ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

தூத்துக்குடி போல்பேட்டை அருள்மிகு ஸ்ரீ போத்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா அன்னதானம் துவங்கி வைத்து முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

தூத்துக்குடி போல்பேட்டை அருள்மிகு ஸ்ரீ போத்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா மற்றும் வருஷாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

தூத்துக்குடி: செப் 14,

தூத்துக்குடி போல்பேட்டை, புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அருள்மிகு ஸ்ரீ போத்தி விநாயகர் திருக்கோவிலில் சதுர்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழா இன்று மிக விமர்சையாக நடைபெற்றது.


விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து காலை 10.00 மணிக்கு சுவாமிக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு தீபாராதனை பூஜைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகப் பெருமானை தரிசித்து அருள் பெற்றனர்.

சிறப்பு அன்னதானம் 

மற்றும் கலை நிகழ்ச்சி

மதிய உணவாக பகல் 12.00 மணிக்கு பக்தர்களுக்குச் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

"கடந்த 42 வருடங்களுக்கு முன் திமுகவின் முரட்டு பக்தனாக திகழ்ந்த பெரியசாமி அவரது போல் பேட்டை பகுதியில் விநாயகர் கோயில் அவரது சொந்த செலவில் உருவாக்கி  கோவில் சிறப்பாக நடத்தி வந்தார். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக அப் பகுதியில் நடத்தி வருவார்.

 N.பெரியசாமி (Ex.M.L.A) அவரின் நினைவாக, அவரது வழியில் வாரிசுகள் ஆன முன்னாள் அமைச்சர் பி.கீதா ஜீவன் அன்னதானம் துவங்கி வைத்தார் 

கோவில் தர்மகர்த்தா ராஜா .பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் .பெரியசாமி ஆகியோரின் ஏற்பாட்டிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


இன்று மாலை 7.00 மணிக்கு ஸ்ரீ பலிபீட பூஜை, அலங்கார தீபாராதனை மற்றும் நெல்லை 'ரீம்ஸ்' இசைக்குழுவினரின் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.



 இந்நிகழ்ச்சிக்கு பழரசம்  P.விநாயகமூர்த்தி தலைமை தாங்க, D.A.தெய்வநாயகம், A.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

video 

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் தர்மகர்த்தா ராஜா N.பெரியசாமி தலைமையில் N.செல்லபாண்டி, ஜெகன் பெரியசாமி, A.முத்துசெல்வம், P.ரத்தினசாமி, E.பேச்சிமுத்து, P.செல்வராஜ், R.செல்வகுமார், G.வேல்சாமி மற்றும் ஊர் பொதுமக்கள், விழா கமிட்டியினர் சிறப்பாகச் செய்திருந்தனர். கோவில் அர்ச்சகர் K.நெல்லைகுமரன் சுவாமி சிறப்பு வழிபாடுகளை நடத்தி வைத்தார்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு காவல்துறையினர் மீது நடவடிக்கை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் தூத்துக்குடி மக்களின் எதிர்பார்ப்பை சட்டப்பேரவையில் அறிவிக்க வேண்டும் மக்கள் சிவில் உரிமை கழகம் வலியுறுத்தல்

 

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: காவல்துறையினர் மீது நடவடிக்கை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும்

தூத்துக்குடி மக்களின் எதிர்பார்ப்பை சட்டப்பேரவையில் அறிவிக்க வேண்டும்  மக்கள் சிவில் உரிமை கழகம் வலியுறுத்தல்

தூத்துக்குடி:செப 14
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று மக்கள் சிவில் உரிமை கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

thoothukudileaks


இதுகுறித்து...

 மக்கள் சிவில் உரிமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நிலையில், அவர்களது துயரத்தில் பங்கேற்றதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இரவோடு இரவாக சந்தித்து, என்றும் தூத்துக்குடி மக்களோடு இருப்பேன் என்று உறுதியளித்ததை மக்கள் அனைவரும் அறிவர்.


இதனால், ஆட்சிக்கு வந்ததும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் தூத்துக்குடி மக்கள் காத்திருந்தனர்.


எந்த அறிவிப்பும் இல்லை???

ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் இன்றுவரை, 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் எந்தத் தெளிவான அறிவிப்பும் வெளியாகவில்லை.

காவல்துறை மீது நடவடிக்கை கைவிடல் என பரவும் செய்தி உண்மையா?...

மாறாக, காவல்துறை அதிகாரிகள் மீதான நடவடிக்கைகள் கைவிடப்பட்டதாக சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி வருகின்றன. 


தூத்துக்குடி மக்கள் அதிர்ச்சி!!!!

இந்தச் செய்திகள் தூத்துக்குடி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே துயரத்தில் உள்ள மக்களின் மனவேதனையை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்தச் செய்திகள் அமைந்துள்ளன.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்திய ஒருநபர் ஆணையத்தின் பரிந்துரைகளை தமிழக அரசு நிறைவேற்றுமா என்பது குறித்தும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் கோரியுள்ளது.


அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்!!!

எனவே, தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தூத்துக்குடி மக்களின் எதிர்பார்ப்பான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதி செய்யும் வகையில் அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்.

தற்போது தமிழக அரசு நிலைப்பாடு என்ன?

மேலும், மக்களுக்கான அரசாக மக்களோடு நின்று, உயர்நீதிமன்றத்திலும் முறையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளும் நிலைப்பாட்டை தமிழக அரசு தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.

நிம்மதி!!!

2018-ம் ஆண்டு நடைபெற்ற உயிரிழப்புகளுக்குப் பின்னர், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது என்ற நிம்மதியில் தூத்துக்குடி மக்கள் இருந்து வருகின்றனர். 


இந்நிலையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பதையும் அரசு வெளிப்படையாகத் தெளிவுபடுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


எனவே, தூத்துக்குடி மக்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் கருத்தில் கொண்டு, துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும் என மக்கள் சிவில் உரிமை கழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் அழுத்தமாக வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு மக்கள் சிவில் உரிமை கழகம் (பி.யூ.சி.எல்.), தூத்துக்குடி மாவட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் முதல்வர் ஜோசப் விஜயை கண்டித்து திமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

 

தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் முதல்வர் ஜோசப் விஜயை கண்டித்து திமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது 









தூத்துக்குடி, செப்.12:

தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜோசப் விஜய் ஆணவமாக பேசியதாகவும், சட்டமன்ற நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்கும் வகையில் செயல்படுவதாகவும் கூறி, அவரை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.


அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி 12-வது மையவாடி எதிரே அமைந்துள்ள மைதானத்தில் இன்று (12.09.2026) காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் தலைமை வகித்தார் அனிதா ராதாகிருஷ்ணன் எம் எல் ஏ முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

ஆர்ப்பாட்டத்தில்...

 தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கோவில் பட்டி கருணாநிதி எம்எல்ஏ விளாத்திகுளம் மார்கண்டேயன் எம்எல்ஏ உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


வீடியோ பார்க்க 

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முதல்வர் ஜோசப் விஜய்க்கு எதிராகவும், சட்டமன்றத்தில் அவரது பேச்சு மற்றும் செயல்பாடுகளை கண்டித்தும் பதாகைகள் கோஷங்களை எழுப்பினர்.




இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வியாழன், 10 செப்டம்பர், 2026

இமானுவேல் சேகரனார் மகாகவி பாரதியார் நினைவு நாள் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

 இமானுவேல் சேகரனார் மகாகவி பாரதியார் நினைவு நாள்

தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை


தூத்துக்குடி, செப்.11:


தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு நாளும், மகாகவி பாரதியாரின் 105-வது நினைவு நாளும் இன்று அனுசரிக்கப்படுகிறது.


தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 11-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

thoothukudileaks

thoothukudileaks


அதேபோல், எட்டயபுரத்தில் பிறந்த மகாகவி பாரதியாரின் 105-வது நினைவு நாளும் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது எழுச்சிமிக்க கவிதைகள் மற்றும் விடுதலை உணர்வை ஏற்படுத்திய படைப்புகளை நினைவுகூர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

thoothukudileaks


இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று காலை 10 மணியளவில் திமுக சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சிக்கு திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் தலைமை வகித்தார். அப்போது தியாகி இமானுவேல் சேகரனார் மற்றும் மகாகவி பாரதியார் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


இதில் திமுக நிர்வாகிகள், கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இரு தலைவர்களின் நினைவுகளைப் போற்றி மரியாதை செலுத்தினர்.

புதன், 9 செப்டம்பர், 2026

மாவட்ட செயலாளர் ஏசாதுரை உட்பட சசிகலா ஆதரவாளர்கள் கூண்டோடு அதிமுகவில் இணைந்தனர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் இணைப்பு பரபரப்பு

 சசிகலா ஆதரவாளர்கள் கூண்டோடு அதிமுகவில் இணைந்தனர்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் இணைப்பு

தூத்துக்குடி செப் 9

அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (AIPTMMK ) சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட வி.கே. சசிகலா ஆதரவாளர்கள், அக்கட்சியில் இருந்து விலகி தாய்க்கழகமான அதிமுகவில் இணைந்தனர்.

தூத்துக்குடி லீக்ஸ்

thoothukudi Leaks


தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில், அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி தலைமையை ஏற்று, அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.


இதில் வி.கே. சசிகலா ஆதரவாளர்களான செல்வராஜ், பட்டுக்கனி, சாந்தி, ரெஜினா, ஜான்சி ராணி, சுப்புலட்சுமி, பொயாளி பாண்டியன், மாரியப்பன், ஆறுமுகத்துரை, ராஜதுரை, இல. ஜெயராமன், ஜெயபால், வேல்சாமி, பரணி செல்வம், தங்க இசக்கி ராஜா, முத்துமாலை செல்வராஜ், சபிக்குமார் மகாராஜன், ரமேஷ், எம்.ஜி.ஆர். கணேசன், கணேசன் உள்ளிட்ட பலர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் பிரபு, தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி கழக செயலாளர் ஜெய்கணேஷ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் ஆனந்தராஜ், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள் முத்துக்கனி, நவ்சாத், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் மெஜூலா, சந்திரா, ராஜு மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ், சொக்கலிங்கம், எம்.டி. ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சசிகலா ஆதரவாளர்கள் கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்த நிகழ்வு, தூத்துக்குடி மாவட்ட அதிமுக வட்டாரத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

அதிமுக அமைப்பு செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் 72வது பிறந்த நாள்: தூத்துக்குடியில் அதிமுகவினர் கோலாகல கொண்டாட்டம்

 

அதிமுக அமைப்பு செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் 72வது பிறந்த நாள்: தூத்துக்குடியில் அதிமுகவினர் கோலாகல கொண்டாட்டம்

தூத்துக்குடி, செப். 9:

அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதனின் 72வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் அதிமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.



தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில், எஸ்.பி. சண்முகநாதன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட, ஒன்றிய, பகுதி மற்றும் வார்டு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் என திரளானோர் கலந்து கொண்டு எஸ்.பி. சண்முகநாதனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.


பிறந்த நாள் விழாவையொட்டி அதிமுக அலுவலக வளாகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் உற்சாகத்தால் களைகட்டியது.

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட நிறுவனங்கள் தொழில்வரி செலுத்த வேண்டும்

 

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட நிறுவனங்கள் தொழில்வரி செலுத்த வேண்டும்

செப்டம்பர் 30-க்குள் செலுத்த மாநகராட்சி அறிவுறுத்தல்

தூத்துக்குடி, செப்.9:

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களுக்கும் தொழில்வரி செலுத்துவது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

thoothukudileaks






தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998-ன் பிரிவு 117-B மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023-ன் விதி 275(2)-ன் படி, மாநகராட்சி எல்லைக்குள் எந்தவொரு தொழில், வர்த்தகம், வணிகம் அல்லது வேலையில் ஈடுபடும் நபர்களிடமிருந்து தொழில்வரி வசூலிக்கப்படுகிறது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அரையாண்டு வருமானத்திற்கு ஏற்ப தொழில்வரி

வரிசை அரையாண்டு வருமானம் தொழில்வரி
1 ரூ.21,000 வரை இல்லை
2 ரூ.21,001 முதல் ரூ.30,000 வரை ரூ.159
3 ரூ.30,001 முதல் ரூ.45,000 வரை ரூ.402
4 ரூ.45,001 முதல் ரூ.60,000 வரை ரூ.791
5 ரூ.60,001 முதல் ரூ.75,000 வரை ரூ.1,192
6 ரூ.75,001 மற்றும் அதற்கு மேல் ரூ.1,250

செப்டம்பர் 30-க்குள் செலுத்த வேண்டும்

பிடித்தம் செய்யப்பட்ட தொழில்வரியை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தூத்துக்குடி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தொழில்வரியை பிடித்தம் செய்து செலுத்தத் தவறினால், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023 ஆகியவற்றின் கீழ் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

—