புதன், 8 ஜூலை, 2026

தூத்துக்குடியில் புதிய துறைமுகம்" அல்ல... "வ.உ.சிதம்பரனார் துறைமுகம்" என மாற்றக் கோரி அமைச்சர் ஏ. ஸ்ரீநாத் இடம் பரபரப்பு மனு

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பெயரை வழித்தட பலகைகளில் பேருந்துகளில் இடம்பெற செய்யாமல் கடந்த அதிமுக -திமுக ஆட்சியில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து மத்திய அரசு உத்தரவு புறக்கணித்து வந்தது அதிகாரப்பூர்வ பெயரை நடைமுறைப்படுத்தாமல் இழுத்துடித்து வருகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தூத்துக்குடி, ஜூலை 8:

2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தூத்துக்குடி புதிய துறைமுகம், மத்திய அரசால் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில், கடந்த 08.10.2023 அன்று திறக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் வழித்தட அறிவிப்பு பலகைகள் மற்றும் பேருந்துகளில், அதிகாரப்பூர்வ பெயரான "வ.உ.சிதம்பரனார் துறைமுகம்" என்பதற்குப் பதிலாக "புதிய துறைமுகம்" என்ற பெயரே பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேதனை!!!

அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தும், பேருந்து நிலைய வழித்தட பலகைகள் மற்றும் பேருந்துகளில் பழைய பெயரே தொடர்ந்து பயன்படுத்தப்படுவது வரலாற்று பெருமைமிக்க சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெயருக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என பல்வேறு தரப்பினர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் இடம் கோரிக்கை!!!

இதுகுறித்து, அனைத்து வழித்தட அறிவிப்பு பலகைகள் மற்றும் பேருந்துகளில் அதிகாரப்பூர்வ பெயரான "வ.உ.சிதம்பரனார் துறைமுகம்" என்ற பெயரையே உடனடியாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறை அமைச்சர் ஏ. ஸ்ரீநாத் அவர்களிடம், தமிழ்நாடு வ.உ.சி. எழுச்சி பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் மா. தமிழ்ச்செல்வன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.உடனே அமைச்சர் ஸ்ரீநாத் ஆவண செய்வதாக கூறினார் 

thoothukudileaks

thoothukudileaks


இந்த கோரிக்கையை முன்வைத்த மா. தமிழ்ச்செல்வன் அவர்களை  தமிழ்நாடு சைவவேளாளர் சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வ.உ.சி. பேரவை – தூத்துக்குடி மாவட்டம் ஆகிய அமைப்புகள் பாராட்டி, அதிகாரப்பூர்வ பெயர் அனைத்து அரசு அறிவிப்பு பலகைகள் மற்றும் பேருந்துகளில் விரைவில் நடைமுறைக்கு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளன..

செவ்வாய், 7 ஜூலை, 2026

அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Tamil Nadu updates

தூத்துக்குடி, ஜூலை 8:

அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் மற்றும் பேரவைத் தலைவரின் தூத்துக்குடி வருகையை முன்னிட்டு, தொழிற்சங்க வளர்ச்சி மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.


மாநில நிர்வாகிகள் வருகை !!!

கழக நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்கவும், மாநில அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதனின் அறிவுறுத்தலின்படியும் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வருகை தரும் மாநில நிர்வாகிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, தொழிற்சங்க உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது மற்றும் அமைப்பு பணிகளை வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

thoothukudileaks


கூட்டத்தில் ...

அண்ணா தொழிற்சங்க மண்டலச் செயலாளர் கல்விக்குமார், தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் ஆனந்த், மாவட்ட ஆட்டோ சங்கத் தலைவர் நிலாச்சந்திரன் ..ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மேலும், மண்டல இணைச் செயலாளர் லட்சுமணன், நீதி பாலமுருகன், மண்டல துணைத் தலைவர் பார்வதி, வீரபாகு, அன்பரசு, பிரபாகர், உத்தரபாண்டி, ஒலிமுத்து, எம்பி குமார், திருமணி, பாலகுமார், வைரமணி, ரத்தினமணி, திருப்பதி, ராமு, சின்னு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் திரளாகக் கலந்து கொண்டு ஆலோசனையில் பங்கேற்றனர்.

thoothukudileaks


பட விளக்கம்:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்க வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சனி, 4 ஜூலை, 2026

வருவாய் துறை e District இணையதளம் சில நாட்களாக முடக்கம் பொதுமக்கள் அவதி


சென்னை, ஜூலை 4:


தமிழக அரசின் வருவாய் துறை சார்ந்த e-District இணையதளம் கடந்த சில நாட்களாக செயல்படாததால், வருமானம், சாதி, இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கவும், விண்ணப்ப நிலையை அறியவும் பொதுமக்கள் மற்றும் இ-சேவை மையங்கள் சிரமம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இணையதளத்தில் "பராமரிப்பு பணிகள் காரணமாக TN e-District சேவைகள் தற்காலிகமாக கிடைக்காது" என்ற அறிவிப்பு மட்டுமே காணப்படுகிறது. இதனால், சேவைகள் எப்போது முழுமையாக மீண்டும் தொடங்கும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.


