வியாழன், 9 ஜூலை, 2026

2026-27 கல்வியாண்டு பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு

 தூத்துக்குடி லீக்ஸ் | நாளிதழ் செய்தி

2026-27 கல்வியாண்டு பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு

210 வேலைநாட்கள் – 155 விடுமுறை நாட்கள்; ஏப்ரல் 24-ல் பள்ளிகள் நிறைவு

சென்னை, ஜூலை 9:

2026–2027 கல்வியாண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வேலைநாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் விவரத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

thoothukudileaks


அதன்படி, புதிய கல்வியாண்டு ஜூன் 1, 2026 அன்று தொடங்கி ஏப்ரல் 24, 2027 வரை நடைபெற உள்ளது. இந்த கல்வியாண்டில் மொத்தம் 210 வேலைநாட்களும், 155 விடுமுறை நாட்களும் இடம்பெற்றுள்ளன. மொத்த நாட்கள் 365 ஆகும்.

வெளியிடப்பட்ட கால அட்டவணையின்படி:

  • முதல் பருவத் தேர்வு செப்டம்பர் 17 முதல் 25 வரை நடைபெறும். தொடர்ந்து செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை (9 நாட்கள்) பருவ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இரண்டாம் பருவத் தேர்வு டிசம்பர் 15 முதல் 23 வரை நடைபெறும். இதையடுத்து டிசம்பர் 24 முதல் ஜனவரி 3 வரை (11 நாட்கள்) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
  • மூன்றாம் பருவத் தேர்வு ஏப்ரல் 12 முதல் 24 வரை நடைபெற உள்ளது.
  • 2026–27 கல்வியாண்டின் இறுதி வேலைநாள் ஏப்ரல் 24, 2027 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கோடை விடுமுறை ஏப்ரல் 25 முதல் மே 31 வரை (37 நாட்கள்) அமையும்.

இந்த கால அட்டவணையின்படி மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கல்வி நடவடிக்கைகள், தேர்வுகள் மற்றும் விடுமுறைகளை முன்கூட்டியே திட்டமிட வசதியாக இருக்கும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

புதன், 8 ஜூலை, 2026

தூத்துக்குடி மாநகராட்சியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

 Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாநகராட்சியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

தூத்துக்குடி, ஜூலை 9:

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சியில் களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டன.

thoothukudileaks


தூத்துக்குடி மாநகராட்சியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகள் வரும் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30, 2026 வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களில் பணியாற்ற உள்ள களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு ஜூலை 9 முதல் 11 வரை மற்றும் ஜூலை 13 முதல் 15 வரை என இரண்டு கட்டங்களாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

thoothukudileaks


மொத்தம் 376 களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு, களப்பணி பயிற்றுநர்கள் மூலம் முதற்கட்ட பயிற்சி இன்று தொடங்கப்பட்டது. இந்த பயிற்சிகள் வ.உ.சி. கல்லூரி, ஏ.பி.சி.வி. மகளிர் கல்லூரி, பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கிரேஸ் பாலிடெக்னிக், விக்டோரியா சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் செயின்ட் மேரிஸ் கல்லூரி ஆகிய மையங்களில் நடைபெற்று வருகின்றன.

பயிற்சியின் போது மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான நடைமுறைகள், தரவுகள் சேகரிக்கும் முறை, தகவல்களின் துல்லியம் மற்றும் களப்பணியின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருமான சி. ப்ரியங்கா, இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் புதிய துறைமுகம்" அல்ல... "வ.உ.சிதம்பரனார் துறைமுகம்" என மாற்றக் கோரி அமைச்சர் ஏ. ஸ்ரீநாத் இடம் பரபரப்பு மனு

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பெயரை வழித்தட பலகைகளில் பேருந்துகளில் இடம்பெற செய்யாமல் கடந்த அதிமுக -திமுக ஆட்சியில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து மத்திய அரசு உத்தரவு புறக்கணித்து வந்தது அதிகாரப்பூர்வ பெயரை நடைமுறைப்படுத்தாமல் இழுத்துடித்து வருகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தூத்துக்குடி, ஜூலை 8:

2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தூத்துக்குடி புதிய துறைமுகம், மத்திய அரசால் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில், கடந்த 08.10.2023 அன்று திறக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் வழித்தட அறிவிப்பு பலகைகள் மற்றும் பேருந்துகளில், அதிகாரப்பூர்வ பெயரான "வ.உ.சிதம்பரனார் துறைமுகம்" என்பதற்குப் பதிலாக "புதிய துறைமுகம்" என்ற பெயரே பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேதனை!!!

அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தும், பேருந்து நிலைய வழித்தட பலகைகள் மற்றும் பேருந்துகளில் பழைய பெயரே தொடர்ந்து பயன்படுத்தப்படுவது வரலாற்று பெருமைமிக்க சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெயருக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என பல்வேறு தரப்பினர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் இடம் கோரிக்கை!!!

இதுகுறித்து, அனைத்து வழித்தட அறிவிப்பு பலகைகள் மற்றும் பேருந்துகளில் அதிகாரப்பூர்வ பெயரான "வ.உ.சிதம்பரனார் துறைமுகம்" என்ற பெயரையே உடனடியாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறை அமைச்சர் ஏ. ஸ்ரீநாத் அவர்களிடம், தமிழ்நாடு வ.உ.சி. எழுச்சி பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் மா. தமிழ்ச்செல்வன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.உடனே அமைச்சர் ஸ்ரீநாத் ஆவண செய்வதாக கூறினார் 

thoothukudileaks

thoothukudileaks


இந்த கோரிக்கையை முன்வைத்த மா. தமிழ்ச்செல்வன் அவர்களை  தமிழ்நாடு சைவவேளாளர் சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வ.உ.சி. பேரவை – தூத்துக்குடி மாவட்டம் ஆகிய அமைப்புகள் பாராட்டி, அதிகாரப்பூர்வ பெயர் அனைத்து அரசு அறிவிப்பு பலகைகள் மற்றும் பேருந்துகளில் விரைவில் நடைமுறைக்கு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளன..

செவ்வாய், 7 ஜூலை, 2026

அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Tamil Nadu updates

தூத்துக்குடி, ஜூலை 8:

அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் மற்றும் பேரவைத் தலைவரின் தூத்துக்குடி வருகையை முன்னிட்டு, தொழிற்சங்க வளர்ச்சி மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.


மாநில நிர்வாகிகள் வருகை !!!

கழக நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்கவும், மாநில அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதனின் அறிவுறுத்தலின்படியும் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வருகை தரும் மாநில நிர்வாகிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, தொழிற்சங்க உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது மற்றும் அமைப்பு பணிகளை வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

thoothukudileaks


கூட்டத்தில் ...

அண்ணா தொழிற்சங்க மண்டலச் செயலாளர் கல்விக்குமார், தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் ஆனந்த், மாவட்ட ஆட்டோ சங்கத் தலைவர் நிலாச்சந்திரன் ..ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மேலும், மண்டல இணைச் செயலாளர் லட்சுமணன், நீதி பாலமுருகன், மண்டல துணைத் தலைவர் பார்வதி, வீரபாகு, அன்பரசு, பிரபாகர், உத்தரபாண்டி, ஒலிமுத்து, எம்பி குமார், திருமணி, பாலகுமார், வைரமணி, ரத்தினமணி, திருப்பதி, ராமு, சின்னு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் திரளாகக் கலந்து கொண்டு ஆலோசனையில் பங்கேற்றனர்.

thoothukudileaks


பட விளக்கம்:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்க வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சனி, 4 ஜூலை, 2026

வருவாய் துறை e District இணையதளம் சில நாட்களாக முடக்கம் பொதுமக்கள் அவதி


சென்னை, ஜூலை 4:


தமிழக அரசின் வருவாய் துறை சார்ந்த e-District இணையதளம் கடந்த சில நாட்களாக செயல்படாததால், வருமானம், சாதி, இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கவும், விண்ணப்ப நிலையை அறியவும் பொதுமக்கள் மற்றும் இ-சேவை மையங்கள் சிரமம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இணையதளத்தில் "பராமரிப்பு பணிகள் காரணமாக TN e-District சேவைகள் தற்காலிகமாக கிடைக்காது" என்ற அறிவிப்பு மட்டுமே காணப்படுகிறது. இதனால், சேவைகள் எப்போது முழுமையாக மீண்டும் தொடங்கும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.


thoothukudileaks

 தற்போது இணையத்தில் கிடைக்கும் தகவல்களின்படி, தமிழ்நாடு e-District (வருவாய் துறை) இணையதளம் பராமரிப்பு (Maintenance) பணிகள் காரணமாக தற்காலிகமாக செயல்படவில்லை என்று தளத்திலேயே அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


தமிழக அரசு அல்லது TNeGA சார்பில் "சில நாட்களாக சேவை முடங்கியுள்ளது" என்ற காரணம் குறித்து விரிவான அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பு வெளியாகியதாக தகவல் கிடைக்கவில்லை..


இணையதளத்தில் "Due to maintenance activity, TN e-District Services will be unavailable" என்ற அறிவிப்பு மட்டும் காட்டப்படுகிறது. 



பொதுமக்கள் விரைவில் சேவையை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளி, 3 ஜூலை, 2026

முன்ஜாமீன் தள்ளுபடியான 90 நிமிடங்களில் அதிரடி ஆய்வுப் பணியில் இருந்த திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஸ்பாட்டிலேயே கைது!

 

ஆத்தூர் (03.07.2026):

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து பொதுவெளியில் ஒருமையில் அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

thoothukudileaks



முதலமைச்சருக்கு எதிராக அவமரியாதையான முறையில் கருத்துக்களைத் தெரிவித்ததாகப் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், தன் மீதான கைது நடவடிக்கையைத் தவிர்க்கும் பொருட்டு அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 


இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இன்று அதனை அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் இன்று ஆத்தூர் பேரூராட்சிப் பகுதியில் உள்ளாட்சித் துறை சார்ந்த பல்வேறு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

90 நிமிடங்களுக்குள்...

மனு தள்ளுபடியான அடுத்த 90 நிமிடங்களுக்குள் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய தமிழக காவல்துறை, அவர் ஆய்வுப் பணியில் இருந்த ஆத்தூர் ஸ்பாட்டுக்கே நேரடியாகச் சென்று அவரைச் சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தது. 

வீடியோ 

நீதிமன்ற உத்தரவு வெளியான மிகக் குறுகிய கால அவகாசத்திற்குள் காவல்துறை நடத்திய இந்தத் துரிதக் கைது நடவடிக்கை, தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பரபரப்பான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.



வியாழன், 2 ஜூலை, 2026

இந்து சேனா பேரியக்கத்தில் புதிய நிர்வாகிகள் இணைப்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 


சேலம், ஜூலை 2:
சேலம் மாவட்டத்தில் இந்து சேனா மாநிலத் தலைவர் அருள்வேலன் ஜி-யை நேரில் சந்தித்த ராஜ கணேசன் மற்றும் கிரில் சுப்பிரமணி ஆகியோர், இந்து சேனா பேரியக்கத்தில் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர்.

thoothukudileaks


அப்போது, இயக்கத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அமைப்பின் செயல்பாடுகளை மேலும் சிறப்பாக முன்னெடுத்து செல்லுவது குறித்து மாநிலத் தலைவருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்து சேனாவின் பொறுப்பாளர்களான சேலம் ரமேஷ் ஜி, வேலூர் ஆனந்த் ஜி, சேலம் ரவிச்சந்திரன் ஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

புதிய உறுப்பினர்களை மாநிலத் தலைவர் அருள்வேலன் ஜி வரவேற்று, இயக்கப் பணிகளில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு மக்களிடம் அமைப்பின் நோக்கங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துத் தெரிவித்தார்.