புதன், 24 டிசம்பர், 2025

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் 38-ஆம் ஆண்டு நினைவு தினம்

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடி : டிச 24

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்  38-ஆம் ஆண்டு நினைவு தினம் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு இன்று காலை 11மணியளவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக அலுவலகம் முன்பும், தொடர்ந்து தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

thoothukudileaks


இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை தாங்கினார். அப்போது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அவரது அரசியல் சேவைகள் குறித்து நினைவுகூரப்பட்டது.

நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், முன்னாள் மற்றும் தற்போதைய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மௌன அஞ்சலி செலுத்தினர்.

செவ்வாய், 23 டிசம்பர், 2025

தவெக-விலும் சாதி அரசியல் குற்றச்சாட்டு விஜய்-ன் தவெககட்சியில் பெண் என்பதால் பதவி மறுப்பா !!!

photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாவட்டம் 6 தொகுதிகளிலும் எந்த ஒரு சாதியும் பெரும்பான்மை அல்ல; ஒவ்வொரு தொகுதியிலும் 2–3 சாதிகள் தான் வெற்றியை நிர்ணயிக்கின்றன என்ற முக்கிய அரசியல் தகவல் வெளியாகியுள்ளது 

இது பற்றிய செய்தியாவது:-

சென்னை | 23.12.2025

தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) பல ஆண்டுகளாக களப்பணியாற்றியும், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண் நிர்வாகி அஜிதா ஆர்க்னஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகத்தை தொடங்குவதற்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை “விஜய் மக்கள் இயக்கம்” என்ற பெயரில் நடத்தி வந்தார். 


அந்த இயக்கத்தில், திமுகவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ள பில்லா ஜெகன் (ஜெகன்) மற்றும் அவரது சகோதரர் சுமன் ஆகியோர் முக்கிய பொறுப்புகளில் இருந்தனர். விஜய் படம் வெளியான போது தோரணம் கட்டுதல், ரசிகர்களை முதல் காட்சிக்கு திரட்டுதல், இயக்கத்தின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் கட்சி தொடங்கியதையடுத்து, அவர்கள் ஏற்கனவே திமுகவில் செயல்பட்டு வந்ததால் ரசிகர் மன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகினர். இதன் பின்னர், பில்லா ஜெகனின் தங்கை அஜிதா ஆர்க்னஸ் தவெக கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்றத் தொடங்கினார்.


கட்சித் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள் நிகழ்ச்சிகள், மாலையணிவிப்பு, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பணிகளில் அஜிதா ஆர்க்னஸ் தொடர்ந்து செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.


விஜய் கட்சியில்

பெண் என்பதால் பதவி மறுப்பு தெரிவித்தார்களா!!!


 இருப்பினும், அவர் பெண் என்பதாலும், தூத்துக்குடி மாவட்டத்தின் சமூக அரசியல் சமநிலை காரணமாகவும், மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த சாதிக்கும் பெரும்பான்மை இல்லை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் எந்த ஒரு சாதிக்கும் பெரும்பான்மை கிடையாது என்பதே அரசியல் யதார்த்தம். 

இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் அங்காங்கே இரண்டு அல்லது மூன்று சாதிகள் மட்டுமே தேர்தல் வெற்றி–தோல்வியை நிர்ணயிக்கும் நிலையில் உள்ளன என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி,

விளாத்திகுளம் – ரெட்டியார், நாயக்கர்

கோவில்பட்டி – நாயக்கர், தேவர்

ஓட்டப்பிடாரம் – தலித், வேளாளர்(பிள்ளை)

திருவைகுண்டம் – 

தேவர், வேளாளர் ( பிள்ளை), தேவேந்திர குல வேளாளர், நாடார்

திருச்செந்தூர் – பரதர், முஸ்லிம், தலித், நாடார், யாதவ்

தூத்துக்குடி – பரதர் (மீனவர்), வேளாளர் (பிள்ளை), நாடார், தேவேந்திர குல வேளாளர்

என ஒவ்வொரு தொகுதியிலும் சமூக அரசியல் சமநிலை மாறுபட்டு காணப்படுகிறது.

இதன் காரணமாகவே, கடந்த தேர்தல்களில் பாஜக தமிழிசை சௌந்தரராஜன், அதிமுக வேலுமணி உள்ளிட்ட வேட்பாளர்கள் தங்களது சாதி அடையாளங்களை முன்னிறுத்தியும் தோல்வியை சந்தித்தனர். 

வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த கனிமொழி இடம் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது. இது, ஒரே சமூக அரசியலை முன்னிறுத்தி வெற்றி பெற முடியாது என்பதற்கான தெளிவான எடுத்துக்காட்டாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில வருடங்களாக  அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களையே மாவட்ட செயலாளர்களாக நியமித்து வருவதால் தேர்தல் தோல்வியை சந்தித்து வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை என்றும் அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தவெக-விலும்  சாதி அரசியல் குற்றச்சாட்டு

தவெக கட்சியிலும், நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையே தூத்துக்குடி மாவட்ட செயலாளராக நியமிக்க வேண்டும் என பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், நடிகர் விஜய்க்கு யோசனை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் அதிருப்தி ஏற்படுத்தி இருக்கின்றது.


இதன் விளைவாக, நாடார் சமூகத்தைச் சேர்ந்த எஸ்டிஆர் சாமுவேல்ராஜ் என்பவருக்கு தவெக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அவரும் கட்சித் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள்களில் மாலையணிவிப்பு, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தேர்தலை சந்திப்பதற்கு முன்பே தவெக கட்சிக்குள் கடும் கோஷ்டி பூசல் நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அஜிதா ஆர்க்னஸ் தனது ஆதரவாளர்களுடன் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். 


ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவரை அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு பணியாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு தடையால் உணர்ச்சிவசப்பட்ட அஜிதா ஆர்க்னஸ் அலுவலகம் முன்பு கதறி அழுததாக கூறப்படுகிறது. இதைக் கண்ட அவரது ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.


வீடியோ பார்க்க 

பின்னர், தவெக கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், அஜிதா ஆர்க்னஸுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து,

“தலைமை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. உயிருள்ளவரை தமிழக வெற்றி கழகத்தில் விஜய்க்காக பயணிப்போம்”

எனக் கூறி, அஜிதா ஆர்க்னஸ் தர்ணா போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

🗞️ தூத்துக்குடி லீக்ஸ்

👉 

தூத்துக்குடி பிரபல ஹோட்டலில் QR கோடு ஸ்டிக்கர் மாற்றி பண மோசடி ஒருவர் கைது – சைபர் குற்றப்பிரிவு அதிரடி

தூத்துக்குடி, டிச.23 :

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் QR Code ஸ்டிக்கரை மாற்றி ஒட்டி சைபர் மோசடியில் ஈடுபட்ட இளைஞரை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

தூத்துக்குடி நகரில் செயல்பட்டு வரும் ஒரு உணவகத்தில் உணவு உண்ட வாடிக்கையாளர் ஒருவர், அதற்கான தொகையை QR ஸ்கேனர் மூலம் அனுப்பிய நிலையில், அந்த பணம் ஹோட்டல் உரிமையாளரின் வங்கி கணக்கிற்கு வராமல் இருப்பது தெரியவந்தது. 



இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் உரிமையாளர், தனது கடையில் இருந்த QR Code ஸ்கேனர் சாதனத்தை சோதனை செய்த போது, அதில் வேறு ஒருவரின் வங்கி கணக்கைச் சேர்ந்த QR Code ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர், நேற்று (22.12.2025) தேசிய சைபர் குற்ற புகார் தளம் (NCRP) மூலம் புகார் அளித்தார். அதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு)   தீபு  மேற்பார்வையில், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்  சாந்தி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


தொழில்நுட்ப ரீதியான விசாரணையில், அந்த QR Code-இன் வங்கி கணக்கும், அதனுடன் தொடர்புடைய செல்போன் எண்ணும் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. 

thoothukudileaks
ஹோட்டலில் QR Code ஸ்டிக்கரை மாற்றி சைபர் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட முருகானந்தம்.


