திங்கள், 20 ஏப்ரல், 2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: நாளை ஏப்ரல் 21 மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவு தேர்தல் ஆணையம் கடும் வழிமுறைகள்

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

அருணன் செய்தியாளர் 

தூத்துக்குடி ஏப்ரல் 20

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பரப்புரை நாளை (21.04.2026) மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறும் 23.04.2026 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

thoothukudileaks


இதனை முன்னிட்டு, 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 126ன் கீழ், தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை மாலை 6 மணிக்குப் பிறகு எந்தவொரு தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் போன்றவை நடத்தவோ, ஒருங்கிணைக்கவோ, பங்கேற்கவோ கூடாது. 

வாட்ஸ் அப் தடை!!!

மேலும், திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி, வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு ஊடகங்களிலும் தேர்தல் தொடர்பான பிரசாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2ஆண்டுகள் சிறை தண்டனை !!!

பொது மக்களை ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சி, கேளிக்கை நிகழ்ச்சி அல்லது பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவும் அனுமதி இல்லை. இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொகுதி வெளியிலிருந்து வந்துள்ள அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள், வாக்காளர்கள் அல்லாதோர் அனைவரும் 21ஆம் தேதி மாலை 6 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதிகாரிகள் கண்காணிப்பு!!!

கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் வெளியாட்கள் தங்கியுள்ளனரா என அதிகாரிகள் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.

வேட்பாளர்களுக்கான வாகன அனுமதிகளும் மாலை 6 மணிக்குப் பிறகு செல்லாது ஆகும். வாக்குப்பதிவு நாளன்று, வேட்பாளருக்கு ஒரு தனிப்பட்ட வாகனம், தேர்தல் முகவருக்கொரு வாகனம் உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட அனுமதிகள் மட்டுமே வழங்கப்படும்.

வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர அல்லது திரும்ப அழைத்துச் செல்ல வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனங்களை பயன்படுத்துவது முறைகேடாக கருதப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் தூரத்திற்கு வெளியே, இரண்டு நபர்கள் மட்டுமே கொண்ட தேர்தல் அலுவலகம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற கூட்டம் கூடாதபடி கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

thoothukudileaks

thoothukudileaks


அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குரிமையை சீராக பயன்படுத்துமாறு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார்.

வாக்காளர் அட்டை இல்லையா? கவலை வேண்டாம் மாற்று அடையாளங்களுடன் வாக்களிக்கலாம்

தூத்துக்குடி, ஏப்ரல் 20:

வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை (EPIC) இல்லாதவர்களும், அரசு அங்கீகரித்த பிற அடையாள ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரும் பொதுமக்கள் கீழ்க்கண்ட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு வரலாம்:



ஆதார் அட்டை

ரேஷன் அட்டை

100 நாள் வேலைத் திட்ட (MNREGA) அடையாள அட்டை

பாஸ்போர்ட்

பான் கார்டு

ஓட்டுநர் உரிமம்

வங்கி அல்லது அஞ்சல் அலுவலக கணக்குப் புத்தகம்

மருத்துவ காப்பீடு அட்டை

ஒன்றிய / மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன (PSU) அடையாள அட்டை

எம்.பி / எம்.எல்.ஏ அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை

வருகின்ற தேர்தல் நாள்: ஏப்ரல் 23, 2026

மேலும், வாக்களிக்க விரும்பும் அனைவரும் சமீபத்திய வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

வாக்காளர்கள் தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை முன்கூட்டியே சரிபார்த்து, தேவையான ஆவணங்களுடன் வாக்குச்சாவடிக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகங்கள் மற்றும் உதவிக்காக தேர்தல் ஆணையத்தின் கட்டணமில்லா உதவி எண் 1950-ஐ தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

– தூத்துக்குடி லீக்ஸ்

சனி, 18 ஏப்ரல், 2026

தூத்துக்குடி மாவட்ட ஆறு சட்டமன்றத் தொகுதி 2026 தேர்தல் கள நிலவரம்

Tamil Nadu updates 18-4-2026

 photo news by அருணன் செய்தியாளர் 

தமிழக சட்டமன்ற தேர்தலில் கடந்த வாரம் முதல் தொலைக்காட்சி நாளிதழ் வார இதழ்கள் யாருக்கு வெற்றி வாய்ப்பு என கணிப்புகள் கள நிலவரம் வெளியீட்டு வருகின்றனர் இதில் பல மீடியாவில் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு என்றும் சில மீடியாவில் அதிமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு என்றும் தவெக பற்றி கருத்து சொல்ல முடியாத புதிர் கேள்வி இளைய தலைமுறையினர் மக்களிடம் போராதரவு விஸ்வருவமாக இருப்பதாக உண்மை கூறும் அரசியல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்

thoothukudileaks


தூத்துக்குடி மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஆறு இருக்கிறது தூத்துக்குடி லீக்ஸ் என்றென்றும் தனித்தன்மை எப்போதும் உண்டு ஒவ்வொரு தொகுதியிலும் மக்களோடு மக்களாக இருந்ததில் பொதுமக்களின்  கருத்துக்களின் அடிப்படையில் பாரபட்சமின்றி தற்போதைய கள நிலவரம்

திருச்செந்தூர்  

இருமுனை போட்டி 

திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தவெக வேட்பாளர் முருகன் 

இந்த தொகுதியில் இரு முனை போட்டி நிலவுகிறது தொடர்ந்து வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் ஒரு பக்கம் இவருக்கு பல  இடங்களில் மக்கள் எதிர்ப்பு கண்கூடாக தெரிகிறது 


thoothukudileaks
பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 


பாஜக முன்னிலை!!!

இதனால் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் உள்ளார்.  

ஓட்டப்பிடாரம் 

இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக களத்தில் ராம ஜெயம் லோக்கல் திமுக கட்சியிலே பல எதிர்ப்புடன் நிறுத்தப்பட்டுள்ளார் புதிய தமிழகம் சார்பில்  தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிடுகிறார் அதிமுக பாஜக கூட்டணி அமமுக வேட்பாளர் ஆக சுந்தர் ராஜன் 

அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் 

இங்கு திமுக அமமுக இருமுனை போட்டி கடுமையாக தெரிகிறது அதிமுக பாஜக கூட்டணி பலத்தால் அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் முன்னிலையில் தெரிகிறார் 


விளாத்திகுளம் 

திமுக -அதிமுக இழுபறி!!!

திமுக வேட்பாளர் ஆக மீண்டும் மார்க்கண்டேயன் நிறுத்தியுள்ளார்கள்  அதிமுக சார்பில் சத்யா

thoothukudileaks
அதிமுக வேட்பாளர் சத்யா 


 விளாத்திகுளம் 

அதிமுக – ஆர். சத்யா

திமுக - மார்க்கண்டேயன்

தமிழக வெற்றி கழகம் – காசிராம்

நாம் தமிழர் – பாலாஜி    

மீண்டும் திமுக வேட்பாளர் ஆக மார்க்கண்டேயன் இங்கு தொடர்ந்து நிறுத்தப்பட்டு வருவது தொகுதியில் மக்கள் இடையே சலிப்பும் தொகுதி வளர்ச்சி இல்லை என குற்றச்சாட்டும் கூறுகிறார்கள் கவனிப்புகளால் மக்கள் மறக்கவில்லை 

thoothukudileaks
திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் 

அதிமுக முன்னிலை!!!

இந்த தடவை தவெக  வேட்பாளர் காசி ராம் மற்றும் நாம் தமிழர் பாலாஜி பிரிக்கின்ற ஒட்டுக்கள் அதிமுக வேட்பாளர் சத்யா வுக்கு சாதகமாக இருக்குமா? அதிமுக முன்னிலை!!!

 திமுக அதிமுக இந்த தொகுதியில் இழுபறி நிலை   


ஸ்ரீவைகுண்டம் 

இருமுனை போட்டி

அதிமுக முன்னிலை!!!

இந்த தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் அமிர்தராஜ் மீண்டும் நிறுத்தியுள்ளது அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் போட்டியிடுகிறார் தொகுதியில் இருமுனை  போட்டிதான் நிலவுகிறது 

thoothukudileaks


இதில் அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் பக்க பலமாக பாஜக அமமுக கட்சிகள் வெற்றி வாய்ப்பு தேடி தரும் அதிமுக சண்முகநாதன் முன்னிலையில் இருக்கிறார் 

கோவில் பட்டி  

இருமுனை போட்டி

இந்த தொகுதியில். 

திமுக – கா. கருணாநிதி

அதிமுக – கடம்பூர் ராஜு

தமிழக வெற்றி கழகம் – பாலசுப்பிரமணியன்

நாம் தமிழர் – பாண்டி  

ஆகியோர் நிற்கிறார்கள் ஆயினும் இந்த தொகுதியில் அதிமுக திமுக இருமுனை போட்டி கடுமையாக தெரிகிறது ஏனெனில் கடந்த முறை தேர்தலில் திமுக வேட்பாளர் சுப்பிரமணியன் அதிக வாக்குகள் கிடைத்தன 

அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ 


அதிமுக முன்னிலை 

அதனால் திமுக -அதிமுக இழுபறி  தற்போது கடம்பூர் ராஜூ முன்னிலை  


தூத்துக்குடி     

தமிழக வெற்றி கழகம் – ஸ்ரீநாத் 

அதிமுக – சி.த. செல்லப்பாண்டியன்

திமுக – கீதா ஜீவன்

அகில இந்திய புரட்சி தலைவர் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் ஏசாதுரை

நாம் தமிழர் – ஜேக்கப் தேவதாஸ் த வா க கிதா பிஸ்மி   ஆகியோர் களத்தில் நின்றாலும்...

thoothukudileaks


இரு முனை போட்டி!!!

 முதலில் மும் முனை போட்டி நிலவி வந்த நிலையில் தற்போது இருமுனை போட்டி தான் மாறியது .

அதிமுக வேட்பாளர் சித செல்லப்பாண்டியன் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் 

அதே போல திமுக வேட்பாளர் கீதா ஜீவன் நிலையும் இருப்பது தெரிகிறது அதனால் களம் தீவிரம் அடைந்துள்ளது 

மாறியது களம் 

ஆனால்?

 களம் விஜய் கட்சி தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் சாதகமாக மாறி வருகிறது தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு 52 வார்டுகள் வருகிறது .

இதில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்ற போது நடிகராக விஜய் பாதிப்பு ஏற்பட்டவர்களை இரவோடு இரவாக டூவீலர்ல பயணம் செய்து ஆறுதல் உதவி மற்றும் தொடர்ந்து உறுதியாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருக்கிறார் விஜய் 

மேற்கண்ட திமுக -அதிமுக இரு கட்சிகள் பொதுமக்கள் போராட்டம் பண்ணிய போதும் அமைதியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு முழுஆதரவாக இருந்துவிட்டு? பெரிய அளவில் தமிழகம் முழுவதும் பிரச்சனை வெடித்து கொதிப்பு பரவிய பின்னர் தான் வந்து நின்றார்கள் 

thoothukudileaks


வீடியோ பார்க்க 

பலம்!!

 தூத்துக்குடி மக்களிடையே ஸ்டெர்லைட் ஆலையை எதிர்ப்பு போராட்டத்தில் விஜய் ஆதரவு உடன் இருந்துள்ளார் இது தான் விஜய் ன் தூத்துக்குடி வேட்பாளர் ஸ்ரீநாத் பலம்  என சொல்கிறார்கள் 

மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை வேறு உருவத்தில் வரகூடாது அதற்கு தவெக விஜய் ஆதரிக்க வேண்டும் என வெளிப்படையாக பேசுகின்றனர் .

அதிமுக திமுக மீது நம்பிக்கை இல்லை என்கிறார்கள் 

அரசியல் மாற்றம் உருவாக வேண்டும் என கொள்கை கொண்டுள்ளார் விஜய் என பற்றி உயர்வாக பேசுவது கேட்க முடிகிறது.

தவெக  முன்னிலையில்..

காலேஜ் படிக்கும் இளைஞர்கள் இளைஞிகள்  இளம் தலைமுறையினர் தூத்துக்குடியில் சாதிமதபேதமின்றி  ஒவ்வொரு வீட்டிலும் விஜய் ரசிகர்கள் தம்பி தங்கைகள் இருப்பது தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் பிளஸ் முன்னிலை தருகிறது      

 

உள் குத்து அரசியல்!!!

தற்போது உள்ளூர் ல 20 மேற்பட்ட கவுன்சிலர்கள் உள் குத்து அரசியலாக ஆதரவு தெரிவித்து விசில் அடித்து வருகின்றனர் .

இதனால் இங்கு இரு முனை போட்டி  தான் ஏற்கனவே கடந்த மாதம் வரை  

தங்கள் உரிமைகளை கேட்டு போராடி விரக்தியான தூய்மை பணியாளர்கள் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் ஊதிய உயர்வு,வருவாய் சர்வேயர் கள் போக்குவரத்து கழக ஊழியர்கள், ஆசிரியர்கள், இவர்களின் குடும்ப ஒட்டு வங்கி தவெக- அதிமுக பக்கம் என சாய்கிறது என்கிறார்கள். 

வீடியோ பார்க்க 


வெள்ளி, 17 ஏப்ரல், 2026

தூத்துக்குடி பெரிய ஜாமியா பள்ளிவாசல் உள்ளே அதிமுக திமுக தவெக உட்பட ஐந்து கட்சிகள் அதிரடியாக கட்சி பிரச்சாரம் செய்திட தள்ளுமுள்ளு பரபரப்பு காவல்துறை திணறல்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி செய்தி புகைப்படங்கள் அருணன் செய்தியாளர் 

தூத்துக்குடி ஏப்ரல் 17

தூத்துக்குடி பெரிய  ஜாமியா பள்ளிவாசல் உள்ளே அதிமுக திமுக தவெக கட்சி பிரச்சாரத்தில் தள்ளுமுள்ளு   திணறி போன் தூத்துக்குடி காவல்துறை.

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் (ஏப்ரல் 17)  இன்று வெள்ளிக்கிழமை ஆதலால் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த வருவார்கள்

thoothukudileaks
அதிமுக வேட்பாளர் சித செல்லப்பாண்டியன் குல்லா அணிந்தவாறு...


காத்துகிடந்த அதிமுக!!!

இதை கருத்தில் கொண்டு அதிமுக வேட்பாளர் சித செல்லப்பாண்டியன் முன்னதாக தொழுகை நேரத்தில் இருந்து ஜாமியா பள்ளிவாசல் உள்ளே அலுவலக அறையில் காத்திருந்தார்.

 அப்போது அனுமதி பெற்றதை காட்டுங்க என்ற போலீஸ் பெண் அதிகாரி கேட்டதும் இன்று ஷாட் பிரச்சார விவரத்தை காவல்துறை இடம் காட்டினார். 

ஜாமியா பள்ளி வாசல் தொழுகை முடிந்ததும் மக்கள் வெளிவர ... தொடங்கினர் அதிமுக வேட்பாளர் சித செல்லப்பாண்டியன்  தலைமையில் குல்லா அணிந்து வாறு தனது கட்சியினர் இம்ரான் நாசர் ஜெய்கணேஷ்  ஜான்சன் தேவராஜ் தங்க மாரியம்மன் மிக்கேல் ஆகியோர் உடன் அதிமுக வாக்குறுதி துண்டு பிரசுரங்கள் வழங்கி தொடங்கினர் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது 

பதறி போன திமுக!!!

இதைப் பார்த்த திமுக வினர் ரொம்பவே பதறி போய் கவுன்சிலர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பள்ளி வாசல் உள்ளே வந்து திமுக வாக்குறுதி துண்டு பிரசுரங்கள் வழங்க வந்தார்கள்.

thoothukudileaks
திமுக கவுன்சிலர் சுரேஷ் உள்ளிட்டோர் 


 பிரச்சனை வரும் என கருதி நீங்களும் அனுமதி பெறாமல் உள்ள வர வேண்டாம் என்று தடுக்க அதை மீறி பள்ளி வாசல் உள்ளே வந்து அதிமுக வேட்பாளர் சித செல்லப்பாண்டியன் துண்டு பிரசுரங்கள் வழங்கும் அவர் அருகிலே உதயசூரியன் ஒட்டு போடுங்கள் என கூறியபடி  துண்டு பிரசுரங்கள் வழங்க பரபரப்பு உண்டானது. கைகலப்பு மோதல் ஏற்படும் சூழல் உருவாகியது .

thoothukudileaks
வேட்பாளர் கிதர் பிஸ்மி 


போலிஸ் திணறிய நிலையில் வேல்முருகன் கட்சியான தமிழக வாழ்வுரிமைக் வேட்பாளர் கிதர் பிஸ்மி அவரது சின்னமான கேமிரா உடன் வந்தார் 

வேட்பாளர் ஏசாதுரை 

அடுத்து சசிகலா கட்சி புரட்சி  முன்னேற்ற கழக வேட்பாளர் ஏசாதுரை தனது கட்சி நிர்வாகிகள் உடன் ஓடோடி வந்து சேர்ந்தார்.

பறந்தோடி வந்த தவெக !!!

கடைசியாக இந்த செய்தி கேள்விப்பட்ட விஜய் கட்சி தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ரசிகர்கள் இளைஞர்கள் பட்டாளத்துடன் பறந்தோடி வந்து துண்டுபிரசுரங்கள் வழங்க போலீசார் சில மணி திணிறித்தான் போனார்கள்

thoothukudileaks
தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் 


ஒரே நேரத்தில் பல கட்சிகள் குவிந்ததால் போலீஸார் சிறிது நேரம் திணறிப் போனாலும், பின்னர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

thoothukudileaks


தேர்தல் நெருங்க நெருங்க வழிபாட்டுத் தலங்களும் அரசியல் களமாகி வருவது இந்த சம்பவம் மூலம் தெளிவாகிறது.

thoothukudileaks


— தூத்துக்குடி லீக்ஸ் நிருபர்





வியாழன், 16 ஏப்ரல், 2026

தவெ.க.வின் முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் விஜய்

Tamil Nadu updates photo news by Arunan journalist 

மக்களின் தேர்தல் அறிக்கை" என்ற பெயரில் த.வெ.க-வின் முழு தேர்தல் அறிக்கை வெளியீடு.. பெற்றுக்கொண்ட விவசாயி நாராயணன்


thoothukudileaks


📌"சாத்தியமானதை மட்டுமே தேர்தல் வாக்குறுதியாக தவெக கொடுக்கிறது"


📌"60 வயதுக்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500"


📌"ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு தலா 6 சிலிண்டர்கள்"


📌"மணப்பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டு சேலை"


📌தரமான கல்வி வழங்கும் இலவச உறைவிடப் பள்ளிகள்


📌ரூ.20 லட்சம் பிணையில்லா கல்விக் கடன் உத்தரவாதம்


📌போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு 


📌குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வரையிலான சுகாதார காப்பீடு திட்டம்


📌வேலையில்லா பட்டதாரிக்கு மாதம் ரூ.4,000


📌 டிப்ளமோ படித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு ரூ.2500


📌5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்


📌5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி


📌கரும்பு டன்னுக்கு ரூ.4,500 குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும் 


#TVK 

தூத்துக்குடியில் SDR பேபி கேர் புதிய கிளை திறப்பு – நடிகர் சாந்தனு பாக்யராஜ் பங்கேற்பு, ரசிகர்கள் திரண்டனர்

Tamil Nadu updates

தூத்துக்குடி: ஏப்ரல் 16

தூத்துக்குடியில் குழந்தைகளுக்கான பொருட்கள் விற்பனை செய்யும் “SDR பேபி கேர்” நிறுவனத்தின் புதிய கிளை பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்டது. தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் ஏவிஎம் மஹால் அருகில் அமைந்துள்ள இக்கிளை இன்று காலை 11 மணியளவில் தொடங்கப்பட்டது.

thoothukudileaks


இந்த புதிய கிளையை திரைப்பட நடிகர் சாந்தனு பாக்யராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திறப்பு விழாவை முன்னிட்டு அந்த பகுதியில் பெரும் திரளான மக்கள் கூடினர். குறிப்பாக, ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.






மேலும், நடிகர் சாந்தனுவை காண ரசிகர்கள் அப்பகுதியில் அதிக அளவில் திரண்டதால் பரபரப்பு நிலவியது. நிகழ்ச்சி முழுவதும் உற்சாகமான சூழலில் நடைபெற்றது.


வீடியோ பார்க்க..

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிறுவனத்தின் நிறுவனர் பொன் சீலன் சிறப்பாக செய்திருந்தார். குழந்தைகளுக்கான அனைத்து வகையான விளையாட்டு உபகரணங்களும், தேவையான பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இக்கிளை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

புதன், 15 ஏப்ரல், 2026

மோடி பிரச்சாரத்துக்குப் பிறகு தூத்துக்குடி வந்த எடப்பாடி பழனிசாமி க்கு எஸ்.பி. சண்முகநாதன் வரவேற்பு குறுகிய ஆலோசனை காரணமாக பரபரப்பு

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடி ஏப்ரல் 15

கன்னியாகுமரியில் நடைபெற்ற பாரத பிரதமரின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, சென்னை நோக்கி பயணம் மேற்கொள்ள தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிசாமி க்கு அதிமுக கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

thoothukudileaks


அவரை தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான எஸ் பி சண்முகநாதன் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.


இந்நிகழ்வில் பல்வேறு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, “அ.தி.மு.க. வெற்றி நிச்சயம்” என கோஷமிட்டனர். 


விமான நிலையம் பகுதி முழுவதும் கட்சியினரின் வருகையால் உற்சாகமான சூழல் நிலவியது.

குறுகிய ஆலோசனை!!!

பின்னர், தேர்தல் பணிகள் தொடர்பாக  எடப்பாடி பழனிசாமி குறுகிய ஆலோசனை நடத்தினார். இதில் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர் 

இதனால் விமான நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆலோசனைக்குப் பிறகு அவர் சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றார்.