வியாழன், 4 டிசம்பர், 2025

தூத்துக்குடியில் ‘சேலம் RR பிரியாணி’ புதிய கிளை திறப்பு — அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி லீக்ஸ் — நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, டிசம்பர் 04, 2025 — சேலம் தலைமையிடமாக கொண்டு தமிழகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்டுள்ள சேலம் RR பிரியாணி நிறுவனம், தூத்துக்குடியில் தனது புதிய கிளையை இன்று (வியாழக்கிழமை) காலை 11:30 மணியளவில் திறந்து வைத்தது.





திறப்பு விழாவில் தமிழ்நாடு சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  கீதா ஜீவன்  குத்துவிளக்கு ஏற்றி கடையை  துவக்கி வைத்தார்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் தமிழ் செல்வன் அவர்கள் விழாவை முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் நிறுவன பங்குதாரர்களான ஜெயபிரகாஷ், பால் விகாஸ், சாம், மனோ ஆகியோர் கலந்து கொண்டு வாடிக்கையாளர்களை வரவேற்றனர்.

புதியதாகத் தொடங்கப்பட்ட இந்த கிளையில் சுவைமிகு உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில்

  • சிக்கன் பிரியாணி — ரூ. 240
  • மட்டன் பிரியாணி — ரூ. 330
    மேலும் சைனீஸ் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகளும் கிடைக்கின்றன.

முகவரி:

106, S/15, பழை ரோடு,
மேற்கு சிதம்பரநகர்,
மஹிந்திரா கார் ஷோரூமுக்கு எதிரில்,
தூத்துக்குடி.


புதன், 3 டிசம்பர், 2025

புதிய பேருந்து நிலையத்தில் ‘மகளிர் விடியல் பயணம்’ – 7 புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைத்தார் அமைச்சர் கீதா ஜீவன்

photo news by Arunan journalistt தூத்துக்குடி லீக்ஸ் — நாளிதழ் செய்தி 

தூத்துக்குடி: டிச 4

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்  இன்று (04.12.2025 – வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் கீழ் 7 புதிய பேருந்து சேவைகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.

thoothukudileaks


அமைச்சர் கீதா ஜீவன் கொடியசைத்து தொடங்கிய இந்த புதிய சேவைகள், தூத்துக்குடியைச் சுற்றியுள்ள முக்கிய ஊரக பகுதிகளில் வசிக்கும் பெண்கள், மாணவிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பான மற்றும் சுலபமான பயணத்தை வழங்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இன்று துவக்கப்பட்ட புதிய வழித்தடங்கள்:

  • வேடப்பட்டி
  • கீழ் ஈரால்
  • பெருங்குளம்
  • சுப்பிரமணியபுரம்
  • வெளப்பனேரி
  • கீழ்வைப்பார்
  • அகிலாண்டபுரம்

புதிய பேருந்துகள் தினசரி அதிகாலையில் மகளிரின் வேலை, கல்வி, மருத்துவ பயணங்களுக்கு ஏற்ற வகையில் சேவையாற்ற உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

இந்த புதிய பேருந்து சேவை ஆரம்பம், தூத்துக்குடி மாவட்ட மகளிரின் பாதுகாப்பான இயங்குதன்மை மற்றும் நாளாந்த பயணம் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பொதுமக்களால் வரவேற்கப்படுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர் முகாம் தூத்துக்குடி மாநகர வீதிகளில் போக்குவரத்து இடையூறாக சுற்றி திரியும் மாடுகளை கயிறு கட்டி பிடித்து கொண்டு வர மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி உத்தரவு

தூத்துக்குடி லீக்ஸ் — செய்தி 

photo news by Arunan journalistt 

தூத்துக்குடி மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர் முகாம் 

தூத்துக்குடி டிச :3

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் இன்று (03.12.2025) புதன்கிழமை வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டதால் சிறப்பாக நடைபெற்றது.

thoothukudileaks


முகாமில் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி  தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பிரியங்கா உதவி ஆணையர்கள், பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள் உட்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முகாமில் குடிநீர் குழாய் பழுது, பாதாள சாக்கடை அடைப்பு, தெருவிளக்கு வேலை செய்யாதது, சாலைகள் சேதம், சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு குறைகள் பொதுமக்களிடமிருந்து 16 மனுக்கள் பெறப்பட்டன.

