தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
news by Arunan senior reporter weekly
தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலத்துறை அமைச்சரான கீதாஜீவனுக்கு எதிராக கிராம மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகிலுள்ள அத்திமரப்பட்டி, முள்ளக்காடு, பொட்டல்காடு, சவேரியார்புரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைக்க முயற்சிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த திட்டத்திற்கு அமைச்சரான கீதாஜீவன் உடந்தையாக உள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சருக்கு எதிராக ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இணைந்து கருப்புக்கொடி ஏந்தி திமுக வேட்பாளர் கீதா ஜுவன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களும் எழுப்பப்பட்டன.
போராடும் போது கண்டு கொள்ளாதவர் என குற்றச்சாட்டு!!!
கடந்த காலங்களில் தாங்கள் போராடும் போது கலந்து கொள்ளவும் கண்டு கொள்ளவும் இல்லை இப்போது எதற்கு வருகின்றனர் என கேள்வி எழுப்பினார்கள்
மேலும் இதேபோல், நேற்று(4-3-2026) திருச்செந்தூர் பகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரச்சாரத்திற்கு சென்றபோது, கிராம மக்கள் அவரை உள்ளே வரவிடாமல் தடுத்து விரட்டி அடித்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர் எதிர்ப்புகள் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசியல் சூழ்நிலையை சூடுபிடிக்க வைத்துள்ளன
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக வேட்பாளர்கள் பிரச்சாரம் பண்ண வருகையில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்புகளை காட்டி வருகின்றனர்



