தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி
தூத்துக்குடி டிச11
தூத்துக்குடி மண்ணின் மைந்தர் மகாகவி பாரதியாருக்கு ரோஜாப்பூ மாலை… பத்திரிகையாளர்கள் புதிய உறுதி மொழி!!!
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு
தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி
பாரதியின் தீப்பொறி வார்த்தைகளை நினைவூட்டும் விதமாக
செம்மையாக நடந்தது.
தூத்துக்குடி மண்ணின் மைந்தர்கள் வ உ சிதம்பரனார் உடன் ஆங்கிலேயர் களை எதிர்த்து நின்ற பத்திரிகை போராளி மகாகவி பாரதியார்!!!
முதலில் பாரதியாரின் படத்திற்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து
மரியாதை செலுத்திய பிரஸ் கிளப் உறுப்பினர்கள்—
தலைவர் த. சண்முகசுந்தரம், துணை தலைவர் சிதம்பரம்,
உறுப்பினர்கள் இசக்கி ராஜா, மாணிக்கம், மாரிமுத்து உள்ளிட்டோர்—
தூத்துக்குடி மண்ணின் பெருமை மகாகவிஞருக்கு மாலை அணிவித்தனர்.
பின்னர் உரையாற்றிய செய்தியாளர் த. சண்முகசுந்தரம்,
“பாரதியார் பிறந்த நாள் என்பது கவிஞரின் பிறந்த நாள் மட்டுமல்ல…
பத்திரிகையாளர்களின் எழுச்சி நாள்!
சாதி, மதம், பாகுபாடுகள் அனைத்தையும் தகர்த்தவர் பாரதி.
பெண்ணுரிமை முதல் தேசபக்தி வரை
சிந்தனைக்கு நெருப்பூட்டியவர்,” எனக் கூறினார்.
அவர் மேலும்,
“பாரதியின் வரிகள் இன்னும் உயிரோடு இருக்கிறது.
நாம் அவர் வாழ்ந்த காலத்தில் இல்லை…
ஆனால் அவர் எழுதிய காலத்தை இன்று நாம்தான் வாழ்கிறோம்!
உண்மை செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது
எங்கள் கடமை மட்டும் அல்ல… நமக்கு பாரதியாரின் கட்டளை!”
எனச் சொன்னார்.
செய்தியாளர்கள் ஒன்றிணைந்து
உண்மை மற்றும் நேர்மையைக் காத்து செயல்பட வேண்டும் என
உறுதி மொழி பெறும்படி அவர் அழைப்பு விடுத்தார்.????
– ரோஜா அருணன்
செய்தியாளர், தூத்துக்குடி














