தூத்துக்குடி லீக்ஸ் |நாளிதழ் தேர்தல் சிறப்பு செய்தி
தேதி: 25.03.2026
வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA), பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று இன்று (25.03.2026 — புதன் கிழமை) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி அறிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கையொப்பமிட்டுள்ளார்.
இரண்டு தொகுதிகளில்...
பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் குளச்சல் (231) மற்றும் பத்மனாபபுரம் (232) தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த இரு தொகுதிகளிலும் பாஜக கடும் போட்டியை எதிர்கொள்ள உள்ளது.
கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள்:
அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில், அதிமுக 178 தொகுதிகளிலும், பாஜக 27 தொகுதிகளிலும், பாமக 18 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன.
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள்:
தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜக போட்டியிடும் தொகுதி திருச்செந்தூர்
மைலாப்பூர் (25), தளி (56), மொடக்குறிச்சி (100), உதகமண்டலம் (108), அவினாசி தனி (112), திருப்பூர் தெற்கு (114), கோயம்புத்தூர் வடக்கு (118), கந்தர்வகோட்டை தனி (178), புதுக்கோட்டை (180), திருப்பத்தூர் (185), மதுரை தெற்கு (192), சாத்தூர் (204), திருச்செந்தூர் (215), வாசுதேவநல்லூர் தனி (220), ராதாபுரம் (228), நாகர்கோவில் (230), விளவன்கோடு (233), ஆவடி (6), திருவண்ணாமலை (63), தஞ்சாவூர் (174), திருவாரூர் (168), அறந்தாங்கி (183), மானாமதுரை தனி (187), ராமநாதபுரம் (211), குளச்சல் (231), பத்மனாபபுரம் (232), ராசிபுரம் தனி (92) என மொத்தம் 27 தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது.
வேட்புமனு தாக்கல் மார்ச் 30 முதல் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெறும்.
வரலாற்று பின்னணி:
2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 தொகுதிகளை வென்று ஆட்சி அமைத்தது; அதிமுக 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த முறை வலுவான கூட்டணியை அதிமுக உருவாக்கியுள்ளது.
வேட்புமனு தாக்கல் மார்ச் 30 முதல் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெறும்.





