சனி, 27 டிசம்பர், 2025

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் 2026 புத்தாண்டு விழா – அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் & 2026 புத்தாண்டு விழா – அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி, டிச.28:

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் 2026 புத்தாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று (28.12.2025, ஞாயிற்றுக்கிழமை) காலை 12 மணியளவில் விழா நடைபெற்ற

thoothukudileaks



இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். உடன் திமுக தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில்,....

“‘மாற்றுத்திறனாளி’ என்ற சொல்லை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி. மாற்றுத்திறனாளிகள் நலனில் உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு வருவது திமுக அரசே. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் மீது அன்பும் கவனமும் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளி பயனாளர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ளவர்கள் இதனை பெற்றுக்கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒன்றிணைந்து கலந்து கொண்டதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்,” என தெரிவித்தார்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


கிஃப்ட் பரிசு வழங்கல் 

இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் மகளிர் சங்கம் சார்பில், ஷெர்லி மற்றும் மோசஸ் (அன்ன ராஜன்) முன்னிலையில், விழாவில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அமைச்சர் கீதா ஜீவன் கிப்ட் பரிசுகளை வழங்கினார்.

அமைச்சர் கீதா ஜீவன் -க்கு கலைக்குழு வரவேற்பு!!!

நிகழ்ச்சி முன்னதாக சகாயம் தலைமையிலான கலைக்குழு அமைச்சர் கீதா ஜீவனுக்கு மேளதாளத்துடன் கலைக்குழுவினர் சிறப்பான வரவேற்பு செய்திருந்தனர்.

thoothukudileaks

thoothukudileaks


இந்த நிகழ்ச்சியை மாற்றுத்திறனாளிகள் மகளிர் சங்கம் சார்பில் IS. ஷெர்லி மற்றும் J. மோசஸ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். விழா முழுவதும் உற்சாகமும், சமூக ஒற்றுமையும் நிறைந்ததாக நடைபெற்றது.


இரவு முழுவதும் இருசக்கர வாகனத்தில் மாநகரப் பகுதிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் – பொதுமக்கள் வியப்பு

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடி, டிசம்பர் 27: 

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் தெருவிளக்குகள் எரியாமல் சாலைகள் இருளில் மூழ்கியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்த புகாரை அடுத்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் நேரடியாகச் சென்று மாநகரம் முழுவதையும் ஆய்வு செய்தார்.



video 

காரில் சென்றால் பிரச்சினைகளை சரியாகக் கண்டறிய முடியாது என்ற எண்ணத்தில், இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டு இரவு நேரத்தில் சுமார் இரண்டு மணி நேரம் மாநகரின் பல்வேறு பகுதிகளை தெருத்தெருவாகச் சென்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, எந்தப் பகுதிகளில் தெருவிளக்குகள் எரியவில்லை என்பது குறித்த குறிப்புகளை எடுத்துக்கொண்ட மேயர், சாலைகளின் நிலை, சாலை விரிவாக்கம், கழிவுகள், குப்பைகள், மணல் தீட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் நேரடியாகக் கண்டறிந்தார்.

ஆய்வின் அடிப்படையில், முக்கிய சாலைகளில் எரியாத மின்விளக்குகள் கணக்கெடுக்கப்பட்டு, உடனடியாகப் பொருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய பொறுப்பை உணர்ந்து செயல்படும் விதமாகவும், உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனையின்படியும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னெடுப்பிலும் மேயர் ஜெகன் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரவு நேரத்தில், பாதுகாப்பு அணியுடன் கூட இல்லாமல், இருசக்கர வாகனத்தில் மாநகரம் முழுவதும் சுற்றிப் பார்த்த மேயர் ஜெகனின் இந்த திடீர் ஆய்வை பார்த்த பொதுமக்கள் வியப்படைந்தனர். 

மேலும், மேயர் இரவு நேரத்தில் மாநகரைப் பார்வையிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.



விஜய் யார் கட்டுப்பாட்டில்? நடிகை திரிஷாவிடம் கேட்டால் ? திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் அதிரடி பேட்டி

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

விஜய் யார் கட்டுப்பாட்டில்? நடிகை திரிஷாவிடம் கேட்டால் தெரியும் :
திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் பேட்டி


தூத்துக்குடி : டிச 27
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறுவது உறுதி என திமுக பிரமுகரும் திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வக்குமார் தெரிவித்தார். தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனை கூறினார்.



