Tamil Nadu updates
தூத்துக்குடி, ஜூன் 29:
அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன், அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கடந்த 28.06.2026 அன்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்த எஸ்.பி. சண்முகநாதன், பூங்கொத்து வழங்கி மரியாதை செலுத்தினார். அப்போது எடப்பாடி பழனிசாமி அவருக்கு வாழ்த்து தெரிவித்து, புதிய பொறுப்பை சிறப்பாக மேற்கொள்ள வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட கழகப் பொருளாளர் சேவியர், மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளருமான விஜயகுமார், பகுதிச் செயலாளர்கள் முருகன், சுடலைமணி, ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், ராஜ் நாராயணன், உரக்கடை குணசேகரன், அப்பாதுரை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம். பெருமாள், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர்கள் கே.ஜெ. பிரபாகர், ஜாக்சன் துரைமணி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் சுரேஷ்பாபு, திருச்செந்தூர் ஆர்.எம்.கே.எஸ். சுந்தர், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் தெர்மல் ஆனந்தராஜ், மாவட்டக் கலைப் பிரிவு செயலாளர் வீரபாண்டியப்பட்டணம் சுரேஷ், வடக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் கோசல்ராம் ராஜா, வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.ஆர்.வி. கவியரசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி மணிகண்டன், சொக்கலிங்கம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.












