சசிகலா ஆதரவாளர்கள் கூண்டோடு அதிமுகவில் இணைந்தனர்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் இணைப்பு
தூத்துக்குடி செப் 9
அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (AIPTMMK ) சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட வி.கே. சசிகலா ஆதரவாளர்கள், அக்கட்சியில் இருந்து விலகி தாய்க்கழகமான அதிமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில், அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி தலைமையை ஏற்று, அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இதில் வி.கே. சசிகலா ஆதரவாளர்களான செல்வராஜ், பட்டுக்கனி, சாந்தி, ரெஜினா, ஜான்சி ராணி, சுப்புலட்சுமி, பொயாளி பாண்டியன், மாரியப்பன், ஆறுமுகத்துரை, ராஜதுரை, இல. ஜெயராமன், ஜெயபால், வேல்சாமி, பரணி செல்வம், தங்க இசக்கி ராஜா, முத்துமாலை செல்வராஜ், சபிக்குமார் மகாராஜன், ரமேஷ், எம்.ஜி.ஆர். கணேசன், கணேசன் உள்ளிட்ட பலர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் பிரபு, தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி கழக செயலாளர் ஜெய்கணேஷ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் ஆனந்தராஜ், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள் முத்துக்கனி, நவ்சாத், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் மெஜூலா, சந்திரா, ராஜு மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ், சொக்கலிங்கம், எம்.டி. ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சசிகலா ஆதரவாளர்கள் கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்த நிகழ்வு, தூத்துக்குடி மாவட்ட அதிமுக வட்டாரத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.



















