வியாழன், 27 நவம்பர், 2025

தூத்துக்குடி, ஆதிபராசக்தி நகர் – ரஹ்மத் நகர் பகுதிகளில் கனமழை வெள்ளம்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

தூத்துக்குடியில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கனமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆதிபராசக்தி நகர் மற்றும் ரஹ்மத் நகர் பகுதிகளில், மழைநீர் வீடுகளை சுற்றி தேங்கி, பல குடும்பங்கள் அவதிக்கு உள்ளானது. தெருக்கள் முழுவதும் வெள்ளப்பாதையாக மாறி, குடியிருப்போர் அச்சத்திலும் சிரமத்திலும் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில், நிலைமைக்கான அவசர தகவல் பெறப்பட்டதை தொடர்ந்து, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தோழர் கனிமொழி எம்.பி., தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மற்றும் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமையை பரிசோதித்தனர்.உடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா 



பகுதிவாசிகளின் குறைகளை அறிந்து, விரைவாக மழைநீர் அகற்றும் பணிகளை தொடங்குமாறு மாநகராட்சிப் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தினர். 


மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மோட்டார் பம்புகள் மூலம் தேங்கிய நீரை வெளியேற்றும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

தூத்துக்குடியில்...

கனமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

செவ்வாய், 25 நவம்பர், 2025

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் நல அரசியலை செய்ய வேண்டும் தமிழக பாஜக

சென்னை:நவ 25

 மொழி, மத அரசியல் செய்வதை விட்டு மக்கள் நல அரசியலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் நடந்த புத்தக விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி தமிழ் மொழி மீது போலியான பாசம் காட்டுவதாகவும், ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றை திணிக்க முயற்சிக்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சமஸ்கிருத மொழியை "செத்த மொழி" என்று விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள, இந்து மக்களின் புனித மொழியாக போற்றப்படும் சமஸ்கிருத மொழியை இவ்வாறு விமர்சிப்பது அரசியல் சாசன அவமதிப்பாகும். தேர்தலுக்காக மொழி அரசியல் நாடகம் அரங்கேற்றுவது துரதிஷ்டவசமானது.

உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும், இந்து மத வேதங்களை உருவாக்கிய தெய்வ மொழி சமஸ்கிருதம். கணிதவியல், வானவியல், மருத்துவ இயல், அரசியல் உள்ளிட்ட பல துறைகளில் உலகிற்கு வழிகாட்டும் இம்மொழியை இழிவாக பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஒரு மொழியை உயர்த்துவதாக சொல்லி மற்றொரு மொழியை தாழ்த்தி பேசுவது நியாயமா? தமிழை வளர்க்க ஏன் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழ் பல்கலைக்கழகங்களை திமுக அரசு உருவாக்கவில்லை?

கிறிஸ்தவர்களின் புனித நூல் ஹீப்ரு மொழியில் எழுதப்பட்டது. இஸ்லாமியர்களின் புனித நூல் அரபி மொழியில் எழுதப்பட்டது. அவற்றை செத்த மொழி என்று சொல்ல முடியுமா?

துணை முதல்வர் என்ற பதவியில் இருப்பவர் மதச்சார்பின்மையுடன், நடுநிலமையுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த மதத்தையும், எந்த மொழியையும் தவறான முறையில் விமர்சிக்கக்கூடாது.

முதல்வர் ஸ்டாலின் அவர்கள், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு இனி எந்த மதத்தையும், எந்த மொழியையும் விமர்சித்து பேசக்கூடாது என்று தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

செய்தி தொடர்புக்கு:

ஏ.என்.எஸ.பிரசாத்

thoothukudileaks

செய்தி தொடர்பாளர், தமிழக பாஜக

திங்கள், 24 நவம்பர், 2025

சென்னையில் கழக நிர்வாகிகள் ஆலோசனை — தூத்துக்குடி மாநகர் மாவட்டத்தின் கருத்து கேட்பு படிவம், புதிய நிர்வாகிகள் பட்டியல் வழங்கப்பட்டது



சென்னையில் கழக நிர்வாகிகள் ஆலோசனை — தூத்துக்குடி மாநகர் மாவட்டத்தின் கருத்து கேட்பு படிவம், புதிய நிர்வாகிகள் பட்டியல் வழங்கப்பட்டது

சென்னை:நவ25

சென்னையில் இன்று நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தூத்துக்குடி மாநகர் மாவட்டத்தின் அமைப்பு சார்ந்த முக்கிய ஆவணங்கள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டன.

thoothukudileaks


தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ். ஏசா துரை, மாநகரின் கருத்து கேட்பு படிவம் மற்றும் புதிய நிர்வாகிகள் பட்டியலை கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு ஓ. பி. எஸ் எம்எல்ஏ  முன்னிலையில் சமர்ப்பித்தார்.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ். ஏசா துரை, மாநகரின் கருத்து கேட்பு படிவம் மற்றும் புதிய நிர்வாகிகள் பட்டியலை கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு ஓ. பி. எஸ் எம்எல்ஏ முன்னிலையில் சமர்ப்பித்தார்.

கழக வளர்ச்சி, உறுப்பினர் பதிவு, பிரிவு வாரியான பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட அமைப்பு வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை நடைபெற்ற இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாநகரின் புதிய நிர்வாக அமைப்பு பெரிதும் கவனத்தை பெற்றது.


கழக வளர்ச்சி, உறுப்பினர் பதிவு, பிரிவு வாரியான பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட அமைப்பு வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை நடைபெற்ற இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாநகரின் புதிய நிர்வாக அமைப்பு பெரிதும் கவனத்தை பெற்றது.



கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு அடுத்தகட்ட அமைப்பு திட்டங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.






ஞாயிறு, 23 நவம்பர், 2025

கனமழையையும் மீறி தொடர்ந்த கண்டனக் குரல் PUCL செயற்பாட்டாளர் சுரேஷ் மீது தாக்குதல் – தூத்துக்குடியில் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

photo video news by Arunan journalist 


தூத்துக்குடியில் PUCL சுரேஷ் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து பெரும் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, நவம்பர் 23, 2025:

மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ்  தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தூத்துக்குடி மாவட்டம் சார்பில் இன்று (23.11.2025) மாலை 4 மணிக்கு, V.V.D. சிக்னல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

thoothukudileaks
கன மழையில்...


thoothukudileaks


தூத்துக்குடியில் இன்று பெய்த கனமழையையும் பொருட்படுத்தாமல், மனித உரிமைகள் பாதுகாப்பு சங்கம் (PUCL) தலைவர் சுரேஷ் மீது நடைபெற்ற தாக்குதலை கண்டித்து சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் பகுதியில் மக்கள் மத்தியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இடி மின்னல் ....

கன மழையில்.... அயராமல் எழுச்சி முழங்கிய ஆர்ப்பாட்டம்!!!

இன்று மாலை 4 மணியளவில் தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு குரல் கொடுத்தனர்.   


இடி மின்னல் என கனமழையால்  நனைந்த நிலையில் இருந்தாலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் குடை, மழைக்கோட் போன்றவற்றுடன் தொடர்ந்து தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.


ஆர்ப்பாட்டத்திற்கு...

 தூத்துக்குடி மாவட்ட தலைவர் முனைவர் X.D. செல்வராஜ் தலைமையேற்றார்.
முன்னிலையில் “தமிழ்கனலி” பேரா. பாத்திமா பாபு, ஒருங்கிணைப்பாளர், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

thoothukudileaks


இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சமூக அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், தொழிலாளர் சங்கங்கள், சுற்றுச்சூழல் மற்றும் மீனவர் இயக்கத்தினரின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தாக்குதலை கண்டித்தனர்.


வீடியோ பார்க்க கன மழையில் 


ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் –

  •  பிரிட்டோ – மக்கள் கண்காணிப்பகம்
  • . த. பாஸ்கர் – மாநில துணைத் தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை
  • பால். பிரபாகர் – செயலாளர், திராவிட விடுதலை கழகம்
  • மா. தங்கையா – ஒருங்கிணைப்பாளர், இந்திய கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்கம்
  • அருட்திரு சுந்தரிமைந்தன் – கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம்
  •  இசக்கிமுத்து – நிறுவன தலைவர், அண்ணா சங்கு குழி சங்கம்
  •  S. ஜவஹர் – சூசையப்பர் விசைப்படகு தொழிலாளர்கள் நலச்சங்கம்
  •  கிதர் பிஸ்மி – ஒருங்கிணைப்பாளர், காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்
  •  சு.ப. மாடசாமி – வழக்கறிஞர், J.A.A.C.T.
  • பிரின்ஸ் கர்டோசா – பொறுப்பாளர், இருதய நண்பர்கள் இயக்கம்
  • தோழர் திருமுருகன் காந்தி – ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்
  • தமிழ்செம்மல் “நெய்தல் அண்டோ” – நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம்
  •  H. வில்லியம்ஸ் மஸ்கர்னாஸ் – மாநில துணை செயலாளர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை
  • ஹெர்மன் கில்டு – தலைவர், குரூஸ்பர்ளாந்து நற்பணி மன்றம்
  • சகாயம்
  • மின்னல் அம்ஜித் – மாவட்ட செயலாளர், AICCTU
  • (AICCTU) மாவட்ட தலைவர்
  • அருட்திரு ஜெயந்தன் – ஒருங்கிணைப்பாளர், மதுவிலக்கு இயக்கம்
  • . ஸ்ரீவை M.S. ராஜா – ஒருங்கிணைப்பாளர், நிலத்தடிநீர் பாதுகாப்பு இயக்கம்
  •  M. ராஜா போஸ் ரீகன் – ஒருங்கிணைப்பாளர், தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சங்கம்
  • . S.M. சம்சுதீன் – ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு
  •  குணசீலன் – தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்
  •  பெனோ – தூத்துக்குடி மறை மாவட்ட இளைஞர் பணிக்குழு

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

  • தெர்மல் சொ. ராஜா B.A.L.L.B.
    மாவட்ட செயலாளர், மக்கள் சிவில் உரிமை கழகம் (PUCL)

பல மணி நேரம் நீண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர் சுரேஷ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உடனடி விசாரணை செய்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அனைத்து அமைப்புகளும் ஒருமித்த கருத்து தெரிவித்தன.

மனித உரிமை ஆர்வலர்கள் மீது ஏற்படும் தாக்குதல்கள் ஜனநாயகத்திற்கு ஆபத்தானவை என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.



சனி, 22 நவம்பர், 2025

அதிக மழைக்கும் மாநகராட்சி முழு தயார்: மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் – செய்தி

தூத்துக்குடி:நவ 23

வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், தமிழகத்தின் தென்பகுதிக் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில், 22ஆம் தேதி இரவு பெய்த கனமழையால் தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குள் சில பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.



இதனைத் தொடர்ந்து கரிக்களம், காலணி சங்கராபுரம், மதுரை வழிச்சாலை, வடியகால் அய்யனடைப்பு, புதுக்கோட்டை, மடத்தூர், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே 3வது மைல் உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்நிலைமை, வடிகால் ஓட்டம் உள்ளிட்டவற்றை மேயர் ஜெகன் பொறியசாமி நேரில் ஆய்வு செய்தார். 





மேலும் முத்தையாபுரம் உப்பாத்து ஓடை வழியாக கடலுக்கு சென்றடைந்த நீர்தேக்கம், ஓட்ட நிலை உள்ளிட்டவையும் பரிசோதிக்கப்பட்டது.

ஆய்வுக்குப் பிறகு பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்:

“தூத்துக்குடி மாநகராட்சியுடன் 5 ஊராட்சிகள் இணைக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அடிப்படை குடிமை பணிகள் சரியாக செய்யப்படாததன் காரணமாக 2021-ல் மாநகர்பகுதி மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் தானே வந்து நேரில் ஆய்வு செய்தார்,” என்றார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

  • “திமுக ஆட்சி அமைந்ததும், உள்ளாட்சி தேர்தலில் நானும் உட்பட 60 பேர் தேர்வுசெய்யப்பட்டோம்.
  • மேயராக பொறுப்பேற்றதும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழங்கிய முதல் உத்தரவு: ‘2021ல் ஏற்பட்டதைப் போல மீண்டும் எந்த பாதிப்பும் வரக் கூடாது.’
  • அதனைத் தொடர்ந்து கடந்த 45 மாதங்களில் எந்த பகுதியும் புறக்கணிக்கப்படாமல் சாலை, கால்வாய், மின்விளக்கு வசதிகள் மேம்படுத்தப்பட்டன.
  • 14 புதிய கால்வாய் வழித்தடங்கள் அமைக்கப்பட்டதால் மழைநீர் தடையின்றி கடலுக்கு செல்கிறது.
  • முன்பு சில பகுதிகளில் 30 நாட்கள் வரை நீர் தேங்கி இருந்தது. இப்போது தொடர்மழை பெய்தாலும் 2 மணி நேரத்தில் நீர் முழுவதும் வெளியேறுகிறது.”