அதில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த குமார் மகன் முருகானந்தம் (26) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதும், அவரது செல்போன் இருப்பிடம் தூத்துக்குடி பள்ளிவாசல் பஜார் பகுதியில் இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து, நேற்று (22.12.2025) சைபர் குற்றப்பிரிவு போலீசார், எதிரி முருகானந்தத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், ஹோட்டலில் தனது வங்கி கணக்கின் QR Code ஸ்டிக்கரை ஒட்டி, வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடியாக பெற்றது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

மேலும், இதுபோன்று வேறு இடங்களிலும் QR Code மோசடிகளில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறு வணிகர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் அனைத்து வியாபாரிகளும், தங்கள் கடைகளில் பயன்படுத்தப்படும் QR Code-களை அடிக்கடி சோதனை செய்து, இவ்வகை சைபர் மோசடிகளைத் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

👉 

திங்கள், 22 டிசம்பர், 2025

திருவைகுண்டம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் எர்ணாவூர் நாராயணன் போட்டியிடுவது உறுதி சமத்துவ மக்கள் கழக மாவட்ட அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு விழா வில் அறிவிப்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: டிச 22

திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் போட்டியிட சமத்துவ மக்கள் கழகம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இது பற்றிய செய்தியாவது:-

இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில், மாவட்ட அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு–2026 விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ் தலைமை வகித்தார்.



தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியத் தலைவரும், சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவருமான எர்ணாவூர் நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கிறிஸ்துமஸ் கேக் வெட்டி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

“திருவைகுண்டம் தொகுதியில் நானே போட்டி” – எர்ணாவூர் நாராயணன் உறுதி

விழாவில் பேசிய எர்ணாவூர் நாராயணன்,

“தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த ஆண்டு 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், சமத்துவ மக்கள் கழகம் சார்பில் திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு தொகுதிகளை கேட்க உள்ளோம். இதில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் (திருவைகுண்டம்) சட்டமன்ற தொகுதியில் போட்டியிட நாம் இப்போதே தயாராக உழைக்க வேண்டும்.



மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமையில், நிர்வாகிகள் அனைவரும் திருவைகுண்டம் தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும். பாகம் வாரியாக கணக்கெடுத்து, வெளியூரில் இருக்கும் வாக்காளர்களையும் அடையாளம் காண வேண்டும். இந்த பணிகளை முடித்து வாக்காளர் பட்டியலை என்னிடம் வழங்கினால், சீட் வாங்குவது எனது பொறுப்பு. அந்த தொகுதியில் நானே போட்டியிட உள்ளேன்” என உறுதியாக தெரிவித்தார்.

நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்பு!!!

இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் வழக்கறிஞர் கண்ணன், தலைமைச் செயலக முன்னாள் அதிகாரி ரவீந்திரன், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணிபிச்சை, மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சகாயராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் அருள்ராஜ், அந்தோணி சேவியர், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயகசமாடன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்துசெல்வம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட விவசாய அணி செயலாளர் கனகராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் குருவம்மாள், சந்திரா, ஜேசுச்செல்வி, ஜெபராணி, ராதா லட்சுமி, பனிமதி, சாந்தி, பிரம்மசக்தி, பாத்திமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சதீஷ் மூர்த்தி, உடன்குடி ஒன்றிய செயலாளர் பாலாஜி, கருங்குளம் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், கயத்தார் ஒன்றிய செயலாளர் சவரி மிக்கேல், திருச்செந்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜ், திருச்செந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜ், மாநகர அவைத்தலைவர் மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

— தூத்துக்குடி லீக்ஸ்

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

முதலமைச்சர் முக.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மாவட்ட செயலாளா்களுடன் கலந்துரையாடல் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

photo news by sunmugasuthram press club president 

தூத்துக்குடி டிச22

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வரைவு வாக்காளா் பட்டியல் சாிபாா்த்தல் குறித்து திமுக மாவட்ட செயலாளா்கள் கூட்டம் சென்னையிலிருந்து காெணாலி காட்சி வாயிலாக நடைபெற்றது. முகாம் அலுவலகத்திலிருந்து பேசிய தமிழக முதலமைச்சா் தமிழ்நாட்டில் 15 சதவீத வாக்காளா்களை 97 லட்சம் வாக்காளா்களை நீக்கி வரைவு வாக்காளா் பட்டியல் வௌியிட்டுள்ளாா்கள். 



இடம் பெயா்ந்தவா்கள் என்று மட்டும் 68 லட்சம் பேரை நீக்கியிருக்கிறாா்கள். எஸ்ஐஆர் பணிகளை ஆரம்பித்தபோதே இது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் தமிழ்நாட்டு வாக்காளா்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது. என்று முன்கூட்டியே எச்சாித்திருந்தோம்




உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருக்கிறோம் இந்நிலையில் வௌியிடப்பட்ட பட்டியல்களை சாிபாா்த்து அந்த அந்த மாவட்ட செயலாளர்கள் தகுதியான வாக்காளா்கள் யாரும் விடுப்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்து பணியாற்ற வேண்டும். 

களத்திற்கே வரதா... பாஜக அதிமுக சதி வேலையை முறியடிக்க வேண்டும் 

"இனி தான் உரக்கமின்றி முழு அசுரப்பலத்துடன் பணியாற்ற வேண்டும். சற்று அசந்து இருந்தால் கூட களத்திற்கே வரதா பாஜக அதிமுக சதிவேலைகள் ஏதோ வைத்திருப்பது போல் தொிகிறது என்று கூறியது மட்டுமின்றி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனிடம் மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி கோவில்பட்டி விளாத்திகுளம் ஆகிய 3 தொகுதிகளில் ஆற்றிய பணிகளும் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் கேட்டறிந்து விரைவாக தகுதியுள்ள அனைத்து வாக்காளா்களையும் புதிய படிவத்தில் விண்ணப்பித்து இணைக்க வேண்டும்" 



அதே போல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்குசாவடிகளுக்கும் பிஎல்ஏ 2 மற்றும் பாகமுகவா்கள் புதிதாக நியமணம் செய்யப்பட்டு அந்த பணிகளையும் முறைப்படுத்த வேண்டும். என்று கூறினாா்."


பதிலுரையில் அனைத்து பணிகளையும் முன்னெடுத்து மாநில மாவட்ட மாநகரம் ஓன்றியம் நகரம் உள்ளிட்ட நிா்வாகிகள் மட்டுமின்றி களப்பணியாற்றிகொண்டிருக்கும் பிஎல்ஏ 2 மற்றும் பாக முகவா்கள் அனைவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் கீதாஜீவன் தொிவித்தாா்.

செய்தி வீடியோ செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

திமுக இன்னும் மதசார்பற்ற கட்சி என மக்கள் நம்ப வேண்டுமா ? முதல்வர் ஸ்டாலினோடு முருகன் கைகோர்த்துள்ளார்” எனப் பேசுவது, தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை அவமதிக்கும் செயல் என பாஜக கடும் காட்டம்!!!

 முருகப் பெருமான் மீது நம்பிக்கையில்லாத முதல்வர் ஸ்டாலினோடு

முருகன் எப்படி கைகோர்ப்பார்?

தனது அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி வரும் உதயநிதி,

முழு உண்மைகளையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்

கடந்த 2022ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,

"நானும் ஒரு கிறிஸ்துவன் தான். கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். நான் காதலித்து மணந்ததும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்தான்"

என்று வெளிப்படையாகக் கூறினார்.


thoothukudileaks


அந்த நேரத்தில் தனிப்பட்ட நம்பிக்கையாக கூறப்பட்ட இந்த கருத்து, தற்போது அரசியல் நிலைப்பாடாக மாறியுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,

"கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திமுக கொள்கைகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இரண்டுமே மனித நேயம், சமத்துவத்தை போதிக்கின்றன. சாதாரண மனிதரும் மக்கள் தலைவராக முடியும் என்பதை நிரூபித்தவர் இயேசு கிறிஸ்து"

என்று பேசியுள்ளார்.

கிறிஸ்தவ மதத்தையும், இயேசு கிறிஸ்துவின் போதனைகளையும் பாராட்டுவதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அது வரவேற்கத்தக்கதே. ஆனால், “கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திமுக கொள்கைகளுக்கும் வேறுபாடு இல்லை” என்ற கூற்றின் மூலம், திமுக ஒரு மதச்சார்பற்ற கட்சி என்ற அடையாளத்தை இழந்து வருகிறதா என்ற கேள்வி எழுகிறது.

