புதன், 4 பிப்ரவரி, 2026

தைப்பூசத் திருவிழாவில் மாபெரும் அன்னதான விழா அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் ஏற்பாடு

குளித்தலை, பிப்ரவரி : பெ 4

தமிழ்நாட்டில் பழனிக்கு அடுத்தபடியாக சிறப்புமிக்க தைப்பூசத் திருவிழா கரூர் மாவட்டம் குளித்தலையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றங்கரையில் எட்டு ஊர் சுவாமிகள் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பங்கேற்று, பக்தர்களின் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டனர்.

thoothukudileaks

thoothukudileaks


இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தவாரி செய்து, சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து, அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாபெரும் அன்னதான விழா தொடர்ந்து இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று வந்து அன்னம் பெற்று சென்றனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக சங்கத்தின் தேசிய இணை செயலாளர் கிராமியம் நாராயணன் மற்றும் மாநில கௌரவ செயலாளர் வாழைக்காய் வியாபாரி சேட்டு ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த மாபெரும் அன்னதான விழாவுக்கான ஏற்பாடுகளை, சங்கத்தின் நிறுவனர் அருள்வேலன் ஜி அவர்களின் ஆலோசனைப்படி, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள்

N. ராமகிருஷ்ணன், P. கருணாநீதி, தியானேஷ், சரவணன், வெங்கடேஷ், சந்தோஷ், வீரமணி, தர்மராஜ், S. சதீஷ்குமார், ரவி, முகிலன், அர்ச்சகர் விஷ்ணு, சுந்தரேசன், வரகூர் மணி, மதியழகன், செந்தில் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

thoothukudileaks

thoothukudileaks



தூத்துக்குடி மாநகராட்சி வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: பெ 4

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று காலை 12மணியளவில் தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks




முகாமிற்கு மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த முகாமில் பொதுமக்கள் தரப்பில் சொத்து வரி தொடர்பான கோரிக்கைகள், குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றம், பிறப்பு–இறப்பு சான்றிதழ் திருத்தங்கள் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டன. உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பொதுமக்கள் சேவைகளை பெற்றனர்.

இன்றைய முகாமில் பொதுமக்கள் தரப்பில் மொத்தம்  24 மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பரிசீலனைக்காக ஒப்படைக்கப்பட்டன.

மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

திங்கள், 2 பிப்ரவரி, 2026

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல் பரபரப்பு

Tamil Nadu updates,3-2-2026

 photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 


தூத்துக்குடி, பிப்ரவரி 3:

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மைய முடிவின் படி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியில் உள்ள ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம் சார்பில் இன்று காலை 12 மணியளவில் பழைய பேருந்து நிலையம் – ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்  தோழர் கனகவேல்  தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், திமுக அரசின் கவனத்திற்கு ஊழியர்களின் கோரிக்கைகளை கொண்டு செல்லும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திடீர் சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் காவல்துறை தரப்பில் பரபரப்பு ஏற்பட்டது.

thoothukudileaks


இந்த மறியல் போராட்டத்தில்

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ஜெக வீரபாண்டியன்,

ஓய்வூதிய பாதுகாப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் எபனேசர் டேனியல்,

தன்ராஜ், ஜெயலட்சுமி உள்ளிட்டோர் மற்றும் 60-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் கைது செய்து, மினிபஸ் மூலம் தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.


தென்னாட்டு காந்திபேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினம் – தூத்துக்குடியில் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் 3-2-2026

தூத்துக்குடி:பெ 3 :

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் “தென்னாட்டு காந்தி” என போற்றப்பட்ட முன்னாள் முதல்வரும், திராவிட இயக்கத்தின் பேரறிஞருமான அண்ணாவின் 57வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

thoothukudileaks

thoothukudileaks


இதனை முன்னிட்டு அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் அறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடியில் பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு, தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், கழக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, பேரறிஞர் அண்ணாவின் புகழைப் போற்றி மரியாதை செலுத்தினர்.


ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுகவிடம் இருந்து கைவிட்டு போகிறதா? எடப்பாடியார் கவனிப்பாரா? தொண்டர்கள் கவலை

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜனவரி 31 :

2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தமிழக முழுவதும் அஇஅதிமுக தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளான ஜனவரி 17 அன்று, அஇஅதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, முதற்கட்டமாக ஐந்து முக்கிய வாக்குறுதித் திட்டங்களை அறிவித்தார்.



அந்த திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில், துண்டுப் பிரசுரங்கள் மூலம் தேர்தல் அறிக்கையை விளக்கி வழங்க வேண்டும் என கட்சி தலைமையகம் உத்தரவிட்டது. அதன்படி தமிழக முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அஇஅதிமுக தலைவர்கள் ஒன்றிணைந்து களத்தில் இறங்கி, பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குறுதி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.


ஆனால் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மட்டும் வேறுபட்ட நிலை உருவாகி வருவது கட்சி தொண்டர்களிடையே பெரும் விவாதமாகியுள்ளது. 


தூத்துக்குடி தெற்கு மாவட்ட அஇஅதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தனது ஆதரவாளர்களுடன்  துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வருகிறார். 


அதே நேரத்தில், வர்த்தக அணி மாநில செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியனும் தனி அணியாக  களமிறங்கி பிரசாரம் செய்து வருகிறார்.


thoothukudileaks


ஏற்கனவே ஒருமுறை வழங்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் மீண்டும் தனித்தனியாக பிரசுரங்கள் வழங்கப்படுவதால், தூத்துக்குடி தொகுதியில் கட்சிக்குள் ஒற்றுமை இல்லை என்ற தோற்றம் உருவாகி வருகிறது என தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். 

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் அனைவரும் மனக்கசப்புகளை மறந்து ஒன்றிணைந்து களத்தில் இறங்கி தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மட்டும் முன்னாள் அமைச்சர்கள் தனித்தனியாக செயல்படுவது கட்சி வளர்ச்சிக்கு பாதகமாகும் என தொண்டர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

“தூத்துக்குடி தொகுதியை அஇஅதிமுக கைவிட்டு விடுகிறதா?” என்ற கேள்வி தற்போது தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையை கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவனித்து, அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே மேடையில் கொண்டு வந்து தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பாரா? என்ற எதிர்பார்ப்பும், அதே நேரத்தில் கவலையும், தூத்துக்குடி அஇஅதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

thoothukudileaks
இது முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பெயரில் பொதுமக்கள் இடம் வழங்கிய துண்டு பிரசுரம் 



thoothukudileaks
இது முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் பெயரில் பொதுமக்கள் இடம் வழங்கிய துண்டு பிரசுரம் 

இத்தனைக்கும்... இவர் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட அதிமுக தலைமைக்கு விண்ணப்பம் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது . 

சனி, 31 ஜனவரி, 2026

ஆயுதங்களை காட்சிபடுத்தி வீடியோ, ரீல்ஸ் செய்வோர்ருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் கடும் எச்சரிக்கை ஜனவரி மாதத்தில் மட்டுமே இது தொடர்பாக 15 வழக்குகள் கைது நடவடிக்கை!!!

 தூத்துக்குடி, ஜனவரி 31 :

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் வாள், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றம் செய்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி, சாதி – மத மோதலை தூண்டும் செயல்களில் ஈடுபடுவோர்மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சிலம்பரசன்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

thoothukudileaks


வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (X), முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆயுதங்களை காட்சிபடுத்தி வீடியோ அல்லது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் இருபிரிவினருக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளடக்கங்களை பதிவிடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2026 ஜனவரி மாதத்தில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, துரிதமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சட்டப்படி குற்றம்!!!

 மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆயுதங்களை காட்சிபடுத்தி வீடியோ, ரீல்ஸ் அல்லது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது சட்டப்படி குற்றமாகும். 

கடும் எச்சரிக்கை!!!

