Tamil Nadu updates news by Arunan journalist
தூத்துக்குடி, ஜூன் 23:
தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நன்மைகள் !!!
பள்ளியின் தாளாளரும் முதல்வருமான ஆர். ஜெயசண்முகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக யோகா பயிற்சியாளர் ஸ்டீபன் கலந்து கொண்டு யோகாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் உடல்நல நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
அசாத்திய மாணவ மாணவிகள்!!!
தொடர்ந்து மாணவ, மாணவிகள் சூரிய நமஸ்காரம், பத்மாசனம், பச்சிமோத்தானாசனம், தனுராசனம், யோகமுத்திரா, திரிகோணாசனம், வஜ்ராசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை செய்து அவற்றின் பயன்களை அறிந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இறுதியில் துணை முதல்வர் ரா.ச. பிரியங்கா நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த யோகா தின விழா மாணவர்களிடையே உடல் மற்றும் மன ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக பள்ளியில் நிர்வாகம் தெரிவித்தது.













