சனி, 18 ஜூலை, 2026

தூத்துக்குடி லீக்ஸ் சிறப்பு தகவல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் 33 முக்கிய கேள்விகள் ஆகஸ்ட் 1 முதல் கணக்கெடுப்பு பணி தொடக்கம் தவறான தகவல் அளித்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை ? நீங்களே சுயமாக இணையதளம் மூலமும் பதிவு செய்வது எப்படி ? வழிமுறைகளை எளிதாக முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள்

Tamil Nadu updates 

தகவல் செய்தி புகைப்படங்கள் அருணன் செய்தியாளர் 

இன்றுமுதல் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: 33 கேள்விகளுக்கு பதிலளிக்க பொதுமக்கள் தயாராகுங்கள்

 

தூத்துக்குடி லீக்ஸ் சிறப்பு தகவல்கள் !!!

தமிழகத்தில் இன்றுமுதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளன. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் இந்த கணக்கெடுப்பில், ஒவ்வொரு குடும்பத்திடமும் மொத்தம் 33 முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டு விவரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கமாக 10 ஆண்

thoothukudileaks

டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய கணக்கெடுப்பு, கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அந்தப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன

இன்றுமுதல் தமிழகத்தில் தொடங்க இருக்கும்


மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் 33 கேள்விகள் அரசு உத்தரவில் தகவல்



தமிழகத்தில் ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 33 கேள்விகள் கேட்கப்பட உள்ளன.


மக்கள் தொகை கணக்கெடுப்பு


இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம்.


2011-ம் ஆண்டுக்குப் பிறகு 2021-ம் ஆண்டு நடத்த வேண்டிய கணக்கெடுப்பு கொரோனா தொற்றுகாரணமாக ஒத்திவைக்கப்பட்டது.


இந்தநிலையில் தற்போது 2025-2026-ம் ஆண்டுகாலகட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

thoothukudileaks



தமிழகத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்க உள்ளது.


( மக்கள் தவறான தகவலை அளித்தால் ரூ, 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. )

 

மக்கள்தொகை கணகெடுப்புப் பணியின்போது  இந்த 33 கேள்விகள் மத்திய அரசு  கேட்பதற்காக பட்டியலிடப்பட்டுள்ளன .

அதன் விபரம் பின்வருமாறு


மொத்த 33 கேள்விகள் கேட்கப்படும்

••••••••••••••••••••••••••••••••••••••••••

1.✓ அடுக்கு மாடி கட்டிட எண் ?

*FOR APARTMENT BUILDING NUMBER*

வசிக்கும் கட்டிடம் எண்

நீங்கள் வசிக்கும் கட்டிடத்தின் எண்

( நகராட்சி அல்லது உள்ளூர் அதிகாரசபை எண் )

••••••••••••••••••••••••••••••••••••••••••

2.✓  வீட்டு கதவு எண் ?

HOME DOOR NUMBER

*வீட்டு எண்*

••••••••••••••••••••••••••••••••••••••••••

3.✓ வீட்டின் தரையின் முக்கிய பொருள் என்ன எதில் கட்டப்பட்டது ? *

TILES OR CEMENT

(Mosaic & Red Oxide Floor)

வீட்டு தரை

••••••••••••••••••••••••••••••••••••••••••

4✓  வீட்டின் சுவரின் முக்கிய பொருள் என்ன எதில் கட்டப்பட்டது ?

BRICK OR MUD WALL

(Red Bricks / Cement Hollow Blocks) 

சுவர்

••••••••••••••••••••••••••••••••••••••••••

5.✓ வீட்டின் மேல் கூரையின் முக்கிய பொருள் எது ?

CONCRETE SEELING OR WOODEN SEELING

•கான்கிரீட் (RCC) கூரை

•உலோகத் தாள்கள் (Metal Sheets)

•ஓடுகள் (Tiles)

•மரச்சட்டங்கள் (Wooden Trusses)

•மரப்பலகை / வைக்கோல்

கூரையின் பிரதான கட்டுமானப் பொருள்

••••••••••••••••••••••••••••••••••••••••••

6.✓  வீடு தற்போது பயன்பாட்டில் உள்ளதா ( பயன்பாட்டை உறுதி செய்தல் ? )*

LIVING OR LOCKED

வீட்டின் பயன்பாடு

••••••••••••••••••••••••••••••••••••••••••

*7.✓ எந்த மாதிரி வீட்டின் அமைப்பு ?*

*INDIVIDUAL PRIVATE HOUSE OR APARTMENT*

மாடி வீடு (Duplex / Two-Story)

*வீட்டின் நிலை*

••••••••••••••••••••••••••••••••••••••••••

8.✓ குடும்ப எண் ?

*"குடும்ப எண்" (Family ID) என்பது பொதுவாக உங்கள் ரேஷன் கார்டு (குடும்ப அட்டை) எண்ணைக் குறிக்கிறது.

••••••••••••••••••••••••••••••••••••••••••

9.✓ வீட்டில் வசிக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

HOW MANY MEMBERS IN HOME

வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை என்பது உங்களின் சொந்த வீடு, கிராமம், மாவட்டம் அல்லது மாநிலத்தைப் பொறுத்து மாறுபடும். அரசாங்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு வீட்டில் வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை (Total number of persons living in a house) அடிப்படை தகவலாக சேகரிக்கப்படுகிறது.

வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை

••••••••••••••••••••••••••••••••••••••••••

10.✓  வீட்டுத் தலைவரின் பெயர் என்ன ?*

அரசு ஆவணங்களில் உள்ள உங்கள் குடும்பத் தலைவர் பெயரை அறிய

*FAMILY MEMBER NAME*

*குடும்ப தலைவர் பெயர்*

••••••••••••••••••••••••••••••••••••••••••

*11.✓ வீட்டுத் தலைவரின் பாலினம் ( ஆணா  / பெண்ணா ) எது ?*

*MALE OR FEMALE*

*தலைவரின் பாலினம்*

••••••••••••••••••••••••••••••••••••••••••

*12.✓ குடும்பத் தலைவர் எந்த ( ஜாதி ) சாதி (Caste) ?*

குடும்ப தலைவரின் அட்டவணை வகுப்பு


நீங்கள் "குடும்ப தலைவரின் அட்டவணை வகுப்பு" (Head of Household - Schedule Class) அல்லது "அரசு அட்டவணை வகுப்பினர் குடும்பத் தலைவருக்கான திட்டங்கள்" (SC Category Head of Household) பற்றிய தகவல்களைத் தேடுகிறீர்கள் என்றால், உங்கள் குடும்ப அட்டை (Ration Card), ஜாதிச் சான்றிதழ் (Community Certificate) மற்றும் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.


( Scheduled Caste / எஸ்சி - SC )

"பட்டியல் சாதியினரா" ?

அல்லது "பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்" ( Scheduled Tribes - ST ) பழங்குடி சாதியினரா அல்லது பிற இனத்தைச் சேர்ந்தவரா என்பது ?


இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களில் குடும்ப தலைவரின் அட்டவணை வகுப்பு ( "SC/ST/Other" ) என்பது, குடும்பத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் எந்த சமூகப் பிரிவைச் (ஆதி திராவிடர், பழங்குடியினர் அல்லது இதர பிரிவினர்) சார்ந்தவர் என்பதைக் குறிக்கும். இது சாதிச் சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டது.


SC, ST மற்றும் பிறர்" என்பது பொதுவாக இந்தியாவில் இட ஒதுக்கீடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காகப் பயன்படுத்தப்படும் சமூகக் குழுப் பிரிவுகளைக்குறிக்கிறது


• பட்டியல் சாதியினர் (SC) :-

வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள், முன்னர் தலித்துகள் என்று அழைக்கப்பட்டவர்கள், இவர்கள் கடுமையான சமூகப் புறக்கணிப்பையும் தீண்டாமையையும் எதிர்கொண்டனர்.


• பட்டியல் பழங்குடியினர் (ST) :-

 பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது வனப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடி சமூகங்கள்; இவர்கள் தனித்துவமான கலாச்சார நடைமுறைகள் மற்றும் புவியியல் ரீதியான தனிமைப்படுத்தலால் அறியப்படுகிறார்கள்.


• மற்றவர்கள் :-

பொதுவாக இது , சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியுள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையோ (OBC), அல்லது அரசாங்க இட ஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறாத சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்பொதுப் பிரிவினரையோ (UR) குறிக்கிறது .

••••••••••••••••••••••••••••••••••••••••••

13.✓ வீட்டின் உரிமை நிலை என்ன?

( சொந்த வீடா / வாடகை வீடா )

*OWN HOUSE OR RENTAL HOUSE*


வீட்டின் உரிமை நிலை

வீட்டின் உரிமை நிலை (Home ownership) என்பது ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது குடும்பத்திற்கு அந்த வீடு சொந்தமானதா அல்லது அவர்கள் வாடகைக்கு இருக்கிறார்களா என்பதைக் குறிக்கிறது. இது சமூக, பொருளாதார நிலையை அளவிடும் முக்கிய காரணியாகும்.

••••••••••••••••••••••••••••••••••••••••••

*14.✓ வீட்டில் உள்ள குடியிருப்பு அறைகளின் எண்ணிக்கை எத்தனை ?*

HOW MANY ROOMS IN YOUR HOUSE

அறைகளின் எண்ணிக்கை

••••••••••••••••••••••••••••••••••••••••••

15.✓ வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை ?

*HOW MANY COUPLES IN YOUR HOUSE*

திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை

••••••••••••••••••••••••••••••••••••••••••

16.✓ குடிநீரின் முக்கிய ஆதாரம் ?

குடிநீர் ஆதாரம் அமைந்துள்ள இடம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான குடிநீர் ஆதாரங்கள் மேற்பரப்பு நீர் (ஏரிகள்), நிலத்தடி நீர், மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் ஆகிய இடங்களில் இருந்து பெறப்படுகின்றன


(ஏரிகள், ஆறுகள்) மற்றும் நிலத்தடி நீர் (கிணறுகள், ஆழ்துளை கிணறுகள்)

IN WHICH PLACE YOU GETTING WATER*

*BY RIVER + LAKE + WELL + BORE

••••••••••••••••••••••••••••••••••••••••••

17.✓ குடிநீர் வசதி எப்படி கிடைக்கிறது ?

( குழாய் இணைப்புகள் மூலம் வழங்கப்படுகிறது )

*PRESENT YOU GETTING WATER BY PIPE LINE OR BORE

நிலத்தடி நீர் (Groundwater)

குடிநீர் இணைப்பு (Pipe Line)

*குடிநீருக்கான பிரதான ஆதாரம்*

••••••••••••••••••••••••••••••••••••••••••

*18.✓ கரன்ட் வசதி உள்ளதா ?*

*விளக்கு ஒளிக்கான பிரதான ஆதாரம்*

மின்சாரம் (Electricity) ஆகும்

••••••••••••••••••••••••••••••••••••••••••

*19.✓ கழிவறை உள்ளதா ?*

*கழிப்பிட வசதி*

••••••••••••••••••••••••••••••••••••••••••

*20.✓ கழிவறை எந்த வகை ?*


••••••••••••••••••••••••••••••••••••••••••

*21.✓ கழிவு நீர் வெளியேறும் வசதி உள்ளதா ?*

கழிவு நீர் வெளியேற்றும் இணைப்பு*

(Sewerage Connection)

••••••••••••••••••••••••••••••••••••••••••

*22.✓ குளியல் வசதி இருக்கிறதா ?*


••••••••••••••••••••••••••••••••••••••••••

*23.✓ சமையலறை மற்றும் LPG/PNG இணைப்பு வசதி உள்ளதா ?*

*சமையலறை வசதி மற்றும் கியாஸ் இணைப்பு*

எல்.பி.ஜி (LPG)

