வெள்ளி, 31 ஜூலை, 2026

தோட்டக் கிணற்று மண் எடுத்த விவகாரம்: எட்டு பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் மேலஈரால் கிராம மக்கள் மனு நடந்தது என்ன விளக்கம்

Tamil Nadu updates தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி அருணன் செய்தியாளர் 

தவறான வழக்குகளை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மேலஈரால் கிராம மக்கள் மனு

தூத்துக்குடி, ஜூலை 31:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டத்திற்குட்பட்ட மேலஈரால் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் வழக்குகளை ரத்து செய்யக் கோரி,

அக்கிராம பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் குருசந்திரன் அவர்களிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். 

thoothukudileaks


அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 24.06.2026 அன்று மேலஈரால் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நான்கு கோவில்களின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்கு முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த கண்மாய் மற்றும் குடிநீர் கிணறு சீரமைக்கப்படாமல் இருந்ததாகவும், இதுகுறித்து பலமுறை அரசுத் துறையினரிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, கோவிலுக்கு எதிரே அமைந்திருந்த சேதமடைந்த கிணறு மற்றும் கண்மாயால் விபத்து ஏற்படக்கூடாது என்ற நோக்கில், ஊர் மக்கள் தங்களது சொந்த செலவில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதற்காக கிராமத்தைச் சேர்ந்தவர்களின் தோட்டக் கிணற்றில் தோண்டப்பட்ட சரள்மண்ணை டிராக்டர் மூலம் கண்மாய் மற்றும் கோவில் பகுதிக்கு கொண்டு வந்தபோது, எட்டயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்வேல்முருகன் வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.



அப்போது, மேலிடத்திலிருந்து புகார் வந்திருப்பதால் காவல் நிலையத்திற்கு வந்து மனு அளிக்குமாறு போலீசார் கூறியதாகவும், பின்னர் வாகனம் மற்றும் ஓட்டுநரை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.


இதையடுத்து, காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கோவில் பணிக்காகவே மண் எடுத்துச் செல்லப்பட்டதால் வழக்குப் பதிவு செய்யாமல் வாகனத்தையும் ஓட்டுநரையும் விடுவிப்பதாகவும், இனி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் உறுதியளித்ததால் போராட்டத்தை கைவிட்டதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.


ஆனால், 21.07.2026 அன்று மேலஈரால் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கு சம்மன் வழங்கப்பட்டு, 22.07.2026 அன்று காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டதாகவும், அப்போது 12.06.2026 தேதியிட்ட குற்ற எண்கள் 240/2026 மற்றும் 241/2026-இல் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி, பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தவறான வழக்குகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலஈரால் கிராம மக்கள் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.



thoothukudileaks


படவிளக்கம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் குருசந்திரன் அவரிடம் மனு அளித்த பின்னர் மேலஈரால் கிராம பொதுமக்கள் குழுவாக நின்ற காட்சி.

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றம் மீண்டும் இருக்கை விவகாரத்தில் அதிமுகவில் இருந்து தவெக தாவிய கவுன்சிலர் வெளிநடப்பு

 "தூத்துக்குடி லீக்ஸ்" நாளிதழ

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றம் மீண்டும் இருக்கை விவகாரத்தில் அதிமுகவில் இருந்து தவெக தாவிய கவுன்சிலர் வெளிநடப்பு 

தூத்துக்குடி, ஜூலை 31: தூத்துக்குடி மாநகராட்சியின் மாதாந்திர சாதாரண மாமன்றக் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் மாநகராட்சி மன்ற அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


கூட்டம் தொடங்கியதும், அண்மையில் அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த கவுன்சிலர் மந்திரமூர்த்தி, கடந்த மாமன்றக் கூட்டத்தில் எழுப்பிய இருக்கை தொடர்பான விவகாரத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில் எந்த இடத்திலும் அமராமல் எழுந்து நின்றபடி இருந்தார்.

அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், "மாநகராட்சியில் நீங்கள் இன்னும் அதிமுக கவுன்சிலராகவே உள்ளீர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக மாமன்றக் கூட்டங்களில் தொடர்ந்து வெளிநடப்பு செய்து, பின்னர் வெளியே சென்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள். தயவுசெய்து அமர்ந்து கூட்டத்தில் பங்கேற்கவும். இல்லையெனில், வழக்கம்போல் நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்," என்று தெரிவித்தார்.

thoothukudileaks


இதனைத் தொடர்ந்து கவுன்சிலர் மந்திரமூர்த்தி மாமன்றக் கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தார். 


அதன்பிறகு மாநகராட்சி நிர்வாகம் கொண்டு வந்த அனைத்து தீர்மானங்களும் மாமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு நிறைவடைந்தது. :::


திங்கள், 27 ஜூலை, 2026

பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின் !!! விடுதலைக்கான சட்ட நடவடிக்கைகள் தீவிரம் தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்த பேச்சு

Tamil Nadu updates

 photo news by Arunan journalist 

பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின் !!! விடுதலைக்கான சட்ட நடவடிக்கைகள் தீவிரம்  தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்த பேச்சு...


திருநெல்வேலி: ஜுலை 27


தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு துணை முதலமைச்சரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று சிறைக்குச் சென்று அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

thoothukudileaks


அப்போது, சிறையில் இருந்தாலும் முன்பைவிட அதிக உற்சாகத்துடனும், கழகப் பணியிலும் மக்கள் சேவையிலும் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்ற மன உறுதியுடனும் மார்க்கண்டேயன் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆறுதல்!!!

மேலும், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மார்க்கண்டேயனின் விடுதலைக்காக கழகத்தின் வழக்கறிஞர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், அதுகுறித்து விளக்கி அவருக்கு ஆறுதல் தெரிவித்ததாகவும் கூறினார்.


தூத்துக்குடி விமான நிலையத்தில்..

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ...உதயநிதி ஸ்டாலின்,

 "பழிவாங்கும் நோக்கத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மிசா மற்றும் அவசரநிலை காலத்தையே எதிர்கொண்ட இயக்கம் தி.மு.க. ஆகும். இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கு கழகத் தொண்டர்கள் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள். 

thoothukudileaks


விமர்சனங்களை அடக்குவதற்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கைது நடவடிக்கையும் நீதிமன்றத்தில் தோல்வியடைகிறது. இதேபோல் மக்கள் மன்றத்திலும் இந்த ஆட்சி தோல்வியை சந்திப்பது உறுதி" என்று கடுமையாக விமர்சித்தார்.


இந்த சந்திப்பின் போது ...

முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மேயர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சனி, 25 ஜூலை, 2026

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கல்

Tamil Nadu updates,

ஓட்டப்பிடாரம், ஜூலை 25:

முன்னாள் முதலமைச்சரும், பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு,... ஓட்டப்பிடாரம் அருகே மாப்பிள்ளையூரணி டேவிஸ்புரம் ஜெ.ஜெ. நகர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் 4-வது ஆண்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.

எம். சுந்தர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு சோனாராஜன், செந்தில்குமார், குமார் ஜி., ராஜா, பாஸ்கர், சுரேஷ் கண்ணன், ரியால்சன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

thoothukudileaks




சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ..

