சனி, 22 ஆகஸ்ட், 2026

நாம் ஏதோ பொழுதுபோக்கிற்காக Bore அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல, மக்களுக்காகப் போராட வந்தவர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் எழுச்சியுரை !!!

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

நாம் ஏதோ பொழுதுபோக்கிற்காக (Bore அடிக்கிறது என) அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல, மக்களுக்காகப் போராட வந்தவர்கள்!!!!!

சென்னை: திமுகவை மேலும் வலுப்படுத்தவும், மீண்டும் மக்களின் முழு நம்பிக்கையைப் பெறவும் கட்சி அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

thoothukudileaks


சென்னையில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றிய அவர், வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள தொண்டர்களும் நிர்வாகிகளும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.


கூட்டத்தில் அவர் பேசிய முக்கிய அம்சங்கள்:

  • இளைஞர்கள் மற்றும் பெண்கள் நம்பிக்கை: இளைஞர்கள் மற்றும் பெண்களின் நம்பிக்கையை மீண்டும் முழுமையாகப் பெறும் வகையில் திமுகவின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
  • புதுமுகங்களுக்கு வாய்ப்பு: கட்சி நிர்வாகத்தில் புதுமுகங்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகளவில் பொறுப்புகள் வழங்கி ஊக்குவிக்கப்பட உள்ளனர்.
  • கட்சி மறுசீரமைப்பு: திமுகவை அடிமட்டம் முதல் மறுசீரமைப்பு செய்வதன் மூலமே அரசியல் களத்தில் தொடர் வெற்றிகளைச் சாதிக்க முடியும்.
  • ஒவ்வொரு தொண்டனும் நிர்வாகி: ஒரு மாவட்டச் செயலாளரை மட்டுமே நம்பி மாவட்டத்தில் கட்சியை வளர்த்துவிட முடியாது; ஒவ்வொரு தொண்டனும் ஒரு நிர்வாகியாக உணர்ந்து செயல்படும் போதுதான் இயக்கம் வளரும்.
  • போராட்டக் குணம்: "நாம் ஏதோ பொழுதுபோக்கிற்காக (Bore அடிக்கிறது என) அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல, மக்களுக்காகப் போராட வந்தவர்கள்" என்பதை உணர்ந்து நிர்வாகிகள் சுறுசுறுப்புடன் களப்பணியாற்ற வேண்டும்.

திமுகவின் இந்த மறுசீரமைப்பு அறிவிப்பு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி பார்வையற்றோர் நலச்சங்க விழாவில் ‘திரு இருதய நண்பர்கள்’ சார்பில் நல உதவிகள் வழங்கல்

தூத்துக்குடி பார்வையற்றோர் நலச்சங்க விழாவில் ‘திரு இருதய நண்பர்கள்’ சார்பில் நல உதவிகள் வழங்கல்!

தூத்துக்குடி:

தூத்துக்குடி பார்வையற்றோர் நலச்சங்கம் சார்பில் பார்வையற்றோருக்கான நல உதவி வழங்கல் விழா, பிரையன்ட் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.


இவ்விழாவில் 'திரு இருதய நண்பர்கள்' அமைப்பினர் திரளாகக் கலந்துகொண்டு, பார்வையற்றோருக்குத் தேவையான பல்வேறு நல உதவிகளையும், தங்களது முக்கியப் பங்களிப்பையும் வழங்கினர்.
thoothukudileaks


நிகழ்ச்சியில் '....

திரு இருதய நண்பர்கள்' அமைப்பின் தலைவர் மா. தங்கையா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

அவர் பேசுகையில், "மாற்றுத்திறனாளிகளுக்குக் கரம்கொடுத்து உதவுவது நமது சமூகக் கடமை. அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இதுபோன்ற அமைப்புகள் செய்யும் பணிகள் போற்றத்தக்கவை" எனக் குறிப்பிட்டார்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


விழாவின் நிறைவில் கலந்துகொண்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் சுவையான, தரமான மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பார்வையற்றோர் நலச்சங்க உறுப்பினர்கள், திரு இருதய நண்பர்கள் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

புதன், 19 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடியில் AICCI தேசிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு 2026 கனிமொழி கருணாநிதி எம்.பி. தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் AICCI தேசிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு 2026

கனிமொழி கருணாநிதி எம்.பி. தொடங்கி வைத்தார் 

தூத்துக்குடி, ஆக.20:

தூத்துக்குடியில் AICCI National Startup Summit 2026 தேசிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாட்டின் தொடக்க விழா இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks


இந்த நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

thoothukudileaks


விழாவில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித், IRSME மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ். நாயர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.



thoothukudileaks


தேசிய அளவில் தொழில்முனைவோர், புதிய தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய தொழில் முயற்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சி, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வழிகாட்டுதல்கள் குறித்து மாநாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.



AICCI தேசிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய தொழில் முயற்சிகளுக்கு ஊக்கம் கிடைப்பதுடன், இளைஞர்கள் தொழில்முனைவோராக உருவாகும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



AICCI தலைவர் சங்கர் மாரிமுத்து, AICCI செயலாளர் சுரேஷ் குமார், நேசுரல்ஸ் இணை நிறுவனர் சி.கே.குமாரவேல் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்!


மாநாட்டை ஏற்பாடு செய்யும் குழுவில் சங்கர் மாரிமுத்து, டேவிட் ராஜா, ஜூட்ஸ் பரஞ்சோதி, பின்டோ வில்லவராயர், சுரேஷ் குமார், ஜோ பிரகாஷ், விக்னேஸ்வரன், தினேஷ் கந்தசாமி, ஜோசப் காஸ்கரினோ, பிரேம் பால், பொன்குமரன், தனுஷ் கார்த்திக், பிரேம் வெட்டி, சிசில் மச்சாடோ, மகாலிங்கம், விஸாகேஷ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.




மாவீரன் ஒண்டிவீரன் 255 வது நினைவு நாள் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் வீரவணக்கம்!

மாவீரன் ஒண்டிவீரன் 255-வது நினைவு நாள்: தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் வீரவணக்கம்!

தூத்துக்குடி: ஆகஸ்ட் 20

ஆங்கிலேயரின் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக முதன்முதலில் ஆயுதம் ஏந்திப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரனின் 255-வது நினைவு நாள் இன்று (ஆகஸ்ட் 20) தமிழகம் முழுவதும் உணர்ச்சிப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.



இதையொட்டி, தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சிறப்பு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், திமுக வடக்கு மாவட்டச் செயலாளருமான கீதா ஜீவன் தலைமை தாங்கினார்.




நிகழ்ச்சியில் மாவீரன் ஒண்டிவீரனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.





வரலாற்றுச் சாதனை: பாளையக்காரர் பூலித்தேவனின் படையில் தளபதியாகவும் முக்கிய வீரராகவும் விளங்கிய ஒண்டிவீரன், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கு எதிராக நடைபெற்ற ஆரம்பகால விடுதலைப் போராட்டங்களில் ஈடிணையற்ற துணிச்சலுடன் பங்கேற்றவர். எதிரிகளின் முகாமிற்குள் தனியாகச் சென்று அவர்களின் ஆயுதப் படைப் பிரிவை அழித்து, தனது வீரத்தால் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்தவர் என வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

தலைமுறைகள் கடந்து போற்றப்படும் தியாகம்: நாட்டின் விடுதலைக்காகத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் போராடிய மாவீரன் ஒண்டிவீரனின் வீரத்தையும் தியாகத்தையும் இன்றைய இளைய தலைமுறையினர் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20-ம் தேதி அவரது நினைவு நாள் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இன்றைய நினைவு நாளையொட்டி தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் பச்சேரியில் அமைந்துள்ள அவரது முதன்மை நினைவிடத்திலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அனைத்துத் தரப்பு மக்களும், அரசியல் இயக்கத்தினரும் திரண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.


விடுதலைப் போராட்ட களத்தில் தன் இரத்தத்தைச் சிந்தி தியாகம் செய்த மாவீரன் ஒண்டிவீரனின் 255-வது நினைவு நாளில் அவரது புகழையும் தியாகத்தையும் போற்றி வீரவணக்கம் செலுத்துவோம்!

மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைப்பு தூத்துக்குடியில் பிரம்மாண்ட நிகழ்வு!


மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைப்பு தூத்துக்குடியில் பிரம்மாண்ட நிகழ்வு!

தூத்துக்குடி, ஆக. 19: தூத்துக்குடி கலைஞர் அரங்கில் இன்று (19.08.2026) மாலை 6 மணியளவில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளருமான கீதா ஜீவன் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) தங்களை இணைத்துக் கொண்டனர்.

thoothukudileaks

thoothukudileaks


முஸ்லிம் லீக் நிர்வாகிகள் திரளாக இணைப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி இயக்கத்திற்கு (தவெக) ஆதரவு தெரிவித்து முடிவெடுத்தது. இந்த முடிவால் எழுந்த கொள்கை முரண்பாடுகள் காரணமாக, தமிழகம் முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் இடையே பெரும் கொந்தளிப்பும் அசௌகரியமும் நிலவி வந்தது.

இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், முக்கிய உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், கட்சியின் முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிலிருந்து விலகினர்.

thoothukudileaks


இன்று மாலை நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், அவர்கள் அனைவரும் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் சேர்ந்தனர். 


புதிய உறுப்பினர்களுக்குக் கழகச் சால்வை அணிவித்து, திமுகவின் கொள்கைப் பாதையில் உறுதியோடு பயணிக்க வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட, நகர மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகள், தோழர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடி மாநகராட்சியில் தீவிர கொசுப்புழு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாம்!


தூத்துக்குடி மாநகராட்சியில் தீவிர கொசுப்புழு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாம்!

395 கிலோ கொசு உற்பத்தி கழிவுகள் அகற்றம் — வீடுகளுக்கே சென்று பரிசோதிக்க மருத்துவ குழுக்கள் அமைப்பு

தூத்துக்குடி: வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் மற்றும் தீவிர காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்  சி. பிரியங்கா, இ.ஆ.ப.  உத்தரவின் பேரிலும், மாநகர நல அலுவலரின் வழிகாட்டுதலின்படியும் மாநகராட்சி களப்பணியாளர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தீவிர தூய்மைப் பணிகளிலும் தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

thoothukudileaks


395 கிலோ கொசு உற்பத்தி கழிவுகள் அகற்றம்:

கடந்த 16.08.2026 ஞாயிற்றுக்கிழமையன்று மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 18 (பிரிவு 12)-ல் உள்ள ராஜகோபால் 10-வது தெரு பகுதியில் தீவிர கொசு உற்பத்தி மூலங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. அப்பகுதியில் உள்ள 132 குடியிருப்பு வீடுகள், 11 காலி மனைகள் (Vacant Land) மற்றும் அதைச் சுற்றியுள்ள 2 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட பகுதிகளில் பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

thoothukudileaks


இப்பணியின் போது:

  • பிளாஸ்டிக் பாட்டில்கள் & ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்புகள்
  • தேங்காய் ஓடுகள் (சிரட்டைகள்), இளநீர் கூடுகள்
  • பழைய சைக்கிள் & இருசக்கர வாகன டயர்கள்
  • பாக்கு மட்டை தட்டுகள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள்
  • பெயிண்ட் டப்பாக்கள், வண்ணப்பூச்சு பாட்டில்கள், ஆயில் கேன்கள்
  • பழைய காலணிகள், பிரியாணி & சால்னா டப்பாக்கள்

ஆகிய கொசு உற்பத்தி காரணிகள் (Source Reduction) கண்டறியப்பட்டு 395 கிலோ அளவுக்கு கழிவுகள் அகற்றப்பட்டன.

thoothukudileaks

thoothukudileaks


குடிநீர் பரிசோதனை & புகையடிக்கும் பணி:

மாநகரப் பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு சரியான முறையில் உள்ளதா என்பது குறித்து தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், மேற்கு மண்டலப் பகுதிகளில் 'Indoor / Outdoor Fogging' (புகையடிக்கும் பணி) தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

thoothukudileaks


வீடு வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை:

17.08.2026 அன்று ராஜகோபால் நகர் 10-வது தெருவில் பி.எம்.என்.டி காலனி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் நேரில் சென்று வீடு வீடாக பரிசோதனை மேற்கொண்டனர். பொதுமக்களுக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் உள்ளனவா என்று தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன.

மாநகராட்சி ஆணையர் கோரிக்கை: "இந்த கொசுப்புழு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்புப் பணிகள் மாநகராட்சியின் அனைத்து வார்டு பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற உள்ளது. எனவே, ஆய்வு செய்ய வரும் மாநகராட்சி களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்." — . சி. பிரியங்கா, இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர்.

தூத்துக்குடியில் கைம்பெண்கள் நல்வாழ்வு சங்க பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடியில் கைம்பெண்கள் நல்வாழ்வு சங்க பொதுக்குழு கூட்டம் விமரிசையாக நடைபெற்றது!

தூத்துக்குடி, ஆக. 17:

தூத்துக்குடி மாவட்ட கைம்பெண்கள் நல்வாழ்வு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

thoothukudileaks


தூத்துக்குடி அமைந்தகரை தொழிற்கூடக் கட்டிடத்தில் நேற்று (16.08.2026, ஞாயிற்றுக்கிழமை) மாலை 5:00 மணியளவில் இக்கூட்டம் நடைபெற்றது. 

thoothukudileaks


கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவி  R. சங்கீதாரமேஷ் தலைமை தாங்கினார். சங்க ஆலோசகர்  இரா. மாடசாமி முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்கள்:

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக:

 தமிழ்நாடு அகத்தியர் சங்க மாவட்டத் தலைவர் M. ராஜ்

 ஓய்வுபெற்ற கான்வென்ட் பள்ளி ஆசிரியை  தேவகி

 மின்னல் அம்ஜித்

ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சங்க நிர்வாகிகள் உரை:

கூட்டத்தில் சங்கச் செயலாளர்  வேளாங்கண்ணி, துணைத் தலைவர்கள்  M. பொன்னி, J. நிர்மலா மற்றும் இணைச் செயலாளர்  N. இந்துமதி ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினர்.

thoothukudileaks


இக்கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சிக்கான முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. இதில் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.