வியாழன், 11 ஜூன், 2026

கயத்தாறு அருகே இளம் பெண் மரணம்: "ஆணவக் கொலை" என பரவும் whatsapp தகவல்களுக்கு காவல்துறை மறுப்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

 Tamil Nadu updates,

தூத்துக்குடி, ஜூன் 11:

கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு மயிலோடை பகுதியில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட இணைய தளங்களில் "ஆணவக் கொலை" நடைபெற்றதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் பரவி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில், ..

தெற்கு மயிலோடை பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர் கடந்த ஜூன் 9-ஆம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து, கயத்தாறு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணை, உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், உயிரிழந்த இளம் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது தாய் எஸ்தர் பாலின் (36) மற்றும் சகோதரர் சிவஞானம் (20) ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்

thoothukudileaks

.

விசாரணையில்,...

 உயிரிழந்த இளம் பெண் சமூக வலைதளத்தின் மூலம் ஒருவருடன் பழகி வந்தது தொடர்பாக குடும்பத்தில் ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக இச்சம்பவம் நடைபெற்றது தெரியவந்ததாக கூறப்பட்டுள்ளது. 

இளம் பெண் கொலை வழக்கு!!!

மேலும், சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், இளம் பெண்ணின் மரணத்தில் அவரது தாய் மற்றும் சகோதரருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.


மேலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இச்சம்பவம் "ஆணவக் கொலை" என உறுதிப்படுத்தும் வகையிலான எந்தவித ஆதாரமும் கண்டறியப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

வதந்தி பரவியது!!!

 எனவே சமூக வலைதளங்களில் பரவி வரும் "ஆணவக் கொலை" குறித்த தகவல்கள் உறுதி செய்யப்படாதவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

thoothukudileaks


உறுதி செய்யப்படாத மற்றும் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவது பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடிய செயலாகும். இதுபோன்ற வதந்திகள் மற்றும் பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. :::

புதன், 10 ஜூன், 2026

தூத்துக்குடி பனிமய அன்னை ஆலய திருவிழாவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்க வேண்டும்; மக்கள் எதிர்பார்ப்பு

Tamil Nadu updates 10-6-2026

photo news Dias

by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 10:

தூத்துக்குடி மாநகரின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் புனித பனிமய அன்னை பேராலயத்தின் ஆண்டு திருவிழாவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்று, அன்னையின் அருளைப் பெற வேண்டும் என தூத்துக்குடி மக்கள் அன்போடு எதிர்பார்த்து வருகின்றனர்.

thoothukudileaks


உலகப் புகழ்பெற்ற பனிமய அன்னை பேராலய திருவிழா, வரும் ஜூலை 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, இலங்கை, சவுதி அரேபியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் பக்தர்களும் திரளாக பங்கேற்று வழிபடுவது வழக்கம்.

திருவிழா!!!

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தங்கத் தேர் பவனி, தூத்துக்குடி மாநகரின் முக்கிய வீதிகளில் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெறும். இந்த அரிய நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது குறிப்பிடத்தக்கது.


மேலும், பார் போற்றும் திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் தாயின் கொடியேற்ற நிகழ்வு, 2026 ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முதல்வரின் குடும்ப 🫜 வேர்கள்!!!

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் குடும்ப வேர்கள் தூத்துக்குடி மாவட்டத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நிலையில், அவர் தனது சொந்த மண்ணாக கருதப்படும் தூத்துக்குடிக்கு வருகை தந்து, பனிமய அன்னை பேராலய திருவிழாவில் ஏதேனும் ஒரு நாளில் கலந்து கொண்டு தரிசனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வீடியோ பார்க்க ...

அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் தூத்துக்குடி மக்கள் தங்களின் பேராதரவை வழங்கியுள்ள நிலையில், ...

அந்த அன்புக்கு நன்றிக்கடனாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தூத்துக்குடிக்கு வருகை தருவார் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவுகிறது.

அழைப்பு!!!

மேலும், பனிமய அன்னை பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜாண் செல்வம், தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து திருவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் ஆர்வத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


"THOOTHUKUDI WELCOMES cm JOSEPH VIJAY" என்ற வாசகத்துடன், பனிமய அன்னையின் அருள்பெற தமிழக முதலமைச்சர் தூத்துக்குடி வர வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பாக உள்ளது.

