செவ்வாய், 1 ஜூலை, 2025

மாம்பழ சாறு உற்பத்தியில் மோசடியில் ஈடுபடுகின்றன: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

 மாம்பழ சாறு உற்பத்தியில்  மோசடியில் ஈடுபடுகின்றன: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

தூத்துக்குடி, லீக்ஸ் ஜூன் 29 - 

மாம்பழ சாறு தயாரிக்கும் நிறுவனங்கள் பழச்சாறின் மாம்பழக் கரு வீதத்தை குறைத்து, தமிழக மாம்பழ விவசாயிகளை பெரும் நட்டத்துக்குள்ளாக்கி வருகின்றன. என்றார் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணி தலைவருமான கனிமொழி கருணாநிதி.

இந்தக் குறையை உணவு செயலாக்கத் துறை மத்திய அமைச்சரான சிராக் பஸ்வானுக்கு எழுதிய கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். 



அதில், “2022-ஆம் ஆண்டில் 20% மாம்பழக் கரு கொண்டு சாறு தயாரிக்கப்பட்டது. ஆனால், தற்போது 2024-ஆம் ஆண்டில் அது 11% ஆக குறைந்துள்ளது. 


இது பான உற்பத்தியாளர்கள் தாங்கள் சந்திக்க வேண்டிய GST வரி உயர்வை தவிர்ப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கையே” என தெரிவித்துள்ளார்.

28% ஜிஎஸ்டி விதிக்கப்படும் “Fruit Juice” என்ற வகையில் தயாரிக்காமல், 5% முதல் 10% வரை பழச்சத்து மட்டுமே உள்ள “Fruit Drink” அல்லது “Fruit Based Beverages” என்ற வகைப்படுத்தலில் இந்த பானங்களை சந்தைப்படுத்தி வருகிறார்கள். 


இது உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைத்துறை விதிமுறைகளையும் (FSSAI) மீறுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“மாம்பழ விவசாயிகள் ஏற்கும் இழப்புகளை கண்டு மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பழச்சாறுகளில் 20% பழச்சத்து கட்டாயம் இருக்கும் விதமாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்” என மத்திய அமைச்சரிடம் கனிமொழி எம்.பி வலியுறுத்தி இருக்கிறார்.


பெருமளவில் மாம்பழ விவசாயிகள் இதில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழாவுக்காக தூய்மை பணியில் தூத்துக்குடி மாநகராட்சி பணியாளர்கள் பங்கேற்பு

Tamil Nadu updates, photo news by sunmugasuthram press club president 


தூத்துக்குடி, ஜூலை 1:

வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, தூய்மை பணிகளை மேற்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சியிலிருந்து 50 தூய்மை பணியாளர்கள் திருச்செந்தூர் நோக்கி அனுப்பப்பட்டனர்.



தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். 



இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், இணை ஆணையர் சரவணகுமார், நகர்நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர்கள் நெடுமாறன், கண்ணன், ராஜபாண்டி, மாநகராட்சி சுகாதார குழுத் தலைவர் சுரேஷ்குமார், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் மற்றும் பிற அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேயர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவில் தமிழகமெங்கும் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்து ஏறத்தாழ 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், கனிமொழி எம்.பி, அமைச்சர் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கின்றனர்."

தூத்துக்குடி மாநகராட்சி பணியாளர்கள், திருச்செந்தூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுடன் இணைந்து, விழா நடைபெறும் 10ம் தேதி வரை முழுநேர சுகாதார பணியில் ஈடுபட உள்ளனர். 




அவர்களுக்கான தங்கும் வசதிகள், உணவு உள்ளிட்ட அடிப்படை ஏற்பாடுகள் நகராட்சி மூலம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், முத்தையாபுரம் உப்பாற்று ஓடை அருகே பக்தர்களுக்கான தங்குமிட பூங்காக்கள் நகராட்சி சார்பில் முன்னமே அமைக்கப்பட்டு செயல்படுகின்றன. 


