வியாழன், 14 மே, 2026

சூரியன் திரும்ப உதித்தே தீரும்! தோல்விக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை மே14

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், திமுக தலைவர் M. K. Stalin உணர்ச்சி பொங்க உரையாற்றினார். 

தேர்தல் தோல்வி, கட்சியின் எதிர்காலம், சமூக வலைத்தள அரசியல், அமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அவர் விரிவாக பேசினார்.

சூரியன் திரும்ப உதித்தே தீரும்!!!

“என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது தமிழ்நாட்டு அரசியல் நியதி” என உரையை தொடங்கிய ஸ்டாலின், நடந்து முடிந்த தேர்தலில் திமுக ஆட்சியை அமைக்க முடியாத போதிலும், கணிசமான வாக்கு விகிதத்தை பெற்றிருப்பதை சுட்டிக்காட்டினார்.

thoothukudileaks


இப்போதும் வெற்றி தான்!!

1989, 1996, 2006 ஆகிய தேர்தல்களுக்கு பின்னர் ஏற்பட்ட தோல்விகளை நினைவுகூர்ந்த அவர், “அப்போது விட தற்போது திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை 59 இடங்களில் வென்றிருக்கிறோம். கூட்டணியுடன் சேர்த்து பார்த்தால் 73 இடங்கள் கிடைத்துள்ளன” என்றார்.

அலெட்சியம்!!

மேலும், “திமுகதான் வெற்றி பெறும் என நினைத்து அலட்சியமாக வாக்களித்ததாக பலர் சமூக வலைத்தளங்களில் வருத்தப்படுகிறார்கள். இது நமது ஐந்தாண்டு நல்லாட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

திமுக தோல்வி முழு பொறுப்பு!!!

தோல்விக்கான காரணம் குறித்து யாரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்ட வேண்டாம் என வலியுறுத்திய ஸ்டாலின், “கழகத்தின் தலைவர் என்ற முறையில் இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

தனி இணையதளம்!!!

கட்சியின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளில் பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும், தொகுதி வாரியாக கள ஆய்வு நடத்தி 20 நாட்களுக்குள் அறிக்கை பெற குழு அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். மேலும், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க தனி இணையதளம் தொடங்கப்படும் எனவும் கூறினார்.

அறிவுரை!!!

சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “முன்னாடி டீக்கடையில பேசின அரசியலை, இனிமே சோஷியல் மீடியாவில் பேசியாகணும்” என நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கணிப்பு!!!

அதிமுக மற்றும் ஆளும் கூட்டணி நிலைமை குறித்து பேசிய ஸ்டாலின், “அடுத்த அரசியல் சூழல் எப்படி மாறும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆனால் சட்டமன்றத்தில் திமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும்” என்றார்.

தோல்வி தற்காலிகமே!!!

இறுதியாக, “இந்த தோல்வி தற்காலிகம் தான். திட்டமிடுவோம், தீவிரமாக உழைப்போம், மீண்டு வருவோம், மீண்டும் வெற்றி பெறுவோம்” என உற்சாகமாக உரையை நிறைவு செய்தார்.

மீண்டும் அதிகாரப்பூர்வ நாளிதழ், ஊடகத்தை பறிகொடுத்த அதிமுக!

சென்னை மே14

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் தொடர்ந்து உருவாகி வரும் உள்கட்சி பிளவுகள், கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, அதிமுக மீண்டும் தனது அதிகாரப்பூர்வ நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

thoothukudileaks

இது பற்றி செய்தியாவது...

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக நீண்ட காலம் செயல்பட்டது ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் பின்னணியில், அந்த நாளிதழ் டிடிவி தினகரன் அணியின் கட்டுப்பாட்டுக்கு சென்றது. அதேபோல், அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி ஊடகமாக இருந்த ‘ஜெயா டிவி’ சசிகலா தரப்பின் வசமாகியது.


இதையடுத்து, சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அதிமுகவுக்கென புதிய அதிகாரப்பூர்வ ஊடகமாக ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சி மற்றும் ‘நமது அம்மா’ நாளிதழ் தொடங்கப்பட்டது. இவ்விரு ஊடகங்களும் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோரின் தலைமையில் செயல்பட்டு வந்தன.


ஆனால் தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள புதிய உள்கட்சி மோதலால், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தனி அணியாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதனைத் தொடர்ந்து, ‘நமது அம்மா’ மற்றும் ‘நியூஸ் ஜெ’ ஊடகங்களில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தலைமையுடன் தொடர்புடைய செய்திகள் புறக்கணிக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.


இந்த சூழ்நிலையில், அதிமுகவுக்கு மீண்டும் தனி அதிகாரப்பூர்வ நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி ஊடகம் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.

