தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
Tamil Nadu updates photo news by Arunan journalist
தூத்துக்குடி, ஜூலை 15:
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், பெருந்தலைவருமான காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (AIPTMMK) சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாண்புமிகு அம்மா அவர்களின் உண்மை விசுவாசியும், முன்னாள் பெருநகரக் கழகச் செயலாளரும், முன்னாள் தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவருமான எஸ். ஏசாதுரை தலைமை வகித்தார்.
விழாவையொட்டி, அந்தோனியார் கோவில் அருகே அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும், சிவன் கோவில் அருகே மாவட்ட கழக அலுவலகம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி காமராஜரின் பிறந்தநாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் வி.டி. தங்கம், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் மாரியப்பன், முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் இரா.இல. ஜெயராமன், முன்னாள் பகுதி கழகச் செயலாளர் வி.பி. முத்து, முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்துக்குமார், முன்னாள் மேற்கு பகுதி எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் கணேசன், முன்னாள் பாசறை தலைவர் மகாராஜன், சபிக்குமார் உள்ளிட்ட அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக (AIPTMMK) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
விழாவில் கலந்து கொண்டவர்கள், கல்வி வளர்ச்சி, நேர்மை, எளிமை மற்றும் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக பெருந்தலைவர் காமராஜர் ஆற்றிய மகத்தான சேவைகளை நினைவுகூர்ந்து அவரது புகழை போற்றினர்.
.










