செவ்வாய், 7 ஏப்ரல், 2026

தூத்துக்குடி விவிடி சிக்னலில் இன்று மாலை 3 மணிக்கு விஜய் பிரச்சாரம் தூத்துக்குடியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

 தூத்துக்குடி லீக்ஸ் | நாளிதழ் செய்தி

தூத்துக்குடி, ஏப். 8:

தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் அவர்கள் இன்று மாலை 3 மணி அளவில் தூத்துக்குடி நகரின் முக்கியமான பகுதியாகிய விவிடி சிக்னல் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

thoothukudileaks


இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். குறிப்பாக நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்...

சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய சாலைகள், சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



மேலும், ட்ரோன் கேமரா மூலம் வான்வழி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் செயல்பாடுகள் கவனிக்கப்படுகிறது.




போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதுடன், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாகச் செல்ல காவல்துறையின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விஜய் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி நகரம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

 🔥 “சட்டம் தெரிந்தால் பயம் இல்லை!”

📘 பாமரனுக்கும் புரியும் இந்திய சட்ட முழு கையேடு (மக்கள் கண்டிப்பாக படிக்க வேண்டியது)

இன்று பலர் “போலீஸ் கேஸ் வந்துவிட்டது” என்றாலே பயந்து போகிறார்கள்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா?


 👉 சட்டத்தை தெரிந்தவரை யாராலும் ஏமாற்ற முடியாது!

இந்த கட்டுரையில்,

✔️ பெட்டி கேஸ் முதல் கொலை வரை

✔️ எந்த சட்டம்? எந்த செக்ஷன்?

✔️ என்ன தண்டனை? எப்படி வெளியே வருவது?

எல்லாவற்றையும் எளிமையாக பார்க்கலாம்.

📘 இந்திய சட்டம் – அடிப்படை

இந்தியாவில் முக்கியமான 3 சட்டங்கள்:


👉 Indian Penal Code – குற்றங்கள் என்ன என்பதை சொல்கிறது

👉 Code of Criminal Procedure – போலீஸ் என்ன செய்யலாம் என்பதை சொல்கிறது

👉 Motor Vehicles Act, 1988 – டிராஃபிக் விதிகள்

🚨 1. பெட்டி கேஸ் (சிறிய குற்றங்கள்)

😡 தகாத வார்த்தைகள் பேசுதல்

IPC 294(b)

தண்டனை: 3 மாதம் சிறை / அபராதம்

✔️ ஜாமீன் கிடைக்கும்

🔊 பொது இடத்தில் சத்தம் / தொந்தரவு

IPC 290

₹200 அபராதம்

✔️ உடனே முடியும்


🚫 போலீஸ் உத்தரவை மீறுதல்

IPC 188

1–6 மாதம் சிறை

👮 அரசு அதிகாரியை தடுக்குதல்

IPC 186

3 மாதம் சிறை


🚗 2. டிராஃபிக் கேஸ்கள்

🪖 ஹெல்மெட் இல்லாமல்

MV Act 129 / 194D

₹1000 + லைசன்ஸ் சஸ்பெண்ட்

📱 மொபைல் பேசிக் கொண்டு ஓட்டுதல்

Section 184

₹5000

🚦 சிக்னல் மீறுதல்

Section 119

₹500–₹1000

🏎️ வேகமாக ஓட்டுதல்

Section 183

₹1000–₹2000

🚫 நம்பர் பிளேட் இல்லாமல்

Section 192

₹5000


🍺 குடித்து ஓட்டுதல்

Section 185

₹10,000 + சிறை

✔️ இதற்கு தீர்வு:

👉 e-challan கட்டினால் கேஸ் முடியும்


🔪 3. மிதமான குற்றங்கள்

🧤 திருட்டு

IPC 379

3 வருடம் சிறை

✔️ ஜாமீன் கிடைக்கும்

💸 மோசடி

IPC 420

7 வருடம்

🤜 தாக்குதல்

IPC 352

3 மாதம்

🩸 காயப்படுத்துதல்

IPC 323

1 வருடம்


🔥 4. கடுமையான குற்றங்கள்

🔪 கொலை

IPC 302

ஆயுள் / மரண தண்டனை

❌ ஜாமீன் கடினம்

⚠️ கற்பழிப்பு

IPC 376

10 வருடம் +

💰 கொள்ளை

IPC 392

10 வருடம்

👥 டக்காய்த்தி

IPC 395

ஆயுள்


⚖️ 5. FIR & கைது – தெரிந்திருக்க வேண்டியது

👉 FIR = First Information Report

✔️ போலீஸ் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்

✔️ FIR copy இலவசம்

🧾 உங்கள் உரிமைகள்

👉 Constitution of India

✔️ Article 21

உயிர் பாதுகாப்பு

✔️ Article 22

கைது காரணம் சொல்ல வேண்டும்

வக்கீல் பார்க்க உரிமை


🔓 6. ஜாமீன் (Bail)

✔️ Bailable

சிறிய கேஸ்

போலீஸ் தரலாம்

❌ Non-bailable

பெரிய கேஸ்

கோர்ட்டு மட்டும்

🚨 7. கேஸில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்?

✔️ அமைதியாக இருங்கள்

✔️ FIR copy கேளுங்கள்

✔️ வக்கீல் அணுகுங்கள்

✔️ உண்மை பேசுங்கள்

❌ லஞ்சம் கொடுக்காதீர்கள்

❌ சண்டை போடாதீர்கள்


🚨 1. FIR பதிவு ஆனதும் என்ன நடக்கும்?

👉 FIR (First Information Report) என்பது ஒரு குற்றம் நடந்ததாக போலீசுக்கு கிடைக்கும் முதல் தகவல்.

✔️ FIR பதிவு ஆனவுடன்:

போலீஸ் விசாரணை ஆரம்பிக்கும்

சாட்சிகள், ஆதாரங்கள் சேகரிக்கப்படும்

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கைது செய்யலாம்

❗ முக்கியம்:

👉 FIR copy இலவசமாக பெற உங்கள் உரிமை

👮 2. போலீஸ் கைது செய்தால் என்ன செய்ய வேண்டும்?

✔️ உங்கள் உரிமைகள்:

கைது காரணம் சொல்ல வேண்டும்

உங்கள் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

24 மணி நேரத்திற்குள் கோர்ட்டில் ஆஜர் செய்ய வேண்டும்

வக்கீலை சந்திக்கும் உரிமை உண்டு


🧠 3. போலீஸ் ஸ்டேஷனில் எப்படி பேச வேண்டும்?

✔️ செய்ய வேண்டியது:

அமைதியாக பேசுங்கள்

கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்

“எனக்கு வக்கீல் வேண்டும்” என்று சொல்லலாம்

கையெழுத்து வைக்கும் முன் படித்து பாருங்கள்


❌ செய்யக்கூடாதது:

கோபப்படாதீர்கள்

பொய் சொல்லாதீர்கள்

அழுத்தத்தில் ஒப்புக்கொள்ளாதீர்கள்

⚖️ 4. கோர்ட்டில் என்ன நடக்கும்?

✔️ முதல் நிலை:

ஜட்ஜ் முன்னிலையில் ஆஜர்

குற்றம் கூறப்படும்

✔️ அடுத்தது:

ஜாமீன் கேட்கலாம்

விசாரணை தொடங்கும்

🔓 5. ஜாமீன் எடுக்கும் முறைகள் (Step-by-Step)

🟢 1. Bailable Case (சிறிய கேஸ்)

போலீஸ் ஸ்டேஷனிலேயே ஜாமீன் கிடைக்கும்

ஒரு surety (உத்தரவாதம்) வேண்டும்


🔴 2. Non-Bailable Case (பெரிய கேஸ்)

Step 1:

👉 வக்கீல் மூலம் ஜாமீன் மனு போட வேண்டும்

Step 2:

👉 கோர்ட்டில் விசாரணை நடக்கும்

Step 3:

👉 ஜட்ஜ் முடிவு எடுப்பார்

📄 6. Anticipatory Bail (முன் ஜாமீன்)

👉 கைது ஆகும் முன்பே ஜாமீன் பெறலாம்

எப்போது?

போலீஸ் கைது செய்ய வாய்ப்பு இருந்தால்

எப்படி?

Sessions Court / High Court-ல் மனு போட வேண்டும்


🧾 7. Charge Sheet என்றால் என்ன?

👉 போலீஸ் விசாரணை முடிந்த பிறகு கோர்ட்டில் தரும் அறிக்கை

இதில் இருக்கும்:

சாட்சிகள்

ஆதாரங்கள்

குற்ற விவரம்


⏳ 8. விசாரணை (Trial) எப்படி நடக்கும்?

குற்றம் வாசிக்கப்படும்

சாட்சிகள் வருவார்கள்

வக்கீல்கள் வாதாடுவார்கள்

தீர்ப்பு வழங்கப்படும்


⚠️ 9. தவறான கேஸ் போட்டால் என்ன செய்யலாம்?

✔️ கோர்ட்டில் எதிர்க்கலாம்

✔️ பொய் வழக்கு என்றால் case dismiss ஆகும்

✔️ எதிர் வழக்கும் போடலாம்


🚨 10. போலீஸ் தவறு செய்தால்?

✔️ மேலதிகாரியிடம் புகார்

✔️ மனித உரிமை ஆணையம்

✔️ கோர்ட்டில் மனு

🛑 முக்கிய பாதுகாப்பு குறிப்புகள்

👉 எந்த காகிதத்திலும் கையெழுத்து வைக்க முன் படிக்கவும்

👉 உங்கள் உரிமைகளை தெரிந்து கொள்ளுங்கள்

👉 வக்கீல் இல்லாமல் பெரிய கேஸ்களை சமாளிக்காதீர்கள்

🧠 வாழ்க்கையை காப்பாற்றும் உண்மை

👉 சட்டம் தெரியாதவன் பயப்படுவான்

👉 சட்டம் தெரிந்தவன் தைரியமாக இருப்பான்


🛑 முக்கிய எச்சரிக்கை

👉 சிறிய தவறு = அபராதம்

👉 பெரிய தவறு = வாழ்க்கையே பாதிக்கும்

🧠 கடைசி உண்மை

👉 “சட்டம் தெரிந்தவன் அடிமை ஆக மாட்டான்”

👉 “உரிமை தெரிந்தவன் பயப்பட மாட்டான்”

📢 இந்த தகவலை பகிருங்கள்!

இந்த கட்டுரை:

✔️ ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவை

✔️ ஒவ்வொரு இளைஞனும் தெரிந்திருக்க வேண்டும்

✔️ ஒரு உயிரையே காப்பாற்றும்


#சட்டவிழிப்புணர்வு

#IndianLaw

#KnowYourRights

#PoliceCase

#TrafficRules

#LegalAwareness

#தமிழ்நாடு

#SafetyFirst

#ShareThis

திங்கள், 6 ஏப்ரல், 2026

ஸ்ரீவைகுண்டத்தில் எஸ்.பி. சண்முகநாதன் வேட்பு மனு தாக்கல் உற்சாக ஊர்வலம்

தூத்துக்குடி லீக்ஸ் | நாளிதழ் செய்தி

தூத்துக்குடி ஏப்ரல் 6

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

thoothukudileaks


முன்னதாக, ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டநாத பெருமான் திருக்கோவிலில் வழிபாடு மேற்கொண்ட பின்னர், அங்கிருந்து உற்சாக ஊர்வலமாக புறப்பட்ட வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகம் சென்றடைந்தனர்.

அங்கு தேர்தல் அலுவலர் செந்தில்வேல்முருகனிடம் எஸ்.பி. சண்முகநாதன் தனது வேட்பு மனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்வில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் சித்தாரஞ்சன், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் காசிராஜன், அ.ம.மு.க. சுப்பிரமணியன் உள்ளிட்ட அ.தி.மு.க. தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

வேட்பு மனு தாக்கல் நிகழ்வை முன்னிட்டு, பகுதி முழுவதும் உற்சாகமான அரசியல் சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.

வேட்பு மனுத் தாக்கல் இன்று பரபரப்பு தூத்துக்குடியில் காவல்துறையினருடன் அதிமுகவினர் மோதல்

 தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி


தூத்துக்குடி, ஏப்ரல் 6:

தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளில் தூத்துக்குடியில் பரபரப்பான சம்பவம் ஏற்பட்டது.

வேட்பு மனுத் தாக்கல் இன்று  பரபரப்பு: தூத்துக்குடியில் காவல்துறையினருடன் அதிமுகவினர் மோதல் ஏற்பட்டது 

அதிமுக -காவல்துறை மோதல் 

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன், டுவிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்ய சப் கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்தார்.

thoothukudileaks


தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. 

வெளியேறுங்கள் !!!

இதன்படி அதிகாரிகள் அனுமதி வழங்கியிருந்த நிலையில், கூடுதலாக ஒருவர் உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபு, “ஒருவர் வெளியே சென்றால் மட்டுமே வேட்பு மனு பெற முடியும்” என தெரிவித்தார்.


இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த விவேகம் ரமேஷ் உள்ளிட்டோர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றபோது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்தனர். “ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது” என கூறியதால், அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.


