செவ்வாய், 13 ஜனவரி, 2026

தூத்துக்குடி அய்யா வழி கோவில் (அகில பதி) வளாகத்தில் சமத்துவ பொங்கல்

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடியில் சமய நல்லிணக்க பொங்கல் விழா

தூத்துக்குடி, ஜன.13:

தூத்துக்குடியில் பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பில் சமய நல்லிணக்க பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை (13.01.2026) போல்பேட்டை பகுதியில் உள்ள அய்யா வழி கோவில் (அகில பதி) வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.







விழாவிற்கு அய்யா வழி பதி சார்பில் இராமகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து அனைத்து சமயத்தினரும் ஒன்றிணைந்து பொங்கலிட்டு, சமய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர். 



நிகழ்வில் கணேசன் மற்றும் கிருஷ்ணவேணி சிறப்பு உரையாற்றி, சமய நல்லிணக்கத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து அருட்பணி பென்சிகர் லூசன் அடிகளார், இஸ்லாமிய கூட்டமைப்பைச் சேர்ந்த சம்சுதீன், கிறித்தவ மறுமலர்ச்சி இயக்கத்தின் மா. தங்கையா மின்னல் அம்ஜத், ஜான் பிராயன்,  ஆறுமுகம், சாமுவேல் காந்தி சன் மாக்க குலம் நற்செய்தி நடுவத்தைச் சேர்ந்த மைக்கிலின் மேரி  உள்ளிட்டோர் வாழ்த்துரைகள் வழங்கி பேசினர்.





நிகழ்வின் முடிவில் தங்கையா நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியை பல்சமய உரையாடல் பணிக்குழு மற்றும் நற்செய்தி நடுவம், தூத்துக்குடி சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சனி, 10 ஜனவரி, 2026

தூத்துக்குடியில் நூல் வெளியீட்டு விழா – “புறம் பேசலாமா!”

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

செய்தி புகைப்படங்கள் அருணன் செய்தியாளர் 

தூத்துக்குடி :ஜன10

எழுத்தாளர் மின்னல் அம்ஜத் அவரின் புதிய நூலான “புறம் பேசலாமா!” என்ற நூல் வெளியீட்டு விழா தூத்துக்குடியில் சிறப்பாக நடைபெற்றது. 

சமூக, அரசியல், மனித உரிமை, தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல்வேறு தளங்களைச் சேர்ந்த பிரபலங்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு கலாபன் வாஸ் அவர்கள் (வயது 9-4), முன்னாள் Flying Officer (Rtd), இந்திய விமானப்படை தலைமை வகித்தார். தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் O.A. நாராயணசாமி  முன்னிலை வகித்தார்.

நூலைப் பெற்று மதிப்புரை வழங்கியவர்களாக அருட்திரு ஜேம்ஸ் விக்டர் (எ) சுந்தரி மைந்தன் (கிறித்துவ வாழ்வுரிமை இயக்கம்) மற்றும் பேராசிரியர் பாத்திமா பாபு (ஒருங்கிணைப்பாளர், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் – ASPM) ஆகியோர் கலந்து கொண்டு, நூலின் கருத்தாக்கம், சமூக விமர்சனம் மற்றும் எழுத்து நடையின் ஆழம் குறித்து பாராட்டினர்.

thoothukudileaks


விழாவில் அருட்தந்தை X.D. செல்வராஜ் அவர்கள் ஏற்புரை வழங்கினார். தொடர்ந்து PUCL மாவட்ட தலைவர் Dr. காயல் மெளலானா D.LII (USA), நமது தேசம் மாத இதழ் கௌரவ ஆசிரியர் யூ. அண்டோ, நெய்தல் எழுத்தாளர்கள் & வாசகர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் 


இரா. மாடசாமி, தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கத் தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

நூலின் முதல் பிரதியை செந்தமிழ் மன்ற மாநில தலைவர் ஷாஜஹான்  பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியை தங்கையா அவர்கள் (ஒருங்கிணைப்பாளர், இந்திய கிறித்தவ மறுமலர்ச்சி இயக்கம், தூத்துக்குடி மறைமாவட்டம்) தொகுத்து வழங்கினார்.

