வெள்ளி, 22 மே, 2026

தூத்துக்குடி மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா IPS சந்தித்து பரபரப்பு கோரிக்கை வைத்த தூத்துக்குடி வியாபாரிகள்

Tamil Nadu updates

photo news by Arunan journalist 

தூத்துக்குடி:மே 22

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஐபிஎஸ்  அவரை இன்று( 22-5-2026 ) தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து, வியாபாரிகளின் பாதுகாப்பு குறித்தும், சமூக வலைத்தளங்களில் உணவகங்கள் மீது பரப்பப்படும் அவதூறுகள் குறித்தும் முக்கிய கோரிக்கை மனுவை அளித்தனர்.

thoothukudileaks


இது பற்றி செய்தியாவது...

காவல் கண்காணிப்பாளருடன் சந்திப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் தெர்மல். சொ. ராஜா தலைமையில், தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க தலைவர் ஜவஹர் -பொருளாளர் விக்னேஷ் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொருளாளர் நவமணி தங்கராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்தனர்.

thoothukudileaks


நிர்வாகிகளின் முக்கிய கோரிக்கைகள்

 அச்சமற்ற வணிகச் சூழல்: தூத்துக்குடியில் உள்ள வியாபாரிகள் எவ்வித பயமும், அச்சுறுத்தலும், பிரச்சனைகளும் இல்லாமல் நிம்மதியாக வணிகம் செய்திட தேவையான பாதுகாப்பு சூழலை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்.

 காவல்துறைக்கு ஒத்துழைப்பு:

 வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், சட்ட ஒழுங்கை பராமரிக்க வணிகர்கள் தரப்பில் இருந்து காவல்துறைக்கு எப்போதும் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

 அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை:

 கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் (Social Media) திட்டமிட்டு உணவகங்களை (ஹோட்டல்களை) பற்றி அவதூறு பரப்பி, வணிகர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்க முயலும் சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.

காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா IPS உறுதி:

 வணிகர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வியாபாரிகளின் பாதுகாப்பிற்கு காவல்துறை என்றும் துணையாக இருக்கும் எனத் தெரிவித்தார். 

மேலும், சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவோர் மீது சட்டம் பாயும் எனக் குறிப்பிட்ட அவர், வணிகர்களின் கோரிக்கைகள் குறித்து கண்டிப்பாக உரிய ஆவண (நடவடிக்கை) செய்கிறேன்"என உறுதியளித்தார்.

thoothukudileaks


இந்த சந்திப்பின் போது வணிகர் சங்க முக்கிய நிர்வாகிகள் மற்றும் வர்த்தகர்கள் பலர் உடனிருந்தனர்.


தூத்துக்குடி மக்கள் மறக்கவும் இல்லை மன்னிக்கவும் இல்லை? தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டுமென ஜனநாயக முறையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார்கள் போலீசாரால் அநியாயமாக துப்பாக்கி சூடு 16 பேர் படுகொலை இறப்பு படுகொலை செய்தவர்களுக்கு தண்டனை எப்போது ? ஸ்டெர்லைட் ஆலை தளவாடங்கள் முழுவதும் அகற்றுவது எப்போது ? ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு பரபரப்பு பேட்டி அன்று நடந்தது என்ன தூத்துக்குடி லீக்ஸ் சிறப்பு கட்டுரை

Tamil Nadu updates, 22-5-2026

செய்தி கட்டுரை புகைப்படங்கள் 

ரோஜா அருணன் செய்தியாளர் 

தூத்துக்குடி மே‌ 22

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த ஈகையர்க்கு எட்டாம் ஆண்டு  வீர வணக்கம் தமிழகத்தை உலுக்கிய கரும் பகலை தூத்துக்குடி மன்னிக்கவும் இல்லை மறக்கவும் இல்லை   ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் மற்றும் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் மற்றும் மின்னல் அம்ஜத் தலைமையில் தெற்கு புது தெரு சமுதாய கூடத்தில் கண்ணீர் மல்க மெழுகு வர்த்தி 🔥 தீபம் ஏற்றி சிகப்பு ரோஜா இதழ்கள் தூவி அஞ்சலி நடைபெற்றது.

thoothukudileaks


இது பற்றி செய்தியாவது:-

கடந்த 2018 மே 22 ல் ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கையில் மனுவுடன் கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

 

thoothukudileaks

அன்றைய தினத்தில் ..

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் இல்லை வேற எங்கோ ஓடி விட்டார்? 

ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து அகற்ற கோரி கோஷமிட்டபடி ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போது காலை பதினொரு மணியளவில் பொதுமக்களை முன்னறிவிப்பு ஏதுமின்றி  திட்டமிட்டபடி  முந்தைய இரவு இருந்தே குவிக்கப்பட்ட தமிழக காவல்துறை பெரும் படை  ஈவு இரக்கமின்றி பொதுமக்கள் நோக்கி ராணுவத்தில் பயன் படுத்த கூடிய நவுன ரக சினேப்பர் துப்பாக்கி முதற் கொண்டு வந்து  துப்பாக்கி சூடு நடத்தினார்கள் இதில் 13 பேர் சம்பவ நாளிலும் மீதி முன்று பேர் மறுநாட்களிலும் பலியாகினர்.

அன்றைய தினம் ஆலை பக்கம் யாரும் வந்து விடாது  என   ஸ்டெர்லைட் ஆலைக்கு முன் நூற்றுக்கணக்கான போலீஸ் குவிப்பு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டது.


அது போக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற ஆயிரக்கணக்கான  பொதுமக்கள் மீது காவல் துறை காட்டுதர்பார்  நடத்தி விரட்டி கொண்டு இருந்தார்கள் 

வல்லநாடு துப்பாக்கி சூடு தளத்தில் இளைஞர்கள் இருட்டறையில் .. அடித்து சித்ரவதை!!! 

போராட்டத்தில் வந்தவர்களை ஐநூறுக்கும் மேற்பட்டவர்களை தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சூடு தளம் போலீஸ் வேன்களில் பிடித்து கொண்டு போய் இருட்டறையில் அடித்து சித்ரவதை செய்தனர் பெற்றோர்கள் தங்கள் மகன்களை காணவில்லை என தேடி னார்கள்.

அதை அறிந்து களத்தில் இறங்கிய தூத்துக்குடி வழக்கறிஞர்கள் அனைவரும் முயற்சி எடுத்து காவல்துறையிடம் இருந்து அவர்களை மீட்டெடுத்தனர்.வழங்கறிஞர்கள் அனைவரும் பெரும் உதவி செய்தார்கள்.

 அப்பவும் விடாமல் தூத்துக்குடி இளைஞர்களை இரவில் வீடுவீடாக சுவர் ஏறிகுதித்ததும்... தேடிப்பிடித்து காவல்நிலையத்தில் கொண்டு வந்து  அடித்தார்கள் வழக்கு பதிவு செய்தனர் .

ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாக்க.. ஸ்டெர்லைட் ஆலைக்கு முழு ஆதரவாக காவல்துறை செயல்பட்டது. 

துப்பாக்கி சூடு சம்பந்தப்பட்ட வெளியுலகிற்கு போட்டோ வீடியோ தெரியக்கூடாது என ஒருவாரமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இணைய சேவைகள் நெட் போன் இனைப்பை முழுவதும் துண்டித்தனர்.

தூத்துக்குடி தனி தீவு என மாறியது மறக்க முடியாது மன்னிக்கவும் முடியாது !!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு முழு பாதுகாப்பு கொடுத்து அதன் அன்பளிப்பு கவனிப்புகளுக்கு விசுவாசமாக மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை இருந்தது.

அப்போது தூத்துக்குடியில் பொதுமக்கள் வீட்டைவிட்டு சில பகுதிகளில் சிறு குழந்தைகள் நடமாட முடியவில்லை? தெருத்தெருவாக போலீஸ் குவிப்பு வாகனம் நிறுத்தினார்கள் 

 அந்த வாரம் முழுவதும் பொதுமக்களை ஓட ஓட அடித்து நொறுக்கியும் துப்பாக்கி சூடு நடத்தி கொண்டு இருந்தார்கள் 


போலீஸ் துப்பாக்கியால் சுட்டு விட்டு  போலீஸ் தனது பூட்ஸ் காலால் மிதித்து புரட்டியபடி நடிக்கிறான் இவன் சாகவில்லை எக்களிப்பும் இன்னும் யாரும் மறக்கவும் இல்லை மன்னிக்கவும் இல்லை என்பது தான் இஃது போன்ற நினைவுலைகள் எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியில் வெளிப்பட்டது.

