தூத்துக்குடி பார்வையற்றோர் நலச்சங்க விழாவில் ‘திரு இருதய நண்பர்கள்’ சார்பில் நல உதவிகள் வழங்கல்!
தூத்துக்குடி:
தூத்துக்குடி பார்வையற்றோர் நலச்சங்கம் சார்பில் பார்வையற்றோருக்கான நல உதவி வழங்கல் விழா, பிரையன்ட் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் '....
திரு இருதய நண்பர்கள்' அமைப்பின் தலைவர் மா. தங்கையா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், "மாற்றுத்திறனாளிகளுக்குக் கரம்கொடுத்து உதவுவது நமது சமூகக் கடமை. அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இதுபோன்ற அமைப்புகள் செய்யும் பணிகள் போற்றத்தக்கவை" எனக் குறிப்பிட்டார்.
விழாவின் நிறைவில் கலந்துகொண்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் சுவையான, தரமான மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பார்வையற்றோர் நலச்சங்க உறுப்பினர்கள், திரு இருதய நண்பர்கள் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக