயுடு)


திருவெறும்பூர் : ப.குமார் (யாதவர்)


லால்குடி : லீமா ரோஸ் (கிறிஸ்தவ நாடார்)


முசிறி : யோகநாதன் (முக்குலத்தோர்)


துறையூர் (தனி) : இ. சரோஜா (தலித் / ஆதிதிராவிடர்)


பெرம்பலூர் (தனி) : இளம்பை ரா.தமிழ்ச்செல்வன் (தலித் / ஆதிதிராவிடர்)


நெய்வேலி : சொரத்தூர் ராஜேந்திரன் (வன்னியர்)


பண்ருட்டி : கே.மோகன் (வன்னியர்)


കടலூர் : எம்.சி.சம்பத் (வன்னியர்)


குறிஞ்சிப்பாடி : புவனேந்திரன் (வன்னியர்)


புவனகிரி : அருண்மொழிதேவன் (வன்னியர்)


சிதம்பரம் : கே.ஏ.பாண்டியன் (வன்னியர்)


சீர்காழி (தனி) : ம.சக்தி (தலித் / ஆதிதிராவிடர்)


பூம்புகார் : எஸ்.பவுன்ராஜ் (வன்னியர்)


நாகப்பட்டினம் : தங்க.கதிரவன் (மீனவர்)


திருத்துறைப்பூண்டி (தனி) : பாலதண்டாயுதம் (தலித் / ஆதிதிராவிடர்)


திருவிடைமருதூர் (தனி) : இளமதி சுப்பிரமணியன் (தலித் / ஆதிதிராவிடர்)


பாபநாசம் : சண்முகபிரபு (மூப்பனார் / வன்னியர்)


ஒரத்தநாடு : எம்.சேகர் (முக்குலத்தோர்)


பட்டுக்கோட்டை : சி.வி.சேகர் (முக்குலத்தோர்)


பேராபூரணி : கோவி.இளங்கோ (முக்குலத்தோர்)


திருமயம் : பி.கே.வைரமுத்து (முக்குலத்தோர்)


சிவகங்கை : பி.ஆர்.செந்தில்நாதன் (முக்குலத்தோர்)


மேலூர் : பெரியபுள்ளான் (எ) செல்வம் (முக்குலத்தோர்)


மதுரை கிழக்கு : மாங்குளம் மகேந்திரன் (முக்குலத்தோர்)


சோழவந்தான் (தனி) : கி.மாணிக்கம் (தலித் / தேவேந்திர குல வேளாளர்)


மதுரை வடக்கு : டாக்டர் பி.சரவணன் (யாதவர்)


உசிலம்பட்டி : ஐ.மகேந்திரன் (முக்குலத்தோர்)


ஆண்டிப்பட்டி : லோகிராஜன் (முக்குலத்தோர்)


போடிநாயக்கனூர் : வி.டி.நாராயணசாமி (முக்குலத்தோர்)


கம்பம் : ஜக்கையன் (முக்குலத்தோர்)


ஸ்ரீவில்லிபுத்தூர் : சந்திரபிரபா (தலித் / தேவேந்திர குல வேளாளர்)


விருதுநகர் : வி.ஜி.கணேசன் (நாடார்)


அருப்புக்கோட்டை : சேதுபதி (முக்குலத்தோர்)


பரமக்குடி (தனி) : எஸ்.முத்தையா (தலித் / தேவேந்திர குல வேளாளர்)


திருவாடானை : கீர்த்திகா முனியசாமி (முக்குலத்தோர்)


தூத்துக்குடி : சி.த.செல்லப்பாண்டியன் (நாடார்)


ஸ்ரீவைகுண்டம் : எஸ்.பி.சண்முகநாதன் (நாடார்)


சங்கரன்கோவில் (தனி) : திலிபன் ஜெய்சங்கர் (தலித் / ஆதிதிராவிடர்)


கடையநல்லூர் : கிருஷ்ணமுரளி (யாதவர்)


தென்காசி : செல்வமோகன்தாஸ் (நாடார்)


ஆலங்குளம் : கே.ஆர்.பி. பிரபாகரன் (நாடார்)


திருநெல்வேலி : தச்சை கணேசராஜா (யாதவர்)


அம்பாசமுத்திரம் : இசக்கி சுப்பையா (யாதவர்)


பாளையங்கோட்டை : சையது சுல்தான் சம்சுதீன் (முஸ்லிம்)


கன்னியாகுமரி : தளவாய்சுந்தரம் (வெள்ளாளர் / பிள்ளை)


ஆயிரம் விளக்கு : வளர்மதி (முதலியார்)


அண்ணா நகர் : கோகுல இந்திரா (உடையார்)


சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி : ஆதிராஜாராம் (நாடார்)


திட்டக்குடி : முருகுமாறன் (வன்னியர்)


துறைமுகம் : ராயபுரம் மனோ (மீனவர்)


விருகம்பாக்கம் : விருகை ரவி (யாதவர்)


தி.நகர் : சத்தியநாராயணன் (நாயுடு)


வேளச்சேரி : அசோக் (முதலியார்)


சோழிங்கநல்லூர் : கேபி கந்தன் (வன்னியர்)


ஆர்.கே.நகர் : ராஜேஷ் (நாடார்)


வில்லிவாக்கம் : விஜயகுமார் (யாதவர்)


திருச்சுழி : ராஜவர்மன் (முக்குலத்தோர்)


ஆலந்தூர் : சரவணன் (முதலியார்)


கொளத்தூர் : சந்தான கிருஷ்ணன் (யாதவர்)


எழும்பூர் : அபிஷேக் ரங்கசாமி (தலித் / ஆதிதிராவிடர்)


ஆலங்குடி : தன விமல் (முக்குலத்தோர்)


திமுகவில் ....

எந்தெந்த சமூகங்களுக்கு DMK வேட்பாளர் பட்டியலில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம்.


தமிழக சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், எந்த சமூகத்தவர்களுக்கு அதிக சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன? 

திமுக உதயசூரியன் சின்னத்தில் 174 வேட்பாளர்கள் களத்தில் 

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 164 தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்குகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 176 வேட்பாளர்கள் திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்தின் கீழ் போட்டியிட உள்ளனர். திமுக வேட்பாளர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டு, வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து, பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.


திமுக வேட்பாளர் பட்டியல்

முதல்வர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். திமுக வேட்பாளர் பட்டியலில் சமூக நீதி அடிப்படையில் பல்வேறு சமூகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட செயலாளர்கள் சமூக கணக்கீட்டின்படி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.



திமுக வேட்பாளர் பட்டியலில் சமூக ரீதியிலான பங்கீடு

வன்னியர்: 27

கொங்கு வேளாள கவுண்டர்: 23

முக்குலத்தோர் (கள்ளர், மறவர், அகமுடையார்): 21

ஆதிதிராவிடர் (பறையர்): 15

தேவேந்திர குல வேளாளர் : 6

அருந்ததியர் : 3. 

முதலியார் பிள்ளை/ வெள்ளாளர் /இசை வேளாளர்: 16

நாயுடு / நாயக்கர்: 14

நாடார் 10


ரெட்டியார்: 5


முத்தரையர்: 4

துளுவ வேளாளர்: 4

உடையார்: 3


ஒக்கலிக கவுடா: 3

யாதவர்: 2

பழங்குடியினர் (ST): 2

பருவத ராஜகுலம்: 1

படுகர்: 1

இஸ்லாமியர்: 4


தென் மண்டலம்

164 வேட்பாளர்களின் சமூகப் பின்னணி விவரம்:


கன்னியாகுமரி - ரெ.மகேஷ் (நாடார்)


நாகர்கோவில்- எஸ்.ஆஸ்டின் (நாடார்)


ராதாபுரம் - மு.அப்பாவு (நாடார்)


பாளையங்கோட்டை - மு.அப்துல் வஹாப் (இஸ்லாமியர்)


திருநெல்வேலி - சு.சுப்பிரமணியன் (வேளாளர்)


ஆலங்குளம் - பால் மனோஜ் பாண்டியன் (நாடார்)


தென்காசி - கலை கதிரவன் (நாடார்)


வாசுதேவநல்லூர் - ஈ.ராஜா (தேவேந்திர குல வேளாளர்)


கோவில்பட்டி - கா.கருணாநிதி (முக்குலத்தோர்)


ஒட்டபிடாரம் (தனி) - பி.எம்.ராமஜெயம் (தேவேந்திர குல வேளாளர்)


திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன் (நாடார்)


தூத்துக்குடி - கீதா ஜீவன் (நாடார்)


விளாத்திகுளம் - ஜி.வி.மார்கண்டேயன் (ரெட்டியார்)


முதுகுளத்தூர் - ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் (யாதவர்)


ராமநாதபுரம் - காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் (முக்குலத்தோர்)


பரமக்குடி (தனி) - கே.கே.கதிரவன் (தேவேந்திர குல வேளாளர்)


திருச்சுழி - தங்கம் தென்னரசு (முக்குலத்தோர்)


அருப்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (ரெட்டியார்)


சாத்தூர் - அ.கடற்கரை ராஜ் (நாயுடு)


ராஜபாளையம் - சௌ.தங்கப்பாண்டியன் (நாடார்)


கம்பம் - நா.ராமகிருஷ்ணன் (ஒக்கலிக கவுடா)


போடிநாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம் (முக்குலத்தோர்)


ஆண்டிப்பட்டி - ஆ.மகராஜன் (முக்குலத்தோர்)


திருமங்கலம் - சேடப்பட்டி மு.மணிமாறன் (முக்குலத்தோர்)


திருப்பரங்குன்றம் - கிருத்திகா தங்கபாண்டி (முக்குலத்தோர்)


மதுரை மேற்கு - ரகு பாலாஜி (முக்குலத்தோர்)


மதுரை மத்தி - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (வெள்ளாளர்)


மதுரை வடக்கு - கோ.தளபதி (நாயுடு)


சோழவந்தான் (தனி) - ஆ.வெங்கடேசன் (முக்குலத்தோர்)


மதுரை கிழக்கு - பி.மூர்த்தி (முக்குலத்தோர்)


மானாமதுரை (தனி) - ஆ.தமிழரசி ரவிக்குமார் (தேவேந்திர குல வேளாளர்)


திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன் (யாதவர்)


ஆலங்குடி - சிவ வீ மெய்யநாதன் (முத்தரையர்)


திருமயம் - எஸ்.ரகுபதி (செட்டியார்)


டெல்டா மண்டலம்

புதுக்கோட்டை - வை.முத்துராஜா (முக்குலத்தோர்)


விராலிமலை - கே.கே.செல்லபாண்டியன் (முக்குலத்தோர்)


பேராவூரணி - நா.அசோக்குமார் (முக்குலத்தோர்)


பட்டுக்கோட்டை - கா.அண்ணாதுரை (வெள்ளாளர்)


ஒரத்தநாடு - ஆர்.வைத்திலிங்கம் (முக்குலத்தோர்)


தஞ்சாவூர்- சண்.ராமநாதன் (இசை வேளாளர்)


திருவையாறு - துரை.சந்திரசேகரன் (முக்குலத்தோர்)


கும்பகோணம் - சாக்கோட்டை கா.அன்பழகன் (நாயுடு)


திருவிடைமருதூர் - கோவி.செழியன் (பறையர்)


திருவாரூர் - பூண்டி கே.கலைவாணன் (முக்குலத்தோர்)


மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா (முக்குலத்தோர்)


வேதாரண்யம் - மா.மீ.புகழேந்தி (முக்குலத்தோர்)


பூம்புகார் - நிவேதா முருகன் (வன்னியர்)


புவனகிரி - துரை கி.சரவணன் (வன்னியர்)


குறிஞ்சிப்பாடி- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (வன்னியர்)


நெய்வேலி - சபா.ராஜேந்திரன் (வன்னியர்)


திட்டக்குடி (தனி) - சி.வி.கணேசன் (பறையர்)


ஜெயங்கொண்டம் - க.சொ.க.கண்ணன் (வன்னியர்)


அரியலூர் - லதா பாலு (உடையார்)


குன்னம் - சா.சி.சிவசங்கர் (வன்னியர்)


பெரம்பலூர் (தனி) - எஸ்.டி.ஜெயலட்சுமி (பறையர்)


முசிறி - என்.எஸ்.கருணைராஜா (முத்தரையர்)


மண்ணச்சநல்லூர் - சீ.கதிரவன் (ரெட்டியார்)


லால்குடி - த.பாரிவள்ளல் (உடையார்)


திருவெறும்பூர் - அன்பில் மகேஸ் பொய்யாமொழி (முக்குலத்தோர்)


திருச்சி கிழக்கு - இனிகோ இருதயராஜ் (வெள்ளாளர்)


திருச்சி மேற்கு - கே.என்.நேரு (ரெட்டியார்)


ஸ்ரீரங்கம் - எஸ்.துரைராஜ் (முத்தரையர்)


கொங்கு மண்டலம்

குளித்தலை - சூரியனூர் அ.சந்திரன் (முத்தரையர்)


கிருஷ்ணராயபுரம் (தனி) - சி.கே.ராஜா (தேவேந்திர குல வேளாளர்)


கரூர் - ஆசி.எம்.தியாகராஜன் (கொங்கு வேளாளர் கவுண்டர்)


அரவக்குறிச்சி - மொஞ்சனூர் ஆர்.இளங்கோ (கொங்கு வேளாளர் கவுண்டர்)


வேடசந்தூர் - டி.சாமிநாதன் (ஒக்கலிக கவுடா)


திண்டுக்கல் - ஐ.பி.செந்தில்குமார் (முக்குலத்தோர்)


நிலக்கோட்டை (தனி) - நாகஜோதி (தேவேந்திர குல வேளாளர்)


ஆத்தூர் - இ.பெரியசாமி (முக்குலத்தோர்)


ஒட்டன்சத்திரம் -அர.சக்கரபாணி (கொங்கு வேளாளர் கவுண்டர்)


மடத்துக்குளம் - இரா. ஜெயராமகிருஷ்ணன் (கொங்கு வேளாளர் கவுண்டர்)


உடுமலைப்பேட்டை - மு.ஜெயகுமார் (செட்டியார்)


வால்பாறை (தனி) - ஆ.சுதாகர் (பறையர்)


கிணத்துக்கடவு - கே.வி.கே.எஸ்.சபரி கார்த்திகேயன் (கொங்கு வேளாளர் கவுண்டர்)


கோயமுத்தூர் தெற்கு - வி.செந்தில்பாலாஜி (கொங்கு வேளாளர் கவுண்டர்)


தொண்டாமுத்தூர் - என்.ஆர்.கார்த்தியேன் (கொங்கு வேளாளர் கவுண்டர்)


கோயமுத்தூர் வடக்கு - செந்தமிழ்செல்வன் (நாயுடு)


சூலூர் - தளபதி முருகேசன் (கொங்கு வேளாளர் கவுண்டர்)


பல்லடம் - க.செல்வராஜ் (கொங்கு வேளாளர் கவுண்டர்)


திருப்பூர் தெற்கு - ந.தினேஷ்குமார் (கொங்கு வேளாளர் கவுண்டர்)


அவினாசி (தனி) - டாக்டர். கோகிலா மணி (அருந்ததியர்)


மேட்டுப்பாளையம் - கவிதா கல்யாணசுந்தரம் (ஒக்கலிக கவுடா)


குன்னூர் - கே.எம்.ராஜூ (படுகர்)


கூடலூர் (தனி) - மு.திராவிடமணி (பறையர்)


கோபிச்செட்டிபாளையம் - என் நல்லசிவம் (கொங்கு வேளாளர் கவுண்டர்)


அந்தியூர் - எம்.சிவபாலன் (வன்னியர்)


பவானி - கே.ஏ.சேகர் (எ) கே.ஏ.சந்திரசேகர் (கொங்கு வேளாளர் கவுண்டர்)


பெருந்துறை - தோப்பு என்.டி.வெங்கடாசலம் (கொங்கு வேளாளர் கவுண்டர்)


காங்கயம் - மு.பெ.சாமிநாதன் (கொங்கு வேளாளர் கவுண்டர்)


தாராபுரம் (தனி) - இந்திராணி (அருந்ததியர்)


ஈரோடு மேற்கு - சு.முத்துசாமி (கொங்கு வேளாளர் கவுண்டர்)


குமாரபாளையம் - எஸ்.பாலு (கொங்கு வேளாளர் கவுண்டர்)


பரமத்திவேலூர் - கே.எஸ்.மூர்த்தி (கொங்கு வேளாளர் கவுண்டர்)


நாமக்கல் - ப.இராணி (கொங்கு வேளாளர் கவுண்டர்)


சேந்தமங்கலம் (தனி) - பி.பூமலர் (பழங்குடியினர்)


ராசிபுரம்(தனி) - மா.மதிவேந்தன் (அருந்ததியர்)


வீரபாண்டி - ஆ.கா.தருண் (வன்னியர்)


சேலம் தெற்கு - எம்.லோகநாதன் (வன்னியர்)


சேலம் வடக்கு - இரா.இராஜேந்திரன் (வன்னியர்)


சங்ககிரி - மு.மணிகண்டன் (வன்னியர்)


எடப்பாடி - காசி (கொங்கு வேளாளர் கவுண்டர்)


மேட்டூர் - மிதுன் சக்ரவர்த்தி (வன்னியர்)


ஏற்காடு (தனி) - டி.எம்.ரேவதி மாதேஸ்வரன் (பழங்குடியினர்)


கெங்கவல்லி (தனி) - கு.சின்னதுரை (பறையர்)


வடக்கு மண்டலம்

சங்கராபுரம் - தா உதயசூரியன் (உடையார்)


ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன் (பிள்ளைமார்)


உளுந்தூர்பேட்டை - ஜி.ஆர்.வசந்தவேல் (வன்னியர்)


திருக்கோயிலூர் - பொன்.கௌதமசிகாமணி (துளுவ வேளாளர்)


விக்கிரவாண்டி - அன்னியூர் சிவா (எ) அ.சிவசண்முகம் (வன்னியர்)


விழுப்புரம் - இரா.லட்சுமணன் (வன்னியர்)


வானூர் (தனி) - கௌதம் திராவிடமணி (பறையர்)


செஞ்சி- கே.எஸ்.மஸ்தான் (இஸ்லாமியர்)


வந்தவாசி (தனி) - எஸ்.அம்பேத்குமார் (பறையர்)


செய்யாறு - ஓ.ஜோதி (முதலியார்)


ஆரணி - மகாலட்சுமி கோவர்த்தனன் (முதலியார்)


கலசப்பாக்கம் -பெ.சு.தி.சரவணன் (முதலியார்)


கீழ்பென்னாத்தூர் - கு.பிச்சாண்டி (நாயுடு)


திருவண்ணாமலை - எ.வ.வேலு (நாயுடு)


செங்கம் - மு.பெ.கிரி (பறையர்)


அரூர் - அ. சண்முகம் (பறையர்)


பாப்பிரெட்டிப்பட்டி - பெ.பழனியப்பன் (கொங்கு வேளாளர் கவுண்டர்)


பாலக்கோடு - டி.என்.வி.செந்தில்குமார் (வன்னியர்)


ஓசூர் - எஸ்.ஏ. சத்யா (கவுடா)


வேப்பனஹள்ளி - பி.எஸ்.சீனிவாசன் (வன்னியர்)


பர்கூர் - தே.மதியழகன் (கொங்கு வேளாளர் கவுண்டர்)


திருப்பத்தூர் - அ.நல்லதம்பி (கொங்கு வேளாளர் கவுண்டர்)


ஜோலார்பேட்டை - கவிதா தண்டபாணி (வன்னியர்)


ஆம்பூர் - அ.செ.வில்வநாதன் (வன்னியர்)


கீழ்வைத்தினாங்குப்பம் (தனி) - ராஜேஸ்வரி மோகன்காந்தி (பறையர்)


அணைக்கட்டு - ஏ.பி.நந்தகுமார் (நாயுடு)


வேலூர் - ப.கார்த்திகேயன் (வன்னியர்)


ஆற்காடு - ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (நாயுடு)


ராணிப்பேட்டை - காந்தி (நாயுடு)


காட்பாடி - துரைமுருகன் (வன்னியர்)


காஞ்சிபுரம் - நித்யா சுகுமார் (முதலியார்)


உத்திரமேரூர் - க.சுந்தர் (வன்னியர்)


மதுராந்தகம் (தனி) - எஸ்.அமுலு பொன்மலர் (பறையர்)


செங்கல்பட்டு - எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி (முதலியார்)


தாம்பரம் - ஆர்.எஸ்.கிருத்திகாதேவி (ரெட்டியார்)


ஆலந்தூர் - தா.மோ.அன்பரசன் (முதலியார்)


சோழிங்கநல்லூர் - ச.அரவிந்த் ரமேஷ் (வன்னியர்)


மாதவரம் - எஸ்.சுதர்சனம் (வன்னியர்)


அம்பத்தூர் - அ.பு.பூர்ணிமா (நாயுடு)


மதுரவாயல் - காரம்பாக்கம் கணபதி (வன்னியர்)


ஆவடி - சா.மு.நாசர் (இஸ்லாமியர்)


பூந்தமல்லி - ஆ.கிருஷ்ணசாமி (பறையர்)


திருவள்ளூர் - வி.ஜி.ராஜேந்திரன் (முதலியார்)


கும்மிடிப்பூண்டி - டி.ஜெ. கோவிந்தராஜன் (நாயுடு)


சென்னை மாவட்டம்

மயிலாப்பூர் - த.வேலு (நாடார்)


