ஞாயிறு, 25 ஜனவரி, 2026

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் 77வது குடியரசு தின விழா முன்னாள் கவுன்சிலர் கோட்டு ராஜா பரபரப்பு பேச்சு

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜனவரி 26 :

இந்திய குடியரசின் 77வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது

thoothukudileaks


thoothukudileaks

thoothukudileaks


விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர்  அன்னலட்சுமி கோட்டு ராஜா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேசிய கீதம் முழங்க அனைவரும் கொடியை நோக்கி மரியாதை செலுத்தினர்.

https://youtube.com/shorts/5kayK-3eY8o?si=6LdsKFIsRS78WvWL குடியரசு தின விழாவில் தூத்துக்குடி Ex கவுன்சிலர் கோட்டு ராஜா பரபரப்பு பேச்சு

இந்த நிகழ்வில் மேற்கு மண்டல உதவி ஆணையர் காந்திமதி, S.O. ராஜபாண்டி, A.W. லெனின், A.E. ஜெயபிரசாந்த், A.E. ராகவி, முன்னாள் கவுன்சிலர் கோட்டு ராஜா, மாமன்ற உறுப்பினர்கள், மேற்கு மண்டல மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

குடியரசு தினத்தை முன்னிட்டு மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் முழுவதும் திருவிழா போல் அலங்கரிக்கப்பட்டு, நாட்டுப்பற்று மிக்க சூழலில் விழா சிறப்பாக நடைபெற்றது.


தூத்துக்குடி மாநகராட்சியில் 77வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது

தூத்துக்குடி, ஜனவரி 26 :

தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இந்திய குடியரசின் 77வது ஆண்டு நிறைவை முன்னிட்டு குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ. ஜெகன்  தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேசிய கீதம் முழங்க அனைவரும் கொடியை நோக்கி மரியாதை செலுத்தினர்.

thoothukudileaks


விழாவில் சி. ப்ரியங்கா, இ.ஆ.ப., தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.





குடியரசு தினத்தை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகம் முழுவதும் திருவிழா போல் அலங்கரிக்கப்பட்டு காணப்பட்டது. திருவள்ளுவர் ஆண்டு 2057, தை மாதம் 12ஆம் தேதியன்று நடைபெற்ற இந்த விழாவில், இந்திய குடியரசின் 77வது ஆண்டு நிறைவை தூத்துக்குடி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடினர்.

வியாழன், 22 ஜனவரி, 2026

தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி மகளிர் பூப்பந்தாட்ட அணி மீண்டும் சாம்பியன்

tamil nadu news update photo news by Arunan journalist 

தூத்துக்குடி: ஜன 23

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிர் பூப்பந்தாட்ட போட்டியில் புனித மரியன்னை கல்லூரி (St. Mary's College) மாணவிகள் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை வெற்றிகரமாக தக்கவைத்துக் கொண்டனர்.

thoothukudileaks

thoothukudileaks


தூத்துக்குடி A.P.C.V. மகாலக்ஷ்மி கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியில், கடந்த ஆண்டு கோப்பையை வென்ற புனித மரியன்னை கல்லூரி அணி, இம்முறையும் ஆரம்பம் முதல் இறுதி வரை அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் பரிசை கைப்பற்றியது.

காணொளி 

பயிற்சியாளர் பாலசிங் அவரின் திறமையான வழிகாட்டுதலின் கீழ், கேப்டன் செல்வி மாளவிகா தலைமையில் சசி, அனி, முவேதா, உமா மகேஸ்வரி, மாலதி, கயல்விழி, ஸ்ரீமாரி தங்கம் மற்றும் பவித்ரா ஆகியோர் அடங்கிய அணி சிறப்பான கூட்டணி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

வெற்றி பெற்ற அணியினரை பாராட்டிய புனித மரியன்னை கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ஜெசி பர்ணாந்து, வீரர்களின் கடின உழைப்பு மற்றும் பயிற்சியாளரின் அர்ப்பணிப்புக்கு பெருமை தெரிவித்தார்.

