சனி, 15 ஆகஸ்ட், 2026

சுதந்திர நாட்டில் ஜனநாயகத்தின் நிலை குறித்து தூத்துக்குடியில் PUCL கருத்தரங்கு

 

சுதந்திர நாட்டில் ஜனநாயகத்தின் நிலை குறித்து தூத்துக்குடியில் PUCL கருத்தரங்கு

தூத்துக்குடி: ஆக 16

இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமை கழகம் (Peoples Union of Civil Liberties – PUCL) சார்பில், “சுதந்திர நாட்டில் ஜனநாயகத்தின் நிலை?” மற்றும் “அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதில் நமது பங்கு?” ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது.

thoothukudileaks


thoothukudileaks


கருத்தரங்கிற்கு PUCL தூத்துக்குடி மாவட்டத் தலைவர் முனைவர் X.D. செல்வராஜ் தலைமை வகித்தார்.


 மக்கள் சிவில் உரிமை கழகத்தின் முன்னாள் செயலாளரும், தற்போதைய மாநிலக் குழு உறுப்பினருமான பேராசிரியை பாத்திமா பாபு முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் பிரிட்டோ கலந்து கொண்டு, அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் மற்றும் குடிமக்களின் உரிமைகள் குறித்து விரிவாக கருத்துரையாற்றினார்


thoothukudileaks



PUCL மாவட்டச் செயலாளரும் வழக்கறிஞருமான  ராஜா வரவேற்புரையாற்றினார்.


கருத்தரங்கில் ...

அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள அடிப்படை உரிமைகள் குறித்து விளக்கப்பட்டதுடன், ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான முக்கியமான சட்ட விதிகள் மற்றும் சட்டப்பிரிவுகள் குறித்தும் விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

சிறப்பு அழைப்பாளர்!!!

மேலும், கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு சிறப்பு அழைப்பாளர் வழக்கறிஞர் பிரிட்டோ பதிலளித்து விளக்கமளித்தார். 


thoothukudileaks


இதன் மூலம் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் குடிமக்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பங்கேற்பாளர்களிடையே ஏற்படுத்தப்பட்டது.

மாநிலக் குழு உறுப்பினர் பேராசிரியை பாத்திமா பாபு

நிகழ்ச்சியின் நிறைவில், சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் பிரிட்டோ அவருக்கு PUCL தூத்துக்குடி மாவட்டத் தலைவர் முனைவர் X.D. செல்வராஜ் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் பேராசிரியை பாத்திமா பாபு ஆகியோர் இணைந்து நினைவுப் பரிசு வழங்கினர்.

நன்றி தெரிவிப்பு!!!

கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் PUCL மாவட்டச் செயலாளர் தெர்மல் ராஜா நன்றி தெரிவித்தார்.

thoothukudileaks


வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் 80வது சுதந்திர தின விழா

 

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் 80வது சுதந்திர தின விழா


தூத்துக்குடி: ஆக 15 தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நாட்டின் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் வடக்கு மண்டலத் தலைவர் தொ. நிர்மல் ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

thoothukudileaks

thoothukudileaks


விழாவில் வடக்கு மண்டல உதவி ஆணையர் எம். முனீரு அகமது, சுகாதார அலுவலர் ராஜசேகரன், துணை மேயர் ஜெனிட்டா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கீதா முருகேசன், ரெங்கசாமி, அந்தோணி மார்சிலின், நாகேஸ்வரி, பவானி மார்சல், ஜெயசீலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



தொடர்ந்து, வடக்கு மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களை பாராட்டும் வகையில், வடக்கு மண்டலத் தலைவர் தொ. நிர்மல் ராஜ் மற்றும் உதவி ஆணையர் எம். முனீரு அகமது ஆகியோர் நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.


முன்னதாக சுதந்திர தின விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு, விழா மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சியில் 80 வது சுதந்திர தின விழா மேயர் ஜெகன் பெரியசாமி தேசியக் கொடியேற்றினார்

தூத்துக்குடி மாநகராட்சியில் 80 வது சுதந்திர தின விழா மேயர் ஜெகன் பெரியசாமி தேசியக் கொடியேற்றினார்


தூத்துக்குடி: ஆக 15 

இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தின விழா தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

thoothukudileaks


நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் மாநகராட்சி மாமன்ற கவுன்சிலர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றி வரும் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் நற்சான்றிதழ்களை வழங்கினர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தது, அவர்களிடையே மேலும் சிறப்பாக பணியாற்றும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

போதை இல்லா தமிழகம்தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தப் பணியாளர்களுக்கு மராத்தான் போட்டி

 போதை இல்லா தமிழகம்தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தப் பணியாளர்களுக்கு மராத்தான் போட்டி


தூத்துக்குடி: இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் சங்கம் சார்பில் ஒப்பந்தப் பணியாளர்களுக்கான மராத்தான் ஓட்டப் போட்டி “போதை இல்லா தமிழகம்” என்ற தலைப்பில் நடைபெற்றது.

thoothukudileaks


ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற இப்போட்டியை தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர்  பாட்டில் கிருஷ்ணா பப்ருவான், இ.ஆ.ப., தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

thoothukudileaks

thoothukudileaks


இதில் அனல்மின் நிலைய ஒப்பந்தப் பணியாளர்கள் பெருந்திரளாகவும், மிகுந்த உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


மராத்தான் போட்டியில் ...

முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுக் கேடயத்துடன் முறையே ரூ.5,000, ரூ.3,000 மற்றும் ரூ.2,000 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. 


மேலும் 4-வது இடம் முதல் 13-வது இடம் வரை பெற்றவர்களுக்கு தலா ரூ.1,000 ஊக்கப் பரிசாக வழங்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து “பெண்கள் பாதுகாப்பு” என்ற தலைப்பில் ஓவியப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் ஆண், பெண் போட்டியாளர்களுக்கு தனித்தனியாக முதல் மூன்று இடங்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.


பரிசுகளை பெண் ஆளுமைகளைப் போற்றும் வகையில்,...

 காவல் துறை துணைக் கண்காணிப்பாளரும் தூத்துக்குடி அனல்மின் நிலைய பாதுகாப்பு அதிகாரியுமான  கே.கிருஷ்ணவேணி, 

தொழிலக சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறை துணை இயக்குநர்  விமலாதேவி,


 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் அமலாக்க அதிகாரி  அமுதா மற்றும் தெர்மல் நகர் காவல் நிலைய ஆய்வாளர்  சோபா ஜென்சி ஆகியோர் வழங்கினர்.


விழா ஏற்பாடுகளை தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் சங்கத் தலைவர் திரு. அன்புராஜ் ஜெபசிங், செயலாளர் திரு. ஹீரா ஜான் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திரு. சொ. ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.


போட்டிகளை அனல்மின் நிலைய விளையாட்டு அலுவலர் திரு. மங்கள ஜெயபால் தலைமையில் திரு. ராஜா முகமது, திரு. ஜெபராஜ், திரு. சிவகுமார், திரு. முகமது அலி, திரு. பெத்துராஜ் மற்றும் திரு. பிரதிபன் ஆகியோர் சிறப்பாக நடத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் ஒப்பந்தக்காரர்கள் சங்க நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.


தொடர்ந்து தூத்துக்குடி அனல்மின் நிலைய பிரதான நுழைவாயில் பகுதியில் மேடை அமைத்து பரிசளிப்பு மற்றும் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஒப்பந்தப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்.


மேலும், இதுபோன்ற விளையாட்டு மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும், வரும் ஆண்டுகளில் கபடி, கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட கூட்டு விளையாட்டுப் போட்டிகளையும் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஒப்பந்தக்காரர்களும் ஒப்பந்தப் பணியாளர்களும் அண்ணன்–தம்பி என்ற சகோதர பாசத்துடன் பழகி வருவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்த அவர்கள், ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் முயற்சிகளை வெகுவாகப் பாராட்டினர்.


நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து ஒப்பந்தக்காரர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், விளையாட்டு வீரர்கள், விழாக்குழுவினர் மற்றும் போட்டிகளை சிறப்பாக நடத்திய விளையாட்டு அலுவலர் மற்றும் அவரது குழுவினருக்கும் சங்கப் பொருளாளர் திரு. பாக்கியம் நன்றி தெரிவித்தார்.


