Tamil Nadu updates photo news by Arunan journalist
தூத்துக்குடி, ஜூன் 22:
தூத்துக்குடி ராஜம் அறக்கட்டளை சார்பில் ஏழை மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டு மற்றும் சீருடை வழங்கும் விழா இன்று (22.06.2026) மாலை 5 மணிக்கு தூத்துக்குடி ராஜம் மஹாலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாகி எஸ். ரம்போலா தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினராக முன்னாள் துணைத் தலைவர் ஆ. தேவராஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும், அருட்திரு கீஷோர் முன்னிலை வைத்தார்
video
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா பங்கேற்று மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை நோட் புக் பள்ளி சீருடைகள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் 10 பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது.
கல்வி வளர்ச்சிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் உதவும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
.












