வ.உ.சி. 155வது பிறந்தநாள்: ஒட்டப்பிடாரத்தில் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி, செப். 6-
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், 'கப்பலோட்டிய தமிழன்', 'செக்கிழுத்த செம்மல்' எனப் போற்றப்படுபவருமான வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 155வது பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அமைந்துள்ள திருஉருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய முக்கிய தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த வ.உ. சிதம்பரம் பிள்ளை, வழக்கறிஞர், எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் மற்றும் தொழிற்சங்கத் தலைவர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கினார். அவரது 155வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி. நினைவு இல்லத்தில் சிறப்பு மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என். தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., கழக மகளிர் அணி செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ப. மோகன், கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன், கழக வர்த்தக அணிச் செயலாளரும், தூத்துக்குடி மாநகரக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன், கழக அமைப்புச் செயலாளரும், கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளருமான என். சின்னதுரை உள்ளிட்டோர் வ.உ.சி. திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன், சின்னப்பன், கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் முடிமண் ராமசாமி, மாவட்ட பொருளாளர் சேவியர், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் ஜூலியட், பத்மாவதி, கோவில்பட்டி நகரச் செயலாளர் விஜயபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் எம்.ஆர்.வி. கவியரசன், எம். பெருமாள், டாக்டர் எஸ்.எம்.ஏ. கோசல்ராம்ராஜா, பில்லா விக்னேஷ், ஜாக்சன் துரைமணி, டேக் ராஜா, என்.ஜி. ராஜேந்திரன், ரத்தினராஜ், மாரிமுத்து பாண்டியன், கோடையடி ராமசாமி, வேல்முருகன், சதீஷ்குமார், சரவணகுமார், மோகன், நித்திஷ் கண்ணன், சாமிராஜ், ராஜ்குமார், செல்வம், பாலகணேஷ், கார்த்திக் ராம், அக்ரி மாரிமுத்து, பொன்மலர், மனுவேல் ராஜ், சரவண பெருமாள், நிலாசந்திரன், ஜீவாபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒன்றியச் செயலாளர்கள் அன்புராஜ், பழனிச்சாமி, போடுசாமி, தனஞ்செயன், தனவதி, மகேஷ், பால்ராஜ், ராமசந்திரன், செல்வகுமார், வண்டானம் கருப்பசாமி, லெட்சுமண பெருமாள், காசிராஜன், பால்துரை, பேரூராட்சி கழகச் செயலாளர்கள் ராஜ்குமார், ஆண்டி, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ஆர். ராஜகோபால், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம், பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரைபாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் ஜெயந்தி, ராஜேஸ்வரி, சாந்தி, தமிழரசி, அன்னபாக்கியம், ஜெயபார்வதி, வட்டக் கழகச் செயலாளர் ராஜசேகர், பாலஜெயம், சாம்ராஜ், தளவாய்ராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வ.உ.சி.க்கு மரியாதை செலுத்தினர்.











