கம்யூனிஸ்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கம்யூனிஸ்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 டிசம்பர், 2025

AITUC 65வது ஆண்டு விழா – டிசம்பர் 20ல் தூத்துக்குடியில் நடைபெறுகிறது

தூத்துக்குடி லீக்ஸ்” நாளிதழ் செய்தி 

photo news by Arunan journalist 


AITUC 65வது ஆண்டு விழா – டிசம்பர் 20ல் தூத்துக்குடியில் நடைபெறுகிறது

தொழிலாளர் உரிமைகளைக் காக்க உறுதிமொழி எடுக்கும் மாநாடு

தூத்துக்குடி, டிச. 19 :

இந்திய தொழிற்சங்க பேரவை (AITUC) 65வது ஆண்டு விழா மற்றும் தூத்துக்குடி ஹார்பர் ஓர்கர்ஸ் யூனியன் சார்பில் சிறப்பு மாநாடு வரும் 20.12.2025 (சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி பழைய துறைமுக சமூக நலக் கூடத்தில் (பீச் ரோடு) நடைபெறுகிறது.

thoothukudileaks


இந்த விழாவிற்கு AITUC மாநில, மாவட்ட மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்னணி தலைவர்கள், தொழிலாளர் இயக்கத்தின் மூத்த போராளிகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

விழாவிற்கு R. பாண்டி தலைமை வகிக்க,
முன்னிலை:

  • A. பாலசிங்கம் – AITUC மாநில பொருளாளர்
  • G. ராஜ்குமார் – AITUC துறைமுக தலைவர்

வாழ்த்துரை:

  • M. ராதாகிருஷ்ணன்
  • S. காசி விஸ்வநாதன்
  • B.C.H. மசன்
  • S.S. சரவணன்
  • S. சீனிவாசராவ்
  • K. பிரகாஷ்ராவ்
  • P. கருப்பன் உள்ளிட்ட பலர்

சிறப்பு விருந்தினர்கள் ஆக INTUC, CITU, HMS, PETU, BTTS, TASMAC உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தொழிலாளர் உரிமைகள், ஊதிய உயர்வு, வேலை பாதுகாப்பு, துறைமுக தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்த கருத்துகளை பகிர உள்ளனர்.

65 ஆண்டுகளாக தொழிலாளர் நலனுக்காக போராடி வரும் AITUC-ன் வரலாற்றுச் சாதனைகள், எதிர்கால தொழிலாளர் இயக்கத்தின் பாதை குறித்து இந்த மாநாடு முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவில் தொழிலாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என தூத்துக்குடி ஹார்பர் ஓர்கர்ஸ் யூனியன் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி புகைப்படங்களில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 


thoothukudileaks



ஞாயிறு, 7 டிசம்பர், 2025

மோடி அரசு கொண்டு வந்த தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி — தூத்துக்குடியில் இடதுசாரி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி லீக்ஸ் — செய்தி

தூத்துக்குடி, டிசம்பர் 08, 2025:

ஒன்றிய மோடி அரசு தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் வகையில் கொண்டு வந்த நான்கு தொகுப்பு தொழிலாளர் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் இன்று (08.12.2025) காலை 11 மணிக்கு இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு தொழிலாளர் பாதுகாப்பு, ஊதிய நெறிமுறைகள், வேலை நேர கட்டுப்பாடுகள் உள்ளிட்ட உரிமைகளை பாதிக்கும் வகையில் புதிய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கடும் கண்டனம் தெரிவித்தனர்.

thoothukudileaks


ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள்:

  • தோழர் மு.முருகன், மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்.எல்)
  • தோழர் K.P. ஆறுமுகம், மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)
  • தோழர் கரும்பன், மாவட்டச் செயலாளர், சிபிஐ
  • தோழர் ம. கணேசன், மாவட்டச் செயலாளர், விசிக
  • தோழர் பி. சம்பத், மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
  • தோழர் பாலசுந்தரம், மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்.எல்)
  • தோழர் வழ. வில்லவன் கோதை, துணை பொதுச்செயலாளர், விசிக
  • தோழர் P. லோகநாதன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர், சிபிஐ

சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பல நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் “தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்!”, “தொழிலாளர் உரிமை எங்கள் உரிமை!” என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டம் முழுவதும் அமைதியாக நடைபெற்றது.

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

தனியாக சிக்கிய பிஜேபி பிரமுகர் போட்டு புரட்டி எடுத்த காம்ரேட்டுகள்!!! தூத்துக்குடியில் டிஷ்யூம் டிஷ்யூம் ஃபைட் சம்பவ இடத்தில் வெகு நேரமாக வராமல் தாமதமாக வந்த காவல் துறை!! நடந்தது என்ன முழு விவரம் !

Tamil Nadu updates 5-9-2025

செய்தி புகைப்படங்கள் 

அருணன் செய்தியாளர்


தூத்துக்குடி செப் 5

தூத்துக்குடி மண்ணின் மைந்தர் கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனார் ஜயா வின் 154 வது பிறந்த நாள் செப் 5 இன்று தமிழகம் முழுவதும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது 


மேலும் தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் ஏகமாக இந்த தடவை இந்திய சுதந்திர போராட்ட போராளி வ உ சிதம்பரனார் ஜயா பிறந்த நாளை வழக்கத்தை விட வெகு உற்சாகமாக கலந்து கொண்டு கொண்டாட.... 


பிறகென்ன??? 

 தூத்துக்குடியில் பிஜேபி கட்சி கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும் சரமாரியாக மோதி சண்டையில் போய் முடிந்ததுள்ளது


இன்று காலை 9 மணி ஆரம்பத்திலே திமுக அதிமுக மற்றும் சமுக அமைப்புகள் சாதி சங்கங்கள் வ உ சி ஜயா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு லட்டு வழங்கி சென்று விட்டார்கள் 

டிஷ்யூம் - டிஷ்யூம்!!!

அடுத்து வந்த சிஐடியூ மாவட்ட செயலாளர் ரசல் தலைமையில் வந்த கம்யூனிஸ்ட் தோழர்கள் தங்களது பிரச்சார வாகனத்தில் 25 க்கும் மேற்பட்டோர் வந்து இறங்கினார்கள்

Thoothukudileaks


வ உ சி சிலைக்கு இடத்திற்கு முன்பாக பேனர் கொடி ஏந்திய வாறு    தங்களுடன் கொண்டு வந்த மைக் பிடித்து சிஐடியூ மாவட்ட செயலாளர் ரசல்  மகாகவி பாரதியார் சுதேசி கொள்கையாளர் வ உ சிதம்பரனார் பற்றி பேச தொடங்கினர்

 அவர் பேசுகையில்...

இந்த மக்கள் ஒற்றுமை பிரச்சாரம் இயக்கம்  

பாரதியாரும் வ உ சிதம்பரனாரும்  மத வெறி சாதி வெறி எதிராக  களமாடிய இந்த மண்ணில் 

வ உ சிதம்பரனார் பிறந்த நாள் இன்று தொடங்கி பாரதியார் நினைவு நாள் செப் 11 தேதி வரை மாவட்ட முழுவதும் பிரச்சாரம் தொடங்கி இருக்கிறோம்.

மாவட்ட முழுவதும் மத வெறி சாதி வெறி தலை விரித்து ஆடுகிறது முடிவு கட்ட வேண்டும் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்


"இந்திய பொருளாதாரத்தை காப்ரேட் நிறுவனங்கள் இடம் அடகு வைக்கும் கொள்கைக்கு எதிராக யுத்த களமாக உள்ள நாடு மாறுவதற்கு மகாகவி பாரதியாரும் வ உ சிதம்பரனாரும் மிக பெரிய ஆதர்சனமாக விளங்குகிறார்கள்


இன்றைக்கு...

அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவின் பொருளாதாரத்தை காவு கேட்டு கொண்டிருக்கிற இந்த நிலையில்....?


இந்தியா வின் ஆளும் வர்க்கம் அவர்களுக்கு அடி பணிந்து கொண்டு இருக்கும் நிலையில்...."


என ரசல் பேசி கொண்டு இருக்கும் போதே....

பேசுவதை  சகித்துக் கொள்ள முடியாமல் ரசல் அருகே 

ஒடி வந்தார் பிஜேபி கட்சி சொக்கலிங்கம்  ....?


பின்னர் என்ன நடந்தது என்றால்???

 பிஜேபி கட்சி பிரமுகர் சொக்கலிங்கத்தை காம்ரேட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அனைவரும் சேர்ந்து கன்னத்தில் கும்மாங்குத்து அடித்து துரத்த தொடங்கினர் 



விஷயறிந்து பாஜக மாநில துனை செயலாளர் சசிகலா புஷ்பா பாஜக தொண்டர்கள் படையுடன் களத்தில் இறங்கி மல்லு கட்ட தொடங்கினார்.


சம்பவ நடந்த போது ஸ்பாட்டில் ஒரு போலீஸ் கூட அங்கு இல்லை  தாமதமாக தான் போலீஸ் வந்து சேர்ந்தது.


ஒரு வழியாக காம்ரேட் -களை சமாதான படுத்தி வழி அனுப்பி வைத்தனர் 


கடுங் கோபத்தில் இருந்த பாஜக கட்சியினர் மாநில துனை செயலாளர் சசிகலா புஷ்பா தலைமையில் செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பாரத் மாதா கி ஜெ கர கோஷம் எழுப்பினர்.

பாஜக மாநில துனை செயலாளர் சசிகலா புஷ்பா தலைமையில் வ உ சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்த வீடியோ 


இது குறித்து மத்திய காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சொக்கலிங்கம் புகார் மனு கொடுத்திருப்பதாக தகவல்.

திங்கள், 2 டிசம்பர், 2024

தூத்துக்குடியில் தர்ணா போராட்டம் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அரசு ஓய்வூதியர் கள் ஆக்ரோஷம்!!!

"Thoothukudi news," "Tamil Nadu updates," "Thoothukudi cyclone updates"

அருணன் செய்தியாளர்: 


2021 சட்ட மன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசு கண்டித்து தர்ணா போராட்டம் மாநில முழுவதும் நடைபெறுகிறது


 தூத்துக்குடி 12- வது வாசல் மையவாடி எதிராக உள்ள மைதானத்தில் தமிழ் நாடு  அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் 3-12-2024 இன்று காலை 11 மணியளவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் 



திமுக அரசை கண்டித்து ஆக்ரோஷம்!!!

 2021 சட்ட மன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தர்ணா போராட்டம்

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் 



2024 டிசம்பர் 3 நடைபெற்ற

தர்ணா போராட்டம்!!


