Tamil Nadu updates photo news by Arunan journalist
தூத்துக்குடி, மார்ச் 13:
தியாகத் தலைவி சின்னம்மா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கொள்கைகளை மையமாக கொண்டு “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்” என்ற புதிய அரசியல் இயக்கத்தை இன்று தொடங்கி, அதன் கட்சி சின்னமாக “தென்னந்தோப்பு” சின்னத்தை அறிவித்ததை முன்னிட்டு தூத்துக்குடியில் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
புரட்சி தலைவி ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி எஸ்.ஏசாதுரை தலைமையில் ...
தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணா பாண்டியன், வின்சென்ட், ஜெயபால், மகேஸ்வரன், மாரியப்பன், இக்பால் பாஷா, செல்வகுமார், ராமகிருஷ்ணன், ராமச்சந்திரன், செல்வராஜ், சபிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.
video






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக