சனி, 6 டிசம்பர், 2025

முதல்வர் காமராஜர் குறித்து பேச்சு…தூத்துக்குடியில் YouTuber முக்தாருக்கு எதிராக குண்டர் நடவடிக்கை கோரி புகார்

தூத்துக்குடி லீக்ஸ் — நாளிதழ் செய்தி

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் சமத்துவ மக்கள் கழகத்தின் முறையீடு

தூத்துக்குடி.டிச 7
தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து YouTube-ல் அவதூறாக பேசியதாக கூறப்படும் YouTuber முக்தாருக்கு எதிராக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது

thoothukudileaks

.



இந்தப் புகாரை  அருண் சுரேஷ் குமார்  தலைமையில் கழக நிர்வாகிகள் இணைந்து அளித்தனர்.

இந்நிகழ்வில்

  • மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட்,
  • மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் சுப்பையா,
  • அசோக்,
  • மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல்,
  • மாவட்டத் துணைச் செயலாளர் அருள்ராஜ்,
  • மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ்,
  • வக்கீல் பெஸ்டஸ்,
  • மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம்,
  • மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர்,
  • மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார்,
  • மாநகர தொண்டர் அணி செயலாளர் காமராஜ்


ஆகியோர் கலந்து கொண்டனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக