செவ்வாய், 8 செப்டம்பர், 2026

தூத்துக்குடி கயத்தாறில் கனிம வளக் கொள்ளையா? அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பா? முதலமைச்சரிடம் வழக்கறிஞர் பரபரப்பு புகார்

 Tamil Nadu updates

தூத்துக்குடி மாவட்டத்தில் 

கயத்தாறில் கனிம வளக் கொள்ளையா?

அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பா? – முதலமைச்சரிடம் வழக்கறிஞர் பரபரப்பு புகார்

தூத்துக்குடி, செப்.8:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் உரிய அரசு அனுமதியின்றி கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, லாரிகள் மூலம் கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது அவசரமாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான மு. பெச்சிமுத்து, தமிழக முதலமைச்சரிடம் பொது நல புகார் மனு அளித்துள்ளார்.

thoothukudileaks


கட்டபொம்மன் சிலை அருகே அகழ்வு?

சென்னை–கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு கட்டபொம்மன் சிலை அருகே, சர்வே எண் 378/1 பகுதியில் கனரக பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் லாரிகளைப் பயன்படுத்தி கனிம வளங்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக இரு நபர்களின் பெயர்களையும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் உரிய அரசு அனுமதியின்றி கனிம வளங்களை வெட்டி எடுத்து, சேமித்து வைத்து பின்னர் கடத்தியதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

புகைப்படம், வீடியோ ஆதாரங்கள்

இதுதொடர்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பகிரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஆதாரங்கள் வழங்கப்பட்ட பின்னரும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் செயல்பாடு குறித்து கேள்வி

சட்டவிரோத கனிம அகழ்வு தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை தாமதமாகி வருவது ஏன்? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நிர்வாக ரீதியான ஆய்வு நடத்தப்படுமா? கனிம வளங்களை சட்டவிரோதமாக அகழ்ந்து கடத்தும் நபர்களுக்கு அதிகாரிகள் யாரேனும் உடந்தையாக உள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்த கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் கனிம வள அகழ்வு மற்றும் கனிம கடத்தல் தொடர்பாக மாவட்ட அளவில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசு அனுமதியின்றி கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோத கனிம அகழ்வுக்கு அரசு அதிகாரிகள் யாரேனும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தால், அவர்கள் மீதும் துறைரீதியாகவும் சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய கேள்விகள்

• அனுமதியின்றி கனிம அகழ்வு நடைபெற்றதா?
• அரசுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் வருவாய் இழப்பு எவ்வளவு?
• புகைப்படம், வீடியோ ஆதாரங்கள் மீது என்ன நடவடிக்கை?
• கனிம கடத்தலுக்கு அதிகாரிகள் உடந்தையா?
• மாவட்டம் முழுவதும் சிறப்பு ஆய்வு நடத்தப்படுமா?

 

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

video 


புகைப்பட கேப்ஷன்:
கயத்தாறு கட்டபொம்மன் சிலை அருகே சட்டவிரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி. (கோப்பு படம்)

குறிப்பு: இச்செய்தியில் இடம்பெறும் குற்றச்சாட்டுகள் வழக்கறிஞர் மு. பெச்சிமுத்து அளித்துள்ள பொது நல புகார் மனுவின் அடிப்படையிலானவை. குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் விசாரணை மற்றும் அதிகாரப்பூர்வ பதில் வெளியாக வேண்டியுள்ளது.

திங்கள், 7 செப்டம்பர், 2026

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 41-வது தேசிய கண் தான இருவார விழா

 Tamil Nadu update

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 41-வது தேசிய கண் தான இருவார விழா

தூத்துக்குடி, செப்.7:

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 41-வது தேசிய கண் தான இருவார விழா சிறப்பாக நடைபெற்றது.



விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் . விஷ்ணுசந்திரன், இ.ஆ.ப. தலைமை தாங்கினார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. E. எபினேசர் ஜோயல்குமார், M.D., DNB., துணை முதல்வர் மரு. V. கலைவாணி, M.D., கண்காணிப்பாளர் மரு. J. கைசெல்வ ஜெயமணி, MBBS., DMRT. உள்ளிட்ட மருத்துவர்கள், கண் மருத்துவத் துறை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


இம்மருத்துவமனை கண் தானப் பிரிவு மூலம் வருடத்திற்கு சுமார் 270 கண்கள் வீதம், இதுவரை மொத்தம் 1,486 கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது. மேலும், இம்மருத்துவமனையில் கருவிழி மாற்றுச் சிகிச்சை மூலம் இதுவரை 123 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.


