திங்கள், 2 மார்ச், 2026

தூத்துக்குடி மாவட்ட சட்ட மன்ற ஆறு தொகுதிகளில் 2026 தேர்தலில் இந்த தடவை களம் மாறும் பிரபலங்கள் யார் யார்?

சீனியர் ரிப்போர்ட்டர் வார இதழ் & தூத்துக்குடி லீக்ஸ் 

சிறப்பு பார்வை  கட்டுரை எழுதியவர் செய்தியாளர் அருணன்  2-3-2026

சுவாரஸ்யமான தகவல் முழுவதும் படிக்கவும் 

 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன தூத்துக்குடி மாவட்டத்தில் குறைந்த பட்சம்  அமைச்சர்கள் தமிழக சட்டசபையில் தேர்வு இரண்டு பேர்களுக்கு வாய்ப்பு வழங்குகின்றார்கள். இதனால் ஆறுசட்டமன்ற தொகுதியில் ஆளும் கட்சி எதிர்கட்சி தரப்பில் வேட்பாளராக நிற்க பெரும் போட்டி நிலவுகிறது.  



கடந்த சில நாட்களாக அதிமுக வில் வேட்பாளர் ஆக தூத்துக்குடி பகுதியில் நிற்பவர்கள் பற்றி தகவல்கள் பரபரக்கின்றது.

  அதிலும் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வெற்றி பெறுவது என்பது ரொம்ப சுலபம் 


தூத்துக்குடி மாநகராட்சியில் 60 ல் 8வார்டு ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு செல்கிறது அதனால் வெறும் 52 வார்டு பகுதி மட்டுமே ‌வருவதால் ஒவ்வொரு வார்டிலும்  தோராயமாக 5ஆயிரம் டூ 7 ஆயிரம்  இருக்கிறதால் தூத்துக்குடி சட்டமன்றத் வேட்பாளர் தேர்வு பெறுவதும் மிக எளிதாக பார்க்கப்படுகிறது .

"சமீபத்திய தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி கணக்கெடுப்பின்படி 2,48,300 வாக்காளர்கள் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன வாக்காளர் கவனிப்பு 1000என்றால்? 2,48,300 × 1000 கவனித்தால் கூட= 24,83,00,000

(அதாவது 2 கோடி 48 லட்சம் 30 ஆயிரம் × 1000 = 24 கோடி 83 லட்சம்) வருகின்றது  

 அதனால் தான் ஆளும் கட்சி எதிர் கட்சி வேட்பாளர்களிடம்  20கோடி பெற்று  மேலும் தலைமை 10 கோடி சேர்த்து ஒரு தொகுதிக்கு 30 கோடி வழங்குகிறார்கள் என கேள்வி படுகிறோம்? ஆயிரம் தராமல்?இதில் 500 கவனித்து மீதி ஆட்டைய போடுவர்களும்...? எதுவுமே செலவழிக்காமல் தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்லும் வேட்பாளர்களும் உண்டாம்????? அடங் கொய்யா லே????!!! "   

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் நிற்க விரும்புபதாக தெரியவருகிறது ஏனெனில் அவரதுசொந்த தொகுதியான ஸ்ரீவைகுண்டம் தொகுதியை அதிமுக கூட்டணி பாஜக தெற்கு மாவட்ட செயலாளர் சித்ராங்கன் நிற்பதற்கு விட்டு கொடுக்கிறார் ஆகவே தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட போகிறாராம் ? 


தூத்துக்குடி தொகுதியில் நின்றிட கடந்த ஓராண்டாக தீவிரமாக வேலை செய்து வரும் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் அவர் விட்டு கொடுப்பாரா? அல்லது அதிமுக தலைமைக்கு கட்டுப்பட்டு  வேறு தொகுதிற்கு செல்வாரா இது ஒரு பக்கம் நீடிக்கிறது தூத்துக்குடி அப்படியானால்.. தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கீதா ஜீவன் அதிமுக வேட்பாளர் எஸ் பி சண்முகநாதன் இருவரும் தேர்தல் களத்தில் மோது வார்கள்.  

thoothukudileaks


இருவரும் மோதினால், தூத்துக்குடியில் பெரும் மோதல் நிச்சயம்!

thoothukudileaks


ஸ்ரீவைகுண்டம் தொகுதி


காங்கிரஸ் தற்போதைய எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் உடன் பாஜக சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சித்ராங்கன் (அல்லது சித்ராங்கன் தொடர்புடையவர்) போட்டியிட வாய்ப்பு. எஸ்.பி. சண்முகநாதன் இத்தொகுதியை விட்டுக்கொடுத்தால், பாஜகவுக்கு இங்கு வலுவான களம் கிடைக்கும்

thoothukudileaks


திருச்செந்தூர் தொகுதி


திமுக தரப்பில் வழக்கறிஞர் ஜோயல் (அல்லது தற்போதைய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்புடைய வாய்ப்பு) போட்டியிடலாம். பாஜக தரப்பில் நடிகர் சரத்குமார் போட்டியிடுவது குறித்து பேச்சு உள்ளது – ஆனால் சமீபத்தில் அவர் "2026-ல் தானே போட்டியிட மாட்டேன், தோழர்களுக்கு வாய்ப்பு" என்று தெரிவித்துள்ளார். எனவே இது உறுதியாகவில்லை.

thoothukudileaks

thoothukudileaks


விளாத்திகுளம் தொகுதி


திமுக தற்போதைய எம்எல்ஏ மார்கண்டேயன் vs அதிமுக தரப்பில் ஜெய விலாஸ் (பஸ் முதலாளி) அல்லது கடம்பூர் ராஜூ நிறுத்தப்பட வாய்ப்பு.

thoothukudileaks


கோவில்பட்டி தொகுதி


திமுக தரப்பில் மாணிக்க ராஜா vs கடம்பூர் ராஜூ (அதிமுக அல்லது கூட்டணி தரப்பில்).


ஒட்டப்பிடாரம் தொகுதி


அதிமுக கூட்டணியில் அமமுக முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜ் vs திமுக தரப்பில் மாரி செல்வராஜ் ஆதரவாளர் கபடி கணேசன் நிறுத்தப்பட சாத்தியம்.

 

இவை அனைத்தும் தற்போதைய வதந்திகள், கட்சி வட்டார தகவல்கள் அடிப்படையிலானவை. தேர்தல் நெருங்க நெருங்க, தலைமை முடிவுகள், கூட்டணி பேச்சுவார்த்தைகள் எல்லாம் மாறலாம். 

ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இம்முறை பிரபலங்கள் மோதல் உறுதி போல தெரிகிறது – குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் இடையேயான உள் போட்டி, பண பலம், செல்வாக்கு ஆகியவை தேர்தல் களத்தை சூடாக்கும். யார் ஜெயிப்பார்கள்? மக்கள்தான் தீர்மானிப்பார்கள்!


தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் இளம்பகவத் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்..

thoothukudileaks


 இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் மொத்தம் 13,76,624 வாக்காளர் இடம் பெற்றுள்ளனர்.. 


 தூத்துக்குடி தொகுதியில் 2,48,300 வாக்காளர்களும்.. 


 திருச்செந்தூர் தொகுதியில் 2,30,702 நபர்களும், 


 ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 2,12,885 நபர்களும்.. 


ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் 2,40,988 வாக்காளர்களும், 


கோவில்பட்டி தொகுதியில் 2,40,017 வாக்காளர்களும் உள்ளனர். 

விளாத்திகுளம் தொகுதியில் 2,03,732 வாக்காளர்களும்.

ஒட்டுமொத்தமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 6,71,742 ஆண் வாக்காளர்களும், 7,04,689 பெண் வாக்காளர்களும், 193 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 13,76,624 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்..


 இதில் பாலின வாரியாகப் பார்க்கும்போது, பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விடக் கூடுதலாக உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் தொகுதி வாரியாக ஆண் வாக்காளர்கள் பெண் வாக்காளர்கள் விவரம்!!!

மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 6,78,752 பெண் வாக்காளர்களும், 6,49,224 ஆண் வாக்காளர்களும், 182 இதர பாலினத்தவரும் இடம் பெற்றுள்ளனர்..


தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,15,136 ஆண்கள், 1,21,263 பெண்கள் 62 இதர என மொத்தம் 2,36,461 வாக்காளர்கள் உள்ளனர். 


திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,08,526 ஆண்கள், 1,14,077 பெண்கள், 28 இதரர் என மொத்தம் 2,22,631 வாக்காளர்கள் உள்ளனர்.   


 ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 1,02,364 ஆண்கள் 1,04,688 பெண்கள், 2 இதரர் என மொத்தம் 2,07,054 வாக்காளர்கள் உள்ளனர். 


ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,13,480 ஆண்கள், 1,19,002 பெண்கள், 54இதரர் என மொத்தம் 2,32,536 வாக்காளர்கள் உள்ளனர். 


கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1,12,445 ஆண்கள், 1,19,062 பெண்கள், 22 இதரர் என மொத்தம் 2,31,529 வாக்காளர்கள் உள்ளனர்..


விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 97,273 ஆண்கள், 1,00,660 பெண்கள் 14 இதரர் என மொத்தம் 1,97,947 வாக்காளர்கள் உள்ளனர்..

தொகுதிகளின் வாரியாகப் பார்க்கையில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி 2,36,461 வாக்காளர்களுடன் மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளது.. 


இதனைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் 2,32,536 வாக்காளர்களும், கோவில்பட்டி தொகுதியில் 2,31,529 வாக்காளர்களும் உள்ளனர். திருச்செந்தூர் தொகுதியில் மொத்தம் 2,22,631 வாக்காளர்கள் உள்ள நிலையில், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 2,07,054 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 


மாவட்டத்திலேயே குறைந்தபட்சமாக விளாத்திகுளம் தொகுதியில் 1,97,947 வாக்காளர்கள் உள்ளனர்.

ஒவ்வொரு தொகுதியிலும் பெண்களின் ஆதிக்கமே அதிகமாகக் காணப்படுகிறது. 


குறிப்பாக தூத்துக்குடி தொகுதியில் அதிகபட்சமாக 1,21,263 பெண் வாக்காளர்களும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 54 இதர பாலினத்தவரும் உள்ளனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இதர பாலினத்தவர் எண்ணிக்கை மிகக் குறைவாக 2 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி கட்டுரை புகைப்படங்கள் 

அருணன் செய்தியாளர் 



ஞாயிறு, 1 மார்ச், 2026

ஓ.பன்னீர்செல்வம் முடிவுக்கு எதிர்ப்பு கூண்டோடு விலகிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் எஸ் ஏசாதுரை தலைமையில் இன்று தூத்துக்குடியில் ரகசிய ஆலோசனை கூட்டம் நடந்தது என்ன?

Tamil Nadu updates,

 photo news by Arunan journalist 1-3-2026

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி மார்ச் 1 

தூத்துக்குடியில் ஒபிஎஸ் அணியில் பரபரப்பு நிலவி வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஏசாதுரை தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகல் அறிவித்து அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.

thoothukudileaks


அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்களை கொண்டு தனித்த அணியை நடத்தி வந்த ஓபிஎஸ், அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை  சந்தித்து திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த முடிவை கடுமையாக எதிர்த்த 12 மாவட்ட செயலாளர்கள் கொதித்து எழுந்துள்ளனர்.

தூத்துக்குடியில் மா செ ஏசாதுரை தலைமையில் ரகசிய ஆலோசனை கூட்டம்!!!