தியாகராயநகர் - ராஜா அன்பழகன் (துளுவ வேளாளர்)


சைதாப்பேட்டை - மா.சுப்பிரமணியன் (பருவத ராஜகுலம்)


விருகம்பாக்கம் - பிரபாகர்ராஜா (நாடார்)


அண்ணா நகர் - நே.சிற்றரசு (துளுவ வேளாளர்)


ஆயிரம் விளக்கு - டாக்டர் எழிலன் நாகநாதன் (துளுவ வேளாளர்)


சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - உதயநிதி ஸ்டாலின் (இசை வேளாளர்)


துறைமுகம் - பி.கே.சேகர்பாபு (நாயுடு)


ராயபுரம் - சுபேர்கான் (இஸ்லாமியர்)


எழும்பூர் (தனி) - தமிழன் பிரசன்னா (பறையர்)


திரு.வி.க.நகர் (தனி) - கே.எஸ்.ரவிச்சந்திரன் (பறையர்)


வில்லிவாக்கம் - கார்த்திக் மோகன் (நாயுடு)


பெரம்பூர் - ஆர்.டி.சேகர் (முதலியார்)


டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - ஜே.ஜே.எபினேசர் (வன்னியர்)


கொளத்தூர் - மு.க ஸ்டாலின் (இசை வேளாளர்)


திமுக வேட்பாளர்களில் 4 பேர் முஸ்லிம்கள்

1) ஆவடி - சா.மு.நாசர்

2) பாளையங்கோட்டை - அப்துல் வஹாப்

3) செஞ்சி - கே.எஸ். மஸ்தான்.

4) ராயபுரம் - டாக்டர் சுபேர் கான்-


பெண்கள், புதுமுகங்கள்

திமுக வேட்பாளர்களில் 60-க்கும் மேற்பட்டோர் புதுமுகங்கள். 18 பேர் பெண்கள். அமைச்சர் கீதா ஜீவன் (தூத்துக்குடி) உள்ளிட்ட பல முக்கிய பெண் தலைவர்கள் மீண்டும் களத்தில் உள்ளனர்.


திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களில் பட்டதாரிகள் 125; மருத்துவர்கள் 15 பேர்; பொறியாளர்கள் 17 பேர்; வழக்கறிஞர்கள் 29 பேர். முனைவர்கள் 7 பேர். 164 வேட்பாளர்களில் 125 பேர் பட்டதாரிகள். 80% படித்த பட்டதாரிகளை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது திமுக.

தூத்துக்குடியில் “AIADMK vs TVK” நேரடி மோதலா? தேர்தல் களம் சூடுபிடிப்பு

#Tamil Nadu updates, photo news by  tyres & Arunan journalist 

தூத்துக்குடி, ஏப். 9:

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் பத்து நாட்களில் நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அரசியல் களம் தீவிரமாக சூடுபிடித்துள்ளது.

மதிப்பீடு!!!

 இத்தொகுதியில் பாரம்பரியமாக போட்டியிட்டு வந்த திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பீடு செய்கின்றன.

அதிமுக உற்சாகம்!!!

அதிமுக கூட்டணியில் இந்த தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சித் தலைமையினர் அதிரடியாக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனை நேரடியாக களமிறக்கியது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. 


இந்த முடிவு, தொகுதியில் அதிமுக ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதுடன், எதிர்க்கட்சிகளின் வாக்கு கணக்கீட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks


தூத்துக்குடியில் ...

வாக்காளர்களின் மனநிலை விஜய் வருகை தவெக விஜய் கட்சி தரப்பில் திரும்பியுள்ளதை உறுதி படுத்துகிறது!

இதேவேளை, தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய்யின் சமீபத்திய பிரச்சார வருகை  தூத்துக்குடியில் கவனம் ஈர்த்துள்ளது. 

thoothukudileaks
 தூத்துக்குடியில் தவெக தலைவர் விஜய் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த போது..

ஆரம்பத்தில் குறைந்த அளவு வாக்குகள் பெறும் என கணிக்கப்பட்டிருந்த த.வெ.க., தற்போது வாக்கு வங்கியில் கணிசமான உயர்வை காணலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். 

குறிப்பாக, விஜய்யின் நேரடி பிரச்சாரத்திற்குப் பிறகு, இக்கட்சியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து பேசப்படும் நிலை உருவாகியுள்ளது.

தூத்துக்குடியில் தவெக வெற்றி பெறும் ஆச்சரியம் காத்திருக்கிறது?

திமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியில் சிதறல் ஏற்படும் சூழல் காணப்படுவதாகவும், மூன்றாவது கட்சிகளின் எழுச்சி குறைந்தபட்சம் 50,000 வாக்குகள் வரை தாக்கம் ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது. 

இஃது அதிகரிக்கும் பட்சத்தில் தூத்துக்குடியில் தவெக கட்சி வேட்பாளர் ஸ்ரீநாத் வெற்றி பெற்றாலும் ஆச்சரியம் இல்லை 


AIADMK vs TVK” என்ற போட்டி 

இது நேரடியாக திமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கக்கூடியதாக மதிப்பிடப்படுகிறது.

