தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி
தூத்துக்குடி, மார்ச் 30:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் சமத்துவ மக்கள் கழகம் தனித்துப் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக
வழக்கறிஞர் A. அந்தோணி பிச்சை (MA, BL)
திருவைகுண்டம் தொகுதியில்
S. ஜெபராஜ் டேவிட் (BE),
திருச்செந்தூர் தொகுதியில்
B. அருண் சுரேஷ் குமார் (BA)
ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் S. ராஜாத்தி
கோவில்பட்டி தொகுதியில் வழக்கறிஞர் M.A.M. சகாயராஜ் (BA, LLB),
விளாத்திகுளம் தொகுதியில்..
P. கண்டிவேல்
ஆகியோரும் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றனர்.
இந்த 6 தொகுதிகளுக்கும் இன்று வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில்,...
வரும் ஏப்ரல் 4, 2026 (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சம்பந்தப்பட்ட தொகுதிகளின் ஆர்டிஓ அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் சமத்துவ மக்கள் கழகம் தனித்துப் போட்டியிடும் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

