வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி கலெக்டர் புகைப்படம் மூலம் ஆன்லைன் மோசடி முயற்சி 21 வயது இளைஞர் கைது நடந்தது என்ன ?

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடி, பிப். 13:

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி போலியான வாட்ஸ்அப் கணக்குகள் உருவாக்கி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட முயன்ற இளைஞரை தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

thoothukudileaks


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நடித்து, அவர்களின் புகைப்படத்தை Display Picture ஆக வைத்து பல போலியான வாட்ஸ்அப் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரின் தனிப்பட்ட உதவியாளர் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இக்கணக்குகள் மூலம் பொதுமக்களிடம் பணம் கோரப்பட்டதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சைபர் கிரைம் விசாரணை 

புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) தீபு மேற்பார்வையில், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி மற்றும் போலீசார் தொழில்நுட்ப ரீதியான தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

உத்தரப்பிரதேச இளைஞர் கைது – சைபர் குற்றப்பிரிவு அதிரடி நடவடிக்கை


விசாரணையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அனுஜ் குமார் (21) என்பவர், மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி பல போலியான வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கி, பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

சிறை !!!

இதனையடுத்து, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 09.02.2026 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சென்று அனுஜ் குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் 12.02.2026 அன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி போலியான கணக்குகள் மூலம் மோசடி செய்ய முயன்ற குற்றவாளியை தடயவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் மூலம் கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் பாராட்டினார்.

thoothukudileaks


பொதுமக்களுக்கு எச்சரிக்கை:

அரசு அதிகாரிகளின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பணம் கோரப்பட்டால் உடனடியாக சைபர் குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இச் செய்தியில் ...

செயற்கை தொழில்நுட்பம் பயன் படுத்தப்பட்ட புகைப்படம் (மாதிரி )

தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடியில் 7 கல்லூரிகளை சேர்ந்த 150 பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் பரபரப்பு

Tamil Nadu updates  photo news by Arunan journalist 

தூத்துக்குடி, பிப்.13:

அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டிற்கான ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடியிலும் இன்று பரபரப்பான போராட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


கல்லூரி ஆசிரியர்களுக்கான பணி மேம்பாட்டிற்கான அரசாணை எண் 5 கடந்த 11.01.2021 அன்று வெளியிடப்பட்டது. 


இதன்படி அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு 5 ஆண்டுகள் கடந்தும், பணி மேம்பாடு ஆணை வழங்கப்பட்ட நிலையிலும், ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்படாமல் வாய் மொழி உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

thoothukudileaks


கடந்த டிசம்பர் மாதம் உயர்கல்வித்துறை அமைச்சரை சந்தித்தபோது, ஜனவரி மாத ஊதியத்தில் தொகை சேர்க்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், ஜனவரி மாத சம்பளத்தில் அது சேர்க்கப்படவில்லை. இதனை கண்டித்து மூட்டா மற்றும் ஏயூட்டி அமைப்புகளின் சார்பில் கடந்த 16 நாட்களாக தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

thoothukudileaks


இதனையடுத்து, 05.02.2026 அன்று உயர்கல்வித்துறை அமைச்சர் சங்க பொறுப்பாளர்களை அழைத்து பேசி, பிப்ரவரி மாத சம்பளத்தில் தொகை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் ஒரு வாரம் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாததை கண்டித்து, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் மூட்டா மூன்றாம் மண்டல பொருளாளர் லெனின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. TNGEA மாநில துணைத் தலைவர் முருகன் தொடக்க உரையாற்றினார். மூட்டா மத்திய இணைப் பொதுச் செயலாளர் சிவஞானம் ஆர்ப்பாட்டத்தின் நோக்க உரையாற்றினார்.

TNPTF மாவட்ட செயலாளர் ஆனந்தி, TANSTAC மண்டல செயலாளர் கணேசன், SFI மாவட்ட செயலாளர் ராம்குமார் ஆகியோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர். TNGEA மேனாள் இணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன் நிறைவுரையாற்றினார். மூன்றாம் மண்டல செயற்குழு உறுப்பினர் வேல்குமார் நன்றியுரை ஆற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 7 கல்லூரிகளைச் சேர்ந்த 150 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்குவதோடு, அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வியாழன், 12 பிப்ரவரி, 2026

பின்னணியில் நடந்தது என்ன?முதல்வரின் அதிரடி அறிவிப்பு: மகளிருக்கு ₹5000 - எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ்  photo news by Arunan journalist 

தூத்துக்குடி, பிப்ரவரி 13, 2026

தமிழ்நாடு முதல்வரின் இன்றைய காலை அதிரடி அறிவிப்பு எதிர்க்கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ₹3000 மற்றும் கோடை சிறப்பு தொகுப்பாக ₹2000 என மொத்தம் ₹5000 இன்று காலை 6 மணி முதல் 1.5 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

thoothukudileaks




பின்னணியில் நடந்தது என்ன?

உள்துறை உளவுத்துறை அறிக்கைகளின்படி, மகளிர் உரிமைத்தொகையை நிறுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு இத்திட்டத்திற்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் கசிந்தது.

இந்த முக்கிய தகவல் தமிழ்நாடு உளவுத்துறையால் நேற்று காலையே கண்டறியப்பட்டு முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது.

அவசர ஆலோசனைகள்

நேற்று மதியம் சென்னை செனட்டாப் சாலையில் முதல்வர், துணை முதல்வர், நிதியமைச்சர் மற்றும் நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் நீண்ட நேர ஆலோசனை நடத்தினர். இரவு முழுவதும் செயலக கட்டடத்தில் விளக்குகள் எரிந்தன. முக்கிய அதிகாரிகள் தொடர்ந்து வந்து போய்க் கொண்டிருந்தனர்.

அதிகாலை திருப்பம்

இன்று அதிகாலை 5 மணிக்கு முதல்வர், நிதியமைச்சர், துணை முதல்வர் ஆகியோர் மீண்டும் ஆலோசனை நடத்தினர். நிதியமைச்சர் மூன்று மாதங்களுக்கான ₹3000 வழங்கும் திட்ட வரைவை தயாரித்து முதல்வரிடம் அளித்தார்.

அப்போது முதல்வர் தனது கையெழுத்துடன் ஒரு முக்கிய திருத்தத்தை செய்தார் - கோடை சிறப்பு தொகுப்பாக ₹2000 கூடுதலாக வழங்கி மொத்தம் ₹5000 வழங்க வேண்டும் என்று.

மேலும் ஒரு அறிவிப்பு

இதோடு நின்றுவிடாமல், முதல்வர் தனது தனிப்பட்ட கோரிக்கையாக, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவர் கனிமொழிக்கு ஒரு கடிதம் அனுப்பி, மகளிர் உதவித்தொகை இனி மாதம் ₹2000 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.

நிதி ஒதுக்கீடு

மொத்தம் ₹7500 கோடி இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 1.5 கோடி பெண்களுக்கு இன்று காலை 6 மணியிலிருந்து வங்கிக் கணக்குகளில் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் நிலை

அதிமுக, பாஜக, தவெக கூட்டணி கட்சிகள் இந்த அறிவிப்பால் திகைப்பில் ஆழ்ந்துள்ளன. காலை 10 மணிக்கு நீதிமன்றம் தொடங்குவதற்கு முன்பே நடவடிக்கை முடிந்துவிட்டதால், தடை பெறுவதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.


"நடந்த விபரம் சுவாரஸ்யமான பிண்ணனி!!!

அமெரிக்கா கண்ணிலே மண்ணை தூவிட்டு அப்துல் கலாம் பொக்ரான்ல அணுகுண்டு சோதனை செஞ்சார், மிலிட்டரி யூனிஃபார்ம் போட்டுகிட்டு பாலைவனத்திலே நடந்தே போனார், நைசாப்போய் அனு குண்டை வெடிச்சுட்டார்....

இதல்லாம் பழைய கதை.

இன்று காலை தமிழ்நாட்டிலே முதல்வர் அறிவிப்பு குண்டு தான் அதிமுக பாஜக தவெக கூட்டணிக்கு வயிற்றில் புளியை அல்ல... ஆசீட்டை கரைத்து விட்டது.

""மகளிர் உரிமைத்தொகை''

எந்தந்த காரணங்களால் திமுக 200/234 அடிக்கும் என் ஒன்றிய உளவுத்துறை ஒன்றிய உள்துறைக்கு கொடுத்த ரிப்போர்டில் 1.மகளிர் உரிமைத்தொகை 1. மகளிர் விடியல் பயணம்.

மகளிர் விடியல் பயணத்தை ஒன்னும் செய்யவே முடியாது. இந்த மாதாமாதம் அரசாங்கம் வழங்கும் 1000₹ உரிமைத்தொகையை முடக்குவதற்கு என்னென்ன செய்யலாம் என யோசித்தது.

1.யாரையாவது வைத்து மகளிர் உரிமைத்தொகை விரய செலவு என சொல்லி கேஸ் போட்டு அதற்கு உச்ச நீதிமன்றம் வழியே தடை வாங்கி விடுவது.
2. தமிழ்நாடு அரசுக்கு நியாயமாக கொடுக்க வேண்டிய நிதி பகிர்வை ஜீரோ ஆக்கி திண்டாட வைப்பது.

இன்னும் பல யோசனைகள் செய்து வைத்து பொதுநல கேஸ் போடுவது என முடிவானாதாக சொல்கிறார் கள்.

இன்று வெள்ளிக்கிழமை அதாவது இன்றைக்கு 13.02.2026 காலை 10.00 மணிக்கு கேஸ் போட ஒரு அண்ணாச்சி தரப்பு தயார் நிலையில்.... அதாவது அடுத்து சனி, ஞாயிறு கோர்ட் லீவ்... ஸ்டே வெக்கேட் கூட செய்ய இயலாது.

இதையெல்லாம் நேற்று காலையே மோப்பம் பிடித்த தமிழ்நாடு உளவுத்துறை முதலமைச்சரிடம் சொல்ல அடுத்த நிமிடம் பசுமை வழிச்சாலையில் குறிஞ்சி இல்லமும், சூரியகாந்தியும் கூடிப்பேசின. குறிஞ்சியும், சூரியகாந்தியும் ஒரே காரில் செனடாப் சாலைக்கு விரைந்தன. நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் ஏற்கனவே அங்கு வந்திருந்தார்.

மதியம் வரை அங்கேயே முதலமைச்சர், துணை முதலமைச்சர், நிதி அமைச்சர், நிதித்துறை செயலாளர் ஆகியோர் பேசினர்.பேசினர்.பேசினர்.

என்ன நடந்தது ஏது நடந்தது என யாருக்கும் புரியவில்லை. இரவு செக்ரட்ரியேட்டில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது மாடியில் லைட்டுகள் எரிந்தன.

முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போவதும் வருவதுமாய் இருந்தனர்.

நிதித்துறை அமைச்சரும், அதிகாரிகளும் மீண்டும் செனடாப் சாலைக்கு சென்றனர்.

நேற்று மாலையே துணை முதலமைச்சரின் அத்தனை அப்பாயின்மெண்ட்டுகளையும் அவரது உதவியாளர் செந்தில் கேன்சல் செய்திருந்தார்.

யாருக்கும் என்ன நடக்கின்றது என்பது யாருக்கும் புரியவில்லை. விடியல் காலை 5.00 மணிக்கு எல்லாம் தயார் நிலை. முதலமைச்சர் வந்து அமர்ந்தார். நிதியமைச்சரும், துணை முதலமைச்சரும் கை நிறைய பைல்கள் சகிதம் பேச ஆரம்பித்தனர்.

நடக்கும் இந்த பிப்ரவரி 2026, மற்றும் மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை 3000₹ இன்று காலை 6.00 மணிக்கு ஒன்னரை கோடி தமிழ்நாட்டு மகளிர் கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்கிற ட்ராஃப்டை நிதியமைச்சர் தன் கைப்பட எழுதி அதை முதலமைச்சரிடம் கொடுக்க முதலமைச்சர் அதிலே தன் கைப்பட ஒரு திருத்தம் செய்தார்.

""கோடை சிறப்பு தொகுப்பாக 2000₹ சேர்த்து 5000₹ 1.5 கோடி மகளிருக்கும் காலை 6.00 மணி முதல் வங்கியில் வரவு வைக்கப்படும்''

முதலமைச்சரின் அந்த திருத்தத்தைப்பார்த்த துணை முதலமைச்சருக்கும், நிதியமைச்சருக்கும் இன்ப அதிர்ச்சி.

நிதித்துறை செயலாளர் திரு உதயசந்திரன் அதற்குள் ட்ராஃப்டை டைப் செய்து எடுத்து வர இந்த விஷயத்தை முதலமைச்சரே மக்களிடம் பேசும் வீடியோ எடுக்கும் பணி தொடங்கியது.

மேலும் இன்ப அதிர்ச்சியாக முதலமைச்சர் தன் உதவியாளர் தினேஷை அழைத்தார்.

""தினேஷ், திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவர் கனிமொழிக்கு நான் என் சார்பாக ஒரு கோரிக்கை வைப்பதாக ஒரு மனு தயார் பண்ணுங்க. மகளிர் உதவித்தொகை இனி மாதம் 2000₹ ஆக உயர்த்தப்பட வேண்டும் என என் தனிப்பட்ட கோரிக்கையை அனுப்பிடுங்க.

""அரசு, காலை 10.00 மணிக்கு கோர்ட் ஆரம்பிக்கும் முன்னமே எல்லோருக்கும் கிரடிட் ஆகிவிட்டது.


முதல்வர் அறிவிப்பு “குண்டு” வெடித்ததா? மகளிர் உரிமைத்தொகை – ஒரே நாளில் ₹5000 வரவு: அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி


தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைச் சுற்றி அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்காவை அதிரவைத்த A. P. J. Abdul Kalam தலைமையிலான போக்ரான் அணு சோதனையை ஒப்பிட்டு, “இன்றைய அறிவிப்பு அரசியல் களத்தில் குண்டு வெடித்ததற்கு சமம்” என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசின் முக்கிய நலத்திட்டமான “மகளிர் உரிமைத்தொகை” குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் தரப்புகளில் விவாதங்கள் நிலவி வந்தன. சில தரப்புகள் இந்தத் திட்டத்திற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என பரபரப்பு தகவல்கள் பரவியிருந்தன. குறிப்பாக நிதி ஒதுக்கீடு, திட்டத்தின் நீடிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து வதந்திகள் எழுந்தன.

இந்நிலையில், முதல்வர் M. K. Stalin தலைமையில் உயர் மட்ட ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணை முதல்வர் Udhayanidhi Stalin, நிதியமைச்சர் Thangam Thennarasu மற்றும் நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அரசு வட்டார தகவல்களின் படி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் 2026 மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை தொகையாக ரூ.3000 வழங்குவது குறித்து பரிசீலனை நடந்ததாகவும், அதனுடன் “கோடை சிறப்பு தொகுப்பு” ரூ.2000 சேர்த்து மொத்தம் ரூ.5000 வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இந்தத் தொகை சுமார் 1.5 கோடி மகளிரின் வங்கி கணக்குகளில் இன்று காலை முதல் வரவு வைக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருங்காலத்தில் மகளிர் உதவித்தொகையை மாதம் ரூ.2000 ஆக உயர்த்துவது குறித்து தேர்தல் அறிக்கை குழுவிற்கு தனிப்பட்ட கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்தக் குழுவை Kanimozhi Karunanidhi தலைமையேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பால் அரசியல் களத்தில் அதிர்ச்சி நிலவுகிறது. எதிர்க்கட்சிகள் இதற்கு எவ்வாறு பதிலளிக்கின்றன என்பது கவனிக்கப்படுகின்றது.

மொத்தத்தில், “மகளிர் உரிமைத்தொகை” திட்டம் மீண்டும் தமிழக அரசியல் விவாதத்தின் மையமாக மாறியுள்ளது.

செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி மாநகராட்சி வாராந்திர குறை தீர்க்கும் முகாம் – பொதுமக்கள் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை இன்று 46 மனுக்கள் பெறப்பட்டன தூத்துக்குடி 33வது வார்டு பாளை ரோடு மேற்கு மில்லர் புரத்தில் தார் ரோடு சம்பந்தமாக பரபரப்பு மனு.

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி, பிப்.11:

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று (11.02.2026, புதன்கிழமை) மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது.

thoothukudileaks


இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து சொத்து வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றம், பிறப்பு–இறப்பு சான்றிதழ் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து பயன்பெறச் செய்யப்பட்டது.

thoothukudileaks

thoothukudileaks
தூத்துக்குடி 33வது வார்டு பாளை ரோடு மேற்கு மில்லர் புரத்தில் தார் ரோடு சம்பந்தமாக ... பரபரப்பு மனு...
thoothukudileaks
தூத்துக்குடி நகரமே தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள் அமைந்துள்ள 800 மீட்டர் நீளமுள்ள விதி மட்டும் நகராட்சிக்கு சொந்தமில்லை என்பது அதிசயமாக உள்ளது.???

thoothukudileaks


இந்நிகழ்வில் மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டு ராஜா, மேற்கு மண்டல உதவி ஆணையர் காந்திமதி, S.O. ராஜபாண்டி, A.W. லெனின், A.E. ஜெயபிரசாந்த், A.E. ராகவி, மாமன்ற உறுப்பினர்கள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மேற்கு மண்டல மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள், குறுகிய நேரத்தில் தங்களின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளை நேரில் சந்தித்து மனுக்கள் அளிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர். 

மாநகராட்சி சார்பில் வாரந்தோறும் இம்முகாம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் திமுக ஆட்சியே மீனவர்களுக்கு நல்ஆட்சி அமைச்சர் கீதாஜீவன் பரபரப்பு பேச்சு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி news by sunmugasuthram press club president 

தூத்துக்குடி:பெ 11 "எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ அதுதான் மீனவ மக்களுக்கான நல் ஆட்சியாக இருந்து வருகிறது" என்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் தெரிவித்தார்.

thoothukudileaks


தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு மீனவர் நல வாரிய தலைவர் ஜோசப் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

thoothukudileaks


மீனவர்களின் முக்கிய கோரிக்கைகள்


திரேஸ்புரம், திருச்செந்தூர், அமலி நகர், ஆலந்தலை, பெரியதாழை, ஜீவாநகர், குலசேகரப்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரினர். மீனவர்களின் பாதுகாப்பை கருதி கடல் ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும், மீனவ கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


கடல் தொழிலில் ஈடுபட்டு உயிரிழந்த மற்றும் காணாமல் போன மீனவர்கள் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


திமுக அரசின் சாதனைகள்


கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதாஜீவன், "மீனவ நண்பர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான கஷ்டங்களை கடந்து கடல் தொழில் செய்து வருகின்றனர். அவர்களது கஷ்டங்களை குறைக்கும் வகையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்" என்றார்.


மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிப்பு, மீன்பிடி படகுகளுக்கு கூடுதல் டீசல் மானியம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் ரூ.150 கோடியில் விரிவாக்கம், தருவைகுளம் மீன் இறங்குதளம் விரிவாக்கம் என பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


எம்பிசி பட்டியல் சேர்க்கை


"மீனவ சமுதாயத்தை மிகவும் பின்தங்கியவர்கள் பட்டியலில் சேர்த்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசு. அதன் பலனாக எம்பிசி இட ஒதுக்கீட்டில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்கடன் உள்ளிட்ட பயன்களை அதிகமாக மீனவ சமுதாயத்தினர் பயன்படுத்தி பலனடைந்து வருகின்றனர்" என்று அமைச்சர் குறிப்பிட்டார்.


புதிய அறிவிப்புகள்


ஒவ்வொரு மீன்பிடி துறைமுகத்திலும் ஆம்புலன்ஸ் வசதி விரைவில் செய்து தர முதலமைச்சரிடம் எடுத்துக்கூறி விரைவில் நிறைவேற்றி தரப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். மீன்பிடி துறைமுகத்தில் சுத்திகரிக்கப்பட்ட ஆர்ஓ குடிநீர் பிளான்ட் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


"மீனவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக செவி சாய்த்து மீனவர்களுக்கு கலங்கரை விளக்கமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. மீனவ நண்பர்களும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்" என்று அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக் கொண்டார்.


மனு வழங்கல்


தொடர்ந்து நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் மீனவர் ஊர் நலக் கமிட்டியினர், மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் தங்களது பகுதிகளுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை மீனவர் நல வாரியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினிடம் மனுவாக வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட வாரிய தலைவர், விரைவில் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என தெரிவித்தார்.


கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி இயக்குநர்கள் புஷ்ராசப்னம், உத்தண்டு, மீனவர் நல வாரிய உறுப்பினர்கள் அந்தோணி ஸ்டாலின், ஜெபமாலை, லெனின், மாநில திமுக மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் செல்வராஜ், வீரபாண்டியபட்டினம் பங்குத்தந்தை அலாசியஸ், கவுன்சிலர்கள் ரெக்ஸ்லின், ஆறுமுகம், வட்டச் செயலாளர் டென்சிங், மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் இசக்கிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

photo by Arunan journalist 

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

 photo news by Arunan journalist 

தூத்துக்குடி, பிப்ரவரி 10:

தூத்துக்குடியில் அஇஅதிமுக பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் கே. பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை முன்னிட்டு, தேர்தல் அறிக்கை துண்டுப்பிரசுரம் விநியோகம், “விடியா ஆட்சி – உங்கள் வீட்டு பில்லிலே சாட்சி” என்ற பிரச்சாரம் உள்ளிட்ட செயல்திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது

thoothukudileaks

.

thoothukudileaks

thoothukudileaks



இந்த ஆலோசனைக் கூட்டம் 10.02.2026 செவ்வாய்கிழமை மாலை 6.00 மணிக்கு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள சோலை மஹாலில் நடைபெற்றது. 

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அஇஅதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் அவர்கள் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்த விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.

தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் நடைபெறவுள்ள தேர்தல் பணிகள், வீடு வீடாகச் சென்று துண்டுப்பிரசுரங்கள் விநியோகம், மக்கள் தொடர்பு இயக்கம், கட்சி அமைப்புகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.



thoothukudileaks


இந்த கூட்டத்தில் அஇஅதிமுக மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணியினர் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.