செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

எந்தப் பதவியில் இருப்பது முக்கியமல்ல அந்தப் பதவியில் இருந்து எதை முன்னேற்றினோம் என்பதே முக்கியம். இந்த மேயர் பதவி எனக்கு திருப்தி அளிக்கிறது 83 மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி உரை

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 


தூத்துக்குடி, பிப்ரவரி 25:

தூத்துக்குடி ஹோம் சயின்ஸ் கல்லூரியில் தமிழக முதல்வரின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி 83 மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

thoothukudileaks


விழாவில் மேயர் பேசுகையில்,... "கணினியின் மூலம் உலகம் முழுவதும் உள்ள அறிவு இன்று நம் கைகளில் வந்துவிட்டது. இது கடுமையான போட்டி நிறைந்த உலகம். கல்வி என்பது வெறும் மதிப்பெண் பெறுவதற்கல்ல — அறிவை வளர்ப்பதற்கானது. பெற்றோர்கள் கனவுகளுடன் பிள்ளைகளை கல்வி கற்க அனுப்புகிறார்கள். அந்தக் கனவை நாம் எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்று சிந்திக்க வேண்டும்" என்றார்.

உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து பேசிய மேயர்,...

thoothukudileaks


 தூத்துக்குடியில் பெண்களுக்கென்று மூன்று தனிப்பட்ட பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். 

மேலும் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை தவிர்க்கவும், மரங்கள் நடவும், சமூக பொறுப்புணர்வுடன் வாழவும் மாணவிகளை வலியுறுத்தினார்.

"எந்தப் பதவியில் இருப்பது முக்கியமல்ல — அந்தப் பதவியில் இருந்து எதை முன்னேற்றினோம் என்பதே முக்கியம். இந்த மேயர் பதவி எனக்கு திருப்தி அளிக்கிறது. இது ஒரு கடல் போன்றது. முடியாதது எதுவும் இல்லை — முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். அதற்கு என்னையே எடுத்துக்கொள்ளலாம்" என்று உரையாற்றினார்.

விழாவிற்கு முன்னதாக மாணவிகளிடம் "மடிக்கணினி கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று மேயர் கேட்டதற்கு, "ப்ராஜெக்ட் செய்வோம்!" என்று மாணவிகள் உற்சாகமாக பதிலளித்தனர்.

விழாவில் கல்லூரி முதல்வர் ரூபா, துணை முதல்வர் மதுரவள்ளி, செயலாளர் ரோசாகுட்டி, உதவி பேராசிரியர் மாரிதங்கம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.



தூத்துக்குடியில் புரட்சித்தலைவி ஜெயலலிதா 78வது பிறந்தநாள் விழா ஒபிஎஸ் அணி மா செ ஏசாதுரை தலைமையில் சார்பில் உற்சாகக் கொண்டாட்டம்

Tamil Nadu updates, photo news by Arunan journalist 

தூத்துக்குடி: பெ 24

தமிழக முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி ஜெயலலிதா 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் O. Panneerselvam  ஆணையின்படி, தூத்துக்குடி மாநகர் மாவட்டம் சார்பில் சிறப்பான விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ். ஏசாதுரை தலைமையில், மாநகர் மாவட்ட கழகம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாண்புமிகு ஜெயலலிதா  திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், மதிய உணவாக பிரியாணியும் வழங்கி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி லீக்ஸ்


அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி சத்திரம் பஸ் ஸ்டாப் அருகில் அமைந்துள்ள தமிழக முதல்வர் புரட்சி தலைவர் M. G. Ramachandran திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அங்கும் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

இவ்விழாவில் மாவட்டக் கழக இணை செயலாளர் உமா கண்ணன் (முன்னாள் மாமன்ற உறுப்பினர்), மாவட்டக் கழக துணைச் செயலாளர் பழனிச்சாமி பாண்டியன் (பட்டுகனி), கழக செயற்குழு உறுப்பினர் ஸ்ரீவைசந்திரா, வடக்கு பகுதி கழக செயலாளர் பொய்யாமொழி, மேற்கு பகுதி கழக செயலாளர் கே.எஸ். செல்லத்துரை, தெற்கு பகுதி கழக செயலாளர் அத்தி வெள்ளப்பாண்டி, மத்திய தெற்கு பகுதி கழகச் செயலாளர் வி.பி. முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், கருங்குளம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் குருசாமி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தருவை அந்தோணி ஜெபராஜ், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி கழக செயலாளர் இரா.இல. ஜெயராமன், மாவட்ட கலை பிரிவு செயலாளர் மற்றும் வட்டக் கழக செயலாளர் ஜெயபால், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தர்மசீலன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முத்துப்பட்டன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சுதாகர், மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஆறுமுகத்துரை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் மாரியப்பன் ஆகியோரும் பங்கேற்றனர்.

அத்துடன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் கமலக்கண்ணன் (முன்னாள் மாமன்ற உறுப்பினர்), பிளம்பர் இசக்கிமுத்து, ராமகிருஷ்ணன், துபாஷ் பட்டி வைரவன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் சுசீந்திரன், மாவட்ட பாசறை தலைவர் மகாராஜன், மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் முத்துமாலை, கருங்குளம் வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஐயப்பன், வட்டக் கழக செயலாளர் செல்வகுமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல்லா ஹசன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் சபிக்குமார் மற்றும் சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வு முழுவதும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாகக் கலந்து கொண்டு சிறப்பாகக் கொண்டாடினர்.

திங்கள், 23 பிப்ரவரி, 2026

தூத்துக்குடியில் புரட்சித் தலைவி ஜெயலலிதா 78-வது பிறந்த நாள் விழா முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் என்னென்ன செய்தார் முழு விவரம்

Tamil Nadu updates, 24-2-2026

photo news by Arunan journalist 

தூத்துக்குடி பெ 24

தூத்துக்குடியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், ஜெ. ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்த நாள் விழா இன்று (24.02.2026 – செவ்வாய்க்கிழமை) அதிமுக வர்த்தக அணி சார்பில் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

நள்ளிரவு 12 மணியளவில் பழைய பேருந்து நிலையம் முன்பு கேக் வெட்டி விழா தொடங்கப்பட்டது. பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கப்பட்டதுடன், விழா சிறப்பாக தொடங்கியது.

தூத்துக்குடி லீக்ஸ்




தூத்துக்குடி லீக்ஸ்

இதனைத் தொடர்ந்து இன்று 24-2-2026 காலை 9.30 மணியளவில் அண்ணா நகர் மெயின் ரோடு, டூவிபுரம் 5-வது தெரு சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி லீக்ஸ்


பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


 தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம், திரேஸ்புரம் பஜார், மட்டகடை பஜார், வட்ட கோயில், 2-ம் கேட் வடபத்திரகாளி அம்மன் கோயில் தெரு, லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லம், அண்ணா நகர் மெயின் ரோடு, 3-வது மைல் திருவிக நகர், பிரையன்ட் நகர் 12-வது தெரு, சுமங்கலி திருமண மண்டபம் அருகே, சத்யா நகர், எம்ஜிஆர் நகர், முத்தையாபுரம் தோப்பு தெரு உள்ளிட்ட இடங்களில் அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பிரியாணி விருந்து -குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!!!

மேலும், 10 ஆயிரம் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டதுடன், இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கி விழா சிறப்பிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் அசைவ உணவு வழங்கப்பட்டு மக்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, கிளை, வார்டு, வட்ட, தொழிற்சங்க நிர்வாகிகள், முன்னாள் மற்றும் இன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழா அனைத்தும் அதிமுக வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடியில் புரட்சித்தலைவி ஜெயலலிதா 78வது பிறந்தநாள் விழா – அதிமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம்

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி:பெ 24

மறைந்த தமிழக முதல்வர், இதய தெய்வம், புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் இன்று காலை 10 மணியளவில் சிறப்பான விழா நடைபெற்றது.

thoothukudileaks


தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஜெயலலிதா  உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, விழா கொண்டாடப்பட்டது.

thoothukudileaks


இதனைத் தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட்டன.

thoothukudileaks

thoothukudileaks


 நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாகமாக பங்கேற்றனர்.

மேலும், அதிமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நலத்திட்ட  நிகழ்ச்சிகளிலும் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் உற்சாகமாக ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

கிரீன் காப்பர்" என்பது அரிதாரம் பூசிய அவதாரம்! ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கண்டனம்

Tamil Nadu updates, Arunan journalist 

🗞️ தூத்துக்குடி லீக்ஸ் | 23 பிப்ரவரி 2026

தூத்துக்குடி  பெ 23

துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலி, இரு நீதிமன்றத் தீர்ப்புகள் — இதற்குப் பிறகும் நச்சு ஆலையை மீண்டும் திறக்க சூழ்ச்சி!

தூத்துக்குடி மாவட்ட மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தெருவிலும், நீதிமன்றத்திலும், அரசு அலுவலகங்களிலும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்றக் கோரி இடைவிடாது போராடி வருகின்றனர்.

thoothukudileaks
மதிமுக தலைவர் வைகோ உடன் ...


மே 22, 2018 அன்று அமைதியான போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மே 28, 2018 அன்று தமிழக அரசு ஆணையின்படி ஆலை மூடப்பட்டது.

ஆகஸ்ட் 18, 2020 அன்று சென்னை உயர் நீதிமன்றம், "சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் முரண்பாடு ஏற்படும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்" என தீர்க்கமான தீர்ப்பை வழங்கியது.

 இதை வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் சவால் செய்தபோது, "மறுபரிசீலனைக்கு எந்த முகாந்திரமும் இல்லை" என உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தியது.

மீண்டும்!!!

இந்நிலையில், வேதாந்தா நிறுவனம் இப்போது "கிரீன் காப்பர் — பசுமை மீள்தொடக்கம்" என்ற புதிய போர்வையில் ஆலையை மீண்டும் செயல்படுத்த முயற்சிக்கிறது என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கடுமையாக சாடியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையின் கள்ளத்தனம் !!!

இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், "பழைய கள்ளத்தனத்திற்கு புதிய மொந்தை போட்டு மாற்ற முயல்கின்றனர். 

2021 கோவிட் நெருக்கடி காலத்தில் ஆலை நிர்வாகம் நாள் ஒன்றுக்கு 1050 MT ஆக்சிஜன் தருவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் உண்மையில் 90 MT கூட உற்பத்தி செய்ய முடியவில்லை" என்று அம்பலப்படுத்தியுள்ளனர்.


மக்கள் இயக்கம் அரசிடம் வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான் — இந்த ஆலையை அடியோடு அகற்றுங்கள். "பசுமை மீள்தொடக்கம்" என்ற விஷப்பரீட்சையை மக்களின் போராட்டத்தின் மேல் திணிக்காதீர்கள்!

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks
தோழர் திரு உடன் 

thoothukudileaks
 சௌந்தரராஜன்
மாநில தலைவர்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை 

thoothukudileaks
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்  




முன்னாள் தமிழக முதல்வர் J. Jayalalithaa 78வது பிறந்தநாள் விழா முன்னாள் எம்.பி J. Nattarji தலைமையில் 78 பெண்கள் பங்கேற்ற கோலப்போட்டி!

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

முன்னாள் தமிழக முதல்வர் J. Jayalalithaa 78வது பிறந்தநாள் விழா

முன்னாள் எம்.பி J. Nattarji தலைமையில் 78 பெண்கள் பங்கேற்ற கோலப்போட்டி!

thoothukudileaks

தூத்துக்குடி பெ 24

தூத்துக்குடியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் J. Jayalalithaa  78வது பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கான சிறப்பு கோலப்போட்டி சிறப்பாக நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


இந்நிகழ்ச்சி அதிமுக முன்னாள் எம்.பி நட்டர்ஜி தலைமையில் J. Sam Nattarji , MGR இளைஞரணி ஏற்பாட்டில் 23.02.2026 திங்கட்கிழமை மதியம் 2.30 மணி முதல் 5.00 மணி வரை ASKR திருமண மஹாலில் நடைபெற்றது.


தூத்துக்குடி லீக்ஸ்
அப் பகுதி இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினர் 


78வது பிறந்தநாளை ஒட்டி, 78 பெண்கள் ஆர்வமுடன் கோலப்போட்டியில் பங்கேற்று, கலைநயத்துடன் கோலங்கள் அமைத்து பார்வையாளர்களை கவர்ந்தனர். பெண்களின் பங்கேற்பு நிகழ்ச்சிக்கு சிறப்பூட்டியது.

போட்டியில்

🥇 முதல் பரிசு – முருகேஸ்வரி (₹5000)

🥈 இரண்டாம் பரிசு – திலகவதி

🥉 மூன்றாம் பரிசு – காமாட்சி மற்றும் மகாதேவி

மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள்  தட்டு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பெண்களின் உற்சாகம் மற்றும் ஒற்றுமை பாராட்டுக்குரியதாக இருந்தது. ஜெயலலிதா அவர்களின் நினைவுகளை போற்றும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி தூத்துக்குடியில் கவனம் ஈர்த்தது.

சசிகலா புஷ்பா, அந்தோனி கிரேஸ் மீது பாய்ச்சல் "அதிரடி அரசியல் ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள்!மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி பேச்சு!"

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி  photo Arunan journalist 

news by sunmugasuthram press club president 

தூத்துக்குடி, பிப்ரவரி 23:

தூத்துக்குடியில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடியாக பேசினார். வடக்கு மாவட்ட செயலாளரும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முன்னாள் அதிமுக மேயர்களான சசிகலா புஷ்பா மற்றும் அந்தோனி கிரேஸ் ஆகியோர் மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை வைத்து அவர் ஆவேசமாக கொளுந்துவிட்டு எரிந்தார்.

thoothukudileaks


ரீல் புகழ் சசிகலா புஷ்பா மீது மேயர் பாய்ச்சல்!

சமூக வலைதளங்களில் ரீல் சுற்றுவதில் புகழ்பெற்ற முன்னாள் மேயரும் முன்னாள் எம்பியுமான சசிகலா புஷ்பா மீது மேயர் ஜெகன் பெரியசாமி கடும் விமர்சனங்களை கொட்டினார்.

"2014 வரை மேயராக இருந்த சசிகலா புஷ்பா இந்த ஊருக்கு என்ன செய்தார்? ஒரு மணி நேரத்தில் தண்ணீர் கொண்டுவந்தேன் என்கிறார். 284 கோடி ரூபாய் குடிநீர் சப்ளைக்காக ஒதுக்கப்பட்ட நிதி இன்று வரை பயனற்றுக் கிடக்கிறது. அந்த பணியை நாம்தான் நிறைவேற்றி வருகிறோம். 

அவரது ஆட்சியில் மழைக்காலத்தில் இரண்டு மாதங்கள் பள்ளிக்கூடங்களே திறக்காமல் மூடிக்கிடந்தது. தற்போது அந்த நிலையே இல்லை" என்று மேயர் கூறினார்.

தற்போது பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவராக இருக்கும் சசிகலா புஷ்பா, தாம் இருக்கும் கட்சிக்கும் உதவி செய்யவில்லை என்று நையாண்டி செய்த மேயர், "278 கோடி செலவில் 32 குடிநீர் தொட்டிகள் அமைத்து 10 வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவது நாம்தான். 

மாநகராட்சி அலுவலகத்திற்கு மாதம் ஒரு நாள் மட்டும் வந்த சசிகலா புஷ்பா இப்போது என்ன பேசுகிறார்?" என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

கட்டப்பஞ்சாயத்து அந்தோனி கிரேஸ் மீது கடுங்கோபம்!

முன்னாள் மேயர் அந்தோனி கிரேஸ் மீதும் மேயர் வெடித்தார். "அந்தோனி கிரேஸ் மேயராக இருந்தபோது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்காகவே மேயர் அறைக்குள் தனி அறை அமைத்தார்கள். 

பணி நியமனம் தருவதாக கூறி 10 பேரிடம் ஆளுக்கு 10 லட்சம் ரூபாய் வாங்கி பணி ஆணையே வழங்கவில்லை. பாவம், அந்த ஏழை மக்கள் செருப்பு தேய அலைந்தது தான் மிச்சம். பின்னர் ஆணையர் ராஜமணிதான் அவர்களுக்கு நீதி வழங்கினார்" என்று வெளிப்படையாக கூறினார்.

மேலும் "ஒரு ஏக்கர் அரசு இடத்தை கைப்பற்ற இறுதி முயற்சி செய்து வருகிறார். 'மூன்று மாதத்தில் அந்த இடத்தை மீட்போம்' என்று பேசுகிறார். நான் உறுதியாக சொல்கிறேன் — ஒரு படி மண்ணு கூட உன்னால் எடுக்க முடியாது!" என்றார் மேயர்.

பிஜேபி வக்கீலுக்கும் எச்சரிக்கை!

பிஜேபியில் அரசு வக்கீலாக இருக்கும் சண்முகசுந்தரம் தேவையில்லாமல் தெப்பக்குளம் பற்றி பேசுவதாக குறிப்பிட்ட மேயர், "140 வருட வரலாற்றை தெரியாமல் பேசுகிறார். 

அவரது ஆதரவாளர் ஒருவரே அந்த இடத்தை ஆட்டை போட்டு வைத்துள்ளார். இதுவரை மாநகராட்சி பகுதியில் 50 கோடி மதிப்புள்ள அரசு இடங்களை நாம் மீட்டுள்ளோம். இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள்" என எச்சரித்தார்.

வெற்றி இலக்கு 200 தொகுதி!

பொதுக்கூட்டத்தில் தொண்டர்களை ஊக்கப்படுத்திய மேயர், "ஒவ்வொருவரும் 50 வாக்குகள் திமுகவிற்கு கொண்டு வர வேண்டும். 200 தொகுதி நமது இலக்கு. 280 பாகம் இருந்த இடத்தில் 360 பாகமாக மாறிவிட்டது. எந்த சலசலப்புக்கும் நான் அஞ்ச மாட்டேன். அதிரடி அரசியல் ஆரம்பித்தால் உங்களால் தாங்க முடியாது — குற்றம் சொல்வதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள்!" என்று எதிர்க்கட்சியினரை நேரடியாக சவால் விட்டார்.

— தூத்துக்குடி லீக்ஸ் சிறப்பு செய்தி