Tamil Nadu updates
photo news by Arunan journalist
தூத்துக்குடி:மே 22
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஐபிஎஸ் அவரை இன்று( 22-5-2026 ) தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து, வியாபாரிகளின் பாதுகாப்பு குறித்தும், சமூக வலைத்தளங்களில் உணவகங்கள் மீது பரப்பப்படும் அவதூறுகள் குறித்தும் முக்கிய கோரிக்கை மனுவை அளித்தனர்.
இது பற்றி செய்தியாவது...
காவல் கண்காணிப்பாளருடன் சந்திப்பு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் தெர்மல். சொ. ராஜா தலைமையில், தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க தலைவர் ஜவஹர் -பொருளாளர் விக்னேஷ் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொருளாளர் நவமணி தங்கராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்தனர்.
நிர்வாகிகளின் முக்கிய கோரிக்கைகள்
அச்சமற்ற வணிகச் சூழல்: தூத்துக்குடியில் உள்ள வியாபாரிகள் எவ்வித பயமும், அச்சுறுத்தலும், பிரச்சனைகளும் இல்லாமல் நிம்மதியாக வணிகம் செய்திட தேவையான பாதுகாப்பு சூழலை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்.
காவல்துறைக்கு ஒத்துழைப்பு:
வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், சட்ட ஒழுங்கை பராமரிக்க வணிகர்கள் தரப்பில் இருந்து காவல்துறைக்கு எப்போதும் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.
அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை:
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் (Social Media) திட்டமிட்டு உணவகங்களை (ஹோட்டல்களை) பற்றி அவதூறு பரப்பி, வணிகர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்க முயலும் சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.
காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா IPS உறுதி:
வணிகர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வியாபாரிகளின் பாதுகாப்பிற்கு காவல்துறை என்றும் துணையாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
மேலும், சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவோர் மீது சட்டம் பாயும் எனக் குறிப்பிட்ட அவர், வணிகர்களின் கோரிக்கைகள் குறித்து கண்டிப்பாக உரிய ஆவண (நடவடிக்கை) செய்கிறேன்"என உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின் போது வணிகர் சங்க முக்கிய நிர்வாகிகள் மற்றும் வர்த்தகர்கள் பலர் உடனிருந்தனர்.













