Tamil Nadu update photo news by Arunan Reporter
தூத்துக்குடி யில்.... பத்திரிகையாளர்களுக்காக நடைபெற்ற சிறப்பு இலவச கண் பரிசோதனை முகாம்
தூத்துக்குடி: ஆக 26
தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் பயன்பெறும் வகையில், தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள வாசன் கண் மருத்துவமனை அலுவலகத்தில் நடைபெற்ற முகாமிற்கு பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் மோகன்ராஜ், துணைத்தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாசன் கண் மருத்துவமனை சார்பில் மருத்துவர் சுகுமார், தூத்துக்குடி அலுவலக மேலாளர் வைத்தியநாதன், மார்க்கெட்டிங் மேலாளர்கள் ராமராஜன், ரீகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வரவேற்றனர்.
முகாமை வாசன் கண் மருத்துவமனை இயக்குநரும், மூத்த மருத்துவருமான டாக்டர் கனிமொழி தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது டாக்டர் கனிமொழி கூறுகையில், ...
“கண் பார்வை என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமானது. 3 வயது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பார்வைக் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சையை விரைவாக மேற்கொள்வது நல்லது” என்றார்.
மேலும், தற்போது கண் மருத்துவத் துறையில் நவீன சிகிச்சை முறைகள் வந்துள்ளதுடன், பல்வேறு கண் குறைபாடுகளுக்கு லேசர் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
செல் போன் பார்ப்பது ..
கண்களுக்கு ஆபத்து !!!
குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், செல்போன், மடிக்கணினி, இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை நீண்ட நேரம் தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டர் கனிமொழி அறிவுறுத்தினார்.
குறிப்பிட்ட இடைவெளிகளில் கண்களுக்கு ஓய்வு அளித்து பயன்படுத்துவது அவசியம் என்றும் அவர் கூறினார்.
“வாசன் கண் மருத்துவமனை சார்பில் பல்வேறு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர்.
பெருமிதம்
தற்போது பத்திரிகையாளர்களுக்காக இந்த முகாமை நடத்துவதில் எங்கள் நிறுவனம் பெருமை கொள்கிறது” என்றும் டாக்டர் கனிமொழி தெரிவித்தார்.
video
முகாமில் பிரஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பல்வேறு வகையான கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து, பிரஸ் கிளப் நிர்வாகிகள் வாசன் கண் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் சங்கத்தின் கௌரவ ஆலோசகர்கள் அருண், பாலகிருஷ்ணன், அன்பழகன், செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், மாரி ராஜா, ராஜன், இருதயராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் காதர் மைதீன், அகமதுஜான், கற்பகநாதன், ராமச்சந்திரன், பாலகுமார், நீதிநாதன், அருள்ராஜ் உள்ளிட்ட பலர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
பத்திரிகையாளர்களுக்காக சிறப்பாக கண் பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்த வாசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் நன்றி தெரிவித்தார். முகாமில் வாசன் கண் மருத்துவமனை ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.