கண் தானம் வழங்கிய குடும்பத்தினரை சிறப்பிக்கும் வகையில், அவர்களை அழைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் சார்பில் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.


இம்மருத்துவமனையில் கருவிழி மாற்றுச் சிகிச்சை மூலம் பார்வை பெற்ற இராஜேந்திரன் என்பவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டு, அனைவரும் கண் தானம் செய்வோம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்.


மேலும், மரு. J. கைசெல்வ ஜெயமணி, MBBS., DMRT. தலைமையில் கண் தான விழிப்புணர்வு தொடர்பான பாடல் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கண் தான விழிப்புணர்வு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலியர் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு சான்றுகள் வழங்கினார்.

thoothukudileaks


இறுதியில் மரு. R. ஜெயந்தி, M.S., D.O. உள்ளிட்ட மருத்துவர்கள் விழாவை சிறப்பாக நடத்தினர். விழா தேசிய கண் தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

சேலத்தில் 16-ஆம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை தொடர்பான ஆலோசனை கூட்டம்

சேலத்தில் 16-ஆம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை தொடர்பான ஆலோசனை கூட்டம் 

சேலம் செப 7

சேலம் மாவட்டம் குகை பாலம் பகுதியில் உள்ள ராம ஆசிரமத்தில் 16-ஆம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரை நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்துடைய நிறுவனர் மற்றும் காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் தவத்திரு.சுவாமி. இராமானந்தா தலைமையில் நடைபெற்றது. 



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த ஆண்டு காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்தர் ரத யாத்திரையானது குடகு மலையில் தொடங்கி பூம்புகார் வரை செல்லும் பகுதிகளில் அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள் ரதத்தில் வரும் காவிரி தாய்க்கு வரவேற்பு கொடுப்பது மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பெளர்ணமி நாட்களில் காவிரி நதிக்கு ஆரத்தி காட்டுவது போன்ற பல முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது

thoothukudileaks


.இந்த நிகழ்வில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்துடைய முக்கிய பொறுப்பாளர்கள் சுவாமி.ஈஸ்வரானந்தா, சுவாமி.சிவராமானந்தா,சுவாமி. பாலரகுநானந்தாபுரி, சேலம் குணசேகரன், ஓசூர் காவிரி.வாசு, இந்து சேனா மாநில தலைவர் மற்றும் காவிரி நதி நீர் பாதுகாப்பு அறக்கட்டளை இணை செயலாளர் அருள்வேலன் ஜி, சேலம் ரமேஷ், அர்ச்சகர் விஷ்ணு மற்றும் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்தின் புரவலர்கள், துறவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் திறன் போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பரிசு தி சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ் நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் இனைந்து நடத்திய தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி மேடையில் மாணவிகளின் யோகாசன நிகழ்ச்சி பிரமிப்பு? நடந்தது என்ன படிக்க

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

திறன் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பரிசு

தி சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ் நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் இனைந்து நடத்திய தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி மேடையில் மாணவிகளின் பிரமிப்பூட்டும் யோகாசன நிகழ்ச்சி

தூத்துக்குடி, செப்.6:

தி சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நடத்தி வரும் தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி 2026-இன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவ, மாணவியருக்காக நடத்தப்பட்ட பல்வேறு திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

thoothukudileaks


புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு கடந்த 27.08.2026 முதல் 06.09.2026 வரை, பள்ளி மாணவ, மாணவியரின் தனித்திறன்களை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

thoothukudileaks


இதில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். “நான் விரும்பும் ஓவியம்” என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும், “வாசிப்பும் வாழ்க்கை” என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி மற்றும் கதை எழுதும் போட்டியும் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட்டன.

thoothukudileaks


இந்தப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கான பரிசளிப்பு விழா தூத்துக்குடி தி சென்னை சில்க்ஸ் புத்தகக் கண்காட்சி மேடையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு ஏ. ஸ்ரீநாத் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

thoothukudileaks


அப்போது அமைச்சர் ஸ்ரீநாத் பேசுகையில், ...

