இமானுவேல் சேகரனார் மகாகவி பாரதியார் நினைவு நாள்
தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி, செப்.11:
தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு நாளும், மகாகவி பாரதியாரின் 105-வது நினைவு நாளும் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 11-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதேபோல், எட்டயபுரத்தில் பிறந்த மகாகவி பாரதியாரின் 105-வது நினைவு நாளும் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது எழுச்சிமிக்க கவிதைகள் மற்றும் விடுதலை உணர்வை ஏற்படுத்திய படைப்புகளை நினைவுகூர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று காலை 10 மணியளவில் திமுக சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் தலைமை வகித்தார். அப்போது தியாகி இமானுவேல் சேகரனார் மற்றும் மகாகவி பாரதியார் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் திமுக நிர்வாகிகள், கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இரு தலைவர்களின் நினைவுகளைப் போற்றி மரியாதை செலுத்தினர்.







