வெள்ளி, 18 ஜூலை, 2025

முன்னோடிகளை வீடு தேடி கௌரவித்த அமைச்சர் கீதா ஜீவன்

News by sunmugasuthram press club president 


📰 தூத்துக்குடி லீக்ஸ்
🗓️ தேதி: 18.07.2025
📍 தூத்துக்குடி மாவட்ட செய்தி


முன்னோடிகளை வீடு தேடி கௌரவித்த அமைச்சர் கீதா ஜீவன்

“கழகமே குடும்பம்” என வாழ்ந்தவர்கள் தேடிச் செல்லும் நேரம் இது – ஊக்கத்தொகையுடன் மனமுழுதும் மரியாதை!

தூத்துக்குடி:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், திமுக முன்னோடிகளை நேரில் சென்று சந்தித்து மரியாதை செலுத்தும் நிகழ்வை அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடியில் முன்னெடுத்தார்.

முன்னதாக, இளைஞரணி மாநில செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், “நான் உங்களது பேரனாக, கலைஞரின் வழியில் ஆசீர்வாதம் பெற வந்துள்ளேன்” என உரையாற்றியதையடுத்து, மாவட்டத்திலுள்ள முன்னோடிகள் வீடுகளுக்கு நேரில் சென்று, ‘பொற்கிளி’ விருது மற்றும் ஊக்கத்தொகையை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

தூத்துக்குடி லீக்ஸ்


அதன்படி, தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூத்த உறுப்பினர்கள் இல்லத்திற்கு சென்ற அமைச்சர் கீதா ஜீவன், அவர்களின் நலம் விசாரித்து, “2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக உங்கள் குடும்பங்கள் துணையாக இருக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

தூத்துக்குடி லீக்ஸ்


இந்நிகழ்வில், ஒரு மூத்த முன்னோடி, தமது தந்தை பெரியசாமியின் கடந்த கால அரசியல் சேவைகள் குறித்து பகிர்ந்து, “இந்த நாள் என் வாழ்நாளில் ஒரு பொன்னாள்” என உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார்.

மேலும், “திமுக கட்சி தொடங்கி 75 ஆண்டு பவள விழா கொண்டாடப்படுகிறது. இன்றைய தலைமுறைக்கு கடந்த காலத் தோழர்களின் சேவையை அறிமுகப்படுத்தவே இத்தகைய முயற்சிகள் மதிப்புக்குரியவை” என கூறப்பட்டது.

இந்நிகழ்வில், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், பகுதி அமைப்பாளர்கள் செல்வம், வட்ட பிரதிநிதி பாஸ்கர், மணி, அல்பட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

photo Arunan journalist 


📸 புகைப்பட குறிப்புகள் 

  1. அமைச்சர் முன்னோடிக்கு ஊக்கத்தொகை வழங்கும் தருணம்
  2. வீட்டு நுழைவில் பாரம்பரிய வரவேற்பு
  3. முன்னோடிகள் உருக்கமான உரையாடல்


புதன், 16 ஜூலை, 2025

திராவிட மாடல் விளம்பர அரசு"பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைப்பதா? திமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாஜக செய்தி தொடர்பாளர் கடும் கண்டனம்

கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் தொட்டில்கள் இல்லாததால் பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவலம் தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் இன்று (16-7-2025)கடுமையான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கிராபிக்ஸ் மாடல் புகைப்படம் இது


## முதல்வர் ஸ்டாலின்  !!!


"பெட்ஷீட்டை போட்டு உட்கார்ந்து மனு வாங்கிய ஸ்டாலின் என்று பெருமை பேசும் நீங்கள், ..?

பச்சிளம் குழந்தைகளை மட்டும் தரையில் போடலாமா? தமிழக முதல்வர் அவர்களே?" என்று கேள்வி எழுப்பிய பிரசாத், தமிழக சுகாதாரத்துறை இருண்ட காலத்திற்கு சென்றுவிட்டதாக குற்றம் சாட்டினார்.


## திராவிட மாடல் அரசின் மருத்துவ கட்டமைப்பு தோல்வி


கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் தொட்டில் இல்லாததால் பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவலத்தை சுட்டிக்காட்டும் காணொளி மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். "பச்சிளம் குழந்தைகளை கூட பாதுகாக்க வழியற்றதாக திராவிட மாடல் அரசு இயங்குவதை நினைத்து வெட்கப்பட வேண்டும்" என்று கூறினார்.


## சென்னையிலும் குழந்தைகள் பாதிப்பு


சில நாட்களுக்கு முன்பு வடசென்னை ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் மருத்துவ விதிகளை மீறி நடந்த கட்டிட மேம்பாட்டுப் பணியில் குழந்தைகள் பாதிக்கப்பட்டதையும் அவர் நினைவுப்படுத்தினார்.


## தமிழகம் முழுவதும் முழு ஆய்வு கோரிக்கை


தமிழக முதல்வர் ஸ்டாலின் இது குறித்து முழு விசாரணைக்கு உத்தரப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பிரசாத், தமிழகம் முழுதும் உள்ள அரசு தாய் சேய் நல மகப்பேறு மருத்துவமனைகளில் முழு ஆய்வு மேற்கொண்டு, குழந்தை பெற்ற தாய்களுக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் முழு மருத்துவ பாதுகாப்பை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


## சுகாதாரத் துறை அமைச்சர் மீது கடுமையான விமர்சனம்


"உங்களுடன் ஸ்டாலின், ஒரணியில் தமிழகம் என தேர்தல் அரசியலுக்காக, மக்களுக்கு செய்த துரோகங்களுக்கு பரிகாரம் தேடும் வகையில் ஓட்டு பிச்சைக்காக தெருத்தெருவாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செல்வதால் மருத்துவத்துறை சீரழிந்துவிட்டது" என்று கடுமையாக விமர்சித்தார்.


## "sorry மா" என்று சொல்லி தப்பிக்க முடியாது


முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடம், குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களிடம் "சாரிமா" என்று சொல்லி தப்பித்துக்கொள்ளலாம் என்று மக்கள் நலத்தை பற்றி கவலை கொள்ளாமல் காலம் தாழ்த்துவது ஆபத்தானது என்று எச்சரித்தார்.


## போர்க்கால அடிப்படையில் மாற்றங்கள் கோரிக்கை


திமுக அரசு பதவி ஏற்றது முதல் தமிழக அரசு மருத்துவமனைகளில் நடக்கும் நிர்வாக சீர்கேடுகள் குறித்து ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் வெளிப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டிய பிரசாத், முதல்வர் ஸ்டாலின் உடனடியாக மருத்துவ சுகாதாரத்துறையில் போர்க்கால அடிப்படையில் மாற்றங்களை ஏற்படுத்த முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


## "திராவிட மாடல் விளம்பர அரசு"


திராவிட மாடல் விளம்பர அரசு என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மருத்துவமனையில் நடக்கும் அவலங்களை நோயாளிகள் படும் துன்பங்களை மறந்தும் மறைத்தும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திமுக அரசின் பெருமைகளாக பொய்களை பேசி வருவது கண்டனத்துக்குரியது என்று கூறினார்.

ஏ.என்.எஸ்.பிரசாத் 

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்


--

செவ்வாய், 15 ஜூலை, 2025

மொபைல் போன் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? - சிம் கார்டு மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி?

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தினமும் ஆயிரக்கணக்கான போன்கள் திருடப்படுகின்றன அல்லது தொலைந்து போகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் 'சஞ்சார் சாதி' (Sanchar Saathi) என்ற செயலியை கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி லீக்ஸ்


## டிஜிட்டல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி


இந்த செயலி டிஜிட்டல் மோசடிகளை தடுக்கவும், போலியான அழைப்புகள் மற்றும் மோசடிகளில் புகார் அளிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பான தொலைத்தொடர்பு அனுபவத்தை வழங்குவதை நோக்கமாக கொண்ட இந்த செயலியின் முக்கிய அம்சங்களில் பயனர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் இணைப்புகளை சரிபார்க்கும் வசதியும் அடங்கும்.


சம்பந்தப்பட்ட பயனர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் பேரில் இணைப்புகள் பதிவு செய்யப்பட்டிருந்தால், அவற்றை அறிந்துகொண்டு நடவடிக்கை எடுக்கவும் ....

இந்த செயலி உதவியாக உள்ளது. மொபைல் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலும், அதை கண்காணிக்கவோ அல்லது முடக்கவோ CEIR (Central Equipment Identity Register) அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.


## சிம் கார்டு எப்படி செயல்படுகிறது?


சிம் கார்டு (Subscriber Identity Module) என்பது மொபைல் போனில் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறிய மின்னணு சிப். இது மொபைல் எண்ணை அடையாளப்படுத்தி, மொபைல் நெட்வொர்க்குடன் இணைந்து செயல்படுகிறது.


சிம் கார்டில் IMSI (International Mobile Subscriber Identity) எனப்படும் தனிப்பட்ட அடையாள எண்ணும், சாதனத்தின் அடையாளத்தைச் சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் authentication key-யும் சேமிக்கப்பட்டிருக்கும். 


இவை பயனர்களின் மொபைல் எண்ணை உறுதிப்படுத்தி, அழைப்புகள் செய்யவும், குறுஞ்செய்திகள் அனுப்பவும், இணையத்தைப் பயன்படுத்தவும் உதவுகின்றன.


## புதிய தொழில்நுட்பம் - eSIM


eSIM என்ற புதிய தொழில்நுட்பம் இன்று பிரபலமாகி வருகிறது. 

இது மொபைல் போனில் உள்ளமைக்கப்பட்ட டிஜிட்டல் சிம்மாக செயல்படுகிறது. eSIM மூலம், வெளிநாடு செல்லும்போது சிம் கார்டை மாற்றாமல், எளிதாக நெட்வொர்க்குகளை மாற்றலாம். 


இது சிம் கார்டு தொலைவது அல்லது திருடப்படுவது போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கிறது.


## பழைய சிம் எண் யாருக்கு செல்கிறது?


ஒரு சிம் கார்டு நீண்ட நாட்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அது செயலிழந்துவிடும்.


 இந்தியாவில், டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) விதிகளின்படி, ஒரு மொபைல் எண்ணை மீண்டும் பயன்படுத்த குறைந்தது 90 நாட்கள் காத்திருக்க வேண்டும். 


இது முந்தைய உரிமையாளரின் தகவல்களைப் பாதுகாக்க உதவுகிறது.


ஆனால், அதே குறிப்பிட்ட எண்ணை புதிய பயனருக்கு ஒதுக்கும்போது, முந்தைய உரிமையாளரின் தரவு முழுமையாக அழிக்கப்பட வேண்டும். 


தரவுகள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றால், புதிய பயனருக்கு பழைய தொடர்பு எண்கள் அல்லது செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.



## சிம் ஸ்வாப் மோசடிகள் - எச்சரிக்கை!


சிம் ஸ்வாப் மோசடிகள் என்பது மொபைல் எண்ணை வேறு நபரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து, புதிய சிம் கார்டு மாற்றி மோசடியில் ஈடுபடுவதாகும். 


இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களான பிறந்த தேதி, ஆதார் விவரங்கள், முகவரி ஆகியவற்றை சேகரிக்கின்றனர்.


பின்னர், தொலைத்தொடர்பு நிறுவனத்தை ஏமாற்றி, உண்மையான உரிமையாளர் போன்று காட்டிக்கொண்டு "எனது சிம் கார்டு தொலைந்துவிட்டது" என்று கூறி, அந்த எண்ணை புதிய சிம்முக்கு மாற்றுகின்றனர்.


 இதனால், அந்த எண்ணுக்கு வரும் OTP-கள் மோசடி செய்பவர்களுக்கு செல்கின்றன.


## தரவு பாதுகாப்பு குறித்த கவலைகள்


சிம் கார்டு காலாவதியானால், அதில் உள்ள தரவு தொலைத்தொடர்பு நிறுவனத்தால் அழிக்கப்பட வேண்டும். ஆனால், சில சமயங்களில் தொழில்நுட்ப கோளாறு அல்லது முறையற்ற அழிப்பு முறைகள் காரணமாக, தரவு முழுமையாக அழிக்கப்படாமல் இருக்கலாம். இதனால், புதிய பயனருக்கு பழைய தொடர்பு எண்கள் அல்லது குறுஞ்செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


## சிம் கார்டு வாங்கும் வரம்பு


TRAI விதிகளின்படி, ஒரு நபர் தனது ஆதார் அடையாளத்துடன் அதிகபட்சம் 9 சிம் கார்டுகளை வாங்கலாம். இது மோசடிகளைத் தடுக்க உதவுகிறது. ஆனால், சிலர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்த வரம்பை மீறுகின்றனர்.


