திங்கள், 22 ஜூன், 2026

தூத்துக்குடியில் 100 ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், பள்ளி சீருடைகள் வழங்கிய ராஜம் அறக்கட்டளை

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 22:

தூத்துக்குடி ராஜம் அறக்கட்டளை சார்பில் ஏழை மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டு மற்றும் சீருடை வழங்கும் விழா இன்று (22.06.2026) மாலை 5 மணிக்கு தூத்துக்குடி ராஜம் மஹாலில் நடைபெற்றது.

thoothukudileaks


இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாகி எஸ். ரம்போலா தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினராக முன்னாள் துணைத் தலைவர் ஆ. தேவராஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும், அருட்திரு கீஷோர் முன்னிலை வைத்தார் 

thoothukudileaks




video 

விழாவில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா பங்கேற்று மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை நோட் புக் பள்ளி சீருடைகள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் 10 பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது.

கல்வி வளர்ச்சிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் உதவும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

.

மத்திய மாநில உறவுகளை சீர்குலைக்க சதி செய்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு வெங்கடேசன் தமிழக பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் பரபரப்பு அறிக்கை

சென்னை ஜுன் 22

தமிழக சட்டமன்றத்தில் தமிழ் தாய் வாழ்த்து முதன்மையாக ஒலிக்கப்பட்டதை, பெருமையுடன் ஏற்றுக் கொள்ளாமல், இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக வந்தே மாதரம்' பாடலை இழிவுப்படுத்தி பேசுபவர்கள் மீது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தமிழக எதிர் கட்சிகள் முதல் ஆறு மாதங்களுக்கு தமிழக வெற்றிக் கழக அரசை விமர்சிக்காமல், அவதூறு பிரச்சாரம் செய்யாமல், தமிழகத்தின் வளர்ச்சிக்கு, தமிழக மக்களின் மகிழ்ச்சிக்கு உரிய ஆலோசனைகள் வழங்க முன் வர வேண்டும்.


தமிழக முதல்வரான பிறகு, முதல் பிறந்த நாளை கொண்டாடும் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

thoothukudileaks


தமிழக முதல்வராக திரு ஜோசப் விஜய் பதவி ஏற்ற பிறகு ,ஜுன் 18ம் தேதி துவங்கிய முதல் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு ஆளுநர் ரஜேந்திர அர்லேக்கர் அவர்கள் உரையாற்றினார். தேசிய கீதத்திற்கும் உரிய மரியாதை அளிக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது உலகெங்கும் வாழும் தமிழர்களையும் தேசிய சிந்தனை கொண்டவர்களையும் பெரு மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால், எதையும் குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகக் கூடிய சிலர், இதிலும் தங்களது தேச விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தி உள்ளனர்.


எப்போதும், எல்லா பிரச்னைகளிலும் மக்களைப் பிரிக்கும் வகையில் பேசி வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தமிழக சட்டமன்றத்தில் சுமூகமாக முடிந்த தமிழ் தாய் வாழ்த்து பாடல் பிரச்னையை பெரிதாக்கி தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார்.


"தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டது விமர்சனத்துக்குரியதல்ல. நம்முடைய நாட்டுப்பண்ணை எத்தனை முறையும் பாடலாம். ஆனால், நாட்டின் ஒற்றுமைக்கும் மதச்சார்பின்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் “வந்தே மாதரம்” பாடலைப் பாட மறுத்தது தான்  வரவேற்க வேண்டிய முக்கிய செயல்' என்று அவர் கூறியிருக்கிறார். அதுவும் இதை தமிழக அமைச்சர் நிர்மல்குமாரை வைத்துக் கொண்டே கூறியிருக்கிறார். இது தவறான முன்னுதாரணம். கடும் கண்டனத்துக்குரியது.


இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பல லட்சம் மக்களை கொண்டு வந்து சேர்த்த மந்திரச் சொல் 'வந்தே மாதரம்'. அதனால்தான் ஆங்கிலேயர்கள், 'வந்தே மாதரம்' என்ற சொல்லைக் கேட்டாலே அஞ்சினார்கள். ஆனால் இப்போது, 'வந்தே மாதரம்' என்று சொல்லைக் கேட்டு சு. வெங்கடேசன் ஏன் அஞ்சி நடுங்குகிறார் என்பது தெரியவில்லை. 'வந்தே மாதரம்' குறித்து சு. வெங்கடேசனின் கருத்து, சுதந்திரப் போராட்ட வீரர்களை நேரடியாக இழிவுபடுத்தும் செயல். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுள்ள சு. வெங்கடேசன், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தேசிய பாடலாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 'வந்தே மாதரம்' பாடலை இழிவுப்படுத்தி பேசுவது கிரிமினல் குற்றம்.


அரசியல் ரீதியாக பாஜகவுக்கு நேர் எதிராக நின்றாலும், மத்திய அரசுடன் இணக்கமான அணுகுமுறையை முதல்வர் ஜோசப் விஜய் பின்பற்றி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். 



இந்தச்  சூழலில் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யான சு.வெங்கடேசன், 'வந்தே மாதரம்' பாடலை இழிவுபடுத்தி பேசியிருப்பது, மத்திய  - மாநில  உறவுகளை சீர்குலைக்கும் சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.


தமிழக முதல்வர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள்,நிதி ஆயோக் கூட்டத்திற்கு டெல்லி சென்ற போது,  பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்தித்துப் பேசினார்.   30 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த அதிகாரப்பூர்வ சந்திப்பில், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம், மேகதாது அணை விவகாரம், தமிழக மாணவர்களுக்கு நீட்  தேர்விலிருந்து விலக்கு, தமிழக மீனவர்கள் பிரச்னை, தமிழகத்தில் டிஆர்டிஓ (DRDO) பாதுகாப்பு மையம் அமைப்பது

உள்ளிட்ட தமிழகத்தின் நலன் சார்ந்த பல முக்கிய கோரிக்கைகளை அடங்கிய மனுவை முதல்வர் அளித்துள்ளார் 


தமிழக முதல்வர், பாரத பிரதமரின் இந்த சந்திப்பு, தமிழக வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக, தமிழகத்தின் உட்கட்டமைப்பு, நிதி ஒதுக்கீடு மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் இந்த சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டது.  தமிழகத்தின் வளர்ச்சிக்கும், பாரதத்தின் வலிமைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் இலக்கணமான சந்திப்பாக இது அமைந்தது. அதைத் தொடர்ந்தே தமிழக சட்டமன்றத்தில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படு ஆளுநர் உரை சுமூகமாக நடந்து முடிந்தது. அனைவரது மனமும் குளிர்ந்தது. இது முதல்வர் விஜய்க்கு கிடைத்த வெற்றியாகும்.*


*மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனார், தீரர் சுப்பிரமணிய சிவா, வீரத்திருமகன் வாஞ்சிநாதன் பாடி மகிழ்ந்து தமிழகத்தில் விடுதலை தீயை ஊட்டி வளர்த்த 'பாரத தாயை வணங்குவோம்' என்கிற புனிதமான சுதந்திரத்தை பெற்று தந்த தேசபக்தி சுதந்திர பாடலுக்கு தமிழகத்தில் உரிய மரியாதையை முதல்வர் விஜய் அளிக்க வேண்டும்.இந்திய சுதந்திரப் போரில் தேசிய நீரோட்டத்தில் அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கிய தமிழகம் பெருமை கொள்ளும் விதமாக தெளிவாக,  தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.


தமிழகத்தின் அனைத்து கட்சி தலைவர்களும் சி.பி.எம் பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனின் தேச விரோத, பிரிவினைவாத கருத்துக்களுக்கு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். தேசம் முழுவதும் சுதந்திர தாகத்தை விதைத்து,இந்திய தேச விடுதலைக்கு காரணமான "வந்தே மாதரம்" தேசபக்தி பாடலில் அரசியல் செய்யக்கூடாது.


