புதன், 26 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடியில் பத்திரிகையாளர்களுக்காக நடைபெற்ற சிறப்பு இலவச கண் பரிசோதனை முகாம்

 Tamil Nadu update photo news by Arunan Reporter 

தூத்துக்குடி யில்.... பத்திரிகையாளர்களுக்காக நடைபெற்ற சிறப்பு இலவச கண் பரிசோதனை முகாம்


தூத்துக்குடி: ஆக 26

தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் பயன்பெறும் வகையில், தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.

thoothukudileaks


தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள வாசன் கண் மருத்துவமனை அலுவலகத்தில் நடைபெற்ற முகாமிற்கு பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் மோகன்ராஜ், துணைத்தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


வாசன் கண் மருத்துவமனை சார்பில் மருத்துவர் சுகுமார், தூத்துக்குடி அலுவலக மேலாளர் வைத்தியநாதன், மார்க்கெட்டிங் மேலாளர்கள் ராமராஜன், ரீகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வரவேற்றனர்.


முகாமை வாசன் கண் மருத்துவமனை இயக்குநரும், மூத்த மருத்துவருமான டாக்டர் கனிமொழி தொடங்கி வைத்து பேசினார்.


அப்போது டாக்டர் கனிமொழி கூறுகையில், ...

கண் பார்வை என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமானது. 3 வயது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பார்வைக் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சையை விரைவாக மேற்கொள்வது நல்லது” என்றார்.


மேலும், தற்போது கண் மருத்துவத் துறையில் நவீன சிகிச்சை முறைகள் வந்துள்ளதுடன், பல்வேறு கண் குறைபாடுகளுக்கு லேசர் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

செல் போன் பார்ப்பது ..

கண்களுக்கு ஆபத்து !!!

குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், செல்போன், மடிக்கணினி, இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை நீண்ட நேரம் தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டர் கனிமொழி அறிவுறுத்தினார்.


 குறிப்பிட்ட இடைவெளிகளில் கண்களுக்கு ஓய்வு அளித்து பயன்படுத்துவது அவசியம் என்றும் அவர் கூறினார்.

thoothukudileaks

thoothukudileaks


“வாசன் கண் மருத்துவமனை சார்பில் பல்வேறு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர். 

பெருமிதம் 

தற்போது பத்திரிகையாளர்களுக்காக இந்த முகாமை நடத்துவதில் எங்கள் நிறுவனம் பெருமை கொள்கிறது” என்றும் டாக்டர் கனிமொழி தெரிவித்தார்.


video 

முகாமில் பிரஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பல்வேறு வகையான கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 


தொடர்ந்து, பிரஸ் கிளப் நிர்வாகிகள் வாசன் கண் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கௌரவிக்கப்பட்டனர்.


நிகழ்ச்சியில் சங்கத்தின் கௌரவ ஆலோசகர்கள் அருண், பாலகிருஷ்ணன், அன்பழகன், செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், மாரி ராஜா, ராஜன், இருதயராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் காதர் மைதீன், அகமதுஜான், கற்பகநாதன், ராமச்சந்திரன், பாலகுமார், நீதிநாதன், அருள்ராஜ் உள்ளிட்ட பலர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.


பத்திரிகையாளர்களுக்காக சிறப்பாக கண் பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்த வாசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் நன்றி தெரிவித்தார். முகாமில் வாசன் கண் மருத்துவமனை ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

திமுக நிர்வாகிகள் பதவிக்கு வயது வரம்பு நடைமுறை சிக்கல்கள் குறித்து தலைமை ஆலோசிக்க வேண்டும்

திமுக நிர்வாகிகள் பதவிக்கு வயது வரம்பு  நடைமுறை சிக்கல்கள் குறித்து தலைமை ஆலோசிக்க வேண்டும்


தூத்துக்குடி: ஆக 26

 திமுகவின் சமீபத்திய செயற்குழு கூட்டத்தில் கட்சி அமைப்பில் மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பகுதி செயலாளர், வட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட அமைப்பு பதவிகளுக்கு வயது வரம்பு மற்றும் பதவிக்காலம் தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து கட்சியினர் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது.

thoothukudileaks


இதன்படி, குறிப்பிட்ட அமைப்பு பதவிகளை இரண்டு முறை மட்டுமே வகிக்க முடியும் என்றும், வட்ட செயலாளர் 45 வயது வரை மட்டுமே அந்தப் பதவிகளில் தொடர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதனால், 45 வயதுக்குள் ஒரு நிர்வாகியின் பதவிக்காலம் முடிவடைந்தால், அடுத்த கட்டத்தில் கட்சியில் அவருக்கு எந்த பொறுப்பு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளதாக திமுக நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.


