சமத்துவ மக்கள் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமத்துவ மக்கள் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 மார்ச், 2026

தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் 11ஆம் ஆண்டு துவக்க விழா

Tamil Nadu updates 11-3-2026

தூத்துக்குடி, மார்ச் 11:

சமத்துவ மக்கள் கழகத்தின் 11ஆம் ஆண்டு துவக்க நாள் விழா தூத்துக்குடி மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் கட்சிக் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

thoothukudileaks


 மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை மற்றும் மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் வக்கீல் சகாயராஜ் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

thoothukudileaks

thoothukudileaks


விழாவில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரும் பெருந்தலைவர் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

thoothukudileaks


 தொடர்ந்து மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் கேக் வெட்டி விழாவை கொண்டாடினார். பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

வீடியோ பார்க்க 

இந்த நிகழ்ச்சியில் ...

அருண் சுரேஷ் குமார், டேனியல் ராஜ், வழக்கறிஞர் அணி தலைவர் வக்கீல் குணசேகரன், வக்கீல் வைகுந்த், மகளிர் அணி தலைவி சந்திரா, மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட துணைச் செயலாளர்கள் அந்தோணி சேவியர், அருள்ராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயகசமாடன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பாலமுருகன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட விவசாய அணி செயலாளர் கனகராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.



மேலும் மகளிர் அணி நிர்வாகிகள் ஜேசு செல்வி, சாந்தி, ராசாத்தி, பிரம்மசக்தி, கன்னியம்மாள், ரேவதி, மாவட்ட தொழிலாளர் அணி துணைச் செயலாளர் சண்முககுமார், மாநகரச் செயலாளர் முத்து செல்வம், மாநகர அவை தலைவர் மதியழகன், மாநகர பிரதிநிதிகள் சாமுவேல், ஞானராஜ், மாநகர மாணவரணி செயலாளர் விஜய் கார்த்திக், மாநகர வர்த்தக அணி செயலாளர் தொம்மை குரூஸ், வர்த்தக அணி துணைச் செயலாளர் முத்துக்குமார் மற்றும் மாநகர வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியில் புகைப்படம் வீடியோ செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

திங்கள், 22 டிசம்பர், 2025

திருவைகுண்டம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் எர்ணாவூர் நாராயணன் போட்டியிடுவது உறுதி சமத்துவ மக்கள் கழக மாவட்ட அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு விழா வில் அறிவிப்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: டிச 22

திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் போட்டியிட சமத்துவ மக்கள் கழகம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இது பற்றிய செய்தியாவது:-

இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில், மாவட்ட அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு–2026 விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ் தலைமை வகித்தார்.



தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியத் தலைவரும், சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவருமான எர்ணாவூர் நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கிறிஸ்துமஸ் கேக் வெட்டி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

“திருவைகுண்டம் தொகுதியில் நானே போட்டி” – எர்ணாவூர் நாராயணன் உறுதி

விழாவில் பேசிய எர்ணாவூர் நாராயணன்,

“தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த ஆண்டு 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், சமத்துவ மக்கள் கழகம் சார்பில் திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு தொகுதிகளை கேட்க உள்ளோம். இதில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் (திருவைகுண்டம்) சட்டமன்ற தொகுதியில் போட்டியிட நாம் இப்போதே தயாராக உழைக்க வேண்டும்.



மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமையில், நிர்வாகிகள் அனைவரும் திருவைகுண்டம் தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும். பாகம் வாரியாக கணக்கெடுத்து, வெளியூரில் இருக்கும் வாக்காளர்களையும் அடையாளம் காண வேண்டும். இந்த பணிகளை முடித்து வாக்காளர் பட்டியலை என்னிடம் வழங்கினால், சீட் வாங்குவது எனது பொறுப்பு. அந்த தொகுதியில் நானே போட்டியிட உள்ளேன்” என உறுதியாக தெரிவித்தார்.

நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்பு!!!

இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் வழக்கறிஞர் கண்ணன், தலைமைச் செயலக முன்னாள் அதிகாரி ரவீந்திரன், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணிபிச்சை, மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சகாயராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் அருள்ராஜ், அந்தோணி சேவியர், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயகசமாடன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்துசெல்வம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட விவசாய அணி செயலாளர் கனகராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் குருவம்மாள், சந்திரா, ஜேசுச்செல்வி, ஜெபராணி, ராதா லட்சுமி, பனிமதி, சாந்தி, பிரம்மசக்தி, பாத்திமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சதீஷ் மூர்த்தி, உடன்குடி ஒன்றிய செயலாளர் பாலாஜி, கருங்குளம் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், கயத்தார் ஒன்றிய செயலாளர் சவரி மிக்கேல், திருச்செந்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜ், திருச்செந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜ், மாநகர அவைத்தலைவர் மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

— தூத்துக்குடி லீக்ஸ்

சனி, 6 டிசம்பர், 2025

முதல்வர் காமராஜர் குறித்து பேச்சு…தூத்துக்குடியில் YouTuber முக்தாருக்கு எதிராக குண்டர் நடவடிக்கை கோரி புகார்

தூத்துக்குடி லீக்ஸ் — நாளிதழ் செய்தி

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் சமத்துவ மக்கள் கழகத்தின் முறையீடு

தூத்துக்குடி.டிச 7
தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து YouTube-ல் அவதூறாக பேசியதாக கூறப்படும் YouTuber முக்தாருக்கு எதிராக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது

thoothukudileaks

.



இந்தப் புகாரை  அருண் சுரேஷ் குமார்  தலைமையில் கழக நிர்வாகிகள் இணைந்து அளித்தனர்.

இந்நிகழ்வில்

  • மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட்,
  • மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் சுப்பையா,
  • அசோக்,
  • மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல்,
  • மாவட்டத் துணைச் செயலாளர் அருள்ராஜ்,
  • மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ்,
  • வக்கீல் பெஸ்டஸ்,
  • மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம்,
  • மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர்,
  • மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார்,
  • மாநகர தொண்டர் அணி செயலாளர் காமராஜ்


ஆகியோர் கலந்து கொண்டனர்.




வியாழன், 1 மே, 2025

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தேர்தல்: வெற்றி பெற்றபுதிய தலைவர் வாரியார் -க்கு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் சிறப்பு பாராட்டு விழா

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தேர்தல்: புதிய தலைவர் வாரியார் வெற்றி பெற்றார் 


தூத்துக்குடி, மே 2:

 தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் சமீபத்திய தேர்தலில் வழக்கறிஞர் வாரியார் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

இந்நிகழ்வைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் அவருக்கு சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது.



மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் புதிய தலைவருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். இந்நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில்....

 மத்திய வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் தெர்மல் ராஜா, பொருளாளர் விக்னேஷ், சமத்துவ மக்கள் கழகம் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, மாவட்ட அவை தலைவர் கண்டி வேல், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மேலும், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.


புதிய தலைவர் வாரியார் தனது வெற்றிக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்து, வழக்கறிஞர் சமூகத்தின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என உறுதியளித்தார்.


_________________________________________________

திங்கள், 21 ஏப்ரல், 2025

தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றுப்பால புனரமைப்பு கோரி மக்கள் கழகம் மனு

 # தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றுப்பால புனரமைப்பு கோரி மக்கள் கழகம் மனு


தூத்துக்குடி, ஏப்ரல் 21: கடந்த 2023 டிசம்பர் மாதம் ஏற்பட்ட கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் உண்டான பெரும் வெள்ளப்பெருக்கால் ஆத்தூரில் புதிதாக கட்டப்பட்ட ஆற்றுப்பாலத்தின் தூண் ஆற்றிற்குள் புதைந்து, பாலம் சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டு 18 மாதங்களாக மூடப்பட்டுள்ளது.



தற்போது, முன்பு கட்டப்பட்ட பழைய பாலத்தில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.


 இந்த பழைய பாலம் தடுப்பு சுவர் இன்றி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதுடன், மிகவும் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்துகிறது.


இந்நிலையில், மத்திய மாநில அரசுகள், நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக பழுதடைந்த பாலத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த மனு அளிப்பு நிகழ்வில், மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்டத் துணைச் செயலாளர்கள் அருள்ராஜ், சூசைமுத்து, மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் சின்னத்துரை, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இந்த 18 மாத கால போக்குவரத்து இடையூறு தொடர்பாக பெரும் அவசர நடவடிக்கை தேவை என்று சமத்துவ மக்கள் கழகத்தினர் தங்கள் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.