செவ்வாய், 14 ஜூலை, 2026

சந்திரசேகர் படுகொலை குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மறுப்பு சட்ட உரிமைகள் கழகம் கடும் கண்டனம்

 Tamil Nadu updates, photo news by Arunan journalist 

சந்திரசேகர் படுகொலை: குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மறுப்பு  சட்ட உரிமைகள் கழகம் கடும் கண்டனம்

தூத்துக்குடி, ஜூலை 14:

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

thoothukudileaks


சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ....

உயிரிழந்த சந்திரசேகரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளுக்கு ஆறுதலை தெரிவித்தார்.


சந்திரசேகருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளதாகவும், அதில் இளைய குழந்தை பிறந்து வெறும் 15 நாட்களே ஆன நிலையில் குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்தவர் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், சமூக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ள இத்தகைய சம்பவங்களைத் தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.



குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் தலைமையில் வழக்கறிஞர்கள் ஆனந்த கதிரேசன், வெங்கடேசன், ஸ்ரீராம், அருண், நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் எஸ்தர் ராஜ், உதயசூரியன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நிலை குறித்து கேட்டறிந்தனர். 



தொடர்ந்து உயிரிழந்த சந்திரசேகரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை உடலை வாங்க மறுப்பு

இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்ய வேண்டும். கொலையின் பின்னணி, முன்விரோதம் மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தியுள்ளது.


இதற்கிடையில், குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை உயிரிழந்த சந்திரசேகரின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு கோரிக்கை

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும். மேலும், சந்திரசேகரின் மனைவிக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி அல்லது நிரந்தர வாழ்வாதார உதவி வழங்க வேண்டும். மூன்று பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால பாதுகாப்பை அரசு ஏற்க வேண்டும். பச்சிளம் குழந்தை மற்றும் தாய்க்குத் தேவையான மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பு வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் இருந்தால் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்., 

வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், சந்திரசேகர் குடும்பத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் வரை சட்டத்திற்குட்பட்ட ஜனநாயக வழிகளில் தொடர்ந்து போராடுவோம் என்று சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

Dr. S.R. செல்வம் கிறிஸ்டோபர்

நிறுவனத் தலைவர்

சட்ட உரிமைகள் கழகம்


 இச் செய்தி புகைப்படங்களில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

திங்கள், 13 ஜூலை, 2026

பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் கட்டுப்பாட்டில் தவறியதாக குற்றச்சாட்டு தவெக அரசை கண்டித்து ஜூலை 18 ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

Tamil Nadu update 

சென்னை, ஜூலை 13:

பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாததையும், போதைப்பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக தவெக அரசை கண்டித்தும், ஜூலை 18-ஆம் தேதி புள்ளம்பாடியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

thoothukudileaks


இந்தக் குற்றச்சாட்டுகளை வலியுறுத்தும் வகையில், புள்ளம்பாடியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சனி, 11 ஜூலை, 2026

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்: பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

தூத்துக்குடி, ஜூலை 11:

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று (11.07.2026) காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி பெல் ஹோட்டல் கருத்தரங்கில் நடைபெற்றது.

thoothukudileaks


thoothukudileaks


சங்கத்தின் தலைவர் அன்புராஜ் ஜெபசிங் தலைமை வகித்தார். மூத்த உறுப்பினர் குணசீலன் முன்னிலை வகித்தார். செயலாளர் ஹீராஜான் வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் பாக்கியம் 30.06.2026 வரையிலான சங்கத்தின் வரவு–செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். 

thoothukudileaks




அந்த அறிக்கை பொதுக்குழுவால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, சங்கத்தின் திருத்தப்பட்ட சட்ட விதிகளை சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சொ. ராஜா வெளியிட, அதனை சங்கத் தலைவர் அன்புராஜ் ஜெபசிங் பெற்றுக்கொண்டார்.

thoothukudileaks


கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மறைந்த சங்க உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்!!!

 தமிழக அரசின் நிர்வாகத்திற்கும், தமிழக முதல்வருக்கும், சட்டம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல் குமார் அவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

thoothukudileaks


மேலும், உடன்குடி அனல்மின் நிலையத்தின் பராமரிப்பு பணிகளுக்கான ஒப்பந்தப் பணிகளை சங்க உறுப்பினர்கள் திறம்பட மேற்கொண்டு, அந்த நிலையத்தையும் உற்பத்தியில் முன்னோடி நிலையமாக மாற்றும் வகையில் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கிளவுட் ஆடிட் முறை நீக்கம்!!!

சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான கிளவுட் ஆடிட் முறையை நீக்கியமைக்காக மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ், இ.ஆ.ப. மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அத்துடன், இபிஎப் (EPF) மற்றும் இஎஸ்ஐ (ESI) உள்ளிட்ட தொழிலாளர் நலக் கட்டணங்களை வாரியம் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுக்குழு வலியுறுத்தியது.


கூட்டத்தில் திரளான ஒப்பந்தக்காரர்கள் பங்கேற்றனர். நிறைவில் சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சொ. ராஜா நன்றி உரையாற்றினார். தொடர்ந்து, பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் சங்கத்தின் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

வியாழன், 9 ஜூலை, 2026

2026-27 கல்வியாண்டு பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு

 தூத்துக்குடி லீக்ஸ் | நாளிதழ் செய்தி

2026-27 கல்வியாண்டு பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு

210 வேலைநாட்கள் – 155 விடுமுறை நாட்கள்; ஏப்ரல் 24-ல் பள்ளிகள் நிறைவு

சென்னை, ஜூலை 9:

2026–2027 கல்வியாண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வேலைநாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் விவரத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

thoothukudileaks


அதன்படி, புதிய கல்வியாண்டு ஜூன் 1, 2026 அன்று தொடங்கி ஏப்ரல் 24, 2027 வரை நடைபெற உள்ளது. இந்த கல்வியாண்டில் மொத்தம் 210 வேலைநாட்களும், 155 விடுமுறை நாட்களும் இடம்பெற்றுள்ளன. மொத்த நாட்கள் 365 ஆகும்.

வெளியிடப்பட்ட கால அட்டவணையின்படி:

  • முதல் பருவத் தேர்வு செப்டம்பர் 17 முதல் 25 வரை நடைபெறும். தொடர்ந்து செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை (9 நாட்கள்) பருவ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இரண்டாம் பருவத் தேர்வு டிசம்பர் 15 முதல் 23 வரை நடைபெறும். இதையடுத்து டிசம்பர் 24 முதல் ஜனவரி 3 வரை (11 நாட்கள்) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
  • மூன்றாம் பருவத் தேர்வு ஏப்ரல் 12 முதல் 24 வரை நடைபெற உள்ளது.
  • 2026–27 கல்வியாண்டின் இறுதி வேலைநாள் ஏப்ரல் 24, 2027 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கோடை விடுமுறை ஏப்ரல் 25 முதல் மே 31 வரை (37 நாட்கள்) அமையும்.

இந்த கால அட்டவணையின்படி மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கல்வி நடவடிக்கைகள், தேர்வுகள் மற்றும் விடுமுறைகளை முன்கூட்டியே திட்டமிட வசதியாக இருக்கும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

புதன், 8 ஜூலை, 2026

தூத்துக்குடி மாநகராட்சியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

 Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாநகராட்சியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

தூத்துக்குடி, ஜூலை 9:

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சியில் களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டன.

thoothukudileaks


தூத்துக்குடி மாநகராட்சியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகள் வரும் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30, 2026 வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களில் பணியாற்ற உள்ள களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு ஜூலை 9 முதல் 11 வரை மற்றும் ஜூலை 13 முதல் 15 வரை என இரண்டு கட்டங்களாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

thoothukudileaks


மொத்தம் 376 களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு, களப்பணி பயிற்றுநர்கள் மூலம் முதற்கட்ட பயிற்சி இன்று தொடங்கப்பட்டது. இந்த பயிற்சிகள் வ.உ.சி. கல்லூரி, ஏ.பி.சி.வி. மகளிர் கல்லூரி, பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கிரேஸ் பாலிடெக்னிக், விக்டோரியா சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் செயின்ட் மேரிஸ் கல்லூரி ஆகிய மையங்களில் நடைபெற்று வருகின்றன.