தலைமை : தோழர்.இல.இராமமூர்த்தி கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர்,


முன்னிலை : தோழர். பெ.சாம்பசிவன் மாவட்டத் தலைவர். TNRTWA


தோழர்.வை.பாலசுப்பிரமணியன் மாவட்டச்செயலாளர், TNEPWO


தோழர்.மி.டெரன்ஸ் மாவட்டப்பொருளாளர், TNGPA


தோழர்.V.பூபதி மண்டல பொறுப்பாளர், TNSETC - REWA


வரவேற்புரை : தோழர்.M.A.H.முத்தையா கூட்டமைப்பு மாவட்டப்பொருளாளர்,


துவக்கவுரை : தோழர்.


R.ரசல்


மாநில செயலாளர் CITU


வாழ்த்துரை : A.H.சிவனாகரன் தலைவர், வ.உசி.துறைமுக ஓய்வூதியர் சங்கம்


தோழர்.பெ.ராமர் மாவட்டச்செயலாளர். AIBSNL - DOTPA


சிறப்புரை :


தோழர்.N.பர்வதராஜன் பொதுச் செயலாளர்


பொதுச் செயலாளர் தமிழ்நாடுஓய்வுபெற்ற பள்ளி -


கல்லூரி ஆசிரியர் நல சங்கம் TNRTWA


தோழர்.ப.திரவியம்


மாவட்டத்தலைவர்


தமிழ்நாடுஅரசு அனைத்துத்துறை


ஓய்வூதியர் சங்கம் TNGPA


நிறைவுரை :


தோழர்.M.ஜெயபாண்டியன்


மாநில துணைத்தலைவர்,


தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர்


நல அமைப்பு TNEPWD


தோழர்.சொ.சிவதானுதாஸ்


மாநிலக்குழு உறுப்பினர்,


தமிழ்நாடு போக்குவரத்துக் கழக


ஓய்வுபெற்றோர் நல அமைப்பு TNSTC-REWA


தோழர்.N.வெங்கடேசன்


மாநில துணைப்பொதுச்செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்






கோரிக்கைகள் ?!!



தமிழக அரசே!


2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்று!



1. புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்திட்டத்தை


நடைமுறைப்படுத்துக.


2. 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்குக.


3. தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்களுக்கும், மாநில பொதுத்


துறையிலிருந்து ஓய்வுபெற்றவர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம்


ரூபாய்.7850/- வழங்கிடுக.


4. மருத்துவக்காப்பீட்டு நடைமுறையை எளிமைப்படுத்து. காப்பீட்டில் காசில்லா


மருத்துவம் உறுதிப்படுத்து. மருத்துவக்காப்பீடு நடைமுறையில்இல்லா


ஓய்வுபெற்ற அனைத்து பகுதியினருக்கும் மருத்துவக்காப்பீடு திட்டத்தை


வழங்கிடுக.


5. அகவிலைப்படி அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் பொதுத்துறை


ஓய்வூதியர்களுக்கும் ஒன்றிய அரசு அறிவித்த அதே நாளில் வழங்கிடுக.


தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 2015ஆம் ஆண்டுமுதல்


2024ஆம் ஆண்டுவரை வழங்காமல் வைத்துள்ள அகவிலைப்படி


நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கிடுக.


6. கமுட்டேசன் பிடித்தம்செய்யும் காலத்தை 15 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டு காலமாக குறைத்திடுக.


7. போக்குவரத்து கழகத்தில் ஏப்ரல் 2023முதல் ஓய்வுபெற்றவர்களுக்கு பணப்பலன்


வழங்கிடுக.


மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற கோஷம் எழுப்பினர்.


மாவட்ட பொறுப்பாளர்கள்


ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு


தூத்துக்குடி மாவட்டம்

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

டாஸ்மாக் ல குடிப்பவனுக்கு சரக்கு இல்ல ஊதியமில்ல தமிழக அரசே வெள்ளை அறிக்கை வெளியீடு சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் டாஸ்மாக் ஊழியர்கள் பொதுமக்கள் இடம் ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்கள் விநியோகம்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

20-9-2024 photo news [21/9,2024 11:23 AM]

 அருணன் செய்தியாளர்: 


 டாஸ்மாக் ல குடிப்பவனுக்கு தரமான சரக்கு இல்ல டாஸ்மாக்கில் பணி செய்யும் எங்களுக்கு நியாயமான ஊதியமில்ல ?????

 தமிழக அரசே வெள்ளை அறிக்கை வெளியீடு என டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சிஐடியூ  சார்பில் தமிழகம் முழுவதும் இன்று 21-9-2024 காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் டாஸ்மாக் ஊழியர்கள் பொதுமக்கள் இடம் ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது 




"மதுவிலக்கு கொள்கையில் தள்ளாட்டம்!

விற்பவனுக்கு நியாயமான ஊதியமில்லை!

குடிப்பவனுக்கு தரமான சரக்குமில்லை!!"


கடன் வாங்கியும் டாஸ்மாக் நஷ்டமாம்!

தமிழக அரசே! வெள்ளை அறிக்கை வெளியிடு!"



தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் நுழைவு வாயிலில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் பின்பு பேருந்து நிலையம் உள்ளே பஸ் பயணிகள்  இடம் துண்டு பிரசுரங்கள் வழங்க பொதுமக்கள் இடம் பரபரப்பு ஏற்பட்டது 

இந்நிகழ்ச்சியில் தலைவர் முருகன், தோழர் ரசூல், ராஜேஷ், பிச்சையா, மற்றும் பத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.




அன்பான பெரியோர்களே! தாய்மார்களே! வணக்கம்.

டாஸ்மாக் நிறுவனம் துவக்கத்தில் தனியார் மது உற்பத்தி நிறுவனங்களிலிருந்து மது வகைகளை கொள்முதல் செய்து,

ஓட்டல்கள், கூட்டுறவு அமைப்புகள், நுகர் பொருள் வாணிப கழகம் மற்றும் தனியார் மதுக்கடைகளுக்கு மொத்த விற்பனை

மட்டுமே செய்து வந்தது.


 "தனியார் மதுக்கடைகளில் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் கள்ள/ போலியான மற்றும்

ஆயத்தீர்வை செலுத்தாத மதுவகைகள் விற்கப்பட்டன.


 மேலும் அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும் அதிக விலையில்

மது வகைகள் விற்பனை செய்யப்பட்டன.


 இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. மேலும் பெருவாரியான

கடைகளுக்கு விண்ணப்பிக்காமல் கடைகளை காலியாக வைத்திருக்கும் நோக்கத்தாடு சிண்டிகேட் ஏற்படுத்தியும் சில்லரை

விற்பனைக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தியும் அரசுக்கு வருவாய் இழப்பை உண்டாக்கியதின் விளைவாக சில்லரை

விற்பனையில் தனியாரை முழுவதுமாக அகற்றிட அவசர சட்டத்தை கொண்டு வந்து சில்லரை விற்பனை செய்யும்

பிரத்தியேக உரிமையை தனியாரிடமிருந்து எடுத்து டாஸ்மாக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு மாநிலம் முழுவதும்

7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டன."



கடைகள் எண்ணிக்கை!!!

தற்போதைய நிலவரப்படி, டாஸ்மாக் நிறுவனம் 4829 மதுபான சில்லரை விற்பனை கடைகள், 238 எலைட் மற்றும்

மால் ஷாப் கடைகள் என 5067 மது விற்பனை கடைகளை நடத்தி வருகிறது. 



இது தவிர தனியார் மது வகைகளை

விற்பனை செய்ய 2000க்கும் மேற்பட்ட எப்.எல்-2, எப்.எல்-3 மனமகிழ் மன்றங்கள், ஒட்டல்களில் மது விற்பனை செய்ய

உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன

தனியார் 🍷 மது விற்பனை???

2919 தனியார் மதுக்கூடங்களை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.




தனியார் ஆதிக்கம் :

மது விற்பனையில் தனியார் ஆதிக்கத்தால் போலி மது வகைகள் விற்பனையும், அரசுக்கு வருவாய் இழப்பும்

ஏற்பட்டதை கருத்தில் கொண்டே தமிழ்நாட்டில் மது கொள்முதல், மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரம் செய்யும் தனி

உரிமம் டாஸ்மாக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.



 "இதன்படி மதுவினை தனியார் யாரும் விற்பனை செய்ய முடியாது

என்பதாகும்."


 இதனால் அரசுக்கு ஆண்டுக்கு சராசரியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கூடுதலாக கிடைத்து வந்தது.


தள்ளாடிய தமிழக அரசு!!!

காலப்போக்கில் அரசு இந்த நிலைபாட்டிலிருந்து தள்ளாடி.., ?

தனியார் ஆதாயம் அடையும் வகையில் மது விற்பனையில்

நுழைய அனுமதித்தது.


 தற்போது ...

தனியார் ஆக்டோபஸ் போல டாஸ்மாக் நிறுவனத்தை விழுங்கி கொண்டிருக்கிறார்கள்.



இதில் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் துணை போகின்றனர்.

டாஸ்மாக் நிறுவனம் கொள்முதல் செய்யும் மது வகைகளை உற்பத்தி செய்வது தனியார் நிறுவனங்கள்தான். டாஸ்மாக்

கடைகள் அனைத்தும் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்கள் தான்.


 கிடங்குகளிலிருந்து கடைகளுக்கு சரக்குகளை

கொண்டு செல்லும் லாரிகள் அனைத்தும் தனியாருக்கு சொந்தமானது தான். 




"டாஸ்மாக் கடைகளோடு இணைந்த

மதுக்கூடங்களும் தனியார் தான். "


ஆக தமிழக அரசுக்கு சரக்கும் சொந்தமில்லை, கடையும் சொந்தமில்லை, லாரிகளும்

சொந்தமில்லை. பார்களும் சொந்தமில்லை. சொந்தமில்லாத சரக்கை விற்பனை செய்வதிலேயே அரசுக்கு ஆண்டுக்கு

ரூ. 45 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது என்றால் அனைத்தும் சொந்தமாக இருந்தால் எவ்வளவு கோடி

ரூபாய் கூடுதலாக கிடைக்கும். 


இது மெத்த படித்த அறிவாளிகளை கொண்ட டாஸ்மாக் இயக்குனர் குழுமத்திற்கு தெரிந்தும்

அரசுக்கு வர வேண்டிய வருவாயை மடைமாற்றம் செய்து தனியாரை கொழுக்க வைத்துள்ளனர்.




 மக்கள் வரிப்பணத்தில்

சம்பளம் வாங்கி கொண்டு தனியாருக்கு ஆதரவாக செயல்படுவது தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.



நட்டம் - கடன் (அடமானம்):

ஆம். டாஸ்மாக் நட்டத்தில் இயங்குவதாக டாஸ்மாக் நிறுவனம் தனது லாப-நட்ட கணக்கில் காட்டுகிறது. ஆமாம்!

திரட்டப்பட்ட இழப்பாக ரூ. 136 கோடி நட்டம், கிடங்குகளில் உள்ள சரக்குகள் மற்றும் கடைகளில் உள்ள சரக்குகள்

வங்கிகளில் அடமானம் ரூ. 708 கோடி மற்றும் குறுகிய கால கடனாக ரூ.1,110 கோடி என 2 ஆயிரம் கோடி ரூபாய் கடனில்

தான் டாஸ்மாக் நிர்வாகத்தை அரசு நடத்தி வருகிறது. கடன் வாங்கித்தான் டாஸ்மாக்கை நடத்த வேண்டுமா? 


கடன்

வாங்கித்தான் தமிழ்நாட்டு மக்களுக்கு மது விற்பனை செய்ய வேண்டுமா? அரசு நிறுவனம் இந்தளவுக்கு கடன் வாங்கும்

[21/9, 11:29 AM] அருணன் செய்தியாளர்: 


அளவுக்கு சீரழிக்கப்பட்டதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள்

ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தான். 


இந்த நிறுவனத்தை வழிநடத்தும்

இயக்குனர் குழுமத்தில் உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறையின்

செயலாளராக இருப்பவர் தான் தலைவர். குழு உறுப்பினர்களாக நிதித்துறை

செயலாளர், வணிக வரி (ம) பத்திர பதிவுத்துறை செயலாளர். மதுவிலக்கு

ஆணையர், மேலாண்மை இயக்குனர் என இந்திய ஆட்சிப்பணியில்

உள்ளவர்கள் தான். ஆக அரசின் உயர்மட்ட அதிகார அமைப்பில்

உள்ளவர்களின் பொறுப்பில் உள்ள டாஸ்மாக் நிறுவனம் அரசு நிறுவனமாக

செயல்படவில்லை என்பதே கடந்த 20 ஆண்டு கால அனுபவம். 



"யார் ஆட்சிக்கு வருகிறார்களோ, அவர்களுக்கேற்ப

டாஸ்மாக் நிர்வாகம் தனது விசுவாசத்தை காட்டும். ஆட்சியாளர்களை குளிர்விக்கும் வேலையை செய்யும். 


கோடிக்கணக்கில் பணத்தையும் கொட்டும்.

வருவாய்:

தமிழ்நாடு அரசுக்கு 2023-24 நிதியாண்டில் மது விற்பனையின் மூலம் ஆயத்தீர்வை வரியாக ரூ.10,774

கோடியும், மதிப்புக்கூட்டு வரியாக ரூ. 35,081 கோடியும் என வரி வருவாயாக ரூ.45,855 கோடி கிடைத்திருக்கிறது.



இது தவிர பீர் ஏற்றுமதி, வெளிநாட்டு மதுவகைகள் இறக்குமதி, உரிமங்கள், கட்டணங்கள், மதுக்கூட மாதாந்திர

தொகை, காலி அட்டைப் பெட்டி விற்பனை, காலி மது பாட்டில் விற்பனை, அபராதம், அபராதத்துக்காக வட்டி என

பல வகைகளில் பல நூறு கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.


 இவைகள் கணக்கில் காட்டப்படுவதில்லை.

இது தவிர பார்களில் விற்கப்படும் திண்பண்டங்கள், இறைச்சி, வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் டம்பளர், கள்ளச்சந்தை

விற்பனை, கூடுதல் விலை விற்பனை என பல்வேறு வகைகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் வராத கருப்பு

பணமாக புழக்கத்தில் உள்ளன.

அதிகாரிகள் நியமனம் :

40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு நிரந்தரமான அதிகாரிகள் இல்லை. ஒன்று

வருவாய்த் துறையை சேர்ந்த அயல்துறை அதிகாரிகள் மற்றொன்று தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான

அதிகாரிகள். 


இந்த அயல்துறை அதிகாரிகள் ஓராண்டு, இராண்டு காலம் மட்டுமே டாஸ்மாக் உயர் பதவிகளில்

இருப்பார்கள். அதன்பிறகு வேறு துறைக்கு மாறி சென்று விடுவார்கள்.


 அவர்கள் இருக்கும் காலத்தில் நிறுவனத்தின்

வளர்ச்சி பற்றியோ, மது வகைகளின் தரம் பற்றியோ, வேலை செய்யும் ஊழியர்களின் நலனைப்பற்றியோ

கவலைப்படாதவர்கள்.

எம்.பி.ஏ. பட்டதாரிகளை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட மேலாளர்களர்களை 2006ல் திமுக

ஆட்சிக்கு வந்த போது, மிகவும் பொறுப்புள்ள பதவியில் தற்காலிக அதிகாரிகள் இருக்கக்கூடாது என்று எம்.பி.ஏ

பட்டதாரிகளை வெளியேற்றி, துணை ஆட்சியர்களை மாவட்ட மேலாளர்களாக நியமனம் செய்தது.

கோடிஸ்வரர்கள் ஆக மாறியுள்ளன 

 2011ல் ஆட்சிக்கு

வந்த அதிமுக இவர்களை மீண்டும் மாவட்ட மேலாளர்களாக நியமனம் செய்தது.


 தற்போதைய திமுக ஆட்சியிலும்

எம்.பி.ஏ தற்கலிக ஒப்பந்த மாவட்ட மேலாளர்கள் தொடர்கின்றனர்.


 துணை ஆட்சியர் தவறு செய்தால் துறை

ரீதியிலான நடவடிக்கைக்கு உட்படுவார். 


ஆனால் இந்த எம்.பி.ஏ மாவட்ட மேலாளர்கள் சட்ட விரோத மதுக்கூடங்கள்,

கடை ஆய்வு. டிரான்ஸ்பர், போஸ்டிங் முறைகேடுகளில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை

எடுக்கப்படுவதில்லை. அதிகளவில் நடக்கின்றன. ஒவ்வொரு எம்.பி.ஏ மாவட்ட அதிகாரிகளும் மேலாளர்களும்

மேல்மட்ட அதிகாரிகளுடனும், ஆட்சியாளர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளனர். இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட எம்.பி.ஏ

அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு துறையினரால் பிடிபட்டுள்ளனர்.

நீங்கள் கோடீஸ்வரர் ஆக வேண்டுமா? அப்ப, டாஸ்மாக்கில் அதிகாரியாக வந்தால் கோடீஸ்வரர் ஆகலாம்! அதும்

ஒரே ஆண்டிலேயே.இந்த அரிய வாய்ப்பை தமிழ்நாடு ஏற்படுத்தித் தந்துள்ளது.


இதுவரை 20க்கும் மேற்பட்ட டாஸ்மாக்

அதிகாரிகள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையிடம் மாட்டியும் சிறைக்குச் சென்றும் கொஞ்சமும் பயமுமின்றி

அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.





தொழிலாளர் சட்டங்கள் :

டாஸ்மாக் நிறுவனத்திற்கு மாநிலம் முழுவதும் 43 கிடங்குகள், 38

மாவட்ட மேலாளர் அலுவலகங்கள், 5 மண்டல அலுவலகங்கள், ஒரு

தலைமை அலுவலகம் என 87 நிர்வாக அலுவலகங்களில் வெறும்

563 பேர் மட்டுமே நிரந்தர ஊழியர்கள். மற்ற 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட

ஊழியர்கள் தற்காலிக, ஒப்பந்த ஊழியர்களை வைத்துத்தான் டாஸ்மாக்

செயல்பட்டு வருகிறது. 


டாஸ்மாக் நிறுவனத்திற்கு கடைகள் மற்றும்

[21/9, 11:31 AM] அருணன் செய்தியாளர்: தூத்துக்குடி லீக்ஸ் 


நிறுவனங்கள் சட்டம், தேசிய-பண்டிகை விடுமுறை சட்டம், குறைந்தபட்ச

ஊதிய சட்டம், இ.எஸ்.ஐ. சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் சட்டங்கள்

பொருந்தாது என அரசு விதிவிலக்கு அளித்துள்ளதாக கூறி வேலை செய்யும்


கொத்தடிமை கள்!!!

ஊழியர்கள் சட்ட பாதுகாப்பற்றவர்களாக நவீன கொத்தடிமைகளாக

நடத்தப்படுகின்றனர்


. இதற்கு எதிராக தொழிலாளர் நீதிமன்றங்கள், உயர்நீதி

மன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகளை மதிக்காமல் மேல்முறையீடு என்ற

பெயரில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.


வீடியோ பார்க்க...

 முன்மாதிரி முதலாளியாக செயல்பட வேண்டிய தமிழ்நாடு அரசு, தான் இயற்றிய சட்டங்களை காலில் போட்டு மிதிக்கிறது.



"டாஸ்மாக் ஊழியர்களுக்கு சட்டப்படியாக வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்துக்கும் நிர்வாகம் வழங்கும்

ஊதியத்துக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டுமென்று சென்னை தொழிலாளர் நீதிமன்றங்கள் பிறப்பித்த

உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு.

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத தனி சிறப்பு வாய்ந்த சட்டமான பணி நிரந்தர தகுதி வழங்கல் சட்டப்படி

2 ஆண்டுகளில் 480 நாட்கள் பணி முடித்த ஊழியர்களை நிரந்தரம் செய்து மதுரை தொழிலாளர் உதவி ஆணையர்

பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு.

அரசு துறைகள் மற்றும் அரசு

நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்திய

நிலையில் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ஓய்வு வயது உயர்த்த மறுப்பது, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து

மேல்முறையீடு செய்வது ஊழியர்கள் மீதான தற்காலிக பணிநீக்க ஒழுங்கு நடவடிக்கையின் போது பிழைப்பூதியம்

வழங்க மறுப்பது என  ஊழியர்களுக்கு சாதகமான பல்வேறு உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு

செய்வதையே டாஸ்மாக் நிர்வாகமும் வாடிக்கையாகவே கொண்டுள்ளது."



முந்தைய திமுக அரசு, தொழிலாளர்களுக்கு சாதகமாக வரும் தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய

மாட்டோம் என்ற நிலைபாட்டை எடுத்திருந்தது.


 ஆனால் தற்போது ஆளும் திமுக அரசு தொழிலாளருக்கு சாதகமான

தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்வது முந்தைய திமுக அரசின் நிலைபாட்டிற்கு எதிரனதாகும்.

