செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

மக்களவை தொகுதி மறுசீராய்வு மசோதாவுக்கு எதிர்ப்பு தூத்துக்குடியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபயணம்

 Tamil Nadu updates, அருணன் செய்தியாளர் 

மக்களவை தொகுதி மறுசீராய்வு மசோதாவுக்கு எதிர்ப்பு

தூத்துக்குடியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபயணம்

தூத்துக்குடி:
மக்களவை தொகுதி மறுசீராய்வு (Delimitation) மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபயணம் நடைபெற்றது.

thoothukudileaks


தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலகம் அருகில் தொடங்கிய இந்த நடைபயணம், ஒன்றாம் கேட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலை வரை நடைபெற்றது.

நடைபயணத்திற்கு மாவட்ட மாநகர காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல் ராஜ், சுடலையாண்டி, மாமன்ற உறுப்பினர் கற்பகவள்ளி சேகர், மாநில பேச்சாளர் அப்துல் மஜீத், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன், மாநகர கிழக்கு மண்டல தலைவர் ஜசைஸ் செல்வா, எஸ்.சி./எஸ்.டி. மாவட்ட தலைவர் பிரபாகர், மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி சுரேஷ் பர்ணாரந்து உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

“மக்களவை தொகுதி மறுசீராய்வு மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும்”

நடைபயணத்தின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் பேசுகையில், “மோடி-லிமிட்டேஷன் (MODI-LIMITATION) என்பது இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கும் அரசியல் முயற்சி” என குற்றம்சாட்டினர்.

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் மறுசீராய்வு செய்வதற்கான முயற்சியால், மக்கள் தொகையை கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பாதிக்கப்படும் என்றும், மக்கள் தொகை கட்டுப்பாட்டில் பின்தங்கிய மாநிலங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் சூழல் உருவாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.




மேலும், தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை உயர்த்தும் வகையில் மறுசீராய்வு செய்யப்பட்டால், உத்தரப்பிரதேசத்தின் மக்களவை தொகுதிகள் 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழ்நாட்டின் தொகுதிகள் 39-ல் இருந்து 59 ஆகவும் அதிகரிக்கக்கூடும் எனக் குறிப்பிட்ட அவர்கள், இதன் மூலம் இரு மாநிலங்களுக்கிடையேயான தொகுதி எண்ணிக்கை இடைவெளி மேலும் அதிகரிக்கும் என தெரிவித்தனர்.

“தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரம் பறிபோகும்”

நாடாளுமன்றத்தில் எண்களின் பலமே முக்கிய முடிவுகளை தீர்மானிக்கும் நிலையில், தென் மாநிலங்களின் மக்களவை பிரதிநிதித்துவம் குறையும் வகையில் தொகுதி மறுசீராய்வு மேற்கொள்ளப்பட்டால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரம் நிரந்தரமாக பாதிக்கப்படும் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறினர்.

மக்கள் தொகை கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் கடந்த காலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை முடக்கப்பட்டதாகவும், அந்த பாதுகாப்பை அகற்றும் முயற்சியே தற்போது நடைபெறுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

“சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகே தொகுதி மறுசீராய்வு”

சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட தேவையான தரவுகள் முழுமையாகப் பெறப்படுவதற்கு முன்பாக தொகுதி மறுசீராய்வு மேற்கொள்ளப்பட்டால், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளை முறையாக நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் காங்கிரஸ் தரப்பினர் தெரிவித்தனர்.

“தமிழ்நாட்டின் சுயமரியாதை, அரசியல் உரிமை மற்றும் ஜனநாயக பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவே இந்த நடைபயணம் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் அரசியல் உரிமைகளை எவராலும் பறிக்க முடியாது. மாநிலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு தொகுதி மறுசீராய்வு நடவடிக்கையையும் எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்போம்” என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், “தமிழ்நாட்டின் நலனுக்கும், தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தொகுதி மறுசீராய்வு செய்யக்கூடாது. தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைக்கும் வகையிலான எந்த முயற்சியையும் முறியடிக்க வேண்டும்” என நடைபயணத்தில் வலியுறுத்தப்பட்டது.

வெள்ளையனே வெளியேறு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நடைபயணம், ‘QUIT UNFAIR DELIMITATION MARCH’ என்ற பெயரில் நடைபெற்றதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கலெக்டர் அலுவலகம் எதிரே சர்ச்சைக்குரிய பேனர்! ஒருதரப்புக்கு அனுமதி மறுப்பு... மற்றொரு தரப்புக்கு மட்டும் அனுமதியா? காவல்துறை மாவட்ட நிர்வாகத்துக்கு சமூகத்தினர் கேள்வி

 Tamil Nadu updates,

கலெக்டர் அலுவலகம் எதிரே சர்ச்சைக்குரிய பேனர்!

ஒருதரப்புக்கு அனுமதி மறுப்பு... மற்றொரு தரப்புக்கு மட்டும் அனுமதியா? காவல்துறை மாவட்ட நிர்வாகத்துக்கு சமூகத்தினர் கேள்வி ???

தூத்துக்குடி: ஆகஸ்ட் 11 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பிரதான சாலையில் வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பேனர் சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி பிரையன்ட் நகர் பத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழாவையொட்டி, வெங்கடேஷ் பண்ணையார் மற்றும் கராத்தே செல்வின் நாடார் ஆகியோரின் புகைப்படங்களுடன் பேனர் வைக்க முயன்றபோது, காவல்துறையினர் அனுமதி மறுத்ததாகவும், வைக்கப்பட்ட பேனர்களை அப்புறப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.


ஆனால், இதற்கு மாறாக க.பெரியநாயகபுரம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு அருகாமையிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பிரதான சாலையிலும், பசுபதி பாண்டியன் உள்ளிட்ட பலரது புகைப்படங்களுடன் கூடிய பெரிய பேனர் வைக்கப்பட்டுள்ளதாக சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

thoothukudileaks


குறிப்பாக, அந்த பேனரில்   ....

” போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருப்பது சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் உள்ளதா? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர்.

thoothukudileaks


ஒரு தரப்பினரின் பேனர்களுக்கு உடனடியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையில், மற்றொரு தரப்பினர் வைத்துள்ள பேனர்களுக்கு மட்டும் எவ்வாறு அனுமதி வழங்கப்படுகிறது?

.

மேலும், பேனர் வைப்பதில் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவருக்கும் ஒரே சட்டம், ஒரே விதிமுறை பின்பற்றப்படுகிறதா? அல்லது சமூக அடிப்படையில் வேறுபட்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


சமூகங்களுக்கு இடையே தேவையற்ற பதற்றம் ஏற்படாத வகையில், சர்ச்சைக்குரிய வாசகங்கள் மற்றும் தனிநபர்களின் புகைப்படங்களுடன் வைக்கப்படும் பேனர்கள் தொடர்பாக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒரே மாதிரியான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


— தூத்துக்குடி லீக்ஸ்

தொழிலதிபர்களின் தயவில் இயங்குகிறதா காவல்துறை? 'அன்பளிப்பு' கலாச்சாரமும்... ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு கசப்பான வரலாறும்!

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

செய்தி புகைப்படம் ரோஜா அருணன் செய்தியாளர் 

தொழிலதிபர்களின் தயவில் இயங்குகிறதா  காவல்துறை? 'அன்பளிப்பு' கலாச்சாரமும்... ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு கசப்பான வரலாறும்!

தூத்துக்குடி: ஆகஸ்ட் 11

தூத்துக்குடி குருஸ் பர்ணாந்து சிலை அருகே, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட புதிய காவல்துறை கட்டுப்பாட்டு மைய பூத் (Police Control Booth) நேற்று (10-8-2026 )திறக்கப்பட்டது. 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சிவ பிரசாத் பங்கேற்று இந்த பூத்தை திறந்து வைத்தார். 


உடன் காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) சுனில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுனை முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து பணியில் இருந்த டிராபிக் ஆண் -பெண் போலீஸ் பலருக்கு தலைக்கவசம் ஹெல் மேட் வழங்கினர் 

சிக்னலில் (Helmet) அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பரிசாகக்  கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.

அன்பளிப்பு பற்றி...

இருப்பினும், இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே பல்வேறு கேள்விகளையும் அதிருப்தியையும் எழுப்பியுள்ளது.

thoothukudileaks


 தனியார் நிறுவன நன்கொடை:

 புதிதாகத் திறக்கப்பட்ட காவல் கட்டுப்பாட்டு மைய பூத் பெட்டி, 'வேலவன் ஹைப்பர் குரூப்' நிறுவனத்தின் அன்பளிப்பு என அந்தப் பெட்டியிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது.


 பரிசுகள் வழங்கிய நகைக்கடை குரூப்: நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட ஹெல்மெட் மற்றும் கண்ணாடி பரிசுகளை மற்றொரு பிரபல நகைக்கடை நிறுவனம் அன்பளிப்பாக வழங்கியிருந்தது என்கிறார்கள்.

 அதிகாரிகள் உடன் தொழிலதிபர் போட்டோஷூட் ...!!!


அன்பளிப்பு வழங்கிய தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள், உயர் காவல் துறை அதிகாரிகளுடன் மிக அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர் 

thoothukudileaks


பொதுமக்களின் கேள்வி:


ஆனால் அரசு துறை அதிகாரிகள் பெறுவது அவசியமா ??


 "காவல்துறைக்கான உள்கட்டமைப்பு மற்றும் விழிப்புணர்வுச் செலவுகளைச் செய்ய தமிழக அரசிடம் நிதி இல்லையா? அரசுத் துறை ஏன் தனியார் தொழிலதிபர்களிடம் கையேந்த வேண்டும்?"


