தூத்துக்குடி:டிச 7
திருப்பரங்குன்றம் சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி முருகப்பெருமானை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டன.
தூத்துக்குடியிலும் இந்து முன்னணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி செய்யப்பட்டது.
பரபரப்பு!!!
ஆர்ப்பாட்டம் தொடங்க முயன்றபோது, இந்து முன்னணியினர் மற்றும் காவல்துறையினருக்கு இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.
திருப்பரங்குன்றம் மலைஉச்சியில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இது அரசு சார்பில் திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் என இந்து முன்னணி அமைப்புகள் குற்றம் சாட்டி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே, தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி சரவணகுமார் இசக்கி முத்து குமார் நாரயணராஜ் தலைமையில் ஆண்களும் பெண்களும் இணைந்து 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அவர்களை தடுக்கும் வகையில் தூத்துக்குடி நகர காவல் துறை எஸ்பி மதன் தலைமையிலான காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை கைது செய்து அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் பாதுகாப்பாக அடைத்தனர்.






