இந்நிலையில், இன்று (01-03-2026) மாலை 5 மணியளவில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பிலுள்ள கனி ரெஸ்டாரன்ட் கூட்டரங்கில், மாவட்ட செயலாளர் எஸ்.ஏசாதுரை தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ரகசிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

thoothukudileaks



thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், “புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் தீய சக்தி என உரக்கக் கூறிய திமுகவுடன் இணைந்ததை ஏற்க முடியாது” எனக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

பலர், “நமக்கு உரிய மரியாதை கிடைத்தால் அதிமுகவில் மீண்டும் இணையலாம்” என கருத்து தெரிவித்தனர். சிலர் “சின்னம்மா சசிகலா அணியுடன் இணையலாம்” எனவும் முன்மொழிந்தனர்.

thoothukudileaks


மாவட்ட செயலாளர் எஸ்.ஏசாதுரை தனது உரையில்,

 “உங்கள் கருத்தே என் எண்ணமும் செயலுமாகும். ஜெயலலிதா அவர்கள் தீய சக்தி என குறிப்பிட்ட திமுகவில் ஒபிஎஸ் இணைந்ததை ஒருபோதும் ஏற்க முடியாது. அது மிகுந்த வேதனையை அளிக்கிறது. 

ரகசிய ஆலோசனை கூட்டம் என்பதால் தங்கள் இடம் தெரிவிக்கிறேன்  தற்போது அதிமுக எடப்பாடி தரப்பிலும், சின்னம்மா தரப்பிலும் இருந்து அழைப்புகள் வந்துள்ளன. நமக்கு மரியாதை தருபவர்களுடன் இணைவது குறித்து இன்னும் இரண்டு நாளில் தீர்மானிக்கலாம்” என தெரிவித்தார்.

இதற்கு கூட்டத்தில் இருந்த நிர்வாகிகள் பலத்த கைதட்டலுடன் ஆதரவு தெரிவித்தனர். தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் இந்த ரகசிய ஆலோசனை கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks





சனி, 28 பிப்ரவரி, 2026

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் 73வது பிறந்த நாள்: புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கல்

 Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி, மார்ச் 1 –

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில், திமுக தொண்டர்கள் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு லட்டு வழங்கி மகிழ்ச்சி பகிர்ந்தனர். பேருந்து நிலையம் வழியாக பயணம் செய்த நூற்றுக்கணக்கான பயணிகள் இனிப்பை பெற்றுக் கொண்டு முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் செயலாளர்கள் பங்கேற்று, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்தனர். பொதுமக்களுடன் கலந்துரையாடியும் வாழ்த்து பரிமாறியும் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது.

முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மற்றும் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வைகோ மூன்று கோரிக்கைகள்கட்டபொம்மன் சத்திரம் பிரச்சினை? !

தூத்துக்குடி லீக்ஸ் | சனி, 28 பிப்ரவரி 2026

photo news by Arunan journalist 

சென்னை, 28 பிப்ரவரி:

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து மூன்று முக்கிய கோரிக்கைகளை நேரடியாக எடுத்துரைத்தார்.

கோரிக்கை 1 — காயிதே மில்லத் பல்கலைக்கழகம்:

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். இதை திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என வைகோ கோரிக்கை வைத்தார்.

thoothukudileaks


கோரிக்கை 2 — சூரிய ஒளி இலவச மின்சாரம்:

வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் கொடுப்பதை மத்திய அரசு தடுக்கும் நிலையில், சூரிய ஒளி மின்சாரம் மூலம் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என கோரினார். இந்த இரண்டு கோரிக்கைகளையும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் உடனே தெரிவிப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்தார்.

கோரிக்கை 3 — கட்டபொம்மன் சத்திரம் பிரச்சினை:

திருச்செந்தூரில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டபொம்மன் வாரிசுகள் பயன்படுத்தி வரும் கட்டபொம்மன் சத்திரத்தில் இந்த ஆண்டு நுழையக் கூடாது என அறநிலையத் துறை இணை ஆணையர் ஆணை பிறப்பித்துள்ளார். வேறொரு குடும்பத்தினர் கட்டபொம்மனின் நேரடி வாரிசு வீமராஜா அவரின் கையெழுத்தை பொய்யாக பெற்று இந்த ஆணையை பெற்றுள்ளனர். இந்த ஆணையை உடனடியாக ரத்து செய்யுமாறு வைகோ முதலமைச்சரிடம் முறையீடு செய்தார்.