## பாதுகாப்பு நடவடிக்கைகள்


சிம் ஸ்வாப் மோசடிகளைத் தவிர்க்க பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கலாம்:


தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும்: 


ஆதார் விவரங்கள், வங்கி தகவல்கள் ஆகியவற்றை தெரியாத நபர்களிடம் பகிர வேண்டாம்.


கூடுதல் பாதுகாப்பு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் சிம் மாற்றத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அமைப்புகளை செயல்படுத்த கோரலாம்.


சந்தேகத்திற்கிடமான அழைப்புகள்:

போலியான அழைப்புகள் அல்லது செய்திகளைப் புகாரளிக்க, சஞ்சார் சாதி இணையதளத்தை (https://www.sancharsaathi.gov.in/) அல்லது செயலியை பயன்படுத்தலாம்.


உடனடி நடவடிக்கை:


மொபைல் எண்ணில் திடீரென சேவை நிறுத்தப்பட்டால், உடனடியாக உங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.


## அரசின் புதிய முயற்சிகள்


சிம் ஸ்வாப் மோசடிகளைத் தடுக்க, இந்திய தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications) பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் 24 மணி நேர SMS தடை போன்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிகள் மோசடிகளைக் குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


## முடிவுரை


சிம் ஸ்வாப் மோசடிகள் மற்றும் தரவு திருட்டு இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் புதிய விதிமுறைகள் மோசடிகளைக் குறைக்க உதவினாலும், பயனர்களின் விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் அவசியம்.


உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைத்து, சந்தேகத்திற்கிடமான எந்த அழைப்பு வந்தாலும் உடனடியாக சஞ்சார் சாதி செயலி மூலம் புகாரளியுங்கள்!

இங்கே Sanchar Saathi செயலியின் தமிழில் தூத்துக்குடி லீக்ஸ் தகவல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ இணைப்புகள்:

🔹 Android (கூகுள் பிளே ஸ்டோர்):

செயலியை Android போனுக்கு இங்கு பதிவிறக்கம் செய்யலாம்:

https://play.google.com/store/apps/details?id=com.dot.app.sancharsaathi 

லிங் இதை தொடவும் செயலி கிடைக்கும் 


🔹 iPhone (ஆப்பிள் App Store):

iPhone-க்கு இங்கே பதிவிறக்கம் செய்யலாம்:

https://apps.apple.com/in/app/sanchar-saathi/id6739700695


🔹 இணையதளம் (வலைதளம் வழியாக பயன்பாடு):

உதவிகள் மற்றும் சேவைகள் இணையதளத்தில் கிடைக்கும்:

https://www.sancharsaathi.gov.in/

ling leaks --இதை தொடவும் செயலி கிடைக்கும்


Sanchar Saathi செயலியின் முக்கிய பயன்பாடுகள்:


உங்கள் அடையாளத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சிம் எண்ணுகளையும் காணலாம்


தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைலைத் தேடலாம்


மோசடி மற்றும் தவறான பயன்பாடுகளை புகாரளிக்கலாம்

--

தூத்துக்குடி லீக்ஸ் - உங்கள் நம்பகமான செய்தி 

திங்கள், 14 ஜூலை, 2025

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் சார்பில் தலைவர் முரளிதரன் தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக முதல்வர் காமராசர் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாட்டம் முழு விவரம் பார்க்க

Tamil Nadu updates photo news by Arunan journalist காமராஜர் பிறந்த நாள் விழா – பள்ளி மாணவமாணவியருக்கு இனிப்பு வழங்கிய காங்கிரஸ்

தூத்துக்குடி, ஜூலை 15:

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் சார்பில் தலைவர் முரளிதரன் தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி முன்னாள் தமிழக முதல்வர் காமராசர் பிறந்த நாள் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.




இது பற்றிய செய்தியாவது ...

அகில இந்திய காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக முதல்வருமான  காமராசர் பிறந்த நாள் முன்னிட்டு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது






தூத்துக்குடியில் இன்று புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆர்சி பெத்தானி தொடக்க பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்தலைவர் காமராஜர் 123 வது பிறந்த நாள் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு லட்டு வழங்கினார்கள்.



காமராஜர் சாதனைகள்!!!

நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு காமராஜரின் சாதனைகள் மற்றும் கல்விக்கு அளித்த பங்களிப்பு குறித்து விளக்கமளித்தார். 


இந்த நிகழ்வு மாணவர்களிடையே கல்வி மீது ஈடுபாடு ஏற்படுத்தும் வகையில் நடந்தது.


. இந்த நிகழ்ச்சியில்...

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் மாவட்ட செயலாளர் கோபால் வடக்கு மண்டல தலைவர் சேகர் 11- வது வார்டு தலைவர் மகேந்திரன் 11 வார்டு துறை தலைவர் சீனிவாசன் 3 வார்டு அருண், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

.. அதன் பின்னர்...






தூத்துக்குடி கந்தசாமி புரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20  குழந்தைகளுக்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு லட்டு வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது .







முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி புத்தகத் தானம்

தூத்துக்குடி, ஜூலை 14


முன்னாள் தமிழக முதல்வரும் கல்விக்குத் தொண்டளித்தவருமான காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல் நிலைப் பள்ளி நூலகத்திற்கு புத்தகத் தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.



பள்ளிகள் மற்றும் கிராமப்புற நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கும் நோக்கில், தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காமராஜர் நற்பணி மன்றம் இணைந்து இந்நிகழ்வை ஒருங்கிணைத்தன.

அழைப்பு!!!

இந்நிகழ்வுக்காக பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகளிடம் நல்ல எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை தானமாக வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. 

உதவி!!!

அந்த அழைப்புக்கு ஆதரவளித்து, ஆசிரியர் வள்ளிநாயகி மற்றும் கவிஞர் செல்வராஜ் ஆகியோர் புதிய புத்தகங்களை வாங்கி கொடுத்து உதவினர்.


இவ்வாறு சேகரிக்கப்பட்ட புத்தகங்களை, தூய இஞ்ஞாசியார் மேல் நிலைப் பள்ளி நூலகத்திற்கு, தலைமை ஆசிரியர் ஜேசு அந்தோணி மற்றும் ஆசிரியர் ராஜ்குமாரிடம், புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் சார்பில் மாரிமுத்து மற்றும் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் லாரன்ஸ் ஆகியோர் வழங்கினர்.


நிகழ்வில் ஆசிரியர்கள் நியூட்டன் மற்றும் செல்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



ஞாயிறு, 13 ஜூலை, 2025

தூத்துக்குடி பகுதி -2 திம்மராஜபுரத்தில் சான்றிதழ் வழங்கும் தேக்கத்தால் பொதுமக்கள் அவதி

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி, ஜூலை 14:

தூத்துக்குடி நகரத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வரும் இந்நேரத்தில், முக்கியமான கிராமமான திம்மராஜபுரத்தில் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் ஆகியவை பெறுவதில் கடுமையான தேக்கம் நிலவுகிறது.



 கடந்த 12 நாட்களாக சான்றிதழ்கள் வழங்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

பட்டா பெயர் மாற்றம், கல்வி சேர்க்கை, திருமண பதிவு உள்ளிட்ட பல நிர்வாக தேவைகளுக்காக இந்த சான்றிதழ்கள் அவசியமாக தேவைப்படும் நிலையில், வாரந்தோறும் வரிசையில் காத்திருந்து திரும்பி செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கான காரணமாக, தற்போது கிராம நிர்வாக அலுவலர் ஒருவரின் இல்லாதவையால் சான்றிதழ் செயலாக்கம் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

 இந்நிலையை களைவதற்காக, மாவட்ட நிர்வாகம் திம்மராஜபுரம் தூத்துக்குடி பகுதி -2 போன்ற பெரும் மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் இரண்டு தனித்தனி கிராம நிர்வாக அலுவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

சனி, 12 ஜூலை, 2025

உங்கள் ஸ்டாலின் திட்டம்: தூத்துக்குடியில் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு!

Tamil Nadu updates photo news by Arunan journalist 


தூத்துக்குடி லீக்ஸ்
📅 தேதி: 12.07.2025

தூத்துக்குடி மாநகராட்சியில் “உங்கள் ஸ்டாலின்” முகாம் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14, 2025 வரை நடைபெறவுள்ளது. மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களில் வார்டு வாரியாக திட்ட முகாம் நடைபெறும். 



மக்கள் குறைகள், அரசுத் திட்டங்கள் பயன் பெறும் விதமான சந்திப்பு முகாம்கள் பின்வரும் நாட்கள் மற்றும் இடங்களில் நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது:


🔹 15.07.2025
வார்டுகள்: 21, 22, 23
இடம்: ஆனந்தா மஹால், அழகேசபுரம்

🔹 16.07.2025
வார்டுகள்: 24, 25, 26
இடம்: சென்ட். மேரிஸ் மகளிர் கல்லூரி, பீச் ரோடு 

🔹 17.07.2025
வார்டுகள்: 27, 28, 39
இடம்: சத்திரம்தெரு, அறிஞர் அண்ணா மண்டபம்

🔹 18.07.2025
வார்டுகள்: 29, 38, 41
இடம்: அபிநயா திருமண மண்டபம், சிவந்தா குளம் ரோடு 

🔹 22.07.2025
வார்டுகள்: 40, 46, 47
இடம்: சமுதாய கூடம், பாத்திமா நகர்

🔹 23.07.2025
வார்டுகள்: 15, 16, 17
இடம்: லியோ பள்ளி, பி & டி காலனி

🔹 24.07.2025
வார்டுகள்: 18, 19, 31
இடம்: பிஎம்சி மேல்நிலைப்பள்ளி மில்லர் புரம் 

🔹 25.07.2025
வார்டுகள்: 32, 33, 34
இடம்: தங்கம் நடுநிலை பள்ளி  அண்ணா நகர் 10 வதுதெரு

🔹 29.07.2025
வார்டுகள்: 35, 37, 42
இடம்: சிவந்தி ஆதித்தனார் பள்ளி  தாமோதர்நகர்



🔹 30.07.2025
வார்டுகள்: 30, 36, 44
இடம்: மாநகராட்சி நடுநிலை பள்ளி பள்ளி, டூவிபுரம் 11ஆம் தெரு

🔹 31.07.2025
வார்டுகள்: 2, 14
இடம்: மாநகராட்சி நடுநிலை பள்ளி பள்ளி, அய்யாசாமி காலனி 

🔹 01.08.2025
வார்டுகள்: 11, 12, 3
இடம்: ஆர்சி பெத்தானி நடுநிலை  பள்ளி, கந்தசாமி புரம் 

🔹 06.08.2025
வார்டுகள்: 13, 20, 1
இடம்: தங்கம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளி, போல்நாய்க்கன் பேட்டை 

🔹 07.08.2025
வார்டுகள்: 4, 5, 10, 9
இடம்: செந் தாமஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, இஞ்ஞாசியார்புரம் 

🔹 08.08.2025
வார்டுகள்: 6, 7, 8
இடம்: ஆக்ஸிலியம் மேல்நிலைப்பள்ளி திரேஸ்புரம்

🔹 12.08.2025
வார்டுகள்: 43, 45, 48
இடம்: காமராஜ் கல்லூரி

🔹 13.08.2025
வார்டுகள்: 49, 50, 51, 60
இடம்: திருக்குடும்பம் நடுநிலை பள்ளி கால்டுவெல் காலனி

🔹 14.08.2025
வார்டுகள்: 52, 53, 54
இடம்: K.T.K மேல்நிலைப்பள்ளி, எட்டையபுரம் 



🗣️ மக்கள் அனைவரும் தங்கள் பகுதியின் முகாம்களுக்கு தவறாமல் வருகை தர வேண்டும் என தூத்துக்குடி மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்


✍️ செய்தியாளர்: [தூத்துக்குடி லீக்ஸ் செய்தி மையம்]