தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி Tamil Nadu updates
photo news by Arunan journalist
தூத்துக்குடி, ஜூன் 15:
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக அரசியல் அழுத்தமின்றி, நடுநிலையான மற்றும் சட்டப்படியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ..
சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாலியல் குற்றச்சாட்டு எதுவாக இருந்தாலும் அது சட்டப்படி, மரியாதையுடன் மற்றும் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அவர்களின் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும்.
மனித நேயம்!!!
அதேநேரத்தில், விசாரணை நிறைவடைவதற்கு முன்பே ஒரு குடும்பத்தையே குற்றவாளி குடும்பமாக சித்தரிப்பதும், பெண்களை சமூகத்தில் அவமானப்படுத்துவதும், அரசியல் மோதல்களுக்குள் சாதாரண குடும்பங்களை இழுத்துச் செல்லுவதும் சட்டநீதிக்கும் மனிதநேயத்திற்கும் எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யார் குற்றவாளி, யார் குற்றமற்றவர் !!! நீதி மன்றம் தான் முடிவு செய்யும்!!!
இந்த வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான அரசியல் மோதலாக விவகாரத்தை மாற்றும் முயற்சிகள் கவலை அளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
யார் குற்றவாளி, யார் குற்றமற்றவர் என்பதை முடிவு செய்ய வேண்டியது ஊடகங்களோ, அரசியல் மேடைகளோ அல்ல; காவல்துறையின் விசாரணையும் நீதிமன்றத்தின் தீர்ப்பும்தான் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மன உளைச்சல் !!!
மேலும், அரசியல் பேட்டிகள் மற்றும் சமூக வலைதள விவாதங்களால் பாலசுப்பிரமணியன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் சமூக அவமானத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்கள் சமூக தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படக் கூடாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பந்தபடாத ஒரு பெண்ணின் பெயரும் இந்த வழக்குடன் தொடர்புபடுத்தி பேசப்படுவதாக கூறப்படும் நிலையில், தனக்கு எந்த பாலியல் குற்றமும் நடைபெறவில்லை என்றும், தனது பெயரை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் தெரிவித்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு !!!
அவரது வாக்குமூலம் காவல்துறை அல்லது நீதித்துறை நடுவர் முன்னிலையில் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், அவருக்கு எந்த தரப்பிலிருந்தும் மிரட்டல், அழுத்தம் அல்லது அவதூறு ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
"நாங்கள் யாரையும் காப்பாற்ற வரவில்லை. யாரையும் முன்கூட்டியே குற்றவாளி என்றும் கூற வரவில்லை. அரசியல் அழுத்தமில்லாத, ஊடக விசாரணை இல்லாத, நடுநிலையான சட்ட விசாரணை நடைபெற வேண்டும் என்பதே எங்களின் ஒரே கோரிக்கையாகும்" என்று டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.
உண்மையை கண்டறிய வேண்டும்!!!
மேலும், பாலியல் வழக்குகளில் புகார் அளித்தவரின் அடையாளமும் மரியாதையும் பாதுகாக்கப்பட வேண்டும். அதேபோல், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பப் பெண்கள் மற்றும் சாட்சிகளாக முன்வரும் பெண்களும் அவமானப்படுத்தப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் கருத்து வேறுபாடுகளின் பெயரில் குடும்ப உறுப்பினர்களும் பெண்களும் பாதிக்கப்படக் கூடாது என்றும், காவல்துறை எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் இடமளிக்காமல் சட்டத்தின் அடிப்படையில் உண்மையை கண்டறிய வேண்டும் என்றும் சட்ட உரிமைகள் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பாக்ஸ் செய்தி
இரண்டு பெண்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்ற எண் 20/2026 வழக்கு தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டு பெண்கள் தனித்தனியாக மனு அளித்துள்ளன
ஒருவர்
தனது மனுவில், தனக்கு எந்தவிதமான பாலியல் துன்புறுத்தல் சம்பவமும் நடைபெறவில்லை என்றும், தனது பெயரை பயன்படுத்தி பொய்யான தகவல்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் மீடியாக்களில் பரப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பொய்யான வாக்குமூலம் அளிக்க மிரட்டல், ஆசை வார்த்தைகள் கூறி தூண்டுதல், அவதூறு பரப்புதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். தனது உண்மை வாக்குமூலத்தை சட்டப்படி பதிவு செய்து, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல்,
மற்றொரு ஒருவர்
தனது மனுவில், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாலசுப்பிரமணியனின் மனைவி எனத் தெரிவித்ததுடன், வழக்கு தொடர்பாக அரசியல் அழுத்தம், மீடியா பேட்டிகள் மற்றும் சமூக வலைத்தள அவதூறுகளால் தனது குடும்பத்தினர் மனஉளைச்சலுக்கும் சமூக அவமானத்திற்கும் ஆளாகி வருவதாக கூறியுள்ளார்.
தாமதம் ஏன்???
மேலும், புகாரின் பின்னணியில் பணப் பரிவர்த்தனை தொடர்பான விவகாரங்கள் உள்ளனவா என்பதையும், புகார் அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணங்களையும் நடுநிலையாக விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கில் உண்மை நிலை சட்ட விசாரணை மற்றும் நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே வெளிவர வேண்டும் என்றும், தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரு மனுக்களிலும், எந்தவிதமான அரசியல் அழுத்தமும் இன்றி, நடுநிலையான மற்றும் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
.