உடனடியாக அமைச்சர் சேகர்பாபுவிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தனிச் செயலாளருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். மார்ச் 3ஆம் தேதி திருச்செந்தூர் கோயில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆணை ரத்தாகும் என நம்புவதாக வைகோ தெரிவித்தார்.

— மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை நிலையம், சென்னை-8, 28.02.2026


வியாழன், 26 பிப்ரவரி, 2026

சாயர்புரம் செயிண்ட் மேரீஸ் பள்ளி 24ஆம் ஆண்டு விழா

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: பெ27

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் இயங்கி வரும் செயிண்ட் மேரீஸ் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியின் 24ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் டி. சிதம்பரநாதன் தலைமை தாங்கினார்.

thoothukudileaks


Bishop Jebaraj தொடக்க ஜெபத்தை நடத்தினார். பள்ளி முதல்வர் அக்னஸ் ஜெயலின் வரவேற்புரை வழங்கி ஆண்டு அறிக்கையை வாசித்தார்.

சாயர்புரம் பாஸ்டரேட் தலைவர் ஜே. மனோகரும், மாவட்ட நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகள் சங்க செயலாளர் ஏ. ஜோசப்பும் சிறப்புரையாற்றினர். Pope Memorial Higher Secondary School தலைமையாசிரியர் சி. எட்வர்ட் ஜான்சன் பால் மற்றும் St. Mary's Girls Higher Secondary School தலைமையாசிரியர் ஆர். ஹெப்சிபா புவேலா மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களின் நடனம், நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சாயர்புரம் நகர பஞ்சாயத்து கவுன்சிலரும், மாவட்ட திமுக துணைச் செயலாளருமான ஜே. ஜெபா தங்கம் பிரேமா உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர். சிஎஸ்ஐ மறைமாவட்ட உறுப்பினர்கள் அலய்மணி, ஜெயகுமார் மற்றும் பலரும் பங்கேற்றனர்.

இறுதியாக உதவி தலைமையாசிரியர் அருள் மேரி நன்றியுரை வழங்கினார்.

விழா உற்சாகமாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.

புதன், 25 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி மாநகராட்சி 2026-27 பட்ஜெட்: ரூ.17,697 லட்சம் வருவாய் இலக்கு!வரவு செலவு அறிக்கை பட்ஜெட் எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு தூத்துக்குடி டாஸ்மாக் கடை வாடகை விடுவது குறித்து திமுக மற்றும் கூட்டணி கவுன்சிலர் கள் கடும் எதிர்ப்பு !! தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய முயற்சிதூசி இல்லா சாலைகளாக' (End to End Paving) எந்தெந்த சாலைகள் பெயர் விவரம்!

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாநகராட்சி 2026-27 பட்ஜெட்: ரூ.17,697 லட்சம் வருவாய் இலக்கு!

தூத்துக்குடி, பிப்ரவரி 26:

தூத்துக்குடி மாநகராட்சியின் 2026-2027 ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவு அறிக்கை இன்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

thoothukudileaks


தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் இன்று அவசர/சாதாரண மன்றக் கூட்டம் மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா துறை மேயர் ஜெனிட்டா மற்றும் மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நகரின் குடிநீர் விநியோகம், சாலை பழுது பார்க்கும் பணிகள், மழைநீர் வடிகால் திட்டங்கள், தூய்மை பணிகள் மற்றும் சொத்துவரி வசூல் நிலைமை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பொதுமக்கள் குறைகள் தொடர்பாக உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

நகரில் நடைபெற்று வரும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்த முன்னேற்ற அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. குறிப்பாக புதிய சாலை அமைப்பு, தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு மேயர் அறிவுறுத்தினார்.

மேலும், அரசு நலத்திட்டங்கள் மக்களுக்கு விரைவாக சென்றடைய நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சில தீர்மானங்கள் ஒருமனதாகவும், சில தீர்மானங்கள் விவாதத்திற்குப் பிறகும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் முடிவில், நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மேயர் வலியுறுத்தினார்.

மூன்று நிதி வகைகளில் உத்தேச வருவாய்:

நடப்பு ஆண்டான 2026-2027க்காக வருவாய் நிதியில் ரூ.298.77 லட்சம், குடிநீர் மற்றும் வடிகால் நிதியில் ரூ.342.79 லட்சம், கல்வி நிதியில் ரூ.327.82 லட்சம் உபரியாக வருவாய் ஈட்டப்படும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வருவாய் நிதி விவரம்:

வருவாய் நிதியில் சொத்துவரி, இதர வரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலம் ரூ.3,802.39 லட்சம், முத்திரை கட்டணம் மற்றும் கேளிக்கை வரியாக ரூ.600 லட்சம், அரசு மானியம் மற்றும் மாநில பகிர்மான நிதியாக ரூ.7,714 லட்சம், 15வது நிதிக்குழு மானியமாக ரூ.1,000 லட்சம், மற்றும் ஏனைய வருமானங்கள் மூலம் ரூ.4,581.03 லட்சம் என மொத்தம் ரூ.17,697.42 லட்சம் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது.

செலவு விவரம்:

சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஊழியர்கள் தொடர்பான செலவினங்களுக்கு ரூ.8,276.75 லட்சம், நிர்வாக செலவினங்களுக்கு ரூ.817.25 லட்சம், சாலை, கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு இயக்க செலவினங்களுக்கு ரூ.6,824 லட்சம், நிதி மற்றும் திட்டமிட்ட செலவினங்களுக்கு ரூ.280.65 லட்சம், பொது நிதி பங்களிப்புக்காக ரூ.1,200 லட்சம் என மொத்த செலவு ரூ.17,398.65 லட்சம் ஆகும்.

இதன்படி வருவாய் நிதியில் ரூ.298.77 லட்சம் உபரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டான 2025-2026 வரவு செலவு அறிக்கையும் திருத்தப்பட்டு இம்மாமன்றத்தில் இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தூத்துக்குடி மாநகராட்சி பட்ஜெட் 2026-27: பொலிவுறும் மாநகரம்! 278 புதிய சாலைகள், ஸ்மார்ட் குடிநீர் திட்டம் - அதிரடி அறிவிப்புகள்!

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சியின் 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாநகரின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளன.

🛣️ சாலை மேம்பாடு மற்றும் போக்குவரத்து

278 புதிய சாலைகள்: நகர்ப்புற சாலை மேம்பாட்டு (TURIP) நிதியின் கீழ் மாநகரம் முழுவதும் 278 சாலைகள் புதிதாக அமைக்கப்படும்.

தூசியில்லா சாலைகள்: NCAP திட்டத்தின் கீழ் கிரேட் காட்டன் ரோடு, பீச் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் 'End to End Paving' முறையில் தூசியில்லா சாலைகளாக மாற்றப்படும்.

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்: வி.வி.டி சிக்னல் முதல் 4-ம் கேட் வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு நடைபாதைகள் ஒழுங்குபடுத்தப்படும்.

தூய்மை காற்று திட்டத்தின் (NCAP) கீழ், தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டமாக 'தூசி இல்லா சாலைகளாக' (End to End Paving) மாற்றப்படவுள்ள சாலைகளின் விவரங்கள் இதோ:

​கிரேட் காட்டன் ரோடு

​வடக்கு பீச் ரோடு

​தெற்கு பீச் ரோடு

​கீழரத வீதி

​குறிஞ்சி நகர்

​பாளை ரோடு

​வி.வி.டி சிக்னல்

​இந்தச் சாலைகளில் ஓரங்களில் மண் படிவதைத் தடுக்கவும், வாகனங்கள் செல்லும்போது தூசி எழாமல் இருக்கவும் முழுமையாக நடைபாதை வரை தார் அல்லது கற்கள் பதிக்கப்பட்டு (End to End) சீரமைக்கப்படும்..

