ஆத்தூர் (03.07.2026):
தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து பொதுவெளியில் ஒருமையில் அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சருக்கு எதிராக அவமரியாதையான முறையில் கருத்துக்களைத் தெரிவித்ததாகப் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், தன் மீதான கைது நடவடிக்கையைத் தவிர்க்கும் பொருட்டு அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இன்று அதனை அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் இன்று ஆத்தூர் பேரூராட்சிப் பகுதியில் உள்ளாட்சித் துறை சார்ந்த பல்வேறு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
90 நிமிடங்களுக்குள்...
மனு தள்ளுபடியான அடுத்த 90 நிமிடங்களுக்குள் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய தமிழக காவல்துறை, அவர் ஆய்வுப் பணியில் இருந்த ஆத்தூர் ஸ்பாட்டுக்கே நேரடியாகச் சென்று அவரைச் சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தது.
நீதிமன்ற உத்தரவு வெளியான மிகக் குறுகிய கால அவகாசத்திற்குள் காவல்துறை நடத்திய இந்தத் துரிதக் கைது நடவடிக்கை, தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பரபரப்பான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.