தமிழக எதிர்க்கட்சித் தலைவர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சொன்னது போல, தமிழகத்தின், உரிமை சார்ந்த பிரச்னைகளில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்று  பிரதமரை நேரில் சந்தித்து தீர்வு காண வேண்டும்.  இதுபோன்ற நேர்மறை அரசியலை அனைத்து கட்சி தலைவர்களும் பின்பற்ற வேண்டும்.


எந்த ஒரு அரசுக்கும் குறிப்பிட்ட கால அவகாசம் வேண்டும் எனவே முதல் ஆறு மாதங்களுக்கு தமிழக வெற்றிக்கழக அரசுக்கு எதிராக திட்டமிட்டு செயல்படுவதையும்,   அவதூறு பரப்புவதையும் விட்டு விட்டு,  அரசுக்கு உரிய ஆலோசனைகளை எதிர்க்கட்சிகள் வழங்க வேண்டும்.


மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பிறகு, தமிழகத்தில் சமூக நீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை  முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ளார்.


 பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அரசியல் நாகரிகத்திற்கு இது ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.*


கடந்தா கால ஆட்சிகளில், சுயநல அரசியலுக்காக தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு,  அனைத்து துறைகளிலும் நிர்வாக சீர்கேடுகள் அதிகமாகி, ஊழல் பெருகி,  ஆபத்தான கேன்சர் நோய் போல தமிழக வளர்ச்சி பாதிக்கப்பட்டு தமிழ் அன்னையை கடந்த ஆட்சி காலத்தில் படுத்த படுக்கையாக்கிவிட்டனர்.


பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அளித்த 14 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு நிதி திட்டங்களுக்கும்,  கணக்கு வழக்கு இல்லாமல், மத்திய அரசு என்ன செய்தது என்று அவதூறு பேசி, நடைபெற்ற  நிர்வாக சீர்கேடு காரணமாக தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு,  கடந்த ஆட்சிக் காலங்களில் முடக்கப்பட்டது. 


தமிழக நிதி அமைச்சரின் வெள்ளை அறிக்கை மிகத் தெளிவாக இதை விளக்கி உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் வெள்ளை அறிக்கை என்பது தமிழகத்தின் உண்மை நிலையை தமிழக மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளும் வகையில், தமிழகத்தின் இளம் மாணவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் மக்கள் மன்றத்தில் வெளியிடப்பட்டதன் மூலம் ஒரு மிகப்பெரிய விழிப்புணர்வு தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ளது.


*நிச்சயம் தமிழக வெற்றி கழக அரசு, மக்கள் நலம் சார்ந்த புதுமை திட்டங்களை நிறைவேற்றும் வகையில், மிகச் சிறப்பாக தொலைநோக்கு சிந்தனையுடன் சிறப்பாக திட்டமிட்டு, தொடர் முயற்சிகளால், கனிம வளம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் நிதி மேலாண்மையை மேம்படுத்தி, மக்கள் பாதிக்காத வரியில்லாத வருவாயை உருவாக்கும் விதத்தில் செயல்பட்டு, தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் படிப்படியாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை தமிழக மக்களுக்கு இருக்கிறது.


அதற்காக தமிழக அரசும் தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய் எடுக்கும் முயற்சிகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவும் ஆலோசனைகளும் வழங்குவதை விடுத்து, தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை தமிழர்கள் மக்களால் அளிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கொச்சைப்படுத்தி, குறுகிய காலத்தில் ஆட்சியை கவிழ்க்க மறைமுக செயல்களில் ஈடுபடக்கூடாது. தமிழக மக்களின் விருப்பத்துக்கு எதிராக, செயல்படும் சதி அரசியல் திட்டங்களில் ஈடுபடும் கட்சிகள் இனி தமிழக அரசியலில் மக்களால் அப்புறப்படுத்தப்படுவார்கள்.


ஏ.என்.எஸ்.பிரசாத்

தமிழக பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் 

ansprasadbjp@gmail.com


ஞாயிறு, 21 ஜூன், 2026

முதல்வர் ஜோசப் விஜய் 52-வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் மா செ எஸ்டிஆர் சாமுவேல் தலைமையில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி கொண்டாட்டம் பரபரப்பு

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி


தூத்துக்குடி, ஜூன் 22:

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு இன்று காலை 11 மணியளவில் சிறப்பான கொண்டாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks


மாவட்ட செயலாளர் சாமுவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கட்சியினர் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன், கேக் வெட்டி பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, முதல்வர் ஜோசப் விஜயின் நீண்ட ஆயுளும், மக்கள் பணியும் சிறக்க வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.



இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகமாக பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks



thoothukudileaks

புகைபட விளக்கம்:

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு முதல்வர் ஜோசப் விஜயின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் சாமுவேல் தலைமையில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.

பிறந்த நாள் வாழ்த்து பதிவு பிரபல திரைப்பட நடிகர் விஜய் அவர்களுக்கு இன்று 52 ஆவது பிறந்த நாள் 


அவர்களுக்கு நம் தூத்துக்குடி லீக்ஸ்  சார்பாக பிறந்தநாள் 

வாழ்த்துக்கள்

thoothukudileaks


முதல்வர் ஜோசப் விஜய் இது வரை....

சென்னையில் 1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி எஸ்.ஏ. இயக்குநர் சந்திர சேகர், பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருக்கு வித்யா என்ற ஒரு தங்கை இருந்தார். கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா பள்ளியில் தனது படிப்பை தொடங்கியவர் விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.


பின் சென்னை லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேசன் படிப்பை தொடர்ந்தார். ஆனால் நடிப்பின் மீதிருந்த ஈர்ப்பால் பாதியிலேயே கைவிட்டார்.


விஜய் தன் ரசிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவருக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்


thoothukudileaks


விஜய் தன் சிறு வயதில் இருந்தே தந்தை எஸ்.ஏ. சந்திர சேகரின் படங்களில் நடித்துள்ளார். வெற்றி, வசந்தராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.


இதன் தொடர்ச்சியாக கதா நாயகனாக நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமானார். இதையடுத்து, செந்தூரப்பாண்டி, ரசிகன், ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, சந்திரலேகோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் விக்ரமன் இயக்கத்தில் நடித்த பூவே உனக்காக படம் தான் அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக இருந்தது. 


இதைத்தொடர்ந்து 90 களில் விஜய்யை நடிப்பின் உச்சத்தில் வைத்து தமிழ் ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர். காலமெல்லாம் காத்திருப்பேன், லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, ப்ரியமுடன், நிலாவே வா, துள்ளாத மனமும் துள்ளும், என ஏராளமான படங்களில் பெரும் புகழ் பெற்றார்.


90 களில் தொடங்கிய இந்த வெற்றிப்பயணம் 2000ஆம் ஆண்டுகளில் கில்லி, பிரியமானவளே, குஷி என கடைசியாக பீஸ்ட் வரை நீடிக்கிறது .


இப்படி தன் படங்களால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டி வைத்துள்ள விஜய் தற்போது அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.


 அவர் 10 ,12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடத்தியதே விஜய் அரசியலுக்கு வருவதற்கான அச்சாரமாகவே பார்க்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடக்கம் 

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி ஆரவாரப்படுத்தியது. வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.


அவர் கூறியபடியே சட்ட சபை தேர்தலில் வென்று தமிழகத்தின் முதலமைச்சராக தேர்வு பெற்று உள்ளார் 


தமிழக முதல்வராக பிறந்தநாள் கொண்டாடும் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்களுடன் இணைந்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பிலும் வாழ்த்துக்கள் இன்று தெரிவித்து வருகின்றனர்.