தமிழக வெற்றிக்கழகத் தலைவரும் நடிகருமான விஜயின் முன்னாள் மேலாளராக இருந்த பி.டி.செல்வக்குமார், சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது அவர் கூறியதாவது :
திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், அனைத்து நலத்திட்டங்களும் திட்டமிட்டு அறிவிக்கப்பட்டு, முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைவரையும் அரவணைத்து ஆட்சி நடத்துவதால் பொதுமக்கள் பல்வேறு வகையில் பயனடைந்து வருகின்றனர். இதன் காரணமாகவே 2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, தாய், தந்தையர்களைப் போல உழைத்த பழைய நிர்வாகிகளை ஓரங்கட்டிவருகிறார். ஜெயசீலன் உள்ளிட்ட பலரும் தற்போது அவருடன் இல்லை. 


"தமிழக வெற்றிக்கழகத்தில் பெண்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை. பெண்களை ஏளனமாக பார்க்கும் போக்கு உள்ளது. கட்சியில் சில மாபியா கும்பல்களின் ஆதிக்கம் காரணமாக கட்சி பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது".

"விஜய்க்கு பால் அபிஷேகம் செய்தவர்கள், அவருக்காக உழைத்தவர்கள் யாருக்கும் இன்று மரியாதை இல்லை. தூத்துக்குடியில் அஜிதா ஆக்னல் என்ற பெண் அவரை சந்திக்க முயன்றபோது, மூன்று நிமிடம் கூட ஒதுக்கி அவரது குறைகளை கேட்கவில்லை. அந்த சமயத்தில் பின்பக்கமாக ஏறி குதித்துப் போனவர் புஸ்ஸி ஆனந்த். இதன் தொடர்ச்சியாக அந்த பெண் தூக்க மாத்திரைகளை உட்கொண்ட சம்பவம் வருத்தமளிக்கிறது "





தமிழகம் முழுவதும் 20 மாவட்ட செயலாளர்கள் விஜய் மீது அதிருப்தியில் உள்ளனர். அவரை சுற்றியிருப்பவர்களுக்கு பணம்தான் முக்கியமாக உள்ளது. விஜய் கண்ணும் கருத்துமாக செயல்படவில்லை.


ஒரு பெண் நேரில் வந்து சந்திக்க விரும்பும் போது கூட பார்க்காமல் செல்வது, அவர் யாரைத்தான் பார்ப்பார் என்ற கேள்வியை எழுப்புகிறது.

திமுகவை “தீய சக்தி” என கூறும் விஜய், உண்மையான தீய சக்தி யார் என்றால் அவர் தான். 200 கோடி சம்பளத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததாக கூறுகிறார். ஆனால் அதற்கு முன்பு 100 கோடி ரூபாயையாவது பொதுமக்களுக்கு நலத்திட்டமாக வழங்கியுள்ளாரா? என கேள்வி எழுப்பினார்.



"சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள ஆறுகளை சுத்தப்படுத்த 15 கோடி ரூபாய் செலவில் செய்யலாம் என நான் கூறியபோதும், அதனை அவர் செய்யவில்லை. “விஜய் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அதனை நடிகை திரிஷாவிடம் கேட்டால் தான் தெரியும் என பதிலளித்தார்."

தற்போது வரை பூத் கமிட்டிகள் வலுப்படுத்தப்படவில்லை. “ஜனநாயகன்” திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறுவதால் அனைத்து மாவட்ட செயலாளர்களும் அங்கு சென்றுவிட்டனர். இதனால் எஸ்.ஐ.ஆர். வாக்காளர் சேர்க்கை முகாம்களில் கூட பணியாற்ற ஆட்கள் இல்லை. இதனால் பாதிக்கப்படுவது தமிழக மக்கள் தான்.

நடிகை சினேகா நமீதா!!!

நடிகை சினேகா, நமீதா, முன்பு சில்க் ஸ்மிதா வந்தபோது கூட்டம் திரண்டது போலவே நடிகர்கள் வந்தால் கூட்டம் திரள்வது இயல்பானது. இதைப் பார்த்து விஜய் முதலமைச்சராகிவிடலாம் என்ற மாயையில் இருக்கிறார். ஆனால் திமுக மக்கள் நலத் திட்டங்களை அக்கறையுடன் செயல்படுத்தி வருகிறது. விஜய் கட்சியில் வசூல் வேட்டை தான் நடைபெறுகிறது.


தற்போது 20 மாவட்ட செயலாளர்கள் என்னிடம் தொடர்பில் உள்ளனர். பொங்கலுக்குப் பிறகு அவர்களை திமுகவில் இணைக்கும் விழா நடைபெறும். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஜூலை–ஆகஸ்ட் மாதங்களில் விஜய் மீண்டும் படப்பிடிப்புக்கு செல்வார்.


