புதன், 25 மார்ச், 2026

அதிமுக-பாஜக கூட்டணி பாஜகவுக்கு 27 தொகுதிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் யாருக்கு என்ன?

தூத்துக்குடி லீக்ஸ் |நாளிதழ் தேர்தல் சிறப்பு செய்தி

தேதி: 25.03.2026

வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA), பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று இன்று (25.03.2026 — புதன் கிழமை) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி அறிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கையொப்பமிட்டுள்ளார்.

thoothukudileaks

இரண்டு தொகுதிகளில்...

பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் குளச்சல் (231) மற்றும் பத்மனாபபுரம் (232) தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த இரு தொகுதிகளிலும் பாஜக கடும் போட்டியை எதிர்கொள்ள உள்ளது.

கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள்:

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில், அதிமுக 178 தொகுதிகளிலும், பாஜக 27 தொகுதிகளிலும், பாமக 18 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன.  


பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள்:

தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜக போட்டியிடும் தொகுதி திருச்செந்தூர் 

மைலாப்பூர் (25), தளி (56), மொடக்குறிச்சி (100), உதகமண்டலம் (108), அவினாசி தனி (112), திருப்பூர் தெற்கு (114), கோயம்புத்தூர் வடக்கு (118), கந்தர்வகோட்டை தனி (178), புதுக்கோட்டை (180), திருப்பத்தூர் (185), மதுரை தெற்கு (192), சாத்தூர் (204), திருச்செந்தூர் (215), வாசுதேவநல்லூர் தனி (220), ராதாபுரம் (228), நாகர்கோவில் (230), விளவன்கோடு (233), ஆவடி (6), திருவண்ணாமலை (63), தஞ்சாவூர் (174), திருவாரூர் (168), அறந்தாங்கி (183), மானாமதுரை தனி (187), ராமநாதபுரம் (211), குளச்சல் (231), பத்மனாபபுரம் (232), ராசிபுரம் தனி (92) என மொத்தம் 27 தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது.

வேட்புமனு தாக்கல் மார்ச் 30 முதல் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெறும்.


வரலாற்று பின்னணி:

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 தொகுதிகளை வென்று ஆட்சி அமைத்தது; அதிமுக 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.  

 இந்த முறை வலுவான கூட்டணியை அதிமுக உருவாக்கியுள்ளது.

வேட்புமனு தாக்கல் மார்ச் 30 முதல் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெறும்.


செவ்வாய், 24 மார்ச், 2026

2026 தேர்தல் அதிமுக 23 முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

25.03.2026 Tamil Nadu updates,

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

thoothukudileaks


வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வகையில், மொத்தம் 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஆட்சிமன்றக் குழு ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

முக்கிய தலைவர்களில் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி, பி. தங்கமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அனுபவமிக்க நிர்வாகிகளுக்கும் இந்த பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் வலுவான அமைப்பை கருத்தில் கொண்டு இந்தத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

thoothukudileaks



“மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற ஜெயலலிதா அவர்களின் கோஷத்தை முன்னிறுத்தி, இந்தத் தேர்தலில் வெற்றி பெற உறுதி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) தலைமைக் கழக அறிவிப்பு 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களின் முதல் பட்டியல்



வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள்:


 எடப்பாடி (86): எடப்பாடி K. பழனிசாமி


 வேப்பனஹள்ளி (54): கே.பி. முனுசாமி


 திண்டுக்கல் (132):  திண்டுக்கல் C. சீனிவாசன்


 நத்தம் (131): நத்தம் இரா. விசுவநாதன்


தொண்டாமுத்தூர் (119): . S.P. வேலுமணி


 குமாரபாளையம் (97): பி. தங்கமணி


 ராயபுரம் (17): D. ஜெயக்குமார்


 மைலம் (71): C.Ve. சண்முகம்


 மதுரை மேற்கு (194): செல்லூர் K. ராஜூ


 பாலக்கோடு (57):. K.P. அன்பழகன்


  நன்னிலம் (169):  R. காமராஜ்


 வேதாரண்யம் (165): . O.S. மணியன்


  விராலிமலை (179): டாக்டர் C. விஜயபாஸ்கர்


 கோவில்பட்டி (218):  கடம்பூர் C. ராஜூ


 திருமங்கலம் (196):  R.B. உதயகுமார்


 சிவகாசி (205):  K.T. ராஜேந்திரபாலாஜி


 மதுரவாயல் (7):. பா. பெஞ்சமின்


  கலசபாக்கம் (65): அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி


  திருப்பரங்குன்றம் (195): . V.V. ராஜன் செல்லப்பா


 பவானி (104): திரு. K.C. கருப்பணன்


  ஜோலார்ப்பேட்டை (49): . K.C. வீரமணி


 கரூர் (135): . M.R. விஜயபாஸ்கர்


 அரியலூர் (149):  தாமரை S. ராஜேந்திரன்

ஞாயிறு, 22 மார்ச், 2026

இனி கிங் மேக்கர்களா? யாரும் கிடையாது? 2026 தேர்தல் களத்தில் ‘ஏஐ’ ஆட்டம்!

Tamil Nadu updates photo news by Arunan 

தூத்துக்குடி லீக்ஸ் 23.03.2026

தமிழக அரசியல் களம் என்றாலே சுவர் முழுவதும் வண்ண விளம்பரங்கள், பிரமாண்ட கட்-அவுட்கள், தெருக்களில் முழங்கும் பிரசாரப் பாடல்கள் என பாரம்பரிய காட்சிகள் தான் நினைவிற்கு வரும். ஆனால் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், இந்த மரபு முறைகளைத் தாண்டி, கண்ணுக்குத் தெரியாத ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) மற்றும் ‘அல்காரிதம்கள்’ (Algorithms) முக்கிய பங்காற்றப் போவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

thoothukudileaks


முன்பெல்லாம் வாக்காளர் பட்டியல் என்பது கையில் பிடிக்கும் ஒரு காகிதமாக இருந்தது. தற்போது அது முழுக்க முழுக்க ‘டேட்டா’ ஆக மாறியுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிடும் PDF பட்டியல்களை, நவீன ஏஐ மென்பொருள்கள் சில நிமிடங்களில் அலசி ஆராய்ந்து, ஒரு பகுதியின் சமூக அமைப்பு, வயது விபரம், கடந்த தேர்தல் வாக்கு போக்கு போன்ற அனைத்தையும் துல்லியமான புள்ளிவிவரங்களாக மாற்றி வழங்குகின்றன.

மைக்ரோ டார்கெட்டிங்

இதன் தொடர்ச்சியாக ‘மைக்ரோ டார்கெட்டிங்’ முறை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. அரசியல் கட்சிகளின் ஐடி பிரிவுகள், சமூக வலைதளங்களில் வாக்காளர்களின் நடத்தை, விருப்பங்கள் போன்றவற்றை பகுப்பாய்வு செய்து, அவர்களுக்கு ஏற்றவாறு தனிப்பட்ட விளம்பரங்களை அனுப்புகின்றன.


 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, இல்லத்தரசிகளுக்கு விலைவாசி குறைப்பு போன்ற செய்திகளை குறிவைத்து அனுப்பும் இந்த முறை, தேர்தல் பிரசாரத்தில் புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.

டிஜிட்டல் போஸ்டர்கள்!!!

ஒரு காலத்தில் பிரசார வீடியோ அல்லது போஸ்டர்கள் தயாரிக்க அதிக செலவு மற்றும் நேரம் தேவைப்பட்டது. தற்போது ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால், சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான டிஜிட்டல் போஸ்டர்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்க முடிகிறது. இது சிறிய கட்சிகள் மற்றும் தனிப்பட்ட வேட்பாளர்களுக்கும் பெரும் ஆதரவாக மாறியுள்ளது.

போலி வீடியோக்கள்!!!

மேலும், பெருநகரங்களில் கட்சிகள் அமைத்துள்ள ‘டிஜிட்டல் வார் ரூம்கள்’ 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. 

ஒரே நபர் பல இடங்களில் வாக்காளராக இருப்பதை கண்டறிதல், எதிரணி பரப்பும் போலி வீடியோக்கள் (‘டீப் பேக்’) கண்டறிதல் போன்ற பணிகளில் ஏஐ முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தேர்தல் கண்காணிப்பு முறைகளும் டிஜிட்டல் தளத்திற்கு மாறியுள்ளது.

இந்த நிலையில், ‘மனித உழைப்புடன் இணைந்த ஏஐ வேகம்’ தான் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் என்ற புதிய அரசியல் உண்மை உருவாகியுள்ளது. 

மேடைப் பேச்சுகளுக்கு இணையாக, ‘அல்காரிதம்’ ஆதரவும் அவசியம் என்ற நிலை தமிழக அரசியலில் உருவாகியுள்ளது.

இதேவேளை, மறைந்த தலைவர்களின் உருவம் மற்றும் குரலை ஏஐ மூலம் மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

தேர்தல் யுக்தி!!!

முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் பேசுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி, வாக்காளர்களிடையே உணர்ச்சி ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

thoothukudileaks


மொத்தத்தில், ‘டிஜிட்டல் சாணக்கியம்’ எனப்படும் இந்த புதிய தேர்தல் யுக்தியில், யார் முன்னிலை வகிப்பார்கள் என்பது தேர்தல் முடிவுகளால் தான் வெளிப்படும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தேர்தல் 2026: வாக்குச்சாவடிகளில் புதிய கட்டுப்பாடுகள் – தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!

தேர்தல் 2026: வாக்குச்சாவடிகளுக்கான 7 முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

தூத்துக்குடி, மார்ச் 22:

1. அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மற்றும் கூடுதல் வாக்குச்சாவடிகளிலும் (AMFs) தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் 2026 மார்ச் 15க்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் (ECI) உத்தரவிட்டுள்ளது.


2. மொத்தம் 2,18,807 வாக்குச்சாவடிகளில், ஒவ்வொன்றிலும் உறுதி செய்யப்பட்ட அடிப்படை வசதிகள் (AMFs) மற்றும் வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரிகள் (CEOs) அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

thoothukudileaks


3. வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை, மின்சாரம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு மேடை (ramp), போதிய வெளிச்சம், மற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வசதியான அடிப்படை அம்சங்கள் கட்டாயமாக ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும், அமர்வதற்கான இருக்கைகள் (benches) மற்றும் வழிகாட்டும் சின்னங்களும் அமைக்கப்பட வேண்டும்.


4. வாக்காளர்கள் வசதியாக வாக்களிக்க, வாக்குச்சாவடிகளுக்கு அருகில் வாகன நிறுத்தும் வசதிகள் (VFP) ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தனிப்பட்ட உதவி ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும்.


5. வாக்காளர் பட்டியல் தொடர்பான சேவைகளை மேம்படுத்த, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) மற்றும் வாக்காளர் உதவி மையங்கள் (VABs) மூலம் நேரடி சேவைகள் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் வாக்காளர்கள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை எளிதில் சரிபார்க்கவும் திருத்திக்கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.


6. தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், வாக்குச்சாவடி நாளன்று ஏற்படும் சிக்கல்களை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் தயாராக இருக்க வேண்டும். வாக்காளர்களின் பாதுகாப்பும் சீரான வாக்குப்பதிவும் உறுதி செய்யப்பட வேண்டும்.

7. கூடுதல் வாக்குச்சாவடிகள் (AMF) மற்றும் அவற்றுடன் தொடர்புடைய அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செயல்படுகின்றனவா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதன் மூலம் தேர்தல் செயல்முறை வெளிப்படையாகவும் தடையின்றியும் நடைபெறுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சனி, 21 மார்ச், 2026

விளாத்திகுளம் மாணவி விவகாரம்: காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

விளாத்திகுளம்:மா22

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனை தொடர்புடைய விசாரணையில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதாக கூறுகின்றனர்.

thoothukudileaks


எட்டயபுரம் அருகே கீழ ஈரால் பகுதியில் 2020ஆம் ஆண்டு 60 வயது மூதாட்டி ஒருவரை காட்டுப் பகுதியில் வைத்து வன்கொடுமை செய்து நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில், இரண்டு ஆண்டுகள் கழித்து 2022ஆம் ஆண்டு எட்டயபுரம் போலீசார் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது தலைமையில் தர்ம முனீஸ்வரனை கைது செய்தனர். 


அந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்த தர்ம முனீஸ்வரன், அதே நாளில் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் ஒரு பைக்கை திருடியுள்ளார். 

33-வழக்குகள்!!

தொடர்ந்து டிசம்பர் 23ஆம் தேதி தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார். டிசம்பர் 24ஆம் தேதி முதல் தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளார். இவர்மீது 33க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஊர் ஊராக சுற்றி ???

ஊர் ஊராக சுற்றித்திரியும் பழக்கமுள்ள தர்ம முனீஸ்வரன், குளத்தூர் அருகே கே.சண்முகபுரம் மற்றும் கொல்லம்பரும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களுடன் பழகி, அவர்களுடன் சேர்ந்து போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் கே.சண்முகபுரம், வள்ளிநாயகபுரம், வேடநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்துள்ளார்.

பெண்களை குறிவைத்து!!!

குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த தர்ம முனீஸ்வரன், மார்ச் 6ஆம் தேதி முதல் வேடநத்தம் காட்டுப் பகுதிகளில் உள்ள காற்றாலை அருகே தினமும் வந்து, பைக்கை நிறுத்தி, விவசாய வேலைக்கு வரும் பெண்களை குறிவைத்து பதுங்கி இருந்துள்ளார். 

புரோட்டா மாஸ்டர் தந்த துப்பு!!

காட்டுப் பகுதிகளில்  தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மேலாக வெளியூர் பைக் மணிக்கணக்கில் அப்பகுதியில் நின்றதால் அதன் அருகாமையில் உள்ள  புரோட்டா மாஸ்டர் சோலையப்பன் என்பவர் சந்தேகத்தின் பேரில் ..அந்த பைக்கை போட்டோ எடுத்துள்ளார்.

thoothukudileaks


மாணவி கொலை!!!

2026 மார்ச் 10ஆம் தேதி மாலை 6 மணியளவில், தனியாக சென்ற பிளஸ்-2 மாணவியை பார்த்த தர்ம முனீஸ்வரன், அவரை இழுத்துச் சென்று அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். 

அப்போது சிலர் அங்கு வருவதைக் கண்ட அவர், மாணவி கூச்சலிடாமல் இருக்க அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

காட்டுக்குள்ளே பதுங்கி தூத்துக்குடிக்கு தப்பினான் 

 பின்னர் அந்த இரவு முழுவதும் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்து அதிகாலையில் தூத்துக்குடிக்கு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவத்திற்குப் பிறகும் சந்தேகம் வராத வகையில், வழக்கம்போல் மகிளா நீதிமன்றத்தில் மார்ச் 18ஆம் தேதி வரை கையெழுத்திட்டு வந்துள்ளார்.

ஒன்பது நாட்கள் தேடுதல் வேட்டை!!!

 இதனால் குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசார் 9 நாட்கள் தீவிரமாக தேடுதல் நடத்தியுள்ளனர்.

இதற்கிடையில், சோலையப்பன் வழங்கிய பைக் புகைப்படத்தின் அடிப்படையில், சம்பவ இடத்திலுள்ள காற்றாலை சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. 



அதில் பல நாட்களாக ஒரே நபர் பைக்கில் வந்து சென்றது கண்டறியப்பட்டது. அந்த பைக்கின் பதிவு எண் மூலம், அது பார்த்திபனூரில் திருடப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் சுற்றி வளைத்த போலீசார்!!!

பின்னர் பார்த்திபனூரில் இருந்து கிடைத்த சிசிடிவி காட்சிகள் மூலம், அந்த பைக்கை திருடியவர் தர்ம முனீஸ்வரன் என்பதும் உறுதி செய்யப்பட்டது. 

வீட்டில்  ஹாயாக டிவி செய்தி பார்த்துக் கொண்டு இருந்த போது சுற்றி வளைப்பு!!!

இதையடுத்து ...

தூத்துக்குடி ராஜபாண்டி நகருக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அங்கு  வீட்டில் டிவியில் செய்தி  வேடநத்தம் மாணவி பற்றி என்ன செய்தி வருகிறது என பார்த்துக் கொண்டிருந்த மாவீரன் (எ) தர்ம முனீஸ்வரனை சுற்றி வளைத்தனர்.

அவனை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனை மார்ச் 19ஆம் தேதி அவரது  வீட்டில் வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பின்னர் எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தினர். 

வாக்குமூலம்!!!

மார்ச் 20ஆம் தேதி சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று நடந்த விதம் குறித்து வாக்குமூலம் பெற்று வீடியோ பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தர்ம முனீஸ்வரன் ஒருவரே சம்பந்தப்பட்டாரா அல்லது அவரது கூட்டாளிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தார்கள். மேலும், அவரது உடலில் இருந்த வெட்டு காயம் மற்றும் சிலரின் மொபைல் போன்கள் தொடர்பாகவும் சந்தேகங்கள் வந்தது.

மாணவி இறுதி சடங்கில் அரசியல் பிரமுகர்கள் கண்ணீர் அஞ்சலி!!!

மாணவியின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதிச்சடங்கில் கிராம மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.





தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு – சமூக ஊடக கணக்குகள் விவரம் கட்டாயம்!

Tamil Nadu updates photo news by Arunan 

தூத்துக்குடி, 21.03.2026

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

thoothukudileaks


அதன்படி, தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தங்களின் சமூக ஊடக கணக்குகளின் விவரங்களை கட்டாயமாக வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 குறிப்பாக ...

Facebook, Twitter (X), YouTube, Instagram உள்ளிட்ட தளங்களில் உள்ள அதிகாரப்பூர்வ கணக்குகள் மற்றும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் அனைத்து கணக்குகளும் இதில் சேர்க்கப்பட வேண்டும்.

மேலும், சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களுக்கு செலவிடப்படும் தொகையும் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சமூக ஊடகங்களில் செலுத்தப்படும் விளம்பரங்கள், வீடியோக்கள், பதிவுகள் அனைத்தும் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் செயல்படும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கள் (MCMC) இந்த சமூக ஊடக உள்ளடக்கங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உள்ளன.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காலத்தில், சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இந்த புதிய நடைமுறை மூலம் தேர்தல் பிரச்சாரங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் கட்டுப்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

thoothukudileaks



 1:

Election Commission of India (ECI) வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முக்கியமான புதிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

 2:

அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணை மார்ச் 15, 2026 அன்று அறிவிக்கப்பட்டது. இதனுடன் இணைந்து பல புதிய விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன.

3:

பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் வேட்பாளர்களும், தங்களது அரசியல் விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன் Media Certification and Monitoring Committee (MCMC) மூலம் முன் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

4:

இந்த விதிமுறைகள் தொலைக்காட்சி, வானொலி, பொது இடங்களில் காணப்படும் விளம்பரங்கள் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்கள், இ-பேப்பர்கள், bulk SMS மற்றும் voice messages உள்ளிட்ட அனைத்து தளங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 5:

மாவட்ட அளவில் District MCMC மற்றும் மாநில அளவில் State Level MCMC அமைப்புகள் மூலம் விளம்பரங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், இதற்கான மேல்முறையீட்டு குழுவும் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ளது.

 6:

MCMC சான்றிதழ் பெறாமல் எந்த அரசியல் விளம்பரங்களும் இணைய தளங்களில் வெளியிடக் கூடாது என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 7:

மேலும், வேட்பாளர்கள் தங்களது உண்மையான சமூக ஊடக கணக்குகளின் விவரங்களை, வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அஃபிடவிட்டில் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

8:

சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரச்சார செலவுகள் தொடர்பான முழுமையான கணக்கையும், தேர்தல் முடிவடைந்த 75 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 9:

போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் நோக்கில், சமூக ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 20 மார்ச், 2026

குளத்தூர் சிறுமி கொலை வழக்கு: 25 காவல்துறையினருக்கு நற்பணி சான்றிதழ்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாவட்டம், மார்ச் 21, 2026

குளத்தூர் காவல் நிலையத்தில் நடைபெற்ற சிறுமி கொலை வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை விரைவாக கண்டறிந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

thoothukudileaks


இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றிய 25 காவல்துறை அதிகாரிகளுக்கு, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணன் இ.கா.ப, நேற்று (20.03.2026) திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நற்பணி சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

video 

இந்தப் பாராட்டைப் பெற்றவர்களில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் சக்திவேல், எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி, சங்கரலிங்கபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அசோக்பாபு, புதூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் காசிபாண்டியன், முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஹரன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

thoothukudileaks

thoothukudileaks


மேலும் தருவைக்குளம், சைபர் குற்றப்பிரிவு, ஆறுமுகநேரி, மாசார்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவல் கட்டுப்பாட்டு அறை பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 25 பேர் இந்த நற்பணி சான்றிதழ்களை பெற்றனர்.

இந்த நிகழ்வில் காவல்துறையினரின் துல்லியமான விசாரணை மற்றும் விரைவான நடவடிக்கை பொதுமக்கள் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகிறது என பாராட்டப்பட்டது.