திங்கள், 17 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடி மாநகராட்சியில் தீவிர கொசுப்புழு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாம்!


தூத்துக்குடி மாநகராட்சியில் தீவிர கொசுப்புழு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாம்!

395 கிலோ கொசு உற்பத்தி கழிவுகள் அகற்றம் — வீடுகளுக்கே சென்று பரிசோதிக்க மருத்துவ குழுக்கள் அமைப்பு

தூத்துக்குடி: வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் மற்றும் தீவிர காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்  சி. பிரியங்கா, இ.ஆ.ப.  உத்தரவின் பேரிலும், மாநகர நல அலுவலரின் வழிகாட்டுதலின்படியும் மாநகராட்சி களப்பணியாளர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தீவிர தூய்மைப் பணிகளிலும் தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

thoothukudileaks


395 கிலோ கொசு உற்பத்தி கழிவுகள் அகற்றம்:

கடந்த 16.08.2026 ஞாயிற்றுக்கிழமையன்று மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 18 (பிரிவு 12)-ல் உள்ள ராஜகோபால் 10-வது தெரு பகுதியில் தீவிர கொசு உற்பத்தி மூலங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. அப்பகுதியில் உள்ள 132 குடியிருப்பு வீடுகள், 11 காலி மனைகள் (Vacant Land) மற்றும் அதைச் சுற்றியுள்ள 2 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட பகுதிகளில் பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

thoothukudileaks


இப்பணியின் போது:

  • பிளாஸ்டிக் பாட்டில்கள் & ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்புகள்
  • தேங்காய் ஓடுகள் (சிரட்டைகள்), இளநீர் கூடுகள்
  • பழைய சைக்கிள் & இருசக்கர வாகன டயர்கள்
  • பாக்கு மட்டை தட்டுகள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள்
  • பெயிண்ட் டப்பாக்கள், வண்ணப்பூச்சு பாட்டில்கள், ஆயில் கேன்கள்
  • பழைய காலணிகள், பிரியாணி & சால்னா டப்பாக்கள்

ஆகிய கொசு உற்பத்தி காரணிகள் (Source Reduction) கண்டறியப்பட்டு 395 கிலோ அளவுக்கு கழிவுகள் அகற்றப்பட்டன.

thoothukudileaks

thoothukudileaks


குடிநீர் பரிசோதனை & புகையடிக்கும் பணி:

மாநகரப் பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு சரியான முறையில் உள்ளதா என்பது குறித்து தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், மேற்கு மண்டலப் பகுதிகளில் 'Indoor / Outdoor Fogging' (புகையடிக்கும் பணி) தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

thoothukudileaks


வீடு வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை:

17.08.2026 அன்று ராஜகோபால் நகர் 10-வது தெருவில் பி.எம்.என்.டி காலனி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் நேரில் சென்று வீடு வீடாக பரிசோதனை மேற்கொண்டனர். பொதுமக்களுக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் உள்ளனவா என்று தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன.

மாநகராட்சி ஆணையர் கோரிக்கை: "இந்த கொசுப்புழு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்புப் பணிகள் மாநகராட்சியின் அனைத்து வார்டு பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற உள்ளது. எனவே, ஆய்வு செய்ய வரும் மாநகராட்சி களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்." — . சி. பிரியங்கா, இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர்.

தூத்துக்குடியில் கைம்பெண்கள் நல்வாழ்வு சங்க பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடியில் கைம்பெண்கள் நல்வாழ்வு சங்க பொதுக்குழு கூட்டம் விமரிசையாக நடைபெற்றது!

தூத்துக்குடி, ஆக. 17:

தூத்துக்குடி மாவட்ட கைம்பெண்கள் நல்வாழ்வு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

thoothukudileaks


தூத்துக்குடி அமைந்தகரை தொழிற்கூடக் கட்டிடத்தில் நேற்று (16.08.2026, ஞாயிற்றுக்கிழமை) மாலை 5:00 மணியளவில் இக்கூட்டம் நடைபெற்றது. 

thoothukudileaks


கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவி  R. சங்கீதாரமேஷ் தலைமை தாங்கினார். சங்க ஆலோசகர்  இரா. மாடசாமி முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்கள்:

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக:

 தமிழ்நாடு அகத்தியர் சங்க மாவட்டத் தலைவர் M. ராஜ்

 ஓய்வுபெற்ற கான்வென்ட் பள்ளி ஆசிரியை  தேவகி

 மின்னல் அம்ஜித்

ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சங்க நிர்வாகிகள் உரை:

கூட்டத்தில் சங்கச் செயலாளர்  வேளாங்கண்ணி, துணைத் தலைவர்கள்  M. பொன்னி, J. நிர்மலா மற்றும் இணைச் செயலாளர்  N. இந்துமதி ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினர்.

thoothukudileaks


இக்கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சிக்கான முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. இதில் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சனி, 15 ஆகஸ்ட், 2026

சுதந்திர நாட்டில் ஜனநாயகத்தின் நிலை குறித்து தூத்துக்குடியில் PUCL கருத்தரங்கு

 

சுதந்திர நாட்டில் ஜனநாயகத்தின் நிலை குறித்து தூத்துக்குடியில் PUCL கருத்தரங்கு

தூத்துக்குடி: ஆக 16

இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமை கழகம் (Peoples Union of Civil Liberties – PUCL) சார்பில், “சுதந்திர நாட்டில் ஜனநாயகத்தின் நிலை?” மற்றும் “அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதில் நமது பங்கு?” ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது.

thoothukudileaks


thoothukudileaks


கருத்தரங்கிற்கு PUCL தூத்துக்குடி மாவட்டத் தலைவர் முனைவர் X.D. செல்வராஜ் தலைமை வகித்தார்.


 மக்கள் சிவில் உரிமை கழகத்தின் முன்னாள் செயலாளரும், தற்போதைய மாநிலக் குழு உறுப்பினருமான பேராசிரியை பாத்திமா பாபு முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் பிரிட்டோ கலந்து கொண்டு, அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் மற்றும் குடிமக்களின் உரிமைகள் குறித்து விரிவாக கருத்துரையாற்றினார்


thoothukudileaks



PUCL மாவட்டச் செயலாளரும் வழக்கறிஞருமான  ராஜா வரவேற்புரையாற்றினார்.


கருத்தரங்கில் ...

அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள அடிப்படை உரிமைகள் குறித்து விளக்கப்பட்டதுடன், ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான முக்கியமான சட்ட விதிகள் மற்றும் சட்டப்பிரிவுகள் குறித்தும் விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

சிறப்பு அழைப்பாளர்!!!

மேலும், கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு சிறப்பு அழைப்பாளர் வழக்கறிஞர் பிரிட்டோ பதிலளித்து விளக்கமளித்தார். 


thoothukudileaks


இதன் மூலம் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் குடிமக்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பங்கேற்பாளர்களிடையே ஏற்படுத்தப்பட்டது.

மாநிலக் குழு உறுப்பினர் பேராசிரியை பாத்திமா பாபு

நிகழ்ச்சியின் நிறைவில், சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் பிரிட்டோ அவருக்கு PUCL தூத்துக்குடி மாவட்டத் தலைவர் முனைவர் X.D. செல்வராஜ் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் பேராசிரியை பாத்திமா பாபு ஆகியோர் இணைந்து நினைவுப் பரிசு வழங்கினர்.

நன்றி தெரிவிப்பு!!!

கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் PUCL மாவட்டச் செயலாளர் தெர்மல் ராஜா நன்றி தெரிவித்தார்.

thoothukudileaks


வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் 80வது சுதந்திர தின விழா

 

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் 80வது சுதந்திர தின விழா


தூத்துக்குடி: ஆக 15 தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நாட்டின் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் வடக்கு மண்டலத் தலைவர் தொ. நிர்மல் ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

thoothukudileaks

thoothukudileaks


விழாவில் வடக்கு மண்டல உதவி ஆணையர் எம். முனீரு அகமது, சுகாதார அலுவலர் ராஜசேகரன், துணை மேயர் ஜெனிட்டா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கீதா முருகேசன், ரெங்கசாமி, அந்தோணி மார்சிலின், நாகேஸ்வரி, பவானி மார்சல், ஜெயசீலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



தொடர்ந்து, வடக்கு மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களை பாராட்டும் வகையில், வடக்கு மண்டலத் தலைவர் தொ. நிர்மல் ராஜ் மற்றும் உதவி ஆணையர் எம். முனீரு அகமது ஆகியோர் நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.


முன்னதாக சுதந்திர தின விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு, விழா மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சியில் 80 வது சுதந்திர தின விழா மேயர் ஜெகன் பெரியசாமி தேசியக் கொடியேற்றினார்

தூத்துக்குடி மாநகராட்சியில் 80 வது சுதந்திர தின விழா மேயர் ஜெகன் பெரியசாமி தேசியக் கொடியேற்றினார்


தூத்துக்குடி: ஆக 15 

இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தின விழா தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

thoothukudileaks


நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் மாநகராட்சி மாமன்ற கவுன்சிலர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றி வரும் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் நற்சான்றிதழ்களை வழங்கினர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தது, அவர்களிடையே மேலும் சிறப்பாக பணியாற்றும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

போதை இல்லா தமிழகம்தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தப் பணியாளர்களுக்கு மராத்தான் போட்டி

 போதை இல்லா தமிழகம்தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தப் பணியாளர்களுக்கு மராத்தான் போட்டி


தூத்துக்குடி: இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் சங்கம் சார்பில் ஒப்பந்தப் பணியாளர்களுக்கான மராத்தான் ஓட்டப் போட்டி “போதை இல்லா தமிழகம்” என்ற தலைப்பில் நடைபெற்றது.

thoothukudileaks


ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற இப்போட்டியை தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர்  பாட்டில் கிருஷ்ணா பப்ருவான், இ.ஆ.ப., தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

thoothukudileaks

thoothukudileaks


இதில் அனல்மின் நிலைய ஒப்பந்தப் பணியாளர்கள் பெருந்திரளாகவும், மிகுந்த உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


மராத்தான் போட்டியில் ...

முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுக் கேடயத்துடன் முறையே ரூ.5,000, ரூ.3,000 மற்றும் ரூ.2,000 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. 


மேலும் 4-வது இடம் முதல் 13-வது இடம் வரை பெற்றவர்களுக்கு தலா ரூ.1,000 ஊக்கப் பரிசாக வழங்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து “பெண்கள் பாதுகாப்பு” என்ற தலைப்பில் ஓவியப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் ஆண், பெண் போட்டியாளர்களுக்கு தனித்தனியாக முதல் மூன்று இடங்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.


பரிசுகளை பெண் ஆளுமைகளைப் போற்றும் வகையில்,...

 காவல் துறை துணைக் கண்காணிப்பாளரும் தூத்துக்குடி அனல்மின் நிலைய பாதுகாப்பு அதிகாரியுமான  கே.கிருஷ்ணவேணி, 

தொழிலக சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறை துணை இயக்குநர்  விமலாதேவி,


 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் அமலாக்க அதிகாரி  அமுதா மற்றும் தெர்மல் நகர் காவல் நிலைய ஆய்வாளர்  சோபா ஜென்சி ஆகியோர் வழங்கினர்.


விழா ஏற்பாடுகளை தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் சங்கத் தலைவர் திரு. அன்புராஜ் ஜெபசிங், செயலாளர் திரு. ஹீரா ஜான் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திரு. சொ. ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.


போட்டிகளை அனல்மின் நிலைய விளையாட்டு அலுவலர் திரு. மங்கள ஜெயபால் தலைமையில் திரு. ராஜா முகமது, திரு. ஜெபராஜ், திரு. சிவகுமார், திரு. முகமது அலி, திரு. பெத்துராஜ் மற்றும் திரு. பிரதிபன் ஆகியோர் சிறப்பாக நடத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் ஒப்பந்தக்காரர்கள் சங்க நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.


தொடர்ந்து தூத்துக்குடி அனல்மின் நிலைய பிரதான நுழைவாயில் பகுதியில் மேடை அமைத்து பரிசளிப்பு மற்றும் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஒப்பந்தப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்.


மேலும், இதுபோன்ற விளையாட்டு மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும், வரும் ஆண்டுகளில் கபடி, கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட கூட்டு விளையாட்டுப் போட்டிகளையும் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஒப்பந்தக்காரர்களும் ஒப்பந்தப் பணியாளர்களும் அண்ணன்–தம்பி என்ற சகோதர பாசத்துடன் பழகி வருவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்த அவர்கள், ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் முயற்சிகளை வெகுவாகப் பாராட்டினர்.


நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து ஒப்பந்தக்காரர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், விளையாட்டு வீரர்கள், விழாக்குழுவினர் மற்றும் போட்டிகளை சிறப்பாக நடத்திய விளையாட்டு அலுவலர் மற்றும் அவரது குழுவினருக்கும் சங்கப் பொருளாளர் திரு. பாக்கியம் நன்றி தெரிவித்தார்.


மேலும், அருண் நர்சரி உரிமையாளர் . கார்த்திக் மற்றும் ஒலி–ஒளி அமைப்புகளை வழங்கிய எஸ்.ஆர். சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர்  மூர்த்தி ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.


போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் விளையாட்டு விழிப்புணர்வை ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, அனல்மின் நிலைய ஒப்பந்தப் பணியாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தூத்துக்குடியில் காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Tamil Nadu updates, 

photo news by Arunan Reporter

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மல்லிகார்ஜுன் கார்கேவை அவமதித்ததாக பாஜகவினருக்கு எதிர்ப்பு

தூத்துக்குடி: ஆக14
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்  மல்லிகார்ஜுன் கார்கே எம்.பி.யை அவமதிக்கும் வகையில் பாஜகவினர் செயல்பட்டதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி ஒன்றாம் ரயில் நிலையம் கேட் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு நடைபெற்ற இந்தியப் தேசிய காங்கிரஸ் தூத்துக்குடி மாநகர் மாவட்ட சார்பில்....

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, காங்கிரஸ் கொடிகளை ஏந்தியபடி பாஜகவினருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

thoothukudileaks


மல்லிகார்ஜுன் கார்கேவை அவமதிக்கும் வகையில் நடைபெற்ற சம்பவத்திற்கு பாஜகவினர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் அவமதிக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



மேலும், ஜனநாயக அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தலைவர்களின் தனிப்பட்ட மரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள்  கலந்து கொண்டனர்.