சனி, 20 டிசம்பர், 2025

தூத்துக்குடியில் சாலை ஓரமாக உறங்கும் ஆதரவற்றோருக்கு போர்வை வழங்கல் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி டிச20

தூத்துக்குடி பியர்ல்சிட்டி பத்திரிகையாளர் சங்கம் மற்றும் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில், இரவு நேரத்தில் சாலை ஓரங்களில் உறங்கும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் வீடு இல்லாத மக்களுக்கு போர்வை வழங்கும் மனிதநேய சேவை நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகர பகுதியில் நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


இந்நிகழ்ச்சியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து, போர்வைகளை வழங்கினார். அவருடன் பியர்ல்சிட்டி பத்திரிகையாளர் சங்க செயலாளர் காட்சன், ஆல் கேன் டிரஸ்ட் நிறுவனரும் தூத்துக்குடி மாவட்ட அரசு வழக்கறிஞருமான மோகன் தாஸ் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவற்றோருக்கு போர்வைகளை வழங்கினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பணிச்சுமை அதிகம் இருப்பதாலும், வீடு இல்லாத முதியவர்கள் பலர் சாலை ஓரங்களில் உறங்க வேண்டிய சூழ்நிலை நிலவுவதாலும், தற்போது நிலவும் அதிகமான பனிப்பொழிவு காரணமாக அவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 


இதனை கருத்தில் கொண்டு, மனிதநேய அடிப்படையில் இந்த போர்வை வழங்கும் சேவை முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், வேம்படி இசக்கி அம்மன் கோவில், பனிமய மாதா கோவில், சிவன் கோவில் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சாலை ஓரமாக உறங்கும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் வீடு இல்லாமல் தங்கிய மக்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டன.

.

மனிதநேயத்தை வெளிப்படுத்தும் இச்சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

வெள்ளி, 19 டிசம்பர், 2025

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் அனுமன் ஜெயந்தி விழா – சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அன்னதானம்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ்  செய்தி

தூத்துக்குடி டிச 20

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசித்தர் பீடத்தில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. இங்கு ஆஞ்சநேயர் தியான ஆஞ்சநேயராக எழுந்தருளியுள்ளார்.



அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் நல்ல மழை பெய்து விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் வளம்பெறவும், உலக மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் தியான ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட 27 வகையான சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

தூத்துக்குடியில் அருள் மிகு ஜெய் ஹனுமான் ரொம்ப ரொம்ப...அரிதாக தியானத்தில் அமர்ந்து இருக்கும் சிறப்பு பக்தி வீடியோ பார்க்க 


தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வடை, துளசி, வெற்றிலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனுடன் மஹாபிரத்தியங்கிரா தேவி மற்றும் காலபைரவருக்கும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்து வழிபாடுகள் நடைபெற்றன.

விழாவின் நிறைவாக மஹா அன்னதானம் வழங்கப்பட்டு, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

.


தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் மாநகராட்சி வாகன காப்பகத்திலேயே இருசக்கர வாகனம் திருட்டு பாதுகாப்பு கேள்விக்குறி – பொதுமக்கள் அதிர்ச்சி

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடி டிச 20

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் வாகன காப்பகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மர்மமான முறையில் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி வண்ணார் முதல் தெருவை சேர்ந்த சரவணகுமார் என்பவர், கடந்த 16ஆம் தேதி இரவு தன்னுடைய இருசக்கர வாகனத்தை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சி வாகன காப்பகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளார். 


மறுநாள் 17ஆம் தேதி காலை வாகனத்தை எடுத்து செல்ல வந்த போது, அது அங்கு காணாமல் போனது தெரியவந்தது.



இதுகுறித்து அங்கு பணியில் இருந்த மாநகராட்சி ஊழியர்களிடம் விசாரித்த போது, தெளிவான பதில் எதுவும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. பின்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்ட போது, ஒருவர் அந்த இருசக்கர வாகனத்தை வாகன காப்பகத்திலிருந்து எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து சரவணகுமார் மத்திய பாகம் காவல் நிலையத்தில், தன்னுடைய இருசக்கர வாகனம் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இதே மாநகராட்சி வாகன காப்பகத்தில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். 


வாகன காப்பகத்தில் போதிய பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு காவலர்கள் இல்லாததே இதற்குக் காரணம் என வாகன உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம், சிசிடிவி கண்காணிப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு, இனி வரும் காலங்களில் வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செய்தி புகைப்படம் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

தூத்துக்குடி மாவட்டம்: 1.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் 

சிறப்பு செய்தி  அருணன் செய்தியாளர் 

தமிழகம் முழுவதும் வெளியான வரைவு வாக்காளர் பட்டியல்

98 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கம் – சென்னையில் 3-ல் ஒருவர் வாக்குரிமை இழப்பு

தமிழ்நாடு முழுவதும் 2026 ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட எஸ்.ஐ.ஆர் (Special Intensive Revision) எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, மாநிலத்தின் 38 மாவட்டங்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

thoothukudileaks


இந்த பட்டியலின்படி, மாநிலம் முழுவதும் மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடங்குவதற்கு முன் தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 பேர் வாக்காளர்களாக இருந்த நிலையில், தற்போது அது 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 ஆக குறைந்துள்ளது.

