வெள்ளி, 30 ஜனவரி, 2026

அமைச்சர் மேயர் பேச்சுக்கு கட்டுப்படாத ஒப்பந்ததாரர்? 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாநகராட்சி முன்பு தூய்மை பணியாளர்கள் முற்றுகை ஆர்ப்பாட்டம்

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜனவரி 30 :

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏடிஜயூசி சங்கம் சார்பில் இன்று  30-1-2026 தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

thoothukudileaks


மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள்  முறையாக வழங்கப்படுவதில்லை, சம்பள தாமதம், காரணமின்றி பணிநீக்கம் போன்ற செயல்களில் ஒப்பந்ததாரர் ஈடுபட்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

thoothukudileaks


இதுகுறித்து  அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரிடம் தூய்மை பணியாளர்கள் முறையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அமைச்சரும் மேயரும் இது குறித்து பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தும், ஒப்பந்ததாரர் இதுவரை 6 அம்ச கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தவில்லை.

thoothukudileaks


ஆர்ப்பாட்டத்தில் ஏடிஜயூசி சங்க மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் 6 அம்ச கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். குறிப்பாக தோழர் பொன்ராஜை பணிநீக்கம் செய்தது கண்டிக்கத்தக்கது. அந்த பணிநீக்கம் உடனே ரத்து செய்து அவரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்” என்றார்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த முற்றுகை ஆர்ப்பாட்டத்தின் போது, தோழர் பொன்ராஜின் பணிநீக்கம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் பணியில் சேர அனுமதி வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் அமைதியாக நிறைவடைந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏடிஜயூசி சங்கரபாண்டியன், புரட்சி பாரதம், மாவட்ட செயலாளர் மாரிசெல்வம், சகாயம், மின்னல் அம்ஜத் உள்ளிட்டோர் மற்றும் 60க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


வியாழன், 29 ஜனவரி, 2026

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் டோசர் ஓட்டுநர்கள் நியமனம் நீட்டிப்பு பல்வேறு நிர்வாக முடிவுகள் நிறைவேற்றம்

தூத்துக்குடி, ஜனவரி 30 :

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று காலை 10.15 மணிக்கு மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் தலைமை வகித்தார். ஆணையர் பிரியங்கா  துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டோசர் இயக்க ஓட்டுநர்கள் நியமனம் நீட்டிப்பு:

சனிதாரி பங்களிப்பு நிதியின் கீழ் வாங்கப்பட்ட இரண்டு டோசர் வாகனங்களை இயக்குவதற்காக 26.08.2025 முதல் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட இரண்டு ஹெவி டியூட்டி ஓட்டுநர்களின் பணிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்க மாநகராட்சி ஒப்புதல் வழங்கியது. இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.902 வீதம் ஊதியம் வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

ஒப்பந்த வைப்புத்தொகை திருப்பி வழங்கல்:

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக முடிக்கப்பட்ட பணிகளுக்கான காலாவதியான வைப்புத்தொகைகளை உரிய ஒப்பந்ததாரர்களுக்கு திருப்பி வழங்க மாநகராட்சி அனுமதி அளித்தது.

அதன்படி,

திரு. ஆர். தங்கராஜ் –

பாலாஜி நகர் BT சாலை பணிக்கு ரூ.73,826

சந்தோஷ் நகர் BT சாலை பணிக்கு ரூ.69,766

M/s. Power Communications –

பல்வேறு தொழில்நுட்ப பணிகளுக்கான மொத்தம் ரூ.65,546

நில தானம் ஏற்றுக்கொள்ளல்:

கூளஸ்கால் கிராமத்தில் 12,490 சதுர அடி பரப்பளவில் திரு. டி.எஸ். சேகர் ராஜவேல் அவர்களின் லேஅவுட் திட்டத்திற்கான சாலை மற்றும் பொது ஓய்வு இடத்தை மாநகராட்சிக்கு தானமாக வழங்குவதற்கான பத்திரங்களை ஏற்றுக்கொள்ள மாநகராட்சி ஒப்புதல் வழங்கியது.

கடை ஏலம் தொடர்பான முடிவுகள்:

மாநகராட்சியின் கீழ் உள்ள பல்வேறு கடைகளுக்கான ஏல நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

தெற்கு கடற்கரை சாலை கியோஸ்க் கடை – மாத வாடகை ரூ.7,000

சிதம்பரநகர் வளாக கடை – மாத வாடகை ரூ.22,600

என்ற அடிப்படையில் ஏலம் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும் மருத்துவமனை வளாகங்களில் உள்ள கேன்டீன் இடங்களுக்கான ஏல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.


தூத்துக்குடியில் அதிமுக முதற்கட்ட தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு – எஸ்.பி. சண்முகநாதன் தொடங்கி வைத்தார்

🖤❤️ வெற்றிக்கான பயணம் தூத்துக்குடியில் தொடங்கியது!

#AIADMK #Thoothukudi #Election2026 #SPShanmuganathan #அதிமுக #தூத்துக்குடி #மக்களுடன்_அதிமுக #தேர்தல்2026

தூத்துக்குடி, ஜனவரி 29:

இன்று (29.01.2026) காலை 10.00 மணிக்கு தூத்துக்குடியில் அதிமுக சார்பில் முதற்கட்ட தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வை தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன்   தூத்துக்குடி சிவன் கோவில் முன்பிருந்து துவங்கி வைத்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

thoothukudileaks


வ உ சி சந்தை அந்தோனியார் கோவில் தூத்துக்குடி பூ சந்தை பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


பொதுமக்களிடம் நேரடியாக தேர்தல் அறிக்கையை வழங்கி, அதிமுகவின் மக்கள் நலத் திட்டங்களை எடுத்துரைத்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர்.
💪 மக்கள் நலமே முதன்மை – அதிமுக
video பார்க்க 

நிகழ்வின்போது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டு, அதிமுக ஆட்சியின் சாதனைகள் நினைவூட்டப்பட்டன.

இந்த நிகழ்வு தூத்துக்குடி நகரில் தேர்தல் பரப்புரையின் தொடக்கமாக அமைந்தது.

இச் செய்தியில் புகைப்படம் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 


புதன், 28 ஜனவரி, 2026

திருவானைக்காவலில் இந்து சமய பாதுகாப்பு மாநாடு: மத்திய அரசுக்கு 10 கோரிக்கைகள்

திருச்சி, ஜனவரி 28 - 

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் கோதை நாச்சியார் மண்டபத்தில் இந்து சேனா மற்றும் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் இணைந்து நடத்திய இந்து சமய பாதுகாப்பு மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

கோவை சிரவை ஆதீனம் 4ஆம் பட்டம் குருமகா சந்நிதானம் திருப்பெருந்திரு இராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமை ஏற்று திருவிளக்கு ஏற்றி மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

thoothukudileaks

thoothukudileaks


 மன்னார்குடி ஶ்ரீ சம்பத்குமார இராமானுஜ ஜீயர் சுவாமிகள், காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தின் மடாதிபதி சுவாமி தர்ஷினி அனுபவானந்த சுவாமிகள், அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்தின் நிறுவனர் தவத்திரு சுவாமி இராமானந்தா மகராஜ், இந்து சேனா தேசிய பேரியக்கத்தின் தேசிய தலைவர் விஷ்ணு குப்தா உள்ளிட்ட பல ஆன்மீகத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.


கலை நிகழ்ச்சிகளும் விருது வழங்கலும்

மாநாட்டில் பாரம்பரிய பஜனை, இசைக்கச்சேரி, பரதநாட்டியம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. இந்து சமயத்தின் சேவை பணிகளை செய்து வரும் ஆன்மீக அன்பர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

thoothukudileaks

thoothukudileaks


மத்திய அரசுக்கு 10 முக்கிய கோரிக்கைகள்

மாநாட்டில் இந்து சமய மக்களின் சார்பாக மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அவற்றுள் முக்கியமானவை:

• இந்து சமய கோயில்களில் பக்தர்களிடையே வேற்றுமை உருவாக்கும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்

• இந்து சமயத்தைப் பாதுகாக்கவும் இந்து மக்களின் நலனுக்காகவும் இந்து சமய நல வாரியம் உடனே அமைக்க வேண்டும்

• இந்திய கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து ஆதீனங்கள், மடாதிபதிகள், ஜீயர், ஆன்மீக அமைப்புகளின் தலைமையில் நிர்வாகம் நடத்த சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும்

• கோயில் திருவிழாக்களில் அந்தந்த மாநிலத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கட்டாயம் நடத்த வேண்டும்

• இந்து சமயம் சார்ந்த கல்வியை பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் கொண்டுவர வேண்டும்

• பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான, சிதிலமடைந்த கோயில்களை உடனடியாக வழிபாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்

• சங்கராச்சாரியார்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள், ஜீயர் மற்றும் துறவியர்களுக்கு இலவச ரயில்வே சிறப்பு பயண பாஸ் வழங்க வேண்டும்

• மடங்களின் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து சொத்துக்களை மீட்க வேண்டும்

• பிரசித்தி பெற்ற இந்து கோயில்களில் வரலாற்று அருங்காட்சியகங்களை அமைக்க வேண்டும்

• கோயில்கள் சார்ந்த குளங்கள் மற்றும் நதிகளின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும்

இந்த மாநாட்டை இந்து சேனா மாநில தலைவர் மற்றும் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஆலோசனையின் பேரில் மாநில மற்றும் தேசிய பொறுப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


தூத்துக்குடி மாவட்ட மகளீர் பூப்பந்தாட்ட போட்டி புனித மரியன்னை கல்லூரி மாணவியர் முதல் பரிசு

தூத்துக்குடி, ஜனவரி :

தூத்துக்குடி தபால் தந்தி காலனி மக்கள் நல மன்றம், ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய தூத்துக்குடி மாவட்ட மகளீர் பூப்பந்தாட்ட போட்டி தூத்துக்குடி தபால் தந்தி காலனி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

லீக் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் அனைத்து அணிகளையும் வென்று கூடுதல் புள்ளிகளுடன் புனித மரியன்னை (St. Mary’s College) கல்லூரி மாணவியர் அணி முதல் பரிசை தட்டி சென்றது.

இரண்டாம் பரிசு – ஹோலி கிராஸ் பெண்கள் மேல் நிலை பள்ளி மாணவியர் அணியும்,

மூன்றாம் பரிசு – APCV மகாலட்சுமி கல்லூரி மாணவியர் அணியும் பெற்றனர்.

முதல் பரிசிற்கான கோப்பையை தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கண்ணன் அவர்கள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்தி பூப்பந்தாட்ட வீராங்கனைகளை ஊக்குவித்து வரும் ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் தூத்துக்குடியில் முன்னணி அமைப்பாக செயல்படுகிறது என பாராட்டினார்.

thoothukudileaks


முதல் பரிசு பெற்ற புனித மரியன்னை கல்லூரி அணியின் கேப்டன் மாளவிகா பேசுகையில்,

“எங்கள் கல்லூரி முதல்வர் அருட் சகோதரி ஜெசி பர்ணாந்து அவர்கள் வழங்கிய ஊக்கமும், பயிற்சியாளர் பாலசிங் அவர்கள் கொடுத்த பயிற்சியும் தான் இந்த வெற்றிக்குக் காரணம். 2026ஆம் ஆண்டின் முதல் மாதத்திலேயே இது எங்களது இரண்டாவது வெற்றி. இதற்கு முன்பு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியிலும் நாங்கள் சாம்பியன் பட்டம் பெற்றோம்” என தெரிவித்தார்.

thoothukudileaks


மேலும் தன்னுடன் சிறப்பாக விளையாடிய சந்தியா, அனி, உமா மகேஸ்வரி, ஸ்ரீமாரி தங்கம், மாலதி ஆகியோருக்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

 

ஞாயிறு, 25 ஜனவரி, 2026

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் 77வது குடியரசு தின விழா முன்னாள் கவுன்சிலர் கோட்டு ராஜா பரபரப்பு பேச்சு

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜனவரி 26 :

இந்திய குடியரசின் 77வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது

thoothukudileaks


thoothukudileaks

thoothukudileaks


விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர்  அன்னலட்சுமி கோட்டு ராஜா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேசிய கீதம் முழங்க அனைவரும் கொடியை நோக்கி மரியாதை செலுத்தினர்.

https://youtube.com/shorts/5kayK-3eY8o?si=6LdsKFIsRS78WvWL குடியரசு தின விழாவில் தூத்துக்குடி Ex கவுன்சிலர் கோட்டு ராஜா பரபரப்பு பேச்சு

இந்த நிகழ்வில் மேற்கு மண்டல உதவி ஆணையர் காந்திமதி, S.O. ராஜபாண்டி, A.W. லெனின், A.E. ஜெயபிரசாந்த், A.E. ராகவி, முன்னாள் கவுன்சிலர் கோட்டு ராஜா, மாமன்ற உறுப்பினர்கள், மேற்கு மண்டல மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

குடியரசு தினத்தை முன்னிட்டு மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் முழுவதும் திருவிழா போல் அலங்கரிக்கப்பட்டு, நாட்டுப்பற்று மிக்க சூழலில் விழா சிறப்பாக நடைபெற்றது.


தூத்துக்குடி மாநகராட்சியில் 77வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது

தூத்துக்குடி, ஜனவரி 26 :

தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இந்திய குடியரசின் 77வது ஆண்டு நிறைவை முன்னிட்டு குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ. ஜெகன்  தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேசிய கீதம் முழங்க அனைவரும் கொடியை நோக்கி மரியாதை செலுத்தினர்.

thoothukudileaks


விழாவில் சி. ப்ரியங்கா, இ.ஆ.ப., தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.





குடியரசு தினத்தை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகம் முழுவதும் திருவிழா போல் அலங்கரிக்கப்பட்டு காணப்பட்டது. திருவள்ளுவர் ஆண்டு 2057, தை மாதம் 12ஆம் தேதியன்று நடைபெற்ற இந்த விழாவில், இந்திய குடியரசின் 77வது ஆண்டு நிறைவை தூத்துக்குடி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடினர்.