வியாழன், 23 ஜூலை, 2026

தூத்துக்குடியில் விசாரணை கைதி அருணாசலம் உயிரிழப்பு குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. சண்முகநாதன், கீதா ஜீவன் ஆறுதல் நீதி விசாரணை கோரிக்கை வலுத்தது

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

அருணாசலம் உயிரிழப்பு: குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. சண்முகநாதன், கீதா ஜீவன் ஆறுதல்  நீதி விசாரணை கோரிக்கை வலுத்தது

தூத்துக்குடி, ஜூலை 23:

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (24) உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவரது குடும்பத்தினரை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனும், திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

thoothukudileaks


thoothukudileaks


தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டு அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன்–பரமேஸ்வரி தம்பதியரின் மகனான அருணாசலம், கடந்த 2026 ஜூலை 17-ஆம் தேதி எஃப்.சி.ஐ. குடோன் எதிரே சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்ததாகக் கூறி, தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் தரண்யா தலைமையிலான காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.


விசாரணைக்காக காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்தபோது காவல்துறையினர் தாக்கியதால் தலையில் காயம் ஏற்பட்டு மயக்கமடைந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். பின்னர் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜூலை 23-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறந்து போனஅருணாசலம்


இதையடுத்து, காவல்துறையினரின் தாக்குதலே உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை மற்றும் காவல் நிலையப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியதுடன், சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த உயர் காவல் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எஸ்.பி. சண்முகநாதன் ஆறுதல்

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த அதிமுக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன், அருணாசலத்தின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அருணாசலம் உயிரிழப்பு குறித்து நீதிபதி தலைமையில் உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும். குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதி வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

அப்போது மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், வட்ட செயலாளர்கள் பூர்ணசந்திரன், தூத்துக்குடி மணிகண்டன், கொம்பையா, சொக்கலிங்கம், சம்படி பழணி, சாம்ராஜ், சகாயராஜா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கீதா ஜீவன் 

நீதி கோரிக்கை

இதேபோல், திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனும் அரசு மருத்துவமனைக்கு சென்று அருணாசலத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அவர் பேசுகையில், "இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும். சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மை வெளிக்கொண்டு வர வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

thoothukudileaks


அவருடன் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள், திமுக பகுதி செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உடனிருந்தனர்.

இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்படி விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து முழுமையான உண்மை வெளிவர வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வலுத்து வருகிறது.

தூத்துக்குடியில் மது வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரம்

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடியில் மது வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு – வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரம்

தூத்துக்குடி, ஜூலை 23:

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் மதுவிலக்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 24 வயது இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks


இதுதொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி விசாரணை நடைபெற்று வருவதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

thoothukudileaks
மருத்துவமனையில்
முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் போலீசாருடன் இளைஞர் உயிரிழப்பு குறித்து வாக்குவாதம் செய்தியாளர் இடம் பேட்டி அளித்தார்.


காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, ..

கடந்த ஜூலை 17 அன்று தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (24) என்பவர் மதுவிலக்கு அமலாக்க சோதனையின்போது, 180 மில்லி லிட்டர் கொள்ளளவுள்ள 120 மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக கண்டறியப்பட்டது. 



இதையடுத்து, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 751/2026-ன் கீழ் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் பிரிவுகள் 4(1)(A) மற்றும் 14-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட பின்னர், சட்டப்படி பின்பற்ற வேண்டிய அனைத்து நடைமுறைகளும் முறையாக கடைபிடிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


 அவரது உடல் சோதனை காணொளியாக பதிவு செய்யப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட விவரம் அவரது குடும்பத்தினருக்கும் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் ...

பின்னர், அதே நாள் மாலை சுமார் 5.50 மணியளவில் அருணாசலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். 

மருத்துவ சான்றிதழ்!!!

அவரை பரிசோதித்த மருத்துவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு உடல்நிலை தகுதியானது என்றும், அவரது உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்றும் மருத்துவச் சான்றிதழ் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் லாக் அப்!!!

மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் காவல் நிலையத்திற்கு மீண்டும் அழைத்து வரப்பட்ட அவர், பிற கைதிகளுடன் லாக்-அப்பில் வைக்கப்பட்டார். 

சிசிடிவி கேமரா செக்கப்!!!

அப்போது மற்ற கைதிகளுடன் இயல்பாக பேசிக்கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்ததாகவும், இந்த சம்பவம் லாக்-அப்பிற்கு முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மயக்கம் முதலுதவி!!!!

உடனடியாக காவல்துறையினர் அவருக்கு முதலுதவி அளித்து, குடிநீர் வழங்கி பாதுகாப்பாக அமர வைத்தனர். மேலும், காவல் நிலைய வரவேற்பு பகுதியில் இருந்த அவரது தாயாரையும் அழைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை உறவினர்களுடன் தொடர் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், மருத்துவமனை அருகே அவர் மீண்டும் மயங்கி விழுந்ததாக அவரது உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இன்று உயிரிழந்தார் 

தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சை பலனளிக்காமல் ஜூலை 23 அன்று அருணாசலம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

தீவிர விசாரணையில் காவல்துறை!!!

இந்த சம்பவம் தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி விசாரணை நடைபெற்று வருவதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

செவ்வாய், 21 ஜூலை, 2026

தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அதிமுக அமைப்பு செயலாளரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

.தூத்துக்குடி ஜூலை 21


அதிமுகவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக அமைப்புச் செயலாளரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் சென்னை தலைமைக் கழக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது

thoothukudileaks


 தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தின் போது அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை வரவேற்று பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

இதற்குத்தான் ஆசைப்பட்டாயா?"பாலகுமாரா!!தூத்துக்குடி திமுகவில் என்ன நடக்கிறது?மார்க்கண்டேயனின் 'மெகா ஸ்கெட்ச்' பலித்ததா?!

தூத்துக்குடி லீக்ஸ் ஸ்மார்ட் ஸ்டோரி

செய்தி தகவல் ரோஜா அருணன் செய்தியாளர்

 21-7-2026

"இதற்குத்தான் ஆசைப்பட்டாயா?"

பாலகுமாரா!!!


மார்க்கண்டேயனின் 'மெகா ஸ்கெட்ச்' பலித்ததா? வடக்கு மாவட்ட செயலாளர் பதவியை குறிவைத்த அரசியல் நகர்வு... அனிதா ராதாகிருஷ்ணனின் 'கிரேட் எஸ்கேப்'... தூத்துக்குடி திமுகவில் என்ன நடக்கிறது?


தூத்துக்குடி அரசியலில் கடந்த இரண்டு நாட்களாக பேசப்படும் ஒரே விஷயம் – விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன். பொதுக்கூட்ட மேடையில் முதல்வர் ஜோசப் விஜய் குறித்து பேசிய ஒரு பேச்சு, அதைத் தொடர்ந்து நடந்த காவல்துறை நடவடிக்கை, கைது, நீதிமன்ற காவல், அதற்குப் பிறகு மாநில திமுக தலைவர்களின் தொடர் கண்டன அறிக்கைகள்... இவை அனைத்தும் சாதாரண சம்பவங்களா? அல்லது இதன் பின்னால் பெரிய அரசியல் கணக்கு இருக்கிறதா? என்ற கேள்விதான் அரசியல் வட்டாரங்களில் சுற்றி வருகிறது.


"கடந்த ஒரு மாதமாக போட்ட பிளான் சக்சஸ் ஆகிவிட்டதாம்..." பில்டிங் ஸ்ட்ராங்  ஃபேஸ் மட்டம் வீக்காகி 15 நாட்கள் சிறைக்கு போக வேண்டியதாக ரொம்ப அசிங்கமாச்சு குமாரு என கட்சி வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படும் தகவல்களே இந்த ஸ்மார்ட் ஸ்டோரியின் மையமாக உள்ளன.





தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவில் இரண்டு அதிகார மையங்கள் !!


