Tamil Nadu updates,தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி புகைப்படங்கள் செய்தி ரோஜா அருணன்
தூத்துக்குடி, ஜூன் 24:
தூத்துக்குடி மாநகராட்சியை பசுமை நிறைந்த, எழில்மிகு நகரமாக மாற்றுவதோடு, நகர மக்களின் வாழ்வியல் தரத்தை உயர்த்தும் நோக்கில் “முத்து நகரின் பசுமைப் பயணம்” திட்டத்தின் கீழ் பங்குதாரர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் உரையாற்றிய மாநகராட்சி ஆணையாளர், பிரியங்கா ...
தூத்துக்குடி நகரம் மக்கள் தொகை, போக்குவரத்து மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் தொடர்ந்து முன்னேறி வருவதால் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார்.
வருங்காலம்!!!
வருங்கால தலைமுறைகளின் நலனை கருத்தில் கொண்டு பசுமை மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகரம் டிஜிட்டல் அடித்தளம்!!!
மேலும், இத்திட்டத்தின் மூலம் நகரின் பசுமை மேம்பாட்டிற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதுடன், பராமரிப்பு மற்றும் கண்காணிப்பிற்கான டிஜிட்டல் அடித்தளமும் ஏற்படுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் உங்கள் கருத்துக்களை அறிவுரை கூறுங்கள்????
பொதுமக்கள், வணிகர்கள், தொழில் முனைவோர், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு அமைப்புகள் தங்களது கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் பங்களிப்புகளை தனித்தனியாகவோ அல்லது ஒருங்கிணைந்த முறையிலோ வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை!!!
திட்டத்தின் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடுதல், பூங்காக்கள் பராமரித்தல், பொது சுவர்களை வண்ணமயமாக்கி விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுதல், சாலைகளில் தூசி அகற்றும் பணிகள், மரங்களுக்கு தண்ணீர் வழங்கும் வசதிகள் ஏற்படுத்துதல், தொழில்நுட்ப ஆதரவு வழங்குதல், விளம்பரப் பலகைகளுக்கான பாதுகாப்பான அமைப்புகள் உருவாக்குதல், பொது கழிப்பறைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் இடுகாடுகளை உயர்தரத்தில் பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் பங்குதாரர்கள் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு தரப்பினரும் திட்டத்திற்கு தங்களது ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
–












