புதன், 20 மே, 2026

தூத்துக்குடியில் சுட்டெரிக்கும் வெயில்: மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்க எம்.எல்.ஏ ஸ்ரீநாத் நடவடிக்கை எடுப்பாரா? பொதுமக்கள் கேள்வி! திமுக அதிமுக தேர்தல் சோகத்தில் தண்ணீர் பந்தல் திறக்க மனமில்லையா ?

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் பிரத்யேக செய்தி!

தூத்துக்குடியில் சுட்டெரிக்கும் வெயில்: மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்க எம்.எல்.ஏ ஸ்ரீநாத் நடவடிக்கை எடுப்பாரா? பொதுமக்கள் கேள்வி!

தூத்துக்குடி: மே20

மே மாதம் பாதியை கடந்த நிலையிலும் தூத்துக்குடியில் கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கத்திரி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பொதுமக்களின் தாகம் தணிக்க மாநகராட்சி சார்பில் இதுவரை தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்படாதது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏமாற்றத்தில் பொதுமக்கள்:

​தூத்துக்குடி மாநகரில் வருடந்தோறும் கோடைகாலம் தொடங்கிவிட்டாலே, பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள் மற்றும் அந்தந்த வார்டு பகுதிகளில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல்கள் அமைப்பது வழக்கம். ஆனால், இந்த 2026 ஆம் ஆண்டு கோடைகாலம் தொடங்கி, கத்திரி வெயிலும் உச்சத்தை தொட்டுள்ள நிலையிலும், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் இதுவரை ஒரு இடத்தில் கூட தண்ணீர் பந்தல் அமைக்க எவ்வித நடவடி்ககையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

thoothukudileaks


​திமுக -அதிமுக அரசியல் கட்சிகளின் மௌனம் – தேர்தல் சோகமா?

​பொதுவாக வருடந்தோறும் கோடைகாலம் வந்துவிட்டாலே தூத்துக்குடி மாநகர் முழுவதும் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல், மோர் பந்தல், இளநீர் என போட்டி போட்டுக் கொண்டு அதிமுக மற்றும் திமுகவினர் ஆங்காங்கே பந்தல்களை திறந்து வைப்பார்கள். 


கடந்த காலங்களில் மாவட்ட எம்பியான கனிமொழி அவர்களும் தனது சொந்த செலவில் பல இடங்களில் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து மக்களின் தாகம் தணித்தார்.

​ஆனால், இந்த 2026-ல் இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியோ, மக்கள் பிரதிநிதியோ தண்ணீர் பந்தல் அமைக்க முன்வரவில்லை. "தேர்தல் முடிவுகளின் சோகத்தில் அவர்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பதால், எங்களுக்கு தண்ணீர் பந்தல் அமைக்க மறந்துவிட்டார்களா? அல்லது பொதுமக்களை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்களா?" என்று வெயிலில் அலையும் பொதுமக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.


எம்.எல்.ஏ ஸ்ரீநாத் நடவடிக்கை எடுப்பாரா?

​தற்போது தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி மக்கள் பிரதிநிதியாக இருக்கும் எம்.எல்.ஏ ஸ்ரீநாத்  இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

​மாநகராட்சி நிர்வாகத்தை முடுக்கிவிட்டு, தூத்துக்குடியின் முக்கிய சந்திப்புகள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வார்டு பகுதிகளில் உடனடியாக கோடைகால தண்ணீர் மற்றும் மோர் பந்தல்களை அமைக்க எம்.எல்.ஏ ஸ்ரீநாத் விரைந்து நடவடிக்கை எடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- தூத்துக்குடி லீக்ஸ் செய்தியாளர்.

திங்கள், 18 மே, 2026

தூத்துக்குடியில் மாநகராட்சி வணிக வளாகங்கள் ஆய்வு மாவட்ட திமுக பிரதிநிதி இல்லத் திருமண விழாவில் கனிமொழி எம்.பி. பங்கேற்பு

Tamil Nadu updates 

news by Arunan journalist 

தூத்துக்குடி, மே 18:

இன்று (18.05.2026) திங்கள்கிழமை, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சிதம்பரநகரில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலைய வணிக வளாகம் ஆகிய பகுதிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

thoothukudileaks


thoothukudileaks

பாராமரிப்பு பணி ஒழுங்காக நடக்கிறததா???

அப்போது வணிக வளாகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள், பொதுமக்கள் பயன்பாடு, கடை அமைப்புகள் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

thoothukudileaks


வணிகர்களுக்கு ஆலோசனை!!

மேலும், பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் தேவைகள் தொடர்பாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

thoothukudileaks


திருமணம் நிகழ்ச்சி பங்கேற்பு!!!


இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி அபிநயா மஹாலில் நடைபெற்ற மாவட்ட திமுக பிரதிநிதி  பொன்ராஜ் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி., மணமக்கள் சக்தி லிங்கேஸ்வரன் – சிவா பிரியா ஆகியோருக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்தார்.

thoothukudileaks

thoothukudileaks


இந்த நிகழ்வுகளில் மாவட்ட கழகச் செயலாளர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 17 மே, 2026

அரிசி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை ? தூத்துக்குடி காவல் துறை அதிரடி

Tamil Nadu update 17-5-2026

தூத்துக்குடி மே17

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்து, 30 கிலோக்கும் மேற்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இது பற்றி செய்தியாவது ..

குளத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உதவி ஆய்வாளர்  ராமலெட்சுமி தலைமையிலான போலீசார் இன்று குளத்தூர் பஜார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அங்குள்ள ஒரு அரிசிக்கடை முன்பு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ...

 ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த வீரசின்னரசு (38), மாரிமுத்து (46) என்பதும், அவர்கள் குளத்தூரைச் சேர்ந்த அரிசிக்கடை உரிமையாளர் பிச்சைமணி (61) என்பவரிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாங்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

thoothukudileaks


அரிசி கடையில்...

இதையடுத்து போலீசார் அரிசிக்கடையில் சோதனை மேற்கொண்டதில், அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


கைது நடவடிக்கை!!!

உடனடியாக போலீசார் பிச்சைமணி, வீரசின்னரசு மற்றும் மாரிமுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து மொத்தம் 30 கிலோ 475 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.10,000 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளி, 15 மே, 2026

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நன்றி தெரிவிப்பு எம்.எல்.ஏ. சரவணனுக்கு உற்சாக வரவேற்பு – பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு வழங்க உறுதி

Tamil Nadu updates 15-5-2026

photo news 

by Arunan journalist 

தூத்துக்குடி மே15

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நன்றி தெரிவிப்பு பயணமாக சென்ற எம்.எல்.ஏ. சரவணனுக்கு ராமசந்திராபுரம், புல்லாவழி மற்றும் கோவங்காடு பகுதிகளில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

thoothukudileaks


கழக நிர்வாகிகள் மற்றும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றதுடன், குழந்தைகள் பட்டாசு வெடித்து மலர் மாலைகள் அணிவித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.

ராமசந்திராபுரம் பகுதியில் முதியோர் சிலர், கடந்த சில மாதங்களாக ரேஷன் கடை ஊழியர்கள் வீடு தேடி வந்து பொருட்கள் வழங்காததால் மிகுந்த சிரமம் அனுபவித்து வருவதாக எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர்.

thoothukudileaks



 இதற்கு பதிலளித்த சரவணன் எம்.எல்.ஏ., “கவலைப்பட வேண்டாம், உடனடியாக இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கிறேன்” என உறுதியளித்தார்.

thoothukudileaks


அதேபோல் புல்லாவழி பகுதியில் அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தி, மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்க டியூஷன் வசதி ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் அந்த பகுதியில் சாலை வசதி, குடிநீர் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.


உப்பள தொழிலைத் தவிர வேறு வேலைவாய்ப்புகள் இல்லாமல் மக்கள் சிரமப்படுவதாக அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர். 

அதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ., “நம்ம விஜய் ஆட்சியில் நல்ல தீர்வு கிடைக்கும். வேலைவாய்ப்புகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


மேலும், “நம் பகுதியில் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுகிறவர்கள் யாரேனும் இருந்தால் தெரியப்படுத்துங்கள். அவர்களுக்கு என் சொந்த செலவில் தினமும் உணவு அனுப்ப ஏற்பாடு செய்கிறேன்” என மனிதநேயத்துடன் தெரிவித்தது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

video புல்லா வழி பார்க்க 

கோவங்காடு பகுதியில் மக்கள் பஸ் நிறுத்தம், சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். அனைத்தையும் விரைவில் செய்து தருவதாக எம்.எல்.ஏ. சரவணன் உறுதியளித்தார்.

வீடியோ பகுதி 2 கோவங்காடு பகுதியில் ..

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் அருள், விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட அமைப்பாளர் திருமணி அஸ்வின், வசந்தன் சித்தன், புல்லாவழி கிளை கழக செயலாளர் அஜித்குமார், துணை கழக செயலாளர் சண்முகவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பால்கிளி, சுரேஷ், கோவங்காடு கிளை கழக பொருளாளர் ஆகாஷ், கிளை கழக செயலாளர் நவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வியாழன், 14 மே, 2026

சூரியன் திரும்ப உதித்தே தீரும்! தோல்விக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை மே14

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், திமுக தலைவர் M. K. Stalin உணர்ச்சி பொங்க உரையாற்றினார். 

தேர்தல் தோல்வி, கட்சியின் எதிர்காலம், சமூக வலைத்தள அரசியல், அமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அவர் விரிவாக பேசினார்.

சூரியன் திரும்ப உதித்தே தீரும்!!!

“என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது தமிழ்நாட்டு அரசியல் நியதி” என உரையை தொடங்கிய ஸ்டாலின், நடந்து முடிந்த தேர்தலில் திமுக ஆட்சியை அமைக்க முடியாத போதிலும், கணிசமான வாக்கு விகிதத்தை பெற்றிருப்பதை சுட்டிக்காட்டினார்.

thoothukudileaks


இப்போதும் வெற்றி தான்!!

1989, 1996, 2006 ஆகிய தேர்தல்களுக்கு பின்னர் ஏற்பட்ட தோல்விகளை நினைவுகூர்ந்த அவர், “அப்போது விட தற்போது திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை 59 இடங்களில் வென்றிருக்கிறோம். கூட்டணியுடன் சேர்த்து பார்த்தால் 73 இடங்கள் கிடைத்துள்ளன” என்றார்.

அலெட்சியம்!!

மேலும், “திமுகதான் வெற்றி பெறும் என நினைத்து அலட்சியமாக வாக்களித்ததாக பலர் சமூக வலைத்தளங்களில் வருத்தப்படுகிறார்கள். இது நமது ஐந்தாண்டு நல்லாட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

திமுக தோல்வி முழு பொறுப்பு!!!

தோல்விக்கான காரணம் குறித்து யாரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்ட வேண்டாம் என வலியுறுத்திய ஸ்டாலின், “கழகத்தின் தலைவர் என்ற முறையில் இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

தனி இணையதளம்!!!

கட்சியின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளில் பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும், தொகுதி வாரியாக கள ஆய்வு நடத்தி 20 நாட்களுக்குள் அறிக்கை பெற குழு அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். மேலும், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க தனி இணையதளம் தொடங்கப்படும் எனவும் கூறினார்.

அறிவுரை!!!

சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “முன்னாடி டீக்கடையில பேசின அரசியலை, இனிமே சோஷியல் மீடியாவில் பேசியாகணும்” என நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கணிப்பு!!!

அதிமுக மற்றும் ஆளும் கூட்டணி நிலைமை குறித்து பேசிய ஸ்டாலின், “அடுத்த அரசியல் சூழல் எப்படி மாறும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆனால் சட்டமன்றத்தில் திமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும்” என்றார்.

தோல்வி தற்காலிகமே!!!

இறுதியாக, “இந்த தோல்வி தற்காலிகம் தான். திட்டமிடுவோம், தீவிரமாக உழைப்போம், மீண்டு வருவோம், மீண்டும் வெற்றி பெறுவோம்” என உற்சாகமாக உரையை நிறைவு செய்தார்.

மீண்டும் அதிகாரப்பூர்வ நாளிதழ், ஊடகத்தை பறிகொடுத்த அதிமுக!

சென்னை மே14

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் தொடர்ந்து உருவாகி வரும் உள்கட்சி பிளவுகள், கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, அதிமுக மீண்டும் தனது அதிகாரப்பூர்வ நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

thoothukudileaks

இது பற்றி செய்தியாவது...

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக நீண்ட காலம் செயல்பட்டது ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் பின்னணியில், அந்த நாளிதழ் டிடிவி தினகரன் அணியின் கட்டுப்பாட்டுக்கு சென்றது. அதேபோல், அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி ஊடகமாக இருந்த ‘ஜெயா டிவி’ சசிகலா தரப்பின் வசமாகியது.


இதையடுத்து, சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அதிமுகவுக்கென புதிய அதிகாரப்பூர்வ ஊடகமாக ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சி மற்றும் ‘நமது அம்மா’ நாளிதழ் தொடங்கப்பட்டது. இவ்விரு ஊடகங்களும் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோரின் தலைமையில் செயல்பட்டு வந்தன.


ஆனால் தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள புதிய உள்கட்சி மோதலால், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தனி அணியாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதனைத் தொடர்ந்து, ‘நமது அம்மா’ மற்றும் ‘நியூஸ் ஜெ’ ஊடகங்களில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தலைமையுடன் தொடர்புடைய செய்திகள் புறக்கணிக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.


இந்த சூழ்நிலையில், அதிமுகவுக்கு மீண்டும் தனி அதிகாரப்பூர்வ நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி ஊடகம் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.

புதன், 13 மே, 2026

பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: ஒருவர் கைது 9 கிலோ பொருட்கள் பறிமுதல்

Tamil Nadu updates 13-5-2026

தூத்துக்குடி மே13

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுநாயக்கன்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 9 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

thoothukudileaks


இது பற்றி செய்தியாவது:-

எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் இன்று (13.05.2026) காட்டுநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் (51) என்பவர் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கண்ணனை கைது செய்து, அவரிடமிருந்து 9 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.