தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
தூத்துக்குடி டிச20
தூத்துக்குடி பியர்ல்சிட்டி பத்திரிகையாளர் சங்கம் மற்றும் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில், இரவு நேரத்தில் சாலை ஓரங்களில் உறங்கும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் வீடு இல்லாத மக்களுக்கு போர்வை வழங்கும் மனிதநேய சேவை நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகர பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து, போர்வைகளை வழங்கினார். அவருடன் பியர்ல்சிட்டி பத்திரிகையாளர் சங்க செயலாளர் காட்சன், ஆல் கேன் டிரஸ்ட் நிறுவனரும் தூத்துக்குடி மாவட்ட அரசு வழக்கறிஞருமான மோகன் தாஸ் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவற்றோருக்கு போர்வைகளை வழங்கினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பணிச்சுமை அதிகம் இருப்பதாலும், வீடு இல்லாத முதியவர்கள் பலர் சாலை ஓரங்களில் உறங்க வேண்டிய சூழ்நிலை நிலவுவதாலும், தற்போது நிலவும் அதிகமான பனிப்பொழிவு காரணமாக அவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு, மனிதநேய அடிப்படையில் இந்த போர்வை வழங்கும் சேவை முன்னெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், வேம்படி இசக்கி அம்மன் கோவில், பனிமய மாதா கோவில், சிவன் கோவில் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சாலை ஓரமாக உறங்கும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் வீடு இல்லாமல் தங்கிய மக்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டன.
.
மனிதநேயத்தை வெளிப்படுத்தும் இச்சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.






