தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
செய்தி புகைப்படங்கள் அருணன் செய்தியாளர்
தூத்துக்குடி :ஜன10
எழுத்தாளர் மின்னல் அம்ஜத் அவரின் புதிய நூலான “புறம் பேசலாமா!” என்ற நூல் வெளியீட்டு விழா தூத்துக்குடியில் சிறப்பாக நடைபெற்றது.
சமூக, அரசியல், மனித உரிமை, தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல்வேறு தளங்களைச் சேர்ந்த பிரபலங்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு கலாபன் வாஸ் அவர்கள் (வயது 9-4), முன்னாள் Flying Officer (Rtd), இந்திய விமானப்படை தலைமை வகித்தார். தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் O.A. நாராயணசாமி முன்னிலை வகித்தார்.
நூலைப் பெற்று மதிப்புரை வழங்கியவர்களாக அருட்திரு ஜேம்ஸ் விக்டர் (எ) சுந்தரி மைந்தன் (கிறித்துவ வாழ்வுரிமை இயக்கம்) மற்றும் பேராசிரியர் பாத்திமா பாபு (ஒருங்கிணைப்பாளர், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் – ASPM) ஆகியோர் கலந்து கொண்டு, நூலின் கருத்தாக்கம், சமூக விமர்சனம் மற்றும் எழுத்து நடையின் ஆழம் குறித்து பாராட்டினர்.
விழாவில் அருட்தந்தை X.D. செல்வராஜ் அவர்கள் ஏற்புரை வழங்கினார். தொடர்ந்து PUCL மாவட்ட தலைவர் Dr. காயல் மெளலானா D.LII (USA), நமது தேசம் மாத இதழ் கௌரவ ஆசிரியர் யூ. அண்டோ, நெய்தல் எழுத்தாளர்கள் & வாசகர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்
இரா. மாடசாமி, தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கத் தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
நூலின் முதல் பிரதியை செந்தமிழ் மன்ற மாநில தலைவர் ஷாஜஹான் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியை தங்கையா அவர்கள் (ஒருங்கிணைப்பாளர், இந்திய கிறித்தவ மறுமலர்ச்சி இயக்கம், தூத்துக்குடி மறைமாவட்டம்) தொகுத்து வழங்கினார்.
ஷாரா. முபாரக் (முதல்வர், ஷாரா கலை பயிற்சிப் பள்ளி) நன்றியுரை வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக தாளமுத்து செல்வா (மாவட்ட செயலாளர், மக்கள் அதிகாரக் கழகம் – நூல் வெளியிடுபவர்கள்) செயல்பட்டார்.
நூலின் வடிவமைப்பை மை. காதர் பாட்சா (பிஸ்மி பிரிண்டர்ஸ், தூத்துக்குடி) செய்திருந்தார்.
மேலும் விழாவில் புரட்சி பாரதம் கட்சி, தமிழ்நாடு மக்கள் நல இயக்கம், AICCTU, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தாயக மக்கள் கட்சி, தமிழக மீனவ மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல், தொழிற்சங்க மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நூலாசிரியர் மின்னல் அம்ஜத் அவரை வாழ்த்தினர்.
சமூக சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ள “புறம் பேசலாமா!” நூல், வாசகர்களிடையே புதிய விவாதங்களை உருவாக்கும் என்ற நம்பிக்கையுடன் விழா நிறைவடைந்தது.













.png)