Tamil Nadu updates
வ.உ.சிதம்பரனார் 155வது பிறந்த நாள்
தூத்துக்குடியில் விசிக சார்பில் மாவட்ட செயலாளர் விமல் வங்காளியார் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி: செப் 5
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்த நாளை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் திருவுருவச் சிலைக்கு இன்று காலை 11.30 மணியளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் விமல் வங்காளியார் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று, வ.உ.சிதம்பரனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாவட்ட செய்தி தொடர்பாளர் பட்டுவளவன் மாவட்ட துணை செயலாளர் தமிழ்குமணன் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ஷாரா.முபாரக்அலி அந்தோணிசாமி இஸ்லாமிய சனநாயக பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் முத்தலிபு தெற்கு பகுதி செயலாளர் சித்திரவிஜயன் இளஞ் சிறுத்தைகள் முத்துவேல் பாண்டியன் ராஜாபாரதி அருண் 36வது வார்டு செயலாளர் தேவநேசம் உள்ளிட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
வீடியோ பார்க்க
தொடர்ந்து, வ.உ.சிதம்பரனாரின் தியாகம், சுதந்திரப் போராட்ட பங்களிப்பு மற்றும் சமூகநலக் கொள்கைகளை நினைவுகூர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.











