சனி, 28 பிப்ரவரி, 2026

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வைகோ மூன்று கோரிக்கைகள்கட்டபொம்மன் சத்திரம் பிரச்சினை? !

தூத்துக்குடி லீக்ஸ் | சனி, 28 பிப்ரவரி 2026

photo news by Arunan journalist 

சென்னை, 28 பிப்ரவரி:

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து மூன்று முக்கிய கோரிக்கைகளை நேரடியாக எடுத்துரைத்தார்.

கோரிக்கை 1 — காயிதே மில்லத் பல்கலைக்கழகம்:

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். இதை திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என வைகோ கோரிக்கை வைத்தார்.

thoothukudileaks


கோரிக்கை 2 — சூரிய ஒளி இலவச மின்சாரம்:

வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் கொடுப்பதை மத்திய அரசு தடுக்கும் நிலையில், சூரிய ஒளி மின்சாரம் மூலம் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என கோரினார். இந்த இரண்டு கோரிக்கைகளையும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் உடனே தெரிவிப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்தார்.

கோரிக்கை 3 — கட்டபொம்மன் சத்திரம் பிரச்சினை:

திருச்செந்தூரில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டபொம்மன் வாரிசுகள் பயன்படுத்தி வரும் கட்டபொம்மன் சத்திரத்தில் இந்த ஆண்டு நுழையக் கூடாது என அறநிலையத் துறை இணை ஆணையர் ஆணை பிறப்பித்துள்ளார். வேறொரு குடும்பத்தினர் கட்டபொம்மனின் நேரடி வாரிசு வீமராஜா அவரின் கையெழுத்தை பொய்யாக பெற்று இந்த ஆணையை பெற்றுள்ளனர். இந்த ஆணையை உடனடியாக ரத்து செய்யுமாறு வைகோ முதலமைச்சரிடம் முறையீடு செய்தார்.

உடனடியாக அமைச்சர் சேகர்பாபுவிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தனிச் செயலாளருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். மார்ச் 3ஆம் தேதி திருச்செந்தூர் கோயில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆணை ரத்தாகும் என நம்புவதாக வைகோ தெரிவித்தார்.

— மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை நிலையம், சென்னை-8, 28.02.2026


வியாழன், 26 பிப்ரவரி, 2026

சாயர்புரம் செயிண்ட் மேரீஸ் பள்ளி 24ஆம் ஆண்டு விழா

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: பெ27

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் இயங்கி வரும் செயிண்ட் மேரீஸ் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியின் 24ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் டி. சிதம்பரநாதன் தலைமை தாங்கினார்.

thoothukudileaks


Bishop Jebaraj தொடக்க ஜெபத்தை நடத்தினார். பள்ளி முதல்வர் அக்னஸ் ஜெயலின் வரவேற்புரை வழங்கி ஆண்டு அறிக்கையை வாசித்தார்.

சாயர்புரம் பாஸ்டரேட் தலைவர் ஜே. மனோகரும், மாவட்ட நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகள் சங்க செயலாளர் ஏ. ஜோசப்பும் சிறப்புரையாற்றினர். Pope Memorial Higher Secondary School தலைமையாசிரியர் சி. எட்வர்ட் ஜான்சன் பால் மற்றும் St. Mary's Girls Higher Secondary School தலைமையாசிரியர் ஆர். ஹெப்சிபா புவேலா மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களின் நடனம், நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சாயர்புரம் நகர பஞ்சாயத்து கவுன்சிலரும், மாவட்ட திமுக துணைச் செயலாளருமான ஜே. ஜெபா தங்கம் பிரேமா உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர். சிஎஸ்ஐ மறைமாவட்ட உறுப்பினர்கள் அலய்மணி, ஜெயகுமார் மற்றும் பலரும் பங்கேற்றனர்.

இறுதியாக உதவி தலைமையாசிரியர் அருள் மேரி நன்றியுரை வழங்கினார்.

விழா உற்சாகமாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.

புதன், 25 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி மாநகராட்சி 2026-27 பட்ஜெட்: ரூ.17,697 லட்சம் வருவாய் இலக்கு!வரவு செலவு அறிக்கை பட்ஜெட் எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு தூத்துக்குடி டாஸ்மாக் கடை வாடகை விடுவது குறித்து திமுக மற்றும் கூட்டணி கவுன்சிலர் கள் கடும் எதிர்ப்பு !! தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய முயற்சிதூசி இல்லா சாலைகளாக' (End to End Paving) எந்தெந்த சாலைகள் பெயர் விவரம்!

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாநகராட்சி 2026-27 பட்ஜெட்: ரூ.17,697 லட்சம் வருவாய் இலக்கு!

தூத்துக்குடி, பிப்ரவரி 26:

தூத்துக்குடி மாநகராட்சியின் 2026-2027 ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவு அறிக்கை இன்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

thoothukudileaks


தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் இன்று அவசர/சாதாரண மன்றக் கூட்டம் மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா துறை மேயர் ஜெனிட்டா மற்றும் மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நகரின் குடிநீர் விநியோகம், சாலை பழுது பார்க்கும் பணிகள், மழைநீர் வடிகால் திட்டங்கள், தூய்மை பணிகள் மற்றும் சொத்துவரி வசூல் நிலைமை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பொதுமக்கள் குறைகள் தொடர்பாக உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

நகரில் நடைபெற்று வரும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்த முன்னேற்ற அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. குறிப்பாக புதிய சாலை அமைப்பு, தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு மேயர் அறிவுறுத்தினார்.

மேலும், அரசு நலத்திட்டங்கள் மக்களுக்கு விரைவாக சென்றடைய நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சில தீர்மானங்கள் ஒருமனதாகவும், சில தீர்மானங்கள் விவாதத்திற்குப் பிறகும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் முடிவில், நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மேயர் வலியுறுத்தினார்.

மூன்று நிதி வகைகளில் உத்தேச வருவாய்:

நடப்பு ஆண்டான 2026-2027க்காக வருவாய் நிதியில் ரூ.298.77 லட்சம், குடிநீர் மற்றும் வடிகால் நிதியில் ரூ.342.79 லட்சம், கல்வி நிதியில் ரூ.327.82 லட்சம் உபரியாக வருவாய் ஈட்டப்படும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வருவாய் நிதி விவரம்:

வருவாய் நிதியில் சொத்துவரி, இதர வரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலம் ரூ.3,802.39 லட்சம், முத்திரை கட்டணம் மற்றும் கேளிக்கை வரியாக ரூ.600 லட்சம், அரசு மானியம் மற்றும் மாநில பகிர்மான நிதியாக ரூ.7,714 லட்சம், 15வது நிதிக்குழு மானியமாக ரூ.1,000 லட்சம், மற்றும் ஏனைய வருமானங்கள் மூலம் ரூ.4,581.03 லட்சம் என மொத்தம் ரூ.17,697.42 லட்சம் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது.

செலவு விவரம்:

சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஊழியர்கள் தொடர்பான செலவினங்களுக்கு ரூ.8,276.75 லட்சம், நிர்வாக செலவினங்களுக்கு ரூ.817.25 லட்சம், சாலை, கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு இயக்க செலவினங்களுக்கு ரூ.6,824 லட்சம், நிதி மற்றும் திட்டமிட்ட செலவினங்களுக்கு ரூ.280.65 லட்சம், பொது நிதி பங்களிப்புக்காக ரூ.1,200 லட்சம் என மொத்த செலவு ரூ.17,398.65 லட்சம் ஆகும்.

இதன்படி வருவாய் நிதியில் ரூ.298.77 லட்சம் உபரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டான 2025-2026 வரவு செலவு அறிக்கையும் திருத்தப்பட்டு இம்மாமன்றத்தில் இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தூத்துக்குடி மாநகராட்சி பட்ஜெட் 2026-27: பொலிவுறும் மாநகரம்! 278 புதிய சாலைகள், ஸ்மார்ட் குடிநீர் திட்டம் - அதிரடி அறிவிப்புகள்!

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சியின் 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாநகரின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளன.

🛣️ சாலை மேம்பாடு மற்றும் போக்குவரத்து

278 புதிய சாலைகள்: நகர்ப்புற சாலை மேம்பாட்டு (TURIP) நிதியின் கீழ் மாநகரம் முழுவதும் 278 சாலைகள் புதிதாக அமைக்கப்படும்.

தூசியில்லா சாலைகள்: NCAP திட்டத்தின் கீழ் கிரேட் காட்டன் ரோடு, பீச் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் 'End to End Paving' முறையில் தூசியில்லா சாலைகளாக மாற்றப்படும்.

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்: வி.வி.டி சிக்னல் முதல் 4-ம் கேட் வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு நடைபாதைகள் ஒழுங்குபடுத்தப்படும்.

தூய்மை காற்று திட்டத்தின் (NCAP) கீழ், தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டமாக 'தூசி இல்லா சாலைகளாக' (End to End Paving) மாற்றப்படவுள்ள சாலைகளின் விவரங்கள் இதோ:

​கிரேட் காட்டன் ரோடு

​வடக்கு பீச் ரோடு

​தெற்கு பீச் ரோடு

​கீழரத வீதி

​குறிஞ்சி நகர்

​பாளை ரோடு

​வி.வி.டி சிக்னல்

​இந்தச் சாலைகளில் ஓரங்களில் மண் படிவதைத் தடுக்கவும், வாகனங்கள் செல்லும்போது தூசி எழாமல் இருக்கவும் முழுமையாக நடைபாதை வரை தார் அல்லது கற்கள் பதிக்கப்பட்டு (End to End) சீரமைக்கப்படும்..

மிதிவண்டி பிரத்யேக வழித்தடம்: ரஹ்மத் நகர், கடற்கரை சாலை மற்றும் பக்கில் ஓடை பகுதிகளில் மோட்டார் இல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்க தனி வழித்தடங்கள் அமைக்கப்படும்.

💧 குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள்

24x7 ஸ்மார்ட் குடிநீர் திட்டம்: மாநகரின் 10 வார்டுகளில் முன்னோட்டமாக 24 மணி நேர குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதனை கண்காணிக்க SCADA தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்.

BIO CNG திட்டம்: கழிவுகளில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

பாதாள சாக்கடை விரிவாக்கம்: விடுபட்ட பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம் விரிவுபடுத்தப்படும்.

🏫 கல்வி மற்றும் இளைஞர் நலன்

நவீன நூலகங்கள்: மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காகப் புதிய நூலகங்கள் மற்றும் வாசிப்பை ஊக்குவிக்க 'The Hindu' நாளிதழ் வாரந்தோறும் வழங்கப்படும்.

விளையாட்டு மையங்கள்: அம்பேகர் நகரில் தினசரி சந்தை, கிரிக்கெட் மைதானம், ஸ்கேட்டிங் தளம் மற்றும் வில்வித்தை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

தற்காப்பு கலை: மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்குத் தற்காப்பு கலை பயிற்சிகள் வழங்கப்படும்.

🌳 சுற்றுச்சூழல் மற்றும் பொழுதுபோக்கு

பசுமைத் தூத்துக்குடி: 100 ஏக்கர் பரப்பளவில் மியாசாகி காடுகள், 50 ஏக்கர் பரப்பளவில் பனை காடுகள் மற்றும் 5 இடங்களில் 'தருவைக்குளம்' மாடலில் மினி கோபுர விளக்குகளுடன் பூங்காக்கள் அமைக்கப்படும்.

செங்குத்து தோட்டம்: மாநகரின் அழகுக்காகப் பல இடங்களில் Vertical Gardening மற்றும் வண்ண ஒளிவிளக்குகள் அமைக்கப்படும்.

🏢 இதர முக்கிய அறிவிப்புகள்

CCTV கண்காணிப்பு: பக்கில் ஓடைப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதைத் தவிர்க்க நவீன CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

விற்பனை மண்டலங்கள்: நடைபாதைகளில் இடையூறாக இருக்கும் கடைகளை முறைப்படுத்தத் தனி விற்பனை மண்டலங்கள் (Vending Zones) உருவாக்கப்படும்.

இ-ஆபீஸ் திட்டம்: மாநகராட்சி நிர்வாகத்தை வேகப்படுத்த காகிதமில்லா 'E-Office' முறை முழுமையாக அமல்படுத்தப்படும்.

தூத்துக்குடி மாநகரத்தை ஒரு முன்மாதிரி நகரமாக மாற்றும் நோக்கில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு 

பட்ஜெட் எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கொறடா மந்திர் மூர்த்தி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி சுடலைமணி பத்மாவதி  செண்பக செல்வன் ஜெயராணி ஜெயக்குமார் வெற்றி செல்வன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர் 

thoothukudileaks


 டாஸ் மாக் கடை தீர்மானம் நிறைவேற்ற   திமுக கவுன்சிலர் கள்  எதிர்ப்பு !!!

20) தூத்துக்குடி மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட டோபிகான வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் மாவட்ட மேலாளர், டாஸ்மாக் லிட்  கடிதம் ந.க.எண் அ7/127/2025 நாள் 12.12.2025 ன்படி மதுபான சில்லரை விற்பனை கடை செயல்படுவதற்கு மாத வாடகையாக ரூ.12,000/- GST உப்பட நிர்ணயம் செய்து தனி மின் மீட்டர் வசதியுடன் 500 சதுரடியில் கட்டிடம் வாடகைக்கு ஒதுக்கீடு செய்து தருமாறு கோரப்பட்டுள்ளது.


டோபிகானா வணிக வளாகத்தில் கடை எண்கள் G3. G4 மற்றும் G5 ஆகிய மூன்று கடைகள் கடைகளின் ஆரம்ப மாத வாடகை தொகை ரூ.4,050.4,600.4600 = ரூ.13,250/-18 சதவீதம் GST ரூ.2385- மொத்தம் ரூ. 15635/- ஆகும். டோபிகானான வணிக வளாகம் 18 முறை ஏலம் மற்றும் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டும். ஒரு சில உயர்ந்தபட்ச ஒப்பந்தபுள்ளி கேள்விதாரர்களும் பயன்படுத்த இயலாமல் வணிக வளாகம் செயல்பாட்டிற்கு வராத நிலையிலும், மாநகராட்சியின் ஆரம்ப மாத வாடகை தொகையினை விட குறைவாக ரூ.12000/ GST உப்பட நிர்ணயம் செய்துள்ளது 

thoothukudileaks
எதிர்ப்பு 

தூத்துக்குடி லீக்ஸ்
எதிர்ப்பு தெரிவித்த திமுக மற்றும் கூட்டணி கவுன்சிலர்கள் 


இந்த தீர்மானம் நிறைவேற்ற திமுக கவுன்சிலர்கள் கந்தசாமி ராமகிருஷ்ணன் ரெக்ஸ்லீன் மற்றும் கூட்டணி கவுன்சிலர் கள் எதிர்ப்பு தெரிவித்து மேயர் இடம் முறையிட்டனர் 



- தூத்துக்குடி லீக்ஸ் நிருபர்

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

எந்தப் பதவியில் இருப்பது முக்கியமல்ல அந்தப் பதவியில் இருந்து எதை முன்னேற்றினோம் என்பதே முக்கியம். இந்த மேயர் பதவி எனக்கு திருப்தி அளிக்கிறது 83 மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி உரை

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 


தூத்துக்குடி, பிப்ரவரி 25:

தூத்துக்குடி ஹோம் சயின்ஸ் கல்லூரியில் தமிழக முதல்வரின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி 83 மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

thoothukudileaks


விழாவில் மேயர் பேசுகையில்,... "கணினியின் மூலம் உலகம் முழுவதும் உள்ள அறிவு இன்று நம் கைகளில் வந்துவிட்டது. இது கடுமையான போட்டி நிறைந்த உலகம். கல்வி என்பது வெறும் மதிப்பெண் பெறுவதற்கல்ல — அறிவை வளர்ப்பதற்கானது. பெற்றோர்கள் கனவுகளுடன் பிள்ளைகளை கல்வி கற்க அனுப்புகிறார்கள். அந்தக் கனவை நாம் எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்று சிந்திக்க வேண்டும்" என்றார்.

உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து பேசிய மேயர்,...

thoothukudileaks


 தூத்துக்குடியில் பெண்களுக்கென்று மூன்று தனிப்பட்ட பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். 

மேலும் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை தவிர்க்கவும், மரங்கள் நடவும், சமூக பொறுப்புணர்வுடன் வாழவும் மாணவிகளை வலியுறுத்தினார்.

"எந்தப் பதவியில் இருப்பது முக்கியமல்ல — அந்தப் பதவியில் இருந்து எதை முன்னேற்றினோம் என்பதே முக்கியம். இந்த மேயர் பதவி எனக்கு திருப்தி அளிக்கிறது. இது ஒரு கடல் போன்றது. முடியாதது எதுவும் இல்லை — முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். அதற்கு என்னையே எடுத்துக்கொள்ளலாம்" என்று உரையாற்றினார்.

விழாவிற்கு முன்னதாக மாணவிகளிடம் "மடிக்கணினி கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று மேயர் கேட்டதற்கு, "ப்ராஜெக்ட் செய்வோம்!" என்று மாணவிகள் உற்சாகமாக பதிலளித்தனர்.

விழாவில் கல்லூரி முதல்வர் ரூபா, துணை முதல்வர் மதுரவள்ளி, செயலாளர் ரோசாகுட்டி, உதவி பேராசிரியர் மாரிதங்கம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.



தூத்துக்குடியில் புரட்சித்தலைவி ஜெயலலிதா 78வது பிறந்தநாள் விழா ஒபிஎஸ் அணி மா செ ஏசாதுரை தலைமையில் சார்பில் உற்சாகக் கொண்டாட்டம்

Tamil Nadu updates, photo news by Arunan journalist 

தூத்துக்குடி: பெ 24

தமிழக முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி ஜெயலலிதா 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் O. Panneerselvam  ஆணையின்படி, தூத்துக்குடி மாநகர் மாவட்டம் சார்பில் சிறப்பான விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ். ஏசாதுரை தலைமையில், மாநகர் மாவட்ட கழகம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாண்புமிகு ஜெயலலிதா  திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், மதிய உணவாக பிரியாணியும் வழங்கி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி லீக்ஸ்


அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி சத்திரம் பஸ் ஸ்டாப் அருகில் அமைந்துள்ள தமிழக முதல்வர் புரட்சி தலைவர் M. G. Ramachandran திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அங்கும் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

இவ்விழாவில் மாவட்டக் கழக இணை செயலாளர் உமா கண்ணன் (முன்னாள் மாமன்ற உறுப்பினர்), மாவட்டக் கழக துணைச் செயலாளர் பழனிச்சாமி பாண்டியன் (பட்டுகனி), கழக செயற்குழு உறுப்பினர் ஸ்ரீவைசந்திரா, வடக்கு பகுதி கழக செயலாளர் பொய்யாமொழி, மேற்கு பகுதி கழக செயலாளர் கே.எஸ். செல்லத்துரை, தெற்கு பகுதி கழக செயலாளர் அத்தி வெள்ளப்பாண்டி, மத்திய தெற்கு பகுதி கழகச் செயலாளர் வி.பி. முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், கருங்குளம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் குருசாமி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தருவை அந்தோணி ஜெபராஜ், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி கழக செயலாளர் இரா.இல. ஜெயராமன், மாவட்ட கலை பிரிவு செயலாளர் மற்றும் வட்டக் கழக செயலாளர் ஜெயபால், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தர்மசீலன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முத்துப்பட்டன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சுதாகர், மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஆறுமுகத்துரை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் மாரியப்பன் ஆகியோரும் பங்கேற்றனர்.

