சுதந்திர நாட்டில் ஜனநாயகத்தின் நிலை குறித்து தூத்துக்குடியில் PUCL கருத்தரங்கு
தூத்துக்குடி: ஆக 16
இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமை கழகம் (Peoples Union of Civil Liberties – PUCL) சார்பில், “சுதந்திர நாட்டில் ஜனநாயகத்தின் நிலை?” மற்றும் “அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதில் நமது பங்கு?” ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு PUCL தூத்துக்குடி மாவட்டத் தலைவர் முனைவர் X.D. செல்வராஜ் தலைமை வகித்தார்.
மக்கள் சிவில் உரிமை கழகத்தின் முன்னாள் செயலாளரும், தற்போதைய மாநிலக் குழு உறுப்பினருமான பேராசிரியை பாத்திமா பாபு முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் பிரிட்டோ கலந்து கொண்டு, அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் மற்றும் குடிமக்களின் உரிமைகள் குறித்து விரிவாக கருத்துரையாற்றினார்
PUCL மாவட்டச் செயலாளரும் வழக்கறிஞருமான ராஜா வரவேற்புரையாற்றினார்.
கருத்தரங்கில் ...
அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள அடிப்படை உரிமைகள் குறித்து விளக்கப்பட்டதுடன், ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான முக்கியமான சட்ட விதிகள் மற்றும் சட்டப்பிரிவுகள் குறித்தும் விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
சிறப்பு அழைப்பாளர்!!!
மேலும், கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு சிறப்பு அழைப்பாளர் வழக்கறிஞர் பிரிட்டோ பதிலளித்து விளக்கமளித்தார்.
இதன் மூலம் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் குடிமக்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பங்கேற்பாளர்களிடையே ஏற்படுத்தப்பட்டது.
மாநிலக் குழு உறுப்பினர் பேராசிரியை பாத்திமா பாபு
நிகழ்ச்சியின் நிறைவில், சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் பிரிட்டோ அவருக்கு PUCL தூத்துக்குடி மாவட்டத் தலைவர் முனைவர் X.D. செல்வராஜ் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் பேராசிரியை பாத்திமா பாபு ஆகியோர் இணைந்து நினைவுப் பரிசு வழங்கினர்.
நன்றி தெரிவிப்பு!!!
கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் PUCL மாவட்டச் செயலாளர் தெர்மல் ராஜா நன்றி தெரிவித்தார்.





















