வியாழன், 30 அக்டோபர், 2025

ஜெ.எஸ் நகர் பகுதியில் போதை மீட்பு மையம் விரைவில் செயல்பாட்டிற்கு தூத்துக்குடி மாமன்ற மாநகராட்சி கூட்டம் அறிவிப்பு

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் 


🗞️ தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு தீர்மானங்கள் — ஊதிய உயர்வு, வாகன ஒப்பந்தம், மண்டப வாடகை நிர்ணயம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள்
தூத்துக்குடி, அக்டோபர் 31:
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று காலை 11மணியளவில் நடைபெற்றது 

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் பிரியங்கா துனை மேயர் ஜெனிட்டா முன்னிலையில்  நடைபெற்ற நிர்வாகக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. ஊதிய உயர்வு முதல் வாடகை நிர்ணயம் வரை பல நிதி மற்றும் நிர்வாக உத்தரவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.



thoothukudileaks



🧑‍✈️ காவலர்களுக்கான ஆண்டு ஊதியம் ரூ.34 லட்சம்

மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகம் மற்றும் மாநகராட்சி சொத்துக்களில் பணிபுரியும் 18 பாதுகாப்பு காவலர்களுக்கு நாள் ஒன்றுக்கு ₹521 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2025 செப்டம்பர் 26 முதல் 2026 செப்டம்பர் 25 வரை மொத்தம் ₹34,22,970 செலவாகும் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நகர வாழ்வாதார மையம் வழியாக 2% சேவை கட்டணமும் செலுத்தப்படும்.



📈 சம்பள திருத்தம் — புதிய விகிதம் அமலில்

2022–23 ஆண்டிற்கான அரசாணை படி சில பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியம் திருத்தப்பட்டுள்ளது. புதிய அடிப்படை ஊதியம் ₹4900 என நிர்ணயிக்கப்பட்டு, அதற்கேற்ப ₹12.21 உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. இது 2022 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.


🚗 வாகன ஒப்பந்தம் – செல்வராணி காப்ஸ் தேர்வு

மாநகராட்சி அலுவலகத்திற்கான அதிகாரி பயண வாகன ஒப்பந்தத்தில் மொத்தம் 8 போலேரோ ஜீப் வாகனங்கள் மாத வாடகை ரூ.3,38,400 என M/s. Selvarani Cabs, Thoothukudi நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. ஆண்டு முழுக்க செலவு ₹40,60,800 ஆகும்.


🏛️ மாநகராட்சியின் மண்டப வாடகை நிர்ணயம்

பொதுமக்கள் பயன்பாட்டிற்கான மண்டபங்களின் புதிய வாடகை விகிதம் அறிவிக்கப்பட்டது:

மண்டபம் ஒரு நாள் வாடகை அரை நாள் வைப்பு சுத்தம் கட்டணம்
அண்ணா திருமண மண்டபம் ₹40,000 ₹20,000 ₹20,000 ₹3,000
சிவன் கோவில் திருமண மண்டபம்

₹15,000 ₹7,500 ₹10,000 ₹2,000
மாநகராட்சி மாநாட்டு மையம்  ₹75,000 ₹37,500 ₹50,000 ₹5,000

தெற்கு
காட்டன்
சாலை
பார்டி ஹால்
₹17,000 ₹8,500 ₹10,000 ₹5,000
முள்ளக்காடு சமுதாய
நலக் கூடம் 
₹2,606 ₹1,303 ₹3,000 ₹1,000
முத்தையா
புரம்
சமுதாய 
நலக் கூடம் 
₹7,500 ₹3,750 ₹7,000 ₹2,000

மாநகராட்சி மண்டபங்களைப் பயன்படுத்த விரும்பும் பொதுமக்கள் முன்பதிவு செய்யும் போது தேவையான தொகையை செலுத்தி அனுமதி பெறலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


thoothukudileaks


🏫 பள்ளி பயன்பாட்டிற்கான கட்டிடம் வாடகை ஒப்பந்தம்

St.தாமஸ் பள்ளி கட்டிடம் வட மேற்புறம் உள்ள கடை எடுத்த ஆர் மாரி என்பவர் உரிமம்  ரத்து புகார் வரபெற்றதால் இந்த நடவடிக்கை அவர் முன் தொகை திரும்ப  செலுத்தப்படும் 


🏪  கடைகள் ஏலம் – புதிய வாடகையாளர்கள் தேர்வு

ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் 

பழைய பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள கடை எண் F23, F28, F39 ஆகியவற்றிற்கான ஏலத்தில் உயர்ந்த பந்தயத்தைச் செலுத்தியவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

  • F23 – V.நெல்சன் 
  • ரஞ்சித்குமார் மாத வாடகை ₹14,860
  • F28 – G.K.பிரம்குமார், மாத வாடகை ₹4,510
  • F39 – G.ஆழ்வார்
  • முத்துகுமார், மாத வாடகை ₹2,975
    இதற்கான ஒப்பந்த ஆணைகள் மாநகராட்சி மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

🏡 நிலம் வாங்கல் – தனியார் நிலம் ஒப்புதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 8450 சதுர அடியில் பரப்பளவுடைய தனியார் நிலத்தை மாநகராட்சி வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.


