செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி மாநகராட்சி வாராந்திர குறை தீர்க்கும் முகாம் – பொதுமக்கள் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை இன்று 46 மனுக்கள் பெறப்பட்டன தூத்துக்குடி 33வது வார்டு பாளை ரோடு மேற்கு மில்லர் புரத்தில் தார் ரோடு சம்பந்தமாக பரபரப்பு மனு.

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி, பிப்.11:

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று (11.02.2026, புதன்கிழமை) மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது.

thoothukudileaks


இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து சொத்து வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றம், பிறப்பு–இறப்பு சான்றிதழ் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து பயன்பெறச் செய்யப்பட்டது.

thoothukudileaks

thoothukudileaks
தூத்துக்குடி 33வது வார்டு பாளை ரோடு மேற்கு மில்லர் புரத்தில் தார் ரோடு சம்பந்தமாக ... பரபரப்பு மனு...
thoothukudileaks
தூத்துக்குடி நகரமே தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள் அமைந்துள்ள 800 மீட்டர் நீளமுள்ள விதி மட்டும் நகராட்சிக்கு சொந்தமில்லை என்பது அதிசயமாக உள்ளது.???

thoothukudileaks


இந்நிகழ்வில் மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டு ராஜா, மேற்கு மண்டல உதவி ஆணையர் காந்திமதி, S.O. ராஜபாண்டி, A.W. லெனின், A.E. ஜெயபிரசாந்த், A.E. ராகவி, மாமன்ற உறுப்பினர்கள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மேற்கு மண்டல மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள், குறுகிய நேரத்தில் தங்களின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளை நேரில் சந்தித்து மனுக்கள் அளிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர். 

மாநகராட்சி சார்பில் வாரந்தோறும் இம்முகாம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் திமுக ஆட்சியே மீனவர்களுக்கு நல்ஆட்சி அமைச்சர் கீதாஜீவன் பரபரப்பு பேச்சு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி news by sunmugasuthram press club president 

தூத்துக்குடி:பெ 11 "எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ அதுதான் மீனவ மக்களுக்கான நல் ஆட்சியாக இருந்து வருகிறது" என்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் தெரிவித்தார்.

thoothukudileaks


தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு மீனவர் நல வாரிய தலைவர் ஜோசப் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

thoothukudileaks


மீனவர்களின் முக்கிய கோரிக்கைகள்


திரேஸ்புரம், திருச்செந்தூர், அமலி நகர், ஆலந்தலை, பெரியதாழை, ஜீவாநகர், குலசேகரப்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரினர். மீனவர்களின் பாதுகாப்பை கருதி கடல் ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும், மீனவ கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


கடல் தொழிலில் ஈடுபட்டு உயிரிழந்த மற்றும் காணாமல் போன மீனவர்கள் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


திமுக அரசின் சாதனைகள்


கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதாஜீவன், "மீனவ நண்பர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான கஷ்டங்களை கடந்து கடல் தொழில் செய்து வருகின்றனர். அவர்களது கஷ்டங்களை குறைக்கும் வகையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்" என்றார்.


மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிப்பு, மீன்பிடி படகுகளுக்கு கூடுதல் டீசல் மானியம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் ரூ.150 கோடியில் விரிவாக்கம், தருவைகுளம் மீன் இறங்குதளம் விரிவாக்கம் என பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


எம்பிசி பட்டியல் சேர்க்கை


"மீனவ சமுதாயத்தை மிகவும் பின்தங்கியவர்கள் பட்டியலில் சேர்த்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசு. அதன் பலனாக எம்பிசி இட ஒதுக்கீட்டில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்கடன் உள்ளிட்ட பயன்களை அதிகமாக மீனவ சமுதாயத்தினர் பயன்படுத்தி பலனடைந்து வருகின்றனர்" என்று அமைச்சர் குறிப்பிட்டார்.


புதிய அறிவிப்புகள்


ஒவ்வொரு மீன்பிடி துறைமுகத்திலும் ஆம்புலன்ஸ் வசதி விரைவில் செய்து தர முதலமைச்சரிடம் எடுத்துக்கூறி விரைவில் நிறைவேற்றி தரப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். மீன்பிடி துறைமுகத்தில் சுத்திகரிக்கப்பட்ட ஆர்ஓ குடிநீர் பிளான்ட் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


"மீனவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக செவி சாய்த்து மீனவர்களுக்கு கலங்கரை விளக்கமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. மீனவ நண்பர்களும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்" என்று அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக் கொண்டார்.