பக்தர்கள் அவற்றைப் பயன்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. 


விழா நாள்களில் வாகன போக்குவரத்து பாதிக்கப்படாமல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் மேயர் தெரிவித்தார்.


தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் புதிய ஆணையர் பங்கேற்பு

Tamil Nadu updates, 

photo news by Arunan journalist 

 தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் புதிய ஆணையர் பங்கேற்பு

📆 நாள்: 30.06.2025 – திங்கள்
📍 இடம்: தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கம்




📌 தலைமை

  • மேயர் ஜெகன் பெரியசாமி
  • துணை மேயர் ஜெனிட்டா
  • புதிய மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், இ.ஆ.ப

🪑 பங்கேற்பாளர்கள்
மாநகர மாமன்றக் கவுன்சிலர்கள் முழுமையாக பங்கேற்றனர்.

🗣️ சிறப்புகள்:

  • மாநகராட்சிக்கு புதியதாக நியமிக்கப்பட்ட ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் முதன்முறையாக மாமன்ற கூட்டத்தில் பங்கேற்றார்.
  • திமுக பெண் கவுன்சிலர் மற்றும் அதிமுக கவுன்சிலர் மந்திர மூர்த்தி ஆகியோர் எழுந்து கூறியதாவது.
    👉 “மக்களின் நலனுக்காக ஆணையருடன் இணைந்து செயல்படுவோம்” என்றனர்.
  • ஆணையர் பதிலளிக்கையில்:
    “தூத்துக்குடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்” என உறுதியளித்தார்.





📜 தீர்மானங்கள்
கூட்டத்தின் கடைசியில் மாநகராட்சியால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் –பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

Tamil Nadu updates,


📰 முதல்வர் பதவி விலக வேண்டும் – தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

தூத்துக்குடி: 01 ஜூலை 2025

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் காவல் துறை மோசடிகள் மற்றும் வன்கொடுமைகளை கண்டித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.



 காவல்துறையினரால் கொல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் குடும்பத்திற்கு உடனடி நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரிய அவர், "இது போலியான விசாரணைகள் மூலம் மறைக்கப்படக்கூடாது. 


தமிழகத்தில் காவல்துறையின் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளும் நிலை இல்லை. முதல்வர் ஸ்டாலின், காவல் துறை பொறுப்பில் இருந்து விலகி, நேரடியாக பதில் சொல்ல வேண்டும்" என்று வலியுறுத்தினார்.


மேலும், "அஜித் குமார் தாயாரின் கண்ணீருக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும். 

"

திமுக ஆட்சியில் மட்டும் 23 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன. இவை அனைத்துக்கும் முழுமையான நீதிமன்ற விசாரணை தேவை. காவல்துறையில் உள்ள நிர்வாக சீர்கேடுகளை கலைத்து, மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்றார்
."

காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளின் மீதான குற்றச்செயல்களை விசாரிக்க தனிப்பட்ட சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



வியாழன், 26 ஜூன், 2025

ஆ.ராசாவுக்கு முதல்வர் அறிவுரை சொல்வாரா ? தமிழக பாஜக கண்டனம்

Tamil Nadu updates,26-7-2025

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் பரபரப்பு அறிக்கை. 


மத்திய உள்துறை அமைச்சரை அநாகரீகமாக பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு முதல்வர் அறிவுரை சொல்ல வேண்டும்.


துணை பொது செயலாளர் ஆ.ராசா தமிழகத்தில் அமைதியை குலைக்கும் வகையில், தொடர்ந்து மதவாத,வகுப்புவாத பிரிவினைவாத கருத்துக்களை பேசி ஆபத்தான அரசியல் செய்து,சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விஷ விதைகளை விதைத்து வருகிறார்.



திமுக ஆட்சியின் அதிகார மமதையில்,இந்து கடவுள்களையும் இந்து மதத்தையும் கொச்சையாக பேசி வருகிறார். சமீபத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சர்ச்சைக்கிடமாக, திமுகவினர் திருநீறு உள்பட இந்துமத அடையாளங்களுடன் நடமாடக்கூடாது என்று மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில்பேசியிருந்தார்.

