சனி, 22 பிப்ரவரி, 2025

கொலுசு, வளையல் சத்தம் அவசியம்

கர்ப்பிணி பெண்களின் குழந்தை மகிழ்ச்சி: கொலுசு, வளையல் சத்தம் அவசியம்

Tamil Nadu updates,

Photo news by sunmugasuthram Reporter 

தூத்துக்குடி – ஊரக வளர்ச்சி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற “சமுதாய வளைகாப்பு விழா”வில், மாவட்ட திமுக செயலாளரும் சமூகநல மற்றும் மகளிர் உரிமை அமைச்சருமான கீதாஜீவன் தன் உரையில் தெரிவித்தார்.



205 கர்ப்பிணி தாய்மார்கள் “குத்துவிளக்கேற்றி” நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக 10 வகையான சீா்வாிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம், கருவுற்ற நாளிலிருந்து குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வளர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வெளிப்படுகிறது.



 தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடியில் இத்தகைய விழா நடத்தப்பட்டதை பெருமிதமாக எடுத்துரைத்தார்.

முக்கியமாக, தாய்மார்கள் கருவுற்ற நாளிலிருந்து குழந்தையின் வளர்ச்சி நிறைவடையும் வரை, வளையல் அணிவகுப்பின் ஓசைகளில் குழந்தை மகிழ்ச்சி பெறும் எண்ணத்தையும், சமூக நலத்திட்ட உதவிகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். 


மேலும், கர்ப்பக்கால பெண்கள் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகள், முட்டை, பால், பழங்கள், தானிய வகைகள் போன்றவற்றின் உணவுக் கூறுகளை பின்பற்ற வேண்டும்; இவற்றின் மூலம் தாயின் உடல் ஆரோக்கியம் மற்றும் பிறக்கும் குழந்தையின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்படுகிறது.


அமைச்சர் கீதாஜீவன் தனது உரையில், ...

கர்ப்பிணி பெண்கள் குழந்தை வளர்ச்சிக்கான ஒழுங்கான ஊட்டச்சத்து வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார். 10 மாதம் கஷ்டப்படிப் பிறகு பெற்றெடுக்கப்படும் குழந்தை குறைந்தது 3 முதல் 3½ கிலோ எடையுடன் பிறக்க, தாயின் எடை 10 கிலோ அதிகமாவதோடு உடல் தகுதி ஏற்படும். குழந்தைக்கு ஆறு மாதம் தாய்ப்பால் மட்டும் கொடுக்கப்படும்; அதன் பின், இணை உணவுகளான கீரை, பருப்பு, கஞ்சி, பழங்கள் போன்ற எளிய உணவுகளை அளிக்க வேண்டும்.

அதேபோல், அங்கன்வாடி பணியாளர்கள் இளம் தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பு குறித்த அறிவுரைகள் வழங்கி, மாற்றுத்திறன் அறிகுறிகளை 2 வயதுக்குள் கண்டுபிடித்து சரிசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும், குழந்தை பிறந்த பிறகும் ஆரோக்கிய உணவு மற்றும் ஓய்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.



இந்த விழாவில், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட சமூகநல அலுவலா் பிரேமலதா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், துணை அமைப்பாளர் ரவி, பகுதி செயலாளர் ஜெயக்குமாா், கவுன்சிலா் ஜாக்குலின்ஜெயா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர் அருணாதேவி, பகுதி மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேவதி, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மாவட்ட பொறியாளா் அணி தலைவர் பழனி மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.



மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட ஓருங்கிணைப்பாளர் விவேக் ராஜாவும் நன்றியுரையிட்டு, சமூக வளைகாப்பு விழாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தை வளர்ப்பில் மட்டும் அல்லாமல், ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கும் பெருமைப்பாடு பெற்றுள்ளனர். 


சமூக வளைகாப்பு விழா மூலம் அவர்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் பரிசோதனை உதவிகள், தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பில், குழந்தை மற்றும் தாயின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் ஒரு முயற்சியாக விளங்குகின்றது.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

பூங்காவில் முதியோருக்கான மனநல ஆலோசனை மையம் தொடக்கம்

முதியோருக்கான மனநல ஆலோசனை மையம் தொடக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், முதியோர்களின் மனநல வளர்ச்சிக்காகவும், அவர்களை மகிழ்விக்கும் நோக்கத்துடன், பூபாலராயபுரம் கருப்பட்டி சொசைட்டி சந்திப்பில் "ஆயிரம் பிறை" முதியோர் மகிழ்விடம் அமைக்கப்பட்டுள்ளது.






இந்த பூங்காவில், முதியோர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் பொருட்டு, மாநகராட்சியின் வழிகாட்டுதலில் ஒரு மனநல ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார்.


 முதியோரின் மன அழுத்தங்களை குறைக்கும் விதமாக, விளையாட்டுகள், உடற்பயிற்சிகள் மற்றும் நடத்தை மாற்றம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.



இந்த மனநல ஆலோசனை மற்றும் சீர்ப்படுத்தும் நடவடிக்கைகள் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மாலை 6.00 மணி முதல் நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. முதியோர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி மனநலத்தையும் உடல் நலத்தையும் மேம்படுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


மீண்டும் திறக்க வேண்டும் ஸ்டெர்லைட் தமிழக முதல்வருக்கு கோரிக்கை

Tamil Nadu updates, 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்: தமிழக முதல்வருக்கு கோரிக்கை


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என தமிழ்நாடு மக்கள் வாழ்வாதர பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.



இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் தியாகராஜன், செயலாளர் கணேசன், இணை செயலாளர் சிந்தா ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில்....


, "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஒரு சிலரின் தவறான புரிதல் மற்றும் அந்நிய சதியால் நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக மூடப்பட்டது. 


ஆலை மூடியதன் காரணமாக அப்பாவி தொழிலாளர்கள் சுமார் 20,000-க்கு மேல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். அதே போன்று ஆலையின் ஒப்பந்தகாரர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள், 400-க்கு மேற்பட்ட சிறு, குறு தொழிலகங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லாம் பத்திரிக்கை மூலம் ஆலையை திறக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள். 


அன்மையில் வேலூர் பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளால் ஏற்பட்ட மாசு காரணமாக, அந்த பகுதி விவசாயிகள், பொதுமக்கள், ஆகியோரது வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது பிறப்பித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் விதிமுறைகளை முறையாக பின்பற்றி தொழற்சாலைகள் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த ஆலையை மூட உத்திரவிடவில்லை. 


ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அப்படி யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதற்கான சான்றினை இதுவரை யாரும் சமர்ப்பிக்கவில்லை. வெறும் வதந்தியின் காரணமாக ஏற்பட்ட போராட்டத்தில் நடைபெற்ற துரதிஷ்டவசமான துப்பாக்கி சூட்டால் ஆலை மூடப்பட்டுள்ளது. நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளது போல் "கூட்டமாக தவறு செய்தால் அது நியாயப்படுத்தப்படுகிறது தனித்து நேர்மையாக செயல்பட்டால் அது குற்றமாக்கப்படுகிறது" என்பதற்கு ஸ்டெர்லைட் ஆலை மூடல் எடுத்துக்காட்டாகும். 


ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனால் பாதிப்புக்கு உள்ளானதாக போராட்டக்காரர்கள் குறிப்பிட்ட இடங்களையெல்லாம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த (NGT) தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில் "வலுவான காரணமின்றி ஆலை மூடப்பட்டுள்ளது என்று தெரிவித்து சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்க உத்திரவிட்டுள்ளதை" அரசு கருணையுடன் பரிசீலனை செய்ய வேண்டுகிறோம். 


அரசும் சரி, உச்சநீதிமன்றமும் சரி ஒருமுறை எடுத்த முடிவை /தீர்ப்பை சில ஆண்டுகளுக்குப் பின் தேவைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாற்றி அமைப்பது நடைமுறையில் உள்ளது. எனவே, தமிழக அரசு இதனை கெளரவப் பிரச்சனையாக கருதாமல், ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் தமிழகத்தின் தொழில், பொருளாதார வளர்ச்சியினை கருத்தில் கொண்டு, ஒரு நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து நல்ல முடிவு எடுக்க பணிவுடன் வேண்டுகிறோம். 


இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி விஷமிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தூத்துக்குடி: 

சூழ்ச்சி பின்னணி வெளிச்சம்!

Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 

சென்னை உயர் நீதிமன்றம் (மதுரை கிளை) மகத்தான தீர்ப்பு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. 



இந்த தீர்ப்பால் தூத்துக்குடி பொதுமக்கள் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் மகிழ்ச்சி அடைந்தது.

மக்கள் நீதியின் வெற்றியை கொண்டாடும் வகையில், தூத்துக்குடி நகரில் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் உற்சாகமாக கொண்டாடினர்.

ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகள்

இத்தீர்ப்புக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சும்மா இருக்கவில்லை. அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்ற (மதுரை கிளை) தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வழக்கு தொடர்ந்தனர்.

தோல்வி !!!

 ஆனால், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் சரியானது என மதிப்பீடு செய்து, மீண்டும் அவர்களுக்குத் தோல்வியளித்தது.


தமிழக அரசு உறுதி!!!

அதன் பின்னரும், ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. ஆனால், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் தமிழக அரசு தொடர்ந்து உறுதியாக எதிர்ப்பு தெரிவித்ததால், மீண்டும் இந்த வழக்கிலும் ஸ்டெர்லைட் நிர்வாகம் தோல்வியை சந்தித்தது.

தற்போதைய சூழ்நிலை மற்றும் அரசின் நடவடிக்கை அவசியம்




சில மாதங்களாக, தூத்துக்குடி மாவட்டத்தை சுற்றியுள்ள சில விஷமிகள் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும் என விளம்பரபடுத்தியும், பணம் செலவழித்து கூலியாட்களை தயார் செய்து பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் வடமாநில தொழிலாளர்களும் அடங்கும்.

விஷமிகள்!!!

இதனால், சாதி, மத கலவரம் போன்ற சமூக அமைதியை பாதிக்கும் சம்பவங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. 

குண்டர் சட்டத்தில் கைது!!!

எனவே, தமிழக அரசும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

 தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக மாற்றும் விஷமிகளை வேடிக்கை பார்க்காமல், உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகிறார்கள்.


எதிர்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புகின்றன - அமைச்சர் கீதாஜீவன் அமைச்சர் எச்சரிக்கை & மேயர் உரை

Tamil Nadu updates,

Photo news by sunmugasuthram Reporter 

தமிழகம்: எதிர்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புகின்றன - அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. 


கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் சுசீ.ரவீந்திரன் தலைமை வகித்தார். மேயர் ஜெகன் பொியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.



அமைச்சர் கீதாஜீவன் கூட்டத்தில் பேசியதாவது:

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்கட்சிகளும், ஒன்றிய பாஜக ஆதரவாளர்களும் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.


 முதலமைச்சரின் 72வது பிறந்தநாளை ஒட்டி, வடக்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட அனைத்து கிளை, பேரூர், நகர, ஒன்றியக் கழகங்களும் ஓரு வருடம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடும்.

முதலமைச்சருக்கு ஒன்றிய அரசு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. 


குறிப்பாக கல்வி நிதி, பொதுத்தொகை நிதி உள்ளிட்ட அனைத்தையும் வழங்காமல் தாமதம் செய்யும் அதே சமயம், தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை, கனவு இல்லம் போன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.


 எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பும் சூழலில், தொண்டர்கள் சாதனைகளை விளக்கித் தெருமுனை பிரச்சாரம் நடத்த வேண்டும்.

தமிழ் மொழியை அழிக்க ஒன்றிய அரசு முயற்சி

வட மாநிலங்களில் மாநில மொழிகளை அழித்து ஹிந்தியை திணித்தது போல தமிழகத்திலும் மேற்கொள்ள முயற்சிக்கின்றனர்.