மனு வழங்கல்


தொடர்ந்து நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் மீனவர் ஊர் நலக் கமிட்டியினர், மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் தங்களது பகுதிகளுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை மீனவர் நல வாரியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினிடம் மனுவாக வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட வாரிய தலைவர், விரைவில் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என தெரிவித்தார்.


கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி இயக்குநர்கள் புஷ்ராசப்னம், உத்தண்டு, மீனவர் நல வாரிய உறுப்பினர்கள் அந்தோணி ஸ்டாலின், ஜெபமாலை, லெனின், மாநில திமுக மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் செல்வராஜ், வீரபாண்டியபட்டினம் பங்குத்தந்தை அலாசியஸ், கவுன்சிலர்கள் ரெக்ஸ்லின், ஆறுமுகம், வட்டச் செயலாளர் டென்சிங், மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் இசக்கிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

photo by Arunan journalist 

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

 photo news by Arunan journalist 

தூத்துக்குடி, பிப்ரவரி 10:

தூத்துக்குடியில் அஇஅதிமுக பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் கே. பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை முன்னிட்டு, தேர்தல் அறிக்கை துண்டுப்பிரசுரம் விநியோகம், “விடியா ஆட்சி – உங்கள் வீட்டு பில்லிலே சாட்சி” என்ற பிரச்சாரம் உள்ளிட்ட செயல்திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது

thoothukudileaks

.

thoothukudileaks

thoothukudileaks



இந்த ஆலோசனைக் கூட்டம் 10.02.2026 செவ்வாய்கிழமை மாலை 6.00 மணிக்கு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள சோலை மஹாலில் நடைபெற்றது. 

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அஇஅதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் அவர்கள் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்த விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.

தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் நடைபெறவுள்ள தேர்தல் பணிகள், வீடு வீடாகச் சென்று துண்டுப்பிரசுரங்கள் விநியோகம், மக்கள் தொடர்பு இயக்கம், கட்சி அமைப்புகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.



thoothukudileaks


இந்த கூட்டத்தில் அஇஅதிமுக மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணியினர் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, பிப்ரவரி 9:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் இன்று (09.02.2026) காலை 10 மணியளவில் காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைக்கப்பட்டது.

thoothukudileaks


இந்த திட்டத்தின் தொடக்க விழா தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அறிஞர் அண்ணா மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கி திட்டத்தை செயல்படுத்தினர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


விழாவில் பேசிய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூய்மை பணியாளர்களின் காலை உணவு திட்டத்திற்காக ரூ.2 கோடி 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிதி மூலம் தினமும் சத்தான, சுகாதாரமான உணவு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இன்று தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 13இடத்தில் துவக்கி வைத்தனர் 

1)பழைய மாநகராட்சி அலுவலகம் 

2)அறிஞர் அண்ணா மண்டபம் 

3) அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்

4) புதிய பேருந்து நிலையம் ward ஆபீஸ்.

5) ஜோதி நகர் RRC மையம்

6) அம்பேத்கர் நகர் ward ஆபீஸ்.

7) மேட்டுப்பட்டி MCC.

8) கால்டுவெல் காலனி வார்டு ஆபீஸ்.

9) முத்தையாபுரம் வார்டு ஆபீஸ்.

10) JS Nagar ward office.

11) சிதம்பரம் நகர் மாநகராட்சி வணிக வளாகம்.

12) டோபி கானா வணிக வளாகம்.

13) P&T Colony ward office.

தூய்மை பணியாளர்களின் நலனை முன்னிறுத்தி அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி அவர்களின் உடல்நலம் மற்றும் பணித்திறன் மேம்பட உதவும் எனவும், நகர தூய்மை பணிகளில் உற்சாகம் அதிகரிக்கும் எனவும் விழாவில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

வியாழன், 5 பிப்ரவரி, 2026

பொதுக் கூட்டங்களுக்கு புதிய வரம்பு – மாவட்ட வாரியாக உச்ச அளவு நிர்ணயம் தமிழ்நாடு அரசின் SOP வழிகாட்டுதல்கள் அமுல் முழு விவரம் பார்க்க

Tamil Nadu update 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ்” நாளிதழ்  செய்தி

தூத்துக்குடி, ஜனவரி 05:

தமிழ்நாட்டில் நடைபெறும் பொதுக் கூட்டங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், அரசியல் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பெரும் மக்கள் கூடல்களை ஒழுங்குபடுத்தும் வகையில் அரசாணை எண் 5 (காவல் VIII) மூலம் புதிய செயல்பாட்டு நடைமுறை வழிகாட்டுதல்கள் (SOP) இன்று (05.01.2026) முதல் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டுள்ளன.

thoothukudileaks


இந்த SOP-ன் முக்கிய அம்சமாக, மாவட்ட வாரியாக பொதுக் கூட்டங்களுக்கான உச்ச அளவு (Crowd Limit) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடங்களின் பரப்பளவு, பாதுகாப்பு வசதி மற்றும் போக்குவரத்து சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அதிகபட்ச கூட்டத் திறன் கணக்கிடப்படும்.

அனுமதி பெற புதிய நடைமுறை

பொதுக் கூட்டம் நடத்த விரும்பும் அமைப்புகள் மற்றும் கட்சிகள்,

அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் நடத்த வேண்டுமெனில் 10 முதல் 21 நாட்களுக்கு முன்பாக

அங்கீகரிக்கப்படாத இடங்களில் நடத்த வேண்டுமெனில் 15 முதல் 30 நாட்களுக்கு முன்பாக

மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி விண்ணப்பிக்க வேண்டும்.

5,000 பேருக்கு மேற்பட்ட கூட்டங்களுக்கு SOP விதிகள் கட்டாயம் நடைமுறையில் இருக்கும்.

பாதுகாப்பு, மருத்துவ வசதி கட்டாயம்

கூட்டம் நடத்தும் அமைப்புகள்:

✔️ போதிய வாலண்டியர்கள் நியமனம்

✔️ குடிநீர், கழிப்பறை, தீயணைப்பு வசதி

✔️ ஆம்புலன்ஸ், மருத்துவ குழு

✔️ CCTV கண்காணிப்பு

✔️ போக்குவரத்து ஒழுங்கு ஏற்பாடு

போன்ற அனைத்தையும் கட்டாயம் செய்ய வேண்டும் என SOP-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர், காவல்துறை பொறுப்பு

இந்த SOP-ஐ அமல்படுத்தும் முழு பொறுப்பு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

விதிகளை மீறி கூட்டம் நடத்தினால் அனுமதி ரத்து, வழக்குப்பதிவு உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பே முக்கியம்

பெரும் கூட்டங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் பாதுகாப்பே அரசின் முதன்மை குறிக்கோள் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

புதன், 4 பிப்ரவரி, 2026

தைப்பூசத் திருவிழாவில் மாபெரும் அன்னதான விழா அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் ஏற்பாடு

குளித்தலை, பிப்ரவரி : பெ 4

தமிழ்நாட்டில் பழனிக்கு அடுத்தபடியாக சிறப்புமிக்க தைப்பூசத் திருவிழா கரூர் மாவட்டம் குளித்தலையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றங்கரையில் எட்டு ஊர் சுவாமிகள் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பங்கேற்று, பக்தர்களின் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டனர்.

thoothukudileaks

thoothukudileaks


இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தவாரி செய்து, சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து, அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாபெரும் அன்னதான விழா தொடர்ந்து இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று வந்து அன்னம் பெற்று சென்றனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக சங்கத்தின் தேசிய இணை செயலாளர் கிராமியம் நாராயணன் மற்றும் மாநில கௌரவ செயலாளர் வாழைக்காய் வியாபாரி சேட்டு ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த மாபெரும் அன்னதான விழாவுக்கான ஏற்பாடுகளை, சங்கத்தின் நிறுவனர் அருள்வேலன் ஜி அவர்களின் ஆலோசனைப்படி, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள்

N. ராமகிருஷ்ணன், P. கருணாநீதி, தியானேஷ், சரவணன், வெங்கடேஷ், சந்தோஷ், வீரமணி, தர்மராஜ், S. சதீஷ்குமார், ரவி, முகிலன், அர்ச்சகர் விஷ்ணு, சுந்தரேசன், வரகூர் மணி, மதியழகன், செந்தில் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

thoothukudileaks

thoothukudileaks



தூத்துக்குடி மாநகராட்சி வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: பெ 4

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று காலை 12மணியளவில் தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks




முகாமிற்கு மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த முகாமில் பொதுமக்கள் தரப்பில் சொத்து வரி தொடர்பான கோரிக்கைகள், குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றம், பிறப்பு–இறப்பு சான்றிதழ் திருத்தங்கள் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டன. உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பொதுமக்கள் சேவைகளை பெற்றனர்.

இன்றைய முகாமில் பொதுமக்கள் தரப்பில் மொத்தம்  24 மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பரிசீலனைக்காக ஒப்படைக்கப்பட்டன.

மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்