குழப்பத்தில் திமுக!!!

"திமுகவின் அமைச்சர் சேகர்பாபு  திடீரென்று சூடு, சொரணை உடன் ராசா பேசியது முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கருத்து அல்ல. முன்னாள் மத்திய அமைச்சர்  ராசாவின் தனிப்பட்ட கருத்து என்று பதில் சொல்லியிருந்தார்"


"ஆனால் ஆ ராசா அப்படி பேசியது , அவரின் தனிப்பட்ட கருத்தா? அல்லது திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களின்  மனசாட்சியாக, வழிகாட்டுதல் படி பேசினாரா? என்பதற்கு  திமுக தலைவர் ஸ்டாலின் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. இது குறித்து திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகனும்  பதில் சொல்லவில்லை."


யார் முட்டாள்!!!

தற்போது மதுரை முருக பக்தர் மாநாட்டில் ஏற்பட்ட ஆன்மீக எழுச்சி காரணமாக தமிழக மக்களின் மனதில் தீய சக்தி திமுக வீழ்த்த வேண்டும் என்ற தமிழக மக்களின் விழிப்புணர்ச்சி வலுப்பெற கூடாது என்ற அடிப்படையில்....

அதை திசை திருப்புவதற்காக உலக  அரசியலில் ராஜதந்திரியாக பார்க்கப்படுபவரும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் வலிமைக்காகவும் பல முக்கிய மசோதாக்கள் பாராளுமன்றத்திலே இயற்றி, இந்திய தாய் திருநாட்டின் கலாச்சாரம் பண்பாடு, உள்நாட்டு பாதுகாப்பை பேணிப் பாதுகாக்கும் அற்புத அரசியல் தலைவராக, அரசியல் சார்பற்ற அனைத்து கட்சி  தலைவர்களாலும் பாராட்டப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  குறித்து மிகவும் தரம் தாழ்ந்து, மோசமான முறையில் "முட்டாள்" என்கிற வார்த்தையை ஆ ராசா பயன்படுத்தியுள்ளார்.

மெளனமான திமுக!!!

2 ஜி ஊழல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தற்போது மேல் முறையிட்டு விசாரணை குற்றவாளியான ஆ.ராசா.பேசியதை முதல்வர் ஸ்டாலின் கண்டிக்காமல் மௌனம் காப்பது ஏன்?

ஆட்சி பறிபோகும் பயத்தில் திமுக!!!

தமிழகத்தில் நடைபெறும் உலகின் மோசமான ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டுவேன் என  அமித்ஷா  சபதம் செய்து, அதிமுகவையும் பாஜகவையும் இணைத்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலிமைப்படுத்தி மக்கள் விரோத, தீய சக்தி, ஊழல் திமுகவை  வீழ்த்துவேன் என்று அறிவித்ததம் ஆட்சி பறிபோயிடுமோ என்ற பயம்  திமுகவினருக்கு ஏற்பட்டு விட்டது.


தமிழக பாஜக தலைவர் நயினார்  நாகேந்திரன் திரு எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் திமுக ஆட்சியை விரட்டி அடித்தது போல அமித்ஷா உருவாக்கிய வெற்றி கூட்டணியும், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவார்கள்  என்பதால் முதலில் ஸ்டாலின் அவர்களுக்கு  பயமும் பதட்டமும் உருவாகியுள்ளது. 


இதன் காரணமாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மத்திய அமைச்சர் அமித் ஷாவை அவதூறு செய்யும் நோக்கில், திரை மறைவு அரசியலாக,  ஆ.ராசாவை வைத்து கேவலமான அரசியல் செய்கிறாரோ? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுவிட்டது.

கண்டிக்க வேண்டும்!!!

