வியாழன், 18 ஜூன், 2026

ஜூலை 1 முதல் திருக்கோயில்களில் கைபேசி பயன்பாட்டிற்கு தடை திருச்செந்தூரில்..?

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

அருணன் செய்தியாளர் 


திருச்செந்தூர், ஜூன் 18:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் கைபேசி பயன்படுத்துவதற்கு வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது பற்றிய செய்தியாவது ;-

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தற்போது!!!

ஏற்கனவே கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் திருக்கோயில்களில் கைபேசி பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவை முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளன.

thoothukudileaks


சேவைகள்!!!

பக்தர்களின் அவசர பயன்பாட்டிற்காக கோயில் வளாகத்தில் பொதுஅறிவிப்பு (Public Addressing System) வசதி, ஒலிபெருக்கிகள், மின்கல ஊர்திகள் மற்றும் சக்கர நாற்காலி உள்ளிட்ட சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மொபைல் டெபாசிட் கவுண்டர்!!!

மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது கைபேசிகளை பாதுகாப்பாக ஒப்படைத்து வைக்க கோயில் வளாகத்தில் சிறப்பு மொபைல் டெபாசிட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

மொபைல் வைக்க கட்டணம் ரசீது !!!

கைபேசி ஒப்படைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பக்தர்கள் தங்களது கைபேசிகளை பாதுகாப்பாக ஒப்படைத்து, சுவாமி தரிசனத்தை அமைதியான முறையில் மேற்கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

புதிய நடைமுறை ஜூலை 1, 2026 முதல் முழுமையாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

thoothukudileaks
தூத்துக்குடி லீக்ஸ் க்காக

செய்தியாளர் அருணன் 

வளர்ச்சி நிதி குலுக்கல் திட்ட முதல் பரிசு கார் பெற்ற தூத்துக்குடி வியாபாரிக்கு சிறப்பு பாராட்டு

 Tamil Nadu updates news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 18:

சுதேசி நாயகன் த.வெள்ளையன் உருவாக்கிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, வியாபாரிகளின் நலன் மற்றும் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 

thoothukudileaks


ஆன்லைன் வர்த்தக கட்டுப்பாடு, அந்நிய பொருட்களுக்கு எதிர்ப்பு மற்றும் சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கொள்கைகளை முன்னிறுத்தி, உள்ளூர் வணிகர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பணியில் பேரவை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

த.வெள்ளையன் மறைவுக்குப் பின்னரும் அவரது வழிகாட்டுதலின்படி பேரவை தனது பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.


 இதன் ஒரு பகுதியாக கடந்த மே 5ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற்ற 43வது மாநில மாநாடு மாநிலத் தலைவர் எஸ்.சௌந்தர்ராஜன், மாநில பொதுச் செயலாளர் மெஸ்மர் காந்தன் வெள்ளையன் மற்றும் மாநில பொருளாளர் எஸ்.பீர் முகமது ஆகியோரின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

முதல் பரிசு கார் !!!

அம் மாநாட்டையொட்டி அறிவிக்கப்பட்ட வளர்ச்சி நிதி குலுக்கல் திட்டத்தின் முதல் பரிசான கார், தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகர் கிளை வியாபாரிகள் சங்க உறுப்பினரும் சிறு ஹோட்டல் தொழிலதிபருமான வி.ரவிக்குமாருக்கு கிடைத்தது.


இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை (ஜூன் 18) காலை தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...

thoothukudileaks


, மாநில துணைத் தலைவர் பொன்.தனகரன், த.பாஸ்கர், மாநில இணைச் செயலாளர் எச்.வில்லியம்ஸ் மஸ்கர்னாஸ், ஜெ.ஜவஹர் மற்றும் ஆர்.விக்னேஷ் ஆகியோர் முன்னிலையில் வி.ரவிக்குமாருக்கு முதல் பரிசுக்கான கார் வழங்கப்பட்டது.

thoothukudileaks


நிகழ்ச்சியில் மில்லர்புரம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆனந்தசேகரன், ஸ்பிக் நகர் வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் சின்னதங்கம், பர்னிச்சர் சங்கத் தலைவர் ரத்னா தர்மராஜ், வட்டத்தெப்பம் பகுதி வியாபாரிகள் சங்கத் தலைவர் சரவணமூர்த்தி, பாளை ரோடு பாதுகாப்பு சங்கத் தலைவர் பாக்யா மணி, ஜவுளி மற்றும் ரெடிமேட் வியாபாரிகள் சங்க செயலாளர் ஜெயசுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தெர்மல் நகர் வியாபாரிகள் சங்க செயலாளர் மூர்த்தி நன்றி கூறினார். சங்க பொருளாளர் அங்குசாமி, துணைச் செயலாளர் தேவ ஆனந்த், துணைத் தலைவர் முஸ்தபா மற்றும் ஏராளமான வியாபாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

thoothukudileaks



இந்நிகழ்வைத் தொடர்ந்து ...

மாவட்டத் தலைவர் தெர்மல் சொ.ராஜா பேசுகையில், 


“சுதேசி நாயகன் த.வெள்ளையன் உடலால் நம்மிடையே இல்லாவிட்டாலும், அவர் காட்டிய பாதையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தொடர்ந்து செயல்பட்டு வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அரணாகவும், சொன்னதைச் செய்யும் அமைப்பாகவும் திகழ்கிறது” என்றார்.

thoothukudileaks

thoothukudileaks


புதன், 17 ஜூன், 2026

தூத்துக்குடியில் ரூ.38,000 கோடி கப்பல் கட்டுமானத் திட்டம்: 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

Tamil Nadu updates, news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 17:

தூத்துக்குடியில் சுமார் ரூ.38,000 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள மிகப்பெரிய கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக, தென் கொரியாவின் முன்னணி நிறுவனமான HD Korea Shipbuilding & Offshore Engineering (HD KSOE) நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழு தமிழ்நாடு முதலமைச்சர்  ஜோசப் விஜய் சென்னையில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

thoothukudileaks


தூத்துக்குடி மாவட்டத்தில் அமையவுள்ள இந்தக் கப்பல் கட்டுமானத் திட்டத்தின் மூலம் சுமார் 15,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், துணைத் தொழில்கள் மற்றும் சேவைத் துறைகள் மூலம் ஆயிரக்கணக்கான மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ்நாடு அரசு மற்றும் HD KSOE நிறுவனம் இடையே ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாகியுள்ள நிலையில், திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் செயல்பாட்டு அம்சங்கள் குறித்து நடைபெற்ற ஆலோசனையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்தத் திட்டம் சிப்காட் (SIPCOT) மற்றும் வ.உ.சி. துறைமுக ஆணையத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. 


மேலும், National Shipbuilding & Heavy Industries Park Tamil Nadu Limited (NSHIPTN) நிறுவனம் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

thoothukudileaks


திட்டத்திற்குத் தேவையான அனுமதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் முதலீட்டு முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சருடன் விரிவான ஆலோசனை நடைபெற்றது.


 தூத்துக்குடி துறைமுகத்தின் வளர்ச்சி, தொழில்துறை முன்னேற்றம் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இந்தத் திட்டம் முக்கிய பங்காற்றும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்பில் தமிழ்நாடு தொழில்துறைத் துறை அதிகாரிகள், TIDCO, SIPCOT மற்றும் HD KSOE நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தூத்துக்குடியை தென்னிந்தியாவின் முக்கிய கப்பல் கட்டுமான மையமாக மாற்றும் வகையில் இந்தத் திட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடியில் சுமார் ரூ.38,000 கோடி முதலீட்டில் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். ச. ஜோசப் விஜய் அவர்களுடன் HD ஹுண்டாய் நிறுவனத்தின் (HD Korea Shipbuilding & Offshore Engineering – HD KSOE) உலகளாவிய வணிகப் பிரிவு இயக்குநர் . யங் ஹூன் குவான் ( Young Hoon Kwon) தலைமையிலான உயர்மட்ட அலுவலர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.


திங்கள், 15 ஜூன், 2026

சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள பரபரப்பு அறிக்கை. ஸ்ரீவைகுண்டம் வழக்கில் அரசியல் அழுத்தமின்றி நடுநிலையான விசாரணை தேவை நடந்தது என்ன? இரண்டு பெண்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி Tamil Nadu updates

 photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 15:

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக அரசியல் அழுத்தமின்றி, நடுநிலையான மற்றும் சட்டப்படியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

thoothukudileaks




இதுகுறித்து ..

சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


பாலியல் குற்றச்சாட்டு எதுவாக இருந்தாலும் அது சட்டப்படி, மரியாதையுடன் மற்றும் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அவர்களின் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும்.


மனித நேயம்!!!

அதேநேரத்தில், விசாரணை நிறைவடைவதற்கு முன்பே ஒரு குடும்பத்தையே குற்றவாளி குடும்பமாக சித்தரிப்பதும், பெண்களை சமூகத்தில் அவமானப்படுத்துவதும், அரசியல் மோதல்களுக்குள் சாதாரண குடும்பங்களை இழுத்துச் செல்லுவதும் சட்டநீதிக்கும் மனிதநேயத்திற்கும் எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


யார் குற்றவாளி, யார் குற்றமற்றவர் !!! நீதி மன்றம் தான் முடிவு செய்யும்!!!

இந்த வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான அரசியல் மோதலாக விவகாரத்தை மாற்றும் முயற்சிகள் கவலை அளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 


யார் குற்றவாளி, யார் குற்றமற்றவர் என்பதை முடிவு செய்ய வேண்டியது ஊடகங்களோ, அரசியல் மேடைகளோ அல்ல; காவல்துறையின் விசாரணையும் நீதிமன்றத்தின் தீர்ப்பும்தான் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


மன உளைச்சல் !!!

மேலும், அரசியல் பேட்டிகள் மற்றும் சமூக வலைதள விவாதங்களால் பாலசுப்பிரமணியன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் சமூக அவமானத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


குற்றம் சாட்டப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்கள் சமூக தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படக் கூடாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


சம்பந்தபடாத ஒரு பெண்ணின் பெயரும் இந்த வழக்குடன் தொடர்புபடுத்தி பேசப்படுவதாக கூறப்படும் நிலையில், தனக்கு எந்த பாலியல் குற்றமும் நடைபெறவில்லை என்றும், தனது பெயரை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் தெரிவித்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு !!!

அவரது வாக்குமூலம் காவல்துறை அல்லது நீதித்துறை நடுவர் முன்னிலையில் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், அவருக்கு எந்த தரப்பிலிருந்தும் மிரட்டல், அழுத்தம் அல்லது அவதூறு ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.


"நாங்கள் யாரையும் காப்பாற்ற வரவில்லை. யாரையும் முன்கூட்டியே குற்றவாளி என்றும் கூற வரவில்லை. அரசியல் அழுத்தமில்லாத, ஊடக விசாரணை இல்லாத, நடுநிலையான சட்ட விசாரணை நடைபெற வேண்டும் என்பதே எங்களின் ஒரே கோரிக்கையாகும்" என்று டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

உண்மையை கண்டறிய வேண்டும்!!!

மேலும், பாலியல் வழக்குகளில் புகார் அளித்தவரின் அடையாளமும் மரியாதையும் பாதுகாக்கப்பட வேண்டும். அதேபோல், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பப் பெண்கள் மற்றும் சாட்சிகளாக முன்வரும் பெண்களும் அவமானப்படுத்தப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


அரசியல் கருத்து வேறுபாடுகளின் பெயரில் குடும்ப உறுப்பினர்களும் பெண்களும் பாதிக்கப்படக் கூடாது என்றும், காவல்துறை எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் இடமளிக்காமல் சட்டத்தின் அடிப்படையில் உண்மையை கண்டறிய வேண்டும் என்றும் சட்ட உரிமைகள் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.


பாக்ஸ் செய்தி

இரண்டு பெண்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்ற எண் 20/2026 வழக்கு தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டு பெண்கள் தனித்தனியாக மனு அளித்துள்ளன

ஒருவர் 

 தனது மனுவில், தனக்கு எந்தவிதமான பாலியல் துன்புறுத்தல் சம்பவமும் நடைபெறவில்லை என்றும், தனது பெயரை பயன்படுத்தி பொய்யான தகவல்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் மீடியாக்களில் பரப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பொய்யான வாக்குமூலம் அளிக்க மிரட்டல், ஆசை வார்த்தைகள் கூறி தூண்டுதல், அவதூறு பரப்புதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். தனது உண்மை வாக்குமூலத்தை சட்டப்படி பதிவு செய்து, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


இதேபோல்,

மற்றொரு ஒருவர் 

 தனது மனுவில், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாலசுப்பிரமணியனின் மனைவி எனத் தெரிவித்ததுடன், வழக்கு தொடர்பாக அரசியல் அழுத்தம், மீடியா பேட்டிகள் மற்றும் சமூக வலைத்தள அவதூறுகளால் தனது குடும்பத்தினர் மனஉளைச்சலுக்கும் சமூக அவமானத்திற்கும் ஆளாகி வருவதாக கூறியுள்ளார்.

 தாமதம் ஏன்???

மேலும், புகாரின் பின்னணியில் பணப் பரிவர்த்தனை தொடர்பான விவகாரங்கள் உள்ளனவா என்பதையும், புகார் அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணங்களையும் நடுநிலையாக விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்த வழக்கில் உண்மை நிலை சட்ட விசாரணை மற்றும் நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே வெளிவர வேண்டும் என்றும், தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரு மனுக்களிலும், எந்தவிதமான அரசியல் அழுத்தமும் இன்றி, நடுநிலையான மற்றும் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

.

ஞாயிறு, 14 ஜூன், 2026

தவெக மாவட்டச் செயலாளர்களுக்கு தலைமை அறிவுரை: அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என முதல்வர் எச்சரிக்கை

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

சென்னை, ஜூன் 14:

தவெக கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று பனையூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர், கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு முக்கிய அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

thoothukudileaks


கூட்டத்தில் பேசிய முதல்வர், "ஒயின்ஷாப் பார் லைசன்ஸ் எடுக்கிறேன், காவல் நிலையங்களில் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்கிறேன் என்ற பெயரில் எந்தவித அடாவடி செயல்களிலும் யாரும் ஈடுபடக்கூடாது" என கடுமையாக அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், ...

"உள்ளூர் அளவில் செல்வாக்கு மிக்க நபர்கள் பல்வேறு சிபாரிசுகள் மற்றும் ஆதரவுகளுக்காக பணம் வழங்க முயற்சிக்கலாம். அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டாம். மேல்மட்டத்தில் உள்ள அமைச்சர்கள் யாரும் கமிஷன் பெறமாட்டார்கள். தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதனால் பாதிக்கப்படுவது நீங்களாகவே இருப்பீர்கள்" என எச்சரித்தார்.


அத்துடன், "மக்களின் கோரிக்கைகள் மற்றும் நலத் திட்டங்கள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆனால், சிபாரிசுகளுக்காக தனிநபர்களை அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும்" என்றும் முதல்வர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

thoothukudileaks


கட்சி நிர்வாகிகள் மக்கள் நலன் சார்ந்த பணிகளில் முழு கவனத்துடன் செயல்பட்டு, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

.

வியாழன், 11 ஜூன், 2026

கயத்தாறு அருகே இளம் பெண் மரணம்: "ஆணவக் கொலை" என பரவும் whatsapp தகவல்களுக்கு காவல்துறை மறுப்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

 Tamil Nadu updates,

தூத்துக்குடி, ஜூன் 11:

கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு மயிலோடை பகுதியில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட இணைய தளங்களில் "ஆணவக் கொலை" நடைபெற்றதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் பரவி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில், ..

தெற்கு மயிலோடை பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர் கடந்த ஜூன் 9-ஆம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து, கயத்தாறு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணை, உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், உயிரிழந்த இளம் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது தாய் எஸ்தர் பாலின் (36) மற்றும் சகோதரர் சிவஞானம் (20) ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்

thoothukudileaks

.

விசாரணையில்,...

 உயிரிழந்த இளம் பெண் சமூக வலைதளத்தின் மூலம் ஒருவருடன் பழகி வந்தது தொடர்பாக குடும்பத்தில் ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக இச்சம்பவம் நடைபெற்றது தெரியவந்ததாக கூறப்பட்டுள்ளது. 

இளம் பெண் கொலை வழக்கு!!!

மேலும், சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், இளம் பெண்ணின் மரணத்தில் அவரது தாய் மற்றும் சகோதரருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.


மேலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இச்சம்பவம் "ஆணவக் கொலை" என உறுதிப்படுத்தும் வகையிலான எந்தவித ஆதாரமும் கண்டறியப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

வதந்தி பரவியது!!!

 எனவே சமூக வலைதளங்களில் பரவி வரும் "ஆணவக் கொலை" குறித்த தகவல்கள் உறுதி செய்யப்படாதவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

thoothukudileaks


உறுதி செய்யப்படாத மற்றும் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவது பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடிய செயலாகும். இதுபோன்ற வதந்திகள் மற்றும் பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. :::

புதன், 10 ஜூன், 2026

தூத்துக்குடி பனிமய அன்னை ஆலய திருவிழாவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்க வேண்டும்; மக்கள் எதிர்பார்ப்பு

Tamil Nadu updates 10-6-2026

photo news Dias

by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 10:

தூத்துக்குடி மாநகரின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் புனித பனிமய அன்னை பேராலயத்தின் ஆண்டு திருவிழாவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்று, அன்னையின் அருளைப் பெற வேண்டும் என தூத்துக்குடி மக்கள் அன்போடு எதிர்பார்த்து வருகின்றனர்.

thoothukudileaks


உலகப் புகழ்பெற்ற பனிமய அன்னை பேராலய திருவிழா, வரும் ஜூலை 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, இலங்கை, சவுதி அரேபியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் பக்தர்களும் திரளாக பங்கேற்று வழிபடுவது வழக்கம்.

திருவிழா!!!

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தங்கத் தேர் பவனி, தூத்துக்குடி மாநகரின் முக்கிய வீதிகளில் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெறும். இந்த அரிய நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது குறிப்பிடத்தக்கது.


மேலும், பார் போற்றும் திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் தாயின் கொடியேற்ற நிகழ்வு, 2026 ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முதல்வரின் குடும்ப 🫜 வேர்கள்!!!

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் குடும்ப வேர்கள் தூத்துக்குடி மாவட்டத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நிலையில், அவர் தனது சொந்த மண்ணாக கருதப்படும் தூத்துக்குடிக்கு வருகை தந்து, பனிமய அன்னை பேராலய திருவிழாவில் ஏதேனும் ஒரு நாளில் கலந்து கொண்டு தரிசனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வீடியோ பார்க்க ...

அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் தூத்துக்குடி மக்கள் தங்களின் பேராதரவை வழங்கியுள்ள நிலையில், ...

அந்த அன்புக்கு நன்றிக்கடனாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தூத்துக்குடிக்கு வருகை தருவார் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவுகிறது.

அழைப்பு!!!

மேலும், பனிமய அன்னை பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜாண் செல்வம், தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து திருவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் ஆர்வத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


"THOOTHUKUDI WELCOMES cm JOSEPH VIJAY" என்ற வாசகத்துடன், பனிமய அன்னையின் அருள்பெற தமிழக முதலமைச்சர் தூத்துக்குடி வர வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பாக உள்ளது.