தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
தூத்துக்குடியில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கனமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆதிபராசக்தி நகர் மற்றும் ரஹ்மத் நகர் பகுதிகளில், மழைநீர் வீடுகளை சுற்றி தேங்கி, பல குடும்பங்கள் அவதிக்கு உள்ளானது. தெருக்கள் முழுவதும் வெள்ளப்பாதையாக மாறி, குடியிருப்போர் அச்சத்திலும் சிரமத்திலும் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், நிலைமைக்கான அவசர தகவல் பெறப்பட்டதை தொடர்ந்து, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தோழர் கனிமொழி எம்.பி., தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மற்றும் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமையை பரிசோதித்தனர்.உடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா
பகுதிவாசிகளின் குறைகளை அறிந்து, விரைவாக மழைநீர் அகற்றும் பணிகளை தொடங்குமாறு மாநகராட்சிப் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தினர்.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மோட்டார் பம்புகள் மூலம் தேங்கிய நீரை வெளியேற்றும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
தூத்துக்குடியில்...
கனமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.