தூத்துக்குடி மாவட்ட திமுக, நிர்வாக வசதிக்காக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.


வடக்கு மாவட்டம் – தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம்.


தெற்கு மாவட்டம் – திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம்.


வடக்கு மாவட்ட செயலாளராக கீதா ஜீவன் தொடர்கிறார். தெற்கு மாவட்ட செயலாளராக  திருச்செந்தூர் எம் எல் ஏ அனிதா ராதாகிருஷ்ணன்  உள்ளார்.


ஆனால் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் கீதா ஜீவன் தோல்வியடைந்த நிலையில், விளாத்திகுளம் மார்க்கண்டேயனும், கோவில்பட்டி கருணாநிதியும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாக சட்டமன்றத்திற்குச் சென்றுள்ளனர்.


---தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்டத்தில்  கீதா ஜீவன் தூத்துக்குடியில் தோற்று விட்டார் ஆனாலும் வடக்கு மாவட்ட செயலாளர் ஆக தொடர்வது விளாத்திகுளம் வெற்றி பெற்ற மார்க்கண்டேயன் எம்எல்ஏ க்கு கடந்த ஒரு மாதமாக உறுத்தியது 


"நான் எம்.எல்.ஏ... இன்னும் மாவட்ட செயலாளர் ஏன் இல்லை?"


திராவிடக் கட்சிகளில் மாவட்ட செயலாளர் பதவி என்பது வெறும் கட்சிப் பொறுப்பு அல்ல. மாவட்டம் முழுவதையும் கட்டுப்படுத்தும் அதிகார மையம். தேர்தல் வேட்பாளர் தேர்வு முதல் நிர்வாக நியமனம் வரை செல்வாக்கு செலுத்தும் பதவி.

அதனால் திராவிட கட்சிகள் அதிமுக திமுக மாவட்ட தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்எல்ஏ அமைச்சர் ஆக இருப்பவர்களுக்கே வழங்கி வரும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.


அதனால்தான், "தேர்தலில் வெற்றி பெற்றது நான்... அப்படியிருக்க வடக்கு மாவட்ட செயலாளர் பதவி இன்னும் வேறு ஒருவரிடம் ஏன்?" என்ற கேள்வி கடந்த ஒரு மாதமாக மார்க்கண்டேயனை உறுத்தியதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

திருச்சி வழி ஆலோசனை!!!

இதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும், "தலைவர், உதயநிதி, கனிமொழி வரை கவனிக்கும் அளவுக்கு அரசியல் முக்கியத்துவம் பெறும் சூழல் உருவானால் வாய்ப்பு உருவாகும்" என்ற ஆலோசனையும் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


---


கோவில்பட்டி கூட்டம்... திருப்புமுனை மேடை?


கடந்த சனிக்கிழமை இரவு கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், கோவில்பட்டி கருணாநிதி எம்.எல்.ஏ. தனது உரையை அமைதியாக முடித்தார்.


ஆனால் அடுத்து பேசிய மார்க்கண்டேயனின் பேச்சு அரசியல் சூட்டை கிளப்பியது.

 தமிழக முதல்வர் ஜோசப் விஜயை கடுமையாக விமர்சித்ததாக கூறப்படும் அந்தப் பேச்சு, சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலானது. உளவுத்துறை வரை அந்த வீடியோ சென்றதாகவும், அதன்பின் காவல்துறை நடவடிக்கை வேகமெடுத்ததாகவும் கூறப்படுகிறது.



"வரமாட்டேன்... கைது செய்ய சபாநாயகர் அனுமதி காட்டுங்கள்!"


திங்கட்கிழமை அதிகாலை காவல்துறையினர் மார்க்கண்டேயனை விசாரணைக்காக அழைத்துச் செல்ல அவரது இல்லத்துக்குச் சென்றனர்.


முதலில் "நான் எம்.எல்.ஏ.; கைது செய்ய சபாநாயகர் அனுமதி காட்டுங்கள். வரமாட்டேன்" என்று வாக்குவாதம் செய்ததாகவும், பின்னர் காவல்துறை வாகனத்தில் புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

துப்பாக்கி???

மாவட்ட காவல் அலுவலகத்தில் ஊடகங்கள் திரண்டபோது, அவர் போலீசார் துப்பாக்கி காட்டி மிரட்டுவதாகக் கூறி சத்தமிட்ட சம்பவமும் அன்றைய பரபரப்பை அதிகரித்தது.

thoothukudileaks


---நடக்கும் விஷயங்கள் தெரிந்து கொண்டாரா இல்லை யா தெரியல விளாத்திகுளம் எம் எல் ஏ மார்க்கண்டேயன் கைதின் போது முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் திமுக தொண்டர்கள் மகளிர் அணியினர் எல்லாம் திரட்டி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் போலீசார் உடன் மல்லுக்கட்டும் மறியலில் ஈடுபட்டு கைது செய்து விடுவிக்க பட்டார் முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன்.


"இன்றிரவே வெளியே வந்துவிடலாம்..." ஹேப்பி யாக என்ற கணக்கு உடைந்ததா?


நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு முன்ஜாமீன் கிடைத்து அன்றே வெளியே வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்ததாக  கூறுகின்றனர்.

ஏனென்றால் கடந்த மாதம் இதே போல் முதல்வர் ஜோசப் விஜய் குறித்து பேசிய திருச்செந்தூர் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் போலீஸ் கைது செய்து நள்ளிரவில் நீதிபதி இடம் ஆஜர் படுத்தி முன் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார்?

பூமராங்!!!

அதே போல் தானும் எம் எல் ஏ என்பதால்?முன் ஜாமீன் கிடைக்கும் so அன்றிரவே ஹேப்பியாக வெளியே வந்து விடலாம் என சீன்  போட பூமராங் ஆகிடுச்சு 

ஆனால்? விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழக்கில் நீதிமன்றம் 15 நாள் நீதிமன்றக் காவல் உத்தரவிட்டதும் அந்தக் கணக்கு மாறிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.நொந்தார்.

thoothukudileaks


---


அதன்பிறகு நடந்தது என்ன?


இதுதான் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டும் முக்கிய அம்சம்.


மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி. கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கண்டன அறிக்கைகள் வெளியிட்டனர்.


இதன் மூலம் மாநில அளவில் விளாத்திகுளம் எம் எல் ஏ மார்க்கண்டேயன் பெயர் பேசப்படும் சூழல் உருவானது. "இப்போது மாவட்ட செயலாளர் பதவிக்கான வாய்ப்பு அதிகரித்திருக்கலாம்" என்ற பேச்சும் கட்சிக்குள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.


---


அனிதா ராதாகிருஷ்ணன்... 'கிரேட் எஸ்கேப்' ஏன்?


இந்த பரபரப்பில் இன்னொரு பெயரும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது – அனிதா ராதாகிருஷ்ணன்.


காவல்துறை நடவடிக்கையின்போது நேரடி மோதலைத் தவிர்த்து அமைதியாக விலகியதாகவும், அரசியல் ரீதியாக தேவையற்ற சிக்கலைத் தவிர்க்கும் வகையில் நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் உடன் நெருக்கமாக பழக்கத்தில் இருக்கிறார்.


 மயக்கம் வந்துடுச்சு என கார் ல சென்று விட்டார்  இதையே சிலர் "கிரேட் எஸ்கேப்" என்று வர்ணிக்கின்றனர்.

thoothukudileaks


---


இறுதியில்...


மார்க்கண்டேயனின் கைது அவருக்கு அரசியல் அனுதாபத்தையும் திமுக மேலிடம் அளவிலான கவனத்தையும் பெற்றுத் தந்ததா? வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கான வாய்ப்பை அதிகரித்ததா? அல்லது இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமா?


இந்தக் கேள்விகளுக்கான பதில் அடுத்த சில வாரங்களில் வெளியாகும் 

ஆனால் ஒன்று மட்டும் உறுதி... வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் ஓரம் கட்ட பட்டால் தூத்துக்குடி யில் திமுக காணாமல் போக வாய்ப்பு அதிகம் உள்ளது.