புதன், 13 மே, 2026

பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: ஒருவர் கைது 9 கிலோ பொருட்கள் பறிமுதல்

Tamil Nadu updates 13-5-2026

தூத்துக்குடி மே13

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுநாயக்கன்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 9 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

thoothukudileaks


இது பற்றி செய்தியாவது:-

எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் இன்று (13.05.2026) காட்டுநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் (51) என்பவர் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கண்ணனை கைது செய்து, அவரிடமிருந்து 9 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவரை சுட்ட போலீஸ் அதிகாரியை கைது செய்ய வேண்டும்” மணிகண்டன் மனைவி பொன்மணி கோரிக்கை; சாகும்வரை உண்ணாவிரதம் அறிவிப்பு

Tamil Nadu updates 13-5-2026

photo news by Ravi

தூத்துக்குடி மே13

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமத்தில் கடந்த 07.04.2026 அன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்த மணிகண்டனின் மனைவி பொன்மணி மணிகண்டன், தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

thoothukudileaks


அரசு வேலை வழங்க வேண்டும் நீதியும் உதவியும் கிடைக்கவில்லை!!!

அப்போது அவர் கூறுகையில், ..

“எனது கணவரை சுட்ட உதவி காவல் ஆய்வாளர் இசக்கி ராஜாவை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். 

மேலும், தமிழக அரசு எங்கள் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்கி, அரசு வேலை வழங்க வேண்டும். இதுவரை எங்களுக்கு எந்த நீதியும் உதவியும் கிடைக்கவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

மே 26 ல்  சாகும் வரை உண்ணாவிரதம்!!!

மேலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில், வரும் 26.05.2026 அன்று ஆலங்குளத்தில் உள்ள முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் சிலை முன்பு சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

thoothukudileaks
செய்தியாளர் சந்திப்பு 


இந்த செய்தியாளர் சந்திப்பின்போது சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு தமிழ்நாடு நிறுவனர் தலைவர் வழக்கறிஞர் எஸ்.பி. சிலுவை, வழக்கறிஞர் திலக் மற்றும் வழக்கறிஞர் நம்பிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

செவ்வாய், 12 மே, 2026

தூத்துக்குடி மாவட்ட கிரேன் உரிமையாளர்கள் நலச்சங்க ஆண்டு விழா

Tamil Nadu updates 13-5-2026

தூத்துக்குடி மே13

தூத்துக்குடி மாவட்ட கிரேன் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 3ஆம் ஆண்டு விழாவும், அன்னையர் தின விழாவும் தூத்துக்குடி கனி பேலஸில்  நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் சுயம்புலிங்கம் தலைமை தாங்கினார். 


விழாவில்... 

வில்லவராயர் குரூப் நிறுவனங்களின் உரிமையாளர் ஜேசையா வில்லவராயர், ஜெயந்தி குரூப் நிறுவனங்களின் பிரகாஷ், ஷோ ஷிப்பிங் ஸ்டீரிமர் ஏஜென்ட்ஸ் நிறுவனத்தின் கிஷோர், தமிழக கனரக கிரேன் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஏ.கே. மணி ஆகியோர் கலந்து கொண்டனர். 

thoothukudileaks


மேலும் தமிழ்நாடு எச்எம்எஸ் உழைப்பாளர் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜலட்சுமி ராஜ்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சட்ட உதவிமைய மூத்த வழக்கறிஞர் கலைச்செல்வி  குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.


இதனைத் தொடர்ந்து...

 தமிழ்நாடு கனரக கிரேன் உரிமையாளர்கள் சங்க துணைத்தலைவர் கலைவாணன், செயலாளர் பீர் முகமது, துணைத்தலைவர் பிரகாஷ், பொருளாளர் ஜெய்சங்கர், சேலம் காண்ட்ராக்ட் ஒர்க்ஸ் வேலு, மக்கள் டெய்லி செய்தி குழுமம் சிஇஓ கி.ம.சங்கர், எஸ்கே கன்ஸ்ட்ரக்ஷன் சாமிகண்ணு, ஆகாஷ் கன்ஸ்ட்ரக்ஷன் பிரபாகரன், எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் மற்றும் வ.உ.சி. துறைமுக ஆணைய உறுப்பினர் துறைமுகம் சத்யா, விமல் ஷிப்பிங் லிமிடெட் ராஜேஷ், பேங்க் ஆப் இந்தியா மேலாளர் கணேஷ் பிரபாகர், எச்எம்எஸ் ஜெயக்குழு உறுப்பினர் ஜான் கென்னடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அன்னையர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன், கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி மற்றும் விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நிஷா பவுண்டேஷன் மையம் மீது வீண் பழி போடாதே என தனது காதலியை கண்டித்து காதலன் மருதநாயகம் செய்தியாளர் சந்திப்பு பரபரப்பு

 நிஷா பவுண்டேஷன் மையம் மீது வீண் பழி போடாதே என தனது காதலியை கண்டித்து காதலன் மருதநாயகம் செய்தியாளர் சந்திப்பு பரபரப்பு 

தூத்துக்குடி மே12

தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் ஒருவர் போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குடிப்பழக்கம் போக சிகிச்சை!!!

கணவரை உறவினர்கள் கடத்தி வைத்து துன்புறுத்தி வருவதாக மனைவி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த நிலையில், “தன்னார்வமாகவே சிகிச்சை பெற்று வருகிறேன்” என கணவர் மருதநாயகம் விளக்கம் அளித்துள்ளார்.

thoothukudileaks


இது பற்றிய செய்தியாவது :-

🪉 தூத்துக்குடி அகாடமி -ல் காதல்!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சாருமதி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே அகரம் வடக்கு பகுதியை சேர்ந்த மருதநாயகம் ஆகியோர் தூத்துக்குடியில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் படித்தபோது பழகியுள்ளனர். 

சாதி மறுப்பு திருமணம்!!!

பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், கடந்த 24.03.2026 அன்று தென்காசி திருமலை கோயிலில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


இதையடுத்து இருவரும் பாளையங்கோட்டையில் வசித்து வந்த நிலையில், மருதநாயகத்திற்கு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை கிடைத்துள்ளது.


காதலன் திரும்பி வரவில்லை!!!

இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தனது சொந்த ஊரான வல்லநாடு அகரத்திற்கு செல்வதாக கூறி மருதநாயகம் சென்றுள்ளார். ஆனால் அவர் மீண்டும் திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது.


இதுகுறித்து சாருமதி கூறுகையில்,...

 கடந்த 24ஆம் தேதி மருதநாயகம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது தந்தை மற்றும் உறவினர்கள் தாக்கி துன்புறுத்துவதாகவும், தன்னை மீட்டுச் செல்லுமாறும் தெரிவித்ததாக கூறினார்.


இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், பாளையங்கோட்டை துணை ஆணையர் அலுவலகம் மற்றும் முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் தன்னை மிரட்டும் வகையில் காவல்துறையினர் செயல்பட்டதாகவும் சாருமதி குற்றம்சாட்டினார்.


காதலி தனது காதலனை ஆணவ கொலை செய்ய போறாங்க என குற்றச்சாட்டு!!! 

நிஷா பவுண்டேஷன் மீது வீண் பழி  !!!

பின்னர் நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, மருதநாயகம் தூத்துக்குடியில் உள்ள நிஷா போதை மறுவாழ்வு மையத்தில் இருப்பதாக போலீசார் கூறி அங்கு அழைத்துச் சென்றதாகவும், ஆனால் கணவரிடம் பேச அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.


இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சாருமதி மனு அளித்தார். 


அதில், “எனது கணவருக்கு எந்தவிதமான மது அல்லது போதை பழக்கமும் இல்லை. அவரை உறவினர்கள் ஆணவக் கொலை செய்யும் நோக்கில் போதை மறுவாழ்வு இல்லத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தி வருகின்றனர். அவரை உடனடியாக மீட்டு தர வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

குடிபோதை மதுப்பழக்கம் விடுபட சிகிச்சை எடுத்து வரும் காதலன் மருதநாயகம் 

நிஷா பவுண்டேஷன் மையம் மீது வீண் பழி போடாதே என காதலி கண்டித்து காதலன் மருதநாயகம் செய்தியாளர் சந்தித்து பரபரப்பு !!


இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி டி.ஆர். தெருவில் உள்ள நிஷா போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வரும் மருதநாயகம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.


அப்போது காதலன் மருதநாயகம் கூறுகையில்,

 “நான் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறேன். சாருமதியை காதலித்து வந்தேன். எனக்கு மதுப்பழக்கம் இருந்தது. தேர்தலுக்காக வீட்டிற்கு சென்றபோது, அந்த பழக்கத்திலிருந்து மீள என் குடும்பத்தினர் என்னை நிஷா போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இங்கு நான் நலமாக சிகிச்சை பெற்று வருகிறேன். 


யாரும் என்னை அடித்து துன்புறுத்தவில்லை. இங்கு சுமார் 85 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை முடிந்த பிறகு, என் எதிர்காலம் குறித்து முடிவு செய்வேன்” என்றார்.