ஷாரா. முபாரக் (முதல்வர், ஷாரா கலை பயிற்சிப் பள்ளி) நன்றியுரை வழங்கினார்.

thoothukudileaks


நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக தாளமுத்து செல்வா (மாவட்ட செயலாளர், மக்கள் அதிகாரக் கழகம் – நூல் வெளியிடுபவர்கள்) செயல்பட்டார்.

நூலின் வடிவமைப்பை மை. காதர் பாட்சா (பிஸ்மி பிரிண்டர்ஸ், தூத்துக்குடி) செய்திருந்தார்.

மேலும் விழாவில் புரட்சி பாரதம் கட்சி, தமிழ்நாடு மக்கள் நல இயக்கம், AICCTU, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தாயக மக்கள் கட்சி, தமிழக மீனவ மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல், தொழிற்சங்க மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நூலாசிரியர் மின்னல் அம்ஜத் அவரை வாழ்த்தினர்.

சமூக சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ள “புறம் பேசலாமா!” நூல், வாசகர்களிடையே புதிய விவாதங்களை உருவாக்கும் என்ற நம்பிக்கையுடன் விழா நிறைவடைந்தது.

வெள்ளி, 9 ஜனவரி, 2026

தூத்துக்குடியில் தமிழ்தேசிய போராளி சி. பசுபதிபாண்டியன் 14ம் ஆண்டு வீர வணக்கம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

photo news by Arunan journalist 


தூத்துக்குடி : ஜனவரி 10

தமிழ்தேசிய போராளி சி. பசுபதிபாண்டியன் அவர்களின் 14ம் ஆண்டு வீர வணக்க தினம், ஜனவரி 10ஆம் தேதி தூத்துக்குடி அலங்காரதட்டை பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பெரும் எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற வீர வணக்கம் – குருபூஜை நிகழ்வில்,

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு எம்எல்ஏ, எஸ்.பி. சண்முகநாதன், ராஜேந்திர பாலாஜி, வி.எம். ராஜலட்சுமி, சித. செல்லபாண்டியன், கிருஷ்ணமூரளி, குட்டியப்பா எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பசுபதிபாண்டியனின் நினைவிடத்தில் மலர்தூவி, தீபம் ஏற்றி வீர வணக்கம் செலுத்தினர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


மேலும், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, தமிழ்தேசிய போராளியின் தியாகத்தை நினைவுகூர்ந்தனர்.

இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சி தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் மருதம் மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் நடத்தப்பட்டது.

சந்தனபிரியா பசுபதி பாண்டியர் B.A., மாநில பொதுச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நினைவிடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தமிழ்தேசிய உணர்வை வலியுறுத்தும் உரைகள் இடம்பெற்றன.



நிகழ்ச்சி முழுவதும் உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றதுடன், பசுபதிபாண்டியனின் போராட்ட வாழ்க்கையும், தமிழ்தேசிய விடுதலைக்கான அவரது அர்ப்பணிப்பும் நினைவுகூறப்பட்டது.





தமிழ்தேசிய போராளி சி. பசுபதிபாண்டியன் 14ம் ஆண்டு வீர வணக்கம்

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

செய்தி புகைப்படங்கள் அருணன் செய்தியாளர் 

ஜனவரி 10 – தமிழ்தேசிய போராளி சி. பசுபதிபாண்டியன் 14ம் ஆண்டு வீர வணக்கம்

தூத்துக்குடி:ஜன10

தமிழ்தேசிய போராளி சி. பசுபதிபாண்டியன் 14ம் ஆண்டு வீர வணக்க தினம் ஜனவரி 10ஆம் தேதி தூத்துக்குடி அலங்காரதட்டை பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பெரும் எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

thoothukudileaks

thoothukudileaks


இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சி தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் மருதம் மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் நடத்தப்பட்டது. 

சந்தனபிரியா பசுபதி பாண்டியர் B.A., மாநில பொதுச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நினைவிடத்தில் மலர்தூவி, தீபம் ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பினருடன், தமிழ்தேசிய போராளி பசுபதிபாண்டியன் அவரின் தியாகத்தை நினைவுகூர்ந்து பெரும் எழுச்சியுடன் வீர வணக்கம் செலுத்துவதற்காக பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த  முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள வருகை தர இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.








இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ்தேசிய உரிமைகள், சமூக நீதி மற்றும் மக்கள் நலனுக்காக போராடிய பசுபதிபாண்டியன்  நினைவு மீண்டும் உயிர்ப்புடன் நினைவுகூரப்பட்டது.

thoothukudileaks
தனியரசு எம்எல்ஏ நினைவிடத்தில்...


தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிரடி

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

கடந்த 3 நாட்களில் கஞ்சா ஆயில் பறிமுதல்:

₹1.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றல் – 4 பேர் கைது என  இது பற்றிய செய்தியாவது...

தூத்துக்குடி ஜன9

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த 3 நாட்களில் சுமார் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த 07.01.2026 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் அருளப்பன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா ஆயில் வைத்திருந்த 2 எதிரிகளை கைது செய்தனர். 

thoothukudileaks


அவர்களிடமிருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அதேபோல், நேற்று (08.01.2026) தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா ஆயில் வைத்திருந்த மேலும் 2 எதிரிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் அவர்களின் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, கடந்த 3 நாட்களில் மொத்தம் ரூ.1.50 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் தடுக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு “DrugFreeTN” என்ற செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியின் மூலம், கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அநாமதேயமாக (Anonymous) புகார் அளிக்கலாம். புகாரளிப்பவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பழக்கத்தை குறைக்கும் நோக்குடன், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் வாங்குவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

— தூத்துக்குடி லீக்ஸ்

வியாழன், 8 ஜனவரி, 2026

இனி பிறப்பு இறப்பு வாட்ஸ்ஆப்பில் சான்றிதழ்கள் பெறலாம் தமிழ்நாடு அரசின் புதிய டிஜிட்டல் சேவை தொடக்கம் வாட்ஸ் அப் செல்போன் எண் முழு விவரம்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி photo news by Arunan journalist 

சென்னை, ஜன. :9

தமிழகத்தில் முதன்முறையாக வாட்ஸ்ஆப் செயலியுடன் இணைந்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறுதல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

thoothukudileaks


இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வாட்ஸ்ஆப் நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் இ-சேவை மைய அதிகாரிகள் இடையே கையெழுத்தானது.

இந்த புதிய சேவையின் மூலம், பொதுமக்கள் நேரடியாக அலுவலகங்களுக்கு செல்லாமல், தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை சார்ந்த பல்வேறு சான்றிதழ்களை எளிதாக பெற்றுக்கொள்ள முடியும்.

"பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மட்டுமின்றி, வருமானம், சமூக நிலை உள்ளிட்ட முக்கிய சான்றிதழ்களும் இந்த வாட்ஸ்ஆப் சேவையின் மூலம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது"

இதற்காக பொதுமக்கள் 

78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினால், தேவையான சேவைகள் குறித்து வழிகாட்டுதலுடன் சான்றிதழ்களை பெற முடியும்.

thoothukudileaks


டிஜிட்டல் இந்தியா இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு எடுத்து வரும் இந்த முயற்சி, பொதுமக்களின் நேரமும் செலவும் மிச்சமாகும் வகையில் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

உங்க கனவ சொல்லுங்க’ திட்டம் நாளை தொடக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு தமிழகமெங்கும் 50,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுடன் நேரடி உரையாடல்

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி


தமிழக மக்களின் எதிர்கால கனவுகள், தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நேரடியாக அறிந்து கொள்ளும் நோக்கில், தமிழக அரசின் முக்கியமான மக்கள் தொடர்புத் திட்டமான ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்    தொடங்கி வைக்கிறார்.

thoothukudileaks


இந்த திட்டத்தின் தொடக்க விழா திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற உள்ளது. 

இத்திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள 1.91 கோடி குடும்பங்களை நேரில் சந்தித்து, அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான கனவுகள், அடிப்படை தேவைகள், அரசிடம் உள்ள கோரிக்கைகள் ஆகியவை பதிவு செய்யப்பட உள்ளன.

இதற்காக தமிழகமெங்கும் 50,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுடன் நேரடி உரையாடல் நடத்தி, அவர்களின் கருத்துகளை சேகரிக்க உள்ளனர்.


 மக்கள் சொல்வதையே திட்டங்களாக மாற்றும் நோக்கில், இம்முயற்சி அரசின் நிர்வாகத்தில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பங்கேற்புடன் கூடிய நிர்வாகத்தை வலுப்படுத்தும் இந்த ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம், தமிழகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு புதிய பாதையை உருவாக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

— தூத்துக்குடி லீக்ஸ்