நீதி கிடைக்க வில்லை !!!

 மேலும் 16 பேர் மீது துப்பாக்கி சூடு படுகொலை செய்தவர்களுக்கு அதிமுக- திமுக ஆட்சியில் அதற்குரிய தண்டனை  தர வேண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் மற்றும் கூட்டமைப்பு கள் போராடியும் இன்னும் நீதி கிடைக்க வில்லை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை 

விசாரணை கமிஷன் அறிக்கை!!!

இதில் ஒய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றவாளிகள் யாரென தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது 

ஸ்டெர்லைட் இன்றும் தளவாடங்கள் அகற்ற வில்லை!!!

அடுத்து தூத்துக்குடி மண்ணில் ஸ்டெர்லைட் ஆலை தனது தளவாடங்கள் அப்புறப்படுத்த உத்தரவு வந்தும் மூன்று மாதம் அவகாசம் கொடுத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 

வருடங்கணக்காகியும் திமுக அரசு மற்றும் நிர்வாகம் தூத்துக்குடி ஆட்சியர் தூத்துக்குடி எம்பி தூத்துக்குடி அமைச்சர் எவரும் மக்கள் பிரச்சனை இதுவென கருதி  செயல்படுத்த முன் வரவில்லை 

பசுமை தாமிரமா? 

மீண்டும் அதிர்ச்சி !!!

தூத்துக்குடி மக்களின் பெரும் சோகம் இந்த இலட்சுணத்தில் பசுமை தாமிரம் என்ற மாற்று பெயரில் மீண்டும் குடிபுக தீட்டப் தீட்டி  வருவதாக சொல்லப்படுவது பெரும் அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது .

இது குறித்து தமிழக முதல்வர் விஜய் அவருக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருக்கினைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு கோரிக்கை வைத்துள்ளார் என தெரிவிக்கினறனர். 

வியாபாரிகள் அஞ்சலி!!

தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் சார்பில் ... ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த ஈகையருக்கு எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கம் பேரவை வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் சொ. தெர்மல் ராஜா. தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் தமிழ்நாடு வணிகர் சங்கம் பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் ஜெ. ஜவகர் மத்திய வியாபார சங்கம் பொருளாளர் விக்னேஷ் பாளைரோடு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் நவமணி தங்கராஜ்,பெத்து மாரியப்பன், முத்து கனி, சட்ட ஆலோசகர் தனவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


மின்னல் அம்ஜத் தலைமையில்.. தெற்கு புது தெரு சமுதாய கூடத்தில்... 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகள் 16 பேருக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது 

thoothukudileaks


இந்த நிகழ்ச்சியில் மின்னல் அம்ஜத் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருக்கினைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு,  முன்னாள் தூத்துக்குடி எம்பி அப்பாதுரை, சின்ன கோயில் பாதர்,

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


திரு இருதய நண்பர்கள் இயக்கம் பொது செயலாளர் மற்றும் இந்திய கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்கம் தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைப்பாளர் தங்கையா, பிரின்ஸ் கர்டோசா புரட்சி கர இயக்கம் சுதிஷ், வாழ்வுரிமைக் கட்சி கிதார் பிஸ்மி , புரட்சி பாரதம் மாரி செல்வம், மற்றும் தியாகிகளின் குடும்ப உறவுகள்  கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 

thoothukudileaks


இன்றும்....

எட்டாம் ஆண்டு நினைவு தினம் அஞ்சலி தூத்துக்குடி மாநகர் முழுவதும் காவல்துறை அங்காங்கே குவிக்கப்பட்டு வருவோர் போவோர் அனைவரையும் கண்காணிப்பு செய்தபடியே இருந்து வந்தார்கள் .

thoothukudileaks


ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது.


புதன், 20 மே, 2026

தூத்துக்குடியில் சுட்டெரிக்கும் வெயில்: மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்க எம்.எல்.ஏ ஸ்ரீநாத் நடவடிக்கை எடுப்பாரா? பொதுமக்கள் கேள்வி! திமுக அதிமுக தேர்தல் சோகத்தில் தண்ணீர் பந்தல் திறக்க மனமில்லையா ?

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் பிரத்யேக செய்தி!

தூத்துக்குடியில் சுட்டெரிக்கும் வெயில்: மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்க எம்.எல்.ஏ ஸ்ரீநாத் நடவடிக்கை எடுப்பாரா? பொதுமக்கள் கேள்வி!

தூத்துக்குடி: மே20

மே மாதம் பாதியை கடந்த நிலையிலும் தூத்துக்குடியில் கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கத்திரி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பொதுமக்களின் தாகம் தணிக்க மாநகராட்சி சார்பில் இதுவரை தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்படாதது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏமாற்றத்தில் பொதுமக்கள்:

​தூத்துக்குடி மாநகரில் வருடந்தோறும் கோடைகாலம் தொடங்கிவிட்டாலே, பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள் மற்றும் அந்தந்த வார்டு பகுதிகளில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல்கள் அமைப்பது வழக்கம். ஆனால், இந்த 2026 ஆம் ஆண்டு கோடைகாலம் தொடங்கி, கத்திரி வெயிலும் உச்சத்தை தொட்டுள்ள நிலையிலும், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் இதுவரை ஒரு இடத்தில் கூட தண்ணீர் பந்தல் அமைக்க எவ்வித நடவடி்ககையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

thoothukudileaks


​திமுக -அதிமுக அரசியல் கட்சிகளின் மௌனம் – தேர்தல் சோகமா?

​பொதுவாக வருடந்தோறும் கோடைகாலம் வந்துவிட்டாலே தூத்துக்குடி மாநகர் முழுவதும் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல், மோர் பந்தல், இளநீர் என போட்டி போட்டுக் கொண்டு அதிமுக மற்றும் திமுகவினர் ஆங்காங்கே பந்தல்களை திறந்து வைப்பார்கள். 


கடந்த காலங்களில் மாவட்ட எம்பியான கனிமொழி அவர்களும் தனது சொந்த செலவில் பல இடங்களில் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து மக்களின் தாகம் தணித்தார்.

​ஆனால், இந்த 2026-ல் இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியோ, மக்கள் பிரதிநிதியோ தண்ணீர் பந்தல் அமைக்க முன்வரவில்லை. "தேர்தல் முடிவுகளின் சோகத்தில் அவர்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பதால், எங்களுக்கு தண்ணீர் பந்தல் அமைக்க மறந்துவிட்டார்களா? அல்லது பொதுமக்களை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்களா?" என்று வெயிலில் அலையும் பொதுமக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.


எம்.எல்.ஏ ஸ்ரீநாத் நடவடிக்கை எடுப்பாரா?

​தற்போது தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி மக்கள் பிரதிநிதியாக இருக்கும் எம்.எல்.ஏ ஸ்ரீநாத்  இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

​மாநகராட்சி நிர்வாகத்தை முடுக்கிவிட்டு, தூத்துக்குடியின் முக்கிய சந்திப்புகள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வார்டு பகுதிகளில் உடனடியாக கோடைகால தண்ணீர் மற்றும் மோர் பந்தல்களை அமைக்க எம்.எல்.ஏ ஸ்ரீநாத் விரைந்து நடவடிக்கை எடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- தூத்துக்குடி லீக்ஸ் செய்தியாளர்.

திங்கள், 18 மே, 2026

தூத்துக்குடியில் மாநகராட்சி வணிக வளாகங்கள் ஆய்வு மாவட்ட திமுக பிரதிநிதி இல்லத் திருமண விழாவில் கனிமொழி எம்.பி. பங்கேற்பு

Tamil Nadu updates 

news by Arunan journalist 

தூத்துக்குடி, மே 18:

இன்று (18.05.2026) திங்கள்கிழமை, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சிதம்பரநகரில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலைய வணிக வளாகம் ஆகிய பகுதிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

thoothukudileaks


thoothukudileaks

பாராமரிப்பு பணி ஒழுங்காக நடக்கிறததா???

