சனி, 21 மார்ச், 2026

தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு – சமூக ஊடக கணக்குகள் விவரம் கட்டாயம்!

Tamil Nadu updates photo news by Arunan 

தூத்துக்குடி, 21.03.2026

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

thoothukudileaks


அதன்படி, தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தங்களின் சமூக ஊடக கணக்குகளின் விவரங்களை கட்டாயமாக வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 குறிப்பாக ...

Facebook, Twitter (X), YouTube, Instagram உள்ளிட்ட தளங்களில் உள்ள அதிகாரப்பூர்வ கணக்குகள் மற்றும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் அனைத்து கணக்குகளும் இதில் சேர்க்கப்பட வேண்டும்.

மேலும், சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களுக்கு செலவிடப்படும் தொகையும் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சமூக ஊடகங்களில் செலுத்தப்படும் விளம்பரங்கள், வீடியோக்கள், பதிவுகள் அனைத்தும் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் செயல்படும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கள் (MCMC) இந்த சமூக ஊடக உள்ளடக்கங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உள்ளன.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காலத்தில், சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இந்த புதிய நடைமுறை மூலம் தேர்தல் பிரச்சாரங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் கட்டுப்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

thoothukudileaks



 1:

Election Commission of India (ECI) வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முக்கியமான புதிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

 2:

அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணை மார்ச் 15, 2026 அன்று அறிவிக்கப்பட்டது. இதனுடன் இணைந்து பல புதிய விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன.

3:

பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் வேட்பாளர்களும், தங்களது அரசியல் விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன் Media Certification and Monitoring Committee (MCMC) மூலம் முன் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

4:

இந்த விதிமுறைகள் தொலைக்காட்சி, வானொலி, பொது இடங்களில் காணப்படும் விளம்பரங்கள் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்கள், இ-பேப்பர்கள், bulk SMS மற்றும் voice messages உள்ளிட்ட அனைத்து தளங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 5:

மாவட்ட அளவில் District MCMC மற்றும் மாநில அளவில் State Level MCMC அமைப்புகள் மூலம் விளம்பரங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், இதற்கான மேல்முறையீட்டு குழுவும் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ளது.

 6:

MCMC சான்றிதழ் பெறாமல் எந்த அரசியல் விளம்பரங்களும் இணைய தளங்களில் வெளியிடக் கூடாது என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 7:

மேலும், வேட்பாளர்கள் தங்களது உண்மையான சமூக ஊடக கணக்குகளின் விவரங்களை, வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அஃபிடவிட்டில் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

8:

சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரச்சார செலவுகள் தொடர்பான முழுமையான கணக்கையும், தேர்தல் முடிவடைந்த 75 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 9:

போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் நோக்கில், சமூக ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 20 மார்ச், 2026

குளத்தூர் சிறுமி கொலை வழக்கு: 25 காவல்துறையினருக்கு நற்பணி சான்றிதழ்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாவட்டம், மார்ச் 21, 2026

குளத்தூர் காவல் நிலையத்தில் நடைபெற்ற சிறுமி கொலை வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை விரைவாக கண்டறிந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

thoothukudileaks


இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றிய 25 காவல்துறை அதிகாரிகளுக்கு, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணன் இ.கா.ப, நேற்று (20.03.2026) திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நற்பணி சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

video 

இந்தப் பாராட்டைப் பெற்றவர்களில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் சக்திவேல், எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி, சங்கரலிங்கபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அசோக்பாபு, புதூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் காசிபாண்டியன், முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஹரன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

thoothukudileaks

thoothukudileaks


மேலும் தருவைக்குளம், சைபர் குற்றப்பிரிவு, ஆறுமுகநேரி, மாசார்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவல் கட்டுப்பாட்டு அறை பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 25 பேர் இந்த நற்பணி சான்றிதழ்களை பெற்றனர்.

இந்த நிகழ்வில் காவல்துறையினரின் துல்லியமான விசாரணை மற்றும் விரைவான நடவடிக்கை பொதுமக்கள் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகிறது என பாராட்டப்பட்டது.