பயிற்சியின் போது மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான நடைமுறைகள், தரவுகள் சேகரிக்கும் முறை, தகவல்களின் துல்லியம் மற்றும் களப்பணியின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருமான சி. ப்ரியங்கா, இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் புதிய துறைமுகம்" அல்ல... "வ.உ.சிதம்பரனார் துறைமுகம்" என மாற்றக் கோரி அமைச்சர் ஏ. ஸ்ரீநாத் இடம் பரபரப்பு மனு

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பெயரை வழித்தட பலகைகளில் பேருந்துகளில் இடம்பெற செய்யாமல் கடந்த அதிமுக -திமுக ஆட்சியில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து மத்திய அரசு உத்தரவு புறக்கணித்து வந்தது அதிகாரப்பூர்வ பெயரை நடைமுறைப்படுத்தாமல் இழுத்துடித்து வருகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தூத்துக்குடி, ஜூலை 8:

2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தூத்துக்குடி புதிய துறைமுகம், மத்திய அரசால் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில், கடந்த 08.10.2023 அன்று திறக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் வழித்தட அறிவிப்பு பலகைகள் மற்றும் பேருந்துகளில், அதிகாரப்பூர்வ பெயரான "வ.உ.சிதம்பரனார் துறைமுகம்" என்பதற்குப் பதிலாக "புதிய துறைமுகம்" என்ற பெயரே பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேதனை!!!

அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தும், பேருந்து நிலைய வழித்தட பலகைகள் மற்றும் பேருந்துகளில் பழைய பெயரே தொடர்ந்து பயன்படுத்தப்படுவது வரலாற்று பெருமைமிக்க சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெயருக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என பல்வேறு தரப்பினர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் இடம் கோரிக்கை!!!

இதுகுறித்து, அனைத்து வழித்தட அறிவிப்பு பலகைகள் மற்றும் பேருந்துகளில் அதிகாரப்பூர்வ பெயரான "வ.உ.சிதம்பரனார் துறைமுகம்" என்ற பெயரையே உடனடியாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறை அமைச்சர் ஏ. ஸ்ரீநாத் அவர்களிடம், தமிழ்நாடு வ.உ.சி. எழுச்சி பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் மா. தமிழ்ச்செல்வன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.உடனே அமைச்சர் ஸ்ரீநாத் ஆவண செய்வதாக கூறினார் 

thoothukudileaks

thoothukudileaks


இந்த கோரிக்கையை முன்வைத்த மா. தமிழ்ச்செல்வன் அவர்களை  தமிழ்நாடு சைவவேளாளர் சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வ.உ.சி. பேரவை – தூத்துக்குடி மாவட்டம் ஆகிய அமைப்புகள் பாராட்டி, அதிகாரப்பூர்வ பெயர் அனைத்து அரசு அறிவிப்பு பலகைகள் மற்றும் பேருந்துகளில் விரைவில் நடைமுறைக்கு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளன..

செவ்வாய், 7 ஜூலை, 2026

அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Tamil Nadu updates

தூத்துக்குடி, ஜூலை 8:

அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் மற்றும் பேரவைத் தலைவரின் தூத்துக்குடி வருகையை முன்னிட்டு, தொழிற்சங்க வளர்ச்சி மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.


மாநில நிர்வாகிகள் வருகை !!!

கழக நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்கவும், மாநில அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதனின் அறிவுறுத்தலின்படியும் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வருகை தரும் மாநில நிர்வாகிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, தொழிற்சங்க உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது மற்றும் அமைப்பு பணிகளை வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

thoothukudileaks


கூட்டத்தில் ...

அண்ணா தொழிற்சங்க மண்டலச் செயலாளர் கல்விக்குமார், தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் ஆனந்த், மாவட்ட ஆட்டோ சங்கத் தலைவர் நிலாச்சந்திரன் ..ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மேலும், மண்டல இணைச் செயலாளர் லட்சுமணன், நீதி பாலமுருகன், மண்டல துணைத் தலைவர் பார்வதி, வீரபாகு, அன்பரசு, பிரபாகர், உத்தரபாண்டி, ஒலிமுத்து, எம்பி குமார், திருமணி, பாலகுமார், வைரமணி, ரத்தினமணி, திருப்பதி, ராமு, சின்னு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் திரளாகக் கலந்து கொண்டு ஆலோசனையில் பங்கேற்றனர்.

thoothukudileaks


பட விளக்கம்:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்க வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.