சென்னையில் அதிர்ச்சி: 3-ல் ஒருவருக்கு வாக்குரிமை நீக்கம்

அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் 14,25,018 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் 35.58 சதவீதம் ஆகும். அதாவது, சென்னையில் மூன்று பேரில் ஒருவருக்கு வாக்குரிமை பறிபோயுள்ளது என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய மாவட்டங்களில் நீக்கப்பட்ட வாக்காளர்கள்

  • திருப்பூர் – 5.63 லட்சம் (23%)
  • கோவை – 6.50 லட்சம் (20.17%)
  • திருவள்ளூர் – 6.19 லட்சம் (17.30%)
  • செங்கல்பட்டு – 7.01 லட்சம் (25.20%)
  • சேலம் – 3.62 லட்சம்
  • மதுரை – 3.80 லட்சம்
  • திருச்சி – 3.31 லட்சம்
  • ஈரோடு – 3.25 லட்சம்

தூத்துக்குடி மாவட்டம்: 1.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 62 ஆயிரத்து 527 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் 10.9 சதவீதம் ஆகும். எஸ்.ஐ.ஆர்.க்கு முன் 14,90,685 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது அது 13,28,158 ஆக குறைந்துள்ளது.

நீக்கத்திற்கான காரணங்கள் என்ன?

சரியான முகவரியில் வசிக்காதோர்,
உயிரிழந்தவர்கள்,
முகவரி மாற்றம் செய்தவர்கள்,
இரட்டைப் பதிவாளர்கள் உள்ளிட்ட காரணங்களால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நீக்கத்திற்குமான காரணங்களும் வரைவு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வீடியோ பார்க்க 


ஆட்சேபனை தெரிவிக்க வாய்ப்பு

நீக்கப்பட்ட காரணங்கள் தவறானவை என கருதுபவர்கள் ஜனவரி 18-ஆம் தேதி வரை ஆட்சேபனை தெரிவிக்கலாம்.

  • இடம் மாறியவர்கள் – படிவம் 8
  • புதிய வாக்காளர்கள் – படிவம் 6
    என்ற படிவங்களை தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.

பட்டியல் பார்வையிட எங்கே?

இந்த வரைவு வாக்காளர் பட்டியலை

  • தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம்
  • மாவட்ட ஆட்சியரகங்கள்
  • மாநகராட்சி அலுவலகங்கள்
  • voters.eci.gov.in இணையதளம்

மூலம் பொதுமக்கள் பார்வையிடலாம். மேலும், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து, பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்க்கலாம்.

ஒரு மாத அவகாசம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2026 தேர்தலை முன்னிட்டு வெளியான இந்த வரைவு வாக்காளர் பட்டியல், தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களையும் சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது.

AITUC 65வது ஆண்டு விழா – டிசம்பர் 20ல் தூத்துக்குடியில் நடைபெறுகிறது

தூத்துக்குடி லீக்ஸ்” நாளிதழ் செய்தி 

photo news by Arunan journalist 


AITUC 65வது ஆண்டு விழா – டிசம்பர் 20ல் தூத்துக்குடியில் நடைபெறுகிறது

தொழிலாளர் உரிமைகளைக் காக்க உறுதிமொழி எடுக்கும் மாநாடு

தூத்துக்குடி, டிச. 19 :

இந்திய தொழிற்சங்க பேரவை (AITUC) 65வது ஆண்டு விழா மற்றும் தூத்துக்குடி ஹார்பர் ஓர்கர்ஸ் யூனியன் சார்பில் சிறப்பு மாநாடு வரும் 20.12.2025 (சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி பழைய துறைமுக சமூக நலக் கூடத்தில் (பீச் ரோடு) நடைபெறுகிறது.

thoothukudileaks


இந்த விழாவிற்கு AITUC மாநில, மாவட்ட மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்னணி தலைவர்கள், தொழிலாளர் இயக்கத்தின் மூத்த போராளிகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

விழாவிற்கு R. பாண்டி தலைமை வகிக்க,
முன்னிலை:

  • A. பாலசிங்கம் – AITUC மாநில பொருளாளர்
  • G. ராஜ்குமார் – AITUC துறைமுக தலைவர்

வாழ்த்துரை:

  • M. ராதாகிருஷ்ணன்
  • S. காசி விஸ்வநாதன்
  • B.C.H. மசன்
  • S.S. சரவணன்
  • S. சீனிவாசராவ்
  • K. பிரகாஷ்ராவ்
  • P. கருப்பன் உள்ளிட்ட பலர்

சிறப்பு விருந்தினர்கள் ஆக INTUC, CITU, HMS, PETU, BTTS, TASMAC உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தொழிலாளர் உரிமைகள், ஊதிய உயர்வு, வேலை பாதுகாப்பு, துறைமுக தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்த கருத்துகளை பகிர உள்ளனர்.