சனி, 20 ஜூன், 2026

தமிழக அமைச்சர்கள் செல்போன் நம்பர் மற்றும் இமெயில்கள்

Tamil Nadu updates,

தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி ஒரு புதிய அதிரடி முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. 


அதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன.

thoothukudileaks


இதில், முதலமைச்சருக்கு மின்னஞ்சல் முகவரி (Email ID) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.


 ஆனால், மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் மின்னஞ்சல் முகவரிகளுடன் சேர்த்து, அவர்களின் மொபைல் எண்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.


அமைச்சர்களின் இந்த எண்களுக்கு வரும் அழைப்புகளை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கையாளுவார்கள் என்றும், பிரச்சனைகளின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து அவை சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய தீர்வு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


Thiru C. Joseph Vijay* - Email-Id: mlaperambur[at]tn[dot]gov[dot]in




*Thiru N. Anand(Minister for Rural Development and Water Resources)*

Email-Id: mlathiyagarayanagar[at]tn[dot]gov[dot]in

Tel.No  : 90039 33964


*Thiru Aadhav Arjuna*

*Minister for Public Works and Sports Development*

Email-Id: mlavillivakkam[at]tn[dot]gov[dot]in

Tel.No : 99624 99599


*Dr. K.G. Arunraj*

*Minister for Health, Medical* *Education and Family Welfare*

Email-Id: mlathiruchengodu[at]tn[dot]gov[dot]in

Tel.No : 94459 53976



*Thiru K A. Sengottaiyan*

*Minister for Revenue and Disaster Management*

Email-Id: mlagobichettipalayam[at]tn[dot]gov[dot]in

Tel.No : 63852 49393



*Thiru P. Venkataramanan*

*Minister for Food and Civil Supplies*

Email-Id: mlamylapore[at]tn[dot]gov[dot]in

Tel.No : 98412 73454


*Thiru R. Nirmalkumar*

*Minister for Energy Resources and Law*

Email-Id: mlathiruparankundram[at]tn[dot]gov[dot]in

Tel.No : 99625 66341



*Thiru Rajmohan*

*Minister for School* *Education, Tamil Development, Information and Publicity*

Email-Id: mlaegmore[at]tn[dot]gov[dot]in

Tel.No : 90030 83602



*Dr. TK. Prabhu*

*Minister for Natural Resources*

Email-Id: mlakaraikudi[at]tn[dot]gov[dot]in

Tel.No : 95853 65217




*Selvi S. Keerthana*

*Minister for Industries*

Email-Id: mlasivakasi[at]tn[dot]gov[dot]in

Tel.No : 97902 73544


*Thiru P. Viswanathan*

*Minister for Higher Education*

Email-Id: mlamelur[at]tn[dot]gov[dot]in

Tel.No : 96002 14442



*Thiru S. Rajesh Kumar*

*Minister for Tourism*

Email-Id: mlakilliyoor[at]tn[dot]gov[dot]in

Tel.No : 94431 03539


*Thiru A.M. Shahjahan*

*Minister for Minorities Welfare*

Email-Id: mlapapanasam[at]tn[dot]gov[dot]in

Tel.No : 99659 04553


*Thiru Vanni Arasu*

*Minister for Social Justice*

Email-Id: mlatindivanam[at]tn[dot]gov[dot]in

Tel.No : 95515 11006


*Thiru A. Vijay Tamilan Parthiban*

*Minister for Transport*

Email-Id : mlasalemsouth[at]tn[dot]gov[dot]in

Tel.No : 99421 98999


*Thiru B. Rajkumar*

*Minister for Housing and Urban Development*

Email-Id: mlacuddalore[at]tn[dot]gov[dot]in

Tel.No : 99422 24532



*Thiru V. Sampath Kumar*

*Minister for Backward Classes Welfare*

Email-Id: mlacoimbatorenorth[at]tn[dot]gov[dot]in