படிப்படியாக மதுவிலக்கு :


2021 சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சியில் உள்ள திமுக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு

கொண்டு வருவோம் என்றார்கள். 


500 கடைகளை மூடினார்கள். 

அதே வேளையில் 1000 தனியார் மது

கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.


 ஒவ்வொரு நாளும் புதுப்புது 

பெயரில் மது

அறிமுகப்படுத்தியுள்ளனர். 

ஜல தோஷம்!!! சன்மானம்?

டாஸ்மாக் கடைகளில் விற்பனை சரிந்தால் நமக்கெல்லாம் சந்தோசம் தான். ஆனால்

டாஸ்மாக் அதிகாரிகளுக்கு ஜலதோசம்தான்.



 முந்தைய ஆண்டு விற்பனையை அடிப்படையாகக் கொண்டு இந்த

ஆண்டும் அதே விற்பனையை செய்ய வேண்டும்.


 விற்பனை குறைந்தாலும் செயற்கையாக சரிவை ஈடுகட்ட

வேண்டுமாம். 

துறை அமைச்சரோ புதிதாக வரும் இளைஞர்களுக்கு அறிவுரை கூறி அவர்களை மதுப் பழக்கத்திற்கு

அடிமையாகாமல் பார்த்துக்கொள்ளும் ஊழியர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று கூறுகிறார்.


 இதில் தான்

மதுவிலக்கு கொள்கையில் அரசின் தள்ளாட்டம் தெளிவாகத் தெரிகிறது.

பாதுகாப்பற்ற நிலையில் ஊழியர்கள்:

டாஸ்மாக் கடைகள் பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக, காட்டுப்பகுதி, வயல்வெளி, சுடுகாட்டுப் பகுதிகளில்

தான் உள்ளன.

சுடுகாடு சமுக விரோதிகள்!!!

 இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் ஊழியர்களை தாக்குவது, கொள்ளையடிப்பது போன்ற

சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.


 காஞ்சிபுரத்தில் ஒரு ஊழியர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போனார்.

சிவகங்கையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு பலியானார். ஒவ்வொரு நாளும் உயிருக்கு பயந்து வேலை செய்ய

வேண்டிய நிலையில் ஊழியர்கள் உள்ளனர்.


வெளிப்படைத்

தன்மை?

டாஸ்மாக் நிறுவனம் அரசு நிறுவனமா? அரசு நிறுவனம் என்ற பெயரில்

அதிகாரிகள், தனியாரின் பாக்கெட்டுகளை நிரப்பும் நிறுவனமா? என்ற

அளவில் தான் அதன் நிர்வாக செயல்பாடுகள் உள்ளன. 

ரகசியம்!!!!!

ஒரு குவாட்டர்

பிராந்தி பாட்டிலின் அடக்கவிலை, விற்பனை விலை, லாபம் எவ்வளவு

என்று கேட்டால் அது வணிக ரகசியமாம்.


 தொழில் போட்டியை ஏற்படுத்தி

விடுமாம். அதுவும் தகவல் ஆணையம் உத்தரவு போட்டாலும், உயர்நீதி

மன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் மது பாட்டிலில் உண்மையான

விலையை சொல்லமாட்டார்களாம்.

[21/9, 11:33 AM] அருணன் செய்தியாளர்: தூத்துக்குடி லீக்ஸ் 


இந்த அரசு வந்த பிறகு மனமகிழ் மன்றம் என்ற பெயரில் எத்தனை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கேட்டால்?

அதற்கும் தகவல்கள் தரமாட்டார்களாம். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கத்தானே செய்யும்?


தரமில்லாத சரக்குகள் :?!?!

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகளின் தரம் குறித்து சந்தேகங்கள் எழுகின்றன.


 ஏனென்றால்

மது உற்பத்தி செய்வது தனியார் நிறுவனங்கள். தனியார் என்றாலே லாபம் பார்ப்பார்களே தவிர தரத்தைப் பற்றி

கவலைப்பட மாட்டார்கள். 


இந்த மது நிறுவனங்களில் அரசு தரப்பில் ஒரு அலுவலர் இருக்கிறாராம்.


 அவர் உற்பத்தியாகும்

மதுவினை தடய அறிவியல் துறையின் ஆய்வகத்திற்கு அனுப்புவாராம்.



 அங்கிருந்து வரும் சான்றளிப்பு அடிப்படையில்

கிடங்குகளுக்கு அனுப்பி வைப்பார்கள். 


பல மது வகைகள் கடைகளுக்கு அனுப்பி விற்பனையில் உள்ள நிலையில்

டாஸ்மாக் நிர்வாகம் கடையிலிருந்து கிடங்கிற்கு திருப்பி அனுப்ப சொல்கிறது என்றால் குடிகாரர்கள் தானே கொடுப்பதை

குடிக்க போகிறார்கள் என்ற ஆணவப்போக்குத்தான் ஒழிய, வியாபார நெறிமுறை இல்லை. 40 ஆண்டுகளுக்கு மேலாக

மது கொள்முதல் செய்து விற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனத்திற்கென்று தரப் பரிசோதனைக் கூடம் இல்லை என்றால்

குடிப்பவர்களின் உடல் நலம் குறித்து எந்தளவுக்கு அரசு மெத்தனமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.