திங்கள், 8 ஜூன், 2026

த.மா.கா. மாநில பொதுக்குழு உறுப்பினர் பெஸ்கிராஜா தமிழக வெற்றி கழகத்தில் இணைப்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

தூத்துக்குடி, ஜூன் 8:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், தூத்துக்குடி மத்திய மாவட்ட துணைத் தலைவருமான புதியம்புத்தூரைச் சேர்ந்த ஏ.எக்ஸ். பெஸ்கிராஜா, தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.

thoothukudileaks


கடந்த 7-ம் தேதி ஓட்டப்பிடாரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர். கனகராஜ் மற்றும் புதியம்புத்தூர் நகர செயலாளர் எம்.பி. அன்பரசன் ஆகியோர் முன்னிலையில், தூத்துக்குடி புறநகர் மாவட்ட கழக செயலாளரும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சருமான பி. மதன்ராஜா, எம்.எல்.ஏ. அவரை  மாவட்ட கழக அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

வீடியோ பார்க்க 



thoothukudileaks


thoothukudileaks


இந்நிகழ்ச்சியில் புதியம்புத்தூர் பேரூராட்சியைச் சேர்ந்த அமைச்சர் உதவியாளர் எம். வினோத்குமார், மாவட்ட கழக உதவியாளர் ஜெ. கணேஷ், நகர பொருளாளர் எஸ்.எம். செந்தில்குமார், இளைஞரணி தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ். பாரத் கமல் (பி.காம்), ஒன்றிய பொருளாளர் ஆடிட்டர் ஏ. ஸ்ரீனிவாசன், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் பி. பொன்சேகர், டி. கார்த்திக், மாணவரணி ஒன்றிய செயலாளர் எம். காசிராஜா, என். ஜெயக்குமார், எம். சக்தி கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர், மகளிரணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ. டஸ் நேவிஸ் ராணி, ஆவுடையம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


எடப்பாடி பழனிசாமியுடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் நெகிழ்ச்சி சந்திப்பு!

 Tamil Nadu updates

 photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

தூத்துக்குடி, ஜூன் 8:

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

​இன்று (08.06.2026) சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் இல்லத்திற்குச் சென்ற தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், அவருக்கு பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து வழங்கி மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

thoothukudileaks


ஆலோசனை!!! 

​இந்த சந்திப்பின் போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகத்தின் செயல்பாடுகள், உட்கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் மக்கள் நலப் பிரச்சினைகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. 

உற்சாகம்!!!

கட்சியின் தலைமைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையேயான இந்த முக்கிய சந்திப்பு அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி, 5 ஜூன், 2026

விரைவில் தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் மேயர் பதவி ரிசர்வ் பரபரப்பு மூட் அப்செட்டில் திமுக

Tamil Nadu updates, 

கட்டுரை செய்தியாளர் ரோஜா அருணன் 

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் மேயர் பதவி ரிசர்வ் பரபரப்பு  மூட் அப்செட்டில் தி மு க !!!

தூத்துக்குடி ஜுன் 6

இதுபற்றிய சுவாரஸ்யம் கொஞ்சம்  பார்க்கலாம் ...


தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது அதில்  தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று முதல்வர் ஆக  ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றார் 


சட்ட மன்ற தேர்தலில் தி மு க மற்றும் அ தி மு க தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்ற இறுமாப்புடன் போட்டியிட்ட  இந்த இரண்டு கட்சிக்கும் கூட்டணி மற்றும் தங்கள் கட்சி உடைந்து சேதாரம் சொல்ல முடியாத வலியில் இருந்து வருகின்றன.  


அடுத்த கட்டமாக விரைவில்...மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடத்த வேண்டும் அதற்கான ஆயத்தப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன....


திமுக கோட்டையாக சென்னை தூத்துக்குடி!!!

 கடந்த காலங்களில்  தி மு க கோட்டையாக சென்னையும் தூத்துக்குடியும் இருந்து வந்தது


 கடந்த 2021 உள்ளாட்சி மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற போது தூத்துக்குடி மாநகராட்சி ரிசர்வ் தொகுதி என அறிவிப்பு வெளிவர இருந்தது.

 அதை தூத்துக்குடி ரிசர்வ் தொகுதி என வரவிடாமல் சுயநல ஆதிக்க சக்திகள் தங்களது பண பலத்தால்  கவனிப்பு களால் ? ஆட்சி மற்றும் அதிகாரிகள் பொது நிலைக்கு தூத்துக்குடி மாநகராட்சி மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் 

thoothukudileaks


கடந்த 2021 ல் தூத்துக்குடி மாநகராட்சி ரிசர்வ் தொகுதி ஆக மாறி  ஒடுக்கப்பட்ட சமுகத்தை சேர்ந்தவர் மேயராக பொறுப்பு ஏற்றிருக்க வேண்டியது .


தூத்துக்குடி பதிலாக சென்னை!!!

சுழற்றியடித்த சுனாமி சென்னை மாநகராட்சி பக்கம் விசியது   ரிசர்வ் பகுதி என தூத்துக்குடி மாநகராட்சி மாறுவதற்கு பதிலாக...


சென்னை மாநகராட்சி ரிசர்வ் தொகுதி என அறிவிக்கப்பட்டு திமுக மேயராக பிரியா வந்தார்.


 தற்போது இந்த தடவை தூத்துக்குடி மாநகராட்சி ரிசர்வ் தொகுதி ஆக மாறி பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர் தான் மேயர் ஆக வருவார் என்கிறார்கள் 


கெத்து காட்டும் திமுக!!!

தமிழகத்தில் அதிகப்படியான இடத்தில் முதல்வர் ஜோசப் விஜயின் ஆளும் கட்சி தவெக வெற்றி பெற்று இருந்தாலும் ...