குழாய் வழி கியாஸ் (PNG)

••••••••••••••••••••••••••••••••••••••••••

*24.✓ சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள் எது ?*

சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரதான எரிபொருள்*

•எல்.பி.ஜி (LPG)

•இயற்கை எரிவாயு (PNG - Piped Natural Gas)

•மின்சாரம் (Electricity)

•விறகு, கரி மற்றும் சாணம் 

••••••••••••••••••••••••••••••••••••••••••

*25.✓ ரேடியோ / டிரான்சிஸ்டர் இருக்கா ?*

வானொலி,டிரான்சிஸ்டர்,

RADIO TRANSISTOR 

••••••••••••••••••••••••••••••••••••••••••

*26.✓ தொலைக்காட்சி ( TV ) இருக்கா ?*

 TELIVISION 

••••••••••••••••••••••••••••••••••••••••••

*27.✓ இணையதளம் வசதி இருக்கா ?*இணையதள வசதி*

INTERNET 

••••••••••••••••••••••••••••••••••••••••••

*28.✓ மடிக்கணினி / கம்ப்யூட்டர் இருக்கா ?*

LAPTOP / COMPUTER 

••••••••••••••••••••••••••••••••••••••••••

*29.✓ தொலைபேசி /மொபைல் போன் /ஸ்மார்ட்போன் இருக்கா ?*

TELEPHONE / MOBILE PHONE / SMARTPHONE 

••••••••••••••••••••••••••••••••••••••••••

*30.✓ சைக்கிள் / ஸ்கூட்டர் / மோட்டார் சைக்கிள் / மொபெட் இருக்கா ?*

CYCLE / SCOOTER / MOTORBIKE 

••••••••••••••••••••••••••••••••••••••••••

*31.✓ கார் / ஜீப் / வேன் இருக்கா ?*

CAR / JEEP / VAN

••••••••••••••••••••••••••••••••••••••••••

*32.✓ வீட்டில் சாப்பிடும் முக்கிய உணவு  எது ?*

•அரிசி (Rice)

•கோதுமை (Wheat)

•மக்காச்சோளம் (Maize / Corn)

•சிறுதானியங்கள் (Millets)

•பார்லி மற்றும் ஓட்ஸ் (Barley & Oats)


*பிரதான உணவு தானியங்கள்*

••••••••••••••••••••••••••••••••••••••••••

*33.✓ உங்கள் மொபைல் எண் ( மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான தகவல் தொடர்புகளுக்கு மட்டும் )*

செல்போன் எண்


••••••••••••••••••••••••••••••••••••••••••

*ஆகிய 33 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான விடைகள் பதிவு செய்யப்படுகிறது என்று முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஸ் தாக்கூர் பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் கூறியுள்ளார்.

.

கணக்கெடுப்பின்போது வீட்டு அமைப்பு, குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை, குடிநீர், மின்சாரம், கழிவறை, சமையல் வசதி, இணைய வசதி, வாகனங்கள், மொபைல் எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. 

மேலும், குடும்பத் தலைவர், சமூகப் பிரிவு, வீட்டு உரிமை, குடியிருப்பு வசதிகள் உள்ளிட்ட விவரங்களும் பதிவு செய்யப்படும்.

அரசு அதிகாரிகள் வழங்கியுள்ள தகவலின்படி, மக்கள் தவறான தகவல்களை வழங்கினால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் உண்மையான தகவல்களை மட்டுமே வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தங்களது குடும்ப விவரங்களை சுயமாக இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கணினி அல்லது மொபைல் போன் மூலம் இணையதளத்தில் பதிவு செய்து, கிடைக்கும் Self Enumeration ID-யை பாதுகாத்து வைத்துக் கொண்டு, பின்னர் வீடு தேடி வரும் கணக்கெடுப்பு அலுவலரிடம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் தகவல்கள், அரசின் நலத்திட்டங்கள், அடிப்படை வசதிகள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டமிடலுக்கு முக்கிய ஆதாரமாக அமையும் என்பதால், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

📰 பாக்ஸ் நியூஸ்

சுயமாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யலாம்

பொதுமக்கள் தங்களது குடும்ப விவரங்களை அரசு வழங்கியுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மொபைல் அல்லது கணினியில் சுயமாக பதிவு செய்யலாம்.