மற்றொரு பக்கம், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட எதிர்ப்பலை (Anti-incumbency) ஆதரவாக மாற்ற அதிமுக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

இந்த சூழலில், தூத்துக்குடியில் முதல் இடத்திற்கான போட்டி அதிமுகவும் தமிழக வெற்றி கழகமும் இடையே நேரடி மோதலாக மாறிவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதன் விளைவாக, திமுக இந்த முறை மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்படும் வாய்ப்பு உள்ளதாகவும், தற்போதைய நிலவரப்படி “AIADMK vs TVK” என்ற போட்டி தான் தூத்துக்குடி தேர்தல் களத்தின் முக்கிய அம்சமாக உருவெடுத்துள்ளதாகவும்.... அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

விஜய் பிரசாரம்: தொடர்ச்சியான விபத்துகள்; 15 பேர் காயம் – 11 நிர்வாகிகள் மீது வழக்கு

தூத்துக்குடி லீக்ஸ் | நாளிதழ் செய்தி

 தூத்துக்குடி ஏப். 9:

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்தப் பிரசாரப் பயணத்தின் போது பல்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் மொத்தம் 15 பேர் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக கட்சி நிர்வாகிகள் 11 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

thoothukudileaks


நேற்று காலை சென்னை நகரில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்த விஜய், அங்கு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் உற்சாக வரவேற்பைப் பெற்றார். பின்னர் பிரசார வேனில் திருநெல்வேலி நோக்கிப் புறப்பட்டார்.

விஜய்யின் பிரசார வேனை பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறி வாகனங்கள் அதிகமாக திரண்டதால், பல இடங்களில் விபத்துகள் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

விபத்து விவரங்கள்:

வாகைகுளம்: வேனை முந்திச் செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 7 பேர் காயம்.

நெல்லை மாநகரம் (பொட்டல் விலக்கு – தாழையூத்து): 4 பேர் லேசான காயம்.

வண்ணார்பேட்டை: சாலை கடந்த தொழிலாளி மீது அரசு பேருந்து மோதியதில் ஒருவர் படுகாயம்; உடனடி உதவியால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

கே.டி.சி. நகர்: வாகன மோதலில் 3 பேர் காயம்.

ஒரே நாளில் மொத்தம் 5 விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான வாகனங்கள் மற்றும் கூட்டம் திரண்டதே விபத்துகளுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எதிர்காலத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்திக்கான புகைப்படங்கள் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது ஒரிஜினல் அல்ல 

செவ்வாய், 7 ஏப்ரல், 2026

தூத்துக்குடி விவிடி சிக்னலில் இன்று மாலை 3 மணிக்கு விஜய் பிரச்சாரம் தூத்துக்குடியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

 தூத்துக்குடி லீக்ஸ் | நாளிதழ் செய்தி

தூத்துக்குடி, ஏப். 8:

தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் அவர்கள் இன்று மாலை 3 மணி அளவில் தூத்துக்குடி நகரின் முக்கியமான பகுதியாகிய விவிடி சிக்னல் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

thoothukudileaks


இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். குறிப்பாக நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்...

சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய சாலைகள், சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



மேலும், ட்ரோன் கேமரா மூலம் வான்வழி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் செயல்பாடுகள் கவனிக்கப்படுகிறது.




போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதுடன், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாகச் செல்ல காவல்துறையின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விஜய் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி நகரம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

 🔥 “சட்டம் தெரிந்தால் பயம் இல்லை!”

📘 பாமரனுக்கும் புரியும் இந்திய சட்ட முழு கையேடு (மக்கள் கண்டிப்பாக படிக்க வேண்டியது)

இன்று பலர் “போலீஸ் கேஸ் வந்துவிட்டது” என்றாலே பயந்து போகிறார்கள்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா?


 👉 சட்டத்தை தெரிந்தவரை யாராலும் ஏமாற்ற முடியாது!

இந்த கட்டுரையில்,

✔️ பெட்டி கேஸ் முதல் கொலை வரை

✔️ எந்த சட்டம்? எந்த செக்ஷன்?

✔️ என்ன தண்டனை? எப்படி வெளியே வருவது?

எல்லாவற்றையும் எளிமையாக பார்க்கலாம்.

📘 இந்திய சட்டம் – அடிப்படை

இந்தியாவில் முக்கியமான 3 சட்டங்கள்:


👉 Indian Penal Code – குற்றங்கள் என்ன என்பதை சொல்கிறது

👉 Code of Criminal Procedure – போலீஸ் என்ன செய்யலாம் என்பதை சொல்கிறது

👉 Motor Vehicles Act, 1988 – டிராஃபிக் விதிகள்

🚨 1. பெட்டி கேஸ் (சிறிய குற்றங்கள்)

😡 தகாத வார்த்தைகள் பேசுதல்

IPC 294(b)

தண்டனை: 3 மாதம் சிறை / அபராதம்

✔️ ஜாமீன் கிடைக்கும்

🔊 பொது இடத்தில் சத்தம் / தொந்தரவு

IPC 290

₹200 அபராதம்

✔️ உடனே முடியும்


🚫 போலீஸ் உத்தரவை மீறுதல்

IPC 188

1–6 மாதம் சிறை

👮 அரசு அதிகாரியை தடுக்குதல்

IPC 186

3 மாதம் சிறை


🚗 2. டிராஃபிக் கேஸ்கள்

🪖 ஹெல்மெட் இல்லாமல்

MV Act 129 / 194D

₹1000 + லைசன்ஸ் சஸ்பெண்ட்

📱 மொபைல் பேசிக் கொண்டு ஓட்டுதல்

Section 184

₹5000

🚦 சிக்னல் மீறுதல்

Section 119

₹500–₹1000

🏎️ வேகமாக ஓட்டுதல்

Section 183

₹1000–₹2000

🚫 நம்பர் பிளேட் இல்லாமல்

Section 192

₹5000


🍺 குடித்து ஓட்டுதல்

Section 185

₹10,000 + சிறை

✔️ இதற்கு தீர்வு:

👉 e-challan கட்டினால் கேஸ் முடியும்


🔪 3. மிதமான குற்றங்கள்

🧤 திருட்டு

IPC 379

3 வருடம் சிறை

✔️ ஜாமீன் கிடைக்கும்

💸 மோசடி

IPC 420

7 வருடம்

🤜 தாக்குதல்

IPC 352

3 மாதம்

🩸 காயப்படுத்துதல்

IPC 323

1 வருடம்


🔥 4. கடுமையான குற்றங்கள்

🔪 கொலை

IPC 302

ஆயுள் / மரண தண்டனை

❌ ஜாமீன் கடினம்

⚠️ கற்பழிப்பு

IPC 376

10 வருடம் +

💰 கொள்ளை

IPC 392

10 வருடம்

👥 டக்காய்த்தி

IPC 395

ஆயுள்


⚖️ 5. FIR & கைது – தெரிந்திருக்க வேண்டியது

👉 FIR = First Information Report

✔️ போலீஸ் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்

✔️ FIR copy இலவசம்

🧾 உங்கள் உரிமைகள்

👉 Constitution of India

✔️ Article 21

உயிர் பாதுகாப்பு

✔️ Article 22

கைது காரணம் சொல்ல வேண்டும்

வக்கீல் பார்க்க உரிமை


🔓 6. ஜாமீன் (Bail)

✔️ Bailable

சிறிய கேஸ்

போலீஸ் தரலாம்

❌ Non-bailable

பெரிய கேஸ்

கோர்ட்டு மட்டும்

🚨 7. கேஸில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்?

✔️ அமைதியாக இருங்கள்

✔️ FIR copy கேளுங்கள்

✔️ வக்கீல் அணுகுங்கள்

✔️ உண்மை பேசுங்கள்

❌ லஞ்சம் கொடுக்காதீர்கள்

❌ சண்டை போடாதீர்கள்


🚨 1. FIR பதிவு ஆனதும் என்ன நடக்கும்?

👉 FIR (First Information Report) என்பது ஒரு குற்றம் நடந்ததாக போலீசுக்கு கிடைக்கும் முதல் தகவல்.

✔️ FIR பதிவு ஆனவுடன்:

போலீஸ் விசாரணை ஆரம்பிக்கும்

சாட்சிகள், ஆதாரங்கள் சேகரிக்கப்படும்

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கைது செய்யலாம்

❗ முக்கியம்:

👉 FIR copy இலவசமாக பெற உங்கள் உரிமை

👮 2. போலீஸ் கைது செய்தால் என்ன செய்ய வேண்டும்?

✔️ உங்கள் உரிமைகள்:

கைது காரணம் சொல்ல வேண்டும்

உங்கள் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

24 மணி நேரத்திற்குள் கோர்ட்டில் ஆஜர் செய்ய வேண்டும்

வக்கீலை சந்திக்கும் உரிமை உண்டு


🧠 3. போலீஸ் ஸ்டேஷனில் எப்படி பேச வேண்டும்?

✔️ செய்ய வேண்டியது:

அமைதியாக பேசுங்கள்

கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்

“எனக்கு வக்கீல் வேண்டும்” என்று சொல்லலாம்

கையெழுத்து வைக்கும் முன் படித்து பாருங்கள்


❌ செய்யக்கூடாதது:

கோபப்படாதீர்கள்

பொய் சொல்லாதீர்கள்

அழுத்தத்தில் ஒப்புக்கொள்ளாதீர்கள்

⚖️ 4. கோர்ட்டில் என்ன நடக்கும்?

✔️ முதல் நிலை:

ஜட்ஜ் முன்னிலையில் ஆஜர்

குற்றம் கூறப்படும்

✔️ அடுத்தது:

ஜாமீன் கேட்கலாம்

விசாரணை தொடங்கும்

🔓 5. ஜாமீன் எடுக்கும் முறைகள் (Step-by-Step)

🟢 1. Bailable Case (சிறிய கேஸ்)

போலீஸ் ஸ்டேஷனிலேயே ஜாமீன் கிடைக்கும்

ஒரு surety (உத்தரவாதம்) வேண்டும்


🔴 2. Non-Bailable Case (பெரிய கேஸ்)

Step 1:

👉 வக்கீல் மூலம் ஜாமீன் மனு போட வேண்டும்

Step 2:

👉 கோர்ட்டில் விசாரணை நடக்கும்

Step 3:

👉 ஜட்ஜ் முடிவு எடுப்பார்

📄 6. Anticipatory Bail (முன் ஜாமீன்)

👉 கைது ஆகும் முன்பே ஜாமீன் பெறலாம்

எப்போது?

போலீஸ் கைது செய்ய வாய்ப்பு இருந்தால்

எப்படி?

Sessions Court / High Court-ல் மனு போட வேண்டும்


🧾 7. Charge Sheet என்றால் என்ன?

👉 போலீஸ் விசாரணை முடிந்த பிறகு கோர்ட்டில் தரும் அறிக்கை

இதில் இருக்கும்:

சாட்சிகள்

ஆதாரங்கள்

குற்ற விவரம்


⏳ 8. விசாரணை (Trial) எப்படி நடக்கும்?

குற்றம் வாசிக்கப்படும்

சாட்சிகள் வருவார்கள்

வக்கீல்கள் வாதாடுவார்கள்

தீர்ப்பு வழங்கப்படும்


⚠️ 9. தவறான கேஸ் போட்டால் என்ன செய்யலாம்?

✔️ கோர்ட்டில் எதிர்க்கலாம்

✔️ பொய் வழக்கு என்றால் case dismiss ஆகும்

✔️ எதிர் வழக்கும் போடலாம்


🚨 10. போலீஸ் தவறு செய்தால்?

✔️ மேலதிகாரியிடம் புகார்

✔️ மனித உரிமை ஆணையம்

✔️ கோர்ட்டில் மனு

🛑 முக்கிய பாதுகாப்பு குறிப்புகள்

👉 எந்த காகிதத்திலும் கையெழுத்து வைக்க முன் படிக்கவும்

👉 உங்கள் உரிமைகளை தெரிந்து கொள்ளுங்கள்

👉 வக்கீல் இல்லாமல் பெரிய கேஸ்களை சமாளிக்காதீர்கள்

🧠 வாழ்க்கையை காப்பாற்றும் உண்மை

👉 சட்டம் தெரியாதவன் பயப்படுவான்

👉 சட்டம் தெரிந்தவன் தைரியமாக இருப்பான்


🛑 முக்கிய எச்சரிக்கை

👉 சிறிய தவறு = அபராதம்

👉 பெரிய தவறு = வாழ்க்கையே பாதிக்கும்

🧠 கடைசி உண்மை

👉 “சட்டம் தெரிந்தவன் அடிமை ஆக மாட்டான்”

👉 “உரிமை தெரிந்தவன் பயப்பட மாட்டான்”

📢 இந்த தகவலை பகிருங்கள்!

இந்த கட்டுரை:

✔️ ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவை

✔️ ஒவ்வொரு இளைஞனும் தெரிந்திருக்க வேண்டும்

✔️ ஒரு உயிரையே காப்பாற்றும்


#சட்டவிழிப்புணர்வு

#IndianLaw

#KnowYourRights

#PoliceCase

#TrafficRules

#LegalAwareness

#தமிழ்நாடு

#SafetyFirst

#ShareThis

திங்கள், 6 ஏப்ரல், 2026

ஸ்ரீவைகுண்டத்தில் எஸ்.பி. சண்முகநாதன் வேட்பு மனு தாக்கல் உற்சாக ஊர்வலம்

தூத்துக்குடி லீக்ஸ் | நாளிதழ் செய்தி

தூத்துக்குடி ஏப்ரல் 6

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

thoothukudileaks


முன்னதாக, ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டநாத பெருமான் திருக்கோவிலில் வழிபாடு மேற்கொண்ட பின்னர், அங்கிருந்து உற்சாக ஊர்வலமாக புறப்பட்ட வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகம் சென்றடைந்தனர்.

அங்கு தேர்தல் அலுவலர் செந்தில்வேல்முருகனிடம் எஸ்.பி. சண்முகநாதன் தனது வேட்பு மனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்வில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் சித்தாரஞ்சன், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் காசிராஜன், அ.ம.மு.க. சுப்பிரமணியன் உள்ளிட்ட அ.தி.மு.க. தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

வேட்பு மனு தாக்கல் நிகழ்வை முன்னிட்டு, பகுதி முழுவதும் உற்சாகமான அரசியல் சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.

வேட்பு மனுத் தாக்கல் இன்று பரபரப்பு தூத்துக்குடியில் காவல்துறையினருடன் அதிமுகவினர் மோதல்

 தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி


தூத்துக்குடி, ஏப்ரல் 6:

தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளில் தூத்துக்குடியில் பரபரப்பான சம்பவம் ஏற்பட்டது.

வேட்பு மனுத் தாக்கல் இன்று  பரபரப்பு: தூத்துக்குடியில் காவல்துறையினருடன் அதிமுகவினர் மோதல் ஏற்பட்டது 

அதிமுக -காவல்துறை மோதல் 

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன், டுவிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்ய சப் கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்தார்.

thoothukudileaks


தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. 

வெளியேறுங்கள் !!!

இதன்படி அதிகாரிகள் அனுமதி வழங்கியிருந்த நிலையில், கூடுதலாக ஒருவர் உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபு, “ஒருவர் வெளியே சென்றால் மட்டுமே வேட்பு மனு பெற முடியும்” என தெரிவித்தார்.


இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த விவேகம் ரமேஷ் உள்ளிட்டோர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றபோது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்தனர். “ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது” என கூறியதால், அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.


இதையடுத்து வெளியே இருந்த விவேகம் ரமேஷ் அழைத்ததன் பேரில், வேட்பாளர் செல்லப்பாண்டியன் வெளியே வந்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 “என்னை வேட்பு மனுத் தாக்கல் செய்ய விடாமல் தடுக்கிறீர்களா?” என அவர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் தொடர்ந்து விதிமுறைகளை விளக்கியும், வாக்குவாதம் சில நேரம் நீடித்தது.

இதே நேரத்தில், அலுவலகத்துக்குள் இருந்த முன்னாள் நகர மன்ற தலைவர் இரா. ஹென்றி அவரை சிலர் வெளியே செல்லும்படி காவல்துறையினர் வெளியேற்றினார்கள்.


மோதல்!!!

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஹென்றியும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அலுவலகத்திற்குள் தொடங்கிய இந்த வாக்குவாதம் வெளியிலும் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.


சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த வாக்குவாதம் பின்னர் அமைதியானது. தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள விதிமுறைகளை காவல்துறையினர் கடைப்பிடித்த நிலையில், இந்த வாக்குவாதம் அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


✍️ Thoothukudi Leaks செய்தியகம்