புதன், 19 நவம்பர், 2025

தூத்துக்குடி பழைய புதிய பேருந்து நிலையத்தில் வாக்காளர் சேவை மையங்கள் பொதுமக்களுக்கு உதவுவதற்காக இன்று தொடக்கம்

 தூத்துக்குடி லீக்ஸ் — நாளிதழ் செய்தி

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 :
ஏழு இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள் தொடக்கம்

தூத்துக்குடி: நவ20 

சிறப்பு தீவிர திருத்தம் – 2026 தொடர்பாக, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த பொதுமக்களுக்கு உதவுவதற்காக, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் ஏழு இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

thoothukudileaks


தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்கள், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் மற்றும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட மொத்தம் ஏழு பகுதிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள், இந்த சேவை மையங்களை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தொடர்பு கொண்டு, சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ளலாம்.

thoothukudileaks


வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் சரிபார்த்து, தேவையான திருத்தங்கள் மற்றும் புதுப்பிப்புகளைச் செய்ய வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலரும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரும் அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவன்,
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி
வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர்.

தூத்துக்குடியில் பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த அமைச்சர் கீதாஜீவன் – பொதுமக்கள் பாராட்டு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: நவ19

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனிடம் பொதுமக்கள் முக்கியமான கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.

அந்த பகுதியில் அதிகமான ரேஷன் கார்டுதாரர்கள் வசித்து வருவதால், அவர்கள் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதனால் வயது முதிர்ந்தோர் மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு, அண்ணாநகர் பகுதியில் புதிய ரேஷன் கடை ஒன்றை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் மனு அளித்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் கீதாஜீவன், சில நாட்களில் டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகக் கட்டிடத்தின் ஒரு பகுதியில் தூத்துக்குடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் சார்பில் தற்காலிக ரேஷன் கடை தொடங்க ஏற்பாடு செய்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தினார்.



இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.13 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடைக்கான கட்டுமான பணிகள் தொடங்கி பூமிபூஜை நடைபெற்றது. கட்டுமான பணி முடிவடைந்த நிலையில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு முதல்நாளே பொருட்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்:

பொது விநியோக திட்ட துணை பதிவாளர் சுப்புராஜ், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர் தனலட்சுமி, பொதுவிநியோக திட்ட சார்பதிவாளர் அந்தோணிபட்டுராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் ஐகோட் மகாராஜா, உதவி செயற்பொறியாளர் ரவி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், வட்டச்செயலாளர் செந்தில்குமார், கவுன்சிலர் அதிஷ்டமணி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அன்பழகன், அவைத் தலைவர் ராஜ்மோகன், வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், கார்த்திகேயன், சுப்பிரமணியன், துணை செயலாளர்கள் சந்திரசேகர், சபேசன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் அலுவலக பொறுப்பாளர் அற்புதராஜ், மணி, அல்பட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சரிடம் வைத்த கோரிக்கையை மிக விரைவாக நிறைவேற்றியமைக்கு அண்ணாநகர் பகுதியின் பொதுமக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 89 ஆவது குருபூஜை விழா சிறப்பாக நிறைவு

Tamil Nadu updates

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

நெல்லை:நவ19

தேசத்திற்காக தன்னலமின்றி போராடிய சுதந்திரப் போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ. சிதம்பரனாரின் 89 ஆவது குருபூஜை விழா நெல்லை மணி மண்டபத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.



விழாவில் தமிழ்நாடு வ.உ.சி எழுச்சி பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி தமிழ்ச்செல்வன், வெள்ளாளர் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கல்மேடு சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிதம்பரனார் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வீடியோ பார்க்க 

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட வீரரின் தியாகங்கள், தேசிய உணர்வு, இன்றைய தலைமுறைக்கு அவர் வழங்கிய சொற்பொழிவுகளின் முக்கியத்துவம் குறித்து பேரவை நிர்வாகிகள் உரையாற்றினர்.

thoothukudileaks



நிகழ்ச்சியில் பல்வேறு சமூக அமைப்பினரையும் இளைஞர்களையும் கலந்து கொண்டனர்.


.



செவ்வாய், 18 நவம்பர், 2025

தூத்துக்குடியில் காலவரையற்ற வேலை நிறுத்தம் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் பரபரப்பு

Tamil Nadu updates 

photo news by Arunan journalistt 

தூத்துக்குடி, நவம்பர் 19 -

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றியம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர்கள், தங்களது 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

thoothukudileaks



thoothukudileaks

 காலவரையற்ற வேலை நிறுத்தம் !!!

மாவட்ட தலைநகரான தூத்துக்குடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று 19-11-2025 நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நில அளவை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு...

மாவட்ட தலைவர் காளிராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், துணைத் தலைவர் தேவசேனாதிபதி, பொருளாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

18 அம்ச கோரிக்கை!!!

நில அளவை அலுவலர்கள் தங்களது 18 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலை நிறுத்தத்தை தொடர்வதாக அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தம் மாவட்ட அளவிலான நில அளவை பணிகளை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வீடியோ பார்க்க 

ஒன்றிப்பு நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

thoothukudileaks


இந்த நிலையில், அரசு சார்பில் விரைவில் பதில் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் – செய்தி

தூத்துக்குடி:நவ 19

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் இன்று காலை பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஜெகன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.




மாநகராட்சி ஆணையர் பிரியங்காவின் வழிகாட்டுதலின்படி, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட நான்கு மண்டலங்களிலும்– வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு– வாரந்தோறும் புதன்கிழமைகளில் குறைதீர்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அன்றாட சிக்கல்களுக்கு விரைவான தீர்வு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.




இன்று (19.11.2025) நடைபெற்ற கிழக்கு மண்டல குறைதீர்ப்பு முகாமில் இதுவரை 12 மனுக்கள் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடிநீர் விநியோகம், சாலை பராமரிப்பு, கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பழுது, தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பொதுமக்கள் மனு அளித்தனர்.


வ.உ.சிதம்பரனார் 89வது குரு பூஜை யில் தூத்துக்குடி திமுக அதிமுக தலைவர்கள் மிங்கிள் ஆன சம்பவம் மிரட்சியான தொண்டர்கள்

தூத்துக்குடி லீக்ஸ் — நாளிதழ் செய்தி

வ.உ.சிதம்பரனார் 89வது குரு பூஜை யில் தூத்துக்குடி திமுக அதிமுக தலைவர் சிங்கிள் ஆன சம்பவம் மிரட்சியான திமுக அதிமுக தொண்டர்கள்????

இது பற்றிய செய்தியாவது 

தூத்துக்குடி, நவம்பர் 18—

சுதந்திரப் போராட்டத் தியாகி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 89வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

thoothukudileaks
செக்கிழுத்த செம்மல் வ உ சி ஜயா திருவுருவ சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்த போது 


சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி இணைந்து சிலைக்கு மாலையணிவித்தனர்


பாக்ஸ் செய்தி

வஉசி நினைவு நாளில் திமுக – அதிமுக ஒரே மேடையில் அமைதியான தருணம்!

வ.உ.சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு திமுகவும் அதிமுகவும் ஒரே நேரத்தில் மாலை அணிவிப்பதற்கு பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் திரண்டிருந்தனர்.
இந்த நேரத்தில், திமுக சார்பில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் மாலையணிவித்துக்கொண்டிருந்த போது, அதிமுக சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனும் மாலையணிவித்து கீழே இறங்கினார்.

சந்திப்பு!!!

"தமிழின் பண்பாட்டுக்கு ஏற்ற வகையில், எஸ்.பி. சண்முகநாதன் வந்து அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமிக்கு கும்பிட்டு மரியாதை செலுத்தினார்.


அதற்கு அமைச்சரும் மேயரும் பரஸ்பரம் கும்பிட்டு மரியாதை தெரிவித்தனர்.
பின்னர் இரு தரப்பினரும் கை குலுக்கி நலம்கேட்டு வாழ்த்துகள் பரிமாறிக் கொண்டனர்.

செக்கிழுத்த செம்மல் வ உ சி ஜயா திருவுருவ சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன்  மாலை அணிவித்த போது...


இந்த நட்பு தருணம் இரு கட்சி நிர்வாகிகளிடையிலும், அங்கு இருந்த பொதுமக்களிடையிலும் பெரிதும் பேசப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

photo news by sunmugasuthram 

திருச்செந்தூர் தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைப்பு

photo news by Arunan journalistt 

தூத்துக்குடி, நவம்பர் 18:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் இன்று அதிமுகவில் இணைந்தனர்.

மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ஆர் எம் கே எஸ் சுந்தர் ஏற்பாட்டில் இளைஞர் இளம் பெண்கள் பாசறை இனை செயலாளர் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் சேர்ந்தனர்.



இன்று மதியம் 1 மணி அளவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வானவேடிக்கை கொளுத்தப்பட்டு மேளம் முழங்க கொண்டாட்டங்கள் நடைபெற்றன.



இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளைச் சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: தூத்துக்குடி லீக்ஸ்