குளித்தலை, பிப்ரவரி : பெ 4
தமிழ்நாட்டில் பழனிக்கு அடுத்தபடியாக சிறப்புமிக்க தைப்பூசத் திருவிழா கரூர் மாவட்டம் குளித்தலையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றங்கரையில் எட்டு ஊர் சுவாமிகள் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பங்கேற்று, பக்தர்களின் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தவாரி செய்து, சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து, அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாபெரும் அன்னதான விழா தொடர்ந்து இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று வந்து அன்னம் பெற்று சென்றனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக சங்கத்தின் தேசிய இணை செயலாளர் கிராமியம் நாராயணன் மற்றும் மாநில கௌரவ செயலாளர் வாழைக்காய் வியாபாரி சேட்டு ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.
இந்த மாபெரும் அன்னதான விழாவுக்கான ஏற்பாடுகளை, சங்கத்தின் நிறுவனர் அருள்வேலன் ஜி அவர்களின் ஆலோசனைப்படி, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள்
N. ராமகிருஷ்ணன், P. கருணாநீதி, தியானேஷ், சரவணன், வெங்கடேஷ், சந்தோஷ், வீரமணி, தர்மராஜ், S. சதீஷ்குமார், ரவி, முகிலன், அர்ச்சகர் விஷ்ணு, சுந்தரேசன், வரகூர் மணி, மதியழகன், செந்தில் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.











