புதன், 27 மே, 2026

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் 'காணவில்லை' முதல்வர் ஜோசப் விஜய் புகைப்படம்?

Tamil Nadu updates 27-5-2026

photo news by Arunan journalist 

​காரசாரமான தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம்:  – 48 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

தூத்துக்குடி:மே27

தூத்துக்குடி மாநகராட்சியின் சாதாரண மாமன்ற கூட்டம் இன்று காலை 11 மணியளவில் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டம் பல்வேறு அரசியல் நகர்வுகளுடனும், பரபரப்புகளுடனும் அரங்கேறியது.

​மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.அதிமுக -காங்கிரஸ் கட்சி சேர்ந்த சிலர் கவுன்சிலர்கள் கூட்டரங்கு வரவில்லை..

thoothukudileaks



​48 தீர்மானங்கள் நிறைவேற்றம்:

​கவுன்சிலர்களின் காரசாரமான விவாதங்களுக்கு இடையே, மாநகராட்சியின் பல்வேறு வார்டு மேம்பாட்டு பணிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த 48 முக்கிய தீர்மானங்கள் இன்றைய கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

thoothukudileaks


​தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் 'காணவில்லை' முதல்வர் ஜோசப் விஜய் படம்: கிளம்பும் புதிய சர்ச்சை!

​இன்றைய மாமன்ற கூட்டத்தில் தீர்மானங்களை விட, அரங்கிலிருந்த ஒரு விஷயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்ன நடந்தது?

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் தற்போதைய முதல்வர் விஜய்யின் புகைப்படம் இடம் பெறவில்லை. கடந்த மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களின் போது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதற்கு முன்னதாக முதல்வராக இருந்த மு.கருணாநிதி ஆகியோரின் புகைப்படங்கள் மாமன்ற கூட்ட அரங்கில் தொங்கவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


​தற்போது புதிய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, தற்போதைய முதல்வரின் புகைப்படம் மாமன்ற அரங்கில் வைக்கப்படாதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

​— .

thoothukudileaks


ஒரு முன்னாள் ஆளும் கட்சி சேர்ந்த முக்கிய புள்ளி இன்று  வரவில்லை அவரோ த வெ க கட்சியில் சேர்ந்து பதவி பெறபோவதாக சொல்லப்படுகிறது 

செவ்வாய், 26 மே, 2026

தூத்துக்குடி நிஷா பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் ஷாநவாஸுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

புதுச்சேரி:மே 26

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான சர்வதேச அளவிலான விருது வழங்கும் விழா புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது. 

இவ்விழாவில், தூத்துக்குடியைச் சேர்ந்த நிஷா பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் ஷாநவாஸ் -க்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.



thoothukudileaks


ஏசியா இன்டர்நேஷனல் கல்சுரல் அகாடமி (Asia International Cultural Academy) மற்றும் அமெரிக்கன் விஸ்டம் பீஸ் யுனிவர்சிட்டி (American Wisdom Peace University) ஆகியவை இணைந்து நடத்திய இந்த பிரம்மாண்ட விழா, கடந்த 23.05.2026 சனிக்கிழமை காலை 10:15 மணியளவில் புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற அண்ணாமலை நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

​சமூக சேவை, கலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 23 சாதனையாளர்களுக்கு இந்த விழாவில் கௌரவ முனைவர் (டாக்டர்) பட்டமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

​சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பு:

​இவ்விழாவில் முக்கியப் பிரமுகர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். :

  • டாக்டர் கராத்தே S. P. ஸ்ரீநாத்
  • ஓய்வுபெற்ற நீதிபதி டாக்டர் பி. ஹரிதாஸ்
  • ஆனைப்பேட்டை Dr. S. குணசேகரன்
  • Dr. M. ராஜகோபாலன்
  • தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் மாநிலத் தலைவர் டாக்டர் M. சிவதமிழவன்
  • உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் லிங்கம் M.A., B.L.
  • ராஜம்கம்பீர மஞ்சு குல சுவாமி
  • சில்வர் ஸ்கிரீன் உலக சாதனையாளர் டாக்டர் அருள் இன்னாசிமுத்து

​உள்ளிட்ட பல முக்கிய ஆளுமைகள் மேடையை அலங்கரித்தனர்.

​தூத்துக்குடிக்கு பெருமை சேர்த்த டாக்டர் ஷானவாஸ்:

​இந்த அரிய விழாவில், தூத்துக்குடி நிஷா பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர்  ஷா. ஷாநவாஸ் அவர்களின் இணையற்ற சமூக சேவையைப் பாராட்டி, அவருக்கு கௌரவ டாக்டர் பட்டமும், பட்டயமும், நற்சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இது தூத்துக்குடி மாநகரத்திற்கு கிடைத்த பெரும் பெருமையாகும்.

​விருது வழங்கும் மேடையில் டாக்டர் ஷா. ஷாநவாஸ் அவர்களை வரவேற்று, அமைப்பின் இணை அமைப்பாளர் Dr. S. குணசேகரன்  பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்.

​நெகிழ வைத்த உரை:

​விருதைப் பெற்றுக்கொண்ட பின், மேடையில் டாக்டர் ஷாநவாஸ்  'நிஷா பவுண்டேஷன்' அமைப்பின் நோக்கம் மற்றும் அதன் சமூகப் பணிகள் குறித்து 5 நிமிடங்கள் உரையாற்றினார். அவரது எளிய, உருக்கமான பேச்சு அரங்கில் இருந்த அனைவரின் மனங்களையும் கவர்ந்தது. 

விழாவிற்கு வந்திருந்த சான்றோர்கள் அனைவரும் எழுந்து நின்று, கைதட்டி தங்களது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

​சமூகத்தில் நலிவடைந்தோருக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வரும் டாக்டர் ஷா. ஷாநவாஸ் அவரின் இந்த அறப்பணி மேலும் தொய்வின்றித் தொடர, 'தூத்துக்குடி லீக்ஸ்' நாளிதழ் சார்பில் நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திங்கள், 25 மே, 2026

தூத்துக்குடி முன்னாள் எம்.எல்.ஏ பெரியசாமியின் 9-ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் மற்றும் திமுகவினர் மலரஞ்சலி! ஏழைகள் வேட்டி சேலை வழங்கி அன்னதானம் நடைபெற்றது

Tamil Nadu updates

photo news by Arunan journalist 

தூத்துக்குடி: மே26

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், திமுகவின் மறைந்த தூத்துக்குடி மாவட்டச் செயலாளருமான 'முரட்டு பக்தர் ' பெரியசாமியின் 9-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 26) அனுசரிக்கப்பட்டது.

thoothukudileaks


thoothukudileaks






​இதையொட்டி, தூத்துக்குடி போல்பேட்டையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் (சமாதி) தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பெ. கீதா ஜீவன், அவரது சகோதரரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான என்.பி. ஜெகன் ஆகியோர் தலைமையில் திமுகவினர் திரளாகக் கூடி மாலை அணிவித்து, மலர் தூவி நெஞ்சார்ந்த மரியாதை செலுத்தினர்.

thoothukudileaks


​பொதுமக்களுக்கு அன்னதானம்

​நினைவஞ்சலி நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தூத்துக்குடி கீதா ஹோட்டல் வளாகத்தில் மறைந்த பெரியசாமியின் நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வேட்டி சேலை வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து பிரம்மாண்ட அன்னதான வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

​இந்த அன்னதான நிகழ்வை முன்னாள் அமைச்சர் பெ. கீதா ஜீவன் மற்றும் மேயர் என்.பி. ஜெகன் ஆகியோர் முறைப்படி தொடங்கி வைத்தனர்.

​திமுகவினர் திரளாகப் பங்கேற்பு

​. இந்நிகழ்வில் ...

திருச்செந்தூர் எம்எல் ஏ அனிதா ராதாகிருஷ்ணன், கோவில் பட்டி கருணாநிதி எம்எல்ஏ, விளாத்திகுளம் எம்எல்ஏ, மார்க்கண்டேயன் மற்றும் அஜிதா ஆர்கனல் தூத்துக்குடி மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், பகுதிச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 


தூத்துக்குடி மாவட்ட அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய பெரியசாமியின் நினைவு தினத்தில் ஒட்டுமொத்த திமுகவினரும் திரண்டிருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வெள்ளி, 22 மே, 2026

தூத்துக்குடி மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா IPS சந்தித்து பரபரப்பு கோரிக்கை வைத்த தூத்துக்குடி வியாபாரிகள்

Tamil Nadu updates

photo news by Arunan journalist 

தூத்துக்குடி:மே 22

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஐபிஎஸ்  அவரை இன்று( 22-5-2026 ) தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து, வியாபாரிகளின் பாதுகாப்பு குறித்தும், சமூக வலைத்தளங்களில் உணவகங்கள் மீது பரப்பப்படும் அவதூறுகள் குறித்தும் முக்கிய கோரிக்கை மனுவை அளித்தனர்.

thoothukudileaks


இது பற்றி செய்தியாவது...