 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் கசப்பான வரலாறு நினைவிருக்கிறதா?

"தூத்துக்குடி மக்களுக்கு இந்த 'அன்பளிப்பு கலாச்சாரம்' ஒரு கசப்பான வரலாற்றை நினைவூட்டுகிறது." 

கடந்த காலங்களில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தூத்துக்குடி காவல்துறைக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் அன்பளிப்பாக வாரி வழங்கியது. இதன் காரணமாக, உயர் அதிகாரிகள் முதல் கீழ்நிலை போலீசார் வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு விசுவாசிகளாக மாறியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

அதன் உச்சக்கட்டமாகவே, 

2018-ல் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது.  பொதுமக்கள் பக்கமாக நிற்க வேண்டிய காவல்துறை, ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு, ஈவு இரக்கமின்றி 13 அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டு வீழ்த்திய கருப்பு வரலாறு அரங்கேறியது.


அரசு கவனிக்குமா?

தொழிலதிபர்களும், பெரு நிறுவனங்களும் காவல்துறையினருக்கு இதுபோன்று அன்பளிப்புகளை வழங்குவது, மறைமுகமாகச் சலுகைகளைப் பெறுவதற்கான "ஒரு வகை லஞ்சமே" என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.


துறை சார்ந்த தேவைகளுக்கு அரசாங்க நிதி ஒதுக்கீடு இருக்கும் போது, காவல்துறை தனியார் தொழிலதிபர்களின் தயவை எதிர்பார்ப்பது ஏன்?

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்!!!

தமிழக காவல்துறையைக் கையில் வைத்திருக்கும்  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அரசுத் துறைகளில் ஊடுருவும் இந்தத் தனியார் 'அன்பளிப்பு/நன்கொடை' கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? தொழிலதிபர்கள் சலுகை பெற வழிவகுக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பாரா? என்பதே தூத்துக்குடி மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பும் கேள்வியும் ஆகும்!

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடி குருஸ் பர்ணாந்து சிலை அருகே நிரந்தர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையம்!

Tamil Nadu updates, 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி குருஸ் பர்ணாந்து சிலை அருகே நிரந்தர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையம்!

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் திறந்து வைத்தார் — போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ஹெல்மெட் சோதனையை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை

தூத்துக்குடி, ஆக.10:

தூத்துக்குடி மாநகரின் முக்கிய போக்குவரத்து பகுதிகளில் ஒன்றான குருஸ் பர்ணாந்து சிலை அருகே உள்ள சிக்னல் பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நிரந்தர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

thoothukudileaks


thoothukudileaks


குருஸ் பர்ணாந்து சிலை சிக்னல் பகுதியில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால், குறிப்பிட்ட நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க நிரந்தர போக்குவரத்து காவல் மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் இன்று காலை 11 மணியளவில் திறந்து வைத்தார்.

இந்த மையத்தின் மூலம் அப்பகுதியில் செல்லும் வாகன போக்குவரத்தை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.


video 

மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்கிறார்களா என்பது குறித்த சோதனைகளும் நடத்தப்படும். போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து, விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் முடிவில் தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் சுனை முருகன் நன்றி கூறினார்.

குருஸ் பர்ணாந்து சிலை அருகே நிரந்தர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சீரான போக்குவரத்து ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மதன் ராஜா தலைமையில் நடைபெற்றது

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அமைச்சர் மதன் ராஜா தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி: ஆகஸ்ட் 9
தூத்துக்குடி புறநகர் மாவட்ட கழகச் செயலாளரும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான மாண்புமிகு மதன் ராஜா, BE., MLA தலைமையில், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி மத்திய ஒன்றியம் மற்றும் கருங்குளம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (9-8-2026)மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

thoothukudileaks
அமைச்சர் மதன் ராஜா -வுக்கு அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு 


முதற்கட்டமாக நடைபெற்ற தூத்துக்குடி மத்திய ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர்  ஜெபஸ்துராஜ், இணைச் செயலாளர் திருவடி  தினேஷ், செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்த், சதீஷ்குமார், செல்வராஜ், முத்து ஜெயகலா, பொருளாளர் சதீஷ்குமார், துணைச் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


thoothukudileaks

thoothukudileaks

தொடர்ந்து கருங்குளம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்   முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


thoothukudileaks
ஆலோசனை கூட்டத்தில்.. அமைச்சர் மதன் ராஜா பேசுகையில் 

மகளிரணியினருடன் கேக் வெட்டி கொண்டாட்டம்

முன்னதாக, புறநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் வனிதா  ஏற்பாடு செய்திருந்த கேக்கை அமைச்சர் மதன் ராஜா தனது கையால் வெட்டி, மகளிரணி நிர்வாகிகளுக்கு கேக் துண்டுகளை ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


இந்நிகழ்வில் புறநகர் மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் வனிதா கந்தசாமி, ராமகிருஷ்ணன், காளிஸ்வரி, சுகன்யா, பிரியதர்ஷினி, சண்முகப்ரியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


வீடியோ பார்க்க 

கூட்டத்தில் ஒன்றிய மற்றும் கிளை அளவிலான கட்சி பணிகள், நிர்வாக செயல்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


பக்தி பரவசத்தில் சேலம் கோட்டை மாரியம்மன் திருத்தேர் திருவிழா! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சிறப்பான அன்னதானம்

Tamil Nadu updates

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா!