மேலும், நீண்ட காலமாக கட்சிப் பணியாற்றி வரும் நிர்வாகிகள் திடீரென பதவியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டால், அவர்களைவிட வயது குறைந்த புதிய நிர்வாகிகள் அதே பொறுப்புக்கு வரக்கூடும். அப்போது, இதுவரை பொறுப்பில் இருந்த மூத்த நிர்வாகிகள் புதிய நிர்வாகிகளின் கீழ் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படுவதால், கட்சிக்குள் சில சங்கடங்களும் நடைமுறைச் சிக்கல்களும் உருவாக வாய்ப்புள்ளதாக நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


கட்சியின் வளர்ச்சிக்காக இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வரும் அனுபவமிக்க நிர்வாகிகளின் பங்களிப்பையும் கருத்தில் கொண்டு, வயது வரம்பு மற்றும் பதவிக்காலம் தொடர்பான விதிமுறைகளை திமுக தலைமை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.


எனவே, இந்த விவகாரம் குறித்து திமுக தலைமை நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்து, கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கும் நிர்வாகிகளின் அனுபவத்திற்கும் ஏற்ற வகையில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடி மாநகராட்சி அழைப்பு ?முதல் பரிசு 10 ஆயிரம் தூத்துக்குடி மாநகராட்சியில் ‘குரு வனம்’ ஆசிரியர் தின பசுமை திருவிழா விவரம் படிக்க....!!!

Tamil Nadu updates, 

photo news by Arunan Reporter 

தூத்துக்குடி மாநகராட்சியில் ‘குரு வனம்’ ஆசிரியர் தின பசுமை திருவிழா ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி....


தூத்துக்குடி: ஆக 25

தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தமிழ்நாடு பசுமை இயக்கம் – நகர பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் ‘குரு வனம் – ஆசிரியர் தின பசுமை திருவிழா’ நடத்தப்பட உள்ளது.



ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக, தூத்துக்குடி மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் மாபெரும் பசுமை இயக்கம் செயல்படுத்தப்பட உள்ளது. 

thoothukudileaks



தேசிய ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை... ஒரு வார காலம் இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது.


இதன் ஒரு பகுதியாக பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள், அரசு அலுவலகங்கள், சாலையோரங்கள், வழிபாட்டுத் தலங்கள், தனியார் நிறுவனங்கள், நீர்நிலைப் பகுதிகள், தனியார் காலியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரிப்பதற்கும், அவற்றுக்கு தேவையான தண்ணீர் வழங்குவதற்கும் மாநகராட்சி சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இந்த மாபெரும் பசுமை இயக்கத்தில் மாணவர்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்க மாநகராட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மண்டல வாரியான தொடர்பு அலுவலர்கள்


கிழக்கு மண்டலம்: வீ. அரி கணேசன் – 98425 30292

வடக்கு மண்டலம்: சி. ராஜசேகரன் – 80563 47075

தெற்கு மண்டலம்: ஜி. ஸ்டாலின் பாக்கியநாதன் – 94435 28621

மேற்கு மண்டலம்: சு. ராஜபாண்டியன் – 94436 10511


மரக்கன்றுகள் தேவைப்படுவோர் மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்ய இடவசதி உள்ளவர்கள் மேற்கண்ட மண்டல வாரியான அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.


சிறப்பாக செயல்படுவோருக்கு பரிசுகள்


‘குரு வனம் – ஆசிரியர் தின பசுமை திருவிழா’வில் சிறப்பாக செயல்படும் கல்வி நிறுவனங்கள், பசுமைப் படைகள், நாட்டு நலப்பணி திட்டம், சாரணர் இயக்க அணிகள், அரசு அலுவலகங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.


பசுமை ஆர்வலர் கேடயம்!!!

மேலும், சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.5,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 மற்றும் ‘பசுமை ஆர்வலர்’ கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.


ஆசிரியர் கெளரவிப்பு அனைவரும் பங்கேற்க வேண்டும்!!!

ஆசிரியர் பணியை கௌரவிப்பதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரங்களின் அவசியம் மற்றும் பசுமையின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இப்பசுமை திருவிழாவில் அனைத்து தரப்பினரும் பெருவாரியாக பங்கேற்க வேண்டும் என்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சி. பிரியங்கா, இ.ஆ.ப., கேட்டுக்கொண்டுள்ளார்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 74 வது பிறந்த நாள் தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி உற்சாகக் கொண்டாட்டம்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 74 வது பிறந்த நாள் தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி உற்சாகக் கொண்டாட்டம்!

தூத்துக்குடி (ஆக. 25):

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், கேப்டனுமான விஜயகாந்தின் 74-வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் மாவட்டத்தில் பட்டாசு வெடித்துக் பொது மக்களுக்கு இனிப்பு லட்டு மற்றும் இலவச  அரிசி வேட்டி சேலை நலத் திட்டங்கள் வழங்கி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

thoothukudileaks


இது பற்றிய செய்தியாவது:- 

தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நகரின் பல்வேறு பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

thoothukudileaks


தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்டங்கள்:

 தூத்துக்குடி போல்டன்புரம்: மாவட்டத் துணைச் செயலாளர் லிவிங்ஸ்டன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இலவச அரிசி பைகள் மற்றும் லட்டுகள் வழங்கப்பட்டன.


  தூத்துக்குடி அண்ணா நகர்: பகுதிச் செயலாளர் வல்லரசு ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகள், அரிசி பைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

thoothukudileaks


thoothukudileaks

thoothukudileaks



 தூத்துக்குடி இரண்டாம் ரயில்வே கேட்: பகுதிச் செயலாளர் நாராயண மூர்த்தி ஏற்பாட்டில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி விழா சிறப்பிக்கப்பட்டது.

thoothukudileaks





இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் அலெக்சாண்டர் மற்றும் தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு கேப்டன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.

சனி, 22 ஆகஸ்ட், 2026

நாம் ஏதோ பொழுதுபோக்கிற்காக Bore அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல, மக்களுக்காகப் போராட வந்தவர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் எழுச்சியுரை !!!

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

நாம் ஏதோ பொழுதுபோக்கிற்காக (Bore அடிக்கிறது என) அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல, மக்களுக்காகப் போராட வந்தவர்கள்!!!!!

சென்னை: திமுகவை மேலும் வலுப்படுத்தவும், மீண்டும் மக்களின் முழு நம்பிக்கையைப் பெறவும் கட்சி அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

thoothukudileaks


சென்னையில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றிய அவர், வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள தொண்டர்களும் நிர்வாகிகளும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.


கூட்டத்தில் அவர் பேசிய முக்கிய அம்சங்கள்:

  • இளைஞர்கள் மற்றும் பெண்கள் நம்பிக்கை: இளைஞர்கள் மற்றும் பெண்களின் நம்பிக்கையை மீண்டும் முழுமையாகப் பெறும் வகையில் திமுகவின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
  • புதுமுகங்களுக்கு வாய்ப்பு: கட்சி நிர்வாகத்தில் புதுமுகங்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகளவில் பொறுப்புகள் வழங்கி ஊக்குவிக்கப்பட உள்ளனர்.
  • கட்சி மறுசீரமைப்பு: திமுகவை அடிமட்டம் முதல் மறுசீரமைப்பு செய்வதன் மூலமே அரசியல் களத்தில் தொடர் வெற்றிகளைச் சாதிக்க முடியும்.
  • ஒவ்வொரு தொண்டனும் நிர்வாகி: ஒரு மாவட்டச் செயலாளரை மட்டுமே நம்பி மாவட்டத்தில் கட்சியை வளர்த்துவிட முடியாது; ஒவ்வொரு தொண்டனும் ஒரு நிர்வாகியாக உணர்ந்து செயல்படும் போதுதான் இயக்கம் வளரும்.
  • போராட்டக் குணம்: "நாம் ஏதோ பொழுதுபோக்கிற்காக (Bore அடிக்கிறது என) அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல, மக்களுக்காகப் போராட வந்தவர்கள்" என்பதை உணர்ந்து நிர்வாகிகள் சுறுசுறுப்புடன் களப்பணியாற்ற வேண்டும்.

திமுகவின் இந்த மறுசீரமைப்பு அறிவிப்பு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி பார்வையற்றோர் நலச்சங்க விழாவில் ‘திரு இருதய நண்பர்கள்’ சார்பில் நல உதவிகள் வழங்கல்

தூத்துக்குடி பார்வையற்றோர் நலச்சங்க விழாவில் ‘திரு இருதய நண்பர்கள்’ சார்பில் நல உதவிகள் வழங்கல்!

தூத்துக்குடி:

தூத்துக்குடி பார்வையற்றோர் நலச்சங்கம் சார்பில் பார்வையற்றோருக்கான நல உதவி வழங்கல் விழா, பிரையன்ட் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.


இவ்விழாவில் 'திரு இருதய நண்பர்கள்' அமைப்பினர் திரளாகக் கலந்துகொண்டு, பார்வையற்றோருக்குத் தேவையான பல்வேறு நல உதவிகளையும், தங்களது முக்கியப் பங்களிப்பையும் வழங்கினர்.
thoothukudileaks


நிகழ்ச்சியில் '....

திரு இருதய நண்பர்கள்' அமைப்பின் தலைவர் மா. தங்கையா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

அவர் பேசுகையில், "மாற்றுத்திறனாளிகளுக்குக் கரம்கொடுத்து உதவுவது நமது சமூகக் கடமை. அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இதுபோன்ற அமைப்புகள் செய்யும் பணிகள் போற்றத்தக்கவை" எனக் குறிப்பிட்டார்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


விழாவின் நிறைவில் கலந்துகொண்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் சுவையான, தரமான மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பார்வையற்றோர் நலச்சங்க உறுப்பினர்கள், திரு இருதய நண்பர்கள் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

புதன், 19 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடியில் AICCI தேசிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு 2026 கனிமொழி கருணாநிதி எம்.பி. தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் AICCI தேசிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு 2026

கனிமொழி கருணாநிதி எம்.பி. தொடங்கி வைத்தார் 

தூத்துக்குடி, ஆக.20:

தூத்துக்குடியில் AICCI National Startup Summit 2026 தேசிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாட்டின் தொடக்க விழா இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks


இந்த நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

thoothukudileaks


விழாவில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித், IRSME மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ். நாயர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.



thoothukudileaks


தேசிய அளவில் தொழில்முனைவோர், புதிய தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய தொழில் முயற்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சி, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வழிகாட்டுதல்கள் குறித்து மாநாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.



AICCI தேசிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய தொழில் முயற்சிகளுக்கு ஊக்கம் கிடைப்பதுடன், இளைஞர்கள் தொழில்முனைவோராக உருவாகும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



AICCI தலைவர் சங்கர் மாரிமுத்து, AICCI செயலாளர் சுரேஷ் குமார், நேசுரல்ஸ் இணை நிறுவனர் சி.கே.குமாரவேல் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்!


மாநாட்டை ஏற்பாடு செய்யும் குழுவில் சங்கர் மாரிமுத்து, டேவிட் ராஜா, ஜூட்ஸ் பரஞ்சோதி, பின்டோ வில்லவராயர், சுரேஷ் குமார், ஜோ பிரகாஷ், விக்னேஸ்வரன், தினேஷ் கந்தசாமி, ஜோசப் காஸ்கரினோ, பிரேம் பால், பொன்குமரன், தனுஷ் கார்த்திக், பிரேம் வெட்டி, சிசில் மச்சாடோ, மகாலிங்கம், விஸாகேஷ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.