அப்போது வணிக வளாகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள், பொதுமக்கள் பயன்பாடு, கடை அமைப்புகள் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

thoothukudileaks


வணிகர்களுக்கு ஆலோசனை!!

மேலும், பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் தேவைகள் தொடர்பாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

thoothukudileaks


திருமணம் நிகழ்ச்சி பங்கேற்பு!!!


இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி அபிநயா மஹாலில் நடைபெற்ற மாவட்ட திமுக பிரதிநிதி  பொன்ராஜ் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி., மணமக்கள் சக்தி லிங்கேஸ்வரன் – சிவா பிரியா ஆகியோருக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்தார்.

thoothukudileaks

thoothukudileaks


இந்த நிகழ்வுகளில் மாவட்ட கழகச் செயலாளர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 17 மே, 2026

அரிசி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை ? தூத்துக்குடி காவல் துறை அதிரடி

Tamil Nadu update 17-5-2026

தூத்துக்குடி மே17

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்து, 30 கிலோக்கும் மேற்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இது பற்றி செய்தியாவது ..

குளத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உதவி ஆய்வாளர்  ராமலெட்சுமி தலைமையிலான போலீசார் இன்று குளத்தூர் பஜார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அங்குள்ள ஒரு அரிசிக்கடை முன்பு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ...

 ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த வீரசின்னரசு (38), மாரிமுத்து (46) என்பதும், அவர்கள் குளத்தூரைச் சேர்ந்த அரிசிக்கடை உரிமையாளர் பிச்சைமணி (61) என்பவரிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாங்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

thoothukudileaks


அரிசி கடையில்...

இதையடுத்து போலீசார் அரிசிக்கடையில் சோதனை மேற்கொண்டதில், அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


கைது நடவடிக்கை!!!

உடனடியாக போலீசார் பிச்சைமணி, வீரசின்னரசு மற்றும் மாரிமுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து மொத்தம் 30 கிலோ 475 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.10,000 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளி, 15 மே, 2026

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நன்றி தெரிவிப்பு எம்.எல்.ஏ. சரவணனுக்கு உற்சாக வரவேற்பு – பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு வழங்க உறுதி

Tamil Nadu updates 15-5-2026

photo news 

by Arunan journalist 

தூத்துக்குடி மே15

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நன்றி தெரிவிப்பு பயணமாக சென்ற எம்.எல்.ஏ. சரவணனுக்கு ராமசந்திராபுரம், புல்லாவழி மற்றும் கோவங்காடு பகுதிகளில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

thoothukudileaks


கழக நிர்வாகிகள் மற்றும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றதுடன், குழந்தைகள் பட்டாசு வெடித்து மலர் மாலைகள் அணிவித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.

ராமசந்திராபுரம் பகுதியில் முதியோர் சிலர், கடந்த சில மாதங்களாக ரேஷன் கடை ஊழியர்கள் வீடு தேடி வந்து பொருட்கள் வழங்காததால் மிகுந்த சிரமம் அனுபவித்து வருவதாக எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர்.

thoothukudileaks



 இதற்கு பதிலளித்த சரவணன் எம்.எல்.ஏ., “கவலைப்பட வேண்டாம், உடனடியாக இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கிறேன்” என உறுதியளித்தார்.

thoothukudileaks


அதேபோல் புல்லாவழி பகுதியில் அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தி, மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்க டியூஷன் வசதி ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் அந்த பகுதியில் சாலை வசதி, குடிநீர் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.


உப்பள தொழிலைத் தவிர வேறு வேலைவாய்ப்புகள் இல்லாமல் மக்கள் சிரமப்படுவதாக அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர். 

அதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ., “நம்ம விஜய் ஆட்சியில் நல்ல தீர்வு கிடைக்கும். வேலைவாய்ப்புகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


மேலும், “நம் பகுதியில் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுகிறவர்கள் யாரேனும் இருந்தால் தெரியப்படுத்துங்கள். அவர்களுக்கு என் சொந்த செலவில் தினமும் உணவு அனுப்ப ஏற்பாடு செய்கிறேன்” என மனிதநேயத்துடன் தெரிவித்தது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

video புல்லா வழி பார்க்க 

கோவங்காடு பகுதியில் மக்கள் பஸ் நிறுத்தம், சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். அனைத்தையும் விரைவில் செய்து தருவதாக எம்.எல்.ஏ. சரவணன் உறுதியளித்தார்.

வீடியோ பகுதி 2 கோவங்காடு பகுதியில் ..

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் அருள், விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட அமைப்பாளர் திருமணி அஸ்வின், வசந்தன் சித்தன், புல்லாவழி கிளை கழக செயலாளர் அஜித்குமார், துணை கழக செயலாளர் சண்முகவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பால்கிளி, சுரேஷ், கோவங்காடு கிளை கழக பொருளாளர் ஆகாஷ், கிளை கழக செயலாளர் நவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வியாழன், 14 மே, 2026

சூரியன் திரும்ப உதித்தே தீரும்! தோல்விக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை மே14

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், திமுக தலைவர் M. K. Stalin உணர்ச்சி பொங்க உரையாற்றினார். 

தேர்தல் தோல்வி, கட்சியின் எதிர்காலம், சமூக வலைத்தள அரசியல், அமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அவர் விரிவாக பேசினார்.

சூரியன் திரும்ப உதித்தே தீரும்!!!

“என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது தமிழ்நாட்டு அரசியல் நியதி” என உரையை தொடங்கிய ஸ்டாலின், நடந்து முடிந்த தேர்தலில் திமுக ஆட்சியை அமைக்க முடியாத போதிலும், கணிசமான வாக்கு விகிதத்தை பெற்றிருப்பதை சுட்டிக்காட்டினார்.

thoothukudileaks


இப்போதும் வெற்றி தான்!!

1989, 1996, 2006 ஆகிய தேர்தல்களுக்கு பின்னர் ஏற்பட்ட தோல்விகளை நினைவுகூர்ந்த அவர், “அப்போது விட தற்போது திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை 59 இடங்களில் வென்றிருக்கிறோம். கூட்டணியுடன் சேர்த்து பார்த்தால் 73 இடங்கள் கிடைத்துள்ளன” என்றார்.

அலெட்சியம்!!

மேலும், “திமுகதான் வெற்றி பெறும் என நினைத்து அலட்சியமாக வாக்களித்ததாக பலர் சமூக வலைத்தளங்களில் வருத்தப்படுகிறார்கள். இது நமது ஐந்தாண்டு நல்லாட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

திமுக தோல்வி முழு பொறுப்பு!!!

தோல்விக்கான காரணம் குறித்து யாரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்ட வேண்டாம் என வலியுறுத்திய ஸ்டாலின், “கழகத்தின் தலைவர் என்ற முறையில் இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

தனி இணையதளம்!!!

கட்சியின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளில் பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும், தொகுதி வாரியாக கள ஆய்வு நடத்தி 20 நாட்களுக்குள் அறிக்கை பெற குழு அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். மேலும், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க தனி இணையதளம் தொடங்கப்படும் எனவும் கூறினார்.

அறிவுரை!!!

சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “முன்னாடி டீக்கடையில பேசின அரசியலை, இனிமே சோஷியல் மீடியாவில் பேசியாகணும்” என நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கணிப்பு!!!

அதிமுக மற்றும் ஆளும் கூட்டணி நிலைமை குறித்து பேசிய ஸ்டாலின், “அடுத்த அரசியல் சூழல் எப்படி மாறும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆனால் சட்டமன்றத்தில் திமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும்” என்றார்.

தோல்வி தற்காலிகமே!!!

இறுதியாக, “இந்த தோல்வி தற்காலிகம் தான். திட்டமிடுவோம், தீவிரமாக உழைப்போம், மீண்டு வருவோம், மீண்டும் வெற்றி பெறுவோம்” என உற்சாகமாக உரையை நிறைவு செய்தார்.