வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பெயரை வழித்தட பலகைகளில் பேருந்துகளில் இடம்பெற செய்யாமல் கடந்த அதிமுக -திமுக ஆட்சியில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து மத்திய அரசு உத்தரவு புறக்கணித்து வந்தது அதிகாரப்பூர்வ பெயரை நடைமுறைப்படுத்தாமல் இழுத்துடித்து வருகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடி, ஜூலை 8:
2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தூத்துக்குடி புதிய துறைமுகம், மத்திய அரசால் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 08.10.2023 அன்று திறக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் வழித்தட அறிவிப்பு பலகைகள் மற்றும் பேருந்துகளில், அதிகாரப்பூர்வ பெயரான "வ.உ.சிதம்பரனார் துறைமுகம்" என்பதற்குப் பதிலாக "புதிய துறைமுகம்" என்ற பெயரே பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேதனை!!!
அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தும், பேருந்து நிலைய வழித்தட பலகைகள் மற்றும் பேருந்துகளில் பழைய பெயரே தொடர்ந்து பயன்படுத்தப்படுவது வரலாற்று பெருமைமிக்க சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெயருக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என பல்வேறு தரப்பினர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் இடம் கோரிக்கை!!!
இதுகுறித்து, அனைத்து வழித்தட அறிவிப்பு பலகைகள் மற்றும் பேருந்துகளில் அதிகாரப்பூர்வ பெயரான "வ.உ.சிதம்பரனார் துறைமுகம்" என்ற பெயரையே உடனடியாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறை அமைச்சர் ஏ. ஸ்ரீநாத் அவர்களிடம், தமிழ்நாடு வ.உ.சி. எழுச்சி பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் மா. தமிழ்ச்செல்வன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.உடனே அமைச்சர் ஸ்ரீநாத் ஆவண செய்வதாக கூறினார்
இந்த கோரிக்கையை முன்வைத்த மா. தமிழ்ச்செல்வன் அவர்களை தமிழ்நாடு சைவவேளாளர் சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வ.உ.சி. பேரவை – தூத்துக்குடி மாவட்டம் ஆகிய அமைப்புகள் பாராட்டி, அதிகாரப்பூர்வ பெயர் அனைத்து அரசு அறிவிப்பு பலகைகள் மற்றும் பேருந்துகளில் விரைவில் நடைமுறைக்கு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளன..