தூத்துக்குடி மாவட்டத்தில்  தி மு க மூன்று எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோர் இப்போது வரை தி மு க கெத்து காட்டி வருகின்றனர்.

தூத்துக்குடி திமுக என்றால்?

தற்போது தூத்துக்குடி  மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி இருந்து வருகிறார்   

இவர் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனின் உடன் பிறந்த தம்பி தான்  தூத்துக்குடியில் திமுக என்றால் மறைந்த முரட்டு பக்தர் பெரியசாமியின் அரசியல் வாரிசுகள் தான்.


வேற யாருக்கும் விட்டுக் தரமாட்டார்கள் என்பது அனைவருக்கும் புரிய வைத்துள்ளார்கள் 

thoothukudileaks


மூடு அப் செட்டில்!!!

வருகின்ற மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவி ரிசர்வ் என ஆகிறது என்றால் இவர்கள் யாரோ பதிவு சுகம் பெற வேலை செய்யனுமா என்ற நிலை வரும் பதவி அதிகாரம் இல்லாத தூத்துக்குடி தி மு க நிச்சயமாக 5 வருடங்கள் தாக்கு பிடிக்க முடியுமா  என அதிர்ச்சியில் மூடு அப் செட்டில் உலவி கொண்டு இருக்கிறார்களாம்   

வீடியோ பார்க்க 

துள்ளி குதிக்கும் ஒரு தரப்பு!!!

தூத்துக்குடி மாநகராட்சி ரிசர்வ் தொகுதியா ஒரு தரப்பு துள்ளி குதித்து கொண்டு இருக்கிறது 

ஏற்கனவே இதுவரை 75 வருடங்களாக  ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகளான காங்கிரஸ் திமுக அதிமுக செய்யாத ஒன்று  தவெக நிகழ்த்தி காட்டியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை  அமைச்சர் பதவி என்பது ஆதிக்க சக்திகளுக்கு தான் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு கிடையாது காங்கிரஸ் திமுக அதிமுக ஆகிய கட்சிகள் வழங்காமல் மறுக்கப்பட்டு  அரசியல் செய்து கொண்டு இருந்தார்கள்.

ஆனால் ?...

இந்த தடவை 2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ரிசர்வ் தொகுதியில் தவெக  எம்எல்ஏவாக வெற்றி பெற்ற மதன் ராஜா அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து முதல்வர் ஜோசப் விஜய் ஆச்சரியப்படுத்தி உள்ளார். 

தூத்துக்குடி லீக்ஸ் க்காக,...

தகவல் கட்டுரை 

செய்தியாளர் 

ரோஜா அருணன் 

"உலக சுற்றுச்சூழல் தினம்: தூத்துக்குடி பிங்க் பூங்காவில் மரக்கன்றுகள் நட்டு இயற்கை பாதுகாப்பு உறுதிமொழி

Tamil Nadu updates news by Arunan 

தூத்துக்குடி, ஜூன் 5:

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இயற்கையை பாதுகாப்பதன் அவசியத்தை பொதுமக்களிடையே உணர்த்தும் வகையில் இன்று தூத்துக்குடி ஹவுசிங் போர்டு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பிங்க் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

thoothukudileaks


 வீடியோ பார்க்க 

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பசுமையை வளர்க்கவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும், இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என்பதையும் வலியுறுத்தினர்.



இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப., மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, அந்தோணி மார்சலின்,  ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டனர்.

மேலும் தன்னார்வலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


thoothukudileaks


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, பசுமையான மற்றும் தூய்மையான நகரை உருவாக்கும் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

செவ்வாய், 2 ஜூன், 2026

தூத்துக்குடியில் கலைஞர் கருணாநிதி 103வது பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் கொண்டாட்டம் மேயர் வராததால் பரபரப்பு செய்தியாளர் ஏமாற்றம்!!!

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 3:

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் திமுகவினரால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு லட்டு வழங்கி கொண்டாடப்பட்டது.

thoothukudileaks


thoothukudileaks


தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலைய நுழைவுவாயில் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.

thoothukudileaks

thoothukudileaks


தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மற்றும் மாநகர திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில், பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

மேயர் ஆப்சென்ட்!!!

இந்நிலையில், வழக்கமாக கலைஞர் பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இம்முறை மாநகராட்சி அலுவலகம் அருகாமையில் உள்ள பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ளாதது...


 கட்சி வட்டாரத்திலும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையிலும் பேசுபொருளாக அமைந்தது.

செய்தியாளர் ஏமாற்றம்!!!

மேயரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த செய்தியாளர்களும், அவரது பங்கேற்பு இல்லாததால் ஏமாற்றமடைந்ததாக தெரிவித்தனர். மேயர் நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கான காரணம் குறித்து  தகவல் எதுவும் வெளியாகவில்லை.


இதனால், கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்துடன், மேயரின் வருகையின்மை குறித்த விவாதமும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.