மேலும், அருண் நர்சரி உரிமையாளர் . கார்த்திக் மற்றும் ஒலி–ஒளி அமைப்புகளை வழங்கிய எஸ்.ஆர். சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர்  மூர்த்தி ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.


போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் விளையாட்டு விழிப்புணர்வை ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, அனல்மின் நிலைய ஒப்பந்தப் பணியாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தூத்துக்குடியில் காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Tamil Nadu updates, 

photo news by Arunan Reporter

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மல்லிகார்ஜுன் கார்கேவை அவமதித்ததாக பாஜகவினருக்கு எதிர்ப்பு

தூத்துக்குடி: ஆக14
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்  மல்லிகார்ஜுன் கார்கே எம்.பி.யை அவமதிக்கும் வகையில் பாஜகவினர் செயல்பட்டதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி ஒன்றாம் ரயில் நிலையம் கேட் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு நடைபெற்ற இந்தியப் தேசிய காங்கிரஸ் தூத்துக்குடி மாநகர் மாவட்ட சார்பில்....

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, காங்கிரஸ் கொடிகளை ஏந்தியபடி பாஜகவினருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

thoothukudileaks


மல்லிகார்ஜுன் கார்கேவை அவமதிக்கும் வகையில் நடைபெற்ற சம்பவத்திற்கு பாஜகவினர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் அவமதிக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



மேலும், ஜனநாயக அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தலைவர்களின் தனிப்பட்ட மரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள்  கலந்து கொண்டனர்.

அதிமுக கட்சியில் குழப்பம் விளைவிக்கும் 4 பேரை நீக்க வேண்டும் முன்னாள் எம்.எல்.ஏ சிங்காரம் பேச்சு! விவசாயிகளுக்கு தவெக அரசு துரோகம் செய்துவிட்டது! தூத்துக்குடி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் குற்றச்சாட்டு!

 

நாள்: 15.08.2026 | இடம்: தூத்துக்குடி

விவசாயிகளுக்கு தவெக அரசு துரோகம் செய்துவிட்டது!

தூத்துக்குடி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் குற்றச்சாட்டு!

தூத்துக்குடி: வாக்குறுதி அளித்தபடி அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் முழுமையாக ரத்து செய்யாமல் ஏமாற்றி வரும் விஜய் தலைமையிலான தவெக அரசைக் கண்டித்தும், மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனம் காட்டி காவிரியின் உரிமையை மீட்கத் தவறியதைக் கண்டித்தும் தூத்துக்குடியில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.


அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியின் உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் நேற்று (14.08.2026) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 

thoothukudileaks


இதன் ஒருபகுதியாக, ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில், தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே காலை 11 மணியளவில் இப்போராட்டம் நடைபெற்றது.

தேர்தலுக்கு முன் ஒன்று... பின் ஒன்று...

இவ்வார்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி அதிமுக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு-தெற்கு மாவட்டச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசியதாவது:

"தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடனும், 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50% கடனும் ரத்து செய்யப்படும் என தவெக அரசு அறிவித்தது. ஆனால், தற்போது வெறும் ₹75,000 மட்டுமே தள்ளுபடி செய்து விவசாயிகளை வஞ்சித்துள்ளது. இதற்கு சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டே சாட்சி.

ஜெயலலிதா உச்சநீதிமன்றம் வரை போராடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டினார். ஆனால், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கும் வேளையில், தவெக அரசு அதைத் தடுக்க துப்பில்லாமல் சட்டமன்றத்தில் தீர்மானம் என்ற நாடகத்தை நடத்துகிறது. முதல்வர் விஜய் ஒரு பொம்மை முதல்வராகச் செயல்படுகிறார்."

மேலும், "அதிமுக ஆட்சி அமைந்திருந்தால் மகளிர் கணக்கில் மாதம் ₹2,500 மற்றும் வங்கி கணக்கில் ₹10,000 டெபாசிட் செய்யப்பட்டிருக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

கட்சியில் குழப்பம் விளைவிக்கும் 4 பேரை நீக்க வேண்டும் முன்னாள் எம்.எல்.ஏ சிங்காரம் பேச்சு!

இதனைத் தொடர்ந்து அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சிங்காரம் பேசுகையில், கட்சியின் உள்கட்சி விவகாரங்கள் குறித்து அதிரடியாகப் பேசினார்:

"முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிமுகவை பலவீனப்படுத்த நினைக்கிறார். கட்சியிலிருந்து விலகி மீண்டும் பொதுச்செயலாளர் எடப்பாடியாரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்து இணைந்த சிலர், மீண்டும் கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

20-25 ஆண்டுகள் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை அனுபவித்துவிட்டு, இப்போது கட்சிக்கு துரோகம் செய்கிறார்கள். எம்.எல்.ஏ பதவி பறிபோய்விடும் என்பதால் தாங்களாகவே வெளியேறாமல், கட்சியிலிருந்து தம்மை நீக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

54 ஆண்டுகால கழகத் தொண்டனாகவும், அமைப்புச் செயலாளராகவும் பொதுச்செயலாளருக்கு நான் வைக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான்—கட்சியில் குழப்பத்தை விளைவித்து வரும் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விசுவநாதன், கே.பி. அன்பழகன் ஆகிய 4 பேரை நீக்கினாலே இயக்கத்தின் அனைத்துக் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஏழை எளிய சாமானியனின் இயக்கமான அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது!"


thoothukudileaks

thoothukudileaks

 

திரளான நிர்வாகிகள் பங்கேற்பு

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச்செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட அவைத் தலைவர்கள் திருப்பாற்கடல், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் என்.கே.பெருமாள், மோகன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் இரா.ஹென்றி, செங்கான், இலக்கிய அணி இணைச்செயலாளர் முடிமண் ராமசாமி, வழக்கறிஞர் பிரிவு ஈஸ்வரமூர்த்தி, சிறுபான்மை பிரிவு முஸ்தப்பா, முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, மாவட்டப் பொருளாளர் சேவியர் வெம்பூரார், சந்தானம், முருகேஸ்வரி, செரினா, ராமகிருஷ்ண கார்த்திக்,

மாவட்ட சார்பு அணிச் செயலாளர்கள் எம்.பெருமாள், கே.விஜயகுமார், பில்லா விக்னேஷ், டேக் ராஜா, ஜெயச்சந்திர பிரபாகர், நடராஜன், டார்சன், ஜே.ஜே. தனராஜ், எம்.ஆர்.வி கவியரசன், அருண்ஜெபக்குமார், பத்மாவதி கனகசுந்தரம், என்.ஜி.ராஜேந்திரன், ஜாக்சன் துரைமணி, டாக்டர் எஸ்.எம்.ஏ.கோசல்ராம்ராஜா, சோலைசாமி,  பால கணேசன், லட்சுமண பெருமாள் தலைமைக் கழக பேச்சாளர்கள் எஸ்.டி.கருணாநிதி, முரகானந்தம், எஸ்.ஆர்.சுகந்தன்ஆதித்தன், இளங்கோ, சரவணபெருமாள், கல்வி குமார், நிலா சந்திரன், கே.என்.ஆனந்தராஜ், பகுதி செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், சுடலைமணி, நட்டார்முத்து, நகரச் செயலாளர்கள் விஜயபாண்டியன், மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், அழகேசன், ராஜ்நாராயணன், அப்பாதுரை, மனோகரன், குணசேகரன், செல்வகுமார், வண்டானம் கருப்பசாமி, அன்புராஜ், அழகர்சாமி, போடுசாமி, பால்ராஜ், தனஞ்செயன், தனவதி, மகேஷ், ராமசந்திரன், கால்வாய் பரமசிவம், ஜவஹர், பேரூராட்சி செயலாளர்கள் வேதமாணிக்கம், செந்தில் ராஜகுமார், துரைசாமிராஜா, அசோக்குமார், அரசகுரு, அறுமுகநயினார், கிங்ஸ்லி ஸ்டாரிலிங், கோபாலகிருணணன்,  வீரவெற்றிவேல், மாரிமுத்து, ராஜ்குமார், ஆண்டி, முத்துராஜ், பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரைபாண்டியன், சுரேஷ்பாபு, மனுவேல்ராஜ், வெங்கடேஷ், அங்கமங்கலம் பாலமுருகன், ராஜா நேரு, ஜோஷ்வா அன்புராஜ், ஐடியல் பரமசிவன், கே.கே.பி.விஜயன், கணேசன், கொம்பையா, ஹார்பர் பாண்டி, எஸ்.கே.மாரியப்பன், ஆத்தூர் சுப்பிரமணியன், சோமசுந்தரம், மகளிர்கள் நிர்வாகிகள் முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, தேவவிண்ணரசி, ஜெயராணி, ரம்யாநாராயணன், ஞானபுஷ்பம், மெஜூலா, ஷாலினி, ஸ்மைலா, முத்துலெட்சுமி, ஜெயசுதா, மற்றும் சொக்கலிங்கம், பண்டாரவிளை பாஸ்கர், திருத்துவசிங், வெள்ளையா, சுரேஷ், பால்துரை, வக்கீல் ராஜ்குமார் புதுக்கோட்டை முருகன், நல்ல மலை செல்லத்துரை உள்ளிட்ட  அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும்  கலந்து கொண்டனர்.





 

தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேசுகையில் பாலியல் வன்முறை செய்வது பூராவுமே?.... தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் தான் என பரபரப்பு குற்றச்சாட்டு

தூத்துக்குடியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில்... இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேசுகையில்....

பாலியல் வன்முறை செய்வது.... பூராவுமே? தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் தான் என பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார் ...


தூத்துக்குடி, ஆக.15:


விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாததையும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டி, த.வெ.க. அரசை கண்டித்து தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.




thoothukudileaks


தூத்துக்குடி 12 வது மைய வாடி வாசல் அருகே உள்ள மைதானத்தில்  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. கே.சிங்காரம் ஆகியோர் தலைமை வகித்தனர்.


வடக்கு மாவட்டக் கழக அமைப்புத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.கே.பெருமாள், தெற்கு மாவட்டக் கழக அமைப்புத் தலைவர் திருப்பாற்கடல், தெற்கு மாவட்டக் கழக பொருளாளரும் முன்னாள் மேயர்கள் அந்தோனி கிரேஸி  சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஒன்றியக் கழகச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.மோகன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன் ஆகியோர் வரவேற்றனர்.


“காவிரி நீரை பெற்றுத்தர நடவடிக்கை இல்லை”


ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசுகையில், ...


காவிரி நதி நீரை தமிழகத்திற்கு பெற்றுத்தர முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார்.


தற்போது காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத்தர வேண்டிய நடவடிக்கைகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்றும், இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.


மேலும், தேர்தல் காலத்தில் சிறு, குறு விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் எஸ்.பி.சண்முகநாதன் விமர்சித்தார்.


பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு”  பரபரப்பு குற்றச்சாட்டு


தொடர்ந்து அவர் பேசும்போது, (தூத்துக்குடி மாவட்டத்தில்.).. இங்கே 

பாலியல் வன்முறை செய்வது பூரா? தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் தான் என பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார் 

மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் லாட்டரி போன்றவை அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன்...

தவெக பற்றி பேசிய வீடியோ..



thoothukudileaks



என்னாச்சு? என்னாச்சு?” – கோஷமிட்ட அதிமுகவினர்...


ஆர்ப்பாட்டத்தில், “5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெற்ற கடன் ரத்து செய்யப்படும் என்று கூறியது என்னாச்சு?”, “சிறு, குறு விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்து செய்” உள்ளிட்ட கோஷங்களை அதிமுகவினர் எழுப்பினர்.


அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் ரா.ஹென்றி தேவேந்திரன், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மைக்கேல் ஸ்டேனிஸ்பிரபு, ஈஸ்வரபாண்டியன், இலக்கிய அணி துணைச் செயலாளர் ராமசாமி, மீனவரணி இணைச் செயலாளர் ஏரோமிஸ் முன்னாள் கவுன்சிலர் மெஜிலா உள்ளிட்ட பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.


மேலும் மாவட்ட, ஒன்றிய, பகுதி கழகச் செயலாளர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிரணி, மருத்துவ அணி, ஐ.டி. விங், வழக்கறிஞர் அணி, இலக்கிய அணி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மகளிரணியினர், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.


விவசாயக் கடன் தள்ளுபடி, காவிரி நீர் உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் அப் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.