வியாழன், 11 டிசம்பர், 2025

தூத்துக்குடி மண்ணின் மைந்தர் பத்திரிகை யாளர்பாரதியார் பிறந்த நாள்… தூத்துக்குடி பிரஸ் கிளப் !

 தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி 

தூத்துக்குடி டிச11

தூத்துக்குடி மண்ணின் மைந்தர் மகாகவி பாரதியாருக்கு ரோஜாப்பூ மாலை… பத்திரிகையாளர்கள் புதிய உறுதி மொழி!!!

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு
தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி
பாரதியின் தீப்பொறி வார்த்தைகளை நினைவூட்டும் விதமாக
செம்மையாக நடந்தது.

thoothukudileaks


தூத்துக்குடி மண்ணின் மைந்தர்கள் வ உ சிதம்பரனார் உடன் ஆங்கிலேயர் களை எதிர்த்து நின்ற பத்திரிகை போராளி மகாகவி பாரதியார்!!!

முதலில் பாரதியாரின் படத்திற்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து
மரியாதை செலுத்திய பிரஸ் கிளப் உறுப்பினர்கள்—
தலைவர் த. சண்முகசுந்தரம், துணை தலைவர் சிதம்பரம்,
உறுப்பினர்கள் இசக்கி ராஜா, மாணிக்கம், மாரிமுத்து உள்ளிட்டோர்—
தூத்துக்குடி மண்ணின் பெருமை மகாகவிஞருக்கு மாலை அணிவித்தனர்.

பின்னர் உரையாற்றிய செய்தியாளர் த. சண்முகசுந்தரம்,
“பாரதியார் பிறந்த நாள் என்பது கவிஞரின் பிறந்த நாள் மட்டுமல்ல…
பத்திரிகையாளர்களின் எழுச்சி நாள்!
சாதி, மதம், பாகுபாடுகள் அனைத்தையும் தகர்த்தவர் பாரதி.
பெண்ணுரிமை முதல் தேசபக்தி வரை
சிந்தனைக்கு நெருப்பூட்டியவர்,” எனக் கூறினார்.

thoothukudileaks


அவர் மேலும்,
“பாரதியின் வரிகள் இன்னும் உயிரோடு இருக்கிறது.
நாம் அவர் வாழ்ந்த காலத்தில் இல்லை…
ஆனால் அவர் எழுதிய காலத்தை இன்று நாம்தான் வாழ்கிறோம்!
உண்மை செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது
எங்கள் கடமை மட்டும் அல்ல… நமக்கு பாரதியாரின் கட்டளை!”
எனச் சொன்னார்.

thoothukudileaks


செய்தியாளர்கள் ஒன்றிணைந்து
உண்மை மற்றும் நேர்மையைக் காத்து செயல்பட வேண்டும் என
உறுதி மொழி பெறும்படி அவர் அழைப்பு விடுத்தார்.????

ரோஜா அருணன் 
செய்தியாளர், தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி வாராந்திர குறை தீர்க்கும் முகாம்

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடி டிச 11
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று 11-12- 2025 மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையில்  நடைபெற்ற இந்த முகாமில் பல்வேறு பிரிவுகளில் பொதுமக்களிடமிருந்து 40 மனுக்கள் பெறப்பட்டன.


thoothukudileaks

thoothukudileaks



பெறப்பட்ட மனுக்கள் – முக்கிய பிரிவுகள்:

  • சொத்து வரி தொடர்பான கோரிக்கைகள்
  • குடிநீர் இணைப்பு மற்றும் விநியோகம்
  • பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல்
  • பெயர் மாற்றம் தொடர்பான மனுக்கள்
  • பிறப்பு – இறப்பு சான்றிதழ் திருத்தங்கள்

அனைத்து மனுக்களும் உரிய ஆவணங்களுடன் ஏற்கப்பட்டு, விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

– இன்று 40 மனுக்கள் பெறப்பட்டன 

thoothukudileaks


புதன், 10 டிசம்பர், 2025

ஆண்களுக்கும் இனி இலவச பயணம்…? விடியல் பயணம் 2.0 – ஸ்டாலின் அரசு டாப் சீக்ரெட் ப்ளான்

 🚨 தூத்துக்குடி லீக்ஸ் எக்ஸ்க்ளூசிவ் 

சென்னை: டிச10
தமிழகத்தில் பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட விடியல் பேருந்து இலவச பயணம் திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக மக்கள் மத்தியில் “மாஸ் ஹிட்டாக” ஓடிக்கொண்டிருக்கிறது. தினமும் 57 லட்சம் பெண்கள் பயன்பெறும் இந்த திட்டம், பெண்களின் அன்றாட செலவைக் குறைக்கும் மிகப்பெரிய நிவாரணமாக உள்ளது.



இந்நிலையில்,
2026 சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில், தமிழக அரசு புதிய சூப்பர் அறிவிப்பு ஒன்றைத் தயார் செய்து கொண்டிருக்கிறது என்பது தூத்துக்குடி லீக்ஸ்க்கு கிடைத்த தகவல்!

🔥 விடியல் 2.0 – ஆண்களுக்கும் இலவச பயணம்?

குழுமங்களின் நீண்டகால கோரிக்கை என்ன?
➡️ 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் இலவசமாக பேருந்தில் போக அனுமதி!

இந்த கோரிக்கை தற்போது அரசின் மேஜையில்!
போக்குவரத்துத் துறையின் உள்ளக தகவல்படி,
இரண்டு மாதங்களில் 60+நாட்களில் ஆண்களுக்கு இலவச பேருந்து பயண அறிவிப்பு வெளிவரும் வாய்ப்பு உறுதி!


👴 முதியோருக்கு பெரிய ரிலீஃப்

மருத்துவம் – வங்கி – அரசு அலுவல்கள்…
முதியோருக்கு அடிக்கடி பயணம் தேவை. கட்டணம் ரத்து ஆனால்?
➡️ மாத செலவு குறையும்
➡️ அத்தியாவசியப் பயணங்கள் எளிதாகும்
➡️ சமூக நலனில் பெரிய முன்னேற்றம்


🗳️ election Heat! – அரசின் மாஸ் மூவ்

பெண்களுக்கு கொடுத்த விடியல் திட்டம் மக்கள் மத்தியில் பெற்ற பெரும் ஆதரவால்,
ஆண்களுக்கும் இலவச பயணம் வழங்குவது ஒரு ஸ்ட்ராட்டஜிக் மாஸ் முடிவு என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் கடந்த மாதம் அமைச்சர் சிவசங்கர்,
நிதிநிலை மேம்பட்டால் அனைவருக்கும் இலவச பயணம் விரிவாக்கம்!
என்று பேசியிருந்ததும் மீண்டும் பேசுபொருள்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு – கவுண்ட்டவுன் ஸ்டார்ட்!

அரசு அலுவலகங்களில் இதற்கு தேவையான ஆய்வுகள் ஸ்பீடில் நடக்கிறது.
அடுத்த 60 நாட்களுக்குள் அறிவிப்பு வெளியாகலாம் என நம்பப்படுகிறது.

விடியல் பயணம் 2.0 எப்படி இருக்கும்?
எந்த பிரிவினருக்கு என்ன சலுகை சேரும்?
— அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே தெளிவாகும்.



செவ்வாய், 9 டிசம்பர், 2025

தூத்துக்குடியில் ‘Stall in Mall’ — உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஊக்கம்

photo news by Arunan journalist 


தூத்துக்குடி:டிச 10

தமிழகத்தில் முதல் முறையாக நமது முத்து மாவட்டமான தூத்துக்குடியில் ‘Stall in Mall’ திட்டம் தொடக்கம் பெறுகிறது. NABARD மற்றும் MABIF அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த விழாவில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் பல பகுதிகளில் இருந்து வரும் கைதொழில், பெண்கள் சுயஉதவி குழு மற்றும் இயற்கை உற்பத்தியாளர்கள் ஒரே இடத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய உள்ளனர்.

டிசம்பர் 13 முதல் மார்ச் 12 வரை,
காலை 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை
இடம்: பெரிசன் பிளாசா, போல் பேட்டை கிழக்கு, தூத்துக்குடி.




மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் முக்கிய பொருட்கள்:

  • பட்டுப்பாய், கருவாடு, கடல் சீப்பு பொருட்கள்
  • தேன் சார்ந்த பொருட்கள்
  • காஷ்மீர் புளியூட்டு பொருட்கள்
  • இனிப்பு, மசாலா பொருட்கள்
  • செம்பருத்தி, முளிகை சார்ந்த பொருட்கள்
  • சூழல் நட்பு பொருட்கள்
  • நெய்த துணிகள், கைதறி வஸ்திரங்கள்
  • மரப்பலகை பொருட்கள், அலங்காரப் பொருட்கள்
  • கோர்க் பை, மண் பானைகள் உள்ளிட்ட பல தயாரிப்புகள்

ஒரே இடத்தில் பல்வேறு மாநிலங்களின் சிறப்புப் பொருட்களை மக்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் இதைப் பயனடைய வேண்டுமென  தெரிவித்தனர்

ஞாயிறு, 7 டிசம்பர், 2025

தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்து தூய்மை பணியாளர்கள், ஊரக வளர்ச்சி உள்ாாட்சி துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் – மறியல் ஆர்ப்பாட்டம் கைது நடவடிக்கை

photo news by Arunan journalistt 

தூத்துக்குடி: டிச 8

தொழிலாளர் நலன்கள் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி, இன்று (08.12.2025) தூத்துக்குடியில் CITU தலைமையில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை தொழிலாளர்களும், தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்து தூய்மை பணியாளர்களும் இணைந்து வேலைநிறுத்தத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks



போராட்டக்காரர்கள்,

  • 62 நாட்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு 11.10.2017 உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி வழங்க வேண்டிய ஊதியப் பாக்கிகள் இன்னும் வழங்கப்படாதது,
  • துவக்கப்பணியாளர்கள், ஓட்டுநர்கள், OHT ஆபரேட்டர்கள் உள்ளிட்டோருக்கான DPC உயர்வுகள் நிறைவேற்றப்படாதது,
  • மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள 74 தொழிலாளர்களின் நீண்டநாள் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு வழங்காதது,
  • 01.04.2003க்கு பிந்தைய புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,
  • மருந்தக பணியாளர்களுக்கான சம்பள உயர்வு மறுக்கப்படுவது,
  • பணிநிரந்தரம், அனுவாரியம் உள்ளிட்ட நலன்கள் வழங்கப்படாதது,
  • தினசரி தொழிலாளர்களுக்கு சம்பளம் தாமதமாக வழங்கப்படுவது

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மேலும், மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், தங்களது பாதுகாப்பு உபகரணங்கள், சம்பள உயர்வு, நிரந்தரப்படுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்காததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் தீவிரமாக பங்கேற்றனர்.

“உழைக்கும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட மாநகராட்சி, அரசு வழங்க மறுக்கிறது; நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்” என சங்கத்தினர் எச்சரித்தனர்.

காவல்துறை கைது நடவடிக்கை 

பெரும்பான்மையான பெண் தொழிலாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார் கள் 

— தூத்துக்குடி லீக்ஸ்

thoothukudileaks

thoothukudileaks

மோடி அரசு கொண்டு வந்த தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி — தூத்துக்குடியில் இடதுசாரி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி லீக்ஸ் — செய்தி

தூத்துக்குடி, டிசம்பர் 08, 2025:

ஒன்றிய மோடி அரசு தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் வகையில் கொண்டு வந்த நான்கு தொகுப்பு தொழிலாளர் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் இன்று (08.12.2025) காலை 11 மணிக்கு இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு தொழிலாளர் பாதுகாப்பு, ஊதிய நெறிமுறைகள், வேலை நேர கட்டுப்பாடுகள் உள்ளிட்ட உரிமைகளை பாதிக்கும் வகையில் புதிய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கடும் கண்டனம் தெரிவித்தனர்.

thoothukudileaks


ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள்:

  • தோழர் மு.முருகன், மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்.எல்)
  • தோழர் K.P. ஆறுமுகம், மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)
  • தோழர் கரும்பன், மாவட்டச் செயலாளர், சிபிஐ
  • தோழர் ம. கணேசன், மாவட்டச் செயலாளர், விசிக
  • தோழர் பி. சம்பத், மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
  • தோழர் பாலசுந்தரம், மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்.எல்)
  • தோழர் வழ. வில்லவன் கோதை, துணை பொதுச்செயலாளர், விசிக
  • தோழர் P. லோகநாதன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர், சிபிஐ

சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பல நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் “தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்!”, “தொழிலாளர் உரிமை எங்கள் உரிமை!” என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டம் முழுவதும் அமைதியாக நடைபெற்றது.

தூத்துக்குடியில் 200க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கைது திருப்பரங்குன்றம் பிரச்சனையை கண்டித்து மாநிலம் தழுவிய அறப்போராட்டம்

தூத்துக்குடி:டிச 7

திருப்பரங்குன்றம் சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி முருகப்பெருமானை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டன. 

thoothukudileaks


தூத்துக்குடியிலும் இந்து முன்னணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி செய்யப்பட்டது.

thoothukudileaks


பரபரப்பு!!!

ஆர்ப்பாட்டம் தொடங்க முயன்றபோது, இந்து முன்னணியினர் மற்றும் காவல்துறையினருக்கு இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது. 




திருப்பரங்குன்றம் மலைஉச்சியில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இது அரசு சார்பில் திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் என இந்து முன்னணி அமைப்புகள் குற்றம் சாட்டி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.


தூத்துக்குடியில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே, தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி   சரவணகுமார்  இசக்கி முத்து குமார் நாரயணராஜ் தலைமையில் ஆண்களும் பெண்களும் இணைந்து 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.


அவர்களை தடுக்கும் வகையில் தூத்துக்குடி நகர காவல் துறை எஸ்பி மதன் தலைமையிலான காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை கைது செய்து அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் பாதுகாப்பாக அடைத்தனர்.