காவல் கண்காணிப்பாளருடன் சந்திப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் தெர்மல். சொ. ராஜா தலைமையில், தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க தலைவர் ஜவஹர் -பொருளாளர் விக்னேஷ் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொருளாளர் நவமணி தங்கராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்தனர்.

thoothukudileaks


நிர்வாகிகளின் முக்கிய கோரிக்கைகள்

 அச்சமற்ற வணிகச் சூழல்: தூத்துக்குடியில் உள்ள வியாபாரிகள் எவ்வித பயமும், அச்சுறுத்தலும், பிரச்சனைகளும் இல்லாமல் நிம்மதியாக வணிகம் செய்திட தேவையான பாதுகாப்பு சூழலை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்.

 காவல்துறைக்கு ஒத்துழைப்பு:

 வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், சட்ட ஒழுங்கை பராமரிக்க வணிகர்கள் தரப்பில் இருந்து காவல்துறைக்கு எப்போதும் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

 அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை:

 கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் (Social Media) திட்டமிட்டு உணவகங்களை (ஹோட்டல்களை) பற்றி அவதூறு பரப்பி, வணிகர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்க முயலும் சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.

காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா IPS உறுதி:

 வணிகர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வியாபாரிகளின் பாதுகாப்பிற்கு காவல்துறை என்றும் துணையாக இருக்கும் எனத் தெரிவித்தார். 

மேலும், சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவோர் மீது சட்டம் பாயும் எனக் குறிப்பிட்ட அவர், வணிகர்களின் கோரிக்கைகள் குறித்து கண்டிப்பாக உரிய ஆவண (நடவடிக்கை) செய்கிறேன்"என உறுதியளித்தார்.

thoothukudileaks


இந்த சந்திப்பின் போது வணிகர் சங்க முக்கிய நிர்வாகிகள் மற்றும் வர்த்தகர்கள் பலர் உடனிருந்தனர்.


தூத்துக்குடி மக்கள் மறக்கவும் இல்லை மன்னிக்கவும் இல்லை? தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டுமென ஜனநாயக முறையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார்கள் போலீசாரால் அநியாயமாக துப்பாக்கி சூடு 16 பேர் படுகொலை இறப்பு படுகொலை செய்தவர்களுக்கு தண்டனை எப்போது ? ஸ்டெர்லைட் ஆலை தளவாடங்கள் முழுவதும் அகற்றுவது எப்போது ? ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு பரபரப்பு பேட்டி அன்று நடந்தது என்ன தூத்துக்குடி லீக்ஸ் சிறப்பு கட்டுரை

Tamil Nadu updates, 22-5-2026

செய்தி கட்டுரை புகைப்படங்கள் 

ரோஜா அருணன் செய்தியாளர் 

தூத்துக்குடி மே‌ 22

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த ஈகையர்க்கு எட்டாம் ஆண்டு  வீர வணக்கம் தமிழகத்தை உலுக்கிய கரும் பகலை தூத்துக்குடி மன்னிக்கவும் இல்லை மறக்கவும் இல்லை   ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் மற்றும் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் மற்றும் மின்னல் அம்ஜத் தலைமையில் தெற்கு புது தெரு சமுதாய கூடத்தில் கண்ணீர் மல்க மெழுகு வர்த்தி 🔥 தீபம் ஏற்றி சிகப்பு ரோஜா இதழ்கள் தூவி அஞ்சலி நடைபெற்றது.

thoothukudileaks


இது பற்றி செய்தியாவது:-

கடந்த 2018 மே 22 ல் ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கையில் மனுவுடன் கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

 

thoothukudileaks

அன்றைய தினத்தில் ..

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் இல்லை வேற எங்கோ ஓடி விட்டார்? 

ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து அகற்ற கோரி கோஷமிட்டபடி ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போது காலை பதினொரு மணியளவில் பொதுமக்களை முன்னறிவிப்பு ஏதுமின்றி  திட்டமிட்டபடி  முந்தைய இரவு இருந்தே குவிக்கப்பட்ட தமிழக காவல்துறை பெரும் படை  ஈவு இரக்கமின்றி பொதுமக்கள் நோக்கி ராணுவத்தில் பயன் படுத்த கூடிய நவுன ரக சினேப்பர் துப்பாக்கி முதற் கொண்டு வந்து  துப்பாக்கி சூடு நடத்தினார்கள் இதில் 13 பேர் சம்பவ நாளிலும் மீதி முன்று பேர் மறுநாட்களிலும் பலியாகினர்.

அன்றைய தினம் ஆலை பக்கம் யாரும் வந்து விடாது  என   ஸ்டெர்லைட் ஆலைக்கு முன் நூற்றுக்கணக்கான போலீஸ் குவிப்பு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டது.


அது போக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற ஆயிரக்கணக்கான  பொதுமக்கள் மீது காவல் துறை காட்டுதர்பார்  நடத்தி விரட்டி கொண்டு இருந்தார்கள் 

வல்லநாடு துப்பாக்கி சூடு தளத்தில் இளைஞர்கள் இருட்டறையில் .. அடித்து சித்ரவதை!!! 

போராட்டத்தில் வந்தவர்களை ஐநூறுக்கும் மேற்பட்டவர்களை தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சூடு தளம் போலீஸ் வேன்களில் பிடித்து கொண்டு போய் இருட்டறையில் அடித்து சித்ரவதை செய்தனர் பெற்றோர்கள் தங்கள் மகன்களை காணவில்லை என தேடி னார்கள்.

அதை அறிந்து களத்தில் இறங்கிய தூத்துக்குடி வழக்கறிஞர்கள் அனைவரும் முயற்சி எடுத்து காவல்துறையிடம் இருந்து அவர்களை மீட்டெடுத்தனர்.வழங்கறிஞர்கள் அனைவரும் பெரும் உதவி செய்தார்கள்.

 அப்பவும் விடாமல் தூத்துக்குடி இளைஞர்களை இரவில் வீடுவீடாக சுவர் ஏறிகுதித்ததும்... தேடிப்பிடித்து காவல்நிலையத்தில் கொண்டு வந்து  அடித்தார்கள் வழக்கு பதிவு செய்தனர் .

ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாக்க.. ஸ்டெர்லைட் ஆலைக்கு முழு ஆதரவாக காவல்துறை செயல்பட்டது. 

துப்பாக்கி சூடு சம்பந்தப்பட்ட வெளியுலகிற்கு போட்டோ வீடியோ தெரியக்கூடாது என ஒருவாரமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இணைய சேவைகள் நெட் போன் இனைப்பை முழுவதும் துண்டித்தனர்.

தூத்துக்குடி தனி தீவு என மாறியது மறக்க முடியாது மன்னிக்கவும் முடியாது !!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு முழு பாதுகாப்பு கொடுத்து அதன் அன்பளிப்பு கவனிப்புகளுக்கு விசுவாசமாக மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை இருந்தது.

அப்போது தூத்துக்குடியில் பொதுமக்கள் வீட்டைவிட்டு சில பகுதிகளில் சிறு குழந்தைகள் நடமாட முடியவில்லை? தெருத்தெருவாக போலீஸ் குவிப்பு வாகனம் நிறுத்தினார்கள் 

 அந்த வாரம் முழுவதும் பொதுமக்களை ஓட ஓட அடித்து நொறுக்கியும் துப்பாக்கி சூடு நடத்தி கொண்டு இருந்தார்கள் 


போலீஸ் துப்பாக்கியால் சுட்டு விட்டு  போலீஸ் தனது பூட்ஸ் காலால் மிதித்து புரட்டியபடி நடிக்கிறான் இவன் சாகவில்லை எக்களிப்பும் இன்னும் யாரும் மறக்கவும் இல்லை மன்னிக்கவும் இல்லை என்பது தான் இஃது போன்ற நினைவுலைகள் எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியில் வெளிப்பட்டது.

நீதி கிடைக்க வில்லை !!!

 மேலும் 16 பேர் மீது துப்பாக்கி சூடு படுகொலை செய்தவர்களுக்கு அதிமுக- திமுக ஆட்சியில் அதற்குரிய தண்டனை  தர வேண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் மற்றும் கூட்டமைப்பு கள் போராடியும் இன்னும் நீதி கிடைக்க வில்லை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை 

விசாரணை கமிஷன் அறிக்கை!!!

இதில் ஒய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றவாளிகள் யாரென தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது 

ஸ்டெர்லைட் இன்றும் தளவாடங்கள் அகற்ற வில்லை!!!

அடுத்து தூத்துக்குடி மண்ணில் ஸ்டெர்லைட் ஆலை தனது தளவாடங்கள் அப்புறப்படுத்த உத்தரவு வந்தும் மூன்று மாதம் அவகாசம் கொடுத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 

வருடங்கணக்காகியும் திமுக அரசு மற்றும் நிர்வாகம் தூத்துக்குடி ஆட்சியர் தூத்துக்குடி எம்பி தூத்துக்குடி அமைச்சர் எவரும் மக்கள் பிரச்சனை இதுவென கருதி  செயல்படுத்த முன் வரவில்லை 

பசுமை தாமிரமா? 

மீண்டும் அதிர்ச்சி !!!

தூத்துக்குடி மக்களின் பெரும் சோகம் இந்த இலட்சுணத்தில் பசுமை தாமிரம் என்ற மாற்று பெயரில் மீண்டும் குடிபுக தீட்டப் தீட்டி  வருவதாக சொல்லப்படுவது பெரும் அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது .

இது குறித்து தமிழக முதல்வர் விஜய் அவருக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருக்கினைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு கோரிக்கை வைத்துள்ளார் என தெரிவிக்கினறனர். 

வியாபாரிகள் அஞ்சலி!!

தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் சார்பில் ... ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த ஈகையருக்கு எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கம் பேரவை வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் சொ. தெர்மல் ராஜா. தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் தமிழ்நாடு வணிகர் சங்கம் பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் ஜெ. ஜவகர் மத்திய வியாபார சங்கம் பொருளாளர் விக்னேஷ் பாளைரோடு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் நவமணி தங்கராஜ்,பெத்து மாரியப்பன், முத்து கனி, சட்ட ஆலோசகர் தனவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


மின்னல் அம்ஜத் தலைமையில்.. தெற்கு புது தெரு சமுதாய கூடத்தில்... 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகள் 16 பேருக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது 

thoothukudileaks


இந்த நிகழ்ச்சியில் மின்னல் அம்ஜத் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருக்கினைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு,  முன்னாள் தூத்துக்குடி எம்பி அப்பாதுரை, சின்ன கோயில் பாதர்,

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


திரு இருதய நண்பர்கள் இயக்கம் பொது செயலாளர் மற்றும் இந்திய கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்கம் தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைப்பாளர் தங்கையா, பிரின்ஸ் கர்டோசா புரட்சி கர இயக்கம் சுதிஷ், வாழ்வுரிமைக் கட்சி கிதார் பிஸ்மி , புரட்சி பாரதம் மாரி செல்வம், மற்றும் தியாகிகளின் குடும்ப உறவுகள்  கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 

thoothukudileaks


இன்றும்....

எட்டாம் ஆண்டு நினைவு தினம் அஞ்சலி தூத்துக்குடி மாநகர் முழுவதும் காவல்துறை அங்காங்கே குவிக்கப்பட்டு வருவோர் போவோர் அனைவரையும் கண்காணிப்பு செய்தபடியே இருந்து வந்தார்கள் .

thoothukudileaks


ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது.


புதன், 20 மே, 2026

தூத்துக்குடியில் சுட்டெரிக்கும் வெயில்: மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்க எம்.எல்.ஏ ஸ்ரீநாத் நடவடிக்கை எடுப்பாரா? பொதுமக்கள் கேள்வி! திமுக அதிமுக தேர்தல் சோகத்தில் தண்ணீர் பந்தல் திறக்க மனமில்லையா ?

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் பிரத்யேக செய்தி!

தூத்துக்குடியில் சுட்டெரிக்கும் வெயில்: மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்க எம்.எல்.ஏ ஸ்ரீநாத் நடவடிக்கை எடுப்பாரா? பொதுமக்கள் கேள்வி!

தூத்துக்குடி: மே20

மே மாதம் பாதியை கடந்த நிலையிலும் தூத்துக்குடியில் கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கத்திரி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பொதுமக்களின் தாகம் தணிக்க மாநகராட்சி சார்பில் இதுவரை தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்படாதது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏமாற்றத்தில் பொதுமக்கள்:

​தூத்துக்குடி மாநகரில் வருடந்தோறும் கோடைகாலம் தொடங்கிவிட்டாலே, பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள் மற்றும் அந்தந்த வார்டு பகுதிகளில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல்கள் அமைப்பது வழக்கம். ஆனால், இந்த 2026 ஆம் ஆண்டு கோடைகாலம் தொடங்கி, கத்திரி வெயிலும் உச்சத்தை தொட்டுள்ள நிலையிலும், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் இதுவரை ஒரு இடத்தில் கூட தண்ணீர் பந்தல் அமைக்க எவ்வித நடவடி்ககையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

thoothukudileaks


​திமுக -அதிமுக அரசியல் கட்சிகளின் மௌனம் – தேர்தல் சோகமா?

​பொதுவாக வருடந்தோறும் கோடைகாலம் வந்துவிட்டாலே தூத்துக்குடி மாநகர் முழுவதும் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல், மோர் பந்தல், இளநீர் என போட்டி போட்டுக் கொண்டு அதிமுக மற்றும் திமுகவினர் ஆங்காங்கே பந்தல்களை திறந்து வைப்பார்கள். 


கடந்த காலங்களில் மாவட்ட எம்பியான கனிமொழி அவர்களும் தனது சொந்த செலவில் பல இடங்களில் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து மக்களின் தாகம் தணித்தார்.

​ஆனால், இந்த 2026-ல் இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியோ, மக்கள் பிரதிநிதியோ தண்ணீர் பந்தல் அமைக்க முன்வரவில்லை. "தேர்தல் முடிவுகளின் சோகத்தில் அவர்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பதால், எங்களுக்கு தண்ணீர் பந்தல் அமைக்க மறந்துவிட்டார்களா? அல்லது பொதுமக்களை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்களா?" என்று வெயிலில் அலையும் பொதுமக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.


எம்.எல்.ஏ ஸ்ரீநாத் நடவடிக்கை எடுப்பாரா?

​தற்போது தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி மக்கள் பிரதிநிதியாக இருக்கும் எம்.எல்.ஏ ஸ்ரீநாத்  இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

​மாநகராட்சி நிர்வாகத்தை முடுக்கிவிட்டு, தூத்துக்குடியின் முக்கிய சந்திப்புகள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வார்டு பகுதிகளில் உடனடியாக கோடைகால தண்ணீர் மற்றும் மோர் பந்தல்களை அமைக்க எம்.எல்.ஏ ஸ்ரீநாத் விரைந்து நடவடிக்கை எடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- தூத்துக்குடி லீக்ஸ் செய்தியாளர்.

திங்கள், 18 மே, 2026

தூத்துக்குடியில் மாநகராட்சி வணிக வளாகங்கள் ஆய்வு மாவட்ட திமுக பிரதிநிதி இல்லத் திருமண விழாவில் கனிமொழி எம்.பி. பங்கேற்பு

Tamil Nadu updates 

news by Arunan journalist 

தூத்துக்குடி, மே 18:

இன்று (18.05.2026) திங்கள்கிழமை, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சிதம்பரநகரில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலைய வணிக வளாகம் ஆகிய பகுதிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

thoothukudileaks


thoothukudileaks

பாராமரிப்பு பணி ஒழுங்காக நடக்கிறததா???

அப்போது வணிக வளாகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள், பொதுமக்கள் பயன்பாடு, கடை அமைப்புகள் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

thoothukudileaks


வணிகர்களுக்கு ஆலோசனை!!

மேலும், பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் தேவைகள் தொடர்பாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

thoothukudileaks


திருமணம் நிகழ்ச்சி பங்கேற்பு!!!


இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி அபிநயா மஹாலில் நடைபெற்ற மாவட்ட திமுக பிரதிநிதி  பொன்ராஜ் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி., மணமக்கள் சக்தி லிங்கேஸ்வரன் – சிவா பிரியா ஆகியோருக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்தார்.

thoothukudileaks

thoothukudileaks


இந்த நிகழ்வுகளில் மாவட்ட கழகச் செயலாளர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.