தூத்துக்குடி போல்பேட்டை அருள்மிகு ஸ்ரீ போத்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா மற்றும் வருஷாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
தூத்துக்குடி: செப் 14,
தூத்துக்குடி போல்பேட்டை, புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அருள்மிகு ஸ்ரீ போத்தி விநாயகர் திருக்கோவிலில் சதுர்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழா இன்று மிக விமர்சையாக நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து காலை 10.00 மணிக்கு சுவாமிக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு தீபாராதனை பூஜைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகப் பெருமானை தரிசித்து அருள் பெற்றனர்.
சிறப்பு அன்னதானம்
மற்றும் கலை நிகழ்ச்சி
மதிய உணவாக பகல் 12.00 மணிக்கு பக்தர்களுக்குச் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
"கடந்த 42 வருடங்களுக்கு முன் திமுகவின் முரட்டு பக்தனாக திகழ்ந்த பெரியசாமி அவரது போல் பேட்டை பகுதியில் விநாயகர் கோயில் அவரது சொந்த செலவில் உருவாக்கி கோவில் சிறப்பாக நடத்தி வந்தார். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக அப் பகுதியில் நடத்தி வருவார்.
N.பெரியசாமி (Ex.M.L.A) அவரின் நினைவாக, அவரது வழியில் வாரிசுகள் ஆன முன்னாள் அமைச்சர் பி.கீதா ஜீவன் அன்னதானம் துவங்கி வைத்தார்
கோவில் தர்மகர்த்தா ராஜா .பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் .பெரியசாமி ஆகியோரின் ஏற்பாட்டிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று மாலை 7.00 மணிக்கு ஸ்ரீ பலிபீட பூஜை, அலங்கார தீபாராதனை மற்றும் நெல்லை 'ரீம்ஸ்' இசைக்குழுவினரின் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பழரசம் P.விநாயகமூர்த்தி தலைமை தாங்க, D.A.தெய்வநாயகம், A.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் தர்மகர்த்தா ராஜா N.பெரியசாமி தலைமையில் N.செல்லபாண்டி, ஜெகன் பெரியசாமி, A.முத்துசெல்வம், P.ரத்தினசாமி, E.பேச்சிமுத்து, P.செல்வராஜ், R.செல்வகுமார், G.வேல்சாமி மற்றும் ஊர் பொதுமக்கள், விழா கமிட்டியினர் சிறப்பாகச் செய்திருந்தனர். கோவில் அர்ச்சகர் K.நெல்லைகுமரன் சுவாமி சிறப்பு வழிபாடுகளை நடத்தி வைத்தார்.