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாபெரும் அன்னதானம் — ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சேலம்: ஆகஸ்ட் 9 

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா பக்தர்களின் பக்திப் பரவசத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாபெரும் அன்னதான விழா சிறப்பாக நடைபெற்றது.

thoothukudileaks


பழமை வாய்ந்ததும், பக்தர்களால் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் திருத்தலமாக போற்றப்படுவதுமான சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற திருத்தேர் திருவிழாவில், சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனர்.


திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் அன்னதான விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் கலந்து கொண்டு அன்னம் பெற்று சென்றனர்.


இந்நிகழ்ச்சியில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தின் நிறுவனர், வாழும் கலியுக சித்தர் தவத்திரு சுவாமி இராமானந்தா, சொர்க்கபுரம் ஆதீனம் 22-வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ தண்டாயுதபாணி தேசிகர் மற்றும் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு அன்னதான விழாவை தொடங்கி வைத்தனர்.

thoothukudileaks


சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி  ஆலோசனையின்படி நடைபெற்ற இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் சர்மிளா சரவணன், ரவிச்சந்திரன் ஜி, வழக்கறிஞர் சுதன், ஸ்ரீதர், பிரபு, கீர்த்தி ஜெயகாந்த், ரமேஷ், சண்முகவேல், மாவட்ட செயலாளர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


மேலும் கவிதா, நேதாஜி, சுந்தரம், பேபி ரமணி, கவிதா, அன்னபூரணா, பத்மா, விக்னேஷ், ரவி, அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழா ஏற்பாடுகளில் சிறப்பாக பணியாற்றினர்.


பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கி நடைபெற்ற இம்மாபெரும் அன்னதான விழா, ஆன்மிகம் மற்றும் சேவை உணர்வை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.


புகைப்படக் குறிப்பு:
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழாவையொட்டி நடைபெற்ற மாபெரும் அன்னதான விழாவை சிறப்பு அழைப்பாளர்கள் தொடங்கி வைத்த காட்சி.


வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

அதிமுக வின் காவல் தெய்வம் யார் தெரியுமா ?தூத்துக்குடி வடக்கு தெற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஆன பிறகு முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேச்சு அதிமுக இப்போது தூய சக்தி யாக மாறிவிட்டது???

 Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடியில் அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் எழுச்சிமிகு ஆலோசனைக் கூட்டம்!

அதிமுக வின் காவல் தெய்வம் யார் தெரியுமா ? கெட்டதெல்லாம் திமுக -தவெக விற்கு போயிற்று? இப்போது அதிமுக தூய சக்தியாக மாறிவிட்டது!!!
தூத்துக்குடி வடக்கு தெற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஆன பிறகு முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேசினார் வீடியோ இச் செய்தியின் கடைசியில் உள்ளது
.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.சண்முகநாதன், சித.செல்லப்பாண்டியன் பங்கேற்பு 

thoothukudileaks




thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

தூத்துக்குடி, ஆக.8:

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி  ஆணைக்கிணங்க, தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் எழுச்சிமிகு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


தூத்துக்குடி நீதிமன்றம் எதிரே உள்ள கனி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று (08.08.2026) சனிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மூத்த நிர்வாகியுமான சித.செல்லப்பாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டு, கட்சி நிர்வாகிகள் மற்றும் அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

thoothukudileaks
முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசிய போது 


thoothukudileaks
முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேசிய போது...
thoothukudileaks
 முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் பேசிய போது...




கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த அம்மா பேரவை நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


வரவிருக்கும் அரசியல் நடவடிக்கைகள், கட்சியின் அமைப்பு பணிகள், மக்கள் நலப் பணிகள் மற்றும் கழகத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதிமுக வின் காவல் தெய்வம் யார் தெரியுமா ? கெட்டதெல்லாம் திமுக -தவெக விற்கு போயிற்று? இப்போது அதிமுக தூய சக்தியாக மாறிவிட்டது!!!
தூத்துக்குடி வடக்கு தெற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஆன பிறகு முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேசிய வீடியோ 

கூட்டம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றதால், நிகழ்ச்சி எழுச்சிமிகு முறையில் நடைபெற்றது.