வியாழன், 19 மார்ச், 2026

2026 தேர்தல் அதிமுக–பாஜக கூட்டணியின் உத்தேச தொகுதி பங்கீடு விவரம் வெளியீடு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி


சென்னை/டெல்லி, மார்ச் 20: 

வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அதிமுக–பாஜக கூட்டணியின் உத்தேச தொகுதி பங்கீடு குறித்த விவரங்கள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks


அதன்படி, அதிமுகக்கு மொத்தம் 163 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதில் புரட்சிபாரதம் கட்சிக்கு 1 தொகுதி ‘இரட்டை இலை’ சின்னத்தில் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ‘தாமரை’ சின்னத்தில் 40 தொகுதிகள் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

இதில் பாஜக 31 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், கூட்டணி கட்சிகளான ..

புதிய நீதிக்கட்சி – 2, 

ஐஜேக – 2, 

பார்வேர்ட் ப்ளாக் – 1, பெருந்தலைவர் மக்கள் கட்சி – 1, தமமுக – 2, 

புதிய தமிழகம் – 2 ஆகியவற்றுக்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், அமமுகக்கு 9 தொகுதிகள் ‘குக்கர்’ சின்னத்தில் வழங்கப்படுவதோடு, தமாகா 4 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிடும் என்றும், பாமக 17 தொகுதிகளில் ‘மாம்பழம்’ சின்னத்தில் களமிறங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உத்தேச பட்டியல், டெல்லியில் முகாமிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் Edappadi K. Palaniswami மற்றும் இந்திய உள்துறை அமைச்சர் Amit Shah முன்னிலையில் இறுதி செய்யப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

எனினும், இந்த தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியில் நாயுடு மகாஜன சங்கம் சார்பில் யுகாதி விழா

Tamil Nadu updates photo news by Arunan journalist 


தூத்துக்குடி, மார்ச் 19:

தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கம் மற்றும் நாயுடு மகாஜன சங்கம் டிரஸ்ட் சார்பில் யுகாதி விழா இன்று மாலை தூத்துக்குடி அபிராமி மகாலில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் என். ராமசாமி நாயுடு தலைமை வகித்தார். மேனேஜிங் டிரஸ்டி ஜி. விவேகானந்தன் (MBA) முன்னிலை வகித்தார். செயலாளர் ஆர். ரெங்கசாமி நாயுடு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

thoothukudileaks


விழாவில் டிரஸ்ட் உறுப்பினர் வி.பி. வெங்கடகிருஷ்ணராஜன் (எ) செல்லசாமி நாயுடு (MBA) வரவேற்புரை நிகழ்த்தி, திரளானோர் கலந்துகொண்டதை பாராட்டினார்.

பரிசு வழங்கும் நிகழ்வில் அகில இந்திய அமைப்புச் செயலாளர் ஐ.என்.டி.யு.சி. பி. கதிர்வேல்  கலந்து கொண்டு சிறந்தோர் பலருக்கு பாராட்டு பரிசுகளை வழங்கினார்.

thoothukudileaks


சிறப்பு அழைப்பாளர்களாக கோவில்பட்டியைச் சேர்ந்த ரீஜென்ட் கிரியேஷன் பி.லிட் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் எஸ். ஹரிபாலகன், டாக்டர் டி. செல்வராஜ், டாக்டர் பி. குமரன், தூத்துக்குடி அபிராமி சில்க்ஸ் நிறுவனத்தின் என். சந்திரசேகர் மற்றும் அழகர் ஜூவல்லர்ஸ் அதிபர் ஏ. ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியை செயற்குழு உறுப்பினர் வி. வெங்கடேசன் நாயுடு தொகுத்து வழங்கினார். இறுதியில் துணை மேனேஜிங் டிரஸ்டி ஏ. மோகன் நாயுடு நன்றியுரை வழங்கினார்.

யுகாதி விழாவை முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகளும், சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் உரைகளும் நடைபெற்றன. 

இதில் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: கைது விவகாரத்தில் அடுக்குஅடுக்காக பாஜக அண்ணாமலை கேள்விகள் ?

தூத்துக்குடி லீக்ஸ்2026 மார்ச் 19

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகிலுள்ள வேடநத்தம் கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மீது பாலியல் தாக்குதல் நடத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்றது முதல் பத்து நாட்கள் கடந்தும் குற்றவாளியை கைது செய்யாதது குறித்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

thoothukudileaks


இந்த நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை கைது செய்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த கைது நடவடிக்கையைச் சுற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

கடந்த 2020 ஆம் ஆண்டு தூத்துக்குடி எட்டயபுரம் அருகே 65 வயதான முதிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், 2022 ஆம் ஆண்டு தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டார். 

thoothukudileaks


பின்னர், 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

இதன் பின்னர், அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு கொடூர குற்றத்தில் ஆயுள் தண்டனை பெற்ற நபருக்கு ஜாமீன் கிடைத்தது குறித்தும், அந்த வழக்கை அரசு முறையாக எதிர்கொள்ளாததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

மேலும், பல வழக்குகள் நிலுவையில் உள்ள குற்றப்பின்னணி கொண்ட நபர் ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் அவரை காவல்துறை கண்காணிக்க தவறியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியை அடையாளம் கண்டதாக கூறப்படும் நிலையில், அந்த காட்சிகளை ஆய்வு செய்ய காவல்துறைக்கு பத்து நாட்கள் எடுத்தது ஏன் என்ற கேள்வியும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவர் K. Annamalai தனது ஃபேஸ்புக் பதிவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். 

குற்றவாளி கைது செய்யப்பட்ட விதம், முன்னாள் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட சூழ்நிலை, மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உண்மை நிலை என்ன என்பதை பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. காவல்துறைக்கு பொறுப்பான தமிழக முதலமைச்சர் M. K. Stalin இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

– தூத்துக்குடி லீக்ஸ்

திங்கள், 16 மார்ச், 2026

தூத்துக்குடியில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 Tamil Nadu updates, photo news by Arunan journalist 

தூத்துக்குடி: மார்ச் 17

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் போதைப் பொருட்கள் புழக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்தத் தவறியதாக குற்றம் சாட்டி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து தூத்துக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

thoothukudileaks


thoothukudileaks

thoothukudileaks


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவின்பேரில், தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகிலுள்ள எம்.ஜி.ஆர் திடலில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன்   மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளர் கடம்பூர் செ. ராஜு எம்எல்ஏ  ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.


கண்டன ஆர்ப்பாட்டம் வீடியோ பார்க்க 

ஆர்ப்பாட்டத்தில் கழக வர்த்தக அணி செயலாளர் சி.த. செல்லபாண்டியன், எம்.ஜி.ஆர் அணி துணைச் செயலாளர் ஆறுமுக நயினார், அமைப்பு செயலாளர் சின்னத்துரை, அவை தலைவர் திருப்பாற்கடல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

thoothukudileaks

thoothukudileaks


thoothukudileaks


மேலும் முன்னாள் மத்திய கூட்டுறவு தலைவர் சுதாகர், முன்னாள் எம்.பி ஜெயசிங் தியாகராஜ் நடராஜ், த.மா.க மாவட்ட தலைவர் விஜயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ மோகன், பொருளாளர் சேவியர், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ரவீந்திரன், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூமணி மற்றும் சுகந்தன் ஆதித்தன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாசரேத் ஜூலியட், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் போக்குவரத்து கல்வி குமார்,வின்சென்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் மாவட்ட மற்றும் ஒன்றிய, பகுதி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

சனி, 14 மார்ச், 2026

பாஜக அரசை கண்டித்து திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி, மார்ச் 15:

மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

thoothukudileaks

.

இந்த ஆர்ப்பாட்டம் 15.03.2026 அன்று காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரில் நடைபெற்றது.


 சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை வழங்கவில்லை என்றும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. “தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை” எனக் கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

thoothukudileaks

thoothukudileaks


மேலும், தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

thoothukudileaks

thoothukudileaks


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.