தூத்துக்குடி, மே 31:
தூத்துக்குடி அருகே உள்ள திரவியபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவிலின் 21-வது ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் மகா கும்பாபிஷேக ஆண்டு நிறைவு விழா வரும் ஜூன் 4-ம் தேதி (வியாழக்கிழமை) சிறப்பாக நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு அதிகாலை 7.35 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்ய பூஜை, வேதிகார்ச்சனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து யாகசாலை பூஜைகள், ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ஸ்ரீ துர்கா லட்சுமி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாஹுதி மற்றும் மகா அபிஷேக நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
காலை 10.30 மணி முதல் 11 மணி வரை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் விமான கோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வருஷாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் தர்மகர்த்தா V.செல்வராஜ் நாடார், ....
காரியதரிசி A.பெரியசாமி நாடார், பொருளாளர் R.சிந்தாமணி நாடார், சந்தனகுமார் நாடார் உதவி தர்மகர்த்தா R.அருணாசலம் நாடார், S.பாலசுப்பிரமணியன் நாடார்,& உதவி காரியதரிசி D.முத்துராஜ் நாடார், L.N.கனகராஜ் நாடார் ஆகியோர் தலைமையில் செய்து வருகின்றனர்.
மேலும், ஆலோசகர்களாக M.தீபேந்திர ராஜா நாடார், S.வேல்சாமி நாடார், P.இளையபெருமாள் நாடார், V.பட்டுராஜ் நாடார், R.மாரியப்பன் நாடார், A.ஜெயராஜ் நாடார்,ஏ.சேர்மத்துரைநாடார் L.தர்மலிங்கம் நாடார் ஆகியோரும், கமிட்டி உறுப்பினர்களாக I.முனியசாமி நாடார், S.சக்திவேல் நாடார், V.பொன்னராஜா நாடார், J.தமிழ்செல்வன் நாடார், N.L.பெருமாள்ராஜ் நாடார், B.சரவணகுமார் நாடார் ஆகியோரும் விழா ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெறுமாறு ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
– தூத்துக்குடி லீக்ஸ்















