வியாழன், 1 ஜனவரி, 2026

புதுவருட முதல் நாளில் தூத்துக்குடியில் 100 இளைஞர்கள் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைப்பு

தூத்துக்குடி, ஜனவரி 1

தூத்துக்குடி மாநகராட்சி 6வது வார்டைச் சேர்ந்த 100 இளைஞர்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் புதிதாக இணைந்த இளைஞர்களுக்கு கருப்பு சிவப்பு சால்வை அணிவித்து வரவேற்றார்.



திமுக பிஎல்2 முகவர் அற்புதக்கனி, இளைஞர்கள் மதன்ராஜ், ரெஜிலஸ் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தூத்துக்குடி மாநகராட்சி 6வது வார்டுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் கீதாஜீவன் உரை

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் கீதாஜீவன், "திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் இந்தியாவிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். எல்லா தரப்பினருக்கும் செய்துள்ள சாதனைகள் ஏராளம். உங்களைப் போன்ற இளைஞர்களை மாநில இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஊக்கப்படுத்தி வருகிறார்" என்று தெரிவித்தார்.

இன்னும் நான்கு மாத காலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், "ஒவ்வொருவரும் குடியிருக்கும் பகுதியில் ஏற்கனவே பணியாற்றி வரும் நிர்வாகிகளோடு இணைந்து அரசின் திட்டங்களையும் திமுக கொள்கையையும் அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். திமுக 7வது முறையாக ஆட்சி அமைப்பதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் 2வது முறையாக முதலமைச்சராவதற்கும் உங்களுடைய பங்கு அதிகம் இருக்க வேண்டும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் வழங்கப்படும்" என்று கூறினார்.

பங்கேற்றவர்கள்

இந்நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பிரபு, நாகராஜன், மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாரயணன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், வட்ட அவைத்தலைவர் ஞானபிரகாஷம், செயலாளர் சுரேஷ், வட்டப்பிரதிநிதிகள் கருப்பசாமி, ஜெயபால், ராஜ், கவுன்சிலர் ஜெயசீலி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், புஷ்பராஜ், மணி அல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் புத்தாண்டு விழா – துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கல்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி | ஜனவரி 1, 2026

தூத்துக்குடி ராஜாஜி பூங்கா நடைப்பயிற்சி நண்பர்கள் சார்பில் 2026 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று பூங்காவில் சிறப்பான விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கேக் வெட்டி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நண்பர்கள், அனைவருக்கும் ஸ்வீட், காரம் மற்றும் காப்பி வழங்கினர்.


அதனைத் தொடர்ந்து சமூகப் பொறுப்புணர்வின் வெளிப்பாடாக ராஜாஜி பூங்காவில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கப்பட்டன. 

thoothukudileaks


விழாவில் கலந்து கொண்ட நண்பர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.


இவ்விழாவில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் லயன் பழனிவேல், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.



மேலும் தொழிலதிபர்கள் ரத்னா தர்மராஜ், பூக்கடை செல்வராஜ், நடராஜன், சுப்பையா, ஆறுமுகம், பாலசுப்பிரமணியம், முருகேசன், ஜான், வழக்கறிஞர்கள் செல்வக்குமார், வேல்முருகன், மாஸ்டர் தங்கராஜ், எல்.ஐ.சி முகவர்கள் கணேசன், கந்தசாமி, ஜெயக்குமார், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பால்ராஜ் உள்ளிட்ட ராமர், விக்னேஷ், சேகர், சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி புத்தாண்டை சமூக நலன் மற்றும் ஒற்றுமையுடன் தொடங்கியதாக அமைந்தது.

வந்து விட்டது... ஹேப்பி நியூ இயர் 
ஹே ஹே..ஏஏஏஏ....!!!

செய்தி புகைப்படங்களில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

தமிழக அரசே நடைமுறை படுத்துதூத்துக்குடியில் பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்க தமிழ்நாடு மாநில நிர்வாக குழு கூட்டம் – பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி


தூத்துக்குடி :ஜன1

தூத்துக்குடியில் பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் தமிழ்நாடு மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. 


இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அபிராமிகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார், துணை தலைவர் ராஜேஷ், துணை செயலாளர் ஜெபசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய தலைவர் காளிதாசன் விளக்கவுரையாற்றினார். மாநில மகளிர் அணி அமைப்பாளர் கலா வரவேற்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில்,.. 

சிறிய பரிசோதனை கூடங்களை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 390-ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கிராமப்புறங்களில் 100 சதுர அடி, நகர்ப்புறங்களில் 150 சதுர அடி என்ற அளவீட்டில் அரசாணை வெளியிட தமிழ்நாடு அரசை கேட்டுக்கொண்டனர். 

மருத்துவக் கழிவு கட்டணம் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக ரூ.1000 ஆக நிர்ணயித்து, உள்ளாட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் மூலம் அரசு நேரடியாக நிர்வகிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

thoothukudileaks


"அரசு அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது ஆய்வகங்களில் வைத்திருக்க வேண்டிய சான்றிதழ்கள் குறித்த தெளிவான வழிகாட்டி அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்றும், மாநில அரசு ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. "

"மருந்து கடைகளில் இரத்த பரிசோதனை செய்வதைத் தடை செய்ய வேண்டும், மத்திய அரசு ஆய்வகங்களுக்கு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி-யை திரும்ப பெற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு ஆய்வக நுட்புனர்களுக்காக கொண்டு வந்துள்ள யுஹெச்ஐடி திட்டத்தை சங்கம் ஆதரிப்பதாகவும், அதே நேரத்தில் கல்வித் தகுதியை காரணமாக காட்டி ஆய்வக உரிமையாளர்களை வெளியேற்ற முயல்வதை சங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சிறிய பரிசோதனை கூடங்களை நசுக்கும் நோக்கில் மருத்துவரின் சான்றிதழ் கட்டாயமாக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசே நடைமுறை படுத்து!!!

ஆய்வுக்கூட பதிவு கட்டணம் ரூ.5000 என அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் அமைச்சர் வாய்மொழியாக ரூ.1000 ஆக குறைப்பதாக அறிவித்ததை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ள அலை டு ஹெல்த் கவுன்சிலில் பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்திற்கு நிரந்தர உறுப்பினர் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நலவாரியம்!!!

ஆய்வக நுட்புனர்களுக்கான சீருடை வெள்ளை நிற கோர்ட் சீருடையாக அறிவித்து, மருத்துவத்துறையினர் மட்டுமே அணிய அரசாணை வெளியிட வேண்டும், ஆய்வக நுட்புனர்களுக்கென தனி நலவாரியம் அமைக்க வேண்டும், அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஆய்வக நுட்புனர்களை பரிசோதனை தவிர பிற பணிகளுக்குப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஆய்வக நுட்புனர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

வரும் ஆண்டுகளில் ஆன்லைன் முறையில் உறுப்பினர் அட்டை பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும், அனைத்து ஆய்வகங்களுக்கும் சிஇஏ பதிவு செய்தவர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும், மார்ச் 13 அன்று 27-வது ஆண்டு ஆய்வக நுட்புனர்கள் தினம் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி, சங்க கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, இலவச மருத்துவ முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. கிரிக்கெட், ரிங்பால், கேரம், செஸ், செட்டில் கார்க் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆய்வக நுட்புனர்களின் உரிமைகளை காக்க 2026 பிப்ரவரி 15 அன்று சென்னையில் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலத் தலைவர் தியாகராஜன், மாநில பொதுச் செயலாளர் விஜயகுமார், மாநில பொருளாளர் ஆறுமுகம், அகில இந்திய துணைத்தலைவர் துரைசாமி, மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் சம்பத்குமார், மாநில துணைப் பொதுச் செயலாளர் சிவக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மாநில துணை செயலாளர்களாக பாலாஜி, கோபி, சதீஷ், ஜெதீஸ்வரன், சுந்தர், சிவகுமார் ஆகியோர் அங்கீகரிக்கப்பட்டனர்.

என்ஏபிஎல்சிஇஓவாக இருந்து சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை காப்பாற்ற பல்வேறு உதவிகள் செய்த வெங்கடேஸ்வரன் என்.ஏ.பி.சி-க்கு சிஇஓவாக பதவி உயர்வு பெற்றதற்கும், சிஎம்சி இக்யூஏஎஸ் கோஆர்டினேட்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் பமிலா கிறிஸ்துதாஸ் அவருக்கும் சங்கத்தின் சார்பில் நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட மாநில நிர்வாகிகளுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக மாவட்ட செயலாளர் மைக்கேல் பிரதீப் நன்றியுரையாற்றினார்.

செவ்வாய், 30 டிசம்பர், 2025

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது: 22 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, டிசம்பர் 31 -

 தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண மாமன்ற கூட்டம் இன்று (டிசம்பர் 31) காலை 11 மணியளவில் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.

மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆணையர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். 

thoothukudileaks


இந்த கூட்டத்தில் மொத்தம் 22 பொருட்கள் ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அம்மா உணவகங்கள் - ஊதிய ஒதுக்கீடு

மாநகராட்சியில் சொந்தமாக எட்டு அம்மா உணவகங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இதில் 67 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மார்ச் 26, 2025 முதல் நவம்பர் 25, 2025 வரையிலான காலத்திற்கு ரூ.53.33 லட்சம் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

இனி நவம்பர் 26, 2025 முதல் மார்ச் 25, 2026 வரையிலான 120 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.325 வீதம் ஊதியம் வழங்க தோராயமாக ரூ.26.13 லட்சம் செலவினம் மேற்கொள்ள மாமன்றம் அனுமதி வழங்கியது.

thoothukudileaks


சிதம்பரநகர்  வணிக வளாகம் காலியாக உள்ள கடை ஏலம்

சிதம்பரநகர் வசதி வணிக வளாகத்தில் உள்ள 31 கடைகளுக்கு ஏலம் நடத்தப்பட்டது. இதில் மூன்று கடைகளுக்கு மட்டும் ஏலம் வந்துள்ளது:

G2 கடை: தீர்மானிக்கப்பட்ட தொகை ரூ.12,600. ம.ரா.இந்திரா என்பவர் ரூ.12,700க்கு உயர்ந்த ஏலம் எடுத்துள்ளார்.

G8 கடை: தீர்மானிக்கப்பட்ட தொகை ரூ.17,720.  M.கணேஷ் நாகராஜன் என்பவர் ரூ.17,810க்கு உயர்ந்த ஏலம் எடுத்துள்ளார்.

G14 கடை: தீர்மானிக்கப்பட்ட தொகை ரூ.21,800.  ரா.மோஷா என்பவர் ரூ.22,000க்கு உயர்ந்த ஏலம் எடுத்துள்ளார்.

மேற்கண்ட மூன்று உயர்ந்த ஏலதாரர்களின் ஒப்பந்தத்தை ஏற்க மாமன்றம் முடிவு செய்தது. மீதமுள்ள 28 கடைகளுக்கு மீண்டும் ஏலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

வாகன நிறுத்துமிடங்கள் - பணியாளர் ஊதியம்

ஜெயராஜரோடு பஸ் நிறுத்தம்: 

இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் ஜூலை 20, 2025 முதல் M/S.பார்க்லெண்ட் என்ற தனியார் நிறுவனம் மூலம் கட்டண வசூல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


மார்ச் 26, 2024 முதல் பிப்ரவரி 25, 2025 வரை CLC பணியாளர் மூலம் ரூ.6.85 லட்சமும், மார்ச் 26, 2025 முதல் ஜூலை 20, 2025 வரை ரூ.3.33 லட்சமும் செலவானது. முன்னாள் பணியாளர்களுக்கான ஊதிய நிலுவை தொகைக்கு மாமன்ற அனுமதி வழங்கப்பட்டது.



தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம்: 

வடக்கு மண்டலத்தில் புதிய பேருந்து நிலைய வாகன வளாகத்தில் மார்ச் 26, 2024 முதல் மார்ச் 25, 2025 வரை ரூ.18.96 லட்சமும், மார்ச் 26, 2025 முதல் நவம்பர் 25, 2025 வரை ரூ.6.79 லட்சமும் செலவானது. அடுத்த ஓராண்டுக்கு (நவம்பர் 26, 2025 முதல் அக்டோபர் 25, 2026) உத்தேசமாக ரூ.1.80 லட்சம் செலவு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

பழைய பேருந்து நிலையம்: 


ஸ்மார்ட் சிட்டி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் மார்ச் 26, 2024 முதல் மார்ச் 25, 2025 வரை ரூ.25.16 லட்சமும், மார்ச் 26, 2025 முதல் நவம்பர் 25, 2025 வரை ரூ.11.48 லட்சமும் செலவானது. அடுத்த ஓராண்டுக்கு உத்தேசமாக ரூ.6.60 லட்சம் செலவு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

ஒப்பந்தக்காரர்களுக்கு காலாவதி பணம் திருப்பி வழங்கல்

பல்வேறு ஒப்பந்தக்காரர்கள் பல ஆண்டுகளுக்கு முன் செலுத்திய முன் வைப்பு மற்றும் பாதுகாப்பு வைப்பு தொகைகளை திருப்பி வழங்க மாமன்றம் ஒப்புதல் அளித்தது:

M/S.Sri Devi Construction: 10 பணிகளுக்கு மொத்தம் ரூ.52,870

வெங்கடேஷ்: 6 பணிகளுக்கு மொத்தம் ரூ.27,740 மற்றும் 2 பணிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட 5% தொகை ரூ.16,757

சுரேஷ்பிரகாஷ்குமார்: ரூ.31,100

T.முருகன்: ரூ.20,000

.முத்துராமலிங்கம்: 

13 ஆண்டுகளுக்கு முன் செலுத்திய வல்லநாடு தாமிரபரணி ஆற்றங்கரை திட்டத்திற்கு மொத்தம் ரூ.2.99 லட்சம்

நில தானப்பத்திரங்கள் ஏற்பு

முள்ளக்காடு கிராமம்: சர்வே எண் 199/7A-ல் 3,565 சதுர அடி பரப்பளவில் P.முருகன், N.ராஜ்சேந்திரன் மற்றும் M.செந்தில் குமார் ஆகியோரின் கிடாப்பிள்ளி நிலம் பிரிப்பு திட்டம் அனுமதிக்கப்பட்டது. சாலை மற்றும் மின் வசதிக்கான இடம் தானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

முள்ளக்காடு கிராமம்: சர்வே எண் 109, 110/1, 110/2-ல் 18,950 சதுர அடி பரப்பளவில்  ராஜ்குமார் மற்றும் கங்கராஜா ஆகியோரின் கிடாப்பிள்ளி நிலம் பிரிப்பு திட்டம் அனுமதிக்கப்பட்டு சாலை மற்றும் மின் வசதிக்கான இடம் தானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

thoothukudileaks


ஈகோ பார்க் - தனியார் நிர்வாகம்

கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஈகோ பார்க், கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின் பொதுமக்கள் பயன்படுத்தாத நிலையில் பராமரிக்கப்படாமல் இருந்தது. தற்சமயம் அழகுபடுத்தும் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு Paddle Boats, Kayaking, Canoeing, Aqua Cycle போன்ற நீர் சாகச விளையாட்டுகளை நடத்துவதற்கு, தமிழ்நாடு சாகச சுற்றுலா சட்டம் 2023-ன்படி, பணியாளர்கள் பயிற்சி, ஊதியம், காப்பீடு, பராமரிப்பு போன்ற அனைத்து செலவுகளையும் மேற்கொண்டு M/S. Run and Ride Park (Thrill Park) என்ற தனியார் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.

thoothukudileaks

thoothukudileaks


வருவாயில் மாநகராட்சிக்கு 25% மற்றும் தனியார் நிறுவனத்திற்கு 75% (ஊதியம், பராமரிப்பு உட்பட அனைத்து செலவும் உட்பட) பங்கீடு அடிப்படையில் முன்னோட்டமாக மூன்று மாத கால அளவிற்கு மட்டும் அனுமதி வழங்க மாமன்றம் ஒப்புதல் அளித்தது.

மீன் மார்க்கெட் கட்டணம் உயர்வு

வடக்கு மண்டலம் சுபார்ராயர் பட்டியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட் வளாகம் புதிய வசதிகளுடன் அழகுபடுத்தி செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மாநகராட்சி வருவாயை பெருக்கும் நோக்குடன், முதல் செலவுகளை ஈடு செய்யும் வகையில், புதிய கட்டிடத்தில் நாள் ஒன்றுக்கு பயன்பாட்டு கட்டணம் ரூ.50 வசூலிக்க மாமன்ற அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு சக்திகளுக்கு அச்சுப்பணியும் அதற்கான செலவும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

பொது கழிப்பறைகள் - பராமரிப்பு ஒப்பந்தம் புதுப்பிப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் இடங்களில் உள்ள பொது கழிப்பறைகளை 24 மணி நேரமும் சுகாதாரமான முறையில் பராமரிக்க குளோப் இன்டர்நேஷனல் சர்வீசஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது.

முத்தம்மாள் காலனி பகுதி: 

நவம்பர் 12, 2025 முதல் நவம்பர் 11, 2026 வரை ஓராண்டு காலத்திற்கு ரூ.1.50 லட்சம் (மாதம் ஒன்றுக்கு) என்ற அடிப்படையில் மொத்த உத்தேச செலவு ரூ.18 லட்சம்.

அழகு இந்திரா நகர் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம்: அதே நிபந்தனைகளில் ரூ.18 லட்சம் செலவில் ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்தம்.

ராஜாஜி பூங்கா, மருத்துவகல்லூரி மருத்துவமனை, ரோச்பூங்கா: இந்த மூன்று இடங்களில் உள்ள பொது கழிப்பறைகளின் பராமரிப்பு பணியை ஜனவரி 1, 2026 முதல் ஒரு ஆண்டு காலத்திற்கு ஒப்படைக்க அனுமதி வழங்கப்பட்டது.

பூங்காக்கள் பராமரிப்பு

நகரின் 4 முக்கிய பூங்காகளான M.G.R. பூங்கா (பாளை ரோடு TMB காலனி), ராஜாஜி பூங்கா (பாளை ரோடு), முத்து நகர் பீச் பூங்கா (பீச் ரோடு), ரோச் பார்க் (தெற்கு பீச் ரோடு) ஆகியவற்றை பசுமையான முறையில் சிறப்பாக பராமரிக்க தனியார் நிறுவனம் மூலம் பணியாளர்களை ஆவுட்சோர்சிங் முறையில் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான வருடாந்திர செலவு ரூ.68 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக தரமான நிறுவனங்களை தேர்வு செய்ய RFP (Request for Proposal) கோரி செயல்முறை மேற்கொள்ள மாமன்றம் அனுமதி வழங்கியது.

புதிய சாலை பணி

தூத்துக்குடி மூன்றாம் ரயில்வே கேட் பகுதியில் பாதாள சாக்கடை குழாய் பழுதடைந்து அடைப்பு ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்படும் வாய்ப்புள்ளதால் அதை சரிசெய்யவும், அந்த இடத்தில் உள்ள Machine Hole-ஐ அகற்றவும் ரயில்வே துறையிடமிருந்து கோரிக்கை வந்துள்ளது.

இதற்காக 400MM விட்டம் கொண்ட Railway Crossing Trenchless Method-ல் புதிய கால்வாய் குழாய் அமைக்கும் பணியை ரூ.50.70 லட்சம் மதிப்பீட்டில் நகர நீர் மற்றும் வடிகால் நிதி 2025-26-ன் கீழ் மேற்கொள்ள மாமன்ற அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வாறு பல்வேறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இன்றைய மாமன்ற கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

தூத்துக்குடி பத்திாிகையாளர்களுக்கு மாணிய விலையில் வீட்டுமணை வழங்க வேண்டும். மாநகராட்சி கூட்டத்தில் வக்கீல் மந்திரமூர்த்தி கோாிக்கை

photo news by sunmugasuthram press club president 

தூத்துக்குடி டிச31

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரன மாதந்திர கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயா் ஜெகன் பொியசாமி தலைமையில் நடைபெற்றது. 

ஆணையா் ப்ாியங்கா துணை மேயா் ஜெனிட்டா முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி மாநகராட்சி எதிர்கட்சி அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி பேசுகையில்  மழையிலும் ,வெயிலிலும் மக்களுக்காக உழைக்கும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மானிய விலை  வீட்டு மனை பட்டா கேட்டு நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.

thoothukudileaks


 அவர்களுக்கு கடந்த கால அதிமுக ஆட்சியில் இடம் ஒதுக்கப்பட்டது பின்பு ஆட்சி மாற்றம் காரணமாக நடைமுறைப்படுத்த முடியாத சூழ்நிலையில் இந்த விளம்பர மாடல் திமுக அரசு பதவியேற்றிலிருந்து முதலமைச்சர்ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் அமைச்சர்கள் கீதாஜீவன் அனிதாராதாகிருஷ்ணன் தூத்துக்குடி எம். பி கனிமொழி என பல்வேறு தரப்பினாிடம் மனு அளித்துள்ளனர்.


 மேலும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு இதே மாநகராட்சி கூட்டத்தில் இது குறித்து பேசும்போது விரைவில் அதற்கு தீர்வு காணப்படும் என்று மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்த நிலையில்  தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே பத்திரிகையாளருக்கு விரைவில் மானிய விலை  வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

 தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மாணவர்கள் இளைஞர்கள் , பெண்கள் பயன்பெறும் வகையில் இலவச ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், அரசு போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக்கு செல்லும் பகுதி போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசல் இல்லாமல் அருகில் உள்ள  ராஜாஜி பார்க் வழியாக மாற்று வழி ஏற்படுத்தி தர வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தி வக்கீல் மந்திரமூர்த்தி பேசினாா்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையப் பகுதியில் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை திடீர் சோதனை காலாவதி உணவுப் பொருட்கள் பறிமுதல் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் சுற்றி அனுமதி இன்றி செயல் படும் ஆக்ரமிப்பு கடைகள் அகற்றப்பட வேண்டும் வியாபாரிகள் மாநகராட்சிக்கு வேண்டுகோள் .

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

தூத்துக்குடி : டிச 30

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அனுமதி இன்றி ஆக்கிரமிப்பு செய்து சுகாதார கேடாக  செயல்பட்டு வந்த உணவு கடைகள்  தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் டீ கடைகள் சாந்தி பேக்கரி கடைகளில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அருண் தலைமையில் 30-12-2025 ல் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது, பல கடைகளில் காலாவதி ஆன உணவுப் பொருட்கள் விற்பனைக்காக வைத்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டதும் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. 

இந்த ஆய்வில் மொத்தம் 14 கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. சுகாதார நெறிமுறைகளை பின்பற்றாத 8 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்த ஒரு கடைக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆய்வின்போது சுமார் 24 கிலோ சுகாதாரமற்ற உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


இதையடுத்து, காலாவதி ஆன உணவுப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை மற்றும் விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படுதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அருண் தெரிவித்துள்ளார்.




பொதுமக்களின் உடல்நலம் மற்றும் சுகாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அனுமதி இன்றி செயல்படும் உணவு கடைகள் மீது தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆய்வின் போது...

புதிய பேருந்து நிலையம் பகுதியில்  ஆய்வு மேற்கொண்ட  அதிகாரிகளிடம் கேள்வி கேட்டு ஆய்வை தடுக்க முயன்றனர் .

அரசியல் பிரபலங்களை பற்றி கூறினார்கள்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், உணவு பாதுகாப்பு அதிகாரிகள்  தகுந்த விளக்கம் அளித்து ஆய்வை தொடர்ந்தனர்.


 நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆக்ரமிப்பு கடைகளை அகற்றப்படுமா தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வியாபாரிகள் மாநகராட்சிக்கு நடவடிக்கை எடுக்க  வேண்டுகோள்!!!

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அனுமதி இன்றி ஆக்கிரமிப்பு செய்து சுகாதார கேடாக  செயல்பட்டு வரும்  கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது 

இதனால் தூத்துக்குடி மாநகராட்சிக்கு வாடகை செலுத்தி கடை நடத்தி வரும் வியாபாரிகள் தங்களது வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தூத்துக்குடி மாநகராட்சி தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே சுற்றி உள்ள ஆக்ரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks
புகைப்படங்கள் அனைத்தும் ஆய்வின் போது எடுக்கப்பட்டது

செய்தி புகைப்படங்களில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

சனி, 27 டிசம்பர், 2025

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் 2026 புத்தாண்டு விழா – அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் & 2026 புத்தாண்டு விழா – அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி, டிச.28:

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் 2026 புத்தாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று (28.12.2025, ஞாயிற்றுக்கிழமை) காலை 12 மணியளவில் விழா நடைபெற்ற

thoothukudileaks



இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். உடன் திமுக தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில்,....

“‘மாற்றுத்திறனாளி’ என்ற சொல்லை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி. மாற்றுத்திறனாளிகள் நலனில் உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு வருவது திமுக அரசே. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் மீது அன்பும் கவனமும் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளி பயனாளர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ளவர்கள் இதனை பெற்றுக்கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒன்றிணைந்து கலந்து கொண்டதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்,” என தெரிவித்தார்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


கிஃப்ட் பரிசு வழங்கல் 

இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் மகளிர் சங்கம் சார்பில், ஷெர்லி மற்றும் மோசஸ் (அன்ன ராஜன்) முன்னிலையில், விழாவில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அமைச்சர் கீதா ஜீவன் கிப்ட் பரிசுகளை வழங்கினார்.

அமைச்சர் கீதா ஜீவன் -க்கு கலைக்குழு வரவேற்பு!!!

நிகழ்ச்சி முன்னதாக சகாயம் தலைமையிலான கலைக்குழு அமைச்சர் கீதா ஜீவனுக்கு மேளதாளத்துடன் கலைக்குழுவினர் சிறப்பான வரவேற்பு செய்திருந்தனர்.

thoothukudileaks

thoothukudileaks


இந்த நிகழ்ச்சியை மாற்றுத்திறனாளிகள் மகளிர் சங்கம் சார்பில் IS. ஷெர்லி மற்றும் J. மோசஸ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். விழா முழுவதும் உற்சாகமும், சமூக ஒற்றுமையும் நிறைந்ததாக நடைபெற்றது.