மிதிவண்டி பிரத்யேக வழித்தடம்: ரஹ்மத் நகர், கடற்கரை சாலை மற்றும் பக்கில் ஓடை பகுதிகளில் மோட்டார் இல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்க தனி வழித்தடங்கள் அமைக்கப்படும்.

💧 குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள்

24x7 ஸ்மார்ட் குடிநீர் திட்டம்: மாநகரின் 10 வார்டுகளில் முன்னோட்டமாக 24 மணி நேர குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதனை கண்காணிக்க SCADA தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்.

BIO CNG திட்டம்: கழிவுகளில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

பாதாள சாக்கடை விரிவாக்கம்: விடுபட்ட பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம் விரிவுபடுத்தப்படும்.

🏫 கல்வி மற்றும் இளைஞர் நலன்

நவீன நூலகங்கள்: மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காகப் புதிய நூலகங்கள் மற்றும் வாசிப்பை ஊக்குவிக்க 'The Hindu' நாளிதழ் வாரந்தோறும் வழங்கப்படும்.

விளையாட்டு மையங்கள்: அம்பேகர் நகரில் தினசரி சந்தை, கிரிக்கெட் மைதானம், ஸ்கேட்டிங் தளம் மற்றும் வில்வித்தை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

தற்காப்பு கலை: மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்குத் தற்காப்பு கலை பயிற்சிகள் வழங்கப்படும்.

🌳 சுற்றுச்சூழல் மற்றும் பொழுதுபோக்கு

பசுமைத் தூத்துக்குடி: 100 ஏக்கர் பரப்பளவில் மியாசாகி காடுகள், 50 ஏக்கர் பரப்பளவில் பனை காடுகள் மற்றும் 5 இடங்களில் 'தருவைக்குளம்' மாடலில் மினி கோபுர விளக்குகளுடன் பூங்காக்கள் அமைக்கப்படும்.

செங்குத்து தோட்டம்: மாநகரின் அழகுக்காகப் பல இடங்களில் Vertical Gardening மற்றும் வண்ண ஒளிவிளக்குகள் அமைக்கப்படும்.

🏢 இதர முக்கிய அறிவிப்புகள்

CCTV கண்காணிப்பு: பக்கில் ஓடைப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதைத் தவிர்க்க நவீன CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

விற்பனை மண்டலங்கள்: நடைபாதைகளில் இடையூறாக இருக்கும் கடைகளை முறைப்படுத்தத் தனி விற்பனை மண்டலங்கள் (Vending Zones) உருவாக்கப்படும்.

இ-ஆபீஸ் திட்டம்: மாநகராட்சி நிர்வாகத்தை வேகப்படுத்த காகிதமில்லா 'E-Office' முறை முழுமையாக அமல்படுத்தப்படும்.

தூத்துக்குடி மாநகரத்தை ஒரு முன்மாதிரி நகரமாக மாற்றும் நோக்கில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு 

பட்ஜெட் எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கொறடா மந்திர் மூர்த்தி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி சுடலைமணி பத்மாவதி  செண்பக செல்வன் ஜெயராணி ஜெயக்குமார் வெற்றி செல்வன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர் 

thoothukudileaks


 டாஸ் மாக் கடை தீர்மானம் நிறைவேற்ற   திமுக கவுன்சிலர் கள்  எதிர்ப்பு !!!

20) தூத்துக்குடி மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட டோபிகான வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் மாவட்ட மேலாளர், டாஸ்மாக் லிட்  கடிதம் ந.க.எண் அ7/127/2025 நாள் 12.12.2025 ன்படி மதுபான சில்லரை விற்பனை கடை செயல்படுவதற்கு மாத வாடகையாக ரூ.12,000/- GST உப்பட நிர்ணயம் செய்து தனி மின் மீட்டர் வசதியுடன் 500 சதுரடியில் கட்டிடம் வாடகைக்கு ஒதுக்கீடு செய்து தருமாறு கோரப்பட்டுள்ளது.