 "ஆனால், தமிழக அரசு ஒருபோதும் இதை அனுமதிக்காது. 

3200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் இரும்பு உள்ளிட்ட பழமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்திய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தமிழர்களின் பெருமையை ஒருபோதும் அழிக்க முடியாது.

பேரிடர் நிவாரண நிதி வழங்க முடியாமல் பாஜக

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளுக்கு ரூ. 21,692 கோடி நிவாரண நிதி கேட்டும், ஒன்றிய அரசு இதுவரை வழங்கவில்லை. 


ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு நிதி வழங்கியுள்ளது. இத்தகைய தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழ்நாட்டு உரிமைகளை பாதுகாத்தும் செயல்பட வேண்டும்.

முதலமைச்சர் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள்

மார்ச் 1ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும். முதியோர் இல்லங்களுக்கு மதிய உணவு வழங்கி, மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்படும். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் செல்ல, தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்தப்படும்.



கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கியப் பிரமுகர்கள்

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் எச்சரிக்கை & மேயர் உரை

அமைச்சர் கீதாஜீவன்: "முதலமைச்சர் பிறந்த நாளன்று, அனைத்து பகுதிகளிலும் சாதனை விளக்கப்பதிவுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும்.


 எதிர்கட்சிகளின் பொய்யான தகவல்களை உடனடியாக மறுத்து, தமிழக அரசின் வளர்ச்சியை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்."

மேயர் ஜெகன் பொியசாமி:

 "தளபதியார் பொறுப்பேற்ற காலத்தில் கொரோனா பேரிடர் இருந்தபோதும் சிறப்பாக செயல்பட்டார்.


 இன்று தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் மக்களின் இல்லங்களில் அடைய எட்டியுள்ளது.

 எதிர்கட்சிகள் மதவாதத்தை கிளப்ப முயற்சிக்கும், ஆனால் நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்."என்றார்.


இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழக அரசின் வெற்றியை மேலும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளன.


தூத்துக்குடியில் அதிமுக திண்ணை பிரச்சாரம்

முதல் நாள் திண்ணைப் பிரச்சாரத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தொடங்கி வைத்தார்

Tamil Nadu updates, photo news by Arunan journalist 

தூத்துக்குடி, பிப். 21: தூத்துக்குடி சிவன் கோவில் முன்பு இன்று மாலை 5.30 மணிக்கு, அஇஅதிமுக அம்மா பேரவை சார்பில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது.







இந்த முதல் நாள் திண்ணைப் பிரச்சாரத்தை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.



 இதில், கட்சி நிர்வாகிகள், அம்மா பேரவை உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.





பிரச்சாரத்தின் போது, அஇஅதிமுக அரசின் முன்னோக்கி நடைபோட்ட திட்டங்கள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகள், தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை ஆகியவை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.





இதற்கான ஏற்பாடுகளை அம்மா பேரவை நிர்வாகிகள் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.


 மேலும், இதுபோன்ற திண்ணைப் பிரச்சாரங்கள் தொடர்ச்சியாக நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளி கிழமை தோறும் நடத்தப்படவுள்ளன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தன் வினை தன்னைச் சுடும்" - "கெட் அவுட் மோடி" என்ற சொல் தீய சக்தி திமுகவை அழிக்கும் பிரம்மாஸ்திரம்

Tamil Nadu updates,21-2-2025

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை


"தன் வினை தன்னைச் சுடும்" - "கெட் அவுட் மோடி" என்ற சொல் தீய சக்தி திமுகவை அழிக்கும் பிரம்மாஸ்திரம்


சென்னை: தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ் மகன் பிரதமர் மோடியை "கெட் அவுட் மோடி" என்று சொல்லக்கூடிய தமிழின விரோத தீய சக்திகள் விரைவில் அரசியலில் இருந்து அகற்றப்படுவார்கள்.