முதல் பரிசை ...

எஸ்.வி. சிட்பண்ட் நிறுவனத்தின் நிறுவனர் ஏ. சுதாகர் வழங்கி பாராட்டினார். 


4-வது பரிசை மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி பொன்பாண்டி வழங்கினார். வெற்றி பெற்ற அனைத்து வீரர்களுக்கும் பொதுமக்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

டேவிஸ்புரம் சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று விறுவிறுப்பாக நடைபெற்ற மாட்டு வண்டி எல்கைப் பந்தயத்தை கண்டு களித்தனர். காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சி அப்பகுதியில் திருவிழா சூழலை ஏற்படுத்தியதுடன், பாரம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்தது.

444வது பனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் OLS Friends பொருட்காட்சி Expo 2026 தொடக்கம்

Tamil Nadu updates, 

photo news by Arunan journalist 


தூத்துக்குடி, ஜூலை 25: 

உலகப் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலயத்தின் 444வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, OLS Friends சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட "Expo 2026" பிரம்மாண்ட பொருட்காட்சி, சனிக்கிழமை (25.07.2026) மாலை 5 மணியளவில் தூத்துக்குடி பெல் ஹோட்டல் அருகே உள்ள புனித சவேரியானா இல்ல மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது.

thoothukudileaks


நிகழ்ச்சியில், பொருட்காட்சியின் தலைமை அலுவலகத்தை பரிசுத்த பனிமய அன்னை பேராலய அதிபர் அருட்தந்தை ஜான் செல்வம் (Rev. Fr. John Selvam) மற்றும் புனித சவேரியானா இல்ல அதிபர் அருட்தந்தை சிங்கராயன் (Rev. Fr. Singarayan) ஆகியோர் திறந்து வைத்து சிறப்பித்தனர்.

thoothukudileaks


தொடர்ந்து நடைபெற்ற விழாவில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி OLS Friends Expo 2026 பொருட்காட்சியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். 

மேயர் ஜெகன் பெரியசாமி பரபரப்பு பேச்சு 

அப்போது, 444வது பனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த பொருட்காட்சி பொதுமக்களுக்கு பயனுள்ள வணிக மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை ஒருங்கிணைத்துள்ளதாக அவர் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில்.....

 பேரருட்திரு பிரதீபன் லிபோன்ஸ், அருட்திரு அமல்ராஜ் அமிர்தநாதன், புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அருட்திரு அமல்ராஜ் அமிர்தநாதன், சட்ட ஆலோசகர் A. செல்வின், தூத்துக்குடி பார் அசோசியேஷன் செயலாளர், தொமுச தொழில்சங்கம் ப்ளோரன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



குழந்தை மகிழ்ச்சியில் குதுகலிக்க விளையாட்டு உபகரணங்கள் 

OLS Friends Expo 2026 ஏற்பாட்டுத் தலைவர் K. டென்சிங், A.T.S. அருள் Ex MC, செயலாளர் A.P. நிர்மலா, பொருளாளர் மற்றும் OLS Friends பொருட்காட்சி குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பொருட்காட்சியில் வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சாதனங்கள், ஆடைகள், உணவக அரங்குகள், சிறுவர் விளையாட்டு அம்சங்கள், பல்வேறு வணிக நிறுவனங்களின் அரங்குகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 


பனிமய மாதா திருவிழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த பொருட்காட்சியை பார்வையிடுவார்கள் என  ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

காவல் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அருணாச்சலம் குடும்பத்துக்கு பிரேமலதா ஆறுதல் தேமுதிக சார்பில் நிதியுதவி வழங்கல்

 தூத்துக்குடி, ஜூலை 25:

தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டு, அமுதா நகர் 1-வது தெருவைச் சேர்ந்த நாகராஜின் மகன் அருணாச்சலம் (24) என்பவரை, எஃப்.சி.ஐ. குடோன் எதிரே சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்ததாகக் கூறி, தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் தரண்யா தலைமையிலான காவல்துறையினர் சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர்.

thoothukudileaks


காவல் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்தபோது அருணாச்சலத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்த தகவல் பரவியதும், அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மருத்துவமனை மற்றும் காவல் நிலையம் முன்பு திரண்டனர். காவல் விசாரணை என்ற பெயரில் போலீசார் தாக்கியதாலேயே அருணாச்சலம் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும், மரணமடைவதற்கு முன்பு போலீஸ் தாக்குதல் குறித்து அருணாச்சலம் வீடியோவில் பேசியிருப்பதாகவும், சம்பவத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


இந்நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அருணாச்சலத்தின் தாய் பரமேஸ்வரி, தந்தை நாகராஜ் மற்றும் சகோதரர் சுடலைமணி ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து, தேமுதிக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அருணாச்சலத்தின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, தேமுதிக சார்பில் நிதியுதவியை வழங்கினர். மேலும், அருணாச்சலம் உயிரிழப்பு சம்பவத்தில் முழுமையான விசாரணை நடத்தி, உண்மை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டு, சம்பந்தப்பட்டோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் அலெக்சாண்டர், மாவட்ட துணைச் செயலாளர்கள் சம்சுதீன், லிவிங்ஸ்டன், மாவட்ட பொருளாளர் ராஜன், ஒன்றியச் செயலாளர்கள் ஜெயக்குமார், கணேசன், முருகன், விக்னேஷ் ராஜ், பகுதி செயலாளர்கள் நாராயணமூர்த்தி, வல்லரசு, துறைசார்பு அணி செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், மணிகண்டன், அந்தோணி ராஜ், இருளப்பசுவாமி, அருண், சபரீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

வியாழன், 23 ஜூலை, 2026

தூத்துக்குடியில் விசாரணை கைதி அருணாசலம் உயிரிழப்பு குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. சண்முகநாதன், கீதா ஜீவன் ஆறுதல் நீதி விசாரணை கோரிக்கை வலுத்தது

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

அருணாசலம் உயிரிழப்பு: குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. சண்முகநாதன், கீதா ஜீவன் ஆறுதல்  நீதி விசாரணை கோரிக்கை வலுத்தது

தூத்துக்குடி, ஜூலை 23:

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (24) உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவரது குடும்பத்தினரை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனும், திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

thoothukudileaks


thoothukudileaks


தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டு அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன்–பரமேஸ்வரி தம்பதியரின் மகனான அருணாசலம், கடந்த 2026 ஜூலை 17-ஆம் தேதி எஃப்.சி.ஐ. குடோன் எதிரே சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்ததாகக் கூறி, தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் தரண்யா தலைமையிலான காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.


விசாரணைக்காக காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்தபோது காவல்துறையினர் தாக்கியதால் தலையில் காயம் ஏற்பட்டு மயக்கமடைந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். பின்னர் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜூலை 23-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறந்து போனஅருணாசலம்


இதையடுத்து, காவல்துறையினரின் தாக்குதலே உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை மற்றும் காவல் நிலையப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியதுடன், சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த உயர் காவல் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எஸ்.பி. சண்முகநாதன் ஆறுதல்

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த அதிமுக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன், அருணாசலத்தின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அருணாசலம் உயிரிழப்பு குறித்து நீதிபதி தலைமையில் உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும். குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதி வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

அப்போது மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், வட்ட செயலாளர்கள் பூர்ணசந்திரன், தூத்துக்குடி மணிகண்டன், கொம்பையா, சொக்கலிங்கம், சம்படி பழணி, சாம்ராஜ், சகாயராஜா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கீதா ஜீவன் 

நீதி கோரிக்கை

இதேபோல், திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனும் அரசு மருத்துவமனைக்கு சென்று அருணாசலத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அவர் பேசுகையில், "இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும். சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மை வெளிக்கொண்டு வர வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

thoothukudileaks


அவருடன் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள், திமுக பகுதி செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உடனிருந்தனர்.

இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்படி விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து முழுமையான உண்மை வெளிவர வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வலுத்து வருகிறது.

தூத்துக்குடியில் மது வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரம்

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடியில் மது வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு – வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரம்

தூத்துக்குடி, ஜூலை 23:

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் மதுவிலக்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 24 வயது இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks


இதுதொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி விசாரணை நடைபெற்று வருவதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

thoothukudileaks
மருத்துவமனையில்
முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் போலீசாருடன் இளைஞர் உயிரிழப்பு குறித்து வாக்குவாதம் செய்தியாளர் இடம் பேட்டி அளித்தார்.


காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, ..

கடந்த ஜூலை 17 அன்று தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (24) என்பவர் மதுவிலக்கு அமலாக்க சோதனையின்போது, 180 மில்லி லிட்டர் கொள்ளளவுள்ள 120 மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக கண்டறியப்பட்டது. 



இதையடுத்து, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 751/2026-ன் கீழ் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் பிரிவுகள் 4(1)(A) மற்றும் 14-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட பின்னர், சட்டப்படி பின்பற்ற வேண்டிய அனைத்து நடைமுறைகளும் முறையாக கடைபிடிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


 அவரது உடல் சோதனை காணொளியாக பதிவு செய்யப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட விவரம் அவரது குடும்பத்தினருக்கும் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் ...

பின்னர், அதே நாள் மாலை சுமார் 5.50 மணியளவில் அருணாசலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். 

மருத்துவ சான்றிதழ்!!!

அவரை பரிசோதித்த மருத்துவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு உடல்நிலை தகுதியானது என்றும், அவரது உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்றும் மருத்துவச் சான்றிதழ் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் லாக் அப்!!!

மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் காவல் நிலையத்திற்கு மீண்டும் அழைத்து வரப்பட்ட அவர், பிற கைதிகளுடன் லாக்-அப்பில் வைக்கப்பட்டார். 

சிசிடிவி கேமரா செக்கப்!!!

அப்போது மற்ற கைதிகளுடன் இயல்பாக பேசிக்கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்ததாகவும், இந்த சம்பவம் லாக்-அப்பிற்கு முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மயக்கம் முதலுதவி!!!!

உடனடியாக காவல்துறையினர் அவருக்கு முதலுதவி அளித்து, குடிநீர் வழங்கி பாதுகாப்பாக அமர வைத்தனர். மேலும், காவல் நிலைய வரவேற்பு பகுதியில் இருந்த அவரது தாயாரையும் அழைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை உறவினர்களுடன் தொடர் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், மருத்துவமனை அருகே அவர் மீண்டும் மயங்கி விழுந்ததாக அவரது உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இன்று உயிரிழந்தார் 

தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சை பலனளிக்காமல் ஜூலை 23 அன்று அருணாசலம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

தீவிர விசாரணையில் காவல்துறை!!!

இந்த சம்பவம் தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி விசாரணை நடைபெற்று வருவதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

செவ்வாய், 21 ஜூலை, 2026

தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அதிமுக அமைப்பு செயலாளரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

.தூத்துக்குடி ஜூலை 21


அதிமுகவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக அமைப்புச் செயலாளரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் சென்னை தலைமைக் கழக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது

thoothukudileaks


 தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தின் போது அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை வரவேற்று பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

இதற்குத்தான் ஆசைப்பட்டாயா?"பாலகுமாரா!!தூத்துக்குடி திமுகவில் என்ன நடக்கிறது?மார்க்கண்டேயனின் 'மெகா ஸ்கெட்ச்' பலித்ததா?!

தூத்துக்குடி லீக்ஸ் ஸ்மார்ட் ஸ்டோரி

செய்தி தகவல் ரோஜா அருணன் செய்தியாளர்

 21-7-2026

"இதற்குத்தான் ஆசைப்பட்டாயா?"

பாலகுமாரா!!!


மார்க்கண்டேயனின் 'மெகா ஸ்கெட்ச்' பலித்ததா? வடக்கு மாவட்ட செயலாளர் பதவியை குறிவைத்த அரசியல் நகர்வு... அனிதா ராதாகிருஷ்ணனின் 'கிரேட் எஸ்கேப்'... தூத்துக்குடி திமுகவில் என்ன நடக்கிறது?


தூத்துக்குடி அரசியலில் கடந்த இரண்டு நாட்களாக பேசப்படும் ஒரே விஷயம் – விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன். பொதுக்கூட்ட மேடையில் முதல்வர் ஜோசப் விஜய் குறித்து பேசிய ஒரு பேச்சு, அதைத் தொடர்ந்து நடந்த காவல்துறை நடவடிக்கை, கைது, நீதிமன்ற காவல், அதற்குப் பிறகு மாநில திமுக தலைவர்களின் தொடர் கண்டன அறிக்கைகள்... இவை அனைத்தும் சாதாரண சம்பவங்களா? அல்லது இதன் பின்னால் பெரிய அரசியல் கணக்கு இருக்கிறதா? என்ற கேள்விதான் அரசியல் வட்டாரங்களில் சுற்றி வருகிறது.


"கடந்த ஒரு மாதமாக போட்ட பிளான் சக்சஸ் ஆகிவிட்டதாம்..." பில்டிங் ஸ்ட்ராங்  ஃபேஸ் மட்டம் வீக்காகி 15 நாட்கள் சிறைக்கு போக வேண்டியதாக ரொம்ப அசிங்கமாச்சு குமாரு என கட்சி வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படும் தகவல்களே இந்த ஸ்மார்ட் ஸ்டோரியின் மையமாக உள்ளன.





தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவில் இரண்டு அதிகார மையங்கள் !!


தூத்துக்குடி மாவட்ட திமுக, நிர்வாக வசதிக்காக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.


வடக்கு மாவட்டம் – தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம்.


தெற்கு மாவட்டம் – திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம்.


வடக்கு மாவட்ட செயலாளராக கீதா ஜீவன் தொடர்கிறார். தெற்கு மாவட்ட செயலாளராக  திருச்செந்தூர் எம் எல் ஏ அனிதா ராதாகிருஷ்ணன்  உள்ளார்.


ஆனால் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் கீதா ஜீவன் தோல்வியடைந்த நிலையில், விளாத்திகுளம் மார்க்கண்டேயனும், கோவில்பட்டி கருணாநிதியும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாக சட்டமன்றத்திற்குச் சென்றுள்ளனர்.


---தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்டத்தில்  கீதா ஜீவன் தூத்துக்குடியில் தோற்று விட்டார் ஆனாலும் வடக்கு மாவட்ட செயலாளர் ஆக தொடர்வது விளாத்திகுளம் வெற்றி பெற்ற மார்க்கண்டேயன் எம்எல்ஏ க்கு கடந்த ஒரு மாதமாக உறுத்தியது 


"நான் எம்.எல்.ஏ... இன்னும் மாவட்ட செயலாளர் ஏன் இல்லை?"


திராவிடக் கட்சிகளில் மாவட்ட செயலாளர் பதவி என்பது வெறும் கட்சிப் பொறுப்பு அல்ல. மாவட்டம் முழுவதையும் கட்டுப்படுத்தும் அதிகார மையம். தேர்தல் வேட்பாளர் தேர்வு முதல் நிர்வாக நியமனம் வரை செல்வாக்கு செலுத்தும் பதவி.

அதனால் திராவிட கட்சிகள் அதிமுக திமுக மாவட்ட தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்எல்ஏ அமைச்சர் ஆக இருப்பவர்களுக்கே வழங்கி வரும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.


அதனால்தான், "தேர்தலில் வெற்றி பெற்றது நான்... அப்படியிருக்க வடக்கு மாவட்ட செயலாளர் பதவி இன்னும் வேறு ஒருவரிடம் ஏன்?" என்ற கேள்வி கடந்த ஒரு மாதமாக மார்க்கண்டேயனை உறுத்தியதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

திருச்சி வழி ஆலோசனை!!!

இதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும், "தலைவர், உதயநிதி, கனிமொழி வரை கவனிக்கும் அளவுக்கு அரசியல் முக்கியத்துவம் பெறும் சூழல் உருவானால் வாய்ப்பு உருவாகும்" என்ற ஆலோசனையும் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


---


கோவில்பட்டி கூட்டம்... திருப்புமுனை மேடை?


கடந்த சனிக்கிழமை இரவு கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், கோவில்பட்டி கருணாநிதி எம்.எல்.ஏ. தனது உரையை அமைதியாக முடித்தார்.


ஆனால் அடுத்து பேசிய மார்க்கண்டேயனின் பேச்சு அரசியல் சூட்டை கிளப்பியது.

 தமிழக முதல்வர் ஜோசப் விஜயை கடுமையாக விமர்சித்ததாக கூறப்படும் அந்தப் பேச்சு, சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலானது. உளவுத்துறை வரை அந்த வீடியோ சென்றதாகவும், அதன்பின் காவல்துறை நடவடிக்கை வேகமெடுத்ததாகவும் கூறப்படுகிறது.



"வரமாட்டேன்... கைது செய்ய சபாநாயகர் அனுமதி காட்டுங்கள்!"


திங்கட்கிழமை அதிகாலை காவல்துறையினர் மார்க்கண்டேயனை விசாரணைக்காக அழைத்துச் செல்ல அவரது இல்லத்துக்குச் சென்றனர்.


முதலில் "நான் எம்.எல்.ஏ.; கைது செய்ய சபாநாயகர் அனுமதி காட்டுங்கள். வரமாட்டேன்" என்று வாக்குவாதம் செய்ததாகவும், பின்னர் காவல்துறை வாகனத்தில் புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

துப்பாக்கி???

மாவட்ட காவல் அலுவலகத்தில் ஊடகங்கள் திரண்டபோது, அவர் போலீசார் துப்பாக்கி காட்டி மிரட்டுவதாகக் கூறி சத்தமிட்ட சம்பவமும் அன்றைய பரபரப்பை அதிகரித்தது.

thoothukudileaks


---நடக்கும் விஷயங்கள் தெரிந்து கொண்டாரா இல்லை யா தெரியல விளாத்திகுளம் எம் எல் ஏ மார்க்கண்டேயன் கைதின் போது முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் திமுக தொண்டர்கள் மகளிர் அணியினர் எல்லாம் திரட்டி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் போலீசார் உடன் மல்லுக்கட்டும் மறியலில் ஈடுபட்டு கைது செய்து விடுவிக்க பட்டார் முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன்.


"இன்றிரவே வெளியே வந்துவிடலாம்..." ஹேப்பி யாக என்ற கணக்கு உடைந்ததா?


நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு முன்ஜாமீன் கிடைத்து அன்றே வெளியே வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்ததாக  கூறுகின்றனர்.

ஏனென்றால் கடந்த மாதம் இதே போல் முதல்வர் ஜோசப் விஜய் குறித்து பேசிய திருச்செந்தூர் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் போலீஸ் கைது செய்து நள்ளிரவில் நீதிபதி இடம் ஆஜர் படுத்தி முன் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார்?

பூமராங்!!!

அதே போல் தானும் எம் எல் ஏ என்பதால்?முன் ஜாமீன் கிடைக்கும் so அன்றிரவே ஹேப்பியாக வெளியே வந்து விடலாம் என சீன்  போட பூமராங் ஆகிடுச்சு 

ஆனால்? விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழக்கில் நீதிமன்றம் 15 நாள் நீதிமன்றக் காவல் உத்தரவிட்டதும் அந்தக் கணக்கு மாறிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.நொந்தார்.

thoothukudileaks


---


அதன்பிறகு நடந்தது என்ன?


இதுதான் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டும் முக்கிய அம்சம்.


மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி. கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கண்டன அறிக்கைகள் வெளியிட்டனர்.


இதன் மூலம் மாநில அளவில் விளாத்திகுளம் எம் எல் ஏ மார்க்கண்டேயன் பெயர் பேசப்படும் சூழல் உருவானது. "இப்போது மாவட்ட செயலாளர் பதவிக்கான வாய்ப்பு அதிகரித்திருக்கலாம்" என்ற பேச்சும் கட்சிக்குள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.


---


அனிதா ராதாகிருஷ்ணன்... 'கிரேட் எஸ்கேப்' ஏன்?


இந்த பரபரப்பில் இன்னொரு பெயரும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது – அனிதா ராதாகிருஷ்ணன்.


காவல்துறை நடவடிக்கையின்போது நேரடி மோதலைத் தவிர்த்து அமைதியாக விலகியதாகவும், அரசியல் ரீதியாக தேவையற்ற சிக்கலைத் தவிர்க்கும் வகையில் நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் உடன் நெருக்கமாக பழக்கத்தில் இருக்கிறார்.


 மயக்கம் வந்துடுச்சு என கார் ல சென்று விட்டார்  இதையே சிலர் "கிரேட் எஸ்கேப்" என்று வர்ணிக்கின்றனர்.

thoothukudileaks


---


இறுதியில்...


மார்க்கண்டேயனின் கைது அவருக்கு அரசியல் அனுதாபத்தையும் திமுக மேலிடம் அளவிலான கவனத்தையும் பெற்றுத் தந்ததா? வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கான வாய்ப்பை அதிகரித்ததா? அல்லது இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமா?


இந்தக் கேள்விகளுக்கான பதில் அடுத்த சில வாரங்களில் வெளியாகும் 

ஆனால் ஒன்று மட்டும் உறுதி... வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் ஓரம் கட்ட பட்டால் தூத்துக்குடி யில் திமுக காணாமல் போக வாய்ப்பு அதிகம் உள்ளது.


தூத்துக்குடி திமுகவில் அமைதியாக இருந்த அரசியல் களம், இப்போது மீண்டும் கொதிக்கத் தொடங்கியுள்ளது..




தூத்துக்குடி பத்திரிகையாளர்களிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி.க்கு மனு

தூத்துக்குடி பத்திரிகையாளர்களிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு: கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி.க்கு மனு

தூத்துக்குடி, ஜூலை 21:

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகத்தினரிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபு தரக்குறைவாக நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டி, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் மற்றும் தூத்துக்குடி பியர்ஸ் சிட்டி பிரஸ் கிளப் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசியதாகக் கூறப்படும் வழக்கில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன் மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.


அப்போது, சம்பவத்தை செய்தியாக பதிவு செய்ய ஊடகத்துறையினர் புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க முயன்றபோது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபு அதைத் தடுத்து நிறுத்தியதுடன், ஊடகத்தினரிடம் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி, அநாகரிகமாக நடந்து கொண்டதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஜனநாயக கடமை!!!

மேலும், ஆயிரக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான நடவடிக்கைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது ஊடகங்களின் ஜனநாயகக் கடமை என்றும், அந்தப் பணியை மேற்கொள்ள விடாமல் தடுத்தது கண்டனத்திற்குரியது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

thoothukudileaks


இன்னும் பணி மாற்றம் பன்னாமல் இருப்பது ஏன்!!!

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபு பல ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வருவதாகவும், இதற்கு முன்பும் பல்வேறு நிகழ்வுகளில் ஊடகத்துறையினரிடம் இதுபோன்ற முறையில் நடந்து கொண்டதாகவும் மனுவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


எனவே, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபு மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், அவரை தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் மற்றும் தூத்துக்குடி பியர்ஸ் சிட்டி பிரஸ் கிளப் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தொடர்பாக காவல்துறை தரப்பின் அதிகாரப்பூர்வ பதில் இதுவரை வெளியாகவில்லை.



திங்கள், 20 ஜூலை, 2026

பாளையங்கோட்டை மத்திய சிறையில் விளாத்திகுளம் எம் எல் ஏ மார்க்கண்டேயன்!!!

 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது

15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு 

இது பற்றிய செய்தியாவது....

தூத்துக்குடி, ஜூலை 20:

தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு-1 (DCB-1) போலீசார், DCB குற்ற எண்: 16/2026-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் அவர்களை திங்கள்கிழமை (20.07.2026) கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

thoothukudileaks




இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி நீதித்துறை நடுவர்-1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பாளையங்கோட்டை சிறை 

வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர், மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.


இந்த கைது மற்றும் நீதிமன்ற நடவடிக்கை தூத்துக்குடி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் பேச்சு விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் பேச்சு விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது

தூத்துக்குடி, ஜூலை 20:

தமிழக முதலமைச்சர் விஜயை குறித்து சர்ச்சைக்குரிய மற்றும் மிரட்டல் விடுக்கும் வகையில் பொதுக்கூட்டத்தில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்று அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவில்பட்டி அருகே கிருஷ்ணன்கோவில் திடலில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், கருணாநிதி எம்.எல்.ஏ. தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. 

thoothukudileaks


இதில் ஒன்றிய செயலாளர்கள் பீக்கிலிப்பட்டி முருகேசன், ராதாகிருஷ்ணன், ஜெயக்கண்ணன், சுப்பிரமணியன், கருப்பசாமி, சின்னப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


சோசியல் மீடியாவில் பரவிய வீடியோக்கள்

அக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் விஜயை ஒருமையில் குறிப்பிட்டு, சட்டமன்றம் தொடர்பாகவும், அவரது உடல் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதையடுத்து, பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற போலீசார் மார்க்கண்டேயனை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது. போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி, மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.

கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன் முதற்கட்ட விசாரணைக்காக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்களின் பொது மேடை பேச்சுகள் சட்ட வரம்புக்குள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல்வேறு தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

உலகப் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா ஜூலை 26 ல் கொடியேற்றம் ஆகஸ்ட் 5 வரை கோலாகலம்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

photo news by ரோஜா அருணன் 

உலகப் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா ஜூலை 26-ல் கொடியேற்றம்: ஆகஸ்ட் 5 வரை கோலாகலம்

தூத்துக்குடி, ஜூலை 20:

உலகப் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை திருத்தலப் பேராலயத்தின் 444-வது ஆண்டு பெருவிழா வருகிற ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்குகிறது. தொடர்ந்து ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் திருவிழா நடைபெறுகிறது.

thoothukudileaks


திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை சிறப்பு திருப்பலிகள், மறையுரைகள், செபமாலை, நற்கருணை ஆராதனை, அன்னையின் திருவுருவ பவனி உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

thoothukudileaks


 தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அன்னையின் அருளைப் பெற உள்ளனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 2-ஆம் தேதி அன்புக் காலை திருப்பலியும், குழந்தைகளுக்கான புதுநன்மை திருவிழாவும் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 4-ஆம் தேதி செபமாலை, நற்கருணை ஆராதனை மற்றும் அன்னையின் மரியாதைப் பவனி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி பெருவிழா சிறப்பு திருப்பலி மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

thoothukudileaks


திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பாதுகாப்பு, போக்குவரத்து, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. விழாவில் பக்தர்கள் ஒழுங்குமுறையுடன் கலந்து கொண்டு அன்னையின் அருளைப் பெறுமாறு பேராலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

பெருவிழா நிர்வாக பொறுப்பாளர்கள்:

  • அதிபர்: அருட்பணி. ஜான் செல்வம்
  • உதவிப் பங்குத்தந்தை: அருட்பணி. ஜெரால்டு
  • துணைத் தலைவர்: அன்டோ
  • செயலாளர்: எட்வின் பாண்டியன்
  • பொருளாளர்: ஜோ சார்ல்ஸ்
  • துணைச் செயலாளர்: பெனாட்
thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


சனி, 18 ஜூலை, 2026

தூத்துக்குடி லீக்ஸ் சிறப்பு தகவல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் 33 முக்கிய கேள்விகள் ஆகஸ்ட் 1 முதல் கணக்கெடுப்பு பணி தொடக்கம் தவறான தகவல் அளித்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை ? நீங்களே சுயமாக இணையதளம் மூலமும் பதிவு செய்வது எப்படி ? வழிமுறைகளை எளிதாக முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள்

Tamil Nadu updates 

தகவல் செய்தி புகைப்படங்கள் அருணன் செய்தியாளர் 

இன்றுமுதல் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: 33 கேள்விகளுக்கு பதிலளிக்க பொதுமக்கள் தயாராகுங்கள்

 

தூத்துக்குடி லீக்ஸ் சிறப்பு தகவல்கள் !!!

