சனி, 4 ஏப்ரல், 2026

திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்துதூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

news by Arunan senior reporter weekly

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலத்துறை அமைச்சரான கீதாஜீவனுக்கு எதிராக கிராம மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks




தூத்துக்குடி அருகிலுள்ள அத்திமரப்பட்டி, முள்ளக்காடு, பொட்டல்காடு, சவேரியார்புரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைக்க முயற்சிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த திட்டத்திற்கு அமைச்சரான கீதாஜீவன் உடந்தையாக உள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


இதனைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சருக்கு எதிராக ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இணைந்து கருப்புக்கொடி ஏந்தி திமுக வேட்பாளர் கீதா ஜுவன்  வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களும் எழுப்பப்பட்டன.

போராடும் போது கண்டு கொள்ளாதவர் என குற்றச்சாட்டு!!!

கடந்த காலங்களில் தாங்கள் போராடும் போது கலந்து கொள்ளவும் கண்டு கொள்ளவும் இல்லை இப்போது எதற்கு வருகின்றனர் என கேள்வி எழுப்பினார்கள் 

மேலும் இதேபோல், நேற்று(4-3-2026) திருச்செந்தூர் பகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரச்சாரத்திற்கு சென்றபோது, கிராம மக்கள் அவரை உள்ளே வரவிடாமல் தடுத்து விரட்டி அடித்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் எதிர்ப்புகள் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசியல் சூழ்நிலையை சூடுபிடிக்க வைத்துள்ளன

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக வேட்பாளர்கள் பிரச்சாரம் பண்ண வருகையில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்புகளை காட்டி வருகின்றனர் 

ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தர்ராஜ் மனுதாக்கல்

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

தூத்துக்குடி ஏப்ரல் 4

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம்:

அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தர்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கான தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

thoothukudileaks




ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமியிடம் சுந்தர்ராஜ் தனது மனுவை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், லட்சுமண பெருமாள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

வேட்பு மனுதாக்கலையொட்டி, அப்பகுதியில் கூட்டணி கட்சியினரின் திரளான பங்கேற்பு காணப்பட்டது. தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக வேட்பாளர் ராம ஜெயம் வேட்பு மனு தாக்கல் – கூட்டணி கட்சிகளின் ஆரவார ஊர்வலம்,

தூத்துக்குடி லீக்ஸ் | நாளிதழ் செய்தி

தூத்துக்குடி, ஏப்ரல் 4:

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில், திமுக வேட்பாளர் ராம ஜெயம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

thoothukudileaks


இதற்கு முன்னதாக, மதசார்பற்ற கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக மற்றும் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சி  நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் இணைந்து ஆரவாரமாக ஊர்வலமாக திரண்டனர். அவர்கள் ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.

thoothukudileaks
திமுக வேட்பாளர் ராமஜெயம் 


இந்த ஊர்வலத்தின் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரத்திற்கு  பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு பணிக்காக காவல்துறை பலப்படுத்தப்பட்டிருந்தது.

வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், கூட்டணி தலைவர்கள் மற்றும் பல்வேறு பகுதி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் சூழல் காரணமாக ஓட்டப்பிடாரம் பகுதியில் அரசியல் சூடுபிடித்துள்ளது.

வெள்ளி, 3 ஏப்ரல், 2026

பண்ணாரி மாரியம்மன் குண்டம் பெருந்திருவிழா: பக்தர்களுக்கு உணவு வழங்கிய திருக்கோயில் பாதுகாப்பு சங்கம்

Tamil Nadu updates

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

ஈரோடு மாவட்டம் :ஏப் 3

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற குண்டம் பெருந்திருவிழா இவ்வாண்டும் பக்தி உணர்வுடன் சிறப்பாக நடைபெற்றது.

thoothukudileaks


இந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு, அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் மற்றும் பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கும் சேவை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

thoothukudileaks


இந்நிகழ்ச்சியை கோவை காமாட்சிபுரம் ஆதீனம் ஶ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், சொர்க்கபுரம் ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ தண்டபாணி தேசிகபண்டார சந்நிதி சுவாமிகள் மற்றும் ஶ்ரீ மத் பரமஹம்ஹேத்யாதி ஶ்ரீ ரங்க பராங்குச பரகால நம்பி ராமானுஜர் ஜீயர் ஸ்வாமிகள் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

thoothukudileaks


விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் ஒழுங்காக வரிசையில் நின்று உணவு பொருட்களை பெற்றுக் கொண்டு, ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். 