இதுவரை தங்களை நாத்திகர்கள் என்றும், மதச்சார்பற்றவர்கள் என்றும் கூறி வந்த திமுக தலைமையினர், இப்போது மத அடையாளத்தை வெளிப்படுத்துகிறார்களா? கடந்த சில ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக தனது உண்மையான அடையாளத்தை வெளிக்கொணர்ந்து வரும் உதயநிதி ஸ்டாலின், மீதமுள்ள உண்மைகளையும் வெளிப்படையாகச் சொல்லிவிடுவது நல்லது.

"சாதாரண மனிதரும் மக்கள் தலைவராக முடியும்" என்பது உண்மையேயான கருத்துதான். ஆனால், திமுகவில் அந்த வாய்ப்பு உண்மையில் இருக்கிறதா? கருணாநிதி குடும்பத்தைத் தவிர, தற்போது ஸ்டாலின் குடும்பத்தைத் தவிர, வேறு யாரும் தலைமை பதவியை கனவில்கூட நினைக்க முடியாத நிலை உள்ளது. ஸ்டாலின் குடும்பத்து ஆண் வாரிசுகளுக்கே தலைமை பதவி என்ற நிலை தொடரும் நிலையில், சாதாரண தொண்டன் தலைவர் ஆக முடியுமா என்ற கேள்விக்கு உதயநிதி பதில் சொல்ல வேண்டும்.

திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் பி.கே. சேகர்பாபுவின் செயல்பாடுகள், இந்துக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன. இந்து கோவில் மரபுகள், திருவிழாக்கள் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில், அதற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்கின்றன.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை நடைமுறைப்படுத்த மறுப்பது, இந்து உணர்வுகளுக்கு இழைக்கப்படும் அவமதிப்பாகவே பார்க்கப்படுகிறது. கோவில் பணத்தை பயன்படுத்தி, கோவில்களுக்கு எதிராக வழக்குகள் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவின் இந்து விரோதப் போக்கு வெளிப்பட்ட நிலையில், “முதல்வர் ஸ்டாலினோடு முருகன் கைகோர்த்துள்ளார்” எனப் பேசுவது, தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை அவமதிக்கும் செயல் ஆகும்.

முருகப் பெருமான் மீது நம்பிக்கை இல்லாதவர்களாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டவர்கள், அவரை அரசியல் விளம்பரத்திற்காக பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்துக்கள் இன்று விழிப்புணர்வு பெற்றுள்ளனர். நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்து விரோதப் போக்குடன் செயல்படும் திமுக அரசுக்கு, உரிய நேரத்தில் தக்க பதிலை வழங்குவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

— ஏ.என்.எஸ். பிரசாத்

செய்தி தொடர்பாளர்


சனி, 20 டிசம்பர், 2025

தூத்துக்குடியில் சாலை ஓரமாக உறங்கும் ஆதரவற்றோருக்கு போர்வை வழங்கல் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி டிச20

தூத்துக்குடி பியர்ல்சிட்டி பத்திரிகையாளர் சங்கம் மற்றும் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில், இரவு நேரத்தில் சாலை ஓரங்களில் உறங்கும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் வீடு இல்லாத மக்களுக்கு போர்வை வழங்கும் மனிதநேய சேவை நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகர பகுதியில் நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


இந்நிகழ்ச்சியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து, போர்வைகளை வழங்கினார். அவருடன் பியர்ல்சிட்டி பத்திரிகையாளர் சங்க செயலாளர் காட்சன், ஆல் கேன் டிரஸ்ட் நிறுவனரும் தூத்துக்குடி மாவட்ட அரசு வழக்கறிஞருமான மோகன் தாஸ் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவற்றோருக்கு போர்வைகளை வழங்கினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பணிச்சுமை அதிகம் இருப்பதாலும், வீடு இல்லாத முதியவர்கள் பலர் சாலை ஓரங்களில் உறங்க வேண்டிய சூழ்நிலை நிலவுவதாலும், தற்போது நிலவும் அதிகமான பனிப்பொழிவு காரணமாக அவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 


இதனை கருத்தில் கொண்டு, மனிதநேய அடிப்படையில் இந்த போர்வை வழங்கும் சேவை முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், வேம்படி இசக்கி அம்மன் கோவில், பனிமய மாதா கோவில், சிவன் கோவில் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சாலை ஓரமாக உறங்கும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் வீடு இல்லாமல் தங்கிய மக்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டன.

.

மனிதநேயத்தை வெளிப்படுத்தும் இச்சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.