அத்துடன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் கமலக்கண்ணன் (முன்னாள் மாமன்ற உறுப்பினர்), பிளம்பர் இசக்கிமுத்து, ராமகிருஷ்ணன், துபாஷ் பட்டி வைரவன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் சுசீந்திரன், மாவட்ட பாசறை தலைவர் மகாராஜன், மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் முத்துமாலை, கருங்குளம் வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஐயப்பன், வட்டக் கழக செயலாளர் செல்வகுமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல்லா ஹசன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் சபிக்குமார் மற்றும் சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வு முழுவதும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாகக் கலந்து கொண்டு சிறப்பாகக் கொண்டாடினர்.

திங்கள், 23 பிப்ரவரி, 2026

தூத்துக்குடியில் புரட்சித் தலைவி ஜெயலலிதா 78-வது பிறந்த நாள் விழா முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் என்னென்ன செய்தார் முழு விவரம்

Tamil Nadu updates, 24-2-2026

photo news by Arunan journalist 

தூத்துக்குடி பெ 24

தூத்துக்குடியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், ஜெ. ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்த நாள் விழா இன்று (24.02.2026 – செவ்வாய்க்கிழமை) அதிமுக வர்த்தக அணி சார்பில் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

நள்ளிரவு 12 மணியளவில் பழைய பேருந்து நிலையம் முன்பு கேக் வெட்டி விழா தொடங்கப்பட்டது. பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கப்பட்டதுடன், விழா சிறப்பாக தொடங்கியது.

தூத்துக்குடி லீக்ஸ்




தூத்துக்குடி லீக்ஸ்

இதனைத் தொடர்ந்து இன்று 24-2-2026 காலை 9.30 மணியளவில் அண்ணா நகர் மெயின் ரோடு, டூவிபுரம் 5-வது தெரு சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி லீக்ஸ்


பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


 தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம், திரேஸ்புரம் பஜார், மட்டகடை பஜார், வட்ட கோயில், 2-ம் கேட் வடபத்திரகாளி அம்மன் கோயில் தெரு, லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லம், அண்ணா நகர் மெயின் ரோடு, 3-வது மைல் திருவிக நகர், பிரையன்ட் நகர் 12-வது தெரு, சுமங்கலி திருமண மண்டபம் அருகே, சத்யா நகர், எம்ஜிஆர் நகர், முத்தையாபுரம் தோப்பு தெரு உள்ளிட்ட இடங்களில் அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பிரியாணி விருந்து -குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!!!

மேலும், 10 ஆயிரம் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டதுடன், இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கி விழா சிறப்பிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் அசைவ உணவு வழங்கப்பட்டு மக்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, கிளை, வார்டு, வட்ட, தொழிற்சங்க நிர்வாகிகள், முன்னாள் மற்றும் இன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழா அனைத்தும் அதிமுக வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடியில் புரட்சித்தலைவி ஜெயலலிதா 78வது பிறந்தநாள் விழா – அதிமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம்

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி:பெ 24

மறைந்த தமிழக முதல்வர், இதய தெய்வம், புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் இன்று காலை 10 மணியளவில் சிறப்பான விழா நடைபெற்றது.

thoothukudileaks


தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஜெயலலிதா  உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, விழா கொண்டாடப்பட்டது.

thoothukudileaks


இதனைத் தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட்டன.

thoothukudileaks

thoothukudileaks


 நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாகமாக பங்கேற்றனர்.

மேலும், அதிமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நலத்திட்ட  நிகழ்ச்சிகளிலும் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் உற்சாகமாக ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.