Tel.No : 98422 60733, 86681 81155



*Thiru M. Vijay Balaji*

*Minister for Handlooms, Textiles and Khadi*

Email-Id: mlaerodeeast[at]tn[dot]gov[dot]in

Tel.No : 98947 23460



*Thiru K. Vignesh*

*Minister for Prohibition and Excise*

Email-Id: mlakinathukadavu[at]tn[dot]gov[dot]in

Tel.No : 99448 17417



*Thiru K. Thennarasu*

*Minister for Non-Resident Tamils Welfare*

Email-Id : mlasriperumbudur[at]tn[dot]gov[dot]in

Tel.No : 99406 19268



*Thiru J. Mohamed Farvas*

*Minister for Labour Welfare and Skill Development*

Email-Id : mlaaranthangi[at]tn[dot]gov[dot]in

Tel.No : 96005 98729


*Thiru V. Gandhiraj*

*Minister for Co-operation*

Email-Id :mlaarakkonam[at]tn[dot]gov[dot]in

Tel.No    :94439 14383


*Tmt K. Jegadeshwari*

*Minister for Social Welfare and Women Empowerment*

Email-Id :mlarajapalayam[at]tn[dot]gov[dot]in

Tel.No    :95978 68633


*Thiru Vinoth*

*Minister for Agriculture - Farmers Welfare*

Email-Id :mlakumbakonam[at]tn[dot]gov[dot]in

Tel.No    :63820 10408



*Tmt C. Vijayalakshmi*

*Minister for Milk and Dairy Development*

Email-Id :mlakumarapalayam[at]tn[dot]gov[dot]in

Tel.No    :70100 12002



*Thiru D. Sarathkumar*

*Minister for Human Resources Management*

Email-Id :mlatambaram[at]tn[dot]gov[dot]in

Tel.No    :96001 33546



*Thiru Ramesh*

*Minister for Hindu Religious* *and Charitable Endowments*

Email-Id :mlasrirangam[at]tn[dot]gov[dot]in

Tel.No    :85240 88410



*Thiru P. Mathan Raja*

*Minister for Micro, Small and Medium Enterprises*

Email-Id :mlaottapidaram[at]tn[dot]gov[dot]in

Tel.No    :90257 95100



*Thiru N. Marie Wilson*

*Minister for Finance,* *Planning and Development*

Email-Id :mlaradhakrishnannagar[at]tn[dot]gov[dot]in

Tel.No    :98409 41770



*Thiru Srinath*

*Minister for Fisheries* *- Fishermen Welfare*

Email-Id :mlathoothukudi[at]tn[dot]gov[dot]in

Tel.No    :98844 81636



*Tmt S. Kamali*

*Minister for Animal Husbandry*

Email-Id :mlaavanashi[at]tn[dot]gov[dot]in

Tel.No    :73588 63314



*Thiru R. Kumar*

*Minister for Artificial Intelligence, Information Technology and Digital Services*

Email-Id :mlavelachery[at]tn[dot]gov[dot]in

Tel.No    :90920 60100



*Thiru R.V. Ranjithkumar*

*Minister for Forests*

Email-Id :mlakancheepuram[at]tn[dot]gov[dot]in

Tel.No    :95001 11371, 94432 56202



*Thiru D. Logesh  Tamilselvan*

*Minister for Commercial* *Taxes and Registration*

Email-Id :mlarasipuram[at]tn[dot]gov[dot]in

Tel.No    :99944 77272



Thiru Rajeev

*Minister for Environment and Climate Change*

Email-Id :mlatiruvadanai[at]tn[dot]gov[dot]in

Tel.No    :99946 72212

தூத்துக்குடி மாநகராட்சி அதிரடி ஆய்வு 260 கிலோக்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Tamil Nadu updates 

தூத்துக்குடி, ஜூன் 20:

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்கும் வகையில் சுகாதார அலுவலர் தலைமையில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

thoothukudileaks



இந்த ஆய்வின்போது கருத்தப்பாலம் அருகே செயல்பட்டு வரும் உதயா ஏஜென்சி மற்றும் எட்டையபுரம் மெயின் ரோட்டில் உள்ள அபி எசன்ஸ் உள்ளிட்ட மொத்த விற்பனை கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. 


அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

thoothukudileaks


இதையடுத்து மேற்கண்ட கடைகளில் இருந்து மொத்தம் 230 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விதிமுறைகளை மீறியதற்காக சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.


தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகளில் மொத்தம் 260.25 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.16,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என்றும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



வெள்ளி, 19 ஜூன், 2026

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி முடக்கம்: பொதுமக்கள் வேதனை

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி:

தூத்துக்குடி, ஜூன் 20:


தூத்துக்குடி பழைய அண்ணா பேருந்து நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.57 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட்டு, கடந்த 2023 அக்டோபர் 8ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.


thoothukudileaks


நான்கு தளங்களைக் கொண்ட இந்த நவீன பேருந்து நிலையத்தில் தரைத்தளத்தில் மட்டும் 29 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 


மேலும் 120-க்கும் மேற்பட்ட வணிகக் கடைகள், பயணிகள் ஓய்வறைகள் பாலூட்டும் தாய்மார்கள் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 


தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், குறிப்பாக மாநகரம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

"தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் பாக்ஸ்கள் தற்போது பயன்பாடின்றி ஒரு மூலையில் கிடக்கின்றன." 


thoothukudileaks
செயல்படாமல் ஒன்றாக சேர்த்து கிடக்கும் இரண்டு குடிநீர் பாக்ஸ் 


பேருந்து நிலையம் முழுவதும் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், மாநகராட்சி சார்பில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியாளர்களும் (security) நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் போலீஸ் பூத் அமைக்கப்பட்டு காவல்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடியோ பார்க்க 

இந்நிலையில், பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி தற்போது செயலிழந்த நிலையில் இருப்பதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். 


குடிநீர் வழங்கும் குழாய் இணைப்புகள் உடைக்கப்பட்டதுடன், பேருந்து நிலையத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்த இரண்டு குடிநீர் அமைப்புகளும் அகற்றப்பட்டு ஒரே இடத்தில் செயல்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதனால் பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட நவீன பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு குடிநீர் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


பேருந்து நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பில் இருந்தும், குடிநீர் வசதியை சேதப்படுத்திய சமூக விரோதிகள் யார்? 

ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி முடக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியையும் வேததனையும் ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக குடிநீர் வசதிகளை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆக்ரமிப்பு 

மேலும் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் வணிக கடைகள் அனைத்தும்  தூத்துக்குடி மாநகராட்சி கடைகள் அனுமதி அளித்துள்ள அளவுக்கு மீறி விரிவுபடுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் 



thoothukudileaks





தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியனின் 26 வது மாநில மாநாடு ஜூன் 21 ல் அமைச்சர்கள் ஊடகவியலாளர் பங்கேற்பு

Tamil Nadu updates photo news by Arunan journalist 

சென்னை, ஜூன் 19:

அகில இந்திய நாளிதழ் ஊழியர் சம்மேளனத்துடன் இணைந்த தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் (TNP&MRU) சார்பில் 26-வது மாநில மாநாடு வருகிற ஜூன் 21-ஆம் தேதி சென்னை தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற உள்ளது 

thoothukudileaks


மாநில மாநாடு 
2026 ஜூன் 21 ல்

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், மாநிலம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள், ஊடகத் துறை நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

தலைமை

மாநாட்டிற்கு தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் மாநிலத் தலைவர் டாக்டர் மு. சிவதமிழவன் தலைமையேற்கிறார்.


 பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.


சிறப்பு விருந்தினராக அமைச்சர் பெருமக்கள் பங்கேற்பு!!!

தமிழக பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், இயற்கை வளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். 


மேலும் நீதித்துறை, அறிவியல், கல்வி மற்றும் சமூக சேவைத் துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.


மாநாட்டை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள், சிலம்பக் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் பத்திரிகையாளர்களின் நலன் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற உள்ளன.

thoothukudileaks



இந்நிகழ்ச்சியில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஊடகப் பணியாளர்கள், பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.