மாணவ, மாணவியர் தங்களது தனித்திறன்களை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம் என்றார். புத்தக வாசிப்பு அறிவை விரிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், சிந்தனைத் திறனையும் வாழ்க்கை அனுபவத்தையும் மேம்படுத்தும் எனத் தெரிவித்தார்.

thoothukudileaks

thoothukudileaks


மேலும், இளம் வயதிலேயே வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும் என்றும், கல்வியுடன் சேர்த்து ஓவியம், எழுத்து, கதை எழுதுதல் உள்ளிட்ட தங்களது தனித்திறன்களையும் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி தி சென்னை சில்க்ஸ் புத்தகக் கண்காட்சி மேடையில் யோகா மாஸ்டர் சுந்தர்வேல் மற்றும் டாக்டர் கனிஷ்கா ஆகியோரிடம் பயிற்சி பெற்று வரும் மாணவிகளின் சிறப்பு யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் 9-ம் வகுப்பு பயிலும் காமராஜ் மற்றும் தஸ்நேவிஸ் பள்ளி மாணவிகளான அஸ்மா, சுவாணி ஆகியோர் பல்வேறு பிரமிப்பூட்டும் யோகாசனங்களை செய்து காட்டி, அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். அவர்களின் திறமையான யோகாசன நிகழ்ச்சி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.




thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks
பரிசு பெற்ற மாணவ மாணவிகள் 

thoothukudileaks

thoothukudileaks


தி சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நடத்தி வரும் தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி மூலம் மாணவர்களிடையே வாசிப்பு ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு, ஓவியம், எழுத்து, கதை எழுதுதல் உள்ளிட்ட அவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks



சனி, 5 செப்டம்பர், 2026

வ.உ.சி. 155வது பிறந்தநாள்: ஒட்டப்பிடாரத்தில் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

 

வ.உ.சி. 155வது பிறந்தநாள்: ஒட்டப்பிடாரத்தில் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி, செப். 6-

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், 'கப்பலோட்டிய தமிழன்', 'செக்கிழுத்த செம்மல்' எனப் போற்றப்படுபவருமான வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 155வது பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அமைந்துள்ள திருஉருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

thoothukudileaks


இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய முக்கிய தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த வ.உ. சிதம்பரம் பிள்ளை, வழக்கறிஞர், எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் மற்றும் தொழிற்சங்கத் தலைவர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கினார். அவரது 155வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி. நினைவு இல்லத்தில் சிறப்பு மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில், அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என். தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., கழக மகளிர் அணி செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ப. மோகன், கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன், கழக வர்த்தக அணிச் செயலாளரும், தூத்துக்குடி மாநகரக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன், கழக அமைப்புச் செயலாளரும், கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளருமான என். சின்னதுரை உள்ளிட்டோர் வ.உ.சி. திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன், சின்னப்பன், கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் முடிமண் ராமசாமி, மாவட்ட பொருளாளர் சேவியர், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் ஜூலியட், பத்மாவதி, கோவில்பட்டி நகரச் செயலாளர் விஜயபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் எம்.ஆர்.வி. கவியரசன், எம். பெருமாள், டாக்டர் எஸ்.எம்.ஏ. கோசல்ராம்ராஜா, பில்லா விக்னேஷ், ஜாக்சன் துரைமணி, டேக் ராஜா, என்.ஜி. ராஜேந்திரன், ரத்தினராஜ், மாரிமுத்து பாண்டியன், கோடையடி ராமசாமி, வேல்முருகன், சதீஷ்குமார், சரவணகுமார், மோகன், நித்திஷ் கண்ணன், சாமிராஜ், ராஜ்குமார், செல்வம், பாலகணேஷ், கார்த்திக் ராம், அக்ரி மாரிமுத்து, பொன்மலர், மனுவேல் ராஜ், சரவண பெருமாள், நிலாசந்திரன், ஜீவாபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


ஒன்றியச் செயலாளர்கள் அன்புராஜ், பழனிச்சாமி, போடுசாமி, தனஞ்செயன், தனவதி, மகேஷ், பால்ராஜ், ராமசந்திரன், செல்வகுமார், வண்டானம் கருப்பசாமி, லெட்சுமண பெருமாள், காசிராஜன், பால்துரை, பேரூராட்சி கழகச் செயலாளர்கள் ராஜ்குமார், ஆண்டி, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ஆர். ராஜகோபால், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம், பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரைபாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் ஜெயந்தி, ராஜேஸ்வரி, சாந்தி, தமிழரசி, அன்னபாக்கியம், ஜெயபார்வதி, வட்டக் கழகச் செயலாளர் ராஜசேகர், பாலஜெயம், சாம்ராஜ், தளவாய்ராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வ.உ.சி.க்கு மரியாதை செலுத்தினர்.

வ.உ.சிதம்பரனார் 155வது பிறந்த நாள் தூத்துக்குடியில் விசிக சார்பில் விமல் வங்காளியார் மாலை அணிவித்து மரியாதை

 Tamil Nadu updates

வ.உ.சிதம்பரனார் 155வது பிறந்த நாள்

தூத்துக்குடியில் விசிக சார்பில் மாவட்ட செயலாளர் விமல் வங்காளியார் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி: செப் 5
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்த நாளை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

thoothukudileaks


தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் திருவுருவச் சிலைக்கு இன்று காலை 11.30 மணியளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks


நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி  மாநகர்  மாவட்ட  செயலாளர் விமல் வங்காளியார் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று, வ.உ.சிதம்பரனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் மாவட்ட செய்தி தொடர்பாளர் பட்டுவளவன் மாவட்ட துணை செயலாளர் தமிழ்குமணன் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ஷாரா.முபாரக்அலி அந்தோணிசாமி இஸ்லாமிய சனநாயக பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் முத்தலிபு தெற்கு பகுதி செயலாளர் சித்திரவிஜயன் இளஞ் சிறுத்தைகள் முத்துவேல் பாண்டியன் ராஜாபாரதி அருண் 36வது வார்டு செயலாளர் தேவநேசம் உள்ளிட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


வீடியோ பார்க்க 

தொடர்ந்து, வ.உ.சிதம்பரனாரின் தியாகம், சுதந்திரப் போராட்ட பங்களிப்பு மற்றும் சமூகநலக் கொள்கைகளை நினைவுகூர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.


நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 155 வது பிறந்த நாள் விழா வீ தி லீடர்ஸ் சார்பில் தூத்துக்குடியில் சத்தியசீலன் தலைமையில் வ உசி யின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிப்பு

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு வீ தி லீடர்ஸ் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி, செப்.5:

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், தூத்துக்குடி மண்ணின் மைந்தர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 155வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

thoothukudileaks


விடுதலைப் போராட்ட வீரரான வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளை முன்னிட்டு, அரசு சார்பிலும், அதிமுக, திமுக, தவெக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக, போராட்ட அமைப்புகள் சார்பிலும் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 


மேலும், அவரது தியாகம், சுதேசி உணர்வு மற்றும் கொள்கைகளைப் பின்பற்றுவோம் என பல்வேறு அமைப்பினர் உறுதிமொழியும் ஏற்று வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் திருவுருவச் சிலைக்கு, வீ தி லீடர்ஸ் (We The Leaders)  சார்பில் சத்தியசீலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


thoothukudileaks


இந்த நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் அண்ணாமலையின்  வீ தி லீடர்ஸ் அரசியல் அமைப்பின் சார்பில் தூத்துக்குடி யில் உவரி சத்தியசீலன் தலைமையில் ....

அவருடன் அமைப்பின் தொண்டர்கள்  திரளாக கலந்து கொண்டு, வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

வ.உ.சிதம்பரனாரின் விடுதலைப் போராட்ட தியாகம் மற்றும் சுதேசி சிந்தனைகளை நினைவுகூர்ந்த அவர்கள், அவரது உயரிய கொள்கைகளையும், நாட்டுப்பற்றையும் இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

video 

கப்பலோட்டிய தமிழனின் 155வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வீ தி லீடர்ஸ் அமைப்பினர் தொண்டர்கள் புடைசூழ கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.