மேலும் தொடர்ந்த அவர்,

“மாநகராட்சியில் 58 மின்மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன. 3 வார்டுகளில் மட்டும் தாழ்வான பகுதிகளில் தற்காலிக தேக்கம் உள்ளது; அங்கு மோட்டார் மற்றும் கழிவுநீர் வாகனங்கள் மூலம் உடனடி அகற்றம் செய்யப்படுகிறது. நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து பகுதிகளிலும் சுகாதாரத்துறை மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது,” என்றார்.

கடைசியாக,
“இத்தருணம் வரை 9 செ.மீ. மழை பெய்த போதும் பிரச்னையின்றி சமாளித்துள்ளோம். அதிக மழை பெய்தாலும் மாநகராட்சி நிர்வாகம் முழுமையான தயார்நிலையில் உள்ளது. நான் உள்பட அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் பொதுமக்கள் நலனுக்காக இரவு பகலாக பணிபுரிகின்றோம். மக்கள் எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை,” என மேயர் உறுதியளித்தார்.

news by sunmugasuthram press club president 

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பு ஆய்வாளர்களுக்கு E-Shaksha, E-Summon பயன்பாடு குறித்த பயிற்சி

அருணன் செய்தியாளர் 

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்திகள் | 22.11.2025 

தூத்துக்குடி: நவ 22 

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கில், குற்றச்சம்பவங்களைத் துல்லியமாக பதிவேற்றும்  E-Shaksha செயலி மற்றும் நீதிமன்ற அழைப்பானைகளை மின்னணு முறையில் சார்பு செய்யும் E-Summon செயலி பற்றிய பயிற்சி வகுப்பு நேற்று (21.11.2025) நடைபெற்றது.

thoothukudileaks


மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான், இ.கா.ப  தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில், மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களின் சார்பு ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

குற்றச்சம்பவ இடங்களுக்கு சென்று அங்குள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற ஆதாரங்களை உடனுக்குடன்  E-Shaksha தளத்தில் பதிவேற்றும் நடைமுறைகள்,

மேலும் நீதிமன்றத்திலிருந்து வழங்கப்படும் அழைப்பானைகளை தொடர்புடைய நபர்களுக்கு

E-Summon செயலி மூலம் சரியாக சார்பு செய்து, பின்னர் அதனை நீதிமன்றத்திற்கு மின்னணு முறையில் அனுப்பும் விதமான செயல்முறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

thoothukudileaks


இத்தொடர்பான பயிற்சியில் தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், மற்றும் தீபு, தூத்துக்குடி பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ், மாநில குற்ற ஆவண காப்பகம் தென் மண்டல காவல் ஆய்வாளர்  வெர்ஜின் சாவியோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி காவல்துறையின் சேவைத்திறனை உயர்த்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த பயிற்சி, காவல்துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டில் மேலும் ஒரு முன்னேற்றக் கட்டமாக அமைகிறது.

புதன், 19 நவம்பர், 2025

தூத்துக்குடி பழைய புதிய பேருந்து நிலையத்தில் வாக்காளர் சேவை மையங்கள் பொதுமக்களுக்கு உதவுவதற்காக இன்று தொடக்கம்

 தூத்துக்குடி லீக்ஸ் — நாளிதழ் செய்தி

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 :
ஏழு இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள் தொடக்கம்

தூத்துக்குடி: நவ20 

சிறப்பு தீவிர திருத்தம் – 2026 தொடர்பாக, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த பொதுமக்களுக்கு உதவுவதற்காக, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் ஏழு இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

thoothukudileaks


தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்கள், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் மற்றும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட மொத்தம் ஏழு பகுதிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள், இந்த சேவை மையங்களை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தொடர்பு கொண்டு, சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ளலாம்.

thoothukudileaks


வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் சரிபார்த்து, தேவையான திருத்தங்கள் மற்றும் புதுப்பிப்புகளைச் செய்ய வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலரும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரும் அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவன்,
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி
வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர்.