இதையடுத்து வெளியே இருந்த விவேகம் ரமேஷ் அழைத்ததன் பேரில், வேட்பாளர் செல்லப்பாண்டியன் வெளியே வந்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 “என்னை வேட்பு மனுத் தாக்கல் செய்ய விடாமல் தடுக்கிறீர்களா?” என அவர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் தொடர்ந்து விதிமுறைகளை விளக்கியும், வாக்குவாதம் சில நேரம் நீடித்தது.

இதே நேரத்தில், அலுவலகத்துக்குள் இருந்த முன்னாள் நகர மன்ற தலைவர் இரா. ஹென்றி அவரை சிலர் வெளியே செல்லும்படி காவல்துறையினர் வெளியேற்றினார்கள்.


மோதல்!!!

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஹென்றியும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அலுவலகத்திற்குள் தொடங்கிய இந்த வாக்குவாதம் வெளியிலும் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.


சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த வாக்குவாதம் பின்னர் அமைதியானது. தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள விதிமுறைகளை காவல்துறையினர் கடைப்பிடித்த நிலையில், இந்த வாக்குவாதம் அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


✍️ Thoothukudi Leaks செய்தியகம்

அதிமுக கூட்டணி கட்சிகளின் அமோக வரவேற்புடன் தூத்துக்குடியில் சட்டமன்றத் தேர்தல் சித செல்லப்பாண்டியன் வேட்புமனு தாக்கல் பரபரப்பு

தூத்துக்குடி லீக்ஸ் | நாளிதழ் செய்தி

 photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஏப். 6:

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக சித செல்லப்பாண்டியன் இன்று தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தார்.

thoothukudileaks


தூத்துக்குடி சப் கலெக்டர் அலுவலகத்தில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலர் பிரபு விடம் அதிமுக வேட்பாளர் செல்லப்பாண்டியன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 


இதனை முன்னிட்டு, அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.

வீடியோ பார்க்க 

வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக, நகரின் முக்கிய பகுதிகளில் இருந்து பேரணி அமைத்து சப் கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தார். 

அப்போது ஆதரவாளர்கள் முழக்கங்கள் எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித செல்லப்பாண்டியன்,

“மக்களின் நம்பிக்கையை வென்று, தூத்துக்குடி தொகுதியில் வளர்ச்சியை கொண்டு வர உறுதி மேற்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.


தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் நிகழ்வுகள் மாவட்டத்தில் அரசியல் சூழலை பரபரப்பாக மாற்றியுள்ளன.

சனி, 4 ஏப்ரல், 2026

திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்துதூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

news by Arunan senior reporter weekly

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலத்துறை அமைச்சரான கீதாஜீவனுக்கு எதிராக கிராம மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks




தூத்துக்குடி அருகிலுள்ள அத்திமரப்பட்டி, முள்ளக்காடு, பொட்டல்காடு, சவேரியார்புரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைக்க முயற்சிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த திட்டத்திற்கு அமைச்சரான கீதாஜீவன் உடந்தையாக உள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


இதனைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சருக்கு எதிராக ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இணைந்து கருப்புக்கொடி ஏந்தி திமுக வேட்பாளர் கீதா ஜுவன்  வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களும் எழுப்பப்பட்டன.

போராடும் போது கண்டு கொள்ளாதவர் என குற்றச்சாட்டு!!!

கடந்த காலங்களில் தாங்கள் போராடும் போது கலந்து கொள்ளவும் கண்டு கொள்ளவும் இல்லை இப்போது எதற்கு வருகின்றனர் என கேள்வி எழுப்பினார்கள் 

மேலும் இதேபோல், நேற்று(4-3-2026) திருச்செந்தூர் பகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரச்சாரத்திற்கு சென்றபோது, கிராம மக்கள் அவரை உள்ளே வரவிடாமல் தடுத்து விரட்டி அடித்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் எதிர்ப்புகள் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசியல் சூழ்நிலையை சூடுபிடிக்க வைத்துள்ளன

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக வேட்பாளர்கள் பிரச்சாரம் பண்ண வருகையில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்புகளை காட்டி வருகின்றனர் 

ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தர்ராஜ் மனுதாக்கல்

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

தூத்துக்குடி ஏப்ரல் 4

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம்:

அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தர்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கான தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

thoothukudileaks




ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமியிடம் சுந்தர்ராஜ் தனது மனுவை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், லட்சுமண பெருமாள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

வேட்பு மனுதாக்கலையொட்டி, அப்பகுதியில் கூட்டணி கட்சியினரின் திரளான பங்கேற்பு காணப்பட்டது. தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.