சனி, 5 செப்டம்பர், 2026

வ.உ.சி. 155வது பிறந்தநாள்: ஒட்டப்பிடாரத்தில் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

 

வ.உ.சி. 155வது பிறந்தநாள்: ஒட்டப்பிடாரத்தில் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி, செப். 6-

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், 'கப்பலோட்டிய தமிழன்', 'செக்கிழுத்த செம்மல்' எனப் போற்றப்படுபவருமான வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 155வது பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அமைந்துள்ள திருஉருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

thoothukudileaks


இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய முக்கிய தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த வ.உ. சிதம்பரம் பிள்ளை, வழக்கறிஞர், எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் மற்றும் தொழிற்சங்கத் தலைவர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கினார். அவரது 155வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி. நினைவு இல்லத்தில் சிறப்பு மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில், அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என். தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., கழக மகளிர் அணி செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ப. மோகன், கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன், கழக வர்த்தக அணிச் செயலாளரும், தூத்துக்குடி மாநகரக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன், கழக அமைப்புச் செயலாளரும், கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளருமான என். சின்னதுரை உள்ளிட்டோர் வ.உ.சி. திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன், சின்னப்பன், கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் முடிமண் ராமசாமி, மாவட்ட பொருளாளர் சேவியர், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் ஜூலியட், பத்மாவதி, கோவில்பட்டி நகரச் செயலாளர் விஜயபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் எம்.ஆர்.வி. கவியரசன், எம். பெருமாள், டாக்டர் எஸ்.எம்.ஏ. கோசல்ராம்ராஜா, பில்லா விக்னேஷ், ஜாக்சன் துரைமணி, டேக் ராஜா, என்.ஜி. ராஜேந்திரன், ரத்தினராஜ், மாரிமுத்து பாண்டியன், கோடையடி ராமசாமி, வேல்முருகன், சதீஷ்குமார், சரவணகுமார், மோகன், நித்திஷ் கண்ணன், சாமிராஜ், ராஜ்குமார், செல்வம், பாலகணேஷ், கார்த்திக் ராம், அக்ரி மாரிமுத்து, பொன்மலர், மனுவேல் ராஜ், சரவண பெருமாள், நிலாசந்திரன், ஜீவாபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


ஒன்றியச் செயலாளர்கள் அன்புராஜ், பழனிச்சாமி, போடுசாமி, தனஞ்செயன், தனவதி, மகேஷ், பால்ராஜ், ராமசந்திரன், செல்வகுமார், வண்டானம் கருப்பசாமி, லெட்சுமண பெருமாள், காசிராஜன், பால்துரை, பேரூராட்சி கழகச் செயலாளர்கள் ராஜ்குமார், ஆண்டி, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ஆர். ராஜகோபால், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம், பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரைபாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் ஜெயந்தி, ராஜேஸ்வரி, சாந்தி, தமிழரசி, அன்னபாக்கியம், ஜெயபார்வதி, வட்டக் கழகச் செயலாளர் ராஜசேகர், பாலஜெயம், சாம்ராஜ், தளவாய்ராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வ.உ.சி.க்கு மரியாதை செலுத்தினர்.

வ.உ.சிதம்பரனார் 155வது பிறந்த நாள் தூத்துக்குடியில் விசிக சார்பில் விமல் வங்காளியார் மாலை அணிவித்து மரியாதை

 Tamil Nadu updates

வ.உ.சிதம்பரனார் 155வது பிறந்த நாள்

தூத்துக்குடியில் விசிக சார்பில் மாவட்ட செயலாளர் விமல் வங்காளியார் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி: செப் 5
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்த நாளை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

thoothukudileaks


தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் திருவுருவச் சிலைக்கு இன்று காலை 11.30 மணியளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks


நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி  மாநகர்  மாவட்ட  செயலாளர் விமல் வங்காளியார் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று, வ.உ.சிதம்பரனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் மாவட்ட செய்தி தொடர்பாளர் பட்டுவளவன் மாவட்ட துணை செயலாளர் தமிழ்குமணன் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ஷாரா.முபாரக்அலி அந்தோணிசாமி இஸ்லாமிய சனநாயக பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் முத்தலிபு தெற்கு பகுதி செயலாளர் சித்திரவிஜயன் இளஞ் சிறுத்தைகள் முத்துவேல் பாண்டியன் ராஜாபாரதி அருண் 36வது வார்டு செயலாளர் தேவநேசம் உள்ளிட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


வீடியோ பார்க்க 

தொடர்ந்து, வ.உ.சிதம்பரனாரின் தியாகம், சுதந்திரப் போராட்ட பங்களிப்பு மற்றும் சமூகநலக் கொள்கைகளை நினைவுகூர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.


நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 155 வது பிறந்த நாள் விழா வீ தி லீடர்ஸ் சார்பில் தூத்துக்குடியில் சத்தியசீலன் தலைமையில் வ உசி யின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிப்பு

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு வீ தி லீடர்ஸ் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி, செப்.5:

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், தூத்துக்குடி மண்ணின் மைந்தர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 155வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

thoothukudileaks


விடுதலைப் போராட்ட வீரரான வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளை முன்னிட்டு, அரசு சார்பிலும், அதிமுக, திமுக, தவெக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக, போராட்ட அமைப்புகள் சார்பிலும் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 


மேலும், அவரது தியாகம், சுதேசி உணர்வு மற்றும் கொள்கைகளைப் பின்பற்றுவோம் என பல்வேறு அமைப்பினர் உறுதிமொழியும் ஏற்று வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் திருவுருவச் சிலைக்கு, வீ தி லீடர்ஸ் (We The Leaders)  சார்பில் சத்தியசீலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


thoothukudileaks


இந்த நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் அண்ணாமலையின்  வீ தி லீடர்ஸ் அரசியல் அமைப்பின் சார்பில் தூத்துக்குடி யில் உவரி சத்தியசீலன் தலைமையில் ....

அவருடன் அமைப்பின் தொண்டர்கள்  திரளாக கலந்து கொண்டு, வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

வ.உ.சிதம்பரனாரின் விடுதலைப் போராட்ட தியாகம் மற்றும் சுதேசி சிந்தனைகளை நினைவுகூர்ந்த அவர்கள், அவரது உயரிய கொள்கைகளையும், நாட்டுப்பற்றையும் இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

video 

கப்பலோட்டிய தமிழனின் 155வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வீ தி லீடர்ஸ் அமைப்பினர் தொண்டர்கள் புடைசூழ கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. 155வது பிறந்தநாள் தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. 155வது பிறந்தநாள்
தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி, செப்.5:

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மல் எனப் போற்றப்படும் வ.உ. சிதம்பரனாரின் 155வது பிறந்தநாள் விழா இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது.

thoothukudileaks




இதையொட்டி, தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள ஜயா வ.உ. சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கவுன்சிலர்கள் 

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வ.உ. சிதம்பரனாரின் உருவப்படம் மற்றும் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நாட்டின் விடுதலைக்காகவும், சுதேசி கப்பல் இயக்கத்தின் மூலம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகவும் போராடிய வ.உ. சிதம்பரனாரின் தியாகத்தையும், அவரது வீர வரலாற்றையும் நினைவுகூரும் வகையில் அவரது 155வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 155வது பிறந்தநாள் விழா வ உ சி சிலை முன்பு மதுரா கோட்ஸ் அரசு நில மீட்பு குழு பரபரப்பு உறுதி மொழி

Tamil Nadu updates, 

photo news by Arunan Reporter 

மதுரா கோட்ஸ் அரசு நில மீட்பு குழு சார்பில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 155வது பிறந்தநாள் விழா மாலை அணிவித்து மரியாதை; பரபரப்பு உறுதிமொழி!

தூத்துக்குடி, செப்.5:

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், சுதந்திரப் போராட்டத் தியாகி ஐயா வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரா கோட்ஸ் அரசு நில மீட்பு குழு சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

thoothukudileaks








இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏஐசிசிடியூ தேசிய செயற்குழு உறுப்பினர் மின்னல் அம்ஜத், புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரி செல்வம் உள்ளிட்டோர் வ.உ.சி. திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரா கோட்ஸ் அரசு நிலத்தை தமிழக அரசு உடனடியாக மீட்டெடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.

thoothukudileaks


இந்த நிகழ்ச்சியில் தாயக மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஆர். அகமது, தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு மாநிலத் தலைவர் தூத்துக்குடி சம்சுதீன், மக்கள் அதிகார கழக மாவட்ட செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா, தோழர் தமிழ் வேந்தன், இருதய நண்பர்கள் இயக்க மாநில செயலாளர் மா. தங்கையா, பொருளாளர் ஏ. பிரின்ஸ், முன்னாள் மாநகராட்சி உறுப்பினர், எஸ். முகமது ஷாஜகான், அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு பொருளாளர் ஏ. நைனா முகமது, ஏஐசிசிடியூ மாநிலத் துணைத் தலைவர் சகாயம், அய்யாவழி கிருஷ்ணவேணி, அந்தோணியார் கோவில் மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், அரசு நிலத்தை மீட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுக வினர் மாலை அணிவிப்பு

Tamil Nadu updates

 photo news by Arunan Reporter 

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாள் விழா

தூத்துக்குடி, செப்.5:

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தியாகத்தின் உச்சத்தைத் தொட்ட சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசி இயக்கத்தின் முன்னோடியுமான செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாள் விழா இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது.


வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

thoothukudileaks


தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

thoothukudileaks



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மகளிர் அணி,மாநகர, பகுதி மற்றும் வட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

thoothukudileaks




மேலும், அனைத்து சார்பு அணிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட, மாநகர மற்றும் பகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் ஏராளமான தி.மு.க. தொண்டர்களும் பங்கேற்று செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாருக்கு மரியாதை செலுத்தினர்.

புதன், 2 செப்டம்பர், 2026

கோவில்களில் செல்போன் அனைவருக்கும் பாரபட்சம் இன்றி தடை விதிப்பு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு இந்து சேனா மாநிலத் தலைவர் அருள்வேலன் ஜி கோரிக்கை!!!. அர்ச்சகர்கள், அலுவலகப் பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் விஐபிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கக் கூடாது.

இந்து கோவில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு அனைவருக்கும் ஒரே மாதிரியான தடை வேண்டும்

தமிழக அரசுக்கு இந்து சேனா மாநிலத் தலைவர் அருள்வேலன் ஜி கோரிக்கை

தூத்துக்குடி:

தமிழக கோயில்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அமைதியான சூழலில் வழிபடுவதற்காக வருவதாகவும், கோயில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் நடவடிக்கை சரியானதே என்றும் இந்து சேனா தேசிய பேரியக்கத்தின் மாநிலத் தலைவர் அருள்வேலன் ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:

கோயில்களில் பக்தர்களுக்கு மட்டும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து, அர்ச்சகர்கள், அலுவலகப் பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் விஐபிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கக் கூடாது. 


கோயில் வளாகத்திற்குள் அனைவருக்கும் எந்தவித வேறுபாடுமின்றி ஒரே மாதிரியான முழுமையான செல்போன் பயன்பாட்டுத் தடை அமல்படுத்தப்பட வேண்டும்.

thoothukudileaks


 இல்லையெனில் பக்தர்களிடையே வேறுபாடு ஏற்படும் நிலை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், கோயில்களுக்கு வரும் பக்தர்களிடம் தரிசனக் கட்டணம், உடைமைகள் மற்றும் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கான கட்டணம், காலணி வைப்பதற்கான கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவது பக்தர்களுக்கு கூடுதல் சுமையையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

எனவே, கோயில்களில் பக்தர்கள் கட்டணமின்றி தரிசனம் செய்யவும், அவர்களின் பொருட்கள், காலணிகள் மற்றும் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கும் கட்டணமின்றி வசதி செய்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இந்துக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஒட்டுமொத்த இந்துக்களின் சார்பில் தமிழக அரசுக்கு இந்து சேனா தேசிய பேரியக்கத்தின் மாநிலத் தலைவர் அருள்வேலன் ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.