தமிழகத்தில் இன்றுமுதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளன. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் இந்த கணக்கெடுப்பில், ஒவ்வொரு குடும்பத்திடமும் மொத்தம் 33 முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டு விவரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கமாக 10 ஆண்

thoothukudileaks

டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய கணக்கெடுப்பு, கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அந்தப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன

இன்றுமுதல் தமிழகத்தில் தொடங்க இருக்கும்


மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் 33 கேள்விகள் அரசு உத்தரவில் தகவல்



தமிழகத்தில் ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 33 கேள்விகள் கேட்கப்பட உள்ளன.


மக்கள் தொகை கணக்கெடுப்பு


இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம்.


2011-ம் ஆண்டுக்குப் பிறகு 2021-ம் ஆண்டு நடத்த வேண்டிய கணக்கெடுப்பு கொரோனா தொற்றுகாரணமாக ஒத்திவைக்கப்பட்டது.


இந்தநிலையில் தற்போது 2025-2026-ம் ஆண்டுகாலகட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

thoothukudileaks



தமிழகத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்க உள்ளது.


( மக்கள் தவறான தகவலை அளித்தால் ரூ, 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. )

 

மக்கள்தொகை கணகெடுப்புப் பணியின்போது  இந்த 33 கேள்விகள் மத்திய அரசு  கேட்பதற்காக பட்டியலிடப்பட்டுள்ளன .

அதன் விபரம் பின்வருமாறு


மொத்த 33 கேள்விகள் கேட்கப்படும்

••••••••••••••••••••••••••••••••••••••••••

1.✓ அடுக்கு மாடி கட்டிட எண் ?

*FOR APARTMENT BUILDING NUMBER*

வசிக்கும் கட்டிடம் எண்

நீங்கள் வசிக்கும் கட்டிடத்தின் எண்

( நகராட்சி அல்லது உள்ளூர் அதிகாரசபை எண் )

••••••••••••••••••••••••••••••••••••••••••

2.✓  வீட்டு கதவு எண் ?

HOME DOOR NUMBER

*வீட்டு எண்*

••••••••••••••••••••••••••••••••••••••••••

3.✓ வீட்டின் தரையின் முக்கிய பொருள் என்ன எதில் கட்டப்பட்டது ? *

TILES OR CEMENT

(Mosaic & Red Oxide Floor)

வீட்டு தரை

••••••••••••••••••••••••••••••••••••••••••

4✓  வீட்டின் சுவரின் முக்கிய பொருள் என்ன எதில் கட்டப்பட்டது ?

BRICK OR MUD WALL

(Red Bricks / Cement Hollow Blocks) 

சுவர்

••••••••••••••••••••••••••••••••••••••••••

5.✓ வீட்டின் மேல் கூரையின் முக்கிய பொருள் எது ?

CONCRETE SEELING OR WOODEN SEELING

•கான்கிரீட் (RCC) கூரை

•உலோகத் தாள்கள் (Metal Sheets)

•ஓடுகள் (Tiles)

•மரச்சட்டங்கள் (Wooden Trusses)

•மரப்பலகை / வைக்கோல்

கூரையின் பிரதான கட்டுமானப் பொருள்

••••••••••••••••••••••••••••••••••••••••••

6.✓  வீடு தற்போது பயன்பாட்டில் உள்ளதா ( பயன்பாட்டை உறுதி செய்தல் ? )*

LIVING OR LOCKED

வீட்டின் பயன்பாடு

••••••••••••••••••••••••••••••••••••••••••

*7.✓ எந்த மாதிரி வீட்டின் அமைப்பு ?*

*INDIVIDUAL PRIVATE HOUSE OR APARTMENT*

மாடி வீடு (Duplex / Two-Story)

*வீட்டின் நிலை*

••••••••••••••••••••••••••••••••••••••••••

8.✓ குடும்ப எண் ?

*"குடும்ப எண்" (Family ID) என்பது பொதுவாக உங்கள் ரேஷன் கார்டு (குடும்ப அட்டை) எண்ணைக் குறிக்கிறது.

••••••••••••••••••••••••••••••••••••••••••

9.✓ வீட்டில் வசிக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

HOW MANY MEMBERS IN HOME

வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை என்பது உங்களின் சொந்த வீடு, கிராமம், மாவட்டம் அல்லது மாநிலத்தைப் பொறுத்து மாறுபடும். அரசாங்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு வீட்டில் வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை (Total number of persons living in a house) அடிப்படை தகவலாக சேகரிக்கப்படுகிறது.

வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை

••••••••••••••••••••••••••••••••••••••••••

10.✓  வீட்டுத் தலைவரின் பெயர் என்ன ?*

அரசு ஆவணங்களில் உள்ள உங்கள் குடும்பத் தலைவர் பெயரை அறிய

*FAMILY MEMBER NAME*

*குடும்ப தலைவர் பெயர்*

••••••••••••••••••••••••••••••••••••••••••

*11.✓ வீட்டுத் தலைவரின் பாலினம் ( ஆணா  / பெண்ணா ) எது ?*

*MALE OR FEMALE*

*தலைவரின் பாலினம்*

••••••••••••••••••••••••••••••••••••••••••

*12.✓ குடும்பத் தலைவர் எந்த ( ஜாதி ) சாதி (Caste) ?*

குடும்ப தலைவரின் அட்டவணை வகுப்பு


நீங்கள் "குடும்ப தலைவரின் அட்டவணை வகுப்பு" (Head of Household - Schedule Class) அல்லது "அரசு அட்டவணை வகுப்பினர் குடும்பத் தலைவருக்கான திட்டங்கள்" (SC Category Head of Household) பற்றிய தகவல்களைத் தேடுகிறீர்கள் என்றால், உங்கள் குடும்ப அட்டை (Ration Card), ஜாதிச் சான்றிதழ் (Community Certificate) மற்றும் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.


( Scheduled Caste / எஸ்சி - SC )

"பட்டியல் சாதியினரா" ?

அல்லது "பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்" ( Scheduled Tribes - ST ) பழங்குடி சாதியினரா அல்லது பிற இனத்தைச் சேர்ந்தவரா என்பது ?


இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களில் குடும்ப தலைவரின் அட்டவணை வகுப்பு ( "SC/ST/Other" ) என்பது, குடும்பத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் எந்த சமூகப் பிரிவைச் (ஆதி திராவிடர், பழங்குடியினர் அல்லது இதர பிரிவினர்) சார்ந்தவர் என்பதைக் குறிக்கும். இது சாதிச் சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டது.


SC, ST மற்றும் பிறர்" என்பது பொதுவாக இந்தியாவில் இட ஒதுக்கீடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காகப் பயன்படுத்தப்படும் சமூகக் குழுப் பிரிவுகளைக்குறிக்கிறது


• பட்டியல் சாதியினர் (SC) :-

வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள், முன்னர் தலித்துகள் என்று அழைக்கப்பட்டவர்கள், இவர்கள் கடுமையான சமூகப் புறக்கணிப்பையும் தீண்டாமையையும் எதிர்கொண்டனர்.


• பட்டியல் பழங்குடியினர் (ST) :-

 பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது வனப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடி சமூகங்கள்; இவர்கள் தனித்துவமான கலாச்சார நடைமுறைகள் மற்றும் புவியியல் ரீதியான தனிமைப்படுத்தலால் அறியப்படுகிறார்கள்.


• மற்றவர்கள் :-

பொதுவாக இது , சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியுள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையோ (OBC), அல்லது அரசாங்க இட ஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறாத சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்பொதுப் பிரிவினரையோ (UR) குறிக்கிறது .

••••••••••••••••••••••••••••••••••••••••••

13.✓ வீட்டின் உரிமை நிலை என்ன?

( சொந்த வீடா / வாடகை வீடா )

*OWN HOUSE OR RENTAL HOUSE*


வீட்டின் உரிமை நிலை

வீட்டின் உரிமை நிலை (Home ownership) என்பது ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது குடும்பத்திற்கு அந்த வீடு சொந்தமானதா அல்லது அவர்கள் வாடகைக்கு இருக்கிறார்களா என்பதைக் குறிக்கிறது. இது சமூக, பொருளாதார நிலையை அளவிடும் முக்கிய காரணியாகும்.

••••••••••••••••••••••••••••••••••••••••••

*14.✓ வீட்டில் உள்ள குடியிருப்பு அறைகளின் எண்ணிக்கை எத்தனை ?*

HOW MANY ROOMS IN YOUR HOUSE

அறைகளின் எண்ணிக்கை

••••••••••••••••••••••••••••••••••••••••••

15.✓ வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை ?

*HOW MANY COUPLES IN YOUR HOUSE*

திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை

••••••••••••••••••••••••••••••••••••••••••

16.✓ குடிநீரின் முக்கிய ஆதாரம் ?

குடிநீர் ஆதாரம் அமைந்துள்ள இடம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான குடிநீர் ஆதாரங்கள் மேற்பரப்பு நீர் (ஏரிகள்), நிலத்தடி நீர், மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் ஆகிய இடங்களில் இருந்து பெறப்படுகின்றன


(ஏரிகள், ஆறுகள்) மற்றும் நிலத்தடி நீர் (கிணறுகள், ஆழ்துளை கிணறுகள்)

IN WHICH PLACE YOU GETTING WATER*

*BY RIVER + LAKE + WELL + BORE

••••••••••••••••••••••••••••••••••••••••••

17.✓ குடிநீர் வசதி எப்படி கிடைக்கிறது ?

( குழாய் இணைப்புகள் மூலம் வழங்கப்படுகிறது )

*PRESENT YOU GETTING WATER BY PIPE LINE OR BORE

நிலத்தடி நீர் (Groundwater)

குடிநீர் இணைப்பு (Pipe Line)

*குடிநீருக்கான பிரதான ஆதாரம்*

••••••••••••••••••••••••••••••••••••••••••

*18.✓ கரன்ட் வசதி உள்ளதா ?*

*விளக்கு ஒளிக்கான பிரதான ஆதாரம்*

மின்சாரம் (Electricity) ஆகும்

••••••••••••••••••••••••••••••••••••••••••

*19.✓ கழிவறை உள்ளதா ?*

*கழிப்பிட வசதி*

••••••••••••••••••••••••••••••••••••••••••

*20.✓ கழிவறை எந்த வகை ?*


••••••••••••••••••••••••••••••••••••••••••

*21.✓ கழிவு நீர் வெளியேறும் வசதி உள்ளதா ?*

கழிவு நீர் வெளியேற்றும் இணைப்பு*

(Sewerage Connection)

••••••••••••••••••••••••••••••••••••••••••

*22.✓ குளியல் வசதி இருக்கிறதா ?*


••••••••••••••••••••••••••••••••••••••••••

*23.✓ சமையலறை மற்றும் LPG/PNG இணைப்பு வசதி உள்ளதா ?*

*சமையலறை வசதி மற்றும் கியாஸ் இணைப்பு*

எல்.பி.ஜி (LPG)

குழாய் வழி கியாஸ் (PNG)

••••••••••••••••••••••••••••••••••••••••••

*24.✓ சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள் எது ?*

சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரதான எரிபொருள்*

•எல்.பி.ஜி (LPG)

•இயற்கை எரிவாயு (PNG - Piped Natural Gas)

•மின்சாரம் (Electricity)

•விறகு, கரி மற்றும் சாணம் 

••••••••••••••••••••••••••••••••••••••••••

*25.✓ ரேடியோ / டிரான்சிஸ்டர் இருக்கா ?*

வானொலி,டிரான்சிஸ்டர்,

RADIO TRANSISTOR 

••••••••••••••••••••••••••••••••••••••••••

*26.✓ தொலைக்காட்சி ( TV ) இருக்கா ?*

 TELIVISION 

••••••••••••••••••••••••••••••••••••••••••

*27.✓ இணையதளம் வசதி இருக்கா ?*இணையதள வசதி*

INTERNET 

••••••••••••••••••••••••••••••••••••••••••

*28.✓ மடிக்கணினி / கம்ப்யூட்டர் இருக்கா ?*

LAPTOP / COMPUTER 

••••••••••••••••••••••••••••••••••••••••••

*29.✓ தொலைபேசி /மொபைல் போன் /ஸ்மார்ட்போன் இருக்கா ?*

TELEPHONE / MOBILE PHONE / SMARTPHONE 

••••••••••••••••••••••••••••••••••••••••••

*30.✓ சைக்கிள் / ஸ்கூட்டர் / மோட்டார் சைக்கிள் / மொபெட் இருக்கா ?*

CYCLE / SCOOTER / MOTORBIKE 

••••••••••••••••••••••••••••••••••••••••••

*31.✓ கார் / ஜீப் / வேன் இருக்கா ?*

CAR / JEEP / VAN

••••••••••••••••••••••••••••••••••••••••••

*32.✓ வீட்டில் சாப்பிடும் முக்கிய உணவு  எது ?*

•அரிசி (Rice)

•கோதுமை (Wheat)

•மக்காச்சோளம் (Maize / Corn)

•சிறுதானியங்கள் (Millets)

•பார்லி மற்றும் ஓட்ஸ் (Barley & Oats)


*பிரதான உணவு தானியங்கள்*

••••••••••••••••••••••••••••••••••••••••••

*33.✓ உங்கள் மொபைல் எண் ( மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான தகவல் தொடர்புகளுக்கு மட்டும் )*

செல்போன் எண்


••••••••••••••••••••••••••••••••••••••••••

*ஆகிய 33 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான விடைகள் பதிவு செய்யப்படுகிறது என்று முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஸ் தாக்கூர் பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் கூறியுள்ளார்.

.

கணக்கெடுப்பின்போது வீட்டு அமைப்பு, குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை, குடிநீர், மின்சாரம், கழிவறை, சமையல் வசதி, இணைய வசதி, வாகனங்கள், மொபைல் எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. 

மேலும், குடும்பத் தலைவர், சமூகப் பிரிவு, வீட்டு உரிமை, குடியிருப்பு வசதிகள் உள்ளிட்ட விவரங்களும் பதிவு செய்யப்படும்.

அரசு அதிகாரிகள் வழங்கியுள்ள தகவலின்படி, மக்கள் தவறான தகவல்களை வழங்கினால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் உண்மையான தகவல்களை மட்டுமே வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தங்களது குடும்ப விவரங்களை சுயமாக இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கணினி அல்லது மொபைல் போன் மூலம் இணையதளத்தில் பதிவு செய்து, கிடைக்கும் Self Enumeration ID-யை பாதுகாத்து வைத்துக் கொண்டு, பின்னர் வீடு தேடி வரும் கணக்கெடுப்பு அலுவலரிடம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் தகவல்கள், அரசின் நலத்திட்டங்கள், அடிப்படை வசதிகள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டமிடலுக்கு முக்கிய ஆதாரமாக அமையும் என்பதால், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

📰 பாக்ஸ் நியூஸ்

சுயமாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யலாம்

பொதுமக்கள் தங்களது குடும்ப விவரங்களை அரசு வழங்கியுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மொபைல் அல்லது கணினியில் சுயமாக பதிவு செய்யலாம்.

பதிவு செய்யும் முறை:

*

 முதற்கட்டமாக ஒவ்வொரு குடும்பமும் தாங்களே சுயமாக இணையதளம் மூலம் லேப்டாப் அல்லது மொபைலில் தகவல்களை பதிவு செய்ய வழிவகுக்கப்பட்டுள்ளது. அதன்படி se.census.gov.in என்ற இணையதளத்தை திறந்து கீழ்கண்ட விபரப்படி தங்களது குடும்ப விபரங்களை பதிவு செய்யுங்கள்.

மேல் தரப்பட்டுள்ள. லிங் அழுத்தி இணையதளம் செல்லுங்கள் 


1. முதலில் மாநிலத்தை தேர்வு செய்து captcha கொடுத்து Verified & Proceed கொடுங்கள், அதன்பிறகு OK கொடுங்கள்.


2. Name of the Head of the Household ல் குடும்ப தலைவரின் பெயரை கொடுங்கள் (கணவர், மனைவி அல்லது குடும்பத்தை நடத்த கூடிய யார் பெயரை வேண்டுமானாலும் கொடுக்கலாம்), அடுத்து உங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு மொபைல் நம்பரை கொடுங்கள். Email இருந்தால் கொடுங்கள். அதன்பிறகு Verified & Proceed கொடுங்கள்


3. Language செலக்ட் செய்து, உங்கள் மொபைலுக்கு வரும் OTP எண்ணை பதிவு செய்து Verify OTP கொடுங்கள், அடுத்து OK கொடுங்கள்.


4. Step 1 - அடுத்து Boundary கேட்கும். OK கொடுங்கள். அதில் மாநிலத்தை காண்பிக்கும், அதன் கீழ் மாவட்டத்தை தேர்ந்தெடுங்கள். அதன் கீழ் உங்கள் ஊரின் PINCODE கொடுங்கள். அதன் கீழ் உங்கள் வீடு அருகே உள்ள இடத்தை தேர்வு செய்து Search கொடுங்கள். Map காண்பிக்கும். அதில் 4 பக்கமும் உள்ள கொடு காண்பிக்கும், அதில் உங்கள் வீடு அருகே அதன் நடு இடத்தை கொண்டு வைத்து Confirm Location கொடுத்து Yes கொடுங்கள்.


5. Step 2 - வீட்டின் தரையின் முதன்மையான பொருள் கேட்கும் - அதற்கு Cement என கொடுங்கள். அடுத்து சுவற்றின் தரம் கேட்கும், அடுத்து மேலே ஒட்டப்பட்ட பொருள் கேட்கும், அடுத்து வீட்டின் condition கேட்கும், அனைத்தையும் கொடுத்து Save & Next கொடுத்து YES கொடுங்கள்.


6. Step 3 - உங்கள் குடும்பத்தில் எத்தனை நபர்கள் உள்ளனர் என்ற எண்ணை கொடுங்கள். (குடும்பத்தில் இன்று குழந்தை உட்பட அனைத்து நபர்களையும் கொடுங்கள், வேலை நிமித்தமாக வெளியில் எங்கு சென்று இருந்தாலும் அவர்களையும் சேர்த்து கொடுங்கள்). அடுத்து நீங்கள் கொடுத்த குடும்ப தலைவரின் பெயரை காண்பிக்கும். அடுத்து குடும்ப தலைவரின் Sex குறிப்பிடுங்கள். அடுத்து அவர்கள் SC,ST அல்லது other என்றால், சரியானதை Click செய்யுங்கள். அடுத்து வாடகை வீடா அல்லது சொந்த வீடா என குறிப்பிடுங்கள். எத்தனை room உள்ளது என குறிப்பிடுங்கள். குடும்பத்தில் திருமணமான நிலையில் எத்தனை Couples உள்ளனர் என குறிப்பிட்டு Save & Next கொடுத்து YES கொடுங்கள்.


7. Step 4 - குடிநீர் சம்பந்தமான தகவல்கள். உங்கள் வீட்டிற்கு குடிநீர் எப்படி வருகிறது. குடிநீர் வீட்டுக்குள்ளேயே வருகிறதா, வீட்டில் எலக்ட்ரிக் லைன் வருகிறதா, latrine உள்ளதா, latrine type என்ன, வீட்டு தண்ணீர் எப்படி வெளியேறுகிறது. குளியல் அறை உள்ளதா, LPG Gas உள்ளதா, வீட்டின் முக்கிய fuel என்ன என குறிப்பிட்டு Save & Next கொடுத்து YES கொடுங்கள்.


8. Step 5 - Radio தகவல்கள் - ரேடியோ உள்ளதா, television உள்ளதா, இன்டர்நெட் உள்ளதா, லேப்டாப் உள்ளதா, டெலிபோன் வசதி, பைக் உள்ளதா, கார் உள்ளதா, சாப்பிட உபயோகிக்கும் சமையல் பொருள், கொடுத்து நீங்கள் கொடுத்த மொபைல் நம்பர் சரியா என பார்த்து Save & Next கொடுத்து YES கொடுங்கள்.


9. Step 6 ல் - இதுவரை நீங்கள் கொடுத்த அனைத்து தகவல்களையும் சரிபார்த்து, சரி என்றால் Save as Draft Final Submit கொடுக்கவும். 


கொடுத்தவுடன் Submitted Successfully என்ற பக்கம் வந்து Your Self Enumeration ID என்ற ஒரு நம்பர் கொடுக்கும். கொடுக்கும். அந்த நம்பரை screen shot எடுத்து வைத்து கொண்டு, அடுத்த மாதம் உங்கள் வீடு தேடி வரும் Census Enumerator இடம் காண்பியுங்கள்.


வழிமுறைகள் வீடியோ பார்க்க 

அதாவது Final Submit செய்த பிறகு கிடைக்கும் Self Enumeration ID-யை பாதுகாத்து வைத்திருந்து, கணக்கெடுப்பு அலுவலரிடம் காட்ட வேண்டும்.

குறிப்பு: பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அரசு இணையதளம் அல்லது கணக்கெடுப்பு அலுவலர்கள் மூலம் மட்டுமே தகவல்களை பதிவு செய்ய வேண்டும். தெரியாத இணைப்புகள் அல்லது சமூக ஊடகங்களில் பகிரப்படும் உறுதி செய்யப்படாத தகவல்களை நம்ப வேண்டாம்.

தகவல் செய்தி புகைப்படங்கள் ரோஜா அருணன் செய்தியாளர்