பதிவு செய்யும் முறை:

*

 முதற்கட்டமாக ஒவ்வொரு குடும்பமும் தாங்களே சுயமாக இணையதளம் மூலம் லேப்டாப் அல்லது மொபைலில் தகவல்களை பதிவு செய்ய வழிவகுக்கப்பட்டுள்ளது. அதன்படி se.census.gov.in என்ற இணையதளத்தை திறந்து கீழ்கண்ட விபரப்படி தங்களது குடும்ப விபரங்களை பதிவு செய்யுங்கள்.

மேல் தரப்பட்டுள்ள. லிங் அழுத்தி இணையதளம் செல்லுங்கள் 


1. முதலில் மாநிலத்தை தேர்வு செய்து captcha கொடுத்து Verified & Proceed கொடுங்கள், அதன்பிறகு OK கொடுங்கள்.


2. Name of the Head of the Household ல் குடும்ப தலைவரின் பெயரை கொடுங்கள் (கணவர், மனைவி அல்லது குடும்பத்தை நடத்த கூடிய யார் பெயரை வேண்டுமானாலும் கொடுக்கலாம்), அடுத்து உங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு மொபைல் நம்பரை கொடுங்கள். Email இருந்தால் கொடுங்கள். அதன்பிறகு Verified & Proceed கொடுங்கள்


3. Language செலக்ட் செய்து, உங்கள் மொபைலுக்கு வரும் OTP எண்ணை பதிவு செய்து Verify OTP கொடுங்கள், அடுத்து OK கொடுங்கள்.


4. Step 1 - அடுத்து Boundary கேட்கும். OK கொடுங்கள். அதில் மாநிலத்தை காண்பிக்கும், அதன் கீழ் மாவட்டத்தை தேர்ந்தெடுங்கள். அதன் கீழ் உங்கள் ஊரின் PINCODE கொடுங்கள். அதன் கீழ் உங்கள் வீடு அருகே உள்ள இடத்தை தேர்வு செய்து Search கொடுங்கள். Map காண்பிக்கும். அதில் 4 பக்கமும் உள்ள கொடு காண்பிக்கும், அதில் உங்கள் வீடு அருகே அதன் நடு இடத்தை கொண்டு வைத்து Confirm Location கொடுத்து Yes கொடுங்கள்.


5. Step 2 - வீட்டின் தரையின் முதன்மையான பொருள் கேட்கும் - அதற்கு Cement என கொடுங்கள். அடுத்து சுவற்றின் தரம் கேட்கும், அடுத்து மேலே ஒட்டப்பட்ட பொருள் கேட்கும், அடுத்து வீட்டின் condition கேட்கும், அனைத்தையும் கொடுத்து Save & Next கொடுத்து YES கொடுங்கள்.


6. Step 3 - உங்கள் குடும்பத்தில் எத்தனை நபர்கள் உள்ளனர் என்ற எண்ணை கொடுங்கள். (குடும்பத்தில் இன்று குழந்தை உட்பட அனைத்து நபர்களையும் கொடுங்கள், வேலை நிமித்தமாக வெளியில் எங்கு சென்று இருந்தாலும் அவர்களையும் சேர்த்து கொடுங்கள்). அடுத்து நீங்கள் கொடுத்த குடும்ப தலைவரின் பெயரை காண்பிக்கும். அடுத்து குடும்ப தலைவரின் Sex குறிப்பிடுங்கள். அடுத்து அவர்கள் SC,ST அல்லது other என்றால், சரியானதை Click செய்யுங்கள். அடுத்து வாடகை வீடா அல்லது சொந்த வீடா என குறிப்பிடுங்கள். எத்தனை room உள்ளது என குறிப்பிடுங்கள். குடும்பத்தில் திருமணமான நிலையில் எத்தனை Couples உள்ளனர் என குறிப்பிட்டு Save & Next கொடுத்து YES கொடுங்கள்.


7. Step 4 - குடிநீர் சம்பந்தமான தகவல்கள். உங்கள் வீட்டிற்கு குடிநீர் எப்படி வருகிறது. குடிநீர் வீட்டுக்குள்ளேயே வருகிறதா, வீட்டில் எலக்ட்ரிக் லைன் வருகிறதா, latrine உள்ளதா, latrine type என்ன, வீட்டு தண்ணீர் எப்படி வெளியேறுகிறது. குளியல் அறை உள்ளதா, LPG Gas உள்ளதா, வீட்டின் முக்கிய fuel என்ன என குறிப்பிட்டு Save & Next கொடுத்து YES கொடுங்கள்.


8. Step 5 - Radio தகவல்கள் - ரேடியோ உள்ளதா, television உள்ளதா, இன்டர்நெட் உள்ளதா, லேப்டாப் உள்ளதா, டெலிபோன் வசதி, பைக் உள்ளதா, கார் உள்ளதா, சாப்பிட உபயோகிக்கும் சமையல் பொருள், கொடுத்து நீங்கள் கொடுத்த மொபைல் நம்பர் சரியா என பார்த்து Save & Next கொடுத்து YES கொடுங்கள்.


9. Step 6 ல் - இதுவரை நீங்கள் கொடுத்த அனைத்து தகவல்களையும் சரிபார்த்து, சரி என்றால் Save as Draft Final Submit கொடுக்கவும். 


கொடுத்தவுடன் Submitted Successfully என்ற பக்கம் வந்து Your Self Enumeration ID என்ற ஒரு நம்பர் கொடுக்கும். கொடுக்கும். அந்த நம்பரை screen shot எடுத்து வைத்து கொண்டு, அடுத்த மாதம் உங்கள் வீடு தேடி வரும் Census Enumerator இடம் காண்பியுங்கள்.


வழிமுறைகள் வீடியோ பார்க்க 

அதாவது Final Submit செய்த பிறகு கிடைக்கும் Self Enumeration ID-யை பாதுகாத்து வைத்திருந்து, கணக்கெடுப்பு அலுவலரிடம் காட்ட வேண்டும்.

குறிப்பு: பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அரசு இணையதளம் அல்லது கணக்கெடுப்பு அலுவலர்கள் மூலம் மட்டுமே தகவல்களை பதிவு செய்ய வேண்டும். தெரியாத இணைப்புகள் அல்லது சமூக ஊடகங்களில் பகிரப்படும் உறுதி செய்யப்படாத தகவல்களை நம்ப வேண்டாம்.

தகவல் செய்தி புகைப்படங்கள் ரோஜா அருணன் செய்தியாளர் 

வெள்ளி, 17 ஜூலை, 2026

முன்னாள் எம்.எல்.ஏ. பங்கேற்கும் நாடார் பேரவை சார்பில் காமராஜர் 124-வது பிறந்தநாள் விழா மற்றும் முப்பெரும் விழா நாளை நடைபெறுகிறது

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

Tamil Nadu updates

தூத்துக்குடி, ஜூலை 18:

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் – நாடார் பேரவை சார்பில், பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா, ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மாணவ–மாணவிகளுக்கான பாராட்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நாளை (ஜூலை 19) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.




தூத்துக்குடி மணி நகர் 4-வது தெருவில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ராமலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் பி.எம். அற்புதராஜ் தலைமை தாங்குகிறார்.


மாநில தொழிற்சங்க செயலாளர் எஸ். ஜெயராஜ் டேவிட், மாநில துணைப் பொதுச் செயலாளர் ரெ. காமராசு நாடார், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் ஏ. அந்தோணிபிச்சை ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நாடார் பேரவை மாநில தலைவர் எஸ்.என்.பி. அருண் சுரேஷ்குமார் வரவேற்புரை ஆற்றுகிறார்.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஏ. நாராயணன், மாநில பொதுச் செயலாளர் ...

டி.ஆர். சந்திரசேகர், மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் உள்ளிட்ட பல்வேறு மாநில, மாவட்ட நிர்வாகிகள் சிறப்புரையாற்றுகின்றனர்.

thoothukudileaks


மேலும், கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுவதுடன், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன.


இந்நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கழகம் – நாடார் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வியாழன், 16 ஜூலை, 2026

ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆக எஸ்.பி. சண்முகநாதன் அதிமுக அறிவிப்பு

 Tamil Nadu updates,

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனுக்கு அதிமுகவில் கூடுதல் பொறுப்பு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமனம் – ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பை கவனிப்பார்

தூத்துக்குடி, ஜூலை 16:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


சமீபத்தில்  கழக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த எஸ்.பி. சண்முகநாதன், தற்போது காலியாக உள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

thoothukudileaks


இதன் மூலம், ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பை எஸ்.பி. சண்முகநாதன் கவனிப்பார் என்று அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மாவட்டத்தில் கழக அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அஇஅதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



புதன், 15 ஜூலை, 2026

காமராஜர் 124-வது பிறந்தநாள் விழா அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூலை 15:

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், பெருந்தலைவருமான காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

thoothukudileaks


அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (AIPTMMK) சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாண்புமிகு அம்மா அவர்களின் உண்மை விசுவாசியும், முன்னாள் பெருநகரக் கழகச் செயலாளரும், முன்னாள் தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவருமான எஸ். ஏசாதுரை தலைமை வகித்தார்.


thoothukudileaks


விழாவையொட்டி, அந்தோனியார் கோவில் அருகே அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும், சிவன் கோவில் அருகே மாவட்ட கழக அலுவலகம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி காமராஜரின் பிறந்தநாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

thoothukudileaks


இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் வி.டி. தங்கம், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் மாரியப்பன், முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் இரா.இல. ஜெயராமன், முன்னாள் பகுதி கழகச் செயலாளர் வி.பி. முத்து, முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்துக்குமார், முன்னாள் மேற்கு பகுதி எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் கணேசன், முன்னாள் பாசறை தலைவர் மகாராஜன், சபிக்குமார் உள்ளிட்ட அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக (AIPTMMK) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

thoothukudileaks


விழாவில் கலந்து கொண்டவர்கள், கல்வி வளர்ச்சி, நேர்மை, எளிமை மற்றும் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக பெருந்தலைவர் காமராஜர் ஆற்றிய மகத்தான சேவைகளை நினைவுகூர்ந்து அவரது புகழை போற்றினர்.



.

செவ்வாய், 14 ஜூலை, 2026

சந்திரசேகர் படுகொலை குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மறுப்பு சட்ட உரிமைகள் கழகம் கடும் கண்டனம்

 Tamil Nadu updates, photo news by Arunan journalist 

சந்திரசேகர் படுகொலை: குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மறுப்பு  சட்ட உரிமைகள் கழகம் கடும் கண்டனம்

தூத்துக்குடி, ஜூலை 14:

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

thoothukudileaks


சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ....

உயிரிழந்த சந்திரசேகரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளுக்கு ஆறுதலை தெரிவித்தார்.


சந்திரசேகருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளதாகவும், அதில் இளைய குழந்தை பிறந்து வெறும் 15 நாட்களே ஆன நிலையில் குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்தவர் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், சமூக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ள இத்தகைய சம்பவங்களைத் தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.



குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் தலைமையில் வழக்கறிஞர்கள் ஆனந்த கதிரேசன், வெங்கடேசன், ஸ்ரீராம், அருண், நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் எஸ்தர் ராஜ், உதயசூரியன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நிலை குறித்து கேட்டறிந்தனர். 



தொடர்ந்து உயிரிழந்த சந்திரசேகரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை உடலை வாங்க மறுப்பு

இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்ய வேண்டும். கொலையின் பின்னணி, முன்விரோதம் மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தியுள்ளது.


இதற்கிடையில், குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை உயிரிழந்த சந்திரசேகரின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு கோரிக்கை

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும். மேலும், சந்திரசேகரின் மனைவிக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி அல்லது நிரந்தர வாழ்வாதார உதவி வழங்க வேண்டும். மூன்று பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால பாதுகாப்பை அரசு ஏற்க வேண்டும். பச்சிளம் குழந்தை மற்றும் தாய்க்குத் தேவையான மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பு வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் இருந்தால் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்., 

வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், சந்திரசேகர் குடும்பத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் வரை சட்டத்திற்குட்பட்ட ஜனநாயக வழிகளில் தொடர்ந்து போராடுவோம் என்று சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

Dr. S.R. செல்வம் கிறிஸ்டோபர்

நிறுவனத் தலைவர்

சட்ட உரிமைகள் கழகம்


 இச் செய்தி புகைப்படங்களில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

திங்கள், 13 ஜூலை, 2026

பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் கட்டுப்பாட்டில் தவறியதாக குற்றச்சாட்டு தவெக அரசை கண்டித்து ஜூலை 18 ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

Tamil Nadu update 

சென்னை, ஜூலை 13:

பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாததையும், போதைப்பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக தவெக அரசை கண்டித்தும், ஜூலை 18-ஆம் தேதி புள்ளம்பாடியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

thoothukudileaks


இந்தக் குற்றச்சாட்டுகளை வலியுறுத்தும் வகையில், புள்ளம்பாடியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சனி, 11 ஜூலை, 2026

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்: பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

தூத்துக்குடி, ஜூலை 11:

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று (11.07.2026) காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி பெல் ஹோட்டல் கருத்தரங்கில் நடைபெற்றது.

thoothukudileaks


thoothukudileaks


சங்கத்தின் தலைவர் அன்புராஜ் ஜெபசிங் தலைமை வகித்தார். மூத்த உறுப்பினர் குணசீலன் முன்னிலை வகித்தார். செயலாளர் ஹீராஜான் வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் பாக்கியம் 30.06.2026 வரையிலான சங்கத்தின் வரவு–செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். 

thoothukudileaks




அந்த அறிக்கை பொதுக்குழுவால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, சங்கத்தின் திருத்தப்பட்ட சட்ட விதிகளை சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சொ. ராஜா வெளியிட, அதனை சங்கத் தலைவர் அன்புராஜ் ஜெபசிங் பெற்றுக்கொண்டார்.

thoothukudileaks


கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மறைந்த சங்க உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்!!!

 தமிழக அரசின் நிர்வாகத்திற்கும், தமிழக முதல்வருக்கும், சட்டம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல் குமார் அவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

thoothukudileaks


மேலும், உடன்குடி அனல்மின் நிலையத்தின் பராமரிப்பு பணிகளுக்கான ஒப்பந்தப் பணிகளை சங்க உறுப்பினர்கள் திறம்பட மேற்கொண்டு, அந்த நிலையத்தையும் உற்பத்தியில் முன்னோடி நிலையமாக மாற்றும் வகையில் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கிளவுட் ஆடிட் முறை நீக்கம்!!!

சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான கிளவுட் ஆடிட் முறையை நீக்கியமைக்காக மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ், இ.ஆ.ப. மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அத்துடன், இபிஎப் (EPF) மற்றும் இஎஸ்ஐ (ESI) உள்ளிட்ட தொழிலாளர் நலக் கட்டணங்களை வாரியம் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுக்குழு வலியுறுத்தியது.


கூட்டத்தில் திரளான ஒப்பந்தக்காரர்கள் பங்கேற்றனர். நிறைவில் சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சொ. ராஜா நன்றி உரையாற்றினார். தொடர்ந்து, பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் சங்கத்தின் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.