தூத்துக்குடியில் வேளாண்மை உழவர் நலத்துறை உயிர் உர உற்பத்தி மையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு பரபரப்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பு கலவரத்தில் எரிக்கப்பட்ட வாகனம் அந்த துறை இன்னும் வழங்கப்படவில்லை தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உழவர் சந்தையில் கட்டிமுடிக்கப்பட்டும் திறக்க ப்படாமல் பூட்டு தொங்கும் அவலம்

Tamil Nadu updates 12-5-2026

 photo news by அருணன் செய்தியாளர் 

தூத்துக்குடியில் வேளாண்மை உழவர் நலத்துறை உயிர் உர உற்பத்தி மையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார் கடந்த பல வருடங்களாக  ஆட்சியர் ஆக இருந்தவர்கள் இப் பகுதிக்கு வந்தது இல்லை என்பதால் வேளாண்மை அதிகாரிகள் வட்டாரத்தில் தீடீர் பரபரப்பு ஏற்பட்டது 

thoothukudileaks
ஆய்வு


இது பற்றி செய்தியாவது:-

தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உயிர் உர உற்பத்தி மையத்தில் மாவட்ட ஆட்சியர் விஷு  மகாஜன் இன்று (12-5-2026) காலை 11 மணியளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது உயிர் உரங்கள் தயாரிக்கும் முறைகள், விவசாயிகள் பயன்படுத்தும் நடைமுறைகள் மற்றும் உயிர் விதைகள் உற்பத்தி தரச்சான்று தொடர்பான செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆய்வகத்தின் அனைத்து பிரிவுகளையும் சுற்றிப்பார்த்து அங்குள்ள பணிகள் குறித்து வேளாண்மை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், வேளாண்மை துணை இயக்குநர் மனோரஞ்சிதம், தரக்கட்டுப்பாட்டு வேளாண்மை உதவி இயக்குநர் கண்ணன், திலி வேளாண் விற்பனை கூட செயலாளர் எழில், புதுக்கோட்டை வேளாண்மை உழவர் இணை அதிகாரி சுரேஷ், விதை பரிசோதனை ஆய்வக வேளாண்மை அலுவலர் ஷேக் நூருல், உயிர் உர உற்பத்தி மைய அதிகாரி சகாயமேரி, அக்மார்க் தர சோதனை ஆய்வக வேளாண்மை அலுவலர் வினித், திருச்செந்தூர் வேளாண் வணிக அலுவலர் விக்னேஸ்வரி, தூத்துக்குடி உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


பழுது அடைந்து 

காணப்பட்ட கட்டிடம் !!!  

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரால் கடந்த அதிமுக ஆட்சியில் திறந்து வைக்கப்பட்ட தூத்துக்குடி ஒழுங்கு முறை விற்பனை கூடம் அக்மார்க் ஆய்வு கட்டிடம் பராமரிப்பு இன்றி மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. 

thoothukudileaks
பழுது அடைந்த கட்டிடம் 


தூத்துக்குடி உழவர் சந்தையில் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் பூட்டு போட்டு தொங்கும் வேளாண் அலுவலகம்!!!

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் உள்பகுதியில் இயங்கி வரும் உழவர் சந்தை காய்கறிகள் விற்பனையகம் அதில்  வேளாண் இயக்குநர் அலுவலகம் கடந்த 2023ஆண்டில் இருந்து கட்டி  முடிக்கப்பட்டது சுவர் வெள்ளையடிப்பு முதற் கொண்டு முடிந்த நிலையில் இன்று வரை திறக்க படாமல் கிடக்கும் அவல நிலை 

thoothukudileaks
கட்டி முடிக்கப்பட்டும் திறக்க படாமல்? 
பூட்டு தொங்கும் அவலம் 


இது ...ஏதும் யாருக்கோ கமிஷன் இத்யாதிகள் கவனிக்க மறுத்த பிரச்சனையா என்கிறார்கள் கட்டி முடிக்கப்பட்டும் பூட்டு தொங்கும் பரிதாபம்!!!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு கலவரம் போராட்டக்காரர்கள் தூத்துக்குடி புதிய பேருந்து உழவர் சந்தையில் நின்ற வேளாண் துறை பயன் படுத்திய  ஜீப் எரித்தனர் இன்று வரை...மீண்டும் ஜீப் வழங்க படாதது ஏன்??

அதே போல... கடந்த காலங்களில் வேளாண் அதிகாரிகள் பயன் படுத்தி வந்த ஜீப் வாகனம் 2018 ல் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்ப்பு போராட்டத்தில் கலவரக்காரர்கள் வேளாண் அதிகாரிகள் பயன் படுத்தி வந்த ஜீப் ஜ உழவர் சந்தையில் நின்றது அதை  🔥 தீ வைத்து எரிக்கப்பட்டது 

thoothukudileaks
ஸ்டெர்லைட் எதிர்ப்பு கலவரத்தில் எரிக்கப்பட்ட 
வேளாண் துறை  வாகனம் இன்னும் தூத்துக்குடி உழவர் சந்தையில்!!


அதன் பிறகு இன்று வரை வேளாண் இயக்குநர் அதிகாரிக்கென்று எரிக்க பபட்ட வாகனத்திற்கு பதிலாக வாகனம் வசதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஏற்படுத்தி தரவில்லை நடந்தோ ஆட்டோவில் தான் செல்கின்றனர். 


>