முன்னதாக மேயர் ஜெகன் பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது 

தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து இடையூறு விளைவிக்கும்  மாடுகள் விதிகளில் சுற்றி திரிவதை பிடித்தல் விஷயத்தில் மாநகராட்சிக்கு  ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் மற்றும் மழை நீர் அகற்றல் பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.என்றார்.

மேலும்  மேயர் ஜெகன் பெரியசாமி வடக்கு மண்டல மாநகராட்சி 

அதிகாரிகள் இடம் ஒவ்வொரு குறையும் பதிவு செய்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரச்சினைகளுக்கு பொறுப்பான துறைகளுக்கு திடீர் அறிவுறுத்தல்கள் வழங்கினர்.

 நீண்டகாலத் திட்டமிடல் தேவைப்படும் கோரிக்கைகளுக்கு உரிய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் “நேரடியாக அதிகாரிகளிடம் நமது பிரச்சினையை சொல்லிக் கொள்ளும் வாய்ப்பை அளித்ததற்கு மகிழ்ச்சி” என தெரிவித்தனர்.

மாநகராட்சி சார்பில், குறைகள் அனைத்தும் விரைவில் தீர்ப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.


திங்கள், 1 டிசம்பர், 2025

மதுபிரியர்கள் மகிழ்ச்சி இன்று முதல் தூத்துக்குடியில் மது காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் தொடக்கம் – மதுக்கடைகளில் புதிய முயற்சி

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, டிசம்பர் 2:

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலியாப் பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் (Empty Bottle Buy Back Scheme) இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. மாநில அரசின் அறிவுறுத்தலின்படி செயல்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய திட்டம், மதுபாட்டில்களின் விலையுடன் கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் முறையை உட்கொள்கிறது.

thoothukudileaks


மதுபானம் வாங்கிய பயனாளர்கள், காலியான பாட்டில்களை மீண்டும் அதே மதுக்கடைக்குத் திருப்பிக் கொடுக்கும் போது, முன்பு வசூலிக்கப்பட்ட கூடுதல் ரூ.10 திருப்பி வழங்கப்படும் என மதுக்கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

thoothukudileaks

thoothukudileaks
பத்து ருபாய் பாட்டல் விலை பில் 


இந்த திட்டம் மூலம் வீதி, மைதானம், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பரவலாகக் காணப்படும் மதுபாட்டில் குப்பைகளை குறைப்பதே அரசின் நோக்கமாகும். மதுக்கடைகளில் தானியங்கி இயந்திரம் மூலமும் திரும்பப் பெறும் நடைமுறை அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி மூலம் சுற்றுச்சூழல் சுத்தமாக இருக்கவும், பாட்டில் குப்பைகள் குறையும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.






வியாழன், 27 நவம்பர், 2025

தூத்துக்குடி, ஆதிபராசக்தி நகர் – ரஹ்மத் நகர் பகுதிகளில் கனமழை வெள்ளம்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

தூத்துக்குடியில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கனமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆதிபராசக்தி நகர் மற்றும் ரஹ்மத் நகர் பகுதிகளில், மழைநீர் வீடுகளை சுற்றி தேங்கி, பல குடும்பங்கள் அவதிக்கு உள்ளானது. தெருக்கள் முழுவதும் வெள்ளப்பாதையாக மாறி, குடியிருப்போர் அச்சத்திலும் சிரமத்திலும் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில், நிலைமைக்கான அவசர தகவல் பெறப்பட்டதை தொடர்ந்து, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தோழர் கனிமொழி எம்.பி., தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மற்றும் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமையை பரிசோதித்தனர்.உடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா 



பகுதிவாசிகளின் குறைகளை அறிந்து, விரைவாக மழைநீர் அகற்றும் பணிகளை தொடங்குமாறு மாநகராட்சிப் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தினர். 


மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மோட்டார் பம்புகள் மூலம் தேங்கிய நீரை வெளியேற்றும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

தூத்துக்குடியில்...

கனமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

செவ்வாய், 25 நவம்பர், 2025

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் நல அரசியலை செய்ய வேண்டும் தமிழக பாஜக

சென்னை:நவ 25

 மொழி, மத அரசியல் செய்வதை விட்டு மக்கள் நல அரசியலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் நடந்த புத்தக விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி தமிழ் மொழி மீது போலியான பாசம் காட்டுவதாகவும், ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றை திணிக்க முயற்சிக்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சமஸ்கிருத மொழியை "செத்த மொழி" என்று விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள, இந்து மக்களின் புனித மொழியாக போற்றப்படும் சமஸ்கிருத மொழியை இவ்வாறு விமர்சிப்பது அரசியல் சாசன அவமதிப்பாகும். தேர்தலுக்காக மொழி அரசியல் நாடகம் அரங்கேற்றுவது துரதிஷ்டவசமானது.

உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும், இந்து மத வேதங்களை உருவாக்கிய தெய்வ மொழி சமஸ்கிருதம். கணிதவியல், வானவியல், மருத்துவ இயல், அரசியல் உள்ளிட்ட பல துறைகளில் உலகிற்கு வழிகாட்டும் இம்மொழியை இழிவாக பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஒரு மொழியை உயர்த்துவதாக சொல்லி மற்றொரு மொழியை தாழ்த்தி பேசுவது நியாயமா? தமிழை வளர்க்க ஏன் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழ் பல்கலைக்கழகங்களை திமுக அரசு உருவாக்கவில்லை?

கிறிஸ்தவர்களின் புனித நூல் ஹீப்ரு மொழியில் எழுதப்பட்டது. இஸ்லாமியர்களின் புனித நூல் அரபி மொழியில் எழுதப்பட்டது. அவற்றை செத்த மொழி என்று சொல்ல முடியுமா?

துணை முதல்வர் என்ற பதவியில் இருப்பவர் மதச்சார்பின்மையுடன், நடுநிலமையுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த மதத்தையும், எந்த மொழியையும் தவறான முறையில் விமர்சிக்கக்கூடாது.

முதல்வர் ஸ்டாலின் அவர்கள், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு இனி எந்த மதத்தையும், எந்த மொழியையும் விமர்சித்து பேசக்கூடாது என்று தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

செய்தி தொடர்புக்கு:

ஏ.என்.எஸ.பிரசாத்

thoothukudileaks

செய்தி தொடர்பாளர், தமிழக பாஜக

திங்கள், 24 நவம்பர், 2025

சென்னையில் கழக நிர்வாகிகள் ஆலோசனை — தூத்துக்குடி மாநகர் மாவட்டத்தின் கருத்து கேட்பு படிவம், புதிய நிர்வாகிகள் பட்டியல் வழங்கப்பட்டது



சென்னையில் கழக நிர்வாகிகள் ஆலோசனை — தூத்துக்குடி மாநகர் மாவட்டத்தின் கருத்து கேட்பு படிவம், புதிய நிர்வாகிகள் பட்டியல் வழங்கப்பட்டது

சென்னை:நவ25

சென்னையில் இன்று நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தூத்துக்குடி மாநகர் மாவட்டத்தின் அமைப்பு சார்ந்த முக்கிய ஆவணங்கள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டன.

thoothukudileaks


தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ். ஏசா துரை, மாநகரின் கருத்து கேட்பு படிவம் மற்றும் புதிய நிர்வாகிகள் பட்டியலை கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு ஓ. பி. எஸ் எம்எல்ஏ  முன்னிலையில் சமர்ப்பித்தார்.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ். ஏசா துரை, மாநகரின் கருத்து கேட்பு படிவம் மற்றும் புதிய நிர்வாகிகள் பட்டியலை கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு ஓ. பி. எஸ் எம்எல்ஏ முன்னிலையில் சமர்ப்பித்தார்.

கழக வளர்ச்சி, உறுப்பினர் பதிவு, பிரிவு வாரியான பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட அமைப்பு வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை நடைபெற்ற இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாநகரின் புதிய நிர்வாக அமைப்பு பெரிதும் கவனத்தை பெற்றது.


கழக வளர்ச்சி, உறுப்பினர் பதிவு, பிரிவு வாரியான பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட அமைப்பு வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை நடைபெற்ற இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாநகரின் புதிய நிர்வாக அமைப்பு பெரிதும் கவனத்தை பெற்றது.



கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு அடுத்தகட்ட அமைப்பு திட்டங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.