தூத்துக்குடி, ஜனவரி 29:
இன்று (29.01.2026) காலை 10.00 மணிக்கு தூத்துக்குடியில் அதிமுக சார்பில் முதற்கட்ட தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வை தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தூத்துக்குடி சிவன் கோவில் முன்பிருந்து துவங்கி வைத்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
வ உ சி சந்தை அந்தோனியார் கோவில் தூத்துக்குடி பூ சந்தை பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
பொதுமக்களிடம் நேரடியாக தேர்தல் அறிக்கையை வழங்கி, அதிமுகவின் மக்கள் நலத் திட்டங்களை எடுத்துரைத்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின்போது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டு, அதிமுக ஆட்சியின் சாதனைகள் நினைவூட்டப்பட்டன.
இந்த நிகழ்வு தூத்துக்குடி நகரில் தேர்தல் பரப்புரையின் தொடக்கமாக அமைந்தது.
இச் செய்தியில் புகைப்படம் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது

