65 ஆண்டுகளாக தொழிலாளர் நலனுக்காக போராடி வரும் AITUC-ன் வரலாற்றுச் சாதனைகள், எதிர்கால தொழிலாளர் இயக்கத்தின் பாதை குறித்து இந்த மாநாடு முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவில் தொழிலாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என தூத்துக்குடி ஹார்பர் ஓர்கர்ஸ் யூனியன் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி புகைப்படங்களில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 


thoothukudileaks



வியாழன், 18 டிசம்பர், 2025

தூத்துக்குடி பழைய மாநகராட்சி கட்டிட மொட்டை மாடியில் மேயர்–ஆணையர் திடீர் ஆய்வு அதிகாரிகளுக்கு கடும் அறிவுறுத்தல்

தூத்துக்குடி டிச 18

தூத்துக்குடி பழைய மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் முடிவடைந்த பின்பு, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா ஆகியோர் திடீரென இரண்டு மாடிகள் ஏறி மொட்டை மாடிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

மழை பெய்துக் கொண்டிருந்த நிலையில் குடை பிடித்துக் கொண்டு மேயரும் ஆணையரும் மொட்டை மாடிக்கு சென்றதை தொடர்ந்து, அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக பின் தொடர்ந்து சென்றனர். மொட்டை மாடியை பார்வையிட்ட மேயர் ஜெகன் பெரியசாமி, அங்கு ஒரு பகுதியில் சிறிய அளவில் மரம் வளர்ந்திருப்பதை கண்டறிந்து, “இது உடனடியாக அகற்றப்பட வேண்டும். இதனை இதுவரை ஏன் அகற்றவில்லை?” என அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.

thoothukudileaks


அதேபோல், மொட்டை மாடியில் தேவையின்றி வைக்கப்பட்டிருந்த பழைய பைப்புகளை சுட்டிக்காட்டிய அவர், அவற்றை உடனடியாக அகற்றி மாநகராட்சி குடோனில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் சில இடங்களில் மழைநீர் தேங்கி கீழே ஒழுகுவதை கவனித்த மேயரும் ஆணையரும், மழைநீர் லீக்கேஜ் உள்ள அனைத்து பகுதிகளையும் கண்டறிந்து முழுமையாக சரிசெய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு கடும் அறிவுறுத்தல் வழங்கினர்.

கிழக்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாமுக்கு வந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் மொட்டை மாடிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டது அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

ஆய்வின்போது அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, “மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்கள் 100 சதவீதம் பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும். 



இது அந்தந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், பணியாளர்களின் கடமை. திடீரென மீண்டும் நான் ஆய்வு செய்ய வருவேன். அப்போது அனைத்து குறைகளும் சரிசெய்யப்பட்டு, மொட்டை மாடி சுத்தமாக இருக்க வேண்டும்,” என எச்சரித்தார்.

இந்த ஆய்வின்போது உதவி ஆணையர் வெங்கட்ராமன், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் வேலாயுதம், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா, சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், இளநிலை பொறியாளர் பாண்டி, உதவி பொறியாளர்கள் ஹரிஹரன், நித்தியகல்யாணி, அனுசௌந்தர்யா, தொழில்நுட்ப உதவியாளர்கள் சரண்பிரசாத், பிரின்ஸ் பிரதீப், ஆனந்தஜோதி, கவுன்சிலர்கள் ராமுஅம்மாள், எடின்டா, மும்தாஜ், தனலட்சுமி, பேபி ஏஞ்சலின், ரெக்ஸ்லின், மரியகீதா, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

photo news by sunmugasuthram press club president 

செவ்வாய், 16 டிசம்பர், 2025

தூத்துக்குடி மாநகராட்சியில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் மனுக்களுக்கு உடனடி தீர்வு – மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது

 தூத்துக்குடி டிச17

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று (17.12.2025, புதன் கிழமை) கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது.

thoothukudileaks


thoothukudileaks

thoothukudileaks


முகாமில் பொதுமக்களிடமிருந்து சொத்து வரி தொடர்பான குறைகள், குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றங்கள், பிறப்பு–இறப்பு சான்றிதழ் திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. 


உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைகள் மற்றும் நிர்வாகச் சேவைகள் தொடர்பான குறைகளை நேரடியாக அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெற்றனர். இவ்வாராந்திர முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு, குறைகளுக்கு விரைந்து தீர்வு வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்று தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் 15மனுக்கள் பொதுமக்கள் தரப்பில் பெறப்பட்டன.