photo news by Arunan journalistt
தூத்துக்குடி: டிச 8
தொழிலாளர் நலன்கள் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி, இன்று (08.12.2025) தூத்துக்குடியில் CITU தலைமையில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை தொழிலாளர்களும், தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்து தூய்மை பணியாளர்களும் இணைந்து வேலைநிறுத்தத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டக்காரர்கள்,
- 62 நாட்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு 11.10.2017 உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி வழங்க வேண்டிய ஊதியப் பாக்கிகள் இன்னும் வழங்கப்படாதது,
- துவக்கப்பணியாளர்கள், ஓட்டுநர்கள், OHT ஆபரேட்டர்கள் உள்ளிட்டோருக்கான DPC உயர்வுகள் நிறைவேற்றப்படாதது,
- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள 74 தொழிலாளர்களின் நீண்டநாள் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு வழங்காதது,
- 01.04.2003க்கு பிந்தைய புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,
- மருந்தக பணியாளர்களுக்கான சம்பள உயர்வு மறுக்கப்படுவது,
- பணிநிரந்தரம், அனுவாரியம் உள்ளிட்ட நலன்கள் வழங்கப்படாதது,
- தினசரி தொழிலாளர்களுக்கு சம்பளம் தாமதமாக வழங்கப்படுவது
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மேலும், மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், தங்களது பாதுகாப்பு உபகரணங்கள், சம்பள உயர்வு, நிரந்தரப்படுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்காததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் தீவிரமாக பங்கேற்றனர்.
“உழைக்கும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட மாநகராட்சி, அரசு வழங்க மறுக்கிறது; நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்” என சங்கத்தினர் எச்சரித்தனர்.
காவல்துறை கைது நடவடிக்கை
பெரும்பான்மையான பெண் தொழிலாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார் கள்
— தூத்துக்குடி லீக்ஸ்

