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் யாரும் இவ்வகை குற்றச்செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . சிலம்பரசன்  பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


வெள்ளி, 30 ஜனவரி, 2026

ஓய்வூதியர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் ஜி.எம். அலுவலகம் முன்பு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்

Tamil Nadu updates, 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜனவரி 31:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு (REWA) சார்பில், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவை பணபலன்கள் மற்றும் பென்ஷன் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இன்று காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி ஜி.எம். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks


thoothukudileaks


thoothukudileaks


“தமிழக அரசே… நிர்வாகமே…! நீதிமன்ற தீர்ப்புப்படி பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு இணையான DA-வை நிலுவையுடன் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் அன்றே அனைத்து பணபலன்களையும் வழங்க வேண்டும். ஒப்பந்த உயர்வை பென்ஷனில் சேர்த்து வழங்க வேண்டும். மருத்துவப் படி ரூ.300 வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். வாரிசு வேலை கல்வித் தகுதிக்கேற்ப தாமதமின்றி வழங்க வேண்டும்.


 2024 ஆகஸ்ட் முதல் வழங்க வேண்டிய பணபலன்களை 18% வட்டியுடன் வழங்க வேண்டும். ஓய்வூதியர் மரணமடைந்தால் குடும்பத்தினருக்கு ஈமக்கிரிய நிதி ரூ.50,000 வழங்க வேண்டும்” என பல்வேறு கோரிக்கைகள் முழங்கின.

கோரிக்கை மனு வழங்கல்

ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு (REWA) சார்பில்,

உயர்திரு போக்குவரத்து அமைச்சர் அவர்களுக்கு

(தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் – தூத்துக்குடி மண்டலம்) கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

அதில்,

ஓய்வு பெற்ற தினத்தன்றே அனைத்து பணபலன்களையும் வழங்க வேண்டும்.

2024 ஆகஸ்ட் முதல் நிலுவைத் தொகைகளை 18% வட்டியுடன் வழங்க வேண்டும்.

பணி விடுப்பு ஊதியம் (EL சரண்டர்) ஓய்வு நாளிலேயே வழங்க வேண்டும்.

பணி ஓய்வு ஊதிய ஆடரை (Retirement Order) ஒரு ஆண்டுக்குள் முழுமையாக வழங்க வேண்டும்.

கிராஜுவிட்டி ஆடரை ஓய்வு நாளிலேயே வழங்க வேண்டும்.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

பணியின் போது இறந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு கல்வித் தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும்.

ஓய்வூதியர் குறை தீர்ப்பு கூட்டத்தை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நடத்த வேண்டும்.

பணமில்லா மருத்துவ வசதி அமல்படுத்த வேண்டும்.

31.09.2019 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு தாமதமாக வழங்கப்பட்ட ஓய்வூதியத்தால் ஏற்பட்ட கிராஜுவிட்டி மற்றும் EL சரண்டர் வித்தியாசத் தொகைகளை வழங்க வேண்டும்.

ஓய்வூதியர் மரணத்திற்கு பின் சான்றிதழ் தாமதம் காரணமாக வாரிசுக்கு வழங்கப்படாத பென்ஷனை உடனே வழங்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றம் PRWS வழக்கில் உத்தரவிட்டதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

என வலியுறுத்தப்பட்டது.

தலைமை – உரைகள்

ஆர்ப்பாட்டத்திற்கு தானுமூர்த்தி தலைமை வகித்தார்.

முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

எட்டப்பன் (மாநில குழு உறுப்பினர்), தானுமாலையான் (கிளை பொருளாளர்), சின்னதம்பி (இறை செயலாளர்), செல்வம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

மேலும் மது சேகர், பழனி, பொன்ராஜ், சிங்கராஜ், செல்வராஜ், சிவதானுதாஸ் (மாநில உதவி செயலாளர்), பெலிக்ஸ் (கிளை தலைவர்), சகாயராஜ், மாரிமுத்து, சுப்பையா, செல்வபெருமாள், மாணிக்கம், ஜானகென்னடி, பால்ராஜ், சண்முகராஜன், சுபேர், வீரப்பன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.