வெள்ளி, 13 மார்ச், 2026

வேடநத்தம் சிறுமி மர்ம மரண வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிப்போம் — கனிமொழி உறுதி

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 


தூத்துக்குடி, 13 மார்ச் 2026:

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த சுப்புராஜ் — காளீஸ்வரி தம்பதியரின் 17 வயது மகள் காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சோகச் சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks


இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை, 13.03.2026) தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான  கனிமொழி கருணாநிதி, வேடநத்தத்தில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆழ்ந்த ஆறுதல் தெரிவித்தார்கள்.

thoothukudileaks

thoothukudileaks


குடும்பத்தினரிடம் நேரில் உரையாடிய கனிமொழி ...

  "குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுக் கொடுப்போம்" என உறுதியளித்தார்கள்.

 நேரில் சென்ற போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான  கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர்  ஜி.வி. மார்கண்டேயன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

thoothukudileaks

thoothukudileaks


இந்த வழக்கில் விரைந்து விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

— தூத்துக்குடி லீக்ஸ் செய்தியாளர்


சின்னம்மா சசிகலா புதிய கட்சி தொடக்கம்: தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி, மார்ச் 13:

தியாகத் தலைவி சின்னம்மா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்  கொள்கைகளை மையமாக கொண்டு “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்” என்ற புதிய அரசியல் இயக்கத்தை இன்று தொடங்கி, அதன் கட்சி சின்னமாக “தென்னந்தோப்பு” சின்னத்தை அறிவித்ததை முன்னிட்டு தூத்துக்குடியில் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

thoothukudileaks


thoothukudileaks


புரட்சி தலைவி ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி எஸ்.ஏசாதுரை தலைமையில் ...

தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி கொண்டாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


இந்த நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணா பாண்டியன், வின்சென்ட், ஜெயபால், மகேஸ்வரன், மாரியப்பன், இக்பால் பாஷா, செல்வகுமார், ராமகிருஷ்ணன், ராமச்சந்திரன், செல்வராஜ், சபிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.


video 


வியாழன், 12 மார்ச், 2026

வேடநத்தம் மாணவி படுகொலை கண்டித்து தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

Tamil Nadu updates

தூத்துக்குடி லீக்ஸ் — 12 மார்ச் 2026, வியாழக்கிழமை


thoothukudileaks


தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய தொழிலாளி  சுப்புராஜ் —  காளீஸ்வரி தம்பதியினரின் இரண்டாவது மகள் பிளஸ் 2 பள்ளி மாணவி  கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks


 இந்த மிகவும் கொடூரமான படுகொலையை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரியும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முழு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கமும் இணைந்து 12-3-2026 அன்று தூத்துக்குடி அண்ணா நகர் 7வது தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

thoothukudileaks


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் வீராங்கனை அமைப்பின் தலைவருமான பேராசிரியர் பாத்திமா பாபு  உரையாற்றுகையில், ...

தென் மாவட்டங்களில் இளம் மாணவிகள் மீதான வன்முறை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது மிகவும் வேதனையான விஷயம் என்றும், இதற்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

thoothukudileaks



ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரும் மாவட்ட தலைவரும் ஆன தோழர் மின்னல் அம்ஜத்  கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். 

விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி பிரவீனா அவர்களின் அலட்சிய போக்கை கண்டித்து பேச்சாளர்கள் கடும் கோபம் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மதுரை — தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலை என்னும் இடத்தில் சுமார் ஐந்து மணி நேரம் தொடர் மறியல் நடைபெற்றது. 

thoothukudileaks

thoothukudileaks


உண்மையை கண்டறியும் நோக்கில் தமிழக வணிகர்களின் மத்திய சங்கத்தின் மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான தெர்மல் ராஜா , ..நெய்தல் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் நெய்தல் அன்டோ  உடன் வந்து மாணவி பிரதீபாவின் பெற்றோரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் வழங்கினர். 


காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கொலையாளிகளை நெருங்கிவிட்டதாகவும் அன்றே கைது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதனை ஏற்று போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் படுகொலைச் சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், மாணவர்களிடையே பெருகிவரும் போதை பழக்கங்களை கண்டறிந்து பள்ளிகளில் ஒழுக்க கல்வி வழங்க வேண்டும் என்றும், போதை பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் போராட்ட குழுவின் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை கொடுக்கப்பட்டது.

மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவது திமுக தான் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடி லீக்ஸ் | தூத்துக்குடி | 13 மார்ச் 2026

தூத்துக்குடி: தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் 73வது பிறந்தநாளையொட்டி, வடக்கு மாவட்ட திமுக சார்பில் 48வது வார்டு கால்டுவெல் காலணியில் சிறப்பான விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் நவநீதன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார்.

thoothukudileaks


விழாவில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் ... தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில்,..

 "மக்களோடு மக்களாக இருந்து உங்களோடு எப்போதும் பணியாற்றுவது திமுக தான். உங்களில் ஒருவராக இருந்தே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்" என்று தெரிவித்தார்.

காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

விடியல் பயணம் திட்டத்தின் மூலம் பெண்களை வீட்டுக்குள்ளே முடக்கி வைக்கும் நிலை மாறி, அம்மா வீடு மற்றும் உறவினர் வீடு என பல இடங்களுக்கு சுதந்திரமாகச் செல்லும் நிலை இன்று கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

"ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் தான் நங்கூரமாக இருந்து செயல்படுகிறார்கள். 1996ஆம் ஆண்டு 33 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் நான் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். 

பின்னர் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக என 30 ஆண்டுகாலம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு உங்களோடு பயணிக்கிறேன்" என்று அமைச்சர் கீதாஜீவன் உரையாற்றினார்.

thoothukudileaks


மகளிர் உரிமைத்தொகையை தேர்தலுக்குப் பின் 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 14 வயதில் கொடி பிடிக்க ஆரம்பித்து, படிப்படியாக உயர்ந்து இன்று கட்சித் தலைவராகவும் தமிழ்நாட்டு முதலமைச்சராகவும் ஸ்டாலின் பணியாற்றி வருவதை எடுத்துரைத்த அமைச்சர், 5 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார். வரவிருக்கும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.


மாற்றுத்திறனாளிக்கு அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவாதம்

விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஒரு மாற்றுத்திறனாளி, தனக்கு மூன்று சக்கர சைக்கிள் வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினார். அதை படித்துப் பார்த்த அமைச்சர் கீதாஜீவன், உடனடியாக ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்து, தனது உதவியாளரிடம் அந்த மனுவை வழங்கினார்.


விழாவில் மாநில பேச்சாளர் சரத் பாலா பகுதிச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், கவுன்சிலர்கள் சரவணகுமார், விஜயகுமார், கந்தசாமி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

photo news by sunmugasuthram press club president 


தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்கள் பட்டினி போராட்டம்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் ஆதரவு த

Tamil Nadu updates,

தூத்துக்குடி, மார்ச் 12:

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வரும் தொடர் பட்டினி போராட்டம் இன்று (12-3-2026) இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை சந்தித்து ஊக்கமளித்தனர். 

thoothukudileaks


குறிப்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு, புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் மா. மாரிசெல்வம், மாவட்ட துணை செயலாளர் அந்தோணிச்சாமி ஆகியோர் போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்தனர்.

மேலும், தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களது முழு ஆதரவும் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் ஏஐசிசிடியு (AICCTU) தொழிற்சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

thoothukudileaks




இது தொடர்பாக ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மாவட்ட தலைவருமான மின்னல் அம்ஜத் நன்றி தெரிவித்தார்.

புதன், 11 மார்ச், 2026

தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் 11ஆம் ஆண்டு துவக்க விழா

Tamil Nadu updates 11-3-2026

தூத்துக்குடி, மார்ச் 11:

சமத்துவ மக்கள் கழகத்தின் 11ஆம் ஆண்டு துவக்க நாள் விழா தூத்துக்குடி மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் கட்சிக் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

thoothukudileaks


 மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை மற்றும் மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் வக்கீல் சகாயராஜ் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

thoothukudileaks

thoothukudileaks


விழாவில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரும் பெருந்தலைவர் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

thoothukudileaks


 தொடர்ந்து மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் கேக் வெட்டி விழாவை கொண்டாடினார். பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

வீடியோ பார்க்க 

இந்த நிகழ்ச்சியில் ...

அருண் சுரேஷ் குமார், டேனியல் ராஜ், வழக்கறிஞர் அணி தலைவர் வக்கீல் குணசேகரன், வக்கீல் வைகுந்த், மகளிர் அணி தலைவி சந்திரா, மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட துணைச் செயலாளர்கள் அந்தோணி சேவியர், அருள்ராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயகசமாடன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பாலமுருகன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட விவசாய அணி செயலாளர் கனகராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.



மேலும் மகளிர் அணி நிர்வாகிகள் ஜேசு செல்வி, சாந்தி, ராசாத்தி, பிரம்மசக்தி, கன்னியம்மாள், ரேவதி, மாவட்ட தொழிலாளர் அணி துணைச் செயலாளர் சண்முககுமார், மாநகரச் செயலாளர் முத்து செல்வம், மாநகர அவை தலைவர் மதியழகன், மாநகர பிரதிநிதிகள் சாமுவேல், ஞானராஜ், மாநகர மாணவரணி செயலாளர் விஜய் கார்த்திக், மாநகர வர்த்தக அணி செயலாளர் தொம்மை குரூஸ், வர்த்தக அணி துணைச் செயலாளர் முத்துக்குமார் மற்றும் மாநகர வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியில் புகைப்படம் வீடியோ செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

செவ்வாய், 10 மார்ச், 2026

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மை பணியாளர்கள் தொடர் பட்டினி போராட்டம்

Tamil Nadu updates, 

அருணன் செய்தியாளர் 

தூத்துக்குடி, மார்ச் 11:

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மை பணியாளர்கள் சார்பில் தொடர் பட்டினி போராட்டம் புதன்கிழமை (11.03.2026) முதல் தொடங்கப்பட்டது.

இந்த பட்டினி போராட்டம் ஏஐசிசிடியு (AICCTU) தொழிற்சங்க அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. 

தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

thoothukudileaks


போராட்டத்தின் தொடக்க நிகழ்வில் ஏஐசிசிடியு தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் தோழர் சகாயம், மாவட்ட தலைவர் தோழர் மின்னல் அம்ஜத், மாவட்ட செயலாளர் தோழர் சிவராமன், சிபிஐ (எம்.எல்) கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் முருகன், தூய்மை பணியாளர் சங்க தலைவர் தோழர் பொன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் பெண் தோழர்கள் வெங்கடேஸ்வரி, கணபதி, காளீஸ்வரி, சரஸ்வதி ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் இந்த தொடர் பட்டினி போராட்டத்தின் முதல் நாளில் தோழர் மின்னல் அம்ஜத், தோழர் பொன்ராஜ், பெண் தோழர்கள் வெங்கடேஸ்வரி, கணபதி, காளீஸ்வரி, சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

11-3-2026 தூத்துக்குடி தூய்மை பணியாளர்களின் தொடர் பட்டினி போராட்டத்திற்கு ஆதரவாக .... இன்று 

தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் மாநில தலைவர் தோழர் சாமு காந்தி  தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் தோழர் மா கிருஷ்ணமூர்த்தி  மக்கள் அதிகார கழகம் மாவட்ட செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா ஆகியோர் இன்று தூய்மை பணியாளர்கள் தொடர் பட்டினி போராட்டம் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர் 

thoothukudileaks


கோரிக்கைகள் :

2017 ஆம் ஆண்டு GO 62 படி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

தொழிற்சங்க தலைவர் பொன்ராஜ் அவர்களை வேலைநீக்கம் செய்ததை ரத்து செய்து, உடனடியாக மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்.

75 நாட்களாக வேலை வழங்காமல் வைத்திருக்கும் நிலையை நிறுத்தி, அவருக்கு உரிய பணியை வழங்க வேண்டும்.

தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்களின் உரிமைகளை பாதுகாக்க தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளர் விரோதமாக நடைபெறும் செயல்பாடுகளை நிறுத்தி, தொழிலாளர்களுக்கு உரிய நலன்கள் மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.


இந்த தகவலை ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மாவட்ட தலைவருமான தோழர் மின்னல் அம்ஜத் தெரிவித்துள்ளார்.