🧴 சுத்திகரிப்பு பொருட்கள் கொள்முதல்

மாநகராட்சி சுத்திகரிப்பு பிரிவிற்காக பல்வேறு பொருட்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன:

  • தூர்வாரும் தூள் – ₹9,00,000
  • சுண்ணாம்பு தூள் – ₹5,40,000
  • மலத்தியான் – ₹7,00,000
  • Bacillus Thuringiensis – ₹13,00,000
  • ரெயின்கோட் – ₹1,90,000
  • மின்சாதனங்கள் – ₹1,70,000
  • பிற பொருட்கள் – ₹65,000
    ஒப்பந்தங்கள் திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

👩‍⚕️ புதிய நியமனங்கள் – பல்வேறு பணியிடங்கள்

மாநகராட்சி மனநலம் மற்றும் சுகாதார பிரிவில் பின்வரும் பதவிகள் நிரப்பப்படும்:

  • Psychiatric Social Worker – 1 பேர் (₹25,000)
  • Field Officer – 1 பேர் (₹13,500)
  • காவலர்கள் – 2 பேர் (₹521 நாள் ஊதியம்)
  • நிர்வாக உதவியாளர் – 1 பேர் (₹8,500)
  • சுத்தம் செய்யும் ஊழியர் – 2 பேர் (₹497 நாள் ஊதியம்)

மொத்த ஊதிய செலவு ₹21,60,960 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான 2% நிதி கட்டணமும் சேர்க்கப்பட்டுள்ளது.


📜 

மொத்தம் ஒன்பது முக்கிய உத்தரவுகள் கொண்ட இக்கூட்டத்தில், மாநகராட்சி நிர்வாகத்திற்கான நிதி மேலாண்மை, ஊழியர் நியமனம், வாடகை மற்றும் கொள்முதல் நடவடிக்கைகள் குறித்து விரிவான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

ஜெ.எஸ் நகர் பகுதியில் போதை மீட்பு மையம் விரைவில் செயல்பாட்டிற்கு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஜெ.எஸ் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள போதை மீட்பு மையம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளது.

இதனைச் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான தேவையான பணியாளர்கள் நியமனம் குறித்து போதை மீட்பு குழு உறுப்பினர்கள் கூட்டம் கடந்த 09.10.2025 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பணியாளர்கள் நகர்புற வாழ்வாதார மையத்தின் மூலம், தேசிய நகர்ப்புற நலக் குழுமம் நிர்ணயித்த ஊதிய விகிதத்தில் தற்காலிக அடிப்படையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தீர்மானிக்கப்பட்டது.

அந்த அடிப்படையில், கீழ்க்கண்ட பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்:

  • Psychiatric Social Worker – 1 பேர் – மாத ஊதியம் ₹25,000
  • செவிலியர்கள் – 4 பேர் – மாத ஊதியம் ₹18,000 (மொத்தம் ₹8,64,000 வருடாந்திரம்)
  • இயக்குபவர் – 1 பேர் – மாத ஊதியம் ₹13,500
  • காவலர் – 2 பேர் – மாத ஊதியம் ₹15,630 (மொத்தம் ₹3,75,120 வருடாந்திரம்)
  • அலுவலக உதவியாளர் – 1 பேர் – மாத ஊதியம் ₹8,500 (மொத்தம் ₹1,02,000 வருடாந்திரம்)
  • தூய்மை பணியாளர் – 2 பேர் – மாத ஊதியம் ₹14,910 (மொத்தம் ₹3,57,840 வருடாந்திரம்)

மொத்தம் 11 பணியாளர்களை நியமிப்பதற்கான உத்தேச செலவினம் ₹21,60,960/- என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனுடன் கூடுதலாக 2% சேவைக் கட்டணமாக ₹43,219/- நகர்புற வாழ்வாதார மையத்திற்கு வழங்க மாநகர மாமன்ற அனுமதி கோரப்பட்டுள்ளது.

இது அமல்படுத்தப்பட்டவுடன், தூத்துக்குடி நகரத்தில் போதை ஒழிப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்பெற்று, தேவையான சிகிச்சை வசதிகள் மக்களுக்குச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📍 தூத்துக்குடி லீக்ஸ் செய்தி பிரிவு

தூத்துக்குடி லீக்ஸ் செய்தியாளர்




தமிழ்நாடு காவல்துறையின் புதிய ஆன்லைன் சேவை: ஆவணங்கள் தொலைந்தால் காவல் நிலையம் செல்ல வேண்டாம்!

தூத்துக்குடி, அக்டோபர் 30 - 

முக்கியமான ஆவணங்கள் தொலைந்துவிட்டால், இனி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளிக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு காவல்துறை வழங்கியுள்ள புதிய ஆன்லைன் வசதி மூலம், வீட்டிலிருந்தே சில நிமிடங்களில் புகாரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



மொபைல் போன் அல்லது கணினி மூலம் eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தை பார்வையிட்டு, "Lost Documents" (தொலைந்த ஆவணங்கள்) என்ற பிரிவை தேர்ந்தெடுத்து, தேவையான விவரங்களை பதிவு செய்வதன் மூலம் புகாரை உடனடியாக பதிவு செய்ய முடியும்.

இந்த டிஜிட்டல் முன்னெடுப்பு மூலம், பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று நீண்ட நேரம் காத்திருக்கும் சிரமம் தவிர்க்கப்படும். மேலும், இந்த சேவை 24 மணி நேரமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் போன்ற முக்கிய ஆவணங்கள் தொலைந்துவிட்டால், உடனடியாக இந்த ஆன்லைன் வசதியை பயன்படுத்தி புகார் அளிக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சேவை பாதுகாப்பானது, எளிமையானது மற்றும் விரைவானது என்று பொதுமக்கள் வரவேற்று வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு: eservices.tnpolice.gov.in

தமிழ்நாடு காவல்துறையின் இந்த டிஜிட்டல் முயற்சி, பொதுமக்களுக்கு சிறந்த சேவை வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை 2025 ல் இது வரை 21 கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது

தூத்துக்குடி, அக்.30:

ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2019-ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II இன்று தீர்ப்பளித்தது.

thoothukudileaks
ஆயுள் தண்டனை பெற்ற கணேசன் 

இது பற்றிய செய்தியாவது:-

ஏரல் அகரம் பகுதியைச் சேர்ந்த வீரமணியின் மகன் ஜெயராஜ் (68/19) என்பவரை, 2019-ஆம் ஆண்டு ஏரல் அகரம் வேதக்கோவில் தெருவில் வைத்து, முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமியின் மகன் கணேசன் (61/25) கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா  இன்று குற்றவாளி கணேசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஏரல் காவல் நிலைய ஆய்வாளர்  பட்டாணி, நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்  சேவியர் ஞானப்பிரகாசம், விசாரணைக்கு உதவிய தலைமை காவலர் அரவிந்த் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப. பாராட்டினார்.

2025ஆண்டு இது வரை 21 கொலை வழக்கு!!!

இந்த ஆண்டு கடந்த 10 மாதங்களில் மட்டும் 21 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

24X7 உதவி எண்/வாட்ஸ்அப்: 9514144100

செய்தி வெளியீடு எண்: 164 | தேதி: 30.10.2025

தூத்துக்குடியில் பசும்பொன் தேவர் ஜெயந்தி – குருபூஜை விழா தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் A.அஜிதா ஆக்னல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

photo news by Arunan journalist 

பசும்பொன் தேவர் ஜெயந்தி – குருபூஜை விழா : மரியாதை செலுத்திய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்

தூத்துக்குடி:அக்:-30
“தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என்ற தத்துவத்தை முன்வைத்து வாழ்ந்த தெய்வீக திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்  118-வது ஜெயந்தி விழா மற்றும் 63-வது குருபூஜை விழா தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.



தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கும், தேவர்காலனி பகுதியில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்  A.அஜிதா ஆக்னல்  தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

thoothukudileaks


இந்நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்த கௌதம் பாண்டியன், அருண்குமார், சிவகாமி முருகன், வழக்கறிஞர் நிர்மல்சிங், மனோ பாண்டியன், வாசுதேவன், அருண் பிரகாஷ், ஆகாஷ் பாண்டியன், மணிகண்டன் தீனதயாளன், அருள்ராஜ், அருண் பாலா, முனீஸ், மனோ பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பலரும், மகளிர் திரளாக கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இவ்விழாவில் தேவரின் தெய்வீக தத்துவங்கள் குறித்து பேசப்பட்டு, அவரின் தேசப்பற்றும் சமூகநீதிக்கும் பெருமை சேர்த்தது.

புதன், 29 அக்டோபர், 2025

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நாய்கள், மாடுகள் தொல்லை – மாநகராட்சி நடவடிக்கை

தூத்துக்குடி: அக்:- 29

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களாக நாய்கள் மற்றும் மாடுகள் சுற்றித் திரிவது பயணிகளுக்கும், பேருந்து ஓட்டுநர்களுக்கும் பெரும் இடையூறாக இருந்தது.

பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள் மத்தியில் நாய்கள் சண்டையிடுதல், பேருந்து வரும் வழியில் மாடுகள் குறுக்கு நெடுக்காக நிற்பது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றதால் ஓட்டுநர்கள் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் 28.10.2025 நே ற்று நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் இன்று (29.10.2025) புதிய பேருந்து நிலையம் பகுதியில் சுத்தம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். 


thoothukudileaks
இன்று 
புகைப்படம் (பேருந்து நிலையம் உள்ளே மாநகராட்சி ஊழியர்கள் நாய்களை பிடிக்கும் காட்சி) 

thoothukudileaks
நேற்று 

thoothukudileaks
நேற்று 



🐕 நாய்கள் மீது நடவடிக்கை!!!

இதில் பத்துக்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து பாதுகாப்பாக மாற்றினர். 


மேலும் இப்பகுதியில், மாடுகள் திரியும் நிலையைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வே ண்டும் என்கிறார்கள்.

thoothukudileaks

thoothukudileaks

 

 

District Police Refutes Reports of Special Pass Black Market Sales at Tiruchendur Soorasamharam Festival

 photo news by Arunan journalist 

Thoothukudi, Oct 29 - The Thoothukudi District Police has refuted news published in a popular newspaper claiming that special vehicle permission passes for the Tiruchendur Soorasamharam festival were being sold in the black market.

thoothukudileaks


In a clarification issued by the District Police, it has been stated that no special vehicle permission passes for use only on the day of the Soorasamharam event during this year's Kanda Sashti festival were issued to anyone.

Following the cancellation order of special vehicle passes, no vehicles were parked at the designated parking areas of Tiruchendur Ideal Vehicle Parking and Vanaparvathi, the police clarified.

Permission Only for Lodge Users

Only a limited number of lodge passes were issued to users who had made advance bookings at over 70 private lodges on TB Road in Tiruchendur two days before the Soorasamharam festival. These were issued only to enable devotees to carry their belongings and to avoid the difficulty of traveling from distant parking areas to the lodges, the explanation stated.

Permission Only for Essential Services

The police informed that only regular permission passes, not special passes, were issued to vehicles carrying out temple maintenance work, electricity staff duties, and transporting essential items like milk and medicine. This practice has been followed every year, the police added.

If private vehicles were parked without permission in front of lodges or any other location, police personnel immediately removed them and took action, it was reported.

The District Police has requested that no one spread false information with the intent of tarnishing the police department's reputation.

24X7 Helpline Number: 9514144100

திருச்செந்தூர் சூரசம்ஹார விழா சிறப்பு பாஸ் கள்ளச் சந்தை செய்திக்கு மாவட்ட காவல்துறை மறுப்பு

தூத்துக்குடி, அக்.29 - 

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் சிறப்பு அனுமதி வாகன பாஸ் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டதாக ஒரு பிரபல செய்தித்தாளில் வெளியான செய்திக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

காவல்துறை மறுப்பு !!!

மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்வு நாளன்று மட்டும் பயன்படுத்தும் சிறப்பு அனுமதி வாகன பாஸ் யாருக்கும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

thoothukudileaks


சிறப்பு அனுமதி பாஸ் ரத்து உத்தரவை தொடர்ந்து, திருச்செந்தூர் ஐடியல் வாகன நிறுத்தம் மற்றும் வனப்பார்வதி ஆகிய வாகன நிறுத்துமிடங்களில் எந்த ஒரு வாகனமும் நிறுத்தப்படவில்லை என்று காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

விடுதி பயனர்களுக்கு மட்டும் அனுமதி

சூரசம்ஹார விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் TB சாலையில் உள்ள 70ற்கும் மேற்பட்ட தனியார் விடுதிகளில் முன்னதாகவே புக்கிங் செய்த பயனர்களுக்கு மட்டும் குறைந்த அளவே லாட்ஜ் பாஸ் வழங்கப்பட்டது. இது பக்தர்கள் தங்கள் உடைமைகளை எடுத்துச் செல்வதற்கும், தூரத்தில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் இருந்து விடுதி வரை செல்லும் சிரமத்தை தவிர்க்கவுமே வழங்கப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி

கோயில் பராமரிப்பு பணி, மின் ஊழியர்கள் பணி, பால், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சிறப்பு பாஸ் அல்லாமல் சாதாரண அனுமதி பாஸ் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், இது ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

விடுதி முன்போ வேறு எந்த இடத்திலோ அனுமதி இன்றி தனியார் வாகனங்கள் நின்றால் காவல்துறையினர் உடனடியாக அதனை அப்புறப்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

24X7 உதவி எண்: 9514144100