டோபிகானா வணிக வளாகத்தில் கடை எண்கள் G3. G4 மற்றும் G5 ஆகிய மூன்று கடைகள் கடைகளின் ஆரம்ப மாத வாடகை தொகை ரூ.4,050.4,600.4600 = ரூ.13,250/-18 சதவீதம் GST ரூ.2385- மொத்தம் ரூ. 15635/- ஆகும். டோபிகானான வணிக வளாகம் 18 முறை ஏலம் மற்றும் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டும். ஒரு சில உயர்ந்தபட்ச ஒப்பந்தபுள்ளி கேள்விதாரர்களும் பயன்படுத்த இயலாமல் வணிக வளாகம் செயல்பாட்டிற்கு வராத நிலையிலும், மாநகராட்சியின் ஆரம்ப மாத வாடகை தொகையினை விட குறைவாக ரூ.12000/ GST உப்பட நிர்ணயம் செய்துள்ளது 

thoothukudileaks
எதிர்ப்பு 

தூத்துக்குடி லீக்ஸ்
எதிர்ப்பு தெரிவித்த திமுக மற்றும் கூட்டணி கவுன்சிலர்கள் 


இந்த தீர்மானம் நிறைவேற்ற திமுக கவுன்சிலர்கள் கந்தசாமி ராமகிருஷ்ணன் ரெக்ஸ்லீன் மற்றும் கூட்டணி கவுன்சிலர் கள் எதிர்ப்பு தெரிவித்து மேயர் இடம் முறையிட்டனர் 



- தூத்துக்குடி லீக்ஸ் நிருபர்

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

எந்தப் பதவியில் இருப்பது முக்கியமல்ல அந்தப் பதவியில் இருந்து எதை முன்னேற்றினோம் என்பதே முக்கியம். இந்த மேயர் பதவி எனக்கு திருப்தி அளிக்கிறது 83 மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி உரை

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 


தூத்துக்குடி, பிப்ரவரி 25:

தூத்துக்குடி ஹோம் சயின்ஸ் கல்லூரியில் தமிழக முதல்வரின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி 83 மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

thoothukudileaks


விழாவில் மேயர் பேசுகையில்,... "கணினியின் மூலம் உலகம் முழுவதும் உள்ள அறிவு இன்று நம் கைகளில் வந்துவிட்டது. இது கடுமையான போட்டி நிறைந்த உலகம். கல்வி என்பது வெறும் மதிப்பெண் பெறுவதற்கல்ல — அறிவை வளர்ப்பதற்கானது. பெற்றோர்கள் கனவுகளுடன் பிள்ளைகளை கல்வி கற்க அனுப்புகிறார்கள். அந்தக் கனவை நாம் எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்று சிந்திக்க வேண்டும்" என்றார்.

உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து பேசிய மேயர்,...

thoothukudileaks


 தூத்துக்குடியில் பெண்களுக்கென்று மூன்று தனிப்பட்ட பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். 

மேலும் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை தவிர்க்கவும், மரங்கள் நடவும், சமூக பொறுப்புணர்வுடன் வாழவும் மாணவிகளை வலியுறுத்தினார்.

"எந்தப் பதவியில் இருப்பது முக்கியமல்ல — அந்தப் பதவியில் இருந்து எதை முன்னேற்றினோம் என்பதே முக்கியம். இந்த மேயர் பதவி எனக்கு திருப்தி அளிக்கிறது. இது ஒரு கடல் போன்றது. முடியாதது எதுவும் இல்லை — முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். அதற்கு என்னையே எடுத்துக்கொள்ளலாம்" என்று உரையாற்றினார்.

விழாவிற்கு முன்னதாக மாணவிகளிடம் "மடிக்கணினி கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று மேயர் கேட்டதற்கு, "ப்ராஜெக்ட் செய்வோம்!" என்று மாணவிகள் உற்சாகமாக பதிலளித்தனர்.

விழாவில் கல்லூரி முதல்வர் ரூபா, துணை முதல்வர் மதுரவள்ளி, செயலாளர் ரோசாகுட்டி, உதவி பேராசிரியர் மாரிதங்கம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.