thoothukudileaks

 தற்போது இணையத்தில் கிடைக்கும் தகவல்களின்படி, தமிழ்நாடு e-District (வருவாய் துறை) இணையதளம் பராமரிப்பு (Maintenance) பணிகள் காரணமாக தற்காலிகமாக செயல்படவில்லை என்று தளத்திலேயே அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


தமிழக அரசு அல்லது TNeGA சார்பில் "சில நாட்களாக சேவை முடங்கியுள்ளது" என்ற காரணம் குறித்து விரிவான அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பு வெளியாகியதாக தகவல் கிடைக்கவில்லை..


இணையதளத்தில் "Due to maintenance activity, TN e-District Services will be unavailable" என்ற அறிவிப்பு மட்டும் காட்டப்படுகிறது. 



பொதுமக்கள் விரைவில் சேவையை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளி, 3 ஜூலை, 2026

முன்ஜாமீன் தள்ளுபடியான 90 நிமிடங்களில் அதிரடி ஆய்வுப் பணியில் இருந்த திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஸ்பாட்டிலேயே கைது!

 

ஆத்தூர் (03.07.2026):

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து பொதுவெளியில் ஒருமையில் அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

thoothukudileaks



முதலமைச்சருக்கு எதிராக அவமரியாதையான முறையில் கருத்துக்களைத் தெரிவித்ததாகப் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், தன் மீதான கைது நடவடிக்கையைத் தவிர்க்கும் பொருட்டு அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 


இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இன்று அதனை அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் இன்று ஆத்தூர் பேரூராட்சிப் பகுதியில் உள்ளாட்சித் துறை சார்ந்த பல்வேறு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

90 நிமிடங்களுக்குள்...

மனு தள்ளுபடியான அடுத்த 90 நிமிடங்களுக்குள் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய தமிழக காவல்துறை, அவர் ஆய்வுப் பணியில் இருந்த ஆத்தூர் ஸ்பாட்டுக்கே நேரடியாகச் சென்று அவரைச் சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தது. 

வீடியோ 

நீதிமன்ற உத்தரவு வெளியான மிகக் குறுகிய கால அவகாசத்திற்குள் காவல்துறை நடத்திய இந்தத் துரிதக் கைது நடவடிக்கை, தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பரபரப்பான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.



வியாழன், 2 ஜூலை, 2026

இந்து சேனா பேரியக்கத்தில் புதிய நிர்வாகிகள் இணைப்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 


சேலம், ஜூலை 2:
சேலம் மாவட்டத்தில் இந்து சேனா மாநிலத் தலைவர் அருள்வேலன் ஜி-யை நேரில் சந்தித்த ராஜ கணேசன் மற்றும் கிரில் சுப்பிரமணி ஆகியோர், இந்து சேனா பேரியக்கத்தில் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர்.

thoothukudileaks


அப்போது, இயக்கத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அமைப்பின் செயல்பாடுகளை மேலும் சிறப்பாக முன்னெடுத்து செல்லுவது குறித்து மாநிலத் தலைவருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்து சேனாவின் பொறுப்பாளர்களான சேலம் ரமேஷ் ஜி, வேலூர் ஆனந்த் ஜி, சேலம் ரவிச்சந்திரன் ஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

புதிய உறுப்பினர்களை மாநிலத் தலைவர் அருள்வேலன் ஜி வரவேற்று, இயக்கப் பணிகளில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு மக்களிடம் அமைப்பின் நோக்கங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துத் தெரிவித்தார்.

புதன், 1 ஜூலை, 2026

செல்போன் கேட்டு தகராறு இளைஞரை கத்தியால் தாக்கிய திருநங்கை கைது

தூத்துக்குடி லீக்ஸ்  நாளிதழ் செய்தி


தூத்துக்குடி, ஜூன் 30:

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆம்னி பஸ் நிலையப் பகுதியில் செல்போன் கேட்டு ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படும் திருநங்கை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

thoothukudileaks


காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, 

நேற்று முன்தினம் (29.06.2026) இரவு  தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே ஆம்னி பஸ் நிறுத்தம் பகுதியில்  பேருந்தில் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த அஜய் தேவகுமரன் இருந்துள்ளார்.


 அப்போது அங்கு வந்த திருநங்கை ஒருவர் அவரிடம் செல்போன் கேட்டதாகவும், அவர் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


இதையடுத்து, ஆத்திரமடைந்த திருநங்கை கையில் வைத்திருந்த கத்தியால் அஜய் தேவகுமரனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் வடபாகம் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், பாதிக்கப்பட்ட அஜய் தேவகுமரன் அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலையத்தில் குற்ற எண் 583/2026-ன் கீழ் BNS சட்டப்பிரிவுகள் 296(b), 109(1), 351(3) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த திருநங்கை ஒருவரை போலீசார் கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ்வாதாரம் இன்றி யாசகமாக பணம் கேட்டு தொந்தரவு செய்யும் திருநங்கைகள் !!! 

தூத்துக்குடி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் பஸ் ல  வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் -கடை வியாபாரிகளிடம் பணம் கேட்டு வருவதும் தரவில்லை என்றால் தொந்தரவு செய்து வருவதாக கூறப்படுகிறது .

இஃது விஷயத்தில் மாவட்ட காவல்துறை தகுந்த அறிவுரைகளை கூறி திருநங்கைகள் வாழ்வதாரம் மற்றும் நல்வழிப்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது 

செய்தி புகைப்படம்  செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது மாடலிங் 

செவ்வாய், 30 ஜூன், 2026

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை 9 வயது சிறுமிக்கு செயற்கை கண் பொருத்தி மறுவாழ்வு தமிழக அரசுக்கும் மருத்துவர்களுக்கும் பெற்றோர் நெகிழ்ச்சி நன்றி!

Tamil Nadu updates, 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி: ஜுலை 1

தூத்துக்குடி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிறவியிலேயே இடது கண் குறைபாட்டுடன் பிறந்த 9 வயது சிறுமிக்கு அரிய வகை கண் குழி சீரமைப்பு மற்றும் செயற்கை கண் பொருத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.



 இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று காலை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

பிறவிக்குறைபாட்டால் அவதிப்பட்ட சிறுமி!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி கிராமத்தில் வசித்து வரும் பொன்னு என்பவரின் 9 வயது மகள் முத்துசெல்வி. அச்சிறுமிக்குப் பிறவியிலேயே இடது கண் இல்லாததால், அவதிப்பட்டு வந்தார்.

thoothukudileaks
தாயார் உடன் சிறுமி

video 

மருத்துவக் குழுவின் அரிய சாதனை

thoothukudileaks

கடந்த 20.06.2026 அன்று, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. எபனேசர் ஜோயல் குமார், துணை முதல்வர் மரு. கலைவாணி, மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. பத்மநாபன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த அரிய அறுவை சிகிச்சை நடைபெற்றது.

thoothukudileaks


கண் பிரிவு துறைத் தலைவர் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளருமான மரு. ம. ரீட்டா ஹெப்சிராணி  தலைமையில், பின்வரும் மருத்துவக் குழுவினர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்:

video 1

 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்: மரு. அருணா தேவி

 மயக்கவியல் மருத்துவர்கள்: மரு. ஸ்ரீராம், மரு. அஜய் சந்தோஷ் டேவிட்

 உதவி மருத்துவர்கள்:  மரு. ஜெயந்தி, மரு. வின்சா, மரு. திவ்யா

 செவிலியர்கள்: சுரேகா,  ரத்னா

இந்த மருத்துவக் குழுவினர் இணைந்து சிறுமிக்குக் கண் குழி சீரமைப்பு அறுவை சிகிச்சை மற்றும் செயற்கை கண் பொருத்தும் அறுவை சிகிச்சையை மிக வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்.

video 2
 .

செய்தியாளர் சந்திப்பில் பெற்றோர் நெகிழ்ச்சி!

தமிழக அரசுக்கு நன்றி!!!

இன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதில் தங்களுக்குக் கிடைத்த முழுமையான கண் சிகிச்சை மற்றும் செயற்கை கண் பொருத்தப்பட்ட விவரங்கள் குறித்துச் சிறுமி முத்துசெல்வியும் அவரது தாயாரும் செய்தியாளர்களிடம் விவரித்தனர்.


அப்போது, தங்களது குழந்தைக்கு அதிநவீன முறையில் செயற்கை கண் பொருத்தி, புதிய வாழ்வையும் நம்பிக்கையையும் தந்து உதவிய தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அனைவருக்கும், ஏழை எளிய மக்களுக்குத் தரமான மருத்துவ சேவை கிடைக்கத் திறம்படச் செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கும் தங்களது மிகுந்த மகிழ்ச்சியையும், நெஞ்சார்ந்த நன்றியையும் கண்ணீர் மல்கத் தெரிவித்துக் கொண்டனர்.

 தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்..

அர்ப்பணிப்புடன் இயங்கும் கண் சிகிச்சை பிரிவு

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவில் தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

thoothukudileaks



மேலும், மாதந்தோறும் 200-க்கும் மேற்பட்ட கண் புரை அறுவை சிகிச்சைகளும் (Cataract Surgery), கண் நீர் அழுத்த நோய் (Glaucoma), மாறுகண் (Squint), கருவிழி மாற்று அறுவை சிகிச்சை (Keratoplasty) போன்ற பல்வேறு அதிநவீன சிகிச்சைகளும் இங்கு முற்றிலும் இலவசமாக, அர்ப்பணிப்பு உணர்வோடு வழங்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் கண் தொடர்பான அனைத்துப் பாதிப்புகளுக்கும் எங்களைப் போன்ற அரசு மருத்துவர்களை அணுகிப் பயன்பெறுமாறு மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.