டிரான்ஸ்பர் - போஸ்டிங் முறைகேடுகள் :

டாஸ்மாக் நிறுவனத்தில் போஸ்டிங், டிரான்ஸ்பருக்கான வழிகாட்டும் கொள்கை திட்டமிட்டு உருவாக்கப்படவில்லை.


இதனால் காசு கொடுத்தால் காரியம் சாதிக்கலாம் என்ற மனநிலை ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


டாஸ்மாக்

கடைகள் இரண்டு பிரிவுகளாக உள்ளன. 


ஒன்று அதிக விற்பனையாகும் கடைகள். மற்றொன்று விற்பனை குறைவான

கடைகள். 


இதில் அதிக விற்பனையாகும் கடைகளில் பணிபுரிய அதிக போட்டிகள். இதற்காக சில லட்சங்களை அள்ளிக்

கொடுத்து டிரான்ஸ்பர் ஆகிறார்கள்.


 இருக்கும் கடையில் டிரான்ஸ்பர் ஆகாமல் இருக்க லட்சங்களை அள்ளி தெளிக்க

வேண்டும். இதை புரோக்கர்கள் - அதிகாரிகள் கூட்டணி மிக தைரியமாக செய்து கொண்டிருக்கிறது.

காலி பாட்டில் :

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில் அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை

செய்யப்படுகின்றன. 


இதில் உற்பத்தி செலவு, புதிய பாட்டில் மதிப்பு உள்ளிட்ட அடக்க விலையோடு, வரிகள் மற்றும்

லாபமும் அடங்கும். ஆனால் டாஸ்மாக் நிர்வாகம் ஒரு மது பாட்டிலை வாங்கும் போது அதிகபட்ச விலையோடு,கூடுதலாக

ரூ.10 சேர்த்து வாங்குகிறது. 


மது அருந்திய நபர் அந்த காலி பாட்டிலை கொண்டு வந்து தந்தால் ரூ.10 திருப்பி தரப்படுமாம்.


திரும்பி வராத பாட்டில்கள் மூலம் டாஸ்மாக் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது.

போதை மீட்பு மையங்கள்:

தமிழ்நாடு அரசு மதுப்பழக்கம் - போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகளை

வழங்குவதற்காக மாநிலம் முழுவதும் 20 போதை மீட்பு மையங்கள் நடத்துகிறதாம்.


 விழிப்புணர்வு பணிகளுக்காக

5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாம். டாஸ்மாக் நிறுவனமே தனது சமூக பாதுகாப்பு பொறுப்பு நிதியை பல

ஆண்டுகளாக செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்து வருகிறது. உண்மையிலேயே இந்த அரசுக்கு குடிப்பவர்கள் மீது

அக்கறை இருக்கும் என்றால் ஒவ்வொரு டாஸ்மாக் கடை முன்பும் மது போதைக்கு அடிமையானவர்களை அடையாளம்

கண்டு அவரது குடும்பத்தினரின் உதவியோடு மையங்களில் சேர்க்கும் வேலையை செய்ய வேண்டும்.


 இதற்கான

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தியிருக்க முடியாதா?

ஆக வெறும் கையில் முழம் போடுவது போல, தமிழ்நாடு அரசு அடுத்தவர் (தனியார்) மது பாட்டில்களை விற்பனை

செய்தே பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் பார்க்கிறது என்றால், டாஸ்மாக்கை முறைப்படுத்தி, தனியார் ஆதிக்கத்தை

தடுத்து நிறுத்தினால் கூடுதலாக பல ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். 


இந்த கூடுதல் வருவாயை சமூக நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும்.



தொழிற்சங்கம் என்பது கூலி, போனசுக்காக மட்டும் போராடிய அமைப்பல்ல. இந்த சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டுள்ளதால் மக்கள் மன்றத்திற்கு வருகிறோம்.



அரசு நிறுவனமான டாஸ்மாக்கில் 20 ஆண்டு காலமாக வேலை செய்பவர்களுக்கு நியாயமான சம்பளம் தரமாட்டார்களாம்.


பணி நிரந்தரம் செய்யமாட்டார்களாம். குடிப்பவனுக்கு அவன் கொடுக்கும் பணத்திற்கேற்ற தரமான சரக்கு தரமாட்டார்களாம். 


அடக்க விலை எவ்வளவு என்றால் சொல்லமாட்டார்களாம். அரசாங்க நிறுவனத்திற்கு இணையாக மது விற்பனையில் தனியாரைஅனுமதிப்பார்களாம். 


அரசுக்கு வர வேண்டிய வருவாயை மடைமாற்றம் செய்வார்களாம். 


மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் கடைகளைமூடமாட்டார்களாம்.

தமிழக அரசே! டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்திலும், மதுபான சரக்குகளை அடமானம் வைத்து கடன் வாங்கியும் நடத்துகிறதாம்!


டாஸ்மாக் கொள்முதல், விற்பனை, லாபம், வரி வருவாய் இதர வகையில் வரும் வருவாய் குறித்து வெள்ளை அறிக்கை

வெளியிடு! டாஸ்மாக் நிறுவனத்தை வெளிப்படைத் தன்மையுடன் நடத்திடு!

வெளியீடு : டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் (சிஐடியு) | 27. மசூதி தெரு, சேப்பாக்கம்,

 - 600 005.


இவ்வாறு தெரிவித்துள்ளார்கள் 

TASMAC

BAR