Tamil Nadu updates photo news by Arunan journalist
தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
தூத்துக்குடி, 13 மார்ச் 2026:
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த சுப்புராஜ் — காளீஸ்வரி தம்பதியரின் 17 வயது மகள் காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சோகச் சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை, 13.03.2026) தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, வேடநத்தத்தில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆழ்ந்த ஆறுதல் தெரிவித்தார்கள்.
குடும்பத்தினரிடம் நேரில் உரையாடிய கனிமொழி ...
"குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுக் கொடுப்போம்" என உறுதியளித்தார்கள்.
நேரில் சென்ற போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.
இந்த வழக்கில் விரைந்து விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
— தூத்துக்குடி லீக்ஸ் செய்தியாளர்
