மறைந்த பிரதமர் வாஜ்பாய் அவரது நண்பர் தான் திமுகவை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அவர் கூறியபடி, கடமை,கண்ணியம், கட்டுப்பாட்டை காக்கும் அரசியல்வாதியாக செயல்பட்டு தன்னுடைய அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்தும் விதமாக , திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை கண்டிக்க வேண்டும் சட்ட ரீதியாக தண்டிக்க வேண்டும்.


முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்களும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் அரசியல் நாகரீகத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.  


திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மக்கள் விரோத கூட்டணி எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மனசாட்சி இல்லாமல் நாகரிகமற்ற முறையில் அவதூறு பிரச்சாரங்களை  செய்தாலும்,

"எதிர்க்கட்சிகளை எதிர்க்கட்சிகளாக பார்க்காமல் பொறுப்புடன் நாகரீகமாக மனிதநேயத்துடன் பண்புடன் மக்கள் நலப் பிரச்சினைகளை மட்டும் சுட்டிக்காட்டி விமர்சித்து பதில் அளிக்கும் நைனா நாகேந்திரன் அவர்களிடம் நாகரிக அரசியலை ஆ.ராசா கற்றுக்கொள்ள வேண்டும்"


ஏ.என்.எஸ்.பிரசாத்

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் 

புதன், 25 ஜூன், 2025

முத்துநகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதைசீரமைக்குமா மாநகராட்சி? தென் மண்டல மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட தலைவர் பிரேசில் மற்றும் நகரத் தலைவர் சித்ரா வேதனை !!!

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

முத்துநகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை அசௌகரியத்தில் – சீரமைக்குமா தூத்துக்குடி மாநகராட்சி?

தூத்துக்குடியில் முக்கியமான பொழுதுபோக்கு இடமாக  "முத்து நகர் கடற்கரை"  மக்களிடையே பிரபலமடைந்துள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் இங்கு வந்து கடற்கரை காற்றில் மகிழ்ச்சியாக நேரம் கழிக்கின்றனர்.



மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக, மாநகராட்சி கடந்த காலங்களில் ஒரு சிறப்பான முயற்சியாக இந்த கடற்கரையில் அவர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் தனித்தனி நடைபாதைகளை அமைத்தது.


 ஆனால் தற்போது அந்த பாதைகள் பராமரிப்பு இன்றி கற்கள், குப்பைகள் நிறைந்த நிலையில் காணப்படுகின்றன. 

வீடியோ பார்க்க...

இது மாற்றுத் திறனாளிகள் பயணிக்க முடியாத அளவுக்கு சிக்கலாக உள்ளது என தென் மண்டல மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட தலைவர் பிரேசில் மற்றும் நகரத் தலைவர் சித்ரா வேதனை தெரிவித்துள்ளனர்.


"பொதுமக்கள் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்படும் என்ற எண்ணத்தோடு அமைக்கப்பட்ட பாதை இன்று பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.


 இதனை உடனே சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்," என அவர்கள் வலியுறுத்தினர்.


மாநகராட்சி நிர்வாகம் இதற்கான நடவடிக்கையை எப்போது மேற்கொள்ளும்? மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை நிறைவேறும் நாள் எப்போது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

100% தேர்ச்சி சாதனை: ஸ்ரீ சங்கரா பகவதி கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம், கொம்மடிக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வித் தரத்தில் தொடர்ந்தும் சாதனை படைத்து வருகிறது.



இக்கல்லூரியில் 2023 - 2025 கல்வியாண்டில் முதுகலை வணிகவியல் (M.Com) படிப்பை பயின்ற மாணவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த மாணவர்களின் உழைப்பையும், பேராசிரியர்களின் முழுமையான வழிகாட்டலையும் கல்லூரி முதல்வர் டாக்டர். அருள்ராஜ் பொன்னுதுரை மற்றும் துணை முதல்வர் டாக்டர். மகேஷ் குமார் சிறப்பாக பாராட்டினர்.

2025 - 2026 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. சேர்க்கை தொடர்பான கூடுதல் தகவலுக்கு 99655 09113 மற்றும் 99524 88989 என்ற எண்ணங்களில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.