பக்தர்களின் தேவையை உணர்ந்து சீரான முறையில் சேவை செய்த சங்கத்தின் இந்த முயற்சி பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி அவர்களின் ஆலோசனையின் பேரில், சங்க பொறுப்பாளர்கள் செந்தில்குமார், நடராஜ், நித்தியானந்தன், குப்புராஜ், சத்யபிரகாஷ், ஆனந்தன், சுமதி உள்ளிட்ட உறுப்பினர்கள் சிறப்பாக மேற்கொண்டனர்.

thoothukudileaks


வியாழன், 2 ஏப்ரல், 2026

தொழிலுக்கு இடையூறு செய்த நாயை அடித்து கொன்றதாக குற்றச்சாட்டு – ஆட்டோ ஓட்டுநருக்கு எதிராக புகார், சமூக ஆர்வலர்கள் கண்டனம்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ்  செய்தி

தூத்துக்குடி மாவட்டம் : 02.04.2026

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியில் நாய் கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் வசித்து வரும் நடராஜர் என்பவர் நாய் வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த நாய் தனது தொழிலுக்கு இடையூறு செய்ததாக கூறி, அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சின்னதுரை, தனது ஆட்டோவில் இருந்து இறங்கி நாயை தாக்கி கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


thoothukudileaks


இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தி மற்றும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரினங்களுக்கு இவ்வாறு ஈவுமிரக்கமின்றி நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும், சம்பந்தப்பட்டவருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 30 மார்ச், 2026

பிரபல தனியார் வங்கி பெயரில் போலி முதலீட்டு மோசடி தூத்துக்குடியில் காவல்துறை எச்சரிக்கை

தூத்துக்குடி லீக்ஸ் | நாளிதழ் செய்தி

தூத்துக்குடி மாவட்டம் : 30.03.2026

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீப காலமாக பிரபல தனியார் வங்கிகளின் பெயரில் “Bank Securities” எனப்படும் போலியான முதலீட்டு திட்டங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றும் இணைய மோசடிகள் அதிகரித்து வருவதாக மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்த மோசடியில் ஈடுபடும் நபர்கள் முதலில் பொதுமக்களை WhatsApp குழுக்களில் இணைத்து, அதிக லாபம் கிடைத்ததாக போலியான தகவல்கள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்து நம்பிக்கை ஏற்படுத்துகின்றனர். பின்னர் அவர்கள் உருவாக்கிய போலியான மொபைல் செயலிகள் மற்றும் வங்கி முதலீட்டு தளங்கள் மூலம் முதலீடு செய்ய வற்புறுத்துகின்றனர். 


இந்த தளங்கள் உண்மையான வங்கி சேவைகளைப் போலவே தோற்றமளிக்கும் வகையில் Bank Logo, Dashboard, Customer Support போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

thoothukudileaks


இதனை நம்பி பொதுமக்கள் முதலீடு செய்த பின்னர், லாபம் அல்லது முதலீட்டு தொகையை திரும்ப பெற முயற்சிக்கும் போது, மேலும் பணம் முதலீடு செய்தாலே அதிக லாபம் கிடைக்கும் என கூறி தொடர்ந்து மோசடி செய்யப்படுகிறது.



பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரை:

சமூக ஊடகங்களில் வரும் அதிக லாபம் தரும் முதலீட்டு விளம்பரங்களை நம்ப வேண்டாம்.

அறியப்படாத லிங்குகள் அல்லது செயலிகள் மூலம் முதலீடு செய்ய தவிர்க்கவும்.

SEBI-ல் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலமாக மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.

DEMAT கணக்கு இல்லாமலே முதலீடு செய்யலாம் என வரும் விளம்பரங்கள் பெரும்பாலும் மோசடி ஆகும்.

உங்கள் DEMAT கணக்கை அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு தளங்களுடன் மட்டுமே இணைக்கவும்.

வங்கி அல்லது நிதி நிறுவன பெயரில் வரும் முதலீட்டு தகவல்களை நேரடியாக அந்த நிறுவனத்துடன் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

புகார் அளிக்கும் வழிகள்:

இத்தகைய சைபர் மோசடிகளில் சிக்கினால் உடனடியாக

 cybercrime.gov.in இணையதளம் லிங் 

 1930 (சைபர் குற்ற உதவி எண்)

மூலம் புகார் அளிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, மேலும் நிதி இழப்பை தவிர்க்க முடியும் எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் கழட்டி விடப்பட்டதால்? சமத்துவ மக்கள் கழகம் தனித்து போட்டி தூத்துக்குடி மாவட்டம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கள் அறிவிப்பு பரபரப்பு

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடி, மார்ச் 30:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் சமத்துவ மக்கள் கழகம் தனித்துப் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

thoothukudileaks


தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக

வழக்கறிஞர் A. அந்தோணி பிச்சை (MA, BL) 

திருவைகுண்டம் தொகுதியில் 

 S. ஜெபராஜ் டேவிட் (BE), 


திருச்செந்தூர் தொகுதியில் 

 B. அருண் சுரேஷ் குமார் (BA)


ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில்  S. ராஜாத்தி 


கோவில்பட்டி தொகுதியில் வழக்கறிஞர்  M.A.M. சகாயராஜ் (BA, LLB),


 விளாத்திகுளம் தொகுதியில்..

 P. கண்டிவேல் 


ஆகியோரும் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றனர்.


இந்த 6 தொகுதிகளுக்கும் இன்று வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில்,...

வரும் ஏப்ரல் 4, 2026 (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சம்பந்தப்பட்ட தொகுதிகளின் ஆர்டிஓ அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


இதன் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் சமத்துவ மக்கள் கழகம் தனித்துப் போட்டியிடும் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.