ஞாயிறு, 18 ஜனவரி, 2026

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் அதிரடி மாற்றம் கட்சிக்குள் குழப்பம், நிர்வாகிகள் தொண்டர்கள் அதிருப்தி?

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: ஜன19

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் தலைமை பொறுப்புகளில் திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டதை தொடர்ந்து, கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய நியமனங்கள் தொடர்பாக சில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.



சமீபத்தில் வெளியான அறிவிப்பின் படி, தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் தலைவராக சகாயராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பெருமாள் சாமி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாற்றங்கள் குறித்து கட்சிக்குள் ஒருமித்த கருத்து உருவாகவில்லை எனவும், திடீர் மாற்றங்கள் களப்பணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலை தொண்டர்கள் மத்தியில் நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், புதிய தலைவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையும் சிலர் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அமைப்பு வலுப்படுத்தல் குறித்து மேலிடம் விரைவில் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 17 ஜனவரி, 2026

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 109-வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் அதிமுக சார்பில் மரியாதை

தூத்துக்குடி, ஜன. 17:

கழக நிறுவனர், பாரதரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் இன்று பல்வேறு இடங்களில் மரியாதை நிகழ்வுகள் நடைபெற்றன.

thoothukudileaks

thoothukudileaks


தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவரின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டன.

thoothukudileaks

thoothukudileaks


தொடர்ந்து பழைய மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவரின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மத்திய வடக்குபகுதி செயலாளர் ஜெய்கணேஷ் ஏற்பாட்டில் மத்திய வடக்கு பகுதி அலுவலகத்தில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

27-வது வட்ட கழகம் சார்பில் 1-ம் கேட் பகுதியிலும், எம்.ஜி.ஆர். அம்மா பக்தர்கள் சார்பில் 2-ம் கேட் பகுதியிலும் புரட்சித்தலைவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

thoothukudileaks

thoothukudileaks


இந்நிகழ்வில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் பி.ஏ. ஆறுமுகநயினார், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் இரா.ஹென்றி, மாவட்ட பொருளாளர் சேவியர், மாவட்ட துணைச்செயலாளர் வசந்தாமணி, மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளருமான விஜயகுமார், சார்பு அணி செயலாளர்கள் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் எம்.பெருமாள், டேக்.ராஜா, நாசரேத் ஜூலியட், கே.ஜே.பிரபாகர், ஜெ.ஜெ தனராஜ், பகுதி செயலாளர்கள் ஜெயகணேஷ், சுடலைமணி, ஒன்றிய செயலாளர் ராஜ்நாராயணன், ஆத்தூர் பேரூராட்சி கழகச் செயலாளர் அறிவுடை நம்பி பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர்கள் சத்தியலட்சுமணன், நவ்ஷாத், ஐடியல் பரமசிவன், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், பொற்கிழி ஜான்சன் தேவராஜ், மனுவேல் ராஜ், நிலாசந்திரன், ஏ.பி.ஆர். பரிபூரண ராஜா, ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், மண்டல அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் கல்விக்குமார், இணைச்செயலாளர் லட்சுமணன், கே.டி.சி. ஆறுமுகம், ஜவகர், சக்திவேல், பொன்சிங், திருமணி, வீரபாண்டி, பொன்னம்பலம், மாநகராட்சி கவுன்சிலர் வெற்றிசெல்வன், வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், சிவசங்கர், ராஜ்குமார், மகளிர் அணி நிர்வாகிகள் முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, மெஜூலா, சாந்தி, ராஜேஸ்வரி, அன்னபாக்கியம், தமிழரசி, சரோஜா, மருதம்மாள், செல்வம், மாரியப்பன், எஸ்.கே. மாரியப்பன், தென்திருப்பேரை கந்தன், அங்கமங்கலம் பாலமுருகன், ஹார்பர் பாண்டி, ஏ.கே.மைதீன், தங்க மாரியப்பன், வட்டக் கழகச் செயலாளர்கள் கொம்பையா, ரெங்கன், தூத்துக்குடி மணிகண்டன், சொக்கலிங்கம், மகாராஜா, டேவிட் ஏசுவடியான், சங்கர், ஜெரால்ட், பாம்பு முருகன், சந்திரசேகர், வசந்த், பொன்சிங், மனோகர், ரகுநாதன், கனகவேல், உலகநாத பெருமாள், கமலஹாசன், செல்வராஜ், ஜெயகுமார், மாரிமுத்து, முள்ளக்காடு ஸ்ரீராம், மதன் செல்வகுமார், வேல்சாமி, சுப்புநாராயணன், சம்படி பழனி, திருத்துவ சிங், பால்துரை, ஜெபராஜ், மாரி, நீலம் நாராயணன், ஜேசுராஜ், சக்திவேல், கபடி கந்தன், கே.கே.பி. விஜயன், மிக்கேல், முனியசாமி, எம்.டி.ராஜா, கார்த்திகேயன், பொன்ராஜ் மற்றும் பால ஜெயம், சகாயராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு புரட்சித்தலைவருக்கு மரியாதை செலுத்தினர்.

வெள்ளி, 16 ஜனவரி, 2026

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். 109வது பிறந்தநாள் விழா

 தூத்துக்குடி: ஜன17

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். 109வது பிறந்தநாள் விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை சரியாக 10.00 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக அலுவலகம் முன்பும், அதன் பின்னர் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

thoothukudileaks

Thoothukudileaks


thoothukudileaks


thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை தாங்கினார். இதில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு புரட்சித்தலைவரின் புகழை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினர்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.  தமிழக அரசியலில் மக்கள் முதல்வராக உயர்ந்து சமூக நீதியும் மக்கள் நலத் திட்டங்களும் மூலம் கோடானுகோடி மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர் என நிகழ்ச்சியில் பேசப்பட்டு, அவரது வழியில் கட்சியினர் தொடர்ந்து சேவை செய்ய உறுதி எடுத்தனர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


செவ்வாய், 13 ஜனவரி, 2026

தூத்துக்குடி அய்யா வழி கோவில் (அகில பதி) வளாகத்தில் சமத்துவ பொங்கல்

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடியில் சமய நல்லிணக்க பொங்கல் விழா

தூத்துக்குடி, ஜன.13:

தூத்துக்குடியில் பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பில் சமய நல்லிணக்க பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை (13.01.2026) போல்பேட்டை பகுதியில் உள்ள அய்யா வழி கோவில் (அகில பதி) வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.







விழாவிற்கு அய்யா வழி பதி சார்பில் இராமகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து அனைத்து சமயத்தினரும் ஒன்றிணைந்து பொங்கலிட்டு, சமய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர். 



நிகழ்வில் கணேசன் மற்றும் கிருஷ்ணவேணி சிறப்பு உரையாற்றி, சமய நல்லிணக்கத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து அருட்பணி பென்சிகர் லூசன் அடிகளார், இஸ்லாமிய கூட்டமைப்பைச் சேர்ந்த சம்சுதீன், கிறித்தவ மறுமலர்ச்சி இயக்கத்தின் மா. தங்கையா மின்னல் அம்ஜத், ஜான் பிராயன்,  ஆறுமுகம், சாமுவேல் காந்தி சன் மாக்க குலம் நற்செய்தி நடுவத்தைச் சேர்ந்த மைக்கிலின் மேரி  உள்ளிட்டோர் வாழ்த்துரைகள் வழங்கி பேசினர்.





நிகழ்வின் முடிவில் தங்கையா நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியை பல்சமய உரையாடல் பணிக்குழு மற்றும் நற்செய்தி நடுவம், தூத்துக்குடி சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சனி, 10 ஜனவரி, 2026

தூத்துக்குடியில் நூல் வெளியீட்டு விழா – “புறம் பேசலாமா!”

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

செய்தி புகைப்படங்கள் அருணன் செய்தியாளர் 

தூத்துக்குடி :ஜன10

எழுத்தாளர் மின்னல் அம்ஜத் அவரின் புதிய நூலான “புறம் பேசலாமா!” என்ற நூல் வெளியீட்டு விழா தூத்துக்குடியில் சிறப்பாக நடைபெற்றது. 

சமூக, அரசியல், மனித உரிமை, தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல்வேறு தளங்களைச் சேர்ந்த பிரபலங்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு கலாபன் வாஸ் அவர்கள் (வயது 9-4), முன்னாள் Flying Officer (Rtd), இந்திய விமானப்படை தலைமை வகித்தார். தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் O.A. நாராயணசாமி  முன்னிலை வகித்தார்.

நூலைப் பெற்று மதிப்புரை வழங்கியவர்களாக அருட்திரு ஜேம்ஸ் விக்டர் (எ) சுந்தரி மைந்தன் (கிறித்துவ வாழ்வுரிமை இயக்கம்) மற்றும் பேராசிரியர் பாத்திமா பாபு (ஒருங்கிணைப்பாளர், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் – ASPM) ஆகியோர் கலந்து கொண்டு, நூலின் கருத்தாக்கம், சமூக விமர்சனம் மற்றும் எழுத்து நடையின் ஆழம் குறித்து பாராட்டினர்.

thoothukudileaks


விழாவில் அருட்தந்தை X.D. செல்வராஜ் அவர்கள் ஏற்புரை வழங்கினார். தொடர்ந்து PUCL மாவட்ட தலைவர் Dr. காயல் மெளலானா D.LII (USA), நமது தேசம் மாத இதழ் கௌரவ ஆசிரியர் யூ. அண்டோ, நெய்தல் எழுத்தாளர்கள் & வாசகர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் 


இரா. மாடசாமி, தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கத் தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

நூலின் முதல் பிரதியை செந்தமிழ் மன்ற மாநில தலைவர் ஷாஜஹான்  பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியை தங்கையா அவர்கள் (ஒருங்கிணைப்பாளர், இந்திய கிறித்தவ மறுமலர்ச்சி இயக்கம், தூத்துக்குடி மறைமாவட்டம்) தொகுத்து வழங்கினார்.

ஷாரா. முபாரக் (முதல்வர், ஷாரா கலை பயிற்சிப் பள்ளி) நன்றியுரை வழங்கினார்.

thoothukudileaks


நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக தாளமுத்து செல்வா (மாவட்ட செயலாளர், மக்கள் அதிகாரக் கழகம் – நூல் வெளியிடுபவர்கள்) செயல்பட்டார்.

நூலின் வடிவமைப்பை மை. காதர் பாட்சா (பிஸ்மி பிரிண்டர்ஸ், தூத்துக்குடி) செய்திருந்தார்.

மேலும் விழாவில் புரட்சி பாரதம் கட்சி, தமிழ்நாடு மக்கள் நல இயக்கம், AICCTU, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தாயக மக்கள் கட்சி, தமிழக மீனவ மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல், தொழிற்சங்க மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நூலாசிரியர் மின்னல் அம்ஜத் அவரை வாழ்த்தினர்.

சமூக சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ள “புறம் பேசலாமா!” நூல், வாசகர்களிடையே புதிய விவாதங்களை உருவாக்கும் என்ற நம்பிக்கையுடன் விழா நிறைவடைந்தது.

வெள்ளி, 9 ஜனவரி, 2026

தூத்துக்குடியில் தமிழ்தேசிய போராளி சி. பசுபதிபாண்டியன் 14ம் ஆண்டு வீர வணக்கம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

photo news by Arunan journalist 


தூத்துக்குடி : ஜனவரி 10

தமிழ்தேசிய போராளி சி. பசுபதிபாண்டியன் அவர்களின் 14ம் ஆண்டு வீர வணக்க தினம், ஜனவரி 10ஆம் தேதி தூத்துக்குடி அலங்காரதட்டை பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பெரும் எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற வீர வணக்கம் – குருபூஜை நிகழ்வில்,

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு எம்எல்ஏ, எஸ்.பி. சண்முகநாதன், ராஜேந்திர பாலாஜி, வி.எம். ராஜலட்சுமி, சித. செல்லபாண்டியன், கிருஷ்ணமூரளி, குட்டியப்பா எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பசுபதிபாண்டியனின் நினைவிடத்தில் மலர்தூவி, தீபம் ஏற்றி வீர வணக்கம் செலுத்தினர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


மேலும், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, தமிழ்தேசிய போராளியின் தியாகத்தை நினைவுகூர்ந்தனர்.

இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சி தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் மருதம் மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் நடத்தப்பட்டது.

சந்தனபிரியா பசுபதி பாண்டியர் B.A., மாநில பொதுச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நினைவிடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தமிழ்தேசிய உணர்வை வலியுறுத்தும் உரைகள் இடம்பெற்றன.



நிகழ்ச்சி முழுவதும் உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றதுடன், பசுபதிபாண்டியனின் போராட்ட வாழ்க்கையும், தமிழ்தேசிய விடுதலைக்கான அவரது அர்ப்பணிப்பும் நினைவுகூறப்பட்டது.





தமிழ்தேசிய போராளி சி. பசுபதிபாண்டியன் 14ம் ஆண்டு வீர வணக்கம்

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

செய்தி புகைப்படங்கள் அருணன் செய்தியாளர் 

ஜனவரி 10 – தமிழ்தேசிய போராளி சி. பசுபதிபாண்டியன் 14ம் ஆண்டு வீர வணக்கம்

தூத்துக்குடி:ஜன10

தமிழ்தேசிய போராளி சி. பசுபதிபாண்டியன் 14ம் ஆண்டு வீர வணக்க தினம் ஜனவரி 10ஆம் தேதி தூத்துக்குடி அலங்காரதட்டை பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பெரும் எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

thoothukudileaks

thoothukudileaks


இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சி தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் மருதம் மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் நடத்தப்பட்டது. 

சந்தனபிரியா பசுபதி பாண்டியர் B.A., மாநில பொதுச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நினைவிடத்தில் மலர்தூவி, தீபம் ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பினருடன், தமிழ்தேசிய போராளி பசுபதிபாண்டியன் அவரின் தியாகத்தை நினைவுகூர்ந்து பெரும் எழுச்சியுடன் வீர வணக்கம் செலுத்துவதற்காக பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த  முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள வருகை தர இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.








இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ்தேசிய உரிமைகள், சமூக நீதி மற்றும் மக்கள் நலனுக்காக போராடிய பசுபதிபாண்டியன்  நினைவு மீண்டும் உயிர்ப்புடன் நினைவுகூரப்பட்டது.

thoothukudileaks
தனியரசு எம்எல்ஏ நினைவிடத்தில்...