புதன், 9 செப்டம்பர், 2026

மாவட்ட செயலாளர் ஏசாதுரை உட்பட சசிகலா ஆதரவாளர்கள் கூண்டோடு அதிமுகவில் இணைந்தனர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் இணைப்பு பரபரப்பு

 சசிகலா ஆதரவாளர்கள் கூண்டோடு அதிமுகவில் இணைந்தனர்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் இணைப்பு

தூத்துக்குடி செப் 9

அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (AIPTMMK ) சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட வி.கே. சசிகலா ஆதரவாளர்கள், அக்கட்சியில் இருந்து விலகி தாய்க்கழகமான அதிமுகவில் இணைந்தனர்.

தூத்துக்குடி லீக்ஸ்

thoothukudi Leaks


தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில், அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி தலைமையை ஏற்று, அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.


இதில் வி.கே. சசிகலா ஆதரவாளர்களான செல்வராஜ், பட்டுக்கனி, சாந்தி, ரெஜினா, ஜான்சி ராணி, சுப்புலட்சுமி, பொயாளி பாண்டியன், மாரியப்பன், ஆறுமுகத்துரை, ராஜதுரை, இல. ஜெயராமன், ஜெயபால், வேல்சாமி, பரணி செல்வம், தங்க இசக்கி ராஜா, முத்துமாலை செல்வராஜ், சபிக்குமார் மகாராஜன், ரமேஷ், எம்.ஜி.ஆர். கணேசன், கணேசன் உள்ளிட்ட பலர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் பிரபு, தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி கழக செயலாளர் ஜெய்கணேஷ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் ஆனந்தராஜ், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள் முத்துக்கனி, நவ்சாத், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் மெஜூலா, சந்திரா, ராஜு மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ், சொக்கலிங்கம், எம்.டி. ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சசிகலா ஆதரவாளர்கள் கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்த நிகழ்வு, தூத்துக்குடி மாவட்ட அதிமுக வட்டாரத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

அதிமுக அமைப்பு செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் 72வது பிறந்த நாள்: தூத்துக்குடியில் அதிமுகவினர் கோலாகல கொண்டாட்டம்

 

அதிமுக அமைப்பு செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் 72வது பிறந்த நாள்: தூத்துக்குடியில் அதிமுகவினர் கோலாகல கொண்டாட்டம்

தூத்துக்குடி, செப். 9:

அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதனின் 72வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் அதிமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.



தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில், எஸ்.பி. சண்முகநாதன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட, ஒன்றிய, பகுதி மற்றும் வார்டு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் என திரளானோர் கலந்து கொண்டு எஸ்.பி. சண்முகநாதனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.


பிறந்த நாள் விழாவையொட்டி அதிமுக அலுவலக வளாகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் உற்சாகத்தால் களைகட்டியது.

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட நிறுவனங்கள் தொழில்வரி செலுத்த வேண்டும்

 

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட நிறுவனங்கள் தொழில்வரி செலுத்த வேண்டும்

செப்டம்பர் 30-க்குள் செலுத்த மாநகராட்சி அறிவுறுத்தல்

தூத்துக்குடி, செப்.9:

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களுக்கும் தொழில்வரி செலுத்துவது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

thoothukudileaks






தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998-ன் பிரிவு 117-B மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023-ன் விதி 275(2)-ன் படி, மாநகராட்சி எல்லைக்குள் எந்தவொரு தொழில், வர்த்தகம், வணிகம் அல்லது வேலையில் ஈடுபடும் நபர்களிடமிருந்து தொழில்வரி வசூலிக்கப்படுகிறது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அரையாண்டு வருமானத்திற்கு ஏற்ப தொழில்வரி

வரிசை அரையாண்டு வருமானம் தொழில்வரி
1 ரூ.21,000 வரை இல்லை
2 ரூ.21,001 முதல் ரூ.30,000 வரை ரூ.159
3 ரூ.30,001 முதல் ரூ.45,000 வரை ரூ.402
4 ரூ.45,001 முதல் ரூ.60,000 வரை ரூ.791
5 ரூ.60,001 முதல் ரூ.75,000 வரை ரூ.1,192
6 ரூ.75,001 மற்றும் அதற்கு மேல் ரூ.1,250

செப்டம்பர் 30-க்குள் செலுத்த வேண்டும்

பிடித்தம் செய்யப்பட்ட தொழில்வரியை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தூத்துக்குடி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தொழில்வரியை பிடித்தம் செய்து செலுத்தத் தவறினால், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023 ஆகியவற்றின் கீழ் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

— 

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

தூத்துக்குடி கயத்தாறில் கனிம வளக் கொள்ளையா? அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பா? முதலமைச்சரிடம் வழக்கறிஞர் பரபரப்பு புகார்

 Tamil Nadu updates

தூத்துக்குடி மாவட்டத்தில் 

கயத்தாறில் கனிம வளக் கொள்ளையா?

அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பா? – முதலமைச்சரிடம் வழக்கறிஞர் பரபரப்பு புகார்

தூத்துக்குடி, செப்.8:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் உரிய அரசு அனுமதியின்றி கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, லாரிகள் மூலம் கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது அவசரமாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான மு. பெச்சிமுத்து, தமிழக முதலமைச்சரிடம் பொது நல புகார் மனு அளித்துள்ளார்.

thoothukudileaks


கட்டபொம்மன் சிலை அருகே அகழ்வு?

சென்னை–கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு கட்டபொம்மன் சிலை அருகே, சர்வே எண் 378/1 பகுதியில் கனரக பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் லாரிகளைப் பயன்படுத்தி கனிம வளங்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக இரு நபர்களின் பெயர்களையும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் உரிய அரசு அனுமதியின்றி கனிம வளங்களை வெட்டி எடுத்து, சேமித்து வைத்து பின்னர் கடத்தியதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

புகைப்படம், வீடியோ ஆதாரங்கள்

இதுதொடர்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பகிரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஆதாரங்கள் வழங்கப்பட்ட பின்னரும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் செயல்பாடு குறித்து கேள்வி

சட்டவிரோத கனிம அகழ்வு தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை தாமதமாகி வருவது ஏன்? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நிர்வாக ரீதியான ஆய்வு நடத்தப்படுமா? கனிம வளங்களை சட்டவிரோதமாக அகழ்ந்து கடத்தும் நபர்களுக்கு அதிகாரிகள் யாரேனும் உடந்தையாக உள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்த கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் கனிம வள அகழ்வு மற்றும் கனிம கடத்தல் தொடர்பாக மாவட்ட அளவில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசு அனுமதியின்றி கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோத கனிம அகழ்வுக்கு அரசு அதிகாரிகள் யாரேனும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தால், அவர்கள் மீதும் துறைரீதியாகவும் சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய கேள்விகள்

• அனுமதியின்றி கனிம அகழ்வு நடைபெற்றதா?
• அரசுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் வருவாய் இழப்பு எவ்வளவு?
• புகைப்படம், வீடியோ ஆதாரங்கள் மீது என்ன நடவடிக்கை?
• கனிம கடத்தலுக்கு அதிகாரிகள் உடந்தையா?
• மாவட்டம் முழுவதும் சிறப்பு ஆய்வு நடத்தப்படுமா?

 

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

video 


புகைப்பட கேப்ஷன்:
கயத்தாறு கட்டபொம்மன் சிலை அருகே சட்டவிரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி. (கோப்பு படம்)

குறிப்பு: இச்செய்தியில் இடம்பெறும் குற்றச்சாட்டுகள் வழக்கறிஞர் மு. பெச்சிமுத்து அளித்துள்ள பொது நல புகார் மனுவின் அடிப்படையிலானவை. குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் விசாரணை மற்றும் அதிகாரப்பூர்வ பதில் வெளியாக வேண்டியுள்ளது.

திங்கள், 7 செப்டம்பர், 2026

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 41-வது தேசிய கண் தான இருவார விழா

 Tamil Nadu update

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 41-வது தேசிய கண் தான இருவார விழா

தூத்துக்குடி, செப்.7:

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 41-வது தேசிய கண் தான இருவார விழா சிறப்பாக நடைபெற்றது.



விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் . விஷ்ணுசந்திரன், இ.ஆ.ப. தலைமை தாங்கினார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. E. எபினேசர் ஜோயல்குமார், M.D., DNB., துணை முதல்வர் மரு. V. கலைவாணி, M.D., கண்காணிப்பாளர் மரு. J. கைசெல்வ ஜெயமணி, MBBS., DMRT. உள்ளிட்ட மருத்துவர்கள், கண் மருத்துவத் துறை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


இம்மருத்துவமனை கண் தானப் பிரிவு மூலம் வருடத்திற்கு சுமார் 270 கண்கள் வீதம், இதுவரை மொத்தம் 1,486 கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது. மேலும், இம்மருத்துவமனையில் கருவிழி மாற்றுச் சிகிச்சை மூலம் இதுவரை 123 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.


கண் தானம் வழங்கிய குடும்பத்தினரை சிறப்பிக்கும் வகையில், அவர்களை அழைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் சார்பில் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.


இம்மருத்துவமனையில் கருவிழி மாற்றுச் சிகிச்சை மூலம் பார்வை பெற்ற இராஜேந்திரன் என்பவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டு, அனைவரும் கண் தானம் செய்வோம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்.


மேலும், மரு. J. கைசெல்வ ஜெயமணி, MBBS., DMRT. தலைமையில் கண் தான விழிப்புணர்வு தொடர்பான பாடல் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கண் தான விழிப்புணர்வு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலியர் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு சான்றுகள் வழங்கினார்.

thoothukudileaks


இறுதியில் மரு. R. ஜெயந்தி, M.S., D.O. உள்ளிட்ட மருத்துவர்கள் விழாவை சிறப்பாக நடத்தினர். விழா தேசிய கண் தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

சேலத்தில் 16-ஆம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை தொடர்பான ஆலோசனை கூட்டம்

சேலத்தில் 16-ஆம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை தொடர்பான ஆலோசனை கூட்டம் 

சேலம் செப 7

சேலம் மாவட்டம் குகை பாலம் பகுதியில் உள்ள ராம ஆசிரமத்தில் 16-ஆம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரை நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்துடைய நிறுவனர் மற்றும் காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் தவத்திரு.சுவாமி. இராமானந்தா தலைமையில் நடைபெற்றது. 



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த ஆண்டு காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்தர் ரத யாத்திரையானது குடகு மலையில் தொடங்கி பூம்புகார் வரை செல்லும் பகுதிகளில் அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள் ரதத்தில் வரும் காவிரி தாய்க்கு வரவேற்பு கொடுப்பது மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பெளர்ணமி நாட்களில் காவிரி நதிக்கு ஆரத்தி காட்டுவது போன்ற பல முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது

thoothukudileaks


.இந்த நிகழ்வில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்துடைய முக்கிய பொறுப்பாளர்கள் சுவாமி.ஈஸ்வரானந்தா, சுவாமி.சிவராமானந்தா,சுவாமி. பாலரகுநானந்தாபுரி, சேலம் குணசேகரன், ஓசூர் காவிரி.வாசு, இந்து சேனா மாநில தலைவர் மற்றும் காவிரி நதி நீர் பாதுகாப்பு அறக்கட்டளை இணை செயலாளர் அருள்வேலன் ஜி, சேலம் ரமேஷ், அர்ச்சகர் விஷ்ணு மற்றும் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்தின் புரவலர்கள், துறவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் திறன் போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பரிசு தி சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ் நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் இனைந்து நடத்திய தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி மேடையில் மாணவிகளின் யோகாசன நிகழ்ச்சி பிரமிப்பு? நடந்தது என்ன படிக்க

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

திறன் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பரிசு

தி சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ் நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் இனைந்து நடத்திய தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி மேடையில் மாணவிகளின் பிரமிப்பூட்டும் யோகாசன நிகழ்ச்சி

தூத்துக்குடி, செப்.6:

தி சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நடத்தி வரும் தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி 2026-இன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவ, மாணவியருக்காக நடத்தப்பட்ட பல்வேறு திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

thoothukudileaks


புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு கடந்த 27.08.2026 முதல் 06.09.2026 வரை, பள்ளி மாணவ, மாணவியரின் தனித்திறன்களை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

thoothukudileaks


இதில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். “நான் விரும்பும் ஓவியம்” என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும், “வாசிப்பும் வாழ்க்கை” என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி மற்றும் கதை எழுதும் போட்டியும் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட்டன.

thoothukudileaks


இந்தப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கான பரிசளிப்பு விழா தூத்துக்குடி தி சென்னை சில்க்ஸ் புத்தகக் கண்காட்சி மேடையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு ஏ. ஸ்ரீநாத் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

thoothukudileaks


அப்போது அமைச்சர் ஸ்ரீநாத் பேசுகையில், ...

மாணவ, மாணவியர் தங்களது தனித்திறன்களை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம் என்றார். புத்தக வாசிப்பு அறிவை விரிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், சிந்தனைத் திறனையும் வாழ்க்கை அனுபவத்தையும் மேம்படுத்தும் எனத் தெரிவித்தார்.

thoothukudileaks

thoothukudileaks


மேலும், இளம் வயதிலேயே வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும் என்றும், கல்வியுடன் சேர்த்து ஓவியம், எழுத்து, கதை எழுதுதல் உள்ளிட்ட தங்களது தனித்திறன்களையும் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி தி சென்னை சில்க்ஸ் புத்தகக் கண்காட்சி மேடையில் யோகா மாஸ்டர் சுந்தர்வேல் மற்றும் டாக்டர் கனிஷ்கா ஆகியோரிடம் பயிற்சி பெற்று வரும் மாணவிகளின் சிறப்பு யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் 9-ம் வகுப்பு பயிலும் காமராஜ் மற்றும் தஸ்நேவிஸ் பள்ளி மாணவிகளான அஸ்மா, சுவாணி ஆகியோர் பல்வேறு பிரமிப்பூட்டும் யோகாசனங்களை செய்து காட்டி, அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். அவர்களின் திறமையான யோகாசன நிகழ்ச்சி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.




thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks
பரிசு பெற்ற மாணவ மாணவிகள் 

thoothukudileaks

thoothukudileaks


தி சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நடத்தி வரும் தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி மூலம் மாணவர்களிடையே வாசிப்பு ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு, ஓவியம், எழுத்து, கதை எழுதுதல் உள்ளிட்ட அவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks