மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டும்: சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம
தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையில் சமரசம் கூடாது – டெல்டா விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தல்
தூத்துக்குடி, ஆக. 2:
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக்கூடாது, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பை கர்நாடக அரசு முழுமையாக மதித்து அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று (01.08.2026) காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாநகர செயலாளர் தோழர் ஜி. தனலெட்சுமி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், மேகதாது அணை கட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது, காவிரி நதிநீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை கர்நாடக அரசு முழுமையாக மதித்து செயல்படுத்த வேண்டும், டெல்டா பாசனப் பகுதிகளில் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் என். பெரியசாமி கண்டன உரையாற்றினார்.
மேலும், சிபிஐ மாவட்ட செயலாளர் தோழர் பி. கரும்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
புகைப்பட விளக்கம்: தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே, மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சிக் கொடிகளை ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தினர்.