தூத்துக்குடி திமுகவில் அமைதியாக இருந்த அரசியல் களம், இப்போது மீண்டும் கொதிக்கத் தொடங்கியுள்ளது..




தூத்துக்குடி பத்திரிகையாளர்களிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி.க்கு மனு

தூத்துக்குடி பத்திரிகையாளர்களிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு: கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி.க்கு மனு

தூத்துக்குடி, ஜூலை 21:

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகத்தினரிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபு தரக்குறைவாக நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டி, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் மற்றும் தூத்துக்குடி பியர்ஸ் சிட்டி பிரஸ் கிளப் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசியதாகக் கூறப்படும் வழக்கில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன் மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.


அப்போது, சம்பவத்தை செய்தியாக பதிவு செய்ய ஊடகத்துறையினர் புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க முயன்றபோது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபு அதைத் தடுத்து நிறுத்தியதுடன், ஊடகத்தினரிடம் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி, அநாகரிகமாக நடந்து கொண்டதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஜனநாயக கடமை!!!

மேலும், ஆயிரக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான நடவடிக்கைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது ஊடகங்களின் ஜனநாயகக் கடமை என்றும், அந்தப் பணியை மேற்கொள்ள விடாமல் தடுத்தது கண்டனத்திற்குரியது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

thoothukudileaks


இன்னும் பணி மாற்றம் பன்னாமல் இருப்பது ஏன்!!!

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபு பல ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வருவதாகவும், இதற்கு முன்பும் பல்வேறு நிகழ்வுகளில் ஊடகத்துறையினரிடம் இதுபோன்ற முறையில் நடந்து கொண்டதாகவும் மனுவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


எனவே, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபு மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், அவரை தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் மற்றும் தூத்துக்குடி பியர்ஸ் சிட்டி பிரஸ் கிளப் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தொடர்பாக காவல்துறை தரப்பின் அதிகாரப்பூர்வ பதில் இதுவரை வெளியாகவில்லை.



திங்கள், 20 ஜூலை, 2026

பாளையங்கோட்டை மத்திய சிறையில் விளாத்திகுளம் எம் எல் ஏ மார்க்கண்டேயன்!!!

 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது

15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு 

இது பற்றிய செய்தியாவது....

தூத்துக்குடி, ஜூலை 20:

தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு-1 (DCB-1) போலீசார், DCB குற்ற எண்: 16/2026-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் அவர்களை திங்கள்கிழமை (20.07.2026) கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

thoothukudileaks




இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி நீதித்துறை நடுவர்-1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பாளையங்கோட்டை சிறை 

வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர், மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.


இந்த கைது மற்றும் நீதிமன்ற நடவடிக்கை தூத்துக்குடி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் பேச்சு விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் பேச்சு விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது

தூத்துக்குடி, ஜூலை 20:

தமிழக முதலமைச்சர் விஜயை குறித்து சர்ச்சைக்குரிய மற்றும் மிரட்டல் விடுக்கும் வகையில் பொதுக்கூட்டத்தில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்று அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவில்பட்டி அருகே கிருஷ்ணன்கோவில் திடலில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், கருணாநிதி எம்.எல்.ஏ. தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. 

thoothukudileaks


இதில் ஒன்றிய செயலாளர்கள் பீக்கிலிப்பட்டி முருகேசன், ராதாகிருஷ்ணன், ஜெயக்கண்ணன், சுப்பிரமணியன், கருப்பசாமி, சின்னப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


சோசியல் மீடியாவில் பரவிய வீடியோக்கள்

அக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் விஜயை ஒருமையில் குறிப்பிட்டு, சட்டமன்றம் தொடர்பாகவும், அவரது உடல் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதையடுத்து, பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற போலீசார் மார்க்கண்டேயனை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது. போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி, மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.

கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன் முதற்கட்ட விசாரணைக்காக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்களின் பொது மேடை பேச்சுகள் சட்ட வரம்புக்குள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல்வேறு தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.