 தமிழகத்தில் ஆட்சி செய்வதற்கு தகுதியில்லாத திமுக அரசை, பெருந்தன்மையுடன் மோடி அரசு காப்பாற்றிக் கொண்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.


மத்திய மோடி அரசு கடந்த 11 ஆண்டுகளில் தமிழக வளர்ச்சிக்காக 1.68 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். 




ஆனால், காங்கிரஸ்-திமுக கூட்டணியின் யு.பி.ஏ ஆட்சியில் தமிழகத்திற்கு 8,053 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். "காங்கிரசை கூட்டணியில் "தன் வினை தன்னைச் சுடும்" - "கெட் அவுட் மோடி" என்ற சொல் தீய சக்தி திமுகவை அழிக்கும் பிரம்மாஸ்திரம் பிரதமர் மோடியை அவதூறாக விமர்சித்ததன் மூலம் முதலில் ஸ்டாலினே தமிழக மக்களின் இதயத்தில் இருந்து அகற்றப்பட்டுவிட்டார்" என்று அவர் கூறினார்.


தமிழகத்தில் நிலவும் மோசமான நிலை


தமிழக மக்கள் கல்வி, மருத்துவம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பழக்கம், கொலை, கொள்ளை உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக ஆட்சி மக்களை வதைத்து வருவதாக ஏ.என்.எஸ். பிரசாத் குற்றம்சாட்டினார்.


 தமிழகத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து, பள்ளி சிறுமிகள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதாக அவர் கவலை வெளியிட்டார்.


"கெட் அவுட் மோடி" எனும் அரசியல் நயவஞ்சகம்


"மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை திசைதிருப்புவதற்காக 'Get Out Modi' என ஹேஸ்டேக் போட்டு, இணையக் கூலிகளை பயன்படுத்தி கோடிகளை செலவழித்து அரசியல் நாடகம் நடத்துகிறார்கள்," என அவர் குற்றம்சாட்டினார்.


 தமிழகத்தில் ஊழல் பணத்தை பங்கு பிரித்துக் கொள்ள, தமிழக அரசியல் தலைவர்கள் திராவிட மாடல் அரசியலை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.


மக்கள் தீர்ப்பு 2026 தேர்தலில் வெளியாகும்


"தமிழக மக்கள் அரசியல் கூத்துக்களை புரிந்துகொண்டு, மக்கள் விரோத சக்திகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க 2026 சட்டமன்ற தேர்தலை காத்திருக்கிறார்கள்.


 மத்திய மோடி அரசு தமிழக மக்களுக்கு நன்மை செய்ய பெருந்தன்மையுடன் செயல்படுகிறது. திமுகவினர் திருந்த வேண்டும். இல்லையெனில், அவர்கள் கட்டாயம் திருத்தப்படுவார்கள்," என்று ஏ.என்.எஸ். பிரசாத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மோடி அரசின் பெருந்தன்மை


"தமிழ்நாட்டில் திமுக அரசு ஊழல், அதியாசை, வன்முறை, மற்றும் தீவிரவாத சக்திகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. மத்திய அரசு, ஜனநாயகத்தை பாதுகாக்க திமுக அரசை கலைக்காமல் பெருந்தன்மையுடன் நடத்திக்கொண்டு இருக்கிறது. ஆனால், இதை திமுக தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது," என்று அவர் கூறினார்.


தமிழக மக்களுக்கு வேண்டுகோள்


"தேசத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி tireless உழைக்கிறார். அவர் தமிழகத்தின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார். ஆனால், திமுக அரசு அதன் அரசியல் லாபத்திற்காக மோடி மீது அவதூறு பிரசாரம் செய்கிறது. தமிழ் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை தவறாக சித்தரிக்கிறது."


"மக்கள் இதை புரிந்து கொண்டு, வரும் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணியினரை தக்க பாடம் புகட்ட வேண்டும். தமிழகம் வளர்ச்சியடைய, மோடி அரசுக்கு மக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும்," என்று ஏ.என்.எஸ். பிரசாத் தனது அறிக்கையை முடித்தார்.