 “ஜனநாயகன்” படம் வெளியீடும் போது ரூ.2000, ரூ.3000 கொடுத்து ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதை தடுக்க, பிளாக் டிக்கெட் விற்கக்கூடாது என்று அவர் தைரியமாக அறிவிப்பு வெளியிடுவாரா? என்றார்.


கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததில் 39 பேர் பொதுமக்கள். 3 மணிக்கு வருவதாக கூறிவிட்டு 7 மணிக்கு வந்தது திட்டமிட்ட சதி. இதற்கான முழுப் பொறுப்பு விஜயைச் சாரும். 30 ஆண்டுகளாக அவருடன் பயணித்து அவரது வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களில் நானும் ஒருவன். என்னைப் போலவே பலரின் நிலை இன்று இப்படித்தான். அவரது கட்சியில் கட்டமைப்பும் இல்லை, நேர்மையும் இல்லை. இந்நிலையில் அவர் தொலைநோக்கு பார்வையுடன் சமூகத்தை வழிநடத்த முடியாது. கூண்டுக்கிளியாக இருந்து கொண்டு வெளி உலகம் தெரியாமல் பேசிக்கொண்டு வருகிறார். 


மக்கள் அவரை யார் என்பதை நன்றாக அறிந்துள்ளனர். அது தேர்தல் நேரத்தில் வெளிப்படும். விஜய் ஒரு கிளாமர் தான். அவரை பார்த்து விட்டு செல்வார்களே தவிர, ஓட்டு போட மாட்டார்கள் என்றார்.

இந்த சந்திப்பின்போது நெல்லை கிழக்கு திமுக பொறியாளர் அணி செயலாளர் ஜோசப் சந்திரன், வக்கீல் பாலகிருஷ்ணன், ஏசுதாசன், டி.ராஜேந்தர் நற்பணி மன்ற நிர்வாகி சிம்பு கண்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

photo news by sunmugasuthram press club president 

புதன், 24 டிசம்பர், 2025

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் 38-ஆம் ஆண்டு நினைவு தினம்

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடி : டிச 24

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்  38-ஆம் ஆண்டு நினைவு தினம் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு இன்று காலை 11மணியளவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக அலுவலகம் முன்பும், தொடர்ந்து தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

thoothukudileaks


இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை தாங்கினார். அப்போது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அவரது அரசியல் சேவைகள் குறித்து நினைவுகூரப்பட்டது.

நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், முன்னாள் மற்றும் தற்போதைய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மௌன அஞ்சலி செலுத்தினர்.

செவ்வாய், 23 டிசம்பர், 2025

தவெக-விலும் சாதி அரசியல் குற்றச்சாட்டு விஜய்-ன் தவெககட்சியில் பெண் என்பதால் பதவி மறுப்பா !!!

photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாவட்டம் 6 தொகுதிகளிலும் எந்த ஒரு சாதியும் பெரும்பான்மை அல்ல; ஒவ்வொரு தொகுதியிலும் 2–3 சாதிகள் தான் வெற்றியை நிர்ணயிக்கின்றன என்ற முக்கிய அரசியல் தகவல் வெளியாகியுள்ளது 

இது பற்றிய செய்தியாவது:-

சென்னை | 23.12.2025

தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) பல ஆண்டுகளாக களப்பணியாற்றியும், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண் நிர்வாகி அஜிதா ஆர்க்னஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகத்தை தொடங்குவதற்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை “விஜய் மக்கள் இயக்கம்” என்ற பெயரில் நடத்தி வந்தார். 


அந்த இயக்கத்தில், திமுகவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ள பில்லா ஜெகன் (ஜெகன்) மற்றும் அவரது சகோதரர் சுமன் ஆகியோர் முக்கிய பொறுப்புகளில் இருந்தனர். விஜய் படம் வெளியான போது தோரணம் கட்டுதல், ரசிகர்களை முதல் காட்சிக்கு திரட்டுதல், இயக்கத்தின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் கட்சி தொடங்கியதையடுத்து, அவர்கள் ஏற்கனவே திமுகவில் செயல்பட்டு வந்ததால் ரசிகர் மன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகினர். இதன் பின்னர், பில்லா ஜெகனின் தங்கை அஜிதா ஆர்க்னஸ் தவெக கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்றத் தொடங்கினார்.


கட்சித் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள் நிகழ்ச்சிகள், மாலையணிவிப்பு, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பணிகளில் அஜிதா ஆர்க்னஸ் தொடர்ந்து செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.


விஜய் கட்சியில்

பெண் என்பதால் பதவி மறுப்பு தெரிவித்தார்களா!!!


 இருப்பினும், அவர் பெண் என்பதாலும், தூத்துக்குடி மாவட்டத்தின் சமூக அரசியல் சமநிலை காரணமாகவும், மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த சாதிக்கும் பெரும்பான்மை இல்லை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் எந்த ஒரு சாதிக்கும் பெரும்பான்மை கிடையாது என்பதே அரசியல் யதார்த்தம். 

இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் அங்காங்கே இரண்டு அல்லது மூன்று சாதிகள் மட்டுமே தேர்தல் வெற்றி–தோல்வியை நிர்ணயிக்கும் நிலையில் உள்ளன என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி,

விளாத்திகுளம் – ரெட்டியார், நாயக்கர்

கோவில்பட்டி – நாயக்கர், தேவர்

ஓட்டப்பிடாரம் – தலித், வேளாளர்(பிள்ளை)

திருவைகுண்டம் – 

தேவர், வேளாளர் ( பிள்ளை), தேவேந்திர குல வேளாளர், நாடார்

திருச்செந்தூர் – பரதர், முஸ்லிம், தலித், நாடார், யாதவ்

தூத்துக்குடி – பரதர் (மீனவர்), வேளாளர் (பிள்ளை), நாடார், தேவேந்திர குல வேளாளர்

என ஒவ்வொரு தொகுதியிலும் சமூக அரசியல் சமநிலை மாறுபட்டு காணப்படுகிறது.

இதன் காரணமாகவே, கடந்த தேர்தல்களில் பாஜக தமிழிசை சௌந்தரராஜன், அதிமுக வேலுமணி உள்ளிட்ட வேட்பாளர்கள் தங்களது சாதி அடையாளங்களை முன்னிறுத்தியும் தோல்வியை சந்தித்தனர். 

வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த கனிமொழி இடம் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது. இது, ஒரே சமூக அரசியலை முன்னிறுத்தி வெற்றி பெற முடியாது என்பதற்கான தெளிவான எடுத்துக்காட்டாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில வருடங்களாக  அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களையே மாவட்ட செயலாளர்களாக நியமித்து வருவதால் தேர்தல் தோல்வியை சந்தித்து வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை என்றும் அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தவெக-விலும்  சாதி அரசியல் குற்றச்சாட்டு

தவெக கட்சியிலும், நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையே தூத்துக்குடி மாவட்ட செயலாளராக நியமிக்க வேண்டும் என பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், நடிகர் விஜய்க்கு யோசனை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் அதிருப்தி ஏற்படுத்தி இருக்கின்றது.


இதன் விளைவாக, நாடார் சமூகத்தைச் சேர்ந்த எஸ்டிஆர் சாமுவேல்ராஜ் என்பவருக்கு தவெக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அவரும் கட்சித் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள்களில் மாலையணிவிப்பு, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தேர்தலை சந்திப்பதற்கு முன்பே தவெக கட்சிக்குள் கடும் கோஷ்டி பூசல் நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அஜிதா ஆர்க்னஸ் தனது ஆதரவாளர்களுடன் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். 


ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவரை அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு பணியாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு தடையால் உணர்ச்சிவசப்பட்ட அஜிதா ஆர்க்னஸ் அலுவலகம் முன்பு கதறி அழுததாக கூறப்படுகிறது. இதைக் கண்ட அவரது ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.


வீடியோ பார்க்க 

பின்னர், தவெக கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், அஜிதா ஆர்க்னஸுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து,

“தலைமை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. உயிருள்ளவரை தமிழக வெற்றி கழகத்தில் விஜய்க்காக பயணிப்போம்”

எனக் கூறி, அஜிதா ஆர்க்னஸ் தர்ணா போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

🗞️ தூத்துக்குடி லீக்ஸ்

👉 

தூத்துக்குடி பிரபல ஹோட்டலில் QR கோடு ஸ்டிக்கர் மாற்றி பண மோசடி ஒருவர் கைது – சைபர் குற்றப்பிரிவு அதிரடி

தூத்துக்குடி, டிச.23 :

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் QR Code ஸ்டிக்கரை மாற்றி ஒட்டி சைபர் மோசடியில் ஈடுபட்ட இளைஞரை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

தூத்துக்குடி நகரில் செயல்பட்டு வரும் ஒரு உணவகத்தில் உணவு உண்ட வாடிக்கையாளர் ஒருவர், அதற்கான தொகையை QR ஸ்கேனர் மூலம் அனுப்பிய நிலையில், அந்த பணம் ஹோட்டல் உரிமையாளரின் வங்கி கணக்கிற்கு வராமல் இருப்பது தெரியவந்தது. 



இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் உரிமையாளர், தனது கடையில் இருந்த QR Code ஸ்கேனர் சாதனத்தை சோதனை செய்த போது, அதில் வேறு ஒருவரின் வங்கி கணக்கைச் சேர்ந்த QR Code ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர், நேற்று (22.12.2025) தேசிய சைபர் குற்ற புகார் தளம் (NCRP) மூலம் புகார் அளித்தார். அதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு)   தீபு  மேற்பார்வையில், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்  சாந்தி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


தொழில்நுட்ப ரீதியான விசாரணையில், அந்த QR Code-இன் வங்கி கணக்கும், அதனுடன் தொடர்புடைய செல்போன் எண்ணும் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. 

thoothukudileaks
ஹோட்டலில் QR Code ஸ்டிக்கரை மாற்றி சைபர் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட முருகானந்தம்.


அதில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த குமார் மகன் முருகானந்தம் (26) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதும், அவரது செல்போன் இருப்பிடம் தூத்துக்குடி பள்ளிவாசல் பஜார் பகுதியில் இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து, நேற்று (22.12.2025) சைபர் குற்றப்பிரிவு போலீசார், எதிரி முருகானந்தத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், ஹோட்டலில் தனது வங்கி கணக்கின் QR Code ஸ்டிக்கரை ஒட்டி, வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடியாக பெற்றது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

மேலும், இதுபோன்று வேறு இடங்களிலும் QR Code மோசடிகளில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறு வணிகர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் அனைத்து வியாபாரிகளும், தங்கள் கடைகளில் பயன்படுத்தப்படும் QR Code-களை அடிக்கடி சோதனை செய்து, இவ்வகை சைபர் மோசடிகளைத் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

👉 

திங்கள், 22 டிசம்பர், 2025

திருவைகுண்டம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் எர்ணாவூர் நாராயணன் போட்டியிடுவது உறுதி சமத்துவ மக்கள் கழக மாவட்ட அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு விழா வில் அறிவிப்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: டிச 22

திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் போட்டியிட சமத்துவ மக்கள் கழகம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இது பற்றிய செய்தியாவது:-

இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில், மாவட்ட அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு–2026 விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ் தலைமை வகித்தார்.



தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியத் தலைவரும், சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவருமான எர்ணாவூர் நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கிறிஸ்துமஸ் கேக் வெட்டி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

“திருவைகுண்டம் தொகுதியில் நானே போட்டி” – எர்ணாவூர் நாராயணன் உறுதி

விழாவில் பேசிய எர்ணாவூர் நாராயணன்,

“தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த ஆண்டு 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், சமத்துவ மக்கள் கழகம் சார்பில் திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு தொகுதிகளை கேட்க உள்ளோம். இதில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் (திருவைகுண்டம்) சட்டமன்ற தொகுதியில் போட்டியிட நாம் இப்போதே தயாராக உழைக்க வேண்டும்.



மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமையில், நிர்வாகிகள் அனைவரும் திருவைகுண்டம் தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும். பாகம் வாரியாக கணக்கெடுத்து, வெளியூரில் இருக்கும் வாக்காளர்களையும் அடையாளம் காண வேண்டும். இந்த பணிகளை முடித்து வாக்காளர் பட்டியலை என்னிடம் வழங்கினால், சீட் வாங்குவது எனது பொறுப்பு. அந்த தொகுதியில் நானே போட்டியிட உள்ளேன்” என உறுதியாக தெரிவித்தார்.

நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்பு!!!

இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் வழக்கறிஞர் கண்ணன், தலைமைச் செயலக முன்னாள் அதிகாரி ரவீந்திரன், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணிபிச்சை, மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சகாயராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் அருள்ராஜ், அந்தோணி சேவியர், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயகசமாடன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்துசெல்வம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட விவசாய அணி செயலாளர் கனகராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் குருவம்மாள், சந்திரா, ஜேசுச்செல்வி, ஜெபராணி, ராதா லட்சுமி, பனிமதி, சாந்தி, பிரம்மசக்தி, பாத்திமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சதீஷ் மூர்த்தி, உடன்குடி ஒன்றிய செயலாளர் பாலாஜி, கருங்குளம் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், கயத்தார் ஒன்றிய செயலாளர் சவரி மிக்கேல், திருச்செந்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜ், திருச்செந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜ், மாநகர அவைத்தலைவர் மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

— தூத்துக்குடி லீக்ஸ்