பயிற்சியாளர் பாலசிங் பேசுகையில், "கேப்டன் மாளவிகா தலைமையில் அனைத்து வீரர்களும் அயராது பயிற்சி செய்த பலனே இந்த வெற்றி" என்று கூறினார்.

அணித் தலைவர் மாளவிகா தனது பேட்டியில்

"கல்லூரி முதல்வரின் ஊக்கமும், பயிற்சியாளர் பாலசிங் - சிறந்த பயிற்சியும் எங்களது வெற்றிக்கு வழிவகுத்தது. 

அனைத்து வீரர்களும் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுത்தியதால் இது சாத்தியமானது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


இந்த தொடர் வெற்றி புனித மரியன்னை கல்லூரியின் விளையாட்டு சிறப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.


புகைப்பட வீடியோ வில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

தூத்துக்குடி விடுதலைப் போராட்ட வீரர் தேர்மாறனின் 218வது நினைவேந்தல் கூட்டம்

தூத்துக்குடி: டிசம்பர் 21

தூத்துக்குடி விடுதலைப் போராட்டத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை மற்றும் மருது சகோதரர்களின் புரட்சிப் படைக்கு ஆயுதங்கள் வழங்கி உதவிய வீரர் தேர்மாறனின் 218வது நினைவேந்தல் கூட்டம், அவரது கல்லறை வளாகத்தில் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நினைவேந்தல் கூட்டத்திற்கு வில்சன் குரூப் ஆஃப் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் சேசைய்யா வில்லவராயர் தலைமை வகித்தார்.

thoothukudileaks

 



கோரமண்டல் சமூக நற்பணி மன்றத்தின் முன்னாள் தலைவர் பகவத்சிங், அன்னை பரதர் நலச்சங்கத்தின் தலைவர் சேவியர் வாஸ், பேராசிரியை பாத்திமாபாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் டிலெக்டா ரவி, திரேஸ்புரம் ராஜாபோஸ்ரீகன், ஜோபாய் கோமஸ், டெரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குரூஸ் பர்னாந்து நற்பணி மன்றத்தின் தலைவர் ஹெர்மன் கில்டு வரவேற்றார். அன்னை பரதர் நலச்சங்கத்தின் பொருளாளர் காஸ்ட்ரோ தொகுத்து வழங்கினார்.

அப்போது சேசைய்யா வில்லவராயர், தமிழக வெற்றிக் கழகத்தின் அஜிதா ஆக்னலின் களப்பணிகளைப் பாராட்டிப் பேசினார். மேலும், தேர்மாறனின் பிறந்த நாளை ஆவணங்களின் அடிப்படையில் உறுதி செய்து, அடுத்தாண்டு முதல் ஒரே நாளில் அனைவரும் ஒன்றுகூடி கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து த.வெ.க. அஜிதா ஆக்னல் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

thoothukudileaks


நிகழ்ச்சியில் சசிகுமார், பெல்லா, ரோக் பரதர், நெய்தல் அண்டோ, பெனோ, துறைவன் பாண்டியன், சேவியர் சில்வா, எழு கடல்துறை மைந்தர்கள் சார்பில் எல்சியாஸ், பரத குல எழுச்சிப் போராளிகள் சார்பில் பிரசாத், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


முடிவில் தேர்மாறன் நற்பணி மன்றத்தின் தலைவர் எட்வின் பாண்டியன் நன்றியுரை கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேர்மாறன் நற்பணி மன்றத்தாரும், தேர்மாறன் மணிமண்டபம் அமைப்புக் குழுவினரும் சிறப்பாக செய்திருந்தனர்.

புதன், 21 ஜனவரி, 2026

தூத்துக்குடியில் செல்போன் வெடிக்கும் என வாட்ஸ்அப் ஆடியோ – மாவட்ட காவல்துறை மறுப்பு

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 


தூத்துக்குடி : ஜனவரி 21

வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து 5 அல்லது 6 இலக்க நம்பரில் இருந்து வரும் அழைப்பை ஏற்றால் செல்போன் வெடித்து விடும் என்றும், தூத்துக்குடியில் 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறி வாட்ஸ்அப்பில் ஒரு ஆடியோ பரவி வருவது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெளிவான மறுப்பு தெரிவித்துள்ளது.

thoothukudileaks


தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வாட்ஸ்அப் ஆடியோவில்,

“ஹலோ, நான் தூத்துக்குடியில் இருந்து பேசுகிறேன்… கஸ்டமர் காலில் 5 அல்லது 6 நம்பரிலிருந்து அழைப்பு வருகிறது, அதை யாரும் அட்டென் பண்ணாதீங்க… அட்டென் பண்ணினால் பிளாஸ்ட் ஆகி செல்போன் வெடிக்கும்… தூத்துக்குடியில் 27 பேர் செத்துட்டாங்க… இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க” என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றும், தற்போது பரவி வரும் ஆடியோ பழையது என்றும், அந்த தவறான தகவல் மீண்டும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

உண்மை இல்லை!!!

எனவே பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்றும், இந்த பொய்யான வாட்ஸ்அப் ஆடியோவை யாருக்கும் பகிர வேண்டாம் என்றும் மாவட்ட காவல்துறை பொதுநலன் கருதி கேட்டுக் கொண்டுள்ளது.

எச்சரிக்கை!!!

மேலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் விதமாக அல்லது பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்புவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் எனவும், இந்த ஆடியோவை மீண்டும் பகிர்ந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

,


தூத்துக்குடி செய்தியாளர் சேகர் இல்ல விழா: பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் 

தூத்துக்குடி, ஜன.21:

தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினரும், சட்டம்–ஒழுங்கு புலனாய்வு  இதழ் தூத்துக்குடி மாவட்ட செய்தியாளருமான சேகர் - அனிஸ் பிரிஸ்காள் தம்பதியின் புதல்வி செல்வி ஜொபினா பூப்புனித நீராட்டு விழா இன்று மாப்பிள்ளையூரணி சவோயார்புரம் புனித சவோயார் சமுதாய நலக்கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

thoothukudileaks


இந்த விழாவில் தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா நிறுவன தலைவர் மற்றும் சட்டம்–ஒழுங்கு ஆசிரியர் சிவத்தமிழன், சீனியர் ரிப்போர்ட்டர் வார இதழ் சப் எடிட்டர் ரோஜா அருணன், தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் ராஜு, கௌரவ ஆலோசகர் ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், மாரிராஜா, செந்தில்முருகன், இருதயராஜ், உறுப்பினர் முரளிகணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் அதிமுக ஒன்றிய செயலாளர் ஜவஹர், முன்னாள் இளைஞர் பாசறை தலைவர் சி.த.செ. ஜெபசிங், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், ஸ்டாலின், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வசுமதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், வில்சன், அதிமுக ஒன்றிய ஜெபேரவை செயலாளர் பால்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராயப்பன், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, தமிழக வெற்றிக்கழக மாவட்ட துணைச் செயலாளர் வசந்தி ஜார்ஜ் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாவட்ட போட்டோ & வீடியோ தொழிலாளர் நல சங்க மாவட்ட தலைவர் முரளிகண்ணன், செயலாளர் விவேக், பொருளாளர் சுரேஷ் பெர்னாண்டோ, தொழிலதிபர்கள் அசோக் பாபு, பங்குராஜ், தொம்மைராஜ், டோமினிக், சுரேஷ்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு விழா சிறக்க வாழ்த்தினர்.


தூத்துக்குடியில் மாநகராட்சி வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: ஜன.21

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks


முகாமிற்கு மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த முகாமில் பொதுமக்கள் தரப்பில் சொத்து வரி தொடர்பான கோரிக்கைகள், குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றம், பிறப்பு–இறப்பு சான்றிதழ் திருத்தங்கள் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டன. உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பொதுமக்கள் சேவைகளை பெற்றனர்.

இன்றைய முகாமில் பொதுமக்கள் தரப்பில் மொத்தம் 15 மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பரிசீலனைக்காக ஒப்படைக்கப்பட்டன.

மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.