சனி, 5 செப்டம்பர், 2026

வ.உ.சிதம்பரனார் 155வது பிறந்த நாள் தூத்துக்குடியில் விசிக சார்பில் விமல் வங்காளியார் மாலை அணிவித்து மரியாதை

 Tamil Nadu updates

வ.உ.சிதம்பரனார் 155வது பிறந்த நாள்

தூத்துக்குடியில் விசிக சார்பில் மாவட்ட செயலாளர் விமல் வங்காளியார் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி: செப் 5
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்த நாளை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

thoothukudileaks


தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் திருவுருவச் சிலைக்கு இன்று காலை 11.30 மணியளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks


நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி  மாநகர்  மாவட்ட  செயலாளர் விமல் வங்காளியார் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று, வ.உ.சிதம்பரனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் மாவட்ட செய்தி தொடர்பாளர் பட்டுவளவன் மாவட்ட துணை செயலாளர் தமிழ்குமணன் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ஷாரா.முபாரக்அலி அந்தோணிசாமி இஸ்லாமிய சனநாயக பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் முத்தலிபு தெற்கு பகுதி செயலாளர் சித்திரவிஜயன் இளஞ் சிறுத்தைகள் முத்துவேல் பாண்டியன் ராஜாபாரதி அருண் 36வது வார்டு செயலாளர் தேவநேசம் உள்ளிட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


வீடியோ பார்க்க 

தொடர்ந்து, வ.உ.சிதம்பரனாரின் தியாகம், சுதந்திரப் போராட்ட பங்களிப்பு மற்றும் சமூகநலக் கொள்கைகளை நினைவுகூர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.


நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 155 வது பிறந்த நாள் விழா வீ தி லீடர்ஸ் சார்பில் தூத்துக்குடியில் சத்தியசீலன் தலைமையில் வ உசி யின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிப்பு

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு வீ தி லீடர்ஸ் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி, செப்.5:

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், தூத்துக்குடி மண்ணின் மைந்தர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 155வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

thoothukudileaks


விடுதலைப் போராட்ட வீரரான வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளை முன்னிட்டு, அரசு சார்பிலும், அதிமுக, திமுக, தவெக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக, போராட்ட அமைப்புகள் சார்பிலும் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 


மேலும், அவரது தியாகம், சுதேசி உணர்வு மற்றும் கொள்கைகளைப் பின்பற்றுவோம் என பல்வேறு அமைப்பினர் உறுதிமொழியும் ஏற்று வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் திருவுருவச் சிலைக்கு, வீ தி லீடர்ஸ் (We The Leaders)  சார்பில் சத்தியசீலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


thoothukudileaks


இந்த நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் அண்ணாமலையின்  வீ தி லீடர்ஸ் அரசியல் அமைப்பின் சார்பில் தூத்துக்குடி யில் உவரி சத்தியசீலன் தலைமையில் ....

அவருடன் அமைப்பின் தொண்டர்கள்  திரளாக கலந்து கொண்டு, வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

வ.உ.சிதம்பரனாரின் விடுதலைப் போராட்ட தியாகம் மற்றும் சுதேசி சிந்தனைகளை நினைவுகூர்ந்த அவர்கள், அவரது உயரிய கொள்கைகளையும், நாட்டுப்பற்றையும் இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

video 

கப்பலோட்டிய தமிழனின் 155வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வீ தி லீடர்ஸ் அமைப்பினர் தொண்டர்கள் புடைசூழ கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. 155வது பிறந்தநாள் தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. 155வது பிறந்தநாள்
தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி, செப்.5:

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மல் எனப் போற்றப்படும் வ.உ. சிதம்பரனாரின் 155வது பிறந்தநாள் விழா இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது.

thoothukudileaks




இதையொட்டி, தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள ஜயா வ.உ. சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கவுன்சிலர்கள் 

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வ.உ. சிதம்பரனாரின் உருவப்படம் மற்றும் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நாட்டின் விடுதலைக்காகவும், சுதேசி கப்பல் இயக்கத்தின் மூலம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகவும் போராடிய வ.உ. சிதம்பரனாரின் தியாகத்தையும், அவரது வீர வரலாற்றையும் நினைவுகூரும் வகையில் அவரது 155வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 155வது பிறந்தநாள் விழா வ உ சி சிலை முன்பு மதுரா கோட்ஸ் அரசு நில மீட்பு குழு பரபரப்பு உறுதி மொழி

Tamil Nadu updates, 

photo news by Arunan Reporter 

மதுரா கோட்ஸ் அரசு நில மீட்பு குழு சார்பில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 155வது பிறந்தநாள் விழா மாலை அணிவித்து மரியாதை; பரபரப்பு உறுதிமொழி!

தூத்துக்குடி, செப்.5:

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், சுதந்திரப் போராட்டத் தியாகி ஐயா வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரா கோட்ஸ் அரசு நில மீட்பு குழு சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

thoothukudileaks








இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏஐசிசிடியூ தேசிய செயற்குழு உறுப்பினர் மின்னல் அம்ஜத், புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரி செல்வம் உள்ளிட்டோர் வ.உ.சி. திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரா கோட்ஸ் அரசு நிலத்தை தமிழக அரசு உடனடியாக மீட்டெடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.

thoothukudileaks


இந்த நிகழ்ச்சியில் தாயக மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஆர். அகமது, தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு மாநிலத் தலைவர் தூத்துக்குடி சம்சுதீன், மக்கள் அதிகார கழக மாவட்ட செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா, தோழர் தமிழ் வேந்தன், இருதய நண்பர்கள் இயக்க மாநில செயலாளர் மா. தங்கையா, பொருளாளர் ஏ. பிரின்ஸ், முன்னாள் மாநகராட்சி உறுப்பினர், எஸ். முகமது ஷாஜகான், அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு பொருளாளர் ஏ. நைனா முகமது, ஏஐசிசிடியூ மாநிலத் துணைத் தலைவர் சகாயம், அய்யாவழி கிருஷ்ணவேணி, அந்தோணியார் கோவில் மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், அரசு நிலத்தை மீட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுக வினர் மாலை அணிவிப்பு

Tamil Nadu updates

 photo news by Arunan Reporter 

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாள் விழா

தூத்துக்குடி, செப்.5:

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தியாகத்தின் உச்சத்தைத் தொட்ட சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசி இயக்கத்தின் முன்னோடியுமான செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாள் விழா இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது.


வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

thoothukudileaks


தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

thoothukudileaks



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மகளிர் அணி,மாநகர, பகுதி மற்றும் வட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

thoothukudileaks




மேலும், அனைத்து சார்பு அணிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட, மாநகர மற்றும் பகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் ஏராளமான தி.மு.க. தொண்டர்களும் பங்கேற்று செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாருக்கு மரியாதை செலுத்தினர்.

புதன், 2 செப்டம்பர், 2026

கோவில்களில் செல்போன் அனைவருக்கும் பாரபட்சம் இன்றி தடை விதிப்பு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு இந்து சேனா மாநிலத் தலைவர் அருள்வேலன் ஜி கோரிக்கை!!!. அர்ச்சகர்கள், அலுவலகப் பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் விஐபிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கக் கூடாது.

இந்து கோவில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு அனைவருக்கும் ஒரே மாதிரியான தடை வேண்டும்

தமிழக அரசுக்கு இந்து சேனா மாநிலத் தலைவர் அருள்வேலன் ஜி கோரிக்கை

தூத்துக்குடி:

தமிழக கோயில்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அமைதியான சூழலில் வழிபடுவதற்காக வருவதாகவும், கோயில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் நடவடிக்கை சரியானதே என்றும் இந்து சேனா தேசிய பேரியக்கத்தின் மாநிலத் தலைவர் அருள்வேலன் ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:

கோயில்களில் பக்தர்களுக்கு மட்டும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து, அர்ச்சகர்கள், அலுவலகப் பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் விஐபிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கக் கூடாது. 


கோயில் வளாகத்திற்குள் அனைவருக்கும் எந்தவித வேறுபாடுமின்றி ஒரே மாதிரியான முழுமையான செல்போன் பயன்பாட்டுத் தடை அமல்படுத்தப்பட வேண்டும்.

thoothukudileaks


 இல்லையெனில் பக்தர்களிடையே வேறுபாடு ஏற்படும் நிலை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், கோயில்களுக்கு வரும் பக்தர்களிடம் தரிசனக் கட்டணம், உடைமைகள் மற்றும் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கான கட்டணம், காலணி வைப்பதற்கான கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவது பக்தர்களுக்கு கூடுதல் சுமையையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

எனவே, கோயில்களில் பக்தர்கள் கட்டணமின்றி தரிசனம் செய்யவும், அவர்களின் பொருட்கள், காலணிகள் மற்றும் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கும் கட்டணமின்றி வசதி செய்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இந்துக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஒட்டுமொத்த இந்துக்களின் சார்பில் தமிழக அரசுக்கு இந்து சேனா தேசிய பேரியக்கத்தின் மாநிலத் தலைவர் அருள்வேலன் ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

தமிழக அரசின் நிலைப்பாடு சிபிஐ(எம்) எதிர்ப்பு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்த்தில் துப்பாக்கிச்சூடு கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை தேவை!

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை தேவை!

தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

தூத்துக்குடி: செப் 1

2018-ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்வதுடன், குற்ற வழக்குகளைப் பதிவு செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

thoothukudileaks


இதுகுறித்து 01.09.2026 அன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட்டை எதிர்த்த போராட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் பொறுப்பற்ற தன்மை, அத்துமீறல் காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், இதில் 13 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளித்ததாகவும், அதில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 17 காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வட்டாட்சியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்வதுடன், குற்ற வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்த ஆணையம் பரிந்துரைத்ததாகவும் சிபிஐ(எம்) மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.


தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு சிபிஐ(எம்) எதிர்ப்பு

31.08.2026 அன்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்த கருத்துகள், கொலைக்கு காரணமான அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டதாக இருப்பதாக சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், மக்கள் சுட்டிக்காட்டிய சுற்றுச்சூழல் சீர்கேடுகள் தொடர்பாக ஸ்டெர்லைட் நிர்வாகமோ அல்லது அரசு அமைப்புகளோ உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தற்போதைய தமிழக அரசு, முந்தைய திமுக அரசு மேற்கொண்ட நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.

13 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமானதாக ஆணையத்தால் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய துறைவாரியான நடவடிக்கை மற்றும் குற்ற வழக்குகளைப் பதிவு செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆணையம் பரிந்துரைத்த இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.

— பெ.சண்முகம், மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ(எம்))



செய்தி புகைப்படங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது